<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss'><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866</id><updated>2009-12-26T19:47:23.504-08:00</updated><title type='text'>அ.ராமசாமி எழுத்துகள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default?start-index=26&amp;max-results=25'/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>121</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-4198043257608804311</id><published>2009-12-26T19:38:00.000-08:00</published><updated>2009-12-26T19:47:23.528-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-22'/><title type='text'></title><content type='html'>&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;வாக்கப்படும் மனிதர்கள்: &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அரசு அலுவலகங்கள் மீதும், பொதுத்துறை அலுவலகங்களின் மீதும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மீதும் தொடர்ந்து வைக்கப்படும் விமரிசனங்கள் சில உண்டு. முதன்மையான விமரிசனம் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவது இல்லை என்பது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பணிப்பண்பாடு –ஒர்க் கல்சர் - என்பதைக் கற்றுக் கொள்ளாமல் சம்பளம் வாங்குவதை மட்டுமே குறியாகக் கொண்டவர்களாக இருப்பதற்கு ஊழியர்கள் மட்டுமே காரணம் அல்ல; அவர்கள் அவ்வாறு ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் முக்கியக் காரணம் என்பதை அதன் நிர்வாகிகள் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அரசுத்துறைக்கும், பொதுத்துறைக்கும் பணியாற்ற வரும் ஒரு ஊழியருக்கு விருப்பு வெறுப்பற்ற பயிற்சிகள் கிடைக்கும் வாய்ப்புகள் இல்லை. மேல் அதிகாரிகள் சொல்லும் வேலைகளைச் சக பணியாளர்கள் செய்வதைப் பார்த்துத் தாங்களே கற்றுக் கொண்டு செய்ய வேண்டிய முறையே இங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. பணிப்பயிற்சி வகுப்புகள் எனத் தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், அவை வெறும் விழாக்களாகவும், சடங்கார்த்த நிகழ்வுகளாகவும் மட்டுமே நடைபெறுகின்றன. முறையான பயிற்சிகளோ, கற்றுக் கொண்டதைச் சோதிக்கும் முறைகளோ கடைப்பிடிக்கப்படுவதில்லை.&lt;br /&gt;இக்காரணங்கள் அல்லாமல் பணியாளர்கள் தேர்வில் இருக்கும் இன்னொரு பிரச்சினையும் பணிப் பண்பாடு உருவாகாமல் இருக்கக் காரணமாக இருக்கிறது. மைய , மாநில அரசுகள் பின்பற்றும் இட ஒதுக்கீடு சார்ந்த பணியாளர் தேர்வு முறையும், பொதுத்துறையை அரசியல் கட்சிகளின் அதிகார விளையாட்டுக் களமாகவும் ஆக்கி விட்டதும் பணிப் பண்பாடு உருவாகாமல் தடுக்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அரசு அலுவலகங்களுக்கு அதன் வாரியங்கள் பணியாளர்களைத் தேர்வு செய்யச் சில முறைகளைப் பின்பற்றுகின்றன. தேர்வுகள் நடத்துவது; நேர்காணல் செய்வது என அம்முறைகள் வெளிப் படையாகத் தெரிந்தாலும், அவற்றின் பின்னணியில் லஞ்சமும், அரசதிகாரத்தின் குறுக்கீடுகளும் இருக்கின்றன என்பதும் வெளிப்படையான உண்மைகளாக இருக்கின்றன. பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர் தேர்வு முறையோ இதைவிடவும் மோசமாக இருக்கின்றன. வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படைகளோடு நேர்காணல் மட்டுமே தேர்வுக்கான முறையாக இருக்கின்றன. இதன் காரணமாக கட்சி அரசியல், கூட்டணி அரசியல் போன்றன பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர் சேர்க்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;போக்குவரத்துக் கழகங்கள், கூட்டுறவு சங்கங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் எல்லாம் இந்த முறைகள் தான் நடைமுறையில் உள்ளன. இந்த உண்மைகள் நிர்வாகத்தின் தலைமையிடத்திற்கு வரும் பலருக்கும் தெரிந்த போதிலும், அதனை எப்படி எதிர் கொள்வது என்பதிலும், களையும் முறையைக் கண்டு பிடித்துப் பின்பற்றும் தைரியம் இல்லாததாலும் பல நேரங்களில் தங்களின் கையாலாகாத் தனத்தை நொந்து தவிக்கின்றனர்; அல்லது அதன் போக்கில் தாங்களும் பயணம் செய்து ஊழலில் பங்கு பெறுகின்றனர். பணியாளர்கள் தேர்வு இப்படித்தான் நடக்கிறது என்றாலும் எல்லா நிலையிலும் , இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்பதும், அதில் எந்த வித மீறலையும் யாரும் செய்து விட முடியாத படி கண்காணிப்புகள் இருக்கின்றன என்பதும் உண்மை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படியான பணியாளர் தேர்வு முறைகள் நிகழ்கால இந்தியாவின் பணிப்பண்பாட்டு உருவாக்கத்தில் பெரும் தடைகளாக இருக்கின்றன என்பதைத் திட்டமிடுபவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அறிந்தே உள்ளனர். அதன் ஆழத்தையும் அகலத்தையும் தெரிந்து கொண்டதன் மூலம் அதனை மாற்றுவதற்கான முறைகளையும் அளவுகோல்களையும் முன் மொழியாமல், அதற்குப் பதிலாக எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி விட்டால் அந்தப் பிரச்சினை சரியாகி விடும் என்று இன்னொரு மாற்றை முன் வைக்கின்றனர். ஆனால் சமூகத்தளத்திலும் பொருளாதார நிலையிலும் ஆகப் பெரும் வேறுபாடுகள் கொண்ட இந்தியாவின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் தனியார் மயம் தீர்வாகாது என்பதை எதிர்காலம் உணர்த்தப் போகிறது என்பதும் நிதரிசனமான உண்மை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படியான சிந்தனைகள் வரும் போதெல்லாம் அறிஞர்களின் சிந்தனைக் கட்டுரைகள் நினைவுக்கு வருவது போலவே சில படைப்புகளும் நினைவுக்கு வருவதுண்டு. சில படைப்புகள் பணிப்பண்பாட்டை நேர்மறையாக அணுகியிருக்கும்; சில படைப்புகள் எதிர்மறையாக அணுகும். வண்ணதாசன் கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதை பணிப் பண்பாட்டில் ஊறிப் போன ஒருவனை இரங்கத்தக்கவனாகப் படைத்துக் காட்டியதின் மூலம் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது.தனது அனுபவத்தையும், பரிச்சயமான மனிதர்களின் அனுபவம் சார்ந்த தருணங்களையும் மென்மையான உணர்வுகளையும் அன்பின் வெளிப்பாடுகளையும் எழுதும் வண்ணதாசனின் கதைகளைப் படிப்பது என்பது, தெரிந்தவர்களையும் தெரியாதவர்களையும் மிக அருகாமையில் சந்தித்து , மென்மையாக உரையாடும் மனநிலையை உண்டாக்கக் கூடியது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2001 இல் புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்ட வண்ணதாசன் கதைகள் என்ற மொத்தத் தொகுப்பில் அதுவரை வெளிவந்த ஒன்பது தொகுதிகளிலும் இடம் பெற்ற 117 கதைகளும் இடம் பெற்றுள்ளன. அதில் மூன்றாவது கதை கலைக்க முடியாத ஒப்பனைகள். மொத்தத் தொகுதிக்குப் பின்பும் அவரது கதைகள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய கதையல்லாத தொடர் கூடப் பல நேரங்களில் புனைகதையின் இயல்போடுதான் வெளிப்பட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;திருமண பந்தத்தைக் கிராமப் புற மொழி வாக்கப் படுதல் என்ற சொல்லால் குறிக்கிறது. வாழ்க்கைப் படுதல் என்ற சொல்லின் திரிபு இது. ஆணும் பெண்ணும் சேர்ந்து இணைகிறார்கள் என்றாலும் வாழ்க்கைப் படுதல் என்ற சொல் பெண்ணைச் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒரு பெண் தான் நமது மரபான திருமணங்களில் வாழ்க்கைப் பட்டு மணமகன் வீட்டிற்குப் போகிறாள். அப்படிப் போன பின் அவள் அந்த வீட்டின் உறுப்பினளாக- அதன் பகுதியாக ஆகி விட வேண்டும் என எதிர் பார்க்கப் படுகிறாள். அவளது விருப்பங்கள், ஆசைகள், நண்பர்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அங்கு தொடர முடியாது. அதுவரை அவளுக்கு இருந்த சொந்த பந்தங்களும் இரண்டாம் இடத்திற்குப் போகக் கணவனின் சொந்த பந்தங்கள் முதலிடத்திற்குப்போட்டியிடுவார்கள். இவற்றையெல்லாம் உணர்ந்தவளாகவும் ஏற்றுக் கொள்பவளாகவும் இருக்க வேண்டும் என்பதைத்தான் வாழ்க்கைப் படுதல் என்ற சொற்றொடர் குறித்து நிற்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;திருமண பந்தத்தின் வழியாகப் பெண்ணொருத்தி அடையும் நிலையைச் சிலர் பணியிடம் வழியாக உருவாக்கிக் கொள்வதுண்டு. தனக்குக் கிடைத்த வேலையையே காதலித்து, அதில் கிடைக்கும் இன்பத்தையே ரசிக்கப் பழகி அதுவாகவே ஆகி விடுவார்கள். அவர்களின் பணியிட அடையாளமே வெளி அடையாளமாக மாறிப் போகும். வாத்தியார் மாமா, போலீஸ் தாத்தா, கலைக்டர் சித்தப்பா, டீச்சர் அக்கா என உறவினர்களால் அழைக்கப் படுவதோடல்லாமல் சுற்றியிருப்பவர்களும் அப்படியே அழைக்கத் தொடங்கும் போது, அந்த அடையாளம் கலையாத ஒப்பனையாக மாறிச் சுகமாகவும், சுமையாகவும் ஆகி விடக் கூடும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கலைக்க முடியாத ஒப்பனைகள் கதையில், வங்கியில் காஷியராகப் பணியாற்றும் ஒருவனுக்குள் அவனது பணி அடையாளம் உண்டாக்கும் மனநிலையை- சுகத்தையும் சுமையையும் -அற்புதமாகப் படம் பிடித்துள்ளார் வண்ணதாசன். நண்பனின் திருமணத்தில் பங்கேற்கும் ஒரு காட்சியின் வழியாக அந்த மனநிலையை வாசிப்பவர்களுக்குக் கடத்தும் வண்ணதாசன் மொழி வெகு எதார்த்தமானது. இனி அவரது கதையின் வரிகளையே வாசிக்கலாம்: &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;“காஷுவல் லீவ் மிச்சமிருப்பது இரு தினங்கள்தான். இன்னும் நான்கு மாதங்களில் எத்தனையோ நிகழும். அதற்கு ஒரு நாளாவது வேண்டும்” இது கதையின் தொடக்கம்.&lt;br /&gt;“ பந்தலுக்கு வெளியே வந்ததும், அவனுக்குக் கண்கள் ஒரேயடியாகக் கூசின. எழுந்திருக்க நேரமில்லாமல் அதிகமாக வேலை செய்துவிட்டு வருகிற நாளில் எல்லாம் அவனுக்குக் கண்கள் வழக்கமாகக் கூசும்”-அதன் முடிவு இப்படி எழுதப் பட்டிருக்கிறது. இடையில் அவன் கடந்தது வங்கிப் பணி அல்ல; நண்பனின் திருமணம் தான். ஆனால் அவன் ஒவ்வொரு கணமும் வங்கிப் பணியாளனாகவே உணர்கிறான்; உணர்த்தப் படுகிறான் எனக் காட்டுவதில் வண்ணதாசனின் கதை நுட்பம் கொள்கிறது. அப்படி உணர்த்துவதில் நண்பனின் திருமணச் சூழல் முக்கிய காரணமாக இருந்தது என்றாலும், அவனுக்கு ஏற்கெனவே அறிமுகமான சித்து என அழைக்கப்படும் சித்தரஞ்சனும், பாப்பாவும் இயல்பாக வினையாற்றுகிறார்கள் என்பதைக் கதையை வாசிப்பவர்கள் யாரும் உணர முடியும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;“ரெண்டு நாளைக்கு முன்னால் வருகிற ஆளா?.. ”சித்து கேட்டான். “காஷுவல் லீவ் ஜாஸ்தி யில்லை. அநேகமாக ஆயிப் போச்சு இல்லாட்டி வந்திருப்பேன்.”&lt;br /&gt;“இதையெல்லாம் பெயரா பேசுது.காஷியர் தான் பேசுது.”&lt;br /&gt;“என்ன செய்ய?”&lt;br /&gt;“அவன் நேத்தியிலேர்ந்தே முனங்கிக் கிட்டிருக்கான். உன்னைக் காணோம்னு” கைக்குட்டை இப்போது முக்கோணமான பட்டையாக மணிக்கட்டில் சுற்றியிருந்தது.&lt;br /&gt;“எது கல்யாண வீடு? இதோ தெரியுதே இதா? இல்லை கடைசிக்குப் போகணுமா?”&lt;br /&gt;“இதுதா, இதுதான், போறயா, வந்திர்றேன்”&lt;br /&gt;“ மாப்பிள்ளை பொண்ணையெல்லாம் எங்கே?” இன்னும் சரியான கல்யாணத்திற்குத்தான் வந்திருக்கிறோமா என்று சந்தேகம்.&lt;br /&gt;கோயிலுக்குப் போயிருக்காங்க. அங்கே வச்சு சாமிக்கு முன்னால் தாலி கட்டி இங்கே கூட்டிக் கிட்டு வராங்க. பந்தி பலகாரத்துக்கு வசதியா அமர்த்திப் போட்டிருக்கு”&lt;br /&gt;கொஞ்சம் வெளியே வந்தான். நடையில் ஒரு அவசரம். காலுக்கு முன்னால் கண் வெளியே பாய்ந்தது. ஒருத்தி வேகமாக வந்து கொண்டிருந்தாள். பாப்பாதான். சுளீர் என்று இவனுக்குச் சொடுக்கியது. ’ஆர்த்தி.. ஆர்த்தி’ என்று சொல்லிக் கொண்டு வந்தாள்.&lt;br /&gt;“சட்டை கசங்காமல் நிக்கிதே, பாயசம் சாப்பிட்டுப் போகலாம்னு வந்திருக்கா இது?” கையில் வெற்றிலை பாக்கு அடுக்கின ட்ரே ஒன்றைக் கொடுத்து, எல்லோரையும் உபசரிக்கச் சொன்ன பாப்பாவை மறுக்க முடியவில்லை.&lt;br /&gt;“காஷியர் வெளியே நிக்கலாமா? ஒரு சேரைப் போட்டு இருக்கட்டும்” பாப்பா ஒரு புது நோட்டையும், பேனாவையும் கொடுத்தாள். கையில் பெரிய பிளாஸ்டிக் டப்பா ஒன்று இருந்தது. இன்னொரு நாற்காலியில் விபூதி மரவையும், வெற்றிலை பாக்கு வைத்த சின்னத் தாம்பாளமும் இருந்தது. நோட்டில் மஞ்சளில் பெரிய பிள்ளையார் சுழி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தாக்க வருபவர்கள் போல நாலைந்து பேர் அடைசலாய் வந்தார்கள். ‘அவசரப்படாதீங்க. இருங்க, இருங்க’ அவனுக்கு எரிச்சல் வர ஆரம்பித்து விட்டது. பாங்கிற்குப் போனதும் வருகிற எரிச்சல்( ரூபா கொடுக்கிறதில் அவசரப்பட்டால் நடக்காது உங்களுக்கும் கஷ்டம். எனக்கும் கஷ்டம்).&lt;br /&gt;விபூதி பூசினார்கள். பெயரைச் சொன்னார்கள். பெயரைச் சொன்னபிறகு பெயர் சரியாக எழுதப் படுகிறதா என்று நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.( பணம் கட்டியாச்சுண்ணா போயிக்கிட்டே இருங்க. அடுத்த ஆள் கட்டட்டும். அடுத்த ஆள் கட்டட்டும். அனாவசியமா கவுண்டர் முன்னால் வட்டம் போடாதீங்க)&lt;br /&gt;“ மாப்பிள்ளை பெண்ணுக்கு காஷியர் கலர் சப்ளை பண்ணக் கூடாதா?” பாப்பா கேட்டுக் கொண்டே குனிந்து ஜடைபில்லை, கொண்டைத் திருகு எல்லாம் கனத்து அமுக்கின ஜடையைத் தூக்கிப் பெண்ணின் கழுத்தடி வியர்வையை ஒற்றினாள். குனியும் போது பாப்பாவின் வயிறு ஜமுக்காளம் சுருங்கினது மாதிரி மடங்கியது. இவன் கூட்டலைச் சரி பார்த்து விட வேண்டும் என்று நினைத்தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;யாரும் வரவில்லை. வருவார்களா என்று தெரியவில்லை. பணமும் கையுமாக வெறுமனே எங்கேயும் போக முடியாமல் உட்கார்ந்து இருப்பது கஷ்டமாக இருந்தது( ஒரு மணிக்கு மேல்தான் முகூர்த்தம் வச்சிருக்கா? சீக்கிரம் வந்து பணத்தைக் கட்டினா என்ன? வழக்கமா வர்ற பார்ட்டியெல்லாம் இப்படிச் செய்தீங்கண்ணா எப்படி?)&lt;br /&gt;ஒரு தடவை மீண்டும் கூட்டி, கையில் இருக்கிற பணமும் வரவு வைத்திருக்கிற பணமும் பொருந்துகிறதா என்று பார்த்துக் கொண்டான். பிறகு நிம்மதியாய்க் கொஞ்சம் வெளியில் நின்று விட்டு வரலாம். அடுத்த வீட்டுப் பணம், அடுத்த வீட்டுக் கணக்கு. சரியாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;அவன் குனிந்து நோட்டின் கடைசிப் பக்கத்தைத் திருப்பி, ரூபாய் பத்தில் இவ்வளவு, ஐந்தில் இவ்வளவு என்று எதிர் எதிரே பெருக்கி மொத்தமாய்க் கூட்டிவிட்டு, நோட்டில் வரவு வைத்ததையும் பார்த்தான்.&lt;br /&gt;முகம் விழுந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்காவது அதிகம் எழுதியிருப்போமா? சில்லரை கேட்கையில் யாருக்காவது ஜாஸ்தி போயிருக்குமோ? மூணு மூணு ரூபாயாக எழுதியவர்களில் யாராவது கை மறதியாக் குறைத்துக் கொடுத்து விட்டார்களா? எப்படி ரெண்டு ரூபாய் குறையும்” ( “ என்னம்மா எதாவது டிபரன்ஸா..” ரெண்டு ரூவா ஷார்ட்” டோட்டல் பாத்தாச்சா? பாத்தாச்சு.. கழுதையைத் தூக்கிப் போடு. சாப்பிட்டுட்டு வந்து பாத்துக் கிடலாம். ஓ. எம்.எஸ். ட்டேலி ஆயிட்டுதா?” ) இருப்பது கலியாண வீடா, பாங்கா?)&lt;br /&gt;ஒரு சிகரெட் இருந்தால் கொடு. வெளியில் கொஞ்ச நேரம் நிற்கிறேன்” என்று வாங்கிக் கொண்டு புறப்பட்டான். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-4198043257608804311?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/4198043257608804311/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=4198043257608804311' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/4198043257608804311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/4198043257608804311'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/12/blog-post_8132.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-8173237770916821841</id><published>2009-12-26T19:33:00.000-08:00</published><updated>2009-12-26T19:38:22.805-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-20'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#333300;"&gt;&lt;span style="color:#993399;"&gt;குற்றவுணர்வின் மகத்துவம்: பாவண்ணனின் துரோகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்திய அரசு தனியார் மயக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆன போதும் அரசாங்க வேலைகளுக்கு உள்ள மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. அதிலும் கடந்த வருடம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாகத் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி அரசு உத்தியோகத்தின் வலிமையை இன்னும் கூடுதலாக்கி விட்டது. ‘கால் காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசு வாங்குபவர்’ என்ற பேச்சு தூக்கலாகவே ஒலிக்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தனியார் நிறுவனங்களில் எப்போதும் கத்தி தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லும் நபர்கள், அரசுத்துறை அலுவலகங்களில் இருக்கும் பக்கவாட்டுக் கத்திகளைப் பற்றி அறியாதவர் களாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். தனியார் நிறுவனங்களில் தொங்கும் கத்தி ஆலோசனை செய்யாத கத்தி; உடனே பாய்ந்து விடும் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அரசாங்க அலுவலகங்களில் இருக்கும் கத்திகள் ஆழமாக யோசித்துப் பாயும்; நிதானம் கடைப்பிடிக்கப் பட்டாலும் பாய்வதிலிருந்து பின் வாங்குவதில்லை என்பது என்னவோ உண்மை தான்.&lt;br /&gt;நிறுவனங்களின் இயக்கம் தனி மனிதனின் சுகங்களையும் துக்கங்களையும் எப்போதும் கணக்கில் கொள்வதில்லை; வேலைக்கு வருபவர் பெண்ணாக இருந்தால் அவளது கணவனின் மனம் பற்றியோ, குழந்தையின் உடல் நலம் பற்றியோ நினைக்கக் கூடாது; ஆணாக இருந்தால் அவனது காதலும் சாகசங்களும் நிறுவனத்திற்குப் புறம்பான விஷயங்கள். பணியில் இருக்கும் போது அவன் என்னவாக இருக்கிறானோ அதுதான் அடையாளம். அதிகாரி என்றால் அதிகாரி; குமாஸ்தா என்றால் குமாஸ்தா. காவல்காரன் என்றால் காவல்காரன்; டிரைவர் என்றால் டிரைவர். இதுதான் நிறுவனத்தின் கணிப்புகள்.&lt;br /&gt;இயங்கும் எந்திரத்தின் திருகாணி போல அசைந்து கொண்டே இருக்க வேண்டியது மனிதனின் வேலை. அவனிடம் வேறு எதையும் நிறுவனம் எதிர்பார்ப்பதில்லை. இந்த இறுக்கமான இயங்குநிலையைப் பலரும் விமரிசனம் செய்தவண்ணம் அவற்றில் வேலைகளைச் செய்து கொண்டே இருப்பார்கள். மாதச் சம்பளக்காரர்களின் பணிநேர மனநிலை என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரிவதில்லை. அவற்றின் உறுப்பினராக மாறி, அவற்றில் ஏதாவதொன்றில் பணியாற்றத் தொடங்கும் போது இந்த உண்மை புரியக்கூடும். இதில் அரசுத்துறை நிறுவனம், தனியார் நிறுவனம் என்ற வேறுபாடுகள் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இரண்டு வகைப்பட்ட பணிகளில் ஈடுபட்டவர்களையும் நெருங்கிப் பேசும் வாய்ப்புகள் உண்டு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;சமீபத்தில் பெய்த பெருமழையின் போது திருநெல்வேலிக் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் செய்த வேலை ஆச்சரியமூட்டக் கூடியதாக இருந்தது. இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற போது கால்களை வைக்கவே கூச்சப்படும் வகையில் கிடந்த சகதிக் காட்டில் நாள் முழுவதும் நிற்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தார்கள். மாநகராட்சிப் பணியாளர்கள் செய்ய வேண்டிய வேலைகளைக் கூட அவர்கள் செய்தார்கள். காக்கிச் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டுக் கூடைகளில் கருங்கல் சல்லியை அள்ளிச் சகதியில் போட்டு நிரப்பிக் கொண்டிருந்தார்கள். மேலதிகாரி அங்கே இருக்கிறார் என்றால் எந்தக் கேள்வியும் இல்லாமல் பணி ஆற்றும் மனம் அவர்களுடையது. இவர்களே பல நேரங்களில் செய்ய வேண்டிய அடிப்படையான வேலையையும் கூடச் செய்யாமல் இருக்க வகை தேடுவதையும் நான் பார்த்திருக்கிறேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட சூழலில் தனிமனிதர்கள் தவறுகள் செய்யக் கூடும்; அதைப் புரிந்து கொள்ளாமல் தண்டனை வழங்கி விடுவது அதிகாரத்தின் முகம் மட்டுமல்ல. தனிமனிதர்களின் சுயநலம் சார்ந்ததும் கூட என நினைக்கும் மனம் ஒரு உன்னதமான மனநிலை. அதிலும் அரசு இயந்திரத்தின் அதிகாரப் படிநிலையில், அதைச் செலுத்தும் இடத்தில் இருக்கும் ஒருவர் அவ்வாறு நினைப்பது பொருத்தமற்றது எனக் கருதும் நிலைமை நிலவும் சூழலில் இக்கதையில் வரும் அந்தப் பாத்திரம் தன்னைத் தொடர்ந்து குற்றவுணர்வுக்குள்  நிறுத்திக் கொண்டே கதையைச் சொல்லுகிறது. நடந்து போன தவறுக்கு நேரடியான காரணமாகத் தான் இல்லாத போதும்- தரப்பட்ட தண்டனைக்கும் தான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்ற போதும்- அந்தப் பாத்திரம் குற்றவுணர்வுடனேயே தன்னைப் பிணைத்துக் கொள்கிறது. இப்படிப்பட்ட அபூர்வமான மனிதர்களைக் காண்பது கதையில் மட்டுமே சாத்தியம் எனப் பலர் நினைக்கலாம். நான் நேரிலும் பார்த்திருக்கிறார்கள். ஒரு மனிதன் பல நேரங்களில் மோசமானவனாக வெளிப்பட்ட போதிலும், சில தருணங்களில் தனது குற்றவுணர்வை வெளிப்படுத்தவே செய்கிறான் என்பதே எனது அனுபவம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தொடக்கத்திலிருந்தே சிறுகதை எழுதுவதில் விருப்பம் காட்டி வந்த பாவண்ணன் கர்நாடக மாநில தொலைத்தொடர்புத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிவருபவர். நுட்பமாகப் படித்தால் கதை நிகழ்வுகள் பல அந்தத்துறை சார்ந்து இருப்பது புலனாகலாம். ஆனால் அவரது நாவல்கள் பெரும்பாலும் அவரது பிறந்த ஊர்ப் பிரதேசமானப் புதுச்சேரியைக் களனாகக் கொண்டவை. சமூக நிகழ்வுகளைப் படம் பிடிப்பதாக மொழியைப் பயன்படுத்தும் நுட்பங்கள் கொண்டவர். கர்நாடகத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்ததால் கன்னட மொழியைக் கற்று நாடகங்களையும் தலித் தன் வரலாறுகளையும் தமிழுக்குத் தந்துள்ளார். அதற்காகச் சாகித்திய அகாடெமி விருதையும் பெற்றுள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அரசு சார்ந்த- சேவைத்துறை- ஒன்றில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபடும் பலதரப்பட்ட பணியாளர்களின் மனப்போராட்டத்தைப் பேசும் பாவண்ணனின் துரோகம் கதை திரும்பத் திரும்ப வாசிக்கப்பட்ட கதைகளில் ஒன்று. அந்தக் கதையின் மையக் கதாபாத்திரமாக இருக்கும் கதைசொல்லிக்குப் பெயர் எதுவும் இல்லை. நான் என்று தன்மை ஒருமையில் அந்தப் பாத்திரம் தனது அலுவலகப் பணி சார்ந்த நிகழ்வுகளை அடுக்கிக் காட்டும் விதமாக எழுதப் பட்ட கதை அது. கதைசொல்லியாக வரும் பாத்திரம் கதையை எழுதிய கதாசிரியர் தானோ என்ற சந்தேகத்தை வலுவாக ஏற்படுத்தும் சொல்முறை கொண்ட கதை துரோகம்.&lt;br /&gt;பாவண்ணனின் துரோகம் கதை இப்படித் தொடங்குகிறது: &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;“ ஒங்கள் உட்டா ஒத்தாசைக்கு யார்கிட்ட போவேன் சார்?” உடைந்த குரலில் கெஞ்சிய முனுசாமியை ரொம்ப நேரத்துக்கு நேருக்கு நேர் பார்க்கச் சங்கடமாய் இருந்தது. அவனது கண்கள் புதைந்த குண்டுகள் போல உள்ளடங்கிப் பரிதாபமாய் இருந்தன. இப்படி விவரித்துத் தொடங்கும் கதை மெல்ல மெல்ல விரிந்து சிக்கல்களாகவும் அவிழ்ப்புகளாகவும் மாறிமாறி நகர்கிறது. அக்கதையின் விசேஷம் என்னவென்றால் ஏற்படும் சிக்கலுக்கும், விடுவிப்புக்கும் காரணமாகக் கதைசொல்லியே காரணகர்த்தாவாக இருக்க நேர்கிறது என்பதுதான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நடந்தது இதுதான். மங்களூரின் எல்லையில் இருக்கும் ஊரொன்றில் எங்கல் ப்ராஜெக்ட் சோதனைகளை முடித்துக் கொண்டு எல்லாரும் புறப்பட்டோம். அப்போதே இரவு எட்டு ஆகி விட்டிருந்தது. மேல் அதிகாரி, நாலு டெக்னீஷியன்கள், இரண்டு மஸ்தூர்கள், நான் எல்லோரும். முனுசாமி தான் வண்டி ஓட்டினான். காலை புறப்படும் போதே சாயங்காலம் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று சொல்லியிருந்தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அது நடக்கவில்லை; அதற்குப் பதிலாக அன்றிரவு விபத்து நடந்து விடுகிறது. அதை டிரைவர் முனிசாமி விவரிப்பதைக் கேளுங்கள்: “ ஆக்ஸிடெண்ட்டானது தப்புதா, இல்லன்னு சொல்லல. தலவிதி அப்பிடி சார். என் நெலமையும் யோசிச்சுப் பாக்கனும். நமக்கு வேலதா பெரிசு. ஊரூரா ஓடி ஓடி செய்யணும்னு பொழப்பு. ஒரு ஜேஈ போனா இன்னொரு ஜேஈ வராரு. ஒரு ஏஈ போனா இன்னொர் ஏஈ வராரு. ஆனா எல்லாருக்கும் ட்ரைவர் ஒருத்தர்தான். மாசத்துக்கு ரெண்டு நாளு லீவ் கெடைச்சாலே ஏதோலாபம். அப்பப் போயி பொண்டாட்டிகூட இருந்தாதான் உண்டு. ரெண்டு மாசமா டார்கெட்டார்கெட்னு ஊருக்கே உடல. சுத்திக்னே இருந்தம். ஊருக்குப் பக்கத்ல வந்ததும் ஊட்டு ஞாபகம் வந்திடுச்சி. போயி பொண்டாட்டி புள்ளய பார்க்கணும்னு வேகம். அதனாலதா அன்னிக்கு சாயங்காலமே பர்மிஷன் கேட்டேன். நீங்க என்னடான்னா ராத்திரி ஆக்கிட்டீங்க. அவ்ளோ நேரத்துக்கு மேல கெளம்பிட்டன். சீக்கிரமா திரும்பிரனும்னுதா நெனச்சன். என் தலையெழுத்து வழில இந்தமாதிரி ஆய்டுச்சி. நா இன்னாசார் செய்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சோர்ந்து போய் வெளியே வந்ததும் முனிசாமி நெருங்கினான். அவனைப்பார்க்கவே வருத்தமாய் இருந்தது. “ என்ன சொல்றாரு சார் பெரியவரு” “ சார்ஜ்ஷீட் தரணுமாம்” “ நீங்கதான் எழுதினீங்களா..” சங்கடத்துடன் அவனை நிமிர்ந்தேன்.&lt;br /&gt;“ தப்புக்கள ஒத்துக்கிறியா இல்லியான்னு எழுதித்தரணும் முனுசாமி” “ அதான் எப்படி ஆச்சின்னு சொன்னேனே சார்” “ எழுதித் தரனும் முனுசாமி”&lt;br /&gt;“ எழுதித்தந்தா உட்டுடுவாங்களா சார்?” ஏற்கெனவே போலீஸ் கேஸ் ஒண்ணு தெனமும் வந்து போலீஸ்காரன் பாடாபடுத்தறான். இது நடுவுல இந்தச் சங்கடம் வேறயா சார்”&lt;br /&gt;“ டிபார்ட்மெண்ட்ல ரொம்ப ப்ரஷர் முனுசாமி, வேற வழியில்ல”&lt;br /&gt;“ நீங்களே பதில் எழுதிக் குடுங்க சார்”&lt;br /&gt;“ நானா?” அந்த நேரத்தில் தான் உடைந்த குரலில் முனுசாமி கெஞ்ச, சங்கடத்தில் நகர்ந்து நின்றேன்.&lt;br /&gt;திரும்பவும் மேசைக்கு வந்து எழுதத் தொடங்கினேன். முனுசாமியின் கதையை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தேன்.&lt;br /&gt;“ நீங்கதா அவனுக்கு வக்கீல் போல”&lt;br /&gt;“ எழுதத் தெரியலன்னு சொன்னான். என்ன செய்ய முடியும். சொல்லுங்க. எல்லார்க்குமா இங்கிலீஷ் தெரிது” கடைசி வார்த்தையை வேண்டுமென்றே அழுத்தினேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;“ ஒரு ஆபீஸர் ஆபீஸுக்குத்தா சின்சியரா இருக்கணும். அதுக்குத்தா சம்பளம். துரோகம் பண்றதுக்கில்ல.” என்னை மிகவும் உசுப்பிவிட்டது இவ்வார்த்தைகள். வாதிக்க இது சந்தர்ப்பமில்லை என்பதால் அமைதியானேன். என் மௌனம் அவர் தொடர்ந்து பேசத் தடையாய் இருந்தது. புறப்பட்டுப் போய்விட்டார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இரண்டாவது கட்ட விசாரணையும் இறுதிக்கட்ட விசாரணையும் பத்து நாட்கள் இடைவெளியில் நடந்தன. இதற்கான மடல்களையும் நானே தான் அதிகாரிக்கு எழுதித் தர வேண்டியிருந்தது. முனுசாமிக்கும் அதை மொழி பெயர்த்து விளக்க வேண்டியிருந்தது. என் புத்திக்குத் தட்டுப் பட்ட விதிகளின் ஓட்டைகள் பற்றியும் எடுத்துரைத்தேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட நாளில் அதிகாரி வண்டியில் புயல்போல வந்து இறங்கினார்.. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கைப்பையைத் திறந்து சில தாள்களை எடுத்து என் பக்கம் நகர்த்திப் படிக்கச் சொன்னார் அவர். என் மேல் நம்பிக்கையற்றதால் கோட்ட அலுவலகத்தில் வைத்துத் தானே எழுதியதாய் கர்வமுடன் சொன்னார். ஆறுமாசம் சஸ்பெண்ட். இரண்டு வருஷ இன்க்கிரிமெண்ட் கட் இதுதான் விசாரணை எழுதிய தீர்ப்பு. திடுக்கென்று தூக்கிப் போட்டது. என்னையே கொண்டு போய் முனுசாமியிடம் கொடுக்கச் சொன்ன தோரணை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“ ஆபீஸர்லாம் சேர்ந்து இப்பிடித் துரோகம் பண்ணீட்டிங்களே. நாயமா சார் இது” என் சமாதானம் எதையும் பொருட்படுத்தாமல் உச்ச ஸ்தாயியில் சத்தமிட்டான் அவன். மோதிவிடுவான் போல நெருங்கி நின்று கூச்சலிட்டான். இதுவரைக்கும் பார்த்திராத முனுசாமியின் முகம் அது. “ ப்ளீஸ், கொஞ்சம் அமைதியாக இருங்க” என்றபடி எழுந்த என்னை மறித்து அவன் கூறினான். “நீங்க சொல்லிக் குடுத்த மாதிரிதான் சார் செஞ்சன். கடசில இப்டி முதுவுல குத்தீட்டீங்களே சார்” &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;விவரிக்கப்பட்ட கதையில் வரும் முனுசாமி பரிதாபத்துக்குரியவனா? அவனுடைய மீட்சிக்கு வழி சொல்லத் தெரியாத கதைசொல்லியாக அந்தப் பாத்திரம் பரிதாபத்துக்குரியவரா? என்பதுதான் கதை எழுப்பும் சிக்கல். அதிகாரியின் சொல்லைத் தட்டாமல் செய்து முடிக்கும் அதே வேளையில் முனுசாமியைக் காப்பாற்றிவிடவும் முடியும் என நம்பும் அவருக்கு ஏற்பட்டது தோல்வி. அந்தத் தோல்வி முனுசாமியின் தோல்விதான் என்றாலும், தனக்கு ஏற்பட்ட தோல்வியாகவே அந்தப் பாத்திரம் கருதுகிறது. அதனால் தான் கடைசியில் முனுசாமி “ ஆபீஸர்லாம் சேர்ந்து இப்பிடித் துரோகம் பண்ணீட்டிங்களே. நாயமா சார் இது” என்று கேட்ட போது என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கிறது எனக் கூறலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தனியார் நிறுவனமோ, அரசு நிறுவனமோ, குற்றவுணர்கள் நிரம்பிய அதிகாரிகளால் அவை நிரப்பப் படும் போது தனிநபர்களுக்கு மட்டுமல்ல; சமூகத்திற்கே அவை வெளிச்சங்களைத் தரக்கூடும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-8173237770916821841?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/8173237770916821841/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=8173237770916821841' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/8173237770916821841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/8173237770916821841'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/12/blog-post_104.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-1498009329235508393</id><published>2009-12-26T19:15:00.000-08:00</published><updated>2009-12-26T19:23:12.160-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-19'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;இன்னும் சில நாசகாரக்கும்பல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;தினசரிச் செய்தித்தாள்களை வாசிக்கிறவர்களுக்கு நாசம் என்ற சொல்லை விளக்கிச் சொல்ல வேண்டி யதில்லை. ‘பயங்கரவாதிகளின் நாசவேலை’ என்ற சொற்றொடர் தினசரிகளின் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்றொடர்களில் ஒன்றாக மாறிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த வாரம் பயங்கரவாதிகளின் இடத்தைப் புயல் மழை பிடித்துக் கொண்டு விட்டது. ‘புயல் மழையால் பயிர்கள் நாசம்; வீடுகள் சேதம்’ எனச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாசம் பயங்கரவாதிகளோடு சேர்க்கப் படுவதும், மழைக்குப் பின்னால் சேர்க்கப்படுவதும் ஒன்றல்ல. இரண்டுக்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு. மழை இயற்கையின் வேலை. தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் நாசவேலை திட்டமிடப்பட்ட ஒன்று. திட்டமிட்டுக் காரியத்தை நடத்திப் பேரழிவை ஏற்படுத்துவது நாசவேலை. இப்படிப் பட்ட நாசவேலைகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதாகவும், திடீர்த்தாக்குதல்களாகவும், கட்டுப் பட்டுக் கிடக்கும் இயற்கையின் கட்டுப்பாடுகளை நீக்கி விடுவதாகவும் உலகம் முழுவதும் அறியப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளைப் படைப்பாளிகள் நாசவேலை எனக் கருதிப் படைப்பாக்கம் செய்வதில்லை. அதற்கு மாறாகத் திட்டமிட்டு அப்பாவிகளை மேலெழ விடாமல் தடுக்கும் நிகழ்வுகளையே நாசவேலை என்று வரையறை செய்ய முற்படுகின்றனர். சமூகத்தில் அப்பாவிகளாக இருக்கும் மனிதர்களைக் கெடுப்பதற்குச் சதித்திட்டங்களைத் தீட்டுபவர்களைக் ‘கும்பல்’ என்ற சொல்லால் குறிப்பதோடு, நாசம் என்ற சொல்லுடன் இணைத்து நாசகாரக்கும்பல் என்றொரு சொற்கூட்டத்தை உருவாக்கித் தந்துள்ளது நவீன இலக்கிய உலகம். அப்படி உருவாக்கித் தந்த முன்னோடி, தமிழ்ச் சிறுகதையின் முன்வரிசை எழுத்தாளரான புதுமைப்பித்தன் என்பதைப் பலரும் அறிந்திருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னிடம் நிலபுலமோ , சொத்தோ இல்லாததால் தான் இந்த ஊர் தன்னை மதிக்கவில்ல; உதாசீனப் படுத்துகிறது. அதை மாற்றம் வேண்டும் என்றால் தன்னைச் சிறுமைப் படுத்திய சொந்தக் கிராமத்திலிருந்து வெளியேறி, வெளிநாட்டுக்குச் சென்று பணம் சம்பாதித்துக் கொண்டு திரும்பவும் வந்து சொந்த ஊரில் ஒரு நிலம் வாங்க வேண்டும் என நினைக்கிறான் ஒரு நாவிதன். அவனது எண்ணம் நிறைவேறவும் வாய்ப்பு ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கையில் பணத்தோடு வேறு பெயரில் திரும்பவும் வந்தவன் அந்த ஊரில் நிலம் ஒன்றை வாங்க விலைபேசி முடிக்கிறான். ஆனால் பத்திரம் முடிப்பதற்கு முன்னால், அவன் யார் என்ற உண்மை ஊரில் உள்ள ஆதிக்கசாதிகளான வேளாளர்களுக்கும் மறவர்களுக்கும் தெரிந்து விடுகிறது. அதைத் தெரிந்து கொண்டதால், அவனை அந்த நிலத்தை வாங்க விடாமல் தடுத்து விடுகின்றனர். அப்படித் தடுத்த அந்த வேலையைச் சதி என்றும், அப்படிச் செய்தவர்களை நாசவேலைக் கும்பல் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார் புதுமைப்பித்தன். அவர் வைத்த நாசகாரக்கும்பல் என்னும் தலைப்பு பல பேரை ஈர்த்த ஒரு தலைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சில கவிஞர்கள் அந்தத் தலைப்பைத் தங்கள் கவிதைக்குச் சூட்டியுள்ளனர்; சில கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரையை இதே தலைப்பில் எழுதியுள்ளனர். புனைகதை யாசிரியரும் நாடகாசிரியருமான இந்திரா பார்த்தசாரதி தான் எழுதிய சிறுகதை ஒன்றிற்கே அதே தலைப்பைத் தந்துள்ளார். அந்தத் தலைப்பு புதுமைப்பித்தனின் சிறுகதைத் தலைப்பு என்று தெரிந்தே கொடுத்த தலைப்பு அது. அவர் காட்டிய கும்பலுக்குப் பதிலாக வேறுவகையான நாசகாரக் கும்பல் ஒன்றைத் தனது கதையில் காட்டுகிறார்.