<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss'><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437</id><updated>2009-11-29T19:04:34.289Z</updated><title type='text'>திணை இசை சமிக்ஞை</title><subtitle type='html'>நிலம்     எழுத்து     நீர்    கலை
தீ     வரலாறு     வளி    செயல்     விசும்பு    சிந்தனை  சூன்யம்     மோனம்   --- நாகார்ஜுனன் வலைத்தளம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default?start-index=26&amp;max-results=25'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>581</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-8088538113593732013</id><published>2009-11-29T07:51:00.006Z</published><updated>2009-11-29T08:12:15.853Z</updated><title type='text'>அகர முதல எழுத்தெல்லாம்? - 1 - ஆர்தர் ஸி. க்ளர்க்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SxIrmsiTFjI/AAAAAAAAC7Q/Q4QGiY_Kd_c/s1600/Ippolito+Desideri.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 290px;" src="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SxIrmsiTFjI/AAAAAAAAC7Q/Q4QGiY_Kd_c/s400/Ippolito+Desideri.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5409434046215427634" /&gt;&lt;/a&gt;‘நீங்கள் வைப்பது கொஞ்சம் வழக்கத்தை மீறிய வேண்டுகோள்’ என்றார் டாக்டர் வாக்னர். இப்படிக் கூறும்போது தமதான தன்னடக்கம் பாராட்டத்தக்கது என்று நம்பவும் செய்தார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கூறினார்:&lt;br /&gt;&lt;br /&gt;‘வரிசைகளைத் தன்னியக்கமாகத் தயாரிக்கும் ஒரு கம்ப்யூட்டரை, உங்கள் ஆங்...பௌத்த மடாலயத்துக்கு சப்ளை செய்ய வேண்டும் என்கிறீர்கள். இந்த வகையிலான ஒரு வேண்டுகோள் வருவது நானறிந்த வரையில் இதுவே முதல்முறை. இதில் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. இருந்தாலும் உங்கள் மடாலயத்தில் இப்படியான எந்திரத்துக்கு என்ன உபயோகமிருக்கும் என்பது புரியவில்லை எனக்கு. அப்படி என்ன செய்யப்போகிறீர்களென்று விளக்க முடியமா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘அதற்குத்தான் எங்கள் மடாலயத்தின் பெரிய துறவி பணித்து நான் நியூயார்க் நகருக்கு வந்தேன்’ என்றார், தம் பட்டாடையை சரிப்படுத்திக்கொண்ட திபெத்தியத் துறவி. நாணயமாற்றுக் கணக்குகளைப் போடப் பயன்படுத்திய தம்முடைய ஸ்லைட் ரூலையும் பக்கத்தில் எடுத்துவைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘டாக்டர், உங்கள் ஐந்தாம் மார்க் கம்ப்யூட்டரை எடுத்துக்கொள்வோம். பத்து இலக்கங்கள் கொண்ட எண்கள் வரை சாதாரணக் கணக்குகளை அதனால் போட முடிகிறதல்லவா! சற்றே வித்தியாசமானது எங்கள் தேவை. எண்களுக்குப் பதிலாக, பெயர்கள் மீதே ஆர்வம் எங்களுக்கு. எனவே உங்கள் கம்ப்யூட்டரின் வெளியீட்டு ஸர்க்யூட்களை மாற்ற வேண்டும். அதாவது எண்வரிசைகளுக்குப் பதிலாக, பெயர் களை உருவாக்கி அச்சிடுமாறு அதை மாற்றித்தர வேண்டும். அவ்வளவுதான்’ என்றார் துறவி.&lt;br /&gt;&lt;br /&gt;‘புரியவில்லையே?’&lt;br /&gt;&lt;br /&gt;‘புரிய வைக்கிறேன் டாக்டர். கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம் நாங்கள். சொல்லப்போனால், எங்கள் மடாலயம் தொடங்கிய காலம் முதலே இது நடக்கிறது என்பேன்... நான் சொல்லப்போவது உங்களுடைய சிந்தனைமுறைக்கு சற்றே அந்நியமானது. எனவே திறந்த மனதுடன் என் விளக்கத்தைக் கேட்க வேண்டும் நீங்கள்’ என்றார் துறவி.&lt;br /&gt;&lt;br /&gt;‘தயார்’ என்றார் டாக்டர் வாக்னர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘எளிதாகச் சொல்லிவிடலாம் இதை. கடவுளின் பெயர்கள் யாவும் கொண்ட சாத்தியப்பாடுகளையும் சேகரித்துப் பட்டியல் ஒன்றை நாங்கள் உருவாக்கி வருகிறோம்’ என்றார் துறவி.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆ!’&lt;br /&gt;&lt;br /&gt;அசரவில்லை தறவி. தொடர்ந்து கூறலானார்: ‘இந்த எல்லாப் பெயர்களையும் ஒவ்வொன்றாக எழுதிவிடலாம். அதற்கு நாங்கள் வடிவமைத்திருக்கிற நூதன அகரவரிசை போதும் என்று கருதுகிறோம்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘இந்தக் காரியத்தையா மூன்று நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறீர்கள்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமாம் டாக்டர். இதைச் செய்துமுடிக்க சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகள் பிடிக்கும் என்று எதிர்பார்த்தோம்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஓ!’&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் அசந்துதான் போயிருந்தார் டாக்டர் வாக்னர். ‘புரிகிறது இப்போது எங்கள் கம்ப்யூட்டர்களில் ஒன்றை நீங்கள் கோருவது எதற்காக என்று. உங்கள் திட்டத்தின் நோக்கம்தான் என்ன என்று தெரிந்துகொள்ளலாமா?’&lt;br /&gt;&lt;br /&gt;ஒருகணம் துறவி தயங்கினார். தப்பாக ஏதோ கேட்டு அவரை எரிச்சலடையச் செய்துவிட்டோமோ என்று டாக்டர் வாக்னருக்குத் தோன்றியது. ஒருக்கால் அப்படியிருந்தால் துறவியின் பதிலில் அதற்கான சுவடே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘டாக்டர், ஒரு சடங்கு போல என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆனால் எங்கள் நம்பிக்கையின் அடிப்படை விஷயம் இது. உலகின் பெயரற்ற முதற்பொருளின் கோடி கோடிப் பெயர்களெல்லாம் - கடவுள், யெஹோவா, அல்லா என்று எதையெடுத்தாலும் - மனிதன் வைத்த பெயர்களாகவே இருக்கின்றன. இதையொட்டி தத்துவார்த்தச்சிக்கலொன்று வந்துவிடுகிறது. அதை நானிங்கே விவாதிக்க விரும்பவில்லை. அதே நேரம் முதற்பொருளின் பெயர்களில் உண்மையிருந்தால், அவை யாவும் அகரவரிசையின் எழுத்துக்களைக் கூட்டிச்சேர்த்தால் வருகிற சாத்தியப்பாடுகள் யாவற்றுக்குள்ளும் அடங்கிவிடும் என்று கூறலாம். எனவேதான் அந்தப் பெயர்களை ஒவ்வொன்றாக முறை யாகக் கூட்டிச்சேர்த்து அவற்றின் மொத்தப் பட்டியலையே தயாரித்து வருகிறோம்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஓ அ, அஅ எனத் தொடங்கி அகரவரிசையின் இறுதிவரை போகப் போகிறீர்களா...’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமாம்... ஆனால் இதற்காக எங்கள் நூதன அகரவரிசையைப் பயன்படுத்துகிறோம். இவற்றை அச்சிட உங்கள் மின்னணு டைப் ரைட்டர்களையும் மாற்றியமைக்க வேண்டும். அது சிறு பிரச்னை. அவ்வளவுதான். அதைவிட சுவாரசியமான பிரச்னை ஒன்று உண்டு - எழுத்துக்களைக் கூட்டிச்சேர்க்கும்போது வருகிற அபத்தமான பெயர்களை நீக்கிவிடத் தேவையான ஸர்க்யூட்டுகளை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் அது. உதாரணமாக, எந்த ஓர் எழுத்தும் மூன்றுமுறைக்கு மேல் தொடர்ந்துவரக்கூடாது என்ற விதி ஒன்று இருக்கிறது.’&lt;br /&gt;&lt;br /&gt;‘மூன்று முறையா? இரண்டுமுறை என்பதுதானே சரி?’&lt;br /&gt;&lt;br /&gt;மெலிதாகச் சிரித்தார் துறவி. ‘எங்கள் மொழியில் மூன்றுமுறை என்பதே சரி. எங்கள் மொழி உங்களுக்குப் புரியாது. புரிந்தாலும்கூட ஏன் அப்படி என்று உங்களுக்கு விளக்க நீண்ட நேரம் பிடிக்கும்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘சரி.’ சட்டென்று ஒப்புக்கொண்டார் டாக்டர் வாக்னர். ‘மேலே சொல்லுங்கள்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘தன்னியக்கமாக வரிசைகளை ஏற்கனவே தயாரிக்கவல்ல உங்கள் கம்ப்யூட்டரை எளிதாக இதற்கு வேண்டி மாற்றிவிடலாம். தேவையான ஆணைத் தொடரை எழுதி இயக்கிவிட்டால், அது ஒவ்வொரு முறையும் எழுத்துக்களைக் கூட்டிச்சேர்த்து, வேண்டாதவற்றை நீக்கி, முடிவாக வரும் பெயர்களை அச்சிடும். ஆக எங்களுக்குப் பதினைந்தாயிரம் ஆண்டுகள் பிடிக்கக்கூடிய வேலையை நீங்கள் நூறே நாட்களில் செய்துவிடலாம். இது எங்கள் அதிர்ஷ்டம்தான் டாக்டர்!’&lt;br /&gt;&lt;br /&gt;மிகக்கீழே மன்ஹாட்டன் தெருக்களிலிருந்து வந்த மெல்லிய ஒலிகளைக் கேட்டாரில்லை டாக்டர் வாக்னர். அவர் அப்போது சஞ்சரித்துக் கொண்டிருந்து வேறோர் உலகத்தில். அதில் மனித சஞ்சாரமற்ற இயற்கையின் மலைகளைக் கண்டார். அங்கே உச்சிமாடங்களில் துறவிகள் தலைமுறைகளாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அர்த்தமற்ற சொற்களடங்கிய தங்கள் பட்டியல்களைப் பொறுமை யுடன் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். மனித எத்தனங்களில் இத்தகைய பித்தங்களுக்கு எல்லை இருந்ததுண்டா என்று டாக்டர் வாக்னருக்கு ஒரு கணம் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் இப்படி ஒரு கேள்வி தமக்கிருப்பதை ஒரு போதும் துறவியிடம் காட்டிக்கொள்ளக்கூடாது என்றும் நினைத்தார். அவரைப் பொறுத்தவரை துறவி ஒரு வாடிக்கையாளர். வர்த்தகத்தில் வாடிக்கையாளர் சொல்வதே சரி அல்லவா!&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆம், எங்கள் ஐந்தாம் மார்க் கம்யூட்டரை நீங்கள் வேண்டுவது போலவே பட்டியல் அச்சிடும் வகையில் மாற்றி அமைத்துவிடலாம். அதில் சந்தேகமே  வேண்டாம். அதே நேரம், எங்கள் எந்திரத்தை அங்கே நிறுவிப் பராமரிப்பதில் பிரச்சினை ஏற்படுமோ என்பதே எனக்கு அதிகக்கவலை தருகிறது. ஐந்தாம் மார்க் போன்ற எந்திரத்தை திபெத்துக்கு எடுத்துச்செல்வது அவ்வளவு எளிதாக இருக்குமென்று தோன்றவில்லை!’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏற்பாடு செய்துவிடலாம். கம்ப்யூட்டரின் பகுதிகள் சிறியவை. விமானத்தில் கொண்டு போய்விடலாம். இதற்காகத்தான் உங்கள் கம்ப்யூட்டரைத் தேர்வுசெய்தோம். நீங்கள் இந்தியா ரை கொண்டு வந்துவிட்டீர்கள் என்றால் அங்கிருந்து நாங்கள் உதவலாம்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘சரி. எங்கள் பொறியாளர்கள் இருவர் அங்கே வரவேண்டும் என்கிறீர்களே.’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமாம், திட்டம் பூர்த்தியாகிற அந்த மூன்றுமாத காலத்துக்கு மட்டும்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘எங்கள் பொறியாளர்கள் பணியை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.’&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் வாக்னர் தம்முடைய மேஜைக் காகிதத்தில் குறிப்பாக ஏதோ எழுதியவாயே கூறினார்: ‘இன்னும் இரண்டே விஷயங்கள்.’&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாக்கியத்தை டாக்டர் வாக்னர் கூறி முடிப்பதற்குள்ளாக துறவியும் ஒரு காகிதத்தை எடுத்து வைத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘டாக்டர், இதோ ஆசிய வங்கியில் என் கணக்கில் உள்ள நிலுவைத் தொகை குறித்த சான்றிதழ்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘நன்றி. ஆ! இது போதும் என்று நினைக்கிறேன். இன்னும் ஒன்று ரொம்ப சாதாரண விஷயம் என்பதால் கேட்கத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் முக்கியமான விஷயங்கள் பல இப்படித்தான் அடிக்கடி சரிபார்க்கப்படாமல் போகின்றன. கம்ப்யூட்டருக்கு மின்சாரம் வேண்டுமே, மலையுச்சியில் அது உங்களுக்கு எப்படிக் கிடைக்கும்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘நூற்றுப்பத்து வோல்ட் மின்சாரம், ஐம்பது சிலோவாட் சக்தி கொண்ட ஒரு டீஸல் ஜெனரேட்டர் எங்களிடம் இருக்கிறது. சுமார் ஐந்தாண்டுகள் முன்பு வந்தது. பிரார்த்தனைச் சக்கரங்களைச் சுற்றும் மோட்டார்களுக்கு மின்சாரம் வழங்கத்தான் அதை நிறுவினோம். &lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர், ஆனாலும் அது மடாலய வாழ்க்கையை ரொம்பவும் சௌகர்யமாக்கிவிட்டது என்பேன்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஓ!’ ஆமோதித்த டாக்டர் வாக்னர். ‘இது பற்றி நான் யோசித்திருக்கவில்லை’ என்று ஒப்புக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(இன்னும் வரும்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட கதை என் முதல் தமிழாக்கம் - செப்டம்பர் 1978.&lt;br /&gt;மறு ஆக்கம் - &lt;span style="font-weight:bold;"&gt;பவளக்கொடி&lt;/span&gt; இதழ் 4, , தஞ்சாவூர், 2007.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;படம்&lt;/span&gt; - சேசு சபையைச் சார்ந்த பதினெட்டாம் நூற்றாண்டு இத்தாலியப் பாதிரியார் &lt;span style="font-weight:bold;"&gt;இப்போலித்தோ தெஸிதேரி&lt;/span&gt; மேற்கொண்ட திபெத் பயணம் பற்றிய வரைபடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2008/02/blog-post_8509.html"&gt;அகர முதல எழுத்தெல்லாம் - தேடி எடுத்த முதல் தமிழாக்கம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2008/03/blog-post_19.html"&gt;அறிபுனை எழுத்தாளர் ஆர்தர் ஸி. க்ளர்க் மறைவு பற்றி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-8088538113593732013?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/8088538113593732013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=8088538113593732013' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8088538113593732013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8088538113593732013'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/11/1_29.html' title='அகர முதல எழுத்தெல்லாம்? - 1 - ஆர்தர் ஸி. க்ளர்க்'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SxIrmsiTFjI/AAAAAAAAC7Q/Q4QGiY_Kd_c/s72-c/Ippolito+Desideri.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-4415590594360165064</id><published>2009-11-24T06:54:00.005Z</published><updated>2009-11-25T12:59:49.758Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃப்ரெஞ்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போதலேர்'/><title type='text'>கிழவியின் விரக்தி -  ஷார்ல் போதலேர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SwzRrbp5DRI/AAAAAAAAC7A/k-PZ6Fmq9aM/s1600/Vieille+Femme.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SwzRrbp5DRI/AAAAAAAAC7A/k-PZ6Fmq9aM/s400/Vieille+Femme.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5407927796653165842" /&gt;&lt;/a&gt;யாவரும் பாராட்டிச் சீராட்டிய குழவியொன்றைக் காண்பதில் மகிழ்வுற்றாள், சற்றே கூனிச் சுருங்கிய கிழவியொருத்தி. அந்தக்குழவியும் அவள்போல் மெலிதே; அவள்போல் குறைந்த பல்லும் முடியும் கொண்டதே.&lt;br /&gt;&lt;br /&gt;கிழவியும் இன்முகம் காட்டிப் புன்னகை நல்க ஆங்கே குழவியின் அருகில் வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழவியோ, முதுகிழவி வருடத் தான் பயங்கண்டும் மிரண்டும் தன் அலறல் கொண்டு நிறைத்தது வீட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, கிழவி எற்றைக்குமான தன் தனிமைவாசத்துக்கு மீண்டு ஒரு மூலையில் சென்று அழுதாள். "ஓ, முதுமைச்சோகமிக்க நாம் யாருக்கும், ஏன் இந்தக்குழவியருக்கும் இன்முகம் காட்டும் காலத்தைத் தாண்டிவிட்டோமோ, நாம் நேசிக்க விழையும் குழவியரையும் பயங்கண்டு மிரளச்செய்கிறோமோ." எனக் க்ரைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Le désespoir de la vieille&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;La petite vieille ratatinée se sentit toute réjouie en voyant ce joli enfant à qui chacun faisait fête, à qui tout le monde voulait plaire ; ce joli être, si fragile comme elle, la petite vieille, et, comme elle aussi, sans dents et sans cheveux.&lt;br /&gt;&lt;br /&gt;Et elle s’approcha de lui, voulant lui faire des risettes et des mines agréables.&lt;br /&gt;&lt;br /&gt;Mais l’enfant épouvanté se débattait sous les caresses de la bonne femme décrépite, et remplissait la maison de ses glapissements.&lt;br /&gt;&lt;br /&gt;Alors la bonne vieille se retira dans sa solitude éternelle, et elle pleurait dans un coin, se disant : – « Ah ! pour nous, malheureuses vieilles femelles, l’âge est passé de plaire, même aux innocents ; et nous faisons horreur aux petits enfants que nous voulons aimer ! &lt;br /&gt;&lt;br /&gt;-- Charles Baudelaire, &lt;span style="font-weight:bold;"&gt;Paris Spleen&lt;/span&gt;, 1869.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-4415590594360165064?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/4415590594360165064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=4415590594360165064' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/4415590594360165064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/4415590594360165064'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/11/blog-post_24.html' title='கிழவியின் விரக்தி -  ஷார்ல் போதலேர்'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SwzRrbp5DRI/AAAAAAAAC7A/k-PZ6Fmq9aM/s72-c/Vieille+Femme.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-5327786198908436504</id><published>2009-11-20T06:53:00.007Z</published><updated>2009-11-21T22:14:13.436Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃப்ரெஞ்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போதலேர்'/><title type='text'>அந்நியன் - ஷார்ல் போதலேர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SwZCvwTw-pI/AAAAAAAAC64/V78wAE4ErEU/s1600/Paris.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 256px;" src="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SwZCvwTw-pI/AAAAAAAAC64/V78wAE4ErEU/s400/Paris.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5406081790893947538" /&gt;&lt;/a&gt;சொல்லாயோ, புதிர்-மனிதா!&lt;br /&gt;யாரை நீ நேசிக்கிறாய்?&lt;br /&gt;தாயை? தந்தையை?&lt;br /&gt;உடன் பிறந்தவ-னை/ளை?&lt;br /&gt;&lt;br /&gt;தாய்தந்தை எனக்கில்லை, உடன் பிறந்தோருமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உன் நண்பரை?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை நான் பொருளறியாச் சொல்லொன்றைப் பயன்படுத்துகிறீர்!&lt;br /&gt;&lt;br /&gt;உன் நாட்டை?&lt;br /&gt;&lt;br /&gt;புவியில் அஃதமையும் நெட்டாங்கும் அறியேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகை?&lt;br /&gt;&lt;br /&gt;அழியாப் பெண்கடவுள் அதுவென்றால் நிச்சயம் நேசிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னை?&lt;br /&gt;&lt;br /&gt;நீர் கடவுளை வெறுக்கிறீர், நான் அதை வெறுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ, அதீத அந்நியனே! எதைத்தான் நீ நேசிக்கிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;முகிலை. ஓடும் முகிலை. ஆங்கே முகிலை. எழில் முகிலை.&lt;br /&gt;&lt;br /&gt;-- Qui aimes-tu le mieux, homme énigmatique, dis? ton père, ta mère, ta soeur ou ton frère?&lt;br /&gt;&lt;br /&gt;-- Je n'ai ni père, ni mère, ni soeur, ni frère.&lt;br /&gt;         &lt;br /&gt;-- Tes amis?&lt;br /&gt;         &lt;br /&gt;-- Vous vous servez là d'une parole dont le sens m'est resté jusqu'à ce jour inconnu.&lt;br /&gt;         &lt;br /&gt;-- Ta patrie?&lt;br /&gt;&lt;br /&gt;-- J'ignore sous quelle latitude elle est située.&lt;br /&gt;         &lt;br /&gt;-- La beauté?&lt;br /&gt;&lt;br /&gt;-- Je l'aimerais volontiers, déesse et immortelle.&lt;br /&gt;         &lt;br /&gt;-- L'or?&lt;br /&gt;&lt;br /&gt;-- Je le hais comme vous haïssez Dieu.&lt;br /&gt;         &lt;br /&gt;-- Eh! qu'aimes-tu donc, extraordinaire étranger?&lt;br /&gt;&lt;br /&gt;-- J'aime les nuages... les nuages qui passent... là-bas... là-bas... les merveilleux nuages!&lt;br /&gt;&lt;br /&gt;                                         -- Charles Baudelaire, L'Etranger, &lt;span style="font-weight:bold;"&gt;Le spleen de Paris&lt;/span&gt;, 1869.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D"&gt;போதலேர் பிற கவிதைகள் - ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து நேரடி ஆக்கம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-5327786198908436504?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/5327786198908436504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=5327786198908436504' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/5327786198908436504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/5327786198908436504'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/11/blog-post_20.html' title='அந்நியன் - ஷார்ல் போதலேர்'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SwZCvwTw-pI/AAAAAAAAC64/V78wAE4ErEU/s72-c/Paris.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-797296217226726954</id><published>2009-11-17T00:29:00.001Z</published><updated>2009-11-17T06:51:04.614Z</updated><title type='text'>மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 5 - மரிலின் க்ரிஸ்ல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SwJHuIothHI/AAAAAAAAC6o/L8hiEXFjm0A/s1600/Batticaloa.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SwJHuIothHI/AAAAAAAAC6o/L8hiEXFjm0A/s400/Batticaloa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5404961360715809906" /&gt;&lt;/a&gt;நான் அங்கே சென்ற போது, குடிசை முன்பு சிப்பாய்கள் பொன்னையாவின் உடலைப் போட்டுவிட்டுப் போய்விட்டிருந்தார்கள். அங்கிருந்த பிறர் பொன்னையாவை குடிசைக்குள் எடுத்துச்செல்ல் உதவினார்கள். மறைந்த தம் கணவரின் வேட்டிகளில் ஒன்றைக் கொண்டு அவனைப் போர்த்தியிருந்தார் ராஜேஸ்வரி. எம்மைச் சுற்றி அலையலையாய்ப் பாறையில் ஓயாமல் மோதியது ஒப்பாரி. ராஜேஸ்வரி பொன்னையாவின் உடலை மீண்டும் நோக்கினார். குருதி தோய்ந்த உடலை வருடிய அவர் கையை என்னால் மறக்க முடியவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அது நடந்த ஆண்டு 1992. தொண்ணூறுகள் நெடுகிலும், ஏன் புது நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும், இலங்கைப்போரில் இருதரப்பும் தீவிரமாக ஈடுபட்டுவந்தன; பல்வேறு நிர்வாகங்கள் ஆட்சியும் புரிந்தன. கொழும்பில் தடுப்புக்காவல் அரண்கள், சோதனையிடல்கள் ஏராளமாய்ப் பெருகின. இருந்தாலும் அவற்றைத் தாண்டி, மத்திய வங்கியை விடுதலைப்புலிகள் தாக்கினர். கரும்புலிகளின் தற்கொலைப்படை, கட்டுநாயக்க விமானநிலையம் வரை சென்று படை விமானங்களைத் தாக்கியது. அரசோ, வானிலிருந்து குண்டுவீசி யாழ்நகரைத் தாக்கியது; கொழும்பு நகரின் தமிழ்ப்பகுதிகளில் புலிகளைத் தேடும் நோக்கில் சோதனைகள் நடத்தி, ஏராளம் தமிழ் மக்களைக் காணாமல் அடித்தது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் நோர்வே நாட்டின் முன்னெடுப்பில் நடந்த போர்நிறுத்த முயற்சி தோல்வியும் கண்டது. இருதருப்பாரும் அதை மீறியதே அதற்குக் காரணம். பிறகு அடுத்த ஆட்சியில் மீண்டும் போர்நிறுத்தம், பிறகு சமாதானப் பேச்சுவார்த்தை...&lt;br /&gt;&lt;br /&gt;தொண்ணூறுகள் நெடுகிலும் ராஜேஸ்வரியும் நானும் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டோம். பிறகு 2004-ஆம் ஆண்டில் சுனாமி என்ற ஆழிப்பேரலை இலங்கையைத் தாக்கியது. ராஜேஸ்வரியின் கடிதங்களும் நின்றுபோயின. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம்தான் என்னால் இலங்கைக்குப் போக முடிந்தது. அப்போது, ஆழிப்பேரலையை அடுத்து தமிழர்-சிங்களவர் பரஸ்பரம் உதவி புரிந்துகொண்ட செய்திகளைக் கேட்டறிந்தேன். இந்த ஒத்துழைப்பு  இனப்பிரச்னைக்கான சமாதானத்தீர்வுக்கு இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கையும் துளிர்விட்டது. ஆழிப்பேரலை கொணர்ந்த அழிவையடுத்து இலங்கைக்கு வந்த பன்னாட்டு நிதியுதவியைச் சமாந்திரமாகப் பங்கிட்டுக்கொள்ள இலங்கை அரசு ஒப்புக்கொண்ட நேரத்தில், இலங்கையின் தீவிர பௌத்த சங்கத்தின் குருமார்கள் இந்தச்செயல் விடுதலைப்புலிகளுக்கு மேலதிக அங்கீகாரம் வழங்கிவிடும் எனக்கூறி இதை எதிர்த்தார்கள். இலங்கையின் உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தார்கள். அங்கே சிங்களராக இருந்த நீதிவான்கள் அந்த வழக்கை ஏற்றுத் தீர்ப்பும் அளித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சே, விடுதலைப்புலிகளை அழித்தொழித்து இந்தப் போரை முடித்துவைப்பேன் என்று அறிவித்தார். ஆனால் கொழும்பிலும் சரி, நாட்டின் பிற பகுதிகளிலும் சரி, வன்முறை ஓய்ந்தபாடில்லை. கொழும்பு நகரின் பிரதான ரயில் நிலையத்தில் செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் இழுத்துச் செல்லப்பட்டுச் சுடப்பட்டார்கள்.  