<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss'><id>tag:blogger.com,1999:blog-6799842</id><updated>2009-03-03T17:07:26.926+05:30</updated><title type='text'>தேசிகன் வலைப்பதிவு </title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default?start-index=26&amp;max-results=25'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>104</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-112477481743271014</id><published>2005-08-23T10:43:00.000+05:30</published><updated>2005-08-24T18:55:49.750+05:30</updated><title type='text'>வருக வருக</title><content type='html'>&lt;a href="http://www.desikan.com"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4857/386/400/bee.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;இன்று முதல் எனது புதிய வலைப்பதிவு மற்றும் வலைத்தளம் &lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;http://www.desikan.com&lt;/span&gt; இயங்க ஆரம்பித்திருக்கிறது.&lt;br /&gt;வருக வருக என்று உங்களை அன்புடன் வரவேற்கிறேன். மேல் விபரங்களுக்கு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;a href="http://www.desikan.com"&gt;&lt;strong&gt;http://www.desikan.com&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt; க்கு ஒரு எட்டு வந்துட்டு போங்களேன்..&lt;br /&gt;&lt;br /&gt;                                                      தேசிகன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;(பிகு: வண்டை கிளிக் செய்தால் என் புது வீட்டுக்கு போகலாம்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-112477481743271014?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/112477481743271014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=112477481743271014&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/112477481743271014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/112477481743271014'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/08/blog-post_23.html' title='வருக வருக'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-112384432161478116</id><published>2005-08-12T16:23:00.000+05:30</published><updated>2005-08-12T16:41:49.690+05:30</updated><title type='text'>நீங்கள் எத்தனை புத்திசாலி</title><content type='html'>இந்த வாரம் கற்றதும் பெற்றதும்'ல்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;நீங்கள் எத்தனை புத்திசாலி’ என்று சி.சபரிநாதன் முப்பது விநோத வாக்கியங்களை எக்ஸெல்லில் மின்னஞ்சலில் கொடுத்து, விடை கேட்டிருந்தார். அதாவது, Roads என்பதை இடம் வலம் மேல் கீழாக எழுதியிருப்பதை CrossRoads என்று கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். பத்துப் பதினைந்து கண்டுபிடிக்க முடிந்தது. இம்மாதிரி தமிழிலும் செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. பன்னிரண்டு கொடுத்திருக்கிறேன். பத்தை நீங்கள் கண்டுபிடித்தாலே, என்னளவு புத்திசாலி! &lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4857/386/1600/vikatan_puzzle.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4857/386/400/vikatan_puzzle.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;அடுத்த இதழில் விடைகள் வருவதற்குள் எழுதிப் போட்டால், ‘குளுக்கள்' முறையில் பரிசு. பத்தாவது கொஞ்சம் கஷ்டம். மற்றவற்றை சுலபத்தில் கண்டுபிடித்து விடலாம். &lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-112384432161478116?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/112384432161478116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=112384432161478116&amp;isPopup=true' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/112384432161478116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/112384432161478116'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/08/blog-post.html' title='நீங்கள் எத்தனை புத்திசாலி'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-112287842329511146</id><published>2005-08-01T12:08:00.000+05:30</published><updated>2005-08-01T12:16:27.806+05:30</updated><title type='text'>www.desikan.com</title><content type='html'>என் &lt;a href="http://www.employees.org/~desikan/"&gt;வீட்டுப்பக்கத்தையும்&lt;/a&gt;, &lt;a href="http://desikann.blogspot.com"&gt;வலைப்பதிவையும்&lt;/a&gt; &lt;a href="http://www.desikan.com"&gt;www.desikan.com&lt;/a&gt; என்ற வலைத்தலத்தில் இணைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். உங்கள் வசவுகளும் வாழ்த்துகளும் வரவேற்க்கப்படும். இந்த வேலையினால் அவ்வப்போது தான் பதிவுகள் இடம் பெரும். அதுவரை கீழே உள்ள புதிருக்கு(கூகிளை நாடாமல்) விடை காண முயலுங்கள்.. (பின்னூட்டத்தில் (அ) ஈ-மெயிலில் தெரியப்படுத்தவும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4857/386/1600/puzzle1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4857/386/400/puzzle.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் புதிருக்கு விடை: &lt;br /&gt;1. Seven Seas&lt;br /&gt;&lt;br /&gt;பிகு:&lt;br /&gt;இதே போல் தமிழில் யாராவது உருவாக்கினால் எனக்கு தெரியப்படுத்தவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-112287842329511146?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/112287842329511146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=112287842329511146&amp;isPopup=true' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/112287842329511146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/112287842329511146'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/08/wwwdesikancom.html' title='www.desikan.com'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-112106236528565588</id><published>2005-07-11T11:36:00.000+05:30</published><updated>2005-07-11T11:55:24.176+05:30</updated><title type='text'>அந்நியன்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4857/386/1600/anniyan_ambi_1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4857/386/400/anniyan_ambi_1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;வேதாளத்திற்கு மூடவுட் + தலைவலி.&lt;br /&gt;"என்ன ஆச்சு நேத்திக்கு ரொம்ப நேரம் மரத்தில தொங்கினியா ?" என்று விக்கிரமாதித்தன் பேச்சு கொடுத்தான்.&lt;br /&gt;"அந்நியன் நைட் ஷோ படம் பார்த்துட்டு வரும் போதே மணி இரண்டு, அப்புறம் எப்படி மரத்திலே தொங்குவது" என்று வேதாளம் அலுத்துக்கொண்டது.&lt;br /&gt;"அதற்கு என்ன படம் நல்லாதானே இருந்தது"&lt;br /&gt;அமிர்தாஞ்சன் பாட்டிலை தேடியவாரே "ஏன் சொல்லமாட்டே, உங்க ஆள் படமாச்சே" என்றது வேதாளம்.&lt;br /&gt;"படத்தில விக்கிரம் ஆக்டிங் எவ்வளவு சூப்பராக இருந்தது, அதுவும் மூணு வேஷத்தில என்னாமா நடிச்சிரிக்கார்" என்றான் விக்கிரமாதித்தன்.&lt;br /&gt;"விக்கிரம் நல்லாதான் செய்திருக்கார், என்ன தன் பங்க் தலையை முடிந்து குடுமி போட்டுக்கொண்டு வாயை இழுத்து இழுத்து பேசினால் ரூல்ஸ் ராமானுஜம் என்ற அம்பி, செம்பட்டை டை அடித்துக்கொண்டு நுனிநாக்கு ஆங்கிலம்(c'mon nandy ...let's go yo-yo) பேசினால் ரெமோ, சனல் கயிறு போல் தலை மயிரை முகத்தின் (அல்லது காமிரா லென்ஸ் முன்) முன்னாடி போட்டுக்கொண்டு கண்ணை உருட்டினால் அந்நியன். இது ஆக்டிங் இல்லை மேக்கப். ஆக்டிங் என்றால் கடைசியில் அம்பியாகவும், அந்நியனாகவும் மாறி மாறி வராரே அதுதான்." என்று வேதாளம் விக்கிரமாதித்தனை கரெக்ட் செய்தது.&lt;br /&gt;"ஹாரிஸ் ஜெயராஜ், இசை எப்படி நன்றாகதானே இருந்தது அதுவும் அந்த "ஐயங்காரு வீட்டு அழகே...கலக்கிட்டாரு"&lt;br /&gt;"பாட்டெல்லாம் கேசட்டில் கேட்க சுமார்தான். படத்தோடு பரவாயில்லை. ஷங்கர் ஹாரிஸ் ஜெயராஜுகு பாட்டுக்கு மட்டும் தான் பணம் கொடுத்திருப்பார்னு நினைக்கிறேன், என்னா BGM எனக்கு கேட்கலையே!"&lt;br /&gt;"அப்படியா நான் கவணிக்கலேயே"&lt;br /&gt;வேதாளம் அமிர்தாஞ்சன் தடவிக்கொண்டே "அமாம் நீ எங்கே இதலாம் கவனிக்க போற, படம் முழுக்க பாப்கார்ன் சாப்பிட்டுண்டே இருந்தையே"&lt;br /&gt;"கதை நல்லாதானே இருத்தது"&lt;br /&gt;"எனக்கு என்னமோ இந்தியன்-2 பார்த்த ஃபீலிங். அதுவும் அந்நியன் வாய்ஸ் அப்படியே கமல் தாத்தா போலவே இருந்தது. இந்தியனில் லஞ்சம் பற்றி சுஜாதா ஒரு வசனம் எழுதியிருப்பார் ( நிழல்கள் ரவியை கொலை செய்யும் முன்) அதே போல இதுலேயும் நிறைய வருது. வசனம் மட்டும் இல்லேனா படம் ஊத்திருக்கும்."&lt;br /&gt;"படத்தில் ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும் அற்புதமா இருக்கு அது உன் கண்ணுக்கு தெரியலையா?" என்றான் விக்கிரமாதித்தன் கோபமாக.&lt;br /&gt;"பேசாம இந்த படத்துக்கு மேட்டரிக்ஸ் ரீலோடட் என்று பெயர் வைத்திருக்கலாம். அப்புறம் கண்ணும் கண்ணும் நோக்கியா பாட்டில், காமிராமானின் உருவம் Petronas Twin டவரில் ரிப்லெக்ஷனாக தெரிகிறதே அது ரவிமரனா அல்லது மணிகண்டனா? " என்றது வேதாளம்.&lt;br /&gt;"ஷங்கரின் சமுதாய அக்கரையை பார் இது போல் தமிழில் படம் வந்திருக்கா?"&lt;br /&gt;"எல்லாம் சரி, அம்பி சதாவிற்கு சங்கித சான்ஸ் கேட்பதற்கே சாரியின் சிபாரிசுவுடன் தானே போகிறார், ஆனால் அங்கே ஒரு MP சிபாரிசுக்கு எதிராக பேசுகிறாரே?. அப்புறம் இவ்வளவு ரூல்ஸ் பேசும் அம்பு வண்டியில் போகும் போது ஏன் ஹெல்மெட் அணிவதில்லை, குடுமி இடிக்கும் என்பதாலா ?"&lt;br /&gt;"சரி, சரி, ஒரு சின்ன தப்பு இதை ஏன் பெரிசா எடுத்துக்கிறே" என்றான் விக்கிரமாதித்தன்.&lt;br /&gt;"தப்பு என்ன பனியன் சைஸா..ஸ்மால், மீடியம், லார்ஜ்னு சொல்ல…எல்லா தப்பும் ஒரே சைஸ் தான், அதோட எஃபெக்ட் எப்போதுமே எக்ஸ்டிரா லார்ஜ் தான்" என்று வேதாளம் அந்நியனில் வந்த வசனத்தை சொல்லி காண்பித்தது.&lt;br /&gt;"இந்தியாவை திருத்த அந்நியன் போல் யாராவது இருந்தால் தான் முடியும்"&lt;br /&gt;"சபாஷ், தனிமனித ஒழுக்கம் தவறியவர், சட்டத்தைக் கடைப்பிடிக்காதவர்கள், எச்சில் துப்பும் சோம்பேரி (இந்த மனிதரால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை அதனால் கொன்று விடலாம்!. ) என்று எல்லோரையும் சகட்டு மேனிக்கு கருட புராணத்தில் சொல்லியிருப்பது போல் கொலை செய்வது கொஞ்சம் ஓவர். எந்த பிரச்சனைக்கும் கொலை தீர்வாகாது. அப்புறம் சதா, சங்கீத சபா செயலாளர் போன்றோரின் தப்பை மன்னிக்கும் அம்பி, மற்றவர்களை மன்னிக்காதது ஏன்னோ? "&lt;br /&gt;"என்ன நீயும் அவங்களோட கட்சியில் சேர்ந்துட்டையா என்ன ?" என்றான் விக்கிரமாதித்தன்.&lt;br /&gt;"அவங்களோட கட்சி என்றால் யாரோட கட்சி?" என்று வேதாளம் புரியாமல் கேட்டது.&lt;br /&gt;"மெசேஜை பார், மத்ததை பார்காதே. நாட்டு நலம், ஒழுக்கம், ரூல்ஸ் எல்லாம் எப்படி வலியுருத்தப்பட்டிருக்கிறது அதற்கே இரு சபாஷ் போடலாம்" என்றான் விக்கிரமாதித்தன் விடாமல்.&lt;br /&gt;அப்போது வேதாளம் ஜன்னலுக்கு வெளியே பார் என்றது. அங்கு அந்நியன் ரூல்ஸ் ராமானுஜன் போஸ்டரில் சிரித்துக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;அதற்கு ஒரு இன்ச் மேலே "இங்கு நோட்டிஸ், எழுதவோ, ஒட்டவோ கூடாது" என்று இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-112106236528565588?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/112106236528565588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=112106236528565588&amp;isPopup=true' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/112106236528565588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/112106236528565588'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/07/blog-post.html' title='அந்நியன்'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111925572508505291</id><published>2005-06-20T13:51:00.000+05:30</published><updated>2005-06-20T13:52:05.093+05:30</updated><title type='text'></title><content type='html'>பத்தாம் நூற்றாண்டுத் தமிழ்... இருபத்தோராம் நூற்றாண்டு இசை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_ilayaraja.jpg" alt="Image hosted by Photobucket.com", align="right"&gt;சென்னை, கத்தோலிக்க திருச்சபையின் தமிழ் மையத்தின் நவீன சவுண்ட் ஸ்டுடியோவில், சுற்றிலும் இதமான ஒலிப்பின்னல்கள் சூழ, இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் ஆரட்டோரியோ பகுதியைக் கேட்டு மகிழ்ந்தேன். உடனே, அவருக்கு போன் செய்து பாராட்டினேன். ''வீட்டுக்கு வாங்க, சாவகாசமா பேசலாம்!'' என்றார். சென்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில், திருவாசகம் சிம்பொனி அனுபவம். இதை சிம்பொனி என்று அழைப்பது சரியில்லை என்கிறார். ஆரட்டோரியோஎன்கிற வகையில் தான் சேரும். ஆரட்டோரியோ என்பது musical work for orchestra and voices on a sacred theme. வாத்தியங்களுக்கும் குரல்களுக்கும் ஆக்கப் பட்ட புனிதமான கருத் துள்ள இசைப் படைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;''சிம்பொனி என்பது குறைந்தபட்சம் நான்கு அசைவுகள் கொண்ட விஸ்தாரமான இசைக்கோலம். சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் வாசித்ததால் மட்டும் இதை சிம்பொனி என்று சொல்ல முடியாது. கூடாது'' என்றார். இருந்தும், சிம்பொனி என்ற பதம் நிலைத்துவிட்டது. தென்னாடுடைய சிவன் என்னாட்டுக்கும் இறைவன் விதித்தது அது. &lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவாசகரின் தமிழ் இளையராஜாவின் பரிவு மிக்க குரலில், முதலில் ஒலிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;'பூவார் சென்னி மன்னன் என்&lt;br /&gt;புயங்கப் பெருமான் சிறியோமை &lt;br /&gt;&lt;br /&gt;ஓவாது உள்ளம் கலந்து&lt;br /&gt;உணர்வாய் உருக்கும்&lt;br /&gt;வெள்ளக்கருணையினால்...' &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு துவங்குகிறார். (புயங்கம் என்றால், பாம்பு அல்லது ஒருவகைக் கூத்து) உடன், ஹங்கேரி புடாபெஸ்ட்டின் பாரம்பரியமிக்க பில்ஹார்மானிக் குழுவின் (நெறியாளர் &amp; லாஸலோ கோவாக்ஸ்) நூற்றுக்கணக்கான வயலின்களும், மேற்கத்திய வாத்தியங்களும் கம்பீரமாகச் சேர்ந்துகொள்ள, ஸ்டீஃபன் ஷ்வார்டஸ் (அகாடமி அவார்ட் வாங்கியவர்) அளவாக, &lt;br /&gt;&lt;br /&gt;I’m just a man &lt;br /&gt;Imperfect lowly &lt;br /&gt;How can I reach for &lt;br /&gt;Somthing holy &lt;br /&gt;&lt;br /&gt;என்று ஆங்கில வரிகளாக மொழி பெயர்க்க, ஓர் அமெரிக்கர் அதைப் பாட, நியூயார்க்கில் பதிவு செய்த குரல்களும் சென்னைக் குரல்களுடன் சேர்ந்துகொள்ள, ஒரு பரவச நிலையில் பத்தாம் நூற்றாண்டுத் தமிழும் இருபத்தோராம் நூற்றாண்டு இசையின் இதமும் உலகளவு விரிய, மெய் சிலிர்க்கிறது. சொர்க்கத்துக்கு அடியவரோடு எழும் தருணத்தில், மாணிக்கவாசகர் இயற்றிய யாத்திரைப் பத்திலிருந்து எடுத்த இந்தத் துவக்கம் ஈசன் செயலாக நிகழ்ந்தது என்கிறார் இளையராஜா. இதன்பின், முதல் பதிகமான சிவபுராணத்தின் சம்பிரதாயமான ‘நமசிவாய வாழ்க’வில் ஆரம்பிக்காமல், &lt;br /&gt;&lt;br /&gt;'பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்&lt;br /&gt;புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி&lt;br /&gt;பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி&lt;br /&gt;கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாகி&lt;br /&gt;வல்லசுரராகி முனிவராய் தேவராய் &lt;br /&gt;செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்...' &lt;br /&gt;&lt;br /&gt;என்று பரிணாம தத்துவத்தை, ஏறக்குறைய டார்வினுக்கருகில் கொண்டு வந்துவிட்ட வரிகளை எடுத்துக்கொள்கிறார். (So many forms I must wear. So many lives I must bear.) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘புற்றில் வாழ அரவும் அஞ்சேன் &lt;br /&gt;பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் &lt;br /&gt;கற்றிலாதவரைக் கண்டால் அம்ம நான்&lt;br /&gt;அஞ்சுமாறே’ &lt;br /&gt;&lt;br /&gt;என்று அச்சப்பதிகத்திலிருந்தும், அதன்பின் அச்சோப்பத்து திருக்கோத்தும்பி என்று திருவாசகத்தின் முக்கியமான வரிகளை எடுத்துக் கொண்டு இசையமைத்து, முழு நூலையும் ரசித்த அனுபவத்தை இருபது நிமிஷத்தில் ஏற்படுத்துகிறார். அவ்வப்போது ஆரட்டோரியோ ஸ்டைலுக்கு ஏற்ப, லேசான ஆங்கில வரிகள் மொழிபெயர்ப்பில் உறுத்தாமல் அமெரிக்கர் பாடும்போது நிகழும் அனுபவத்தில், சங்கீதம் கால தேசம் மொழி எல்லாம் கடந்தது என்பது நிரூபணமாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இசைஞானி திருவாசகத்துக்கு நிஜமாகவே உருகியுள்ளார். மேற்கத்திய ஒத்திசைவையும் (ஹார்மனி) கிழக்கத்திய மெட்டையும் (மெலடி) சமனப்படுத்தும்போது, எந்த இடத்திலும் அவர் நம் ஆதார ராக அமைப்பைத் துறக்காமல், அவர்கள் பாணிக்காக சமரசம் செய் யாமல், நம் ராகங்களிலேயே மேற்கத்திய சிம்பொனி அமைப்பைக் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார். விளைவு, ஒரு மிகப் புதிய சங்கீதானுபவம்! &lt;br /&gt;&lt;br /&gt;வருகிற ஜூன் 30&amp;ம் தேதி, சென்னை மியூஸிக் அகாடமியில், இதன் கேசெட்டும் சி.டி\யும் வெளியிடப் போகிறார்கள். எல்லோரும் உற்சாகத்துடன், தமிழ் தெரிந்தவர்கள் கூடுதல் உற்சாகத்துடன் இதை வாங்கிக் கேட்கலாம். சினிமா இசையையும், ஒரே மாதிரியான குத்துப் பாடல்களையுமே கேட்டலுத்த செவிகளுக்கு மிகவும் மாறுபட்ட ஓர் அனுபவம் காத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;''அதை நான் குறை சொல்ல மாட்டேன். நினைத்தால் என்னால் பாப் இசையை ஒரு கைசொடக்கில் கொண்டுவர முடியும். அந்தச் சங்கீதம் ரசனைக்கு ஏற்ப இறங்கி வருவது. இந்தச் சங்கீதம் படியேற்றம். புடாபெஸ்ட்டில், அவர்கள் நான் எழுதியதை ஒத்திகையாக முதலில் வாசித்தபோது, தமக்குள் சிரித்துக் கொண்டார்கள். நான் நிறுத்திவிட்டு, மொழிபெயர்ப்பாளரைக் கூப்பிட்டு, அவர்களிடம் பேசினேன். ‘நீங்கள் பின்னணி வாசிக்கப்போகும் இந்தப் பாடல், பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தலைசிறந்த மன்னன் கவிஞனுடையது. இறைவனிடம், பிறந்தலுத்த ஓர் ஆத்மாவின் வானுலக இச்சைகளையும் தெரிவிக்கும் உன்னதமான பாடல்கள்’ என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;மறுபடி பாடிக் காட்டினேன். அவர்கள் இப்போது கண்கள் விரிந்து, பாடலின் ஆத்மாவைப் பிடித்து, சிறப்பாக வாசிக்கத் துவங்கினார்கள். சவுண்ட் இன்ஜினீயர் ரிச்சர்ட் கிங், ‘இம்மாதிரி எல்லா அமைப்பாளர்களும் பாடிக் காட்டினால், சிறப்பு கூடும்' என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;முதல் மூன்று நிமிஷத்துக்கான இசைக்கு ஸ்கோர் எழுபது பக்கம் எழுதியிருந்தேன். ஒரே நாளில் 26 பக்கம் எழுதியதைப் பார்த்து, கின்னஸ் சாதனையாக வியந்தார்கள்’’ என்றார் இளையராஜா. &lt;br /&gt;&lt;br /&gt;''இதற்கெல்லாம் காரணம் யார்?'' என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;''ஈசன்தான். இளையராஜா ஒரு கருவிதான். கத்தோலிக்க நண்பர்கள் மையத்தையும், பாஷை தெரியாத பில்ஹார்மானிக் குழுவையும், நியூயார்க் குரல்களையும், மாணிக்கவாசகர் என்னும்மேதையையும் ஒருங்கிணைத்தது ஈசன்தான். கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்வே அத்தாட்சி!’’ என்றார். மற்றொரு ஜீனியஸைச் சொல்லாமல் விட்டு விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ராஜாவின் திருவாசகத்தை ரசிக்க, நான் சிபாரிசு செய்யும் வழிகள் இவை. &lt;br /&gt;&lt;br /&gt;1. சி.டி.யோ, டேப்போ... முதலில் காசு கொடுத்து வாங்குங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;2. இன்டர்நெட்டில் அனுப்பாதீர்கள். பிரதி எடுக்காதீர்கள். ஒரு அபாரமான கலைஞனுக்கு செய்யக்கூடிய குறைந்தபட்ச மரியாதை இது. மேலும், எம்.பி.3&amp;யில் கேட்காதீர்கள். அதில் நிகழும் கம்ப்ரெஷன் இதன் உண்மையான செவிக்கினிமையைக் குறைத்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;3. போஸ் போன்ற ஒரு நல்ல சிஸ்டத்தில், சர்ரவுண்ட் சவுண்டில் கேளுங்கள். காரிலோ, செல்போன் பேசிக்கொண்டோ கேட்காதீர்கள். மற்ற பேரை தொந்தரவு செய்யாமலிருக்க விரும்பினால், ஆப்பிள் ஐபோடு சார்ந்த சில அபாரமான ஹெட்போன்களிலும் கேட்கலாம். 