&lt;br /&gt;புதுமைப் பித்தனின் நாசகாரக்கும்பல் வேளாண்மை சார்ந்த நிலமானிய மதிப்புகளில் ஊறிய ஆதிக்கசாதி மனப்பாங்கு கொண்ட நாசகாரக் கும்பல் என்றால், இந்திரா பார்த்தசாரதியால் அடையாளப்படுத்தப்படும் கும்பலை பணம் சார்ந்த முதலாளிய வாழ்க்கையால் மதிப்பீடுகளை இழந்த கும்பல் என அடையாளப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்தில் சிக்கிய எவருக்கும் முதலில் தர வேண்டியது மருத்துவ உதவி என்பதை உணராமல், எவ்வளவு நஷ்ட ஈடு வாங்குவது என்பதில் தொடங்கி விரியும் இந்தக் கதை, அதிகார வர்க்கத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையேயுள்ள உறவு எப்படிப்பட்டது என்பதையும், எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இடத்தில் பணம் இருக்கிறது என்பதையும் காட்ட முயல்கிறது. தன்னிடம் உள்ள பணத்தின் வலிமையாலும் அரசியல் அதிகாரத்தின் மூலமும் முறையான நடைமுறைகளை நடக்கவிடாமல் தடுப்பதோடு, பாதிக்கப்பட்டவரின் ரத்த உறவுகளைக் கூட தரப்போகும் பணத்தின் மூலம் மனம் மாறச் செய்யும் நிலைமைகள் இருக்கின்றன என்பதைச் சொல்லும் விதமாகக் கதையின் நிகழ்வுகளை அமைத்துக்காட்டுகிறார் காட்டுகிறார் இ.பா. அடிப்படையில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய ஆர்.பார்த்தசாரதி, தனது படைப்பு களுக்கான அடையாளமாகச் சேர்த்துக் கொண்ட அவரது மனைவியின் பெயரோடு சேர்த்தே அறியப்படுபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்ககாலத்தில் சமூக விமரிசனமும், அரசியல் விமரிசனமும் கொண்ட புனைகதைகளுக்காக அதிகம் கவனிக்கப்பட்டவர். தனது பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவி காரணமாக டெல்லி என்னும் அதிகார வர்க்க நகரத்தில் மனிதர்கள் இயங்கும் மனநிலையையும் நெளிவு சுளிவுகளையும் நுட்பமாகக் கவனித்து எழுதியவர். அந்த வகையில் அவரது தந்திரபூமியும் சுதந்திர பூமியும் கவனிக்கத்தக்க நாவல்கள் எனச் சொல்ல வேண்டும். அவரது சாகித்ய அகாடெமி விருது பெற்ற குருதிப்புனல் நாவலும், நிலமென்னும் நல்லாள் நாவலும் தஞ்சை மாவட்ட நிலம்சார் பிரச்சினைகளை மையப்படுத்தி விவாதிக்கும் முக்கிய நாவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து அரசியல் விமர்சனத்திற்குப் புனைகதைகளைக் கருவியாகக் கொள்ளும் இந்திரா பார்த்தசாரதி, நவீனநாடகப் பிரதிகள் பலவற்றை எழுதிக் காத்திரமான பங்களிப்பு செய்ததன் மூலம் இந்தியாவின் முக்கியமான நாடகக்காரராக அறியப்படுபவர். 15 நாடகங்கள் வரை எழுதிய இந்திரா பார்த்தசாரதி அவரது நாடகப் பங்களிப்பிற்காகச் சரஸ்வதி சம்மான் என்னும் பிர்லா பவுண்டேஷன் விருதையும் பெற்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இ.பா., சிறுகதைக்கான இலக்கணங்களையோ வரையறைகளையோ குறித்துக் கவலைப் படுபவரல்ல. விசாரணைக்குட்படுத்த விரும்பும் மனப்பாங்கு மட்டுமே அவருக்கு முக்கியம்.. அவரது சிறுகதைகள் ஒரு மையப்புள்ளியில் தொடங்கித் தனி மனிதப் பிரச்சினைக்குள் செல்வது போல் தோன்றினாலும், கதை முடியும் போது சமூகத்தின் பொதுவியாதிகளில் ஒன்றை விசாரணைக்குட் படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றும் தன்மை கொண்டவைகளாகவே விளங்குகின்றன. அம்பி என்ற ஒரு சிறுவனுக்கு ஏற்படும் ஒரு விபத்தைச் சித்திரித்துக் காட்டுவதன் மூலம், அதில் பங்கேற்கும் பாத்திரங்களின் மனப்பாங்குகளை விவரித்துக் காட்டுகிறது இ.பா.வின் நாசகாரக் கும்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;மையப் புள்ளியிலிருந்து விலகிச் செல்லுவது இ.பா.வின் புனைகதை எழுத்துக்கள் அனைத்திலும் காணப்படும் பொதுத் தன்மை. பாத்திரங்களின் அறிமுகம், அவை உலவும் இடம், அவர்களுக்கிடையே ஏற்படும் முரண் என விரியும் தன்மை கொண்ட கதைகளை அதிகம் எழுதியுள்ள கதாசிரியர் அவர் என்பதைப் பல கதைகள் காட்டுகின்றன. இந்த அம்சங்கள் அடிப்படையில் ஒரு நாடகத்தின் அம்சங்கள் என்பதையும் சுட்டிக் காட்டுவதோடு, இந்த அம்சங்களிலிருந்து வளர்ந்தே பின்னர் நாடகாசிரியராக மாறினார் என்று கூடச் சொல்லலாம் நாசகாரக் கும்பல் கதையில் இடம் பெறும் பாத்திரங்களும் அவர்களுக்கிடையே உள்ள உறவுகளும் இப்படி இருக்கிறது:&lt;br /&gt;&lt;br /&gt;அவனது கவனப்பிசகால் கால்கள் நசுக்கப்படும் அம்பி, படிப்பில் கெட்டிக்கார அக்கிரகாரப் பையன் – அப்பா இல்லாதவன்; அம்மா மட்டும் உண்டு; ஜானகி – கல்யாணமாகிக் கணவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்பியின் அக்கா. ஸ்கூல் டீச்சர்; பெயரிடப்படாத அவளது கணவன்; அம்பியின் அத்திம்பேர்; தாலுகா ஆபிஸ் கிளார்க். அம்பியின் காலை நசுக்கிய பஸ்ஸின் டிரைவர் வேலு; ராஜூ- கண்டக்டர். அந்தப் பஸ்ஸின் ஓனர் கருணு. அது ஒரு டூரிஸ்ட் பஸ் . அந்த விபத்தை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர், அம்பியைப் பரிசோதித்து அறிக்கை கொடுக்க வேண்டிய ரவி என்னும் டாக்டர் (வயது30). அவருடன் பணியாற்றும் மிஸஸ் தாமஸ் என்னும் நர்சு. அம்பியின் பக்கத்துவீட்டில் வசிக்கும் வக்கீல் குமாஸ்தா பாலு அய்யர் என ஒரு சிறுகதைக்கு இருக்க வேண்டிய எண்ணிக்கை அளவை விடக் கூடுதலான பாத்திரங்களைப் படைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதையில் இடம்பெறும் சில காட்சிகளை வரிசைப் படுத்திக் கவனித்தால் எத்தகைய மனிதர்களால் ஆனது இந்த உலகம் என்பதையும், அதிலும் நமது நிகழ்காலம் எப்படிப்பட்ட மனிதகளால் நிரம்பியிருக்கிறது எனக் காட்ட விரும்பும் அவரது நோக்கம் புரியக்கூடும். கதையில் அதன் ஆரம்பக்காட்சி பற்றிய குறிப்பு இப்படி இருக்கிறது:&lt;br /&gt;“அம்பி, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். எதிரே சேறும் சகதியுமாயிருந்த வராகக் குளத்தைத் தூர்த்துக் கொண்டிருந்தார்கள்” அப்பொழுது ஒரு பஸ் வரும் சப்தம் கேட்டது. அம்பி உட்கார்ந்தபடியே தலையை நீட்டித் தெருக் கோடியை நோக்கினான். கருணுடூரிஸ்ட் பஸ். ஏன் இந்தப் பக்கம் வருகிறது? அவனுக்கு ஞாபகம் வந்தது. வழக்கமான பாதையில் குழி தோண்டி வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;இனித் தொடரும் சில குறிப்புகளைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;“ பையன் திண்ணையிலே உட்கார்ந்திண்டிருந்ததை நீ பாக்கலே? கண் அவிஞ்சா போச்சு? காலை சட்னியாக்கிட்டியே.. இந்த அம்மாவுக்கு ஒரு வழி சொல்லிவிட்டுப் போ..” டிரைவருக்குக் கோபத்தினால் முகம் சிவந்தது. நன்றாக அடிபட்டுக் கிடக்கும் பையனை வைத்துக் கொண்டு வியாபாரம் பேசுகிறாரே, இவர் யாராக இருக்கும்? “ இந்தப் பையனுக்கு நீங்க என்ன வேணும்?”&lt;br /&gt;“ நான் பக்கத்து வீட்டில குடியிருக்கேன்.. நான் யாராயிருந்தா உனக்கென்ன?..” டிரைவர் கண்டக்டரிடம் சொன்னான். “ ராஜு, பையனைத் தூக்கி வண்டியிலே எடுத்துட்டுப் போவோம் வா.. டைம் வேஸ்ட் ஆகிக்கிட்டிருக்கு..” அம்பியின் அம்மா, அவன் உடம்பைக் கட்டிக் கொண்டு அழுதாள். இது ஒரு காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த டாக்டர் இளைஞன். பெயர் ரவி. முப்பது வயசுக்குள் தானிருக்கும். குறுந்தாடி வைத்திருந்தான். வேலு சொன்னதை அவன் அமைதியாகக் கேட்டான். சொல்லப் போனால், கேட்பது போலிருந்தான். அவன் கை வேறொரு நோயாளிக்கு மருந்து எழுதிக் கொண்டிருந்தது. “ நர்ஸைக் கூப்பிடுங்க்..” என்றான் ரவி. அதற்குள் அவளே வந்து விட்டாள். “ பையனை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போங்க..” “ டாக்டர் , இது போலீஸ் கேஸ்..” “ ஐ. நோ.. டிரைவர் நீங்க.. போய் போலீசுக்குப் ஃபோன் பண்ணுங்க..” “ போலீஸ் பையனோட ‘கண்டிஷனை’ப் பார்த்தப்புறம் ஆபரேஷன் பண்ணறது நல்லது டாக்டர்.” “ மிஸ் தாமஸ், கைண்ட்லி டு வாட் ஐ ஸே..” டாக்டர் எழுந்தான்.&lt;br /&gt;இது இன்னொரு காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் வெளியே வந்தார்கள்.இன்ஸ்பெக்டர் முதலாளியிடம் சொன்னான். “டாக்டர் ரிப்போர்ட் தான் சாதகமா இல்லே.” “ நான் யாரு. என்ன செய்ய முடியும்னு சொன்னீர்களா அந்த மடையன்கிட்டே?” “ சொன்னேன். அவன் கேக்க மாட்டேங்கிறான்.. கத்துக் குட்டி ராஸ்கல்..” ரவி அப்பொழுது வெளியே வந்தான். “ எல்லோரும் இப்படிப் போயிட்டீங்கன்னா யாரு இங்கே இருப்பாங்க, பையனைப் பாத்துக்க!”&lt;br /&gt;“கொஞ்ச நேரம் கழிச்சு என் வொய்ப் இங்கே வருவா..” என்றார் அம்பியின் அத்திம்பேர்.&lt;br /&gt;“ என்னய்யா டாக்டரே! ரிபோர்ட் இப்படிக் கொடுத்திருக்கீங்க?” என்று கேட்டான் முதலாளி. “ உங்க இஷ்டப்படி ரிபோர்ட் கொடுக்கணும்னா நான் எதுக்காக டாக்டராக இருக்கணும்?” “ நீங்க யாருன்னு நினைச்சிண்டிருக்கீங்க. இப்படிப் பேச?” என்று சீறினான்.&lt;br /&gt;இது மற்றொரு காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார்: “ டாக்டர்.. கொஞ்சம் மரியாதையா பேசுங்க.” “ என்னடா மரியாதை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு? ஒரு உசிரு உள்ளே மன்றாடிக்கிட்டு இருக்குது... எப்பொடாப்பா பஸ்ஸை ஏத்தப் போறேன்னு காத்துக் கிட்டிருந்தாப்பலே, எல்லாரும் பொணத்தைக் கொத்தித் தின்ன வந்துட்டீங்களே, படுபாவிகளா? இதோ பாருய்யா முதலாளி.. உன் பிச்சைக் காசு எனக்கு வேண்டாம். நான் உண்மையைச் சொல்றேன்... பஸ்ஸை ஏத்தினது நான் தான்.. கோர்ட்லே கேஸ் வரட்டும்.. நாட்டை நாற அடிச்சிட்டு இருக்கிற கும்பல் யார் யாருன்னு எல்லாருக்கும் தெரிய வேணாம்? டாக்டரய்யா, வாங்க. பையனைக் கவனிச்சுக்க நான் இருக்கேன்..”என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றான் வேலு.&lt;br /&gt;இது கதையின் கடைசிக் காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் படைத்துக் காட்டுவதன் மூலம், சமூகத்தின் பல தரப்பட்ட மனிதர்களும், இயல்பான குணங்களை இழந்து பணத்திற்காகக் காரியங்கள் செய்பவர்களாகவும், அதிகாரத்தின் நெருக்கடிக்குள் சிக்கி விடக் கூடியவர்களாகவும் ஆகி விடுகின்றனர் எனக் காட்டுகின்றார். அதே நேரத்தில் இத்தகைய நெருக்கடிக்குள் ஒரு சில மனிதர்கள்- டிரைவர் வேலுவைப் போல, டாக்டர் ரவியைப் போலச் சிலர் தங்களை இழந்து விடாமல், மனிதர்களாக இருக்கவும் முயல்கிறார்கள்; அப்படிப் பட்டவர்கள் பல நேரங்களில் தோற்றுப் போனாலும், அப்படிப் பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டும் என்று உறுதியைக் காட்ட வேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை. இந்தக் கடமையிலிருந்து தான் பின் வாங்கி விடக் கூடாது என இந்திரா பார்த்தசாரதி கருதுகிறார். இதற்கு அவரது நாசகாரக்கும்பல் என்னும் இந்தக் கதை ஒரு உதாரணம் .&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-1498009329235508393?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/1498009329235508393/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=1498009329235508393' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/1498009329235508393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/1498009329235508393'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/12/blog-post_26.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-2155942068731513704</id><published>2009-11-20T05:52:00.000-08:00</published><updated>2009-11-20T06:00:17.365-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-18'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;வாழ்வின் நாடகம்: திலிப்குமாரின் ‘நிகழ மறுத்த அற்புதம்’&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#993399;"&gt;=========================================================&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மரபையும் இந்தியப் பாரம்பரியத்தையும் பின்பற்றுகிறவர்களின் அடையாளம் என்ன? அவற்றிலிருந்து விலகிச் சென்றவர்களின் அடையாளங்கள் எவை? எனக்கேட்டால் நம்முன்னே இருப்பவர்களைச் சரியாக இனம் பிரித்துக் காட்டி விடுதல் ஒருவருக்கும் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சரியாகச் சொல்வதானால் நாம் இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்குள் எந்தப் பக்கம் இருக்கிறோம் என நம்மையே அடையாளப்படுத்துவது கூடச் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. இவ்விரு வகைப்பாட்டிற்கும் உரியவர்கள் கிராமம்-நகரம் என வெளிகள் சார்ந்து வாழ்கிறார்கள் என உறுதியாகக் கூறிவிடலாம் என்பது கூட அவ்வளவு சுலபமாக இல்லை. கிராமத்து மனிதனிடம் நவீன மனிதனின் மனநிலை வெகுசுலபமாக வெளிப்பட்டு ஆச்சரியப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. நகரத்து மனிதர்கள் விடாப் பிடியாகப் பாரம்பரியத்தைப் போற்றிக் கொண்டு அமைதி வாழ்க்கைக்குள் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்போதைய துணிச்சந்தையில் கிடைக்கும் ஜீன்ஸ், கோட் போன்ற ஆண்களின் உடைகளோடும், மிடி, சுரிதார் எனப் பெண்களின் ஆடைகளோடும் நவீன மனிதர்கள் அலைகிறார்கள் என அடையாளப்படுத்தலாம் என்று நினைத்தால், அந்த ஆடைகளுக்குள்ளும் மரபைப் பின்பற்றும் மனநிலையோடு வலம் வருகிறார்கள் என்பதும் புரிகிறது. வெள்ளை வேட்டி, சட்டை சகிதமாகச் சுற்றும் அரசியல்வாதிகளும், அவரது தொண்டர்களும் பாரம்பரிய மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அரசியல்வாதிகள் என்பது ஓர் உதாரணம் தான்.  ஆடைகளுக்குள் அதற்கான முழு அர்த்தத்தோடும் மனம் ஒன்று படிந்து கிடைக்கிறது என்பதில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அப்படியானால் இவ்விரு வேறுபாடுகளும் அர்த்தமில்லாதவை என விட்டு விடக்கூடியவை தானா? அப்படியும் சொல்லி விட முடியாது. ஐரோப்பியர் களின் வருகையினால் உண்டான கல்வி, கலை இலக்கியச் சிந்தனை, அரசியல் பொருளாதாரத் தாக்கங்கள், ஊடக அறிவு போன்றவற்றால் கட்டமைக்கப் பட்டுவிட்ட  இந்திய மனநிலை பாரம்பரியத்தையும் மரபையும் எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் கூடிக் கலைவதற்கும், கொண்டாடுவதற்கும் காரணங்களாக இருந்த திருமணங்கள், திருவிழாக்கள், குடும்பம் மற்றும் கோயில் சார்ந்த சடங்குகளும் அர்த்தமற்றவை போல இருந்தாலும் தேவையானவை போல விடாமல் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன. அவைகளிடமிருந்து விட்டு விலகி விட ஒவ்வொரு தனிமனித மனமும் ஆர்வமாக இல்லை. நேரமில்லை காரணமாக அவற்றை முழுமையாக ஈடுபட்டுச் செய்ய முடியவில்லையே என்று தவிப்பே முதன்மையாக இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இலக்கியத்தின் தோற்றம் தொடங்கி இன்று வரை அதற்கான அடிப்படை உணர்ச்சியாக இருப்பது காதல் என்பதை ஒவ்வொரு இலக்கிய மாணவனும் ஒத்துக் கொள்ளவே செய்வான். அதே போல் ஒவ்வொரு காலகட்டத்துச் சமூக மாற்றத்திற்கும் சளைக்காது ஈடுகொடுத்துத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும் சமூக நிறுவனம் குடும்பம். இவ்விரண்டும் எல்லாவற்றிற்குமான அடிப்படைக் கச்சாப் பொருள்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.&lt;br /&gt;பாரம்பரியமும் மரபும் காதல் என்பதை எப்போதும் நேர்மறையாக எதிர்கொண்டு ஏற்றுக் கொண்டதில்லை என்ற போதிலும், காதல் என்பதை வெறுப்புக்குரிய ஒன்றாகக் கருதி ஒதுக்கி விட வேண்டிய ஒன்று என்றும் சொல்லி விட வில்லை. அதற்கு மாறாக அது ஒரு புனிதமான ஒன்று எனக் காட்டிப் போற்றிப் புகழ்ந்து தனிமைப் படுத்திட விரும்பியது. அதே போல் குடும்பம் என்பதை விட்டுக் கொடுத்தல் என்பதன் மேல் கட்டப்பட்ட மாறாத ஒரு அமைப்பாகப் பாரம்பரியம் நினைக்கிறது. ஆனால் நவீனத்துவம் அப்படி நினைப்பதில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நவீனத்துவத்திற்கும் பாரம்பரியத்திற்கும் இடையே இருக்கும் இந்த உரசல் நமது காலப் படைப்பாளிகளின் முக்கியமான பாடுபொருளாக- உள்ளடக்கமாக இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகள் தொடங்கி எண்பதுகளின் கடைசிவரை எழுதிய தீவிர இலக்கியவாதிகளின் தன்னிலையே இந்த இரட்டை எதிர்வுக்குள் எதாவது ஒரு பக்கம் சாய்வது என்பதாகத் தான் இருந்தது. இதனைத் திறனாய் வாளர்கள் காலனியத்திற்குப் பிந்திய மனநிலை எனக் குறித்துக் காட்டுவார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அரசியல் விடுதலையில் பருண்மையாகத் தன்னைக் காட்டிக் கொண்ட நவீனத்துவம், சமூக விடுதலையினூடாகத் தனிமனித விடுதலை நோக்கி நகர்ந்து இன்று அனைவருக்குள்ளும் சுதந்திரம் என்னும் வேட்கையை உருவாக்கி விட்ட பெருநெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது. அந்த வேட்கையின் வெளிச்சத்திலேயே எல்லாவற்றையும் விளக்கிடப் பார்க்கும் நவீன மனநிலைக் காதலையும் குடும்ப அமைப்பையும் கூட விடுதலையின் பரிமாணங்கள் வெளிப்படும் வெளியாக மாற்றவே விரும்புகிறது.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt; நவீனத்துவ மனநிலைக்குள் நுழைந்து விட்ட இந்திய வாழ்க்கைக்கும் இடையே இருக்கக் கூடிய ஆகப்பெரிய வேறுபாடு வெளிப்படும் சமூக நிறுவனம் எது? எனக் கேட்டு விடை தேட முயலும் சமூகவியல் மாணவனின் ஆய்வுக்களமாக இருப்பது இந்தியக் குடும்ப அமைப்பு. காதல் என்பது இரு நபர்கள் சம்பந்தப் பட்டது என்பதில் கருத்து வேறுபாடோ கொள்கை வேறுபாடோ காட்டாத அனைவரும் காதலின் தொடர்ச்சியாக அமையப்போகும் திருமணத்தையும் அப்படிப் பார்ப்பதில்லை. இந்தியத் திருமணங்கள், அவை காதல், கலப்பு, ஏற்பாட்டுத் திருமணங்கள் என எவையாக இருந்த போதும் ’இருமனங்களின் சங்கமம்’ என்பதற்குப் பதிலாக ’இரு குடும்பங்களின் கலப்பாகவே- இருசமூகக் குழுக்களின்’ சங்கமமாக இருக்கின்றன. ஆனால் நவீனத்துவத்தின் அடையாளமான மேற்கத்திய வாழ்க்கையில் திருமணங்கள் கூட இரு மனங்கள் சம்பந்தப்பட்டவை தான். விவாகங்களை இருமனங்களின் சங்கமமாகப் பார்க்கும் மேற்கத்திய சமூகம், விவாகரத்துக் களையும் அதே நிலைப்பாட்டோடு தான் எதிர்கொள்கின்றன. ஆனால் இந்திய மனநிலை அப்படி அல்ல என்பதுதான் முக்கியமான வேறுபாடு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஐரோப்பிய இலக்கியத்தில் தனிமனிதனின் –மனுசியின் விடுதலையை மையப்படுத்திக் காட்டி விட விரும்பித்தான் பலரும் முயன்றார்கள்; வெற்றி பெற்றார்கள். ஹென்றிக் இப்சன் போன்ற நாடகாசிரியர்கள் பொம்மை வீடு போன்ற நாடகங்களை எழுதிக் காட்டினார்கள். அவரது நோரா வெகுசுலபமாக வீட்டின் முன்வாசல் கதவைப் பின்காலால் எம்பித் தள்ளி விட்டு வெளியேறினாள். ஆனால் இந்தியாவில்- தமிழில் எந்தப் படைப்பாளியும் நோராவைப் போன்றப் பாத்திரங்களைப் படைத்துக் காட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆர்வம் காட்டவில்லை என்பதை விட அது யதார்த்தம் என்பதல்ல என்றே சொல்ல விரும்பினார்கள்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;போதும் இந்தக் குடும்ப வாழ்க்கை எனச் சொல்லிக் கிளம்பிச் சாமியான கணவன்களை எழுதிக் காட்டிய படைப்பாளிகள் பெண்களை அவ்வாறு படைத்து விடவில்லை. கணவனை விட்டுப் பிரிந்து விட நினைத்துக் கிளம்பி விட்டுத் திரும்பவும் தவிப்போடு திரும்பிய  பல பெண்களையே தமிழ்ச் சிறுகதைகளிலும் நாவல்களிலும் நான் வாசித்திருக்கிறேன். அவற்றில் பல கதைகள் நினைவில் இருக்கின்றன என்றாலும் திலிப்குமாரின் அந்தக் கதை போல என் மனதை விட்டு நீங்காத கதையாக வேறொன்றைச் சொல்ல முடியாது. நிகழ மறுத்த அற்புதம் என்னும் உருவகத் தலைப்பில் அவர் எழுதிய அந்தக் கதை, வடிவத்திலும் புதுமையானது. முன்மாதிரியோ பின்பற்றுதல்களோ இல்லாத கதை. ஜேம்ஸ், திருமதி ஜேம்ஸ் எனக் கணவன் –மனைவி என இரு கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும் நீண்ட உரையாடலாக எழுதப்பட்டது. தொடக்கத்தில் பேசுபவளாக இருக்கும் திருமதி ஜேம்ஸ் தொடர்ந்து எதுவும் பேசாதவளாகவே இருந்து விட்டுக் கடைசியில் தன் நிலையிலிருந்து இறங்கி விடுவதாகப் படைக்கப் பட்டுள்ளாள். கதையைத் திலிப்குமார் இப்படித் தொடங்குகிறார்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;திருமதிஜேம்ஸ் தன் சிறிய பெட்டியுடன் கிளம்பினாள்.&lt;br /&gt;“ நான் போகிறேன்” என்றாள்.&lt;br /&gt;சிறிது நேரமாக அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், “ என்ன அவ்வளவு தானா?.. ”        “  நிஜமாகவா..? என்னை விட்டுப் பிரியும்போது உனக்குச் சொல்ல வேறு ஒன்றுமே இல்லையா..? “                      என்று கேட்டார்.“ ஒன்றுமே இல்லை என்றுதான் நினைக்கிறேன்”&lt;br /&gt;“ எங்கே போவாய்..? ”          “ எங்கோ..  வெகுதூரம்.. யாருமற்ற தனிமைக்கு..இறக்கும் போதேனும் நான் மட்டும் நான் மட்டும் தனியாக வெறுமையுடன் கொந்தளிப்பற்ற மனத்துடன் இறக்க விரும்புகிறேன்”.”&lt;br /&gt;“ பைத்தியம் போல் உளறாதே. இறக்கும்போதுஎல்லாரும் அப்படித்தான் இறக்க வேண்டும். அவரவர்கள் மட்டுமே தனியாக, தனித்தனியாக, உலகமே திரண்டு வந்து நின்றாலும் மரணம் உன்னைத் தனிமையில் ஆழ்த்தித் தான் அணுகும்”.&lt;br /&gt;திருமதிஒன்றுமே சொல்லவில்லை&lt;br /&gt;“ உன் 42 ஆவது வயதில் இப்படியொரு முட்டாள் தனத்தைச் செய்ய விரும்புவாய் என்று நான்&lt;br /&gt;சற்றும் எதிர்பார்க்கவில்லை.என் பேச்சைக் கேள். பேசாமல் இங்கேயே இருந்து விடு”&lt;br /&gt;“ இல்லை நான் போக வேண்டும்”. “ அப்படியே தான் என்றாலும், நீ விரும்பும் தனிமைக்கு இங்கு என்ன குறைவு.? நீயும் நானும், எவ்வளவு ஆண்டுகளாக - இதே வீட்டில் தான் என்றாலும்- இரண்டு முதிர்ந்த பிராணிகளைப் போல் தனித்தனியாகத் தானே  இருந்து வருகிறோம். நீ விரும்பினால் இன்று முதல் வேறு வேறு அறையில் படுத்துக் கொள்ளலாம். ”&lt;br /&gt;“ இல்லை, நான் நிச்சயித்து விட்டேன்.நான் போய்த்தான் தீர வேண்டும்”&lt;br /&gt;இப்படி உறுதியைக் காட்டிய திருமதி ஜேம்ஸ் கடைசியில் வெகு நேரமாகத் தன் கணவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த திருமதி ஜேம்ஸ் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு மெல்ல அவரிடம் சென்று, அவரது தோள்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள் என முடிக்கிறார். இடையில் இருவருக்கும் நடக்கும் பலவிதமான பரிமாணங்கள் கொண்ட உரையாடலில் ஒருவித நாடகத்தன்மை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்து அவர் பேசிக் கொண்டே இருக்க, ’திருமதி ஜேம்ஸ் ஒன்றும் சொல்லவில்லை’ எனத் திரும்பத்திரும்ப  எழுதிக் காட்டும் உத்தியைத் திலீப்குமார் அற்புதமாகக் கையாண்டுள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலின் பகுதிகள் சிலவற்றை நாடக உரையாடலாக மாற்றியே  நான் வாசித்திருக்கிறேன். இதோ சில.&lt;br /&gt;திரு:                [ அவளுக்கு நேர் எதிரில் அமர்ந்து விட்டார்]&lt;br /&gt;முதுமையையும் வெறுமையையும் யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாது. என்றாலும் ஒருவருக்கொருவர் துணை என்ற ஆசுவாசம் நமக்கு நிச்சயம் கிடைக்கும். இரண்டு குடிகாரர்களைப் போல், தனித்தனிக் கோப்பைகளில் நமக்கான விஷத்தைக் குடிப்போம். என் விஷம் என்னைக் கொல்லும் வரை அல்லது உன் விஷம் உன்னைக் கொல்லும் வரையேனும்.&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை]                                                                                     #####&lt;br /&gt;&lt;br /&gt;திரு:                [தன் மனைவியின் கைகள் தன்மீது பட்டவுடன் திரு ஜேம்ஸ் மேலும் சத்தமிட்டு அழுதபடி அவளை இறுகத் தழுவிக் கொண்டார்.]&lt;br /&gt;திருமதி           [ஒன்றும் சொல்லவில்லை]                                                                                            #####&lt;br /&gt;&lt;br /&gt;திரு:                உன் அந்த நாளைய முகம் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. செம்மையும் பளபளப்பும் மிகுந்த கன்னங்களுடன் ஓர் அற்புத ஜ்வாலையைப் போல் நீ என்முன் நின்ற கோலம் எனக்கு என்றுமே மறக்காது. அந்த நேரத்தில் நான் உன்னை எவ்வளவு நேசித்தேன் தெரியுமா?&lt;br /&gt;திரு:                அப்போது நானும் அழகாக இருந்தேன். என் புஜங்களையும் மார்பு ரோமங்களின் அடர்த்தியையும் கருமையையும் பார்த்துப் பார்த்து எவ்வளவு மமதை கொண்டிருந்தேன்.&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை]                                                                                           #####&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு:                நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நான் குடிகாரன். கவிஞன். அதனால் உளறுகிறேன். எப்போதும் தரையில் கால் பதியாமல் மிதக்கிறேன் என்றுதானே.&lt;br /&gt;திரு:                உண்மைதான். நான் மிதப்பில்தான் உளறுகிறேன் என்றே வைத்துக் கொள். ஆனால் தரையோடு பிணைந்த வாழ்க்கையின் சிறுமை, மிதக்கும்போதுதான் கண்களுக்குப் புலப்படும்.&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை]                                                                                              #####&lt;br /&gt;&lt;br /&gt;திரு:                இத்தனையும் நீ என்னை விட்டுப் பிரிந்துவிடுவாய் என்பதற்காகச் சொல்லவில்லை.[ அவளைத் தூக்கி நிறுத்த நினைத்துக் கைகளை நீட்டுகிறார். அவள் அந்தக் கரத்தைப் பற்றிக் கொள்ளாமல் எதிர்ப்புறம் பார்த்து எழுகிறாள். பெட்டிக்கருகில் சென்று விட்டாள்]&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை.]                                                                                            #####&lt;br /&gt;           &lt;br /&gt;திரு:                சரிதான் . நீ என்னை விட்டுப் பிரிவது ஒரு வகையில் ரொம்பவும் சரிதான். ஒருவேளை நான் நீயாக இருந்து நீ நானாக இருந்திருந்தால் நிச்சயம் வெகு நாட்களுக்கு முன்பே உன்னை விட்டு நான் பிரிந்திருப்பேன்.&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை]                                                                                              #####&lt;br /&gt;&lt;br /&gt;திரு:                வாழ்க்கையில் அநேக சந்தர்ப்பங்களில் நம்மால் சரியானதை யோசிக்க மட்டுமே முடிகிறது. செய்ய முடிவதில்லை. வாழ்க்கை எத்தனை கொடூரமானது என்பதை நீ அறியமாட்டாய்.&lt;br /&gt;திரு:                நானும் அப்படி யோசித்துப் பார்த்ததுண்டு. ஆனால் நான் வேறு மாதிரி இருந்திருப்பேனா என்பதை நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. இதுவரை வாழ்ந்ததை விடச் சற்றுக் கண்ணியமானவனாக வாழ்ந்திருக்கக் கூடும். என்றாலும் அப்போதும் நான் இன்று போலவே ஒரு பரிதவித்த ஆத்மாவாகவே இருந்திருப்பேன். அப்போதும், இப்போது போலவே காலத்திரைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வெறுமைதான் என் கண்களில் பட்டிருக்கும்.[ பேசியபடி இடதுபுற மேடைக்கு வந்து விட்டான். கையில் ஆல்பத்தைத் தொலைக்காட்சிப் பெட்டிக்கருகில் உள்ள இடத்தில் வைக்கிறார்]&lt;br /&gt;திரு:                உனக்குத் தெரியுமா? வாழ்க்கையின் வெறுமையை அனுபவங்களால் நிரப்பிச் சரிக்கட்டிவிட முடியாது. அன்பாலுங்கூட அதை நிரப்பிவிட முடியாது என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரு:                வயோதிகத்தில் அனுபவங்களுக்கும் அன்புக்கும் வாய்ப்புகளே இல்லை. வயோதிகம் எல்லாவற்றையும் உலர்த்திவிடும்.&lt;br /&gt;வயோதிகம் எவ்வளவு இரக்கமற்றது தெரியுமா? அது உனக்குப் புலப்பட இன்னும் நாட்கள் பிடிக்கும். நீ என்னைவிடப் பதினைந்து வயது இளையவள். உன் கால்களில் இன்னும் பலம் இருக்கிறது. நடப்பதற்கும் கடப்பதற்கும் உனக்குப் புரியாது.&lt;br /&gt;திரு:                என் பேச்சு நாடகத்தன்மை மிகுந்ததாக இருக்கிறது என்று உனக்குத் தோன்றுகிறதா? வாழ்க்கை எப்போதும் அப்படித்தான். ஆனால் நாம் தான் அது அப்படியில்லை என்று எதிர்நாடகம் ஆடுகிறோம்.&lt;br /&gt;திரு:                வயோதிகம் எப்படிப் படர்கிறது தெரியுமா? வைகறைக்கு முன்பான அந்த இளம் இருட்டில் ஒளியின் முதல் கீற்றுச் சந்தடியின்றி திடீரென்று இழைந்துவிடுவதைப் போல் வெகு ரகசியமாய் உனக்குள் பாய்ந்துவிடும் அது. உன் நாளங்களை வற்றச் செய்துவிடும். உன் அழகிய கரிய கேசத்தை உதிர்த்து, உன் காதோரங்களில் நரைபடியச் செய்துவிடும்.&lt;br /&gt;திரு:                நான் சொல்வதை, நீ என்னை விட்டுப் பிரிந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் நீ நிச்சயம் உணர்வாய்.&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை]                                                                                             #####&lt;br /&gt;&lt;br /&gt;திரு:                என் பேச்சைக் கேள்! நீ என்னை விட்டுப் பிரிவது ஒரு வகையில் சரிதான் என்றாலும்கூட நீ என்னை விட்டுப் பிரியாதே. தயவுசெய்து வயோதிகத்தின் வெறுமையையும் தனிமையையும் ஏற்றுக் கொள்ளாதே. அது மிகவும் பயங்கரமானது. அதைவிட உன்னை நீ மாய்த்துக் கொள்; உனக்காக நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை.அவரது குரூரத்தைப் புரிந்து கொண்டவளாய்க் கோபத்துடன் கிளம்பத் தயாரானவளிடம்]&lt;br /&gt;திரு:                நீ நினைப்பது போல் இயற்கை அவ்வளவு ரம்மியமானதல்ல. இதோ பார்! வெளியே பனிக்காலம் முடிந்து வசந்தம் வரத்தொடங்கிவிட்டது. எங்கும் பசுமை படர்ந்து சிரிக்கிறது. ஆனால் என்ன? அது உன்னை என்ன செய்யும்? ஒன்றுமே செய்யாது. வசந்தம் வயதானவர்களை ஒன்றுமே செய்யாது. வாழ்க்கையின் வெறுமைக்கு முன் இயற்கையின் பாத்திரம் ஒன்றுமில்லை.&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை]                                                                                                #####&lt;br /&gt;&lt;br /&gt;திரு:                ஏன் கர்த்தருக்குக் கூட வெறுமையில் ஏதும் பாத்திரம் இல்லை. ஒருவேளை வழங்கியதைத் தவிர.&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை]&lt;br /&gt;திரு:                சொல்வதைக் கேள். பேசாமல் இங்கேயே இருந்துவிடு. நம் பிரிவு நம்மிருவருக்கும் மேலும் அதிகமான துக்கத்தைத் தான் தரும். நாற்பத்திரண்டாவது வயதில் ஒருவிடலைச் சிறுமியைப் போல் நடந்து கொள்ளாதே.&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை]                                                                                             #####&lt;br /&gt;&lt;br /&gt;திரு:                காலம் எல்லாவற்றையும் ஆற்றிவிடும் அல்லது மறக்கச் செய்துவிடும்.&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை]                                                                                               #####&lt;br /&gt;&lt;br /&gt;திரு:                [ஜன்னல்களைத் திறந்து வைத்து]&lt;br /&gt;பார். குளிர்ந்த மலைக்காற்று கூர்மையாக வீச ஆரம்பித்துவிட்டது. வெளியே முற்றாக இரவு சில்லிட்டுப் பரவி விட்டது. நிலவும் நட்சத்திரங்களும் அற்ற பனிக்காலத்து இரவு எல்லையற்ற ரகசியம்போல் சூழ்ந்து விட்டது. அங்கு ஒன்றுமில்லை. இருளைத் தவிர. மௌனமும் வெறுமையுமே படிந்திருக்கிறது எங்கும்.