tag:blogger.com,1999:blog-72779352009-02-20T22:15:56.651-08:00குன்றனின் தமிழ்க் கவிதைகள்Kunran's Tamil Poemsstkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7277935.post-41863893907112663232007-12-07T07:04:00.000-08:002007-12-07T07:34:15.298-08:00பெண்கற்றறிந்தார் பெண்கள் தங்கள்<br />கரும் இருளை அகற்றினார்<br />சுற்றி வந்தார் விண்வெளியை(ச்)<br />சுழன்று வென்றார் போர்களில்<br />கொற்றவளாய் உள்ளார் நன்றாய்(க்)<br />குடும்பங்களைக் காக்கிறார்<br />பற்றறுந்து தவிக்கிறார்கள்<br />பிறந்த மண்ணைப் பிரிந்ததால்<br /><br />அடுப்படியின் வாழ்வு நின்று<br />அகலக் கால் பதித்தனர்<br />எடுத்த வேலை எதுவெனினும்<br />எளிதாய் வெற்றி கண்டனர்<br />ஒடுக்க எண்ணும் தீயோர்தன்னை<br />ஓட ஓடத் துரத்தினர்<br />கடுக்கும் காதல் கண்ணைமூட(க்)<br />கனதி யுற்றார் வயிற்றிலே<br /><br />அழகு மட்டும் பெண்களில்லை<br />அனைத்தும் பெண்கள் என்றனர்<br />உலகம் எல்லாம் உணரவைத்தார்<br />உண்மைப் பெண்கள் வாதத்தை<br />பழமை வென்றார் புதுமைகொண்டார்<br />பயத்தை நீக்கிச் சென்றிட<br />களவு உற்றார் கருகிநின்றார்<br />கயவர் செய்த பாவத்தால்<br /><br />தலைகள் சுற்றும் விலையில்(ப்)<br />பெண்ணைத் தாரமாக்கும் தமிழரை<br />உலையில்ப் போட்டு உஷ்ணமாக்கத்<br />துணிந்தார் என்ற போதிலும்<br />சிலையாய் உள்ளார் சிற்பமானார்<br />சிறகொடிந்த பறவையாய்<br />விலைகள் கூறி அழகைவிற்கும்<br />விந்தை என்று அகன்றிடும்<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-4186389390711266323?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7277935.post-1144614906659147672006-04-09T13:22:00.000-07:002006-04-09T13:35:06.673-07:00இளவேனிற் காலம்இளவேனிற் காலம்<br />இதமான தாளம்<br />இதயமோ இனிக்கின்ற கோலம்<br /><br />களவேது மின்றி<br />கருமிருள் குன்றி<br />காதலில் வாழ்வுற்றார் ஒன்றி<br /><br />நிலமகள் பாட<br />அலைமகள் தேட<br />நிலவுடன் கூடிவிளை யாட<br /><br />அழகான நாடு<br />அதிலொரு வீடு<br />அமைதி வாழ்வின்பத் தோடு<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-114461490665914767?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7277935.post-1143503317437574342006-03-27T15:31:00.000-08:002006-03-27T16:11:42.730-08:00உன்னால் உறங்க முடிகிறதோ?வானை மறைத்துமழை பொழிகையிலே<br />வருவதை உண்ர்த்த ஒலி தருகையிலே<br />ஊனை உருக்கும்குளிர் பிறக்கையிலே<br />உடலை வருத்தி நாம் உழைக்கையிலே<br />சேனை மண்ணைக் காக்கையிலே<br />செழிப்புடன் நல்யாழ் ஒலிக்கையிலே<br />பூனை போல்நீ உறங்குவதோ<br />புலியாய் மீண்டும் எழுதமிழா!<br /><br />பகலை மறைக்கும் மைமுகில்கள்<br />பார்வை கெடுக்கும் மின்னல்நதி<br />நகலை ஒழிக்கும் நாகரீகம்<br />நாறி உலையும் மனிதநேயம்<br />அகல விரியும் ஆதிக்கம்<br />அதனை அழிக்க அரியபடை<br />பகலைப் பகலாய் இருத்திடவே<br />பருதி போல்நீ எழுத்மிழா!<br /><br />மண்ணைக் காத்த மாவீரர்<br />மடிவை யெண்ணாப் போர்வீரர்<br />கண்ணை மூடா வேவுப்புலி<br />கவலை யற்ற கரும்புலிகள்<br />திண்மம் நிறைந்த கடற்பிரிவு<br />திறமை மிக்க வானெதிர்ப்பு<br />உண்மை யீழம் பிறக்கையிலே<br />உன்னால் உறங்க முடிகிறதோ?<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-114350331743757434?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7277935.post-1129997839329518662005-10-22T08:50:00.000-07:002005-10-28T10:11:01.013-07:00கதிரவன்தங்குதடை யின்றி வரும்<br />தென்ற லொடு கூடி<br />கங்குலை விலக்கித் தமிழ்(க்)<br />குயிலி னிசை பாடி<br />பொங்கு மெழில் நங்கையென(ப்)<br />புதுப் பொலிவு காட்டி<br />எங்குமொளி பாச்சி யதை(த்)<br />திங்களுக் கும் ஊட்டி<br /><br />ஞாலமது போற்று கின்ற<br />நல்ல பொற் கதிரே<br />காலமெலாம் வாழ்வு தரும்<br />கருணை யுள்ள உயிரே<br />கோலமது போடு கின்ற<br />வான வில்லின் முதலே<br />ஞாலமதைத் தோற்று வித்த<br />நா மறிந்த இறையே<br /><br />மண்ணு மில்லை விண்ணு மில்லை<br />மா கடலு மில்லையே<br />எண்ண எண்ண அழகுதரும்<br />ஏது மிங்கு யில்லையே<br />உண்ணுதற் குணவு மில்லை<br />உழ வெதுவு மில்லையே<br />கண் கவரும் தாரணியின்<br />காதலனே வான் எழுவாய்<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-112999783932951866?