tag:blogger.com,1999:blog-9439067.post-1118399744681611222005-06-10T18:35:00.000+08:002005-06-10T18:35:00.000+08:00//தேன் துளி said... vijayI was working at wall str...//தேன் துளி said... <BR/>vijay<BR/>I was working at wall street then! I used to travel in NJTransit and take path. <BR/>//<BR/><BR/>தேன் துளி,<BR/><BR/>என்னுடைய parent company வால்ஸ்ட்ரீட்டில் NYSE-க்கு எதிராக இருந்தது. என்னுடைய மேலதிகாரியை காண வரும்போதெல்லாம் 30வது மாடியிலிருந்து NYSE பார்த்து உணர்ச்சி வயப்படுவது உண்டு. வரலாற்று பெருமை வாய்ந்த பணக்கார வீதியான வால் ஸ்ட்ரீட்டுக்கு அடிக்கடி வந்த காலங்களும் உண்டு.<BR/><BR/>என்னுடைய க்ளையண்ட் சைட் நியூயார்க் ப்ரூக்ளீனில் (Brooklyn) இருந்தது. அங்கு தான் என்னுடைய அலுவலக ஜாகையும். காலையில் 7:30-க்கு முன் NJT-ஐ பிடித்தால் நெவார்க்கில் இறங்கி PATH -ட்ரெய்னை பிடித்து WTC போய் அங்கிருந்து A அல்லது C அல்லது Q சப்வேயில் பயணித்து ப்ரூக்ளினில் இறங்கும் போது காலை 9:15 ஆகிவிடும். விதம் விதமான மனிதர்களை படித்துக் கொண்டே செய்யும் அந்த பயணம் வாழ்க்கையில் என்றுமே மறக்காது.<BR/><BR/>முதல் விமானம் WTC-ல் முட்டிய நேரத்தில் நான் அங்கு நின்றிருக்க எதோ விபத்து என்று தெரிந்து என்ன விபத்து என்று தெரியாமல் இருக்க, என்ன விபத்து என்பதை அறிய ஒரு உந்துதலில் எஸ்களேட்டரை பிடித்து வெளியே வர, நேரம் ஆகிவிட்டது என்று மயிரிழையில் எடுத்த முடிவால், அலுவலகம் சென்றடைய, இரண்டாம் விமானம் மோத, கொஞ்ச நேரத்தில் என்னுடைய அலுவலக சீட்டிலிருந்து அந்த இரட்டை கோபுரம் இடிந்து விழுவதை என் கண்ணால் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். இதை ஒரு தனிப்பதிவில் பிறகு எழுதுகிறேன்.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.com