&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை. காற்று உண்டாக்கிய உணர்வில் ஈடுபட்டவளாய்த் திரும்பவும் பெட்டியை மடியில் வைத்தவளாய்ச் சோபாவில் அமர்கிறாள்]&lt;br /&gt;திரு:                [பொருட்கள் ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்தபடி]இந்தப் புராதன வீட்டின் நிசப்தம் என்னை அச்சுறுத்திக் கொன்றுவிடும். தயவுசெய்து என்னை விட்டுப் போகாதே, என் தளர்ந்த முகத்தைப் பார். என் நடுங்கும் மெலிந்த கைகளைப் பார்.&lt;br /&gt;திருமதி:          [ஒன்றுமே சொல்லவில்லை]                                                                                                  #####&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-2155942068731513704?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/2155942068731513704/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=2155942068731513704' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/2155942068731513704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/2155942068731513704'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/11/blog-post_20.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-9031283443257300526</id><published>2009-11-19T19:04:00.000-08:00</published><updated>2009-11-19T19:07:12.279-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-17'/><title type='text'></title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;தலைமுறைகளின் யுத்தம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மேலாய்வு செய்வதற்கான நிதியினை வழங்குவது  மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு. அதன்  நிதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யும் பேராசிரியர்களின் திட்டவரைவுகளின் பட்டியலைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அப்பட்டியலில் இடம் பெற்றிருந்த பல தலைப்புகள் எனக்கு மன வேதனை அளித்ததை இங்கே பதிவு செய்ய வேண்டும்.&lt;br /&gt;இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் புழக்கத்தில் இருந்த புழங்குபொருட்களைத் தொகுத்து ஆவணப்படுத்தும் ஆய்வினை ஒருவர் செய்வதற்காக நிதியினைக் கோரியிருந்தார். இன்னொருவர் வேளாண்மைக்கருவிகளை ஆவணப்படுத்தப் போவதாகக் காட்டியிருந்தார். ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகளில் பாரம்பரிய இசைக்கருவிகள், ஆட்டக் கருவிகள், அரங்கியல் கருவிகள் போன்றன ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களான வேளாண்மை,கால்நடை வளர்த்தல், மீன்பிடித்தல், கைவினைப் பொருட்களான பாய் முடைதல், கூடை முடைதல்,மட்பாண்டங்கள் செய்தல், கயிறு திரித்தல், துணி நெய்தல், ஆபரணங்கள் செய்தல், கூரை வேய்தல் என அனைத்தும் ஆவணப் படுத்தப் பட வேண்டும் என முன் மொழியவும் செய்திருந்தார்.&lt;br /&gt;இத்தகைய ஆய்வாளர்களின் அக்கறைகள் நியாயமானவை. இவையெல்லாம் தொகுக்கப் பட வேண்டியவை தான். தொகுக்கப் பட வேண்டும் என முன் மொழியும் ஆய்வாளர்கள் நிச்சயம் அதைச் செய்வார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் அத்தகைய ஆய்வுகளுக்கு நிதி வழங்கும் அரசின் நிறுவனங்களின் பணியாற்றும் அறிஞர்கள், வல்லுநர்கள் இந்த இடத்தில் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.&lt;br /&gt;நமது பாரம்பரிய நடனங்களும், இசைக்கருவிகளும், தொகுத்து ஆவணப் படுத்தப் பட வேண்டியவை மட்டும் தானா? அவற்றைப் பயன்படுத்தித் தங்கள் வாழ்க்கையை நடத்திய கலைஞர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பது பற்றிய சிந்தனைகள் நம்மிடம் இல்லை. கலைப் பொருட்கள், பண்பாட்டுக் கருவிகள் கூட கால ஓட்டத்தின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவற்றைக் காப்பாற்ற முடியாது என விட்டு விடலாம். நமது பாரம்பரிய அடையாளங்கள் இவை எனக் காட்டுவதற்காகச் சில இடங்களில் ஆவணப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;பாரம்பரியமான தொழில்களான வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் மீன் பிடிப்பும் அப்படி ஆவணக் காப்பகத்திற்குப் போக வேண்டியவை தானா? அவை ஆவணக்காப்பகத்திற்குப் போய்விட்டால் அவற்றைக் கைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் நிலை என்ன? இன்று இவையெல்லாம் எந்திரமயமாகிக் கொண்டிருக்கின்றன. எந்திரமயமாகும் போது அதிலேயே உழன்று கொண்டிருப்பவர்களுக்குப் பதிலாக அந்நியர்கள் அதில் இறங்கிக் கைப் பற்றிக் கொள்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆட்டுத்தோலையும் மாட்டுத் தோலையும் கண்டு தூர விலகிப் போன உயர்சாதியினர் பாட்டா நிறுவனம் செருப்புத் தொழிலில் இறங்கிய போது அதில் தங்களைக் கறைத்துக் கொண்டார்கள் என்பதுதான் வரலாறு.&lt;br /&gt;திருநெல்வேலி மாவட்டத்தில் கோரைப் பாய்முடையும் தொழில் செய்யும் பத்தமடைகளும் மண்பாண்டங்கள் செய்யும் காருகுறிச்சிகளும் இன்று ஆவணக் காப்பகங்கள் என்ற அளவில் தான் இருக்கின்றன. மக்களின் தேவைகளுக்கான தயாரிப்புகள் எனத் திட்டமிடப்படாமல் பணக்காரர்களின் வரவேற்பறைகளுக்காகவும் நட்சத்திர விடுதிகளின் அழகுக்காகவும் பாய்களும் மண்சுதைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலை நீண்ட நாள் தொடராது. மோஸ்தர் மாறும் போது இந்தத் தேவை இல்லாமல் போய்விடும்.  எதும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று இது.&lt;br /&gt;இந்தியப் பாரம்பரியக் கலைகளும்,தொழில்களும் எந்திரமயமாவதால் மட்டும் தான் அழிகின்றனவா? அல்லது நமது கற்றுத் தரும் மனோபாவம் காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டதா? என நினைத்துப் பார்த்தால் இரண்டுமே முக்கியக் காரணங்கள் எனக் கூறத் தோன்றுகிறது. குறிப்பாகப் பாரம்பரிய மருத்துவம், பாரம்பரியக் கைத்தொழில்கள், பாரம்பரியக் கலைகள் போன்றவற்றை நமது முன்னோர்கள் உடனடியாகத் தங்கள் வாரிசுகளுக்குக் கற்றுத் தருவதில்லை என்பது முதன்மையான உண்மை. இவற்றில் ஒரு ரகசியம் இருப்பதாக நினைத்து அதைச் சுலபமாக வெளிப்படுத்தி விடக் கூடாது என்றே நினைத்தனர்.&lt;br /&gt;ஒரு மனதனின் கற்கும் பருவமான பதின் வயதுப் பருவத்தில் தங்களிடம் உள்ள தொழில் சார்ந்த ரகசியம் எதையும் நமது முன்னோர்கள் கற்றுத் தருவதில்லை. ஒரு எலும்பு முறிவு மருத்துவர் தனது அந்திமக் காலத்தில் தான் தனது ரகசியத்தைத் தனது நம்பிக்கையான வாரிசுக்குச் சொல்லிக் கொடுப்பார். ஆடு வளர்ப்பவர்கள் கூட அப்படித்தான் நினைத்தார்கள். நானறிந்த வரை ஒரு விவசாயி தனக்கு விவசாயத்தில் தெரிந்த பயிர் வகைகள், விதை வகைகள், அவற்றைப் பயிரிடும் காலம், போட வேண்டிய உரங்கள், தாக்கக் கூடிய நோய்கள், சமாளிக்கும் முறைகள் என எதையுமே தனது வாரிசுகளுக்குக் கற்றுத் தருவதில்லை. அதனாலேயே நமது வேளாண்மை முறைகள் பல அழிந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;தனக்குத் தெரிந்த உத்திகள் தனது அடுத்த தலைமுறைக்குத் தெரிந்து விட்டது என்பதில் மகிழ்ச்சி அடைவதை விட ஏளனத்தையே நமது முன்னோர்கள் வெளிப்படுத்தினார்கள். தன் வீட்டிலேயே தன் திறமைக்கெதிராகப் போட்டியாளன் வந்துவிட்டதாக நினைத்தார்கள். பொறாமையோடு அவனை மட்டம் தட்டுவதும் கூட நடப்பதுண்டு. வேளாண்மையில் மட்டும் அல்ல; பாரம்பரியமான இந்திய மனைதர்கள் இந்த மனநிலையில் பெரிய அளவு மாற்றம் இல்லாமல் தான் இருக்கிறார்கள். இந்த யுத்தத்தைப் பரம்பரைகளிடையே நடந்த யுத்தம் என்று தான் சொல்ல வேண்டும் இதன் காரணமாக இந்திய இன்று எல்லாவற்றிற்கும் அந்நிய நுட்பங்களைத் தேடும் தேசமாக ஆகிக் கொண்டிருக்கிறது. நான் படித்த கதைகளில் இதனைப் பூடகமாகச் சொன்ன கதை ஒன்று உண்டு. எழுபதுகளில் தீவிரமாக இயங்கத் தொடங்கிய கசடதபற இதழில் வெளி வந்த அந்தக் கதையின் தலைப்பு தக்கையின் மீது நான்கு கண்கள். கதையை எழுதியவர் சா. கந்தசாமி.&lt;br /&gt;சாயாவனம், தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், விசாரணைக் கமிசன் எனக் காத்திரமான நாவல்களை எழுதியதன் மூலம் அதிகமும் நாவலாசிரியராகவே அறியப்பட்டவர். ஆவணப் படங்கள் எடுப்பதில் இப்போது கவனம் செலுத்தும் சா. கந்தசாமி தனது விசாரணைக் கமிசன் நாவலுக்காக சாகித்ய அகாடெமி விருது பெற்றவர்.&lt;br /&gt;சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதை மீன்பிடிப்பதில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே இருக்கும் மறைமுக யுத்தத்தை நுட்பமாகச் சொன்ன கதை. கதையின் சில பகுதிகளை அப்படியே தருகிறேன். அந்தப் பகுதிகளே அந்தக் கதையின் போக்கையும் மாணிக்கம் என்னும் தாத்தாவுக்கும் ராமு என்ற பேரனுக்கும் இடையே நடக்கும் மௌனப் போராட்டத்தையும் காட்டிவிடக்கூடியது. மீன் பிடிப்பவர்கள் என்ற அடையாளம் இல்லாமல் இருவருக்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளிக்கான மோதல் இருக்கிறது என்பதைச் சொல்ல வெற்றிலை இடிப்பதை மையமிட்டுக் கதையைத் தொடங்குகிறார்.&lt;br /&gt; “தெரியுமா,நாப்பத்திரெண்டாம் வயசிலேயிருந்து வெத்தலெ இடிக்கிறேன். இன்னம் ஒரு கொப்பளம் வர்லே. ஆனா உனக்கு ரெண்டு நாளிலே நாலு கொப்பளம். இதுக்குத் தான் சொல்றதைக் கேக்கனும் என்கறது...” என்றபடி வெற்றிலை இடிப்பதில் உள்ள சூட்சுமங்களை தாழ்ந்த தொனியில் விவரித்தார். அவன் கவனமாக ஒவ்வொரு வார்த்தையையும் காதில் வாங்கிக் கொண்டான். ஒரு முறையும் அவர் சொன்னதை அவன் பின்பற்றுவதில்லை. அவனுக்கொரு தனிக்குணம்; முறித்துக் கொண்டு போவது.&lt;br /&gt;இப்படித் தொடங்கியவர் தாத்தாவின் மீன்பிடிக்கும் முறையோடும் அவனுக்கு உடன்பாடு இல்லை என்பதை நாசுக்காகக் காட்டும் வரிகளையும் எழுதிக் காட்டுகிறார்.&lt;br /&gt;ஒரு முறை தாத்தா தூண்டிலைத் தலைக்கு நேராக இழுக்கும் போது, “ கொஞ்சம் வெட்டி சொடுக்கி இழுங்க தாத்தா”  என்று கத்தினான். அவர் மெல்லத் திரும்பிப் பார்த்தார். உதட்டில் சிரிப்பு தெரிந்தது. அவன் பின்னுக்கு நகர்ந்து மறைந்தான். அப்புறம் மாணிக்கம் தூண்டிலைத் தன் விருப்பப்படியே இழுத்தார். மேலே வந்த கெண்டை ஓர் உலுப்பு உலுப்பி துள்ளித் தண்ணீரில் போய் விழுந்தது.&lt;br /&gt;தன்னந்தனியாக ஒரு மயிலையைப் பிடித்து விட்டான். தாத்தா தூண்டிலில் கூட எப்பொழுதாவது ரொம்ப அபூர்வமாகத்தான் மயிலை அகப்படும். நெளிந்தோடும் மயிலையின் பின்னே போய்க் கழுத்தைப் பிடித்து மேலே தூக்கினான். அதைப்பற்றி தாத்தா நிறையச் சொல்லியிருக்கிறார். மீனிலே அது ஒரு தினுசு. வீச்சு வீச்சாக முள்ளும் மீசையும் உண்டு. முள் குத்தினால் கடுக்கும்; இரண்டு மூன்று நாட்களுக்குக் கூட சேர்ந்தாற் போலக் கடுக்கும். கோடையில் குளத்தில் இறங்கி மீன் பிடிக்கும் போது முதன் முறையாக மயிலை அவனைக் கொட்டியது வலி தாளாமல் துடித்துப் போனான். அதிலிருந்து மயிலை மீது அவனுக்குத் தனியான கவனம். அதே கவனத்தோடு மயிலையைப் பிடித்து தூண்டில் முள்ளைப் பிடுங்கினான்.&lt;br /&gt; “ நீதான் பிடிச்சியா?” என்று கேட்டுக் கொண்டு தாத்தா அங்கே வந்தார். தாத்தாவின் கேள்விக்குப் பதில் எதுவும் அளிக்கவில்லை. குனிந்தபடியே தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். “ பெரிய தூண்டிக்காரனாயிட்டே நீ..” மாணிக்கம் அவன் மீது கை போட்டார்.&lt;br /&gt;ராமு சற்றே பின்னுக்கு நகர்ந்தான். தாத்தா மீது திடீரென்று அவனுக்கு கோபம் வந்தது. தன்னை அழிக்கப் பார்க்கிறார் என்ற பயமும் கூடவே தோன்றியது. அவர் பிடியில் சிக்காமல் பின்னுக்குச் சென்றான்.&lt;br /&gt;இடித்த வெற்றிலையை வாங்கி வாயில் திணித்துக் கொண்டு, “ செத்த முன்னே எங்கே போயிருந்தே ?” என்று கேட்டார் மாணிக்கம் .&lt;br /&gt;“ அந்தப் பெரிய மீனு..”  “ கெக்கெக்கெவென்று பெரும் சிரிப்பு வெளிப்பட்டது. அவன் ஆச்சரியத்தோடு  தாத்தாவைப் பார்த்தான்.&lt;br /&gt;“ அதைப் பிடிக்கப் புறப்பட்டுட்டியோ ? ”  அவர் குரல் திடீரென்று உயர்ந்தது. “ அதை உன்னாலும் பிடிக்க முடியாது; ஒங்கப்பானலையும் பிடிக்க முடியாது.”&lt;br /&gt;ராமு ஓரக்கண்ணால் தற்பெருமை அடிக்கும் தாத்தாவைப் பார்த்தான் .&lt;br /&gt;”என் ரெண்டு தூண்டிலை அறுத்துக்கிட்டு போயிடிச்சு...” அந்தப் பெரிய மீன் ஒரு தூண்டிலை அறுத்துக் கொண்டு போனது அவனுக்குத் தெரியும். மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு காலைப் பொழுதில் அது நடந்தது. மாணிக்கம் பெரிய கயிற்றுத்தூண்டி வீசியிருந்தார். அதனை ஒரு மீனும் அறுத்ததில்லை. அநேகமாக மீனினால் அறுக்க முடியாத தூண்டில் அது.&lt;br /&gt;மாணிக்கம் தூண்டில் கயிற்றைச் சற்றே இழுத்துப் பிடித்தார். தக்கை மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தது. விராலோ கெண்டையோ வராமல இருந்தால் பெரிய மீனைப் பிடித்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோழிகள் கூவுகின்றன: காகம் கரைகின்றது.&lt;br /&gt;“ வாங்க, அந்த வாண்டு என்ன கொண்டாந்திருக்குன்னு வந்து பாருங்க” என்று அவரின் இரண்டு கைகளையும் பிடித்து கொல்லைக்கு அழைத்துக் கொண்டு ஓடினாள் அவள்.&lt;br /&gt;கிணற்றடியில் சேறும் நீரும் சொட்டச் சொட்ட ராமு நின்று கொண்டிருந்தான். அவன் காலடியில் பெரிய வாளை தாடையை அசைத்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;“நம் வாண்டு எம்மாஞ்சமத்து பாத்தீங்களா?”&lt;br /&gt;மாணிக்கத்தின் கைகள் அவன் தோள்மீது விழுந்தது. அப்புறம் கழுத்தில் உராய்ந்து காதிற்குச் சென்றது.&lt;br /&gt;“ ஆத்தா” என்று அலறிக் கொண்டு ஓடிப் பாட்டியின் பின்னே மறைந்தான்.&lt;br /&gt;தன் மனைவியை நோக்கி மெல்லச் சிரித்தார்.&lt;br /&gt;தொடர்ந்து அவனோடு முரண்பட்ட தாத்தா கடைசியில் அவனது திறமையை ஒத்துக் கொள்ளும் விதமாகப் புன்சிரித்தார் என்பதாகக் கதை முடிகிறது. ஆனால் யதார்த்தத்தில் நமது முன்னோர்கள் வாரிசுகளின் திறமைகளையும் நுட்பங்களையும் அறிந்து கொள்ளாமலேயே தான் தங்கள் காலத்தைக் கழித்துள்ளனர் என்பதுதான் உண்மை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-9031283443257300526?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/9031283443257300526/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=9031283443257300526' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/9031283443257300526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/9031283443257300526'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/11/blog-post_19.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-8511663608341529262</id><published>2009-11-19T18:58:00.000-08:00</published><updated>2009-11-19T19:03:09.750-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-16'/><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;பாசமுள்ள இயந்திரங்கள்: ஆர்.சூடாமணியின் விலை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கடந்த இருபது ஆண்டுகளில் ஊடகங்களின் கவனத்திற்கு  வந்ததால் அதிகம் விவாதிக்கப் பட்ட சில  சமூகப் பிரச்சினைகள் உண்டு. பெண் சிசுக்கொலைகள் என்பதும் அவற்றுள் ஒன்று. எனது சொந்தக் கிராமம் பெண் சிசுக்கொலைகள் அதிகம் நிகழும் பகுதியாகச் சொல்லப் பட்ட உசிலம்பட்டி பகுதியில் தான் உள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் ஆற்றுப் பாசனமும் குளத்துப் பாசனமும் அறியாத புன்செய்க் காடுகளும் தோட்டங்களும் நிரம்பிய கிராமங்களின் தொகுதி. வறுமையையும் வேலையின்மையையும் பிரித்துப் பார்த்தறியாத மனிதர்கள் வாழும் பிரதேசம். அவற்றின் கடந்த காலமும் நிகழ்காலமும் என் கண் முன் இருப்பவை. அந்தக் கிராமங்களைத் தவிர எனது படிப்புக்காகவும், ஆய்வுக்காகவும் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் பயணம் செய்திருக்கிறேன். வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும் தங்கி இருக்கிறேன். பணி ஆற்றும் பொருட்டுப் பாண்டிச்சேரியில் எட்டாண்டுகள் இருந்திருக்கிறேன். அப்போது தமிழ் நாட்டின் வட மாவட்டங்களின் சிறுநகரங்கள், கிராமங்களுக் கெல்லாம் கூடப் பயணம் செய்ததுண்டு.சில அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்காக நாடகங்கள் போடுவதற்கான பயணங்கள் அவை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்போது நான் பணி ஆற்றும் பல்கலைக்கழகப் பணி காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் சென்று வருகிறேன்.  எனது வாழ்க்கையும் பயணங்களும் எனக்கு உணர்த்திய அறிவுப்படி பெண் சிசுக்கொலை என்பது உசிலம்பட்டிப் பகுதியின் பிரச்சினை மட்டும் அல்ல என்பதை உறுதியாகச் சொல்வேன். இன்னும் சொல்வதானால் இது தமிழ் நாடு என்ற மாநில அளவிற்குள் நின்று போகும் பிரச்சினை என்பது கூட உண்மை அல்ல. வறுமையும் ஆணாதிக்கக் கருத்தியலும் தாண்டவமாடும் இந்தியச் சமுதாயத்தின் பிரச்சினை என்பதுதான் சரியான கருத்தாக இருக்க முடியும்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆண்களின் கலவியின்பத்திற்குத் தீனிபோட்டுப்  பிள்ளை பெற்றுத் தரும் எந்திரங்களாகவும் , வீட்டிலும் வெளியிலும் கிடைக்கும் பயன்படு பொருட் களில் ஒன்றாகவும் பெண்களைக் கருதும்  சமூக நடைமுறைகளைத் தங்களின் சாதிப் பெருமையாகக் கருதும் சமூகங்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பெண்கள் இரண்டாம் பாலினராகக் கருதப்படுவது நம்பிக்கையாக இருக்கிறது. அத்துடன்  பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குச்  செல்லும் பெண்ணுக்குக் குடும்பம் நடத்தத் தேவையான அடிப்படைப் பொருட்களைச் சீதனமாகக் கொடுத்து அனுப்ப வேண்டும். அது பிறந்த வீட்டு ஆண்களின் கடமை என நினைக்கும் சமூகங்கள், பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையையும் தங்கள் வீட்டிற்கு வந்துள்ள ஒரு செலவினமாகக் கருதுவது நடைமுறையாக இருக்கிறது. அந்தக் குழந்தை வளர வளரத் தங்கள் குடும்பத்தின் செலவினங்களும் கூடி விடும் எனக் கருதும் நிலையில் தான் பெண் குழந்தைகளைச்  சிசுவாக இருக்கும் போது கொல்வதும், கருவாக இருக்கும் போதே கண்டறிந்து கலைப்பதும் நடக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அடிப்படையில் சிசுக் கொலைகள் என்பது தனிமனிதர்களின் குற்றமனம் சார்ந்ததல்ல; சமூக நடைமுறைகள் சார்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொள்ளும் நிலையிலேயே அக்குற்றங்கள் நடப்பதைச் சமூக ரீதியாகக் களையும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இம்முயற்சிகளுக்கு அரசும் சமூக இயக்கங்களும் பெரிதும் பணியாற்ற முடியும் என்ற போதும் பண்பாட்டுத் தளத்தில்  இயங்கும் படைப்பாளிகளும் தங்கள் படைப்புகள் மூலம் விழிப்புணர்வை உண்டாக்க முடியும். அப்பணிகளைத் தமிழ் படைப்பாளிகள் அவரவர் அளவில் காத்திரமாக செய்துள்ளனர். வாரப் பத்திரிகை போன்ற அச்சு ஊடகங்களின் வழியாக முதலில் கவனம் பெற்ற பெண் சிசுக் கொலைகள் பின்னர் படைப்பாளிகளின் கவனம் பெற்றுக் கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் எழுதப் பட்டன. அதன் உச்சமாக இரண்டு படைப்பு களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். முதலாவது எப்போதும் தனது படைப்புகளைக் களப்பணி மூலம் உருவாக்கும் ராஜம் கிருஷ்ணன்,உசிலம்பட்டிப் பகுதிகளில் களப்பணி செய்து அந்நிலப்பகுதியையே பின்னணியாகக் கொண்டு எழுதிய ‘மண்ணகத்துப்பூந்துளிகள் ’ என்னும் நாவல். இரண்டாவது பாரதிராஜாவின் கருத்தம்மா என்ற திரைப்படம். இரண்டும் அதனதன் அளவில் பெண் சிசுக் கொலை என்னும் பிரச்சினையைச் சமூகப் பொருளாதாரப் பின்னணிகளோடு  முன் வைத்து விவாதங்களை உருவாக்கிய படைப்புக்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெண் சிசுக்களைக் கொலை செய்யும் போக்கை நேரடியாகச் சுட்டிக் காட்டிப் படைப்புகள் வந்த நேரத்தில் ஒரு படைப்பாளி அப்பிரச்சினையை வேறு ஒரு கோணத்தில் எழுதிக் காட்டினார். குழந்தை பெறுவது பெண்களின் விருப்பத் திற்குரிய ஒன்றாக இல்லை; ஆண்களின் விருப்பமே அதனை முடிவு செய்கிறது என்று கூறிடும் தொனியில் தனது சிறுகதை ஒன்றை எழுதிக் காட்டினார். அந்தக் கதையின் பெயர் விலை; கதையின் ஆசிரியர் ஆர்.சூடாமணி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;குழந்தைகளைப் பெறுவதும் வளர்ப்பதும் கொல்வதும் ஆணின் விருப்பம் சார்ந்தது; அவனின் விருப்பத்திற்கு இணங்கிச் செயல்படும் பெண் ஒரு கருவிதான் என முன் வைக்கும் சூடாமணியின் விலை என்னும் சிறுகதை முழுமையாக அந்தப் பாவத்தில் பெண்ணுக்குப் பங்கில்லை எனவும் வாதிடவும் இல்லை. ஆணின் ஏவலுக்கு அடிபணிந்து தனது உடலைத் தரும் போது கிடைக்கும் உடல் சுகத்தைப் பெண்ணுடலும் விரும்புகிறது; மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறது. பின்னர் பெற்ற குழந்தை சுமையாகி விடும் என்ற கணவனின் வாதத்தை ஏற்றுக் கொலை செய்யவும் தயாராகிறாள் என்பதை அக்கதை பேசுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்திய சமூகத்தில் புரையோடிப் போன இப்பிரச்சினையைச் சூடாமணி ஒரு நிகழ்காலக் கதையாக எழுதவில்லை. வரலாற்றில் எப்போதோ நடந்தது என்றும் சொல்லவில்லை. ஒரு புராணக்கதையின் மறுவிளக்கமாக அக்கதை எழுதப்பட்டுள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மதுரா நகரம் ஆனந்தக் கிளர்ச்சி கொண்டிருந்தது. கம்சன் அழிந்து விட்டான் . கோகுலத்திலிருந்து அக்ரூரால் அழைத்து வரப்பட்டிருந்த பலராமனும் கிருஷ்ணனும் முதலில் மல்லர்களைக் கொன்று அரசனின் மற்ற சூழ்ச்சிகளையும் வென்றபின் இறுதியாகக் கண்ணன் மாமனின் மார்பில் ஏறி உட்கார்ந்து அவனை வதம் செய்தான் எனக் கதையைத் தொடங்கும் சூடாமணி, கதையின் காலத்தைப் புராண காலம் எனக் காட்டி கண்ணனின் வருகையைக் கொண்டாடும் மதுரா நகரத்துக்கு வாசகர்களைப் பின்னோக்கி அழைத்துப் போகிறார். அங்கே வெளியிலிருந்து கோஷங்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt; “வாழ்க கிருஷ்ணன்!” &lt;br /&gt;“வாழ்க பலராமன!”&lt;br /&gt;“ கொடுங்கோலன் ஒழிந்தான்!”&lt;br /&gt;“ உக்ரேசன மகாராஜா வாழ்க!”&lt;br /&gt;“கண்ணன் இறைவனின் அவதாரம்!”&lt;br /&gt;“ திருமால் வந்தான் எமைக்காக்க!”&lt;br /&gt;“திருமால் புகழ் ஓங்குக!”&lt;br /&gt;கம்சனின் உயிர் பிரிந்த கணம் விண்ணுலகம் கண்ணனின் மேல் பொழிந்த மலர்மழை இன்னும் அவன் முடியில் அங்குமிங்குமாய் ஒட்டிக் கொண்டிருந்தது. தேவகி உடல் நடுங்கத்தொடங்கியது. “இறைவன் அவதாரம், திருமால் வந்தான். ஆனால் இந்தத் தெய்வப்பிறப்புக்காக அவள் கொடுத்த விலை!” ஆறு சிசுக்களின் உயிர் அல்லவா எனத் தாயின் உள்ளம் தன்னைத்தானே கேள்வி கேட்டு குற்ற உணர்வுக்குள் தள்ளியது என எழுதுகிறார் சூடாமணி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆகச்சிறந்த படைப்புகள் எவையெனக் கேட்டு விடை சொல்லும் திறனாய்வாளர்கள் குற்ற வுணர்வுடைய பாத்திரங்களைப் படைத்துக் காட்டிய அத்தகைய குற்றவுணர்வு கிளம்பும் மனநிலையை வாசகர்களுக்குத் தரும் படைப்புகளே சிறந்த படைப்புகள் என்கின்றனர். தனது கதைகளில் குற்றவுணர்வுடைய பாத்திரங்களையே அதிகம் படைத்துள்ள சூடாமணி இந்தக் கதையிலும் அதனைச் செய்து காட்டியுள்ளார் என்பதுதான் இந்தக் கதை மறக்காமல் இருப்பதின் காரணம் ஆகும்.&lt;br /&gt;நகரமே விழாக்கோலம் பூண்டுக் கொண்டாடிக் கொண்டிருக்கக் குற்றவுணர்வில் தவித்த தாயின் மனநிலையை எழுதிக் காட்டும் அந்த வரிகளை வாசிக்கலாம்:&lt;br /&gt;“ குழந்தைகள் ஒவ்வொன்றையும் பிறந்தவுடனேயே உன்னிடம் தந்துவிடுகிறேன்” என்று கம்சனுக்கு வசுதேவர் வாக்களித்த போது புரிந்து தான் பேசினாரா? பிஞ்சுக் கொலைகளுக்கு உடந்தையாய் இருக்கிறேன் என்ற அர்த்தம் மனதில் தைக்கவே இல்லையா? மனைவியைக் கொல்ல வந்த மைத்துனனிடம், “ இவளைக் கொல்லாதே. இவளையும் என்னையும் பிரித்து வைத்து விடு, உன் பிரச்னை தீர்ந்தது” என்று சொல்லியிருக்கலாமே? அப்படியின்றி பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தையையும் மறுகணமே சாகக் கொடுக்கப் போகிறோம் என்பது தெரிந்தே ஒவ்வொரு முறையும் கருவுற்று .. இறைவனுக்கே என்றாலும் இந்தப் பலிகள் நியாயமா?&lt;br /&gt;என்று எழுதி விட்டுக் கணவனின் பக்கம் அவள் பார்வை விழித்துக் கனன்றது. வெறும் சதைவேட்கையாக இவர் வாழ்வு.. ஆனால் நானும் தானே ஒப்புக் கொண்டேன். அப்படி ஒப்புக் கொண்ட கணத்திலேயே இன்னும் பிறந்திராத ஆறு குழந்தைகளையும் கம்சனுக்கு முன்பாகவே கொன்றுவிட்ட தாயல்லவா நான்? இந்தப் பாவத்தின் கனம் என்றாகிலும் நெஞ்சை விட்டு நீங்குமா? என்று கேட்டு விட்டு , ‘ ஐயோ என் குழந்தைகளே.. என் குழந்தைகளே..’ எனக் கதறுகிறாள் தேவகி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தக் காட்சியை இப்படி எழுதிக் காட்டும் சூடாமணியின் நோக்கம், வசுதேவர், தேவகி என்ற புராணக் கதாபாத்திரங்களைக்  குற்றவாளிக் கூண்டில்  நிறுத்தித் திரும்பவும் எழுப்பி நியாயத் தீர்ப்பு வழங்குவது அல்ல. அதற்கு மாறாக இந்தக் கதையைப் படிக்கும் ஒரு வாசகனோ, வாசகியோ அத்தகைய சிசுக் கொலைகளைச் செய்து விடக் கூடாது என்பதற்காகத் தான். செய்யாமல் கைவிடுவது மட்டுமல்ல; செய்யத் துணை போகாமல் இருப்பதுதான் ஒரு படைப்பின் நோக்கமாக இருக்க முடியும். அந்த வகையில் சூடாமணியின் விலை  என்னும் சிறுகதை நிகழ்காலத்தைப் புராண காலத்தோடு தொடர்புபடுத்தி விசாரணை மேற்கொண்டு வெற்றி பெற்ற கதை என்பதில் ஐயமில்லை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-8511663608341529262?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/8511663608341529262/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=8511663608341529262' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/8511663608341529262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/8511663608341529262'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/11/blog-post.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-529391893314325580</id><published>2009-10-25T05:57:00.000-07:00</published><updated>2009-11-20T06:05:48.267-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-15'/><title type='text'></title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;தாம்பத்தியத்தின் முழுமை&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;க.நா.சுப்பிரமணியத்தின்&lt;span style="color:#000000;"&gt; &lt;/span&gt;மனமாற்றம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;புதிதாக வந்துள்ள அரசு அறிவிக்கையின்படி ஓய்வூதியம் மற்றும் பணிக் கொடைகளைப் பெறுவதற்குத் தங்கள் புகைப் படங்களோடு வாரிசுகளின் புகைப்படத்தையும் அலுவலகத்தில் தர வேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தச் சுற்றறிக்கையைப் பார்த்தவுடன் அவர்கள் கொஞ்சம் கலங்கித் தான் போனார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் தம்பதிகள்.&lt;br /&gt;இதுவரை அவர்களின் நம்பிக்கை சார்ந்த யாத்திரைகளுக்கும், மருத்துவம் சார்ந்த சோதனை முயற்சிகளுக்கும் எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைத்து விடவில்லை. என்றாலும் மனம் தளர்ந்து விடவில்லை. கடைசி முயற்சியாகச் செயற்கை முறையில் கருவைத் தாங்கிக் குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்திருந்தார்கள். அதன் பலனைக் காண அதற்குள் இப்படியொரு சுற்றறிக்கை வந்து அவர்களின் மனக் கலக்கத்தைக் கொஞ்சம் கூட்டி விட்டது. அவர்களுக்குக் குழந்தை இல்லை என்று பலரும் பேசியது பல நேரம் காதில் விழவில்லை என்பது போலக் காட்டிக் கொண்டு நகர்ந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அலுவலகத்தில் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது மனம் தவித்திருக்க வேண்டும். அடுத்த நாள் அந்தத் தம்பதியரில் மனைவி மட்டும் அலுவலகத்திற்கு வரவில்லை.&lt;br /&gt;குழந்தை இல்லை என்பதற்கும் மலட்டுத்தனம் இருக்கிறது என்பதற்கும் முதலில் கலங்கிப் போவது பெண்ணாகவே இருக்கிறாள். திருமணமாகிச் சில ஆண்டுகள் வரை குழந்தை பிறக்கவில்லை என்றால் முதலில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதும் பெண்ணாகவே இருக்கிறாள். ஆண் முதன்மையை அல்லது ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய சமுகம் எப்போதும் பெண்ணையே கேள்விக்குரியவளாகவும், பதில் சொல்ல வேண்டியவளாகவும் வைத்திருக்கிறது.&lt;br /&gt;ஆணும் பெண்ணும் காதல் செய்வதற்கான காரணம் என்ன? இந்தக் கேள்வியைக் காதல் செய்யும் ஆணிடம் கேட்டாலும் சரி, பெண்ணிடம் கேட்டாலும் சரி உடனே பதில் எதுவும் கிடைப்பதில்லை. அதற்குப் பதிலாக ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் திருமணம் நடக்கிறது ? எனத் திருமணம் செய்து கொண்ட ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ கேட்டால் உடனடியாகக் கிடைக்கக் கூடிய பதில் “தங்கள் வம்சத்தை விருத்தி செய்யவே திருமணம் செய்து கொண்டோஒம்” என்ற பதில் உடனடியாகக் கிடைக்கும்.&lt;br /&gt;இந்தக் கேள்விக்குப் பலவிதமான பதில்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் சொல்லும் பதில் தங்கள் பரம்பரையின் தொடர்ச்சி விட்டுப் போய்விடக் கூடாது என்பதற் காகவே ஒவ்வொரு திருமணமும் நடக்கிறது என நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை நிறைவேற்றம் கண் கூடாக நடக்க ஒவ்வொரு குடும்பமும் சில ஆண்டுகள் கூடக் காத்திருக்கத் தயாராக இருப்பதில்லை. திருமணம் நடந்து அடுத்த திருமண நாளில் பெண் கர்ப்பமாக இருந்தால் அந்தக் குடும்பம் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை . அப்படி நடக்கவில்லை என்றால் முதல் சந்தேகம் பெண் மேல் தான்.&lt;br /&gt;தனது முதல் மனைவிக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக அவளது தங்கையை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஆண்மை நிரம்பிய ஆண்கள் தங்களிடம் மலட்டுத்தனம் இருக்கக் கூடும் என நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. வாய்ப்புக் கிடைத்தால் மூன்றாவதாக ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்யவும் தயாராக இருப்பார்கள். ஆனால் இன்று கிராமங்கள் கூட மாறிக் கொண்டிருக்கின்றன. குழந்தை பிறக்கவில்லை என்று தெரிந்தவுடன் உடனடியாகக் கணவனையும் மனைவியையும் ஒரு சேரச் சோதனைக்கு உட்படுத்தும் மருத்துவ மனைகள் வந்து விட்டன. என்ன செய்தாலும் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்ற போதிலும் செயற்கை முறைக் கருத்தரிப்புகளும் சோதனைக் குழாய் குழந்தைப் பேறும் இருக்கிறது. அநேகமாக வாரிசு இல்லை என்ற பேச்சு வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.&lt;br /&gt;குழந்தையின்மை அல்லது மலட்டுத் தன்மையை மையப் படுத்திய ஏராளமான சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன என்றாலும் எழுதியுள்ள நேர்த்தி மற்றும் அமைப்புக்காக மனமாற்றம் என்ற க.நா.சுப்பிரமணியத்தின் சிறுகதை எப்போதும் நினைவுக்கு வரும். 1950-60 களில் கோவையிலிருந்து வ.விஜயபாஸ்கரன் நடத்திய சக்தி இதழில் மனமாற்றம் கதையை எழுதிய க.நா.சுப்பிரமணியம் தமிழின் முன்னோடித் திறனாய்வாளர். மேற்கத்திய இலக்கிய வடிவங்கள் மற்றும் திறனாய்வுப் பார்வைகளில் ஆழ்ந்த புலமையும் தேர்ச்சியும் கொண்டவர் என்றாலும் இந்திய வாழ்க்கை மற்றும் இலக்கிய நோக்கு போன்றவற்றில் நம்பிக்கையும் கொண்டவர். அவரது முதன்மையான அடையாளம் இலக்கிய விமரிசனம் தான். அதற்காகவே அவருக்கு இந்திய அரசு சாகித்திய அகாடெமி விருது வழங்கிச் சிறப்பித்தது.&lt;br /&gt;க.நா.சு.வின் மனமாற்றம் கதையின் மொத்தப் பாத்திரங்கள் நான்கு தான். அதில் மூன்று பாத்திரங்களுக்கு மட்டும் தான் பெயர்கண்டு. கதை நடக்கும் காலம் கூட ஒரு நாள் மாலையும் முன்னிரவும் மட்டும் தான். அலுவலகம் முடிந்து வரும் சீனிவாசனும் அவரது மனைவி லட்சுமியும் நடத்தும் உரையாடலாகக் கதையைத் தொடங்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;” டாக்டர் வருவதாகச் சொன்னாரே, வந்தாரோ?” “ &lt;span style="color:#000066;"&gt;வந்தார் லட்சுமி&lt;/span&gt;”&lt;br /&gt;“ உம்.. லேடி டாக்டரைப் பார்த்தாராமா?” “ &lt;span style="color:#000099;"&gt;பார்த்தாராம்”&lt;/span&gt;&lt;br /&gt;” அவள் என்ன சொன்னாளாம்” “ &lt;span style="color:#000099;"&gt;ஆப்பரேஷன் பண்ணத்தான் வேணும் என்றானாம்..”&lt;br /&gt;&lt;/span&gt;“ ம்..