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7277935.post-1124410394436281252005-08-18T16:37:00.000-07:002006-06-18T15:44:38.076-07:00தெய்வம்?மனித னென்றும் தெய்வ மாகலாம்<br />மாட்சிமை மிக்க வீர னாகலாம்<br />தனித்து வமுள்ள இறைவ னாகலாம்<br />தாரணி போற்றும் அறிஞ னாகலாம்<br />புனித மானதோர் கடவு ளாகலாம்<br />பொறுமை யிலிந்தப் பூமி யாகலாம்<br />கனிகொ டுத்திடும் விருட்ச மாகலாம்<br />கல்வி தந்திடும் குருவு மாகலாம்<br /><br />துன்ப முற்றவர் துயர் துடைக்கலாம்<br />தூய சிந்தனை தனைவ ளர்க்கலாம்<br />அன்பு கொண்டுமே உதவி செய்யலாம்<br />அரவ ணைத்துமே மகிழ்ச்சி காணலாம்<br />தன்ன லமிலா தெங்கும் வாழலாம்<br />தாழ்ச்சி யுற்றவர் விழிது டைக்கலாம்<br />என்றும் யாவர்க்கும் துணையு மாகலாம்<br />இறைவ னாகவே மனித னாகலாம்<br /><br />மற்றவர் பொருட்களில் ஆசை கொள்வதும்<br />மந்திக ளாக வீதியிற் செல்வதும்<br />கற்றது போல நடக்கா திருப்பதும்<br />கண்ட வார்த்தைகள் கதைத்துத் தொலைப்பதும்<br />குற்ற மனத்துள் மாய்ந்து கிடப்பதும்<br />குறுகு றுத்துப் பொறாமை கொள்வதும்<br />அற்றவ னாக இருப்பவன் எவனோ<br />அவனே என்றும் தெய்வ மாகிறான்<br /><br />மனிதனாய்க் 'கண்ணன்' பிறக்க வில்லையா?<br />மாபெரும் தெய்வமாய் விளங்க வில்லையா?<br />தனிப்பெரு மரசாய்ப் 'புத்தர்' இல்லையா?<br />தரணியை யாட்சி செய்ய வில்லையா?<br />புனிதராய் 'யேசு' தோன்ற வில்லையா?<br />புகழுடன் 'ந்பிகள்' வாழ வில்லையா?<br />இனியவர் பலபேர் மனித ரானவர்<br />இறைவ னாகவே மாற வில்லையா?<br /><br />நட்பால் மனிதனும் தெய்வ மாகலாம்<br />நீதிநேர் மையாய் வாழ்ந்து கொள்ளலாம்<br />எட்டுத் திக்கிலும் உதவி செய்பவன்<br />என்றும் எங்கும் இறைவ னாகலாம்<br />பட்ட துன்பத்தை மறக்கச் செய்பவன்<br />பாரினி லென்றும் கடவு ளாகலாம்<br />கெட்ட சிந்தனை மறந்து நிற்பவன்<br />கருணை யினாலே வைய மாளலாம்<br /><br />துன்ப முற்றவர் துயர் துடைப்பவன்<br />தூயவ னவன் தெய்வ மாகிறான்<br />இன்பம் தந்தொரு இன்னல் தீர்ப்பவன்<br />இன்றே இங்கே இறைவ னாகிறான்<br />தன்னினம் காக்கத் தன்னை யிழப்பவன்<br />தன்னல மற்ற கடவு ளாகிறான்<br />அன்புடன் எவர்க்கும் சேவை செய்பவன்<br />அவனி மீதிலே தெய்வ மாகிறான்.<br /><br /> (பூபாளராகங்கள் 2005)<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-112441039443628125?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7277935.post-1119314320836079622005-06-20T17:35:00.000-07:002005-06-20T17:38:40.840-07:00புத்தர் பெருமானின் புலம்பல்கீதம் இசைக்கும் கருங்குயிலின் ஒலியமுதும்<br />நாதம் பரப்பும் நல்லியற்கை வனப்பதுவும்<br />வேதம் உரைக்கும் வெண்முகிலின் மனத்தவரும்<br />பேதம் இன்றிவரும் பக்தர்களின் பணிவிடையும்<br /><br />நாளும் கேட்டதனில் நான்திழைத் திருக்கையிலே<br />பாழும் கொடுமனத்தோர் பறித்தனரோ? உரிமைதனை<br />வாழும் இடத்தைவிட்டு சந்திகளில் எனைநிறுத்தி<br />ஆளும் வர்க்கமென அடிமைகொள்ளத் துணிந்தனரோ?<br /><br />சுட்டெரிக்கும் செஞ்சுடரோன் ஒளிப்பிளம்பு சுட்டெரிக்க<br />பட்டவுடன் பற்றிக்கொள்ளும் தூசியெலாம் பட்டுவிட<br />கெட்டதுர் நாற்றமெலாம் கிளம்புகின்ற வீதிகளில்<br />மட்ட மானவர்கள் மகிழயெனை நிறுத்தினரோ?<br /><br />துன்பம் கண்டுள்ளம் துடிதுடித்து எழுந்தவன்யான்<br />மன்னன் முடிதுறந்து மகிழ்வுடனே இருந்தவன்யான்<br />என்னை முதற்படுத்தி என்சீடர் நீரெல்லாம்<br />சின்னத் தனமாக அரசியலில் அலைவதுவேன்?