கிழக்கு மாகாணம் மூதூரில் ஃப்ரெஞ்சு நிவாரண அமைப்பின் பதினேழு தமிழ் ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் நீச்சல் குளத்திலிருந்து வெளியேறும் தருணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அயல்நாட்டு நிவாரணப் பணியாளர்கள் செல்ல இயலாத படி உலகின் மிக அபாயகரமான நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது இலங்கை, என்கிறது ஐக்கிய நாடுகள் மன்றம்... &lt;br /&gt;&lt;br /&gt;'நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாக இருப்பது ஏன்?' எனக்கேட்டு எழுதினார் ஜெர்மன் அறிஞர் ஃப்ரைட்ரிக்ஹ் ஷில்லர்.&lt;br /&gt; &lt;br /&gt;மட்டக்களப்புக்குச் சென்று முன்னர் கண்டதையே மீண்டும் கண்டேன். நான் கண்டது, சவச்சடங்கை அறிவிக்கும் வகையில் தெருக்களில் வெள்ளைநிறத் தோரணங்களைத்தான். அதேபோல தொடர்ந்து வெடித்த நிலக்கண்ணிகள், எறிகுண்டுகள். அகதிமுகாம் என்ற  தகரக்கொட்டிலில்  ஆயிரத்துக்கும் அதிகம் பேர் வெயிலின் சூட்டில் காய்ந்தவாறிருந்தனர். சிலர் போரால் அகதியானோர், சிலர் சுனாமி என்ற ஆழிப்பேரலையால் அகதியானோர். கைக்குழந்தைகளை ஏந்திய தாய்மார்கள், பல்லாண்டுப் போஷாக்கின்மையால் தாமே சிறுமியரைப் போலத் தோன்றின தாய்மார்கள். கடற்கரையில் ஆழிப்பேரலை பெயர்த்துப்போட்ட கோயில்.. துப்பாக்கிப்பயிற்சிக்கென அதைத் துண்டுகளாகச் சிதைத்த ராணுவம்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் எழுதிய ஒரு சுவரொட்டியைக் காற்று கடலை நோக்கி வீசியது.&lt;br /&gt;&lt;br /&gt;’ஆழிப்பேரலை அழிவுகள் வரும் போகும்.. போர் தொடர்ந்து நடக்கும்.’&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பில் சந்தித்த மீன் விற்கும் பெண் ஒருவர் என்னை நினைவுகொண்டார். ராஜேஸ்வரி எங்கே என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அலையோடு போய்விட்டார் என்றார் அந்தப் பெண்மணி. அலை, தான் கொண்டுபோன சிலரைப் பாலத்தில் விட்டுவிட்டது. அவர்களை மாத்திரமே காப்பாற்ற முடிந்தது. சிலரை மீண்டும் கொண்டுபோய்விட்டது. அவர்களில் ஒருவர் ராஜேஸ்வரி.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஆழிப்பேரலை மீதமர்ந்து தம் கொங்கைத்தீயை எறியும் காட்சியைக் கற்பனை செய்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(முடிந்தது)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-797296217226726954?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/797296217226726954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=797296217226726954' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/797296217226726954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/797296217226726954'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/11/5.html' title='மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 5 - மரிலின் க்ரிஸ்ல்'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SwJHuIothHI/AAAAAAAAC6o/L8hiEXFjm0A/s72-c/Batticaloa.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-3448002244203981347</id><published>2009-11-12T07:20:00.012Z</published><updated>2009-11-12T17:58:22.784Z</updated><title type='text'>மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம் - 3</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Svu47NxBM3I/AAAAAAAAC6g/8Numiao4X4U/s1600-h/Mensonge.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 343px;" src="http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Svu47NxBM3I/AAAAAAAAC6g/8Numiao4X4U/s400/Mensonge.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5403115505408095090" /&gt;&lt;/a&gt;மா(ங்)ஸாஞ்சுக்கும் ஃபூக்கோவுக்கும் நடந்த கடிதப்போக்குவரத்தில் இன்னொரு விஷயமும் வருகிறது. அது ஜெர்மன் அறிஞர் &lt;strong&gt;ஃப்ரைட்ரிக்ஹ் நீட்ஷ &lt;/strong&gt;பற்றியது; அதிகாரத்துக்கான விருப்புறுதி (Wille zur Macht) என்ற கருத்தாக்கத்தை நீட்ஷ எங்கிருந்து எடுக்கிறார் என்பதே அந்த விஷயம். இது தொடர்பாக, தத்துவத்தில் தம்முடைய ஆசிரியர் என்று நீட்ஷ போற்றும் ஜெர்மன் அறிஞர் &lt;strong&gt;ஆர்தர் ஷோப்பன்ஹர் &lt;/strong&gt;எழுதிய &lt;span style="font-weight:bold;"&gt;பிரபஞ்ச விருப்புறுதியும் குறிப்புமாக உலகு (Die Welt als als Wille und Vorstellung)&lt;/span&gt; என்ற நூலை மேற்கோள் காட்டி மா(ங்)ஸாஞ் ஃபூக்கோவுக்கு எழுதியிருக்கிறார். ஃபூக்கோவும் இதை ஏற்கிறார் என்பது அவர் மா(ங்)ஸாஞ்சுக்கு எழுதிய கடிதங்களில் தெரிகிறது. மேலும் ஃப்ரெஞ்சு அறிஞர் &lt;strong&gt;பியர் ஹடோ (Pierre Hadot)&lt;/strong&gt; எழுதிய &lt;strong&gt;பண்டைக்காலத் தத்துவம் என்பதென்ன? (Qu'est-ce que la philosophie antique?)&lt;/strong&gt; என்கிற முக்கிய நூலை ஃபூக்கோவுக்கு அறிமுகப்படுத்தியதும் மா(ங்)ஸாஞ்சே. தவிர, மா(ங்)ஸாஞ்சுக்கு எழுதிய இன்னொரு கடிதத்தில், அதிகாரம் என்பதன் ஆணிவேரே இந்தியப்பரப்பின் தத்துவ மரபில்தான் இருக்கிறது என்கிற ஃபூக்கோ, குறிப்பாக ஆசிரியன் யார், எங்கே என்ற பிரச்னையே எழாமல் தம்மைத்தாமே என்றோ எழுதிக்கொண்டுவிட்ட நான்மறைகள் மற்றும் உபநிஷத்துகளில்  தன்னிலைத்தொடர்பற்று வந்து உடல் நீங்கி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சர்வாகர்ஷண சக்தி அல்லது ஆற்றலே அதிகாரம் என விவரிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பியர் ஹடோ எழுதிய கிரேக்க,ரோமானிய இலக்கியங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் இந்தியப்பரப்பின் பண்டைக்கால &lt;strong&gt;காம சூத்திரம்&lt;/strong&gt; நூல் ஆகியவை வழி அதிகாரம்-உடலரசியல்-பாலியல்நிலை குறித்த சிந்தனைகள் தம்மை வந்தடைந்தன என்று ஒப்புக்கொள்ளும் ஃபூக்கோ, இதை மா(ங்)ஸாஞ்சுக்கு எழுதிய கடிதத்தில் பலமுறை குறிப்பிடுகிறார். இதன் அடிப்படையில் &lt;strong&gt;பாலியல்நிலையின் வரலாறு (Histoire de la sexualité)&lt;/strong&gt; என்ற பெரும் ஆய்வுநூலைப் பல தொகுதிகளாக எழுதிய ஃபூக்கோ, அதன் முதல் தொகுதியின் முன்னுரைக்காக மா(ங்)ஸாஞ்சை அணுகியபோது, மா(ங்)ஸாஞ் அதை மறுத்திருக்கிறார் என்ற அரிய உண்மையும் இந்தக் கடிதப்போக்குவரத்திலிருந்து தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக் கீழையுலகின் தத்துவங்களை வைத்துப் புதிய சிந்தனையை உருவாக்கிய ஃபூக்கோ ஏன் மா(ங்)ஸாஞ்சின் மூல நூல்களைக் குறிப்பிடுவதேயில்லை என்பது நம்மைத் தாக்கும் பெரும் கேள்வி. ஆனால் 1963-ஆம் ஆண்டிலிருந்து ஃபூக்கோவின் நெருங்கிய தோழராக இருந்த &lt;strong&gt;டானியல் டெஃபர் (Daniel Defert)&lt;/strong&gt;, தாமும் ஃபூக்கோவும் இணைந்து மா(ங்)ஸாஞ்சைப் பல முறை சந்தித்தோம் என்கிறார். ஃபூக்கோவின் சிந்தனைத்தடத்துக்கு மா(ங்)ஸாஞ்சும் கீழைத்தத்துவங்களுமே அடிப்படைகள் என்று ஃப்ரெஞ்சு வானொலியொன்றில் சென்ற மாதம் இவர் கூறியுமிருக்கிறார். மேலும் &lt;strong&gt;காம சூத்திரம்&lt;/strong&gt; நூலைப்பற்றி, ஃபூக்கோ, இதுவரை வெளிவராத தம்முடைய &lt;strong&gt;பாலியல்நிலையின் வரலாறு&lt;/strong&gt; நூலைச் சார்ந்த, &lt;strong&gt;சதையின் கொம்பசரிப்புக்கள் (Les aveux de la chair)&lt;/strong&gt; எனப் பெயர்கொண்ட, நான்காம் தொகுதியில் விவரித்திருக்கிறார் என்றும் டெஃபர் குறிப்பிடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;மா(ங்)ஸாஞ்சுக்கு &lt;strong&gt;ழாக் லெக்கனு&lt;/strong&gt;டன் கடிதத்தொடர்பு இருந்ததாகத் தெரிய வருகிறது. ஸர்ரியலிஸ எழுத்தாளர்களுடன் இணைந்தும் பிரிந்தும் செயல்பட்ட &lt;strong&gt;ழார் பத்தாய்&lt;/strong&gt;யின் துணைவியாக இருந்து பின்னர் லெக்கனுடன் வாழ்ந்த &lt;strong&gt;ஸில்வீ&lt;/strong&gt; என்பவர்தான் மா(ங்)ஸாஞ்சுக்கு லெக்கனை அறிமுகம் செய்து வைத்தார் என்று தெரிகிறது. ஆனால் லெக்கனுக்கும் மா(ங்)ஸாஞ்சுக்கும் கடிதத்தொடர்பு அவ்வளவாக இருக்கவில்லை என்றும் தெரிகிறது. கிடைத்திருப்பவை என்னவோ நான்கு கடிதங்கள்தாம். ஒரு கடிதத்தில் லெக்கன் உலைவுக்கோட்பாட்டை (pain principle) விவரித்து &lt;strong&gt;jouissance&lt;/strong&gt; என்ற ஃப்ரெஞ்சுச் சொல்லைப் பயன்படுத்தியதை மா(ங்)ஸாஞ் சிலாகித்துப் பதில் எழுதுகிறார். இந்தச் சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் எழுதவே முடியாது, மொழிக்கு வரையறைகள், எல்லைகள் உண்டு என்று மா(ங்)ஸாஞ் கூறப்போக, அதற்குப் பதிலளிக்கும் லெக்கன், வடமொழியிலும் தமிழிலும் சைவ மரபில் சத்-சித்-ஆனந்தம் அதாவது சச்சிதானந்தம் என்று எழுதுவதைக் குறிப்பிட்டு, இதேபோல ஆங்கிலத்திலும் புதிய சொல்லொன்றை உருவாக்கலாம் என்கிறார். லெக்கானுக்குச் சீன மொழி தவிர, வடமொழி மற்றும் தமிழ்ப் பரிச்சயமும் உண்டு என்பது அவர் மா(ங்)ஸாஞ்சுக்கு எழுதின இந்தப் பதிலிலிருந்து தெரிகிறது. ஆனால் இன்றுவரை &lt;strong&gt;jouissance&lt;/strong&gt; என்ற சொல்லுக்கு இணையான சொல் ஆங்கிலத்தில் வரவில்லை என்பதால் அந்தச்சொல் ஏற்கனவே ஒரு மொழியில் இல்லை என்றால் அதைப் புதிதாக உருவாக்குவது எளிதல்ல என்று கூறலாம். ஆக, மா(ங்)ஸாஞ் கூறியதில் உண்மையுண்டு எனத் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ழாக் தெர்ரிதா&lt;/strong&gt;வுடனும் நெடிய விவாதங்களை நேரடியாகவும் கடித வழியும் நிகழ்த்தியவர் மா(ங்)ஸாஞ். ஆதியில் &lt;strong&gt;iteration&lt;/strong&gt; என்ற சொல்லின் வேர் &lt;strong&gt;itera&lt;/strong&gt; என்ற வடமொழிச்சொல்லே என்று மா(ங்)ஸாஞ் அடித்துச் சொல்வதை இறுதியில் தெர்ரிதா ஏற்கவேண்டி வருகிறது. அதாவது itera என்ற சொல்லுக்கு இருபொருள் உண்டு. ஒன்றில் &lt;strong&gt;வேறு (other)&lt;/strong&gt; என்ற பொருளில் வரும், அன்றில் &lt;strong&gt;பிற (again)&lt;/strong&gt; என்ற பொருளில் வரும் மீண்டும். இதற்குத் தமிழிலிருந்தும் பல எடுத்துக்காட்டுக்களை முன்வைக்கிறார், மா(ங்)ஸாஞ். முதலில் &lt;strong&gt;திருமந்திர&lt;/strong&gt;த்தின் தொடக்கத்திலேயே &lt;strong&gt;மரத்தில் மறைந்தது மாமத யானை&lt;/strong&gt; என்ற சொற்றொடர் இருமுறை வருவதைச் சொல்லி, இங்கே மரம், மறைதல், மதம், யானை யாவும் itera என்பதற்கான எடுத்துக்காட்டுக்களே என்கிறார். இப்படி இருமுறை இருபொருளில் வந்து பெருகிச்செல்வதே iteration என்பது மா(ங்)ஸாஞ்சின் துணிபு. &lt;br /&gt;&lt;br /&gt;தவிர, &lt;strong&gt;தொல்காப்பியத்&lt;/strong&gt;தில் வரும் &lt;strong&gt;எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே&lt;/strong&gt; என்ற சூத்திரத்தையும் மா(ங்)ஸாஞ் மேற்கோள் காட்டுகிறார். மூலத்தில் இந்தச் சூத்திரம் இருமுறை வந்திருக்க வேண்டும், ஆனால் ஏடெடுத்தெழுதியோர் itera என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவின்றி ஒருமுறை இருந்தால் போதும் என விட்டிருக்கலாம் என்கிறார். அதாவது பொருளாயது, முதன்முறை சொல் சுட்டும் பல்பொருளாகவும் மறுமுறை அந்தச் சொல்லின் பல்பொருளாகவும் மூன்றாம் முறை எல்லாச்சொல்லையும் வி்ஞ்சும் உண்மைப்பொருளாகிய பரம்பொருளையும் குறித்து அமைந்து பெருகிச்செல்லும் என்கிறார் மா(ங்)ஸாஞ்ச். தெர்ரிதா தம்முடைய அதிமுக்கிய &lt;strong&gt;Of Grammatology&lt;/strong&gt; நூலில் &lt;strong&gt;கலையும் சாவும் - கலையும் அதன் சாவும்&lt;/strong&gt; என்ற தலைப்பில் விரிவாக அலசுவதும் மா(ங்)ஸாஞ் கூறும் itera என்பதைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தெர்ரிதாவுக்கும் மா(ங்)ஸாஞ்சுக்கும் நல்ல நட்பு நிலவியது. எழுபதுகளில் ஃப்ரெஞ்சு அரசானது இனிவரும் யுகத்தில் யாவரும் மென்பொருள்-வன்பொருள் பயின்றால் போதும் என்ற தொலைநோக்குடன் அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களிருந்து தத்துவம்-மொழியியல்-இலக்கியம்-மனோவியல்-சமூகவியல்-மானுடவியல் போன்ற துறைகளைப் படிப்படியாக நீக்க முடிவெடுத்தபோது மா(ங்)ஸாஞ்சும் தெர்ரிதாவும் இணைந்து &lt;strong&gt;GREPH&lt;/strong&gt; என்ற எதிர்ப்பியக்கத்தை நடத்தியிருக்கிறார்கள். அல்ஜீரியாவின் யூதக்குடும்பத்தில் பிறந்த தெர்ரிதாவும் மா(ங்)ஸாஞ்சும் பிற்பாடு ஒருமுறை அல்ஜீரியா சென்றார்கள். அங்கு பாலைவனத்தில் மா(ங்)ஸாஞ் சுழன்றுசுழன்று ஸூஃபி நடனமாடிப் பிறகு யோகப்பயிற்சியும் செய்தார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த தமக்கே தலை கிறுகிறுத்துவிட்டதாக, தம்மைப்பற்றிய &lt;strong&gt;தெர்ரிதாவை முன்வைத்து (2002)&lt;/strong&gt; என்ற படத்தில் சொல்கிறார், தெர்ரிதா. அதைவிடப் பிரமாதமான யோகப்பயிற்சியை, வஜ்ராயனம் என்ற தாந்திரீக பௌத்தத்தைப் பயின்றவர்களிடமிருந்து  கற்றதாக மா(ங்)ஸாஞ் தம்மிடம் தெரிவித்ததாகவும் இதே படத்தில் சொல்கிறார் தெர்ரிதா.&lt;br /&gt;&lt;br /&gt;மா(ங்)ஸாஞ்சைப் பற்றிய இன்னொரு தகவல் - இவர் பொடானி என்ற பெயரில் போர்ஹெவுக்குப் பல கடிதங்கள் எழுதியவர். போர்ஹெவின் கதைகளை விமர்சிக்கும்போது அவற்றில் பெண் பாத்திரங்களே இல்லை என்று கூறி, போர்ஹெ தீவிர ஆணாதிக்க மனப்பான்மை உடையவர் என்று குற்றம் சாட்டுகிறார் பொடானி. இன்னோர் இடத்தில், பிரதியே பெண்தான் என்றும் அந்தப்பெண்ணைச் சுற்றி வருபவர்தான் தம் வாழ்நாள் முழுதும்  எழுதிய போர்ஹெ என்றும் சிலாகித்துக்கூறும் பொடானி, இந்தியப்பரப்பின் தத்துவ மரபுகள் எத்தனையோ இருக்கும்போதும் அவற்றில் தமக்கு ஏற்புடையது சக்தி வழிபாடான சாக்தமே என்று சொல்லி, கொல்கொத்தா பெருநகரில் ஹௌரா பகுதியில் துர்க்கையம்மனு்க்கு நடந்த  பலிபூஜையில் தாம் பங்கேற்றதையும் விவரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வெளியாகியிருக்கும் மா(ங்)ஸாஞ்சின் நூல்கள் மூன்றையும் வாசித்தவுடன் ஃப்ரெஞ்சு அறிவுலகத்தார் தம்முடைய தன் அதிமுக்கிய அறிஞர்களில் ஒருவரை வரலாற்றிலிருந்தே மறைத்துவிட்டார்கள் என்றும் அவருடைய கருத்துக்களைத் திருடி தத்தம் பெயர்களில் வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் சட்டென்று புலப்பட்டுவிடுகிறது. இவை மன்னிக்கவே முடியாத குற்றங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தம்முடைய பெயர் வெளியில் தெரிவதை, பிரபலமாவதை மா(ங்)ஸாஞ் விரும்பவில்லைதான். மற்ற ஃப்ரெஞ்சு அறிஞர்களோ, அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதைப் போல, அவருடைய பெயரையே வரலாற்றிலிருந்து சுத்தமாகத் துடைத்தெடுத்து விட்டிருக்கிறார்கள். இது ஃப்ரெஞ்சு அறிவுலக வரலாற்றில் நடந்த முக்கிய மோசடி. தவிர, இவர்கள் யாவரும் கீழையுலகின் தத்துவம் பற்றி, குறிப்பாக இந்திய தத்துவம் பற்றி, ஒரு சொல்லும் சொல்லவில்லை. நேர்மையற்றது ஃப்ரெஞ்சு அறிவுலகம் என்பதற்கு இது சரியான சான்று!&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இதுவரை நாமறிந்த அமைப்பியல், அதற்குப் பிறகான-அமைப்பியல், பிறகான-நவீனத்துவம் போன்றவற்றை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குண்டு. மா(ங்)ஸாஞ்சின் மூன்று நூல்களையும் பல மொழிகளில் ஆக்கி, ஃப்ரெஞ்சு அறிவுலகத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்த வேண்டிய கடமை யாவருக்கும் உண்டு. மேலும் ஃப்ரெஞ்சு அறிவுலக வரலாற்றையே இந்த நூல்களின் பின்புலத்தில் மாற்றி எழுதியாக வேண்டிய கடமையும் உண்டு. தவிர, இந்த நூல்கள் வெளிவந்த பின், அதாவது கடந்த இரண்டு மாதங்களாக, மேற்குலகத் தத்துவம் கீழை நோக்கி திரும்பிவிட்டது என்றால் மிகையன்று!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-3448002244203981347?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/3448002244203981347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=3448002244203981347' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/3448002244203981347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/3448002244203981347'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/11/2_12.html' title='மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம் - 3'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Svu47NxBM3I/AAAAAAAAC6g/8Numiao4X4U/s72-c/Mensonge.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-1705149124458374359</id><published>2009-11-11T09:29:00.005Z</published><updated>2009-11-11T13:05:43.142Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃப்ரெஞ்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம் - 2</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Svqza0LeHoI/AAAAAAAAC6Y/INhv8S6KgEc/s1600-h/Mensonge.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 329px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Svqza0LeHoI/AAAAAAAAC6Y/INhv8S6KgEc/s400/Mensonge.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5402827976249056898" /&gt;&lt;/a&gt;அந்தக் காலகட்டத்தில் - அதாவது நாற்பதுகளில் - ஹா(ங்)ரி மா(ங்)ஸாஞ் ஜ(நி)ப்பா(போ)ன் சென்றுதிரும்பிய பிறகு ஜ(நி)ப்பா(போ)னியக் கலாச்சாரம், சித்திர எழுத்துமுறைகள் பற்றிய நீண்ட கட்டுரையை எழுதினார். 1948-ஆம் ஆண்டில் இவர் எழுதின அந்தக்கட்டுரையை அப்போது வெளியிடாமலேயே இருந்திருக்கிறார். ஆனால் ஜ(நி)ப்பா(போ)ன் போகப்போவதாக ரோலன் பார்த்துக்கு கடிதமே எழுதியிருக்கிறார், இந்தக் கட்டுரையை எழுதப்போவதாகவும் கூறியிருக்கிறார். ரோலன் பார்த்தோ 1950-ஆம் ஆண்டில்தான் ரோலன் பார்த் ஜப்பானுக்குப் போகிறார். பிறகு 1970-ஆம் ஆண்டில்தான் &lt;strong&gt;குறியீடுகளின் பேரரசு (L'Empire des signs)&lt;/strong&gt; என்ற பெயர்பெற்ற நூலை எழுதிப் புகழ்பெறுகிறார். இந்த நூல், தற்போது வெளியாகியிருக்கும் மா(ங்)ஸாஞ்சின் நூலை வாசிக்கும்போது அதன் அடிப்படையிலேயே பார்த் தம்முடைய நூலை எழுதியிருக்கிறார் என்றும் ஆனால் சில இடங்களில் சரியாகவும் பல இடங்களில் தவறாகவும் எழுதியிருக்கிறார் என்றும் தெளிவாகத் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது மா(ங்)ஸாஞ்சைப் பொறுத்தவரை, அமைப்பியல்வாதத்தின் அடிப்படை, மொழியே; ஆனால் இந்த மொழி இதுவரை மேற்குலகின் தர்க்கமைய (logocentric ) மரபில்  உருவானதே என்கிறார்; அதை நிராகரித்து, கீழையுலகச் சிந்தனையில் உருவான தொன்மை மொழியில் ஆய்வுகளைச் செய்கிறார். ஃப்ரெஞ்சு மொழி-வரலாற்றியல் அறிஞரும் (philologist) வடமொழி வல்லுநருமான &lt;strong&gt;மிஷெல் ஜூல்ஸ் ஆல்ஃப்ரட் ப்ரியல் (Michel Jules Alfred Breal)&lt;/strong&gt; எழுதிய பல நூல்களைக் கரைத்துக் குடித்ததை மா(ங்)சாஞ் நன்றியுடன் குறிப்பிடுகிறார். மேலும் குறி என்பது குறிப்பான்/குறிப்பீடால் ஆனது; ஆனால் பேச்சு, எழுத்து, கண்ணோட்டம் என்றெல்லாம் மொழியைக் கையாளும்போது குறி என்பதைக் கருத்துரீதியாக இரண்டாகப் பிரிக்கமுடியாது என்கிறார். எடுத்துக்காட்டாக, வீட்டு விலாசங்களில் எண்கள் இல்லாத நி(ஜ)ப்போ(பா)னுக்கு அந்நியரான ஒருவர் செல்லும்போது, தாமே குறிகளை உருவாக்கிக்கொண்டு அவற்றைக் கண்டைடதவதாக பார்த் சொல்வதை மா(ங்)ஸாஞ் ஏற்றிருக்கவில்லை. தவிர, ஜ(நி)ப்பா(போ)ன் குறியியலின் சொர்க்கம் என்று பார்த் கூறுவதை மா(ங்)ஸாஞ் எள்ளி நகையாடியிருப்பதாகத் தெரிகிறது. இன்னும் இருபதாண்டுகளில் புதிய பொருட்கள் பல கண்டடையப்பட்டு, ஜ(நி)ப்பா(போ)ன் குறியியலின் நரகம் என்பதாக மாறும் என மா(ங்)ஸாஞ் சரியாகவே கணித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃப்ரெஞ்சு மொழியியல் அறிஞரும் மிஷெல் ஃபூக்கோவின் ஆசிரியருமான &lt;strong&gt;ழார் தூமெஸில் (Georges Dumezil)&lt;/strong&gt; 1949-ஆம் ஆண்டில் பாரிஸ் நகரின் &lt;strong&gt;Collège de France&lt;/strong&gt; உயர்கல்வி நிறுவனத்தில் கௌரவப் பேராசிரியர் பதவியை ஏற்றார். அப்போது க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ் தூமெஸில்லை மா(ங்)ஸாஞ்சுக்கு அறிமுகம் செய்கிறார். அந்தக் காலகட்டத்தில் இருவரும் பல ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றனர். முக்கியமாக மொழிச்செயல்பாட்டையும் அதன் வேர்மூலங்களையும் கீழை உலக மொழிகளின் வழி ஆராய்கிறார்கள். எடுத்துக்காட்டாக,  சாவுக்கான வடமொழிச்சொல்லான &lt;strong&gt;ம்ருத்&lt;/strong&gt; என்பதன் எதிர்ப்பதமாகிய &lt;strong&gt;அம்ருத்&lt;/strong&gt; என்பது தமிழில் &lt;strong&gt;அமிர்தம், அமுது&lt;/strong&gt; என்றாவதைப்போல கிரேக்க மொழியில் &lt;strong&gt;அம்புரோசியா (Ambrosia)&lt;/strong&gt; என்ற பானமாகிறது என்று நிறுவினார்கள். இந்த‌க்க‌ட்டுரை 1965-ஆம் ஆண்டில் &lt;strong&gt;Tel Quel&lt;/strong&gt; என்ற ஃப்ரெஞ்சு உலகின் முதன்மைத் தத்துவ-இலக்கிய இதழில் வெளியானது. ஆனால் மா(ங்)ஸாஞ் இந்தக்கட்டுரையைத் தம்முடைய பெய‌ரில் எழுதாம‌ல் &lt;strong&gt;மார்க் ஷெ‌னெத்தியே (Marc Chenetier)&lt;/strong&gt; என்ற‌ புனைபெய‌ரில் தூமெஸில்லோடு இணைந்து எழுதியிருக்கிறார் என்று இவ‌ருடைய‌    நூல்களை வாசித்தால் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, மா(ங்)ஸாஞ்சுக்கும் பிறர்க்குமான கடிதப்போக்குவரத்தை வாசிக்கும்போது, தொடக்கம் முதலே தம்மை முன்நிறுத்தாம‌ல் த‌ம்முடைய க‌ருத்துக‌ளையே முன்வைத்தவ‌ர் என்ப‌து தெரிகிற‌து. தவிர, த‌ம்முடைய பெய‌ரைப் பலர் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தையும் கறாராக நிராகரிக்கிறார். த‌ம்முடைய கருத்தைச் சொல்லவேண்டிய கட்டாயம் வரும்போது புனைபெய‌ர்களில் எழுதுகிறார். &lt;strong&gt;மார்க் ஷெனெத்தியே (Marc Chenetier), மௌ‌ரிஸ் (Maurice), யூரி காம்தூரி (Uri Comturi), போடோனி (Bodoni)&lt;/strong&gt; போன்ற‌ பல பெய‌ர்க‌ளில் &lt;strong&gt;Tel Quel, Le Chemin, Le Blanche&lt;/strong&gt; போன்ற‌ பல இத‌ழ்க‌ளில் இவர் எழுதிய‌து தெரிய‌வ‌ருகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;அதே காலகட்டத்தில்தான் மா(ங்)ஸாஞ்சுக்கு தூமெஸில் தம்முடைய மாண‌வ‌ர் என்று  ஃபூக்கோவை அறிமுக‌ம் செய்து வைக்கிறார். ஃபூக்கோவுக்கு ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை, குறிப்பாக கீழை உலகத்தின் த‌த்துவ‌ங்களைய, அறிமுக‌ம் செய்ததில் மா(ங்)ஸாஞ்சின் ப‌ங்கு மிக‌ அதிக‌ம். குறிப்பாக‌, அதிகார‌ம் என்ப‌து இந்திய‌ச்சிந்தனையில் எப்ப‌டிச் செய‌ல்ப‌ட்டிருக்கிற‌து என்ப‌தை நான்மறைகள், உப‌நிஷ‌த்துக‌ள், பௌத்த, சமண, ஆசீவக, சார்வாக மரபுகள்,  தருக்க சாஸ்திர-வியாகரண நூல்கள், பாஷ்யம் என்ற உரைமரபு போன்ற‌வற்றை  ஃபூக்கோவுக்கு விள‌க்கியவர், மா(ங்)ஸாஞ்சே. அதையடுத்து ஃபூக்கோ எழுதியதே &lt;strong&gt;ஆசிரியன் என்றால் யாது?&lt;/strong&gt; என்ற அவருடைய பெயர்பெற்ற கட்டுரை. ஆனால் அதன் மூலக்கருத்தையே ஃபூக்கோ த‌வறாக‌ப் புரிந்துகொண்டுள்ளார் என்று விரிவாக‌ ஒரு விமர்சனத்தை 1976-ஆம் ஆண்டில், &lt;strong&gt;Tel Quel&lt;/strong&gt; இத‌ழில், யூரி காம்தூரி என்ற‌ பெய‌ரில் முன்வைத்தார் மா(ங்)ஸாஞ்ச். அதாவ‌து ஃபூக்கோ, &lt;strong&gt;ஆசிரிய‌ன் என்றால் யாது?&lt;/strong&gt; எனக்கேட்டார், மாறாக, &lt;strong&gt;ஆசிரிய‌ன் என்ப‌வ‌ன் எங்கே?&lt;/strong&gt; என்றுதான் எழுதியிருக்க‌வேண்டும் என்று தத்துவச்சொல்லாடல் வழி நிறுவுகிறார் மா(ங்)ஸாஞ்ச்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(அடுத்த பகுதியுடன் முடியும்)&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-1705149124458374359?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/1705149124458374359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=1705149124458374359' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/1705149124458374359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/1705149124458374359'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/11/2.html' title='மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம் - 2'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Svqza0LeHoI/AAAAAAAAC6Y/INhv8S6KgEc/s72-c/Mensonge.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-5616867260337963049</id><published>2009-11-07T06:26:00.006Z</published><updated>2009-11-08T21:35:09.059Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃப்ரெஞ்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம் - 1</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SvUdC6En3wI/AAAAAAAAC6Q/IgIjqSaUbRI/s1600-h/Henri+Mensonge.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SvUdC6En3wI/AAAAAAAAC6Q/IgIjqSaUbRI/s400/Henri+Mensonge.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401255263886368514" /&gt;&lt;/a&gt;அண்மையில் ஃப்ரெஞ்சு அறிஞர் &lt;span style="font-weight:bold;"&gt;க்ளோத் லெவி-ஸ்ட்ராஸின்&lt;/span&gt; மறைவை உலகெங்கும் உள்ள பழங்குடியினர் வரை  தெரிந்துகொண்டார்கள். ஆனால் ஃப்ரெஞ்சு அறிஞர்கள் யாவருக்கும் அந்த நிலை ஏற்படுமா என்றால் இல்லை எனலாம். அதற்கான சரியான உதாரணம், ஹா(ங்)ரி மா(ங்)ஸாஞ்!