ம்..” “ &lt;span style="color:#000099;"&gt;டாக்டரும் ஆப்பரேஷன் பண்ணிக் கொள்வதுதான் நல்லது என்று அபிப்பிராயப் படுகிறார்&lt;/span&gt;.?”&lt;br /&gt;“ம்..ம்..” “&lt;span style="color:#000099;"&gt;ஒன்றும் பயமில்லை என்றார். ரொம்பச் சின்ன ஆப்பரேஷன் தானாம்&lt;/span&gt;. ”&lt;br /&gt;”பயமில்லேன்னாலும்.. குளோரோபாரம் கொடுத்துத்தானே ஆப்பரேஷன் பண்ணுவா?” இப்படி ஆரம்பிக்கும் உரையாடல் இருவருக்கும் இடையே ஊடலாக மாறி, ஆபரேஷனில் லட்சுமி இறந்தால் கணவன் மறுமணம் செய்வதற்குள் சென்று அவளோடு சினிவாசன் சந்தோசமாக வாழ்வதற்குள் நுழைகிறது. அந்த உரையாடலில் லட்சுமி வெளிப்படுத்துவது தனக்குக் குழந்தை இல்லை என்பதன் ஆழமான வடுக்களை என்பதைக் கதையை வாசிக்கும் போது உணரலாம்:&lt;br /&gt;”உங்களுக்கென்ன? நான் போனாஇன்னொருத்தியைப் பாத்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கொண்டு விடுவீர்கள்!” “ &lt;span style="color:#000099;"&gt;இதென்ன , இப்படி அசடாப் பேசறே?”.&lt;br /&gt;&lt;/span&gt;” நான் போனப்புறம் லட்சுமி என்று ஒருத்தி இருந்தது கூட உங்களுக்கு ஞாபகம் வராது, இல்லையா? நான் சொல்றது நிஜந்தானே?” “&lt;span style="color:#000099;"&gt;இதோ பாரு, இந்த அசட்டுப் பேச்சை எல்லாம் விட்டு விட்டு&lt;/span&gt;.. ..” “ உள்ளதைச் சொன்னால் அது அசட்டுப் பேச்சோ?” ” &lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;என்ன உள்ளதைச் சொன்னே, உள்ளதை?”&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;“பெட்டி நிறையப் புதுப்புடவை வைத்திருக்கேன். அதை அவள் எடுத்துக் கட்டிப்பாள்.” “ &lt;span style="color:#000099;"&gt;இப்படிப் பேசிக் கொண்டே இருந்தால் நான் போறேன்&lt;/span&gt;.”&lt;/span&gt;&lt;/em&gt; என்று கிளம்பும் சீனிவாசன் பின்னர் அவளைச் சமாதானப் படுத்திச் சினிமாவுக்கு அழைத்துச் சென்று விட்டுக் கடைக்கெல்லாம் போய்விட்டுத் திரும்புகிறான்.&lt;br /&gt;அவர்கள் இருவரிடையே நடக்கும் இந்த உரையாடல் இன்று மட்டும் நடக்கும் பேச்சு அல்ல; சமீப காலங்களில் தினசரி நடக்கும் ஒன்றாகி விட்டது. காரணத்தை ஆசிரியர் தனது கூற்றாகத் தருகிறார்: சீனிவாசனும் லட்சுமியும் பத்து வருஷங்களுக்கு முன் கல்யாணமான , ஆனால் இன்னும் புது மெருகு அழியாத, இளந்தம்பதிகள். அவர்களுடைய புது மெருகு அழியா ததற்குப் பல காரணங்கள் இருந்தன- அவர்களுடைய குழந்தை உள்ளங்கள்; அவர்களுடைய நல்ல ஸ்திதி முதலியன. ஆனால் முக்கியமான காரணம் அவர்களுக்குக் குழந்தை பிறக்காதது தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சினிமாவுக்குப் போயிட்டு வரும்போது லட்சுமி ஒரு பொம்மையை வாங்கிக் கொள்கிறாள். அந்தப் பொம்மையைக் கீழ் வீட்டிலிருக்கும் சாலுவுக்குத் தரப் போவதாகச் சொல்கிறாள். சாலு எப்போதும் அவளது தனிமையைப் போக்கும் மாற்று மருந்து. அவளுக்காக ஒரு சாக்லெட் பொட்டலமும் வாங்கிக் கொண்டாள். தனக்குக் குழந்தை இல்லை என்பதால் அவள் காட்டும் பிரியத்தில் முதலிடம் இந்தச் சாலுவுக்குத் தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தான் வாங்கி வந்த பொம்மையையும் சாக்லெட்டையும் தருவதற்காகச் சாலு.. சாலு.. என்று அழைத்தபடி படிகளில் இறங்கிய லட்சுமிக்கு, “ சாலு தூங்கிப் போய் விட்டாளே” என்று அவள் அம்மா சொன்னது பொய் என்பதைத் தொடர்ந்து வந்த சாலுவின் குரல் உணர்த்தியது. ஆம், ’ஏன் மாமி?’ என்று சாலுவின் குரல் அவளது அம்மாவின் குரலைத் தொடர்ந்து கேட்டது. தொடர்ந்து சாலுவின் அம்மா பக்கத்திலிருந்த பெண்ணிடம் சொன்ன அந்த வார்த்தைகள் லட்சுமியின் மனதை அப்படியே மாற்றிப் போட்டு விட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அவள் சொன்ன வார்த்தைகள் இதுதான்: “மாடியிலே குடியிருக்கிறது அந்த குழந்தையில்லாத பெண்” அந்தக் குரலைக் கேட்டபின் லட்சுமி மணமும் குணமும் முந்திரிப்பருப்பும் நிறைந்த சாக்லேட்டையும் பொம்மையையும் வீசி எறிந்து விட்டு, சீனிவாசனை அழைத்து, “ டாக்டரிடம் சொல்லி விடுங்கள்; முடியுமானால் நாளைக்கே ஆபரேஷன் செய்து விடட்டும் ” என்றாள் என்பதாகக்கதையை முடிக்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆபரேஷன் செய்து கொள்ளத் தயங்கிய அவளது மனத்தை மாற்றிய சொல் ‘குழந்தையில்லாத பெண்’ என்பதுதான். குழந்தையில்லை என்பது குற்றம் அல்ல என்ற போதிலும் நமது சமூகம் குழந்தையில்லாத பெற்றோர்களைக் குற்றவாளிகள் போலவும் பாவங்கள் செய்தவர்கள் போலவும் கணித்துத் தனிமைப் படுத்துகிறது. மலட்டுத்தனம் என்பது மட்டுமல்ல, உடல் குறைகள், இயலாமை போன்ற தனிமனிதப் பிரச்சினைகள் கூட தொடர்புடையவர்களால் உணரப் படுகிறது என்பதைவிட மற்றவர்களே அவர்களுக்கு , உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வாரிசு என்பதைத் தனிச்சொத்து உருவாக்கத்தின் விளைவுகளோடு தொடர்பு படுத்தி சமூக விஞ்ஞானம் விளக்கிய போதும் குழந்தையின்மை என்பது தனிமனிதப் பிரச்சினை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் இனக் குழு வாழ்க்கையைத் தொடரும் பல சமூகங்களில் வாரிசுருவாக்கம் சமூகப் பிரச்சினையாகவே கருதப்படுகிறது. இந்தியாவில் பல சமூகங்கள் இன்னும் இனக்குழு வாழ்க்கையிலிருந்து விடுபட விரும்பாத நிலையில் இருப்பதால் குழந்தையின்மையும் சமூகப் பிரச்சினையாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்கத்திற்குள்ளும் நுழையும் நமது சமூகம் அவர்களைத் தொடர்ந்து நெருக்கடிக்குள் நிறுத்துகிறது. இதை இந்திய சமூகத்தின் பலம் எனப் பலரும் சொல்கிறார்கள். ஆனால் மிகப்பெரிய சுமை என்பதை நிதானமாக யோசித்தால் புரிந்து கொள்ளலாம். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-529391893314325580?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/529391893314325580/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=529391893314325580' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/529391893314325580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/529391893314325580'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/10/blog-post_3402.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-217962810780904149</id><published>2009-10-25T05:50:00.000-07:00</published><updated>2009-10-25T05:56:58.058-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-14'/><title type='text'></title><content type='html'>&lt;div align="right"&gt;&lt;span style="color:#330033;"&gt;&lt;strong&gt;அதுவுமொரு பசிதான் ! - ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் நிர்மலா&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;==========================================================&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் எவை எனக் கேட்டால் உணவு, உடை, இருப்பிடம் எனப் பாடத்திட்ட அறிவைக் கொண்டு பதில் சொல்கிறோம். ஆனால் வளர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வயிற்றுப் பசியைத் தாண்டி இன்னொரு பசி உடம்புக்குள் ஆறாத பெரு நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது எனக் கல்வியின் உயர்நிலையான உளவியல் கூறுகிறது. காமம் என்னும் அப்பெருநெருப்பு பற்றிக் கொள்ளும் நேரம், இடம், எதிர்கொள்ள வேண்டிய பின் விளைவுகள் பற்றியெல்லாம் எல்லா நேரமும் சிந்திந்துக் கொண்டிருப்பதில்லை என்பது உடல் இச்சைகளை விளக்கும் உளவியலின் பகுதிகள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;காஞ்சிபுரத்தில் ஒரு கோயிலின் கர்ப்பக்கிருகத்தில் ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் உடல்களை இணைத்து இறுக்கிக் கொண்டிருந்த காட்சியைப்படமாக  அந்தப் பத்திரிகையில் பார்த்த போது நினைவுக்கு வந்தது இந்தப்பாடங்கள் தான். பெண்ணுடலும் ஆணுடலும் இணையும் அந்தக் கணத்தில் அவர்கள் இருவரும் தங்களை மறக்கவே செய்திருப்பார்கள். அந்த ஆண் தான் புனைந் திருந்த குருக்கள் அல்லது அர்ச்சகன் என்ற பாத்திரத்தையும், அந்தப் பெண் பக்தை என்ற பாத்திரத்தையும் மறந்து அல்லது இழந்து போகாதிருப்பின் இந்தக் காட்சியை நாம் காண முடியாது. தன் விருப்பமின்றிச் சமூகம் தன் மீது சுமத்திய பாத்திரத்தை எப்போதும் விட்டு விட ஒவ்வொரு மனமும் விரும்பிக் கொண்டே இருக்கிறது. குறைந்த பட்சம் சில கணங்களாவது விட்டு விலகி விடவே விரும்புகிறது. அதற்கு இடம் பொருள் ஏவல் எல்லாம் பார்ப்பதில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒட்டு மொத்த இச்சையை உடலின் இச்சை எனப் பிரித்துப் பேசுவதன் மூலம், மனம் புனிதமானது; உடல் தீட்டானது; அது குற்றங்களைச் செய்யத் தூண்டிக் கொண்டேயிருப்பது;ஆனால் மனமோ அதைத் தடுத்து நிறுத்தி ஆற்றுப்படுத் துவது எனச் சமயம் விளக்குகிறது.  சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் காரண மான மனம் கடவுளின் இருப்பிடம் எனவும், உடல் அழுக்கடையக் கூடியது; ஆசைகளின் இருப்பிடம்; சாத்தானின் வாசஸ்தலம் அல்லது அரக்கனின் கோட்டை; எனவே அது தீட்டானது எனவும் சமயங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் கூட ஆண் உடலை விடப் பெண் உடலே தீட்டை அனுபவித்துக் கொண்டே இருப்பது  என நம்ப வைத்துள்ளது நம்பிக்கைகள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கடவுளை நினைக்கும் பக்தன் அந்த நேரத்தில் தன் இருப்பையே மறந்து தன்னை இழப்பதையே பக்த மனத்தின் உச்சநிலை எனச் சொல்வதற்கீடாக தனிமனிதன் காம விருப்பில் தன்னை இழந்து அதை அடையும் ஆவலோடு இருப்பதை எல்லோரும் பல கணங்களில் உணரவே செய்கிறார்கள். ஆனால் சமூக ஒழுங்கு கருதி அதை வெளியில் சொல்வதில்லை. வயிற்றின் பசியைத் தீர்க்க ஒரு தனிமனிதன் சமூகத்தின் விதிகளையெல்லாம் தள்ளி வைத்து விட்டுக் காரியங்களில் இறங்கும் நிலையில் அவனைக் குற்றவாளி எனச் சொல்லும் சமூக ஒழுங்குகள் தான் உடலின் பசிக்கான முயற்சிகளையும் குற்றம் எனவும், கள்ள உறவு எனவும் சொல்லிக் காட்டித் தண்டனை வழங் கவும், தள்ளி வைக்கவும் முயல்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற கருத்தைச் சொன்ன அறிஞனின் கூற்றை ஒவ்வொரு மனிதர்களும் விருப்பம் இல்லாமலேயே பின்பற்றிக் கொண்டிருக் கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் சமூகத்தின் நிர்ப்பந்தம், சூழல், கட்டுப்பாடுகள் என்பனவற்றை முழுமையாகப் புறக்கணித்து விட்டுத் தன்னுடைய வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக் கொள்வதையே எப்போதும் மனித மனம் விரும்புகிறது. ஆனால் சமூகமும் அதன் நிறுவனங்களும் உண்டாக்கி வைத்துள்ள கட்டுப்பாடுகளும், அதனால் கிடைக்கும் பாதுகாப்பும் இன்னொரு பக்கம் இழுத்துக் கொண்டிருப்பதில் நிலைகுலையாமல் மனித வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மனிதனை உடல் என்றும் மனம் என்றும் பிரித்துப் பேசுவது சமய அறிவின் முறையியல் எனச் சொல்லும் உளவியல், உடல் இச்சை என்று சொல்வது கட்டியெழுப்பும் ஒரு புனைவு என விளக்குகிறது. உடலுக்குத் தான் இந்தப் பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை எல்லாம் என்று சொல்வதை மறுத்து, உடல் பருண்மையாக- தூலமாக- தெரிவதைப் போல மனத்தின் இடம் எது எனச் சொல்ல முடியுமா? எனக் கேட்கிறது.  மனம் என ஒன்று தனியாக இல்லை. உடலும் மனமும் ஒன்று தான் எனப் பேசும் உளவியலைத் தங்கள் படைப்புகளின் ஆதாரக் கோட்பாடாகக் கொண்டு தமிழில் பல எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை எழுதியுள்ளார்கள்.  இதற்கு முழுமையான உதாரணமாக ஒரு படைப்பாளியைக் காட்ட வேண்டும் என்று கேட்டால் நான் ஜி.நாகராஜனையே முன் மொழிவேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜி.நாகராஜன் இந்த உலகில் வாழ்ந்த காலம் வெறும் ஐம்பத்திரண்டே ஆண்டுகள் (1929-1981)  தான். இதற்குள் அவரது படைப்புலக வாழ்க்கை என்பது 24 வருடங்கள் கொண்டது. இந்த 24 வருடங்களுக்குள் எத்தகைய இலக்கிய வரலாற்றிலும் இடம் பெறத்தக்க புனைகதைகளை எழுதி விட்டுச் சென்றுள்ளவர் ஜி.நாகராஜன். தொடக்கத்தில் இடதுசாரி இயக்கங்களில் இணைந்து செயல்பட்டார். அவர் பின்னாளில் அவ்வியக்கங்களுக்கும், அவை பின்பற்றிய இறுக்கமான கோட்பாடுகளுக்கும் எதிராகத் தன்னை நிறுத்திக் கொண்டவர்.  அவரது நாளை மற்றும் ஒரு நாளே என்ற நாவலுக்கும் குறத்தி முடுக்கு என்ற குறுநாவலுக்கும் அவற்றின் கதைக்களம் மற்றும் முன்நிறுத்தும் பாத்திரங்கள் சார்ந்து முன் மாதிரிகள் கிடையாது. எப்போதும் வெளிசார்ந்து மட்டும் அல்லாமல் சமூக நிலை, அதன் மதிப்பீடுகள், விதிகள், நிறுவனங்கள் , அவை வலியுறுத்தும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல் என அனைத்துத் தளத்திலும் விளிம்பில் இருக்கும் மனிதர்களை எழுதிக் காட்டியவர் ஜி.நாகராஜன்., கதைசொல்லும் லாவகம், கதைக்களம்,  மைய நீரோட்ட வாசிப்பு மட்டுமே கொண்டவர்களைத்  திக்குமுக்காடச் செய்யும் கேள்விகள்  எனப் புதுமை காட்டும் அவரது மொத்தப் படைப்புகளும் ஜி.நாகராஜன் படைப்புகள் எனக் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பெற்றுள்ளன. முதலில் தமிழ்ப் படைப்புகளை மட்டுமே வெளியிட்ட பதிப்பகத்தார் இப்போது வந்துள்ள புதிய பதிப்பில் அவர் எழுதிய ஆங்கிலப் பனுவல்களையும் இணைத்துள்ளனர். அவர் எழுதியதாக அச்சிடப் பெற்றுள்ள 34 சிறுகதைகளில் ஒன்று கல்லூரி முதல்வர் நிர்மலா என்பது. &lt;br /&gt;கல்லூரி முதல்வர் நிர்மலா கதையை ஜி.நாகராஜன் எழுதியுள்ள விதம் திரும்பத் திரும்பப் படித்துப் படைப்பாளிகள் பின்பற்றத் தக்கதாக இருக்கிறது.  மனிதர்களுக்குள் உறையும் காமத்தின் இயல்புக்கு முன்னால் வயது, பதவி, கட்டிக்காத்த பிம்பம் என எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்பதை  வாசகர்களுக்கு உணர்த்தும் விதம்  அற்புதமானது. கல்லூரி முதல்வரின் அலுவலக அறையைக் கதை நிகழும் இடமாகக் கொண்டிருந்தாலும், கதையின் ஒவ்வொரு நிகழ்வும் நினைவுகளிலும், கடித வரிகளின் விரிவா கவும் தரப்பட்டுள்ள லாவகம் சிறப்பான ஒன்று. எழுதப் போகும் விசயத்தின் கூர்மையைக் கவனத்தில் கொண்டு இந்த உத்திகளைப் பின்பற்றியுள்ள ஜி.நாகராஜன் தமிழ்ச் சிறுகதையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் என்பதற்கு இந்த ஒரு கதையே போதும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;“ எனக்கு முதலில் பயமாக இருந்தது,ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் ‘ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும் போது, ‘ பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை;பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம், காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச்சொல்லும் போது சமயங்களில் அவன் கை என் மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும். ஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்”  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படித் தொடங்கும் கதையின் தொடக்கம் உண்மையில் ஒரு கடிதத்தின் தொடக்கம். இதைப் படிப்பவள் அந்தக் கல்லூரியின் முதல்வர் மிஸ் நிர்மலா.   அவள் வாசித்த அந்தக் கடிதம் கடந்த ஆண்டு அவளது கல்லூரியில் படித்த லைலா தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் இந்திராவுக்கு எழுதிய கடிதம். அவள் கவனக் குறைவாக அதைத் தனது சினிமா சஞ்சிகைக்குள் வைத்திருந்தாள். அந்தச் சஞ்சிகையை எடுத்த அவள் அண்ணன் மூலம் தகப்பனார் சந்திரசேகரன் கைக்குப் போய் வாட்ச்மேன் காதர் மேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைக்காக மிஸ் நிர்மலாவின் மேஜைக்கு வந்துள்ளது.    &lt;br /&gt;நிர்மலா மணியை அழுத்திக் காதரை உள்ளே வரச் சொல்லி அவனிடம், “ஹாஸ்டலுக்கு வேற வாட்ச்மேன் போட்டிருக்கேன்”  என்றவளிடம், ‘சரிங்க’ என்று சொல்லி ஏற்கிறான். தொடர்ந்து அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு “ உனக்குத் தோட்ட வேலை தெரியுமா?” எனக் கேட்க, “ தோட்ட  வேலைக்குத் தானே நம்மெ காலேசுக்கு வந்தேன்.” என்கிறான். அவள், “ அப்படியா.. எனக்குத் தெரியாதே!  இனிமே எம் பங்களாத் தோட்டத்தெ கவனிச்சுக்க.. ரத்தினம்மா ஹாஸ்டலைப் பார்த்துக்கட்டும்” என உத்தரவு போடுகிறாள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;காதர் அறையை விட்டு வெளியேறவும், நிர்மலா தனதுவலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்து கொள்வது போல், இல்லை மார்பகத்தைத் தடவிக் கொள்வது போல, சேலையைச் சரி செய்து கொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று. அவ்வளவுதான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த உத்தரவு காதருக்குத் தரப்பட்ட தண்டனையா? அல்லது ஒருவிதமான பரிசா? என்று கேள்வியை எழுப்பும் விதமாகக் கதையை முடிக்கும் ஜி. நாகராஜன் அதற்கான பதிலை வாசகர்களுக்குத் தரும் விதமாக நிர்மலாவின் கடந்த காலம் பற்றிய நினைவொன்றை ஒருபத்தியில் எழுதிக் காட்டியுள்ளார். அந்தப் பத்தியை நினைத்துக் கொண்டாள் நிர்மலா காதருக்கு அளித்தது தண்டனை அல்ல; இது காமத்தை இயல்பான ஒன்றாக நினைத்துக் கொண்ட நிர்மலாவின் சரியான முடிவு என்பது புரியும். அந்தப் பத்தியின் வரிகள் இதோ:வருஷம் பூராவும் இரண்டு சேலை; மூணு ஜம்பர். அத்தனை அவமானமும் எதுக்கு? என்னத்தை சாதித்து விட்டேன்? அர்த்தமில்லாத தியாகம். அது தியாகமா? அதுவுமில்லியே! ஒரு வகையில் நிர்ப்பந்தம்தானே? ஒன்றையும் காணவில்லையே! ஒரு தெய்வமும் தட்டுப் படவில்லையே! ஒரு உண்மையும் பிடிபடவில்லையே! இருபது வருடங்களுக்கு முன் தோன்றிய வினாக்களுக்கு இன்னும் விடைகள் இல்லையே? சாந்தா சந்தோஷமாக இருக்கிறாள்; மனோகர் முன்னுக்கு வந்து விட்டான். இப்ப இருவரும் சேர்ந்து ‘ அக்காளுக்கு உலகம் தெரியவில்லை’ என்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜி.நாகராஜன் எழுதிக் காட்டும் இந்த வரிகள் கல்லூரி முதல்வர் நிர்மலாவின் நினைவுகளாக வருபவை.இந்த நினைவுதான் காதரைத் தன் தோட்டக்காரனாக ஆக்கிக் கொண்டது என வாசித்துக் கொள்ளத்தூண்டுகிறது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-217962810780904149?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/217962810780904149/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=217962810780904149' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/217962810780904149'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/217962810780904149'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/10/blog-post_25.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-5374898183269364336</id><published>2009-10-09T22:12:00.001-07:00</published><updated>2009-10-09T22:23:09.363-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#990000;"&gt;சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட சாகசங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ffcc00;"&gt;-----------------------------------------------------------&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;சுசி கணேசனின் கந்தசாமியை முன் வைத்து&lt;/strong&gt;&lt;/span&gt;              &lt;br /&gt;                       இது கந்தசாமி படத்திற்கான விமரிசனம் அல்ல;விமரிசனம் எழுதும் அளவிற்குப் பொருட்படுத்த வேண்டிய படமும் அல்ல கந்தசாமி. திரைப் படத்தின் மொழியையும் ஆக்கத்தையும் அறிந்தவர்களாகவும், அதன் வழியே வெகுமக்களுக்குத் தீங்கிழைக்காத பொழுது போக்குப் படங்களைத்  தருவார்கள் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்களின்  தோல்வியும், திசைதவறிய பாதைகளும் கூடப் பொருட்படுத்திப் பேச வேண்டிய ஒன்று என்ற அளவில் கந்தசாமி படம் பற்றிப் பேச வேண்டியுள்ளது.&lt;br /&gt;                       &lt;/div&gt;&lt;div align="justify"&gt;                        கந்தசாமி படத்தில் இந்திய அளவில் சிறந்த நடிகர் என்ற தகுதியை பெற்ற விக்ரம் நடித்துள்ளார். எந்தக் கதாபாத்திரத்தையும் தனது நடிப்பால் தூக்கி நிறுத்துவார் என நம்பப்படும் நடிகர் அவர். அதற்காகப் பண வரவு பற்றிக் கவலைப் படாமல் காலத்தையும், தனது உடல் மற்றும் மன ரீதியான உழைப்பையும் தரக்கூடியவர். சுசி கணேசனும் பத்திரிகையாளர் என்ற முன் அனுபவத்தோடு இலக்கிய வாசிப்புடையவர் என்ற அடையாளத் தையும் வெளிப்படுத்திக் கொண்டவர். வணிக சினிமாவில் வெற்றி கரமான படங்களைத் தந்த இயக்குநரிடம் திரைப்பட நுட்பங்களைக் கற்று இயக்குநராக மாறியவர். படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது படத்தை உருவாக்க ஆகும் செலவைப் பற்றிக் கவலைப்படாதவர். இம்மூவரும் இணைந்தும் இந்தப் படத்தை நல்லதொரு பொழுதுபோக்குப் படமாக ஆக்கி, வணிக ரீதியாக வெற்றி பெறச் செய்ய முடியாமல் போனதெப்படி? கந்தசாமி படம் பொது நிலைப்பட்ட பார்வையாளர் களுக்குப் பிடிக்காமல் போனது ஏன்?&lt;br /&gt;பார்த்தவர்கள் எல்லோரும் படத்தில் கதை இல்லை என்று சொல்கிறார்கள். அந்தக் கூற்று உண்மை தானா? நிச்சயம் இயக்குநர் அதை மறுக்கவே செய்வார். கதை, வசனம், திரைக்கதை இயக்கம் எனத் தனித்தனியாக எழுத்துப் பலகைகளைக் காட்டிய சுசி. கணேசன் கதை இல்லை என்பதை எப்படி ஒத்துக் கொள்வார்? படத்தில் ஒரு கதை இருக்கிறது. தமிழில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற எல்லாச் சினிமாக்களிலும் இருப்பது போல நாயகனின் சாகசங்களைச் சொல்லும் கதை ஒன்று இருக்கவே செய்கிறது.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;                      இந்தியாவில் ஏழை – பணக்காரர்களிடம் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடாக ஆகி விட்டதை உணர்ந்த ஒரு இளைஞனின் கதை அது. இப்படியான வேறுபாடுகள் தோன்றக் காரணம் அரசியல்வாதிகள், தாதாக்கள், கள்ள மார்க்கெட் வியாபாரிகள் ஆகியோரிடையே உள்ள உறவும், அதனால் கிடைக்கும் பணத்தை வெளிநாடு களில் உள்ள மறைமுக வங்கிகளில் பதுக்கி வைப்பதும் தான் என்பதை உணர்ந்த இளைஞனும் அவனது பள்ளிக்கூடத் தோழர்களும் சேர்ந்து செய்யும் சாகசங்கள் தான் கந்தசாமி படத்தின் கதை. மக்களின் சொந்தப் பிரச்சினை களையும் பொதுப் பிரச்சினைகளையும் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதித் திருப்போரூரிலுள்ள முருகன் கோயிலில் உள்ள மரத்தில்  கட்டி விட்டால் தீர்த்து வைக்கப்படும்.  முருகனாகிய  கந்தசாமி வந்து தீர்த்து வைக்கிறான் என்ற வதந்தியை உருவாக்கி மக்களை நம்ப வைத்து, கந்தசாமி என்கிற சிபிஐ அதிகாரியும், நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணி யாற்றும் அவனது வகுப்புத் தோழர்களுமே அதைச் செய்கிறார்கள் என்று கதை பின்னப் பட்டிருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;                 இந்தக் கதையைப் பார்வையாளன் மனம் ஏற்கும் விதமாகவும், அவனது நடப்பு வாழ்க்கையோடு ஓரளவுதொடர்புடையது  என மூளை நம்பும் விதமாகவும் சொல்லப் படவில்லை (முழுமையாக இருக்க வேண்டுமெனப் பார்வையாளர்கள் எதிர் பார்ப்பதில்லை) என்பது மட்டுமல்ல காரணம். இந்தப் படத்தின் கதையும் சரி , சொல்லப்பட்ட விதமும் சரி மிகச் சமீபத்தில் வந்து வெற்றி கரமாக ஓடிய சில படங்களின் கதையாகவும், கதை சொல்லும் முறையாகவும் இருக்கிறது என்பதும் கூடப் பார்வையாளர்களைக் கவராமல் போனதற்குரிய காரணங்களாக இருக்கலாம்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;                கறுப்புப் பணம், ஹவாலா வழியாகப் பணப் பரிமாற்றம், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்குதலைப் பேசிய சிவாஜி படம் வந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை.அதை இயக்கியவர் சங்கர் . கடமையைச் செய்யாமல் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்- கடமையைச் செய்ய லஞ்சம் வாங்கும்- அதிகாரிகளையும், கள்ள மார்க்கெட்டில் ஈடுபடும் வியாபாரிகளையும், சுய நலத்தை மட்டுமே கொண்ட  உறவுக்கார மனிதர்களையும் அம்பி என்கிற அசட்டு வக்கீல் அந்நியன் என்ற அசகாய சூரனாக மாறிக் கொன்றழிக்கிறான் என்ற கதையையும் சங்கர் தான் இயக்கியிருந்தார். இவ்விரு படங்களையும் சுசி கணேசன் பார்க்காமலா இருந்திருப்பார்?  கந்தசாமி கதையோடு இன்னும் நெருக்கமான கதையைக் கொண்ட இன்னொரு படம் ரமணா. இதை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்காந்தின் நடிப்பில் கடைசியாக வெற்றி கரமாக  ஓடிய படம். அந்தப் படத்தின் கதை மக்களின் அன்றாட வாழ்க்கை யோடு நெருங்கிய தொடர்புடைய சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை, காவல்துறை போன்றவற்றில் நடக்கும் ஊழல்களையும் சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகளையும் களைய ஒரு பேராசிரியர் தன் மாணவர்களைப் பயன்படுத்தினார்; சாகசங்கள் செய்தார் என்பதுதான். அந்தப் படம் வந்து நான்கைந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றாலும் நமது தொலைக்காட்சிகள் திரும்பவும் போட்டுக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;                  பார்த்த படத்தைத் திரும்பவும் ‘புதிய படம்’ என்று பார்க்கும்  அளவுக்கு நமது பார்வையாளர்கள் ஏமாளிகள் அல்லவே. சுசி கணேசன் மட்டும் அல்ல; நமது நாயக நடிகர்களுக்காகக் கதை செய்யும் பல இயக்குநர்களும் பார்வையாளர்களை ஏமாளிகள் என்றே நினைக்கின்றனர். விஜய் வேகமாக நடனம் ஆடுகிறார் என்பதற்காக;  விசால் வித்தியாசமாய்ச்  சண்டை  போடுகிறார் என்பதற்காக; வன்மையான நெருக்கத்துடன் சிம்புவும் பரத்தும் தனுஷும் பெண்களின் உடலைக் கையாள்கிறார்கள் என்பதற்காக; வித்தியாசம் காட்டி விக்ரமும் சூர்யாவும் நடிப்பை வெளிப்படுத்துகின்றனர் என்பதற்காக - திரும்பத் திரும்பப் பணம் கொடுத்துப் பார்க்கப் பார்வை யாளர்கள் தயாராக இருப்பார்கள் என்று இயக்குநர்கள் நம்புவது எப்படி என்பது தான் புரியவில்லை. சொல்லப்பட்ட கதையை அதே முறையில் சொன்னால் அலுப்பும் சலிப்பும் உண்டாகும் என்பது ஒரே பாணியில் நடித்துப் பழகிப் போன நடிகர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஓர் இயக்குநருக்கும் அது புரியாது என்றால் அவர் வேறு தொழிலைப் பார்க்க வேண்டியதுதான்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பார்வை யாளனின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்காத படங்களைப் பார்க்கத் திரை அரங்கிற்கு வர,தமிழ்ச் சினிமாவின் பார்வையாளர்கள் தயாராகவே உள்ளனர் என்பதற்குச் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வந்திருக்கும் நாடோடிகள் கடைசி உதாரணமாக இருக்கிறது. ‘நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே ’ என்ற ஒற்றை வரியின் மேல் எழுப்பப்பட்ட நாடோடிகள் கதை முழுமையும் நடக்கத்தக்க யதார்த்தக் கதை அல்ல. அதுவும் ஒரு சாகசக் கதை தான். பணபலம், அரசியல் பலம், சாதி வேறுபாடு என்ற தடைகளையெல்லாம் பற்றிக் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காமல், காதலித்த நண்பனின் காதலை வெற்றி அடையச் செய்வது எனக் கிளம்பும் ஒரு இளைஞனின் சாகசம் மட்டும் அல்ல; செய்யப்போவது சாகசம் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் நண்பனோடு கிளம்பிப் போன இருவரின் வலிகளும் துயரங்களும் என நாடோடிகள் கதை பின்னப் பட்டுள்ளது. கதையை உருவாக்குவதன் அனைத்து அடிப்படைகளையும் ஓரளவுக்குச் சரியாகச் செய்துள்ள அந்தப் படம் வெற்றிப் படமாகத் திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;                சினிமாவுக்குக் கதை உருவாக்கும் போது கவனிக்க வேண்டிய ஒன்று அந்தக் கதையில் பின்னப்படும் காட்சிகளின் நிகழ்தகவுகள் அல்லது சாத்தியப் பாடுகள் என்பன தான். இதை நடிகர்களுக்காகக் கதை உருவாக்கும் இயக்கு நர்கள் மறந்து விடுகிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒரு சாகசக் கதையைச் சமுத்திரக் கனி, ‘இந்தக் கதையின் தொடக்கம் ராஜபாளையம் என்ற சிறு நகரம்’ என்று குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் தொடங்கி, நாமக்கல் என்ற இன்னொரு நகரத்திற்கு நகர்த்துவதன் மூலம் கதையை நம்ப வைக்கிறார். கிராமங்களில் கதை சொல்லிகளிடம் இது எப்படி? அது எப்படி? என்று குறுக்குக் கேள்விகள் கேட்டால் கதைக்குக் காலுண்டா? என்று சொல்லி விட்டுக் கதையை வளர்த்து கொண்டு போவார்கள். ஆனால் சினிமாக் கதைக்குக் கட்டாயம் கால் வேண்டும். அந்தக் கால் தான் கதையின் வெளி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;                   ராஜபாளையத்து விசைத்தறிகளும் குறுகலான தெருக்களும், அம்மன் கோயில் திருவிழாவும் மட்டுமே கதையை நம்பச் செய்தன என்பதில்லை. அதே போல் நாமக்கல்லின் கோழிப் பண்ணைகளும் புரோட்டாக் கடைகளும் மட்டும் நம்பகத் தன்மையை உண்டுபண்ணி விடும் என்று நினைக்க வேண்டிய தில்லை.  அக்கதைவெளிகளில் வரும் பாத்திரங்களின் செயல்பாடு  களும் மன உணர்வுகளும் கூட ஏற்கத்தக்கதாக- நம்பத் தக்கதாக இருக்க வேண்டும்.சாகசங்கள் செய்யும் மூன்று இளைஞர்கள் அசட்டுத் தைரியசாலிகளாக இருந்தாலும், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள் என அனைவரும் தினசரி வாழ்வில் பார்வை யாளர்கள் சந்திக்கக் கூடியவர்கள்.‘அரசாங்க வேலைக்குப் போகிறவனுக்குத் தான் பெண்ணைக் கொடுப்பேன்’ என்று பிடிவாதமாக இருக்கும் அந்த மாமா கதாபாத்திரம் ஒன்று போதும் கதையை முழுமையாக நம்பத் தக்கதாக ஆக்க.&lt;br /&gt;கந்தசாமி படத்தில் இப்படியான எந்தவொரு பாத்திரமும் இல்லை என்பதுதான் அதன் மிகப்பெரிய பலவீனம். வைகைப் புயல் வடிவேல் நடித்துள்ளார் என்றால் அவரது நகைச்சுவையைப் பார்க்கவாவது பார்வையாளர்கள் வருவார்கள் என்று காட்டுவதற்காகச் சேர்த்துள்ள ஒரேயொரு காட்சி மட்டுமே நம்பத் தக்கதாக இருக்கிறது. விளையாட்டுத் தனமாகச் சேவல் வேஷம் கட்டிப் போலீஸ்காரர்களின் வலையில் சிக்கிச் சித்திரவதைகளையும் வேடிக்கையாகவே எதிர் கொள்ளும் இந்தக் காட்சி நம்பத் தக்கது என்றாலும், வடிவேல் வேறுசில படங்களில்  திரும்பத் திரும்பச் செய்துவிட்ட- ‘கிலிஷே’- காட்சி என்பதையும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது .  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;                   கந்தசாமியின் இயக்குநரும் ‘திருப்போரூர்க் கந்தசாமிக் கோயில்’ என்ற குறிப்பான வெளியையும், ‘வேதாரண்யம் பள்ளியில் படித்தவன் நாயகன்’ என்று ஒரு தொடக்கத்தையும் தருகிறார் என்றாலும், அந்தக் காட்சி களைத் தொகுத்த விதமும், பின்னணி இசையும் காட்சிகளின் மீது ஈடுபாட்டை -நம்பகத் தன்மையை-ஏற்படுத்துவதற்குப் பதிலாகப் பார்வையாளனைப் படத்தி லிருந்து விலகிச் செல்லவே வைக்கின்றன. விக்ரமின் பள்ளிப் பருவம், அவரது நட்பு வட்டம், சின்ன வயதிலிருந்தே அறச்சீற்றம் கொண்டவர்களாக அந்த நண்பர்கள் இருந்தார்கள் என்பதைக் காட்ட அருமையான வாய்ப்பு இருந்தும் அத்தகைய காட்சிகளை உருவாக்காமல் விட்டது இயக்கம் என்பதில் இருக்கும் மிகப்பெரிய குறை.&lt;br /&gt;கந்தசாமி படத்தின் மிகப் பெரிய பலவீனம் நடிகர்கள் தேர்வு. எந்த நடிகரையும் தேர்வு செய்து விட்டு அவர்களிடமிருந்து தேவையான நடிப்பைப் பெறும் திறமை இருந்தால் யாரையும் தேர்வு செய்யலாம். இயக்குநர் சுசி. கணேசன் விக்ரம் தவிர எந்த நடிகரிடமும் பொருத்தமான நடிப்பைப் பெறவில்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது.எழுதிக் கொடுத்த வசனங்களை உணர்ச்சிகரமாகப் பேசினால் போதும் என்பதாகவே பலரது நடிப்பு இருக் கிறது.சில காட்சிகளில் விக்ரமின் நடிப்பே கூடப் பொருத்தமின்றியே இருக்கிறது. அத்தோடு இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ரேயாவைத் தேர்வு செய்ததும் இயக்குநரின் பெருங்குறை என்று தான் சொல்ல வேண்டும்.  தனது உடலைக் காட்சிப் பொருளாக ஆக்கிக் காட்ட முழுவதும் சம்மதமாக இருக்கும் ஸ்ரேயா படத்தின் நாயகியாக முழுவதும் பொருந்திப் போக வில்லை என்பதை சாதாரணப் பார்வையாளனும் சொல்லி விடுவான். அவரது உடல் அசைவுகள் மட்டுமல்ல; முகச்சுளிப்பு, வசன உச்சரிப்புகளுக்கு அசைக்கும் வாய், அவரது உடல் வடிவத்திற்குப் பொருந்தாத உடைகள்   என எதுவுமே பொருத்தமாக இல்லை என்பதை விட, அவரது மொத்த உடலுமே தமிழ்ச் சினிமாவுக்குப் பொருத்தமற்ற உடல் என்பதை நமது இயக்குநர்கள் எப்போது உணரப் போகிறார்கள் என்று தெரியவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt; களிப்பூட்டும் சினிமாவை எதிர்பார்த்துத் திரை அரங்கிற்குச் செல்லும் பார்வையாளன் முழுமையும் எதார்த்தமான-வாழ்க்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் உணர்வுகளையும் கொண்ட கதையை எதிர்பார்ப் பதில்லை என்பதற்குச் சமீபத்தில் வெற்றி அடைந்த படங்களே சாட்சிகளாக இருக்கின்றன. பருத்தி வீரன் தொடங்கி, சுப்பிரமணியபுரம், வெண்ணிலா கபடிக் குழு, நாடோடிகள்  முதலான படங்களின் நாயகக் கதாபாத்திரங்கள் எதுவும் சாதாரணப் பார்வையாளர்களின் வாழ்க்கையில் உதாரணமாக எடுத்துக் கொள்ளும் பாத்திரங்கள் அல்ல. அக்கதாபாத்திரங்களை  வார்த்தெடுத்த கதாசிரியர்கள் மற்றும் இயக்குநர்களிடமிருந்து பார்வையாளன் போதனை எதையும் எதிர்பார்த்தும் வரவில்லை.