<br /><br />ஒன்றும் புரியாத புதிரெல்லாம் புரிந்திடவே<br />தன்னம் தனியிருந்து தவமிருந்து உரைத்தவற்றை<br />நன்மைதரும் நல்லவற்றை நலியவிட்டு நஞ்சுடனே<br />உண்மை தனைமறந்து ஊதாரி யாவதுவேன்?<br /><br />ஆளும் அரசிற்கு அறிவில்லை யென்றிருக்க<br />நாளும் எனைத்துதிக்கும் நன்றிகெட்ட சீடர்களே!<br />மாளும் மக்களது மனத்துன்பம் போக்காது<br />கோளும் கொடுங்கருத்தும் கொடுத்தவரை வளர்ப்பதுவேன்?<br /><br />இனிது எதுவென்று இனிதாக உரைத்துள்ளேன்<br />புனிதப் பாதைதனைப் புரியவைத்துச் சென்றுள்ளேன்<br />மனித வாழ்வதுவின் மகத்துவங்கள் பகர்ந்துள்ளேன்<br />கனிவாய்க் கடைப்பிடிப்பீர் காலம்வெல்லக் கைகொடுப்பீர்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-111931432083607962?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7277935.post-1118532000475280042005-06-11T15:49:00.000-07:002005-06-11T16:25:49.766-07:00உண்ணியாய் மனிதன்நாயினைப் பற்றிப் பிடித்தது உண்ணி<br />நன்றி செலுத்திடும் உயிரியென் றெண்ணி<br />தாயினைப் போன்று செலுத்துவேன் பாசம்<br />தாயகம் இதுவெனக் கொண்டது நேசம்<br /><br />விரட்டி விரட்டிநாய் துரத்திய போதும்<br />விட்டிட வில்லை நட்புள்ள உண்ணி<br />முரட்டுத் தனமாக மோதிய போதும்<br />முத்தம் செலுத்தியே வந்தது உண்ணி<br /><br />மோதல் தொடர்ந்து நடந்தது எனினும்<br />முறிவின்றி யிருந்தது உண்ணியின் அன்பு<br />காதல் வளர்ந்து கனிந்துமே இனித்தது<br />கடியினால் நாயோ உண்ணியைச் சினந்தது<br /><br />சாலை ஓரத்தில் கிடந்தது நாயும்<br />சரிந்திட்ட மெய்யில் உயிரற்று இருந்தது<br />வேலை யற்ற உடலிது என்பதால்<br />வேறிடம் தேடிடக் கழன்றன உண்ணிகள்<br /><br />ஈக்களோ நாய்க்காய் ஒப்பாரி யிட்டன<br />இரைந்தன புரண்டன புலம்பி யழுதன<br />பூக்களாய் அவைகள் மொய்த்துமே நின்றன<br />புழுக்களும் வந்து துக்கம் செலுத்தின<br /><br />ஞாலத்தில் வாழ்ந்திடும் மனிதனும் இதற்கு<br />நல்லதோர் உதாரணம் ஆகுறான் பாரீர்<br />காலத்தின் கோலத்தால் நிகழ்ந்திடும் கருமத்தில்<br />சுயனல உண்ணியாய் மனிதனைக் காணலாம்<br /><br />இருக்கும் போதே போற்றுவோர் ஒருவகை<br />இறந்த பின்னரே போற்றுவோர் ஒருவகை<br />தரணியில்ப் பிறக்கமுன் இகழ்பவர் ஒருவகை<br />தரணியைத் துறக்கமுன் இகழ்பவர் ஒருவகை<br /><br />எதுஎது எப்படி நடந்திட்ட போதும்<br />அவர்களைத் திருத்திட நினைப்பது கடினம்<br />அதுஅவர் தாமே திருந்திட்டா லன்றி<br />அவரென்றும் மனிதராய் வாழ்ந்திடும் உண்ணி.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-111853200047528004?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7277935.post-1113479066623857242005-04-14T04:35:00.000-07:002005-04-14T05:10:51.600-07:00ஐயகோ தமிழா!ஐயகோ தமிழாநீயும் மகிழ்கின்றாயோ?<br />ஆனந்தக் கூத்தாடித்தான் திரிகின்றாயோ?<br />கையைநீ விரித்தாயோசொல் தமிழுக்கின்று<br />காலனாய் வந்தாயோநீ கடமைதுறந்து<br />மெய்யைநீ அறியாதுமே தமிழைக்கொன்று<br />மலிந்திட்ட மொழிகளையெங்கும் மென்றுமென்று<br />ஐயகோ கதைப்பதுவேன் சொல்லுசொல்லு<br />அவனிதான் தங்குமோநீ நில்லுநில்லு<br /><br />பிள்ளைகள் பெற்றதால்நீ பேறுகொண்டாய்<br />பெருமிதம் கொள்வாயவர்ட்கு தமிழையூட்டி<br />நல்லவ ராகயவர்கள் வளராவிட்டால்<br />நாடுதான் போற்றுமாநீ சொல்லுதமிழா!<br />வல்லவ ராகவேற்று மொழியில்மட்டும்<br />வருதல்தான் போதுமாநீ சிந்தித்தாயோ?<br />நல்லதாய் மொழியையறியாத் தமிழரென்று<br />தரணிதான் பழிக்கநீயும் வளர்க்கலாமோ?<br /><br />ஆங்கிலம் கலந்துமேநீ தமிழைப்பேச<br />அகிலமே மதிக்குமென்று நினைக்கின்றாயோ?<br />தீங்கேதும் செய்யாச்செந் தமிழைநீயும்<br />தெளிவற்ற வானொலிபோற் பேசல்நன்றோ?<br />ஓங்கிடும் தமிழைநீயும் முதியோர்போல<br />ஒவ்வாது நடுங்கியேதான் ஓதல்நன்றோ?<br />தேங்கியே நிற்காநற் தமிழையெங்கும்<br />தெளித்திடு தெளித்திடுதமிழா அஃதும் நன்றாய்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-111347906662385724?