tag:blogger.com,1999:blog-80704222007-04-16T01:14:19.019-07:00கொஞ்சம் தூறல்...சுபிhttp://www.blogger.com/profile/07033517900957047164noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8070422.post-1093420990718846672004-08-25T01:00:00.000-07:002004-08-25T02:43:26.856-07:00ஒரு துளி... ஓர் உலகம்!<span style="font-size:78%;background-color:#F0F0F0">சின்னச் சின்ன வார்த்தைகள் கோத்த கவிதையாய்... மழை! முகத்தில் தெளித்த சாரலில் பூரிப்படையாமல்... வானிற்கும், பூமிக்கும் இடையே உள்ள வளி மண்டலம், மழைத்துளிகளால் துளைபட்டுப்போனதே என்ற கவலைதான் எனக்கு! இந்த மழையின் சலசலப்பில் "காற்றின் அலைவரிசை கேட்கிறதா?"...
<br />
<br />ஆக, மழையின் கவிதை எனக்கு இரசிக்கும்படியாய் இல்லை!...
<br />
<br />"இத்துடன் இன்றைய சேவை முடிகிறது" - கவிதையில் கடைசியாய் முற்றும்!...
<br /><img src="http://www.owlnet.rice.edu/~abrock/pictures/coconut.jpg" width="30%" align="right" /></img>
<br />
<br />கால் அயர கொஞ்சம் நடந்தேன்... அந்த தென்னை மரம்! விழுந்த மழைத்துளிகளில், சிலவற்றைச் சேகரித்து... குட்டியாய் ஒரு கவிதை - ஹைகூ!...
<br />
<br />அட! வானத்தின் மழை, பல துளிகள்... பல வார்த்தைகள்... 'கவிதை' என்றால்...
<br />விருட்ச மழை, சில துளிகள்... சில வார்த்தைகள்... 'ஹைகூ' தானே!!...
<br />
<br />ம்...! என்றால், கவிதையில் இருந்துதான் ஹைகூ ...
<br />
<br />என்னைப் போன்றவர்கள் வான் மழையில் நனைவதற்கு ஆசைப்படுவதே இல்லை...! இந்த மரத்தில் உதிர்ந்து விழும் சில துளிகள்... சுகமே அலாதிதான்!
<br />
<br />எனக்கு 'வைரமுத்து' வேண்டாம்... 'தண்ணீர் தேசம்'... ஜலதோஷம் பிடிக்கும்! 'இறையன்பு' போதும்... இதமாய் 'முகத்தில் தெளித்த சாரல்'... புத்துணர்ச்சி! (அப்பாடி! சேரல், பூபி, வீரு... எல்லாம் தூரமா இருக்கீங்க!)
<br />
<br />சரி! மழை புராணத்தை விடுங்கள்!... கவிதையை ஒரு வானமாகக் கொள்வோம்... ஹைகூ ... இதோ!... இந்த மரத்தின் இலையினைப் போல் சிறியது...
<br />
<br />வானம் எங்கே... இலை எங்கே!... ஆனால்... ஆனால்... அட!... இந்த மரத்தின் இலைகளையும்... அதற்கு அப்பால் தெரியும் வானத்தையும் பார்த்தால்...
<br />
<br />"வானம், இலைகளினிடையே சிறைப்பட்டிருப்பது போல் தோன்றவில்லை?"...
<br />
<br />சே! இதென்ன வெகுளிப்பேச்சு!... மேற்கோள் காட்டிய விதம் சரியில்லை!... இன்னும் கொஞ்சம் யோசி!
<br />
<br />யோசித்தால்...
<br />
<br />"எல்லைகள் இடப்பட்ட வானம்... எல்லைகள் இடப்பட்ட கவிதை... 'ஹைகூ'க்கள்"
<br />
<br />ம்... இது நன்றாக இருக்கிறது!...
<br />
<br />கவிதைக்கு எல்லையிட்டால் ஹைகூ... ஆயிற்று!
<br />
<br />இவ்வளவு சொல்லிவிட்டு ஒரு ஹைகூ சொல்லாமல் போனால் எப்படி...
<br />
<br />(சிலருக்கு ஏற்கனவே சொல்லியதுதான்...)
<br />
<br /></span>
<br /><span style="font-size:100%;color:#778899">
<br />"வானத்தின் எல்லைகள்
<br />நிர்மாணிக்கப்பட்டன
<br />இலைகளினூடே"
<br /></span>
<br />
<br /><span style="font-size:85%;color:#33ff33;"><span style="color:#3333ff;">:0) சுபி</span>
<br />
<br />
<br />
<br />சுபிhttp://www.blogger.com/profile/07033517900957047164noreply@blogger.com