tag:blogger.com,1999:blog-9439067.post-1118390358777412882005-06-10T15:59:00.000+08:002005-06-10T15:59:00.000+08:00நன்றி தங்கமணி.நான் பதிவில் சொன்னபடி இறந்தகாலத்தில்...நன்றி தங்கமணி.<BR/><BR/>நான் பதிவில் சொன்னபடி இறந்தகாலத்தில் வாசிப்பென்று ஒன்றும் பெரிதாக இல்லை.நூல் ஆசிரியர்கள் அறிமுகமும் மிக மிக குறைவு. இப்போது தான் ஒரு கூட்டம் சேர சேர பல அறிமுகங்கள் தெரிகின்றன. வண்ணதாசன் சிறுகதைகளை சிங்கப்பூர் நூலகத்தில் எடுத்து குறிப்பிட்ட நாளில் படித்து முடிக்காமல் அபராதம் கட்டியது தான் மிச்சம். திரும்ப எடுக்கலாம் என்று பார்த்தால் இன்று வரை என் கையில் கிடைக்கவில்லை.<BR/><BR/>மானசஜென் இரண்டு கலாபிரியா புத்தகங்களை பரிச்சளித்திருந்தார். என் கையில் இருக்கிறது. படிக்க வேண்டும்.<BR/><BR/>குட்டி இளவரசன் ரொம்ப பிடித்து போய் விட்டது. அதுவும் நீங்கள் மானசஜென் ரமேஷின் பதிவில் பின்னூட்டத்தில் நீங்கள் கொடுத்த இணைய முகவரியின் வழியாக தான் படித்தேன். அதை மென்புத்தகமாக்கி வைத்துக் கொண்டேன்.<BR/><BR/>ருஷ்ய இலக்கியங்களை இப்போது தான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் செகாவின் தமிழ்மொழிப்பெயர்ப்பு கதைகளை படித்தவுடன் பிடித்து எல்லோருடைய படைப்புகளையும் இப்போது தான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். 19,20-ம் நூற்றாண்டின் வாக்கில் எழுதப்பட்ட செகாவின் கதைகள் இன்றைய காலக்கட்டத்திலும் பொருந்துவதை பார்க்க மிக ஆச்சரியமாக இருந்தது. சில ரஷ்ய நூல் அறிமுகத்துக்கு நன்றி.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.com