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7277935.post-1112310117964803442005-03-31T14:56:00.000-08:002005-03-31T15:01:57.966-08:00களஞ்சியம்அள்ளிடும் அட்சர பாத்திரமோ? - இல்லை<br />ஆயிரம் ஆயிரம் கிரகணமோ?<br />துள்ளிக் குதித்திடும் மீனினமோ? - இல்லை<br />தூய சமூத்திர அலையடிப்போ?<br /><br />மின்மினிப் பூச்சியின் கண்சிமிட்டோ? - இல்லை<br />மேனகை புரிந்திடும் நடனமிதோ?<br />கன்னித்தமிழ்ச் சொற்களஞ்சியமே! - என்றும்<br />கற்றவர் போற்றிடும் தமிழ்மொழியே!<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-111231011796480344?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7277935.post-1111105765682554162005-03-17T16:18:00.000-08:002005-03-17T16:34:37.636-08:00இருளல்லமேகத்தை உரசிய காற்றாய் அவள்கரம்<br /><br />மெல்ல அவனது மேனியைத் தழுவிற்று<br /><br />தாகத்தை தீர்த்திட பொழிந்திட்ட மழையென<br /><br />தையளின் முத்தங்கள் பதிந்தன உதட்டிலே<br /><br />வேகத்தைத் தாங்காது கொடியொன்று அசைவதாய்<br /><br />கோதையும் அவனது பிடியிலே அசைந்தனள்<br /><br />காகத்தின் நிறத்திலே காரிருள் இருப்பினும்<br /><br />காதலர் அவர்கட்கு இருளன்று; வெளிச்சமே!<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-111110576568255416?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7277935.post-1111102956309607042005-03-17T15:36:00.000-08:002005-03-17T15:42:36.310-08:00நிர் - வாணம்ஆகாயம் தன்னை<br />அலங்கரிக்க வைத்துள்ள<br />நட்சத்திரங்கள்,<br /><br />ஆட்சிபுரியும் ஆடவன்<br />சூரியனைக் கண்டதும்<br />வெட்கம் கொள்ளும்,<br /><br />பாவம் வானம்;<br />நிர்வாண உடலில்<br />ஒட்டியுள்ள திலகமாய்<br />ஞாயிற்றின் ஒளி.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-111110295630960704?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7277935.post-1108917473890436032005-02-20T08:20:00.000-08:002005-06-11T11:38:03.376-07:00புறத்தே தள்ளுபோராடும் தமிழினமே போராடு தமிழ் க்<br />கோடரிக் காம்புகளை எதிர்த்தே நில்லு<br />ஊராரின் பணத்தினிலே வாழ எண்ணும் இந்த<br />எளியோரை எதிர்த்துமே நீ போராடு<br />சீரோடும் சிறப்போடும் வாழ்வதற்காய் ஈழம்<br />சிந்திடும் குருதிதன்னை எண்ணாமலே<br />தீராத ஆசையுடன் திருடும் இந்தத்<br />திருடர்களை எதிர்த்துமே நீ போராடு<br /><br />கண்ணியமாய் வாழ்வோரின் கடமைதன்னைக்<br />கலைத்திட நினைப்போரைச் சாய்த்திடவும்<br />மண்ணெல்லாம் நல்ல தமிழ் பரவிடவும் தமிழ்<br />மாசற்ற இனமொன்றைப் பெறுவதற்கும்<br />உண்ணியாய் இருந்திடும் ஊனத்தன்மை<br />உலகைவிட்டுப் போக்கிடவும் பொசுக்கிடவும்<br />எண்ணமொன்றை உன்நெஞ்சில் பொறித்து வைத்து<br />என்றென்றும் எதிர்த்து நின்று போராடு<br /><br />பெண்ணிற்காய் அடிபட்டார் கொலைகள் செய்தார்<br />பெரியவன் யார் என்பதற்காய் மோதிக்கொண்டார்<br />தன்னினத்தைப் பயமுறுத்தி உழைக்காமல்<br />தன்னைமட்டும் வளர்ப்பதையே பெருமை எனறார்<br />அந்நியத்தை எதிர்த்து நிற்கும் வீரர் அங்கே<br />ஆலமர விருட்சமாகப் பெருமை சேர்க்க(ப்)<br />புண்ணியங்கள் இவையனைத்தும் பொசுக்குதற்காய்(ப்)<br />புகுந்திட்ட கூட்டத்தை நீ புறத்தே தள்ளு.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-110891747389043603?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7277935.post-1106496552379881102005-01-23T07:48:00.000-08:002005-01-23T08:13:51.210-08:00காதலாலே!கணப்பொழுது அதிகமடி கண்ணே உன்னைக்
<br />கண்டு நான் கதைத்திட்ட காலம் சொல்ல
<br />
<br />இமைப்பொழுது குறைந்ததடி எழிலெ உன்னை
<br />என்றும் நான் என்னருகில் ஏற்கும்போது
<br />
<br />மின்னுகின்ற நேரத்திலும் குறைவுதானே
<br />மேதினியில் உன்னை நான் காணும் காலம்
<br />
<br />என்னவளே! என்னுடலே! எந்தன் உயிரே!