4. தனிமையில், இரவில் அல்லது அதிகாலையில் கேளுங்கள். இரண்டு நாள் விட்டு மறுபடி கேளுங்கள். நான், மையத்தில் தனியாக இருளில் உட்கார்ந்துகொண்டு, சவுண்ட் ப்ரூஃப் ஸ்டுடியோவின் நிசப்தத்தில் கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;5. ரொம்ப அலறவிடாதீர்கள். சிம்பொனியில் உள்ள ஏற்ற இறக்கங்களை மழுப்பிவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;6. கொஞ்சம் சங்கீதம் தெரிந்தால் நல்லது. ராகம் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அந்தந்த ராகங்கள் தரும் மூடை (Mood) இயல்பாக உங்கள் உள்ளத்தில் அனுமதியுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;7. கேட்டு முடித்ததும் பாராட்டி, இசைஞானிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். ijaja2005@yahoo.co.in &lt;br /&gt;&lt;br /&gt;8. உங்கள் நண்பர் களை வாங்கச் சொல்லுங்கள். இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஆதரவு தந்தால்தான், இந்தப் புதிய சங்கீதம் மேன்மேலும் நம் இலக்கியங்களுக்கும் உலகுக்கும் இசைப்பாலம் அமைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ராஜா அடுத்துச் செய்ய விரும்பும் காரியங்கள் என்னென்ன என்பதைப் பற்றிக் கொஞ்சம் பேசினோம். திவ்ய பிரபந்தத்தையும் செய்ய விரும்புகிறார். அதுபோல், சிலப்பதிகாரத்தின் சில அபாரமான வரிகளை மியூஸிக் வடிவத்தில் சுலபமாகச் செய்யமுடியும் என்கிறார். ராமாயணம் அல்லது மகாபாரதத்திலிருந்து சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இசைமாலை சூட்டலாம் என்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;தேவை நிதி. டி.வி.எஸ்., சன்மார் போன்ற நிறுவனங்களும், வங்கிகளும், விளம்பரத்துக்கு ஏராளமாகச் செலவழிக்கும் கம்பெனிகளும், தங்க, வைர வியாபாரி களும், புடவைக் கடைக்காரர்களும் இணைந்து நிதி ஒதுக்கினால் சாத்தியமாகும். என்னிடம்ஒரு கோடி ரூபாய் இல்லை. இருந்தால், உடனே செக் எழுதித் தந்திருப்பேன். அத்தகைய அனுபவத்தை அவர் ஏற்படுத்தினார். நன்றி ராஜா ஸார்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;நன்றி: ஆனந்த விகடன்&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111925572508505291?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111925572508505291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111925572508505291&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111925572508505291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111925572508505291'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/06/blog-post_20.html' title=''/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111838293693612881</id><published>2005-06-10T11:19:00.000+05:30</published><updated>2005-06-10T11:25:36.943+05:30</updated><title type='text'>கலந்துரையாடல் பற்றி சுஜாதா..</title><content type='html'>இந்த வார கற்றதும் பெற்றதும்'ல் கலந்துரையாடல் பற்றி சுஜாதா...&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;நான் எழுதியது அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்து என்னைவிடக் கூர்மையாக ஞாபகம் வைத்திருக்கும் வலுவான வாசகர்கள் ஒன்பது பேரைச் சந்திக்கும் வாய்ப்பை நண்பர் தேசிகன் ஏற்படுத்தியிருந்தார். உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலில் டம்ளர்கள் இரைச்சலினூடே சந்தித்தோம். எனக்கே ஞாபகமில்லாத பல கதைகளை இகாரஸ் பிரகாஷ் போன்றவர்கள் நினைவு வைத்துக்கொண்டு அதன் உள்ளர்த்தங்களை அலசும்போது லக்கலக்கலக்கலாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. இவ்வளவு அருகில் ஒரு எழுத்தாளன் இவ்வளவு விவரமான வாசக/வாசகியரைச் சந்திப்பது மற்ற பேருக்கு பன்னீராக இருக்கலாம். எனக்குக் கொஞ்சம் வெந்நீர்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;கதையோ, கட்டுரையோ எழுதி முடித்து பிரசுரமான மறுகணம் எழுதியவனைவிட்டு பரதேசம் போய்விடுகிறது. அது ஊர் ஊராக அலைந்து கடைசியில் எழுதினவனிடம் திரும்பும்போது அடையாளம் மாறி சின்னச் சின்ன சிராய்ப்புகளுடன் வந்து சேருகிறது. நான் எழுபது, எண்பதுகளில் எழுதிய கதைகளான 'குருபிரசாத்தின் கடைசி தினம்' 'நகரம்', 'வீடு', 'முரண்' போன்ற கதைகள் என்னை விவாகரத்து செய்துவிட்டன. அவற்றைப் பிறர் அலசும்போது எப்போதோ பார்த்த ஒரு கார்ட்டூன்தான் ஞாபகம் வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆபரேஷன் டேபிள், டாக்டர்கள் சுற்றிலும் நின்றுகொண்டு ஒருங்கிணைந்து தீவிரமாக ஆபரேஷன் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஓரத்தில் பேஷன்ட்டும் ஒரு கவுன் குல்லாயுடன் நின்று பின்னால் கை கட்டியபடி உன்னிப்பாக அந்த ஆபரேஷனைக் கவனித்துக்கொண்டு இருப்பார். அந்த நிலைதான் அன்று எனக்கு ஏற்பட்டது. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் குறைந்தபட்ச தூரமாவது தேவை என்பது தான் அன்றைய பாடம். &lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;நன்றி: ஆனந்த விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111838293693612881?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111838293693612881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111838293693612881&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111838293693612881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111838293693612881'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/06/blog-post_10.html' title='கலந்துரையாடல் பற்றி சுஜாதா..'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111829502410203358</id><published>2005-06-09T10:51:00.000+05:30</published><updated>2005-06-09T11:16:22.720+05:30</updated><title type='text'>ஸ்ரீரங்கம் - 6</title><content type='html'>&lt;em&gt;எறக்குறைய ஒரு வருடம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீரங்கம் தொடரை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்... &lt;br /&gt;- தேசிகன்&lt;/em&gt;&lt;br /&gt;- * - * - * &lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/srirangam/sri_venugopal.jpg" alt="Image hosted by Photobucket.com", align="right"&gt;இந்த பதிவில் கிபி 1178-1310 முதல் நடைபெற்ற நிகழ்ச்சிகளை சுருக்கமாக தந்துள்ளேன். இந்த காலத்தில் சோழ அரசர்கள் வீழ்ச்சியும், பாண்டிய அரசர்கள் மலர்ச்சியும் பெற்ற காலம் என்று கூறலாம். சோழ மற்றும் பாண்டிய அரசர்களின் சண்டையினால் மைசூரை ஆண்ட ஒய்சள அரசர்கள், சேர அரசர்கள், இலங்கை அரசர்கள் மற்றும் கீழ்த்திசைக் கங்கர்களும் ஊடுருவ நல்ல சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. பாண்டிய அரசர்களுக்கு எதிராக ஒய்சள அரசர்கள் சோழர்களுக்கு உதவி செய்தனர். காலபோக்கில் ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் உள்ள கண்ணனூர், விக்கிரமபுரி ஆகிய இடங்களை தங்களுக்கு கீழ் கொண்டு வந்து, தங்களின் உப தலை நகரமாக ஆக்கிகொண்டார்கள். பின்னர் முஸ்லிம் மன்னர்கள் மாலிக்காபூர்(1310-11), துக்ளக்(1323) போன்றவர்கள் கோயிலை சூரையாடினர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் வைணவ தலைமைச் செயலகமாக திகழ்ந்தது. ராமானுஜருக்கு அடுத்து வந்தவர்கள் ஸ்ரீரங்கம் கோயிலை சார்ந்தவர்கள் ஆவர். இந்த காலகட்டதில் தான் தென்கலை-வடகலை பிரிவு உண்டாயிற்று. ( இதை பற்றி தனியாக ஒரு பதிவில் சொல்கிறேன் )&lt;br /&gt;&lt;br /&gt;சாளுக்கிய சோழகுல மரபில் தோன்றிய மூன்றாம் குலோத்துங்கனின் (கிபி 1178-1218 ) இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வேட்டு ஒன்று, ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகம் அவனது ஆட்சியின் கீழ் வந்தது என்று கூறுகிறது. மேலும் இக்கல்வெட்டு திருவானைக் கோயிலில் உள்ள ஜம்புகேசுவரர் என்ற சைவக்கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் அந்த காலத்தில் இருந்த நிலப் பூசல்களைக் தீர்க்க முயன்றான் என்று கூறுகிறது.&lt;br /&gt;இக்காலம் பல இன்னல்களுக்குட்பட்டிருந்தது. சோழர்குல மன்னர்களின் ஆட்சியானது ஒரிசாவரையில் பரவி ஆதிக்கம் பெற்றுருந்த போதிலும், ஒரிசா மக்களும், கிழ்த்திசைக் கங்கார்களும், பாண்டியர்களும் இலங்கை அரசனின் துணையுடன் அடிக்கடி சோழரை எதிர்த்து சண்டையிட்டனர். கிபி 1223-1225 வரை ஸ்ரீரங்கம் கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டது. அவர்களால் அக்காலத்தில் இக்கோயிலில் நிர்வாகம் சிதைந்து பாழ்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சாளுக்கிய சோழ அரசர்களுக்கு, மைசூர் ஓய்சள அரசர்கள் பெரிதும் துணை புரிந்தபோதிலும், முதலாம் மாறவர்ம சுந்திர பாண்டிய மன்னன் (கிபி, 1216-1238) கருநாடகத்தைக் கைப்பற்றினான். அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டில், அவனுடைய படைகள் ஸ்ரீரங்கத்தை கங்கர்களிடமிருந்து விடுதலைப்பெறச்செய்தது. ஆனால் ஒய்சள மன்னர்களும், இக்கொயிலில் ஈடுபட்டு ஆர்வம் காட்டினர், அவர்கள் பல கல்வெட்டுக்களை இக்கோயிலில் விட்டுச் சென்றுள்ளார்கள். ஒய்சள அரசனாகிய சோமேசுவரன்(கிபி 1234-1262) தனது 16-ஆம் ஆட்சியாண்டில்(கிபி 1240) இக்கோயிலுக்கு ஒரு நந்தவனத்தையும், மூன்றாம் பிராரத்தில் ஒரு சாலையையும் ஏற்படுத்தினான் என்பது, கல்வெட்டுக்களால் புலனாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கோயிலிலுள்ள சந்நிதிகளுள் மிகவும் அழகு வாய்ததொன்றிய வேணுகோபால கிருஷ்ணரின் சந்நிதி, இக்காலத்தில் ஏற்பட்டதேயாகும்.(பார்க்க படம்). சிறிது ஏறத்தாழ இந்தக் காலத்திலேயே பாண்டியர்களின் ஆடம்பர மிக்க பக்தியின் மூலம் இக்கோயிலில் பல நன்மைகள்ப் பெற்றது. மதுரையை ஆண்டுவந்த முதலாம் சடவர்ம சுந்திரபாண்டியன்(கிபி 1251-1268), இக்கோயிலில் பல கட்டிடங்களை எழுப்பியும் பலவகை அலங்காரங்களைச் செய்தும் ஏராளமான நன்கொடைகளை வழங்கியும் பெரும் புகழ் பெற்றான். திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நதி, மகாவிஷ்ணு சந்நதி, நரசிம்மர் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவற்றை இவ்வரசன் கட்டினான். கடக்(Cuttack, Orissa) அரசரை எதிர்த்து போரில் வென்று அவரது கருவூலத்தினின்று கைப்பற்றிய பொருள்களைக்கொண்டு சடவர்மன் சந்திரப்பாண்டியன் திருவரங்கநாதர்க்கு மரகதமாலை, பொற்கிரீடம், முத்தாரம் முத்துவிதானம், பலவகை பொற் பாத்திரங்கள், குவளைகள் ஆகியவற்றை வழங்கினான். காவிரி நதியில் தொப்போற்சவம் நடத்துவிப்பதற்கு தங்கத்தினாலேயே படகு அமைத்தான். அதில் தனது பட்டத்து யானையை படகில் ஏற்றி அதன் முதுகில் தான் ஏறி அமர்ந்து கொண்டான். மற்றொரு படகில் நாணயங்களையும் கொட்டி நிரப்பினான். தன்னுடைய படகினது நீர்மட்டத்துக்கு மற்றொரு படகும் வருகின்ற வரையில் நிரப்பினான் அதை பின்னர் கோயிலுக்கு தானமாக வழங்கினான் என்று கோயிலொழுகுல் குறிப்புள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதனை அடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மாறவர்மகுல சேகர பாண்டியனின்(கிபி 1268-1308) ஆட்சிக் காலத்தில் போர்ச்சுகீசிய யாத்திரிகன் மார்க்கோபோலோ இங்கு வந்ததாக கூறிப்புள்ளது. முஸ்லிம் மன்னர்கள் படையெடுப்பு பற்றி அடுத்த பதிவில். &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரங்கம் &lt;a href="http://desikann.blogspot.com/2004_05_28_desikann_archive.html"&gt;1&lt;/a&gt;, &lt;a href="http://desikann.blogspot.com/2004_06_07_desikann_archive.html"&gt;2&lt;/a&gt;, &lt;a href="http://desikann.blogspot.com/2004_06_22_desikann_archive.html"&gt;3&lt;/a&gt;, &lt;a href="http://desikann.blogspot.com/2004_06_29_desikann_archive.html"&gt;4&lt;/a&gt;, &lt;a href="http://desikann.blogspot.com/2004_07_19_desikann_archive.html"&gt;5&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111829502410203358?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111829502410203358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111829502410203358&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111829502410203358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111829502410203358'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/06/6.html' title='ஸ்ரீரங்கம் - 6'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111811353124170966</id><published>2005-06-07T08:32:00.000+05:30</published><updated>2005-06-07T08:35:31.246+05:30</updated><title type='text'>சுஜாதாவின் வானொலி பேட்டி</title><content type='html'>சுஜாதாவின் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள முடியாதவர்களுக்கு ஒரு வானொலி பேட்டி ;-)&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;தேசிகன். &lt;br /&gt;&lt;br /&gt;* - * - * &lt;br /&gt;&lt;br /&gt;ரேடியோவின் பயனை நாம் குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம். ரேடியோதான் எந்தவித கவனக் கலைப்பும் இன்றி - நகம் வெட்டுதல், முகம் தேய்த்தல் போன்ற மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டே, அவ்வப்போது தேவைப்பட்டதைக் கேட்டுக் கொள்ளும் வசதிபடைத்த ஊடகம். டிவி என்றால், ஒரு இடத்தில் உட்கார்ந்து கண்ணும் காதும் உற்று கேட்க, பார்க்க வேண்டும். சினிமா இன்னும் மோசம். இருட்டில் உட்கார்ந்து கொண்டு பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரேடியோ அப்படியில்லை. காரில், வீட்டில், சமையலறையில் ஏன் பாத்ரூமில் கூட கேட்கலாம். அதுவும் இப்போது எஃப்எம் வசதி வந்ததும், நிறைய நிலையங்கள் உருவாகி நாள் முழுதும் சினிமா பாடல்கள் கேட்கக் கூடிய பாக்கியங்கள்¢ முதலில் தோன்றியிருக்கின்றன. மெல்ல மெல்ல இது அலுத்துப்போய், நாள்¢ முழுவதும் இலக்கியம், நாள் முழுவதும் கர்நாடக சங்கீதம், நாள் முழுவதும் காமெடி, நாள் முழுவதும் அறிவியல் என்று சானல்கள் அமெரிக்காவில் போல வரலாம். இப்போது இவையனைத்தையும் பேல்பூரி போல் கலந்து கொடுக்கும் அரசு சார்ந்த ஆல் இண்டியா ரேடியோ நிலையங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். மைய அரசு, திறந்த வெளி கல்விக்கு ஒரு முக்கிய சாதனமாக ரேடியோவை மதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகையில் கல்வி ரேடியோ நிலையத்தினர் கோவையிலிருந்து என்னை பேட்டி கண்டார்கள். அண்மையில் நான்¢ கொடுத்த உருப்படியான பேட்டிகளில் அது ஒன்று. அதன் சிடியை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இப்போது தனியார் கல்வி நிலையங்களில் கூட ட்ரான்ஸ்மிட்டர்கள் அனுமதிக்கப்பட்டு, மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளைக் காட்ட அவகாசம் அளிக்கப்பட்டிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்களின் இலக்கிய, நாடக ஆசை, திறமைகளுக்கு மற்றொரு வடிகால் கிடைத்துள்ளது. ரேடியோ, மிர்ச்சி, சூரியன் எஃப்எம் செய்யும் அட்டகாசங்கள் தமிழர்களுக்கு ஒருவாறு பழகிவிட்டது. இவர்களுக்கென்றே ஓர் ஆங்கிலம் கலந்த தமிழ், தனிப்பட்ட எரிச்சல் தரும் உச்சரிப்பு, கொச்சை இதெல்லாம் வடிவமைந்து கொண்டிருக்கிறது. இதேபோல தற்கால மாணவர்கள் பேசவும் துவங்கிவிட்டார்கள். ரேடியோவால் தமிழின் பேச்சு நடையை மாற்ற முடியும் என்பதற்கு உதாரணங்கள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது தமிழ் விரும்பிகள் மறியல் செய்யும் வரை இந்த மணிப்ரவாகத் தமிழ் செழிக்கும். ரேடியோவின் உண்மையான அடையாளங்கள் நமக்கு மெல்லத்தான் புலப்படும்.&lt;br /&gt;( நன்றி அம்பலம் )&lt;br /&gt;&lt;br /&gt;வானொலி பேட்டி கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object type="application/x-mplayer2" width="300" height="45" data="01-El Pecoso.mp3"&gt;&lt;br /&gt;  &lt;param name="src" value="http://www.employees.org/~desikan/wfplayer/01-El Pecoso.mp3" /&gt;&lt;br /&gt;  &lt;PARAM NAME="AUTOSTART" VALUE="false"&gt;&lt;br /&gt;  &lt;param name="filename" value="01-El Pecoso.mp3" /&gt;&lt;br /&gt;  &lt;param name="type" value="application/x-mplayer2" /&gt;&lt;br /&gt;  Audio not supported in the system, check with your administrator&lt;br /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111811353124170966?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111811353124170966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111811353124170966&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111811353124170966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111811353124170966'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/06/blog-post_07.html' title='சுஜாதாவின் வானொலி பேட்டி'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111778548338705377</id><published>2005-06-03T13:23:00.000+05:30</published><updated>2005-06-03T16:35:08.570+05:30</updated><title type='text'>சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்</title><content type='html'>&lt;p&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_meet_8.jpg" align="left" /&gt;இந்த பதிவு கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு முறை சாவி உட்லேண்ட்ஸ் டிரைவினில் சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார். அதன் பிறகு போன சனிக்கிழமை(28/5/2005) அன்று ஒரு கலந்துரையாடல் நடந்தது. இதில் ஹரன்பிரசன்னா, ராம்கி, சுரேஷ் கண்ணன், ஐகாரஸ் பிரகாஷ், ராஜ்குமார், உஷா, சங்கர், கிருபா ஷங்கர் கலந்துக்கொண்டார்கள். இந்த பதிவு இதில் கலந்துக்கொண்டவர்கள் எழுதியது. அவியல் போல் எல்லாம் இருந்தாலும் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_meet_9.jpg" align="left" /&gt;சிறுகதை, கவிதை, கணேஷ் வசந்த், கல்விமுறை, மீடியா டீரிம்ஸ், சங்கர், பாய்ஸ், சினிமா அனுபவம், அந்நியன், கமல், மும்பை எக்ஸ்பிரஸ், நாவல், எஸ்.ஏ.பி, வலைப்பதிவு என்று பல தலைப்புகள் போண்டா காப்பியுடன் பேசப்பட்டது. கலந்து கொண்டவர்கள் அனைவரும் எனக்கு எழுதியனுப்பிய அதே வரிசையில் இங்கு தந்துள்ளேன். எல்லோருக்கும் என் நன்றிகள். படங்கள் தந்து உதவிய ராம்கிக்கு ஸ்பெஷல் நன்றிகள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* - * - *&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;பிரதீப்-ஃஸ்பாட் வேர் என்ஜினியர், வயது 26 - வலைப்பதிவு முகவரி - http://espradeep.blogspot.com/&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_meet_7.jpg" align="left" /&gt;சனிக்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்தேன். அம்மா கேட்டாள், என்ன? சுஜாதாவை பார்த்தியா? என்ன சொன்னார்? நான் சொன்னேன்: வாப்பா பிரதீப், எங்கே நீ வராம போயிடுவியோன்னு பயந்துட்டேன். உன்னை பாக்கனும்னு எத்தனை நாளா காத்துண்ட்ருக்கேன்னார். என்னை&lt;br /&gt;பார்த்ததும் தான் அவருக்கு ஒரு தனி தெம்பே வந்தது. தமிழ் இலக்கியத்தையே தூக்கி நிறுத்தப் போறவன் நீ தானேப்பான்னார். அம்மா அப்பாவியாய் நெஜம்மாவா என்றாள்? சரி, எதற்கு இத்தனை அழிச்சாட்டியம்? ஆமாம் போனவார சனிக்கிழமை சுஜாதாவைப் பார்த்தேன். போனவார சனிக்கிழமை தனிப்பெருமை கொண்டது என்னைப் பொருத்தவரை! உட்லேண்ட்ஸ் ட்ரைவின்னில் ஒரு சின்ன கூட்டம். ஏஸி ரூமில் இருக்கோம், வா என்று தேசிகன் சொன்னவுடன் வெளியே இருந்த எனக்கு குளிரத் தொடங்கியது. உள்ளே நுழைந்ததும் எதிரில் அமர்ந்து எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். நெஞ்சிலிருந்து ஏதோ ஒன்று உருண்டு வயிற்றுக்குள் சென்றதைப் போன்ற உணர்வு. தேசிகன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை, கவிதை, சினிமா, என்று பல்வேறு கோணங்களில் பல்வேறு முகம் கொண்டவரிடம் பேசினோம். அங்கு வந்திருந்தவர்களில் சுஜாதாவை ரொம்ப கம்மியாய் படித்தவன் நான் தான் என்று நினைக்கிறேன். தமிழில் மனப்பாடப் போட்டிக்கு செய்யுளை ஒப்பிப்பது போல் எல்லோரும் அவருடைய கதைகளையும் கட்டுரைகளையும் ஒப்பித்துக் கொண்டிருந்தனர். நான் ஆ என்று வாய் திறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக போண்டா வந்ததால், அதை என் வாயில் போட்டு அடைத்துக் கொண்டேன். என் வாய் போண்டா சாப்பிட என் கண்கள் அவரை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. என் வாழ்நாளில் என்னை இப்படி யாராவது ஒரு நாளாவது பார்ப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;எழுதனும்னா நிறைய படிக்கனும்..அது தான் ரொம்ப முக்கியம் கவிதை - unwritten lines இருக்கனும் deadline இல்லைன்னா என்னால எழுதி இருக்கவே முடியாது அந்நியன் நல்லா வந்திருக்கு எழுத்தாளரின் மனைவியாய் இருப்பது கஷ்ட ஜீவனம் அவர் பேசியதில் கொஞ்சம்..