tag:blogger.com,1999:blog-73851818079822837232008-07-07T11:31:47.701+01:00Tamizachiதமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comBlogger293125tag:blogger.com,1999:blog-7385181807982283723.post-81057847289846361052008-07-07T11:29:00.001+01:002008-07-07T11:31:47.752+01:00ஒரு கேள்வி..!<p> </p><p> </p><p>கேள்வி: விஞ்ஞானம் என்ன சொன்னாலும் "இந்து தர்மம்" பாதிக்கப்படாது என்கிறேன். அதைப் பற்றி உங்கள் கருத்து?</p><p>தமிழச்சி: வேதாந்தமும், சித்தாந்தமும் பேசிக் கொண்டு விஞ்ஞானத்தினால் இந்து தர்மம் பாதிக்கப்படாது என்றும் மதச்சார்புள்ள நீங்கள் சமூகமாற்றத்தை கணிக்கக் கூடாது. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்க வேண்டும். அது என்ன "இந்து தர்மம்" விரிவாக விளக்க முடியுமா? இதுவரையில் காலகாலமாககடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்து தர்மநெறிகள் சில சட்டம் மூலம் கூட தடை செய்யப்பட்டிருக்கிறது. மரபுகளும், சட்ட திட்டங்களும், பழக்க வழக்கங்களும் களையெடுக்கும் யுகம் இது. 21-ம் நூற்றாண்டைப்பற்றி, அறிவியல் புரட்சியைப்பற்றி, வாழ்வியல் புரட்சி பற்றி, சிந்திக்க சாதாரண மக்களுக்கு முடிவதில்லை. இந்தியாவில் 100-க்கு 90- மக்களின் சிந்தகைள் ஐரோப்பிய மக்களின் சிந்தனைகளுடன் ஒப்பிடும் போது 400-வருடங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக சமூதாய ஆய்வாளர்கள் இந்திய மக்களைப்பற்றி கருத்துத் தெரிவிக்கிறார்கள். இதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.உலகத்தின் மற்ற பகுதிகளில் இந்தியாவைப் பற்றி பேசும் போது இந்து தர்மத்தைப் பற்றியா பேசுகிறார்கள்? மக்களின் அறியாமையையும், சுகாதாரச் சூழ்நிலைகளைப்பற்றியும், வறுமையைப்பற்றியுமல்லவா பேசுகிறார்கள். இந்தியன் என்றால் அரை நிர்வாணப் பக்கிரிகள் (?) என்று ஐரோப்பியர்கள் சொல்வது கேட்கிறதா? ஓவ்வொரு காலக்கட்டத்திலும் பழைய பண்பாடு அழிந்து புதியதாக ஒரு பண்பாடு தோன்றுகிறது. அதேப்போல் ஓவ்வொரு பண்பாடு தோன்றும் போது மக்கள் கூட்டத்திற்கு தலைவனாக இருப்பவனும், மதகுருமார்களும், பிரபுக்களும், அரசர்களும், அரசியல்வாதிகளும், மக்களை தங்களின் சொல்லுக்கும் கட்டளைக்கும் அடிப்பணிந்து நடக்க தந்திரமான உத்திகளை கையாண்டனர். அடி உதை கொடுத்து பயத்தில் வைத்திருந்தது ஆதிகாலமுறை. மனிதர்களுக்குள் மதங்களைத் திணித்து, பிரிவுகளை உருவாக்கி ஆன்மாவிலோயே சந்தேகங்களை விதைத்து, மனிதர்களை சோர்ந்து செயலூக்கத்தை இழக்கும்படி செய்ய வைத்து அடக்கி வைக்கப்படுவது ஒருமுறை. இம்முறைகளை அரசனோ? அரசியல்வாதியோ? தனியாகச் செய்து விட முடியாது அதனால் தான் மதவாதியுடனே செயல்படுத்தினார்கள். வரலாற்று நிகழ்வுகளையும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளையும் ஆராய்ந்துப் பார்த்தால் சூட்சமம் பிடிபடும்.ஃபிரெஞ்சு தத்துவஞானி ரூஸோ( Rousseau) சொல்கிறார்: சமூதாய அமைப்பின் வளர்ச்சி காரணமாக தற்கால மனிதன் தன் சுதந்திரத்தை இழந்து விட்டான். அதைத் திரும்பப் பெறுவதே அவனின் முதல் கடமை என்கிறார்.கிரேக்கச் சிந்தனையாளர் பிளாட்டோ எழுதிய இலட்சியக் குடியரசுத் திட்டத்தில்:மனிதர்களுக்குப் பூணர சுதந்திரம் அளிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.தொன்மையை ஆராய்கின்ற தொல்லியல் அறிஞர்கள் (பழங்குடி மக்களின் சமூதாய வாழ்வை ஆராயும் ஆய்வாளர்கள்) எஸ்கிமோ பண்பாடு, செவ்வியர் பண்பாடு, நீலகிரித் தொதவர் (தோதர்) பண்பாடு, சிந்துவெளி மக்களின் (கி.மு 3000) பண்பாடு- என்று வரலாற்று நூல்களில் படித்துக் கொண்டிருக்கிறோம்.நிகழ்வில் இல்லையே!மாறுதல் ஒன்றே நிலையானது என்கிறது வாழ்க்கைத் தத்துவம்.உலகில் உருவாகும் எதுவும் அழிவை நோக்கியே செல்கிறது என்கிறது புத்தத்தத்துவம்.மாறுவதற்கு உரிய ஆற்றலே உயிரினத்தின் அடிப்படை ஆற்றல் என்கிறது விஞ்ஞானம்.உடலில் உயிரணுக்கள் (செல்கள்) தினந்தோறும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பழைய செல்கள் செத்துப் புது செல்கள் பிறந்து உயிரைத் தாங்கி நிலை நிறுத்துகிறது. மாற்றம் என்பது நிஜமாய் இருக்கும் போது பண்பாடாக இருந்தாலென்ன?கொள்கையாக இருந்தாலென்ன? மதமாக இருந்தாலென்ன? இந்துமத தர்மங்களாக இருந்தாலென்ன? விஞ்ஞானமாக இருந்தாலென்ன? மாற்றம் மாற்றம் தான் ! காலப்போக்கில் ஏற்படும் அழிவு அழிவு தான். அதை தடுக்க முனைவதும் உயிர் தத்துவத்திற்கு விடும் அறைகூவலேயாகும். பண்பாடு பண்பாடு என்கிறீர்களே! பண்பாடு என்றால் என்ன?ஒரு மனிதச்சமூதாயத்தின் நம்பிக்கைகள், கொள்கைக் கோட்பாடுகள், சடங்குகள், பயன்படுத்தும் வீட்டுச்சாமான்கள், ஆடை அணிகளங்கள், விழாக்கள், வீட்டு வாசல் அமைப்பு,சமூதாயத்தில் ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்ளும் முறை போன்றவற்றை பண்பாடு என்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் பழக்ககழக்கங்களும் மதங்களும் மொழிகளிலும் மாறுபட்டு மனித இனம் பிளவுபட்டு நிற்கிறது."வஸீதைவ குடும்பம்"- (உலகம் ஒரே குடும்பம்) என்கிறது வடமொழி வேதம்."ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"- என்கிறது தமிழ்த் திருமந்திரம்.ஆனால் நடைமுறைக்கு பொருந்தாத வேதாந்தங்களே அதிகம்.நம் பண்பாட்டில் வாழ்விற்க்கு உதவாத முரண்பாடுகளும், கொள்கைக் கோட்பாடுகளில் மூடநம்பிக்கைகளும் மனிதனை மனிதன் தாழ்வாய் நினைக்கும் எண்ணப்போக்குகளும் காணப்படும் போது இந்தியப் பண்பாட்டைப் பற்றி ஐரோப்பியர்களிடம் பேச சங்கடமாகவே இருக்கிறது. </p><p> </p>தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-82831206064995422922008-07-07T07:56:00.002+01:002008-07-07T08:04:50.575+01:00பக்தி மூலமாக எந்த ஆபாசத்தைக் கூறினாலும்....<a name="206656185724269947"></a><br /><br />பக்தி மூலமாக எந்த ஆபாசத்தைக் கூறினாலும்<br />நம் மக்கள் பொறுத்துக் கொள்வார்கள்.<br />சீர்த்திருத்தக் காரியத்திற்கு<br />உண்மையை எடுத்துக் கொள்வார்கள்.<br />சீர்த்திருத்தக் காரியத்திற்கு<br />உண்மையைச் சொன்னாலும் கோபப்படுவார்கள்.<br />நாம் எந்தச் சமுதாயத்திற்காகத் தொண்டாற்றுகின்றோமோ<br />அந்தச் சமுதாயம் சுத்தக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகும்.<br />அதற்கிடையே சமுதாயச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்களைக்<br />கூறும்போது அவர்கள் எதிர்க்கின்றனர்.<br />மதத்தின் பெயரால் பார்ப்பான்<br />மாட்டுச்சாணியும் - மூத்திரத்தையும்<br />கரைத்துக் குடிடா என்றால்...<br />குடிக்கக் கூடிய காட்டுமிராண்டிகளாகத் தான்<br />நம் மக்கள் இன்றைக்கும் இருக்கின்றனர்.<br /><br />(06-14-1969 அன்று மன்னார்குடியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவில் இருந்து.... விடுதலை 14-04-1969)தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-43016414317400811812008-07-06T07:55:00.002+01:002008-07-06T08:00:54.607+01:00எனக்கு பிடித்த புத்தர்!<a href="http://bp3.blogger.com/_kjL-MfmLvVw/SHBtfaJcr5I/AAAAAAAACAo/LuVtSgicGS4/s1600-h/bouda.