<br />என்றென்றும் நெஞ்சினிலே ஆடும் மயிலே!
<br />
<br />கூவுகின்ற குயிலாகக் கண்டேன் உன்னைக்
<br />கொஞ்சுகின்ற குழவியாகப் பார்த்தேன் நானும்
<br />
<br />வீசுகின்ற தென்றலாக வருவாய் என்னுள்
<br />விருந்தாகும் வளியாகச் சுழன்றாய் மூச்சாய்
<br />
<br />சிறுவயதில் மழையழகை இரசித்ததுண்டு
<br />சிறந்ததென்று வானவில்லை வியந்ததுண்டு
<br />
<br />கொத்துக் கொத்தாய்ப் பூத்தமலர் பார்த்ததுண்டு
<br />கொந்தளிக்கும் கடலழகில் கழித்ததுண்டு
<br />
<br />எத்தனையோ அழகுகளைக் கண்டபோதும்
<br />உன்னழகே தனியழகாய்க் கண்டுகொட்டேன்
<br />
<br />நித்திரையில்ப் பிதற்றுகின்றேன் உந்தனாலே!
<br />நிழல்போலேத் தொடர்கின்றாய் காதலாலே!
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-110649655237988110?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7277935.post-1105230059870899592005-01-08T16:07:00.000-08:002005-01-23T04:44:24.950-08:00புண்பட்ட தமிழ்என்னை நான் வெறுக்கின்றேன் - இந்த
<br />எளிய வாழ்வினை வாழ்வதனால்
<br />தன்னலம் உள்ளவர்தான் - இங்கு
<br />தமிழுக்காய் வாழ்வதாய் உரைக்கின்றார்
<br />பொன்பொருள் இருப்பதனால் - அவர்
<br />பெரும்பெரும் அறிஞராய்த் திகழ்கின்றார்
<br />உன்னையே சரணடைந்தேன் - என்
<br />உயிருடல் அனைத்தையும் உனக்களித்தேன்
<br />
<br />கண்மணி வெற்றிடம்தான் - அது
<br />கணம்தனும் மூடிடில் பார்வையுண்டோ?
<br />மண்ணினுள் நீருளது - அதன்
<br />மகத்துவம் அறியாது அலைவதைப்போல்
<br />புண்பட்ட உரிருளது - இங்கு
<br />புதுப்புது ஆற்றல்கள் புதைந்துளது
<br />விண்ணிலே உளஇறையே! - உனை
<br />விட்டிடில் எனக்கருள் எவர்தருவார்?
<br />
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-110523005987089959?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7277935.post-1105228840879704202005-01-08T15:53:00.000-08:002005-01-08T16:05:26.210-08:00தமிழ்த் தாய்பூத்திட்ட பொன் மகளே!
<br />
<br />பூவினும் இனியவளே! - தமிழ்
<br />
<br />காத்திட்ட நன்மகளே!
<br />
<br />கன்னி மகளே! - அமிழ்து
<br />
<br />ஊற்றினில் உதித்தவளே!
<br />
<br />உயிரினில் நிறைந்தவளே! - உனை(ப்)
<br />
<br />போற்றி வணங்குகின்றேன்
<br />
<br />புகுந்தென்னுள் தமிழ்தருவாய்.
<br />
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-110522884087970420?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7277935.post-1104967133049905672005-01-05T15:15:00.000-08:002005-01-05T15:19:43.883-08:00மன்னிப்பு இல்லைஎத்தனை ஷெல்கள் எல்லாம்
<br />தாக்கியே நின்ற போதும்
<br />எத்தனை தோட்டா இரவைகள்
<br />துளைத்திட வந்த போதும்
<br />எத்தனை விமானக் குண்டு
<br />பாய்ந்துமே வீழ்ந்த போதும்
<br />எத்தனை இரவு தன்னைப்
<br />பயத்துடன் கழித்த போதும்
<br />
<br />எத்தனை துன்பம் வந்து
<br />பசித்திட இருந்த போதும்
<br />நித்தமும் வறுமைக் கோட்டில்
<br />வாழ்ந்துமே வந்த போதும்
<br />இத்தனை அரக்கர் நின்றும்
<br />தப்பிய மக்கள் கூட்டம்
<br />செத்துமே மடியத் தானோ?
<br />சிதைந்துமே அழியத் தானோ?
<br />
<br />உறவினர் எங்கே? எங்கே?
<br />உற்றத்தார் சுற்றம் எங்கே?
<br />இருந்திட்ட மனைகள் எங்கே?
<br />இதமான மரங்கள் எங்கே?
<br />தரணியின் உயிரை மாய்க்க(ப்)
<br />பிறந்திட்ட அலையே! நீயும்
<br />சிறந்தவை இவைகள் என்று
<br />சீண்டியே பார்த் தனையோ!
<br />
<br />தாயில்லைப் பிள்ளை யுண்டு
<br />தந்தைக்கு மகனு மில்லை
<br />சேயில்லைத் தாயு முண்டு
<br />சேர்ந்திட்ட துணையு மில்லை
<br />காயில்லைக் கனியு மில்லை
<br />பிஞ்சுடன் பூவு மில்லை
<br />மாய்த்திடப் பிறந்த அலையே!
