tag:blogger.com,1999:blog-91437642009-02-21T17:42:46.915+03:00சுடர்செஞ்சுடரின் சிந்தனைகள்சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9143764.post-1144393090258991542006-04-07T09:58:00.000+03:002006-05-11T01:04:12.080+03:00எவரோ கல்லெறிந்து..<a href="http://www.idhuthanislam.com/SIRUKADHAI/kallerinthu.htm">எவரோ கல்லெறிந்து..</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-114439309025899154?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143764.post-1144232299954188352006-04-05T13:18:00.000+03:002006-04-05T18:31:01.323+03:00இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..<a href="http://www.idhuthanislam.com/Kirusthuvam/iyesupage1.htm">இயேசுவுக்கு நேர்ந்ததென்ன.. தொடர்</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-114423229995418835?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143764.post-1144232047716450112006-04-05T13:14:00.000+03:002006-04-05T18:35:04.706+03:00உலகத் தமிழர்களுக்கு வழிகாட்டும் தளம்<a href="http://www.idhuthanislam.com/">உலகத் தமிழர்களுக்கு வழிகாட்டும் தளம்</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-114423204771645011?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143764.post-1113191578228629012005-04-11T06:46:00.000+03:002005-04-11T06:52:58.236+03:00அறிவு இயலாமை வன்முறை (2)கொஞ்சம் அறிவு - கொஞ்சம் இயலாமை - கொஞ்சம் வன்முறை <br /><br />அரசியல் இஸ்லாம் என்ற தலைப்பில் நேசக்குமாரர் எழுதியுள்ள கருத்துக்களின் நிலைப்பாட்டை பார்த்து வருகிறோம். அவரது கடந்தக்கால கட்டுரைகளில் இருந்த சற்றேனும் நியாய உணர்வுக் கூட இந்தக் கட்டுரையில் இல்லை. இந்தக் கட்டுரையை 'இயலாமை' அல்லது 'வன்முறை' என்ற ஏதோ ஒரு மனத் தூண்டலே அவரை எழுத வைத்துள்ளது.<br /><br />அரசியல் இஸ்லாம் குறித்து அவர் வைத்துள்ள வாதங்களை பார்ப்போம்.<br /><br /><em><strong>2. அல்லாஹ்வால் அனுப்பப் பட்ட (இறுதி) இறைத்தூதர் முகமது அவர்கள்.<br /><br />மேலே கண்ட அல்லாஹ்வையும் விட அதிக மரியாதைக்குரியவராக முகமது நபி அவர்கள் கருதப் படுகிறார்கள். அல்லாஹ்வை அவன் இவன் என்பதைக் காணலாம். ஆனால், முகமது நபியவர்களைப் பற்றி எந்தவொரு கட்டத்திலும் சிறிது கூட மரியாதைக் குறைவான வார்த்தைகள் குறைகூறல்கள் எழும்பா. பாகிஸ்தானில் அல்லாஹ்வைத் திட்டினால் ஆயுள் தண்டனை, நபிகள் நாயகத்தைத் திட்டினால் மரண தண்டனை என்பதெல்லாம் இந்த அரசியல் இஸ்லாத்தின் நீட்சிதான்(இது குறித்து மரத்தடியில் முன்பு விரிவாக எழுதியுள்ளேன். பழைய பதிவுக்கு சென்றால் இவற்றைக் காணலாம்). அல்லாஹ்வையும் விட அதிக சக்திவாய்ந்தவராக, கடவுளும், வானவர்களும் கூட வணங்குபவராக நபிகள் நாயகம் சித்தரிக்கப் படுகிறார்.</strong></em><br /><br />இயலாமை.<br /><br />உலக அளவில் மக்கள் மனங்களை வென்றெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கொள்கையை விமர்சிக்கும் போது அந்தக் கொள்கையின் அடிப்படைகளை விளங்கி அதில் தவறிருந்தால் விமர்சிக்கலாம். அதற்கு இயலாவிட்டால் அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட உலக மக்களையாவது ஒரு பார்வை பார்த்து விட்டு விமர்சிக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாத விமர்சனம் எந்த விதத்திலும் வலுப் பெறாது. நேசக்குமாரன் வலுப்பெறாத விமர்சனத்தையே வைத்துள்ளார். <br /><br />அல்லாஹ்வை 'அவன்' 'இவன்' என்று கூறுகிறோமாம். முஹம்மத் அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது இப்படி குறிப்பிடாமல் மிக மரியாதையுடன் குறிப்பிடுகிறோமாம். இது இஸ்லாத்தின் அரசியல் பலத்தைக் காட்டுகிறதாம். அல்லாஹ்வை விட சக்தி வாய்ந்தவராகவும் கடவுளும் - வானவர்களும் கூட வணங்கக் கூடியவராக முஹம்மத் அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்களாம். அனைத்தையும் கற்றுணர்ந்தவர் போல அவ்வப்போது இணையத்தள முகவரிகளையும் - பல புத்தகங்களையும் மேற்கோள் காட்டும் நேசக்குமாரர் குறைந்தப் பட்சம் அரபுமொழியின் சில வார்த்தைகளையாவது கற்றிருந்தால் - பிறரிடம் கேட்டு தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் உளறி கொட்டாமல் இருந்திருப்பார்.<br /><br />அரபு மொழியில் தமிழ் மொழியில் உள்ள மரியாதை வார்த்தைகள் போன்று கிடைப்பது மிக மிக அறிது. தமிழில் 'அவன்' 'அவர்' என்று நாம் இரண்டாக பிரிக்கும் இரு வார்த்தைகளுக்கு அரபு மொழியில் இரு வார்த்தைகள் கிடைக்காது. அவன் என்றாலும் அவர் என்றாலும் அதை குறிக்க அரபு மொழியில் 'ஹுவ' என்ற ஒரே வார்த்தைதான் உள்ளது. இறைவனை 'அவன்' என்று நாம் குறிப்பிடுகிறோம் இதற்கும் அரபுவில் 'ஹுவ' என்ற வார்த்தைதான் கிடைக்கும். முஹம்மதை 'அவர்' அல்லது 'அவர்கள்' என்று குறிப்பிடுகிறோம் இதற்கும் அரபுவில் 'ஹுவ' என்ற அதே வார்த்தைதான்.<br /><br />அரபு மொழியில் தந்தை மகனை பற்றி குறிப்பிடும் போதும், மகனோ, மகளோ தன் தந்தையைப் பற்றி குறிப்பிடும் போதும் 'ஹுவ' (இதன் நேரடிப் பொருள் அவன் - அவர்) என்றே குறிப்பிடுவார்கள். அவ்வளவு ஏன் தமிழ் வழக்கில் மனைவி தன் கணவனை சுட்டிக் காட்டும் போது பரவலாக 'அவங்க' என்ற மரியாதைக் குறியீடை பயன்படுத்துகிறார்கள். அரபு மொழிக்கு அவங்க என்பதெல்லாம் தெரியாது. அங்கு ஒரு பெண் தன் கணவனை சுட்டிக் காட்டும் போதும் 'ஹுவ' என்ற வார்த்தையையே பயன்படுத்துவாள்.<br /><br />இதை புரிந்துக் கொள்வதற்காக இரண்டு வசனங்களைப் பார்ப்போம்.<br /><br />(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (அல் குர்ஆன் 112:1) <br /><br />உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல் குர்ஆன் 53:3-5)<br /><br />இந்த இரண்டு வசனங்களில் முதல் வசனம் இறைவனைப் பற்றியும் இரண்டாவது வசனம் முஹம்மதைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அந்த வசனங்களில் அவன் - அவர் என்று மொழியாக்கப்பட்டுள்ள இடங்களில் 'ஹுவ' என்ற பதமே வந்துள்ளது. அவன் - அவர் என்ற இடங்களை மாற்றி மொழிபெயர்க்க அரபிமொழி வழக்கில் தடையொன்றும் இல்லை. <br /><br />(நபியே) நீர் கூறும் அல்லாஹ் அவர் ஒருவரே! என்று முதல் வசனத்தையும்,<br /><br />உங்கள் தோழன் வழிகெட்டுவிடவுமில்லை. தவறான வழியில் செல்லவுமில்லை. அவன் தன் இச்சைப்படி எதையும் பேசுவதில்லை. அது அவனுக்கு வஹிமூலம் (நேசக்குமாரன் சொல்வது போல இறை ஆவேசம் மூலம்) அறிவிக்கப்படுவதேயன்றி வேறில்லை என்று இரண்டாவது வசனத்தையும் மொழியாக்கினால் தடையொன்றும் இல்லை. <br /><br />ஆனால் யாரும் அப்படி மொழியாக்குவதில்லை. இறைவன் நாட்டம் இருந்து நாளைக்கு நேசக்குமாரரே இஸ்லாத்தை எற்று குர்ஆனை மொழியாக்கம் செய்யும் சூழ்நிலை வந்தாலும் அவர் கூட அவன் - அவர் ஆகியவற்றை இடமாற்றி போட்டு மொழி பெயர்க்க மாட்டார். மொழிப் பெயர்க்கக் கூடாது என்பதல்ல. அவ்வாறு மொழி பெயர்ப்பது நாகரீகமல்ல என்று உணர்வார். <br /><br />இறைவனை 'அவன்' என்று குறிப்பிடுவது எதனால்?<br /><br />இறைக் கொள்கை விஷயத்தில் முஸ்லிம்களாகிய நாம் தெளிவான கண்ணோட்டத்தில் இருக்கிறோம். மரியாதை என்றப் பெயரில் இறைத் தன்மையின் இடற்பாடு ஏற்படுவதை நாங்கள் ஒரு போதும் செய்ய மாட்டோம். <br /><br />மரியாதைக்கும் தனித்தன்மைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொண்டால் தெளிவுப் பெற விரும்புவோர் தெளிவு பெற்று விடுவார்.<br /><br />நேசக்குமாரரையே உதாரணமாக்குவோம்.<br />மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு 'கிறுக்கன்' நேசக்குமார் அவர்களே... என்று யாராவது குறிப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மதிப்பு - மரியாதை - அவர்கள் என்ற மதிப்பான அனைத்து வார்த்தைகளும் தனக்கு கிடைத்து விட்டது என்று அவர் மனம் மகிழ்வாரா...? <br /><br />அதே சமயம் இன்ன பிறர் இப்படி குறிப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.<br /><br />நேசக்குமாரன் நல்ல சிந்தனையாளன் எதையும் தனித்தன்மையுடன் அணுகக் கூடியவன் என்று குறிப்பிடுகிறார்கள் என்றால் இதில் அவன் - அவன் என்ற வார்த்தை வருகிறது அதனால் அவர்கள் என்னை கேவலப்படுத்தி விட்டார்கள் என்று முடிவெடுத்து முகம் சுளிப்பாரா...? <br /><br />தனித்தன்மை கெட்டுப்போகும் விதத்தில் வெளிப்படும் மரியாதை வார்த்தைகள் உண்மையில் மரியாதை வார்த்தைகளாக இருக்கவே முடியாது. அது தனித்தன்மைகளை கொச்சைப்படுத்தும் கேவலமான வார்த்தைகளாகவே காட்சியளிக்கும்.<br /><br />தனித்தன்மையில் தனக்கு நிகரில்லாமல் இருக்கக் கூடியவன் இறைவன். அவனது தனித்தன்மையின் சாயலில் கூட பிறருக்கு பங்கில்லை என்பதை தெளிவாக குர்ஆனில் உணர்த்துபவன் இறைவன். அவனது தனித்தன்மைகளை குறிப்பிட 'அவன்' என்ற வார்த்தையே பொருத்தமானதாகும். முஸ்லிம்கள் இறைவனை தமிழில் 'அவர்' என்று குறிப்பிடுவார்களானால் கிறிஸ்த்துவர்கள் இயேசுவைக் குறிப்பிடும் 'அவர்' என்ற சாயல் இங்கு படியும். அவரைத் தான் முஸ்லிம்களும் குறிப்பிடுகிறார்களோ என்ற பார்வைக் கூட உருவாகலாம். இது அவனது தனித்தன்மைக்கு இடற்பாடுகளை ஏற்படுத்த வல்லது என்பதால் தான் முஸ்லிம்கள் இறைவனை அவர் என்று குறிப்பிடுவதில்லை. <br /><br />அவன் என்பது கேவலமான வார்த்தை இல்லையென்றால் அதே வார்த்தையால் முஹம்மதையும் குறிப்பிடலாமே.. என்று நேசக்குமாரன் குறுக்கு விசாரணை செய்யலாம். "வள்ளுவனையும் - கம்பனையும் ்அவன்' என்று குறிப்பிடுவது போன்று உன்னையும் நான் 'அவன்' என்று தான் குறிப்பிடுவேன்" என்று நேசக்குமாரனுடைய குழந்தை (திருமணம் முடிந்து குழந்தை இருந்தால்) குறிப்பிட்டால் அதை அவர் ஆமோதிக்க மாட்டார். வள்ளுவனையும் - கம்பனையும் 'அவன்' என்று குறிப்பிட்டு பாடம் நடத்தும் ஆசிரியரை மாணவர்கள் அதே அடைமொழியுடன் அழைத்தால் அதை ஒருவர் கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இதற்கு மொழி வழக்கில் மக்களிடம் வேறூன்றிப் போன மரியாதைக் குறியீடுகளே காரணமாகும். மரியாதைக் குறியீடுகள் அழிந்துப் போய் அவன் என்ற வார்த்தையே புழக்கத்திற்கு வந்து விட்டால் அப்போது யாரும் யாரையும் வித்தியாசமாக எண்ண மாட்டார்கள்.