&lt;br /&gt;&lt;br /&gt;இதே ஆண்டு ஜூலை மாதம் இருபதாம் நாள், லெவி-ஸ்ட்ராஸ் பணியாற்றிய பாரீஸ் நகரின் அதே &lt;span style="font-weight:bold;"&gt;ஃப்ரெஞ்சுக் கல்லூரி&lt;/span&gt;யின் &lt;span style="font-weight:bold;"&gt;(Collège de France)&lt;/span&gt; மொழியியல்-தத்துவத்துறைகளில் தலைவராக இருக்கும் &lt;span style="font-weight:bold;"&gt;ழாக் போவர்ஸ் (Jacques Bouveresse)&lt;/span&gt; என்ற அறிஞர், மூன்று நூல்களை முதன்முறையாக அந்தக் உயர்கல்வி நிறுவனத்தின் வழி வெளியிட்டு தம் உரையைத் தொடங்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மிஷெல் ஃபூக்கோ, ழாக் தெர்ரிதா&lt;/span&gt; போன்ற மேற்குலகத் தத்துவ அறிஞர்களை விமர்சித்த போவர்ஸின் உரையைக் கேட்டு, நூறாண்டாகப் பேருரைகளை, விவாத‌ங்களையெல்லாம் கேட்டு எதிரொலித்துவந்த salle de réunion என்ற அந்தப் பிரம்மாண்ட அரங்கின் அடித்தளமே நொறுங்கி வீழ்ந்தது என்று கூறினால் மிகையல்ல! ஆம் அதுவரை மா(ங்)ஸாஞ் பற்றி யாருக்கும் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;1911-ஆம் ஆண்டில் ஃப்ரெஞ்சுத் தாய்-தந்தையருக்கு இரண்டாம் மகனாக பல்கேரிய நாட்டில் பிறந்து, நான்காம் வயதிலேயே ஃபிரான்சுக்கு வந்து கடந்த ஆண்டில் அதாவது தம்முடைய தொண்ணூற்றி ஏழாம் வயதில் மறைந்தவர், மா(ங்)ஸாஞ். இவருடையவைதாம் இந்த மூன்று நூல்களும். இவை, இருபதாம் நூற்றாண்டில் ஃபிரான்சில் தோன்றிய முக்கியச் சிந்தனைகளான அமைப்பியல்வாதம், பிறகான -அமைப்பியல்வாதம், பிறகான-நவீனத்துவம் போன்றவற்றை, ஃப்ரெஞ்சு அறிவுத்துறையில் நடந்த தாறுமாறான மோசடிகளைப் புதிய கோணத்தில், தீவிரமான அறிவுப்புலத்தில் வைத்து அலசியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நூல்களின் பெயர்கள் இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1. La Fornication Comme Une Acte Culturelle - பொருந்தாக்கலவியாக, பண்பாட்டுச் செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;2. Les objets du désir, du pouvoir et de la 'réalité': les problems de developpement du discours - வேட்கை, சக்தி, எதார்த்தம் - சொல்லாடல் வளர்ச்சியின் பிரச்னைப்பாடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;3. L'apparatus d'état: l'acquisition de langage et le developpement de la pensée occidentale - அரசு எந்திரம் - மொழியகமாதல் மற்றும் மேற்குலக மனத்தின் வளர்ச்சி&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கணிதத்தில் பல கோட்பாடுகளை, சூத்திரங்களை உலகுக்கு வழங்கிய &lt;span style="font-weight:bold;"&gt;பியர் தெ ஃபெர்மெட்&lt;/span&gt; (Fermat) பிறந்த, கரோன் நதிக்கரை நகர்  தூலூசிப்பட்டணத்தில் (Toulouse) உள்ள Hopital de la grave என்ற மனநல விடுதியில் முப்பதாண்டாக மனம் பிறழந்த நிலையில் தனிமையில் வசித்தவர்  ஹா(ங்)ரி மா(ங்)ஸாஞ்.&lt;br /&gt;&lt;br /&gt;1978-ஆம் ஆண்டுமுதல் தனிமையில் மனம் பிறழ்ந்து இருந்த‌ இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறைந்தபோது விட்டுச்சென்றவை, இரண்டு தோல்பை முழுவதும் ஏறத்தாழ மூவாயிரம்  பக்கங்களில் முப்பதாண்டு முன்பு வரை எழுதிய தத்துவக்குறிப்புகள், கட்டுரைகள் மற்றும் பல தத்துவ அறிஞர்கள் இவருக்கு எழுதிய ஏராளம் கடிதங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மா(ங்)ஸாஞ் கல்வியை முறையாகப் பயின்றவரல்லர். இளவயதிலேயே &lt;span style="font-weight:bold;"&gt;மார்க்ஸ், ஃப்ராய்ட்,  நீட்ஷே, ஸஸ்ஸூர்&lt;/span&gt; ஆகியோரின் தாக்கம் தம்மிடமுண்டு என்கிறார். 1934-ஆம் ஆண்டில், ஃபிரான்சில் வைத்து லெவி-ஸ்ட்ராஸைச் சந்திக்கிறார். அடுத்த ஆண்டே அவருடன் பிரேசிலுக்குப் பயணமாகி, நான்காண்டுகள் வரை அமேஸான் காடுகளில் நம்பிக்வரா (Nambikwara), துபிகவாஹி (Tubikawahib) உள்ளிட்ட பழங்குடி மக்களை ஆய்வு செய்கிறார்கள். தம் ஆய்வுக்கு மா(ங்)ஸாஞ் உதவியதைப் பின்னாளில் லெவி-ஸ்ட்ராஸ் குறிப்பிடத் தவறவில்லை. 1939-ஆம் ஆண்டில் ஃபிரான்ஸ் திரும்பிய மா(ங்)ஸாஞ்க் பிற்பாடு மொழியியல் மற்றும் தத்துவத்தில் நாட்டம் கொள்கிறார். குறிப்பாக கீழைத்தத்துவங்கங்க்ளில். இரண்டாம் உலகப்போர்க்கால ஆண்டுகளிலும் அதற்கு அப்புறமும் நான்கு முறை இந்தியா, மூன்று முறை சீனா, ஜப்பான் எனப் பயணம் மேற்கொண்டார். இதே காலகட்டத்தில் இவருடன் இருந்த இளைஞர்தாம்  ரோலன் பார்த்.&lt;br /&gt;&lt;br /&gt;மா(ங்)ஸாஞ்சிடமிருந்து ரோலன் பார்த் குறியியல் விஷயங்களைக் கற்றிருக்கிறார். இவருக்கு பார்த் எழுதிய கடிதங்களில் இது தெரிகிறது. ஆசிரியனாகப்பட்டவன் தான் சிந்திக்க விரும்பும் நூல்களை தானே எழுதிமுடித்து சுய அதிகாரத்தைக் கோருபவன், தன்னைக் காட்டிலும் யாரும் துல்லியமாக எதார்த்தத்தைப் பிரதிபலிக்க முடியாது என இறுமாப்பு கொள்பவன் என்கிறார் ஹா(ங்)ரி. &lt;span style="font-weight:bold;"&gt;ஆசிரியனின் மரணம்&lt;/span&gt; என்ற கோட்பாட்டை பார்த் உலகுக்கு அறிவித்தத‌ற்கு முன்பே இதை எழுதிவிட்டார் மா(ங்)ஸாஞ். தவிர, ஆசிரியன் என்பவன் பூர்ஷ்வா-வணிக முதலாளித்துவத்தின் கண்டுபிடிப்பே என்பது மா(ங்)ஸாஞ்சின் மிகத் துல்லியமான வரி!  &lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டுமல்ல, &lt;span style="font-weight:bold;"&gt;ஆசிரியனின் மரணம்&lt;/span&gt; கோட்பாட்டை தாம் வெளியிட விரும்பவில்லை என்று மா(ங்)ஸாஞ் கூறியதை மீள்பரிசீலனை செய்யுமாறு பார்த் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதை பார்த் மா(ங்)ஸாஞ்சுக்கு எழுதிய கடிதம் சொல்கிறது. இதற்கு மா(ங்)ஸாஞ் எழுதிய பதில் ஆச்சர்யமானது. ஆசிரியனின் மரணம் என்ற கூற்றுக்கே ஆசிரியனாக ஒருவன் தேவை, தம்முடைய பெயரை (அதாவது ஆசிரியனின் பெயரை) வெளியிட விருப்பமில்லை என்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;கீழைத்தத்துவ‌ங்களைக் கற்க வேண்டும் என்ற நோக்கில் சீனாவின் கன்பூஷியஸ், மென்சியஸ், லாவோட்ஸே, சுவாங்ட்ஸூ ஆகியோரில் நூல்களையும் இந்திய நான்மறைகள், உபநிஷத்துக்கள், பதஞ்சலியின் யோகம், சங்கர, ராமானுஜ பாஷ்யங்கள் வரையும் வட மொழி இலக்கண நூலான பாணினியின் அஷ்டாட்த்யாயியில் தொடங்கித் தமிழின் தொல்காப்பியம்-நன்னூல் வரையும் பிறகு பௌத்த பாலி மொழி-பிராகிருத மொழி நூல்கள், நாகார்ஜுனர்-தீகநாகரின் தர்க்க-தத்துவ நூல்கள், போதிதர்மர் சீனா சென்று பயிற்றுவித்துப் பிற்காலத்தில் ஜப்பானில் ஃஸென் எனப் பிரபலமான தியானம் வரையும்  கற்றுத் தேர்ந்தவர் மா(ங்)ஸாஞ். இதையெல்லாம் இவர், ரோலன் பார்த்திடம் பிறகு இவரைச் சந்திக்கும் லக்கான், ஃபூக்கோ, தெர்ரிதா ஆகியோரிடம் சொல்லியிருக்கிறார் என்பதை  இவர்கள் மா(ங்)ஸாஞ்சுடன் நடத்திய கடிதப்போக்குவரத்தில் காண முடிகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(இன்னும் வரும்)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-5616867260337963049?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/5616867260337963049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=5616867260337963049' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/5616867260337963049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/5616867260337963049'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/11/1.html' title='மறைந்த அறிஞர் மா(ங்)ஸாஞ் பற்றி வாசுவின் தமிழாக்கம் - 1'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SvUdC6En3wI/AAAAAAAAC6Q/IgIjqSaUbRI/s72-c/Henri+Mensonge.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-7550556715960854839</id><published>2009-11-04T06:51:00.013Z</published><updated>2009-11-07T07:32:11.736Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லெவி-ஸ்ட்ராஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃப்ரெஞ்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>ஃப்ரெஞ்சு அறிஞர் க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ் மறைவு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SvElQvvyyII/AAAAAAAAC6I/TaR7LUj_0iY/s1600-h/Levi-Strauss.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 335px; height: 313px;" src="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SvElQvvyyII/AAAAAAAAC6I/TaR7LUj_0iY/s400/Levi-Strauss.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5400138397818996866" /&gt;&lt;/a&gt;சென்ற திங்களன்று நிலவெனும் திங்களை முழுதாகப் பார்க்க முடிய, நூறாண்டு எய்திய லெவி-ஸ்ட்ராஸ் எத்தனைத் திங்கள் இப்படிக் கண்டிருப்பாரெனக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். அடுத்த நாள், அதாவது நேற்றிரவு, அவர் மறைந்த செய்தி வெளியானது. நிலவுகண்டு மலர்ந்த இந்தக் காட்டுப்பூ-மனம், நவீன அமைப்பியல்வாதத்தை அறிவார்த்த தளத்தில் முன்வைத்த &lt;span style="font-weight:bold;"&gt;காட்டுப்பூ (La Pensée Sauvage)&lt;/span&gt; உதிர்ந்தது, இயற்கையின் விதிப்படி!&lt;br /&gt;&lt;br /&gt;லெவி-ஸ்ட்ராஸின் வாழ்க்கையில் ஒருபுறம் விஞ்ஞானமும் மறுபுறம் இசையும் கலையும் மூன்றாம் புறம் தத்துவமும் செலுத்திய தாக்கங்கள் குறித்து நினைக்காமலிருக்க முடியவில்லை! ஸ்ட்ராஸ்பர்க் நகர் சார்ந்த யூதக்குடும்பத்தில் பிறந்த லெவி-ஸ்ட்ராஸின் பாட்டனார், வயலின் இசைக்கலைஞர்; தந்தையார் ஓவியர். தந்தையாரின் முறைப்பெண்ணான அன்னையார், யூத ராப்பிமார் வழிவந்தவர். முதல் உலகப்போர்க்காலத்தில் சிறுவன் க்ளோதுடன் யூதக்கோயிலில் தஞ்சம்புகுந்து வாழ்ந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;மாணவப்பருவத்தை அடைந்த பிறகு லெவி-ஸ்ட்ராஸ் யூத மரபுகளிலிருந்து சற்றே விலகி, சோஷலிஸ மாணவர் இயக்கத்தில் பங்காற்றியிருக்கிறார்! ஆனால் விஞ்ஞானத்தை, கலையை, இசையைக் கைவிடவே இல்லை. இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சற்று முன்பாக பிரேஸில் நாட்டில் ஸா பாலோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றச் சென்ற போது தென்னமெரிக்கக் கண்டம் முழுதும் சுற்றி, மானுடவியல் கள ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். அந்தக்காலகட்ட ஃப்ரெஞ்சுப் பல்கலைக்கழக வாழ்வில் மானுடவியலுக்கு அத்தனை முக்கியத்துவம் இருக்கவில்லை என்பதை மனதில் கொண்டால் லெவி-ஸ்ட்ராஸ் எடுத்த முடிவின் சாகசத்தன்மை விளங்கும். இதைக் குறிப்பிட்டும்போது, பதினாறாம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் காலனிய வீரர்கள் சென்ற சாகசப்பாதையில் சென்று அதற்கு நேர் எதிரான சாகசத்துடன் தாம் சிந்தித்ததாக, லெவி-ஸ்ட்ராஸ் நகைச்சுவையுடன் எழுதிச் செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலகட்டத்தில் ஃப்ரான்ஸ் திரும்பியிருந்த லெவி-ஸ்ட்ராஸ், அங்கிருந்து தப்பி அமெரிக்கா சென்று அங்கு ந்யூயார்க் நகரில் வசித்தார். ஸர்ரியலிஸக் கலைஞர்கள் ஆந்ரே ப்ரெத்தோன், மாக்ஸ் எர்னெஸ்ட், மார்ஸெல் துசாம்ப் போன்றோருடன் நட்பைத் தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் ப்ராக் மொழியியல் பள்ளியைச் சார்ந்த அறிஞர் ரோமான் யாக்கோப்ஸனை லெவி-ஸ்ட்ராஸ் சந்திக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அறிவுலக வரலாற்றில் மாணவரொருவர் தமக்கான ஆசிரியரையும் ஆசிரியர் தமக்கான மாணவரையும் கண்டறியும் நிகழ்வு ஆச்சர்யமானது. தினசரி வாழ்க்கையில் எதேச்சையாக நிகழும் இத்தகைய சம்பவத்தின் வரலாற்று முக்கியத்துவம் விளங்குவது பிற்பாடுதான். லெவி-ஸ்ட்ராஸ் யாக்கோப்ஸனைச் சந்தித்த நிகழ்வு, அத்தகைய ஒன்று. அதன் விளைவாக, மேற்குலக அறிவுமரபே மாறிப்போனது. ஆம், இரண்டாம் உலகப் போர்க்காலத்தின் விளைவாக அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்த இந்த இருவரின் சந்திப்பு, ருஷ்யப் புரட்சியின் போது முதிர்ச்சி பெற்ற  உருவவியல்வாதத்துக்கும் அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த அமைப்பியல்வாதத்துக்குமான சந்திப்பாகி விட்டது எனப் புரிந்துகொள்கிறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;போர்க்காலம் முடிந்து ஃப்ரான்ஸ் திரும்பிய லெவி-ஸ்ட்ராஸ், ஸோபான் பல்கலைக்கழகத்திலும் பிறகு ஃப்ரெஞ்சுக் கல்லூரி என்ற புதிய கல்வி நிறுவனத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் தொன்மவியல் குறித்த தம்முடைய நான்கு நூல்கள் அடங்கிய பெரும்தொடரை எழுதியபோதுதான் இவருடைய சிந்தனையின் வீச்சை அறிவுலகம் புரிந்துகொண்டது. இதே காலகட்டத்தில் லெவி-ஸ்ட்ராஸ் எழுதிய முக்கிய புத்தகம்தான் &lt;span style="font-weight:bold;"&gt;காட்டுப்பூ (La Pensée Sauvage)&lt;/span&gt;. இதன் பின்னுரையில்தான் இருத்தலியல் அறிஞரான ழான்-போல் சார்த்தருக்குத் தம்முடைய பெயர்பெற்ற பதிலை அளிக்கிறார், லெவி-ஸ்ட்ராஸ்! இந்த ஒரு கட்டுரையை வாசித்தே என் தலைமுறையைக் கவர்ந்திருந்த இருத்தலியல் சிந்தனையிலிருந்து அமைப்பியல்வாதம் நோக்கி நகர்ந்தேன் நான்!&lt;br /&gt;&lt;br /&gt;லெவி-ஸ்ட்ராஸின் முழுச்சிந்தனையையும் இயற்கையோடு இயைந்தும் மீறியும் செல்கிற தொல்குடி-வாழ்க்கையின் சிக்கலான விஷயங்கள் பற்றியது என்றும் பார்க்க முடியும். இந்த விஷயங்களை  – கொல்வது, புசிப்பது, மணம் செய்வது இவற்றில் பொதிந்துள்ள கொடைச்செயலே என்கிறார் லெவி-ஸ்ட்ராஸ்! இவற்றில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்குமுகமாக, தொன்மங்களும் அவை சார்ந்த மனித உறவுகள் மற்றும் விலக்குகளும் இயங்குகின்றன என்பது லெவி-ஸ்ட்ராஸின் முடிவு. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் தொன்மம் என்பது மொழியைப் போன்ற, மொழி வடிவிலான ஒன்று என்கிறார் லெவி-ஸ்ட்ராஸ். நம்முடைய உலகத்தை நாம் புரிந்துகொள்ள முயல்கிறோம் என்பதாய் முயற்சிகளே தொன்மங்கள். எனவே இவை எப்போதும் இயக்கத்தில் இருப்பவை, மாறிக்கொண்டிருக்கின்றவை, இன்னும் சொல்லப்போனால் தீர்க்க முடியாததாய் வருகிற புதிர்களைத் "தீர்க்க" முயல்கிற விடாப்பிடியான முயற்சிகள் இவை, எனவே சில சமயம் உறைந்தும் போய்விடக்கூடியவை. இவற்றின் இயக்கத்தின்போது இவை கொண்டுவரும் இருமை-எதிர்வுகள், முரணியக்கங்கள் போன்றவையே தம்மைத் தாண்டிய புதிய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன என்கிறார் லெவி-ஸ்ட்ராஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருமைத்தன்மை மற்றும் அதன் இயக்கத்துக்குப் பின்புலமாக இருப்பவை, மனித மனத்தின், மனித மூளையின் அடிப்படைகளாக அமைந்த இருமைத்தன்மைகளே என்றும் லெவி-ஸ்ட்ராஸ் கூறுகிறார். ஆக, மூளைக்குப் பகுதிகள் இரண்டு, உடலில் கண்கள் இரண்டு, கை-கால்கள் இரண்டு என மனித உடற்கூற்றிலேயே சில இடங்களில் பொதிந்திருக்கிறது இந்த இருமைத்தன்மை. இவ்வகையில் மனித ஆன்மா என்பதை algebra கணிதவியல் போன்ற ஒரு சட்டகத்தில் வைத்துக் கண்டுவிடலாம் என்பதும் லெவி-ஸ்ட்ராஸின் அதீதமான, சர்ச்சைகளைக் கிளப்பிய ஒரு கூற்று. இதுபற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, லெவி-ஸ்ட்ராஸை அணுகும்போது மொழியியல்-மானுடவியல்-கலை-விஞ்ஞானம் என்ற மூன்று துறைகளின் சுவர்கள் உடைகின்றன. இவருடைய செயல்பாடுகள் களப்பணி அடிப்படையில் விஞ்ஞானப்பூர்வமாக அமைந்தவை, இசையும் கலையும் இவருடைய உணர்வுப்பூர்வமான உந்துசக்தி, சிந்தனைக்கான கேள்விகளும் பிரச்னைப்பாடுகளும் வருவது தத்துவத்திலிருந்து. இவற்றை வைத்துப்பார்க்கும்போது விஞ்ஞானம்-கலை-தத்துவம் என நாம் போட்டுக்கொண்டிருக்கும் துறைப்பிரிவுகள் உடைந்து, இவற்றுக்கிடையில் உயர்தளத்தில் தோன்றும் இணைவை நோக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;லெவி-ஸ்ட்ராஸின் &lt;span style="font-weight:bold;"&gt;நோக்க, கேட்க, வாசிக்க (Regarder, écouter, lire)&lt;/span&gt; என்ற இறுதி நூல்களில் ஒன்றை நான் அண்மையில் மேற்கொண்ட இந்தியப்பயணத்தின்போதுதான் வாசித்து முடித்தேன். அதில் இருப்பவை, விஞ்ஞானம்-கலை-இசை-சிந்தனை ஆகியவை சந்திக்கும் புள்ளிகளே.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்போன்றவர்கள் அமைப்பியல்வாதம் நோக்கி இழுத்து வந்த லெவி-ஸ்ட்ராஸின் அபூர்வ சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் தலைவணங்குகிறேன். இவருடைய சிந்தனையின் சாகசமும் பணிவும் நம்மை வந்தடையட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/search/label/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D"&gt;லெவி-ஸ்ட்ராஸ் பற்றி நான் எழுதியவை, ஃப்ரெஞ்சிலிருந்து என் தமிழாக்கங்கள்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.arte.tv/fr/Comprendre-le-monde/Journee-speciale---Claude-Levi-Strauss/2310966.html"&gt;தொலைக்காட்சியில் லெவி-ஸ்ட்ராஸ் நேர்காணல்கள் - ஃப்ரெஞ்சு மொழியில்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://savageminds.org/2009/04/24/tristes-tropiques/"&gt;பிரேஸிலில் மீண்டும் லெவி-ஸ்ட்ராஸ் - தொலைக்காட்சிப் படம்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ina.fr/recherche/recherche?search=L%C3%A9vi-Strauss&amp;vue=Video"&gt;&lt;strong&gt;லெவி-ஸ்ட்ராஸ் - மேலும் நேர்காணல்கள், படங்கள்&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-7550556715960854839?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/7550556715960854839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=7550556715960854839' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/7550556715960854839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/7550556715960854839'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/11/blog-post.html' title='ஃப்ரெஞ்சு அறிஞர் க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ் மறைவு!'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SvElQvvyyII/AAAAAAAAC6I/TaR7LUj_0iY/s72-c/Levi-Strauss.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-8028255133068284230</id><published>2009-10-30T06:10:00.001Z</published><updated>2009-10-31T13:26:55.823Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SusxL6rrMwI/AAAAAAAAC54/TEzWmZzm-pY/s1600-h/Thandavanveli.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SusxL6rrMwI/AAAAAAAAC54/TEzWmZzm-pY/s400/Thandavanveli.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5398462659134436098" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/02/1.html"&gt;மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 1 - மரிலின் க்ரிஸ்ல்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/10/2_27.html"&gt;மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/10/3.html"&gt;மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலை ஒரு தாளை உற்சாகத்துடன் நீட்டினார் சூஸா.&lt;br /&gt;&lt;br /&gt;“நல்ல செய்தி. நேற்று மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற புகையிரத வண்டியைப் புலிகள் தடுத்தார்கள். முஸ்லிம்களைக் குறிவைப்பதே இதன் நோக்கம். ஆனால் அப்போது தமிழ்ப்பெண்கள் தங்கள் நெற்றிப்பொட்டை எடுத்து முஸ்லிம் பெண்கள் மீது இட்டார்கள். முஸ்லிம் ஆண்கள் தத்தம் குல்லாக்களை மறைத்து வைத்தார்கள். முஸ்லிம்களை இனம்காண முடியாததால் புலிகள் வண்டியைப் போக விட்டார்கள்.. இதோ பாருங்கள். எம் மக்களைப் பாராட்டி முஸ்லிம்கள் அச்சடித்திருக்கும் நன்றிக்கடிதம்..."&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒத்துழைப்பு பற்றிய செய்தி நல்ல சகுனம், இது மனதுக்கு இதமாக இருக்கிறது என்றார் ராஜேஸ்வரி. ஆனால் அன்றிரவு நகரை அடுத்த ராணுவ முகாமைப் புலிகள் தாக்கி விட்டார்கள். காலை சூஸா செய்தி கொண்டுவந்தார் - தாக்குதலில் ஒன்பது புலிகளும் இருபத்தாறு சிப்பாய்களும் மரணமடைந்தார்கள் என. &lt;br /&gt;&lt;br /&gt;"இதற்குப் பதிலடி நிச்சயம்.." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் கழித்து பிற்பகல் சூஸாவின் மேலாளர் வியர்க்க விறுவிறுக்க, கதவைத் திறந்துகொண்டு வந்தார். தமிழில் வேகமாகப் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“உங்களிடம் கூறியவாறே பதிலடி நடந்துவிட்டது. தென்னந்தோப்புக்கள் ஊடே ராணுவம் புலிகளைட் துரத்தியது. இந்தத் தோப்புக்கள் நெடுங்காலமாக இருப்பவை. சில மரங்கள், கத்தோலிக்கப் பாதிரியார்கள் நட்ட மரங்கள். சில தமிழர்கள் நட்ட மரங்கள். இன்னும் காய்த்துக்கொண்டிருக்கும் மரங்கள். பாட்டன்-பாட்டி கால மரங்கள்... ஆனால் புலிகள் தப்பிவிட்டார்கள். இதனால் பித்துப்பிடித்த ராணுவத் தளபதி சீற்றமடைந்து மரங்களை வெட்டுமாறு ஆணையிட்டுவிட்டார். இது சிப்பாய்களுக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் என்ன செய்ய... நாள் முழுதும் மரங்களை வெட்டினார்கள். மரங்கள் எல்லாம் சாய்ந்துவிட்டன. தளபதிக்காக புலிகளுக்குப் பதிலாக வீழ்ந்தவை இந்த மரங்கள்...”&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு நகருக்கு நான் திரும்புவதற்குச் சற்று முன்பாக, ராஜேஸ்வரியும் நானும் இறுதியாக ஒருமுறை சேர்ந்து சமைக்கலாம் என்று திட்டமிட்டோம். இரவு உணவுக்கு முன்பாக நான் சிலரை நேர்காணல் செய்யவும் ஏற்பாடாகியிருந்தது. எனவே பகலில் ராஜேஸ்வரியும் நானும் போய் அரிசி, கீரை மற்றும் மீன் வாங்கி வந்தோம். பொன்னையா பள்ளியிலிருந்து திரும்பியவுடன் அவனும் ராஜேஸ்வரியும் அவர்களுடைய அகதி முகாம் நோக்கிச் சென்றார்கள். நான் செய்த நேர்காணல் முடிய மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. அகதி முகாம்களுக்கெல்லாம் தொலைபேச்சு வசதி இருக்குமா என்ன.. ஆக, எனக்குத் தாமதமானதை அவர்களுக்கு அறிவிக்க முடியாமல் போய்விட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக அங்கே போன போது, பெண்களின் ஒப்பாரிச்சத்தம் அலையலையாக எழும்பிவர அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டேன். துயரெனும் கடற்பாசியை ஓயாமல் கரைசேர்த்தவாறிருந்தன அந்த அலைகள்... ராஜேஸ்வரியைக் கண்டு அருகே சென்றேன். சற்றே எழுந்து தம் நெற்றியை என் மார்பெலும்பில் வைத்து சரிந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னையாவின் உடலை அப்போதுதான் அங்கே போட்டுவிட்டுப் போயிருந்தார்கள் சிப்பாய்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனை எடுத்துக்கொண்டு சென்ற பொன்னையா குடிசையை சற்று முன்னரே அடைந்திருந்தான். அடுப்புப் பற்ற வைக்கத்தான். சற்று நேரத்தில் மாலை மருளில் ஆரஞ்சு நிறச் செம்பருத்தி மலர்கள் மூழ்குமிடத்திலிருந்த ஒரு கதவைத் தாண்டி அதே சாலையில் &lt;br /&gt;சென்றார், ராஜேஸ்வரி. லொறி நிறைய சிப்பாயக்ளும் பின்னால் ஜீப்பில் ராணுவத்தினரும் அவளைக் கடந்து சென்றார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;ஒழுங்கையில் லொறியும் ஜீப்பும் திரும்பி முகாம் நோக்கிச் செல்வதைக் கண்டு பதைபதைத்தார் ராஜேஸ்வரி. முகாம் நோக்கி ஓடிச்சென்றபோது அங்கிருந்து பலரும் அவரை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தனர், உள்ளே போக வேண்டாம் என்று எச்சரித்தவாறே. முகாம் முழுதும் சிப்பாய்கள் அலைந்துகொண்டிருந்தனர், அங்கிருந்த ஆண்கள் யாவரையும் பிடித்தவாறே. பிடித்தவர்களை லொறியில் ஏற்றினர். ஜீப்பிலிருந்து இறங்கிய சிப்பாய்கள் இருவர், ராஜேஸ்வரியின் குடிசைக்குள் நுழைந்து பொன்னையாவைத் தரதரவென்று இழுத்துவந்தனர். அவர்களில் ஒரு சிப்பாய் ஜீப்பில் ஒரு கயிறைக் கட்ட, இன்னொருவர் பொன்னையாவை இறுகப் பிடித்துக்கொள்ள, மூன்றாமவர் கயிற்றின் மறுமுனையைப் பொன்னையாவின் கணுக்காலில் கட்டி முடிச்சு இறுகியிருக்கிறதா என இழுத்துப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜீப் முன்னாலிருந்த லொறியில் மீண்டும் நிறைய சிப்பாய்கள் ஏறினர். ராஜேஸ்வரி ஓடிப்போய் பொன்னையா காலில் கட்டியிருந்த கயிற்றை இழுத்தாள். லொறி இப்போது கிளம்பியது. ராஜேஸ்வரி ஓலமிட்டவாறே அந்த முடிச்சைப் பிடித்து அப்படியே தொங்கி இழுத்தாள். உடன் ஜீப்பும் கிளம்பியது. பொன்னையா ஓங்கி அலறினான். ஜீப்பின் பின்னால் ராஜேஸ்வரி ஓடினாள். அவளிடமிருந்து புறப்பட்ட ஓலம் சென்று தங்கிய ஜீப்பில் சென்ற சிப்பாய்கள் தமக்குள் பேசிக்கொண்ட அந்த மொழியைப் புரிய அங்கே யாருமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(இன்னும் வரும்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படம்&lt;/strong&gt; - தாண்டவன்வெளி கண்ணகியம்மன் ஆலயத்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-8028255133068284230?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/8028255133068284230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=8028255133068284230' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8028255133068284230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8028255133068284230'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/4.html' title='மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SusxL6rrMwI/AAAAAAAAC54/TEzWmZzm-pY/s72-c/Thandavanveli.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-8463920889389652956</id><published>2009-10-29T00:13:00.004Z</published><updated>2009-10-31T13:23:54.468Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Suk_rTe0gCI/AAAAAAAAC5w/630421mrc7w/s1600-h/Kannaki+in+Auto.