பார்வையாளனுக்குத் தேவை ஓரளவுக்கு  நம்பகமான கதையும், அக்கதையில் வரும் பாத்திரங்களின் சாகசங் களும் களிப்பு மனநிலையும் தான். அதனூடே அவர்களும் அவர்களைச் சார்ந்தவர் களும் இன்பங்களும்  வலிகளும் அனுபவத்தார்கள் என்பதைப் பார்க்கவே திரையரங்கிற்கு வருகிறார்கள்.  அதைத் தராமல் வேறு எது எதையோ தரும் படத் தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் பார்வையாளர்கள் தயவு தாட்சண்யமின்றித் தண்டிக்கவே செய்கிறார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளவந்தான் என்ற படத்தில் பெற்ற தண்டனையை இவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டார் என்பதுதான் ஆச்சரியம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#333399;"&gt;=======================================================&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-5374898183269364336?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/5374898183269364336/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=5374898183269364336' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/5374898183269364336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/5374898183269364336'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/10/blog-post_09.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-5871363965280692480</id><published>2009-10-07T03:24:00.000-07:00</published><updated>2009-10-07T03:26:54.084-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;வேறுபாடுகளுடன்  கூடிய நட்பின் இழப்பு – பாலாவுக்கு அஞ்சலி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாலச்சந்திரன் என்னும் நீண்ட பெயரைச்  சுருக்கி நண்பர்கள் பாலா என அழைத்த போது அதைத் தனது கவிப்பெயராக ஆக்கி விடும் ஆசை அவருக்கு இருந்திருக்குமா  எனத் தெரியவில்லை. இதை அவரிடமே கேட்டு உறுதி செய்து கொள்ளலாம் என நினைத்தாலும் இனி இயலாது. அந்தப் பெயருக்கும், அந்தப் பெயர் விட்டுவிட்டுப் போயிருக்கும் பதிவுகளுக்கும் சொந்தக்காரரான பாலச்சந்திரன் இப்போது நம்மோடு இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத்துறையிலிருந்து பணி ஓய்வு பெற்ற போது இனி அவர்  செய்ய வேண்டிய பணிகளை நினைவுபடுத்தி அனுப்பி வைத்தோம். அதில் ஒன்றிரண்டைக் கூட முடிக்க விடாமல்  காலம் தனது கணக்கை முடித்துக் கொண்டு விட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நான்  மதுரைப் பல்கலைக்கழகத்தில்  முதுகலைத் தமிழ் படித்துக்  கொண்டிருந்த போது பாலாவை அவரது புத்தகங்களின் வழியாகச் சந்தித்தேன்.  புதுக்கவிதை ஒரு புதுப் பார்வை என்ற நூல் அப்போது தான் அன்னம் வெளியீடாக வந்திருந்தது. புதுக்கவிதை என்னும் வஸ்துவை விளங்கிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அது குறித்துப் பேசுவதற்கான தளமொன்றை உருவாக்கித் தந்த புத்தகம் என்ற அளவில் அந்த நூல் கல்வித்துறை வட்டாரத்தில் அங்கீகாரம் பெற்றது. புதுக்கவிதைக்கான அங்கீகாரத்தை உருவாக்கித்தந்த புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை, பாலா என்ற பெயரையும் அங்கீகரிக்கப் பட்ட எழுத்தாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அங்கீகாரத்தின் தொடர்ச்சியை அவரது இன்னொரு நூலான சர்ரியலிசம் உறுதிப்படுத்தியது. வானம்பாடிகளின் பொதுக் குணமான ’ பெருங்கூட்டத்தை நோக்கிப் பேசும்’ புறநிலைக் கவிதைகளையே பாலாவும் எழுதியுள்ளார். அவர் எழுதிய கவிதைகள் தரும் வாசிப்பனுபவத்தை விட அவர் மொழி பெயர்த்த கவிதைகள் தரும் வாசிப்பனுபவம் ஒரு படி உயர்ந்தது என்றே சொல்ல வேண்டும். வித்யாபதியின் காதல் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். தனது இலக்கியத் தேர்வை மையமாகக் கொள்ளாமல் நண்பர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுதல் என்ற நெருக்கடி காரணமாக அவர் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவை பலவும் காத்திரமான இலக்கியப் பகுதிகளாக இல்லாமல் இருந்தன. என்றாலும் அவரது மொழி பெயர்ப்புகள் மூலமும், ஆங்கிலக் கட்டுரைகள் மூலமும் தமிழின் பிரபலக் கவிஞர்களான சிற்பி, மு.மேத்தா,  மீரா, வைரமுத்து, தமிழ் நாடன் போன்றவர்கள் பிறமொழியாளர்களின் கவனத்துக்குச் சென்றுள்ளனர்.  அவரது ஆங்கிலப் புலமையை முழுவதும் பயன்படுத்தித் தமிழின் வளமான கவிதைகளையும் புனைகதைகளையும் ஆங்கிலம் வழியாக சர்வதேசக் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியும். அதை ஒரு கோரிக்கையாக வைத்துத் தான் நான் பல்கலைக்கழகப் பணி ஓய்வின் போது வழி அனுப்பினேன்.  அது நடக்காமலேயே போய்விட்டது &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அரசுக்  கல்லூரியொன்றில் ஓர் அறிவியல் ஆசிரியராகப் பணியைத் தொடங்கித்  தனது இலக்கிய வாசிப்பு, எழுத்தார்வம், ஆசிரியர்கள்,இலக்கிய நண்பர்கள்  போன்றோரின் தூண்டுதல் போன்ற  காரணங்களால் இலக்கியத்திற்குள் வந்தவர் பாலா. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்பதிலும், பேசுவதிலும் பெருவிருப்பம் கொண்டு இலக்கிய மாணவராக மாறி, ஆங்கிலம் கற்று கல்லூரி ஆசிரியராகி, நிறைவாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரை உயர்ந்தவர்.  அவர் பணியாற்றும் இடங்களில் எப்போதும் ஒலிபெருக்கியின் முன்னால் ஒரு சங்கீதத்தின் தாளலயத்துடன் ஒலித்துக் கொண்டே இருக்கும் . தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கான கடமையைக் கூடச் செய்யத் தயங்கும் நிலை வளர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர் பணியாற்றும் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வேலைகளைச் செய்வதில் அவர் ஒருவித லயிப்பைக் கொண்டிருந்தார். அத்தகைய வேலைகளைச் செய்பவர்களுக்குச் சில நேரங்களில் அந்த நிறுவனம் பொறுப்பான பதவிகளை வழங்குவதுண்டு. அப்படியான பல வாய்ப்புகள் வந்தபோதெல்லாம் அதை ஏற்றுக் கொள்ளாமல் விலகி நின்றவர்.  அத்தகைய பதவிகள் தனது இலக்கியம் சார்ந்த, தனிமனித சுதந்திரம் சார்ந்த வேலைகளில் ஈடுபட முடியாமல் கட்டிப் போட்டுவிடும் என்ற உண்மையைப் புரிந்து வைத்திருந்தது தான் காரணம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதே நேரத்தில்  பல்கலைக்கழகப் பேராசிரியர் என்ற தகுதி வழியாகக் கிடைத்த சாகித்ய அகாடெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை மட்டும் தட்டிக் கழிக்கவில்லை. சாகித்ய அகாடெமியில் பாலா பதவி வகித்த காலத்திலும் அதன் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் விருது அறிவிப்புகளும் விமரிசனத்துக் குரியனவாகவே இருந்தன. அவர் பொறுப்பில் இருந்த போது சாகித்ய அகாடெமி ஏராளமான கருத்தரங்குகளை நடத்தியது என்றாலும், அதன் பொதுவான போக்கில் பெரிய மாற்றம் எதுவும் நடந்து விடவில்லை.தமிழ் நாட்டில் அங்கீகரிக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு எது சரியான இலக்கியம் என்ற புரிதல்  இருந்த போதிலும் அதனை அங்கீகரித்து வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஆசையை அவர்கள் வெளிப் படுத்துவதில்லை. அப்படியான ஆசையை வெளிப்படுத்தாமல் போவதற்குப் பல்வேறு புறச்சூழல்களும் காரணமாக இருக்கின்றன. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள்,  நம்பிக்கைகள், தான் சார்ந்த குழுக்களையும் குழுவின் உறுப்பினர்களையும் மேலே தூக்கி விடும் நோக்கம் ஆகியனவும் காரணங்களாகி விடுகின்றன. இவைகளையெல்லாம்  இன்று முழுவதும் பலவீனம் என்று சொல்லி விட முடியாது. பல நேரங்களில் அவை ஆளுமையையும் அதிகாரத்தையும் தருவனவாக இருக்கின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt; பல்கலைக்கழகத்திற்குள்  நட்போடும்,  இலக்கிய வெளியில்  முரண்பாடுகளும் வேறுபாடுகளும் பழகும் நண்பராக இருந்த பாலா இப்போது இல்லை என நினைக்கும் போது இனி வேறுபாடு கொண்டு விவாதிக்க ஒருவர் இல்லை என்ற வருத்தம் துரத்திக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;===================================================&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-5871363965280692480?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/5871363965280692480/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=5871363965280692480' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/5871363965280692480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/5871363965280692480'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/10/blog-post_07.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-6686145608559590764</id><published>2009-10-05T18:13:00.000-07:00</published><updated>2009-10-05T18:19:43.126-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-13'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="color:#666600;"&gt;தேடும் பறவைகள்: மீரானின் இரைகள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#33cc00;"&gt;==================================&lt;br /&gt;&lt;/span&gt;இந்த வசதிகள் எல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களுக்குக் கிடைக்காதவை. வளைவுகளற்ற நான்குவழி, ஆறுவழிச் சாலைகளில் வழுக்கிக் கொண்டு போகும் ஆம்னி பஸ்கள், விரைவுப் பேருந்துகள் உட்பட்ட போக்கு வரத்து வசதிகள், விதவிதமாய்க் கல்வியைக் கற்றுத் தரும் கல்விச் சாலைகள், தனித்தனி உறுப்புகளுக்கும் சிறப்பு மருத்துவம் தரும் பாலி கிளினிக்குகள், டிக்கெட் கிடைக்கவில்லையென்று தியேட்டருக்குப் போன பின்பு திரும்பி வரத் தேவையில்லாத அளவுக்கு ஒரே இடத்தில் பல தரப்பட்ட சினிமாக்களைச் சேர்த்து வைத்திருக்கும் மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள்,  சாப்பிடும் போதே பிள்ளைகள் விளையாடத் தனி அறைகள், குடும்பமாகச் சாப்பிடும் போது மற்றவர்களுக்குக் கேட்காதவாறு தடுக்கும் இசைக் கோலங்களை உமிழும்  ரம்மியமான சூழல் கொண்ட உணவு விடுதிகள், அந்நிய நாடுகளில் மட்டுமே கிடைத்த வண்ண ஆடைகளைக் கட்டித் தொங்க விட்டு அசத்தும் துணிக்கடல்கள், காலனிக் காட்சிக் கூடங்கள், வீட்டுபயோகப் பொருட்காட்சி அரங்குகள் என வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டது உலகமயப் பொருளாதாரம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒருவர் அலுவலகப் பொறுப்பாளர் என்றால், விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தாலும் வேலை நடப்பதைக் கண்காணிக்க கைபேசி போதும். ஆம் எல்லா வசதிகளையும் கொண்டு வந்து சேர்த்து விட்டது தாராளமயப் பொருளாதாரமும் அதன் பின் விளைவுகளும். உலகமயமாக்கலின் வெளிப் பாடுகள் சாதாரணமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அக்கறை கூட புது வசதிகளின் வழியாகச் சாத்தியமாவதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். மனித நேய முகத்துடன் கூடிய உலகமயப் பொருளாதாரம் பற்றி மதிப்பிற்குரிய பிரதமர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்னின்ன துறைகளில் தான் என்றில்லை. ஒரு ஆட்டோக்காரரை அழைக்க அவை நிற்கும் இடங்களுக்கு போக வேண்டியதில்லை. தையல்காரரிடமும், சலவைக்காரரிடமும் துணிகள் தயாராகி விட்டதா எனத் தெரிந்து கொள்ள அக்கடைகளுக்கும் அலைய வேண்டியதில்லை. கையிலிருக்கும் அலைபேசி மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு கிளம்பிப் போகலாம். அதன் உபயோகம் ஆச்சரிய மூட்டக் கூடியதாக மாறி விட்டது. நகரவாசிகள் இன்று  அலைபேசியிலேயே அன்றாடத் தேவை களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். வீட்டுக்குப் பத்துப் பேர் விருந்தினர்களாக அழைக்கப் படும் போதே உணவு விடுதிக்கும் என்ன கொண்டு வர வேண்டும் சொல்லி அனுப்பி விடுகிறார்கள். சரியான நேரத்திற்கு அவை வந்து நிற்கும் விதத்தில் பணியாற்றிட நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நான்கு மாதக் கர்ப்பத்தின் போதே பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பார்த்துச் சொல்வதோடு எந்தத் தேதியில் குழந்தை பிறக்கும் என்று சொல்லும் வசதி வந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர் விரும்பினால் நல்ல நாளில், நல்ல நேரத்தில் குழந்தையை வெளியே எடுத்துத் தரும் அறுவை சிகிச்சைகள் இன்று சாத்தியம். பேறுகால வலி என்பது நவீனப் பெண்ணுக்கு வேண்டாம் என்றாலும் நமது நவீன மருத்துவம் உதவத் தயார். கட்ட வேண்டிய பணம் சில பத்தாயிரங்கள் கூடும்; அவ்வளவு தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;விபத்து நடந்தால் ஒரு தொலைபேசி அழைப்பு செய்தால் போதும் ஒரு வசதி மிக்க மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் அந்த இடத்தில் வந்து விபத்தில் காயம் பட்டவரை அள்ளிப் போட்டுக் கொண்டு போகிறது. அழைக்காமலேயே ரோந்து சுற்றும் ஆம்புலன்ஸ்கள் நெடுஞ்சாலைகளில் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கின்றன. நீங்கள் சொல்லாமலேயே நவீன வசதி கொண்ட எலும்புச் சிகிச்சை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் நிலையும் இல்லாமல் இல்லை. இப்படி இந்திய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சாதகங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனை வரவேற்று அதற்குத் தகுந்தவர்களாக ஆவதில் பெரும்பான்மை மக்கள் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதன் மறுபக்கம் தெரிவதில்லை. இந்த வசதி இங்கு எல்லோருக்கும் கிடைக்கிறதா? என்று கேள்வியை அவர்கள் கேட்டுக் கொள்வதில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தங்களின் சுகமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தந்துள்ள அதன் சாதகங்களை மட்டுமே பார்த்துப் பழக்கப் படுத்திக் கொள்ளும் பொதுப்புத்தி கொண்டவன் அல்ல படைப்பாளி. அவன் எதையும் திருப்பிப் போட்டுப் பார்த்துக் கருத்துச் சொல்பவன். திருப்பிப் போட்டு மறுபக்கத்தை மட்டும் என்றில்லை, ஒரு நிகழ்வின் பல பரிமாணங்களையும் பார்ப்பவனே சிறந்த படைப்பாளியாக மதிக்கப்படுகிறான். அப்படிப் பட்ட படைப்பாளிகளில் ஒருவர் தோப்பில் முஹம்மது மீரான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தனது கடலோரக் கிராமத்தின் கதை என்னும் முதல் நாவல் மூலம் இலக்கியவாசகனைத் தன்பால் ஈர்த்த தோப்பில் முஹம்மது மீரான் கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, துறைமுகம் என அடுத்தடுத்த நாவல்களின் வழி இலக்கிய இருப்பை உறுதிப் படுத்தியவர். இறுக்கமான இசுலாமியச் சட்டங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகள் மீது காத்திரமான விமரிசன இழைகளைப் படர விடுவதைக் கொண்டு இசுலாமிய விரோதத்தைக் கொண்ட எழுத்துக்காரர் என யாரும் முத்திரை குத்தி விட முடியாது. எந்தவொரு சமயமும் அதனைப் பின்பற்றுபவர்களும் காலதேச வர்த்தமானங்களுக்கேற்பத் தனது நடைமுறைகளையும் இயல்பையும் மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இசுலாமியச் சமுதாய வாழ்நெறிக்குள்ளிருந்தே வலியுறுத்தும் எழுத்துகள் அவருடையவை. அவரது நாவல்கள் அளவுக்கு சிறுகதைகள் வாசகனை ஈர்க்கவில்லை என்ற போதிலும் அவரது விமரிசனபாணி எழுத்து என்பது சிறுகதைகளிலும் வெளிப்படவே செய்கிறது. அனந்தசயனம் காலனி என்ற முதல் தொகுப்பை அடுத்து  ஒருமரமும் கொஞ்சம் பறவைகளும் என்ற இரண்டாவது தொகுப்பு வந்துள்ளது. அதில் உள்ள ஒரு கதை இரைகள் என்பது. அது உண்டாக்கும் விமரிசனம் இப்போதுள்ள நவீன  மருத்துவ மனைகள்  இரக்கமற்ற கொலைக்களங்கள் என்பதாகக் குற்றம் சாட்டுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இரைகள் கதை மட்டும் அல்ல இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் தன்மைக் கூற்றுக் கதைகளாக இருக்கின்றன. ஆசிரியரே கதையின் ஒரு பாத்திரமாக நின்று தான் பார்த்த- பங்கெடுத்த நிகழ்வுகளைக் கதை யாக்கித் தந்துள்ளார். இத்தகைய கதைகளில் ஒரு பத்திரிகை யாளனின் விவரிப்புத்தன்மை இருக்கும். அதனால் அது கதையாக இல்லாமல் நேரடி வருணனை யாக மாறி விடும் ஆபத்தைச் சந்தித்து விடும். இதனைக் கதையின் பலவீனம் என்று நினைத்தால் அது உண்டாக்கும்   நம்பகத் தன்மையைப் பலம் என்று சொல்ல வேண்டும். கதை சொல்லியாகப் பங்கெடுக்கும் படைப்பாளியின் மொழி ஆளுமை மற்றும் நுட்பமான கவனப் பதிவு ஆகியவற்றால் அந்த நம்பகத் தன்மை உருவாக்கப் படும்.  மீரான் உண்டாக்கும் நம்பகத்தன்மை தான் இரைகள் கதையைச் சமகால விமரிசனக் கதையாக மாற்றுக் காட்டுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இலவச ஆம்புலன்ஸ் உதவிக்குக் கூப்பிட வேண்டிய தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்ட விளம்பரப் பலகைகள்  ஓரங்களில் நாட்டப்பட்ட நெடுஞ்சாலை, சாலை ஓரங்களில் தயார் நிலையில் நிற்கும் பளபளப்பான ஆம்புலன்ஸ்கள் பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத்தானிருக்கும். அனைத்து வசதிகளும்  அமையப் பெற்ற விலை உயர்ந்த வெண்ணிற வாகனங்களை மக்கள் சேவைக்காகச் சாலை ஓரங்களில் நிப்பாட்டியிருக்கும் கருணை உள்ளங்களை, அது வழியாகப் பயணிக்கும் போதெல்லாம் முன்பு வாழ்த்தாமல் இருந்ததில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படித் தொடங்கி கதையை விரிக்கும் கதைசொல்லி அதை முடிக்கும்போது வேறு மாதிரி சொல்கிறார் கதை சொல்லி: இப்போது பஸ் பயணம் செய்யும் போது, கண்களை இறுக்க மூடிக் கொண்டும் உறங்குவது போல் இருக்கை யில் சாய்ந்து கொள்வேன். ஏனென்றால், சாலையோர ஆம்புலன்ஸ்கள் கண்ணில் பட்டாலே உடன் நடுங்குகிறது. இது கதையின் முடிவு. இடையில் நடந்தது என்ன என்பது தான் கதை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நூக்கண்ணு , தனது ஒன்றுவிட்ட தம்பியின் மகன் சாவுக்குக் காரணமாக இருந்தது அப்படிப் பட்ட ஆம்புலன்சும், அது கொண்டு போய்ச் சேர்த்த மருத்துவ மனையும் தான். தனது வாப்பா வாங்கித் தந்த புதுச் சைக்கிளில் வாப்பாவிற்கு உணவு கொண்டு போன நூக்கண்ணுவை ஒரு சிவப்பு டொயட்டோ கார் தட்டி விட்டு நிற்காமல் போய்விட்டது. லேசான காயத்துடன் கீழே விழுந்தவனை விரைந்துவந்த அந்த ஆம்புலன்ஸ் யாரையும் கேட்காமல் அந்த ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்து விட்டுப் போய்விட்டது. பின் தொடர்ந்து வந்த அவனது வாப்பாவால் ஆஸ்பத்திரிக்குக் கட்ட வேண்டிய அட்வான்ஸும் அதன் நடைமுறைகளும் பணம் தேடிக் கொண்டு வரும்படி விரட்டி விடுகிறது. இச்செய்தியை கேட்டு நூக்கண்ணுவைப் பார்க்க வரும் ஆசிரியரின் கூற்றாகவே கதை அமைகிறது. வந்தவர் , &lt;span style="color:#3333ff;"&gt;“ லேசான காயம்தானா”&lt;/span&gt; வரவேற்பாளரான பெண்ணிடம் விசாரித்தேன். நெத்திலிக் கருவாடு போன்ற உடல் அமைப்புள்ள அந்தப் பெண், ஒரு எரிஞ்சு விழுகிற ஜன்மம். ‘ எனக்கு அதுபற்றித் தெரியாது, டூட்டி நர்சிடம் கேளுங்கள். எல்லோருக்கு வழிகாட்டுவதுதான் என் வேலை.’&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;“தீவிர சிகிச்சைப் பிரிவு எந்தப் பக்கம்?”&lt;/span&gt; அருகில் இருக்குமானால் எட்டிப் பார்க்கலாமென்றுதான். &lt;span style="color:#3333ff;"&gt;‘நாலாவது மாடியில்’&lt;/span&gt; “ லிப்ட் வழியாக நாலாவது மாடிக்குப் போகலாமா”&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt; ‘இதுபார்வை நேரமல்ல; அனுமதிச்சீட்டு இல்லாமல் நாலாவது மாடியில் நுழைய முடியாது’ &lt;/span&gt; &lt;span style="color:#3333ff;"&gt;“அனுமதிச் சீட்டு எங்கே வாங்கனும்”&lt;/span&gt; &lt;span style="color:#3333ff;"&gt;‘சிகிச்சைக்கு முன்பணம் கட்டி வச்ச பிறகு தான் அனுமதிச் சீட்டு கொடுப்பாங்க. நீங்க பார்க்க வந்த நோயாளிக்குச் சிகிச்சை செய்ய முன் பணம் இன்னும் கட்டல’&lt;br /&gt;&lt;/span&gt;பணம் தேடிப் போன தம்பி இன்னும் வரவில்லை. வரும் வரை காத்திருக்கும் ஆசிரியர்  அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கவனமாக பார்த்துக் கொண்டி ருக்கிறார்.  அடுத்தடுத்து வந்த ஆம்புலன்ஸ் காயம் பட்ட சில பேரைக் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. ஆஸ்பத்திரி வேகமாக உயிர்காக்கும் பணிக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது. இறந்து போன ஒருவரைப் பிணமாகக் கொண்டு போய்ச் சேர்க்க ரூ.4500/- கட்டினால் தான் தூக்கிப் போக முடியும் அதே ஆம்புலன்ஸ் டிரைவர் பேரம் பேசுகிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;போதிய பணமின்றி வந்த நூக்கண்ணுவின் வாப்பா, &lt;span style="color:#3333ff;"&gt;‘டாக்டர், டாக்டருடைய இரக்கம் நாடித் தாழ்மையுடன் கூப்பிட்டவாறு, தான் ஒரு கடையில் குமாஸ்தா வேலை செய்யக் கூடியவன், நான் நெனச்சா இவ்வளவு பணம் உடனே ஒரு நாளில் திரட்ட முடியாது, டாக்டர். பல முயற்சிகளும் செய்து பார்த்தேன். கெடக்கல்ல. எப்படியும் பண்டம் கட்டிடுவேன்.. தயவு செய்து..’&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;“ தயவு தாட்சண்யம் பாத்தா , ஆஸ்பத்திரி நடத்த முடியாது பாய்.. பணம் கட்டி வைங்க. அவசரமாக ஆபரேசன் செய்யணும் . பிறகு எங்க மேல பழி போடக் கூடாது. சொல்லிப் போட்டேன்..”&lt;/span&gt; நூக்கண்ணுவின் வாப்பா கட்ட வேண்டிய பணம் ரூ. 35000/-.இது முடியாது என்ற நிலையில் தர்மாஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாம் என்று முடிவு செய்கின்றனர். டாக்டர் சம்மதிக்கிறார். ஆனால் இதுவரை வைத்திருந்த செலவுக்கான பில்லை முடித்துக் கொண்டு அரசாங்கத்தின் தர்மாஸ்பத்திரிக்குப் போகலாம் என்பது நிலை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அடுத்த நாள் ஆசிரியருக்கு வந்த தொலைபேசி சொல்கிறது. இப்போதும் கட்ட வேண்டிய பணம் ரூபாய் 35000/- என்ற போது அதிர்ந்து போகிறார். வைத்தியமே செய்யாமல் அதே தொகை கட்ட வேண்டும் என்றால் அதிராமல் என்ன செய்வார். வேறு வழியின்றி பணத்தைக் கட்டிய பிறகு மருத்துவமனை நர்சு சொல்கிறாள். நேற்று இரவு நூக்கண்ணுவிற்கு உடம்பு சீரியஸ் ஆன தாகவும், ஆபரேசன் செய்ய எடுத்துப் போகும் போது அவன் இறந்து விட்டான் என்று. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மருத்துவம் செய்யாமல், வைத்திருந்தது மட்டுமல்லாமல், அவனது சாவுக்குக்காரணமான அந்த மருத்துவமனை நிர்வாகம் எந்தவிதக் குற்றவுணர்வும் கொள்ளாமல் பணம் பிடுங்குவதில் குறியாய் இருந்ததைப் படம் பிடிக்கும் தோப்பில் , இத்தகைய மருத்துவமனைகள் விபத்தில் காயம் பட்டவர்களைத் தேடி அலையும் ஆம்புலன்ஸுகளை வைத்திருப்பது போல விபத்துக்களை உண்டாக்கும் டொயட்டோ கார்களையும் குவாலிஸ் வண்டிகளையும் கூடச் சாலைகளில் நிறுத்தி வைத்திருக்கின்றனவோ என்ற ஐயத்தை உண்டாக்குகிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படி நடப்பதை பொதுப் புத்தி சார்ந்த மனிதன் ஏற்காமல் போகலாம். இவையெல்லாம் இன்று சமூகத்தில் நிகழாத ஒன்று என்று சொல்லி விட முடியாது என்பதுதான் நிதர்சனம். பல கோடி விலையில் வாங்கிப் போடும் நவீன மருத்துவக் கருவிகளுக்கான இரைகளைத் தேடித் தர வேண்டிய கட்டாயம் அந்த நிர்வாகங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தால்,  அதற்காக விபத்துக்களை உருவாக்கும் அறமற்ற செயலை அவர்கள் செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதையும் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நவீனக் கருவிகளை வாங்கிப் போட்டு பத்திரிகை நடத்தும் அச்சு ஊடக நிறுவனங்கள், அவற்றிற்குத் தீனி போட ஒவ்வொரு நாளும் –ஆன்மீகம், குடும்பம், பக்தி, ஜோதிடம், வணிகம், பெண்கள், விளையாட்டு, பங்கு வர்த்தகம் என ஒவ்வொருதுறைசார் பத்திரிகைகளைக் கொண்டு வந்து , சமூகத்தைப் பின்னிக்கு இழுக்கும் வேலையைச் செய்வது போல , செயற்கைக் கோள் தொலைக் காட்சிகளின் வழியே செய்யப்படும் மனக்கொலைகளின் பின்னணியில் எந்த அறமும் இல்லை என்பதும் உண்மை தானே. ஊடகங்களை நடத்துபவர்கள் ஒவ்வொரு நாளும் மனக்கொலைகளைத் திட்டமிட்டுச் செய்யத் தயங்காத நிலை தொடரும் நிலையில் நவீன மருத்துவ மனைகள் உடல் கொலைகள் செய்யும் என்பதையும் நம்பித் தான் ஆக வேண்டும். அப்படியொரு எண்ணத்தை உண்டாக்குவதில் மீரானின் கதை இரைகள் முழுவெற்றி பெற்றுள்ளது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-6686145608559590764?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/6686145608559590764/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=6686145608559590764' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/6686145608559590764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/6686145608559590764'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/10/blog-post.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-2094295309986968620</id><published>2009-09-28T18:08:00.000-07:00</published><updated>2009-09-28T18:35:20.184-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம் -2'/><title type='text'></title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#660000;"&gt;கலையும் ஒப்பனைகள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#660000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#660000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;காட்சி:1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;[அவன் ஒரு புதுவகை ஈஸிசேரில் படுத்துக் கிடக்கிறான்.உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் ஓய்வு கொடுப்பது நோக்கம்.வெளிச்சம் நேரடியாக முகத்தில் இல்லை. முகம் கர்சீப்பால் மூடப் பட்டிருக்கிறது. நிழல் திசைமாறும் பொழுதெல்லாம் குரல் தொனி மாற்றி வந்து கொண்டிருக்கிறது].&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;'நோ..ந்நோ..இல்லை .. இது பொய். இது பொய்..&lt;br /&gt;காதலாவது கத்தரிக்காயாவது; முடியாது ; ஒத்துக்க முடியாது&lt;br /&gt;நான் ஒத்துக்க முடியாது.&lt;br /&gt;எனக்கு என் அடையாளம் முக்கியம்; என் அந்தஸ்து முக்கியம்&lt;br /&gt;எனது கடவுள் முக்கியம்; எனது சாதி முக்கியம்&lt;br /&gt;எனது சமயம் ; எனது மக்கள்...&lt;br /&gt;அவ்வளவு சுலபமா விட்டுவிட முடியாது.&lt;br /&gt;உன்னோட ஆசை நிறைவேறும் சாத்தியங்களே இல்லை&lt;br /&gt;எல்லாவற்றையும் மறந்துவிடு; &lt;/div&gt;&lt;div align="left"&gt;மறந்துவிடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;[வசனப் பயிற்சிக்காகச் சொல்லப்படுவது போல் தூரத்திலிருந்தும் பக்கத்திலிருந்துமாக வருகிறது. ஆண்குரலிலும் பெண்குரலிலுமாக மாறிமாறி ஒலிப்பதற்கேற்ப அந்த உருவத்தின்மீது மாறி மாறி விழும் வண்ணம் விளக்கு வெளிச்சம் மெதுவாகவும் சடசடவென்றும் வந்து போகின்றன. நிழலும் நீள்வதும் குறுகுவதுமாக இருக்கிறது.விளக்கு,குரலின் ஓசை, நிழலின் அளவு என ஒவ்வொன்றும் ஒத்திசைவுடன் அமைய வேண்டும்&lt;br /&gt;இந்த வசனப் பயிற்சியினூடாக தூரத்தில் ஒரு ஷூட்டிங்கின் பின்னணிக் காட்சிக்கான குரல்கள்-'லைட்ஸ் ஆன்' , சீன் தேற்ட்டி பைவ்; டேக் த்ரீ போன்ற குரல்கள் கேட்கின்றன. பின் திரையில் நிழல் உருவத்தில் இயக்குநர் காமிராக் கோணம்பார்ப்பது ,டிராலியில் காமிரா முன்னும் பின்னுமாக நகர்வது போன்றன இடம் பெருகின்றன. கடைசியில் இயக்குநர் குரல் ]&lt;/em&gt;&lt;br /&gt;" ஷாட் ரெடி ... டேக்..ஆக்ஷன்.."&lt;br /&gt;&lt;em&gt;[ இந்தக் குரல் கேட்டதும் அந்த நபர் எழுந்து ஆவேசமாக இந்த வசனங்களைப் பேசிகிறான்&lt;/em&gt;]&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;"நோ..ந்நோ..இல்லை .. இது பொய். இது பொய்..&lt;br /&gt;காதலாவது கத்தரிக்காயாவது; முடியாது ;ஒத்துக்க முடியாது&lt;br /&gt;நான் ஒத்துக்க முடியாது.&lt;br /&gt;எனக்கு என் அடையாளம் முக்கியம்; என் அந்தஸ்து முக்கியம்.&lt;br /&gt;எனது கடவுள் முக்கியம்; எனது சாதி முக்கியம்.&lt;br /&gt;எனது சமயம் ; எனது மக்கள்...&lt;br /&gt;அவ்வளவு சுலபமா விட்டுவிட முடியாது.&lt;br /&gt;உன்னோட ஆசை நிறைவேறும் சாத்தியங்களே இல்லை&lt;br /&gt;எல்லாவற்றையும் மறந்துவிடு; மறந்துவிடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;em&gt;[இயக்குநரின் குரல் மட்டும் கேட்கிறது]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'ஸூபர்ப் சார்.. பின்னீட்டீங்க.. ஏய்ய்.. நாளைக்கு சாருக்கு எந்த ஷெட்யூல் ;&lt;br /&gt;&lt;/em&gt;செக்கண்ட் ஷெட்யூலா.. ஓ.கே.. சார் .நாளைக்குப் பார்க்கலாம் ..' &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;[அருகில் இருப்பவரிடம் சொல்வதுபோல் மெதுவாக ]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;'அனுபவசாலிகளோடு ஒர்க் பண்ற சொகமே தனி தாம்ப்பா..'&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;காட்சி:2&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;[&lt;em&gt; அவன் அதை நின்று கேட்டுக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் வெளியேறுகிறான்&lt;/em&gt;.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;[ நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்; அவனது அசைவு காரில் பயணம் செய்வது போல் இருக்கவேண்டும். தேவைப்படும் இடத்தில் எழுந்து நடித்துவிட்டுத் திரும்பவும் அசைவுரூபத்திற்கு வந்து விடவேண்டும்] &lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/em&gt;&lt;div align="left"&gt;நினைவில் இருக்கிறது&lt;br /&gt;எனது நினைவில் இருக்கிறது.&lt;br /&gt;எல்லாம் நினைவாய் இருக்கிறது.&lt;br /&gt;எதில் தொடங்கி எங்கு முடியும் என் நினைவுகள்&lt;br /&gt;எங்கள் ஊர் ஆலமரம்; அகன்று விரிந்த ஆலமரம்.&lt;br /&gt;கிளைக்குப் பத்து விழுதுத் தூண்கள்.&lt;br /&gt;விழுதுகள் தோறும் கிளிக்கூண்டு;&lt;br /&gt;கூண்டுகள்தோறும் பச்சைக்கிளி..&lt;br /&gt;...ஒற்றைக்கிளி.. இரட்டைக்கிளி..&lt;br /&gt;கூண்டுகள் காணாப் பச்சைக்கிளிகள்.&lt;br /&gt;மெல்ல வளைந்தோடும் உப்போடைப்பள்ளம்&lt;br /&gt;மானம் பார்த்த அந்தப் பூமி&lt;br /&gt;வடக்கே பார்த்தால் மேகங்களுக்கூடே&lt;br /&gt;மெலிதாய் தெரிவது திடியன் கரடு&lt;br /&gt;அதன் அடிவாரத்தில் அந்தவெள்ளைக் கோபுரம்.&lt;br /&gt;இந்தப் பக்கம் தொழுகை போடும் சின்ன மசூதி.&lt;br /&gt;வாப்பாவுக்குத் தெரியும் ஐந்து நேரத்தொழுகை;&lt;br /&gt;எனக்கும் தெரியும்;&lt;br /&gt;எனக்கு ஐந்து நேரத்தொழுகையுடன்&lt;br /&gt;ஆறுகாலப் பூஜையின் நேரமும் தெரியும்.&lt;br /&gt;காயத்திரி மந்திரம் கற்றுக்கொள்ள முயன்று தோற்றதும்&lt;br /&gt;கண்ணுக்குள் நிறையும் பின்கூந்தல் அசைவும்&lt;br /&gt;திரும்ப வரப் போவதில்லை.&lt;br /&gt;எனது கிராமம் எங்கே போனது;&lt;br /&gt;எனது இளமை எங்கே சென்றது;&lt;br /&gt;நான் படித்த நடுநிலைப் பள்ளியில்&lt;br /&gt;எட்டு வகுப்புக்குப் பதினொரு வாத்தியார்கள்.&lt;br /&gt;பத்தைத் தாண்டிய ஒற்றை விரலாய்&lt;br /&gt;இந்தி வாத்திச்சி; பர்வதவர்த்தினி;&lt;br /&gt;அவர்தான் அப்புறம் கணக்கு டீச்சர்.&lt;br /&gt;இந்தி வாத்திச்சி கணக்கு டீச்சர் ஆன கதை&lt;br /&gt;என் நினைவில் இருக்கிறது.&lt;br /&gt;பெருமாள் கோயில் அக்கிரகாரத்துக் கடைசி வீட்டில்&lt;br /&gt;எங்கள் டீச்சர் இருந்தது வாடகைக்குத்தான்.&lt;br /&gt;அவருடன் அவரது அம்மாவும் இருப்பார்.&lt;br /&gt;கணக்கு வாத்தியார் தனசேகரபாண்டியன் தோட்டத்திலிருந்து&lt;br /&gt;காய்கறிகளும் நல்ல தண்ணீரும் கொண்டு போய் இறக்க&lt;br /&gt;எங்கள் வகுப்பில் ஏழு டீம் இருந்தது.&lt;br /&gt;என்னுடைய முறை வெள்ளிக்கிழமை.&lt;br /&gt;தொழுகைக்குப் போக முரண்டு பிடிக்கும் எனக்கு&lt;br /&gt;அக்கிரகாரம் போக அலுத்ததே இல்லை.