<br /><br />"அல்லாஹ்வை விட சக்தி வாய்ந்தவராக, கடவுளும் வானவர்களும் கூட வணங்குபவராக நபிகள் நாயகம் சித்தரிக்கப்படுகிறார்" என்று கூறுகிறார் நேசக்குமார். நண்பரே ஏன் இப்படி பொய்யான சிந்தனையை உரமிட்டு உமிழ்கிறீர்கள். <br /><br />அந்த இறைத்தூதரை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற உணர்ச்சிவசப்பாடே உங்களிடம் அதிகமாகத் தெரிகிறது (குறிப்பாக இந்தக் கட்டுரையில்)<br /><br />'தான் இறைவனின் அடிமைதான்' என்பதை செயல்பாடுகளின் வழியாகவும் வார்த்தைகளாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர்த்தி வாழ்ந்துக் காட்டிய மாமனிதர் முஹம்மத் அவர்கள். தன்னை ஏற்றுக் கொண்டவர்களில் யாரொருவரும் தனி மனித வழிபாட்டிற்கு இரையாகி விடக் கூடாது. தன்னை உட்பட எந்த மனிதனுக்கும் வழிபாடு நடத்தி விடக் கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாகவும் கண்ணும் கருத்துமாகவும் இருந்தவர் அந்த மாமனிதர்.<br /><br />தான் இன்று செய்துக் கொண்டிருக்கும் அதே பணியை தனக்கு முன் இஸ்ரவேல் சமூகத்தாரிடம் செய்வதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் இயேசு அவர்கள் மதகுருக்களாலும் - மக்களாலும் வணங்கக் கூடிய கடவுளாக ஆக்கப்பட்டு விட்டதை பார்க்கிறார்கள். இயேசு கடவுளோ கடவுளின் குமாரரோ அல்ல என்று தொடர்ந்து எச்சரித்து வந்த அதே வேலையில் 'மரியாளுடைய மகன் இயேசுவை விட என்னை சிறந்தவன் - உயர்ந்தவன் என்று சொல்லி விடாதீர்கள்" என்ற கண்டிப்பையும் தான் இறக்கும் வரை தொடர்ச்சியாக முன் வைக்கிறார்கள்.<br /><br />அருகிலிருக்கும் நாடுகளுக்கு வியாபார நிமித்தமாக சென்ற முஆத் என்ற நபித்தோழர் அந்த நாட்டு மக்கள் தனது மன்னருக்கு சிர வணக்கம் செய்வதை பார்க்கிறார். 'இந்த சிற்றரசனை விட நாம் ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் பல மடங்கு உயர்ந்தவர்கள் அவர்களுக்கு நாம் ஏன் இவ்வாறு மரியாதை செய்யக் கூடாது என்று தனக்குள் முடிவு செய்துக் கொண்டு போன காரியம் முடிந்ததும் ஊர் (மதீனா) திரும்புகிறார்கள். இறைத்தூதரை சந்தித்து தான் கண்ட காட்சியையும் அதிலிருந்து தனக்கு உதித்த எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இதை கேட்டதும் இறைத்தூதரின் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரிகிறது. "முஆதே! நான் இறந்து விட்டால் எனது மண்ணறையில் (கப்ரில்) வந்து வணங்குவீரா.. என்று கேட்கிறார்கள். 'வணங்கமாட்டேன்' என்று முஆத் பதிலளிக்கிறார். ஆம்! அதே போன்று தான் உயிரோடு இருக்கும் போதும் எனக்கு சிர வணக்கம் செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்தலாம் என்றிருந்தால் கணவனுக்கு மனைவியை சிரம்பணிய சொல்லி இருப்பேன் ஆனால் அதற்கு கூட அனுமதியில்லை" என்று கூறினார்கள்.<br /><br />மனித இயல்புடன் அவர்களிடம் சில நேரங்கள் வெளிப்பட்ட சிறு சிறு தவறுகளைக் கூட இறைவன் சுட்டிக் காட்டி கடினமாக எச்சரித்துள்ளான். குர்ஆனை ஆழ்ந்து படிப்பவர்களுக்கு இத்தகைய சம்பவங்கள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடியும்.<br /><br />தான் இறைவனின் அடிமை என்பதை மக்களுக்கு உணர்த்தி அதில் இறுதி வரை வெற்றிக் கண்டவர் உலகில் முஹம்மத் அவர்கள் ஒருவராக மட்டும் தான் இருக்க முடியும். அந்த அடிமைத் தனத்தை நிலைப்பெற வைத்ததால் தான் அவருக்கு கப்ர் வழிபாடோ, சிலையோ, படமோ, வடிவமோ இன்றுவரை உலகில் இல்லாமல் இருக்கிறது. அத்தகைய ஒரு இறைத்தூதரைப் போய் 'அல்லாஹ்வும் வானவர்களும் கூட வணங்குபவராக அவர் சித்தரிக்கப்படுகிறார்' என்று எழுதுவதற்கு நீங்கள் (நேசக்குமாரர்) வெட்கப்பட்டிருக்க வேண்டும்.<br /><br /><br />இனி தொடர்ந்து 'நேசக்குமாரர் அரசியல் இஸ்லாமா'க எடுத்து வைத்துள்ள இன்னும் சில கருத்தோட்டங்களைப் பார்ப்போம்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-111319157822862901?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-9143764.post-1112473725012156662005-04-02T23:18:00.000+03:002006-05-05T13:56:25.280+03:00கொஞ்சம் அறிவு, இயலாமை, வன்முறை<p align="left"><span style="color:#996633;"><strong>கொஞ்சம் அறிவு, கொஞ்சம் இயலாமை, கொஞ்சம் வன்முறை.</strong></span><br /><br />அரசியல் இஸ்லாம் ஆன்மீக இஸ்லாம் என்ற தனது கட்டுரையில் தலைப்பில் கூட அரசியலையே முதன்மைப்படுத்தி இஸ்லாத்தின் ஆன்மீக பலத்தை அரசியல் பலமாக சித்தரிக்க முற்பட்டுள்ளார் நேசக் குமார்.<br />தனது தகுதிக்கு ஏற்றார்போலதான் சிந்திக்க முடியும் என்பதை இக்கட்டுரையின் மூலம் மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தியுள்ளார் நண்பர் நேசக்குமார்.<br /><br />சந்திக்கும் தொலைவில் அவர் (போன்றோர்) இருந்தால் கலந்துரையாடலுக்கோ, நேர்கானலுக்கோ ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம். அதற்கு வழியில்லை என்றே நினைக்கிறேன்.<br /><br />இஸ்லாம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கமல்ல - 'அரசியலிலிருந்து மதத்தை பிரித்து விடுங்கள்' என்று சொல்லி மதத்தை ஊனப்படுத்துவதையோ, அரசியல் ரவுடித்தனங்களை கண்டுக் கொள்ளாமல் மதம் ஒதுங்கி நின்று "மறைமுக ஆசிர்வாதம்" செய்து மகிழ்வதையோ இஸ்லாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது.<br /><br />இஸ்லாத்தின் ஆன்மீக பலம் நூறு சதவிகிதம் என்றால் அது வழிகாட்டும் அரசியல் பலம் என்பதும் வலுவானதாகத்தான் இருக்கும்.<br />அரசியலை சொல்லாத எந்த ஆன்மீகமும் ஆட்சியாளர்களை, அதிகாரம் பெற்றவர்களை 'வல்லாதிக்க'த்தின் பக்கமே இழுத்து சென்றுக் கொண்டிருக்கும். அரசியலை சொல்லாத ஆன்மீக மதங்களை ஏற்றவர்கள் ஆட்சிப் புரியும் நாடுகளின் 'ஆட்சியாளர்கள் சிலரால் தான்' உலகம் அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறதே தவிர நேசக்குமாரன் எடுத்துக்காட்டும் ஆப்கானிஸ்தான் - ஈரான் - ஈராக் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களால் உலகின் அமைதி கெட்டுப்போகவில்லை. ஆதாரங்கள் இல்லாத போதும் அனைவரும் பாடும் பஜனையை நாமும் பாடினால் அது உண்மையாகி விடும் என்று நேசக்குமாரர்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு இயலாவிட்டால் குறைந்த பட்சம் தாம் யார் என்பதை பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளவாவது செய்யட்டும்.<br /><br />இனி நேசக்குமாரின் வாதங்களை பார்ப்போம்.<br /><br /><em><span style="color:#cc0000;">அரசியல் இஸ்லாம்ஆன்மீக இஸ்லாத்தின் அடித்தளம் உருவமிலா ஏக இறைக் கொள்கை என்றால், அரசியல் இஸ்லாத்தின் அடித்தளமாக விளங்குவது நபிவழிபாடு. இந்த அரசியல் இஸ்லாத்தை நபிகளார் முன்மொழிந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அப்பட்டமான ஆன்மீக மோசடி என்று அந்தக் கால கிறித்துவர்களும், யூதர்களும் கூறிய குற்றச் சாட்டுக்களிலிருந்து, இன்று கூறப்படும் அச்சூழலுக்கேயான நிர்ப்பந்தங்கள் என்பது வரை ஏகப் பட்ட காரணங்கள் இதன் தோற்றுவாய் என அறிஞர்களால் இன்றளவும் விவாதிக்கப் பட்டுவருகின்றன.<br /></span></em><br />உருவமில்லா இறைக் கொள்கை என்று இஸ்லாத்தில் எந்தக் கொள்கையும் இல்லை. கடவுளை யாரும் நேரில் காணாததால் அவன் உருவத்தை யாரும் கற்பனை செய்யாதீர்கள் என்பதுதான் இஸ்லாம் முன் வைக்கும் வாதம். உருவமற்ற சூனியத்தை எந்த முஸ்லிமும் வணங்கவில்லை. இறைவன் அவனுக்கே உரிய தன்மைகளுடனும் - உருவத்துடனும் இருக்கத்தான் செய்கிறான் அவனது உருவம் மனித சிந்தனைக்கோ - கற்பனைக்கோ உட்படாதது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. (மனித சிந்தனை வடிவமைத்துள்ள கடவுளைப் பாருங்கள். அந்த கற்பனைகளில் கடவுள் எத்துனை கேவலப்படுத்தப்பட்டுள்ளான் என்பது புரியும்)<br /><br />முஹம்மத் அவர்கள் முன் மொழிந்தது அப்பட்டமான ஆன்மீக மோசடி என்று யூதமும் - கிறிஸ்த்துவமும் சொன்னதும் இன்றைக்கும் சொல்வதும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் முஹம்மத் அவர்களோ அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களோ யூதர்களுக்கு வந்த வழிகாட்டியையோ (மோசே) கிறிஸ்த்துவர்களுக்கு வந்த வழிகாட்டியையோ (இயேசு) ஒருபோதும் குறை சொன்னதே கிடையாது.<br /><br /><strong>முஹம்மத் அவர்கள் வருவதற்கு முன் இயேசு முன் மொழிந்த ஆன்மீகத்தைக் கூட அவர் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் சவுல் உட்பட 'இயேசுவின் ஆன்மீக மோசடி' என்றே வர்ணித்தார்கள் என்பதை நேசக்குமார் நினைவுக் கூற வேண்டும்.<br /></strong><br /><span style="color:#cc0000;"><em>'இஸ்லாமியர்களிடையே கூட முற்போக்கானவர்கள் என தம்மை கருதிக் கொள்வோர், அரசியல் இஸ்லாத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தைக் குறித்து இப்போதெல்லாம் கருத்து தெரிவிப்பதை பார்க்க முடிகிறது'</em></span><br /><br />இன்றைக்கு உலகில் நடக்கக் கூடிய அரசியலில் எந்த அரசியலை 'இஸ்லாமிய அரசியல்' என்று இஸ்லாமிய முற்போக்குவாதிகள் கருதுகிறாரகள் என்பதை நேசக்குமார் சற்று புரியும் படி விளக்கட்டும்.