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Suk_rTe0gCI/AAAAAAAAC5w/630421mrc7w/s400/Kannaki+in+Auto.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5397915641576718370" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/02/1.html"&gt;மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/10/2_27.html"&gt;மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரே ஒருவரைத்தான் தடுத்து வைத்திருப்பதாகக் கூறுகிறது. ஆனால் எத்தனையோ பேரைக் கொண்டு போவதைக் கண்ணால் கண்டிருக்கிறோம். இவர்கள் யாருமே இன்னும் விடுதலை ஆகவில்லை. காணாமல் போவோர் பற்றி இப்போது யாரும் என்னிடம் கதைப்பதில்லை. கதைத்து என்ன பயன்," என்றார் மட்டக்களப்பு சமாதானக் குழுவின் தலைவர் என்னிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜேஸ்வரியின் அழிந்துபோன கிராமத்திலிருந்து அவர் வசித்த அகதி முகாம் வரை நடந்தோம். அரிசி, எண்ணெய் விலையேற்றம் பற்றியும் குழந்தை வளர்ப்பில் உள்ள சிரமங்கள் பற்றியும் பேசிக்கொண்டே சென்றோம். அகதி முகாமைச் சுற்றிப் பனைவேலி. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குடிசை, தகரக்கூரையுடன். உள்ளே நுழைந்தோம். ராஜேஸ்வரி பாய் விரித்து என்னை அமரச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த வெள்ளைப்புடைவையை இன்னும் எத்தனை காலம் உடுப்பதாக எண்ணம்?” என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓராண்டு உடுப்பது வழக்கம். ஏற்கனவே ஆண்டு இரண்டாகிவிட்டது.”&lt;br /&gt;&lt;br /&gt;போர்வைக்குக் கீழிருந்து புகைப்படமொன்றை எடுத்தார் ராஜேஸ்வரி. இரண்டு பெண்கள். பின்னலில் நீல நிற பிளாஸ்டிக் க்ளிப்புகள். சிரித்தார்கள். கூட சற்றே மூத்த பையன். அவர்களைப் போல அவனும் சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“எம் கிராமத்தை அந்த ஊர்க்காவல் படையினர் தாக்கும்போது எனக்கு நான்கு பிள்ளைகள்” என்றார். இளைய மகனின் உற்சாகமான முகத்தைச் சுட்டி “இப்போது எஞ்சியிருப்பது இவன் மாத்திரம். பத்துவயது. பெயர் பொன்னையா. தாக்குதல் நடந்த அன்று கிரிக்கெட் பயிற்சிக்காகச் சென்றிருந்தான். நான் அரிசிவாங்கப் போயிருந்தேன். எங்கள் வீட்டைத் தாக்க ஊர்க்காவல் படையினர் வந்தபோது பிள்ளைகளுக்குத் துணையாக அண்டைவீட்டார் மட்டுமே இருந்தார்கள்.” &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேல் பேச சற்றே தயங்கினார். “ஒருவேளை இனி எப்போதுமே வெள்ளைப்புடைவைதான்.”&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வாரம் பிறகு, ராஜேஸ்வரி என்னை மீண்டும் முகாமுக்கு அழைத்தார். ஒன்றாகச் சமைத்தோம். அரிசிப்பானை பெரிதாக, கனமாக இருந்தது. முஸ்லீம் ஊர்க்காவல் படையினரின் தாக்குதலைத் தாங்கிய பானை. கிரிக்கெட் பயிற்சி முடித்து வீடு திரும்பிய &lt;br /&gt;பொன்னையா விறகு பற்றவைக்க எங்களுக்கு உதவியாக இருந்தான். வெட்கத்துடன் சிரித்தான். அழகான உடலமைப்புடன், அணுக்கமான பிள்ளை! &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சாப்பிட்டவுடன் நண்பர்களைக் காண வெளியே சென்றான். ராஜேஸ்வரி சத்தம்போட்டார். "தம்பி, முகாமைவிட்டு வெளியே போகாதே."&lt;br /&gt;&lt;br /&gt;கதவுவழி வந்த ஒளிக்கீற்றுக்களின் வெப்பத்தில், என் கண் கூசி நரம்புகளும் அதிர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஊசி நூலெடுத்து என் கைப்பையில் இருந்த ஒரு கிழிசலைத் தைக்கத் தொடங்கினார் ராஜேஸ்வரி. விடுதலைப்புலிகள் அமைப்பின் கரும்புலிகள் தற்கொலைத்தாக்குதலை ஒரு நவீன உத்தியாகப் பயன்படுத்துவதில் திறமை பெற்றுவிட்டிருந்தார்கள்... இலங்கையின் இந்த மோதலே காலனித்துவத்தால் வந்த பிரச்னையாக இருக்குமோ.. ஒருவேளை போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் வராமல் போயிருந்தால் இலங்கையும் காஸ்த்தா ரிக்கா போல எதிரிகளே அற்ற நாடாகப் பரிணமித்திருக்குமோ..&lt;br /&gt;&lt;br /&gt;"சிலவேளை பள்ளியிலிருந்து பெண்கள் வீடு திரும்புவதில்லை. யார் பிடித்துச்சென்றிருப்பார்கள்? புலிகளா இல்லை ராணுவச்சிப்பாய்களா. நேற்று நான்கு தமிழ் மீனவர்களைக் காணவில்லை. அவர்களைப் புலிகள் என்றோ புலிகளைப் பாதுகாப்பவர்கள் என்றோ ராணுவம் சந்தேகம் கொண்டு பார்க்கிறதோ என்னவோ.."&lt;br /&gt;&lt;br /&gt;மேலே பேசத் தயங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போதெல்லாம் இந்தத் துயரம் தாங்காமல் நிறையக் குடும்பங்களில் தற்கொலை நடக்கிறது. பல குடும்பங்களில் ஒருவரில்லை, ஆறேழு பேர் வரை இன்று இல்லை. அத்தனை இழப்பைத் தாங்காமல், அரளி விதையோ பூச்சிக்கொல்லி மருந்தோ குடித்துத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;என் கைப்பையைத் தைத்துக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“கண்ணகியம்மன் கதை உங்களுக்குத் தெரியுமா? அவள் கணவன் கோவலன் பணத்தையெல்லாம் தொலைத்துவிட்டு அவளிடம் திரும்ப வருகிறான். அப்போது தன்னிடமிருந்த இரண்டு சிலம்புகளில் ஒன்றை விற்கலாம் என்கிறாள் கண்ணகி. அதை விற்பதற்காக மதுரைக்கு நடந்துபோகிறார்கள். அங்கே கோவலன் பொற்கொல்லனிடம் சிலம்பைக் கொண்டு செல்கிறான். பொற்கொல்லனோ ஏற்கனவே அரசியின் ஒரு சிலம்பைத் திருடியவன். இந்தச் சிலம்பை அரசனால் மாத்திரமே வாங்க முடியும் என்று கோவலனிடம் சொல்லிவிட்டு, அரசனிடம் போய், அரசியின் சிலம்பைத் திருடிய கள்வனைத் தான் பிடித்துவிட்டதாகக் கூறுகிறான். அரசன் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவா என்கிறான்... &lt;br /&gt;&lt;br /&gt;கோவலனை வெட்டிக் கொல்கிறார்கள். கணவன் வெட்டுண்ட செய்தி கேட்ட கண்ணகி அரசனிடம் போய் நீதி கேட்கிறாள். தன்னிடமிருந்த சிலம்பை அரசவையில் போட்டு உடைக்கிறாள். அதிலிருந்து மாணிக்கப்பரல்கள் தெறிக்கின்றன. அரசியின் சிலம்பில் இருந்ததோ முத்துப்பரல்கள்... அரசன் தன் தவறை உணர்கிந்து வீழ்ந்கிறான். அரசியும் வீழ்கிறாள். கண்ணகியின் கோபம் தணியவில்லை. தன் இடதுமுலையைத் திருகி எறிகிறாள். அது அரசனை எரிக்கிறது. அரசவையை எரிக்கிறது. ஏன் மதுரையையே எரிக்கிறது. சிறுபிள்ளைகளையும் அப்பாவிகளையும் மாத்திரம் விட்டுவிடுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;நான் தற்கொலை செய்யப் போவதில்லை. கண்ணகி முலையை எறிந்து எரித்ததுபோல  எறியப்போகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(இன்னும் வரும்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;படம்&lt;/span&gt; - சென்னை ஆட்டோவில் கண்ணகி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-8463920889389652956?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/8463920889389652956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=8463920889389652956' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8463920889389652956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8463920889389652956'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/3.html' title='மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Suk_rTe0gCI/AAAAAAAAC5w/630421mrc7w/s72-c/Kannaki+in+Auto.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-2565609131336918931</id><published>2009-10-27T00:01:00.002Z</published><updated>2009-10-27T07:20:12.796Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuaezW2HFGI/AAAAAAAAC5o/cvRkYTKJOfs/s1600-h/Batty+Bridge.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuaezW2HFGI/AAAAAAAAC5o/cvRkYTKJOfs/s400/Batty+Bridge.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5397175808593171554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/02/1.html"&gt;மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 1 - மரிலின் க்ரிஸ்ல்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என் கிராமத்தைத் தாக்கி அழித்துவிட்டார்கள். எனவே அகதி முகாமில்தான் இருக்கிறோம். கிராமத்துக்கு என்னுடன் வருகிறீர்களா," என்றார் ராஜேஸ்வரி. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சித்திரைமாத வெயில், பொங்கி வழியும் வியர்வை. போகும் வழியில், சிங்களர்-தமிழர் பிரச்னை, அரசாங்கம்-விடுதலைப்புலிகள் மோதம் தவிர, சற்றே குறைவாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்-முஸ்லிம் மோதல்களும் நடக்கின்றன என்று விளக்கினார் ராஜேஸ்வரி. "அரசைப் பொறுத்தவரை தமிழர்கள்-முஸ்லீம்கள் அரசோடு மோதாமல் தங்களிடையே மோதினால் சரி," என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;பிரிவினையே வெற்றிக்கு வழி! ஆம், மட்டக்களப்பின் பிரதான வீதி தேநீர்க்கடையில் விழுந்த கிரனேட் பற்றி நான் கேள்விப்பட்டது என் மனத்தில் மின்னலென வெட்டியது. அதை எறிந்தவர் விடுதலைப்புலி அல்லது தமிழ் இளைஞர் என்று முஸ்லீம்கள் நினைப்பார்கள், ஆனால் அதை எறிந்தவர் சிங்களச் சிப்பாயாக இருக்கலாம் என்று என்னிடம் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக ராஜேஸ்வரியின் கிராமத்தை அடைந்தோம். அங்குள்ள சிறுவீடுகள் யாவும் தரைமட்டமாகி விட்டிருந்தன. இடிபாடுகள்தாம். அவர் வீடாக இருந்த இடத்தின் விளிம்பைத் தாண்டினோம். சுவர்கள் போய்விட்டன. குண்டு கூரையைத் தகர்ந்துவிட்டிருந்தது. தரையில்  பரவிய இலைகள் காய்ந்து வற்றிப் போய்விட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;“முஸ்லிம் ஊர்க்காவல் படையினர்தாம் இதைச் செய்திருக்கிறார்கள்,”என்றார் ராஜேஸ்வரி. “அதற்கு முந்திய நாள் விடுதலைப்புலிகள் ஒரு முஸ்லீம் கிராமத்தைத் தாக்கியிருந்தார்கள். அதற்குப் பழிவாங்கத்தான் இந்தச் செயல்.”&lt;br /&gt;&lt;br /&gt;இடைவழி நோக்கிச் சென்றோம். கைப்பிடிச்சுவர் உடைந்து கிடந்த கிணற்றை ராஜேஸ்வரி என்னிடம் சுட்டிக்காட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;“இங்கே சிங்களச்சிப்பாய்கள் தாங்கள் புலிகள் என்று சந்தேகம் கொள்ளும் எந்தத்தமிழ் இளைஞரையும் சுட்டுக்கொல்வதால் பெண்கள் கொதிப்படைந்திருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளைப் பிடித்துப்போய் படையில் சேர்க்கும் புலிகள் மீதும் கோபமாக இருக்கிறார்கள். இங்கே ஒரு தலைமுறையே பள்ளிக்குப் போய்ப் படிக்காமல் வளர்ந்துகொண்டு வருகிறது. இப்போது, ராணுவத்தைப் போல, முஸ்லீம் ஊர்க்காவல் படையினரும் தமிழர்கள் எல்லோரும் புலிகள்தாம் என்று நினைக்கிறார்கள். என்னுடைய இரண்டு பெண்களையும் ஒரு மகனையும் இவர்கள் கொன்றிருக்கிறார்கள். எதற்காகக் கொன்றார்கள்? இவர்கள் வளர்ந்து புலிகளுடன் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்!”&lt;br /&gt;&lt;br /&gt;தரையில் உட்கார்ந்து நீலநிறச் சுவர்ச்சிதறலை எடுத்தேன். படுக்கையறைச் சுவரிலிருந்து வந்திருக்கலாம். அதைக் கையில் வைத்துக்கொண்டே பார்த்தேன் - இதை வைத்து வீட்டையே மீண்டும் கட்ட முடியும் என்பதைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;“என் கணவர் வீட்டுக்குத் திரும்பி வராததால், பிள்ளைகளை விட்டு நான் எங்கும் போகவில்லை. இருட்டில் எங்கும் போக முடியாதல்லவா.. அடுத்த நாள் அண்டைவீட்டுப்பெண்ணின் கணவருடன் ராணுவ முகாமின் சிறைக்குச் சென்றேன். அங்கே முந்திய நாள் மாலை யாரையும் சிறைப்பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;முந்திய நாள் பகலில் மட்டக்களப்பிலும் அடுத்த கிராமங்களிலும், சிப்பாய்கள் வீடுவீடாகச் சென்று சோதனை நடத்தினார்கள். அன்றிரவு நகருக்குள் நுழைந்த புலிகள், மோட்டார் சைக்கிள்கள், காயப்போட்டிருந்த துணிகள் மற்றும் கோழிகளைத் திருடிக்கொண்டு சென்று விட்டார்கள். மூன்று புலிகள் ஒரு தமிழ்ப்பெண்ணிடம் சோறு வடித்துத் தருமாறு ஆணையிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பின் சமாதானக் குழுத் தலைவரைச் சந்தித்தேன். இந்த மாவட்டத்தில் காணாமல் போனோர் பற்றிய தகவல்களைச்  சேகரித்துவந்தவர் இவர்தான். மேஜை முன் அமர்ந்து ஒரு புத்தகத்தைத் திறந்தார். 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து இந்தக் கணக்கைத் தொடங்கியிருந்தார். கிழக்கு மாகாணப் பல்கலைக்கழக அகதி முகாமில் நுழைந்த ராணுவம் 156 பேரைக் கைது செய்தது அன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் செயல்படுத்தியிருந்தது அரசாங்கம். இதன் விளைவாக,  துணைராணுவக் கொலைக்குழுக்கள் சட்டப்பூர்வமாகவே இயங்க முடிந்தது. ஆயிரக்கணக்கானோரைக் கைதுசெய்யவும் காணாமல் அடிக்கவும் அரசாங்கத்துக்கு அதிகாரம் கிடைத்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;“செப்டம்பர் ஒன்பதாம் நாள், இன்னும் 170 பேரைக் கைது செய்தார்கள்” எனக் கூறி நிறுத்தினார். மிக அமைதியாகத் தெரிந்தார் இவர். இந்த உண்மைகள் என்னில் எதிரொலிக்கட்டும் என்பதைப் போல. “கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இன்னும் 3,888 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;உங்களை விடுதலைப்புலி ஒருவர் கடத்திச்சென்று குடும்பத்தார் பணயத்தொகை தரும் வரை வைத்திருக்கலாம். அல்லது உங்களைப் படையில் சேர்த்துக்கொள்ள விழையலாம். உங்களிடமிருந்து விடுதலைப்புலி ஒருவர் கொள்ளையடிக்க முயன்று அதை நீங்கள் எதிர்த்தால் நீங்கள் காணாமல் போகலாம். நீங்கள் விடுதலைப்புலி உறுப்பினர் என்று சிங்கள் சிப்பாய் நினைத்தால் நீங்கள் காணாமல் போய்விடலாம். அரசாங்கத்தின் கொள்கை எதையாவது நீங்கள் விமர்சித்திருந்தால் நீங்கள் காணாமல் போய்விடலாம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளவர் என்பதற்காக நீங்கள் காணாமல் போய்விடலாம். உண்மை நிலவரம் பற்றிச் செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதியவர் என்பதற்காக நீங்கள் காணாமல் போய்விடலாம். விசாரணை செய்வதாகக் கூறி, தமிழர்களைக் கூட்டம்கூட்டமாகச் சிப்பாய்கள் தடுத்துவைக்கும்போது நீங்கள் காணாமல் போய்விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விரலால் சுட்டி அழைத்தார் ஒரு பெயரை. அடுத்த பெயரை. அதற்கடுத்த பெயரை. இந்த சூரிய ஒளி பாயும் அறையில் இப்படி உச்சாடனம் செய்து அழைத்துக்கொண்டே போனால் காணாமல் போனோரை உயிர்ப்பித்துவிடலாம் என்று நினைத்தாரோ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(இன்னும் வரும்)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-2565609131336918931?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/2565609131336918931/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=2565609131336918931' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/2565609131336918931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/2565609131336918931'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/2_27.html' title='மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuaezW2HFGI/AAAAAAAAC5o/cvRkYTKJOfs/s72-c/Batty+Bridge.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-3094303947082913999</id><published>2009-10-26T13:12:00.007Z</published><updated>2009-11-05T14:14:20.453Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuWpa-x_0II/AAAAAAAAC5g/cZi48xXDOPU/s1600-h/Ramesh+1.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuWpa-x_0II/AAAAAAAAC5g/cZi48xXDOPU/s400/Ramesh+1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396906009467801730" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;நானூறு புறத்திலிருந்து 'நான்கள்' - நாகார்ஜுனன்&lt;/strong&gt;  &lt;br /&gt;மேற்குலகத்தின் இருத்தலியம், மார்க்சியம், குறியியல் போன்ற சிந்தனைமுறைகள் மற்றும் பல கோட்பாட்டுக் கட்டுரைகளின் தமிழாக்கங்கள் எண்பதுகளில் வெளியாகத் தொடங்கின. அப்போது அமைப்பியல், பிறகான-அமைப்பியல் மற்றும் பிறகான-நவீனத்துவம் சார்ந்த கோட்பாட்டுக்கட்டுரைகளையும் அறிமுகங்களையும் தமிழில் கொண்டுவந்தவர்களில் ஒருவர் நாகார்ஜுனன் என்கிற ரமேஷ். தவிர, அவற்றின் தர்க்கங்களை தமிழ்ப்படைப்புகளோடு ஒட்டி உரையாடல்களையும் நடத்தியிருக்கிறார். அதிகார உறவுநிலைகள் குறித்த ஆய்வுகளைச் செய்த ஃப்ரெஞ்சு சிந்தனையாளர் &lt;strong&gt;மிஷெல் ஃபூக்கோ&lt;/strong&gt;வின் கட்டுரைகள் மற்றும் நேர்காணல்களை இவர் தமிழாக்கி வெளியிட்டிருக்கிறார். Discourse என ஃபூக்கோ அறிமுகப்படுத்திய ஒரு சொல்லாட்சிக்குத் தமிழில் 'சொல்லாடல்' என்பதாக இவர் செய்த மொழியாக்கம், இன்று சாதாரணச் சொல்வழக்கிலும் பயன்படும் ஒன்றாக மாறியுள்ளது. இவரைக் கேட்டால், ஏற்கனவே தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார் - அதாவது அவர் சிலப்பதிகார ஆய்வு செய்தபோது கானல்வரிப் பாடல்களை விவரிக்க மாதவியின் சொல்லாடல் எனறு கூறியிருப்பதாகத் தெரிவிக்கிறார்! &lt;br /&gt;&lt;br /&gt;தவிர, நாகார்ஜுனன் ஃப்ரெஞ்சு மொழி கற்று அதிலிருந்து நேரடித்தமிழாக்கம் செய்து தம்முடைய பதிவுகளில் வெளியிட்ட, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த &lt;strong&gt;ஆர்தர் ரைம்போ&lt;/strong&gt;வின் கவிதைகள் தமிழில் புதிய கவிதைநடையுடன், கவிதைக்கான இசைத்தன்மையுடன் கூடிய சங்கப்பாடல்களின் சொல்லாட்சிகளைக் கொண்ட ஓர் அசலான தமிழ் வடிவத்தில் இயங்குகின்றன. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக்கவிஞர் &lt;strong&gt;ஸில்வியா ப்ளாத்&lt;/strong&gt;தின் பல கவிதைகளும் தமிழில் இப்படி இயங்குகின்றன. தற்கொலை செய்துகொண்ட இந்தக்கவிஞரின் 36 கவிதைகளை இவ்வாண்டு தொடங்கி சுமார் நான்கு மாத காலத்தில் தமிழாக்கியிருக்கிறார். இலங்கைத்தீவில் போர் உச்சக்கட்டத்துக்கு வந்து ஈழத்தில் நடந்த பெரும் படுகொலைகள், அழிவுகள் பற்றிய செய்திகள் வரவர அவற்றுக்கு முகம் கொடுக்கும் ஆய்வுகளை ஒருபுறம் செய்துகொண்டே, ஸில்வியாவின் கவிதைகளையும் தமிழாக்கியதாக கூறும் நாகார்ஜுனன், "அப்போது வெவ்வேறான, சிக்கல்மிக்க, பேதலித்த, பித்த உணர்வுகளை அடைந்தேன்" என்கிறார். இவற்றுக்கும் கூட சங்கப்பாடல் போன்ற அமைப்பைத்தான் நாடியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு post-marxist and post-politics கோட்பாட்டாளரான &lt;strong&gt;ஜோர்ஜியோ அகம்பென்&lt;/strong&gt; மற்றும் அமைப்பியல்-மானுடவியலை உருவாக்கிய &lt;strong&gt;க்ளோத் லெவி-ஸ்டராஸ்&lt;/strong&gt;, நவீனக் கோட்பாட்டாளர்கள் &lt;strong&gt;ப்ரூனோ லத்தூர்&lt;/strong&gt; மற்றும் &lt;strong&gt;மிஷெல் ஷெர்&lt;/strong&gt; போன்றவர்களின் கோட்பாட்டுக் கட்டுரைகளையும் தொடர்ந்து தமிழாக்கி, தற்காலத்திய சிந்தனைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். தவிர, இந்தச்சிந்தனைகளை முன்வைத்து புதிய கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதுகிறார். சில வேளை, ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய மொழிகளிலிருந்து நேரடித் தமிழாக்கங்களை முயன்றும் வருகிறார். தமிழில் தாம் விரும்பும் ஆக்கங்களை ஆங்கிலம், ஃப்ரெஞ்சு மொழிகளில் செய்ய முயலப்போவதாகவும் கூறுகிறார். இது தமிழுக்கு இவர் செய்யும் பெரும் பங்களிப்பாக அமையும். &lt;br /&gt;&lt;br /&gt;நாகார்ஜுனன், இளமைப்பருவத்தில் பொறியியல் படித்து அணுசக்தித்துறை தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றியவர். இந்திய அணுசக்தித்திட்டத்தில் பொதிந்திருந்த அணுஆயுதத் தயாரிப்பு தம்முடைய மனச்சாட்சிக்கு விரோதம் என்பதால் அந்தப் பணியைத் துறந்து பிறகு  பத்திரிகைத்துறையில் ஈடுபட்டவர். Deccan Herald, UNI செய்தி நிறுவனங்களில், பத்திரிகைகளில் பெங்களூர், சென்னை, டில்லி ஆகிய இடங்களில் பணியாற்றிவிட்டு பத்தாண்டுகள் முன்பு லண்டன் சென்று BBC வானொலி உலக சேவையில் ஆறாண்டுகள் பணியாற்றியிருக்கிறார். தற்சமயம் Amnesty International - சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய துணைவியார், காலனியக்கால இந்தியாவில் விஞஞானத்தின் வரலாறு குறித்து ஆய்வு செய்பவர். மகள் இளநிலை அறிவியல் மாணவி. இவர்களுடன் லண்டன் நகரில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நாகார்ஜுனன் வேகமாக மலையாள மொழியும் பயின்றுவிட்டார். பத்தாண்டுகள் தமிழில் எழுதாமலிருந்த இடைவெளியில் இப்படிப் பல மொழிகளைப் பயிலும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். பிறகு கடந்த ஒன்ற்ரை ஆண்டுகளாக தமக்கான வலைத்தளம் தொடங்கி அதில் நிறையத் தமிழாக்கங்களைப் பதிந்து வரும் நாகார்ஜுனன் அண்மையில் ஐம்பது வயதைக் கடந்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படிகள், மீட்சி&lt;/strong&gt; உள்ளிட்ட தமிழில் வெளிவந்த முக்கிய ஆய்வுப் பத்திரிகைகளில் இணைந்து செயல்பட்டவர். &lt;strong&gt;வித்யாசம்&lt;/strong&gt; என்கிற பத்திரிகையை ஆசிரியர் குழுவில் இருந்து நடத்தியவர். அந்தக்காலகட்டத்தில் தமிழில் புதிய கதைசொல்லும் உத்தியை உருவாக்கும் நோக்கில் &lt;strong&gt;கர்நாடக முரசும் தமிழ் இலக்கியம் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்&lt;/strong&gt; என்ற தலைப்பில் நான்-லீனியர் வகை சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய கட்டுரைகளின் தொகுப்பு &lt;strong&gt;கலாச்சாரம் அ-கலாச்சாரம் எதிர்-கலாச்சாரம், திரைப்பட மேதை செர்கய் ஐஸன்ஸ்டைன், நளிர்&lt;/strong&gt; - ஆகியவையும் &lt;strong&gt;ஊழிக்குப்பின் - ஆர்தர் ரைம்போ&lt;/strong&gt; கவிதைகள் என ஃப்ரெஞ்சிலிருந்து நேரடியாக தமிழாக்கமான கவிதை நூலும் ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;நவீன கோட்பாடுகளின் இணைய தள இதழான C-Theory-யில் இந்தியாவின் அணுவெடிப்புப் சோதனைகள் பற்றி இவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரை &lt;strong&gt;India's Nuclear Blasts - Siddharta's Betrayal&lt;/strong&gt;. பத்தாண்டுகள் முன்பு வெளியானது இந்தக்கட்டுரை. இந்த இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த சிந்தனையாளர் மறைந்த &lt;strong&gt;ழான் போத்ரியார்&lt;/strong&gt; மற்றும் பேராசிரியர் &lt;strong&gt;ஆர்தர் குரோக்கர்&lt;/strong&gt; இருவரும் வாசித்து அலசிய பிறகே அவர்கள் வெளியிட்டதாக நாகார்ஜுனன் கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய வலைத்தளம் - &lt;strong&gt;திணை இசை சமிக்ஞை&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழை அடுத்ததளத்துக்குக் கொண்டுசெல்லும் முனைப்புள்ள இவர்வழி ஃப்ரெஞ்சு மொழியிலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் தமிழாக்கங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது தமிழ் மொழிபெயர்ப்புலகில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;a href="http://jamalantamil.blogspot.com/"&gt;&lt;strong&gt;ஜமாலன்&lt;/strong&gt;&lt;/a&gt; மற்றும் நண்பர்கள் நடத்தும் &lt;a href="http://ettuththikkum.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D"&gt;&lt;strong&gt;எட்டுத்திக்கும்&lt;/strong&gt;&lt;/a&gt; மொழியாக்கத் தளத்தில் என்னைப் பற்றி, கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. &lt;br /&gt;&lt;strong&gt;படம்&lt;/strong&gt; - மருத்துவர் பினாயக் ஸென்னை விடுதலை செய்யக்கோரி இவ்வாண்டு ஏப்ரல் மாதம் லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பு நடந்த போராட்டத்தில் நான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-3094303947082913999?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/3094303947082913999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=3094303947082913999' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/3094303947082913999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/3094303947082913999'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/blog-post_26.html' title='எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuWpa-x_0II/AAAAAAAAC5g/cZi48xXDOPU/s72-c/Ramesh+1.JPG' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-1598520102404521477</id><published>2009-10-25T20:39:00.002Z</published><updated>2009-10-26T08:51:19.322Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரைமொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விழியின் கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃப்ரெஞ்சு'/><title type='text'>தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuSv5FfeuVI/AAAAAAAAC5Q/MIMNL3w7l5g/s1600-h/Madame+Edwarda.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 260px; height: 326px;" src="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuSv5FfeuVI/AAAAAAAAC5Q/MIMNL3w7l5g/s400/Madame+Edwarda.