&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கு எங்களை மாதிரி போண்டா, இல்லை காப்பி சாப்பிட வந்தவர் இவர் சுஜாதா தானே என்று எங்களிடம் அனுமதி கேட்டு அவரை இன்னும் கொஞ்சம் படுத்தினார். நீங்கள் 50 வயதுக்குப் பிறகுன்னு சமீபத்துல எழுதுன கட்டுரை அருமை என்றார். நாங்கள் எல்லோரும் கொதித்துப் போய் அது 70 வயதுக்கு மேல் என்றோம். என் பேரை ஞாபகம் வச்சுக்குங்க சார், இது கொஞ்சம் uncommon name என்று சகாயமோ, ஏதோ ஒன்றை சொன்னார். சுஜாதா i will remember என்றார். பிரபலம் என்றாலே ப்ராப்ளம் தான் போலும். பாவமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு அற்புதமான மாலைப் பொழுதை வழங்கிய தேசிகனுக்கு பெங்களூரில் அவர் ஆபிஸ் போகும் வழியெல்லாம் ட்ரா·பிக் குறையட்டும்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* - * - * - *&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;Poet ராஜ்குமார் - வயது 32 இருக்கலாம். NIIT-இல் வேலை பார்க்கிறார். மார்க்கெட்டிங் மானேஜர். வலைப்பதிவு முகவரி -http://poetraj.blogspot.com&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_meet_5.jpg" align="left" /&gt;எழுத்தாளர் சுஜாதாவுடன் இரண்டு மணிநேரம் -&lt;br /&gt;பல ஆண்டுகளாக நிறைவேறாத ஒரு கனவு- தேசிகனின் உபயத்தில் நிறைவேறியது. மூன்று முறை நேரில் பார்த்தும் மலைப்பின் மிகுதியில் பேச தைரியம் வராத ஒரு நபரை, இரண்டு மணி நேரம் பார்த்து உரையாட வழிவகை செய்த தேசிகனுக்கு மனமார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட எட்டு வலைப்பதிவாளர்கள், அனைவரும் வெவ்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள். வித்தியாசமான சிந்தனையோட்டம் உடையவர்கள். ஆனால் அனைவருக்கும் பொதுவான அம்சமாக இருந்தது -எழுத்தாளர் சுஜாதாவின் மீதுள்ள அபிமானம் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட அனைவருமே சுஜாதா என்ற படைப்பாளியுடன் விவாதிக்க வேண்டும் என்ற மனநிலையில் இல்லாமல், ஒரு தெய்வத்தை/அல்லது சக்தி பொருந்திய ஆன்மீகப் பெரியவரை சந்திக்கும் பக்த மனோநிலையுடன் வந்தது போலத்தான் தோன்றியது. என்னுடைய மனநிலையும் அதேதான்.இவரைப் போல் அனுபவித்து வாழ்க்கை வாழ யாரால் முடியும்? அப்படியே வாழ்ந்தாலும் தலைமுறைகளும் கடந்து ரசிக்கும் மாதிரி எழுத யாரால் இயலும் என்ற வியப்பே இதயத்தில் மேலோங்கி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மிக இயல்பாக உரையாடலை துவக்கி வளரச் செய்ததில், முக்கியபங்கு சுஜாதா சாரையே சேரும். பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியின் இன்றைய நிலையைப் பற்றி உரையாடல் துவங்கியது. பொறியியல் மற்றும் மருத்துவம் படித்தால்தான் வாழ்க்கை என்ற உணர்வை மாற்றி பிற துறைகளையும் பயில மாணவர்கள் முன் வர வேண்டும் என்பதை சுஜாதா விரும்புகிறார். இணைய நண்பர் உக்ஷ¡வின் மகள் தேசிய சட்டக் கல்லூரியில் படிக்க விரும்பி, குஜராத் கல்லூரியில் இடம் பெற்றிருப்பதைஆச்சரியத்துடன் பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையை யாசிக்கும் இத்தருணத்தில் மற்ற பொறியியல் துறைகளின் ( எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்) இன்றைய அவசியமும் தேவையும் என்ன ? என்று வினவியபோது, கல்வியின் தேவையையே நாம் மறுபரீசலனை செய்ய வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டார். அறிவை விருத்தி செய்ய கல்வி என்பதலிருந்து தடம் புரண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னியன் இந்தியன் பார்ட் 2 - மல்டி பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் குறித்த கதை என்றார். மும்பை எக்ஸ்பிரஸ்ஸை சற்று தாமதமாக பார்க்க நேரிட்டதாகவும், சற்று முன்னதாக பார்த்திருந்தால் கமலுக்கு சில ஆலோசனைகள் வழங்கியிருக்கலாம் என்றும் கூறினார். இக்கதையின் பிரதானமாக குழந்தையை கடத்துவதும் அதில் ஆள்மாறாட்டம் நிகழ்வதும் அமைந்திருக்க வேண்டும், ஆனால் கமல் 30 அடி உயர கிரேனில் நடப்பதும், குரங்கு அதை இயக்குவதும் பிரதானப்படுத்தப்பட்டுவிட்டது என்றார். கதையை பசுபதி, வையாபுரி ஆகியோர் கடத்தல் குறித்து திட்டமிடுவதிலிருந்து துவக்காமல் எடுத்தவுடனே கடத்தலை காண்பித்திருந்தால் சுவையாக இருக்கும் என்றார். ரோஜா, அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களின் ஒரு சம்பவத்தை முன்னிலைப் படுத்திய ஆரம்பத்தைப் பார்க்கும் போது உண்மைதான் என்றுதான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பகால பட அனுபவங்களை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். உங்களுடைய படமாக்கப் பட்ட கதைகளில் நினைத்தாலே இனிக்கும் மட்டும் கதை வடிவில் பத்திரிக்கைகளில் வந்ததில்லை. மற்ற கதைகளை எவ்வாறு சிதைத்தார்கள் என்பது வாசகர்களுக்கு தெரியும். நினைத்தாலே இனிக்கும் படத்தை படமாக்கியது குறித்த உங்களது கருத்து என்ன? என்று கேட்டோம். ஒரு படம் எவ்வாறு உருவாக்கக் கூடாது என்பதற்கு நினைத்தாலே இனிக்கும் படம் ஒரு உதாரணம் என பதிலளித்தார். திட்டமிடாமல் படம் பிடிக்க சிங்கப்பூர் சென்று கால விரயமும், நடிகர்களின் கால்க்ஷ£ட் விரயமும் செய்து, பின்பு சென்னை வந்து கதையை மாற்றச் சொன்னதாக குறிப்பிட்டார். போதாக்குறைக்கு பாலச்சந்தர் அக்காலக் கட்டத்தில் இந்தியா வந்த அபா குழுவினால் கவரப்பட்டு நிறைய பாடல்களை படத்தில் சேர்த்துவிட்டார் என்றும், தாம் எழுதிய ஸ்கிரிப்ட் சிங்கப்பூரில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெறும் ஸ்கிரிப்ட் என்றும் கூறினார். அதை ஒரு கதையாக தற்போது வெளியிடலாமே? என்று கேட்டோம். ஸ்கிரிப்ட் அனந்துவிடம் கொடுத்தது திருப்பி வாங்கவில்லை என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நிறைய எழுதும் காலக்கட்டத்தில் உங்களுக்கு ஆதரவு அளிக்க சாவி போன்ற ஆசிரியர்கள் இருந்தார்கள். தற்போது அது போன்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறீர்களா? அவ்வாறில்லாதபோது உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளதா? என்று கேட்டோம். அதற்கு அக்காலத்தில் சாவியும், மணியனும் பத்திரிக்கைகளின் சர்குலேசன் உயர்த்த ஒரு டார்கெட் வைத்திருந்தாகவும், அதனால் தான் எழுதிய படைப்புகளை கண்ணைமூடிக் கொண்டு பிரசுரித்தாகவும் குறிப்பிட்டார். இதனை எந்தவித நெகடிவ் கனோடேசனுடனும் குறிப்பிடவில்லை. மேற்கொண்ட ஆசிரியர்கள் அளித்த எழுத்துச் சுதந்திரத்தைதான் சுஜாதா அவரது பாணியில் குறிப்பிட்டார் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலக் கெடு வைத்து படைப்புகள் படைப்பதில் தனக்கும் சங்கடம் உண்டு என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனாலும் அனைத்துப் பத்திரிக்கைகளும் தன் படைப்புக்களை வேண்டி நின்ற அக்காலக்கட்டத்தில், சில பரிசோதனை முயற்சிகளையும் செய்ய முயன்றது எனக் கூறினார். தான் எழுதியதிலே, தனக்குப் பிடித்த படைப்பாக "ஒரே ஒரு துரோகம்" கதையை குறிப்பிட்டார். "கறுப்பு சிவப்பு வெளுப்பு' கதை குமுதத்தில் ஒரு சமூகத்தாரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டதும் , அதே கதையைத்தான் தலைப்பை மாற்றி " ரத்தம் ஒரே நிறம்" என்று எழுதியதாக தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளில் பலநடுத்தரக் குடும்பங்களுக்கு தொழில்நுட்பம், கல்வி குறித்த விழிப்புணர்வையும், ஆசைகளையும் உங்கள் படைப்புக்கள் ஏற்படுத்தின. என்னுடைய கல்லூரி புரபசர் "பிரிவோம் சந்திப்போம்" படித்து எம்.பி.ஏ. படித்தாராம் .இத்தகைய தாக்கங்களை உங்களது படைப்புக்கள் ஏற்படுத்தின என்று கூறினேன். சுஜாதா புன்னகையுடன் ஆமோதித்தார். தற்போது காலக்கட்டங்கள் மாறிவிட்டன. மீடியாவின் தாக்கம் அதிகரித்து விட்டது என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கலாமே என்று கேட்டதற்கு பத்திரிக்கை ஆரம்பிப்பது சினிமா எடுப்பது போல என்று கூறி புன்னகைத்தார். ஜெயாகாந்தனைப் பற்றி கேட்டதற்கு அவர் முன்பிருந்தே இவ்வாறுதான் பேசி வருகிறார். தற்போது வியப்படைய ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கவிதை என்பதற்கான வரையறை என்ன? என்று கேட்டதற்கு கவிதையில் எழுதாத வரிகள் ( unwriiten lines) வாசகன் உணரும் வண்ணம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். சில கவிதைகள் எனக்கு புரியவில்லையே என்று சக நண்பர் வினவியபோது, அப்படியென்றால் அது உங்களைப் பொறுத்தவரை நல்ல கவிதையல்ல என்ற குறிப்பிட்டார். நல்ல கவிதை என்பது தனிமனிதன் சார்ந்த ரசனை/வாசிப்பனுபவம் என்ற சுஜாதாவின் கருத்து நியாயமாகப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் கணேக்ஷ் வசந்த கதைகள் கிடையாது என்று தலையாட்டி விட்டார். பிரசன்னா சந்தோசப்பட்டார். நான் வருத்தப்பட்டேன். இகாரஸ் காந்தளூர் வசந்தகுமாரன் கதை இரண்டாம் பாகம் எழுதச் சொன்னார். இறுதியாக "கடவுள் வந்திருந்தார்" நாடக விழாவிற்காக மஸ்கட் போவதாக சொன்னார். அப்போதுதான் நாடகம் குறித்து கேட்கவில்லையே என்று தோன்றியது. சுஜாதா என்னும் படைப்பாளி மிகப் பெரிய கடல். இரண்டு மணி நேரத்தில் இதனை நீந்திக் கடக்க முடியுமா? கடலில் என்ன இருக்கிறது எனப் பார்க்க முடியுமா? மடத் தனமாக் கேட்டு சுனாமியாக சுருட்டிப் போட்டுவிடுவாரா என்ற பயம் என் மனதில் இருந்து கொண்டேயிருந்தது.இதே போல் பயம் சுரேச்கண்ணனிடமும் இருந்ததாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வாழ்நாளில் மறக்க இயலா இரண்டு மணிநேரங்கள். இவருடன் பேசியது இரண்டு மணிநேரம் என்றாலும் பேசியதை இரண்டு நாட்களாக பலருடனும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் இதை கேட்டாயா? அதைக் கேட்டாயா? என ஆளுக்காள் இன்னும் பல கேள்விகளை முன் வைக்கிறார்கள். அவற்றிலிருந்து இக்கலைஞன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பிரமிக்கவைக்கிறது. இன்னும் நிறைய பேரிடம் சுஜாதா சாரை பார்த்து விட்டேன் என்று சொல்ல வேண்டும். அவர்களது வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோடானு கோடி நன்றிகள் தேசிகன்.வாழ்க வளமுடன்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* - * - *&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ராம்கி,(சில சமயம் ரஜினி ராம்கி), வயது 29. சென்ட்ரல் எக்ஸைஸில் இருக்கிறார். rajniramki.blogspot.com.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_meet_3.jpg" align="left" /&gt; சுஜாதாவின் வருகைக்காக உட்லண்ட்ஸ் வாசலில் காத்திருந்த நேரத்தில் மனதில் தோன்றியது இதுதான். சுஜாதா எழுதாத விஷயங்கள் எதைப்பற்றி. 'அதுக்கு முதல்ல அவரு எழுதின எல்லாத்தையும் படிச்சிருக்கணும்டா மவனே' மனசாட்சியின் குரலை அலட்சியம் பண்ணாமல் கூட்டத்தோடு கூட்டமாய் அடக்கி வாசிக்கலாம் என்று முடிவெடுத்த நேரத்தில்தான் சரியாக ஆறு மணிக்கு காரில் வந்து இறங்கினார். எப்போதும் எக்கனாமிக் டைம்ஸ் படிக்கும் எதிர்வீட்டு மாமாவை ஞாபகப்படுத்தும் தோற்றம். நடையில் மட்டும் நிறையவே தாத்தாக்களை. வெளிச்சமில்லாத இடத்தில் பக்கத்து சீட் ஹிந்தி ஆசாமிகளின் கூச்சல்களுக்கு நடுவே ரவுண்டு கட்டி உட்கார்ந்து பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பாக்கெட் நாவலின் கடைசி பத்து பக்கங்களில் வரும் கேள்விகளைப் போல 'ஸார், நீங்க வஸந்தா, கணேஷா'ன்னு நம்ம ஸ்டைலில் கேட்டு பூஜையை போட்டுவிடலாமான்னு நினைத்த நேரத்தில் அவரே ஆரம்பித்தார், கொஞ்சம் கனமான விஷயத்தில். நுழைவுத்தேர்வு குளறுபடிகளை பற்றி ஏ.சி ரூமில் உட்கார்ந்து பேசி அரசாங்கத்தை நொந்து கொள்வதோடு பேச்சு நின்றுவிடுமோ என்று நினைக்க ஆரம்பித்த நேரத்தில் அதற்கான ரெமிடியைப் பற்றியும் பேச ரெடியானார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதத்திற்கு முன்பு இன்காம் டாக்ஸ் ஆபிசுக்கு லெக்சர் கொடுக்க வந்தபோது உட்கார சீட் இல்லாமல் தூண் ஓரமாக நின்று கொண்டே கவனித்தது ஞாபகத்திற்கு வந்தது. பரவாயில்லை, இப்போது நேருக்கு நேர் கண்ணைப் பார்த்து பேசவும் குறுக்கே கேள்வி கேட்டு பதில் வாங்கவும் முடிந்திருக்கிறது. மூன்று பக்க இன்கம்டாக்ஸ் ரிட்டர்னை ஒரே பக்கத்தில் வருவது மாதிரி 'கற்றதும் பெற்றது'மில் ஒரு சாம்பிள் கொடுத்திருந்தார். இன்கம்டாக்ஸ் கூட்டம் முடிந்து கேஷ¥வலாக அடிஷனல் கமிஷனர் தோள் மேல் கைபோட்டு டாக்ஸ் சிம்பிளிபிகேஷன் பற்றி சளைக்காமல் பேசியதற்கு ஏதாவது புண்ணியமிருக்கும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர்தான். இருந்தாலும் ஊதற சங்கை ஊதி வைப்போமேன்னு அவர் கொடுத்த ஐடியாவெல்லாம் புருவத்தை பெரிசாக்கின விஷயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாக்காரர் என்கிற சுஜாதாவின் முகமும் நிறைய கேள்விகளை கேட்க வைக்கிறது. ப்ரியா, காயத்ரி, நினைத்தாலே இனிக்கும் பற்றியே நண்பர்கள் அதிகமாக கேட்டதன் காரணம் அறியேன். (ரோஜா, விக்ரம், பம்பாய் பத்தியெல்லாம் ஏன் யாரும் கேள்வி கேட்க மாட்டேங்கிறாங்க!) நினைத்தாலே இனிக்கும் சரியாக போகததற்கு அவர் சொன்ன காரணங்களும் பொருத்தமாகத்தான் இருந்தன. விமர்சனத்தில் அவரோட பெயரை சொல்லலைன்னு கோபித்துக்கொண்டவர்களுக்கு ஒரு நற்செய்தி. கதைதான் சுஜாதாவாம். திரைக்கதை அனந்து பண்ணியதாம்! மும்பை எக்ஸ்பிரஸ் பற்றிய விமர்சனத்தோடும் அந்நியன் பற்றிய எதிர்பார்ப்புகளுடனும் சினிமா செஷன் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் தொடர்கதைகளை பற்றி அவரிடம் ஒரு மணி நேரத்திற்குள் பேசிவிடமுடியுமா என்கிற தயக்கமே என் வாயை அடைத்துவிட்டது. நினைவு தெரிந்த நாள் ஊர் உலகத்தில் எழுத்தாளர் என்றாலே அது சுஜாதா மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த ஜாதி நான். அதிகம் பேசாமல் கவனிக்க ஆரம்பித்தபோதுதான் ஒரு ஆச்சர்யம். இந்த வயதிலும் தன்னுடைய எல்லா சிறுகதைகளையும் ஞாபகத்தில் வைத்திருக்கிறாரே!&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா சொன்ன இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;1. நிறைய படிக்கவேண்டும். படிப்பது என்றால் நாம் எழுதியது, அடுத்தவர் எழுதியது என்றெல்லாம் வகை தொகையில்லாமல் படிக்கவேண்டும்&lt;br /&gt;2. காட்டமான விமர்சனங்களுக்கான பதிலடியை படைப்புகளின் மூலமாகத்தான் சொல்லவேண்டும்; பகிரங்கமாக அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவை படிப்பவர்களுக்கு போரடிப்பதில்லை. பலரை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். நிறைய பேரை எழுத வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழில் சுஜாதாவுக்கு மட்டும் ஏகலைவன்கள் அதிகம். புதிதாக எழுத வருபவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்ற பிரசன்னாவின் கருத்தையே நானும் வழிமொழிந்தேன். சுஜாதாவை அழைத்து வந்ததுமில்லாமல் போண்டோவையும் காபியும் வாங்கிக்கொடுத்த தேசிகனை பாராட்ட ஓடுவதற்குள் மற்றவர்கள் முந்திக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1994-1996 வருஷம். அதிகமாக வாசகர் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்த காலம். குமுதம் அப்போதெல்லாம் வாராவாரம் 'புதுசு கண்ணா புதுசா'ன்னு ஏதாவது ஒரு தினுசில் வரும். இலக்கியத்திலிருந்து ஏ ஜோக்ஸ் வரை எல்லாமும் இருக்கும். 1994 வருஷம் குமுதத்திற்காக சுஜாதா, ரஜினியை சந்தித்தது பத்திரிக்கை பேட்டி விஷயத்தில் சத்தியமாய் ஒரு மைல்கல். இயல்பான உரையாடலாக ஆரம்பித்து ரஜினி சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் சொன்ன சந்திப்பு. ரஜினியுடன் நானே உட்கார்ந்த மாதிரியான உணர்வை தந்த சந்திப்பை ஞாபகப்படுத்தி என்னுடைய புத்தகத்தையும் கொடுத்தேன். ரஜினி பற்றி ஒரு புத்தகமா என்கிற ஆச்சரியத்தோடு வாங்கிக்கொண்டார். ம்...வந்ததுக்கு தண்டனை!&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* - * - *&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;சுரேஷ்கண்ணன், ஸ்வஸ்திக், விளம்பரத்துறை, வயது 31 இருக்கலாம். pitchaipathiram.blogspot.com&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_meet_2.jpg" align="left" /&gt;சுஜாதா என்கிற எழுபது வயது இளைஞர் சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது, தன்னை வந்து சந்திக்கும் வாசகர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இவ்வாறு எழுதினார்: 'எனது உண்மையான வாசகர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை'.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இதில் உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது. ஏனெனில், ஒரு சிறந்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளிலேயே தாம் தீவிரமாக நம்புகிற கருத்துக்களையும், எண்ணங்களையும் முழுமையாக எந்த வித உபகேள்விகளுக்கும் இடமில்லாமல் மிக நேர்மையாக எழுதி விடுகிறார். ஆக அந்தப் படைப்பாளி எழுதியதையே நாம் முழுவதையும் உள்வாங்கிக் கொண்டால் அது போதுமானதாக இருக்கும். அதை விட்டு, அந்தப் படைப்பாளியை சந்தித்து அபத்தமாக உரையாடுவது, ஆட்டோகிராப் வாங்குவது போன்றவை, 'நான் அந்த எழுத்தாளரை சந்தித்தேன்' என்று ஜம்பமடிப்பதற்கு உதவுமே தவிர வேறொன்றிற்குமில்லை. ஆனால் படைப்பாளி எழுதின வட்டத்தையும் தாண்டி சிந்தித்து தனது ஐயங்களை அவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள முயலும் வாசகர்கள் அரிதானவர்கள்; இந்த நிலையிலிருந்து விதிவிலக்கானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காரணத்திற்காகவே, நான் பொதுவாக எந்த எழுத்தாளரையும் சந்திக்க முயல்வதில்லை, என் வாசகப் பயணத்தை நல்லதொரு திசையில் மாற்றியமைத்த மற்றும் என் மிகுந்த அபிமானத்திற்குரிய சுஜாதா உட்பட.&lt;br /&gt;&lt;br /&gt;()&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடந்த வாரத்தில் ஒரு நாள் பிரசன்னா தொலைபேசியில் "நண்பர் தேசிகன் மூலமாக எழுத்தாளர் சுஜாதாவை சந்திக்கலாமென்றிருக்கிறோம். நீங்கள் சுஜாதாவின் படைப்புகளில் மிகுந்த பிரேமை கொண்டிருக்கிறவர் என்று நான் அறிவேன். நீங்களும் வருகிறீர்களா?" என்று அழைத்த போது வந்த சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாமே என்று உடனே ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;28.05.2005. மாலை ஆறு மணி. உட்லண்ட்ஸ் டிரைவ்-இன் ரெஸ்டாரண்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை புகைப்படங்களிலும், நூல் வெளியீட்டு விழாக்களில் தூரமாக நின்று மட்டுமே பார்த்திருந்த சுஜாதா, தனது அசாதாரணமான உயரம் காரணமாக சற்று குறுகினாற் போல் தளர்ச்சியாக நடந்து வர, 'இவரிடம் என்ன கேள்வி கேட்டு, என்னத்த பதில் சொல்லப் போகிறார்' என்று ஆயாசமாக இருந்தது. கற்றுக் கொடுத்தவர்கள் அனைவரும் ஆசான்கள் எனில் சுஜாதா எனக்கு முக்கியமானதொரு ஆசான். எழுத்துலகில் துரோணரைப் போல் திகழும் அவரின் பல்லாயிரக்கணக்கான ஏகலைவன்களில் நானுமொருவன். பதிலுக்கு சுஜாதா, நல்ல வேளையாக கட்டை விரலையெல்லாம் கேட்காமல், தன்னுடைய மெத்து மெத்தான ஐந்து விரல்களையும் மென்மையான புன்னகையுடன் என்னிடம் நீட்டினார். "நான் சுரேஷ் கண்ணன்" என்று சந்தோஷத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உணவகத்தின் குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் ஆரம்பித்தது எங்கள் அரட்டைக் கச்சேரி. நாங்கள் ஐந்து பேர். நான், பிரசன்னா, ராஜ்குமார், ரஜினிராம்கி, ராமச்சந்திரன் உஷா. எங்களை உரையாடவிட்டு பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்த தேசிகன். (இகாரஸ் பிரகாஷ், சுவடுகள் ஷங்கர், ஷங்கர் கிருபா, பிரதீப் போன்றோர் பிற்பாடு வந்து இணைந்து கொண்டனர்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறிய ராணுவ பட்டாலியன் போல் சுஜாதாவை நோக்கி கேள்விக் குண்டுகளை சரமாரியாக நாங்கள் எறிய, நிறைய பேசுவாரோ மாட்டாரோ என்கிற என் தவறான அனுமானத்தையெல்லாம் தூள்தூளாக்கும் வகையில் அனுபவம் மிகுந்த ராணுவ தளபதி போல் எங்கள் கேள்விகளை அனாயாசமாகவும், உற்சாகமாகவும் புன்னகையுடனும் எதிர்கொண்டார் சுஜாதா என்கிற அந்த 70 வயது இளைஞர். ஒரு திட்டமிட்ட உரையாடலாக இல்லாமல், நட்புடன் கூடிய கலந்துரையாடலாக இருந்தது அது. எங்களில் பெரும்பாலானோர் அவரை முதன் முறையாகப் பார்ப்பதினால் ஆர்வத்துடன் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு பல கேள்விகளை முன்வைத்தோம். பல்வேறு ரசனை கொண்ட குடும்ப உறுப்பினர்கள், தொலைக்காட்சியில் தங்களுக்குப்பிடித்த சேனல்களை மாற்றி மாற்றி அமைப்பது போல் இருந்தது அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நான் கேட்ட கேள்விகளை மட்டும் தொகுத்தளித்துள்ளேன். சுஜாதா பேச்சு மொழியில் கூறிய பதில்களை நான் உரைநடைத்தமிழில் இடங்களில் மாற்றியமைத்துள்ளேன். இதில் ஏதேனும் கருத்துப் பிழைகளிருந்தால், அது என் தவறாக இருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த போண்டா ரொம்ப புஷ்டியாயிருக்கிறதே" என்கிற சுஜாதா பிராண்ட் நகைச்சுவையுடன் ஆரம்பித்த அந்த உரையாடலில் இருந்து சில முக்கியமான பகுதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;()&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல் இயல்பாக இன்றைய கல்வித்துறையின் போக்குகளில் இருந்து ஆரம்பித்ததால், என் முதல் கேள்வி:&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரேஸ் குதிரைகள் போல் வளர்க்கின்றார்கள். இன்றைய தேதியில் கல்வி என்பது அடித்தட்டு மக்கள் நுழைய முடியாதது போல், வாங்க முடியாத luxury பொருள் போல் ஆகி விட்டதே? இதனால் கிராமப் புறங்களில் உள்ள மாணவர்கள், அவர்கள் விரும்பிய படிப்புக்களை படிக்க முடியாமல், ஏதோவொரு கிடைத்த துறைப் படிப்பை படிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்களே?