<br /><br /><em><span style="color:#cc0000;">அரசியல் இஸ்லாம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். அரசியல் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாமல் அடிப்படைவாத முஸ்லிம்களின் பேச்சை, செயல்பாட்டை, சிந்தனா முறையை புரிந்து கொள்ள முடியாது.அரசியல் இஸ்லாத்தின் நம்பிக்கைகள்இந்த அரசியல் இஸ்லாம் ஒப்புக் கொள்ளும் 'உண்மையான முஸ்லிம்கள்' கீழ்க்கண்ட நம்பிக்கைகளை உடையவர்கள்:<br />1. அல்லாஹ் எனும் ஏக இறைவனை மட்டுமே உலகம் முழுக்க உள்ளோர் வணங்க வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், 'அல்லாஹ்' என்ற அரபிப் பெயரில் - திருக்குரான் மற்றும் ஹதீதுகள் வர்ணிக்கும் குணாதிசயங்களுடன் மட்டுமே இக்கடவுளை வணங்க வேண்டும். கடவுள் என்றோ, பிரும்மா, சிவன், ஜெஹோவா, இயேசு, சாமி, தெய்வம் போன்ற பெயர்களில் கூட இந்த ஏக இறைவனை வணங்கக் கூடாது. இந்த கடவுளுக்கு திருக்குரான் கற்பிக்கும் குணங்களையே வரித்து வணங்க வேண்டும். இந்த அல்லாஹ்வை கருணையுள்ள ஒரு கடவுளாகவோ(கிறிஸ்துவர்களைப் போன்று), தாயுணர்வு நிரம்பிய ஒரு அன்புத் தெய்வமாகவோ(இந்துக்களைப் போன்று), விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாகவோ (இந்துக்களில் ஒரு பகுதியினர் கருதுவது போன்று) இம்மாதிரி, தமக்கு பிடித்த, வேண்டுகிற குணாதிசயங்களோடு உள்ள கடவுளாக உருவகப் படுத்தி வணங்கக் கூடாது.(திருக்குரான், இந்த 'அல்லாஹ்' வை ஒரு பொறாமை குணம் கொண்ட, கடுமையான ஆணாதிக்க அரபிக் கடவுளாக உருவகம் செய்கிறது). கவனித்துப் பார்த்தால், இதை மூடி மறைத்து அழகிய வாதங்களுடன், தர்க்க நியாயங்களுடன் இஸ்லாமிஸ்டுகள் நியாயப் படுத்துவார்கள்.<br /></span></em><br />இந்த வாதங்கள் நேசக்குமாரனின் இயலாமையா.. அல்லது வன்முறைக்கு வித்திடும் முதல் படியா என்பதை புரிந்துக் கொள் சற்று கடினமாகத்தான் இருக்கின்றது.<br /><br />'மொழி என்பதும் அதன் வார்த்தைகள் என்பதும் ஒன்றைப் புரிந்துக் கொள்வதற்காக உதவிடும் ஒரு கருவியாகும்' தமிழ் என்பது எப்படி ஒரு மொழியோ அதேபோன்றுதான் அரபும். 'இலாஹ்' என்பதும் 'அல்லாஹ்" என்பதும் அந்த மொழியில் ஒரு பரம்பொருளை சுட்டும் வார்த்தைகளாகும். முஹம்மத் அந்த மண்ணில் தனது பிரச்சாரத்தை துவங்குவதற்கு முன் அந்த மக்களிடம் இருந்த ஆன்மீக நம்பிக்கையும் அந்த நம்பிக்கைக்காக அந்த மக்கள் வெளிப்படுத்திய வார்த்தையும் அல்லாஹ் என்றே இருந்தது. </span></span></span></p><p align="left"><br />முஹம்மத் வந்து இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தவில்லை. <strong>அரபு மொழி பேசக் கூடிய யூத - கிறிஸ்த்துவர்கள் கூட அன்றிலிருந்து இன்றுவரை கடவுளை குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையே பயனடுத்தி வருகிறார்கள். தமிழக கிறிஸ்த்துவர்களுக்கு வேண்டுமானால் 'அல்லாஹ்' என்ற வார்த்தை முஸ்லிம்களின் வார்த்தையாகத் தெரியலாம். அரபு நாட்டு கிறிஸ்த்தவர்களுக்கு முஹம்மத் அவர்கள் வருவதற்க முன்பே அது மிக பரச்சயப்பட்ட வார்த்தையாகும்.</strong><br /><br />முஸ்லிம்கள், நேசக்குமார் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளால் அல்லாஹ்வை குறிப்பிடுவதில்லை காரணம் என்ன?<br /><br />பெற்றெடுத்தவள் தாய், தாய் என்ற அந்தஸ்த்தை உலகில் ஒருவளுக்கு மட்டும் தான் கொடுக்க முடியும். அவளை தாய் என்றோ, ஆத்தாள் என்றோ, அம்மா என்றோ அவளது கண்ணியம் குறையாத எந்த வார்த்தையாளும் குறிப்பிடலாம். ஆனால் பெற்றத்தாயை யாரும் மகள் என்றோ, சின்னாத்தாள் என்றோ, சகோதரி மனைவி என்றோ குறிப்பிட முடியுமா..? மகள், சகோதரி, சிறிய தாய் மனைவி போன்ற வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இருக்கலாம் ஆனால் அந்த வார்த்தைகளிலிருந்து பெறப்படும் பொருள் பெற்றத் தாயுடன் பொருந்திப்போகக் கூடியதல்ல. அந்த வார்த்தைகள் சுட்டும் தன்மைகள் பெற்றத்தாயின் தன்மைகளை ஒத்திருக்கக் கூடியவையல்ல.<br /><br />இப்போது சிந்திப்போம்.<br /><br />மாற்றுக் கொள்கையுள்ள மதத்தவர்கள் 'பிரும்மா, சிவன், ஜெஹோவா, இயேசு, சாமி, தெய்வம்" என்றெல்லாம் கடவுளை குறிப்பிடுகிறார்கள் என்று மேலோட்டமாக பூசி மொழுகாமல் அந்த வார்த்தைகளிலிருந்து கடவுள் குறித்து அவர்கள் விளங்கியுள்ள பொருளும் அதன் தன்மைகளும் என்ன என்பதை பார்க்கும் போது அவர்கள் கடவுளாக விளங்கியுள்ள அந்த சிந்தனை வெளிப்பாடுகள் கடவுள் என்ற ஒரு சக்தி இருந்தால் அந்த சக்திக்கு எந்த விதத்திலும் பொருந்திப் போகக் கூடியவையாக இருக்கவேயில்லை. <span style="color:#3333ff;">(இதுபற்றி இறைவனும் அவன் தன்மைகளும் என்ற கட்டுரையில் நாம் விரிவாக விளக்கியுள்ளோம்) </span>இறைவனுக்கு எந்தத் தகுதிகளெல்லாம் இருக்கக் கூடாதோ அந்தத் தகுதிகளுடன் அந்தத் தகுதியை குறிக்கும் பெயர்களுடன் பிறர் இறைவனை கற்பனை செய்துக் கொள்வதையே முஸ்லிம்களும் கடைபிடிக்க வேண்டுமாம். முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ள அந்த இறைவனிடம் கருணையுள்ளம் இல்லையாம். (இயேசுவுக்கு (அதாவது இயேசுவாக கருதப்படுபவருக்கு) ஓட்டு) முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்ட இறைவனிடத்தில் தாயன்பு இல்லையாம் (தாயாக சித்தரிக்கப்படும் பல சிலைகளுக்கு ஓட்டு) இப்படியெல்லாம் சிந்தனைப்பூர்வமாக? ஆராய்ச்சிப்பூர்வமாக? எழுதிக் கொண்டே போகிறார் நேசக்குமார்.<br /><br /><strong>பெண் என்ற ஒரு வார்த்தையை மட்டும் பயின்றுவிட்டு தாயையும் தாரத்தையும் ஒரே இயல்புடன் பார்க்கும் சிந்தனை இந்த சிந்தனை. இவளும் பெண்தான் அவளும் பெண்தான் என்று தாரத்திடம் கிடைக்க வேண்டியதை தாயிடம் எதிர்பார்க்கும் சிந்தனை இந்த சிந்தனை.<br /></strong><br />பெண் என்றாலும் தாயும் தாரமும் வெவ்வேறானவர்கள் என் தேவைக்காக நான் இருவரையும் சம கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறு என்று ஒருவேளை நேசக்குமாரன் சிந்தித்தால் 'நீ பிற்போக்கான சிந்தனையில் மூழ்குகிறாய்' என்று அவரது உள் மனம் அவரை கிண்டல் செய்தாலும் செய்யும்.<br /><br />இறைவனுக்கு இருக்க வேண்டிய அத்துனை பண்புகளும், தன்மைகளும் திருக்குர்ஆனில் ஆயிரக்கணக்கான வசனங்களில் சொல்லப்படிருந்தும் - திருக்குர்ஆனின் ஆரம்ப வசனங்களிலேயே இறைவன் அளவற்ற அருளாளன் - நிகரற்ற அன்புடையோன் என்று அவனது கருணையும் - இரக்கமும் வெளிப்பட்டிருந்தும் நேசக்குமார் அந்த இறைவனை பொறாமைக் காரனாகவும், ஆணாதிக்க வெறிபிடித்தவனாகவும் சித்தரிக்கிறார் என்றால் சர்ச்சை நாயகனாக தன்னை சித்தரித்துக் கொள்வதற்கே அவர் கீ போர்டில் கை வைக்கிறார் என்பது புலப்படுகிறது.<br /><br />அல்லாஹ்வை விட அவனது தூதரான முஹம்மத் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா... அரசியல் இஸ்லாம் என்று நேசக்குமாரர் எழுதியுள்ள வாதங்கள் என்ன.. தொடர்ச்சியாகப் பார்ப்போம்.<br /></p></span></span></span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-111247372501215666?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9143764.post-1111833979276639642005-03-26T13:33:00.000+03:002005-03-27T12:31:22.306+03:00முஸ்லிம் பெண்கள் - வணங்கும் உரிமைகள்.<span style="color:#3333ff;">முஸ்லிம் பெண்கள் வணங்கும் உரிமைகள்</span><br /><br />பிற சில மதங்களில் பெண்களை இரண்டாம் தர பிறவிகளாக பாவித்து அவர்களுக்குரிய உரிமைகளைக் கண்டுக் கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளி வைத்துள்ளதை அளவு கோலாக கொண்டு முஸ்லிம்களில் பலர் தம் பெண்களை அதே நிலையில் வைத்துள்ளார்கள்.<br /><br />பெண்களுக்குக்கென்று அவர்களுக்கு தேவையான உரிமைகள் குறைவில்லாமல் இங்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் பெருவாரியான ஆண்கள் அது குறித்தெல்லாம் கவலைப்படுவதே இல்லை. இது அவர்களிடம் இஸ்லாமிய அறிவின்மைக்குரிய அடையாளங்களாகும். முஸ்லிம் பெண்களும் கூட அதே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் விழிப்புணர்வு பெற்ற சில பெண்கள் தங்களின் உரிமைகளை முறையாக பெறுவதிலும், பயன்படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்கள். அதில் ஒன்றுதான் பள்ளிவாசல்களுக்கு சென்று ஆண்களுடன் பெண்கள் தொழும் உரிமை.<br /><br />சிந்திக்கத் தெரிந்த இந்த பெண்களின் போக்கு, பிறரால் அதிகாரம் வழங்கப்பட்டு அவர்களின் கைப்பாவையாக இருக்கும் மௌட்டீக மரபை பின்பற்றும் ஆண்களுக்கு பிடிக்கவில்லை. பெண்களை பள்ளி வாசல்களுக்கு வர விடாமல் தடுத்து நிறுத்தும் பணியில் அவர்கள் அவ்வப்போது இறங்கி எவராவது சொல்லி வைத்திருக்கும் ஆணாதிக்கக் கருத்துக்களை தங்களுக்கு சாதகமாக வெளியிடுவார்கள். (இதற்காகத்தான் இஸ்லாமிய அறிவும், சிந்தனையும் அற்றவர்களாக பார்த்து அதிகாரம் வழங்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்)<br /><br />எனவே ஆண்களோடு கூட்டாக இறைவனை வணங்கும் உரிமைகளை முஸ்லிம் பெண்கள் எந்த அளவு பெற்றுள்ளார்கள் என்பதை விளாவாரியாக விளக்கும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது.<br /><br />இதை மிக சரியாக புரிந்துக் கொள்ள வேண்டுமானால் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பெண்கள் தங்கள் உரிமையை எப்படி நடை முறைப்படுத்தினார்கள் என்ற வரலாற்று செய்திகளே சரியான அளவுகோலாகும். அவற்றை வரிசையாக விளங்கினாலே வணங்கும் உரிமைகளுக்குறிய முழு தெளிவும் கிடைத்து விடும்.