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5219792354484727698" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_kjL-MfmLvVw/SHBtfaJcr5I/AAAAAAAACAo/LuVtSgicGS4/s400/bouda.jpg" border="0" /></a><br /><p></p><br /><p>நடுத்தர வயதில் சிந்திக்கத் தெரிந்த மனிதன் வாழ்வின் காரண காரியங்களையும், தனக்குள் தேடுதலையும் தீவிரமாக்கும் போது நமக்குள் வரும் முதல் கேள்வி நான் யார்? இந்த பிரபஞ்சம் என்பது என்ன? நமக்கும் இப்பிரஞ்சத்திற்கும் என்ன தொடர்பு எல்லாவற்றுக்கும் மூலகாரணம் என்ன? மரணம் என்பது என்ன? உயிர் என்பது என்ன? போன்ற கேள்விகளையும் நமக்குள் கட்டாயம் கேட்டிருப்போம். பலமுறை சிந்தித்து விடை தெரியாமல் தவித்திருப்போம். </p><p>நம்மைப் போன்றே சித்தர்களும், ஞானிகளும் இதே கேள்விகளை ஆய்வுக்குட்படுத்தி இருக்கின்றார்கள். இன்றைய மனிதனுக்கு ஆய்வுக் கூடங்கள் வைத்து ஆராய்ச்சி செய்தது போல் ஆதிமனிதனுக்கு சிந்தனையும், அறிவும், பிரபஞ்ச மாற்றங்களும் அவனுக்கு ஆய்வுக் கூடங்களாக இருந்தன. ரஸ்சாயனம், பௌதிகம், வானசாஸ்திரம் என்ற பிரிவுகள் இல்லாமல் எல்லாமே தத்துவஞானத்தின் கருத்துக்களில் இருந்தன. சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், அண்டங்கள், மழை, மின்னல், இருட்டு, ஒளி என அனைத்திலும் திட்டவட்டமாக எதுவும் முடிவுக்கு வரமுடியாத காலக்கட்டத்தில் தத்துவஞானம் மட்டும் கேள்விகளாக இருந்துக் கொண்டிருந்திருக்கின்றது. பிறகு ஆராய்ச்சி வசதிகளும், விஞ்ஞானம் பெருகிய கட்டத்தில் தத்துவஞானத்திலிருந்து வான சாஸ்திரம், ரஸாயணம், பௌதிகம், சீதோஷண இயல் எனப் பலதுறைகள் பிரிந்தது. ஒன்றைப் பற்றித் துல்லியமாக அறிய இயலாத போது அது பற்றிய மனிதனின் கற்பனை தத்துவமாகின்றது. </p><p>படைப்புகளையும், புறத்ததே வியாபித்திருக்கும் கற்பனைக்கெட்டாத பிரபஞ்சத்தைப் பற்றி மனித அறிவால் எவ்வித முடிவுக்கும் வர இயலாத நிலையில், அதுபற்றிச் சிந்தனையாளர்கள் செய்த சிந்தனைகள் தான் தத்துவங்களாக ஆகிறது. தத்துவஞானம் என்பது கடவுளைப் பற்றியது என்னும் ஒரு தவறான கருத்து உருவானதற்குக் காரணம் பிற்காலத்தில் வந்த தத்துவ ஞானிகள் தத்துவத்தின் மற்ற பாதைகளில் இருந்து ஆன்மீகவாதம் என்னும் திசையை நோக்கி சென்றதால் தான். வேதங்களை எதிர்த்த பௌத்த தத்துவம் கூடப் பிற்காலத்தில் ஆன்மிகவாதமாக மாறியது நல்ல உதாரணமாகும். </p><p>கடவுளையும், ஆன்மாவையும் மறுத்து மனிதனின் துன்பத்துக்கு மார்க்கத்தைக் கூறிய எளிமையான பௌத்த மதத்தில் தெய்வ வழிபாடும், ஆலயங்களும், சடங்குகளும், ஆதாரங்களும், புராணங்களும் புகுந்து பௌத்த தத்துவத்தின் தனித்தன்மையை அழித்தது. இந்திய மண்ணில் மட்டும் தோன்றிய தத்துவங்கள் உபநிஷதம், லோகாயதம், சமணம், பௌத்தம், சாக்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பிரபாகர மீமாம்சம், பட்ட மீமாம்சம், அத்வைதம், விசிஷ்டாத் வைதம், துவைதம், சைவ சித்தாந்தம் ஆகும். இதில் கௌதம புத்தரின் நியாய சூத்திரத்திற்கு வாத்ஸ்யாயனர் என்பவர் விளக்கம் எழுதியிருக்கிறார். இந்த வாத்ஸ்யாயனர் தாம் காம சூத்திரம் என்னும் ஆண் - பெண் காம உறவு பற்றிய நூலையும் எழுதியவர் என்று நம்பப்படுகின்றது. கௌதம புத்தரின் நியாய சூத்திரத்தில் அறிவைப் பற்றி அழகாக விளக்குகிறார் : </p><p>"ஒன்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது தான் அறிவு. நாம் பெற்ற அறிவு உண்மையானது தானா என்பது அந்த அறிவை எவ்வழியில் பெற்றோம் என்பதைப் பொறுத்தது. அறிவைப் பெற்ற வழி சரியில்லையென்றால், பெற்ற அறிவும் சரியாக இருக்காது. எனவே அறிவை விட அறிவைப் பெறும் வழிதான் மிக முக்கியம்!" அந்த வழியை தர்க்கரீதியாக ஆராய்வது தான் நியாய தத்துவம். கௌதம புத்தரின் நியாயத் தத்துவத்தில் "உலக உற்பத்திக்கு மூலகாரணம் அணு" என்கிறார். பொருள்கள் எல்லாம் பிரியக்கூடியவை. பகுதி பகுதியாகப் பிரிபடக்கூடியவை அனைத்தும் அழியக் கூடியவை என்றார். ஒரு பொருளை பிரித்துக் கொண்டே போனால் இனி பிரிக்க முடியாது என்னும் ஒரு நிலையை பொருள் அடைந்தே தீரும். அவ்விதம் பிரிபடாத கடைசி நிலைதான் அணு. அதுதான் உலக உற்பத்திக்கு மூலம். அது அழியாதது என்கிறார் கௌதம புத்தர். உயிர் பற்றிய தத்துவத்தில் கௌதம புத்தர் சொல்கிறார் : </p><p>"உயிர் அறிவே சொருபமானது. அறிவு தான் உயிர், உயிர் தான் அறிவு என்று நம்பினால் அந்த அறிவை மறைக்கும் ஜடசம்பந்தத்திலிருந்து உயிர் விடுபட்டுத் தன் பூரண அறிவு நிலையை எய்வது தான் முக்தி". ஆனால் ஆன்மா அறிவே மயமானதல்ல. அறியப்படுத்தினால் அறிந்து கொள்ளக் கூடிய ஒன்று எதைச் சார்கிறதோ அதன் மயமாக மாறக்கூடியது என்று நம்பினால் அப்படி உயிருக்கு அறிவிக்க கூடிய முற்றறிவுள்ளது எதுவோ அதனைச் சேர்ந்து முற்றறிவு மயமாகி விடுவது தான் முக்தி என்கிறார். நியாய தத்துவபடி உடலோடும் மனதோடும் சம்பந்தப் பட்டால் தான் உயிர் உணர்வையும் அறிவையும் அடைகிறது. உயிரும் அறிவும் தனிதனிப் பொருள்கள் ஜட சம்பந்தப்பட்டு உணர்வு பெற்ற உயிர் அச்சம்பந்தத்தை உதறி விட்டு உணர்வு கெட்டு தனிப்பட்டு நிற்கும் நிலை தான் முக்தி என்கிறார். </p><p>படித்த நூல்கள் : </p><p>1. The yaya sutras of Gorama - S.C.Vidhyabushan.<br />2. History of Indian Logic - S.C. Vidhyabushan.<br />3. Indian Logle and Atomism - A.B. Keith.<br />4. Nyaya - Kusumanjali of Udayanacharya - Swami Ravi Tirtha. </p><br /><p></p>தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-33864764365390138492008-07-05T07:40:00.002+01:002008-07-05T07:49:01.875+01:00ஜேம்ஸ் ஆலன்!<a name="9169016512868080104"></a><br /><br />இங்கிலாந்து நாட்டிலுள்ள லீசெஸ்டர் (Leicester ) என்றஊரில் 1864 -இல் நவம்பர் 28 - ஆம் தேதி பிறந்த ஜேம்ஸ் ஆலன் 48- வயது வரை மட்டுமே வாழ்ந்தவர். பல்களைக்கழகங்களில் இவரின் படைப்புகள் ஆய்வுகளாக எடுத்துக் கொள்ளப்பட்டவைகளாகும். வாழ்க்கைத் தத்துவம் பற்றிய ஜேம்ஸ் ஆலனின் தேடுதல்கள் அதற்கான கேள்விகளை தாமே கேட்டு விடைக்கான முற்படும் போக்கு பெற்றோரையும் நண்பர் வட்டத்திலும் வியப்புடன் நோக்க வைக்கும். இளைஞரான ஜேம்ஸ் ஆலனுக்கு பலகீனமான உடல்வாக இருந்தது. இருந்தும் வாழ்வின் பிரச்சனைகளையும், ஆத்மாவைப்பற்றியும் யோசித்தார். பல உயர் நிலைகளை அவர் அடைந்ததற்கு காரணம் மனத்தை ஒருமுகப்படுத்தும் திறனும், அதை நடைமுறைக்கு செயல்படுத்தி பலன் காணும் பக்குவமும், அவர் பெற்றிருந்தது தான்.<br /><br />ஜேம்ஸ் ஆலனுக்கு 15 -வயது நடக்கும் போது அவரின் தந்தை வேலை தேடி அமெரிக்காவுக்கு சென்ற இரண்டாம் நாளிலேயே கொலை செய்யப்பட்டார். கடுமையான வறுமையும், தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டது. விதவையான தாயும் 2 - இளைய சகோதர்களையும் காக்க ஒரு நாளைக்கு 15- மணிநேரம் கடுமையாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றினார். அந்த நேரத்திலும் 4 - மணிநேரம் படிப்பிற்காகச் செலவிடுவார். 17 - ஆவது வயது நடக்கும் போது அவரது சிந்தனை ஆத்ம ஞானத்தை நோக்கிய தேடுதலாகவே இருந்தது. உயிர் என்றால் என்ன? ஆத்மா என்றால் என்ன என்பதாகவே இருந்தது. அதற்கு காரணம் தான் மிகவும் நேசித்த தன் அப்பாவின் கொடுமையான மரணமும் ஒரு காரணமாக இருந்தது.<br /><br />இவ்வுலகில் அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் துன்பங்களும், சங்கடங்களும் தான் நரகம் என்பதும், இவ்வூலகில் அனுபவிக்கும் இன்பங்கள் தான் சொர்க்கம் என்பதும், இதற்கு மேல் சொர்க்கம் நரகம் என்று எதுவுமில்லை என்பார். நல்லொழுக்கம் மிக இன்றியமையாதது என்ற எண்ணம் அவருக்கு ஆழ்மனத்தில் பதிந்து போய் இருந்தது.