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா: "இடஒதுக்கீட்டின் மூலம் பின்தங்கிய மக்களும் விரும்பிய படிப்பை படிக்கிற வாய்ப்பு இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும், சில மேல்தட்டு மக்கள் முறையற்ற வழிமுறையில் அந்த வாய்ப்பை குறுக்கு வழிகளில் பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்படுகிறது."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: "பாலகுமாரன் தன் முன்கதைச் சுருக்கத்தில் 'சுஜாதா தனக்கு சிறுகதை எழுதுவதற்கான வழிமுறைகளை சொல்லித் தந்தார்' என்று குறிப்பிட்டிருக்கிறார். எழுதுவதில் ஆர்வமுள்ள நாங்களும் அதே கேள்வியை இப்போது உங்கள் முன்வைத்தால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். அதேதானா? அல்லது updated-ஆன விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?"&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா: "கதையை முதல் வரியிலேயே ஆரம்பித்து விடுங்கள். இதுதான் நான் அவருக்கு சொன்னது. வேறொன்றுமில்லை"&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: "உங்கள் சிறுகதையில் எனக்கு பிடித்தது 'பிலிமோத்ஸவ்' "&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா: "அப்படியா?&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: நீங்கள் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் பெரும்பான்மையினர் தங்களுக்கு பிடித்ததாக கூறும் சிறுகதை 'நகரம்'. அதை நிதானமாக திட்டமிட்டு எழுதினீர்களா? அல்லது பத்திரிகைகளின் துரத்தல்களுக்கேற்ப அவசரமான மனநிலையில் எழுதினீர்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா: "மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்த போது, அங்கு பார்க்க நேர்ந்த காட்சிகளின் தாக்கத்தில் உடனடியாக எழுதப்பட்ட கதை அது."&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: "இப்போது இணையத்தில் ஏறக்குறைய 500 பேர் வலைப்பதிகிறார்கள். பொதுவாக வலைப்பதிவுகளைப் படிக்கிறீர்களா? வலைப்பதிவுகளின் போக்கு எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா: நிறைய வலைப்பதிவுகளப் படிக்கிறேன். சில பேர்களின் வலைப்பதிவை எழுத்துரு பிரச்சினை காரணமாக படிக்க இயலவில்லை. பத்ரி, தேசிகன் போன்றோர்களின் பதிவுகள் படிக்கமுடிகிறது. பொதுவாக வலைப்பதிவுகள் அனுமார் வால் போல் நீண்டு கிடக்கிறது. அரிதாக கிடைக்கிற தகவல்களை உள்ளடக்கியதுதான் ஒரு சிறந்த பதிவாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: "நீங்கள் உங்கள் சிறுவயதில் எழுதிக் கொண்டிருந்த கையெழுத்துப் பத்திரிகைகளின் நவீனவடிவம்தானா இந்த வலைப்பதிவுகள்?"&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா: "ஆம். நாங்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் நாங்களே படம் வரைவோம். இதெல்லாம் எழுதுகிற ஆர்வமிருக்கிறவர்களுக்கு ஒரு outlet மாதிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: "ஆனால்... இப்போது வலைப்பதிவு எழுதுகிறவர்களில் சிலர், இதை outlet-ஆக பயன்படுத்தாமல் toilet-ஆக பயன்படுத்துவதுதான் பிரச்சினை."&lt;br /&gt;&lt;br /&gt;(உரையாடல் இப்போது தமிழர்களின் ஆதார விஷயமாகிய சினிமாவின் பக்கம் திரும்புகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: "பாய்ஸ் படத்திற்கு ஏன் அவ்வளவு எதிர்ப்பு? ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடத்திய, எதிர்கொண்ட விஷயங்கள்தானே அதில் இருந்தது?"&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா: "அவர்கள் அதை திரையில் பார்க்க விரும்பவில்லை"&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: "ஒரு படத்தின் வசனங்கள் ஆட்சேபத்திற்குரியதாக இருக்கும் பட்சத்தில், யாரை நாம் திட்ட வேண்டும்? இயக்குநரையா? வசனகர்த்தாவையா?"&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா: "ஒரு இயக்குநர்தான் படத்தின் எல்லாத்துறைகளுக்கும் பொறுப்பு. அவர் தீர்மானித்த பின்தான் அவை காட்சிகளில் இடம் பெறுகின்றன. மேலும் வசனகர்த்தா எழுதிய வசனங்கள் அப்படியே இடம் பெறும் என்கிறது கிடையாது. சம்பந்தப்பட்ட நடிகர்களும் தங்கள் சொந்த வசனங்களை பயன்படுத்துவார்கள். 'பாய்ஸ்' படத்தில் சில காட்சிகளில் விவேக் அதை செய்தார்"&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: உங்கள் சிஷ்யர்களில் ஒருவரான, பெங்களூர் இரவிச்சந்திரன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா: அவர் இறந்து விட்டார். அவருக்கு நேர்ந்த சில அந்தரங்கப் பிரச்சினை காரணமாக தொடர்ந்து மதுவருந்தியதின் காரணமாக இறந்து போனார். நல்ல எழுத்தாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;(நான் இதைக் கேட்டு திகைப்பும், அதிர்ச்சியும் அடைகிறேன். இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படாமல் இணைய நண்பர்கள் மூலம் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும், சுஜாதா மூலமாக மிக உறுதியாக இந்தச் செய்தியை கேடக நேரும் போது வருத்தமாகவே இருந்தது. இந்த வருத்தம் சுஜாதா குரலிலும் எதிரொலித்தது)&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு மரபு தெரியாமலே பலர் கவிதை எழுத வந்து விடுகின்றனர். எனக்கு கவிதை என்கிற வடிவமே தொடர்ந்து பிடிக்காமலே இருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எனது முன்னோர்களின் ஜீன்களில் ஏற்பட்டிருக்கிற ஏதாவது குறைபாடா?" (சிரிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா: "You may not come across several good poems" அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.".&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: "இவ்வளவு பழைய விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிற நீங்கள் ரம்யா கிருஷ்ணன் பெயரை மறந்து விட்டீர்களே?" (சிரிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா: (சிரிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கண்ணன்: "நீங்கள் ஆனந்த விகடனில் 70 ஆண்டு நிறைவையொட்டி எழுதியிருந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது"&lt;br /&gt;&lt;br /&gt;()&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களின் பல கேள்விகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பதிலளித்த சுஜாதா 7.30 மணிக்கு தனது உரையாடலை முடித்துக் கொண்டார். மனமில்லாமல் நாங்கள் எழுந்து கொள்கிறோம். 'உங்களை ரொம்பவும் சிரமப்படுத்தி விட்டோமா' என்பதற்கு 'அதெல்லாம் இல்லை' என்கிறார். தேசிகனை அவர் 'என் சிஷ்யன்' என்று குறிப்பிட்ட போது, தேசிகன் மீது சற்று பொறாமையாக இருந்தது. நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், கையெழுத்து வாங்குவதுமாக இருக்கின்றனர். வழக்கம் போல் நான் ஒதுங்கி நிற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவ்ள நேரம் எங்களுக்கு பத்தலைங்க. என்சைக்ளோபீடியாவ ரெண்டு பக்கம் புரட்டிப் பாத்தா மாதிரிதான் இருக்குது. இன்னும் கூட நெறைய பேச வேண்டியிருக்கு. வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க" என்கிற எங்களுக்கு புன்னகையுடன் கையசைத்து விடைபெற்று காரில் ஏறிக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;()&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில விமரிசனப்பூர்வமான கேள்விகளை கேட்கலாமா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்த நான், மகிழ்ச்சியும், சிரிப்பும் பொங்கி வழிந்த அந்த உற்சாகமான சூழ்நிலையை கெடுக்க விரும்பாமல் எனக்குள்ளேயே அந்த கேள்விகளை மூழ்கடித்துக் கொண்டேன். இன்னொரு வேளையில் பார்க்கலாம். நாங்கள் தயாரான கேள்விகளோடு மிகவும் முன்னேற்பாடோடு வந்திருந்தால் இந்தக் கலந்துரையாடல் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கலந்துரையாடல் எனக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சுஜாதா என்கிற அந்த பன்முக ஆளுமையிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்களை கேட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் என்று பல சினிமா ஜாம்பவான்களிடமும், பல துறையிலுமுள்ள அறிஞர்களோடும் புழங்கிய சுஜாதா, அவரோடு ஒப்பு நோக்கும் போது குஞ்சுகுளுவான்களாகிய எங்களோடு சரிக்கு சமமாக பேசுவாரா என்கிற தயக்கத்தையெல்லாம் உடைத்தெறிந்து விட்டார். சுஜாதா என்கிற அந்த எழுத்தாளரிடம்..... எழுத்தாளரை விடுங்கள்.... ரங்கராஜன் என்கிற அந்த எளிய மனிதரிடம் ஒன்றரை மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தது ஒரு நிறைவான அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய நண்பர் தேசிகனுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். (மனிதருக்கு அபரிதமான நகைச்சுவை உணர்ச்சியிருக்கிறது. நண்பர் ராஜ்குமார், தாம் பெரம்பூர், திரு.வி.க.நகரில் இருந்து வருவதாக கூறியவுடன் இவர் "நான் பெங்களூர்ல இருந்து வர்ற வழில பார்த்த ஊர் மாதிரியிருக்கே" என்று கிண்டலடிக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியான எழுத்தாளர்களுடன் கூடிய நிறைவான சந்திப்புக்கள் அடிக்கடி நிகழ நான் வணங்கும் இயற்கையை பிரார்த்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* - * - *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஹரன்பிரசன்னா, எனி இண்டியன்.காமில் இருக்கிறார். வயது 29. www.nizhalkal.blogspot.com.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_meet_1.jpg" align="left" /&gt; நான் சந்திக்க நினைக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதாவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குத் தேசிகன் மூலம் கிடைத்தது. சுஜாதாவின் எழுத்துகளை மிகவும் விரும்பி வாசித்திருந்த நான், அதை வாசித்த காலத்திலேயே சுஜாதாவைச் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். சென்னையில் வுட்லாண்ட்ஸ் டிரைவ் இன்னில் சுஜாதாவைச் சந்தித்தபோது, எனக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷமும் வாழ்நாளில் நாம் நினைத்த ஒன்று நிறைவேறுகிறது என்கிற எண்ணமும் இருந்தது. சந்திப்பு முடியும்போது, நான் சந்திக்க நினைத்திருந்த ஆதர்ச எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர் என்று அவரிடம் சொன்னேன். சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்ந்தெடுத்துக்கொண்ட கேள்விகளுடன் செல்லாமல், ஒரு சிறிய சந்திப்பு என்றளவிலேயே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் சென்றிருந்தேன். சந்திப்பு அப்படியே அமைந்தது. சுஜாதா புதியதாக எதையும் சொல்லிவிடவில்லை. இத்தனை வருடங்களாக அவர் எதை எழுதிக்கொண்டிருக்கிறாரோ அதையே சொன்னார். மீண்டும் மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டிருந்த கேள்விகளே மீண்டும் கேட்கப்பட்டன. நேரில் சந்தித்துக் கேட்கிறோம் என்கிற நிகழ்வே முக்கியமானதாக இருந்தது. நான் பல கேள்விகள், துணைக்கேள்விகள் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். முக்கியமாக நான் கேட்டது, இனிமேல் கணேஷ் வசந்த் கதைகள் எழுதுவீர்களா? அவர் உடனே சொன்னார், இல்லை என்று. (ரஜினி மாதிரி இப்ப நான் இல்லைன்னு சொல்றேன், ஆனா நாளை என்ன நடக்கும்னு ஆண்டவந்தான் முடிவு செய்யனும் என்று சொல்வாரோ என எதிர்பார்த்திருந்தேன்!) நான் உடனே "நன்றி சார்" என்றேன். அதற்கு அவரின் எக்ஸ்பிரஷன் என்னவாக இருந்ததென்று சொல்லமுடியவில்லை. நான் ஒரு வேண்டுகோளாக, "இனியும் புனைவுகளில் அதிகம் கவனம் செலுத்தாமல், உங்களுக்குக் கிடைத்திருக்கிற இந்த பெரும் வாய்ப்பைப் பயன்படுத்தி, இளைஞர்களின் கவனம் பதியவேண்டிய இலக்கியங்களின் பக்கம் அவர்களின் பார்வை திரும்ப எழுதவேண்டும். திருப்பாவையின் உரையை உங்கள் நடையில் எழுதலாம்" என்றேன். "ஒரே சீரியஸா எழுதிக்கிட்டு இருந்தா, நான் எழுதுறதைப் படிக்கிறதை விட்டுருவாங்க. அதையும் எழுதி, இதையும் எழுதினாத்தான், அவங்களை நான் சொல்ற விஷயத்தைக் கவனம் பெற வைக்க முடியும்" என்றார். ஒப்புக்கொண்டேன். சுஜாதா என்கிற நல்ல மனிதரைக் கண்டேன் என்பதே உண்மை. அவரது அரட்டை மற்றும் கேள்விப்பட்ட விஷயங்களில் இருந்து, அவர் இவ்வளவு தூரம் இயல்பாக, நட்புடன் பேசுவார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. சந்திப்பு ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே, அவரது சில கமெண்ட்டுகளில் மிக ஈர்க்கப்பட்டு, பலமாகச் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். தான் எழுதியதைப் பற்றிச் சொல்லும்போது எந்த வித யோசனைக்கும் இடமில்லாமல் தன் மனதில் பட்டதைப் பட்டெனச் சொன்னர் சுஜாதா. பாய்ஸ் படம் பற்றிப் பேசும்போது, "நீங்கள் எழுதாத வசனங்கள் சில இடம்பெற்றதாமே" என்றேன். "இல்லவே இல்லை" என்றார். திரைக்கதை எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில், கதாபாத்திர அறிமுகத்தின் போது தரப்பட்டிருந்த எடுத்துக்காட்டில் பாய்ஸ் படம் பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ( பாய்ஸ் படம் வருவதற்கு முன் அவர் எழுதிய விமர்சனம் 'கடவுள்களின் பள்ளத்தாக்கு என்ற புத்தகத்தில் வந்துள்ளது என்றார் )அதில் வரும் கவிதைக்குப் பதில் படத்தில் வேறொரு கவிதை இடம்பெற்றிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி, நீங்கள் எழுதியதே இடம் பெறவில்லையே என்றேன். 100% அப்படியே இடம்பெறும் என்று எதிர்பார்க்கக்கூடாது; இயக்குநர்கள் விருப்பத்திற்கேற்ப சிலவற்றை மாற்றுவார்கள் என்றார். அந்நியனில் ஏ.ஆர்.ரகுமான் இல்லாத குறை தெரிகிறது என்றார். ஒப்புக்கொண்டார் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது, படம் வந்ததும் பாடல்கள் பிடிக்கும் என்றார். கூட இருந்தவர்கள் வழி மொழிந்தார்கள். நான் ஏ.ஆர்.ரகுமான் இல்லாத குறை எப்போதும் இருக்கும் என்றேன் மற்றவர்களிடம். வலைப்பதிவுகளைப் பற்றிப் பேசும்போது, "15 நிமிடப் புகழ் என்று நீங்கள் சொன்னதற்கு உங்களை விமர்சிக்காத வலைப்பதிவுகள் குறைவு" என்றேன். "அப்படியா" என்று கேட்டுக்கொண்டார். "ஏறக்குறைய 550 வலைப்பதிவுகளில் 20 கூட நல்ல வலைப்பதிவுகள் தேறாது; எல்லாரும் நினைவலைகளாக எழுதிக் கொல்கிறார்கள். அன்றொரு நாள் மழை பெய்த போது, நான் பத்தாம் வகுப்புப் படித்த போது பெய்த மழை ஞாபகம் வந்தது.. என்றே எழுதுகிறார்கள்; குமுதத்தையும் ஆனந்தவிகடனையும் விமர்சித்துவிட்டு அதைவிட மோசமாகத்தான் எழுதுகிறார்கள்; பத்திரிகை உலகில் தீவிரமாக எழுதுகிறவர்களே வலைப்பதிவுலும் தீவிரமாக வினையாற்றுகிறார்கள்; மற்றவர்களெல்லாம் எதையோ என்னவோ எழுதுகிறார்கள்" என்றேன். கேட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு இயல்பான சந்திப்பாக இருந்தது. வீட்டிலிருப்பவர்கள் மாறி மாறி சுஜாதா என்ன சொன்னார் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். என் தீவிர விசிறியாம் அவர் என்று சொன்ன பின்பு, அவர்கள் யாரும் மீண்டும் அக்கேள்வியைக் கேட்கவில்லை. சுஜாதா என்கிற எழுத்தாளர் பிம்பம், அவரது சந்திப்பின் மூலம், என் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான ஒரு பிம்பமாக மாறிவிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;* - * - *&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;க்ருபா ஷங்கர், Newhorizon Media, கணித்துறை. வயது 26 இருக்கலாம். www4.brinkster.com/shankarkrupa&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_meet_7.jpg" align="left" /&gt; ஆறு மணிக்குதான் பரிநிரலி சந்திப்புக்குக் கிளம்பிக் கொண்டு இருப்பதாக &lt;a href="http://web.ics.purdue.edu/~ykalyana/blog/"&gt;யக்ஞா&lt;/a&gt;&lt;br /&gt;சொன்னான். &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2005/05/blog-post_27.html"&gt;பரிநிரலி&lt;/a&gt;, சுஜாதா என்று இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில் நடந்தாலும், பரிநிரலி விவாத அரங்கம் ஆரம்பிக்க தாமதம் ஆகும் என்று பட்சி சொல்லியது. எப்பொழுதும் போல் பட்சி தவறாகவே சொல்லி இருந்தது பிறகுதான் புரிந்தது. சுஜாதாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1) அப்துல்கலாம் பற்றி சுவையாக (மசால் தோசை, பானிப்பூரி மாதிரி) இரண்டு வார்த்தைகள், மற்றும் அனுபவங்கள்.&lt;br /&gt;2) மைக்ரோசா·ப்ட் வளர்ச்சியைத் தாமதப்படுத்த லினக்ஸ் பரவலாக&lt;br /&gt;வேண்டுமென்றால் தமிழ் வளர்ச்சி தாமதப்படாதா? இன்னும் கொஞ்ச காலத்திற்கு லினக்ஸை கவனிப்பதை ஒற்றி வைத்துவிட்டு எல்லோரும் விண்டோஸில் தமிழ்&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவும் மற்றவர்களும் ஆர்வத்துடன் உரையாடிக்கொண்டு இருந்த வேளையில் எதற்கு கரடிப் பட்டம் வாங்க வேண்டும் என்ற யோசனையால் அதையெல்லாம் முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து கொண்டிருந்த உரையாடலே விஷயசாரமுடன் இருந்தது - திரைப்படம், கவிதை, நாவல். வளரும்/வளரநினைக்கும் எழுத்தாளர்களுக்கு சுஜாதா வழங்கிய டிப்ஸ், 'நிறையப் படிக்கணும்.'&lt;br /&gt;&lt;br /&gt;தேசிகனிடம் கேட்கவேண்டும், சுஜாதாவோட உண்மையான வயசு 40ஆ இல்ல 45ஆ?&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* - * - *&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;சுவடு சங்கர், வயது 24 இருக்கலாம். இன்·போஸிஸ், கணித்துறை, suvadu.blogspot.com&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_meet_6.jpg" align="left" /&gt; எதற்கெல்லாம் தாமதமாகப் போகவேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமற்போய் விட்டது வரவர. உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன்னுள் ஒரு மணி நேரம் தாமதமாக நுழைந்தபோதுகூட என் மண்டை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டுதான் இருந்தது. அந்த ஏசி ஹாலுக்குள் பத்துப்பதினைந்து டம்ளர் ஐஸ் வாட்டர் மட்டும் முன்வைத்துக்கொண்டு அந்த எழுபது வயது இளைஞர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த அத்துணை தீவிரமான முகங்களைப் பார்த்தபோதுதான் என் தலைமைச் செயலகத்தில் மின்சாரம் அற்றுப்போனது. சபீனா போட்டு அலம்பிய மாதிரி சுத்தமான மூளையுடன் சுஜாதா அவர்களின் முன்னால் போய் நிற்கும்போது "இவர்தான் சுவடுகள் ஷங்கர்" என்று இகாரஸ் பிரகாஷ் குரலில் (ஐயா! நீவிர் நீடூழி வாழ்க) ஒலிக்குறிப்புகள், ஒன்று தவிர்த்து ஒன்றாக என் காதுகளில் விழுந்துகொண்டிருக்க, நான் ஆட்டுக்கணக்காக (sheepish, ஹிஹி) சிரித்தது இன்னும் நினைவிலிருந்து படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் சொறிந்தது, அரித்தது என்றெல்லாம் டுமீல் விட்டால் காமெடியாக இருக்கும். அதெல்லாம் வேண்டாம். ஆனால், இந்த மனுஷர் முன்னால் என்ன பேசுவது என்று விளங்கத்தானில்லை. "சாரி, மன்னிக்கணும், ஒரு எக்ஸாம் இருந்துச்சு. எழுதிட்டு வர லேட்டாயிடுச்சு" என்று சொல்ல, டிரேட்மார்க் புன்னகை ஒன்று சுஜாதாவிடமிருந்து. என் திருவாய் திறந்து என்ன முத்து உதிர்த்தாலும் அது உலகத்தரமான நகைச்சுவையாக இருக்கும் என்பது முதலிலேயே புரிந்துவிட்டதால் உட்லண்ட்ஸில் செவிக்கு மட்டுமே உணவு, வாய் திறப்பது கனவு என்று அக்கணமே விதிக்கப்பட்டது. அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;என்னென்னமோ பேசிக்கொண்டிருந்தனர். சுரேஷ¤ம், பிரகாஷ¤ம் இன்ன பிறரும் கேள்விகள் பல சரமாரியாக எடுத்துவிட சுஜாதா சளைக்காமல் பதிலளித்துக்கொண்டிருந்தார். அவரது கதைகள் கொலை செய்யப்பட்ட சினிமாக்களிலிருந்து, 'கற்றதும் பெற்றதும்' வரை காதுகளில் விழுந்தது. ஆயினும் நான் வரும்போதே நிறைய பேசி முடித்திருந்ததால் பேச்சு தொய்வடையத் தொடங்கியிருந்தது. சீக்கிரமே சுஜாதா 'ஓக்கே, டயமாச்சு' mode-க்குப் போக, பிறகு ·ப்ளாஷ் வெளிச்சத்தில் அவரை வழியனுப்பிவைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா ஜே.