<br /><br /><span style="color:#33ccff;"><strong>பள்ளிக்கு வரும் உரிமை.</strong></span><br /><span style="color:#33ccff;"><br /></span><span style="color:#3333ff;">இறைவனின் வணக்கஸ்தலங்களில் இறைவனின் பெயரை துதிப்பதை தடுத்து அவற்றை பாழாக்க முயற்சிக்கிறானே அவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்..? (அல்குர்ஆன் 2:114)</span> என்று இறைவன் கேட்கிறான்.<br />இறைவனை வணங்குவதற்காக பள்ளிவாசல்களுக்கு வரும் இறை நம்பிக்கையுள்ள முஸ்லிம் பெண்களை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை என்பதற்கு இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்து விட்டது. மீறி தடுப்பவர்கள் என்ன அதிகாரம் பெற்றிருந்தாலும் இறைவனின் பார்வையில் அவர்கள் பெரும் அநியாயக்காரர்களாகி விடுகின்றனர்.<br /><br /><span style="color:#000099;">உங்கள் பெண்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி கேட்டால் (கணவர்களாகிய) நீங்கள் அவர்களை தடுக்க வேண்டாம் என்பது நபிமொழி. (இப்னு உமர்(ரலி) புகாரி 865,873,5238)</span><br /><span style="color:#000099;"></span><br />கணவர்களே நீங்கள் தடுக்க வேண்டாம் என்பது கணவர்களை மதிக்க வேண்டும் என்பதற்காக சொல்லி விட்டு செல்ல வேண்டும் என்ற அறிவுரை தான். நபி(ஸல்) அவர்களுடைய அனுமதி கிடைத்து விட்ட பிறகு ஒரு பெண் பள்ளிக்கு சென்று வந்தால் அதை கணவர் குறை சொல்லக் கூடாது என்பதற்கு கீழுள்ள நபித் தோழியின் வாக்கு மூலம் சிறந்த சான்று.<br /><br /><span style="color:#000099;">உமர் அவர்களின் மனைவியரில் ஒருவர் சுப்ஹ் மற்றும் இஷா தொழுகைகளை பள்ளியில் ஜமாஅத்துடன் தொழ செல்வார். பள்ளிக்கு தொழ செல்கிறீர்களே உமர் ரோஷக்காரராச்சே.. என்று அந்த மனைவியிடம் கேட்ட போது, அவர் 'என் கணவர் என்னை தடுக்க முடியாது ஏனெனில் பெண்கள் பள்ளிக்கு செல்வதை தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்' என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி 900)</span><br /><span style="color:#000099;"><br /></span>பகல் நேரத் தொழுகைகள் மட்டுமில்லாமல் இரவுத் தொழுகைகளிலும் மற்றும் ரமளானின் இரவுத் தொழுகைகள் ஆகியவற்றிர்க்கும் பெண்கள் செல்லலாம்.<br /></span><br /><span style="color:#000099;">இரவில் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்காதீர்கள் என்பது நபிமொழி. (இப்னு உமர்(ரலி) புகாரி 899)</span><br /><span style="color:#000099;"></span><br /><span style="color:#000099;">நபி(ஸல்) அவர்களுக்கு பின் அவர்களை பின்பற்றி பெண்கள் சுப்ஹ் தொழுகையில் பங்கெடுப்பார்கள். தொழுகை முடிந்து போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு திரும்புவார்கள். அந்த நேரம் இருட்டாக இருப்பதால் அவர்கள் யார் என்பதை அறிய முடியாது என்று ஆய்ஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 372,578,867,872)</span><br /><span style="color:#000099;"><br /></span><span style="color:#000099;">நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் இஷா தொழுகையை தாமதப் படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்குகின்றனர் என்று உமர்(ரலி) நினைவூட்டியதும் வந்து தொழவைத்தார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி 566, 569, 862, 864)<br /></span>இரவும் இருட்டும் கூட பெண்கள் பள்ளிக்கு வந்து வணங்கும் உரிமையை தடுத்துவிடாது என்பதற்கு இவை சான்றுகளாகும்.<br /></span><br /><span style="color:#33ccff;"><strong>தொழுகையை சுருக்குவதற்கு காரணம்.</strong></span><br /><span style="color:#33ccff;"><br /></span><span style="color:#000099;">நீண்ட நேரம் தொழ வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நான் தொழுகையை துவங்குகிறேன். குழந்தைகளின் அழுகுரலை கேட்கும் போது அதனால் தாய்க்கு சங்கடம் ஏற்படுமோ என்ற கவலையால் தொழுகையை சுருக்கி விடுகிறேன் என்று நபி(ஸல்) கூறுகிறார்கள். (புகாரி 707, 709, 710, 868)</span><br /></span><span style="color:#000099;"><br /></span><span style="color:#33ccff;"><strong>இமாமின் தவறுகளை சுட்டிக் காட்டிய பெண்கள்.</strong></span><br /></span><br /><span style="color:#000099;">உங்களில் அதிகம் குர்ஆன் ஓத தெரிந்தவர் இமாமத் செய்வதற்கு முதலாவது தகுதி படைத்தவர் என்று நபி(ஸல்) கூறியுள்ளதை கருத்தில் கொண்டு ஒரு முறை இமாமத் செய்வதற்கு ஆட்களை தேடினார்கள். அன்றைக்கு அதிக குர்ஆன் ஓத தெரிந்தவனாக நான் இருந்தேன். ஆறு அல்லது ஏழு வயதுடைய என்னை இமாமத்திற்காக முன் நிருத்தினார்கள். நான் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு தொழ வைத்தேன் ஸஜ்தா செய்யும் போது அந்த போர்வை என்னை விட்டு விலகி என் பின்புறம் தெரியும். அப்போது பின்னால் தொழுத பெண்களில் ஒருவர் 'உங்கள் இமாமின் பின்புறத்தை மறைக்க (ஏதாவது கொடுக்கக்)கூடாதா..' என்றார் உடனே அவர்கள் எனக்கு ஒரு சட்டை கொடுத்தனர். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. (அம்ர் பின் ஸலாமா(ரலி) புகாரி 4302)</span><br /><span style="color:#000099;"></span><br /><span style="color:#000099;">சிலபோது போதிய உடையில்லாமல் ஆண்கள் தொழும் நிலை ஏற்பட்டது. இருக்கும் ஒரு வேட்டியை தங்கள் உடம்பில் சுற்றி கழுத்துக்கு பின்புறம் பிடரியில் கட்டிக் கொள்வார்கள். இதை கண்ட நபி(ஸல்) அவர்கள் 'பெண்களே! ஆண்கள் நிலத்திலிருந்து தலையைத் தூக்கி எழுந்து அமரும் வரை நீங்கள் தலையை தூக்க வேண்டாம்' என்றார்கள். (ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) புகாரி 362, 814)</span><br /><span style="color:#000099;"></span><br /><span style="color:#33ccff;"><strong>பெருநாள் தொழுகைகளில் பெண்கள்.</strong></span><br /><br /><span style="color:#000099;">கன்னிப் பெண்களையும், மாதவிடாய் ஏற்பட்டுள்ளப் பெண்களையும், கணவனை இழந்தப் பெண்களையும் பெருநாள் தொழுகைக்காக வந்து சேருமாறு நபி(ஸல்) கூறினார்கள். இதை கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர், 'இறைவனின் தூதரே! எங்களில் ஒருத்திக்கு போதிய அளவு ஆடை இல்லை என்றால் எப்படி வருவது..?' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) 'அவளது தோழியிடம் அதிகப்படியான மேலாடை இருந்தால் அதை அவள் அணிய கொடுக்கட்டும்' என்றார்கள். (உம்மு அதிய்யா(ரலி) புகாரி 351) </span><br /><br />(குறிப்பு: மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுக்கு தொழுகை கடமையில்லை என்பதால் அவர்கள் தொழுகையில் பங்கெடுக்காமல் தொழுத பின் நடைப் பெறும் இஸ்லாமிய பிரச்சாரத்திலும் - தங்களுக்கு தேவையான பிரார்த்தனையிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்)<br /><br /><span style="color:#000099;">பெருநாள் தொழுகை முடிந்ததும் நபி(ஸல்) பெண்களின் பகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தார்கள். இறைவனின் பாதையில் செலவு செய்யும் அவசியத்தை விளக்கினார்கள். இதை செவியுற்ற பெண்கள் தங்கள் காது, கைகளில் இருந்த ஆபரணங்களை - நகைகளை - கழற்றி இறைவனின் பாதையில் கொடுத்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 863, 978, 979, 981)</span><br /><span style="color:#000099;"><br /></span><span style="color:#33ccff;"><strong>பள்ளியை சுத்தம் செய்ய பெண்.</strong></span><br /></span><strong><span style="color:#33ccff;"></span></strong><br /><span style="color:#000099;">நபி(ஸல்) அவர்களின் பள்ளியை சுத்தம் செய்ய ஒரு பெண் நியமிக்கப்பட்டிருந்தார் என்ற விபரம் புகாரியில் வருகிறது (அபூஹூரைரா(ரலி) 458,460)</span><br /><span style="color:#000099;"></span><br />பள்ளிக்கு வர அனுமதி உண்டு என்பதால் அங்கு வந்து தன்னை வருத்திக் கொள்ளும் நிலையில் வணக்கத்தில் மூழ்கி விடக் கூடாது என்று நபி(ஸல்) கண்டித்த விபரமும் கிடைக்கின்றது<br /><br /><span style="color:#000099;">ந</span><span style="color:#000099;">பி(ஸல்) பள்ளிக்கு வந்த போது இரண்டு தூண்களுக்கிடையே நீண்ட கயிறு ஒன்றை பார்த்தார்கள். 'இது என்ன..?' என்றார்கள். அதற்கு மக்கள் 'இது ஜைனப் உடையது, நின்று தொழுவார் சோர்வடைந்தால் இந்த கயிற்றைப்படித்துக் கொண்டு சாய்ந்துக் கொள்வார் ' என்றனர். இதை கேட்ட நபி(ஸல்) அவர்கள் 'இதை அவிழ்த்து எறியுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும் போது தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து விடட்டும்' என்றார்கள். (அனஸ்(ரலி) புகாரி 1150)</span><br /><span style="color:#000099;"></span><br />இந்த ஆதாரங்களை படித்துணரும் எந்த முஸ்லிமும் பெண்கள் பள்ளிக்கு செல்வது தவறு என்று தடுக்க மாட்டான் ஏனெனில் அதுதான் இறை நம்பிக்கைக்குரிய அடையாளமாகும்.<br /><br /><span style="color:#000099;"><span style="color:#3333ff;">இறைவனும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால் அக்காரியத்தில் மாற்று கருத்துக் கொள்வதற்கு இறை நம்பிக்கைக் கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எவராவது மாறு செய்தால் அவர்கள் பகிரங்க வழி கேட்டிலேயே இருக்கிறார்கள். (அல் குர்ஆன் 33:36)</span></span><br /><p><span style="color:#000000;">முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுப்பதன் மூலம் தடுப்பவர்கள் இஸ்லாத்திற்கே கலங்கம் விளைவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை</span></p><p><span style="color:#000099;"><span style="color:#3333ff;"></p></span></span><br /><br /></span></span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-111183397927663964?