<br /><br />ஐரோப்பாவில் பிறந்திருந்த இளைஞனாக இருந்த போதும் ஜேம்ஸ் ஆலன் புலால் உண்பது, மது அருந்துவது, பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்த்தார்.24 -ஆவது வயதில் "எட்வின் ஆர்னால்டு" எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாற்று நூலை ஜேம்ஸ் ஆலன் படித்த படித்தில் இருந்து கிழக்கத்திய இலக்கியங்களில் படிப்பதில் தனி ஆர்வம் ஏற்பட்டது."ஆத்ம ஞானத்திற்கு வாழ்வின் உயர் நிலைகளுக்கும் திறந்த மனமும், தவறைத் திருத்திக் கொள்ளும் மனோபாவமும் மிக முக்கியம்" என்பது அவரது கொள்கையாகவே இருந்ததால் வாழ்வில் நல்லொழுக்கம் தான் மிக முக்கியமானது என்பார். 30 -வது வயதில் லில்லி என்பவரைத் திருமணம் செய்தார். 32 - வது வயதில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு நோரா என்று பெயரிட்டார். அதற்கு பிறகு ஜேம்ஸ் ஆலன் எல்லா உடலுறவு இன்பங்களையும் கைவிட்டார். அதிகாலையில் எழுந்து தியானம் செய்வது, தனியாக இயற்கை காட்சிகளை பார்த்துக் கொண்டு இருப்பது, தனிமையில் இருந்து கொண்டு சிந்திப்பது என் இருக்க ஆரம்பித்தார்.<br /><br />ஜேம்ஸ் ஆலன் தம் வாழ்க்கையில் இறப்பதற்கு 9 -வருடங்களுக்கு முன்பு தான் நூல்கள் எழுத ஆரம்பித்தார். அவர் மொத்தம் 19 - நூல்கள் எழுதியிருக்கிறார். அவரின் போதனைகளில் மிக முக்கியமாக அவர் வலியுறுத்துவது" உள் மனத்தில் எழும் எண்ணங்கள் தான் வெளி உலகின் சூழ்நிலைகளாக அமைகின்றன. புற வாழ்வில் தனக்கு நேரும் கெட்ட சம்பவங்களைத் தவிர்க்க வேண்டுமானால் தனது உள்மன சிந்தனைகளைச் சீர் செய்ய வேண்டும்" என்பார். "பகுத்தறிவின் ஒளி" என்ற பெயரில் ஜேம்ஸ் ஆலன் மாதப் பத்திரிக்கையும் நடத்தி வந்தார். அதில் அவரின் கருத்துக்களைக் கண்ட வாசகர்கள் அவரின் அறிவின் ஆழத்தைக் கண்டு வியக்கின்றனர்.<br /><br />1912 -ஜனவரியி 24 -அன்று அவருடைய உயிர் பிரிந்த போது அவரது உடலை அவரது விருப்பப்படி இந்து மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.அவரின் தத்துவகளில் சில :<br /><br />* மனிதன் தான் அவனது எண்ணங்களின் தலைவன்.<br />அவனது குணங்களளை அமைக்கும் சிற்பி.<br />அவனது சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்.<br />அவனது விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி கர்த்தா.<br /><br />* தனது நிலையைப்பற்றித் திரும்பத் திரும்ப சிந்திக்கத் துவங்கும் போது தனது வாழ்வு எந்தவித சட்ட வரைமுறைகளினால் இயங்குகிறது என்கிற சூட்சமத்தைப் புரிந்து கொள்ளும் போது - அவன் புத்திசாலியான தலைவனாய் மாறுகிறான்.<br /><br />* எண்ணங்கள் எப்படி இயங்குகின்றன என்கிற வரைமுறைகளைத் தனக்குள்ளேயே கண்டு பிடித்து தெரிந்து கொள்வதன் மூலம்தான் அவன் சூழ்நிலையின் தலைவனாகிறான்.<br /><br />* சூழ்நிலை மனிதனை உருவாக்குவதில்லை.<br />அடிப்படையில் இன்ன மனிதன் தான் உள்ளே இருக்கிறான்<br />என்பதை அவனுக்குக் காட்டிக் கொடுக்கிறது.<br /><br />* பிச்சைக்கார விடுதிக்கோ அல்லது சிறைக்கோ<br />ஒரு மனிதன் விதியின் கொடுமைகளினால் வந்து சேர்வதில்லை.<br />அவனது கீழ்த்தரமான ஆசைகளாலும் எண்ணங்களாலுமே வந்து சேருகிறான்.<br /><br />* தங்கள் சூழ்நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்<br />என்று மனிதர்கள் பதட்டப்படுகிறார்கள். ஆனால் தங்களை மேம்படுத்திக் கொள்ள முனைவதில்லை. எனவே சூழ்நிலையின் கைதிகளாக அவர்கள் வாழ்கின்றனர்.<br /><br />* ஒவ்வொரு மனிதனும் ஒரு நல்ல விளைவை நோக்கித்தான் பாடுபடுகின்றான். ஆனால் அந்த விளைவுகளை எல்லாம் சின்னாபின்னமாக்கும் சிந்தனைகளையும், செயல்களையும் அவனே ஊக்குவிக்கிறான். இதனால் தான் விரும்பும் முடிவுகளை அவனால்<br />அடைய முடிவதில்லை. ஒரு சரியானன பாதையில் அவனால் செல்ல முடிவதில்லை.<br /><br />* வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களின் அநுபவங்களின் காரண காரியத் தொடர்பை ஆராய வேண்டும். தனது வாழ்வு எவ்வித சட்ட வரை முறைகளினால் இயங்குகிறது என்கிற சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளும் போது மனிதன் புத்திசாலியான தலைவனாய் மாறுகிறான்.தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-81919281003398933282008-07-04T07:21:00.005+01:002008-07-04T07:49:21.747+01:00எண்ணங்களின் வலிமை!<a href="http://bp0.blogger.com/_kjL-MfmLvVw/SG3E0zg6z8I/AAAAAAAACAg/iuNU2OQzO4c/s1600-h/kjhnb.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5219043954652794818" style="CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_kjL-MfmLvVw/SG3E0zg6z8I/AAAAAAAACAg/iuNU2OQzO4c/s320/kjhnb.jpg" border="0" /></a><br /><div><a href="http://bp0.blogger.com/_kjL-MfmLvVw/SG3EnkJrNzI/AAAAAAAACAY/alrvmC_zp3k/s1600-h/1676509585_ae4e882fc0.jpg"></a><br /><br /><div><span style="color:#ffffff;">"சூழ்நிலை -</span></div><div><span style="color:#ffffff;">மனிதனை உருவாக்குவதில்லை. </span></div><div><span style="color:#ffffff;">அடிப்படையில் இன்ன மனிதன் </span></div><div><span style="color:#ffffff;">தான் உள்ளே இருக்கிறான் </span></div><div><span style="color:#ffffff;">என்பதை அவனுக்குக் காட்டிக் கொடுக்கிறது."</span></div><br /><div>இங்கிலாந்தைச் சேர்ந்த தத்துவஞானி ஜேம்ஸ் ஆலன் மனிதனின் எண்ணங்களைக் குறித்தும், வாழ்வியல் சிந்தனைகளைக் குறித்தும் அதிகம் சிந்தித்தவர். அவரின் தத்துவங்கள் மிக எளிமையான உண்மையனவாக காணப்படுகின்றன. மனிதனின் மனம் குறித்தும், </div><div>சிந்தனைகள் குறித்தும் அவரிடம் கேள்வி எழுந்த போது சொல்கிறார்:</div><br /><div>மனித மனம் ஒரு தோட்டம் போன்றது. தோட்டம் போல அதைக்கருத்துடன் பண்படுத்தி பயிரிடலாம் அல்லது கண்டது விளையட்டும் என்றெண்ணி அதன் போக்கில் விட்டு விடலாம். திட்டமிட்டு வளர்த்தாலும் சரி அல்லது காட்டுப் போக்கில் விட்டாலும் சரி, என்ன விதை அங்கே விழுந்ததோ அதற்கேற்ற பயிர்களை அது உண்டுபண்ணுகிறது. நல்ல பலன்தரும் விதைகளை விதைக்காத போது உபயோகமற்ற புல்லும், புதரும் தான் அங்கே முளைக்கும், பரவும். எப்படி புல்லும், புதரும் முளைக்காமல் - பரவாமல் ஒரு தோட்டக்காரன் தன் தோட்டத்தைக் கவனிக்கிறானோ எப்படி நல்ல காய் கனிகளையும், பூக்களையும் பயிரிட்டு வளர்த்து பயன் பெறுகிறானோ அதே போல் ஒரு மனிதன் தன் மனம் என்ற தோட்டத்தில் கறம்பும், காளானும் வளராவண்ணம் கண்ணும் கருத்துமாக காக்க வேண்டும். நியாமில்லாத சிந்தனைகள், பயனற்ற எண்ணங்களையெல்லாம் களை எடுத்து எறிய வேண்டும். தோட்டத்தில் பயிரிட்டு வளர்ப்பது போல மனத்தில் சரியான எண்ணங்களைப் பயிரிட்டு கண்காணத்து வரவேண்டும். அப்படிப்பட்ட மனிதன் ஆத்மாவின் தலைவனாக தன்னை உணர்கிறான். தன் வாழ்வுத் தோட்டத்தின் நிர்வாகி என்பதை உயர்கிறான். எந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எண்ணங்கள் இயங்குகின்றன என்பதைப் பற்றிய தெளிவு அவனுக்கு ஏற்படுகிறது. எண்ணங்களின் சக்தியும், மனஇயல்புகளும் எப்படி அவனது குணங்களை உருவாக்குகிறது, அவனது சூழ்நிலையை நிர்ணயிக்கிறது அவனது விதியைத் தீர்மானிக்கிறது என்கிற வரைமுறைகளையும், நுட்பங்களையும் புரிந்து கொள்கிறான். எண்ணமும், குணங்களும் ஒன்றே தான். ஒன்றிலிருந்து தான் மற்றது வருகிறது. எண்ணங்கள் தான் குணங்களாக நாளடைவில் மாற்றம் பெறுகின்றன. ஒரு மனிதனது குணங்கள் அவனது சூழ்நிலை மூலமும் அவனுக்கேற்படும் வாய்ப்புகள் மூலமும் தங்களைக் காட்டிக் கொள்கின்றன. அதே போல அவனுக்கு வெளி உலகில் நேரும் வாழ்க்கைச் சம்பவங்களும், அவனது உள் மனநிலையும் ஒரு நேரடித் தொடர்பில் - ஒரு லயம் நிறைந்த உறவில் - இயங்குகின்றன.ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு மனிதனுக்கேற்படும் சம்பவங்களை வைத்து அவனது கஷ்டங்களைக் கண்டு அது அவனது மொத்த குணங்களின் விளைவாக ஏற்பட்டது என்று நாம் கூற முடியாது. இருந்தாலும் அவனது எண்ணங்களுக்கும் அவனது சூழ்நிலைலக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது அந்த வாழ்க்கைச் சம்பவங்கள் அவனது வளர்ச்சிகளுக்கு தற்காலிகமாகத் தேவைப்படுகின்றன.ஒரு இடத்தில் ஒரு மனிதன் ஒரு காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கின்றான். அதில் ஒரு சட்டம் நியாயம் இயங்குகிறது. அவனது குணங்களை உருவாக்கிய எண்ணங்கள் அவனை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கின. வாழ்வு என்பது ஒரு திட்டவட்டமான அமைப்பு. அதில் எதுவும் எதிர்பாராது காரணமில்லாது நிகழ்ந்து விடுவதில்லை. எல்லாம் ஒரு </div><div>சட்டத்திற்குட்பட்டு இயங்குகிறது. ஒரு நாளும் இந்த நியதி மாறுவதில்லை."</div><br /><div>அருமையான தத்துவங்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வார்த்தைகளில் மனம் லயித்து செல்கிறது. முடிந்தால் நீங்களும் ஜேம்ஸ் ஆலனை வாசித்துப் பாருங்கள். </div></div>தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-33286547452328611322008-07-03T07:21:00.003+01:002008-07-03T07:34:12.296+01:00காமம்! பேரின்பத்தின் ஆரம்ப அனுபவம்!!!<a href="http://bp0.blogger.com/_kjL-MfmLvVw/SGxyUy-TnOI/AAAAAAAAB-0/fdtmNIy2me8/s1600-h/dhq.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5218671769821617378" style="CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_kjL-MfmLvVw/SGxyUy-TnOI/AAAAAAAAB-0/fdtmNIy2me8/s400/dhq.jpg" border="0" /></a><br /><p>காமம்!<br />இது ஒரு சக்தி. வாழ்க்கைச் சக்தி. இயற்கையானது.<br />ஆனந்தமானது அனுபவிக்க. ஒரு பாவமும் அறியாதது.<br />ஒரு தவறும் இதில் இல்லை. வாழ்க்கை இருப்பதும்,<br />வளர்வதும் காமம் என்ற அடிப்படைச் சக்தியினால்.<br />நாம் காமத்தால் பிறந்தவர்கள். நம் ஒவ்வொரு<br />அணுக்களிலும் காமம் சக்தியாக உள்ளது.<br /><br />இதை அறிந்தே ஓவ்வொரு சமூகமும், சமயமும்<br />இதைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளன.<br />தமது பிழைப்புக்காக. இதற்கு எதிரான கருத்துக்களை<br />நமக்குள் விதைத்து, அடக்கப்பண்ணி குற்ற உணர்வை வளர்த்து<br />நம்மை நோயாளியாக்கி பின் நோய்க்குச் சேவை என்ற பெயரில்<br />பரிகாரமும் செய்கின்றன.<br /><br />காமம்!<br />நமக்குள் இயங்கும் இயற்கையின் மிகப் பெரிய சக்தி.<br />நம்மால் கட்டுப்படுத்த முடியாதது.<br />நம் கட்டுப்பாடுகளையும் மீறி வெளிவருகின்றது,<br />அடிபணிகின்றோம். அடுத்த கணம் .....<br />குற்ற உணர்வால் வருந்துகின்றோம் ஏன்?<br />காம சக்தியின் ஆற்றலை புரிந்து கொள்ளத் தவறியதால்<br />அச்சக்தியின் பலம் கண்டு பயந்து<br />இதை வழிநடாத்த முடியாமல், இதற்கு எதிரான<br />கருத்துக்களையும்,அடக்குவதற்கான வழிகளையும்,<br />சமூகத்தில் ஆதிக்கம்செலுத்தியவர்கள் நம்முள் விதைத்துள்ளனர்.<br />இது எப்பொழுதும் காம சக்திக்கு எதிராக நம்மை சிந்திக்க,<br />செயற்பட வைக்கின்றது. காரணம் ...<br />நம் உள்மனதில் (subconsciousness)<br />இவை ஆழமாக வேருண்டியுள்ளன.<br />காமத்தைக் கண்டிப்பது<br />தன்னைக் கண்டிப்பதற்கு சமம் என்கிறார் ஓசோ.<br />காம சக்தியை ஒழுங்கு முறையில் வழிநடத்தினால்<br />சிறந்த பலன்களையும், புதிய ஆற்றல்களையும்<br />நமக்குள் வளர்த்திருக்கலாம். </p><p>இதற்கான வழிகளை முன்னோர்கள்<br />பலர் கண்டுபிடித்துள்ளனர்.</p><p>"ஓசோ! இந்த வழிகளையும் வழிகளை கண்டுபிடித்த வழிகாட்டிகளையும் புதை குழிகளிலிருந்து மீட்டெடுத்து உயிர்ப்பித்து தூசிதட்டி மீண்டும் நமக்கு வழங்கியுள்ளார், வழிகாட்டியுள்ளார், காமமின்றி நாமில்லை. ஆனால் ஒரு உயிரை உருவாக்க மட்டுமே நாம் பயன்படுத்துகின்றோம். இது மட்டப்படுத்தப்பட்ட பயன்பாடு மட்டுமே.காம சக்திக்கு எதிரான ஆதிக்கம் இருந்த காலங்களில்தம் சந்ததிகளை உருவாக்க மட்டுமே காமத்தைப் பயன்படுத்தினர். இதுவே மனிதருக்குபழக்கமான வழக்கமான பணியாகிவிட்டது. புதிய உயிர் உருவாவது காம சக்தியின் ஒரு பயன்பாடுமட்டுமே. இதைவிட மனிதரின் அடுத்த கட்ட பரிணாமவளர்ச்சிக்கே பயன்படக்கூடியது இக்காம சக்தி. இதைப்பற்றி சிந்திக்க நேரம் ஏது? </p><p>காம கலவையை நம்சக்தியை இழப்பதற்கும், ஆறுதல் அடைவதற்கும் உச்சஇன்பம் என்ன என்பதை அறியாமல் இயந்திரதனமாகப் பயன்படுத்துகின்றோம். உச்ச இன்பம் என்பது நாம் சக்தி மயமாக மாறுவது.நமது தலையிலிருந்து கால் விரல் வரை அனைத்துஇயங்கும் சக்தி நிலை. சக்தி அலை வடிவங்களாக…உடலை உணராநிலை. ஏன் நம்மால் உணரமுடியவில்லை. பிரக்ஞையற்றநிலை. அவசரம்.குற்ற உணர்வு. எவ்வளவு விரைவாக முடிக்கலாமோ அவ்வளவு விரைவாக முடிக்கநினைப்பது. முடிந்தவுடன் விடுதலை பெற்ற உணர்வு. ஆனால் இது தற்காலிக விடுதலை என்பதை மறந்துவிடுவது. </p><p>ஏனெனில் மீண்டும் காமம் நம்மை இழுக்கும். பழையபடி…இவ்வாறு ஒரு வட்டத்தில் இயங்குவதே நம் வாழ்வு. காம செயற்பாட்டில் உடனடியாக ஆனால் பங்குபற்ற முடியும் என்பதால் ஆணுக்கு அவசரம். பெண்ணுக்குநீண்ட நேரம் தேவை. இதனால் நீண்ட காலமாகபெண்கள் காமத்தின் இன்பத்தை அனுபவித்ததில்லை.உச்ச இன்பம் (orgasm) ஆண்களுக்கு மட்டுமல்ல! பெண்களுக்கும் வரும் என்பது இயற்கைக்குப் பழசு.மனித மன உலகுக்குப் புதுசு.ஆணின் காம அலைவடிவம் செங்குத்தானது. உடன் எழுந்து உடன் இறங்கும். மீண்டும் உடன் எழாது. பெண்ணினது செங்குத்தானதல்ல. நீண்டதும்,படிப்படியாக உயர்ந்தும் செல்லும் அலை வடிவம்கொண்டது மட்டுமல்ல! குறைந்தது ஒரே நேரத்தில்மூன்று தரத்திற்கு மேல் உயரக்கூடியது. ஆகவே ஆல் திருப்பதி செய்ய முடியாது. </p><p>காமத்தில் நாம் இன்பம் அனுபவிக்கும் கணம் மூன்றுமுக்கிய விடயங்கள் நடைபெறுகின்றன. நேரம், தன்முனைப்பு, இயற்கையாக இருப்பது. நேரம் தெரியாது, மறந்து விடுவோம். தன்முனைப்பு இல்லாது இருக்கும்.நான் என்பது இல்லா நிலை. இயற்கையாக இருப்போம். இயற்கையுடன் கலந்து பிரபஞ்சமாகவே மாறியிருப்போம். இந்த நிலையே தன்மையே உச்சஇன்பத்தை தருகின்றது. இதைக் காம கலவையில் சிறிதுநேரம் மட்டும் பெறுவதால் நாம் சிற்றின்பம் எனக்கூறி குறைந்த மதிப்பை வழங்கிவிட்டோம். இந்த உச்ச இன்பத்தை ஒவ்வொரு கணமும் அனுபவிப்போரே பேரின்பம் பெற்ற ஞானிகள் என ஆன்மீகத்தில் கூறுகின்றோம்.</p><p>இதை அறிந்து கொள்வதற்கு தடையாக இருப்பது நமது பிரங்க்ஞையற்ற தன்மை. அவசரமின்றி, ஆறுதலாகவும்குற்றவுணர்வின்றி, ஆனந்தமாகவும் ஓவ்வொரு கணத்தை முழுமையாகவும் பிரங்க்ஞையுடனும் காம கலவையில்; பங்குபற்றும் பொழுது உச்ச இன்பம் என்ன என்பதை அறியலாம்.சக்தி வெளியேற்றம் இல்லாது தொடர்ந்தும் அனுபவிக்கலாம். இது இன்பம் அனுபவிக்கமட்டுமல்ல ஆனந்தமான வாழ்வுக்கு மட்டுமல்ல..... மானுட விடுதலைக்கும் வழி காட்டும். இதுவே ஓசோ நமக்கு கற்பிக்கும் பாடம்.