ஜேவும் கிடையாது. நான் பாலுவும் கிடையாது. எனவே எங்கள் முதல் சந்திப்பில் ஏதும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடவில்லை (அட்ரா, அட்ரா! என்னா பில்டப்பு என்னா பில்டப்பு!). ஆனாலும் அவரிடம் எனக்கு இயல்பாக எதுவும் பேசுவதற்கோ கேட்பதற்கோ தோன்றவேயில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இதை எதிர்பார்த்தேன் என்றும் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவை இன்னும் ஒரு எழுபது வயது முதியவராக என்னால் சத்தியமாகக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. ஒரு முப்பத்தைந்து நாற்பது வயது இருக்கலாம் மிஞ்சிப்போனால். அவ்வளவுதான். அவரை அப்படித்தான் என்னால் பார்க்கமுடிகிறது. நேருக்கு நேர் அவரது முதுமையை சந்திக்கும்போது அவர் தாத்தா வேடமிட்டு வந்திருப்பது போன்றதொரு பிரமை. மெதுவாக அவர் காரில் ஏறி அமரும்போது வேகமாக ஓடிப்போய் அவரது முதிய வேடத்தைக் கலைத்துவிட்டு "சும்மா சீன் போடாதீங்க சுஜாதா" என்று சொல்ல ஆவலாக இருக்கிறது. கலைந்துவிடக்கூடிய வேடமாக இருந்தால் அதைச் செய்யக்கூடிய முதல் ஆசாமி நானாகத்தான் இருப்பேன்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* - * - *&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஐகாரஸ் பிரகாஷ், வயது 33, Indscan- வைத்திருக்கிறார். Industrial Research. icarus1972us.blogspot.com&lt;br /&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_meet_4.jpg" align="left" /&gt; உட்லாண்ட்ஸ் ஓட்டலில் அந்த சந்திப்பு நடந்து முடிந்ததும், உஷா மீண்டும் மீண்டும் என்னைக் கேட்டார். " நெஜமாவா? நெஜமாவா? ... என்னால நம்பவே முடியலையே... " அவரால் நம்ப முடியாமல் போன விஷயம், என்ன என்றால், நான் வாத்தியாரை முதல் முதலாக இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன் என்பதைத்தான்.&lt;br /&gt;தேசிகன் ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்துக்கு வழக்கம் போலவே இருபது நிமிடங்கள் தாமதமாகச் சென்றிருந்தேன். நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்த அந்த இடத்தில், ஆளாளுக்கு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு, சுஜாதாவை சூழ்ந்திருந்தனர். கிடைத்த சந்தில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு நானும் அமர்ந்த போது, தேசிகன் அறிமுகப்படுத்தினார்.&lt;br /&gt;முதன் முதலாக இப்போதுதான் நேரிலே பார்க்கிறேன் என்றாலும், அதற்கென்று பிரத்தியேகமான உணர்வு ஒன்றும் தோன்றவில்லை. நீண்ட நெடுநாட்களாகப் பழகி வந்திருந்த ஒருத்தரிடம் சகஜபாவத்துடன் உரையாடுவதைப் போலத்தான் இருந்தது. என்ன என்னமோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் என் பங்குக்கு எதையாவது கேட்கவேண்டும் என்று தோன்றினாலும், அத்தனை பேர் கூடியிருக்கிற இடத்திலே அறியாமையைக் காட்டிக் கொள்ள வேண்டுமோ என்றும் தோன்றியது. ஒரு இறுக்கமான கேள்வி பதில் செஷனாக இல்லாமல், ஜாலியாக கிண்டலும் கேலியுமாகச் சென்றதும். அதற்கு வாத்தியார் ஈடு கொடுத்ததும் இனிய ஆச்சர்யங்கள்.&lt;br /&gt;சிறுகதை எழுதுவது எப்படி என்கிற அரதப் பழசான கேள்வியில் இருந்து துவங்கி, பாய்ஸ் படம் , ஹைக்கூ, பொய்க்கூ, அந்தக் காலத்தில் வந்த லவ்லெட்டர்களுக்காக ஊட்டுக்காரம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது, ( இந்தக் காலத்திலும் வருகிறதா என்று கேட்க நினைத்து, கேட்கவில்லை ) பிரிவோம் சந்திப்போம், வானம் வசப்படும்., நகரம் சிறுகதை, முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படம், அடுத்து எழுதப் போகும் படங்கள் என்று ஒருவர் மாற்றி ஒருவர் கேட்க, சந்திப்பு ஜாலியாகச் சென்றது.&lt;br /&gt;நடுவிலே 'ஆ' வை பிரகாஷ்ராஜ், படமாக எடுப்பதற்காகக் கேட்டிருக்கிறார் என்று சொன்னதும், உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தேன் (" வாணா சார்.. ப்ளீஸ்... கெடுத்து குட்டிச் சுவராக்கிடுவாங்க, இருள் வரும் நேரத்தை பண்ண மாதிரி" )&lt;br /&gt;ஏழுவயதில் முதன் முதலாக, புரிந்தும் புரியாமலும் வாசித்த பெண் இயந்திரம் கதையில் இருந்து, நாளது வரையில், ஒரு எழுத்தாளர் என்ற அடிப்படையிலே அவரும், வாசகன் என்ற முறையிலே நானும் ஒரு இணைக்கோட்டிலே பயணம் செய்திருக்கிறோம். ஆனால் சந்தித்துக் கொண்டதில்லை. இன்று சந்தித்துக் கொண்டாலும், அதனாலே பெரிய ரசாயன மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை. நீண்ட நெடுநாட்களாக பரிச்சயமான ஒரு நண்பருடன் பேசுகிற தோரணையில் தான் பேச வருகிறது.&lt;br /&gt;ஒரே ஒரு சினிமாவில் தலைகாட்டியது பற்றியும், எடி மர்பியின் படத்தை தழுவி அவர் திரைக்கதை எழுதிய தமிழ்த் திரைப்படம் பற்றியும், அவர் கதைகளிலே அடிக்கடி தலைகாட்டும் வத்ஸலா பற்றியும், வீடு சிறுகதை பற்றியும், கணையாழி கடைசிப் பக்கத்தில், அவர் அஞ்சலி படத்துக்கு எழுதிய விமர்சனம் பற்றியும், பூர்ணம் விசுவநாதனுடனான நாடக தினங்கள் பற்றியும், டில்லி பாரதி பாலு என்கிற நகுபோலியன் பற்றியும், ஆர்யபட்டா கதைக்கும், பாலசந்தரின் அந்த நாள் திரைப்படத்துக்கும் இருக்கும் ஒற்றுமை பற்றியும், நைலான் ரதங்கள் பற்றியும் , மேகலாவில் எழுதி நான் தலைப்பு மறந்து போன ஒரு குறுநாவல் பற்றியும், குமுதம் ஆசிரியர் தினங்கள் பற்றியும் கேட்கவேண்டியது நிறைய இருந்தது என்று உறைத்தது, அவர் சுமார் ஏழரை மணிக்கு, " என்ன முடிச்சுக்கலாமா? " என்று கேட்ட போது..&lt;br /&gt;இன்னும் பேசவேண்டியது நிறைய இருக்கிறது என்று சொன்னேன், சந்திப்பு முடிந்து அவர் கிளம்பிய போது, அவருக்கு மட்டும் கேட்கிற விதமாக.&lt;br /&gt;ஆவட்டும் பாக்கலாம் என்றார் காமராஜர் மாதிரி.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* - * - * - *&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ராமசந்திரன் உஷா,ஹோம் மேக்கர் , இவர் எழுதிய கதைகள் இணையத் தளங்களிலும் கணையாழியிலும் வந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_meet_6.jpg" align="left" /&gt;சில மாதங்களுக்கு முன்பு ஒரு அரை மணிநேரம் சந்திப்பு, இப்பொழுது நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு மணி நேர சந்திப்பு.&lt;br /&gt;நாங்கள் ஏழு பேர்கள், அனைவருமே எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கு தீவிர ரசிகர்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் அந்த இரண்டு மணி நேர சந்திப்புக்கு பிறகு ஜெண்டில்மேன் என்ற நற்சான்றிதழ் அனைவர் வாயிலும் வந்தது. கதை சொல்வதில், நடையில் இருக்கும் துள்ளல் பார்க்கும் உருவத்தில் இல்லாவிட்டாலும் பேசும் முறையில் வயதானவர்களுக்கே உரிதான அறிவுரை சொல்வதோ, ஆசிர்வாதமோ இல்லாமல், நன்கு அறிமுகமானவரிடம் சகஜமாய் எப்படி பேசுவோமோ அப்படி பேசினோம்.&lt;br /&gt;நண்பர் சுரேஷ் சொன்னதுப் போல, ரிமோட் பட்டனைத் தட்டி சேனல் மாற்றுவதுப் போல, ஆள் ஆளுக்கு ஒரு சப்ஜெட்டில் கேள்வி எழுப்ப அனைத்துக்கும் சரியான, யதார்த்தமான, உண்மையான பதில் சட்டென்று வந்தது. தற்கால கல்விமுறையைப் பற்றி அவருடைய&lt;br /&gt;கவலை, கவிதைக்கு எளிமையே அழகு என்பதற்கு அவர் சொன்ன உதாரணங்கள், குமுதத்தில் வந்த ப்ரியா கதையின் முடிவில் எஸ்.ஏ.பி சொன்ன திருத்தங்கள், ரசிகைகள் எழுதிய கடிதங்களை அவர் மனைவிப் படித்துவிட்டு சொல்லும் கமெண்டுகள், இன்றும் நல்ல சிறுகதைகள், அதாவது பிற எழுத்தாளர்கள் எழுதியதைப் படித்துவிட்டு அவர் மனைவி அதை இவரிடம் படிக்க சொல்வாராம், அந்நியன், பாய்ஸ் என்று பேச்சு மிக சுவாரசியமாய் போனது.&lt;br /&gt;பிரகாஷ் அவர் எழுதிய கதைகளைப் பற்றிய புள்ளிவிவரங்களை சொல்லி அசத்தியதும், அவர் முகம் மலர்ந்ததைப் பார்க்கும் பொழுது, எந்த எழுத்தாளருக்கும் விருதுகளை விட அவர் எழுதியதை பொத்தாம் பொதுவாய் நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் படித்தவைகளை விவரமாய் சொல்லுவதை விட பெரிய விருது உலகிலேயே இல்லை என்று புரிந்தது. சிலர் அவர் எழுத்து வெறும் மேலோட்டமாய் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் பல விஷயங்களை சாதாரண வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது அவர் எழுத்துதான். அப்படி எந்த வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளர்கள் எழுதினார்கள்? காரில் இருந்து இறங்கி நடக்கும் பொழுதும், திரும்ப மீண்டும் காரில் ஏறும்பொழுதும் வழியில் பார்ப்பவர்களில் பெரும்பாலோர், அவரை திரும்பிப் பார்த்தும், சுஜாதா தானே என்று சின்னக் குரலில் பேசிக் கொண்டதும், சிறிது தொலைவில் பின் தொடர்ந்த என் காதிலும், கண்ணிலும் விழுந்தது. இத்தகைய பிரபலம் வித்யாகர்வம் சிறிதுக் கூட இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை அளித்தது. அந்த இரண்டு மணிநேரமும் மனதிற்கு நிறைவாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111778548338705377?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111778548338705377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111778548338705377&amp;isPopup=true' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111778548338705377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111778548338705377'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/06/blog-post.html' title='சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111753057582748643</id><published>2005-05-31T14:38:00.000+05:30</published><updated>2005-05-31T15:01:45.396+05:30</updated><title type='text'>சாரி, பெஸ்ட் ஃபிரண்ட்</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/sorrycover.gif" alt="Image hosted by Photobucket.com", align="right"&gt; "சாரி, பெஸ்ட் ஃபிரண்ட்".  இது புத்தகத்தின் பெயர். இந்த புத்தகத்தை எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் நான் சமிபத்தில் படித்த ஒரு நல்ல சிறுகதை தொகுப்பு இது.  ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பு சில பள்ளிகளில் துணைப்பாடமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் பத்து சிறு கதைகள் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. அவை - &lt;br /&gt;&lt;br /&gt;பாம்புப்பட்டிக்கு என்ன ஆச்சு - சாய் விடேகர்&lt;br /&gt;மாறிய விளக்குகள் - போய்லி சென்குப்தா&lt;br /&gt;சுரங்கப்பாதை - ஷமா ஃபியூட்டேஹல்லி&lt;br /&gt;சிங்கத்துக்கு புத்துயிர் - கிதா ஹரிஹரன்&lt;br /&gt;வெல்லும் அணி - சாவித்திரி நாராயணன்&lt;br /&gt;பாட்டுக்கெல்லாம் ஒரு பாட்டு - ஸ்வப்னா தத்தா&lt;br /&gt;சாரி, பெஸ்ட் ஃபிரண்ட் ஹேமாங்கினி ராணடே&lt;br /&gt;ரிஷபனின் ராமன் - கீதா ஹரிஹரன்&lt;br /&gt;பொம்மை - சாவன் தத்தா&lt;br /&gt;மாங்கா மடையர்களும் தேங்கா மடையர்களும் - ஷமா ஃபட்டேஹல்லி&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதைகளை கீதா ஹரிஹரன் மற்றும் ஷாமா ஃபியூட்டேஹல்லி தொகுத்துள்ளார்கள். தமிழில் அழகாக மொழிபெயர்த்தவர் அ.குமரேசன். ஓவியங்கள் ரஞ்சன் தே. பாரதி புத்தகாலயம். 80 பக்கங்கள், விலை 25/= ( சரவணபவன் ஒரு மசால் தோசை + மினி காப்பியின் விலை )&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கதையின் ஆரம்பமும் நம்மை கதைக்குள் இழுத்துச்செல்கிறது. (உத)&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;["நீங்க இந்த கதையை நம்பமாட்டீங்க. ஆனால் இது நிஜமா நடந்த கதைன்னு என்னால் நிச்சயமாக சொல்லமுடியும். ஏன்னா, நான் பாம்புபட்டிக்கு போயிருக்கிறேன். ... " - பாம்புப்பட்டிக்கு என்ன ஆச்சு]&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;["ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து ஐந்தாம் ஆண்டில் அலிபாக் நகரின் வயல்வெளிகளில் நீங்கள் நடந்து சென்றிருந்தால் ஒரு விநோதமான காட்சியைக் கண்டிருப்பீர்கள். ஒல்லியான உருவம் ஒன்று வெள்ளைக் குறுந்தாடியுடன் கண்ணாடி அணிந்துகொண்டு அந்த வயல்களில் நடைபோடுவதை பார்த்திருப்பீர்கள்...." - மாங்கா மடையர்களும் தேங்கா மடையர்களும் ]&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொகுப்பில் உள்ள கதைகள், குழந்தைகள் வாழ்க்கையின் அடிப்படை விதியை புரிந்து கொள்ளவும் அதனுடன் இணைந்து வாழவும் அதனை அனுபவித்து மகிழவும் செய்கிற ஒரு முயற்சி. இந்தியாவில் குழந்தைகளுக்காக வெளியிடப்படுகிற பல புத்தகங்களுக்கு தற்போது இந்த புத்தகம் பாப்புலராக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையை இங்கு தந்துள்ளேன். படித்துப்பாருங்களேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;மாறிய விளக்குகள் - போய்லி சென்குப்தா&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அதை நான் விளையாடாகத்தான் எடுத்துக்கொண்டேன். தில்லி நகரின் ஜன்பாத் சாலைச் சந்திப்பில் தினமும் பத்திரிக்கை விற்கிற ஒரு பறட்டைத்தலை பையனோடு விளையாடுவதாகத்தான் எடுத்துக்கொண்டேன். அந்த வழியாக நான் சைக்கிளில் போகிறபோதெல்லாம் அவன் என் பின்னால் ஓடி வருவான். கையில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையை எடுத்து நீட்டிக் கொண்டு ஆங்கிலமும் இந்தியும் கலந்த வார்த்தைகளில் அன்றைய மாலைப் பொழுதின் செய்தித் தலைப்புகளைக் கூவுவான். இந்த தடவை நான் சைக்கிளை நடைபாதை அருகில் நிறுத்திவிட்டுஅவனிடம் ஹிந்திப் பேப்பரைக் கொடுக்குமாறு கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் வாயைத் திறந்தபடி என்னையே பார்த்தான். "அண்ணா, உங்களுக்கு ஹிந்தி தெரியுமாண்ணா" என்று கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கைக்கான காசை அவனிடம் கொடுத்துக்கொண்டே "தெரியுமே. ஏன் நீ என்ன நினைச்ச" என்று கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் கொஞ்ச நேரம் சும்மா இருந்தான். அப்புறம் "உங்களப் பார்த்தா வெள்ளைக்காரரு மாதிரி இருக்கீங்க, அதான் கேட்டேன்" என்றான். " உங்களுக்கு ஹிந்தி படிக்க கூட தெரியுமாண்ணா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லாத் தெரியும்" என்று நான் பதில் சொன்னபோது கொஞ்ம் பொறுமை இழந்திருந்தேன்" என்னால் ஹிந்தி பேச முடியும், படிக்க முடியும், எழுதவும் முடியும். நான் பள்ளிக் கூடத்தில் படிக்கிறபாடங்கள் ஹிந்தி ஒரு சப்ஜெக்ட்" என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;"சப்ஜெக்டா, அப்படீன்னா," என்று அவன் கேட்டான். பள்ளிக்கூடத்துக்கே போகாத ஒருவனிடம் சப்ஜெக்ட் என்றால் என்னவென்று எப்படி புரிய வைப்பேன்?" அது வந்து.." என்று நான் சொல்ல ஆரம்பித்தபோது சிக்னல் விளக்கு மாறியது. பச்சை விளக்கு எரிந்ததும் என் பின்னால் இருந்த வண்டிகளின் ஆரன் ஒலி நூறுமடங்காக அதிகரித்தது மற்ற வாகனங்களின் போக்குவரத்துடன் நானும் சேர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் அதே இடத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். கையில் ஒரு ஹிந்திப் பத்திரிக்கையை வைத்துக்கொண் என்னைப் பார்த்து புன்னைகைத்தான் "பய்யா, ஆப்கா அக்பார்..அப் பதாயியே யஹ் சப்ஜெக்ட் க்யா சீஸ்ஹை?" அவனுடைய உச்சரிப்பில் அந்த ஆங்கில வார்த்தை வித்தியாசமாக ஒலித்தது. அதற்கு ஆங்கிலத்தில் இன்னொரு பொருள் உண்டல்லவா, மற்றவரால் அடக்கி ஆளப்படுபவர் என்று அந்த பொருளைத் தருவதுபோல் அவன் உச்சரித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;"அதுவா, படிக்கிறதுக்கான பாடம்னு அர்த்தம்" என்று நான் சொன்னேன். அப்போது சிக்னலில் சிவப்பு விளக்கு வந்துவிட்டதால் தொடர்ந்து நான் அவனுடன் பேசினேன். "நீ எப்பவாவது ஸ்கூலுக்கு போய்யிருக்கியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லீங்கண்ணா" , என்றான் அவன். அதற்கப்புறம் பெருமிதத்துடன், "நான் இவ்வளவு உசரம் இருக்கப்பவே வேலை செய்ய ஆரம்பிச்சிட்டேன்" என்று கூறியவன், என் சைக்கிள் ஸீட் உயர அளவைக் காட்டினான்" ஆரம்பத்திலேயேல்லாம் என் கூட அம்மா வருவாங்க இப்ப நானே தனியா வேலை செய்ய முடியும்"&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னோட அம்மா இப்ப எங்க இருக்காங்க" என்று கேட்ட போது சிக்னல் பச்சை விளக்குக்கு மாறிவிட்டது. நானும் கிளம்பிவிட்டேன். ஆனாலும் அவன் எனக்கு பின்னால் எங்கேயோ இருந்தபடி"அவங்க இப்போ மீரட்டுலே இருக்காங்க, யார் கூட இருக்காங்க தெரியுமா.." என்று சொல்லிய மீதி வார்த்தைகள் காற்றில் கரைந்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கடுத்த நாள் அவன் "பய்யா என் பேர் சமீர்", என்றான் அப்புறம் மிகவும் வெட்கப்பட்டுக்கொண்டு உங்க பேர் என்ன" எனக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொன்னது வியப்பை எற்படுத்தியது. என் சைக்கிள் கூட சற்று ஆடிவிட்டது. "என் பேரும் சமீர்தான்" என்றேன். "அப்படியா!" அவன் கண்களில் மின்னல்&lt;br /&gt;"ஆமா" என்று அவனைப் பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தேன். "சமீருங்கிறது அனுமாருக்கு இன்னொரு பெயர் தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப நீங்க ஓண்ணாவது சமீர், நான் ரெண்டாவது சமீர்" என்று அவன் ஒரு வெற்றிக் களிப்புடன் சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியே வெச்சிக்கலாம்" என்று கூறிய நான் என் கையை நீட்டினேன். "கைகொடு ரெண்டாம் சமீர்!"&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடையகை என் கைக்குள் ஒரு சின்னப் பறவைபோல அமர்ந்து கொண்டது. அப்புறம் நான் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த போது கூட அவனுடைய கையின் வெப்பத்தை என்கைக்குள் உணர்ந்து கொண்டேதான் இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அடுத்த நாள் அவனுடைய முகத்தில் வழக்கமாக என்னைப் பார்த்துக் புன்னகைகப்பானே அந்த புன்னகையைக் காணோம். "பய்யா, மீரட்டுல கலவரமாம் பய்யா. அங்கே நிறைய முஸ்லீம்களைக் கொன்னுட்டாங்களாம்"&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கையில் இருந்த பத்திரிகையின் தலைப்புச் செய்தியைப் பார்த்தேன். "மதக் கலவரம்" என்று சுட்டெரித்தது அந்த செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா சமீர்.." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஒரு முஸ்லீம் சமீர் பய்யா எங்க சொந்தக்காரங்க எல்லாம் மீரட்டுலதான் இருக்காங்க" அவன் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. அவன் தோளை நான் தொட்ட போது அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அவனை அந்த சாலைச் சந்திப்பில் காணவில்லை. அதற்கடுத்த நாளும் காணவில்லை. அதற்கப்புறம் ஒரு நாள் கூட அவனைக் காணவில்லை. எந்த பத்திரிகையாலும், இங்கிலீஷ் பத்திரிகையோ, ஹிந்திப் பத்திரிகையோ எதனாலும் என்னுடைய இரண்டாம் சமீர் எங்கே போனான் என்று சொல்ல முடியவில்லை.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[ பாரதி புத்தகாலயம்2, குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதை, சென்னை-600 015. போன்: 24332424 இணையத்தளம்: www.tamizhbooks.com மின்னஞ்சல்: info@tamizhbooks.com ]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111753057582748643?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111753057582748643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111753057582748643&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111753057582748643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111753057582748643'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/05/blog-post_31.html' title='சாரி, பெஸ்ட் ஃபிரண்ட்'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111711525693481663</id><published>2005-05-26T18:59:00.000+05:30</published><updated>2005-05-26T19:22:39.496+05:30</updated><title type='text'>பிரதாப முதலியார் சரித்திரம்</title><content type='html'>&lt;strong&gt;பிரதாப முதலியார் சரித்திரம் , புத்தக விமர்சனம் - ஹரன்பிரசன்னா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/pirathaabamuthaliyArsariththiram.jpg" alt="Image hosted by Photobucket.com" width="202" height="312" align="left"&gt;&lt;br /&gt;தமிழின் முதல் உரைநடை நவீனம் என்று சொல்லப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், மாயூரம் வேதநாயகம்பிள்ளையால் எழுதப்பட்டு 1879-ம் ஆண்டு வெளிவந்தது. தமிழின் முதல் உரைநடை நவீனத்தை வாசிப்பதிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த நான், அதன் நடையையும் அதிலிருக்கும் வார்த்தைப் பிரயோகங்களையும் ஒருவாறு கற்பனை கொண்டு, படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் பெரும் கஷ்டமாய் இருக்கும் என நினைத்திருந்தேன். புத்தகம் கையில் கிடைத்து அதை வாசிக்கத் துவங்கிய பின்பு, நான் செய்து வைத்திருந்த கற்பனை எத்தனை அபத்தமானது என்பது புரிந்தது. எவ்விதத் தங்குதடையில்லாமல் வாசிக்க முடிந்தது பெரும் ஆச்சரியமாய் இருந்தது. கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவலை வாசிக்கிறோம் என்கிற எண்ணமே பெரும் எழுச்சி தருவதாக அமைந்தது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும்போதும் என் மூதாதையர் எனக்கு விட்டுச் சென்ற தனிப்பட்ட கடிதத்தைப் படிப்பது போன்ற உணர்வு தொடர்ந்து கொண்டே இருந்தது. 