&lt;br /&gt;குளித்து முடித்துக் கோதும் சிணுக்கருக்கியுடன்&lt;br /&gt;எங்கள் டீச்சர் வாசலில் நிற்பாள்;&lt;br /&gt;அவளுக்கு உவமை சொல்ல ஒரு சிற்பம்&lt;br /&gt;மசூதியில் இருக்கவில்லை.&lt;br /&gt;உவமை தேடிக் கோயிலுக்குப் போவேன்.&lt;br /&gt;மலையடிவாரக் கோயிலுக்கு....&lt;br /&gt;கோயிலெங்கும் கோலங்கள்; கோலமயில்கள்.&lt;br /&gt;ஹிந்தி ஒழிக! தமிழ் வாழ்க!!&lt;br /&gt;தமிழ் வாழ்க! ஹிந்தி ஒழிக!!&lt;br /&gt;இந்திப் பேயை ஓட்டும் போரில்&lt;br /&gt;இறங்கவேணும் இளைஞர்களே!&lt;br /&gt;வேண்டும்! வேண்டும்!! தமிழே வேண்டும்;&lt;br /&gt;எங்கும் வேண்டும்! எதிலும் வேண்டும்!!&lt;br /&gt;புதுப்புனல் ஆறாய் எமது தாய்மொழி&lt;br /&gt;பொங்கும் தமிழே எங்கும் வேண்டும்&lt;br /&gt;வேண்டாம்! வேண்டாம்!! ஹிந்தி வேண்டாம்!&lt;br /&gt;வடவராதிக்கப் பேயது வேண்டாம்.&lt;br /&gt;ஆரிய பாஷை....அது நீசபாஷை..&lt;br /&gt;ஆதிக்கம் செலுத்தவந்த அன்னிய பாஷை.&lt;br /&gt;வேண்டாம்! வேண்டாம்!! ஹிந்தி வேண்டாம்!&lt;br /&gt;பார்ப்பணக் கும்பலின் மொழியது வேண்டாம்.&lt;br /&gt;கோஷம் போட்டபோது என்ன வயதிருக்கும்&lt;br /&gt;நான் இளைஞனுமில்லை; என்னில் ஆர்த்தெழுந்த&lt;br /&gt;திமில்கள் எதுவென அறிந்ததுமில்லை.&lt;br /&gt;என்றாலும் கோஷங்கள் உண்டு; கோபங்கள் உண்டு;&lt;br /&gt;கல்லெறி உண்டு; கதவடைப்பு உண்டு.&lt;br /&gt;ஆனால் டீச்சரிடம் எனக்குக் கனிவ்¢ருந்தது.&lt;br /&gt;தனசேகரபாண்டியன் சொன்னபோது&lt;br /&gt;புரிந்தது கொஞ்சம்; புரியாதது எங்கும்;&lt;br /&gt;என்ன செய்தார் பர்வதவர்த்தினி..?&lt;br /&gt;எப்படி முடியும் அவரை எதிர்க்க...?&lt;br /&gt;இந்தி வருது என்றபோது ; இல்லை&lt;br /&gt;செதுக்கிய சிலையொன்று சிறு நடனம் புரிந்தது என்பேன்&lt;br /&gt;அந்த வயதில் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான்.&lt;br /&gt;என்மனதில் இருந்தது என்னவென்று எனக்கே தெரியாது.&lt;br /&gt;இந்தி எதிர்ப்புப் போரில் தனசேகரபாண்டியன் தான் தளபதி&lt;br /&gt;முப்பதுகளில் இருந்த அவரது அடுக்குமொழித்தமிழ்&lt;br /&gt;சொக்கவைக்கும் தேன்மதுரம்; அற்புதப் பல்வரிசை.&lt;br /&gt;எங்கள் பள்ளியிலிருந்து ஹிந்தி போனபோது&lt;br /&gt;பர்வதவர்த்தினிக்கு வேலை போகவில்லை;&lt;br /&gt;பர்வதவர்த்தினி திருமதி தனசேகரபாண்டியன் ஆனாள்.&lt;br /&gt;இரண்டு வருடங்களுக்குப் பின் ஹிந்தி டீச்சர்&lt;br /&gt;எங்கள் பள்ளியின் கணக்கு டீச்சரானார்.&lt;br /&gt;அக்கிரகாரத்துப் பர்வதவர்த்தினி&lt;br /&gt;அகமுடையாளானாள்.&lt;br /&gt;இந்தியை வெறுத்த தனசேகரபாண்டியனுக்கு&lt;br /&gt;இந்தி டீச்சர் பிடித்தமானவளாக இருந்தது எப்படி..?&lt;br /&gt;கேள்விகள் அப்பொழுது இல்லை;விடைகள் இருந்தன.&lt;br /&gt;காதலுக்குக் கண் இல்லை;&lt;br /&gt;காதலுக்குக் கண்மட்டும்தானா இல்லை...?&lt;br /&gt;இப்பொழுது விடைகள் இல்லை.&lt;br /&gt;கேள்விகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;காட்சி:3&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;[ அது ஒரு விழா மேடை; வெள்ளிவிழாக் கொண்டாடிய&lt;br /&gt;படத்தின் கேடயம் கையில் இருக்கிறது.விருதுவாங்கிய அவனிடம்&lt;br /&gt;கேள்விகள் கேட்கும்விதமாகக் குரல்கள் வருகின்றன]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'இந்த விருதுவாங்கிய கணத்தெ எப்படி உணர்றீங்க..?'&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;"ரொம்ப சந்தோசமா இருக்கு.. ஒரு கலைஞனுடைய சந்தோசம் என்பது அவனது காரியத்தெப் பலரும் பாராட்றதிலதான் இருக்கு; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;பணம்;வசதியெல்லாம் வரும் போகும்;ஆனால் ரசிகர்கள் மனத்தில் பிடிக்கிற இடம் ரொம்ப முக்கியமானது.புகழ் அதுக்குத்தலை வணங்காம இருக்க யாரால் முடியும். ரசிகர்களின் பாராட்டுக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்றவனாக என்றும் இருப்பேன் "&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;' இப்படியொரு கேள்வி கேக்கிறேனேன்னு கோபப்பட வேண்டாம்.இந்தப் படத்தில இந்த கேரக்டரச் செய்யும்போது இன்வால்வாகி செய்ய முடிஞ்சதா... இல்லேயின்னா வேறெ வழியில்லன்னு செய்ஞ்சீங்களா..?'&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படியொரு கேள்வியெக் கேக்கிறதுக்கு என்ன காரணம்..?"&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'அதாவது இதே படத்தில உங்களுக்கெதிராக நிக்கிற அந்தக் கதாபாத்திரத்த... ஐ மீன் அந்த முஸ்லீம் கதாபாத்திரத்த நீங்க இன்னும் நல்லா செஞ்சிருக்கலாமில்ல...?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;[ மனதிற்குள் கோபம் இருக்கிறது. ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;"யூ..மீன் ஒரு பைத்தியக்காரனுக்கு மட்டும் தான் பைத்தியமா நடிக்கிறது சுலபம்னு சொல்லவர்ரீங்க.. அப்படித்தானே ."&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'ஸாரி சார் ..அந்த அர்த்தத்தில சொல்லல '&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;"ஸாரி நானும் அந்த அர்த்ததில சொல்லல; ஒரு நடிகனெப் பொறுத்தமட்டில எல்லாம் கதாபாத்திரங்கள் தான்; நான் முஸ்லீம்கிறதுனால ஒரு முஸ்லீம் கேரக்டரெ நல்லாச் செய்ஞ்சிடுவேன்னு எதிர்பார்க்கிறது அபத்தம்ன்னு சொல்ல வந்தென்." &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'அனுபவத்துக்கும் வெளிப்பாட்டுக்கும் சம்பந்தமே இல்லங்கிறீங்களா..?'&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;"சம்பந்தம் இருக்கலாம்; பயிற்சியே அதைவிட முக்கியம்னு சொல்ல வர்றேன்; நாய் வேஷம் போட்டா கொரைக்கப் பழகனும்; கழுதயின்னா கத்தப் படிக்கனும்."&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;[மேலும் கேள்விகள் வேண்டாமே என்னும் தொனியில் உடல் சாடை&lt;br /&gt;காட்டிவிட்டு இறுக்கமான முகத்துடன் வெளியேறிய அவன்&lt;br /&gt;பெரும்மூச்சுடன் படுத்துக்கிடக்கிறான். அவனுள்ளிருந்து முனகலாக&lt;br /&gt;வரத்தொடங்கிய குரல் பிறகு வெடிக்கிறது]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;அர்த்தங்கள்..அனர்த்தங்கள்&lt;br /&gt;நிற்பதிலும் நடப்பதிலும் அர்த்தங்கள்;&lt;br /&gt;உண்பதிலும் உறங்குவதிலும் அர்த்தங்கள்;&lt;br /&gt;எல்லா அர்த்தங்களும் புரிகின்றன.&lt;br /&gt;மோகம் கொள்வதற்கும் போகம் கொள்வதற்கும்&lt;br /&gt;ஒரே அர்த்தந்தானா..அனர்த்தங்கள் எதுவுமுண்டா..?&lt;br /&gt;கேள்விகளும் பதில்களுமாய் ..&lt;br /&gt;பதில்களும் கேள்விகளுமாய்..&lt;br /&gt;ஆலமரம் தாண்டி அம்மன் கோயில்; திரௌபதியம்மன்,&lt;br /&gt;பாஞ்சாலியம்மன்; அஞ்சுபேருக்கு வாக்கப்பட்ட பாஞ்சாலி&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;[தெருக்கூத்தில் இடம் பெறும் பாஞ்சாலி- துச்சாதனன் துகிலுரியும்&lt;br /&gt;காட்சியைத் தெருக்கூத்து நடிப்பாகக் காட்டவேண்டும்]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;"அடேய்..துச்சாசனா... இழுத்து வாடா.அவளை..&lt;br /&gt;ஏளனம் செய்து கொல்லென்று சிரித்த அந்தப் பாஞ்சாலியை&lt;br /&gt;இழுத்து வாடா.அவளை..அடேய்..துச்சாசனா...&lt;br /&gt;கண்ணாடி மாளிகை கட்டியழைத்து&lt;br /&gt;கலகலவெனக் குலுக்கியெடுத்து&lt;br /&gt;கதிகலங்கடித்த அந்தப் பாஞ்சாலியை&lt;br /&gt;அடேய்..துச்சாசனா... இழுத்து வாடா.அவளை.&lt;br /&gt;என்ன காரணமென்று நான் யோசிக்க ,&lt;br /&gt;என்னைக் கொல்ல வந்ததந்தச் சிரிப்பதுதான்&lt;br /&gt;என்பதை உணர்ந்தேன் சோதரா...&lt;br /&gt;இழுத்துவாடா அவளை.. என் தொடைமீது உட்கார்ந்து&lt;br /&gt;சுண்ணாம்பு தடவிய வெற்றிலை மடித்திட&lt;br /&gt;இழுத்து வாடா அவளை..&lt;br /&gt;இங்கே இழுத்து வாடா அவளை...&lt;br /&gt;சூதாட்டக் களத்தில் வைத்திழந்த பொருளாய்&lt;br /&gt;நேர்ந்திட்டபின்னரும் இன்னுமென்ன இருக்கு&lt;br /&gt;அவளுக்குக் கர்வங்கள் தானெததற்கு..&lt;br /&gt;இழுத்து வாடா அவளை..துச்சாசனா..இழுத்து வாடா அவளை.&lt;br /&gt;[துரியனாய் இருந்தவன் துச்சாதனனாய் மாறி துகிலுரியும்&lt;br /&gt;காட்சிக்குத்தயாராக வேண்டும்].&lt;br /&gt;'ஆணைகள் தானேயிட்டார் எங்கள் அண்ணா&lt;br /&gt;'ஆணைகள் தானேயிட்டார்;எனக்கு&lt;br /&gt;ஆணைகள் தானும் இட்டார் .&lt;br /&gt;இழுத்துவரச் சொல்லி ஆணைகளும் இட்டார்&lt;br /&gt;அந்தப்புரம் செல்வேன்; நானே அந்தப்புறம் செல்வேன் .&lt;br /&gt;அந்தப் பாஞ்சாலி தங்கிடும் அந்தப்புரமும் செல்வேன்&lt;br /&gt;ஐம்பத்தாறு தேசத்து ராசாக்களும் அவள் அலறலைக்&lt;br /&gt;கேட்டு ரசிக்கவே இழுத்தே நான் வருவேன்.&lt;br /&gt;இழுத்தே நான் வருவேன்.&lt;br /&gt;எங்கள் அண்ணன் நோகச் சிரித்த&lt;br /&gt;கோமளவல்லியை இழுத்து நான் வருவேன்.&lt;br /&gt;என் அண்ணன் இடது தொடையின் உயிர்த்தள மேடையில்&lt;br /&gt;உட்கார்ந்து ரசித்திட இழுத்து நான் வருவேன்".&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;[கூத்து நடிப்பிலிருந்து விடுபட்டு இயல்பு நிலையில் ]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;இழுத்து வரமாட்டேன். நான் இழுத்து வரமாட்டேன்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;( நின்று நிதானமாக அசைந்து அசைந்து)&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;மாட்டேன்.. இழுத்து வரமாட்டேன்.&lt;br /&gt;எனக்கு துஷ்டன் துச்சாதனனாக நடிக்கப்பிடிக்கவில்லை.&lt;br /&gt;பாஞ்சாலியைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்&lt;br /&gt;அஞ்சு பேருக்குப் பத்தினியான அந்தப்&lt;br /&gt;பாஞ்சாலியைக்கூட விட்டு விடுங்கள்.&lt;br /&gt;பாரதமாதாவைப் பாருங்கள் கௌரவர்கள்&lt;br /&gt;மட்டுமா துகிலுரியக்காத்திருக்கின்றனர்.&lt;br /&gt;பாண்டவர்களின் ஆசை கூட துகிலுரிந்து பார்ப்பதில்தான்&lt;br /&gt;திருப்தி கொள்ளும் போலும்.&lt;br /&gt;கௌரவர்களும் சபைகளில் மட்டுமல்ல&lt;br /&gt;பாண்டவர் சபைகளிலும் நிர்வாணக் கோலம்.&lt;br /&gt;துரியோதனாதிகள் -இந்த தேசத்தின் துரியோதனாதிகள்&lt;br /&gt;கௌரவர்கள்.. கௌரவங்கள்..தேசத்தின் கௌரவங்கள்..&lt;br /&gt;பாண்டவர்கள்.. ஆண்டவர்கள். தேசத்தை ஆண்டவர்கள்&lt;br /&gt;ஆள்பவர்கள்..மாள்பவர்கள்..ஆண்டவர்கள்.&lt;br /&gt;கண்டவர்.. விண்டிலர்.. விண்டவர்.. கண்டிலர்..&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;(திரும்பவும் வேகம் பிடித்தவனாய் அடவுகள் போடத்தொடங்குகிறான்.)&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;எச்சபை தன்னிலும் திரௌபதியை இழுத்து வரமாட்டேன்.&lt;br /&gt;துகிலுரியும் காட்சி ஒரு நடிகனின் நடிப்புக்கு சவால் விடும் காட்சி தான்.&lt;br /&gt;துரியோதனனாக நடிப்பது எனக்கும் கூட அல்வா சாப்பிடுவது போலத்தான்.&lt;br /&gt;ஆனால் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.&lt;br /&gt;பாஞ்சாலியை அல்ல; பாரததேவியை&lt;br /&gt;இங்கு கௌரவர்கள் மட்டுமா துகிலுரிகிறார்கள்.&lt;br /&gt;பாண்டவர்களுக்குக் கூட துகிலுரிந்து பார்க்கத்தான் ஆசை.&lt;br /&gt;சந்தடி சாக்கில் துரோணாச்சாரியார்களும் வீஷ்டுமாச்சார்களும்கூட&lt;br /&gt;அந்த வாய்ப்புக் கிடைத்தால் சந்தோசம் என்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;[திரும்பவும் கூத்து அடவுகளுடன் பாடு ஆடுகிறான்]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் -என்னை&lt;br /&gt;நல்கு முரிமை அவர்க்கில்லை-புலைத்&lt;br /&gt;தாயத்தி லேவிலைப் பட்டபின் - என்ன&lt;br /&gt;சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? -அவர்&lt;br /&gt;தாயத்தி லேவிலைப் பட்டவர்;- புவி&lt;br /&gt;தாங்குந் துருபதன் கன்னிநான்,-நிலை&lt;br /&gt;சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால் -பின்பு&lt;br /&gt;தாரமுடைமை யவர்க்குண்டோ?..&lt;br /&gt;"கௌரவ வேந்தர் சபைதன்னில் -அறங்&lt;br /&gt;கண்டவர் யாவரு மில்லையோ? -மன்னர்&lt;br /&gt;சௌரியம் வீழ்ந்திடு முன்னரே - அங்கு&lt;br /&gt;சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?-புகழ்&lt;br /&gt;ஒவ்வுற வாய்ந்த குருக்களும்-கல்வி&lt;br /&gt;ஓங்கிய மன்னருஞ் சூதிலே- செல்வம்&lt;br /&gt;வவ்வுறத் தாங்கண் டிருந்தனர்&lt;br /&gt;மானமழிவதுங் காண்பரோ?&lt;br /&gt;இன்பந் துன்பமும் பூமியின் -மிசை&lt;br /&gt;யாருக்கும் வருவது கண்டனம்: -எனில்&lt;br /&gt;மன்பதை காக்கும் அரசர்தாம் -அற&lt;br /&gt;மாட்சியைக் கொன்று களிப்பரோ?-அதை&lt;br /&gt;அன்புந் தவமும் சிறந்துளார் -தலை&lt;br /&gt;அந்தணர் கண்டு களிப்பரோ?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;em&gt;[திரும்பவும் தளர்ந்த நிலைக்கு வந்து கால்கள் பின்னிப்பின்னி நடந்தபடி ]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;பாஞ்சாலியின் எல்லாக் கேள்விகளும் அர்த்தம் பெற்றனவாகிவிட்டது உங்களுக்கு புரியவில்லையா.?கௌரவர்களும் பாண்டவர்களும் இன்று இல்லைதான்.அஸ்தினாபுரிகளுக்குப்பதிலாகவும் சைபர் பிரதேசங்களில் நடக்கின்றன சூதாட்டங்கள்.இந்திரப்பிரஸ்தத்துக் கண்ணாடி மாளிகைக்கீடாக புலப்படா அறிவு வாதமும் நம்முன் நிற்கின்றன.&lt;br /&gt;வட்டாடும் மேஜைகளின் நிறங்களும் மாறிவிட்டன.&lt;br /&gt;நீள அகலங்களும் கூட மாறித்தான் போய்விட்டன.&lt;br /&gt;உருட்டப்படுவது ஜோலிகளும் சொக்கட்டாங்காய்களும் மட்டுமல்ல;&lt;br /&gt;சட்டங்களும் மரபுகளும் கூடத்தான்.&lt;br /&gt;வைக்கப்படுவது டாலர்களுக்கீடாக மனிதமூளைகள்.&lt;br /&gt;கம்யூட்டர் சிப்ஸ்களுக்கீடாக வேம்பின் விதைகளும் ஆவின் பால்ச்சத்தும்.&lt;br /&gt;ஆட்டங்களும் ஆட்டவிதிகளும் மாறித்தான் போய்விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;காட்சி:4&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;[ஒரு ஓரத்தில் இருக்கும் ஆல்பம் ஒன்றை எடுத்து அதன் பக்கங்களைப்&lt;br /&gt;புரட்டியபடியே பேச்சு தொடர்கிறது.]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;ஆனால் என் விசயத்தில் எதுவும் இயல்பாயிருக்கவில்லை.&lt;br /&gt;எனது காதலும் எனது நேசமும்&lt;br /&gt;எனது நட்புக்களும்கூட.&lt;br /&gt;எனது விண்ணப்பங்கள் வேறுவிதமாகப்பரிசீலனை செய்யப்படுகின்றன.&lt;br /&gt;எனது இருப்பு சந்தேகத்துக்குரியதாவதெங்ஙனம்..?&lt;br /&gt;எனது அழுகை புன்முறுவலாவது எப்படி..?&lt;br /&gt;எனது அசைவுகள் மட்டும் கண்காணிப்புடன் அனுமதிக்கப்படுகின்றன.&lt;br /&gt;கண்காணிக்கப்பட்டன;ஆம் கண்காணிக்கப்பட்டன.&lt;br /&gt;அது எனக்குத்தெரியும்; அறிந்தே அதனைச் செய்தேன்&lt;br /&gt;எனக்கு நிகழ்ந்தன போல் அல்ல&lt;br /&gt;அவளது நுழைவு காற்றில் அலையும் மயிலிறகாய் இருந்தது&lt;br /&gt;எனக்கோ எத்தனை தடைகள்; எத்தனை அவமதிப்புகள்&lt;br /&gt;ஓரிடத்தில் எனது உயரம் அதிகமென்றார்கள்&lt;br /&gt;இன்னொரு நபரோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம் என்பார்&lt;br /&gt;என்னுடைய பிளஸும் மைனஸும் எனக்குத் தெரியும்&lt;br /&gt;நீளமுகத்தில் மூக்குமட்டும் துருத்திக்&lt;br /&gt;கொண்டிருப்பதாகச் சொன்னவர்களுமுண்டு.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;[அவன் ஒரு சதுரங்கப்பலகையை எடுத்து வைத்துக் காய்களை&lt;br /&gt;அடுக்குகிறான்.அடுக்கியபடியே பேசுகிறான்.....]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;அவையெல்லாம் கடந்தகாலம்;&lt;br /&gt;எனது கடந்தகாலத்தில் மட்டுமல்ல.&lt;br /&gt;இந்தக் கனவுலகத்திற்குள்ளும் அலையும்&lt;br /&gt;மயிலிறகாகவே அவள் நுழைந்தாள்&lt;br /&gt;அவளது வரவுக்காகக் கதவுகள் எல்லாம்&lt;br /&gt;கரங்கூப்பி அழைத்தன.&lt;br /&gt;இது பெண்களின் உலகமா..?&lt;br /&gt;அப்பொழுது எவையும் புரிந்தன அல்ல.&lt;br /&gt;கடந்தகாலத்தைப் புரிந்துகொள்ளத்தொடங்குவது&lt;br /&gt;கசப்புகளையும் கயமைகளையும் கடந்து விடத்துடிப்பதா..?&lt;br /&gt;ஆனாலும் அந்தச் சந்திப்புகளை நினைக்காமல் இருக்கமுடியாது.&lt;br /&gt;அந்த உரையாடல்களைச் சொல்லாமலும் விடமுடியாது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;[காய்கள் அடுக்கி முடிந்திருக்கிறது.அவனுடைய வசனத்தை கறுப்புக்காயை&lt;br /&gt;நகர்த்தியபடியும், அவளுடைய வசனத்தை வெள்ளைக்காயை நகர்த்திய&lt;br /&gt;படியும் பேசுகிறான்]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/em&gt;'பர்வதவர்த்தினியைப் பார்க்கமுடியுமா..?'&lt;br /&gt;"தினசரி நான் பார்த்துவிடுகிறேன், "&lt;br /&gt;'இன்னுமா கனவில் வருகிறார்கள்..?'&lt;br /&gt;"நேரில் தான்.. .. நீ இருக்கிறாயே ; உனது திரும்புதலெல்லாம்&lt;br /&gt;இந்தி டீச்சரின் சாயல்தான், என்றேன்".&lt;br /&gt;'கனவில் நான் வருவதேயில்லையா..?'&lt;br /&gt;"கனவுகள் வருகின்றன;ஆனால்&lt;br /&gt;கனவில் வருவது இந்த நகரமல்ல;&lt;br /&gt;பெருமாள் கோயில் வீதி.. பர்வதவர்த்தினிக்குப்பதிலாக நீ.&lt;br /&gt;கைவிரல் பிடித்து நடப்பது நான்."&lt;br /&gt;கனவுகள்தான்.. எல்லாம் கனவுகள் தான்..&lt;br /&gt;எங்கள் இருவரின் உலகமும் கலை உலகம்.&lt;br /&gt;நானும் நடிகன்; அவளும் நடிகை&lt;br /&gt;தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் காதலைக் கற்றுத்தரும் கலையுலகம்&lt;br /&gt;நாங்கள் கற்றுக்கொண்டது&lt;br /&gt;தோல்வியின் வலிமையை...துயரத்தின் சாயலை;&lt;br /&gt;என்ன நேர்ந்தது இடையில்.எதுவுமே சொல்லப்படவில்லை.&lt;br /&gt;மறந்துவிடச் சொன்ன நாள் மட்டும் நினைவில் இருக்கு&lt;br /&gt;கண்களில் உருண்டு திரண்ட கண்ணீருடன் அவள் ஆடிய நடனக் காட்சி&lt;br /&gt;அந்த வெள்ளிவிழாப்படத்தின் இடைவேளையாய் மட்டுமல்ல.&lt;br /&gt;எங்கள் காதலின் நினைவுக்காட்சியாகவே ஆகிப்போனது.&lt;br /&gt;நினைவுகள் அழியக்கூடாது என்பதற்காகவே&lt;br /&gt;கடந்தகாலத்தைப் புரிந்துகொள்ள முயன்றதில்லை.&lt;br /&gt;அவள் மாடப் புறா; எனது சிறகடிக்கும் மாடப்புறா.&lt;br /&gt;எல்லாமும் அற்புதத் தருணங்கள்.&lt;br /&gt;நினைவில் இருத்திக் கொள்ளவேண்டிய தருணங்கள்தான்.&lt;br /&gt;எங்களது பயணம் இலக்குகள் இன்னும்&lt;br /&gt;எனக்கு நினைவில் இருக்கின்றன.&lt;br /&gt;எனது நினைவில் இருக்கின்றன.&lt;br /&gt;....ம் எல்லாம் நினைவாகவே இருக்கின்றன.&lt;br /&gt;"மனிதன் எவ்வளவு மேன்மையானவன்; அவனால் மட்டும்தான் அன்பு செலுத்தமுடியும்;&lt;br /&gt;அவனால் மட்டும்தான் சகமனிதனுக்காக இரங்கவும் உதவவும்இயலும்;&lt;br /&gt;அவனால் மட்டும்தான் காதல் செய்யமுடியும்;&lt;br /&gt;காதலுக்கு மட்டும் தான் எந்த வேறுபாடுகளும் கிடையாது."&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;[ சதுரங்க விளையாட்டுக் குலைக்கப்படுகிறது&lt;/em&gt; ]&lt;br /&gt;&lt;br /&gt;கொலை கொலையா முந்திரிக்கா&lt;br /&gt;கொலஞ்சு போச்சு கத்திரிக்கா&lt;br /&gt;எம்பேர்ப் பேரிக்கா....................&lt;br /&gt;ஆம் எல்லாம் குழைந்து குழைந்து போய்விட்டன;&lt;br /&gt;உங்களுக்கு அறிவுஜீவி என்றால் என்னவென்று தெரியுமா..?&lt;br /&gt;நான் ஒரு அறிவுஜீவி..எனது வாழ்தல் எனது அறிவால் நடக்கிறது.&lt;br /&gt;என் தந்தையும்கூட அறிவுஜீவிதான்.&lt;br /&gt;ஆனால் தனது வாழ்தலுக்கு அறிவை மட்டும் நம்பியவரல்ல&lt;br /&gt;அவருக்குத் தெரிந்தது நாடகம் மட்டுமில்லை.&lt;br /&gt;நாடகம் தெரியும் ; நாற்று நடவு தெரியும்&lt;br /&gt;முந்திரித்தோப்பில் குடியிருக்கவும் தெரியும்&lt;br /&gt;ஆனால் அறிவுஜீவியான கதை ரொம்ப சுவாரசியமானது&lt;br /&gt;எனது அறிவுஜீவி நண்பர்கள் என்னை கூட்டாளியாக்கியது ஏனென்று தெரியுமா.?&lt;br /&gt;நான் பேசிய ஆங்கிலம்தான். &lt;/div&gt;&lt;div align="left"&gt;ஆங்கிலம் கற்றுக்கொள்ள நான் பட்டபாடு நாய்பட்டபாடுதான்.&lt;br /&gt;அந்த நேரத்தில் கிடைத்தவேலையைத் தக்கவைக்க ஒரே வழி ஆங்கிலம்தான்.&lt;br /&gt;வாடிக்கையாளர்களிடம் நான் உரையாடவேண்டும்.&lt;br /&gt;அவர்களைத்திருப்திப் படுத்த தரமான பொருள்களை விட&lt;br /&gt;நுனிநாக்கு ஆங்கிலம் போதும்.&lt;br /&gt;ஏற்கனவே சிவப்புத்தோல் வரமாகிவிட்டது.&lt;br /&gt;சிவப்புத் தோலுக்கும் நுனிநாக்கு ஆங்கிலத்திற்கும் உள்ளமரியாதைகளை அனுபவித்தவர்கள்தான் சொல்லமுடியும்; நான் அனுபவித்திருக்கிறேன்.&lt;br /&gt;நல்லவிதமான பலன்கள் தான்.&lt;br /&gt;என்னை நடிகனாக்கியதுகூடப் பெரிய காரியமில்லை.&lt;br /&gt;நட்சத்திர விடுதியின் பணியாளாக்கியதே அவைதான்.&lt;br /&gt;அறிவுஜீவிகள் எப்பொழுதும் நிற்பது தோற்றுப் போகின்றவர்களின் பக்கம்தான்.&lt;br /&gt;நானே பலதடவை தோற்றுப்போயிருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;சின்னச் சின்ன வெற்றிகளோடு பெரிய பெரிய தோல்விகள்.. தோல்விகளின்மேல் தோல்விகள்.. தொடர் தோல்விகள்..&lt;br /&gt;இப்பொழுது சொல்லுங்கள் நான் அறிவுஜீவிதானே.&lt;br /&gt;போட்ட கணக்குத் தப்பாய்ப் போக ......&lt;br /&gt;ஒன்றிலிருந்து திரும்பவும் தொடங்கலாம்.&lt;br /&gt;கணக்கு..கணக்கு..&lt;br /&gt;கொலை கொலையா முந்திரிக்கா&lt;br /&gt;கொலஞ்சு போச்சு கத்திரிக்கா&lt;br /&gt;எம்பேர்ப் பேரிக்கா....................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;காட்சி:5&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;em&gt;[சோர்ந்து விழுந்து கிடப்பவனைக் கிழிக்கும் வேகத்தில் வரும் ரயில்களின் சப்தம் எழுப்பி விடுகிறது. இரண்டு மூன்று ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போகின்ற ஓசை. தூரத்தில் அந்த ஓசை போய் மங்கிய பிறகு திரும்பவும் அவன் பேசுகிறான்.&lt;br /&gt;அவன் பேசுகிறபோது பின்னால் கோயில்கள்,அரண்மனைகள், மசூதிகள், ஸ்தூபிகள், நினைவுத்தூண்கள் என சரித்திரத்தின் ஆதாரங்கள் படங்களாக வந்து போகின்றன.]&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு என்பது என்ன.? &lt;/div&gt;&lt;div align="left"&gt;அந்தக்காலம்.. அப்படியொரு காலம்.. அது ஒரு காலம்..&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்&lt;br /&gt;எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்;&lt;br /&gt;இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்&lt;br /&gt;வென்றுஎறி முரசின் வேந்தரெம்&lt;br /&gt;குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே&lt;br /&gt;காலம்தான் வரலாறா.. இருக்கலாம் என்பது எனது எண்ணமாக இருந்தது;&lt;br /&gt;ஆனால் எல்லாரும் அப்படி நம்புவதில்லை போலும்.&lt;br /&gt;'ஒருநண்பர் சொல்வார் கடந்தகாலம் பழிவாங்கத்தூண்டும்' என்று.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு நண்பர் சொல்வார் கடந்தகாலம் பழிவாங்கத்தூண்டும்' என்று.&lt;br /&gt;வரலாற்றில் பல வக்கிரங்கள் நடந்தேறி இருக்கின்றன;&lt;br /&gt;முல்லைக்குத்தேர் தந்த பாரியின் வாரிசுகள்&lt;br /&gt;கந்துவட்டிக்கடை நடத்த நேர்ந்தால்&lt;br /&gt;பாரிமகளிரைக் கழுவேற்ற முடியுமா..?&lt;br /&gt;நந்தனை எரித்த மிச்சம் காக்கப்படுகிறதென்றால்&lt;br /&gt;தீவட்டி ஏந்தலாம்;&lt;br /&gt;அக்கிரகாரங்கள் அடையாளமிழந்தபின்&lt;br /&gt;பூணூல் அணிவதும் பூணூல் அறுப்பதும்&lt;br /&gt;வீரவிளையாட்டுக்களா...?&lt;br /&gt;வரலாற்று விளையாட்டுக்களா...&lt;br /&gt;அதிகாரங்கள் இடித்த கோட்டைகளுக்கு&lt;br /&gt;அப்பாவிகள் எப்படிப் பொறுப்பாக முடியும்..?&lt;br /&gt;நாலு தலைமுறைக்குச் சேர்த்த சொத்தாய்&lt;br /&gt;நயவஞ்சகம் இருந்தால்&lt;br /&gt;ஆடிப்பார்க்க வேண்டியது வெறியாட்டங்கள்தான்.&lt;br /&gt;நீர்வழிப்படூஉம் புனைபோல நீந்தித்திரியும்&lt;br /&gt;எனது தேசம் எது ..? யார்தான் கேளிர்...?&lt;br /&gt;யாரைப் பழிவாங்குவது நான் ...?&lt;br /&gt;என்னையே நானா..?&lt;br /&gt;நானே எனது அடையாளத்தையா.....?&lt;br /&gt;அடையாளம் ...எனது அடையாளம்..&lt;br /&gt;அழிக்கமுடியாத எனது அடையாளங்கள்&lt;br /&gt;எனக்கென்றொரு கருத்து இருப்பது எனது அடையாளமா..?&lt;br /&gt;உருவாக்கிக்கொண்டதென் அடையாளங்களில்லையா...?&lt;br /&gt;விட்டுவிடுதல் சாத்தியமில்லையென்றால்&lt;br /&gt;திணிப்பதுமட்டும் பொருந்திப்போவதெப்படி..?&lt;br /&gt;எனது பெயர் சந்தேகத்துக்குரியதா..?&lt;br /&gt;எனது செயல்களுக்கு உள்நோக்கமுண்டு&lt;br /&gt;எனச் சொன்னது யார்..?&lt;br /&gt;இப்பொழுதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது.&lt;br /&gt;நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.&lt;br /&gt;[ரயிலில் ஓட்டப்பின்னணியில் சில உருவங்கள் அதன் போக்கில்&lt;br /&gt;அசைவதாகக் காட்சிகள் அமைக்கப்படவேண்டும்]&lt;br /&gt;&lt;br /&gt;யார் அந்த உரையாடலைத் தொடங்கியது .&lt;br /&gt;தொடங்கியது நானில்லை; என்றாலும்&lt;br /&gt;என்னில் வந்து மையம் கொண்டது.&lt;br /&gt;ஏன் இப்படி நடக்கிறது;&lt;br /&gt;எல்லாம் கேள்விகள் தான்..&lt;br /&gt;பதில்கள் தேடும் கேள்விகள்.&lt;br /&gt;"நாளைக்கு சூட்டிங் இருக்காது ;&lt;br /&gt;அப்படியே குன்னூர் போயிட்டு வந்துரலாம்"&lt;br /&gt;'குன்னூரில்தானே சூட்டிங்; போயிட்டு எங்கெ வரப்போறீங்க.'&lt;br /&gt;"இல்ல, ஊட்டியில தான் சூட்டிங்;அங்கெ&lt;br /&gt;சூட்டிங் நடத்திறதில் பிரச்சினை இருக்காது.'&lt;br /&gt;"ரிஸ்க் எடுக்க டைரக்டர் தயாராயில்லை;&lt;br /&gt;அதானால நாளைக்கு ரெஸ்ட் தான்."&lt;br /&gt;'நேத்து நடந்தா மாதிரி இருக்கில்ல ; ஆனா&lt;br /&gt;நடந்து ஆறு வருஷமாயிப்போச்சு..?'&lt;br /&gt;"இல்ல பன்னிரண்டு வருஷமாச்சு"&lt;br /&gt;' எதெச் சொல்றீங்க; கோவைக் கலவரத்தயா..&lt;br /&gt;மும்பை வன்முறைகளயா..?'&lt;br /&gt;" இல்ல என் நினைவில் இருப்பது 1992,&lt;br /&gt;டிசம்பர்,6 பாப்ரி மஜ்ஜித் இடிக்கப்பட்ட நாள்"&lt;br /&gt;' ஏன் உனக்கு மும்பையில் நடந்த வெறியாட்டம் நினைவில் இல்ல'&lt;br /&gt;"எல்லா ஆட்டங்களும் நினைவிலிருக்கிறது எனக்கு&lt;br /&gt;நான் ஆடாத ஆட்டங்களா.. கோலாட்டம்..,கும்மியாட்டம்&lt;br /&gt;கரகாட்டம்.., காவடியாட்டம்... சிலம்பாட்டம்...., தப்பாட்டம்....&lt;br /&gt;"உடம்புக்குள்ளெ அதிர்வுகள நுழைக்கச் சொல்லி&lt;br /&gt;நான் எல்லா ஆட்டங்களும் ஆடியிருக்கிறேன்...&lt;br /&gt;ஏனோ பரதநாட்டியத்தை மட்டும் விரும்பியதில்லை.&lt;br /&gt;அதில் உடம்பின் அதிர்வுகள் இல்லையென்று&lt;br /&gt;தோழர் சொல்லியிருந்தது காரணமாக இருக்கலாம்&lt;br /&gt;ஆளும் வர்க்கக் கலையில் உழைப்பின் அதிர்வுகள்&lt;br /&gt;எப்படி நுழைய முடியும்.. ? இதுவும் அவர் கேட்ட கேள்விதான்.&lt;br /&gt;கலையை நேசிப்பதிருக்கட்டும் முதலில் மனிதனை நேசி என்பார்.&lt;br /&gt;மனிதன் என்றால் அவரைப் பொறுத்தவரைக்கும்&lt;br /&gt;உழைக்கின்ற மனிதனாய் இருக்கிறவன் தான்&lt;br /&gt;மனிதன் மனிதனாகத்தான் இருக்கமுடியும்&lt;br /&gt;நானும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;கொஞ்சம் வித்தியாசங்களுடன்..&lt;br /&gt;உழைக்கின்ற மனிதன் இந்துவாகவும் இருக்கிறான்&lt;br /&gt;முஸல்மானாகவும் இருக்கிறான்....&lt;br /&gt;வேதக்காரனாகவும் இருக்கிறான்..&lt;br /&gt;மனிதன் என்பவன் மனிதன் தான்&lt;br /&gt;"மனிதன் எவ்வளவு மேன்மையானவன்;&lt;br /&gt;அவனால் மட்டும்தான் அன்பு செலுத்தமுடியும்;&lt;br /&gt;அவனால் மட்டும்தான் சகமனிதனுக்காக இரங்க முடியும்."&lt;br /&gt;இல்லை இல்லை இதுவும் உண்மையில்லை&lt;br /&gt;அவன் தான் கருத்துக்களை கட்டமைக்கிறான்&lt;br /&gt;அவன் தான் வேறுபாடுகளைக் காட்டிச் சிரிக்கிறான்.&lt;br /&gt;ஆறு ஆண்டுகளுக்குப் பின் அந்த நண்பன் கேட்டபோது&lt;br /&gt;நாடி நரம்புகள் தளர்ந்து போய்விட்டன.&lt;br /&gt;அவனை அவ்வாறு கேட்கத்தூண்டியது எது..?&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;[கூடைப்பந்து மைதானத்தில் தரையில் பந்தைத் தட்டிக்கொண்டே&lt;br /&gt;விளையாடுவதாகப் பாவனை. இவனுடன் இன்னும் சிலர் விளையாடிக்&lt;br /&gt;கொண்டிருக்கின்றனர். விளையாட்டின் போக்காகவே உரையாடல்&lt;br /&gt;நடக்கிறது]&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'அயோத்தியில் கோயில் இடிக்கப்பட்டபோது&lt;br /&gt;நீ எங்கே இருந்தாய்..?'&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;"இல்லை இடிக்கப்பட்டது கோயில் இல்லை; மஜ்ஜித்..&lt;br /&gt;மஜ்ஜித் என்பது மசூதி..."&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'ஆ..ங். கோயில் இல்லை மசூதி..அதிருக்கட்டும்&lt;br /&gt;அப்போது நீ எங்கிருந்தாய்..?' &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;"எதிருக்கட்டும் மசூதியா...? கோயிலா...?"&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'அதைப்பற்றியல்ல நான் பேசவந்தது. நான் கேட்பது நீ எங்கே இருந்தாய் என்பதைத்தான்..'&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;"எனக்கு நினைவில் இல்லை; தெரிந்து என்ன செய்யப் போகிறாய்..? &lt;/div&gt;&lt;div align="left"&gt;ஆனால் அடுத்து வந்த நாட்களில் நான் வீட்டில்தான் இருந்தேன்.&lt;br /&gt;அடுத்தநாள் மட்டும் அல்ல; ஒருமாதம் வீட்டில் தான் இருந்தேன்."&lt;br /&gt;'காரணம் ..?'&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;"காரணம் ..யாரையாவது தாக்கிவிடுவேன் என்று &lt;/div&gt;&lt;div align="left"&gt;அவர்கள் நினைத்திருக்கக் கூடும்."&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'உன்னை யாராவது தாக்கிவிடலாமென்று நினைத்திருக்கலாமில்லயா..?&lt;br /&gt;"வெறிநாய்களுக்குத்தான் கூண்டுகள் தேவை."&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'விலைமதிப்பில்லாப் பொருள்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை தான்'&lt;br /&gt;"இன்று நான் சொல்லிக்கொள்ளலாம்; விலைமதிப்பில்லாப் பண்டமென்று.&lt;br /&gt;அன்று நினைக்கப்பட்டது வெறிநாயாகத்தான்."&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'அப்படியொரு மனநிலை உன்னிடம் இருந்தது இல்லையா..?'&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;"அன்று இருந்ததில்லை ;ஆனால் இன்று இருக்கிறது.&lt;br /&gt;இன்னுமொரு மசூதி இடிக்கப்படும்போது என்னருகில்&lt;br /&gt;நீயிருந்தால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது"&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'என்ன நடந்து விடமுடியும்..?'&lt;br /&gt;"ஒருவேளை உனது காதைக் கடித்துவிடுவேனாக இருக்கலாம்."&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'இப்படிச் சொல்ல உனக்குக் கூச்சமாக இல்லை.'&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;"இல்லை; இல்லை; இல்லவே இல்லை.&lt;br /&gt;என்னிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்க நீ கூச்சப்படாதபோது&lt;br /&gt;அப்படியொரு பதில்சொல்ல நான் ஏன் கூச்சப் படவேண்டும்."&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;கேள்விகளும் பயணங்களும் மட்டுமில்லை&lt;br /&gt;எல்லா ஆட்டங்களும் நினைவில் இருக்கத்தான் செய்கிறது.&lt;br /&gt;கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம்,&lt;br /&gt;பறையாட்டம்,தப்பாட்டம், மட்டும் அல்ல.&lt;br /&gt;வெறியாட்டங்களும்கூட நினைவில் இருக்கின்றன.&lt;br /&gt;வெறியாட்டம்;ஆம் வெறியாட்டம்.&lt;br /&gt;1992-ல் உத்தரபிரதேசத்தில் பாப்ரி மஜ்ஜித் காரணமாய்&lt;br /&gt;1994......., 1998....,2000...., 2002....,2004&lt;br /&gt;மும்பை ....,கோவை..., கோத்ரா.....ஹாஷியாபாத்...,&lt;br /&gt;இடையிடையே நடந்த கிரிக்கெட் ஆட்டங்களும்&lt;br /&gt;ஒருநாள் ஆட்டங்கள்...டெஸ்ட் ஆட்டங்கள்..&lt;br /&gt;நல்லெண்ணப்பயணங்கள்..,கலாசாரத்திருவிழாக்கள்....,&lt;br /&gt;திரும்பத் திரும்ப அரிதாரங்கள்&lt;br /&gt;திரும்பத் திரும்ப ஒப்பனைகள்&lt;br /&gt;கலைக்கப்படும் ஒப்பனைகள்நடிப்புக்கலையின் அரிச்சுவடி&lt;br /&gt;ஆனால் வாழ்க்கை.. ஒப்பனைகளோடு ... வாழ்தல் .. எப்படிச்சாத்தியம்.&lt;br /&gt;ஒப்பனைகளின்றி வாழுதல் வேண்டும்;&lt;br /&gt;கனவுகளோடு வாழ்தல் வேண்டும்;&lt;br /&gt;நினைவுகளோடு வாழ்தல் வேண்டும்&lt;br /&gt;ஒப்பனைகளின்றி வாழுதல் வேண்டும்.&lt;br /&gt;நான் மட்டும் அல்ல; நாங்களும்&lt;br /&gt;நீங்கள் மட்டுமல்ல;நாம்.&lt;br /&gt;ஒப்பனைகளின்றி வாழுதல் வேண்டும்;&lt;br /&gt;கனவுகளோடு வாழ்தல் வேண்டும்;&lt;br /&gt;நினைவுகளோடு வாழ்தல் வேண்டும்&lt;br /&gt;ஒப்பனைகளின்றி வாழுதல் வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;=======================================&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;=================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-2094295309986968620?