இது உண்மையா இல்லையா என்று எவ்வாறுஅறிவது. ஓரே ஒரு வழி தான் உண்டு. </p><p>காமகலவையில் ஈடுபடும் பொழுது பிரங்க்ஞையுடனும்,முழுமையாகவும் செயற்படுவது மட்டுமே இதற்கு விடைதரும். ஏனெனில் உண்மையான அறிவுநமது அனுபவத்திலையே கிடைக்கின்றது. காம கலவையில் உருவாகும் சிறிது நேர பேரின்பத்திலிருந்தே தியானம் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் ஒசோ. காம சக்தி இருபத்தியொரு வயது வரை அதன் உச்ச நிலைக்கு இயற்கையாக உயர்ந்து சென்று பின் கீழ் இறங்கி நாற்பத்தியிரண்டு வயதில் இயற்கையாக காமம்; நம்மைவிட்டு அகன்றுவிட வேண்டும். இது ஓவ்வொருவயதுக் காலகட்டத்தையும் முழுமையாக அனுபவித்திருந்தால் இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. ஆனால் என்ன நடைபெறுகின்றது? </p><p>நாற்பது வயதில் நம்மை விட்டுச் செல்ல வேண்டிய காமம் இறக்கப்போகும் என்பது வயதிலும் நம் மனதைவிட்டுச் செல்வதில்லை ஏன்? அந்தந்த காலகட்டங்களில்அவற்றை அனுபவிக்காமல் அச்சக்திகளை அடக்கி பிறவிடயங்களுக்கு கவனம் திசை திருப்பப்டுகின்றது. இதற்கு தமது காம சக்தியை வெளிக் காட்டுவதில் இருக்கும் பயமே காரணம். பொதுவாக ஆண்கள் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை காமத்தை பற்றி சிந்திக்கின்றனர். பெண்கள் ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கு ஒரு முறைகாமத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர். ஆகவே காமத்தை சரியான பாதையில் வழிநடத்துவதே மனிதர்கள் மனச் சோர்வின்றி, மன அழுத்தமின்றி ஆனந்தமாக வாழ்வதற்கு சிறந்த வழி. </p><p>பிரம்மச்சாரியம் என்பது காம சக்தியை அடக்குவதல்ல.இதை அடக்குவதால் மேலும் காமம் அதிகரித்து காமுகர்களாக உருவாகவே முடியும். இக் காம சக்தி மாற்றப்படக் கூடியது. இவ்வாறு மாற்றுவதன் மூலம் காமம் நம்மிலிருந்து மரங்களிலிருந்து பழுத்த பழங்கள் விழுவது போல் காய்ந்த இலைகள் தானாக விழுவது போல் அகன்றுவிடும். இதன் போது காம சக்தி காதலாக பரிணாமமடைகின்றது. சிற்றின்பம் என்ற காமத்திலிருந்து (sex) காதல் (love)என்ற படிகளில் ஏறி பேரின்பம் என்ற அன்புத்தன்மையை (compassion) அடையலாம்.</p><br /><p></p><br /><p></p>தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-21476306342207961802008-07-02T09:38:00.003+01:002008-07-02T09:43:45.569+01:00ஆத்மா என்பது என்ன? - சாக்ரடீஸ் கருத்து!<a href="http://bp0.blogger.com/_kjL-MfmLvVw/SGs_YUkeATI/AAAAAAAAB-s/9jtqPJRIZ6U/s1600-h/2730523145.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5218334280309932338" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_kjL-MfmLvVw/SGs_YUkeATI/AAAAAAAAB-s/9jtqPJRIZ6U/s400/2730523145.jpg" border="0" /></a><br /><div></div><p>மனிதனுக்கு ஆத்மா என்று ஒரு பொருள் உண்டு என்ற கருத்தை முதன் முதலில் சொல்லியவர் சாக்ரடீஸ். ஒவ்வொரு மனிதப்பிறவியின் உயிரிலும் இந்த ஆத்மா குடி கொண்டிருக்கின்றது. விழித்திருக்கும் வேளையில் அவனுடைய அறிவும், நன்னெறி என்னும் ஒழுக்க உணர்வும் ஆன்மாவில் இருந்தே செயல்படுகின்றது. எனவே ஆன்மா தான் மனிதன் வாழ்வின் முக்கிய அலுவல், அந்த ஆன்மாவைப் போற்றிக்காப்பது தான். இதுவே சாக்ரடீசின் கோட்பாடு. பின்னாலில் கிறிஸ்துவசமயம் மனிதனுள் இருக்கும் ஆன்மாவை ஒப்புக் கொண்டு சமயத்தத்துவங்கள் எல்லாவற்றையும் ஆத்மா அடிப்படை மீது அமைத்தது. </p><p>மனிதன் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவனுக்கு ஏற்படுகிற கனவு "மருள்" உருவெளித்தோற்றம், "சமாதி" அனுபவம் முதலானவற்றுக்குக் காரணம் ஸை(க்)கி (Psyche) என்று சாக்ரடீஸ் காலத்தில் ஒரு கருத்து நிலவி வந்தது. அந்த ஸை(க்) கியின் தூண்டுதல் காரணமாக மனிதன் பல சமயங்களில் பிடித்தமில்லாத செயல்களில் இறங்கி விடுவதுண்டு. மனிதனின் கடமைப்பற்றி அந்தக்காலத்தில் என்ன கருத்து நிலவியது என்றால் கடவுள்களுக்கு தவறாமல் பூஜைகள் செய்வதும், வாழ்க்கையில் சத்தியத்தை கடைப்பிடித்த ஸை(க்)கியானது தனது பழைய அமர நிலை அடைய அனைத்து முயற்சிகளையும் அக்கறையோடு செய்வதே மாந்தர் கடமை என்று சொல்லி வந்தார்கள். </p><p>மனிதன் நல்லவனா? தீயவனா? அறிவாளியா? ஞானமற்றவனா? என்று தீர்மானிப்பதில் ஸை(க்)கி எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. ஆனால் சாக்ரடீஸ் ஞானத்திற்கும், நல்லொழுக்கத்திற்கும் ஊற்றுக்கண் என்று சொல்லி சாக்ரடீஸ் கொள்கை, கோட்பாடு ஒருமகத்தான புரட்சியை உருவாக்கிவிட்டது. </p><p>தனிமனித ஒழுக்கத்திற்கும், அறிவுக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கைத் திட்டத்தில் அதிமுக்கியத்துவத்தை அமைத்துக் கொடுத்தார் சாக்ரடீஸ். ஸை(க்)கியின் அமர தெய்வீகத்தன்மையும், மனிதன் சுயசிந்தனை மூலம் வளர்த்துக் கொள்ளும் ஞானமும், நல்லற ஒழுக்க உணர்வும் ஒன்று கலந்து ஆன்மா என்ற புதிய கருத்து உருவாகியது. சாவினால் ஏற்படும் உடல் அழிவைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆன்மாவுக்கு எவ்வித கேடும் நேராமல் தற்காத்துக் கொள்வதே சிறந்த வாழ்க்கை முறை என்றார் சாக்ரடீஸ். </p><p>அறிவு பூர்வமான (காரணகாரிய ரீதியிலான) சிந்தனையும், அறிவுக்கு ஒத்துவருகிற நன்னடத்தையும் ஆன்மாவைப் பாதுகாக்கின்றன. மனிதனின் உள்ளத்தில் உறைகின்ற ஆன்மாவின் குரலுக்குச் செவிசாக்காமல் முறைக்கேடாக நடப்பதால் ஆன்ம நட்டம் ஏற்படுகின்றது. மனிதச் செயற்பாடுகளெல்லாம் நல்லறிவின் அடிப்படையில் நிகழவேண்டும். ( அவிச்சை, அவித்யா)அறியாமையின் அடிப்படையில் அமையக்கூடாது என்று முடிவு செய்தார் சாக்ரடீஸ். </p><p>சாதாரண மனிதர்களிடம் இருந்த அறியாமையை ஒழித்துக் கட்டுவதற்காக கேள்விக் கணைகளைத் தொடுத்து குறுக்கு விசாரணை செய்து முடிவில் உண்மையை திரட்டிக் காட்டினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் குறிக்கும் ஆன்மா என்ற (Soul) இன்று நாம் சொல்லும் மனத்தத்துவமல்ல, மனத்தத்துவஞ்சார்ந்த உடலுமல்ல. ஆன்மா என்பது இன்னது என்று சாக்ரடீஸ் விளக்கவில்லை. ஆன்மா மனிதனுள் இருக்கின்றது. கண், மூக்கு, செவி ஆகிய ஜம்புலன்களுக்கு எட்டாதது என்று மட்டுமே குறிப்பிடுகின்றார். </p><p>ஒருமுறை சாக்ரடீஸிடம் ஆன்மாவின் தொழில் என்ன என்று கேட்ட போது பகுத்துணருதலே ஆன்மாவின் தொழில் என்கிறார். பொருள்களின் தன்மையை உள்ளது உள்ளவாறே உணருதல். திது எது? நல்லது எது? என்று பகுத்துப்பார்த்தல். அவ்வாறு பகுத்துணர்ந்து மனிதனின் செயற்பாடுகளை நெறிப்படுத்தும் போது மனிதனின் வாழ்க்கையில் நன்மை வருகின்றது. தீமை ஒழிகின்றது அறியாமை அகல்கிறது என்றார். </p><p>மற்றொரு கேள்வி சாக்ரடிஸிடம் கேட்கப்பட்டது. ஆன்மாவைப் பரிசுத்தமாக்குவது என்றால் என்ன? உலக வாழ்வு பற்றி உண்மையறிவைப் பெறுதலும், அந்த அறிவின் அடிப்படையில் நல்லொழுக்க அறத்தைக் கடைப்பிடித்து வாழ்தலுமே ஆன்ம பரிசுத்தத்திற்குரிய சாதனங்கள். போலி ஞானமும், போலி ஞான அடிப்படையில் இயலும் போலி ஒழுக்கமும் ஆன்மாவைக் கெடுத்துவிடுகின்றன. அதனால் உலக வாழ்க்கையும் நிலைகுலைந்து போகின்றது என்றார். இதுவே சாக்ரடீசின் ஆத்மபோதனை. </p><br /><p>இந்தக் கோட்பாட்டில் அறிவியலும் (Science) அறஇயலும் (Ethics) இன்று செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது.<br /></p>தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-89321757870649841972008-07-01T07:13:00.004+01:002008-07-01T07:28:26.863+01:00அறிந்தவைகளுக்கு அப்பால்....<a href="http://bp3.blogger.com/_kjL-MfmLvVw/SGnM7nJi4JI/AAAAAAAAB-k/ATdB5HxshhM/s1600-h/ngh.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5217926967778795666" style="CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_kjL-MfmLvVw/SGnM7nJi4JI/AAAAAAAAB-k/ATdB5HxshhM/s400/ngh.jpg" border="0" /></a><br /><br /><span style="color:#333333;">***<br /></span>நம்மிடம் ஏகப்பட்ட<br />பாதைகள் இருக்கின்றன.<br />ஆனால் அவைகளில் நடந்து<br />செல்பவர்கள் தான் யாரும் இல்லை!<br />பாதைகள் அனேகம்.<br />பார்த்து நடப்பவர்கள் மிகக் குறைவு.<br />அந்தப் பாதைகள் பலவருடங்களாக<br />உபயோகமற்று இருக்கின்றன.<br />அதில் நடப்பவர்கள் யாரும் இல்லை.<br />ஏனெனில் அதில் நடந்து<br />அந்த மலை உச்சியை<br />அடைவது என்பது குறித்து<br />மக்கள் சந்தேகத்திலேயே இருக்கிறார்கள்.<br />அந்த மலையடிவாரத்தில்<br />ஏகப்பட்ட சந்தேகங்கள்<br />மாறுபட்ட வாக்குவாதங்கள்<br />நடந்து கொண்டே இருக்கின்றன.<br />இதன் முடிவு என்னவென்றால்<br />சோர்வும், பயமும்<br />தனிமனிதனை ஆக்கிரமித்து<br />அவனை அப்படியே நகராமல்<br />நிற்க வைத்துவிடுகிறது.<br />இந்தக் குழப்பத்தில் யாராலேயும்<br />மேற்கொண்டு நடக்க முடியாது.<br /><br />ஓஷோ<br /><br /><br /><br /><a name="8094050069576656820"></a>தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-25456377096464558632008-06-30T07:25:00.001+01:002008-06-30T07:27:35.599+01:00மனிதன் எப்படி உருவானான்?<p> </p><p>ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா என்று நாமெல்லாம் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து கூறப்பட்ட உண்மைகளை ஏற்பதா? இந்து மதத்தில் "ஐதரேய உபநிஷத்து" சொல்வதை ஏற்பதா என்று குழப்பிக் கொள்ளத் தேவையில்லை! கதையை கேட்டால் போய்யா! நீயும் உன் உடான்சும் என்பீர்கள்.... </p><p>ஆதியில் "ஆத்மா" என்பது ஒன்றாகவே இருந்தது. வேறு எதுவும் இல்லை. உலகங்களைச் சிருஷ்டிக்க அது விரும்பியது. அது இவ்வுலகங்களைச் சிருஷ்டித்தது. -1/1:1 </p><p>"அம்பல்", "மரீசி", "மரம்", "ஆப" - என்று குறிப்பிடப்படும் உலகங்களைச் சிருஷ்டித்தது. "அம்பல்" என்பது சொர்க்கலோகத்திற்கு மேலே உள்ளது. அதற்கு ஆதாரமாக சொர்க்கலோகம் அமைந்துள்ளது. "மரீசி" என்பது கிரணங்கள் நிறைந்த அந்தரீஷம். "மரம்" என்பது இறந்தவர்கள் வசிக்கும் உலகம். "ஆப" என்பது அதற்குக் கீழேயுள்ள நீர் சூழ்ந்த உலகம். -1/1:2 "ஆத்மா" நினைத்தது இவை உலகங்கள். இனி உலக மக்களை சிருஷ்டிப்பேன். நீரைப் பிரதானமாக வைத்து ஐம்பூதங்களிலிருந்து ஆதி புருஷனைத் திரட்டி எடுத்து உருவாக்கிற்று. -1/1:3 அந்த உருவத்தைப் பற்றி "ஆத்மா" சிந்தித்தது. அச்சிந்தனையால் முட்டை பிளப்பது போல் வாயின் துவாரம் உண்டாயிற்று. வாயிலிருந்து வாக்கு; வாக்கிலிருந்து அக்கினி. பின்பு நாசிகளின் துவாரங்கள் உண்டாயின. நாசிகளிலிருந்து பிராணன்; பிராணனிலிருந்து வாயு. கண்களின் துவாரங்கள் உண்டாயின. கண்களிலிருந்து பார்வை; பார்வையிலிருந்து சூரியன். காதுகளின் துவாரங்கள் உண்டாயின. காதுகளிலிருந்து கேள்வி, கேள்வியிலிருந்து திசைகள். தோலில் துவாரங்கள் உண்டாயின. தோலிலிருந்து உரோமங்கள்; உரோமங்களிலிருந்து செடி,கொடிகளும், மரங்களும் உண்டாயின. இருதயத்தின் துவாரம் உண்டாயிற்று. இருதயத்திலிருந்து மனது; மனதிலிருந்து சந்திரன். நாபித் துவாரம் உண்டாயிற்று. நாபியிலிருந்து அபானன்; அபானனிலிருந்து மரணம். ஆண்குறியின் துவாரம் உண்டாயிற்று. ஆண்குறியிலிருந்து இந்திரியம்; இந்திரியத்திலிருந்து நீர் உண்டாயிற்று. -1/1:4 இந்த ஆத்மாவே பிரம்மம். இந்திரன், பிரஜாபதி, தேவர்கள் எல்லாமும் இதுவே. மண், காற்று, ஆகாயம், நீர், நெருப்பு என்ற பஞ்ச பூதங்களானதுவும் இதுவே. அற்பமான பலவகை ஜந்துக்களும், பீஜங்களும், முட்டையில் பிறப்பவை, கருப்பையில் தோன்றுபவை. புழுக்கத்தில் தோன்றுபவை (ஈர், பேன் முதலியவை) வித்திலிருந்து முளைப்பவை. குதிரைகள், யானைகள், பசுக்கள், பறவைகள் மனிதர் இன்னும் என்னென்ன பிராணிகள் உண்டோ அவையும், அசையும் பொருட்களும், அசையாப் பொருட்களும் அனைத்துமே அந்த ஆத்மாவையே மூலாதாரமாக உடையன...... -3/3:3 </p><p>மேற்கண்ட உபநிஷத்து வாக்கியங்களிலிருந்து ஆதியில் ஆத்மா என்ற ஒன்று ஏகமாக இருந்தது. அதுவே உலகங்களையும், சகல உயிரினங்களையும், இந்திரன், பிரஜாபதி முதலான தெய்வங்களையும், மனிதனையும் சிருஷ்டித்தது. அதுவே "பிரம்மம்" என்று அழைக்கப்பெறுவது.</p><p> <strong>( "வேதம் விளக்கும் தேவ இரகசியம்" என்ற நூலில் இருந்து ..... பக்கம் : 36/38 ) </strong></p>தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-58735098403272884062008-06-28T08:58:00.002+01:002008-06-28T12:32:55.132+01:00நாத்திகம் என்றால் என்ன?<p></p><br /><p>நாத்திகக் கருத்தைச் சரியாக புரிந்து கொண்டால், </p><p>அது ஒரு நம்பிக்கை இன்மையோ, இழிவானதோ, வெறும் எதிர்மறைக் கருத்தோ இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கு மாறாக, அனைத்து உண்மைகள் பற்றிய மனமார்ந்த, பயன்நிறைந்த உறுதிப்பாடுதான் அது என்பதையும் மிக உயர்ந்த மனிதநேய செயல்பாட்டின் ஆக்கபூர்வ உறுதிப்பாட்டைக் கொண்டது என்பதையும் உணரலாம். கடவுள் என்பது இல்லை என்று நாத்திகர் கூறுவதில்லை. ஆனால், கடவுள் என்று எதைப் பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. கடவுளைப் பற்றிய எந்த கருத்தும் அற்றவனாக நான் உள்ளேன். கடவுள் என்னும் சொல் தெளிவான திட்டவட்டமான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் ஒலிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கடவுள் இல்லை என்று நான் மறுக்கவில்லை. அத்தகைய கடவுள் என்ற எந்தக் கருத்தையும் நான் கொண்டிருக்கவில்லை என்பதை என்னால் மறுக்க முடியாது என்பதே அதன் காரணம்.கடவுளைப் பற்றி ஆத்திகரால் விளக்கிக் கூற முடியவில்லை. கடவுள் என்ற கருத்தை உறுதிபடக் கூறுபவரால் அதனைப் பற்றி எனக்கு விளக்கிக் கூற இயலவில்லை. என் உருவத்தில் நான் இருப்பதைத் தவிர கடவுள் என்ற உருவத்தில் ஒருவர் இருக்கிறார் என்று கூறப்படுமானால் அத்தகைய ஒன்று இருக்க இயலும் என்பதை நான் மறுக்கிறேன்.ஆன்மிகவாதியும் ஒரே ஒரு உயிர் தான் இருக்க முடியும் என்பதையும் ஒன்றுக்கு மேற்பட்ட மற்றொன்று இருக்க இயலாது என்பதையும் உறுதிபடக் கூறுகிறார். ஆனால் ஆன்மிகவாதியின் இந்தக் கருத்துக்கும் நாத்திகரின் கருத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், ஆத்திகர் கடவுள் இருப்பதற்கான காரணங்களை கூறும் போது, நாத்திகரோ உயிரினப் பண்புகளின் வெளிப்பாடுகளே இவை, அதாவது சிந்தனையைச் செப்பமிடச் செய்யும் வேறுபாடுகள் இவை என உறுதி படக்கூறுகிறார்.பிரபஞ்சம் என்று கூறப்படுவதில் இருந்து விலகி, அதைத் தவிர்த்து இருப்பதே கடவுள் என்று ஆத்திகர் உறுதிபடக் கூறும் போது, இத்தகைய தனிப்பட்ட, கற்பனையில் இருக்கும் கடவுளுக்கு தனித்தன்மை, எங்கும் நிறைந்தவர், அனைத்தும் அறிந்தவர், எதையும் செய்ய வல்லவர், மூல முதலானவர், என்றும் நிலைத்து நிற்பவர், மாற்றப்பட இயலாதவர், குற்றம் குறையற்ற நற்றண்மை கொண்டவர் என்றெல்லாம் குணங்களை ஆத்திகர் கற்பித்துக் கூறும் போது,நாத்திகர், “அத்தகைய கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதையே நான் மறுக்கிறேன்” என்று பதிலளிக்கிறார். இவ்வாறு தன் கருத்தைக் கூற அவருக்கு உரிமை உள்ளது. கடவுளைப் பற்றிய ஆத்திகரின் விளக்கம் முன்னுக்குப் பின் முரணானது.