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழின் நவீனம் இன்னமும் சரளமாய் வாசிக்கக்கூடியதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது என்கிற எண்ணம் தந்த கிளர்ச்சியே இந்த நூலின் வாசிப்பனுவபம். தமிழின் உரைநடை, தமிழில் எழுதிவந்த எழுத்தாளர்களால் எத்தனைத் தூரம் மாறியுள்ளது, மேன்மை பெற்றுள்ளது என்பதை அறியவும், புனைவு என்பது யதார்த்ததின் அடுக்குகளில் இருப்பதுதானன்றி வேறில்லை என்கிற எண்ணம் கொண்ட இக்கால எழுத்துக்கும், புனைவு என்பது முழுக்க புனைவே என்கிற அக்கால எழுத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பைப் பற்றி ஆலோசிக்கவும் பிரதாப முதலியார் சரித்திரம் ஒரு ஆவணமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் திருமணம் செய்து வாழ்வாங்கு வாழ்கிறார்கள். இங்கே பிரதாப முதலியாரின் இளமையும் அவரின் மூதாதையர்களின் குறிப்பும், பிரதாப முதலியாரின் கல்வியும் விவரிக்கப்படுகிறது. கூடவே ஞானாம்பாளின் வாழ்வும் இதே வகையில் விவரிக்கப்பட, ஞானாம்பாளுக்கும் பிரதாப முதலியாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு ஒரு சிறு தடங்கலும், அதைத் தெய்வம் தாமே களைந்து வைப்பது போன்ற ஓர் உரைநடை உத்தியும் அதைத் தொடர்ந்து திருமணமும் என நகரும் கதை, ஞானாம்பாளும் பிரதாப முதலியாரும் சந்திக்கும் பிரச்சனைகளும், அதை அவர்கள் திறம்பட - தெய்வத்தின் துணையுடன் - தீர்த்துக்கொண்டு, ஞானாம்பாள் எப்படிச் சிறந்த "பத்தரை மாத்துத் தங்கமாக" விளங்குகிறாள் என்பதுடன் "சுப மங்களமாக" முடிவடைகிறது. இக்கதையை வாசிப்பவர்கள் எல்லாருமே வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறார் ஆசிரியர்! கதையின் எல்லா நிகழ்வுகளுமே தெய்வத்தின் துணையுடனோ அதிர்ஷ்டத்தின் துணையுடனோ, பழங்காலத் திரைப்படங்களில் வருவது போல, பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் தொடர்ந்து தப்பித்துக்கொண்டும் வென்று கொண்டும் இருப்பது போல (மிகச் சரியாகச் சொல்வதானால் 'பிரதாப முதலியார் சரித்திரத்தில் வருவது போல பொன்னியில் செல்வனிலும் பழங்காலத் திரைப்படங்களிலும்' என்று மாற்றிச் சொல்லவேண்டும்) கதாநாயகனுக்கும் நாயகிக்கும் சார்பாகவும் அவர்கள் வெல்லும் வண்ணமும் அமைகின்றன. பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் வென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கும் பெரும் மனக்கிலேசமும் சோதனையும் நேரும்; சில அத்தியாங்களில் அதை அவர்கள் தாண்டியிருப்பார்கள். அதுமட்டுமன்றி கதாநாயகனைச் சேர்ந்தவர்களும் வென்றுகொண்டே இருக்கிறார்கள். அதிர்ஷ்டம் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கிறது. எதிர்நாயகன் என்கிற தனிப்பட்ட ஒரு பாத்திரம் இல்லை. தேவையான இடங்களில் அவ்வப்போது எதிர்நாயகர்கள் தோன்றி, கதாநாயகன் வெல்லும்போது, அவனை வாழ்த்திவிட்டு அவனுடன் சேர்ந்துகொள்கிறார்கள். அல்லது அவர்கள் ஒரு கதை சொல்கிறார்கள். இந்த உரைநடை நவீனத்தை "கதை" என்றே சொல்லவேண்டும். மாறி மாறிக் கதை சொல்கிறார்கள். பஞ்ச தந்திரக் கதைகளில் வருவது போல, கதைக்குள் கதையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஞானாம்பாள் இரண்டு அத்தியாங்கள் முழுவதும் அவளுக்குத் தெரிந்த கற்புக்கரசிகளின் கதைகளைச் சொல்கிறாள். பிரதாப முதலியார் ஒரு அத்தியாயம் முழுவதும் அவருக்குத் தெரிந்த கதைகளை, துணுக்குச் செய்திகளைச் சொல்கிறார். பிரதாப முதலியாரின் தாயார், மஞ்சள் மகிமை கொண்ட பெண்குலச் சிரோன்மணிகளின் கதைகளை வாயாரச் சொல்கிறார். இதை விட்டால் இன்னும் சில அத்தியாங்களில் துணுக்குகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார்கள். துணுக்குகள் இதைப் பற்றித்தான் என்றில்லை. ஞானாம்பாள் அரசியாக, அதிர்ஷ்டவசமாகத் தேர்ந்தெடுக்கப்படும்போது, ஒரு அரசனின் கடமைகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகிறார். அப்போது அவர் லஞ்சம் பற்றியும் வழக்கறிஞர்களின் நேர்மையின்மை பற்றியும் தமிழ் புறக்கணிக்கப்படுவது பற்றியும் விடாது பேசுகிறார். 1879-இல் வந்த கதை என்பதை மனதில் கொள்ளவேண்டும். சற்று மலைப்பாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவிரதையைப் பாராட்டும் முகமான கதை என்கிற ஆதார விஷயத்தையும் முழுக்க முழுக்க புனைவு என்கிற ஆதார விஷயத்தையும் கொஞ்சம் புறந்தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால் பல விஷயங்கள் புலப்படத் தொடங்கும். அதனால் இது தமிழின் மிகச்சிறந்த உரைநடை ஆவணங்களுள் ஒன்றாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இதன் நடையைச் சொல்லவேண்டும். இந்த உரைநடையில் ஒரு வரி எளிதில் முடிவடையாததாக இருக்கிறது. சில சமயம் ஒரு வரி ஒரு பத்தியாகிறது. அவள் சொன்னாள் என்று முடிந்துவிடவேண்டிய இடம் அவள் சொன்னபோது என்று தொடர்கிறது. இது அக்காலத்தின் உரையின் வடிவம். உரைநடை மணிப்பிரவாள நடையிலேயே அமைந்திருக்கிறது. சமிஸ்கிருதமும் ஆங்கிலமும் கலக்காத வரிகள் குறைவு என்கிற அளவிற்குத் தொடர்ந்து சமிஸ்கிருதமும் ஆங்கிலமும் உரைநடையில் வந்துகொண்டேயிருக்கின்றன. தமிழ் வார்த்தைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறு பத்திரிகைகளும் தமிழார்வலர்களும் எவ்வளவு தூரம் வென்றிருக்கிறார்கள் என்பதை அறிய இந்நூலை ஒப்புநோக்கலாம். இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள பல சமிஸ்கிருத வார்த்தைகள் இன்று வழக்கொழிந்துவிட்டன. சில வார்த்தைகளை பாரதியாரின் கட்டுரைகளில் காணலாம். அவையன்றி, புதியதாக, தமிழோடு சேர்த்து எழுதியும் பேசியும் வரப்பட்ட பல வார்த்தைகளை இந்நாவலில் காணலாம். இவையன்றி, புழக்கத்திலிருந்து அருகிவிட்ட நிறையத் தமிழ்வார்த்தைகளையும் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக கவனிக்கவேண்டியது ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு. வாய்விட்டுச் சிரிக்கும் அளவிற்கு சில இடங்களில் நாவலாசிரியரின் திறமை பளிச்சிடுகிறது. துணுக்குகள் பலவற்றை ஆசிரியர் ஆவணப்படுத்தியிருக்கிறார். தமிழின் முதல் உரைநடை நவீனம் என்ற அறிவிப்போடு அவர் இதைச் செய்திருப்பதால், அவை கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற போதும், அவற்றை ஆசிரியர் எழுதியிருப்பது, ஓர் ஆவணம் என்கிற வகையில், அறிந்துகொள்ள ஆர்வமூட்டுவதாகவும், இன்னமும் இந்தக் கதைகளை மையமாக வைத்துப் பட்டிமன்றங்களிலும் திரைப்படங்களிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறியக்கூடியதாகவும் உள்ளது. வாய்வழிக் கதைகள் அப்போது முதல் இப்போது வரை விடாமல் கடத்தப்பட்டு வருகின்றன. நாம் இப்போதும் சொல்லிச் சிரித்துக்கொள்ளக்கூடிய துணுக்குகளை இந்நாவலில் காணலாம். நாம் இன்றும் கேட்டுச் சிரிக்கும் கதைகள், நம் முன்னோர்களால் அன்றும் சிலாகிக்கப்பட்டது என்கிற உணர்வு, முதலில் நான் சொன்னதுபோல பேரெழுச்சித் தருவதாய் இருந்தது. இந்த உணர்வே இந்த நாவலை நான் படிக்கும்போது தொடர்ந்து வந்தது, மையச் சரடாக. அவற்றில் சில துணுக்குகள் இன்றையத் திரைப்படங்களிலும் காணக் கிடைக்கின்றன! ஒருவகையில் தமிழ்த் திரைப்படங்கள் 1879-இல்தானே இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன்! &lt;br /&gt;&lt;br /&gt;நாவல் வாசிப்பவர்கள் யாரும் எவ்விதக் குழப்பத்திற்கும் ஆட்பட்டு விடக்கூடாது என்பதை ஆதர்சமாக வைத்துக் கதை எழுதியிருக்கிறார் வேதநாயகம் பிள்ளை. கதையின் தொடர்ச்சியை விடாமல் போதிக்கிறார். ஒன்றிரண்டு அத்தியாங்கள் விட்டுபோனாலும் அடுத்த சில அத்தியாங்களில் விட்டுப் போன இடத்திலிருந்து தொடர்ந்து வந்து, கதையின் நகரும் சரடோடு இணைத்துக்கொள்கிறார். விட்டுப் போன சங்கிலிகளை விடாமல் சேர்த்து இணைப்பது போல. இதே உத்தியினை பொன்னியின் செல்வனிலும் காணலாம். வாசகர் எவ்விதக் குழப்பத்திற்கும் ஆட்பட்டுவிடக்கூடாது என்பதே முக்கியக் குறிக்கோளாக இருப்பவர்கள் செய்யும் விஷயமிது. மேலும் முதல் உரைநடை நவீனம் என்பதால் அவர் அதிகச் சிரத்தை எடுத்து இதைச் செய்தது புரிந்துகொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலின் சில இடங்கள் சிறந்த சிறுவர் கதைக்கான களமாக விளங்குகின்றன. பொன்னியின் செல்வனை நான் சிறந்த சிறுவர் நாவல் என்றே சொல்லுவேன். ஒருவகையில் பிரதாம முதலியார் சரித்திரம் கூட அப்படித்தான். எல்லாவற்றையும் வலிந்து வந்து ஊட்டி, எளிதாக்கிவிடும் உத்தி அப்படிப்பட்ட எண்ணம் அளித்திருக்கலாம். சில கதைகளும் துணுக்குகளும் சில இடங்களும் சிறுவர்களுக்குச் சொல்லி உற்சாகப்படுத்த முடியக்கூடியவை. ஒரு வீரன் பிரஸ்தாபிக்கும் துணுக்கு ஒன்று, "தலை இல்லாததால் காலை மட்டும் வெட்ட முடிந்தது" என்கிற ஹாஸ்யத்தைப் பேசுகிறது. விக்கிரமபுரியில் பிரதாப முதலியார் சிக்கிக்கொள்ள, அங்கிருக்கும் மக்கள் பிரதாப முதலியாரின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், சிறுவர் ஹாஸ்ய நூலுக்கானவை. அவை தீர்க்கப்படும் முறைகள், சிறுவர் விவேக நூலுக்கானவை.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் லஞ்சம் பற்றிய அத்தியாயங்கள். ஞானாம்பாள் அரசனாக (ஆம்! அரசியாக அல்ல. அரசனாக. அவள் ஆண் வேடம் பூண்டு அரசாள்கிறாள்!) ஆளும்போது செய்யும் உபதேசங்களும், தான் செய்யவேண்டியதாக அவள் கொள்ளும் ஆக்ஞைகளும். அதில் முக்கியமாக அவள் லஞ்சம் பற்றிப் பேசுகிறாள். இதைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், நாம் இன்னும் 1879-இல்தான் இருக்கிறோம். அக்காலத்திலேயே "இக்காலத்தில் கலி முத்திப் போச்சு" என்று சலித்துக்கொள்ளும் வசனங்கள் பற்றிச் சிரித்துக்கொள்வேன். அது இந்நாவலிலும் தவறாமல் இடம்பெறுகிறது. இன்னொரு விஷயம் வக்கீல்களின் தொழில் நேர்மையைப் பற்றியது. அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று ஞானாம்பாள் "பிரஸ்தாபிக்கிறாள்." இவையும் எவ்வித மாற்றமுமில்லாமல் அப்படியே இக்காலத்திற்குப் பொருந்திவருகிறது! &lt;br /&gt;&lt;br /&gt;நாவலில் ஞானாம்பாள் தமிழ் பற்றிப் பேசுகிறாள். இரண்டு வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிடும் முறையை விமர்சிக்கும்போது, தமிழின் மேன்மைகளும் வழக்கொழிந்துபோன சமிஸ்கிருதம் மற்றும் இலத்தீன் மொழிகளை விட தமிழ் எவ்விதம் சிறப்பு வாய்ந்தது என்பதையும் பேசுகிறாள். இதை ஆசிரியரின் தமிழுணர்வாய்க் காணலாம். ஆனால் அதை அவரது நடையில் காண இயலவில்லை. வெகு இயல்பாக வக்கீல் என்றும் பீசு என்றும் இன்ன பிற ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். மேலும் "அவைகள்" என்றும் "மெள்ள மெள்ள" என்றும் (மட்டுமே) எழுதியிருக்கிறார். (சுஜாதா கவனிக்கவேண்டும்.)&lt;br /&gt;&lt;br /&gt;சர்வ சாதாரணமாக நாவலெங்கும் துலுக்கன் என்றும் சக்கிலியன் என்றும் கையாளப்பட்டிருக்கிறது. வண்ணான், அம்பட்டன், தோட்டி போன்றவர்களுக்கு ஆசனம் கொடுப்பது ஏற்புடையதல்ல என்கிற கருத்தும் ஓரிடத்தில்  வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1879-இல் ஆங்கிலேயர்களின் மீதான வெறுப்பு எவ்விதம் இருந்தது என்பதை இந்நாவல் கொண்டு அறியமுடியவில்லை. இந்நாவல் நானறிந்த வரையில், ஆங்கிலேயர்களின் அடி போற்றுவதாகவே அமைந்துள்ளது. நேரடியான புகழ்ச்சி வைக்கப்படவில்லை எனினும், சில நிகழ்ச்சிகள் மூலம், அவர்கள் பரிபாலனை செய்வதில் தவறில்லை என்றே ஆசிரியர் நினைக்கிறார் என்று எண்ண வழிவகுக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சியைப் பற்றி எதிர்மறை விமர்சனம் வைக்கப்படாததால் இப்படி எடுத்துக்கொள்ளத் தோன்றியதோ என்னவோ. ஆங்கிலேய நீதிமான்களின் விசாரனையின் போதோ வேறு சில ஆங்கிலேயர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலோ ஆசிரியர் தம் கருத்தையோ அல்லது வேறொரு கதாபாத்திரத்தின் மூலம் எதிர்க்கருத்தையோ வைக்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின் முதல் உரைநடை நவீனம் மூன்றாம் பார்வையில் எழுதப்படாமல், பிரதாப முதலியாரின் "சுயசரிதம்" போல தன் கூற்றிலேயே சொல்லப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தேவையான இடங்களில் வேதநாயகம்பிள்ளை விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். ஆசிரியர் கிறிஸ்துவர் என்பதால் இருக்கலாம். ஆனால் கதையின் வேறெந்த இடங்களிலும் இதை இனம் காண முடியவில்லை. மதம் பற்றிய மேன்மையான கருத்துகள் ஒவ்வொரு இடங்களில் இடம் பெற்றாலும், எதிர்மறைக் கருத்துகளே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நமது கலாசாரம் என்பது பெண்களின் பத்தினித் தன்மையும், கணவனுக்கும் குடும்பத்திற்கும் சேவகம் செய்வதும் என்று சொல்லும் நூல், ஒரு பெண் அரசனாகவும் நின்று சாதிக்க முடியும் என்றும் சொல்கிறது. சில மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும், விதவை மறுமணத்திற்கு ஆதரவான ஒரு கருத்தும் சோதிடம் பொய் என்பதான விவாதமும் கதையினூடே வந்து போகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;யதார்த்த கதைகளிலிருந்து ஒரு மாறுபட்ட கதையை, ஆம்!, "கதையை" வாசிக்க விரும்புகிறவர்கள் வாசிக்கலாம். நான் இந்நாவலை வாசிப்பதற்கு முன்பு, எனக்கு சென்டிமென்டலாக இருந்த எண்ணம், தமிழின் முதல் உரைநடை புனைவை வாசித்தே ஆகவேண்டும் என்பதே. இதே எண்ணமுள்ளவர்கள் நிச்சயம் வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="mailto:haranprasanna@gmail.com"&gt;ஹரன்பிரசன்னா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* வேதநாயகம் பிள்ளை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், வைகை பிரிண்டர்ஸ் &amp; பப்ளிஷர்ஸ், 6/16, புறவழிச்சாலை, மதுரை.&lt;br /&gt;* &lt;a href="http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=&amp;products_id=13021"&gt;வேதநாயகம் பிள்ளை, சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை, பக்கங்கள்: 368&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111711525693481663?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111711525693481663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111711525693481663&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111711525693481663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111711525693481663'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/05/blog-post_26.html' title='பிரதாப முதலியார் சரித்திரம்'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111647386613080295</id><published>2005-05-19T09:01:00.000+05:30</published><updated>2005-05-19T10:35:49.510+05:30</updated><title type='text'>லொஸ்கு</title><content type='html'>"&lt;a href="http://www.lyricsfreak.com/l/lennon-john/82535.html"&gt;Nothing is real&lt;/a&gt;" என்ற Beatles பாடலை விக்கிரமாதித்தன் பாடிக்கொண்டு வந்தான். &lt;br /&gt;"என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு" என்றது வேதாளம். &lt;br /&gt;"ஒண்ணுமில்லை, சும்மா தான்" &lt;br /&gt;"ஒண்ணுமில்லையா?"&lt;br /&gt;"ஒண்ணுமில்லைதான் ஆனா ஒண்ணுமில்லையிலே ஏகப்பட்டது இருக்கு" &lt;br /&gt;"சரி ஒரு முடிவோட வந்துட்டே சொல்லிதொலை" என்றது வேதாளம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் 'நத்திங்'(Nothing), 'நாட் எனிதிங்(not anything) என்று பொருள். தமிழில் ஒன்றுமில்லை. இந்த 'ஒன்றுமில்லாத'தற்கு நிறைய சொற்கள் இருக்குறது -  காலியான, பூச்சியம், வெறுமை, அவாந்தரம், சூனியம், சுத்தசூனியம், ஒன்றுமில்லை, பூரை, &lt;span style="font-style:italic;"&gt;லொஸ்கு&lt;/span&gt;, ஆகாசமயம்..&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கப் போனால் எல்லா துறைகளிலும் இந்த 'நத்திங்' இருக்கிறது. ஆங்கில அகராதியில் இதற்கு என்ன பொருள் என்று பார்த்தால் - nil, none, nulliform, nullity, noughts... என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாக ஒன்றுமில்லாததில் எல்லாம் இருக்கிறது  - பூச்சியம்/ஸைபர்(Zero/Chiper), ஸீரோ பாய்ண்ட்ஸ்(Zero points), ஸீரோ ஹார்(Zero Hour), வெற்றிடம்(vacuous), காலியான(void), சூனியப்பிரதேசம்(vacuum),  nihilist(எதிலும் நம்பிக்கை இல்லாதவர்கள்), nihilarians(முக்கியமில்லாததில் ஈடுபடுவர்கள்), nihilagents( ஒன்றும் செய்யாதவர்கள்),nullifideans(எந்த மதத்திலும் நம்பிக்கையில்லாதவர்கள் ) nonentities( இல்லாத ஒன்று) nobody(ஒருவருமில்லை )  என்று பட்டியல் நீள்கிறது. செய்திதாள்களில் ' Zeros' பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அவை Zero dividend preference sharesசை குறிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு புரியாத சுற்றிவளைக்கப்பட்ட ஸீரோக்களும் இருக்கிறது. உதாரணம் டென்னிஸில் 'love'; இந்த 'love'வை கொஞ்சம் ஆராய்ந்தால், அது ஃபிரென்சில் "&lt;span style="font-style:italic;"&gt;l'oeuf&lt;/span&gt;' என்ற வார்த்தையின் மறு. ஃபிரன்சில் l'oeuf என்றால் முட்டை என்று பொருள். பூச்சியத்தின் வடிவம். சிலருக்கு முட்டை என்றால் கணக்கு மார்க் ஞாபகம் வரலாம். எது எப்படியோ லவ் என்றால் பூச்சியம் என்பது உண்மை. அதாவது உங்கள் பர்ஸ் காலியாகும் ஆகும். இதே போல் - கிரிகெட்டில் 'nought'; ஸாக்கரில் 'nil'; &lt;br /&gt;&lt;br /&gt;cipher என்ற சொல் இன்னும் கொஞ்சம் சுவாரசியமானது. அது பூஜ்யத்தையும், சங்கேத பாஷையின் குறியீட்டை(க்ளு) குறிக்கும் சொல்லாக இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு ஒரு சின்ன விளையாட்டு&lt;br /&gt;&lt;br /&gt;"U 0 a 0, but I 0 thee&lt;br /&gt;O 0 no 0, but O 0 me.&lt;br /&gt;O let not my 0 a mere 0 go,&lt;br /&gt;But 0 my 0 I 0 thee so."&lt;br /&gt;&lt;br /&gt;டிஸைபர்(decipher) செய்தால் என்ன வரும் என்பது கடைசியில் &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுமில்லாதது எல்லாம் ஒன்றுமில்லை என்று ஒதுக்கமுடியாது. சிலவற்றுக்கு சிறப்பு பொருள் உண்டு. ஃபிரன்ச் ஹுகினாட்ஸ்(huguenots) லூயி(Louis) XIV மன்னரிடம் தப்பித்து சென்றபோது தங்களுடைய பெயரை '&lt;span style="font-style:italic;"&gt;Nimmo&lt;/span&gt;' என்று வைத்துக்கொண்டனர். ne mot என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது Nimmo.  'அனாமிகா' போல் பெயரற்ற என்று பொருள். கிரேக்கம், கிறுத்துவம், வேதம் ஏல்லாவற்றிலும் இந்த ஒன்றுமில்லாதது இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பூச்சியம் என்ற வட்டவடிவம் &lt;br /&gt;உயர்த்தியது எண்களை  பத்துமடங்கு&lt;br /&gt;நெற்றியிலிட்ட வட்ட பொட்டால்&lt;br /&gt;கூடியது அவள் அழகு பத்துமடங்கு&lt;br /&gt;&lt;br /&gt;என்ற சமஸ்கிருத கவிதை ஒன்று இருக்கிறது !&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒவ்வொரு துறையிலும் இந்த ஒன்றுமில்லாததை பார்த்தால் ஏதோ ஒன்றை விளக்குவதற்கு ஏற்பட்ட சொல் நாளடைவில் பல முக்கியமானவற்றை விளக்க பயன்படுத்தப்பட்டது என்பது புரியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இயற்பியலில் வெற்றிடம்(Vacuum) முதலில் ஒன்றுமில்லாத இடத்தை குறித்தது, பிறகு Augustine அதை கிட்டத்தட்ட ஒன்றுமில்லை என்றார் பிறகு அது வாயுமண்டலத்திற்கு மேற்பட்ட பரந்த ஆகாயவெளியில் (ether) மிதந்தது. ஐன்ஸ்டீனிடம் அது மறைந்துபோனது, பிறகு இருபதாம் நூற்றாண்டில் குவாண்டம் துறையில் இயற்கையை விளக்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்களும் இந்த ஒன்றுமில்லாததை விட்டு வைக்கவில்லை. எல்பர்ட் ஹப்பார்டு (Elbert Hubbard) "Essay on Silence" என்ற புத்தகத்தில் வெறும் வெத்துப்பக்கங்கள் இருந்தது. 1974ல் பல பதிப்புக்கள் கண்ட "The Nothing book" என்ற புத்தகத்திலும் வெறும் வெத்துப்பக்கங்கள். வேடிக்கை என்னவென்றால் மற்றொரு வெற்றுபுத்தகத்தின் ஆசிரியர் இவர் மேல் காப்பிரைட் வழக்கு தொடர்ந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;'போலோ மிண்ட்'டில் (Polo Mint) போலோவைவிட அதன் ஒன்றுமில்லாத ஓட்டையைதான் அவர்கள் கடந்த நாற்பது வருடமாக மார்கெட்டிங் செய்துள்ளார்கள்.  ஷேக்ஸ்பியர் இந்த நத்திங்கை வைத்து நிறைய விளையாடியிருக்கார். "Much Ado About Nothing" என்ற அவரது நாடகம் ரொம்ப பிரசித்தம். அவருடைய நாடகத்தில் நிறைய இடத்தில் இதை ஆராய்ந்துள்ளார். உதாரணத்திற்கு &lt;br /&gt;&lt;br /&gt;"Is this nothing?&lt;br /&gt;Why, then the world and all that's in't is nothing;&lt;br /&gt;My wife is nothing; nor nothing have these nothings,&lt;br /&gt;If this be nothing" &lt;br /&gt;The Winters Tale&lt;br /&gt;&lt;br /&gt;ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற நம்பருகும் முன்னும் ஒன்றுமில்லாத அந்த ஸீரோக்கள் இருக்கிறது !. &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இதை படிக்கும் சமயம் உங்கள் கணினி எவ்வளவு 'null operation' செய்கிறது என்று யோசித்து பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்னதை டிஸைபர் செய்தால் கிடைக்கும் விடை: &lt;br /&gt;&lt;br /&gt;"You sigh for a cipher, but I sigh for thee&lt;br /&gt;O sigh for no cipher, but O sigh for me.