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/2094295309986968620/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=2094295309986968620' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/2094295309986968620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/2094295309986968620'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/09/1.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-6359149287679937916</id><published>2009-09-28T09:41:00.000-07:00</published><updated>2009-09-28T09:45:31.188-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-12'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;மேடு நோக்கிப் பாயும் ஆறு: கிராஜநாராயணின் தாவைப்பார்த்து&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;******************************************************************************&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;எனக்கு நேர்கிற அனுபவம் மட்டும் அல்ல; என்னைப் போல நகரவாசியாக மாறிய பிறகு அவ்வப்போது சொந்தக் கிராமத்திற்குப் போய்வரக் கூடிய ஒவ்வொருவருக்கும் நேர்கிற  அனுபவம் தான் இது.  இந்த முறை ஊருக்குப் போன போது எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள். அந்தக் குரலில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.எந்தப் பாகுபாடும் இல்லாமல் வீட்டிற்கு ஒரு டி.வி.பெட்டி- கிடைத்ததில்  வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி  கிடைத்ததில் இருந்த மகிழ்ச்சி அது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தங்களைப் போன்ற அப்பாவிகளுக்கெல்லாம் அரசின் பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பற்ற மனிதர்கள் அவர்கள். அரசின் அதிகாரிகள் தங்கள் கிராமத்திற்கு வந்து ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி  கண்ணில் படும் இடத்தில் ஜம்மென்று அந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து விட்டுப் போனார்கள் என்றால்  மகிழ்ச்சி ஏற்படாமல் என்ன செய்யும் .  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதே மகிழ்ச்சியை ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு பொங்கல் பண்டிகைக்கு ஊர்ச்சாவடிக்கு வந்த சேர்ந்த வேட்டி சேலைக்குவியல் கொண்டு வந்தது.  அது மட்டுமல்ல. அந்தக் கிராமத்திற்கு அப்படியான மகிழ்ச்சி வந்து சேர்ந்த தருணங்கள் பல உள்ளன. ஒவ்வொரு பிள்ளையும் காலில் செருப்புப் போட்டுக் கொண்டு பள்ளிக் கூடத்திற்குப் போனதையும், பின்னர் பெண் பிள்ளைகள் எல்லாம் சைக்கிளில் ஏறிப் பக்கத்து ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குப் போனதையும் பார்த்துப் பெற்றவர்களின் மனம் மகிழவே செய்தது.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த மகிழ்ச்சியையெல்லாம் விடக் கூடுதலான மகிழ்ச்சியை எனது கிராமம் அனுபவித்த நாளாக எங்கள் கிராமத்திற்கு ஓராசிரியர் பள்ளிக்கூடம் வந்ததைத் தான் சொல்ல வேண்டும். நானெல்லாம் எனது தொடக்கப் பள்ளியைப் பெறுவதற்காக ஒரு கிலோமீட்டரும், உயர்நிலைப் பள்ளிக்காக மூன்று கிலோ மீட்டரும் சென்று வந்தவன். நான் கல்லூரிக்கு வந்தபின் தான் எங்கள் கிராமத்திற்குப் பள்ளிக் கூடம் வந்தது. அதுவும் ஓராசிரியர் பள்ளி. இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்வுக்கு எங்கள் கிராமத்திற்கு, பள்ளிக்கூடத்தைத் திறந்து வைக்கச் சட்டமன்ற உறுப்பினர் வந்தார். கிராமமே அவரை வரவேற்று மகிழ்ந்தது. வரவேற்று மகிழ்ந்த கிராமத்தினர் அவரிடம் தந்த கோரிக்கை மனுக்கள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஊருக்குப் பக்கத்தில் ஓடி வரும் ஓடையை மறித்து ஒரு சிறு கண்மாய் அமைக்க வேண்டும் என்ற முதல் கோரிக்கை ஏற்கப்படும் என்றார். ஆனால் கண்மாயும்  வரவில்லை. ஏற்கெனவே இருந்த சின்னச் சின்னக் குளங்களும் மேடுகளாகிப் போய்விட்டன. வானம் பொய்த்துப் போனதில்  ஓடையில் நீர் வரத்தும் இல்லாமல் போய்விட்டது. விவசாயம் படுத்துப் போனதில் பாதிப் பேர் அந்த ஊரை விட்டுவிட்டுப் பல ஊர்களுக்கும் போய் விட்டார்கள். திருப்பூர் பனியன் கம்பெனிகளிலும் கோயம்புத்தூர் நகைக்கடைகளிலும் வேலை செய்து விட்டு ஆண்டுக்கொரு முறை ஊருக்கு வருகிறார்கள். கிராமத்து உழைப்பாளிகள் தான் நகரத்திற்குப் போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது. கிராமங்களுக்கு வந்து சேர வேண்டிய அரசின் பங்குத் தொகையும் நகரங்களுக்கே போய்க் கொண்டே இருக்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வளைந்து வளைந்து செல்லும் அடுக்குப் பாலங்களுக்கும், வழுக்கிச் செல்லும் நகரத்து வீதிகளுக்கும், அரசுத்துறைகளுக்கான அடுக்குமாடிக்கட்டடங்களுக்கும் என  நமது அரசுகள் செலவழிக்கும் பணத்தில் அந்தக் கண்மாயை வெட்டி யிருந்தால் விவசாயம் இவ்வளவு வேகமாகக் காணாமல் போயிருக்காது என்பது தான் உண்மை. கண்மாய்களும் குளங்களும் நிலத்தடி நீரைத் தக்க வைத்து மரங்களையும் செடிகளையும் காத்திருக்கும். மரங்களும் செடிகளும் மழையைக் கொண்டு வந்திருக்கும். அந்தச் சுழற்சியைக் கெடுக்கும் விதமாக நிலத்தடி நீரை உறிஞ்சிய மோட்டார் பம்புகள் இப்போது விருதாவாய்க் கிடக்கின்றன. இந்தச் செப்டம்பர் மாதம் சித்திரை வைகாசியில் இருக்கும் முன்னேழு பின்னேழு நாட்களை – அக்கினி நட்சத்திர வெயிலை நினைவு படுத்தும் விதமாக வேர்த்துக் கொட்டுகிறது. கிராமத்து விவசாயம் – குறிப்பாகப் புஞ்சை வேளாண்மையைக் கவனிப்பின்றி விட்டுவிட்டதன் பலனை நமது கிராமவாசிகளும், நலத் திட்டங்களைப் போடும் அரசு அதிகாரி களும் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நினைக்கும் போதெல்லாம் கரிசல் இலக்கியத்தின் முன்னோடிக் கதாசிரியரான கி.ராஜ நாராயணனின் பல கதைகள் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அரசும் , அதன் நிறுவனங்களும் தொடர்ந்து கிராமத்தைப் புறக்கணித்தன என்பதைத் தனது கதைகளில் பெருங்குற்றச்சாட்டாக  வைத்துக் கதைகள் எழுதியவர் கி.ராஜ நாராயணன். கோயில்பட்டிக்கருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்து அறுபத்தைந்து வயது வரை நகரங்களைக் கிராமங்களின் எதிர்வாகப் பார்த்து வந்த கி.ரா. கடந்த 20 வருடங்களாகப் புதுச்சேரியில் வசித்து வருகிறார் என்பது ஒரு சுவாரசியமான முரண் தான். தனது முதல் நாவலான கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காகச் சாகித்திய அகாடமியின் விருதினைப் பெற்றவர்.  அவரது கோபல்ல கிராமத்தில் இடம் பெற்றுள்ள சில நிகழ்வுகளும், கிடை குறுநாவலும் பாரதிராஜாவின் புகழ்பெற்ற படமான முதல் மரியாதையின் கதைப் போக்கைத் தீர்மானித்துள்ளன என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;புஞ்சை விவசாயிகளையும் விவசாயத்தையும் படம் பிடிக்கும் கதவு,மாய மான்,  கரண்டு, கறிவேப்பிலைகள், எங்கும் ஓர் நிறை, கொத்தைப் பருத்தி, அவுரி, நிலை நிறுத்தல், தாவைப் பார்த்து, கிடை, கரிசல் காட்டில் ஒரு சம்சாரி போன்ற கதைகளை வாசிக்கவே நகர வாசிகள் சிரமப் படுவார்கள். கிராமத்தில் பிறந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்தவர்களிடம் குற்ற உணர்வை உண்டாக்கும் இந்தக் கதைகள், நகரவாசிகளுக்கு முழுதும் புரியாத ஒரு பிரதேசத்தையும் மொழியையும் அறிமுகம் செய்வன. அந்தக் கதைகளின் மொழியின் சிக்கலற்ற எளிமைக்குள்  தகிக்கும் வெப்பம் கரிசல் பூமியின் வெப்பம் மட்டுமல்ல; தமிழகக் கிராமங்கள் பலவற்றின் வெப்பமும் கூட. அவரது கதைகளைப் பல காரணங்களுக்காகப் பலதடவை வாசித்திருக்கிறேன் என்றாலும், தாவைப் பார்த்து என்னும் கதையைப் பல பேரிடம் படிக்கச் சொல்லிப் பரிந்துரை செய்திருக்கிறேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிறுகதையின் கட்டுப்பெட்டி அம்சங்களிலிருந்து விலகி நிற்பது போலத் தோன்றும் அக்கதையின் சுப்பாநாயுண்டுவின் ஆதங்கம் எடுத்துச் சொல்லப் பட வேண்டிய ஒன்று.தண்ணீர் தாவைப்பார்த்துப் பாயும் என்ற இயற்கைக் குணத்தை மாற்றிப் போட்டுப் பணம் மேட்டைப் பார்த்தே பயணம் செய்கிறது என்னும் இயங்கியல் பொருளாதார விதி ஒன்றைக் கதையாக்கிய அற்புதமான கதை அது.&lt;br /&gt;ஒவ்வொருவரையும் தங்கள் நலனை முன்னிறுத்தியே செயல்படும்படி தூண்டும் பணம் சார்ந்த சமூகத்தின் நிலையைக் கிராம வாழ்க்கையின் ஊடாகப் பதிவு செய்யும் அக்கதையின் முக்கியப் பாத்திரம் சுப்பாநாயுண்டு என்னும் புஞ்சைக் காட்டு வியாபாரி. அவரது மனைவி அசோதெ. அவர்களின் சுயநலம் சார்ந்த ஒரு செயலை அறிமுகம் செய்யும் விதமாகத் தொடங்கும் கதை, அவரை ஏமாற்றிப் பணம் பெருக்கும் பருத்தியேவாரி செல்லையா வையும், மில் முதலாளியையும் அவர்களுக்கு மட்டுமே அனுகூலமாக இருக்கும் கடவுளையும் மனதிற்குள் திட்டிப் புழுங்கும் நினைவுகளோடு முடிகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தங்கள் கிராமத்துச் சாவடியில் படுத்திருக்கும் அந்த இளைஞனை வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுத்து வேலைக்காரனாக ஆக்கியபின் , அவனது குலம் கோத்திரத்தை விசாரித்து முடித்துத் தனது மகளைக் கல்யாணம் செய்து வைத்து விடலாம் எனச் சுப்பாநாயுண்டு எடுக்கும் முடிவில் உள்ள சுயநலத்தை  வெளிச்சம் போடும் கி.ரா., பருத்தியாவாரியிடம் அல்லல் படும் விதத்தைச் சின்னச் சின்ன உரையாடல்களின் வழி புலப்படுத்திக் காட்டுகின்றார். புஞ்சைக்காட்டில் சின்னப் பருத்தியை விளைவித்து வீட்டில் அடைந்து வைக்கும் விவசாயிக்கு அதன் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை; எங்கேயோ இருக்கும் மில்லுக்காரனிடம் அந்த உரிமை இருக்கும்படி வியாபார நியதிகள் இருப்பதைச் சொல்லும்,"பருத்தி வெலையை நாமளா வெக்கிறோம். அது மில்லுக்காரனில்லா வெக்கான்; வெலையெ ஏத்துறதும் எறக்கிறதும், அவம்பாடுதான்” என்ற இந்த வரிகள் இன்றும் தமிழக விவசாயிகளின் நிலை தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;விவசாயி கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுத்துக் கொண்டு போக அவனிடம் பருத்தியை வாங்கி மில் முதலாளிக்கு விற்கும் வியாபாரியும் மில் முதலாளியும் பெருத்துக் கொண்டே போகிறார்கள்.  போட்ட பருத்திக்குப் பணம் கேட்டுப் போகும் சுப்பாநாயுண்டுவிடம் பருத்தியேவாரி செல்லையா மில் மொதலாளி இன்னொரு மில் ஆரம்பிக்கப் போவதாகவும், அதற்கான அழைப்பிதழ் இருப்பதாகவும் எடுத்துக் காட்டுகிறார். தான் விற்ற பருத்திக்கான விலையை உடனே தராமல் தள்ளிப் போடும் மில் முதலாளியும் வியாபாரியும் மேலும் மேலும் பணக்காரர்களாகத் தானும் தன்னையொத்த விவசாயிகளும் ஓட்டாண்டிகளாக ஆகிக் கொண்டிருப்பதை அவரது வார்த்தை களில் வெளிப்படும் கோபத்தின் வழியாகக் காட்டுகிறார். அந்தக் கோபம் மனிதர்களை விட்டு விட்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதோடு பணக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும் கடவுளின் மீது மோதும் வார்த்தைகளாக வெளிப்படுகிறது. பணம் கேட்டுப் போய்ப் பாதிப் பணத்தோடு திரும்பும் வழியில் பருத்தி எடைபோட்டு எண்ணும் சத்தம் நீளமாகக் கேட்கிறது.&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;”வெங்கடாசலபதி முன்னிற்க.. லாபம்.&lt;br /&gt;” வெங்கடாசலபதி முன்னிற்க..! என்பதில் விழுந்த அழுத்தம் நாயுண்டுவுக்கு ரொம்பத்தான் எரிச்சலைக் கிளப்பி விட்டுவிட்டது!”&lt;br /&gt;“ முன்னிற்க, என்னத்தெ முன்னிற்க!”&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;வெங்கடாசலபதியும் வெங்கடாசலபதியின் மில்லுந்தான் முன்னிற்கி! தா அவனுக்கு மாசம் அம்பது லச்சம் அறுபது லட்சம் உண்டியல்லெ வந்து விழுது; இவனுகளுக்கு வருசம் அம்பது கோடி அறுபது கோடிண்ணு லாபம் வருது.&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;em&gt;முன்னிற்கங்கிறது அவனுக்கு; லாபம்ங்கிறது இவனுக்கு!&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;முக்குத்திரும்பி ஐயி நாயக்கர் வீட்டுக்கு முன்னாலெ கூடி வந்தபோது, அங்கெ ஐயி நாயக்கர் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து கொண்டு எண்ணெய் படாத தலையை பறட் பறட் என்று சொறிந்து கொள்வதும் கோமணத்தை இழுத்து சரிசெய்து கொள்வதும் இவருடைய கண்ணில் பட்டது. ஒருவினாடி அதை நின்று பார்த்துக் கொண்டிருந்த நாயுண்டுவுக்கு பளிச்சென்று சில விஷயங்கள் புலப்பட்டதுபோல் தெரிந்தது எனக் கதை முடிகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;புரிந்த விஷயம் என்பது வேறொன்றுமில்லை. மழை பெய்துபுரளும் தண்ணீர் தாவைப் பார்த்துப் போகும்; அது இயற்கை. ஆனால் பணம் என்பது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட செயற்கை. அதன் குணம் மேட்டை நோக்கிப் பாயும் என்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-6359149287679937916?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/6359149287679937916/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=6359149287679937916' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/6359149287679937916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/6359149287679937916'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/09/blog-post_28.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-697589667233466737</id><published>2009-09-26T21:50:00.000-07:00</published><updated>2009-09-26T21:57:54.242-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-11'/><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;தொடரும் துன்பக்கேணி : வண்ணநிலவனின் துன்பக்கேணி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;-----------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;திரும்பவும் கள்ளுக்கடைகள் திறக்கப்பட வேண்டும்; பனை மரங்களையும் தென்னை மரங்களையும் தங்கள் காடுகளிலும் தோட்டங்களிலும்  வளர்த்திருக்கும்  விவசாயி களுக்குப் பனை மரத்திலிருந்தும் தென்னை மரத் திலிருந்தும் கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. பனங்கள்ளும் தென்னங்கள்ளும் அடிப்படை யில் போதை ஊட்டும் மதுபானங்கள் அல்ல; அவை உடல் நலத்திற்கு உதவக் கூடிய மருந்துகள் என்ற வாதம் கள் ஆதரவாளர்களிடமிருந்து வருகின்றது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெருவுக்கு ஒரு கடை என்று அரசின் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு மதுப்பிரியர்களின் தேவைகளை அரசே நிறைவேற்றி வைத்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் பாரம்பரிய மதுவான கள்ளைக் குடிப்பதற்கும், கள்ளை மரங்களிலிருந்து இறக்குவதற்கும் அனுமதி இல்லை என்பது ஒரு விநோதமான முரண் தானே எனக் கேட்கும் கள் ஆதரவாளர்களுக்கு எதிரான குரல்களும் இல்லாமல் இல்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நமது தமிழ் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டாலும் அந்நிய நாட்டு மதுபானங்கள் என அழைக்கப்படும் ஒயின், ரம், விஸ்கி, பிராந்தி,பியர் போன்ற விலையுயர்ந்த மதுபானங்களை தினசரிக் கூலிகளான அடித்தட்டு மக்கள் தினசரி குடிக்க மாட்டார்கள்; குடிக்க முடியாது. எனவே எப்போதாவது வாரம் ஒருமுறையோ, விசேச நாட்களிலோ தான் குடிப்பார்கள். அதனால் மதுவுக்கு செலவழிக்கும் தொகை குறைவாகவே இருக்கும். அதற்குப் பதிலாகக் கள் இறக்க அனுமதி அளிக்கப் பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப் பட்டால்,அடித்தட்டு மக்கள் கள்ளுக் கடைகளுக்குச் செல்வதும், தினசரி கள்ளைக் குடிப்பதும் அதிகரித்து விடும். அடித்தட்டு மக்களைக் குடியின் பிடியில் கொண்டு போய்ச் சேர்க்கும் கள்ளுக்கடைகளை அனுமதிக்கக் கூடாது என்று அதன் எதிர்ப்பாளர்கள் வலுவான சமூகப் பொருளாதாரக் காரணங்களை வைக்கின்றனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கள்ளை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்ற விவாதம் நடக்கும் அதே நேரத்தில் எல்லாவகை யான மதுக்கடைகளையும் மூடிவிட வேண்டும்; மதுப் பழக்கத்தால் தமிழ்ச் சமூகம் தன் சமகால வாழ்வை இழப்பது மட்டுமல்ல; எதிர்காலத் திட்டமிடலையும் இழந்து நாசமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் குரல்களும் கேட்கின்றன. ஆனால் மதுவருமானத்தை அரசின் முக்கியமான வருவாய் இனங்களில் ஒன்றாகக் கருதும் அரசும், அதிகார மையங்களும் மதுக் கடைகள் மூடப் பட்டால் கள்ளச்சாராயம் பெருகும்; அதனால் உண்டாகும் உயிர் இழப்புக்களும்,சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளும்  அதிகமாகும் என்ற வாதத்தை வைக்கின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த வாதங்கள், வாதங்களாக நடந்து கொண்டிருக்கும் பின்னணியில் மது பானம் சார்ந்த நேரடி நினைவுகளும், அனுபவங்களும் வந்த போதிலும் வண்ண நிலவனின் துன்பக்கேணி அவை எல்லாவற்றையும் உள்ளே அமுக்கி விட்டு விரிவதைத் தடுக்க என்னால்  முடியவில்லை.  அந்தக் கதை கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் இல்லாதிருந்த தமிழகத்தைப் பின்னணி யாகக் கொண்ட கதை. அவை இல்லை என்பதற்காகச் சாராயமே இல்லாமல் இருந்த தமிழகம் என்று நினைத்து விடக்கூடாது.கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அதனைக் கள்ளத்தனமாக விற்பனை செய்வதும், கள்ளத் தனமாகவே அதைக் குடிப்பதும் நடந்து கொண்டிருந்த ஒரு சூழல். அந்தச் சூழலையும் பின்னணி யையும் வெளிப்படுத்தும் வண்ணநிலவனின் அந்தக் கதை இன்றுள்ள தூத்துக் குடி மாவட்டக் கிராமங்களில்  ஒன்றில் நடப்பதாக எழுதப் பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பிரிக்கப் படாத திருநெல்வேலிமாவட்ட (&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;இப்போதுள்ள தூத்துக்குடி மாவட்டமும் அடங்கியது&lt;/span&gt;&lt;/em&gt;)  மனிதர்களையும் கிராமங்களையும் மொழியையும் கதைகளாக மாற்றிய வண்ணநிலவனின் கடல்புரத்தில் தமிழில் எழுதப் பட்ட முதல் கடலோர நாவல். கடலும் கடல் சார்ந்த நிலத்தைத் நெய்தல் எனப் பிரித்துப் புரிந்து கொண்ட தமிழ்ச் சமூக வரலாற்றிலும், நாவல் வரலாற்றிலும் உறுதியான இடத்தைப் பிடித்துள்ள கடல்புரத்தில் என்னும் நாவல் மட்டும் அல்ல அவரது கம்பாநதி, ரெயினிஸ் அய்யர் தெரு போன்ற நாவல்களும் தென் மாவட்ட மனிதர்களின் வாழ்க்கைப் பதிவுகளே. அவள் அப்படித்தான் என்ற மாற்றுச் சினிமா முயற்சியில் உடன் இருந்த வண்ணநிலவன் அதிகம் பணியாற்றிய இடங்கள் பத்திரிகை அலுவலகங்களே. அவரது மொத்தச் சிறுகதைகளும் இப்போது  வண்ணநிலவன் கதைகள் எனத் தனியாக ஒரே தொகுதியாகக் கிடைக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எப்போதும் தென்மாவட்ட வாசனையைக் கக்கிக் கொண்டே இருக்கும் பாத்திரங்களை எழுதிய வண்ணநிலவன், வெறும் மொழிநடையில் மட்டும் அல்லாமல் மனித மனம், பிடிவாதம், முரண்டு என அசலான திருநெல்வேலி மனிதர்களை எழுதிக் காட்டியவர். துன்பக்கேணி கதையின் பாத்திரங்கள் பேசுவதாக இடம் பெற்றுள்ள  உரையாடல்களை வாசித்துப் பாருங்கள் : “இது எதுக்கு மாமோய்? வயசு காலத்துல நீங்களே புள்ள குட்டியள வச்சுக்கிட்டு அநேகம் பாடுபடுதீய, இதுல எஞ்சொமை வேறயா ஒங்களுக்கு?”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;“ ஏழைக்கு ஏழைதான தொணை.. என்ன பெரிய சொமை? பத்தோட பதினொண்ணுன்னு நீயும் எனக்கு ஒரு மவ. அம்ம்புட்டுத்தானல்ளா.!..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த உரையாடல் அந்தக் கதையின் மையப் பாத்திரங்களான வண்டி மலைச்சியும் நம்பித் தேவரும் பேசும் பேச்சு. இதே வண்டிமலைச்சி, சாராயத்தை நடுராத்திரியில் தேரிக்காட்டில் தூக்கிப் போகும் இரு ஆண்களுடன் பேசும் பேச்சாகப் பின்வரும் உரையாடல் அமைகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt; &lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;“ மணி என்ன இருக்கும்” என்று படுத்துக் கொண்டாள் வண்டி மலைச்சி. டின்னைச் சுமந்து வந்ததில் பிடரியும், தோள்களும் ரொம்பவும் வலித்தன. மணி வானத்தை அண்ணாந்து பார்த்தான். “ என்ன மிஞ்சி மிஞ்சிப் போனா ஒண்ணு ஒண்ணரை இருக்கும்!!..” என்றான். “ ஒடம்பு வலிக்கிற வலியில இந்தக் காத்தும், நெலா வெளிச்சமும் எம்புட்டுச் சொகமா இருக்குது தெரியுமா? அப்படியே படுத்துத் தூங்கிறலாமான்னு இருக்குது..”&lt;br /&gt; “ அதுக்குத் தான் ஒரு ரெண்டு செரட்டை குடிச்சியானா கெச்சலா இருக்கும்.. என்றான் மணி.”&lt;br /&gt;“ குடிக்கலாந்தான்.. ஆனா வவுத்துல புள்ளண்டு ஒண்ணு கெடக்குதே. அது என்னம்மாவது ஆயிப்போச்சின்னா?..” வண்டி மலைச்சியின் நிலை இது.அவளைச் சாராய டின் தூக்க அழைத்து வந்த சங்கரபாண்டியிடமும் மணியிடமும் கேட்கும் கேள்வியாக,&lt;br /&gt;“ எடே!.. இது ஆரு? .. ஏ. இது நம்ம கிட்ணத்தேவர் மவ வண்டிமலைச்சியில்லாடே?.. இவ எங்கன கிடந்து ஆம்புட்டா?..&lt;/span&gt;&lt;/em&gt;  என்று ஆச்சரியத்தோடும் பிரியத்தோடும் கேட்டார் நம்பித்தேவர் என்று கதையைத் தொடங்கும் வண்ணநிலவன், “ &lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்தத் திமிருனாலதாம்லே தேவமாருக கெட்டுக் குட்டிச் சொவராப் போறானுக.. அந்தப் பெய சம்முகம் மட்டும் சயிலுக்குப் போவாம இருந்தான்னாக்க இந்தப் புள்ள இன்னைக்கு இப்பிடியா சாராய டின்னு தூக்க வந்திருக்கும் ?...&lt;/span&gt;&lt;/em&gt;  என்று சொல்லும் இன்னொரு உரையாடல் வழியாக அந்த வண்டிமலைச்சியின் வாழ்க்கை ஒரு துன்பக்கேணியாக உருவகம் செய்து உருவாக்கிக் காட்டுகிறார்.&lt;br /&gt;வண்டி மலைச்சியின் புருசன் சண்முகம் அவளைக் கல்யாணம் செய்து கொண்டு ஆரம்பத்தில் அவளைச் சந்தோசமாக வைத்திருந்த காலத்தை அவளது நினைவலைகளாகத் தருவதோடு, தன்னுடைய அவசரப் புத்தியாலும், கர்ப்பமாக இருக்கும் மனைவி என்ன பாடுபடுவாள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஒருவனோடு சண்டையிட்டு, அவனை வெட்டிக் கொன்று போட்டு விட்டு இப்போது திருச்செந்தூர் சப் - ஜெயிலில் இருக்கிறான் என்பதையும் , அவன் ஜெயிலுக்குப் போன பின்பு கர்ப்பமாக இருக்கும் வண்டி மலைச்சி, அவளது அண்ணனிடம் போனாள் என்றும், கல்யாணத்துக்கு முன்பு ‘தங்கச்சி, தங்கச்சி’ என்று பாசங்காட்டிய அண்ணனும் அவளுக்குச் சேர வேண்டிய எதையும் தராமல் அவளைப் பாரமாகக் கருதி பேச்சு வார்த்தையே ஆகி விட்டான் என்பதையும்  அவளது நினைவுகள் வழியாகவே தருகிறார்.&lt;br /&gt;கணவன் இல்லாத நிலையில் பல வேலைகள் செய்து பார்த்தும் வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் தான் நடுராத்திரியில் அவள் சாராய டின் சுமக்க வந்திருக்கிறாள். அவளை அழைத்து வந்த சங்கர பாண்டி யும் மணியும்  அவள் மீது கொண்ட இரக்கத்தால் தான் அவளை அழைத்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை தரும் நம்பித்தேவர் அவள் மீது பரிவும் பாசமும் கொண்டு, இந்த வேலையை அவள் செய்ய வேண்டாம் என்று கூறி சிறிது பணம் கொடுத்து அனுப்ப நினைக்கிறார். ஆனால் அவள் அதை ஏற்காமல் அந்த வேலையை- கள்ளச் சாராய டின்களைத் தூக்கிக் கொண்டு போய் அதனைத் திருட்டுத்தனமாக விற்பனை செய்யும் நபர்களிடம் சேர்க்கும் வேலையை ஏற்றுச் செய்கிறாள். அவளது போதாத காலம் மறுநாள் திருச்செந்தூர் சப்-மாஜிஸ்டிரேட் கோர்ட்டில், சங்கரபாண்டி, மணி இவர் களோடு, வண்டி மலைச்சியும் உட்கார்ந்திருந்தாள் என்று கதையை முடிக் கிறார் வண்ணநிலவன்.&lt;br /&gt;இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் பனை மரத்திலிருந்தும் தென்னை மரத்திலிருந்தும்  கிடைத்த கள்ளைக் குடித்து உழைப்பின் வலியைப் போக்கிக் கொண்ட பாட்டாளி மக்கள், தங்களுக்குக் கூடுதலான போதை வேண்டுமென்ற போது கண்டு பிடித்த சரக்கு தான் சாராயம். அந்தச் சாராயம் சீமையிலிருந்து வந்ததால் சீமைச்சாராயம் என அழைக்கப் பட்டது. அதையே கள்ளத்தனமாகக் காய்ச்சி,கள்ளத்தனமாக விற்றுக்  கள்ளத்தனமாகக் குடித்த வாழ்க்கையைத் தான் வண்ணநிலவன் துன்பக்கேணி என்று உருவகப் படுத்துகிறார். இன்று கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் குடிப்பதும் நின்று போய்விட்டன. கள்ளச்சாராயச் சாவுகளும் இல்லாமல் போய்விட்டன. ஆனால் அரசே நடத்தும்  டாஸ்மாக்  கடைகளில்  தனது வருமானத்தின் பெரும்பகுதியைச் செலவழித்து விட்டுக் குடும்பம் குழந்தைகளை மறந்து வாழ்க்கையைத் தொலைக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை துன்பக் கேணியாக இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆத்திரமும் வறுமையும் ஓர் எளிய குடும்பத்தைத் துன்பமென்னும் கேணிக்குள் தள்ளியதாக  உருவகப் படுத்தியுள்ள வண்ணநிலவன்  தனது முன்னோடி களிடமிருந்து விலகிச் செல்வதுபோல தோன்றினாலும் அந்த உருவகம் ஒவ்வொருவரிடமும் பெண்களின் துயர நிலைக்கே படிமமாகி இருக்கின்றது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. தமிழின் நவீன மனநிலையைத் தொடங்கி வைத்த இரு பெரும் ஜாம்பவான்களான கவிபாரதியும், சிறுகதை முன்னோடியான புதுமைப்பித்தனும் துன்பக்கேணி என்னும் உருவகத்தை பெண்கள் சார்ந்தே உண்டாக்கி உள்ளனர். கரும்புத் தோட்டத்திலே கவிதையில் வரும் அந்த வரிகள், &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;நாட்டை நினைப்பாரோ? – எந்த  நாளினிப்&lt;br /&gt;                 போயதைக் காண்பதென்றே அன்னை&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;வீட்டை நினைப்பாரோ? - அவர்        &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;            விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்        &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;          கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;மீட்டும் உரையாயோ? - அவர்        &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;            விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; தமிழ்ப் பெண்கள் கரும்புத் தோட்டத்தில் பட்ட துயரத்தைத் துன்பக் கேணியாகப் பாடிய பாரதியின் வரிகளை நீண்ட கதையாக மாற்றிய புதுமைப் பித்தன் அக்கதையின் வெளியாக இலங்கைத் தீவின் மலையகத் தேயிலைத் தோட்டமாக மாற்றிக் கட்டமைத்து அச்சொற்சேர்க்கையையே – துன்பக்கேணி உருவகத்தைப் படிமமாகக் காட்டுகிறார். அக்கதையில் வரும் மருதியின் இன்னொரு வடிவமாக வண்ணநிலவன் வண்டிமலைச்சியை உருவாக்கிக் காட்டியுள்ளார். &lt;br /&gt; அந்த வகையிலும் துன்பக்கேணி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-697589667233466737?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/697589667233466737/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=697589667233466737' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/697589667233466737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/697589667233466737'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/09/blog-post_636.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-6978455544092280854</id><published>2009-09-26T21:42:00.000-07:00</published><updated>2009-09-26T21:49:28.590-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-10'/><title type='text'></title><content type='html'>&lt;span style="font-size:130%;color:#009900;"&gt;======================================&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#990000;"&gt;நண்டு தின்னும் ஊரில் : பூமணியின் குடை&lt;/span&gt; &lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#333399;"&gt;=============================================&lt;br /&gt;&lt;/span&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;color:#ff6600;"&gt;“வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளின் வீட்டில் லஞ்சப் பணம். லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி”&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையின் எதிரொலி. பத்திரவுப் பதிவுகள் முடக்கம்”&lt;br /&gt;&lt;/span&gt;“பல்கலைக்கழகத்துணைவேந்தர் நீக்கம். லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளால் அரசு முடிவு”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt; இப்படிப் பட்ட செய்திகள் சமீபத்தில் அடிக்கடி செய்தித் தாள்களில் வருகின்றன.&lt;br /&gt; கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதல் இல்லாத அரசை நிறுவியுள்ள டாக்டர் மன்மோகன்சிங் அரசு, நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் அன்றாடப் பிரச்சினை களுக்கும் இருக்கும் தடைகளில் முதன்மையானது லஞ்சமும் கடமையுணர்வு தவறுதலும் தான் என்பதை உணர்ந்து அதை நீக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு தினசரிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டி ருக்கின்றன. அச்செய்திகளை வாசித்தவர்கள்,நமது தமிழ்ச் சினிமாக்களில் லஞ்சத்தையும் பொறுப்பின்மையையும் ஒழிக்கக் கிளம்பிய இந்தியன் தாத்தா, பேராசிரியர் ரமணா, அந்நியன் அம்பி, சிபிஐ ஆபிசர் கந்தசாமி போன்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கதாநாயகர்களாக வலம் வரத் தொடங்கி விட்டனர் எனக் கேலியாகப் பலர் பேசிக்கொள்வதும் ஆங்காங்கே காதில் விழுந்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் எதையும் மாத்தி யோசிக்கிற அறிவுஜீவிகளும் ஆங்கிலப் பத்திரிகைகள் படித்து விவாதங்களில் ஈடுபடும் நடுத்தர வர்க்கத்து மனிதர்களும் , “இதெல்லாம் வெறும் கண் துடைப்பு சார் ; சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் நீக்கமற நிறைந்து கிடைக்கும் லஞ்சத்தை ஒழிக்க முடியவே முடியாது” எனப் பேசிக் கொள்வைதையும் கேட்டிருக்கலாம். லஞ்ச மரத்தின் கிளைகளை வெட்டினால் போதாது. விஷ விதையாக முளைத்து ஆணி வேர் போட்டு வளர்ந்திருக்கும் லஞ்சமென்னும் மகாமரத்தை அடியோடு வெட்டிச் சாய்க்க வேண்டும்; புரட்சி நடந்தால் தான் சரியாகும் எனச் சொல்லும் நண்பர்களின் சவடால்களையும் கேட்டிருக்கிறேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நம் கண்முன்னே கொள்ளை கொள்ளையாகப் பணம் சேர்த்த அரசியல்வாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்தவித உடல் உழைப்பிலும் ஈடுபட வில்லை. தொழிலில் ஈடுபடாமல் சொத்துச் சேர்த்து விட்டுத் தொழில் அதிபர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளை நெருங்காமல் , சொந்த வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்த முடியாமல் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் லஞ்சம் வாங்கும் அலுவலகச் சிப்பந்திகளையும் கடைநிலை ஊழியர்களையும் கைது செய்யும் லஞ்ச ஒழிப்புத் துறையை அரசு அவ்வப்போது தூண்டிவிடும்; பலரைக் கைது செய்யும்; ஒருவிதப் பயத்தையும் அச்சத்தையும் உண்டாக்கி விட்டுப் பிறகு ஒதுங்கிக் கொள்ளும். ஒருவிதத்தில் மக்களை ஏமாற்றும் திசை திரும்பல்கள் எனச் சொல்பவர்களின் கருத்தை மறுக்கவும் முடியாது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;லஞ்சம், கையூட்டு, கமிஷன், மால், மாமூல் எனப் பல பெயர்களில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த அரக்கனின் தோற்றம் அறஞ்சார்ந்த வாழ்க்கையிலிருந்து விலகியதன் காரணமாகவே தோன்றியது. அறஞ்சார்ந்த வாழ்க்கையிலிருந்து விலகியதற்குக் காரணம் கடவுளையும் மதத்தையும் விட்டு விலகியது தான் என ஒருசாரார் பேசுவதையும் கேட்டிருக்கலாம். அளவிற்கு மிஞ்சிய ஆசையில் தனிமனிதன் ஒழுக்கத்தை மீறுகிறான்; அதனால் நமது கல்வியில் நீதிபோதனை வகுப்புக்களும் ஒழுக்கவியல் மதிப்புகளும் சேர்க்கப்பட வேண்டும் என வாதிடுவதும் நடந்து கொண்டிருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இத்தகைய விவாதங்களையும் வைக்கப்படும் காரணங்களையும் அப்படியே ஏற்கவும் முடியவில்லை; தள்ளவும் முடியவில்லை என்பதுதான் உண்மை. லஞ்சத்தை ஒழிப்பது என்ற பெருங் காரியத்தைப் பெரிய மனிதர்களும் பெரிய பெரிய நிறுவனங்களும் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் தான். ஆனால் ஒவ்வொரு மனிதனும் எனது காரியம் முடிய வேண்டும்; அதற்காக நான் லஞ்சம் தரத் தயாராக இருக்கிறேன் என நினைப்பதை விட்டு விட்டு, எவ்வளவு காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை; முறைப்படி நடக்கட்டும்; நான் லஞ்சம் தர மாட்டேன் என முடிவு செய்து செயல்படவும் வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு முடிவு எடுப்பவர்களாக மட்டும் இருந்து விட்டால் போதுமா? என்று கேட்டால் போதாது. நீங்கள் இருக்கும் இடத்தில் – வேலை பார்க்கும் அலுவலகத்தில்- லஞ்சம் வாங்கு வதை அனுமதிக்காதவர்களாக-பொறுப்புணர்வைப் பேணுபவர்களாக- கடமையை வலியுறுத்துபவர்களாக இருப்பதும் அவசியம் . இதை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் கதை ஒன்று உண்டு. குடை என்ற தலைப்பில் பூமணி எழுதியது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt; கோயில்பட்டிக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்து சென்னையில் கூட்டுறவுத் துறையில் உயர் பதவி வரை வகித்த பூமணி கரிசல் இலக்கியம் என்னும் வகைப்பாட்டில் கி.