இந்தக் கடவுள் பற்றிய ஆன்மிகவாதியின் விளக்கமே முன்னுக்குப் பின் முரணானதும், மனிதரின் அன்றாட வாழ்க்கை அனுபவத்துக்கு எதிரானது என்பதும்தான் இதன் காரணம். உலகைப் படைத்தவர் கடவுள் என்று ஒரு நாத்திகரிடம் பேசினால், படைப்பு என்ற கருத்தே நடந்திருக்க இயலாதது என்று கூறுவார்.கடவுள் இருக்கிறார் என்ற கருத்தை நிறுவிட இது அதிகப்படுத்தவோ, குறைக்கவோ இயலும் என்பதை சிந்தித்துப் பார்க்கவும் நம்மால் இயலவில்லை. இக்கருத்து எவ்வாறு உருவானது என்பதையும் நம்மால் எண்ணிப் பார்க்க இயலவில்லை. ஒன்றுமே இல்லாதது ஏதேனும் ஒன்றாக ஆவதையோ அல்லது ஏதோ ஒன்று ஒன்றுமே இல்லாததாக ஆகிவிடுவதையோ நம்மால் கருதிப் பார்க்க இயலவில்லை.</p><p>சார்லஸ் பிராட்லா </p>தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-72480489310199011782008-06-27T13:32:00.001+01:002008-06-27T13:37:13.948+01:00ஒரே ஒரு புரட்சி...<a name="1784815120154648509"></a><br /><br />மனிதன் கடவுள் பெயரில் பல மதங்களையும், நம்பிக்கைகளையும், வழிகளையும், பல ஆசார்யர்களையும் உருவாக்குகிறான். இதனால் அழியாப் பேற்றை அடைய விரும்புகின்றான். இதற்காகத் தேடித் தேடி மனங்கண்ட கோலங்களை உண்மை எனக் காண்பதும், அறிவு என்ற அளவுகோல் தன்னையும் பிறவற்றையும் அளக்கும் துன்பத்தையும் அடைகிறான். அவன் தேடும் தெவிட்டா அன்பு - அவன் வாழும் விதத்திலேயே பாழடைகிறது. ஒரு கையில் துப்பாக்கியும், ஒரு கையில் கடவுளும் இருக்க முடியாது. கடவுள் என்பது ஒரு சின்னம். உண்மையில் அர்த்தம் இழந்த ஒரு சொல். கோயில்களாலும், தொழுகைப் பள்ளிகளாலும், மாதாக் கோயில்களாலும் பொருள் இழந்த சொல். நீர் கடவுளை நம்புவோராயினும் சரி நம்பாதவராயினும் சரி, நீர் இருவரும் குறுகிய தன்னலம் கொண்ட பயனற்ற வாழ்க்கையின் துன்பத்தை அனுபவிக்கிறீர். அன்றாட வாழ்க்கையின் ஏமாற்றங்களால் கசப்புற்று பொருளற்ற வாழ்க்கையை வாழ்கிறீர்.எண்ணக் குவியலின் ஓட்ட முடிவிலே உண்மையைக் காண முடியாது. வெறிச்சிடும் நெஞ்சம் எண்ணங்களின் பேச்சிலே நிறைந்து வழியும். நாம் புத்தி கூர்மையால் புதுப்புதுத் தத்துவங்களை உருவாக்கி அவை நிறைவு பெறாத ஏக்கத்தால் வருந்துகிறோம்.அவற்றை அடைய பல கொள்கைகளை வகுத்து அடியார் என்ற நிலையில் கோவில்களுக்குச் சென்று அங்கே நம்முடைய மனத் தோற்றங்களில் நம்மை இழக்கிறோம். துறவியானாலும் பிக்குவானாலும் பரம்பொருளைக் காண முடியாது. எனில் அவர் இருவரும் மனிதன் ஏற்படுத்திய மரபிலும் பண்பாட்டிலும் ஊறியவர். அம்மரபுரிமையாலேயே அவர்கள் துறவிகள் என்றும், பிக்குகள் ஓப்புக் கொள்ளப்பட்டவர்கள்.<br /><br /><br /><br />ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி.<br /><p> </p><p> </p>தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-12351223451535190792008-06-25T07:47:00.005+01:002008-06-28T22:58:57.183+01:00மகளை மனநோயாளியாக ஆக்கிய தாய்!<a href="http://bp1.blogger.com/_kjL-MfmLvVw/SGHxNBdCVhI/AAAAAAAAB9A/Y7kj1-E_pPk/s1600-h/mariya.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5215715049502561810" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_kjL-MfmLvVw/SGHxNBdCVhI/AAAAAAAAB9A/Y7kj1-E_pPk/s320/mariya.jpg" border="0" /></a><br /><div></div><br /><p><br /><br /><a name="4307369607016659986"></a><br /><a href="http://thamizachi.blogspot.com/2008/04/24-8.html">24 வருடங்களாக சொந்த மகளை இருட்டறைக்குள் வைத்திருந்து 8 குழந்தைகளுக்கு தாயாக்கிய தந்தையின் மிருகத்தனம்!</a> சம்பவத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகம் முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம். அதே போல் சில தினங்களுக்கு முன் மற்றொரு சம்பவம் இத்தாலி நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலியின் நொப்லஸ் நகருக்கு அருகே சான்ந் மரியா கபுவா வெடிரே என்ற நகரில் திருமணத்துக்கு முன் குழந்தை பெற்றதால் 18 - ஆண்டுகள் தனியறை ஒன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் பெயர் மரியா மனோகா; தற்போதைய வயது 47. </p><p>18 - வருடங்களுக்கு முன்பு அவர் கர்பமாகி இருக்கிறார். திருமணத்திற்கு முன்பே தன்னுடைய மகள் கருத்தரித்ததால் தங்களுடைய உறவீனர்கள் தன் குடும்பத்திரைப் பற்றி கேவலமாக விமர்சிப்பார்களோ என்று பயந்த மரியாவின் தாய் மற்றும் மரியாவின் சகோதரர் பிரிஸ்கோ, சகோதரி மிசெலினா ஆகியோர் மரியாவை தங்கள் வீட்டில் தனியறையில் அடைத்துப் பூட்டி விட்டனர். மரியா காணாமல் போனதாக மற்றவர்களிடம் கூறிவிட்டனர். மரியாவின் ஆண் குழந்தையை தாங்கள் தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் மற்றவர்களிடம் சொல்லியிருக்கின்றனர். </p><p>18 - ஆண்டுகளாகத் தொடர்ந்து தனியறையில் அடைக்கப்பட்டுக்கிடந்தார் மரியா. சமீபத்தில் அடையாளம் வெளிப்படுத்த விரும்பாத ஒருநபரால் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் மரியா அடைத்து வைக்கப்பட்டுள்ள அறை வீடியோவில் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பாகியது. போலிஸார் மரியா அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர். </p><p>அப்போது, துர்நாற்றம் வீசும் அறையில் உணர்விழந்த நிலையிலும் மனநிலை குழம்பிய நிலையிலும் மரியா இருந்தார். அவர் பயன்படுத்திய கழிவறை சுத்தப்படுத்தப்படாமலும் அறை முழுவதும் பழைய உடைகள் சிதைந்தும் இருந்தன. மரியாவை மீட்ட போலிஸார் அவரை நாப்பில்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மனநிலை தவறிய நிலையில் எதையும் பேச முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார் மரியா. மரியா குறித்த முழுவிபரங்களும் என்ன காரணம் என்பதும் தெரியாமல் இருக்கிறது. சுயநினைவு இல்லாத மரியாவிடம் எந்த விசாரணையும் செய்ய முடியவில்லை. </p><p>மரியாவின் 17 - வயது மகனுக்கு தன்னுடைய தாயை அடைத்து வைத்திருப்பது பற்றி தெ ரியும் என்று கூறப்படுகிறது. மரியாவின் தாய் அன்னா ரோசா மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது சகோதரர், சகோதரி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். </p><br /><p></p><br /><p></p>தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-63568128735102546272008-06-20T17:38:00.011+01:002008-06-21T17:35:54.392+01:00தந்தை பெரியார் தீவிரவாதியா? பாரதியார் பெண்ணீயவாதியா?<p align="justify"></p><p align="justify"></p><p align="justify">சில நாட்களுக்கு முன்பு பாரதியார் பாடல் ஒன்று பதிவில் போட்டிருந்தேன். <a href="http://thamizachi.blogspot.com/2008/06/blog-post_268.html"><span style="color:#3366ff;">சாதி வெறியர்களுக்காக ...