&lt;br /&gt;O let not my sigh for a mere cipher go,&lt;br /&gt;But sigh for my sigh, for I sigh for thee so." &lt;br /&gt;&lt;br /&gt;"சரி இந்த ஒன்றுமில்லாத தகவல் இன்னிக்கு எதற்கு" என்றது வேதாளம்&lt;br /&gt;"&lt;span style="font-weight:bold;"&gt;ஒண்ணுமில்லை இன்றோடு வலைப்பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது&lt;/span&gt;" என்றான் விக்கிரமாதித்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;Ref:&lt;br /&gt;"&lt;a href="http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/0375420991/002-1224884-7100856?v=glance"&gt;The Book of Nothing&lt;/a&gt;" by John Barrow. &lt;br /&gt;John D. Barrow is research professor of mathematical sciences in the Department of Applied Mathematics and Theoretical Physics at Cambridge University. His previous books include Theories of Everything, The Artful Universe, Impossibility, Between Inner and Outer Space, The Universe That Discovered Itself, and The Origin of the Universe. He lives in England.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111647386613080295?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111647386613080295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111647386613080295&amp;isPopup=true' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111647386613080295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111647386613080295'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/05/blog-post_19.html' title='லொஸ்கு'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111622189736560396</id><published>2005-05-16T11:02:00.000+05:30</published><updated>2005-05-16T11:15:10.950+05:30</updated><title type='text'>பணம் காசின் பரிணாமம்</title><content type='html'>பணம் காசின் பரிணாமம் &lt;br /&gt;- எஸ்.வி. ராமகிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஓரிடந் தனிலே&lt;br /&gt;நிலைநில்லாது லகினிலே&lt;br /&gt;உருண்டோடிடும்&lt;br /&gt;பணங்காசெனும்&lt;br /&gt;உருவமான பொருளே&lt;/em&gt;&lt;br /&gt;’வேலைக்காரி’ படத்தில் (1949) ஒரு பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/oldcoins_3.jpg" alt="Image hosted by Photobucket.com", align="left"&gt;எனக்கு ஏழு வயது ஆனபோது (1944) ஒரு அசாதாரணமான சம்பவம் நிகழ்ந்தது. அதுதான் ஓட்டைக் காலணாவின் பிறப்பு.&lt;br /&gt;காலணா என்பது ஒரு ரூபாயின் 1/64 பகுதி. இன்று அதற்கு அர்த்தமே இருக்க முடியாது. ஆனால் அன்றைய தேதியில் அதற்கு மிட்டாயோ தேங்காய் பர்பியோ வாங்க முடியும். ‘சின்னக் கிளாஸ் பசங்களிடம்’ அதிகமாகப் புழங்கியது காலணாக்கள்தான். காலணாதான் குழந்தைகளின் அடிப்படை நாணயமென்றே சொல்லலாம். அதுவரையில் வழங்கி வந்த காலணாவுக்கான செப்பு நாணயங்கள் பெரிதாகவும் கறுத்துப் போயும் சில சமயங்களில் பச்சைக் களிம்பு பிடித்தும் காணப்படும். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய விக்டோரியா மகாராணியின் காலணாவிலிருந்து என் காலத்தின் ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி படம் பொறித்த காலணா வரையிலும் இதேபோலத்தான் இருந்தன. ஆனால் திடீரென்று முளைத்த புதிய காலணாவோ அதுவரை கேட்டிராத அதிசயமாக நடுவில் பெரிய ஓட்டையுடன் ‘வாஷர்’ மாதிரி விளங்கியது. பளபளவென்று தங்கம்போல் மின்னியது. இது குழந்தைகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டதில் அதிசயம் இல்லை. அதே சமயம், பெரியவர்களின் பார்வை வேறு விதமாக இருந்தது. அரசாங்கம் ‘பாப்பர்’ ஆகிக் கொண்டிருக்கிறதுபோல் இருக்கிறது என்று பலரும் சொன்னார்கள். ஆங்கிலேயே ஆட்சி அஸ்தமிக்க ஆரம்பித்துவிட்டதென்றுகூடப் பலருக்குத் தோன்றியிருந்தால் அதுவும் நிஜமே. உண்மையில் யுத்த காலச் செலவுகளால் ‘போண்டி’யாகிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்திய அரசுக்குக் குறைந்த செலவில் மட்டமான நாணயங்களைத் தயாரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அதனால் தாமிரச் செலவு குறைந்ததென்றால் அரசாங்கத்தின் மதிப்பும் தாழ்ந்து போயிற்று.&lt;br /&gt;ஓட்டைக் காலணாவின் பிரதாபத்தைச் சொல்லுமுன் ஐம்பது வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்காக அன்றைய நாணயங்களை (coinage) பற்றியதொரு அறிமுகம் தேவைப்படலாம்.&lt;br /&gt;மெட்ரிக் முறையென்பது, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் பாட புத்தகங்களில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் இருக்கவில்லை. முகவை நிறுவை அளவுகளிலிருந்து நாணய மாற்று விகிதம் வரை எல்லாம் திறிஷி (பிரிட்டிஷ்) முறைதான். கடைக்குப் போனால் ஒன்றரை வீசை ரவையை நிறுத்தும் ஒரு படி உப்பை அளந்தும் கொடுத்துவிட்டு ஒரு ரூபாய் ஏழரை அணா (1-7-6) என்று விலை சொல்லுவார்கள். ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடி. அதற்கு ஆங்கிலத்தில் பை (Pie) என்று பெயர். இலங்கையிலும் ஆட்சி செலுத்தி வந்த அதே பிரிட்டிஷார் ரூபாய்க்கு 100 சதம் (Cent) என்று வைத்துப் பள்ளிச் சிறுவர்களின் பாரத்தைக் குறைத்தார்கள். ஏனோ இந்தியாவுக்கு அந்தக் கருணையைக் காட்டவில்லை.&lt;br /&gt;அதோடு கணக்கு நின்றுவிடவில்லை. பனிரெண்டு தம்பிடிகள் சேர்ந்தது ஒரு அணா. அதுபோல் பதினாறு அணாக்கள் சேர்ந்தால் ஒரு ரூபாய் ஆகும். இதெல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவில் அதாவது மாகாணங்களில். மகாராஜாக்கள் ஆண்ட சுதேச சமஸ்தானங்கள் ரூபாய்க்குக் கீழ்ப்பட்ட நாணயங்களைத் தத்தம் பாணியில் அச்சடித்தன. உதாரணமாக, திருவாங்கூரில் சக்கரம் இருந்தது. நம்ம ஊரிலே “அவன் கையிலே நாலு காசு சேர்ந்து போச்சு, திமிர் ஏறிடுத்து” என்று சொல்வது போல திருவாங்கூரில் “அவன் கையிலே நாலு சக்கரம் சேர்ந்து போச்சு . . .” என்று பேசுவார்கள். இருபத்தெட்டு சக்கரம் ஒரு ‘சர்க்கார் ரூபாய்’ (திருவாங்கூர் ரூபாய்.) பிரிட்டிஷ் ரூபாயின் மதிப்பு இன்னும் கொஞ்சம் கூடுதல். அதாவது 28 லு சக்கரம். இதில் இரண்டு வினோதங்கள். திருவாங்கூரின் சர்க்கார் ரூபாய் என்பது ஒரு மதிப்புதான். அப்படி ஒரு ரூபாய் நாணயம் அச்சிடப்படவில்லை. மற்றும் பிரிட்டிஷ் நாணயம் சமஸ்தானங்களில் செல்லுபடியாகும். ஆனால் சமஸ்தான நாணயங்கள் சென்னையிலோ கோவையிலோ செல்லுபடியாகவில்லை.&lt;br /&gt;ஒரு ரூபாய், எட்டணா (இன்றைய 50 பைசா), நாலணா (25 பைசா), மற்றும் இப்போது இல்லாத இரண்டணா, ஓரணா, அரையணா, காலணா, தம்பிடி என்ற நாணயங்கள் இருந்தன. விக்டோரியா மகாராணி காலத்திய (அவருடைய உருவம் பொறிக்கப்பட்ட) பழைய ரூபாய் நாணயங்கள் ஏறக்குறைய முழு வெள்ளியால் ஆனவை. முதல் உலக யுத்தத்துக்குப் (1914-1918) பிந்தைய ஐந்தாம் ஜார்ஜ் (1911-35) படம் போட்ட ரூபாய்கள் அதைவிடத் தரம் குறைந்தாலும் கணிசமாக வெள்ளிதான். எனக்குத் தெரிந்த ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் (பட்டம் : 1938) ரூபாய்கள் இரண்டாவது உலக யுத்தத்தினால் (1939-45) மேலும் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் பாவமாக இருந்தன. அவற்றின் வெள்ளி எடை 6/16 தோலா என்று கேட்ட நினைவு. (ரூபாய் நாணயத்தின் எடை ஒரு தோலா.) சுதந்திரம் வரும் தருவாயில் (1947) முதன் முறையாக வெள்ளியே இல்லாமல் நிக்கலினால் ஆன ஒரு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. ஒரு பக்கத்தில் புலி போட்டிருந்தது. வெள்ளியே இல்லாமல் ரூபாயா? நம்ப முடியாத கிழவர்கள் “கலி முற்றிவிட்டது” என்று அங்கலாய்த்தார்கள்.&lt;br /&gt;அரை ரூபாய் என்பது ஏறக்குறைய ரூபாயின் பாதி அளவிலும் நாலணா நாணயம் (இதைப் பொதுமக்கள் ‘பணம்’ என்று சொன்னார்கள்) அதிலும் பாதி சைஸிலும் வட்டமாக இருந்தன. ஆனால் ஒரு பணத்தின் பாதி மதிப்பு கொண்ட இரண்டணாவோ அளவில் நாலணாவைவிடப் பெரிதாகவும் உருவத்தில் சதுரமாகவும் இருக்கும். ஓரணா நாணயம் வட்டமும் அல்லாது சதுரமுமல்லாது ஒரு அலங்காரமான டிசைனில் இருக்கும். இரண்டணாவின் ஒரு சின்ன சைஸ் பிரதி போலக் காணப்பட்ட அரையணா நாணயமும் உண்டு. இவை எல்லாம் நிக்கல் கலந்த அல்லது கலக்காத வெவ்வேறு உலோகக் கலவைகள். அதற்கும் கீழே இருந்த காலணாவுக்கும் தம்பிடிக்கும் அந்த அந்தஸ்து கிடையாது. அவை வெறும் தாமிரத்தினால் அடிக்கப்பட்டவை. மின்சாரம் பெரிய அளவில் தூர இடங்களுக்கு அனுப்பப்படும் வரை (electrical transmission) செம்பின் விலை மதிப்பு மிகக் குறைவாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் “என் கிட்டே செப்பால் அடித்த காசு கூடக் கிடையாது” என்ற வாக்கியம் வந்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்தபோது சாதாரணமாகப் பிச்சைக்காரர்களுக்குக் காலணா போட்டார்கள். அதற்கு முன், அதாவது இரண்டாம் உலக யுத்தம் வந்து விலைவாசிகள் கண்டபடி உயரும் வரை, பிச்சைக்காரர்களுக்கு ஒரு தம்பிடிதான் கொடுத்தார்களாம். ஆனால் 1945ல் ஒரு தம்பிடி கொடுத்தால் பிச்சைக்காரர்கள் முறைத்தார்கள். “நீயே வைத்துக்கொள்” என்று கூட எப்போதாவது சொன்னார்கள். பழனி போன்ற கோயில்களுக்குச் செல்பவர்கள் மாத்திரம் பின்னால் வெகுகாலம்வரை கூடத் தம்பிடி கொடுத்தனர். மலை ஏறும் வழி நெடுக இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஆளுக்குக் காலணா கொடுத்துக் கட்டுபடியாகாது. தவிரவும், தலைக்கு ஒரு தம்பிடி என்றால்கூட அவர்களின் தினசரி கலெக்ஷன் நல்லபடியாக இருக்குமாதலால் இது இருசாராருக்குமே அனுகூலமாக இருந்தது. ஐம்பதுகளில் தம்பிடிகளின் புழக்கம் கடைவீதியில் அடியோடு அற்றுப் போய்விட்டது. ஆனால் பழனியில் சில்லறை விற்கும் வியாபாரிகள் ஒரு ரூபாய்க்கு 150 என்ற விகிதத்தில் தம்பிடி நாணயங்கள் கொடுப்பார்கள். (எண்ணிப் பார்த்தால் இதைவிடக் குறையும் என்று சொன்னார்கள். ஆனால் முருகன் தரிசனத்துக்கு மலை ஏறும் அவசரத்தில் யாரும் எண்ணினதாகத் தெரியவில்லை!)&lt;br /&gt;இந்தத் தம்பிடிகள் பிச்சைக்காரர்கள் கைக்குப் போய்த் திரும்ப அதே கடைக்காரர்களிடம் ராத்திரிக்குள் வந்து சேர்ந்துவிடும். அவர்கள் அதை எடுத்துக்கொண்டு பிச்சைக்காரர்களுக்கு ரூபாயாகவும் அணாவாகவும் கொடுப்பார்கள். அதிலும் கமிஷன் அடிக்காமல் ஆண்டிகளுக்கு அவர்களின் சம்பாத்தியத்தின் முழு மதிப்பு கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;முதலில் ஒரு ரூபாய்க்கு உலோக நாணயம்தான் இருந்ததாம். அதாவது நோட்டு கிடையாது. எனக்குத் தெரிந்தபோது ஒரு ரூபாய்க்குக் காகித நோட்டும் இருந்தது. அதுவும் யுத்த காலத்தில் தான் தொடங்கிற்றாம். இதிலும் அரசின் மதிப்பைக் குறைக்கும் ஒரு விஷயம் இருந்தது. ஐந்து, பத்து, நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாவற்றிலும் ரிசர்வ் பாங்க் கவர்னர் ஒரு உறுதி மொழி அளித்துக் கையப்பம் வைத்திருப்பார். அதன்படி எவரும் ரூபாய் நோட்டுக்களை ரூபாயாக கஜானாவில் மாற்றிக்கொள்ள உரிமை உண்டு. அதற்கு அர்த்தம் அந்த அளவு வெள்ளியைத் திருப்பிக் கொடுக்க அரசு கடமைப்பட்டிருந்தது என்பதே. அதாவது அரசாங்கம் கையிருப்பில் வேண்டிய வெள்ளியை வைத்துக் கொள்ளாமல் இஷ்டப்படி கரன்ஸி நோட்டு அடிக்க முடியாது. அடிப்படை (ஒரு ரூபாய் நோட்டில் நீதித்துறைச் செயலர்தான் கையெழுத்திட்டிருப்பார்.) நாணயமான ரூபாயையே காகிதமாக அடிப்பது என்ற குறுக்கு வழியை ஆங்கில ஆளுகையின் முதல் 180 ஆண்டுகளுக்கு எவரும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் ரூபாயே நோட்டாக வந்த பிறகு இப்போது உயர் மதிப்பு நோட்டுகளைக் கஜானாவுக்குக் கொண்டு சென்றால்கூட அவர்கள் அந்த அளவு ஒரு ரூபாய் நோட்டு கொடுத்தால் போதும் என்று ஆகிவிட்டது. இது அரசாங்கம் இஷ்டப்படி நோட்டு அச்சடிக்க அனுசரணையாயிற்று. பணவீக்கமும் அதிகரித்தது.&lt;br /&gt;யுத்தத்தினால் அதிகரித்தது பணப்புழக்கமும் பணவீக்கமும் மட்டுமல்ல. எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு, கட்டுபாடு ஏற்பட (பின்னால் ராஜாஜி நாமகரணம் செய்த) ‘கண்ட்ரோல் பெர்மிட் லைசென்ஸ் ராஜ்யம்’ அப்போதுதான் தொடங்கிற்று. அதற்குத் தகுந்தவாறு லஞ்ச ஊழலும் கறுப்புச் சந்தையும் தலையெடுத்தன. வியாபாரிகள் பலர் கறுப்புச் சந்தையில் கொள்ளையடித்தனர் என்றால் அதிகாரம் இருந்த இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு லஞ்ச லாவண்யம் பெருகிற்று. திடீரென்று (1945இல் என்று நினைக்கிறேன்) வைஸ்ராயின் நிர்வாக சபை - இன்றைய மத்திய அமைச்சரவை போன்றது - ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இன்றிலிருந்து செல்லாது என்றது அந்த ஆணை. தாங்கள் நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தையும் பலர் ஆயிரம் ரூபாய் நோட்டாக வைத்திருக்கக்கூடும். (அப்போதெல்லாம் வங்கியில் பணம் போடும் வழக்கம் இன்று போல வளர்ந்திருக்கவில்லை என்பதை நினைவிற் கொள்க.)&lt;br /&gt;அவர்கள் அந்தப் பணம் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று சொல்லி அந்த நோட்டுகளை ரிசர்வ் பாங்கிலோ அல்லது இம்பீரியல் பாங்கிலோ (ஸ்டேட் பாங்கின் அன்றைய பெயர்) மாற்றிக்கொள்ளலாம். ஒன்று இரண்டு நோட்டுகளைக் கொண்டு போனால் அவர்கள் ஆட்சேபணை இல்லாமல் கொடுத்து விடுவார்கள். ஆனால் லட்சக் கணக்கில் கொள்ளையடித்து சேமித்து வைத்திருந்தவர்களுக்கு மிகக் கஷ்டம். இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர் சென்னை மாகாணத்தின் அன்றைய வெள்ளைக்கார கவர்னர் ஸர். ஆர்தர் ஹோப் என்று பரவலாக நம்பப்பட்டது. சாதாரணமாக பிரிட்டிஷ் கவர்னர்கள் லஞ்சத்தில் ஈடுபட மாட்டார்கள். ஆர்தர் ஹோப் யுத்தகாலக் காற்று அடிக்கும்போது தூற்றிக் கொண்டவர். வர்த்தக உலகில் பெரும் புள்ளிகள் சிலரைத் துணைக்கு அழைத்து முடிந்த வரை கறுப்புப் பணத்தை மாற்றிக் கொண்டாராம் ஹோப். எங்கள் கோயமுத்தூரின் புகழ்பெற்ற தொழிலதிபர் ஒருவர் - கவர்னருக்கு மிக வேண்டியவர் - இரண்டு லட்சம் ரூபாய் இதுபோல் மாற்றிக் கொடுத்தாராம். அந்த நாளில் ஒரு லட்சமே மிகப் பெரிய தொகை. அதை உடையவர்களை ‘லக்ஷ£திபதி’ என்று உசத்தியாகச் சொன்ன காலம்.&lt;br /&gt;ரூபாய் அணா பைசாக் கணக்கு சிக்கலானது. மெட்ரிக் முறை போல் பூஜ்யத்தைச் சேர்த்தால் காரியம் ஆகிவிடாது. உதாரணமாகப் பள்ளிக்கூடத்தில் ஒரு கீழ் வகுப்புக் கணக்கு பின்வரும் ரீதியில் அமைந்திருக்கும்.&lt;br /&gt; ரூ  அ  பை *&lt;br /&gt; 147  13  7 x&lt;br /&gt; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;16&lt;br /&gt;___________________________&lt;br /&gt; 2365   9  4&lt;br /&gt;(* ரூபாய், அணா, பைசா)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கணக்கைப் போடுவதானால் முதலில் 7 தம்பிடியை 16ஆல் பெருக்கி, வரும் 112ஐ 12ஆல் வகுப்பது முதல் கட்டம். மீதி வரும் 4 தம்பிடிகளை அங்கேயே விட்டுவிட்டு வகுத்தலில் தேறும் 9 முழு அணாக்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது 13 அணாக்களைப் பதினாறால் பெருக்கிக் கிடைக்கும் 208 அணாவுடன் கையில் வைத்திருக்கும் 9 அணாக்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை 16ல் வகுத்தால் கிடைக்கும் மீதி 9 அணாவை அணாக் கணக்கில் விட்டுவிட்டு ஈவுத் தொகையாக 13 ரூபாயை கையில் வைத்திருந்து ரூ.147ஐப் பதினாறால் பெருக்கிக் கிடைக்கும் 2352 ரூபாயுடன் கூட்டி மொத்தம் 2365ஐ ரூபாய்க் கணக்கில் எழுதினால் கணக்கு முடிந்தது. இதைப் படிப்போருக்குப் ‘போர்’ அடித்தாலோ தலை சுற்றினாலோ நான் அதற்குப் பொறுப்பாளி அல்ல. பணக் கணக்கு என்பது அப்படித்தான் இருந்தது. இப்போதானால் இந்தக் கணக்கைப் போட பெரும்பாலோர் கால்குலேட்டரை நாடுவார்கள். அன்றோ ஒன்பது வயதுக் குழந்தைகள் இதைக் காகிதம், பென்சில் (அல்லது சிலேட்டு, பலப்பம்) மூலம் கணக்கிட்டார்கள். சில சமயம் தப்பு போட்டுக் குட்டும் வாங்கினார்கள். அல்லது பெஞ்சு மேல் ஏறி நின்றார்கள். நான் கணக்குப் பாடத்தில் மக்காக இருந்ததால் இதை அனுபவ பூர்வமாகச் சொல்ல முடியும். இப்போதுகூட நான் எழுதியிருக்கும் மாதிரிக் கணக்கின் விடை தப்பாக இருந்தால் ஆச்சரியப்பட மாட்டேன். நல்ல வேளையாகக் குட்டி வைக்க எங்கள் வாத்தியார்கள் இன்று இல்லை!&lt;br /&gt;திருவாங்கூர் நாணயத்தைப் பற்றிச் சொன்னேன். அங்கே இரண்டுவித நாணயங்கள் புழங்கியதால், இதைவிடச் சிக்கலான கணக்குகள் கொடுத்துப் பிள்ளைகளின் உயிரை வாங்குவதற்கு சௌகரியமாக அமைந்தது. 137 ரூபாய் ‘சர்க்கார் நாணயத்தை’ பிரிட்டிஷ் நாணயமாக மாற்றுக என்று பள்ளிக்கூடக் கணக்குகள் கொடுப்பார்கள். 137ஐ இருபத்தெட்டு சக்கரத்தால் குணிக்க (பெருக்க) வேண்டும். வரும் விடையை 28 லு சக்கரத்தால் வகுத்தால் பிரிட்டிஷ் நாணய மதிப்பு கிட்டும்.&lt;br /&gt;சுதந்திரம் வந்து பத்தாண்டு காலத்திற்குப் பிறகு, 1958ல் என்று நினைக்கிறேன். நேரு அரசு மெட்ரிக் முறையின் அடிப்படையில் அமைந்த நாணயச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. ரூபாய் அப்படியே இருக்க, இலங்கையின் சதம் போல, அது நூறு புதுக் காசுகள் ஆக்கப்பட்டது. புதுக்காசு ‘நயா பைசா’ என்று பெயர் சூட்டப்பட்டது. சரியான மொழிபெயர்ப்புதான்.&lt;br /&gt;புதிய காசு மக்களுக்குப் பழக்கமாகும் வரை சில வருடங்களுக்குப் பழைய நாணயங்களும் கூடவே அனுமதிக்கப்பட்டன. ஆனால் புதிதாகப் பதிப்பிக்கப்படவில்லை. தவிரவும் கொஞ்சங் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு உருக்கப்பட்டன என்று நினைக்கிறேன். ஆக காலக்கிரமத்தில் அவை வழக்கிலிருந்து மறைந்தொழிந்தன. ஆனால் இது நாலணா, எட்டணா இரண்டுக்கும் பொருந்தாது. புதிய காசுக்கு நாலணா 25 பைசாவாகவும் எட்டணா 50 பைசாவாகவும் கச்சிதமாய்ப் பொருந்தியதால் அவை நீடிப்பதற்குத் தடையேதும் இல்லை. ஆனால் அவற்றின் புதிய பதிப்புகள் அணாக் கணக்கில் எழுதப்படவில்லை. 25 பைசா அல்லது 50 பைசா என்றே குறிக்கப்பட்டன. அதே சமயம் அவற்றின் பழைய நாணயங்களும் செல்லும்.&lt;br /&gt;இருபத்தைந்து பைசாவுக்குக் கீழே புதிதாகக் கொண்டுவரப்பட்ட நாணயங்கள் வருமாறு (ஒரு) நயா பைசா, இரண்டு நயா பைசா, ஐந்து நயா பைசா, பத்து நயா பைசா. பின்னால் இருபது பைசா நாணயமும் வெளியாயிற்று (இப்போது காண்பது அரிது.) நாலணா எட்டணா தவிர மற்ற பழைய நாணயங்களான தம்பிடி, காலணா, அரையணா, ஓரணா, இரண்டணா முதலியவை புதிய காசுக் கணக்கில் பொருந்தாததால் சில சிக்கல்கள் ஏற்பட்டன. அதுவரை, பல பொருட்களுக்கு ஓரணா அல்லது இரண்டணா என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக சுதேசமித்திரன் (தினத்தாள்) ஓரணாவாக இருந்து வந்தது. நயா பைசா மதிப்பில் இது 6ரு  பைசாவாகும். தொலையட்டும் என்று பிரதிக்கு ரு பைசா நஷ்டத்தில் அப்பத்திரிகையின் நிர்வாகம் அதை 6 நயாபைசா என்று நிர்ணயித்தது. நல்லவர்களுக்குக் காலம் இல்லை என்பது போல் சுதேசமித்திரன் அதிலிருந்து க்ஷீணமடைந்து சில ஆண்டுகளில் மூடப்பட்டது. ‘ஹிந்து’வோ இரண்டணாவுக்கு விற்று வந்த பத்திரிகை. அதன் சரியான நயா பைசா மதிப்பு 12லு வரும். கிட்டிய மதிப்பு என்ற கொள்கையைக் கடைப்பிடித்து அதை 13 நயாபைசா என்று வைத்துவிட்டார்கள். ஆக, நாணய சீர்திருத்தத்தினால் ஹிந்து பத்திரிகை பிரதிக்கு லு பைசா லாபம் அடைந்தது. Unearned income என்று சொல்லலாம்! குமுதம், விகடன், கல்கி போன்ற நாலணாப் பத்திரிகைகள் பாதிக்கப்படவில்லை. நாலணா என்பதற்குப் பதில் 25 நயா பைசா என்று விலையை எழுதினார்கள். விலை அதேதான்.&lt;br /&gt;இதுபோல் பல சாமான்கள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலும் கிட்டிய மதிப்பு வியாபாரிகளுக்குத்தான் அனுகூலமாக அமைந்ததே தவிர நுகர்வோருக்கல்ல. ஒன்றரை அணா விற்ற பல பொருள்களும் 10 பைசாவாக  உயர்த்தப்பட்டன (+1 பைசா) இதெல்லாம் rounding off என்ற பெயரில் நடந்த அநியாயங்கள். இதனால் ஒரு சிறிய அளவுக்குப் பணவீக்கம் அதிகரித்தது என்று கூடக் கேட்டிருக்கிறேன். அதே சமயம் (1957-62) தொடங்கி இருந்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தினாலும் இருக்கக் கூடும். அத்திட்டத்தில் பணவீக்கத்தை உண்டு பண்ணும் அம்சங்கள் நிறையவே காணப்பட்டன. வலதுசாரியான மினூ மஸானியும் இடதுசாரியைச் சேர்ந்த பூபேஷ் குப்தாவும் இத்திட்டத்தைத் தாக்கிக் காரசாரமாக எழுதினார்கள். ஆனால் பணம் என்னமோ வீங்கிக் கொண்டேதான் போயிற்று.&lt;br /&gt;ஆரம்ப காலத்துக்கென்று, அரை நயா பைசா நாணயம் ஒன்றை அச்சடித்திருந்தால் இதுபோன்ற சில சங்கடங்களை அரசு தவிர்த்திருக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை வாபஸ் பெற்றிருக்கலாம். ஏனோ இதைச் செய்யவில்லை. சில ஆண்டுகளிலேயே பணவீக்கம் ஒரு நயாபைசா, இரண்டு நயா பைசா நாணயங்களைப் புழக்கத்தில் இருந்து விரட்டிவிட்டது. இன்றைய இளைஞர்கள் பலர் ஒரு நயா பைசா என்ற காசைக் கண்ணால்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் கொள்கை அளவில் (in theory) இன்றும் அது செலாவணியில் இருக்கும் நாணயம்தான். நயா பைசாவைத் தொடர்ந்து பின்னாட்களில் ஐந்து பைசாவும் பின்னர் பத்து பைசாவும் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்தன. இன்று இருபத்தைந்து பைசாதான் குறைந்தபட்ச நாணயமாக விளங்குகிறதெனலாம்.