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396631648758315346" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2008/06/1_3109.html"&gt;விழியின் கதை - 1&lt;/a&gt;   &lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2008/06/2_16.html"&gt;விழியின் கதை - 1 தொடர்ச்சி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2008/08/3.html"&gt;விழியின் கதை - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2008/09/3_05.html"&gt;விழியின் கதை - 3&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2008/10/blog-post_1667.html"&gt;விழியின் கதை நாவலுக்குப் பிறகு - ழார் பத்தாய்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/blog-post_19.html"&gt;விழியின் கதை - திரையில்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;விழியின் கதை&lt;/span&gt; நாவல் எழுதிய ஃப்ரெஞ்சு எழுத்தாளரும் தத்துவ அறிஞருமான ழார் பத்தாய் தொலைக்காட்சிக்கு என அளித்தது ஒரே பேட்டிதான். ஃப்ரெஞ்சு மொழியில் அமைந்த இந்தப்பேட்டியை இணையத்தில் &lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=-WiwNekNJGA"&gt;இங்கே&lt;/a&gt;&lt;/span&gt; காணலாம். இதன் முதல் பகுதி இதோ: &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/mi.html"&gt;தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 1 - ழார் பத்தாய்&lt;/a&gt;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பியர் தூமயெ&lt;/span&gt;: ஆக, இலக்கிய ஈடுபாடு  சிறுபிள்ளைத்தனமானது என்றால், அதை எழுதுவோர் மீதும் அவர் சிறுபிள்ளைத்தனமானோர் என்ற குற்றச்சாட்டை வைக்க முடியும் என்றால், இலக்கியம் என்பதே சிறுபிள்ளைத்தனமானது என்று கொள்ள முடியுமா?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ழார் பத்தாய்&lt;/span&gt;: இலக்கியம் என்பதில் ஏதோ சிறுபிள்ளைத்தனமான ஏதோ விஷயம் இருக்கிறது என்று கருதுகிறேன் - இதை ஒரு பாராட்டாக ஏற்பதை எண்ண முடியாது என்றாலும் இந்த சிறுபிள்ளைத்தனத்தில் நானும் பங்கேற்பதாகவும் கூறுவேன். ஆனால், நிஜத்தில் இலக்கியமென்பதில் ஏதோ ஆழமான, அடிப்படையான விஷயம் உண்டு என்றும் அதை ஒரு சிறுபிள்ளையின் பார்வையிலிருந்து நோக்கினால்தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் அதே வேளை இந்தப் பார்வை ஏதோ குறைபாடானது என்று பொருளல்ல என்றும் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பியர் தூமயெ:&lt;/span&gt; காமவேட்கைவியல் குறித்தும் ஒரு நூலை (L'Eroticisme, 1957) எழுதியிருக்கிறீர்கள். இலக்கியத்தில் காமவேட்கையியலும் சிறுபிள்ளைத்தனமாகவா இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ழார் பத்தாய்&lt;/span&gt;: இலக்கியமென்பது பொதுவில் காமவேட்கையியலிலிருந்து  மாறுபடும் ஒன்றா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், காமவேட்கையில் உள்ள சிறுபிள்ளைத்தன அம்சத்தை, விளையாட்டு அம்சத்தைக் கண்டுணர வேண்டியது மிக முக்கியமென்று எனக்குத் தோன்றுகிறது. அதாவது, இங்கு நடப்பது, ஒரு சிறுபிள்ளை தான் ஈடுபடும் விளையாட்டில் தன்னை முற்றாக இழப்பது போலத்தான்.  இங்குள்ள மனிதனின் நிலை, பெற்றோர் எதிரே நிற்கும் சிறுபிள்ளையைப் போலத்தான். இவன் அச்சமடைகிறான். இந்த அச்சம் எங்கிருந்து வருகிறது, தன்னை என்ன செய்யப் போகிறது என்பதை அறியான். எப்போதும் இந்த அச்சத்தின் முன்பு, அதிலிருந்து அதிக தூரத்திலன்றி, நிற்கிறான். வயதுவந்தோர் இந்த இடத்தில் என்ன செய்வார்களோ அதையே தானும் செய்து திருப்தி அடைய முடியாத நிலையில் நிற்கிறான். ஆக, தான்  சிறுபிள்ளையாக இருந்தபோது அடைந்த அதே அச்ச நிலையை மீண்டும் அடைகிறான். ஏன், தண்டிக்கப்படுவோமோ என அச்சமுறுகிறான். தாங்கமுடியாமல் தவிக்கிறான்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பியர் தூமயே&lt;/span&gt;: சிறுபிள்ளைத்தனம் என்பதை நீங்கள் கண்டனம் செய்தீர்கள் என்ற தொனியில் ஒருவேளை நான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம்... இப்போது மீண்டும் உங்கள் நூலின் தலைப்பை நோக்கலாம். &lt;strong&gt;இலக்கியமும் தீய்மையும் (La littérature et le Mal 1957)&lt;/strong&gt; என்றை இந்தத் தலைப்பை வைத்துப் பார்த்தால், நீங்கள் இலக்கியத்தையும் சரி, தீய்மையையும் சரி, கண்டனம் செய்யவில்லை என்பது புரிகிறது. உங்கள் நூல் செல்லும் பொதுவான சிந்தனைத்திசை பற்றி விளக்குவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ழார் பத்தாய்&lt;/span&gt;: ஏதோ அபாயம் நிச்சயம் வருகிறது என்பதை எச்சரிப்பதாக என் நூலைப் புரிந்துகொள்ள முடியும். அதே நேரம் அபாயம் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டால், அதை எதிர்கொள்ளத் தயாராகிறீர்கள். இலக்கியம் என்பதான அபாயத்தை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய தேவை எழுவது இப்படித்தான். அது பெரும் அபாயம், மோசமான அபாயம். அதை எதிர்கொள்ளாவிட்டால் நீங்கள் மனிதரே இல்லை என்றும் கூறுவேன்... &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இலக்கியத்தில்தான் மனிதன் யார் என்ற இன்றுவரையிலான கண்ணோட்டத்தை முழுமையாக அறியவும்  உணரவும் செய்கிறோம் என்று கூறுவேன். மனித இயல்பை அதன் மிக வன்முறையான கண்ணோட்டத்தில் நாம் காண வேண்டுவது இலக்கியம், அப்படிக் காணாமல் இலக்கியம் நம்மை விடுவதில்லை. ஷேக்ஸ்பியரின் அவல நாடகங்களில், அதே வடிவத்திலான இன்னும் பல ஆக்கங்களில் இதைக் காண முடியும். இறுதியாக, படுமோசமானது என்பதை நாம் காண்கிற சாத்தியமும் அதை எதிர்கொண்டு, மீறுகிற சாத்தியமும் இலக்கியத்தால்தான் நடக்கிறது. ஆக, இந்த விளையாட்டை ஆடும் ஒருவரால்தான் இதிலுள்ள பயங்கரத்தை மீறும் சக்தியை இதிலிருந்தே பெற முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பியர் தூமயெ&lt;/span&gt;: நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-1598520102404521477?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/1598520102404521477/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=1598520102404521477' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/1598520102404521477'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/1598520102404521477'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/2_25.html' title='தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuSv5FfeuVI/AAAAAAAAC5Q/MIMNL3w7l5g/s72-c/Madame+Edwarda.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-8407392031172479832</id><published>2009-10-24T21:35:00.008+01:00</published><updated>2009-10-30T18:36:18.559Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>முடிக்க வேண்டிய தொடர்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuNmzVwB81I/AAAAAAAAC5I/j4nVMKMlrZI/s1600-h/Woman+nursing+monkey.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 366px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuNmzVwB81I/AAAAAAAAC5I/j4nVMKMlrZI/s400/Woman+nursing+monkey.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396269810717946706" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight:bold;"&gt;திணை இசை சமிக்ஞை&lt;/span&gt;யில் முடிக்க வேண்டிய தொடர்கள் எனக் கீழ்க்கண்டவை மீதமிருக்கின்றன என்பதால் புதிய தொடர்களை இப்போதைக்குத் தொடங்கப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/07/blog-post_10.html"&gt;இசையும் தொன்மமும் - க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ்&lt;/a&gt;&lt;/span&gt; &lt;br /&gt;- இன்னும் ஒரு பகுதி பதிய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/07/1_20.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சக்-மூல் - கார்லோஸ் ஃபுயன்டஸ் &lt;br /&gt;- ஸ்பானிஷ் மூலத்திலிருந்து தமிழாக்கம்&lt;/span&gt;&lt;/a&gt; &lt;br /&gt;- இன்னும் இரு பகுதிகள் செய்ய  வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;விழியின் கதை - ழார் பத்தாய்&lt;/span&gt;&lt;/a&gt; &lt;br /&gt;- இன்னும்  பதினோரு பகுதிகள் வர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/mi.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - ழார் பத்தாய்&lt;/span&gt;&lt;/a&gt; &lt;br /&gt;- இன்னும் ஒரு பகுதி மாத்திரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/blog-post_10.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளிப்பதிவும் காலமும் - மணி கௌல்&lt;/span&gt;&lt;/a&gt; &lt;br /&gt;- இன்னும் இரு பகுதிகள் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/01/1_20.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - த. செந்தில்பாபு&lt;/span&gt;&lt;/a&gt; &lt;br /&gt;- இன்னும் இரு  பகுதிகள் வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/02/1.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மட்டக்களப்பில் கொங்கைத்தீ - மரிலின் க்ரிஸ்ல்&lt;/span&gt;&lt;/a&gt; &lt;br /&gt;- இன்னும் நான்கு பகுதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/blog-post_04.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;லாஸ் அலமோஸில் கீதாரஹஸ்யம் &lt;/span&gt;&lt;/a&gt;- இன்னும் இரண்டு பகுதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2008/09/1_28.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;காந்தியார் - அம்பேத்கர் விவாதம்&lt;/span&gt;&lt;/a&gt; - இன்னும் நான்கு பகுதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/02/blog-post_12.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உயிரினத்தின் தோற்றத்துக்கு வயது இருநூறு - டார்வினின் முன்னுரை&lt;/span&gt;&lt;/a&gt; - இன்னும் ஒரு பகுதி மாத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/10/1_14.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை&lt;/span&gt;&lt;/a&gt; - ஒரு பகுதி மட்டுமே வந்திருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2008/03/1_22.html"&gt;நாவல் கலை பற்றி மிலன் குந்தரா&lt;/a&gt;&lt;/strong&gt; - இன்னும் ஒரு பகுதி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;படம்&lt;/span&gt; - அமேஸான் பழங்குடிப்பெண் - அகவை நூற்றியொன்றை எட்டும் க்ளோத் லெவி-ஸ்ட்ராஸுக்குத் தலைவணங்கி, கீரியைப் பிள்ளை என ஏற்கும் பெண் கதையை நினைத்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-8407392031172479832?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/8407392031172479832/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=8407392031172479832' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8407392031172479832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8407392031172479832'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/blog-post_24.html' title='முடிக்க வேண்டிய தொடர்கள்'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuNmzVwB81I/AAAAAAAAC5I/j4nVMKMlrZI/s72-c/Woman+nursing+monkey.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-8213535693977059510</id><published>2009-10-22T07:32:00.008+01:00</published><updated>2009-10-25T21:41:33.043Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>பதிவுகளும் நானும் - 8</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuHzOpoBHtI/AAAAAAAAC44/NzNlwzLmml4/s1600-h/Diabetes+test.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuHzOpoBHtI/AAAAAAAAC44/NzNlwzLmml4/s400/Diabetes+test.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395861261583982290" /&gt;&lt;/a&gt;கடந்த இரண்டு மாதத்தில் ஏக அலைச்சல். இந்தியாவில் பணி நிமித்தம் டில்லி, கல்கத்தா, ஒரிஸ்ஸா மற்றும் ஆந்திரத்துக்கும் விடுமுறையில் கேரளம் மற்றும் சென்னைக்கும் பயணம்; லண்டன் திரும்பிய பிறகு உடன் பணி நிமித்தம் ஜெனிவா வரை பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயண நாட்களின்போது சென்னையில் வைத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பெருகியிருப்பதைக் கண்டறிந்தேன். நல்ல வேளை, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவு கவலை தருவதாக இல்லை... இத்தனைக்கும் உணவில் இனிப்புக்களைச் சேர்ப்பதே இல்லை. காப்பி மற்றும் தேநீரில் சர்க்கரை போட்டுக்கொள்வதைத் தியாகம் செய்து ஆண்டு இரண்டாகிறது. இனி உணவில் மேலதிகக் கவனம் தேவை. அரிசிச்சோற்றைக் குறைக்க வேண்டும். குறைத்தாகிவிட்டது - ராகி, கோதுமை உணவே அதிகம். மா, பலா, வாழை என முக்கனிகள் உள்ளிட்ட பலவற்றையும் துறந்தாகிவிட்டது. கிழங்குவகைகள், காரட், பீட்ரூட் ஏதும் கிடையாது. தினம் காலை அரைமணி நேரம் யோகப்பயிற்சி, தவிர ஒரு மணி நேரம் காலை எட்டிப்போட்டு அதிவேக நடை. விடுமுறை முழுதும் இப்படிக் கழிய, விளைவாக ஆறு கிலோ வரை எடை விழுந்துவிட்டது. ஆக, பத்தாண்டுகளில் எண்பது கிலோவுக்குக் கீழ் முதன்முறை எட்டியிரு்க்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரண்டு மாதங்கள் இப்படிப் போய்விட்டதால் பதிவுகள் எழுதுவதில் சற்றே தொய்வு. இதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள். அதேவேளை இந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் சென்னையில் மூன்று கூட்டங்களில் உரையாற்ற முடிந்தது. எழுத்தாளர்கள், சிற்றிதழ் வாசகர்கள், பதிவர்கள், நண்பர்கள் என நிறையப்பேர் வந்திருந்தார்கள்... முதலில் &lt;strong&gt;மாற்று&lt;/strong&gt; அமைப்பின் சார்பில் தென்னாசியாவில் மனித உரிமைகள் குறித்த கோட்பாட்டுரீதியான நீண்ட உரை. பிறகு என் நூல் &lt;strong&gt;நளிர்&lt;/strong&gt; குறித்து அதை வெளியிட்ட &lt;strong&gt;ஆழி&lt;/strong&gt; பதிப்பகம் சார்பில் நடந்த விமர்சன அமர்வில் ஏற்புரை. அடுத்து தென்னக மொழிகளில் நவீன இலக்கியம் குறித்து சென்னைப்பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியத்துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் தமிழில் நவீன இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் உரை. அதேபோல லண்டன் திரும்பிய பிறகு இலங்கை நிலவரம் குறித்து ராணி மேரிக் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் ஆங்கிலத்தில் உரை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த உரைகள் யாவற்றையும் இங்கே பதிவுகளாக இடும் எண்ணம் உண்டு. &lt;strong&gt;நளிர்&lt;/strong&gt; நூல் குறித்த விமர்சன அமர்வில் வாசு ஆற்றிய உரையை ஏற்கனவே இங்கு பதிவாக இட்டாயிற்று. அதே அமர்வில் தமிழவன், வீ. அரசு, கோணங்கி, எஸ். சண்முகம் ஆகியோர் பேசியவற்றையும் பதிவாக இட வேண்டும். பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;திணை இசை சமிக்ஞை&lt;/span&gt; என்ற இந்த என் வலைத்தளம் இயங்கத்தொடங்கி எதிர்வரும் ஃபிப்ரவரி ஆறாம் நாள் இரண்டு ஆண்டுகள் முடியும் நிலை. இதுவரை 657 நாட்களில் 567 பதிவுகள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;திணை இசை சமிக்ஞை&lt;/span&gt;யை வாசிப்பவர்கள் எத்தனை பேர் இருக்கலாம்? தின-வரத்து ஐம்பது பேர் என்று தொடங்கிய நிலையிலிருந்து இப்போது முன்னூறு பேருக்கும் குறையாமல் வாசிக்கிறார்கள். இந்த வாசகர்கள் எழுபது நாடுகளைச் சார்ந்தவர்கள் என்பது ஆச்சர்யம் தரும் விஷயம். வலைப்பதிவர்கள் ஐம்பதுக்கும் மேல் பின்தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. பார்வை எண்ணிக்கை எப்போதோ இரண்டு லட்சத்தைத் தாண்டியாகிவிட்டது. இதைக் கணினியில் எண்ணும் பழக்கத்தையும் இப்போது நிறுத்தியாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தவிர, என் பதிவுகளில் யாரும் மறுமொழி இட்டு என்னைக் கிழிக்கலாம். பொதுவாக, எல்லாவகைக் கருத்துகளையும் விவாதங்களையும் எதிர்கொள்ளவே முயல்கிறேன். ஒருசில மறுமொழிகளைத் தவிர யாவற்றையும் வெளியிட்டிருக்கிறேன். என் பதிவுகள் யாவற்றையும் வாசித்திருக்கிறார்கள் என்று தோன்றும் பட்சத்தில் உரையாடல் எப்போதும் சாத்தியம்தான்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuK3yOAjZ8I/AAAAAAAAC5A/QDJmffCX9Vk/s1600-h/DSCN1907.JPG"&gt;&lt;img style="float:right; margin:10px 10px 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuK3yOAjZ8I/AAAAAAAAC5A/QDJmffCX9Vk/s400/DSCN1907.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396077376925034434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வலைத்தளத்தில் நிறைய தமிழாக்கங்கள் - ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து. ரைம்போ, போதலேர், ஏமி ஸெஸார் கவிதைகள். நிறையக் கட்டுரைகள். ழார் பத்தாய்யின் பெயர்பெற்ற, சர்ச்சைக்குரிய &lt;span style="font-weight:bold;"&gt;விழியின் கதை&lt;/span&gt; நாவலின் மூன்று பகுதிகள் யூரேக்கா என்ற பெண்மணியின் தமிழாக்கத்தில் வந்திருக்கின்றன. இதை முடித்தாக வேண்டும். இதேபோல இன்னும் சில தமிழாக்கத் தொடர்கள் முடியாமல் இருக்கின்றன. அவற்றையும் முடித்துவிடுவேன். சில தமிழாக்கங்களை ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன் மொழியிலிருந்து செய்திருக்கிறேன். வடமொழியிலிருந்தும் முயல்கிறேன். தவிர, தமிழிலிருந்து ஆங்கில ஆக்கம் செய்யும் விருப்பமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திணை இசை சமிக்ஞை&lt;/strong&gt;யை வாசிப்போரைப் பொறுத்தவரை, அரசியல்-நடப்பு-நிகழ்வுகள் குறித்த பதிவுகளுக்கு மறுமொழி எழுதி உரையாட வருவோர்தாம் அதிகம். வழக்கம்போல இலக்கியம்-கலாச்சாரம் ஏன் வரலாறு தொடர்பான பதிவுகளில் உள்ளுறையாக எத்தனையோ இருக்கும்போதும் வழக்கமான சிலர் தவிர இவற்றுக்கு மறுமொழி? ம்ஹூ..ம்... இப்போது கடைசியாக அறிஞர் கா. சிவத்தம்பியின் &lt;strong&gt;எழுத்தை வெட்டும் கல்&lt;/strong&gt; தொடர்பதிவு, இதற்குச் சரியான எடுத்துக்காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, &lt;span style="font-weight:bold;"&gt;திணை இசை சமிக்ஞை&lt;/span&gt; வலைத்தளத்தை வாசிப்போர்க்கும் மறுமொழி எழுதுவோர்க்கும் தம்முடைய பக்கங்களில் இணைப்புக்கொடுத்திருப்போர்க்கும் நன்றி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;படங்கள்&lt;/span&gt; - ரத்தத்தில் சர்க்கரை, ஒரிஸ்ஸா-ஆந்திர எல்லையில் எடை குறைந்து...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-8213535693977059510?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/8213535693977059510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=8213535693977059510' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8213535693977059510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8213535693977059510'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/8.html' title='பதிவுகளும் நானும் - 8'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SuHzOpoBHtI/AAAAAAAAC44/NzNlwzLmml4/s72-c/Diabetes+test.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-7173476605568819518</id><published>2009-10-21T00:01:00.004+01:00</published><updated>2009-10-21T19:03:29.065+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><title type='text'>எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/St6rkxOlazI/AAAAAAAAC4w/Nr4ZuEKVdn0/s1600-h/Gemstones.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/St6rkxOlazI/AAAAAAAAC4w/Nr4ZuEKVdn0/s400/Gemstones.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394938051814583090" /&gt;&lt;/a&gt;தமிழக அரசுருவாக்கங்கள் தொடர்பாக எழுதியுள்ளவர்கள், ஆற்றுப்படுகைத் தலைநகர்களின் முக்கியத்துவத்தைக் கூறும் அதே வேளை வணிகத்தலைநகர்களின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிடுகிறார்கள். இதில் கொங்கு நாட்டுப் பகுதியை அரச ஆதிக்கத்துக்குச் சமமான அதிகாரம் கொண்டிருந்த வேளிர்கள் ஆண்டுவந்தனர் என்ற குறிப்பும் உண்டு. அதேவேளை தமிழக அரசுருவாக்கங்களில் மன்னர்களிலிருந்து வேந்தர்களைப் பிரித்துக்காண வேண்டிய தேவையும் உண்டு. சோழ, பாண்டிய அரசுருவாக்கங்கள் முறையே காவிரி-வைகையைத் தளமாகக் கொண்டு தோன்றிய போது, சேர நாட்டைப் பொறுத்தவரை இரண்டு தலைநகர்கள் இருந்தன.  ஆய்வாளர் கா. ராஜன் கூறுவதுபோல இந்த விடயங்களில் வாய்ப்பாடுகளில் இடந்தராமல் சகல சான்றுகளையும் ஒன்றிணைத்துப் பார்க்க வேண்டியது அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, சங்க காலப் பண்பாடு என்ற ஓர் அமைவுமுறையை அடையாளம் காணத்தக்க அளவில் ஒரு தெளிவைத் தொல்லியல் சான்றுகள் ஏற்படுத்துகின்றன. இலக்கியமும் தொல்லியல் சான்றுகளும் பிற சான்றுகளும் ஒன்றிணைகிற போது அந்தப் பண்பாட்டுக்கோலம் நன்கு தெரிய வருகிறது. ‘நிலையான’ சான்றுகளாக தொல்லியல் சான்றுகளுடன் சமகால மனித உறவுக் கோலங்களை, இந்த உறவுகள் ஏற்படுத்தும் உணர்வுநிலைகளைக் காட்டும் இலக்கியங்களை இணைத்து நோக்கும்போது அந்தக் காலகட்டம் குறித்த ஒரு மானுட முழுமை தோன்றும். வரலாற்றின் நோக்கமே அந்த முழுமையை அறிந்துகொள்வதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, 2006-ஆம் ஆண்டில் மயிலாடுதுறை அருகே செம்பியன் கண்டியூர்ப் பகுதியில் கிட்டிய சிந்து சமவெளி நாகரீகக் காலத்துக்குரிய எழுத்துக்களைக் கொண்ட கல் ஆயுதம் மிக முக்கியமான ஆவணம். இது தமிழகப்பரப்பின் புதிய கற்காலத்துடன் இணைந்ததென்றும் கூறுகிறார்கள். ஐராவதம் மகாதேவன் இந்த எழுத்துக்களை முருகு + அன் என வாசித்திருக்கிறார். மகாதேவனுடைய முந்தைய வாசிப்புக்களைப் பலர் ஏற்றுக்கொள்வ்தில்லை என்பதால் இந்த வாசிப்பு பற்றி சற்று நிதானம் அவசியம். ஆனால் இந்த எழுத்துச்சான்று குறைந்த பட்சம் கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டுக்காலம் வரை நம்மை இட்டுச்செல்கிறது என்பது முக்கிய விடயம்! தமிழகப்பரப்புக்கும் சிந்துவெளி நாகரிகத்துக்குமான நேரடித்தொடர்புடைய இதுபோன்ற ஆவணம் இதுவரை கிடைத்ததில்லை. இதுபற்றி மிக விரிவான ஆய்வு வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, சங்க இலக்கியத்தின் தொகுப்பமைவு பற்றிய ஒரு வினாவை எழுப்ப விரும்புகிறேன். சங்க இலக்கியம் பற்றிய மிகப் பிரதானமான தரவுகள், தொகுத்தோன்-தொகுப்பித்தோன் பற்றிய தகவல்களே. தொகுப்பித்தோர் மன்னர்-அரச்ர்களாகவும் தொகுத்தோர் புலவர்களாகவும் இருப்பது ஒரு முக்கிய விடயம். சமணக் கல்வெட்டுச்சான்றுகள் பற்றிப் பார்த்தபோது மன்னர்-அரசர்கள் இந்தப்பாடல்களைத் தொகுப்பிக்க வேண்டிய தேவையை ச்ற்றே ஆராய்ந்தோம். அப்போது வளர்ந்துவந்த சமண-பௌத்த எழுத்துப் பயன்பாட்டுச் சூழலில், பிரதானமாக சமணர்கள் அதைப் பயன்படுத்தும் சூழலில், அதிலும் முக்கியமாக முகிழ்த்து மேலெழும்பும் அரசுருவாக்கம் பற்றி அதிக சிரத்தை காட்டாமலிருக்கும் பின்புலத்தில், அரசுருவாக்கத்துக்குத் துணையாக இலக்கியம் பயனாவதும் இலக்கியப்போக்குகள் உருவாவதும் ஆச்ச்ர்யத்தைத் தருவதன்று. தவிர, தொல்காப்பியர் சமணர் என்ற எடுகோளை ஏற்றுக்கொண்டால் சமணப்புலமையர் தமிழ் மொழியையும் அதன் இலக்கிய மரபையும் ஊன்றிப்பயில விரும்புவதை அவதானிக்கலாம். மேலும், ஏறத்தாழ கி.பி. நான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்கு உரியதெனக் கருதப்படும் &lt;strong&gt;திருக்குறள்&lt;/strong&gt;, இல்லறத்தோற்றத்துக்கு தமிழ்ப்பண்பாட்டின் வேராக இருக்கும் அக மரபை அணுக, அகத்திணையென்ற எண்ணக்கருவையோ சொற்பிரயோகத்தையோ பயன்படுத்துவதில்லை; மாறாக, அதைக் காமத்துப்பாலுக்கான பொருளாகக் கொள்கிற போக்கினுள் வடமொழித் திரிவர்க்கத்தை - அதாவது தர்ம-அர்த்த-காமம் என அறள் பொருள் இன்பத்தை - நிலைநிறுத்துகிறது என்பதை நோக்குதல் வேண்டும்.&lt;br /&gt;   &lt;br /&gt;அத்தகைய போக்குகளுக்குச் சமாந்தரமாக தமிழின் புறத்திணை மரபை மீட்டெடுப்பது ஓர் அரசியல் தேவையாக அமைந்தது என்றுகூடக் கூறலாம். அந்தக் காலகட்டத்தில் சங்க இலக்கியத்தொகுப்பு என்பது அதை எழுத்துருவுக்குக் கொண்டுவரும் முயற்சியாகவே எழுந்திருக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் தொகுத்தோன்-தொகுப்பித்தோன் என்பனவற்றை அந்த இலக்கியங்களை வாய்மொழியாகப் பேணுவதற்குச் செய்யப்பட்ட ஒரு நடைமுறையாகக் கருத முடியவில்லை. இதிலுள்ள இன்னொரு சுவாரசியமான விடயம், இந்த அரசுருவாக்கத்தில் பிராமணியம் வகித்த இடம். &lt;strong&gt;புற நானூற்றின்&lt;/strong&gt; முற்பகுதியில் வரும் பாடல்களில், வைதீக மரபு மிகவும் கவனம் பெறுவதை அவதானிக்கலாம். மேற்கூறிய அரசுருவாக்கத்துக்கு வேண்டிய புதிய அந்தஸ்தைப் பிராமணியம் வழங்கியுள்ளது என்பதை தமிழகப்பரப்பை அடுத்து நடந்த சாதவாகனர் ஆட்சியிலும் காணலாம். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/St6qRWe4T3I/AAAAAAAAC4o/YdiMD-IkkJk/s1600-h/Ptolemy%27s+map.jpg"&gt;&lt;img style="float:right; margin:10px 10px 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 292px; height: 313px;" src="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/St6qRWe4T3I/AAAAAAAAC4o/YdiMD-IkkJk/s400/Ptolemy%27s+map.