</span></a><a href="http://thamizachi.blogspot.com/2008/06/blog-post_268.html"><span style="color:#3366ff;"> </span></a>என்ற தலைப்பில்! அந்த பதிவைக் கண்டதும் சில தோழர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். என்ன இப்படியொரு அதிர்ச்சிகரமான பதிவு என்று கேட்டிருந்தார்கள். பாரதியாரின் கவிதைகளில் சில கவிதைகள் பிடித்ததால் போட்டிருந்தேன். பெண்விடுதலை குறித்தும், பாடிய மாபெரும் புரட்சிக் கவிஞனாக உலாவரும் பாரதியின் நிஜம் என்ன? பாரதியாரை புரட்சிக்காரனாகவும், பெண்ணீயத்திற்கு குரல் கொடுத்த கவிஞனாகவும் சித்தரிக்கப்படுவதை தான் நம் தமிழ் சமூகம் பார்த்திருக்கிறது. பாரதியார் குறித்த மாற்று விமர்சனங்களை நாம் இதுவரை கண்டதில்லை, ஏன்..? </p><p align="justify">ஊடகங்களும் மக்கள் தொடர்புள்ள அனைத்தும் ஆதிக்கவாதிகளின் கைகளில்! எதையும் யாரையும் மீறி எழுதி விட முடியாது. ஒரு பத்திரிக்கையாளனின் பேனாவின் முனையிக்கும் ஓர் எல்லை உண்டு. ஆனால் இணையத்தில் பதிவர்களுக்கு இருக்கும் கட்டற்ற (என்னைப் பொறுத்த வரையில் அதுவும் ஆதிக்க சக்திக்குள் சிக்குண்டுகிடக்கிறது. அதைப்பற்றி வேறொரு முறை விவாதிப்போம்) எழுத்து சுதந்திரம் பாரதியாரை விமர்சனத்திற்கு உட்படுத்தி கேள்விகளை கேட்க வைக்கின்றது. சில தோழர்களின் பாரதியார் குறித்த பதிவுகளை வாசிப்பது மிக முக்கியமானதாகிறது. </p><p align="justify"><a href="http://poar-parai.blogspot.com/2008/04/blog-post_14.html"><span style="color:#3366ff;">பாரதியார், எஸ்.வி.ராஜதுரை மற்றும் சிலகேள்விகள்!!!</span></a><a href="http://poar-parai.blogspot.com/2008/04/blog-post_14.html"><span style="color:#3366ff;"> </span></a></p><p align="justify"><a href="http://kedayam.blogspot.com/2008/03/blog-post_31.html"><span style="color:#3366ff;">பாரதிக்கு நிகரானவர் சுஜாதா!!</span></a><a href="http://kedayam.blogspot.com/2008/03/blog-post_31.html"><span style="color:#3366ff;"> </span></a></p><a name="6074390651809545414"></a><p align="justify"><a href="http://yekalaivan.blogspot.com/2008/04/blog-post_02.html"><span style="color:#3366ff;">பார்ப்பனக்கூலி 'சுக்ரீவன்'எஸ்.வி.ராஜதுரையும் 'புதுவிசை'யும்</span></a><span style="color:#3366ff;"> </span></p><p align="justify"><a title="படி பாரதியின் தலித் விரோதம்" href="http://mathimaran.wordpress.com/2008/01/04/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/" rel="bookmark"><span style="color:#3366ff;"></span></a></p><p align="justify"><a title="படி பாரதியின் தலித் விரோதம்" href="http://mathimaran.wordpress.com/2008/01/04/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/" rel="bookmark"><span style="color:#3366ff;">பாரதியின் தலித் விரோதம்</span></a></p><p align="justify">போன்ற பதிவுகள் பாரதியாரை ஆய்வுக்குட்படுத்துகிறது. (வேறு பதிவர்கள் பாரதியார் குறித்த விமர்சனங்களை முன் வைத்திருந்தால் தோழர்கள் லிங்க் கொடுக்கவும்) இந்த விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். சமீபத்தில் பிரான்சில் பாரதியார் 125 - ஆவது ஆண்டு நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் இந்தியன் அம்பாசிடர் ஆட்கள் பாரதியார் விழா கொண்டாடுவதற்கு பண உதவிகள் செய்ததுடன் பின்னணியிலும் பல கூத்துக்களும் நடந்தேறி இருக்கின்றன. ஆனால் பெரியார் விழிப்புணர்வு இயக்கம் சட்ட ரீதியாக தொடங்கப்படுவதற்கு குறுக்கீடாகவும், பின்னணியிலும் இருந்தவர்களும் பெரியார் விழிப்புணர்வு இயக்கம் அய்ரோப்பாவில் உருவாகாமல் இருப்பதற்கு தமிழ்நாடு கேட்ட தீவிரவாதி தான் பெரியார் என்று இரட்டடிப்பு செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு. </p><p align="justify">அதே போல் விக்கி பீடியாவில் பிரெஞ்சு மொழியில் தந்தை பெரியார் பற்றிய குறிப்புகள் தவறாக காணப்படுகின்றது. அதில் நான் திருத்தம் செய்ய முற்பட முயன்ற போது என்னால் முடியாமல் போய்விட்டது. அதில் இருக்கும் தவறுகளை எப்படி சரிபடுத்துவது என்று மின்னஞ்சல் மூலம் விக்கி பீடியாவுக்கு கேட்டும் எந்த பதிலும் இல்லை. </p><p align="justify">இன்னொரு விஷயமும் குறிப்பிட்டாக வேண்டும். பாரதியார் வாழ்ந்த காலத்தை விட தந்தை பெரியார் வாழ்ந்த காலங்கள் மூன்று மடங்குகள் அதிகம். இள வயதிலேயே இறந்த பாரதியார் இன்றைய சமூதாயத்திற்கு முற்போக்கு வாதியாகவும், தந்தை பெரியாரை தீவிரவாதியாகவும் அடையாளப்படுத்த முற்படும் போக்கு எதற்காக? இணையத்தில் கூட தந்தை பெரியாரின் சொற்பொழிவுகள் பதிவு செய்யப்பட்ட தளம் கூட திட்டமிட்டு அழிக்கப்பட்டது. இந்த அளவுக்கு தந்தை பெரியாரை கண்டு பதறுவது ஏன்? </p><p align="justify">ஒரு வாரந்தரி பத்திரிக்கையில் ஒரு வாசர் கேள்வி கேட்டிருந்தார். பெண்களுக்காக குரல் கொடுத்தவர்களில் சிறந்தவர் பெரியாரா? பாரதியாரா? என்ற கேள்வி. அரசு என்ற அந்த அதி புத்திசாலி சொல்கிறார்... பாரதியார் தான் சிறந்தவர் என்று? மக்களின் மனங்களில் எப்படியெல்லாம் தந்தை பெரியாரை திசைமாற்றம் செய்கிறார்கள் பாருங்கள். பாரதியார் கவிஞன். தந்தை பெரியாரோ சமூகவாதி. சமூவாதியையும், கவிஞனையும் ஒப்பிட்டு பேசுவது புத்திசாலித்தனமாகுமா? </p><p align="justify">தந்தை பெரியாரை மறைத்து பாரதியாரை முன்ணிலைக்கு எடுத்துச் செல்லும் நோக்கமும், அதன் பின்னணியில் இயங்கும் ஆதிக்க சக்திகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக குரல் எழுப்ப வேண்டும். தந்தை பெரியாரின் புகழையும் அவரின் கொள்கைகளை இரட்டடிப்பு செய்து மக்களின் எண்ணத்தை திசை திருப்பும் நோக்கத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவும் பாரதியாரின் உண்மை சொருபத்தை இன்றைய இளைய சமூதாயத்தினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்... </p><p align="justify">தோழர்களே! உங்களை விவாதிக்க அழைக்கின்றேன். நம்முடைய விவாதங்கள் இன்றைய சமூகத்தின் உண்மைநிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வரட்டும்!</p><p align="justify"><br />தோழமையுடன்.. </p><p align="justify"><span style="color:#000000;"><strong>தமிழச்சி</strong></span></p><p align="justify"><span style="color:#000000;"><strong>20/06/2008 </strong></span></p><p align="justify"></p>தமிழச்சிhttp://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7385181807982283723.post-20197513158824612962008-06-19T21:02:00.006+01:002008-06-19T21:12:48.191+01:00எது தீர்வு?<span style="color:#333333;">*****</span><br /><a href="http://bp0.blogger.com/_kjL-MfmLvVw/SFq7sONQKJI/AAAAAAAAB7o/0H_p0QHC2KA/s1600-h/2323972733.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5213685887037089938" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_kjL-MfmLvVw/SFq7sONQKJI/AAAAAAAAB7o/0H_p0QHC2KA/s400/2323972733.jpg" border="0" /></a><br /><br /><br /><div align="justify"><em>"உன் வலிகளுக்கெல்லாம் எத்தனையோ களிம்புகளும், மூலிகை, மாத்திரைகளும், வைத்திய முறைகளும் உலகத்தில் உள்ளன. அதன் மூலம் தீர்வு காண முயலுவதை தவீர்த்து தன் வலிகளுக்கு தன் துன்பங்களுக்கு தன் வறுமைநிலைக்கு அடுத்தவனை காரணம் காட்டுகிறோம்" ...</em></div><div align="justify"><span style="color:#ffffff;"><em>(பாரசீகக் கவிஞன்) </em&