<br />மன்னிப்பே உனக்கு இல்லை.
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-110496713304990567?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7277935.post-1104187430897560452004-12-27T14:37:00.000-08:002004-12-27T14:43:50.896-08:00நீ அழித்திடும் கடலோ?தமிழரின் மூத்த குடியை அன்று
<br />குமரியில் மென்ற கடலே இன்னும்
<br />உமிழ்கின்றாய் உந்தன் அலையை மீண்டும்
<br />உலுக்கின்றாய் எங்கள் உயிரை நீ
<br />தமிழினில் கொண்ட அன்போ இல்லை
<br />தமிழினை உண்ட தெண்போ எங்கும்
<br />அமிழ்த்திடபொங்குகின்றாய் நீ
<br />அழித்திடும் கடலோ சொல்லு?
<br />
<br />உயிரினம் பலது உன்னைப் பெரும்
<br />உறைவிட மாக்கி வாழ நீ
<br />உயிர்களைக் கொல்லும் அலையைப் பூத
<br />உருக்கொண்டு பெருக்கியதேனோ மனிதப்
<br />பயிர்களைக் கொன்றுதானோ உந்தன்
<br />பசிதனைப் போக்கல் வேண்டும்? இந்த
<br />உயிர்களைப் படைத்த இறையே! உனது
<br />விழிகள்தான் குருடோ சொல்லு?
<br />
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-110418743089756045?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7277935.post-1093960086223511352004-08-31T06:43:00.000-07:002006-06-18T15:46:35.563-07:00அறிவியல்?துயர் விளைந்திடும் அணு வெடித்தது<br />சோக மென்பது வாழ்க்கை யானது<br />புய லடித்தது புவி யதிர்ந்தது<br />பூமி யெங்கணும் புழுதி யானது<br />கயவர் நெஞ்சுபோல் இருள் நிறைந்தது<br />காலன் வாகன மணி யொலிக்குது<br />செய லிழந்தது வையகம்; எழில்<br />செத் தொழிந்தது கோர மானது<br /><br />ஆக்கி யாக்கியே ஆசைப் பட்டவன்<br />அழிவை நோக்கியே தள்ளப் பட்டனன்<br />தாக்கு தற்கென வுறுதி பூண்டவன்<br />தா னழிந்துமே செத் தொழிந்தனன்<br />காக்கும் நல்மரம் வெட்டி வீழ்த்தினன்<br />கா டழிந்தது மழை குறைந்தது<br />நோக்க மின்றியே அழிவை நாடினன்<br />நோய் பிடித்துமே வாட லுற்றனன்<br /><br />வாக னங்களின் ஒலி யொலிக்குது<br />வஞ்சம் தீர்த்திடும் புகை பெருகுது<br />மேகம் போன்றுமே அது திரண்டது<br />மேதி னிக்கிது தீமை தந்தது<br />தேகம் தீர்த்திடும் நோய்கள் வந்தன<br />தொடர்ந்து 'யூவி' கதிர்கள் வந்தன<br />வேக மாகவே மனிதன் சாகின்றான்<br />வெறுமை யாகவே உலகை யாக்கின்றான்<br /><br />மழையு மின்றியே நாம் துடிப்பதா?<br />மண்ணிலே உயிர் மாண் டொழிவதா?<br />துளை களாகவே 'ஓசோன்' தேய்வதா?<br />தொல் கடல்நிலை மாறி நிற்பதா?<br />மலைகள் தாழுமா? அலைகள் ஓயுமா?<br />மானிடர் அழி வுற்று நிற்பரோ?<br />தலை வெடிக்குது அறிவியல்த் துறை<br />தரணி உய்திட வழி கொடுக்குமா?<br /><br />(பூபாளராகங்கள் 2004)<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-109396008622351135?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7277935.post-1091715162099805122004-08-05T07:07:00.000-07:002004-08-05T07:12:42.100-07:00பாரதிஇந்திய நாடுமிக்க இழிநிலை அடைந்தபோது
<br />வந்தவன் வீரம்மிக்க பாரதி சுதந்திரத் தீ(ப்)
<br />பந்தினை ஏந்திநின்று பலருமே வியக்கும் வண்ணம்
<br />சிந்துகள் பாடிச்சென்ற சிறந்தவோர் கவிஞனாவான்
<br />
<br />இந்திய மக்களேதும் இலட்சிய மின்றிவாழ்ந்த
<br />விந்தையைக் கண்டுவுள்ளம் வேதனை யடைந்தஞானி
<br />சந்ததம் தமிழுக்காக தன்னையே தந்ததூயன்
<br />எந்தையாம் பாரதிக்கு இணையில்லை யாருமென்போம்
<br />
<br />தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலைத் தவறிக்கேட்டு
<br />பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம்தன்னை
<br />வாழ்விக்க வந்ததூயன் வண்தமிழ்ப் பாரதிதான்
<br />ஆழ்துயர் தனிலேவாழ்ந்த அன்னையாம் தமிழை(ப்)
<br />
<br />பாரெலாம் போற்றவைத்த பாவலன் இவனேயாவான்
<br />சீரெலாம் புகழும்வண்ணம் தேசத்தின் சிறுமைகண்டு
<br />கூரியபேனா கொண்டு குறிக்கோளை எடுத்துச்சொன்ன
<br />வீரனை சுப்பிரமணிய வேந்தனைப் போற்றுவோமே!