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-9143764.post-1111315394590268902005-03-20T13:35:00.000+03:002005-03-20T15:01:40.140+03:00முதிர் குழந்தைகள்<div align="left">'ஏய் அம்மாவின் புடவ கலர்ல வானம் இருக்குடி' 'ஆமாம்டா அதில் விதவிதமா யாரோ ஓவியம் வரைஞ்சிருக்காங்க பாரு' தன் குழந்தைகள் வானத்தைப் பார்த்து பேசிக் கொண்டிருந்ததை கண்ட பெற்றோர்களின் மனம் குதூகலித்தது.</div><div align="left"><br />அலுவலகத்தின் டென்ஷனுடன் படுக்கையில் சாயும் தந்தையின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து 'யாரு உனக்கு கன்னத்துல தாடி ஒட்டி விட்டாங்க' என்று தன் குழந்தை கேட்கும் அந்த தருணங்களில் அலுவலக டென்ஷன் எல்லாம் பறந்துப் போகும் அந்த விந்தை பெற்றவருக்கு புதிராகவே இருக்கும்.</div><div align="left"><br />நேற்றிருந்த அந்த சந்தோஷங்கள் அடியோடு எவரோ திருடிக் கொண்டு போய்விட்ட மாதிரி இல்லங்களிலிருந்து துடைக்கப்பட்டு விட்டன. இன்றைக்கு அந்த பிஞ்சுகளின் மன கிளர்சிக்கும் சந்தோஷத்திற்கும் உரமூட்டுவதே வன்முறை விளையாட்டுகள் தான் எனும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. </div><div align="left"></div><div align="left">அடுப்பங்கரையில் இருக்கும் கரண்டிகளை கையில் எடுத்துக் கொண்டு 'டுமீல்' 'டுமீல்' என்று சத்தமிட்டப்படியே தன் சக நண்பர்களை துரத்திக் கொண்டு செல்வது தான் அவர்களை பொருத்தவரை நாகரீக விளையாட்டு.</div><div align="left"><br />'டாடி ஒழுங்கா அத கொடுத்துடு இல்லேனா சுட்டு தள்ளிடுவேன்' கையில் இருக்கும் பொருள் தந்தையை நோக்கி உயரும் போது இதை ரசிக்கும் மன நிலை நிச்சயம் பெற்றோருக்கு இருக்காது.</div><div align="left"><br />எங்கு தொலைந்து போனது அந்த பிஞ்சுகளின் இயற்கையான மழலைத் தன்மை..?<br />'என்னிடம் கேளுங்கள் நான் சொல்கிறேன்' என்பது போல் எதிரே தொலைக் காட்சிப் பெட்டி.<br /></div><div align="left">மூன்று வயது வரை குழந்தைக்கு ஹீரோ அவன் தந்தை தான். யாரும் அவனிடம் வம்பு செய்தால் 'என்கிட்ட வச்சுக்காத.. எங்க டாடிகிட்ட சொல்லிடுவேன்' என்று சொல்லும் அவனுக்கு மூன்று வயது கடந்து விட்டால் பிறகு மனதிலிருந்து பெற்றவரை துரத்தி விட்டு தான் அமர்ந்துக் கொள்ள நிறைய ஹீரோக்கள் வந்து விடுகிறார்கள். அந்த நடிகர்களின் ஆக்ரமிப்பிற்கு பிறகு இவனது நடை உடை பாவனைகள் கூட மாறி தானே அந்த ஹீரோ என்று கற்பனை சினிமா உலகின் உறுப்பினராகிறான்.</div><div align="left"><br />பள்ளிக் கூடம் முடிந்து வீடு வந்தது முதல் இரவு தூங்கும் வரை உளவியல் ரீதியாக குழந்தைகளை தாக்கி அவர்களின் பிஞ்சுத் தன்மையை சாகடிக்க வெடிக்காமல் ஆனால் வெடித்துக் கொண்டே இருக்கும் வெடி குண்டாக ஒவ்வொரு வீட்டிலும் மிக தாராளமாக ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது தொலைக் காட்சி. </div><div align="left"><br />ஒளிப்பரப்பாகும் சினிமாக்களும் அதில் வரும் வன்முறைகளும் குழந்தைகளின் உள்ளத்தை வெகுவாக கவ்வி பிடித்து அதை நோக்கியே அவர்களை நகர்த்திச் செல்கின்றன.</div><div align="left"><br /><span style="color:#ff0000;">உடை உடுத்துவது தொலைக் காட்சிக்கு முன்<br />தலை வாருவது தொலைக் காட்சிக்கு முன்<br />சாப்பிடுவது தொலைக் காட்சிக்கு முன்<br />விளையாடுவது தொலைக் காட்சிக்கு முன்<br />படிப்பது தொலைக் காட்சிக்கு முன்</span> என்று குழந்தைகளின் மொத்த நேரமும் தொலைக் காட்சி வாழ்க்கையாகவே மாறிக் கொண்டு இருக்கிறது.</div><div align="left"><br />தொலைக் காட்சி இயக்குனர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகள் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இருப்பதில்லை. வீட்டிலிருக்கும் பெரியவர்களை விட அதிகமாக தொலைக் காட்சியை பார்க்கும் குழந்தைகள் பெரியவர்களை விட அதிகமாகவே பெரியவர்களின் சமாச்சாரங்களையெல்லாம் கற்றுக் கொண்டு விடுகின்றன என்பது ஆய்வுகளில் வெளி வரும் அதிர்ச்சிகரமான தகவல்களாகும்.</div><div align="left"><br />டீ.வி சீரியல்களில் குழந்தைகள் வக்கனையாக பேசுவதை இப்போதெல்லாம் சாதாரணமாக காணலாம். மழலைத் தன்மையின் அடையாளமே இல்லாத வசனங்கள் - நடிப்புகள்.</div><div align="left"><br />ஆன்மீகம் என்ற பெயரில் ஒளிப்பரப்பாகும் எண்ணிக்கையற்றத் தொடர்களில் கம்ப்யூட்டரால் நடத்தப்படும் 'டெக்னிக்' ஜாலங்கள் குழந்தைகளின் மனங்களில் வேறுவிதமான அதிர்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதன் விளைவை சக்திமான் சீரியல் மூலம் உலகம் கண்டது.<br />சக்திமான் காப்பாற்றுவார் என்று தூக்குப் போட்டுக் கொண்டு இறந்த சிறுவன். அதே நம்பிக்கையில் தீக்குளித்து இறந்த சிறுவன். சக்தி மானை நம்பி சேற்றில் மூழ்கி இறந்துப் போன சிறுவர்கள் என்று தற்கொலை பட்டியலில் இடம் பிடித்துக் கொண்ட பிஞ்சுகள் அனேகம்.</div><div align="left"><br />நம்பிக்கை - விளையாட்டு - பேச்சு - பாவனை - நடவடிக்கை என்று குழந்தைகளின் மொத்த வாழ்வையும் தொலைக் காட்சி கொள்ளையிட்டுக் கொண்டிருக்கின்றன. <span style="color:#ff0000;"><strong>வேறு வார்த்தையில் இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் கெட்ட தாயாக, கெட்ட தந்தையாக, கெட்ட நண்பனாக, கெட்ட டீச்சராக, கெட்ட உலகின் வாசலாகவும் வாழ்க்கையாகவும் தொலைக் காட்சிகள் இருக்கின்றன குழந்தைகளுக்கு.</strong></span></div><span style="color:#ff0000;"><strong><div align="left"><br /></strong></span>யாழ் இனிது குழல் இனிது என்பார்<br />மழலைச் சொல் கேளாதோர் - என்ற மழலை மொழியை மனக்கச் செய்யும் பழமொழிகள் வரும் காலத்தில் அர்த்தமற்றுப் போய்விடும் அபாயம் தென்படுகிறது.</div><div align="left"><br />யார் பொறுப்பு?</div><div align="left"><br />திரைப்படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றைப் பொருத்தவரை அவை சமூக சிந்தனை - குழந்தைகள் நலன் - அவர்களின் எதிர்கால அக்கறைக் கொண்டவர்களால் நடத்தப்படுவதில்லை. எடுக்கப்படுவதில்லை. அவர்களின் குறிக்கோள் எல்லாம் பணம் ஒன்றுதான். இத்தகைய மனிதத்துவம் அற்ற கெடுதியாளர்களிடமிருந்து நம் குழந்தைகளை காப்பாற்றும் முழு பொறுப்பும் பெற்றோர்கள் கைகளில் தான் உள்ளன. இதில் அதிக பொறுப்புக்குரியவர் பெற்றத் தாயே.</div><div align="left"><br />'எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே<br />அவன் நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற தமிழ் பாடல் குழந்தை வளர்ப்பில் அன்னையின் பங்கை அழகாக சொல்லியுள்ளது. </div><div align="left"></div><div align="left">குழந்தைகள் பச்சை மண் போன்றவர்கள். அதாவது தாய் என்ற குயவன் கையில் கிடைத்த பச்சை மண். அதை பயன்படும் விதத்தில் உருவாக்கும் கடமைக்குரியவள் தாய் தான்.</div><div align="left"><br />நிறையப் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பதென்பதே தெரிவதில்லை. ஒன்று அதீத கட்டுப்பாட்டுக்குள் தள்ளி அவர்களை சிந்தனை ரீதியாக வளர விடாமல் தடுத்து அடிமைப்பட வைத்து விடுகிறார்கள். இதன் விளைவு குழந்தைகளின் எதிர்காலத்தில் சமூக பிரச்சனைக்கு ஈடு கொடுக்க முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன அளவில் இயலாமையும், கோழைத்தனமும், பலவீனமும் ஆட் கொண்டு விடும்.</div><div align="left"><br />அல்லது கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து முழுவதும் குழந்தைகளை விடுவித்து விடுவதையும் பார்க்கிறோம். இந்த சுதந்திரம் பெற்றோர்களையே எதிர்த்து சமயம் கிடைக்கும் போது அவர்களை வீட்டை விட்டே துரத்தும் நிலையைக் கூட ஏற்படுத்தி விடும்.<br />இரண்டு நிலையும் தவறு.<br /></div><div align="left">குழந்தைகளை அதி தீவிரமாக கண் காணித்து, அவர்களோடு பழகி, அதட்டி - அரவணைத்து, கண்டித்து - கொஞ்சி, திருத்தி - பாராட்டி பழக வேண்டும். குழந்தைகளிடமிருந்து நாம் ஒதுங்கும் ஒவ்வொரு நிமிடமும் தொலைக் காட்சி அவர்களிடம் நெறுங்குகிறது என்பதை எக்காரணம் கொண்டும் மறந்து விட வேண்டாம்.</div><div align="left"><br />உண்ணும் போது - படிக்கும் போது - உடை உடுத்தும் போது - விளையாடும் போது தொலைக் காட்சியை அணைத்து விடுங்கள். அந்த நேரங்களில் என்ன பிடித்தமான தொடர்கள் ஒளிப்பரப்பப்பட்டாலும் குழந்தைகள் மீது அக்கறையுள்ள தாய் அந்த தொடர்களை புறக்கணித்துத் தான் ஆக வேண்டும்.</div><div align="left"><br />பிள்ளைகளை விட தொடர்களே முக்கியம் என்று கருதும் எந்த தாயும் வன்முறை, பாலியல் வக்கிரங்கள், மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகியவற்றை நோக்கி தன் குழந்தைகளை தள்ளுகிறாள் என்பதில் ஐயமில்லை.</div><div align="left"><br />இத்தகைய முதிர் குழந்தைகளின் எதிர்கால வீழ்ச்சிக்கு பெற்ற அன்னையே பொறுப்பேற்க வேண்டும். </div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-111131539459026890?