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394936618706030450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கியம் பற்றிய அண்மைக்கால ஆய்வு வளர்ச்சிகள் இந்த வினாக்களை அத்தியாவசியமாக்கி, இவை குறித்த தேடலைப் பின்போடக்கூடாத ஒன்றாக்கி விடுகின்றன. ஆங்கிலத்தில் ஒரு வழக்குண்டு. &lt;strong&gt;Missing the woods for the trees&lt;/strong&gt;. இதைத் தமிழில் &lt;strong&gt;தனிமரங்கள் தோப்பாவதில்லை&lt;/strong&gt; எனலாம். இங்கே தோப்பு எனும்போது தனிமரங்களை ஒருவேளை மறந்துவிடலாம் என்பதால் அப்படி மறக்காமல் தனிமரங்களும் முக்கியம், மரங்களால் ஆன தோப்பும் வனமும் முக்கியம் என ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆக, சங்க இலக்கியம் பற்றிய ஆய்வுகள் தனியே மரங்களைப் பார்ப்பதாக மாத்திரம் அமைந்துவிடாமல், அந்த மரங்களால் ஆன காட்டைப் பார்ப்பனவாக அமைய வேண்டும். அதே வேளை வெறும் காடென்று பார்க்காமல் காட்டிலுள்ள மரங்களைப் பார்த்து, அதாவது தொகுத்தும் தனித்தும், தனித்தும் தொகுத்தும் பார்த்து, சங்கப் பண்பாடு பற்றிய ஒரு முழுமையான பார்வையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த சங்கப்பண்பாட்டினுள் தமிழ்ப்பண்பாட்டின் ஆழமான வேர்கள் உண்டல்லவா!&lt;br /&gt;&lt;br /&gt;(இத்துடன் &lt;span style="font-weight:bold;"&gt;எழுத்தை வெட்டும் கல்&lt;/span&gt; என இருபது பகுதிகளில் வந்த இந்தத் தொடர்பதிவு முடிகிறது. ஐராவதம் மகாதேவன் ஆய்வுப்பெருநூல் பற்றியும் கா. சிவத்தம்பியின் கருத்துக்கள் பற்றியுமான என் பார்வையைப் பிறகு எழுதுகிறேன் - &lt;strong&gt;நாகார்ஜுனன்&lt;/strong&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;படங்கள்&lt;/span&gt; - மாநாய்கன், மகள் கண்ணகிக்குத் தந்த சிலம்பில் இருந்திருக்க வல்ல மாணிக்கப்பரல்கற்கள்; உரோமப் பேரரசுக்கென கிரேக்க அறிஞர் தாலெமி செய்த வரைபடத்தில் மேலைத்துறைமுகம் முசிறி, Muziris emporium என்பதாக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-7173476605568819518?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/7173476605568819518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=7173476605568819518' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/7173476605568819518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/7173476605568819518'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/20.html' title='எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/St6rkxOlazI/AAAAAAAAC4w/Nr4ZuEKVdn0/s72-c/Gemstones.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-5668580096613921898</id><published>2009-10-20T00:09:00.003+01:00</published><updated>2009-10-21T19:03:29.066+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><title type='text'>எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/St1ZTPoh4BI/AAAAAAAAC4Y/98MJfA0zlxo/s1600-h/Pharos+of+Alexandria.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 379px;" src="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/St1ZTPoh4BI/AAAAAAAAC4Y/98MJfA0zlxo/s400/Pharos+of+Alexandria.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394566115808632850" /&gt;&lt;/a&gt;வியன்னா நகர் அருங்காட்சியகத்தில் அமைந்த இந்த பாபிரஸ் ஆவணத்தை 1985-ஆம் ஆராய்ந்த எச். ஹராவர், சிபெஸ்தியான், தூர், காஸ்ஸன் போன்றோர், இவை இரண்டு ஆவணங்களாக இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். முதல் ஆவணம் அநேகமாக முசிறி வணிகரும் கப்பல் உடைமையாளரும் செய்துகொண்டிருக்க வேண்டும் என்றும் கப்பல் உடைமையாளர் வணிகருடன் ஏற்றுமதிப் பொருட்களைக் காப்பீடாக வைத்திருக்க வேண்டும் என்றும் காஸ்ஸன் கருதுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது ஆவணம் மத்தியதரைக்கடலின் நுழைவாயிலான செங்கடலில் அமைந்துள்ள &lt;span style="font-weight:bold;"&gt;பெர்னிகே&lt;/span&gt; அல்லது &lt;span style="font-weight:bold;"&gt;மயோஸ் ஹோர்மஸ்&lt;/span&gt; என்ற துறைமுகப் பகுதியில் செய்துகொண்ட ஒன்று. இதின் முன்பக்கம் கப்பல் மத்தியதரைக்கடல் பகுதியில் நைல் பேரியாற்றின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் அலெக்ஸாந்த்ரியா பெருநகர்த் துறைமுகத்தை அடைவது வரை ஏற்றுமதிப் பொருட்களுக்கு வேண்டிய பாதுகாப்பு குறித்தும் பின்பக்கத்தில் அந்தப் பொருட்களின் அளவு குறித்தும் பேசுகிறது. ஏற்றுமதிப் பொருட்கள் செங்கடல் துறைமுகத்தில் வந்து இறங்கியவுடன் இந்த ஆவணம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று காஸ்ஸன் கருதுகிறார். காரணம் இந்த ஒப்பந்தப் பொருட்கள் செங்கடல் துறைமுகத்திலிருந்து கழுதைகள் மீதாகக் கிழக்குச் சஹாரா பாலைவனம் வழி நைல் பேரியாற்றுக்கரையில் அமைந்துள்ள &lt;span style="font-weight:bold;"&gt;பண்டைய கோப்டோஸ்&lt;/span&gt; என்ற துறைமுகத்தை அடைவதையும் பின்னர் இவை படகுகளில் வைத்து நைல் பேரியாற்றின் வழி அதன் முகத்துவாரத்தில் அமைந்த அலெக்ஸாந்த்ரியா பெருநகர்த் துறைமுகத்தை அடைவதையும் பின்னர் அங்குச் சுங்கவரி செலுத்தி இவற்றின் பாதுகாப்பு  குறித்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதையும் இந்த ஆவணம் தெரிவிக்கிறது. இவை அலெக்ஸாந்த்ரியாவிலிருந்து மத்தியதரைக்கடல் வழி உரோம நாட்டை அடைவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளுக்கென வேறொரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்தப் பொருட்கள் முசிறித் துறைமுகத்திலிருந்து செங்கடல் துறைமுகத்தை நாற்பது நாட்களுக்குள் அடைந்துவிடும். இதற்கு மேலைக்கடலில் அடிக்கும் பருவக்காற்றே பெரிதும் உதவி புரிந்துள்ளது என்பதைக் கடலியல் நிபுணர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தொடங்கி வைகாசி மாதம் முடிவுக்கு வரும் இந்த வணிகம் தமிழகத்துக்கு பெரும்பொருள் ஈட்டித்தந்தது என்றால் மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆவணத்தின் பின்பக்கம் ஏற்றுமதியான ஆறு பொதிகளைக் குறித்தாலும் மூன்று பொதிகளில் இருந்த பொருட்களின் தன்மை குறித்தே செய்திகள் கிடைக்கின்றன. மற்ற மூன்று பொதிகள் குறித்த தகவல்கள் சிதைந்துபோயின. இந்த ஆறு பொதிகள் ஹெர்மபோலன் எனப் பெயர்கொண்ட கப்பலில் சென்றன. இவற்றின் எடை 1,154 தோலனும் 2,852 திரமமும் ஆகும். இவற்றின் மதிப்பு, அலெக்ஸாந்த்ரியாவில் நீர்வழிச்சாலை ஒன்றை (aquaduct) அமைப்பதற்கு ஈடானது என்ற குறிப்பு வருவதால் இதன் மதிப்பு ஏழு மில்லியன் திரமம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு நீர்வழிச்சாலையை அமைக்க &lt;span style="font-weight:bold;"&gt;ஹைரோடஸ் அதிகஸ்&lt;/span&gt; என்பார், நான்கு மில்லியன் திரமங்களும் &lt;span style="font-weight:bold;"&gt;ஹட்ரியன்&lt;/span&gt; என்பார் மூன்று மில்லியன் திரமங்களும் அளித்துள்ளமை மூலம் இது புலனாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திரமம் என்பது 65 குன்றிமணிகளுக்கு ஈடானது. ஒரு குன்றிமணி என்பது 0.0648 கிராம் வெள்ளிக்கு ஈடானது. எனவே ஒரு திரமம் 4,212 கிராம், அதாவது சுமார் நாலேகால் கிலோ ஆகும். ஏழு மில்லியன் திரமம் என்றால் 29,484 கிலோ வெள்ளியின் எடைக்கு ஈடானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை பத்து இந்திய ரூபாய் எனக் கொண்டால் (இன்றைய விலை 27 ரூபாய்)  இதன் மதிப்பு சுமார் 30 கோடி இந்திய ரூபாய்க்கு ஈடானது! (இன்றைய மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய்). இது ஹெர்மபோலன் என்ற சாதாரணக் கப்பலில் ஏற்றிச்சென்ற பொருட்களின் மதிப்பு. இதைவிடப் பெரிய உரோமாமக் கப்பல்கள் இங்கு வந்து போயுள்ளன. மேலும் மேற்கண்ட தொகை , ஒரு கப்பலில் ஒரு வணிகருக்குச் சொந்தமான பொருட்களுக்கு உரியது. இதுபோல் வணிகர்கள் பலருக்குரிய  பொருட்களை ஒரு கப்பல் ஏற்றிச்செல்லும்போது இவற்றின் மதிப்பைக் கணக்கிட்டால் மலைப்பாக இருக்கிறது. இந்தத் தகவல்கள் சங்க காலத்தின் பொருளியல் வரலாற்றுக்கு மிக முக்கியமானவை. &lt;a href="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/St16kh7ALFI/AAAAAAAAC4g/AY6I6FB7__Y/s1600-h/tomber.bmp"&gt;&lt;img style="float:right; margin:10px 10px 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/St16kh7ALFI/AAAAAAAAC4g/AY6I6FB7__Y/s400/tomber.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394602696659446866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, தமிழகத்தின் அரசுருவாக்கத்தை சங்க இலக்கிய நிலை நின்று பார்த்தோர் அது மருத நிலத்தில் உபரி உற்பத்தி வழி தோன்றியிருக்கலாம் என்று கூறுவது மேற்கண்ட தொல்லியல் சான்றுகளுடன் இணைந்து செல்லவில்லை என்பதை, சேலம்-கோயம்புத்தூர் பகுதியில் தோன்றிய அரசுருவாக்க மையத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு பேசலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று ஆய்வாளர்கள் செம்பகலட்சுமி, ராஜன் குருக்கள், சுதர்சன் செனவிரத்ன மற்றும் நான் என யாவரும் சங்க இலக்கியங்களில் உள்ள திணைக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். ஐந்திணைகளில் ஏற்படும், ஏற்பட்ட பல்வேறு சமுதாயச்சூழல்களைச் சுட்டிக்காட்டி உழ்வுத்தொழிலைப் பெரிதும் நம்பி அதன்வழி ஏற்பட்ட உபரி உற்பத்திப் பெருக்கத்தை மனதில் கொண்டு இந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுத்திருக்க வேண்டும். ஆக, வளமையான பகுதிகளில் அரசு உருவாகியிருக்க முடியும் என்ற கருதுகோலின் அடிப்படையில் எழுந்ததொரு முடிவு இது எனலாம். ஆனால் அண்மைக்காலத்தில் வெளியாகியிருக்கும் தொல்லியல் சான்றுகள் இந்த முடிவை முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அமையவில்லை. எடுத்துக்காட்டாக, முல்லையும் பாலையும் தங்கிநிற்கும் கொங்குநாட்டுப் பகுதி, சேர அரச உருவாக்கத்துக்குப் பெரும்பங்காற்றியுள்ளது. இந்த முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் இங்கு கிட்டும் இரும்புக்கனிமத்தையும் மணிக்கற்களையும் பயன்படுத்தித் தம்முடைய தொழில்நுட்பத் திறனால் மிகச்சிறந்த எஃகுக்கருவிகளையும் மணிகளையும் உருவாக்கி, மேலை நாடுகளுக்கு - குறிப்பாக உரோமப்பேரரசின் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றனர். வெளிநாட்டு வணிகத்தின் வழி பெற்ற இந்த வருவாய், இவர்களுடைய மேம்பாட்டுக்கும் சமுதாயக் கட்டமைப்புக்கு அரசுருவாக்கத்துக்கும் அடிகோலியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப்பரப்பில் கிட்டியிருக்கும் உரோம நாணயங்களைக் கணக்கில் கொண்டால் கொங்கு நாட்டுப்பகுதியிலேயே அதிக நாணயங்கள் கிட்டியுள்ளன. இத்தகைய நாணயங்கள் வளமையான மருத நிலப் பகுதியில் இந்த அளவு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீர்வளமிக்க பகுதில் மட்டுமே அரசுருவாக்கம் முதன்முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கருதுகோளை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது &lt;span style="font-weight:bold;"&gt;(27&lt;/span&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(அடுத்த பகுதியுடன் முடியும்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அடிக்குறிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;27. தொல்லியல் ஆய்வு மூலமாக கொங்கு நாட்டுப் பகுதியில் சேர அரசுருவாக்கத்துக்கு உதவிய ஓர் உற்பத்தி மையம் பற்றி ஆய்வாளர் கா. ராஜன் தரும் தரவுகள் மிக முக்கியமானவை. இவ்விடயம் பற்றிய விவாதத்தை ஆழ-அகலப்படுத்தியமைக்கு அவருக்கு நன்றி கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;படங்கள்&lt;/span&gt; - அலெக்ஸாந்த்ரியா பெருநகர்த் துறைமுகத்தின் ஃபாரோஸ் கலங்கரை விளக்கம் - லிபியா நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ள மொஸைக் கல் வேலைப்பாட்டில், தென்னகத்துக்கும் உரோமப்பேரரசுக்குமான வணிகம் பற்றி &lt;br /&gt;பிரிட்டிஷ் ஆய்வாளர் ராபர்த்தா தோம்பர் இவ்வாண்டு வெளியிட்டிரு்ககும் புத்தகம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-5668580096613921898?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/5668580096613921898/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=5668580096613921898' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/5668580096613921898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/5668580096613921898'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/19.html' title='எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/St1ZTPoh4BI/AAAAAAAAC4Y/98MJfA0zlxo/s72-c/Pharos+of+Alexandria.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-7389617343127318168</id><published>2009-10-19T00:06:00.006+01:00</published><updated>2009-10-21T19:03:29.067+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><title type='text'>எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Stxdq1w60TI/AAAAAAAAC4Q/S8QksllwZ7U/s1600-h/Periplus_route.jpg"&gt;&lt;img style="float:right; margin:10px 10px 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 219px;" src="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Stxdq1w60TI/AAAAAAAAC4Q/S8QksllwZ7U/s400/Periplus_route.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394289444251160882" /&gt;&lt;/a&gt;ஒருபுறம் சமண சமயப் பாறைக்கொடைக் கல்வெட்டுக்களில் அரசுருவாக்கம் பற்றிய செய்திகளே இல்லாமல் இருப்பதும் மறுபுறம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை அதாவது முந்திய, பிந்திய பிராமிக் கல்வெட்டுக்காலம் வரையிலான காலத்தில் தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பிரதானமான சமணநிலைப்பட்ட நூல்களின் இயற்றலும் அந்தக் காலகட்டத்தில் நிலவிய ஆட்சி அதிகாரத்தினருக்குத் தம்முடைய பாரம்பரியங்களைப் பேண வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஊகிப்பது தவறாகாது. அது மாத்திரமல்லாமல், அந்த அரச அதிகார உருவாக்கத்தில் வைதீக மதத்துக்கு - குறிப்பாக பிராமணர்களுக்குள்ள இடமும் இயன்ற இடங்களில் அழுத்தியே கூறப்படுகிறது. &lt;strong&gt;எட்டுத்தொகை&lt;/strong&gt; நூல்கள் பலவற்றுக்கும் கடவுள் வாழ்த்து சைவ நிலைப்பட்டவையாக இருப்பதையும் நோக்கலாம். குறிப்பாக, &lt;strong&gt;ஐங்குறுநூறு&lt;/strong&gt; நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் எழுதிய கடவுள் வாழ்த்துப் பாடலை நோக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சங்க இலக்கியம் பேசும் அந்தக்காலப் பண்பாட்டில் முக்கிய இடம்பெற்றுள்ள சிலவற்றைத் தொல்லியல் ஆய்வுகள் வழி நோக்கலாம். கா. ராஜன், தம் &lt;strong&gt;தொல்லியல் நோக்கில் சங்க காலம்&lt;/strong&gt; நூலில் அழுத்திக்கூறும் ஒரு விடயம் முக்கியமானது. இலக்கியம் மற்றும் மானுடவியல் வழி சங்க கால ஆய்வுக்கு வந்தோர், சங்க இலக்கியம் மூலம் உய்த்துணரவல்ல விடயங்களையே முன்னிலைப்படுத்துவர். ஆனால் சேர் மோர்ட்டிமர் வீலர் கூறுவது போல, விடாது தொடர்ந்து கிண்டிக்கொண்டிருப்போர் (still digging) பிண்டப்பிரமாணமான தரவுகளை முன்னிறுத்துகின்றனர். சங்க கால வணிகம் பற்றிய பல தொல்லியல் தரவுகளை, சங்க இலக்கியக் குறிப்புக்களுடன் இணைத்து ஆய்வு செய்யும் முறையை இரா. நாகசாமி போன்றோரும் சிறப்பாகக் காட்டியுள்ளனர் &lt;span style="font-weight:bold;"&gt;(26)&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;கா. ராஜனைப் பொறுத்தவரை, தொல்லியல் ஆய்வு வழித் தெரிய வரும் பெருங்கற்படைப் பண்பாட்டின் முக்கியத்துவம் பற்றி எழுதுகிறார். தவிர, சங்க காலத்தில் விளங்கிய தொழில்நுட்பங்கள், எழுத்தறிவு பற்றியும் விமர்சித்திருக்கிறார். பெருங்கற்படைப் பண்பாடு பற்றிப் பேசும்போது, சங்க காலத்தில் நிலவிய முதுமக்கள் தாழி முறைமை, பெருங்கற்படைப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது என்பதைக் காட்டுகிறார். பெருங்கற்படை இறுதிச்சடங்கு, சமூகத்தின் உயர்மட்டத்தினர்க்காக இருந்திருக்கலாம் என்பது ஒரு முக்கிய குறிப்புரை. பிராமி எழுத்து முறைமையின் முன்னோடிக் குறியீடுகள் பற்றி இவர் கூறுவன முக்கியமானவை. &lt;br /&gt;&lt;br /&gt;பிராமி எழுத்துருவாக்க விடயத்தில் மகாதேவனுடைய கருத்துக்கள் பலவற்றை இவர் மறுதலிக்கிறார். தமிழக பிராமிக் கல்வெட்டுக்கள் அசோகர் பிராமியிலிருந்து தோன்றியிருக்க முடியாது என்ற ஒரு வாதத்தை இவர் முன்வைக்கிறார். பிராமிக் குறியீடுகள், எழுத்துக்கள் பற்றி இவர் கூறுவதை நோக்கும்போது, அந்தக் காலகட்டத்தில் தென்னகத்துக்கும் மத்தியதரைக்கடல் பகுதி உரோமக் குடியிருப்புக்களுக்கும்  இடையில்  நிலவிய வணிகத் தொடர்பு புதிய எழுத்துருவாக்கத்துக்கு உதவியிருக்கலாமோ என்ற மிக முக்கியக் கேள்வி எழுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சங்க காலத்துத் தொல்லியல் சான்றுகளாக இவர் கூறுவன பல.  தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வரும் தொழில்நுட்ப விடயங்கள் பற்றி, குறிப்பாக முத்துக்குளித்தல், ரத்தினக்கல் வெட்டுதல், துணிக் கைத்தொழில் பற்றி, இவர் விவரிக்கிறார். குறிப்பாக, தென்னகம்-மத்தியதரைக்கடல் பகுதி இடையே நடந்த அந்தக்கால வணிகத்தொடர்பை இவர் முக்கியமானதாக்குகிறார். இது கி.பி. முதல் நூற்றாண்டுக்கால உரோமப் பேரரசர் அகஸ்தஸின் காலத்துக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது என்பதை லட்சத்தீவிலும் கோயம்புத்தூர் அருகிலுள்ள கள்ளக்கிணற்றிலும் திருப்பூரிலும் கிடைத்த உரோம நாணயங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய கேரளக் கடற்கரையில் அமைந்த முசிறி, தொண்டி, நீர்க்குன்றம், வைக்கரை உள்ளிட்ட துறைமுகங்கள் வழி மத்தியதரைக்கடல் பகுதிக்கு முத்து, கல்மணிகளும் எஃகும் அகில், ஏலம், குறுமிளகு உள்ளிட்ட வாசனைப்பொருட்களும் தேக்கு, சந்தனம், தந்தம் உள்ளிட்ட மலைவளப்பொருட்களும் ஏற்றுமதி ஆயின. இவை பெரும்பாலும் சேர நாட்டிலிருந்தே ஏற்றுமதி ஆயின என்பதை முன்பே குறிப்பிட்டது போல் இந்தியப்பரப்பில் கிட்டும் மொத்த உரோம நாணயங்களில் தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேலான நாணயங்கள் இந்தப்பகுதியிலேயே கிடைக்கின்றன என்பதைக் கொண்டு உய்த்துணரலாம். தவிர, சேரரின் வணிக நகரான கொடுமணலைச் சுற்றியுள்ள காங்கேயம் பகுதிகளில் மணிக்கற்கள் ஏராளம் கிடைக்கின்றன என்பதும் கொடுமணலுக்கு ஐந்து கல் தொலைவில் காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் சாலையில் உள்ள &lt;span style="font-weight:bold;"&gt;படியூரில்&lt;/span&gt; விளைந்த பச்சைக்கல்லை (beryl) உரோமக்குடியிருப்புக்கள் பெரிதும் விரும்பி வாங்கின என்பதும் முக்கியம். &lt;br /&gt;&lt;br /&gt;இதன் முக்கிய சான்றாக, எகிப்து நாட்டின் க்வாஸர்-அல்-காதிம் நகரில் கிடைத்த மட்பாண்ட ஓடு பற்றி ஏற்கனவே கண்டோம். இந்த ஓட்டில் தமிழ்ப்பிராமி வடிவத்தில் &lt;span style="font-weight:bold;"&gt;கணன்&lt;/span&gt; (கண்ணன்), &lt;span style="font-weight:bold;"&gt;சாதன்&lt;/span&gt; (சாத்தன்) என்ற இரு தமிழ்ப்பெயர்கள் உள்ளன. மேலும் &lt;span style="font-weight:bold;"&gt;பெர்னிகே&lt;/span&gt; துறைமுகத்தில் &lt;span style="font-weight:bold;"&gt;கோற்பூமான்&lt;/span&gt; என்ற பெயர் பொறித்த மட்பாண்ட ஓடும் கிடைத்திருக்கிறது. இந்தப்பெயரை அடுத்து ஒரு குறியீடு இருப்பதும் ஒரு சிறப்பு அம்சமாகும். இந்த ஓடு கி.பி. நாற்பதாம் ஆண்டுக்குரியது என்று காலக்கணிப்பு கூறுவதால் இது மேலும் முக்கியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர, ஆஸ்திரியா நாட்டுத் தலைநகர் வியன்னாவின் அருங்காட்சியகத்தில் உள்ள கிரேக்க மொழிப் பாபிரஸ் தாள் சான்று பற்றியும் ஏற்கனவே கண்டோம். இந்தச் சுவடி பேரியாற்று முகத்துவாரத்தில் அமைந்த சேரர் துறைமுகம் முசிறி நகரில் வாழ்ந்த வணிகர் ஒருவரும் எகிப்து நாட்டின் நைல் பேரியாற்றின் முகத்துவாரத்தில் அமைந்த, ரோமாபுரியின் வசமிருந்த அலெக்ஸாந்த்ரியா பெருநகர்த் துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகர் ஒருவரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை விவரிக்கிறது. கிரேக்க மொழியில் இருபுறமும் எழுதியதாக அமைந்த இந்தச் சுவடியை நோக்கும்போது முசிறி வணிகர் கிரேக்க மொழி அறிந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம். வணிகரின் பெயர் வரும் இடம் சிதைந்துபோய்விட்டமை மிகவும் துரதிருஷ்டவசமானது. பெயர்கள் கிடைத்திருந்தால் அந்தக்கால வணிகச்சமுதாயத்தை மீள் உருவாக்கம் செய்ய ஏதுவாக இருந்திருக்கும். இதுபற்றி மேலும் விரிவாகப் பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(தொடரும்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;படம்&lt;/span&gt; - பெரிப்ளுஸ் சுவடியில் வரும் உரோமப் பேரரசின் வணிகப்பாதைகள் பற்றிய இக்காலப்படம். தென்னகத்தின் மேலைக்கடற்கரை நெடுகிலும் உள்ள துறைமுகங்களை, க்ளிக் செய்து காண்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அடிக்குறிப்புக்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;26.&lt;/span&gt;  குறிப்பாக, கரூர் பகுதியில் செய்த அகழாய்வு மூலம் தமிழக வணிக வரலாற்று உண்மைகளைக் காட்டும் முறைமை பற்றித் தம்முடைய &lt;span style="font-weight:bold;"&gt;Roman Karur&lt;/span&gt; நூலில் விவரித்துப் பேசுகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-7389617343127318168?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/7389617343127318168/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=7389617343127318168' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/7389617343127318168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/7389617343127318168'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/18.html' title='எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Stxdq1w60TI/AAAAAAAAC4Q/S8QksllwZ7U/s72-c/Periplus_route.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-3723791855032053417</id><published>2009-10-18T00:01:00.002+01:00</published><updated>2009-10-21T19:03:29.068+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><title type='text'>எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SttiHeMxlKI/AAAAAAAAC3w/ktO7dNsqops/s1600-h/Arikamedu+1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 274px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SttiHeMxlKI/AAAAAAAAC3w/ktO7dNsqops/s400/Arikamedu+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394012859211551906" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/blog-post.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - தொடர்பதிவுக்கு முன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/1.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 1 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/2_05.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 2 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/3_06.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 3 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/07/4_7892.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 4 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/07/5_23.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 5 - சிவத்தம்பி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/6.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 6 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/7.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 7 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/07/8.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 8 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/9.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 9 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/10.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 10 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/11.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 11 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/12.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 12 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/13.