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-109171516209980512?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7277935.post-1089752063882912222004-07-13T13:50:00.000-07:002004-07-13T13:54:23.883-07:00தமிழரின் சந்ததிக்கு!சிறுவர்களே! சிறுமியரே!
<br />நாளைய புலம் பெயர்ந்த
<br />தமிழரின் சந்ததியே!
<br />
<br />பொறுமையாக வாழுங்கள்!
<br />தேவைக்குப் பொங்கிடுங்கள்!
<br />பகைமையை மறவுங்கள்!
<br />பகமைக்காய் வருந்துங்கள்!
<br />சுகந்திரமாய்த் திரியுங்கள்! பிறர்
<br />சுகந்திரத்தைக் கெடுக்காதீர்!
<br />பெரியோரை மதியுங்கள்! வெறும்
<br />பெருமைக்காய் வெள்ளையராய் விளங்காதீர்!
<br />ஒருமையாய் இருங்கள்! வெற்று
<br />உடம்பிற்காய் உங்களிடை
<br />உதைபட்டுக் கொள்ளாதீர்!
<br />அடிபாடு இதற்கெல்லாம் அவசியமா?
<br />தெருத்தெருவாய் சொறிநாயாய்(க்)
<br />கடிபட்டுக் கொள்ளாதீர்!
<br />உழைப்பின்றி ஊதனத்தைத் தேடாதீர்! கடும்
<br />உழைப்பின்றிக் கிடைப்பதெல்லாம்
<br />உரமாக்கிக் கொள்ளாதீர்!
<br />
<br />அடிவானில் விடிவெள்ளி தெரிந்திடும் அங்கே
<br />கதிரவனாய் உம்மெழிற்சி உலகிற்குப் புரிந்திடும்.
<br />
<br />
<br />
<br />
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-108975206388291222?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7277935.post-1089577957480967992004-07-11T13:30:00.000-07:002004-07-11T13:32:37.480-07:00கருநிறப்பொட்டுஇறுக்கம் இருந்திட்ட எம்முள் - சிறு
<br />இழையாய் ஓடிடும் கருநிறப் பொட்டு
<br />பொறுக்க வில்லையோ சிலருக்கு - தீயை(ப்)
<br />பூகம்பமாக்கத்துடிப்பவர் எவரோ?
<br />அறுத்து எறியுங்கள் களையை - இல்லை
<br />அடுக்கடுக் காகவே அதுகொல்லும் பயிரை
<br />மறுக்க முடியாத உண்மை - எமை
<br />மண்ணோடு மண்ணாக்கத் துடிக்குது பகமை
<br />
<br />கண்ணியம் நிறைந்தவர் தமிழர் - எங்கள்
<br />கடமையை மறந்துமே கயவர்கால் வீழ்வதோ?
<br />பொன்பொருள் வேண்டுமா எடுத்திடு - இல்லை
<br />போதாது என்றால் என்னுயிரையும் பறித்திடு
<br />செந்நியைக் கொய்துநான் தருகின்றேன் - எந்தன்
<br />தேகத்து உறுப்பெல்லாம் அறுத்துமே கொடுக்கின்றேன்
<br />அந்நியர் கால்களை விட்டிடு - அவர்
<br />ஆதிக்கம் எம்மண்ணில் வருவதை நிறுத்திடு
<br />
<br />அந்நியர் எம்முள்ளே புகுகின்றார் - இவர்
<br />அநியாயம் செய்திட எம்மையே தூண்டிறார்
<br />உன்னினம் கொன்றுநீ வாழ்வதா? - இல்லை
<br />உறுதியாய் இருந்துமே தமிழினைக் காப்பதா?
<br />இந்நிலைதனில் நாங்கள் பிரிவதா? - இதை
<br />இழிநிலை என்றுநீ தூற்றடா துரத்தடா
<br />இன்னுமா தமிழுக்குச் சங்கடம் - அந்த
<br />இருளினை அகற்றிடச் சங்கினை முழங்கடா!
<br />
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-108957795748096799?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7277935.post-1089577494899138712004-07-11T13:20:00.000-07:002004-07-12T15:57:50.693-07:00அரசியல்சண்டை பிடிக்கின்றார் சிலபேர் - அதை(ச்)
<br /> சாட்டாக வைத்துப் பிழைப்பவர் பலபேர்
<br />பண்டை அரசர்களின் நல்லாட்சி - இன்று
<br /> பாழாய்ப் போனது சோசலீச ஆட்சி
<br />தொண்டர் தொகுதியென உரைப்பர் - பின்
<br /> தொல்லை இவர்களென தூரேனின்று குரைப்பர்
<br />உண்டுகழித்து வளர்பார் ஊனம் - பின்னர்
<br /> உலகை வழிநடத்த இவர்க்கெங்கே நேரம்?