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9143764.post-1111030182833115352005-03-17T06:21:00.000+03:002005-03-17T06:58:34.740+03:00இறைவனும் - அவன் தன்மைகளும்உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதத்தினர் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கின்றனர். தம்மை படைத்ததும், தமக்கு தேவையானவற்றை கொடுப்பதும், பாவ மீட்சிக்கான வழி காட்டுவதும் கடவுள் சக்திதான் என்று நம்புகின்றனர். ஆனால் அந்த கடவுள் அல்லது இறைவன் என்பவன் யார்? அவன் எத்தகைய ஆற்றல் படைத்தவன் என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்து அறிய மறுக்கிறார்கள். இதற்கு முரட்டு பக்தியோ அதீத பயமோதான் காரணமாக இருக்க முடியும்.<br /><br />எவ்வித முன் தீர்மானமும் இன்றி திறந்த மனதுடன் இறை நம்பிக்கையின் வரலாற்றை நாம் அணுகும்போது ஒரு உண்மை பளிச்சென்று தெரிகிறது. அதாவது மனிதர்களாக உருவாக்கிக் கொண்ட இறைவர்கள், கடவுள்கள் ஏராளம் என்பதுதான் அந்த உண்மை. தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பும் மனிதன் அந்த சக்தியின் இலக்கணத்தை மனித இயல்பிலேயே வகுக்கத் துவங்கி விட்டான்.<br /><br /><span style="color:#ff6666;">சில கடவுள் நம்பிக்கைகளைப் பாருங்கள்..</span><br /><br />மனிதனின் சிந்தனை, ஆற்றல், செயலாக்கம் எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டது. இது மனிதனின் பலவீனம். இந்த பலவீனங்களே எல்லைச் சாமியையும், எல்லையம்மனையும் தீர்மானிக்கிறது. கடவுளின் சக்தி எப்படி ஓர் எல்லைக்குட்பட்டு இருக்க முடியும்? என்று மனிதன் சிந்திக்கவில்லை.<br /><br />வசதிக்கேற்ப பூமியின் பல பாகங்களுக்கு இடம் பெயர்ந்த மனிதர்கள் நாளடைவில் குலங்களாக, கோத்திரங்களாக வளர்ந்து நிற்கிறார்கள். இடப்பெயர்ச்சிக்கான காரணத்தையும், வரலாற்றையும் மறந்து போன மனிதன் குலத்திற்கு ஒரு கடவுளை, இறைவனை உருவாக்கிக் கொண்டான்.<br /><br />குலத்தாலும், கலாச்சாரத்தாலும் மனிதர்கள் வேறுபட்டிருந்தாலும் மனிதன் என்கிற இயல்பில் உலக மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் போது குலத்துக்கு ஒரு கடவுள், இறைவன் எப்படி இருக்க முடியும்? என்று அவன் சிந்திக்கவில்லை. தன் பலவீனத்திலேயே தன் கடவுளை மனிதன் தான் வகுக்கிறான்.<br /><br />ஆக்க ஒரு கடவுள், காக்க ஒரு கடவுள், அழிக்க ஒரு கடவுள் என்று அடுத்து இறைவனுக்குரிய இலக்கணத்தை மனிதன் வகுத்துள்ளான். எந்த ஒரு பொருளை உருவாக்கவும், அதை இயக்கவும், அதை அடியோடு அழிக்கவும் தனி ஒரு மனிதனால் முடியாது. இது அவனது பலவீனம். அவனைப் போன்று அவனோடு இன்னும் பலர் இயங்க வேண்டும். இந்த பலவீனம் அவனாக உருவாக்கிக் கொண்ட இறைவன் விஷயத்தில் பிரதிபளிக்கிறது. ஆக்கும் இறைவனால் - காக்கவும் - அழிக்கவும் முடியாதா? 'முடியும்' என்றால், 'முடியும்' என்ற தன் ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்ட பலவீனம் அங்கு நிற்கிறது. 'முடியாது' என்றால், தன்னால் ஒரு காரியத்தை செய்ய முடியாதவன் எப்படி கடவுளாக - இறைவனாக இருக்க முடியும்? என்பதை மனிதன் சிந்திக்க வேண்டும். இங்கும் மனிதன்தான் இறைவனை தன் கற்பனையில் உருவாக்குகிறான் என்பதை புரிய முடிகிறது.<br />குடும்பஸ்தனாக இறைவன் சித்தரிக்கப்படுவதில் மனிதனின் கற்பனா சக்தி கலை கட்டுகிறது. குடும்பம் அதாவது மனைவி, குழந்தைகள் மனிதனுக்குத் தேவை. அதில் பல சிக்கல்கள் இருந்தாலும் அந்த சிக்கல்களையெல்லாம் மறக்கடிக்ககூடிய இன்பம் அதில் குவிந்துக்கிடப்பதால் தான் மனிதனால் குடும்ப வாழ்க்கையை தவிர்க்க முடிவதில்லை. உடல் இச்சை தீர்ந்தால்தான் இவனால் உலகில் சுருசுருப்பாக இயங்க முடியும். மனைவி தேவை என்பதும், குழந்தைகள் தேவை என்பதும் மனிதனின் அசைக்க முடியாத பலவீனங்கள். இந்த பலவீனங்களுக்குட்படுத்தியே இறைவனை இவன் உருவாக்கி விட்டான். இறைவன் அவனுக்கு மனைவி, அவர்களுக்கு மத்தியில் சல்லாபங்கள், ஊடல்கள், ஓய்வுகள், சந்ததிகள் என்று இறைவனிடம் எண்ணற்ற மனித பலவீனங்கள். 'பேசாமல் அவனும் மனிதனாக இருந்துவிட்டுப் போகலாம்' என்ற அளவிற்கு மனித பலவீனங்களால் சூழப்பட்டுள்ளான் மனிதன் உருவாக்கிய இறைவன்.<br /><br /><span style="color:#ff6666;">மகனாக பிறக்கும் கடவுள் !</span><br />'கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்' என்று மனித துன்பங்கள் கவிதை வடித்தது. ஆனால் உலகில் பெரும்தொகையினர் ஒரு மனிதரை கடவுளின் மகனாகவே கருதி ஆதாரமில்லாமல் நம்பி வழிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.<br /><br />பலவீனமே கடவுள் நம்பிக்கையின் அடையாளமாகிறது. இறைவன் மகனாக பிறக்க வேண்டிய அவசியமென்ன? பிறப்பு என்ற பலவீனம் இறைவனுக்கு இருக்க முடியுமா? கருவறையில் அவன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதற்கு அவன் ஒரு உயிரியா? பிறப்பின் துன்பம் அவனுக்கு இருக்குமா? குழந்தை பலவீனம், பருவ பலவீனம், வாலிப பலவீனம், வயோதிக பலவீனம் இவையெல்லாம் இறைவனை ஆட்கொள்ளுமா? இந்த பலவீனங்களெல்லாம் அவனது இறைத்தன்மையை கேள்விக்குறியாக்காதா? இறப்புகளை தீர்மானித்துக் கொண்டே பிறப்புகள் நிகழ்கின்றன. மகனாக பிறந்த இறைவன் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மரித்துப் போகிறான். மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்பெற்று எழுந்தான் என்று நம்பி கொண்டாடுவோர், மகனாக பிறந்த இறைவன் மூன்று நாட்கள் இறந்துக் கிடந்தானே.. இறைவனால் இறந்துப் போக முடியுமா? இறப்பு இறைத்தன்மைக்கு உகந்ததுதானா? இந்த நம்பிக்கை இறைவனை கேவலப்-படுத்துவதாகாதா? என்று சிந்திக்க மறுக்கிறார்கள்.<br /><br /><span style="color:#ff6666;">சிலையாகிப் போகும் இறைவன்!</span><br />கேடு விளைவிக்கும் மனிதர்கள் சில முனிவர்களால் சபிக்கப்பட்டு கல்லாகி, சிலையாகிப் போனார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. கேடு விளைவிப்போர் சிலையாகிப் போனதில் (இதுவெல்லாம் நடக்கக்கூடிய காரியமல்ல என்பது தனி விஷயம்) நியாயமிருக்கலாம். எந்த பாவமும் செய்யாத இறைவன் கல்லாகி, சிலையாகி போனது கொடுமையல்லவா? கலையுணர்வு என்ற பெயரில் கல்லை செதுக்கி கடவுளாக்கும் மனித கற்பனை, கலையால் கடவுள் கேவலப்படுவதை உணர மறுக்கிறது. இறைவனால் படைக்கப்பட்ட நாளது முதல் அகில உலகமும் தானியியங்கியாக இருக்கும்போது இவை அனைத்தையும் படைத்த இறைவனை, கடவுளை அசையா பொருளாக்கி வைத்துள்ள சகோதரர்கள் சிந்திக்க மாட்டார்களா?<br /><br />மனிதனால் கற்பனை செய்யப்பட்ட இறைவனின் நிலை இப்படி இருக்கும்போது கற்பனைக்கு, பலவீனத்திற்கு அப்பாற்பட்ட உண்மையான இறைவனை எப்படி அறிவது?<br /><br />இதோ அந்த உண்மையான இறைவனே அவனது வேதமான அல்-குர்ஆனில் இதற்கு வழி காட்டுகின்றான்.<br /><br />(இறைத்தூதராகிய முஹம்மதே) மக்களுக்கு நீர் அறிவியும், இறைவன் என்பவன் ஒருவன்தான். (அவனுக்கு எல்லா வல்லமையும் இருக்கும்போது வேறொரு இறைவன் தேவையில்லை) (அல்-குர்ஆன்: 112-1)<br /><br />அ(ந்த இறை)வன் தேவையற்றவன் (தேவை என்ற பலவீனம் அவனால் படைக்கப்பட்ட அனைத்திடமும் இருக்கலாம். அவனுக்கு எதுவும் தேவையில்லை) (அல்-குர்ஆன:; 112-2)<br /><br />அ(ந்த இறை)வன் யாரையும் பெறவில்லை (சந்ததி என்ற ஒன்று அவனுக்கு அவசியமில்லை. அது பலவீனத்தின் அடையாளம்) (அல்-குர்ஆன்: 112-3)<br /><br />அ(ந்த இறை)வன் யாராலும் பெறப்படவுமில்லை (யாராவது அவனை பெற்றிருந்தால், பெற்றோர் இவனையும் விஞ்சி நிற்பர் அதனால் அவனுக்கு தாய், தந்தை அவசியமில்லை.) (அல்-குர்ஆன்: 112-3)<br /><br />அ(ந்த இறை)வனுக்கு நிகராக எதுவொன்றுமில்லை. (அவனுக்கு நிகராக எதுவுமில்லை என்ற இந்த ஒரு வார்த்தையே இறைவனுக்குரிய எல்லா இலக்கணங்களையும் உள்ளடக்கிக் கொள்கிறது)(அல்-குர்ஆன் : 112-4)<br /><br />இறைவன், அவனைத்தவிர வேறு நாயனில்லை. அவன் நித்திய ஜீவன், நிலைத்திருப்பவன், சிறு உறக்கம், பெறு உறக்கம் எதுவும் அவனை பீடிக்காது. வானங்கள் பூமியில் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியது. (அல்-குர்ஆன்: 2-255)<br /><br />(நபியே!) உமதிறைவன் எதுவொன்றையும் மறக்கக் கூடியவனல்ல (ஒவ்வொரு படைப்பையும், படைப்பின் அசைவுகளையும், அதன் வாழ்வையும், மரணத்தையும், பிறகு எழுப்புதலையும் எல்லாவற்றையும் அவன் அறிவான். ஞாபக மறதி என்பது அவனுக்கு கிடையாது. (அல்-குர்ஆன்: 19-64)<br /><br />இறைவனுக்கு எதுவொன்றையும் உதாரணமாக்காதீர்கள். நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்-குர்ஆன்: 16-74)<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-111103018283311535?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9143764.post-1104074730895962882004-12-26T18:12:00.000+03:002004-12-26T18:25:30.896+03:00உடை கழற்றும் ஆண் வக்கிரம்.<p> </p><table id="HB_Mail_Container" height="100%" cellspacing="0" cellpadding="0" width="100%" border="0" unselectable="on"><tbody><tr height="100%" unselectable="on" width="100%"><td id="HB_Focus_Element" valign="top" width="100%" background="" height="250" unselectable="off">பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா.. என்று கட்டுரை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை - கொடுமையை
<br />நேசக்தகுமாரர் அக்கறையோடு வெளிபடுத்தி உள்ளார்.
<br />
<br />அந்தக் கட்டுரையின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர் எழுதிய கட்டுரையை அவரே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி - அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை
<br />என்பது புலப்படும்.