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 13 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/10/14.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/10/15.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/10/16.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 16 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை கூறியவற்றுடன் கலித்தொகை பற்றிய இன்னொரு தரவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். &lt;strong&gt;கலித்தொகை&lt;/strong&gt;, நியமமான சங்கப்பாடல் மரபுக்குப் பிந்தியது என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையில், இந்த நூலின் பெயர் முக்கியமாகிறது. &lt;strong&gt;கலித்தொகை&lt;/strong&gt; என்ற பெயரே தொகைமரபு நிலவிய காலத்திலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற முக்கிய உண்மை புலனாகிறது. ஆக, இந்தத் தொகைமரபு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கிக் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை, அதாவது சிலப்பதிகாரத்துக்கு முந்திய காலம் வரை நிலவிற்று எனலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கால அடைவு தொடர்பாக இப்போது மேற்கொள்ள வேண்டிய முதல் பணி, தொகைநூல்களையும் பாடல்களையும் இப்பொழுது நம்மிடத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தற்காலிகமாகக் காலவரிசைக் கிரமப்படுத்தலாகும். இத்தகைய பணியினைத் திராவிட மொழியியற் கழகம் (International Association for Dravidian Linguistics) போன்ற புலமை நிறுவனங்களோ, பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளோ பொருத்தமான அறிஞர்களைச் சேர்த்துக்கொண்டு செய்யத் தொடங்க வேண்டும். இப்போது நம்மிடையே உள்ள இலக்கிய வரலாற்று நோக்கு பொதுப்படையாகவே பல்லவ, சோழ, நாயக்கர் காலப் பகுதிகளின் ஊடேயுள்ள வரலாற்று அசைவியக்கத்தை நோக்குவதில்லை. சங்க காலத்துக்கு இத்தகைய ஓர் காலவரிசைக்கிரம நிரற்படுத்துகை உண்மையிலேயே சிரமமாகலாம். ஆயினும் வையாபுரிப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்றோருடைய ஆய்வுக்குறிப்புகளை ஆதாரமாகக்கொண்டும் வரலாற்று ஆசிரியர்கள், தொல்லியலாளர்கள் வழியாக வரும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டும் தொடங்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒரு பணியை மேற்கொள்ளும்பொழுது இலக்கிய ஆய்வாளர்களுக்கு எத்துணை முக்கியத்துவம் உண்டோ அத்துணை முக்கியத்துவம் வரலாற்று அறிஞர்களுக்கும் உண்டு. அத்தகைய ஒரு கூட்டுப்பணியே வெற்றியீட்ட முடியும். இதற்கான அத்தியாவசியத்தை ஐராவதம் மகாதேவனுடைய ஆராய்ச்சி முன்வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மகாதேவனுடைய ஆய்வுப்பெருநூல் தமிழக-தமிழிலக்கிய வரலாற்றாய்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் வழி கிளம்பும் சிந்தனைகள் சிலவற்றை இதுவரை தொகுத்துத் தந்துள்ளோம். இத்துறையில் நாற்பத்தைந்து ஆண்டுக் காலப் பயில்வுப் பரிச்சயமுள்ள இவருக்கு இந்த ஆய்வுப்பெருநூலின் தளமாக அமையும் திறந்த மனநோக்கும் குறிப்பாக முற்சாய்வின்மையும் நூலை வாசிக்கத் தொடங்கும்பொழுது கருத்தைக் கவருவனவாக உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;மகாதேவனுடைய ஆய்வு மிக நுண்ணியதாக நோக்கப்பட்டு, இவர் கூறும் கருத்துக்களின் ஏற்புடைமையைத் தீர்மானிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டதைப்போல, &lt;span style="font-weight:bold;"&gt;பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் நாடகம், தமிழில் இலக்கிய வரலாறு, பண்டைய தமிழ்ச்சமூகம் பற்றிய ஆய்வுகள்&lt;/span&gt; என இந்தத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளமையால் மகாதேவனின் இந்த ஆய்வுப் பெருநூல், தமிழக சமூக-இலக்கிய வரலாறு மற்றும் வரலாறெழுதுகையில் மேலும் ஒரு கட்டத்தை ஏற்படுத்தியுள்ளமையை உணர்கிறேன்.&lt;a href="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SttiOF1PPdI/AAAAAAAAC34/bvaRhwC-RS0/s1600-h/Arikamedu+2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 286px;" src="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SttiOF1PPdI/AAAAAAAAC34/bvaRhwC-RS0/s400/Arikamedu+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394012972929465810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளையில் தொல்லியல் நிலை நின்று இந்தக் காலத்தைப் பார்ப்போர் - குறிப்பாக கொடுமணல் போன்ற இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் செய்தோர் - மகாதேவனுடைய கூற்றுக்கள் பலவற்றை ஏற்பதில்லை. பிராமி எழுத்து வடிவத்துக்கு முந்தைய குறியீடுகளின் முக்கியத்துவம் பற்றி இவர் கருத்தை ஏற்பதில்லை. மேலும் பிராமிக் கல்வெட்டுக்களில் கால அடைவு பற்றி மகாதேவன் தரும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி என்ற முன்-எல்லையை தொல்லியலாளர்கள் ஏற்கத் தயங்குகிறார்கள் &lt;span style="font-weight:bold;"&gt;(25)&lt;/span&gt;.  ஆயினும் சங்க இலக்கியக் காலத்தின் பின்புலத்தையும் அதன் எழுத்து முறையையும் தெளிவுடன் விளங்கிக்கொள்ளும் நோக்குடனேயே மகாதேவனுடைய கருத்துக்களை இங்கு கூறுகிறேன். சங்ககாலத் தொடக்கத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பது பற்றியும் தமிழகப்பரப்பில் எழுத்து-வழக்கு கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்குப் பிறகே செழுமைப்படுகிறது எனவும் இவர் கூறுவது முக்கியம். ஏனெனில் ஏறத்தாழ கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கி.பி. நான்காம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலமே &lt;strong&gt;தொல்காப்பியம், திருக்குறள், கலித்தொகை, பரிபாடல்&lt;/strong&gt; ஆகிய நூல்கள் தோன்றிய காலமாக இருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. அதாவது சங்க இலக்கியங்களை எழுத்தில் பொறித்த காலம் இந்த இரண்டு நூற்றாண்டுக்காலமாக இருத்தல் வேண்டும். நியமமான தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் பற்றிப் பேசுமுன்னர் உண்மையில் சங்க இலக்கித்தைத் தொகுத்தற்கான  அரசியல் உந்துதல் பற்றி இங்கு சிந்தித்தல் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(தொடரும்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படங்கள்&lt;/strong&gt; - அரிக்கமேடு-வீராம்பட்டினத்தில் கண்டெடுக்கப்பெற்ற, கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்ததெனக் கருதப்பெறும், உரோம மட்பாண்ட வேலைப்பாடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அடிக்குறிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;25&lt;/span&gt;. இந்த விடயம் பற்றி ஆய்வாளர் கா. ராஜன் விரிவாக விரிவாகவும் ஆணித்தரமாகவும் தம் கருத்தை எடுத்துக் கூறுகிறார். காண்க: கா. ராஜன், &lt;span style="font-weight:bold;"&gt;தொல்லியல் நோக்கில் சங்க காலம்&lt;/span&gt;, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-3723791855032053417?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/3723791855032053417/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=3723791855032053417' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/3723791855032053417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/3723791855032053417'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/17.html' title='எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SttiHeMxlKI/AAAAAAAAC3w/ktO7dNsqops/s72-c/Arikamedu+1.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-3411870936820698112</id><published>2009-10-17T00:10:00.003+01:00</published><updated>2009-10-21T19:01:32.426+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லண்டன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SttPjqjSM0I/AAAAAAAAC3o/JXz-gUFL7E8/s1600-h/Tamil+Solidarity.png"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 352px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SttPjqjSM0I/AAAAAAAAC3o/JXz-gUFL7E8/s400/Tamil+Solidarity.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5393992452842599234" /&gt;&lt;/a&gt;இலங்கைப்போரின் போதான தமிழ்மக்களின் படுகொலைகளைக் கண்டித்தும் அங்கு அரசு சுமார் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்களை முகாம்களில் தொடர்ந்து தடுத்துவைத்திருப்பதைக் கண்டித்தும் முகாம்களில் நிலைமைகள் படுமோசமாவதைச் சுட்டிக்காட்டும் வகையிலும் தமிழ்மக்கள் அனைவரையும் விடுதலை செய்யக்கோரியும் இங்கே லண்டனில் சோஷலிஸ்ட் கட்சியும் தமிழ் ஸொலிடாரிட்டி அமைப்பும் இன்று மாலை நடத்தும் அமர்வில் என் உரையும் இடம்பெறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபர் 17-ஆம் நாள், சனிக்கிழமை, மாலை ஆறு மணி.&lt;br /&gt;லண்டன் கிழக்குப் பகுதி, ராணிமேரிப் பல்கலைக்கழகம், சட்டத்துறை வளாகம், அறை 210.&lt;br /&gt;&lt;br /&gt;உரையாற்ற இருப்போர்: &lt;br /&gt;சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் &lt;strong&gt;பீட்டர் டாஃபீ&lt;/strong&gt;, &lt;br /&gt;பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகம் முன்பு நடந்த போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய தமிழ் மாணவர்கள் - &lt;strong&gt;ஜனனி பரஞ்சோதி, பரமேஸ்வரன்&lt;/strong&gt;, &lt;br /&gt;தமிழ் ஸொலிடாரிட்டி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பு&lt;strong&gt;சேனன்&lt;/strong&gt;&lt;br /&gt;மற்றும் &lt;br /&gt;நான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விபரங்களை, &lt;strong&gt;&lt;a href="http://www.tamilsolidarity.org/wp-content/uploads/2009/07/QMposter3tam.pdf"&gt;தமிழ் ஸொலிடாரிட்டி&lt;/a&gt;&lt;/strong&gt; இணைய தளத்தில் காணலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-3411870936820698112?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/3411870936820698112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=3411870936820698112' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/3411870936820698112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/3411870936820698112'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/blog-post_18.html' title='லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/SttPjqjSM0I/AAAAAAAAC3o/JXz-gUFL7E8/s72-c/Tamil+Solidarity.png' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-487160156358339437</id><published>2009-10-16T00:06:00.008+01:00</published><updated>2009-10-21T19:03:29.070+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><title type='text'>எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StgVWtpN5EI/AAAAAAAAC3A/jNmnm2n11JI/s1600-h/Cold+Breeze.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StgVWtpN5EI/AAAAAAAAC3A/jNmnm2n11JI/s400/Cold+Breeze.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5393084033729946690" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/blog-post.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - தொடர்பதிவுக்கு முன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/1.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 1 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/2_05.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 2 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/3_06.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 3 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/07/4_7892.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 4 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/07/5_23.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 5 - சிவத்தம்பி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/6.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 6 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/7.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 7 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/07/8.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 8 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/9.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 9 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/10.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 10 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/11.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 11 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/12.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 12 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/13.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 13 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/10/14.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/10/15.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பத்துப்பாட்டில் நெடுநல்வாடை&lt;/span&gt;யை எடுத்துக்கொண்டால் அதன் ஆசிரியர் நக்கீரர் முற்றிலும் புறத்துக்கே உரியதான பாசறைச்சூழலில் அக நினைவுகளைக் கொண்டுவருகிறார். அதாவது போருக்குக்கெனச் சென்று பாசறையில் தங்கியிருந்த அரசன், நள்ளிரவில் பாசறையைச் சுற்றிவர, அந்த ஒலிகளும் சூழலும் அவனுக்கு அரசியை நினைவூட்டுகின்றன.  அதேபோல, தனிமையானது அரசியைப் புறத்தின் நெருக்கடிநிலைகள் பற்றிய சிந்தனையுள் தள்ளிவிடுகிறது. அவள் நகரின் மாடத்தில், தன் வீட்டில், கட்டிலில் சாய்ந்தவாறே அரசனை, அவன் நிலையை நினைக்கிறாள். இருவரையும் வாடைக்காற்று இணைக்கிறது. புறம் அகத்துள்ளே செல்ல, அகம் புறத்தை நோக்கிப் பாய்கிறது. இந்தக்கட்டத்தில் அகத்தலைவன் தலைவியர், கிளவிகளுக்கான ஊற்றுக்கால்களாக மாத்திரம் நில்லாமல் பாத்திரங்களாக மாறிவிடுகின்றனர். உண்மையில் இந்த மானுட நிலைச் சித்தரிப்பு, சங்கப்பாடல்களின் உள்ளே நின்று பார்க்கும்போது, ஓர் அற்புதமான வளர்ச்சி. இது, அகம்-புறம் என்ற இறுகிய வரையறைகளுக்கு அப்பாலுள்ள மனித நிலை (human situations) உணர்வுகளைக் காட்டுகிறது. இங்கே வரும் தவிர்க்க முடியாத அக-புற ஒருமைப்பாட்டை, பாடலில் தலைப்பு, நிறைந்த கவித்துவத்துடன் வெளிக்கொணர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, &lt;span style="font-weight:bold;"&gt;நெடுநல்வாடை&lt;/span&gt;யின் ஆசிரியர், வாடைக்காற்றைக் குறியீடாகக் கொண்டு அதன் எதிரும் புதிருமான நிலைகளை அடைகளாக்கி, அக-புறத்திணை மரபுக்கு மேலே செல்ல முயல்கிறார். வாடை, நெடு-நல்-வாடையாகிறது. அதாவது, அரசனுக்கு நல்வாடையாகவும் அரசிக்கு நீண்ட வாடையாகவும் அமைகிறது. இவர்களில் ஒவ்வொருவர்க்கும் வாடை உருவகித்து நிற்கும் உணர்வுப்பின்புலங்கள், வெவ்வேறு உணர்ச்சிகளுக்கானவை. உண்மையில் அகத்திணை-புறத்திணையை தனித்த மரபுகளாகப் பார்க்க முடியாது என்பதைக் காட்டுவது, &lt;span style="font-weight:bold;"&gt;நெடுநல்வாடை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இத்தகையை இலக்கிய நிலை ஆய்வுகளை, &lt;span style="font-weight:bold;"&gt;தொல்காப்பியமும் தொல்காப்பியம்&lt;/span&gt; வழி வரும் பார்வையும்  இலக்கணமயமான ஒரு நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தக் கவிதைப்பாய்ச்சலை நச்சினார்க்கினியர் புறத்திணை மரபுக்குள் வைத்தே விளக்குகிறார். அரசன் அணிந்திருந்த மாலையின் மலர் பற்றிய குறிப்புக் காரணமாக அதைப் புறத்திணைச்சான்றாகவே கொள்ளவேண்டுமென்ற ஓர் இலக்கியத்தீர்ப்பை அளிக்கிறார். நச்சினார்க்கினியர் அவ்வாறு அமைத்துக் கூற முயன்றாலும் &lt;span style="font-weight:bold;"&gt;நெடுநல்வாடை&lt;/span&gt; அக-புற மரபுக்கு மேலே, மானுடநிலைச் சித்தரிப்புக்குச் செல்லவேண்டிய அவசியம் வருகிறது. உண்மையில் &lt;span style="font-weight:bold;"&gt;சிலப்பதிகார&lt;/span&gt;த்தில் ஏற்படும் திருப்பத்துக்கான, உடனே கண்ணுக்குப் புலப்படாத, ஓர் அடிக்கல்லை &lt;span style="font-weight:bold;"&gt;நெடுநல்வாடை&lt;/span&gt;யின் ஆசிரியர் நக்கீரர் இட்டுவிடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தொல்காப்பியம்&lt;/span&gt; வழிவரும் இலக்கணமயமாகப் பார்க்கும் முறைமையைப் பிரச்னைக்குள்ளாக்கும் ஓர் அம்சம், புலவர்கள் பற்றிய தரவாகும். கபிலர், பரணர் போன்ற புலவர்களை எடுத்துக்கொண்டால் இவர்கள் ஒவ்வொருவரையும் இலக்கிய வளர்ச்சிகளுடன் பார்க்கும்போது வெவ்வேறு கட்டங்களுக்கு உரியன எனக் கொள்ளக்கூடிய பாடல்களைப் பாடியிருப்பது தெரிகிறது. இது ஒரு முக்கிய அம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, புலவர்களின் கால ஒருமை பற்றிய சிக்கல் நாம் பயப்படும் அளவிற்குப் பெரிதாக இல்லை. ஏனெனில் இப்போதே&lt;span style="font-weight:bold;"&gt; பத்துப்பாட்டில்&lt;/span&gt; வரும் கபிலர் என்ற பெயரையும் &lt;span style="font-weight:bold;"&gt;எட்டுத்தொகை&lt;/span&gt;யில் வரும் கபிலர் என்ற பெயரையும் சேர்த்துப் பார்க்க வேண்டியதில்லை என்பதை &lt;span style="font-weight:bold;"&gt;பாட்டும் தொகையும்&lt;/span&gt; நூலின் பதிப்பாசிரியர்கள் மிகத் தெளிவாகவே கூறிச் செல்கின்றனர். பாடல்களின் தொகுப்பு இந்து மதத்தினரின் கைகளிலேயே இருந்தது என்று கொள்வதற்கு இடமுண்டாகையால் சில பெயர்கள் மீட்டு மீட்டுக் கூறப்பட்டிருக்கலாம். &lt;span style="font-weight:bold;"&gt;கலித்தொகை&lt;/span&gt;யில் &lt;span style="font-weight:bold;"&gt;குறிஞ்சிக்கலி&lt;/span&gt; கபிலருடையதாகவே கூறப்படுவதுண்டு.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StgVbudbCVI/AAAAAAAAC3I/6vEmShKxBhM/s1600-h/Sivathamby.jpg"&gt;&lt;img style="float:left; margin:10px 10px 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 243px;" src="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StgVbudbCVI/AAAAAAAAC3I/6vEmShKxBhM/s400/Sivathamby.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5393084119848257874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கு மேல் சங்கப்பாடல்களின் உள்ளே மொழி வேறுபாடு உள்ளதா என்ற வினா  முக்கியமானது. மொழியியல் ஆய்வாளர்கள் இத்தகைய ஒரு வினாவுக்கே இடமில்லாத வகையில் இந்தப்பாடல்கள் யாவும் ஒரே காலத்துக்குரியன எனக் கூறுகிறார்கள். ஆனால் இப்போது சங்க காலம் என்பது கி. மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை உள்ள காலம் என்ற எடுகோளைக் கொண்டால், இந்த நூல்களை சுமார் நான்கரை நூற்றாண்டுக்கால பரப்புக்குள் அமைத்துக்கூற வேண்டிய தேவை வருகிறது. எத்துணைதான் அடித்தளப் பொருளியல் மாற்ற வளர்ச்சி இருக்கவில்லையென்றாலும் இந்த நான்கரை நூற்றாண்டுக்காலத்தில் நடக்கத்தக்க மொழிவேறுபாடு இருக்காதா என்பது தட்டிக்கழிக்க முடியாத ஒரு வினா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இலக்கியங்களைக் கொண்டு பார்க்கும்போது இந்தப்பாடல்களின் ஊடே திணைமரபின் பேணுகை ஒருபுறமும் திணைமரபை ஓர் உத்தியாகப் பயன்படுத்தும் தன்மை மறுபுறமும்  இவை இரண்டுக்கும் மேலாகத் திணைமரபுக்கப்பால் போகத்துடிக்கும் ஓர் உந்துதல் மூன்றாம் புறமும் காணலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;இதுவரை கூறியது, சங்க இலக்கியத்தினுள்ளேயே இலக்கிய மரபில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடத் தொடங்கிவிட்டன என்பதைக் காட்டுவதற்கேயாகும். ஆக, சங்க இலக்கியங்கள் பற்றிய இலக்கிய நிலை ஆய்வு அதிமுக்கிய மாற்றங்களைக் கோரி நிற்கிறது. ஆய்வாளர்கள் மட்டத்தில் பேசப்படுகிற இந்த விடயங்கள் பற்றி, குறைந்த பட்சம் முதற்கட்ட நிலை மாணவர்கள் இடையில் கொண்டுசெல்வது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(தொடரும்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;படங்கள்&lt;/span&gt; -&lt;span style="font-weight:bold;"&gt; நெடுநல்வாடை&lt;/span&gt; இன்று, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-487160156358339437?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/487160156358339437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=487160156358339437' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/487160156358339437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/487160156358339437'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/16.html' title='எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StgVWtpN5EI/AAAAAAAAC3A/jNmnm2n11JI/s72-c/Cold+Breeze.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-3294084889431217000</id><published>2009-10-14T07:27:00.010+01:00</published><updated>2009-10-14T14:20:28.060+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><title type='text'>நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StV2MEO0JzI/AAAAAAAAC24/0rpM0xb0Ob4/s1600-h/Nagarjuna+1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5392346078512424754" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 287px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StV2MEO0JzI/AAAAAAAAC24/0rpM0xb0Ob4/s400/Nagarjuna+1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;1. நிலைகளை ஆராய்தல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நிலைகள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;अनिरोधमनुत्पादमनुच्छेदमशाश्वतम्।&lt;br /&gt;अनेकार्थमनानार्थमनागममनिर्गमम् ॥१॥ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏதும் எங்கும் தன்னிடமிருந்தோ, பிறதிடமிருந்தோ,&lt;br /&gt;இவை இரண்டிலுமிருந்தோ, காரணமின்றியோ பிறப்பதில்லை - 1.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;यः प्रतीत्यसमुत्पादं प्रपञ्चोपशमं शिवम् ।&lt;br /&gt;देशयामास संबुद्धस्तं वन्दे वदतां वरम् ॥२॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலைகள் நான்கு: காரணங்கள், பொருட்கள், உடன்நிலை, ஆதிக்க நிலை.&lt;br /&gt;ஐந்தாம் நிலை என ஏதுமில்லை - 2.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;न स्वतो नापि परतो न द्वाभ्यां नाप्यहेतुतः ।&lt;br /&gt;उत्पन्ना जातु विद्यन्ते भावाः क्कचन केचन ॥३॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருட்களின் சாரம், நிலைகளில் தங்குவதில்லை என்க.&lt;br /&gt;தன்னில் ஒன்றில்லை என்றால் பிறிதும் இல்லை - 3.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;चत्वारः प्रत्यया हेतुश्चालम्बनमनन्तरम् ।&lt;br /&gt;तथैवाधिपतेयं च प्रत्ययो नास्ति पञ्चमः ॥४॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலைகள் கொண்ட செயலென ஏதுமில்லை. நிலைகளற்ற செயலும் ஏதுமில்லை.&lt;br /&gt;செயலற்ற நிலைகள் ஏதுமில்லை. செயல்கொண்ட நிலைகளும் ஏதுமில்லை - 4.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;न हि स्वभावो भावानां प्रत्ययादिषु विद्यते ।&lt;br /&gt;अविद्यमाने स्वभावे परभावो न विद्यते ॥५॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏதும் எவற்றிலோ தங்கிப் பிறப்பதால்தான் அவை நிலைகளாகும்.&lt;br /&gt;பிறப்பு நடக்காதவரை, அவை அற்ற-நிலைகள் அல்லவா! - 5.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;क्रिया न प्रत्ययवती नाप्रत्ययवती क्रिया ।&lt;br /&gt;प्रत्यया नाक्रियावन्तः क्रियावन्तश्च सन्त्युत ॥६॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலைகளற்று ஏதும் ஒன்றில் தங்கியிருப்பதில்லை.&lt;br /&gt;தங்கியிருப்பதில்லை என்றால், எவற்றின் நிலைகள் அவை?&lt;br /&gt;தங்கியிருக்கும் எதற்கும் நிலைகள் ஏன் தேவை? - 6.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;उत्पद्यते प्रतीत्येमानितीमे प्रत्ययाः किल ।&lt;br /&gt;यावन्नोत्पद्यत इमे तावन्नाप्रत्ययाः कथम् ॥७॥ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருட்கள் இருப்பன என்றோ, இல்லாதவை என்றோ,&lt;br /&gt;இந்த இரண்டும் உண்மையென்றோ நிறுவ முடியவில்லை என்றால்,&lt;br /&gt;நிறுவும் காரணம் என்று எதைக்கூறுவது? அது அசாத்தியம் - 7.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;नैवासतो नैव सतः प्रत्ययोऽर्थस्य युज्यते ।&lt;br /&gt;असतः प्रत्ययः कस्य सतश्च प्रत्ययेन किम् ॥८॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கும் நிகழ்வுக்குப் பொருளில்லை.