<br />
<br />நித்தம் உரைப்பது சமாதானம் - ஆனால்
<br /> நினைவில் இருப்பதுவோ ஆட்சிப்பீடம்
<br />தத்தம் பதவிகளைக் காப்பதற்காய் - பலர்
<br /> தாவிக்குதிக்கின்றார் மந்திகள் போல்
<br />புத்தன் உரைத்தவைகள் புனிதமொழி - அரசின்
<br /> புன்னகையில்த் தெரிவதுவோ சமய வெறி
<br />முத்தம் தருகின்றோம் குழந்தைகளாய் - அதை
<br /> முறையாக எடுப்பதுதான் மனித குணம்
<br />
<br />பெருமையாய் வருகின்றார் தமிழரின்று - அவர்
<br /> பேச்சினை முறிக்கின்றீர் இதுவா நன்று
<br />வெறுமை உடலுமீற்றில் உலாப்போகும் - அது
<br /> விழித்து இருக்கையில் நீர் உலவவிடும்
<br />அருமை யானதுதான் சமாதானம் - அதை
<br /> அவமதிப்பதால் வேண்டாம் யுத்த காண்டம்
<br />பொறுமை போதுமினிப் புறப்படுங்கள் - தமிழர்
<br /> பொறுமை யிழக்க முன்னர் வழிகொடுங்கள்.
<br />
<br />
<br /> <div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-108957749489913871?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7277935.post-1089279639800221712004-07-08T02:33:00.000-07:002004-07-08T02:40:39.800-07:00 நன்றிசென்றவுயிர் வந்ததடி நின்னைக்கண்டு
<br />
<br /> சோர்ந்தநெஞ்சு துடிக்குதடி உன்னாலின்று
<br />
<br />குன்றாக இருந்தநானும் சிகரமானேன்
<br />
<br /> குங்குமமே உன்னால்நானும் சிவந்தேபோனேன்
<br />
<br />வென்றேனெந்தன் சோகமெல்லாம் உந்தனாலே
<br />
<br /> வேதனைகள் களைந்துநின்றேன் உன்னால்தானே
<br />
<br />நன்றிநான் சொல்லுகின்றேன் அந்தநாட்கு
<br />
<br /> நமைச்சேர்த்த நாளதுவே நன்றிநன்றி!<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-108927963980022171?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7277935.post-1088551504502339162004-06-29T16:24:00.000-07:002004-06-29T16:25:04.503-07:00முழுமதி எழுந்ததுகண்ணியமாகவே விண்ணை; நற்
<br />கற்புடன் இருத்திட துகிலென முகில்கள்
<br />எண்ணிய வடிவிலே வந்து; விண்ணில்
<br />எழுந்துமே எழிலுற்றுப் பரந்தனதானே
<br />கண்களை மூடிடும் போது; வரும்
<br />கருநிற நிலையினை உணர்வது போலே
<br />விண்ணெலாம் காரிருள்தானே; அதில்
<br />வீசிடும் ஒளியுடன் மலர்வகைதானே
<br />
<br />ஓடி ஒளித்தது சூரியன்; எங்கும்
<br />ஒளியை மறைத்து எழுந்தது இருள்மயம்
<br />நாடி வந்தன கூட்டினை; பறவைகள்
<br />நானிலம் சுற்றியே இருப்பிடம் திரும்பின
<br />வாடிய வயிற்றினால் அலரிய குழவிபோல்
<br />வந்தொரு ஆந்தையும் அலறிற்று; குழறிற்று
<br />மூடிய அவள்முகம் திறந்தது போலவே
<br />முழுமதி வானிலே எழுந்தது; பிறந்தது.
<br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-108855150450233916?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7277935.post-1088326216111843482004-06-27T01:46:00.000-07:002005-03-17T15:35:21.000-08:00உதிரமான தமிழ்உள்ளத்தின் உணர்வு நீயே<br />ஓடுகின்ற உதிரம் நீயே<br />வள்ளுவனின் குறளும் நீயே<br />வார்த்தையின் வாக்கும் நீயே<br />மெல்லவரும் காற்றும் நீயே<br />மேதினியின் அசைவும் நீயே<br />வெள்ளத்தின் வேகம் நீயே<br />வெற்றியெனும் நாதம்நீயே<br /><br />மலர்களின் மணமாய் உள்ளாய்<br />மாசற்ற நிறமாய் உள்ளாய்<br />நலமான வாழ்வாய் உள்ளாய்<br />நல்லதோர் உறவாய் உள்ளாய்<br />நிலங்களின் பசுமையில் உள்ளாய்<br />நிலாவின் ஒளியில் உள்ளாய்<br />கலங்காத நீரில் உள்ளாய்<br />கன்னியர் கற்பில் உள்ளாய்<br /><br />மலைகளின் அழகும் நீதான்<br />நதிகளின் வண்ணம் நீதான்<br />அலைகளின் ஓசை நீதான்<br />அழகான இயற்கை நீதான்<br />கலைகளின் தோற்றம் நீதான்<br />காதலின் சுவையும் நீதான்<br />நிலையான இன்பம் நீதான்<br />நிரந்தரப் பொருளும் நீதான்<br /><br />வானத்தை உன்னில்க் கண்டேன்<br />வளம்மிக்க தோற்றம் கண்டேன்<br />மானத்தின் தன்மை கண்டேன்<br />மகத்தான வீரம் கண்டேன்<br />தானத்தின் வடிவைக் கண்டேன்<br />தமிழரின் உணர்வைக் கண்டேன்<br />கானத்தின் இனிமை கண்டேன்<br />கன்னித்தமிழ்க் கவிதை கண்டேன்<br /><br />அன்பான உருவமாக<br />அசையாத வடிவமாக<br />இன்பத்தின் தோற்றமாக<br />இதமான வருடலாக<br />மன்னவர் மகுடமாக<br />மாணிக்க மணியுமாக<br />நின்னையே எங்கும் கண்டேன்<br />நிரந்தரத் தன்மையாக.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7277935-108832621611184348?l=stkunran.blogspot.com'/></div>stkunranhttp://www.blogger.com/profile/14583357882318585004noreply@blogger.com0