<br />
<br />முஸ்லிம் பெண்கள் அணியும் மேலதிகமான உடைக்கும் அவர் எடுத்துக் காட்டிய தகவல்களுக்கும் தொடர்பு எதுவுமில்லை என்பதை நாம் அடுத்தப்பகுதியில் விளக்குவோம். அப்போது அந்த கட்டுரையின் யதார்த்தம் என்ன என்பது உலகிற்கு விளங்கும்.
<br />
<br />பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் 'வெளிப்படையாக" பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.
<br />
<br />பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை
<br />நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.
<br />
<br />இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.
<br />
<br />அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும், ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி ட்கப்படுகிறது.
<br />
<br />"பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்"?.
<br />அவர் பதிலளித்தார்.
<br />"நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்"
<br />
<br />இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.
<br />
<br />பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும், ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல்
<br />சார்ந்த கவர்ச்சிதான்.
<br />
<br />பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக்
<br />கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.
<br />
<br />தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்."எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்."
<br />
<br />இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.
<br />
<br />ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.
<br />
<br />பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.
<br />
<br />I A S தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து IAS அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு
<br />செனறு உலகிற்கு காட்டினார்.
<br />
<br />DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.
<br />
<br />பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.
<br />
<br />டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் - பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.
<br />
<br />இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.
<br />
<br />இதற்கெல்லாம் தீர்வு என்ன?
<br /><span style="color:#ff0000;">1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.</span>
<br /><span style="color:#ff0000;">2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.</span>
<br /><span style="color:#ff0000;">3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.</span>
<br />
<br />இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.
<br />
<br />இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.
<br />
<br />மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும். (இங்குதான் அதாவது
<br />மூன்றாவது கருத்துக்குதான் நேசக்குமாரர் விமர்சனக்கட்டுரை வெளியிட்டுள்ளார். அதை அடுத்துப் பார்ப்போம்)
<br />
<br />பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரியும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை
<br />ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.
<br />
<br />தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடைஉடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு
<br />பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?
<br />
<br />மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் நேசக்குமாரர்கள் அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.
<br />
<br />பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று முன்பு கேள்வி வைத்தோம். நேசக்குமாரர் பதில் சொல்லவில்லை.
<br />" அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் பார்த்துக் கொள்வார்கள் போய் ஜோலியை பாப்பியலா" என்று அழகுத் தமிழில் முழங்கிய அந்தப் பெண்ணும் இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.
<br />
<br />பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.
<br />
<br />பர்தா கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்கியுள்ளதா... நேசக்குமாரர் முன் வைத்துள்ள கருத்துக்களை இனி பார்ப்போம்.
<br /></td></tr><tr unselectable="on" hb_tag="1"><td style="FONT-SIZE: 1pt" height="1" unselectable="on"><div id="hotbar_promo"></div></td></tr></tbody></table><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-110407473089596288?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-9143764.post-1103267209156855832004-12-17T09:59:00.000+03:002004-12-17T10:06:49.156+03:00பெண் உடையும் - ஆண் உணர்வும்.எப்படி உடை உடுத்த வேண்டும்? எந்த அளவு மறைக்க வேண்டும் என்பதை ஒவ்வாரு பெண்ணும் தனக்குத் தானே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்ற (பெண்ணுரிமைக்?) கருத்தை முன் மொழிபவர்கள் 'உடை எதற்கு?" என்ற கேள்வியை ஆழமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
<br />
<br /><span style="color:#ff0000;">அழகிற்காக...</span>
<br />அழகியல் என்பது உயிரினம் விரும்பும் ஒரு உணர்வுப்பூர்வமான கலையாகும். ஒவ்வொருவரும் முனைப்புடன் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதற்கு தயாரானால் அதை குற்றம் சொல்பவர்கள் அழகியலை அறியாதவர்களாகி விடுவார்கள். அந்த வகையில் ஒரு பெண் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதற்காக எந்த உடையையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அழகிற்காக மட்டும்தான் ஆடை என்ற நிலை இருந்தால் தான் இந்த வாதம் பொருந்தும். அழகியலுக்காக மட்டும்தான் உடை என்று எந்த பெண்மையும் கூறத் துணியாது என்று நம்புகிறோம்.
<br />
<br /><span style="color:#ff0000;">உடலை மறைக்க...</span>
<br />அழகியலுக்காக ஆடை என்பதை விட உடலை மறைப்பதற்குத்தான் ஆடை என்பது அதை விட முக்கியத்துவம் பெறுகிறது.
<br />
<br />மனிதன் பிறக்கும் போது நிர்வாணமாக பிறக்கிறான். அவன் நிர்வாணமாக பிறந்து விட்டான் என்பதற்காக அவனை நிர்வாணமாகவே யாரும் வைத்துக் கொள்வதில்லை. பிறந்தவுடன் துணி சுற்றப்பட்டு நிர்வாணம் மறைக்கப்பட்டு விடுகிறது. இதற்கு மேலதிக காரணங்கள் கூட இருக்கலாம். காரணம் எத்துனையாக இருந்தாலும் நிர்வாணத்தை மறைத்தல் என்பது அதில் பொதிந்துதான் உள்ளது. பிறந்ததிலிருந்து உடலோடு உறவாட துவங்கிய உடை மனிதன் மரணித்த பிறகும் அவனை அடக்கம் செய்யும் வரை (சில நம்பிக்கைப்படி எரிக்கும் வரை) அவன் உடலை மூடி மறைத்து நிற்கிறது. அவன் தான் மரணித்து விட்டானே.. என்பதற்காக யாரும் அவனை நிர்வாணமாகப் போட்டு விடுவதுமில்லை.
<br />
<br />மானத்தை மறைக்கவே உடை என்ற வார்த்தைதான் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும் நாம் அந்த வார்த்தையை இங்கு பயன்படுத்தவில்லை. காரணம் மானம் என்றால் என்ன? என்று அடுத்து ஒரு கேள்வி வந்துவிடக கூடாது என்பதற்காகத்தான்.
<br />
<br />உடலை மறைப்பதற்கு தான் உடை என்றால் 'எதற்காக உடலை மறைக்க வேண்டும்' என்ற கேள்வியையும் அறிவார்ந்த பெண்கள் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.
<br />
<br />அடுத்தவர்கள் முகம் சுளிக்காமலிருக்க,அடுத்தவர்களை தொந்தரவுபடுத்தாமலிருக்க,அடுத்தவர்களை வரம்புமீற விடாமலிருக்க,அடுததவர்களை மனபாதிப்புக்குள்ளாக்காமலிருக்க,இப்படி எத்துனையோ 'அடுத்தவர்களை' இங்கு எடுத்துக்காட்டி விடலாம்.
<br />இந்த 'அடுத்தவர்களில்' உடன் பிறந்தவர்கள். குடுபத்தார். சுற்றத்தார்.வெளி மனிதர்கள் என்று அனைவரும் இடம் பெற்றுக் கொள்வர்.
<br />
<br />குளிக்கும் போது பயன்படுத்தும் ஒற்றை உடையுன் ஒரு பெண் வீட்டின் உள்ளே இருந்துக் கொண்டு 'நான் தான் உடை உடுத்தியுள்ளேனே..' என்று தத்துவம் பேசமாட்டாள். பேசினாலும் அதை வீட்டார்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்.
<br />
<br />கணவனிடம் நெருக்கமாக இருக்கும் போது உள்ள குறைந்த அளவு ஆடையுடன் ஒரு பெண் வெளிப்பட்டு 'மறைய வேண்டியது மறைந்துதான் உள்ளது' மேலதிக உடை தேவையில்லை. நான் இப்படியே சுற்றி வருகிறேன்' என்று முடிவு செய்ய மாட்டாள்.
<br />
<br />குளிககும் சந்தர்பங்கள் போன்ற தனிமையும - கணவனோடு இருக்கும் போதும் - வீட்டில் பிறருக்கு (கூட பிறந்தவர்கள்) மத்தியிலிருக்கும் போதும் பெண்ணின் உடையில் வித்தியாசம் அவசியம் தேவைப்படுகிறது.
<br />
<br />மாராப்பு விலகிய நிலையில் ஒரு பெண்ணை அவளது சகோதரன் பார்த்தால் முகம் சுளிப்பான். அவளுக்கு உணர்த்துவான். அதேநிலையில் வேறொரு ஆண் அவளைப் பார்த்தால் அவன் முகம் மலர்வான். முகம் மலராவிட்டாலும் மனம் அதை ரசிக்கத்தான் செய்யும். இந்த வித்தியாசங்கள் அனைவருக்கும் புரியத்தான் செய்யும். (ஆண் முகம் மலர்வான் என்றவுடன் நேசக்குமாரர்கள் 'ஆண்களெல்லாம் தெருப் பொருக்கிகளா.. காமுகர்களா... என்றெல்லாம் ஆவேசக் கனல் கக்குவார்கள். இத்தகைய மனநிலை உள்ளவர்கள் ஆண்களில் யாருமில்லை என்று நேசக்குமாரர்களால் உத்திரவாதம் கொடுக்க முடியாது. பெண்களை குறைவாகக் காட்டி ஆண்களை உசுப்பிவிட்ட 'பாய்ஸ்' திரைப்படத்தை இங்கு நினைவுக் கூறலாம்.)
<br />
<br />ஆண்களின் மனநிலை உணரப்படும் போது பெண்கள் கூடுதலாக தனது உடலை மறைக்க வேண்டும் என்ற யதார்த்த நிலை விளங்கும்.
<br />
<br /><em><span style="color:#000099;">ஆண்களின் மனநிலையை உணர்ந்து அனுபவிக்க முடியாத - வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் பெண்கள் 'எங்கள் உடையை நாங்களே தீர்மானித்துக் கொள்வோம் என்று முடிவெடுப்பது - வாதிப்பது முதிர்சியற்ற நிலையின் வெளிபாடேயாகும்.</span></em>
<br />
<br />பெண்ணை அங்குலம். அங்குலாமாக ரசிக்கக் கூடிய மனநிலையில் இருப்பவன் ஆண். உடை உடுத்திக் கொண்டு போனாலும் உரசிப் பார்ப்போம் என்று உந்தப்படுபவன் ஆண். இடையை பிடிப்பது. பின்புறம் உரசி நிற்பது. கழுத்துப் பகுதியிலும். பிடரியிலும் வெப்பமான மூச்சுக் காற்றை விட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துவது. அதுபற்றி நண்பர்களிடம் கமாண்ட்ஸ் அடிப்பது என்று ஆண்களிடமிருந்து பெண்கள் அனுபவிக்கும் பாலியல் சீண்டல்களை - படும் அவதியை சென்னை பஸ் பயணங்கள் கோடிக் கோடியாக கதை சொல்லும்.
<br />
<br />ஆண்களும் - பெண்களும் பாலியல் துன்பத்திற்கு ஆளாவதற்கு பெண்களின் உடை முக்கியப்பங்கு வகிக்கிறது. இதை பெண்களால் மறுக்க முடியுமா...
<br />
<br />பெண்களின் உடம்பும் - உடையும் ஆண் தூண்டப்படுவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாது என்ற வாதத்தை இஸ்லாம் முன் வைக்கிறது.
<br />இதற்கு எதிரான வாதங்களை எந்த பெண்ணாவது முன் வைத்தால் இன்னும் கூடுதல் விபரங்களுடன் அவர்களை நாம் சந்திப்போம் இணையத்தில். (தொடர்வோம்)
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-110326720915685583?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9143764.post-1102966361588695042004-12-13T22:21:00.000+03:002004-12-13T22:32:41.590+03:00அவளொரு முஸ்லிம் பெண்உடை உடுத்தும் மனித பண்பாட்டில் சர்ச்சை மற்றும் விவாதப் பொருளாகிப் போய் நிற்பவள் முஸலிம் பெண் மட்டும் தான். உடுப்பில் வேறு எந்த சமுதாயமும் இந்த அளவு சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருப்பதாக நமக்குத் தெரியவில்லை. நிறைவாகவோ எத்துனை குறைவாகவோ உடுத்திக் கொண்டு வீதி தோரும் அலைந்தாலும் முஸ்லிம் சமுதாயம் உட்பட எந்த ஆணும் இந்த சர்ச்சையில் சிக்குவதில்லை. அப்படியானால் முஸ்லிம் பெண் மட்டும் இதில் ஏன் முதல் பொருளாகிப் போனாள்? என்பதை நாம் சிந்தித்துதான் ஆக வேண்டும்.