ராஜநாராயணனுக்கு அடுத்து முக்கியமாகச் சொல்ல வேண்டிய சிறுகதை மற்றும் நாவலாசிரியர். அவரது பிறகு, வெக்கை, நைவேத்யம் போன்ற தொடக்ககால நாவல்களுக்காகவும் ரீதி என்ற சிறுகதைக்காகவும் அதிகம் கவனிக்கப் பட்டவர். பின்னர் வரப்புகள், வாய்க் கால் போன்ற நாவல்களையும் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபடுபவர்களை மையப்படுத்தி கருவேலம்பூக்கள் என்றொரு திரைப்படத்தையும் எடுத்தவர்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அவரது குடை கதை லஞ்சம் என்ற மையப் பொருளை வித்தியாசமாக அணுகிய கதை. லஞ்சம் வாங்கப்படும்- கொடுக்கப்படும் கதை வெளியைக் கதைக்களனாகக் கொள்ளாமல், லஞ்சம் வாங்கும் ஒருவனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் தைரியத்தைக் குறித்து இருவர் பேசிக் கொள்வதாக அமைந்த கதை. பூமணியின் கதைகளின் மிகப்பெரிய பலமே அவர்களது கதாமாந்தர்கள் பேசிக்கொள்ளும் எளிய உரையாடல்கள் தான். முழுவதும் உரையாடல்கள் மூலமே அமைந்த கதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். அப்படியான உரையாடல் மூலம் நகரும் குடை கதை இப்படித் தொடங்குகிறது:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#330099;"&gt;“ஏன் ஏட்டையா ஒரு மாதிரி இருக்கீக”         “ரெண்டு மூனு நாளா மனசே சரியில்லே ஆத்தி” &lt;br /&gt;“ஏன் வீட்ல சண்டையா”       &lt;br /&gt;  “ சண்டை போடுறதுக்குத் தானா தெம்பிருக்குது.நாட்ல நடக்கிற அனியாயத்தப் பாத்துக்கிட்டு துக்கல்லா நிக்கிறத விட நாண்டுக்கிறலாமான்னு இருக்குது”&lt;br /&gt;    “ அப்படியென்ன காணாறதக் கண்டுட்டீக.”&lt;br /&gt; “ ஆத்தி எங்கயோ நாலு நல்ல மனுசரு இருக்கிறதனாலதான் அப்பப்ப மழ பேயிது.”&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;span style="color:#330099;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த உரையாடலில் நல்லவர்கள் இருப்பதால் தான்  மழை பெய்கிறது எனப் பேசும் ஆத்தியும் ஏட்டய்யாவும் (இந்தக் கதாபாத்திரங்கள் பூமணியின் பல கதைகளில் இடம் பெறும் கதை சொல்லிகள்) தொடர்ந்து பேசி, அந்த நாலு நல்லவர்களில் ஒருவரை- ஒரு பெண்ணை- பொதுப் பணித்துறை அலுவல கத்தில் வேலை பார்க்கும் கிளார்க் சந்தானலச்சுமியை அடையாளம் காட்டு கிறார்கள்.  அப்படி அடையாளம் காட்டும் குடை கதை இப்படி முடிகிறது:&lt;br /&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;em&gt;“ இத்தனைக்கும் அந்தப் பொண்ணு கொஞ்சங்கூட கலங்கல. பாக்க வாறவு கிட்ட சாதாரணமாப் பேசிக்கிட்ருக்கு”   &lt;br /&gt; “ அது வைராக்கியம்”&lt;br /&gt; “ கூடப் படிச்ச பொண்ணு ஒண்ணுவந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்ருந்துச்சு. பொறப்புட்டுப் போகும்போது இனிமேலயாச்சும் கண்டறிஞ்சு பொழச்சுக்கோன்னு அது சொல்லுது. அதுக்கு சந்தானலச்சிமி என்ன சொல்லுது தெரியுமா. என்னய எவனும் காப்பாத்த வரல. என் கொடதான் காப்பாத்தீருக்கு. ஒரு வெரலத்தான் வெட்டீருக்கான்... கேட்டயா.”&lt;br /&gt;“ அப்படிப் போடு”&lt;br /&gt; “ எனக்குச் செருப்பால அடிச்சமாதிரி இருந்தது. மனசுக்குள்ள கொட்டிக் கெடந்த வேதனையெல்லாம் பறந்துருச்சு. சந்தோசம் பொங்குது. அந்தப் பொண்ண கொஞ்சநேரம் பெருமையோட பாத்துக்கிட்டே இருந்தென்..”&lt;br /&gt;“ ஒடனே நானும் போயிப் பாக்கணும் ”&lt;br /&gt;“ இப்பத் தெரிஞ்சதா ஆத்தி ஊரு ஒலகத்துல ஏன் மழ பேயிதுன்னு”&lt;br /&gt; “நல்லாத் தெரிஞ்சுக் கிட்டே ஏட்டையா”&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நாட்டில் மழை பெய்வதற்குக் காரணமாக ஏட்டையாவும் ஆத்தியும் கண்டறிந்த சந்தானலச்சுமி ஏட்டையாவின் வீட்டிற்கும் பக்கத்து வீட்டில் குடியிருப்பவள். அவளது கணவன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். சுட்டித்தனமான இரண்டு  பெண்பிள்ளைகள் என வாழும் அவளது வைராக்கியமும்  கலங்காத மன உறுதியும் வெளிப்படும் பின்னணியில் இருந்தது அவள் அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சமும், அரசு அலுவலகத்தையும் தவறாகப் பயன் படுத்தும் பொறுப்பற்ற தனமும் தான்.&lt;br /&gt;சந்தானலச்சுமி வேலை பார்ப்பது பொதுப்பணித்துறையில். பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர், சாலை வசதி போன்றவைகளுக்குப் பொறுப் பான அத்துறை எல்லா வேலைகளையும் ஒப்பந்தக்காரர்களை வைத்தே முடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எந்தப் பகுதியில் வேலையைச் செய்வது என்பதில் தொடங்கி, யாருக்கு ஒப்பந்தம் விடுவது , முடிந்த வேலைக்குப் பணம் வழங்குவது என அனைத்துக்கும் லஞ்சம் பெறும் பொறி யாளர்களும்  அலுவலகப் பணியாளர்களும் நிரம்பிய இடம்.  அதன்-வாட்ச்மேன் முப்பிடாதிக்கும் சந்தான லச்சுமிக்கும் இடையே ஏற்படும் முரண்பாட்டின் வழியாகவே கதை உருவாகிறது.&lt;br /&gt;பொதுப்பணித்துறை அலுவலகத்தின் பொதுப் போக்கோடு ஒத்துப் போகாமல் - லஞ்சப் பணத்தில் தன் பங்கை வாங்கிக் கொள்ளாமல், தானுண்டு தன் வேலையுண்டு என வந்து போய்க் கொண்டிருக்கும் சந்தான லச்சுமியைக் கண்டு அங்கிருக்கும் ஒவ்வொருவரும் பயப்படுகின்றனர். எங்காவது காட்டிக் கொடுத்து விடுவாளோ என்று ஒவ்வொருவரும் பயம் கொண்டு அவளை மிரட்ட நினைக்கின்றனர்.அதற்கு பயன்படுகிறவனாக முப்பிடாதி இருக்கிறான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முப்பிடாதி முரடன். ஒப்பந்தக்காரர்களுக்குக் காரியம் முடிச்சுக் கொடுக்கக் காசு வாங்குபவன் மட்டுமல்ல; அங்கே இருக்கும் குடிதண்ணீரைக் காசுக்கு விற்பவன். வெளியூர்க்காரர்களை இரவில் தங்க வைத்து அவர்கள் காசில் சாராயம் வாங்கி அலுவலக வளாகத்திலேயே குடித்துக் கும்மாளம் போடுகிறவன். இதையெல்லாம் சந்தானலச்சுமி கண்டிக்கிறாள். அவளும் லஞ்சம் வாங்கினாள் என்று காட்ட ஒரு முறை ஒரு நூறு ரூபாயை வைத்து ஒரு கோப்பைத் தருகிறான். அவள் அந்தப் பணத்தைத் தலைமைப் பொறி யாளரும் கொடுத்துவிட்டுப் புகாரும் செய்து விடுகின்றாள். இந்த நிலையில் தான் அவன் வேறு வழியை யோசித்து முரட்டுத்தனமான வழியில்  செயல் படுத்துகிறான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தனலச்சுமி போகும் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது அரிவாளை வைத்து மிரட்டுகிறான். அவள் பயப்படாமல் பேசிய போது அரிவாளை வீசுகிறான். அவள் கையில் வைத்திருந்த குடையால் தடுத்து விடுகிறாள். திரும்பவும் இரண்டு முறை குடை தடுத்து விடுகிறது. ஆனால் கடைசியாக குடை ஒடிய அவளது விரல் ஒன்று வெட்டுப் படுகிறது. இந்த நிகழ்ச்சி அலுவலகத்திற்குப் பக்கத்தில் நடந்தும் அவளை ஒருவரும் காப்பாற்ற வரவில்லை என்ற போதும் அவள் கலங்கவில்லை என்பதைத் தான் ஏட்டையா, ஆத்தியிடம் சொல்லி ஆச்சரியப்படுகிறான். ’நண்டு தின்னும் ஊரில் நடுப்பங்கு எனக்கு ’எனக் கேட்டு வாங்கித் தின்னப் பழகிக் கொள்பவர்கள் நிரம்பிய உலகத்தில்  வன்முறையான அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் மனதில் உறுதிகாட்டும் சந்தானலச்சுமிகளும் உண்டு என்று காட்டும் பூமணியின் கதை எளிய கதை என்றாலும் அவரது கதைகள் எப்போதும் ஒரு கதையோடு நின்றுவிடுவதில்லை. ஒரு கதைக்குள் இன்னொரு கதை, அதிலிருந்து மற்றொரு கதை எனத் தொட்டுத் தொட்டுப் பிரியும் தன்மை கொண்டவை.குடை கதையிலும் அப்படிப் பட்ட தன்மையைக் காணமுடிகிறது.&lt;br /&gt;பெரும்பாலும் சிறுகதை வடிவம் ஒரு பாத்திரத்தை மையப்படுத்தி முன்னிறுத்தும் நோக்கம் கொண்டவை. அப்பாத்திரத்தோடு தொடர்புடைய - அதன் எதிர்நிலைப் பாத்திரத்தின் இயல்பும் கூடச் சில நேரங்களில் பேசப்படுவதுண்டு.  குடை கதை நேரடியாக தனலச்சுமி என்ற பாத்திரத்தை மையப்பாத்திரமாக முன்னிறுத்தினாலும், அவளது பொறுப்பான கணவனையும் கூட முழுமையாகவே வாசகனுக்குக் காட்டுகிறார்.இக்குடும்பத்தின் கதையைச் சொல்லும் ஏட்டையாவின் குடும்ப இருப்பும் அவரது பேச்சு வழியாக விரிகிறது. அதே போல் ஏட்டையாவிடம் கதை கேட்கும் ஆத்தியின் உறவினர்கள், அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டை எனப் பரவிப் பரவிச் செல்லும் விரிவான கதைப் பரப்பைக் காட்டுகிறது கதை. ஒரு சிறுகதை யிலேயே முழுமையான வாழ்க்கைச் சிதறல்களையும் பரிமாணங்களையும் காட்டும் பூமணியின் கதைகள் மிக நீளமானவை அல்ல என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-6978455544092280854?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/6978455544092280854/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=6978455544092280854' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/6978455544092280854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/6978455544092280854'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/09/blog-post_9906.html' title=''/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-210736802858152870</id><published>2009-09-26T21:29:00.000-07:00</published><updated>2009-09-26T21:34:24.397-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைவெளி மனிதர்கள்-9'/><title type='text'>தீர்க்கமான முடிவு: ஜெயகாந்தனின் யுகசந்தி</title><content type='html'>&lt;div align="justify"&gt;சன் தொலைக்காட்சியில் இரவு ஒளிபரப்பில் முக்கிய நேரத்தில் ஒளி பரப்பப் படும் கோலங்கள் தொடர் எப்போது முடியும்? இந்தக் கேள்வியைப் பத்திரிகைச் செய்தியாக, நடைபாதைப் பேச்சாக, ஒத்த கருத்துடையவர்களின் கலந்துரையாடலில் மையப் பொருளாகப் பல இடங்களில் நான் கேட்டிருக் கிறேன். நீங்களும் கேட்டிருக்கலாம். பெரும்பான்மை மக்களால் விரும்பியோ விரும்பாமலோ பார்க்கப்படும்-படிக்கப்படும் கலை இலக்கியங்களைப் பொருட் படுத்திப் பேச வேண்டியது பண்பாட்டியல் துறை சார்ந்தவனின் ஒருவனின் கடமை என்ற நிலைபாட்டோடு தொலைக்காட்சித் தொடர்களை அவ்வப்போது கவனித்து வைப்பதும், விரும்பிப் பார்க்கும் பல தரப்பட்ட மக்களிடம் உரையாடிப் பார்ப்பதும் எனது விருப்பம்.&lt;br /&gt;அப்படிக் கேட்கும் போதும் உரையாடும் போதும் அந்தக் கதைத் தொடரை அதன் இயக்குநர் அவ்வளவு சுலபமாக முடித்து விட முடியாது என்றே எனக்குத் தோன்றும். ஊடகங்கள் பின்பற்றும் ‘ரேட்டிங்’கில் அந்தத் தொடர்  முதல் இடத்தில் இருப்பது என்ற காரணத்தையும் தாண்டி வேறு ஒரு காரணம் இருக்கிறது என்பது எனது கருத்து. இரண்டாவது திருமணத்தை ஏற்க வைப்பது என்ற  சிக்கலான கதைப் பின்னலைக் கொண்ட கோலங்களுக்கு அதன் பெரும்பான்மைப் பார்வையாளர்களாகிய பெண்கள் கூட்டம் ஏற்கத்தக்க முடிவை அதன் இயக்குநர் திருச்செல்வன் தர வேண்டும். அது இயக்கு நருக்குப் பெரும் சவாலான ஒன்று. அப்படித் தருவதற்கு தீர்மானமான முடிவு எடுக்கும் திறன் வேண்டும்; ஜெயகாந்தனின் கௌரிப் பாட்டியைப் போல என மனதிற்குள் நினைத்துக் கொள்வேன். ஆம் கௌரிப் பாட்டி தீர்மானம் செய்வதில் முதன்மயானவள் என்பது மட்டுமல்ல; அதற்கான காரணங்களை முன் வைப்பதிலும் கைதேர்ந்தவள் என்பதை யுக சந்தி என்னும் கதையை வாசித்தால் நீங்களும் உணரக் கூடும். கோலங்கள் தொடரின் கதையைப் பற்றி விவாதிப்பது இங்கு நோக்கமல்ல. ஜெயகாந்தனின் கதையை நினைத்துக் கொண்டதற்கு அது ஒரு காரணம் தான்.&lt;br /&gt;ஜெயகாந்தனின் கதைகளில் மையப் பாத்திரங்களாக வரும் எந்தவொரு பாத்திரமும் தான்  நினைத்ததைத் தைரியமாகச் செய்யக் கூடிய-சொல்லக் கூடிய- பாத்திரங்கள் என்பதை ஜெயகாந்தனின் தீவிர வாசகர்கள் அறிவார்கள். அதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு வழக்கத்தின் மையத்தில் நிற்கும் பாத்திரமாக இருந்தாலும், அந்தப் பாத்திரம் தீர்மானமாக முடிவெடுத்து நடைமுறைப் படுத்துவதைத் தனது கதையில் காண்பிப்பவர் ஜெயகாந்தன். ஏனென்றால் ஜெயகாந்தனே சொன்னது போல அவரது கதைகளில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் அவர் தான். தன்னையே ஒவ்வொரு பாத்திரத்திலும் வைத்து எழுதிப் பார்க்கும் ஜெயகாந்தன் தனது முடிவுகளைப் பாத்திரங்களின் முடிவுகளாகத் தந்து விடுகிறார். இப்படித் தருவதே அவரது கதைகளின் பலம் என்று சொல்லும் விமரிசகர்களும் உண்டு; அதுவே அவரது பலவீனம் என்று வருணிப்பவர்களும் உண்டு. அந்த விமரிசனங்களைப் பற்றி அவர் அதிகம் அலட்டிக் கொண்டவரல்ல.&lt;br /&gt;மாறிவரும் சமூகத்தின் புதிய கீற்றுக்களைச் சரியாக அடையாளப்படுத்தி அதன் பிரதிநிதிகளைக் கதாபாத்திரங்களாக எழுதிக் காட்டிய பல கதைகள் அவரது தொகுப்புகளில் உள்ளன. முத்திரைக் கதைகளாக ஆனந்தவிகடனில் அவர் எழுதிய கதைகள் வெளிவந்த காலத்தில் பலத்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டவை. யுகசந்தி கதையும் அப்படிப் பட்ட கதைதான். யுகசந்தியைத் திட்டமிட்டுக் கதைகளை எழுதுபவர் ஜெயகாந்தன் என்பதை உறுதி செய்யும் உதாரணக் கதை என்று கூடச் சொல்லலாம். பேனா வழியாகக் கதை தன்னை எழுதிக் கொள்கிறது, பாத்திரங்கள் தங்களை  எழுதிக் கொள்கிறார்கள் என்று சொல்லும் சில நவீன எழுத்தாளர்கள் போல ஜெயகாந்தன் சொல்பவர் அல்ல. அவர் எழுத நினைக்கும் கதை அல்லது கதாபாத்திரம் முழுமையின் நிழலாக அவரது மூளைக்குள் இருப்பதாக நம்புபவர். அப்படி இருப்பது தானே சாத்தியமும் கூட.&lt;br /&gt;நெய்வேலியிலிருந்து கடலூரில் இருக்கும் மகன் வீட்டிற்கு வருவதற்காகப் பேருந்து நிலையத்தில் வந்திறங்கிடும் கௌரிப்  பாட்டி, மகன் வீட்டில் ஒரு இரவு முழுவதும் தூங்காமல்  தங்கி இருந்து விட்டு அடுத்த நாள் அவசரம் அவசரமாகத் தனது பேத்தி இருக்கும் நெய்வேலிக்குச் செல்ல வேண்டும் எனப் பேருந்து நிலையத்திற்குத் திரும்புவதோடு முடியும் கதை யுகசந்தி. எழுபது வயதுப்பாட்டி கௌரி, இளம் வயதிலேயே விதவையானவள். தனது விதவைக் கோலத்தை ஒவ்வொருவருக்கும் உணர்த்தும் விதமாக விதவைகளுக்கே உரிய ஆடையை உடுத்தி, தலையை மழித்து, உணவை உண்டு ஆசாரம் காத்து வந்தவள். அதே நிலை கணேசய்யரின் மூத்த மகள்- கௌரிப்பாட்டியின் பேத்தி கீதாவுக்கும் ஏற்பட்ட போது அடைந்த வலி தாங்க முடியாத ஒன்றாய் உணர்ந்தவள். ”மணக்கோலம் பூண்டு பத்தே மாதங்களில், தரித்திருந்த சுமங்கலி வேடத்தை,நாடகப்பூச்சைக் கலைப்பது போல கலைத்து விட்டுக் குடும்பத்தை அழுத்தும் பெருஞ்சோகமாய்க் கதறிக் கொண்டு தன் மடியில் வந்து விழுந்து குமுறியழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசிச் சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கௌரிப் பாட்டி” என்று ஜெயகாந்தன் எழுதிக் காட்டியதன் வழி கௌரிப் பாட்டியின் சித்திரத்தை உணரலாம்.&lt;br /&gt;விதவையான மகளை விதவைக்கோலம் ஏற்கச் செய்யாமல், ஆசிரியப் பணிக்கு அனுப்பும் முடிவைத் தனது மகன் கணேசய்யர் எடுத்த போது அமைதி காத்தவள் மட்டுமல்ல; அவளோடு போய் அவளுக்கு உதவியாக இருக்கிறேன் எனக் கிளம்பி கீதா வேலை பார்க்கும் நெய்வேலியில்  அவளுடன் இருப்பவள். அப்படி இருந்தாலும் தன் ஆசார அடையாளமான மொட்டை போடுவதற்காக ஒவ்வொரு முறையும் கடலூருக்கு வருபவள். வந்து வழக்கமாகத் தலை மழிக்கும்  நாவிதன் வேலாயுதத்திடம் தலையை மழித்து கொள்பவள். அப்படித் தலையை மழித்து மொட்டை போட்டுக் கொள்ளத்தான் கௌரி அன்றும் வந்தாள். வரும்போது பேத்தி தன் தந்தை கணேசய்யரிடம் கொடுக்கச் சொன்ன கடிதத்தையும் கொண்டு வருவதில் தான் கதை தொடங்குகிறது.&lt;br /&gt;நாவிதனைக் கூட மாற்றிக் கொள்ளாமல் ஆசாரம் காத்த கௌரிப் பாட்டி. தான் அனுபவித்த விதவைத் துயரைத் தனது பேத்தி கீதா  அனுபவிக்கக் கூடாது என நினைத்து எடுக்கும் முடிவு தான் அவளை யுகங்களின் சந்திப்பாக மாற்றுகிறது. தன்னுடன்  பள்ளியில் வேலை பார்க்கும் இந்தி பண்டிட் ராமச்சந்திரனை மறுமணம் செய்வது என்று பேத்தி கீதா  எடுத்திருக்கும் முடிவை வீட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், நான் ஏற்று கொள்கிறேன் ; இப்படியொரு முடிவை எடுத்த அவளுக்கு ஆதரவாக நான் இருக்க வேண்டும் என்று கருதி உடனடியாகத் தலையைக் கூட மழித்துக் கொள்ளாமல்  திரும்பிச் செல்கிறாள் என்பதாகக் கதை முடிகிறது. &lt;br /&gt;யுகசந்தியின் கதை முடிச்சே கௌரிப் பாட்டி கொண்டு வரும் கடிதத்தில் தான் இருக்கிறது. பேத்தி கீதா தன்னிடம்  கொடுத்த கடிதத்தைத் திறந்து பார்க்காமல் அவளது அப்பா கணேசய்யரிடம்- தன் மகனிடம் சேர்த்து விட்டு ஆயாசமாக அமர்ந்த கௌரியைக் கணேசய்யர் கடிதத்தைப் படித்து விட்டு அடைந்த அதிர்ச்சியும் ஆவேசமும் நிலை குலைய வைக்கிறது. மறுமணம் செய்வது எனக் கீதா எடுத்துள்ள முடிவைச் சொல்லும் கடிதத்தைப் படித்தவுடன் கணேசய்யர் “அவ செத்துட்டா..தலையெ முழுகிட வேண்டியது தான் என்று நிர்த்தாட்சயண்யமான குரலில் உறுதியாகச் சொன்ன போது ’பாட்டி திகைத்தாள்’ என்று எழுதுகிறார் ஜெயகாந்தன். திகைத்தவள் தன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படிக்கிறாள். அதில், இப்படி இருக்கிறது: “ ரொம்ப சுயநலத்தோட எடுத்த முடிவு தான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து, தியாகம் செய்து விட்டீர்கள்..?” இந்தக் கேள்வி பாட்டிக்கு சுருக்கென்று உரைத்ததால் நாக்கைக் கடித்துக் கொண்டாள். எதுவும் பேசாமல் திரும்பத் திரும்பக் கடித வரிகளை நினைவுக்குக் கொண்டு வருவதும் கீதாவை நினைத்துக் கொள்ளாமல் இருந்த கௌரிக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை.&lt;br /&gt;அடுத்த நாள் காலை நாவிதன் வேலாயுதம் வந்து நின்றதை நினைவுபடுத்திக் கணேசய்யர், “ அம்மா வேலாயுதம் வந்திருக்கான்.. அவள் செத்துட்டான்னு நெனச்சித் தலையைச் செரைச்சி தண்ணிலே போயி முழுகு.. என்று சொல்கிறார். அப்போது கௌரி, “வாயை மூடுடா..” என்று குமுறி எழுந்து “ காலங்கார்த்தால அச்சான்யம் பிடிச்ச மாதிரி என்ன பேச்சு!.. இப்ப என்ன நடந்துடுட்டுதுன்னு அவளைச் சாகச் சொல்றே? என்று தாங்க முடியாத சோகத்துடன் கேட்கிறாள். பிறகு தனது மகனிடம், “ அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான். அதுக்கென்ன சொல்றே? என்று கேட்டு அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டு தான் இதுவரை காத்த ஆசாரம், அனுஷ்டானம் போன்றவற்றின் தீவிரமான கேள்விகளைத் தொடுக்கிறாள். அந்தக் கேள்வி கீதாவுக்காகக் கேட்டதா..? இவ்வளவு காலமும் தன்னை விதவையாக ஆக்கிப் பார்த்த சமூகத்தின் கட்டுப்பாடுகள் மீது கேட்கும் கேள்விகளா? என்று திகைக்கும் படியாக அவளது வினாக்கள் இருக்கின்றன.&lt;br /&gt;அவளின் தர்க்கங்களும் தன் மகன் கணேசனுடன் அவள் நடத்தும் விவாதங் களும் ஒரு கதைக்குள் நிகழ வாய்ப்புண்டா என்றால் இல்லை தான். உணர்ச்சிகரமான நிகழ்வுகளின் போது மனிதர்கள் தர்க்க ரீதியாகப் பேசிக்கொள்வதில்லை என்பது யதார்த்தம். என்றாலும் ஜெயகாந்தனின் பாத்திரங்கள் அறிவுப் பூர்வமாகப் பேசவே செய்வார்கள். கௌரிப் பாட்டியும் அப்படித்தான் பேசுகிறாள்.&lt;br /&gt;கௌரி ஆசாரத்தைக் காத்தது போலக் கீதாவையும் விதவைக் கோலத்தில் இருக்கச் செய்யாமல் தொடர்ந்து படிக்கவும், வேலை பார்க்கவும் அனுமதித்த போதே ஆசாரம் மீறப்படுதல் நடந்து விட்டது; வேலை பார்த்த போது அவள் திலகம் இட்டுக் கொண்டாள்; வண்ண வண்ண ஆடைகளை அணிந்து கொண்டாள். அதையெல்லாம் அனுமதித்து விட்டு, இப்போது மறுமணம் என்றவுடன் ஆசாரம், அனுஷ்டானம் எனப் பேசுவது என்ன நியாயம் ? என்று கேட்ட அம்மாவுக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நிற்கும் கணேசய்யரிடமும் அவரது மனைவி பார்வதியிடமும் “ வீட்டைச் சமத்தாப் பார்த்துக்கோ ”  என்று சொல்லி விட்டுக் கிளம்புகிறாள். கிளம்பும்போது வழியில் நின்ற வேலாயுதத்திடம், “ நீ போடாப்பா.. நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு.. ” என்று அவனிடம் நாலணாவைத் தந்து அனுப்பினாள். “ இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை.. அதற்கென்ன? உலகத்தில் என்னென்னமோ மாறுகிறது! நான் ஒரு நாவிதனைக்கூட மாற்றிக் கொள்ளக் கூடாதா?” என்று எண்ணிச் சிரித்துக் கொண்டாள் கௌரி என்று எழுதும் ஜெயகாந்தன் அந்தக் கதையை இப்படி முடிக்கிறார்:வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர்கொண்டழைத்துத் தழுவிக் கொள்ளப் பயணப்படுவதென்றால் .. ஓ! அதற்கு ஒரு பக்குவம் தேவை!&lt;br /&gt;விதவை மறுமணம் என்ற நிலை அதிகம் வெளியில் தெரியாமல் மாறிவிட்ட இன்றையச் சூழலில் இந்தக் கதை முக்கியமான கதையாகத் தோன்றாமல் போகலாம். ஆனால் பால்ய விவாகம், அதனால் ஏற்பட்ட விதவைகள் பிரச்சினை என்று தமிழ்ச் சமூகத்தினை அலைக்கழித்த அந்தச் சிக்கலைத் தீவிரமாக எதிர்கொண்ட ஒரு எழுத்தாளன் எடுத்த முடிவை இந்தக் கதையின் பாத்திரமான கௌரி உக்கிரமாக வெளிப்படுத்துவதை யுகசந்தியில் இன்றும் வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7879868540696030866-210736802858152870?l=ramasamywritings.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramasamywritings.blogspot.com/feeds/210736802858152870/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=7879868540696030866&amp;postID=210736802858152870' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/210736802858152870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7879868540696030866/posts/default/210736802858152870'/><link rel='alternate' type='text/html' href='http://ramasamywritings.blogspot.com/2009/09/blog-post_26.html' title='தீர்க்கமான முடிவு: ஜெயகாந்தனின் யுகசந்தி'/><author><name>அ.ராமசாமி எழுத்துகள்</name><uri>http://www.blogger.com/profile/10301955682024682103</uri><email>ramasamytamil@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08208278709946052301'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7879868540696030866.post-3646218442126686961</id><published>2009-09-04T11:01:00.000-07:00</published><updated>2009-09-04T11:06:11.045-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்விச் சிந்தனை'/><title type='text'></title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;திக்குத்தெரியாத காட்டில்…&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;==========================&lt;br /&gt;இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் நுழைய உள்ளவர்களில் ஏறத்தாழப் பாதிப்பேர் தமிழ் வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒற்றைச் சாளர முறையின் வழியாகச் சேர உள்ள மொத்த மாணாக்கர்களில் 43.5 % பேர் தமிழ்வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 26.34 சதவீதம் தான்.  43.5 % பேரும் தங்கள் பொறியியல் படிப்பை வெற்றிகரமாக முடித்து எதிர்காலத்தைச் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் ; அவர்களது பெற்றோரின் விருப்பமும் அதே.  இன்னும் சொல்வ தானால் இந்தச் சமூகத்தின் வேண்டுகோளும் கூட அதுதான். ஆனால் அது நடக்கப் போவதில்லை. சேர்ந்த அத்தனைபேரும் வெற்றிகரமாக வெளியேறு வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படி வெளியேற வில்லை என்பதே நடைமுறை உண்மையுங்கூட. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தொழிற்கல்விக்குள் நுழைந்தவர்களைப் பற்றிப் பேசும் நமது ஊடகங்களும், கல்வி நிறுவனங்களும் படிப்பை முடிக்காமல் போனவர்களையும், படிப்பு கெட்டுப் போனதால் திசைமாறியவர்களையும் பற்றி நமது சமூக நிறுவனங்களும் திட்டமிடல் பொறுப்பாளர்களும் கவலைப்படுவதில்லை; கண்டு கொள்வதுமில்லை. நமது பொதுப்புத்தியோ அவர்களைக் குற்றவாளி களாகக் கருதி ஒதுக்கவும் செய்கிறது. இப்படிப் பட்ட புறக்கணிப்பால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். அவர்கள் இந்தச் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அண்மையில் ஊடகங்கள் வழியாகக் கவனத்திற்கு வரும் குற்ற நடவடிக்கைகளின் பின்னால் தொழிற்கல்வி மாணவர்களும், பட்டதாரிகளும், பாதியில் நிறுத்தியவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காவல் துறையின் ஆவணங்கள் சொல்கின்றன. &lt;br /&gt;பள்ளிக் கல்வியை முடித்துவிட்டுத் தொழிற்கல்வியைப் பெறும் ஆசையோடு பெரும்பணத்தைக் கட்டணமாகச் செலுத்திய பிறகும் படிப்பை முடிக்காமல் போவதின் காரணங்கள் பலவாக இருக்கக் கூடும்.  தனிநபர் சார்ந்த காரணங் களுக்கும் பலவாக இருக்க, நமது அரசும், கொள்கை வகுப்பாளர்களும் கண் மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு நடைமுறையும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. தனிநபர் சார்ந்த காரணங்களுக்கே ஆலோசனைகள் வழங்கி வழி நடத்திட இன்று கல்வி நிலையங்கள் ஆலோசனை மையங் களை நடத்திக்  கொண்டிருக்கின்றன.  அதைவிடவும் கூடுதலான கவனத்துடன் செய்ய வேண்டியது மாணாக்கர்களின்  தொடர்பு மொழிப் பிரச்சினையாகும்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பள்ளிக் கல்விக்குப் பிந்திய தொழிற்கல்விப் பட்டங்கள்  நூறு சதவீதம்  ஆங்கிலவழிப் பாடங்களாகவே கற்பிக்கப்படுகின்றன. படிப்பதற்கான மொழி மட்டுமே ஆங்கிலம் என்று நினைத்து விட வேண்டாம். பொறியியல் போன்ற தொழிற்கல்வியைத்திறம்பட முடித்துவிட்டு வெளியேறும் பட்டதாரிகளுக்குப் பணிகளை வழங்கத் தயாராக இருக்கும் நிறுவனங்களின் தொடர்புமொழியும் ஆங்கிலம் தான்.  தமிழக மாணவர்களின் ஆங்கில மொழிப் பயன்பாடு அவர்களின் விருப்பமின்றிக் கூடிக் கொண்டே இருக்கிறது.  இதைச் சரியாகப் புரிந்து கொண்ட சில கல்வி நிறுவனங்கள் ஆங்கில மொழியைத் தொடர்பு மொழி என்ற அளவில் கற்பதற்கான வழிகளை உருவாக்கி அதையும் வெற்றி கரமான வியாபாரமாக நடத்திக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் வணிகமாகப் பார்க்கும் போக்கு மிக மிக ஆபத்தானது. தமிழ் நாட்டு மாணவர் களின் மொழிப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை முன் வைப்பதே அரசுக்கு ஆலோசனை வழங்கும் கல்வியாளர்களின் முக்கியக் கடமை மட்டும் அல்ல; அவசரக் கடமையும் கூட.&lt;br /&gt;ஆங்கில வழியில் பாடங்களைப் படிக்கும் ஒரு மாணவர் பள்ளிக் கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் தாய் மொழியாகிய தமிழையும் ஒரு பாடமாகவும் படிக்கிறார். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்கள் நினைக்கிற ஒரு விசயத்தை அல்லது கற்ற பாடங்களைத் தமிழில் சொல்லவோ, எழுதவோ இயலாதவராகவே  வெளியேறுகிறார். இதே நிலை தான் தமிழ் வழிக் கல்வி கற்கும் மாணாக்கர்களிடமும் இருக்கிறது.பாடங்கள் அனைத்தையும் தமிழ் வழியில் படிக்கும் அவர்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பின்பும் அந்த மொழியைத் தொடர்பு மொழியாகக் கூடப் பயன் படுத்த முடியாத நிலைதான் இருக்கிறது. &lt;br /&gt;இந்தப் பிரச்சினை வெறும் மொழிப்பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி தரமான கல்வியைத் தரமுடியாமல் தவிக்கும் உயர்கல்வியின் தலையாய பிரச்சினையாகக் கவனிக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வியில் முதன்மைப் பாடங்களான கணிதம், உயிரியல், வேதியியல், இயல்பியல் போன்றவற்றிற்குத் தரும் முக்கியத்துவத்தை விடவும் கூடுதல் கவனத்துடன் மொழிக் கல்வியைக் கற்பிக்க வேண்டும்.&lt;br /&gt;நடைமுறையிலோ இதற்கு எதிரான நிலையே இருக்கிறது. மொழிக் கல்வியும் மொழி ஆசிரியர்களும் இரண்டாவது மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதே நிலவரம். பாடங்களை நடத்துவதை விட வேறு விதமான பணிகளே அவர்களுக்கு பள்ளியில் காத்திருக்கும். அவர்களும் தங்கள் கல்விப்பொறுப்பை உணராமல், நிர்வாகம் ஏவும் வேலைகளைச் செய்யும் பொறுப்பையே பெரிதாக என்ணிச் செயல்படுகிறார்கள். மொழியைக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் ஏராளமான புதிய உத்திகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதனை நமது பள்ளிகளின் மொழி ஆசிரியர்கள் அறிய வேண்டும். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு நமது மொழி ஆசிரியர்கள் அனுப்பப் பட வேண்டும்.&lt;br /&gt;தாங்கள் கற்ற கல்வியை- பாடங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லக் கூடியவர்களாக – எழுதக் கூடியவர்களாக மாணவர்களை மாற்றுவது என்பது மொழி ஆசிரியர்களின் முக்கியமான கடமை. அக்கடமை அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கான கடமை அல்ல; இந்தச் சமூகத்திற்கும் தேசத்தின் எதிர் காலத்திற்கும் அவர்கள் செய்ய வேண்டிய கடமை. அவர்களைச் செய்யத் தூண்ட வேண்டியது கொள்கை வகுப்பாளர்களின் கடமை என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.&lt;br /&gt;பன்னிரண்டு வருடங்கள் தாய்மொழியின் வழியாக- தமிழ்  வழியாகக் கல்வியைப் பெற்றுக் கொண்டு உயர்கல்விக்காகக் கல்லூரிக்குள் –அதிலும் பொறியியல் ,மருத்துவம் போன்ற தொழிற்கல்வி வகுப்புகளுக்குள்  அடியெடுத்து வைக்கும் தமிழ் நாட்டு மாணவன் ஒருவனின் நிலையைச் சரியாகச் சொல்வதற்கு  எனக்குப் பாரதியின் இந்தக் கவிதைத் தலைப்பு தான் நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;பாடங்களைப் பயிலும் மொழி எதுவாக இருக்கிறதோ அதுவே தேர்வுகள் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பயிற்று மொழிப் பிரச்சினையாகப் பார்க்காமல், மொழிக்கல்வியின் பிரச்சினையாகவும் கவனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்று பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு பட்ட வகுப்பிற்கும் மூன்று பாடத்திட்டக் குழுக்கள் பாடங்களைத் தயார் செய்கின்றன.&lt;br /&gt;பகுதி -I தமிழ் பாடத்திட்டக்குழு, பகுதி -II ஆங்கிலமொழிப் பாடத்திட்டக் குழு, அப்பட்டத்தின் முதன்மைப் பாடத்திட்டக்குழு என்பன தான் அவை. இம்மூன்று குழுக்களும் கூடும் நாட்களும் வேறு வேறு; பாடங்களைத் திட்டமிடும் நோக்கங்களும் வேறு வேறு. வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நோக்கங் களுடன் கூடித் தயாரிக்கப் படும் பாடத்திட்டங்கள் வேறு வேறு வகையான பாதையில் தான் செல்லும். அதற்குப் பதிலாக இம்மூன்று குழுக்களும் இணைந்து ஒற்றை நோக்கத்துடன் பாடத்திட்டத்தைத் தயாரித்தால் அடைய வேண்டிய இலக்கைச் சுலபமாக அடையும் வாய்ப்புக்கள் உண்டு.&lt;br /&gt;மொழிக்கல்வியில்  ஆங்கிலேயர்கள் முன் வைத்த நோக்கங்களே இன்னும் நோக்கங்களாக உள்ளன. ஒரு பட்டப்படிப்பை முடிக்கும் இந்தியன், ஆங்கில  மொழியைப் பயன்பாட்டு மொழியாகக் கற்பதோடு  ஆங்கில இலக்கியத்தின் சிறப்பான பகுதிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதன் வழியாக ஆங்கிலேயர்களின் மேலான பண்பாட்டை அறிந்து கொள்வான். அறிந்து கொண்ட நிலையில்  இந்தியர்கள் அவர்களின் ஆதிக்கத்தை ஒத்துக் கொள்வார்கள் ;எதிர் மனநிலைக்குச் செல்ல மாட்டார்கள் என்பது மறைமுக நோக்கமாக இருந்தது.&lt;br /&gt;அந்த மறைமுக நோக்கத்தை நமது கல்வி முறை இன்றும் ஒத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் தொடர்பு மொழியாக வேண்டும் என்பதில் இன்று மாற்றுக் கருத்துக் கூற முடியாது; ஆனால் ஷேக்ஸ்பியரும் மில்டனும் தேவை என்று சொன்னால் அதை அபத்தம் என்று தான் சொல்ல வேண்டும். ஆங்கில இலக்கியத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்காத ஒரு மாணவர் உலக இலக்கியத்தைக் கற்க விரும்பினால் அவர் நாட வேண்டியது நூலகங்களாகத் தான் இருக்க வேண்டும்; வகுப்பறைகளாக இருக்க வேண்டியதில்லை.&lt;br /&gt;இதே அணுகுமுறையைத் தான் தமிழ் மொழியைப் பயிற்றுவிப்பதிலும் பின்பற்ற வேண்டும்.ஆங்கில வழியாகவோ, தமிழ் வழியாகவோ தான் கற்ற கருத்துகளை- செய்திகளை- தமிழ் வழியாகப் பேசவும், எழுதவும் கூடியவராக மாற்றும் விதத்தில் தமிழ் மொழிக்கல்வி அமைய வேண்டும். அவர்களுக்குச் சங்க இலக்கியத்தின் சில பகுதிகளையும் சிலப்பதிகாரத்தின் ஒரு காதை யையும் தேவாரப் பதிகங்கள் சிலவற்றையும் கற்றுத் தருவதால் அவர்களுக்கு தமிழ் இலக்கிய ஆர்வம் 