&lt;br /&gt;நிகழ்வுக்குப் பொருளில்லை என்றால் அப்பொருளும் உண்டா? - 8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;न सन्नासन्न सदसन् धर्मो निर्वर्तते यदा ।&lt;br /&gt;कथं निर्वर्तको हेतुरेवं सति हि युज्यते ॥९॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வுகள் பிறப்பதில்லையென்றால் அவை நிற்கவும் தேவையில்லை.&lt;br /&gt;ஆக, உடன்நிலை என்பதில் பொருளில்லை.&lt;br /&gt;அப்படி நின்ற எதுதான் நிலையாகும்? - 9&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;अनालम्बन एवायं सन् धर्म उपदिश्यते ।&lt;br /&gt;अथानालम्बने धर्मे कुत आलम्बनं पुनः ॥१०॥&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சாரமற்ற பொருட்களின் இருப்பென்பதில்லை.&lt;br /&gt;ஆக, ஒன்றின் இருப்பால் நிகழ்வது என எதையும் கூறுவது சரியல்ல - 10.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;अनुत्पन्नेषु धर्मेषु निरोधो नोपपद्यते ।&lt;br /&gt;नानन्तरमतो युक्तं निरुद्धे प्रत्ययश्च कः ॥११॥&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நிலைகள் தனித்தோ சேர்ந்தோ ஏற்படுவது விளைவில்லை.&lt;br /&gt;நிலைகளில் தங்காத ஏதும் அவற்றிலிருந்து பிறப்பது எவ்வாறு! - 11.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;भावानां निःस्वभावानां न सत्ता विद्यते यतः ।&lt;br /&gt;सतीदमस्मिन् भवतीत्येतन्नैवोपपद्यते ॥१२॥&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விளைவு இல்லையென்றாலும் அது நிலைகளிலிருந்து பிறந்தால்,&lt;br /&gt;அது நிலைகளற்றவற்றிலிருந்து பிறக்காதது ஏன்? - 12.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;न च व्यस्तसमस्तेषु प्रत्ययेष्वस्ति तत्फलम् ।&lt;br /&gt;प्रत्ययेभ्यः कथं तच्च भवेन्न प्रत्ययेषु यत् ॥१३॥&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நிலைகளின் இயல்பே விளைவுகள்.&lt;br /&gt;நிலைகளுக்குத் தன்னியல்பு என ஏதுமில்லை.&lt;br /&gt;தன்னியல்பற்ற எதனுடைய விளைவுகளும்&lt;br /&gt;எப்படி நிலைகளின் இயல்பாக இருக்க முடியும்? - 13.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;अथासदपि तत्तेभ्यः प्रत्ययेभ्यः प्रवर्तते ।&lt;br /&gt;अप्रत्ययेभ्योऽपि कस्मात्फलं नाभिप्रवर्तते ॥१४॥&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;ஆக, எதற்கும் நிலைகளின் இயல்பென ஏதுமில்லை.&lt;br /&gt;நிலைகளற்ற இயல்பின் விளைவுமில்லை.&lt;br /&gt;விளைவென ஏதுமில்லை என்பதால்,&lt;br /&gt;நிலைகளோ, நிலைகளற்றதோ என எவைதாம் இருக்க முடியும்? - 14.&lt;br /&gt;&lt;br /&gt;நாகார்ஜுனர், ப்ரத்யய பரீக்ஷா, &lt;strong&gt;மூலமத்யமக்காரிகா&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;नागार्जुन, प्रत्ययपरीक्षा नाम प्रथमं प्रकरणम्, &lt;strong&gt;मूलमध्यमककारिका&lt;/strong&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(இன்னும் வரும்)&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-3294084889431217000?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/3294084889431217000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=3294084889431217000' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/3294084889431217000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/3294084889431217000'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/1_14.html' title='நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StV2MEO0JzI/AAAAAAAAC24/0rpM0xb0Ob4/s72-c/Nagarjuna+1.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-1117418909386789974</id><published>2009-10-12T15:47:00.008+01:00</published><updated>2009-10-14T07:09:56.218+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸில்வியா'/><title type='text'>காளான் பல - ஸில்வியா ப்ளாத்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StQphDNYGhI/AAAAAAAAC2w/1Cpb9KKiDAc/s1600-h/Mushrooms.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StQphDNYGhI/AAAAAAAAC2w/1Cpb9KKiDAc/s400/Mushrooms.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5391980301643160082" /&gt;&lt;/a&gt;ராத்தங்கி&lt;br /&gt;அதிவெண் நிறமாய்&lt;br /&gt;ரகசியமாய்&lt;br /&gt;ஒலியற்று&lt;br /&gt;&lt;br /&gt;எம் காற்&lt;br /&gt;பெருவிரலும்&lt;br /&gt;மூக்கும் &lt;br /&gt;களிமண் பற்றிக் &lt;br /&gt;காற்றும் ஏற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எமை யாரும் &lt;br /&gt;காணாமல்&lt;br /&gt;தடுக்காமல்&lt;br /&gt;எமக்குத் துரோகம் &lt;br /&gt;இழைக்காமல்&lt;br /&gt;சிறுமணிகள் இடந்தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊசிபோல் தவழ்வோம்&lt;br /&gt;என மிருதுமுஷ்டிகள்&lt;br /&gt;வலியுறுத்தும் &lt;br /&gt;இலைசெறிவில்,&lt;br /&gt;&lt;br /&gt;கற்படுகையிலும்.&lt;br /&gt;எம் &lt;br /&gt;சுத்தியலும் &lt;br /&gt;எம் &lt;br /&gt;தாக்கும் திமிசும்&lt;br /&gt;செவியற்று&lt;br /&gt;விழியற்று&lt;br /&gt;&lt;br /&gt;முழுதும் குரலற்று&lt;br /&gt;இன்னும்&lt;br /&gt;பாறை பிளந்து &lt;br /&gt;துளைதோறும்&lt;br /&gt;தோள்தங்கிச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீரும் நிழல்துளியும்&lt;br /&gt;அளவாய் அருந்தி &lt;br /&gt;சுவைப்பண்பும் அற்று&lt;br /&gt;சற்றேதும் கேட்காமல் &lt;br /&gt;பெருகுவோம் யாம்.&lt;br /&gt;பெருகுவோம் யாம்!&lt;br /&gt;&lt;br /&gt;மேஜைகள் யாம்&lt;br /&gt;அலமாரி அடுக்குகள் யாம்&lt;br /&gt;மெலியோர் யாம்.&lt;br /&gt;உணவாவோர் யாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எமை மீறி&lt;br /&gt;ஏதோ &lt;br /&gt;தள்ளுமுள்ளப்&lt;br /&gt;பெருகுவோர் யாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புவி கொள்வோம்&lt;br /&gt;வைகறையில்,&lt;br /&gt;கதவில் &lt;br /&gt;எம் கால் பதிய.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Mushrooms&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Overnight, very&lt;br /&gt;Whitely, discreetly,&lt;br /&gt;Very quietly&lt;br /&gt;&lt;br /&gt;Our toes, our noses&lt;br /&gt;Take hold on the loam,&lt;br /&gt;Acquire the air.&lt;br /&gt;&lt;br /&gt;Nobody sees us,&lt;br /&gt;Stops us, betrays us;&lt;br /&gt;The small grains make room.&lt;br /&gt;&lt;br /&gt;Soft fists insist on&lt;br /&gt;heaving the needles,&lt;br /&gt;The leafy bedding,&lt;br /&gt;&lt;br /&gt;Even the paving.&lt;br /&gt;Our hammers, our rams,&lt;br /&gt;Earless and eyeless,&lt;br /&gt;&lt;br /&gt;Perfectly voiceless,&lt;br /&gt;Widen the crannies,&lt;br /&gt;Shoulder through holes. We &lt;br /&gt;&lt;br /&gt;Diet on water,&lt;br /&gt;On crumbs of shadow,&lt;br /&gt;Bland-mannered, asking&lt;br /&gt;&lt;br /&gt;Little or nothing.&lt;br /&gt;So many of us!&lt;br /&gt;So many of us!&lt;br /&gt;&lt;br /&gt;We are shelves, we are&lt;br /&gt;Tables, we are meek,&lt;br /&gt;We are edible,&lt;br /&gt;&lt;br /&gt;Nudgers and shovers&lt;br /&gt;In spite of ourselves.&lt;br /&gt;Our kind multiplies:&lt;br /&gt;&lt;br /&gt;We shall by morning&lt;br /&gt;Inherit the earth.&lt;br /&gt;Our foot's in the door.&lt;br /&gt;&lt;br /&gt;-- Sylvia Plath, &lt;span style="font-weight:bold;"&gt;Mushrooms&lt;/span&gt;, 1959.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-1117418909386789974?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/1117418909386789974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=1117418909386789974' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/1117418909386789974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/1117418909386789974'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/blog-post_12.html' title='காளான் பல - ஸில்வியா ப்ளாத்'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StQphDNYGhI/AAAAAAAAC2w/1Cpb9KKiDAc/s72-c/Mushrooms.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-8873915214057678373</id><published>2009-10-11T00:16:00.006+01:00</published><updated>2009-10-21T19:03:29.071+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><title type='text'>எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StGocDwvaRI/AAAAAAAAC2A/gqCeuGOFyq4/s1600-h/Jean-Luc+Chevillard.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StGocDwvaRI/AAAAAAAAC2A/gqCeuGOFyq4/s400/Jean-Luc+Chevillard.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5391275428938737938" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/blog-post.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - தொடர்பதிவுக்கு முன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/1.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 1 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/2_05.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 2 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/3_06.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 3 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/07/4_7892.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 4 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/07/5_23.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 5 - சிவத்தம்பி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/6.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 6 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/7.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 7 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/07/8.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 8 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/9.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 9 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/10.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 10 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/11.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 11 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/12.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 12 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/08/13.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 13 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/10/14.html"&gt;எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகத்துறைப் பாடல்களை வாசிக்கும்போது மூன்று கட்டங்களை ஒன்றன்பின் ஒன்று பின்நோக்கிச் செல்வனவாகக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. புலவர்கள் அதாவது புலமையுடையோர் பாடும் நிலை. இவர்கள் பாணர் என்ற பாடுநரின் மரபைக் கையேற்றுப் பாடுவதாகவே தெரிகிறது.&lt;br /&gt;2. பாணர்கள் பாடுவது: அதாவது அகத்துறைக் கிளவிகளைப் பாணர்கள் அந்தப் பாத்திரங்கள் பாடுவது போன்று தாம் பாடுவது. பாணர்கள் இவ்வாறு பாடுவது யாரோ சிலர் கேட்டு மகிழ்வுறுவதற்காகவே என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.&lt;br /&gt;3. பாத்திரங்கள் தாமே பாடுவது. ஒரு குறிப்பிட்ட சூழலில் ஏற்படும் குறிப்பிட்ட ஓர் உணர்ச்சிநிலை - ஒரு பாத்திரம் தன் மனநிலையைக் கூறுவதாகும். இத்தகைய பாடல்கள் தொகைநூல்களில் காணப்படுகின்றனவோ தெரியவில்லை. ஆனால் பாணர்களும் புலவர்களும் அத்தகைய ஒரு நிலையையே தம்முடைய இலக்கிய வெளிப்பாட்டுக்கான பொருளும் மரபுமாக ஆக்கிக்கொள்கின்றனர். இப்போது வினா யாதெனில், குறைந்த பட்சம் பாணர்களின் பாடல்களுக்கும் புலவர்களின் பாடல்களுக்கும் இடையேயாவது வேறுபாடு கூறக்கூடியவர்களாக நாம் இருக்கிறோமா என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;புறப்பாடல்களைப் வாசிக்கும்போது இந்தப்பிரச்னை மேலும் ஸ்தூலமாகி விடுகிறது. எடுத்துக்காட்டாக, சேரர்களைப் புகழ்வது &lt;span style="font-weight:bold;"&gt;பதிற்றுப்பத்து&lt;/span&gt;. &lt;span style="font-weight:bold;"&gt;புற நானூற்றை&lt;/span&gt;ப் பார்க்கும்போது அதன் செய்யுள் அமைதியில் சில முக்கிய அம்சங்களைக் காணலாம். தொகுதியின் முற்பகுதியில் ஏறத்தாழ முதல் நூறு பாடல்களாக வருவன, மன்னர்களைப் புகழ்வனவாகும். ஆனால் &lt;span style="font-weight:bold;"&gt;புற நானூற்றி&lt;/span&gt;ன் பிற்பகுதிக்கு வரும்போது அவை நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அரசுருவாக்கத்துக்கு முந்தியவை என்பது தெரியும். &lt;span style="font-weight:bold;"&gt;புற நானூறு&lt;/span&gt; தொடர்பான மிக முக்கியமான வினா யாதெனில், பாடல்களின் பொருளமைதி கொண்டு கால அமைதிப்படி அந்தத்தொகையைக் காண முடியாதா என்பதாகும். புற நானூற்றின் பிற்பகுதியில் வரும் பாடல்கள் சிலவற்றில் புறத்திணை பற்றி நாம் முதல் நூறு பாடல்களில் பெறுகிற மனப்படிவமானது பிற்பகுதி பாடல்களுக்குப் பொருந்துமோ என்பதாகும். உதாரணமாக, "மாவாராதே, மாவாராதே" பாடல், அகத்துறைப் பட்டதா, புறத்துறைப் பட்டதா? கைம்மையின் கொடுமை பற்றிய இந்தப்பாடலை எவ்வாறு நோக்குவது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பிரச்னை, &lt;span style="font-weight:bold;"&gt;பத்துப்பாட்டு&lt;/span&gt;ப் பாடல்களை நோக்கும்போது மேலும் துல்லியமாகிறது. &lt;span style="font-weight:bold;"&gt;பட்டினப்பாலை&lt;/span&gt;யில் அகத்துறைக் கட்டமைவு புறத்துறைப் புகழ்ச்சிக்கான ஒரு வாய்ப்பான உத்தியாகி விடுகிறது. தவிர, &lt;span style="font-weight:bold;"&gt;திருமுருகாற்றுப்படை&lt;/span&gt;யை விட்டு நோக்கினாலும் &lt;span style="font-weight:bold;"&gt;சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை&lt;/span&gt; ஆகியவை &lt;span style="font-weight:bold;"&gt;பத்துப்பாட்டிலும்&lt;/span&gt; பிறகு &lt;span style="font-weight:bold;"&gt;கூத்தராற்றுப்படை&lt;/span&gt;யும் என நான்கு ஆற்றுப்படை இலக்கியங்கள் உள்ளன. இருப்பினும் &lt;span style="font-weight:bold;"&gt;தொல்காப்பியப் பொருளதிகாரத்தின்&lt;/span&gt; செல்வாக்கு காரணமாக இவற்றை நாம் ஆற்றுப்படை இலக்கிய வடிவங்களாகப் பார்ப்பதே இல்லை. &lt;span style="font-weight:bold;"&gt;தொல்காப்பியம்&lt;/span&gt; ஆற்றுப்படையை புறத்திணையில் வரும் பல்வேறு துறைகளுள் ஒன்றாகவே பட்டியலிடும் (&lt;span style="font-weight:bold;"&gt;புறத்திணையியல்&lt;/span&gt;: 20). &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் &lt;span style="font-weight:bold;"&gt;குறிஞ்சிப்பாட்டை&lt;/span&gt; நோக்கும்போது, அது திணைமரபை ஓர் இலக்கிய நியமமாக்கியுள்ளது, அதாவது, திணைமரபு ஏறத்தாழ இலக்கணமாகிவிட்ட நிலை அதில் தென்படுகிறது என்று கொள்ள முடியாதா! இவ்வாறு நோக்கும்போது சங்கப்பாடல்களின் ஊடே ஒரு வளர்ச்சிப்போக்குத் தென்படுவதை மறுப்பது சிரமமாகலாம். அவ்வாறு பார்க்க விரும்பாவிடினும், அகத்துறை, அரச புகழ்ச்சிக்கான ஓர் உத்தியாகக் காணப்படுவது நிச்சயமாகத் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆக,  கவிதையியல்-நிலைப்பட்ட ஒரு முக்கியமான சிக்கற்கட்டம் &lt;span style="font-weight:bold;"&gt;பத்துப்பாட்டு&lt;/span&gt;ப் பாடல்களில் ஒன்றினுள் தெரிகிறது. அகத்திணை மரபு, புறத்திணை மரபென கவிதையாக்க மரபை இருநிலைப்படுத்திப் பார்க்கும் &lt;span style="font-weight:bold;"&gt;தொல்காப்பிய&lt;/span&gt;ப் போக்குக் காரணமாகவும் அந்த நோக்கினை மீள வலியுறுத்தும் உரைமரபு காரணமாகவும் வாழ்வியற்போக்கின் மனித நிலை உணர்வுகளில்/உணர்கைகளில் புறத்தின் சோகங்கள் அகத்தின் எதிர்பார்ப்புக்களையும் அங்கலாய்ப்புக்களையும் அதிகரிப்பது பற்றியோ புறத்திணைத் தொழிற்பாடுகளின்போது வரக்கூடிய "அக நினைவுகள்" பற்றியோ அதிகக்கவனம் செலுத்தாது விடும்நிலை, செய்யுள் இலக்கண மரபின் ஒரு நெறியாகிறது. "மாவாராதே மாவாராதே" என்ற அக, புற இடையீட்டுச் சோகங்களின் தர்க்கரீதியான வளர்ச்சிகளுக்கு நம்முடைய செய்யுள்-இலக்கண மரபு அதிக நெகிழ்விடம் கொடுக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, தொகுத்துக்கூறினால், சங்க இலக்கியங்கள் என்று நமக்குத் தரப்பட்டுள்ளவற்றில் காணப்படும் அசைவியக்கத்தை நோக்கத் தவறிவிட்டோம் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது என்பது மிக முக்கியமான ஒரு வினாவாகும். இந்த இடத்தில்தான் &lt;span style="font-weight:bold;"&gt;தொல்காப்பியப் பொருளதிகாரம்&lt;/span&gt; மிக முக்கியமாகிறது. இதில் வரும் &lt;span style="font-weight:bold;"&gt;அகத்திணையியல், புறத்திணையியல்&lt;/span&gt; என்பவை, சங்க இலக்கியங்களை நாம் காணும் முறையை முற்றுமுழுதாகத் தீர்மானித்திருக்கின்றன. அது மாத்திரமின்றி அதற்கு மேல் சென்று பார்ப்பதற்கான இடத்தையும் தரவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் போலத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(இன்னும் வரும்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் - &lt;span style="font-weight:bold;"&gt;தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை&lt;/span&gt; பற்றி ஃப்ரெஞ்சு மொழியில் எழுதியிருக்கும் &lt;span style="font-weight:bold;"&gt;ழான்-லுக் ஷெவில்லார்&lt;/span&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-8873915214057678373?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/8873915214057678373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=8873915214057678373' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8873915214057678373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8873915214057678373'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/15.html' title='எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/StGocDwvaRI/AAAAAAAAC2A/gqCeuGOFyq4/s72-c/Jean-Luc+Chevillard.JPG' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9211419907577137437.post-8806695911468072248</id><published>2009-10-09T06:46:00.008+01:00</published><updated>2009-10-18T08:31:19.818+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செயல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Ss7WD0nh_BI/AAAAAAAAC1c/TuW7yMXr8CQ/s1600-h/Balagopal.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 370px; height: 247px;" src="http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Ss7WD0nh_BI/AAAAAAAAC1c/TuW7yMXr8CQ/s400/Balagopal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5390481165161462802" /&gt;&lt;/a&gt;ஆந்திரப்பிரதேசத்தைச் சார்ந்த பெயர்பெற்ற மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர், பேராசிரியர் கந்தலா பாலகோபால் அவர்களின் திடீர் மறைவு கேட்டுப் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;செய்தி கேட்டு இவருடைய இல்லத்தார், நண்பர்களுடன் தொடர்புகொண்டு பேசினேன். நேற்றிரவு ஹைதராபாத் அருகிலுள்ள வீட்டில் உணவு அருந்திய பிறகு இவருக்கு விக்கல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே மரணமடைந்துவிட்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பத்து நாட்களுக்கு முன்பு ஒரிஸ்ஸாவில் நான் பயணம் செய்துகொண்டிருந்தபோது இவருடன் தொலைபேச முடிந்தது. அப்போது ஏனோ தொலைத்தொடர்பு சட்டென்று அறுந்துவிட்டது. மீண்டும் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு பேச வேண்டும் என்று சென்னை அடைந்த பிறகு ஒருமுறை முயற்சித்தேன். அது நடக்காமலேயே போய்விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;பாலகோபால் அவர்களுக்கு வயது ஐம்பத்து ஏழு. மனைவி, தெலுங்குப் பத்திரிகையாளர் வசந்த லட்சுமி. பள்ளிப்படிப்பு இறுதியாண்டில் இருக்கும் ஒரே மகன், பிரபாத். &lt;br /&gt;&lt;br /&gt;இவரை நான் முதன்முதலில் சந்தித்தது எண்பதுகளின் முற்பகுதியில். அப்போது அறிமுகமானது கணித அறிஞர் மற்றும் ஆர்வலராக. சந்தித்தது எஸ்.வி. ராஜதுரையின் மேற்கு மாம்பலம் வீட்டில் என்பது நினைவிருக்கிறது. பிறகு &lt;strong&gt;Economic and Political Weekly&lt;/strong&gt;-யில் இவர் எழுதிய கட்டுரைகள் பற்றி அவ்வப்போது எனக்கும் இவருக்கும் கடிதத்தொடர்பு இருந்துவந்தது... &lt;br /&gt;&lt;br /&gt;பதினோரு ஆண்டுகள் முன்பு இந்திய அரசு அணுஆயுதப் பரிசோதனையில் மீண்டும் ஈடுபட்டதை அடுத்து நான் எழுதிய ஆங்கிலக்கட்டுரையை இவருக்கு அனுப்பியிருந்தேன். நான் லண்டன் வந்த பிறகு நாக்பூர் நகரில் நடந்த அணுஆயுதப்பரவல் தடுப்பு இயக்கப் பிரச்சாரத்தின்போதும் பிறகு ஐந்தாண்டுகள் முன்பு ஆந்திர அரசு-மாவோயிஸ்ட் அமைப்புக்கிடையில் பேச்சுவார்த்தை நடந்தபோதும் பிபிஸி ஆங்கில சேவையின் சார்பில் இவரைப் பேட்டி கண்டிருந்தோம். அண்மை ஆண்டுகளில் ஆம்னெஸ்டி அமைப்பில் பணியாற்றுவைதை அடுத்து இவருடன் நீடித்த தொடர்புண்டானது. இறுதியாக இவரைச் சந்தித்தது, கடந்த ஆண்டில். ஒரிஸ்ஸாவிலிருந்த போதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்ட்களை ஒடுக்குவது என்ற பெயரில் ஆந்திர அரசும் காவல்துறையும் நடத்திய எண்ணற்ற படுகொலைகளை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தியவர் பாலகோபால். ஆந்திரப்பிரதேச சிவில் உரிமைக் குழுவின் முக்கிய உறுப்பினராகச் செயல்பட்டவர். பலமுறை கைதாகியிருக்கிறார். ஒருமுறை ஆந்திரக் காவல்துறையில் நிழல்-அமைப்பான பச்சைப்புலிகள் இவரைக் கடத்தியுமிருக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;வாரங்கல் காகதீயப் பல்கலைக்கழகத்தில் கணிதப்பேராசிரியராக இருந்துவந்த இவர், சட்டம் பயின்று பத்தாண்டுகள் முன்பு தம்முடைய பதவியைத் துறந்து, வழக்கறிஞராகச் செயல்பட்டார். கடந்த பத்தாண்டுகளில் இப்படி எண்ணற்ற வழக்குகளில் வறிய மக்களின் சார்பில் ஆஜரான இவர், இதற்கென ஊதியம் பெற மறுத்துவந்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமை மீறல்கள் குறித்து இவருடைய &lt;strong&gt;மனித உரிமை மன்றம் (Human Rights Forum)&lt;/strong&gt; வெளியிடும் அறிக்கைகள் விரிவாகவும் துல்லியமாகவும் அமைந்திருக்கும். அண்மையில் சத்தீஸ்கரின் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இவர் எழுதிய அறிக்கை, மற்ற அமைப்புக்களின் கண்ணோட்டத்திலிருந்து மாறுபட்டு அமைந்திருந்ததை உணர முடிந்தது. ஒருபுறம் அரசின் வன்முறை மற்றும் மாவோயிஸ்ட் அமைப்பின் வன்முறை இரண்டையும் ஒருசேரக் கண்டிப்பதாகவும் மறுபுறம் ஆதிவாசிக்குழுக்கள் இடையே இந்த வன்முறையின் தாக்கத்தை அலசுவதாகவும் அமைந்தது, இந்த அறிக்கை. பிறகு இந்திய அரசின் மத்தியத் திட்டக்குழு இந்தியாவில் மாவோயிசத் தாக்கம் பற்றிக் கொணர்ந்த அறிக்கை, இவருடைய அறிக்கையின் பல அம்சங்களை ஏற்பதாக அமைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;என் தலைமுறையின் மனச்சாட்சியாக, வழிகாட்டியாக இருந்தவர்களில் ஒருவர் பாலகோபால். முனைவர் பட்டம் பெற்ற பிரமாதமான கணித அறிஞர். அதையெல்லாம் துறந்து ஆந்திரத்தின் வறிய மக்கள், படுகொலையாகும் இளைஞர்கள் மற்றும் ஆதிவாசிகளுக்காகத் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார் என்பதை யார்தான் மறக்க முடியும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9211419907577137437-8806695911468072248?l=nagarjunan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nagarjunan.blogspot.com/feeds/8806695911468072248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=9211419907577137437&amp;postID=8806695911468072248' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8806695911468072248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9211419907577137437/posts/default/8806695911468072248'/><link rel='alternate' type='text/html' href='http://nagarjunan.blogspot.com/2009/10/blog-post_09.html' title='மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு'/><author><name>நாகார்ஜுனன்</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='03682225414971733423'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Ss7WD0nh_BI/AAAAAAAAC1c/TuW7yMXr8CQ/s72-c/Balagopal.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>8</thr:total></entry></feed>