<br />
<br /><span style="color:#3366ff;"><strong>அவளொரு முஸ்லிம் பெண்.</strong></span>
<br /><ul><li>மதம் என்ற நம்பிக்கையுடனும், சமூகம் என்ற அந்தஸ்துடனும் இயங்கும் மனிதவாழ்க்கையை நாம் எடுத்துக் கொள்வோமேயானால் இஸ்லாத்தை விடுத்து பிற மத சமூக பண்பாட்டில் "அனைத்திலும் நீ இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டும்" என்ற ஒரு அறிவுரை முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மனிதனின் தனி வாழ்வு - பொதுவாழ்விலிருந்து கடவுள் நம்பிக்கை பிரித்தெடுக்கப்பட்டு, அவனது வாழ்க்கை முறையை வேறுபட்ட இரு பிம்பங்களாக்கி வைத்துள்ளது. 'கோயிலில் போய் கும்பிடு அதை கடந்து வந்தப் பிறகு நீ கோபுரத்தில் வாழ்ந்தாலும் சரி, குடிசையில் வாழ்ந்தாலும் சரி அங்கு கோயிலை - கும்பிடும் இறைவனைப் பற்றி நினைக்கத் தேவையில்லை' என்ற நிலையே நீடிக்கிறது. சில - பல சிந்தனையாளர்களால் 'உன் தனிவாழ்விலோ - பொதுவாழ்விலோ இறைவன் தலையிடக் கூடாது" என்ற போதனையும் முன் வைக்கப்படுகிறது. <span style="color:#ff6666;">(மசூதியிலும் - கோயிலிலும் மட்டும் குடும்பம் நடத்தும் இறை நம்பிக்கை மனித வாழ்விற்கு தேவைதானா... என்ற சர்ச்சைக்குள் நாம் நுழையவில்லை)</span></li></ul><span style="color:#ff6666;">
<br /></span>ஆனால் முஸ்லிம் ஆண் - பெண் இவர்களின் நம்பிக்கை "இறைவன் தன் வாழ்வின் அனைத்துத் துறைக்கும் வழிகாட்டியுள்ளான்" என்பதாகும். (இந்த நம்பிக்கை சரியா.. தவறா.. என்பதை நாம் தனியாக விவாதித்துக் கொள்ளலாம்). இந்த நம்பிக்கைத்தான் முஸ்லிம் பெண்களை மற்றப் பெண்களை விட சற்று அதிகமாக உடை உடுத்தத் தூண்டுகிறது. இது அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட நம்பிக்கை அடிப்படையில் அமைந்த உடையாகும்.
<br /></span>
<br /><span style="color:#3366ff;"><strong>திணிக்கப்படுகிறதா...</strong></span>
<br /><ul><li>முஸ்லிம் பெண்கள் விரும்பாத நிலையில் அவர்கள் மீது இந்த உடை திணிக்கப்பட்டு விட்டது போன்ற ஒரு தோற்றத்தை சில எழுத்தாளர்கள் அவ்வப்போது முன் வைக்கிறார்கள். <strong>விரும்பி ஏற்காத நிலையில் திணிக்கப்படும் எதுவும் நீண்ட காலத்திற்கு நிலைப் பெற்று நிற்காது என்பது மெத்த படித்தவர்களுக்கு விளங்காமல் போய்விட்டதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.</strong> ஏனெனில் 'நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் " என்ற கூட்டத்தில் நிற்பவர்களாகவே இவர்கள் விளங்குகிறார்கள். </li><li>
<br /><em><strong>உண்மையில் மத நம்பிக்கை என்ற பெயரில் பெண் விரும்பாத நிலையில் அவள் மீது இத்தகைய உடை திணிக்கப்பட்டிருந்தால் அதற்கெதிராக உலகலாவிய போராட்டம் என்றைக்கோ வெடித்திருக்கும். வெடித்தக் காலங்களிலேயே இந்த திணிப்பு காலாவதியாகிபோயிருக்கும்.</strong></em> மத நம்பிக்கை என்ற துவக்கத்திலிருந்து பல நூற்றாண்டுகள் கடந்தப் பிறகும் அந்த மேலதிக உடை புழக்கத்திலிருக்கிறது என்றால் இதை திணிப்பு என்றுக் கூறுபவர்கள் தூர நோக்கு அற்றவர்கள் என்பதே பளிச்சிடுகிறது. </li></ul><p>எந்தத் திணிப்பாவது நீண்டகாலம் வாழ்ந்த - வாழ்கின்ற வரலாற்றை எடுத்துக் காட்டுங்களேன் பார்ப்போம்.</p><p>
<br /><span style="color:#3366ff;"><strong>வழக்குகள் ஏதும் உண்டா...?</strong></span></p><ul><li>பெண்களுக்கு எதிராக நடக்கும் அனேக கொடுமைகள் வழக்குகளாக்கப்பட்டு பின்னர் வரலாற்று நிகழ்வுகளின் கசங்கல்களாக அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கும் பதிவு செய்யப்படுகின்றன. "மேலதிக உடை எங்களுக்கு சுமையானவை - அடிமைத்தனமானவை" என்று முறையிடப்பட்ட, எதிர்க்கப்பட்ட வழக்குகளும் - சம்பவங்களும் உலகில் எத்துனை என்பதை யாராவது எடுத்துக் காட்ட முடியுமா... " முக்காடுகளுடன் பள்ளிக்கு வரக்கூடாது" என்று சில நாடுகளில் பள்ளியின் நிர்வாகம் கட்டளையிட்டபோது 'எங்கள் தலை முந்தானைகளால் உங்கள் பள்ளிக் கூடத்திற்கு எத்தகையக் கெடுதியும் வரைப்போவதில்லை. அதே சமயம் நீங்கள் எங்கள் முக்காடுகளை கழற்றுவதன் மூலம் எங்கள் மனங்களைப்புண்படுத்துகிறீர்கள்" என்ற எதிர்வாதம் மாணவிகளால் முன்வைக்கப்பட்ட சம்பவங்களையும் - நிர்வாகம் முக்காடை கழற்றுவதில் குறியாக நின்றபோது மாணவிகள் நீதி மன்றத்தை அணுகுகிறார்கள் என்ற சம்பவத்தையும் தான் உலகம் கண்டு வருகிறது.
<br /></li><li>இஸ்லாமிய நீதி மன்றங்கள் - இந்திய நீதி மன்றங்கள் - உள்ளுர் ஜமஅத்துகள் இங்கெல்லாம் ஜீவனாம்சம் உட்பட தலாக், சொத்து போன்ற வழக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவை கனிசமான அளவைப் பெற்றுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. இதே இடங்களில் முஸ்லிம் பெண்கள் தங்கள் உடைகளுக்கு எதிராக தொடுத்த வழக்குகள் எத்துனை?</li></ul><p>
<br /><strong><span style="color:#3366ff;">தீர்மாணிக்க வேண்டியது பெண்களா..?</span></strong></p><ul><li>பெண்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்று ஆண்கள் பேசக்கூடாதாம். பெண்கள் தான் பேச வேண்டுமாம். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டுமாம். கருத்து முன் வைக்கப்பட்டு அது ஆமோதிக்கவும் பட்டுள்ளது.முஸ்லிம் பெண்கள் பேச துவங்கி "புர்காவே புண்ணியம்" 'புர்காவே கண்ணியம்" என்று ஓட்டுப்போட்டு விட்டால் பெண்ணினம் அனைத்தும் அதை ஒப்புக் கொண்டு அதை அணிய துவங்கி விடுமா...? முஸ்லிம் பெண்கள்தான் பேச வேண்டும் என்ற கருத்து ஏன் வைக்கப்படுகிறது? அவள் புர்கா என்பது அடிமைத்தனம் என்று கூறிவிடுவாள் அந்த கருத்தை வைத்தே புர்காவைக கழற்றி பெண்ணினத்திற்கு விடுதலை வாங்கி கொடுத்து விடலாம் என்ற எண்ணத்திலா..</li><li>
<br />அவளாக விரும்பி அணியும் உடைப் பற்றி அவளே விமர்சிக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகை மனநிலையைக் காட்டுகிறது என்பது உலகிற்கு புரியாமல் இல்லை.
<br />பெண்களின் உடையை பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டுமா... இனி பார்ப்போம்.</li></ul><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-110296636158869504?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9143764.post-1102592969383133702004-12-09T14:48:00.000+03:002004-12-09T14:49:29.383+03:00புத்தகங்களின் மறுவாசிப்பாக நேச குமார்நேச குமாரர் புத்தகங்களின் மறுவாசிப்பாக தனது கருத்துக்களை வைத்துள்ளார். வாசிப்பதை வாசித்த மாதிரியே வெளிப்படுத்துவதற்கும் வாசித்ததை சிந்தித்து அந்த சிந்தனையை வெளிப்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. இன்றைய நேசக்குமாரரின் கருத்துக்களை படித்து விட்டு அந்த கருத்துக்கள் பிடிக்காத ஒரு முஸ்லிம் அவரை கேவலமாக சித்தரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பிற்கால வாசகர்கள் 'நேசக்குமாரர் பற்றி கேவலமாக முன் வைக்கப்பட்ட கருத்துகளை படித்து விட்டு அதையே மறுவாசிப்பாக வெளிப்படுத்துகிறார்கள் என்றால் இப்போது நேசக்குமாரரின் தத்ரூபமான நிலை அந்த கேவலமான சித்தரிப்புதான் என்று சொல்லிவிட முடியுமா..?' நேசக்குமாரரால் அதை ஏற்க முடியுமா...
<br />
<br />இஸ்லாம் பற்றி - இறைத்தூதர் பற்றி அவர் முன் வைத்துள்ள கருத்துக்கள் இந்த அடிப்படையில் அமைந்தவைதான்.
<br />
<br />சகோதரா... நேசக்குமாரா.. விமர்சனங்கள் ஆரோக்யமானவை என்றால் அவற்றை சந்திக்க அனேக முஸ்லிம்கள் தயாராக இருக்கிறார்கள்.
<br />
<br />அவர்களுடன் நானும் விரைவில் பங்குப்பெறுவேன்.
<br />
<br />செஞ்சுடர்.
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-110259296938313370?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9143764.post-1102500564702511422004-12-08T13:01:00.000+03:002004-12-08T13:09:24.703+03:00நேசக்குமாரருக்கு....நேசக்குமாரருக்கு ஒரு கேள்வி
<br />திண்ணையில் வெளிவந்த உங்கள் புர்கா - பர்தா கட்டுரைக் கண்டேன்.
<br />
<br />இஸ்லாம் தீர்மானிக்கும் பெண்களின் உடைப்பற்றிய விவாதத்திற்கு செல்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு கேள்வி.
<br />
<br />உங்களின் கல்வி மற்றும் சிந்தனை, நீங்கள் ஏற்றுக் கொண்ட சித்தாந்தம் இவற்றின் அடிப்படையில் பெண்களின் உடை எவ்வாறு அமைய வேண்டும்?, எதிலிருந்து எதுவரை மறைக்கப்பட வேண்டும்? உடையின் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் விளக்க வேண்டும். பின்னர் இஸ்லாமிய உடைப் பற்றிய உங்கள் கருத்தின் நிலைப்பாடு என்னவென்பதை அலசலாம்.
<br />
<br />செஞ்சுடர்.
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-110250056470251142?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9143764.post-1100373154038498602004-11-13T22:11:00.000+03:002004-12-08T14:18:22.466+03:00மாற்றங்கள் தேவைத்தான்<span style="color:#3333ff;">பல சிந்தனையாளர்கள் சொல்வது போல இஸ்லாத்தில் மாற்ற்ங்கள் தேவைத்தான். எதை மாற்றுவது.. நேசக்குமாரர்கள் போன்று <span style="color:#ff6666;"><strong>'அவர்களுக்குத் தவறாக தெரிபவற்றை"</strong></span> மாற்றுவதா... அல்லது <span style="color:#ff0000;"><strong>அவர்களுக்கு நியாயமாகத் தெரிபவற்றை</strong></span> மாற்றுவதா.... விவாதிப்போம்.</span>
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9143764-110037315403849860?l=chudar.blogspot.com'/></div>சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com1