&lt;br /&gt;எது எப்படியிருந்தாலும் கணக்கு மிகவும் சுலபமாகிப் போனது. எல்லாத் தொகைகளுக்கும் ஒரு தசம புள்ளியை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ நகர்த்தினால் பெருக்கலும் வகுத்தலும் முடிந்து போயின. அல்லது பைசா ரூபாயாகவோ ரூபாய் பைசாவாகவோ ஆகிவிட்டது. இதன் விளைவாகக் கணக்கு வாத்தியார்களின் மகிமையும் குறைந்து போயிருக்கக்கூடும்!&lt;br /&gt;ஆனால் இதற்கெல்லாம் கொஞ்ச காலம் பிடித்தது. ஆரம்ப நாட்களில் பரவலான குழப்பம் இருந்தது. படித்தவர்கள் படிக்காதவர்களைவிட அதிகமாகத் தப்பு செய்தார்கள். எனக்கு ஞாபகம் இருக்கிறது, கல்லூரி மாணவனான நான் சென்னைக்கு ரயிலில் வரும்போது என்னிடம் ஒரு வயதான மாது அன்பாகப் பேசிக் கொண்டிருந்தவர், சென்ட்ரல் வந்தவுடன் அடுத்த நாளைக்காகப் புனாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். பணமும் கொடுத்தார். நானும் நல்ல பிள்ளையாக ஓடிப் போய் வாங்கி வந்து கொடுத்தேன். ஆனால் புக்கிங் கிளார்க் ஆறு அணாவுக்குப் பதில் தவறுதலாக ஆறு பைசா பாக்கி கொடுத்துவிட்டார். (அப்போது நயா பைசா வந்த புதிது, எல்லோருமே இது போன்ற தப்புகள் செய்து கொண்டிருந்த சமயம்.) நானும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக்கொண்டு வந்து பெருமையோடு அந்த அம்மாளிடம் சமர்ப்பித்தேன். அவருக்குக் கழுகுக் கண் போலும், உடனே தப்பைச் சுட்டிக்காட்டினார். நானும் சிரமத்தைப் பாராமல் கௌண்டருக்கு ஓடிச் சரியான சில்லறை வாங்கி வந்தேன். ஆனால் அதைக் கொடுக்கும்போது டிக்கெட்டை அவரிடம் கொடுக்க மறந்துவிட்டேன். சில்லறையைக் கண்ணில் எண்ணை விட்டுக்கொண்டு எண்ணிய அந்த மாமியும் இதை கவனிக்காமல் கோட்டை விட்டு விட்டார். நான் வீட்டுக்கு வந்த பிறகு என் பாக்கெட்டில் டிக்கெட் இருப்பது கண்டு திடுக்கிட்டேன். ரிசர்வேஷன் இல்லாத டிக்கெட் (அப்போது அது சகஜம்.) உடனே விழுந்தடித்துக்கொண்டு சென்ட்ரலுக்கு ஓடிப் போய் டிக்கெட்டை ‘கான்சல்’ பண்ணி பணத்தைத் திருப்பி வாங்கியதுகூடப் பெரிதில்லை. அவர் பேச்சோடு பேச்சாகச் சொல்லியிருந்த ஒரு பொது நண்பரின் பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு துப்புத் துலக்கி அந்த அம்மாளின் விலாசத்தைக் கண்டுபிடித்ததும் பணத்தை அனுப்பி வைத்ததும் ஒரு நீண்ட கதை!&lt;br /&gt;பின் குறிப்பு : ஒன்று சொல்ல மறந்து விட்டேன். காரல் மார்க்ஸில் ‘ஸ்டேட்’ போல காலக்கிரமத்தில் அதன் அவசியம் தீர்ந்து போன பிறகு, நயா பைசாவின் ‘நயா’ பகுதி ‘உதிர்ந்து’ போயிற்று (withered away) மக்களும் அவர்களைப் பின்பற்றி அரசும் அதை விட்டு விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி: உயிர்மை, மே 2005&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;எஸ்.வி. ராமகிருஷ்ணனின் மற்ற படைப்புக்கள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;a href="http://desikann.blogspot.com/2005_02_14_desikann_archive.html"&gt;அது அந்த காலம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://desikann.blogspot.com/2005_02_15_desikann_archive.html"&gt;ரயில் பிரயாணத்தின் கதை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://desikann.blogspot.com/2005_03_29_desikann_archive.html"&gt;எண்ணெய்க் குளிப் படலம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111622189736560396?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111622189736560396/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111622189736560396&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111622189736560396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111622189736560396'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/05/blog-post_16.html' title='பணம் காசின் பரிணாமம்'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111578945694071138</id><published>2005-05-11T10:55:00.000+05:30</published><updated>2005-05-11T16:50:22.193+05:30</updated><title type='text'>வேதாளம்'s Day Out</title><content type='html'>காலை பத்து மணிக்கு , வேதாளம் விக்கிரமாதித்தனை எழுப்பியது. &lt;br /&gt;"நானும் உன்னோட இன்னிக்கு ஆபிஸ் வரேன்" என்றது.&lt;br /&gt;அதிர்ச்சியில் விக்கிரமாதித்தனுக்கு தூக்கம் கலைந்தது "என்ன நீயா ? No way" என்றன்.&lt;br /&gt;"நான் வ-ரே-ன்" என்று அழுத்தமாக சொல்லியது வேதாளம். &lt;br /&gt;&lt;br /&gt;ஜீன்ஸ்-T-Shirt- Nike ஷூவுடன், காலை பதினோறு மணிக்கு தூக்கக்கலகத்துடன் விக்கிரமாதித்தன் வேதாளதுடன் ஆபிஸுக்கு சென்றான். கதவிற்கு பக்கத்தில் தன் ஐடி கார்டை தேய்த்து,  "குவிக்"  சத்தத்திற்கு பிறகு உள்ளே சென்றான்.  ஏசி காற்று மேல் அடித்தது. வேதாளம் சினிங்கியது. "இது என்ன நாய் செயின் மாதிரி" என்றது வேதாளம். "நக்கலா ? இது தான் ஐடி கார்ட்" என்றான் விக்கிரமாதித்தன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/sw_eng_1.jpg" align="left"&gt;  வேதாளம் "என்ன எவ்வளவு லேட்டா ஆபிஸ் போறேயே" என்றது .விக்கிரமாதித்தன் பெருமையாக "you know we have flexi-timings" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கிரமாதித்தன் தன் இருக்கையில் உட்கார்ந்தான். அவன் தோளின் மேல் வேதாளம் உட்கார்ந்தது. பக்கத்து இருக்கைகள் காலியாக இருந்தது. தூரத்தில் யாரோ இரண்டு மூன்று பேர் கண்ணுக்கு தெரிந்தார்கள்... பிசிக்கு இடது பக்கத்தில் இருந்த பலகையில் விக்கிரமாதித்தனுக்கு வந்த "பர்த்டே கார்டு" பின்னால் குத்தப்பட்டு இருந்தது. பக்கத்தில் பீர் ஒரு கப்பில் நிறம்பி வழிந்து கொண்டிருந்த போஸ்டர் ஒன்று ஒட்டபட்டிருந்தது அதற்கு மேல் ஃசாப்ட்வேர் பற்றி ஒரு அசட்டு ஜோக். பிசிக்கு வலது பக்கத்தில் கறைபடிந்த காப்பி மக். &lt;br /&gt;&lt;br /&gt;விக்கிரமாதித்தன் பிசியின் மேல் ஒரு சின்ன பொம்மை இருந்தது "With love .." என்று கீழே எதோ பெயர் போடப்பட்டிருந்தது. விக்கிரமாதித்தன் பிசியை சுற்றி "Post-it" மஞ்சள் காகிதத்தால் பார்டர் போல் ஒட்டப்பட்டிருந்தது. வேதாளத்திற்கு ஒன்றும் புரியவில்லை  "உங்களுடைய ஆபிஸ் Paper-less ஆபிஸ்" கிடையாதா ? என்றது. விக்கிரமாதித்தன் சிரித்துக்கொண்டு "இதெல்லாம் ஒட்டினாதான் நான் ரொம்ப பிஸி என்று மற்றவர்களுக்கு தெரியும்" என்றான். விக்கிரமாதித்தன், தன்னிடைய பிசியை Boot செய்தான்.  "சரி, பிசி boot ஆவதற்குள் ஒரு காப்பி எடுத்துக்கொண்டு வந்துவிடலாம்"  என்று மக்குடன் பேண்டரி பக்கம் போனான். &lt;br /&gt;&lt;br /&gt;மக்கை அலம்பாமல் அப்படியே வெண்டிங் மிஷினில் காப்பியை நிறப்பிக்கொண்டு,  தன் இருக்கைக்கு வந்து சேர்ந்தான் விக்கிரமாதித்தன். சிலர் வந்திருந்தார்கள். காப்பியை உறுஞ்சிக்கொண்டே. " hai guys, how do you do ?" என்றான் விக்கிரமாதித்தன். &lt;br /&gt;"Great, ya, you know y'day we went out... we should go together sometime da" என்றான் பக்கத்தில் இருந்தவன். பக்கத்தில் இருந்த பெண் தனக்கு தன் மேனேஜரிடமிருந்து வந்திருந்த ஈ-மெயிலை படித்து "balls to him" என்றாள். எல்லோரும் சிரித்தார்கள். வேதாளம் அதிர்ச்சியில் பார்த்தது. வேதாளத்தின் டிஜிடல் கைகடிகாரத்தில் சரியாக 11:17am என்று காட்டியது. விக்கிரமாதிதன் தன் பிசியில் தனக்கு வந்திருந்த ஈ-மெயிலை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான். முதல் ஈ-மெயில் அண்டார்டிக்காவில் ஒரு குழந்தை Madras-eyeயால் அவதிப்படுவதாகவும், இந்த மெயிலை உங்களுக்கு தெரிந்தவர்களிடம் Fwd செய்யும்மாறு வேண்டுகோள் அதில் இருந்தது. விக்கிரமாதித்தன் அந்த ஈ-மெயிலை குப்பையில் போட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/sw_eng_2.jpg" align="right"&gt; ஹெட் போனை எடுத்து மாட்டிக்கொண்டான் தலையை ஆட்டிக்கொண்டே, வேலை சம்பந்தமான ஈ-மெயிலை படிக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;வேதாளம் "என்ன கேட்க்குற" என்றது. ஹெட் போனை கழட்டி வேதாளத்தின் காதில் வைத்தான் அது "தேவுடா தேவுடா" என்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் பக்கத்தில் இருந்த பெண் "Oh-Shit, I have a delivery today" என்றாள். வேதாளம் பதறியது "இன்னிக்கு டெலிவரியை வைத்துக்கொண்டு வேலைக்கு வந்திருக்கா என்ன தொழில் பக்தி" என்றது. "சும்மா இரு, டெலிவரி என்றால் இது அந்த டெலிவரி இல்லை, இது ஃசாப்ட்வேர் டெலிவரி" என்று விளக்கினான் விக்கிரமாதித்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;"You know today, i have not received a single personal mail" என்று வருத்தப்பட்டுக்கொண்டான் விக்கிரமாதித்தன். பக்கத்தில் உள்ள பெண் அதை கேட்டு அவனுக்கு இரண்டு மெயிலை fwd செய்தாள். "Oh - Great-ya" என்று அவள் அனுப்பிய சர்த்தார்ஜி ஜோக்கை மூன்றாவது முறையாக படித்து சிரித்தான். தன் நண்பர்களுக்கு அதை "fwd" செய்தான். வேதாளத்திற்கு ஒன்றும் புரியவில்லை.  பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த கிச்சா எதையோ சீரியஸாக படித்துக்கொண்டிருந்தான் அவன் யாருடனும் பேசவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"ok-ya, i have lots of work" என்றான் விக்கிரமாதித்தன். "can we go for a coffee" என்றாள் அந்தப் பெண். எல்லோரும் எழுந்தார்கள். விக்கிரமாதித்தன் 'Screen-Saver'ரை ஆன் செய்தான் அதில் "I am busy...." என்று ஓடத்தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் பேண்டரிக்கு சென்றார்கள். காப்பி உருஞ்சிக்கொண்டே&lt;br /&gt;&lt;span class="postenglish"&gt;&lt;br /&gt;"you-know ya, rajesh who went to SCT is now getting 3K more"&lt;br /&gt;"ya he is in J2EE, he fwd me a joke from his office email id"&lt;/span&gt;போன்ற பேச்சுக்கள் முடிந்தவுடன் திரும்பவும் இருக்கைக்கு வந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வேதாளம் மணியை பார்த்தது. 12:45pm என்று காமித்தது. விக்கிரமாதித்தன் ஒரு மெயிலை திறந்தான். அதில் அவன் மேனேஜர்&lt;br /&gt;&lt;span class="postenglish"&gt;"Can you give me your estimate for ... "&lt;/span&gt; என்று ஏதோ கேட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;span class="postenglish"&gt;"I have to investigate further to give any meaning full estimates.... so ...atleast i need...  "&lt;/span&gt;என்று ரிப்ளை செய்தான். &lt;br /&gt; விக்கிரமாதித்தன் பக்கத்தில் இருந்த கிச்சா தொடர்ந்து எதையோ சீரியஸாக படித்துக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/sw_eng_3.jpg" align="left"&gt; மணி 1:00pm. "ok-ya- lets grab some thing quickly. I have lots of work to do" என்றாள் அந்த பெண். எல்லோரும் பெல்லடிதார்போல் எழுந்தார்கள். லஞ்ச் முடித்து திரும்பியவுடன் வேதாளம் மணியை பார்த்தது 2:34pm என்று காமித்தது. "oh! its late for the meeting" என்று சிலர் எழுதுப்போனார்கள். சிலர் இண்டர்நெட்டில் இன்றைய தலைப்புச்செய்தியை பார்த்தார்கள், அந்த பெண் லைப்ரரிக்கு போனாள். கிச்சா தொடர்ந்து  சீரியஸாக படித்துக்கொண்டிருந்தான். கிச்சா போல் சிலர் இருப்பதால் தான் ஃசாப்ட்வேர் தொழில் நடக்கிறது என்று வேதாளம் நினைத்துக்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;மீட்டிங்கில் விக்கிரமாதித்தன் தன் பாஸ்சை பேர் சொல்லி கூப்பிட்டது வேதாளத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. விக்கிரமாதித்தன் தான் செய்யும் வேலைக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை என்றான். எவ்வளவு என்று செல்லவில்லை. எல்லோரும் ஒரு மணி நேரம் கழித்து, அடுத்த வியாழன் 3:00pm திரும்பவும் மீட்டிங் என்று முடிவி செய்தார்கள். பின்னர் விக்கிரமாதித்தன் அந்த டாப்பிக்கை ஆரம்பித்தான். அது "டீம் லஞ்" எல்லோரும் ஒரு மணதாக வரும் வியாழன் அன்று ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்டுக்கு போகலாம் என்று முடிவு செய்தார்கள். இதனால் அவர்களுடைய மீட்டிங்கை வெள்ளிக்கிழமைக்கு மாற்றி அமைத்தார்கள். வேதாளம் மணியை பார்த்தது 4:17pm என்றது. &lt;br /&gt;&lt;br /&gt;மீட்டிங்கை விட்டு வேளியே வந்த விக்கிரமாதித்தன். "It is hectic ya" என்று எல்லோரையும் காப்பிக்கு அழைத்தான். எல்லோரும் பேண்டரிக்கு சென்றார்கள். &lt;br /&gt;திரும்பவும் வந்த போது விக்கிரமாதித்தனுக்கு அவன் நண்பனிடமிருந்து மெயில் வந்திருந்தது. அதை படித்து ரிப்ளை செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கிச்சா மட்டும் சிரியஸாக எதையோ படித்துக்கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;span class="postenglish"&gt;&lt;br /&gt;naan ippo busya ..irukken la... not fair....&lt;br /&gt;naane... apparam... call panren saiyaa......&lt;br /&gt;&lt;br /&gt;....hows is the chick you told last time....&lt;br /&gt;what else da.....hows work?&lt;br /&gt;call me on my mobile after 7:30pm ok vaa ....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்று எதோ எழுதி அனுப்பினான். அனுப்பியவுடன் அவனுக்கு ஒரு போன் வந்தது. &lt;br /&gt;&lt;span class="postenglish"&gt;&lt;br /&gt;"ya. its me. why did you not call me y'day?"&lt;br /&gt;"...."&lt;br /&gt;"oh!, we are also going on thursday.... how is the food out there..."&lt;br /&gt;"...."&lt;br /&gt;"great....how is your new mobile"&lt;br /&gt;"..."&lt;br /&gt;"oh! man...... &lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வேதாளத்தின் மூஞ்சியில் கலவரம் தெரிந்தது, அது போனை கட்செய்தது. விக்கிரமாதித்தன் கோபமாக அதை பார்த்தான். மணி இப்போது 5:15 என்றது. அவனுக்கு மற்றொரு மெயில் வந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/sw_eng_4.jpg" align="right"&gt; கிச்சா படித்து முடித்து எதையோ டைப் செய்து கொண்டிருந்தான்.&lt;a href="http://desikann.blogspot.com/2005/04/blog-post_09.html#111302388131682504"&gt;&lt;u&gt;வேதாளம் எட்டிப்பார்த்து அதை படித்தது&lt;/u&gt;&lt;/a&gt;. படித்தவுடன், தலை லைட்டாக வலித்தது. பாக்கெட்டில் இருந்த சிகப்பு நிற கிரோசின் பெயின் கில்லரை அவசரமாக எடுத்துப் போட்டுக்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;மணி 6:30pm, "gotta go baby... otherwise the traffic is goin to get me crazy" என்று கூறிய விக்கிரமாதித்தன், வேதாளத்தை பார்த்தான். வேதாளம் மண்டியிட்டு கடவுளிடம் பிராத்தனை செய்துக்கொண்டிருந்தது. விக்கிரமாதித்தன் "என்ன பிராத்தனை செய்கிறாய்" என்று கேட்டான். "அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருத்தால் நான் ஒரு ஃசாப்ட்வேர் என்ஜினியர் ஆகவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்" என்றது. &lt;br /&gt;&lt;br /&gt;விக்கிரமாதித்தனுக்கு தன்னுடைய ஃசாப்ட்வேர் அனுபவத்தில் மேலும் ஒரு நாள் கூடியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111578945694071138?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111578945694071138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111578945694071138&amp;isPopup=true' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111578945694071138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111578945694071138'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/05/s-day-out.html' title='வேதாளம்&apos;s Day Out'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111571260145002926</id><published>2005-05-10T13:19:00.000+05:30</published><updated>2005-05-10T13:46:56.176+05:30</updated><title type='text'>ஹாப்பி பர்த்டே சுஜாதா ! - Follow-up</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_cartoon_2.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;சென்ற வாரம் &lt;a href="http://www.vikatan.com"&gt;விகடனில்&lt;/a&gt; நான் எழுதியக் கட்டுரையை மிகப் பலர் போனிலும், நேரிலும், மென்மெயிலிலும், மின்மெயிலிலும் பாராட்டினார்கள். சிலர் கட்டுரை சோகமாக இருந்தது என்றார்கள். சிலர் தமாஷாக இருந்தது என்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மதன், 'இந்தமாதிரி எனக்கு எப்ப சார் எழுத வரும்?' என்றார். 'எழுபது வயசானதும்' என்றேன். ஜெயமோகன் அது, நான் எழுதிய சிறந்த கட்டுரைகளில் ஒன்று என்றார். அவருடைய மனைவி, அதில் சோகமும், வருத்தமும் இழையோடுவதாகச் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;தேசிகன் அதைக் காலையில் படித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் சுற்றினேன். தூக்கம் போய்விட்டது என்றார். எனக்கு எழுபது வயது நிறைந்ததைப் பற்றி எழுதிய கட்டுரை அது. &lt;a href="http://desikann.blogspot.com/2005/05/blog-post.html"&gt;தேசிகனின் blogல் உள்ளது&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;எழுபது - பல பாசாங்குகளுக்குத் தேவையும், அர்த்தமுமில்லாமல் போகும் வயசு. நமது கன்விக்ஷன்ஸ் எல்லாம் மெல்ல மெல்லக் கழன்று கொள்ளும். மற்றவர் பார்வையிலும் தீர்க்கம் உள்ளது என்பதை உணரும் வயசு. நம்முடைய அத்தியாவசியப் பட்டியல் அடித்துத் திருத்தப்படும் வயசு. இதையெல்லாம் உண்மையாக எழுதினபோது அதே மாதிரி உணர்ந்தவர்கள், ஆனால் சொல்ல தயக்கமுள்ளவர்கள் அந்தக் கட்டுரையுடன் சுலபமாகத் தங்களை அடையாளம் கண்டு கொண்டனர். இதுதான் அதன் பாதிப்பின் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவிலிருந்து மகன், அவனுடைய நண்பன் படித்ததாகச் சொல்ல, 'அப்படி என்னதான் எழுதியிருக்கிறாய்?' என்று கேட்டான். அண்ணா நகரிலிருந்து ஓர் அன்பர், தனக்கு முப்பது வயது; தன் வருங்காலத்தின் நாற்பது ஆண்டுகளை, 'இதோ உங்களுக்குக் கொடுத்து விடுகிறேன். எடுத்துக் கொள்ளுங்கள்!' என்று யயாதியின் மகன்போல உணர்ச்சி வசப்பட்டார். இது சாத்தியமில்லை என்கிற பத்திரத்தில் சொல்கிறார் என்பது தெரிந்தாலும், அந்த எண்ணத்திற்கு மரியாதையாக, 'ரொம்ப தாங்ஸ் சார்! எனக்களிக்கப்பட்ட வாழ்நாளே போதும்' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் முக்கியமான க்ளிஷே வாக்கியங்களில் ஒன்றான, 'வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்' - அன்று சுமார் முப்பது தடவை டெலிபோனில் எனக்குக் கேட்டது. பேராசிரியர் ஞானசம்பந்தன் பொருத்தமான ஒரு திருக்குறள் சொன்னார். விகடன் ஆசிரியர் பாலன், 'நான் உங்களைவிட சின்னவன் (டிசம்பர் 28, 1935). கவலைப்படாதீர்கள் ரெண்டு பேரும் ரொம்ப நாள் இருப்போம்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.வி.சேகர், 'தமிழக பிராமணர்கள் வரலாறு' இரண்டு பாகம். மொத்தம் ஆயிரம் பக்கம் புத்தகத்தை அட்லாஸ் சைஸில் வாழ்த்து அட்டையுடன் கொடுத்தார். டாக்டர் ஸ்ரீதர், தன்வந்திரி படமும், வைரமுத்து கவிதைத் தொகுப்பும் கொடுத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் ஷங்கர், அந்நியன் ரெமோபோல அழகான ரோஜாக்களின் பொக்கே கொடுத்தார். இவையனைத்தையும் மெய்ப்படுத்தியது எது என்று யோசித்துப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கராஜன் என்கிற மனுஷனா? சுஜாதா என்கிற எழுத்தாளனா?&lt;br /&gt;&lt;br /&gt;தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி &lt;a href="http://www.ambalam.com"&gt;அம்பலம். &lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* - * - * - * &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் ஆனந்த விகடன் கற்றதும் பெற்றதுமில்...&lt;br /&gt;&lt;br /&gt;'பால்குடத்தை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளாய் &lt;br /&gt;தோல் குடத்தைத் தொத்தவந்த தீவிர வியாதியெலாம்&lt;br /&gt;மால் படுத்த அரங்கன் மணிவண்ணன் பேர்சொல்ல&lt;br /&gt;வால் சுருட்டிக் கொள்ளுமாமே பெருமாளே சரிதானே'&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இந்த சந்தக் கவிதையை எழுதியவர் யார்? விடை கடைசியில் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_vasanth.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;வசந்த் வந்திருந்தான். "தல..! சென்ற இதழ்ல க.பெ. கொஞ்சம் சோகமாக இருந்தது. அதனால், இந்த கார்ட்டூனை முதலில் பாரும். பிறகு, இரண்டு ஜோக்குகளைச் சொல்லாவிட்டால், எனக்கு மண்டை வெடித்துவிடும்" என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;"ஏ ஜோக்னா வேண்டாம், வசந்த்! எனக்கு வயசாகிவிட்டது" என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;"இது ஏ இல்லை, பி. உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை என்கிறீர்களே, இதைக் கேளுங்கள். ராமுவும் சோமுவும் இணைபிரியா நண்பர்கள். இரண்டு பேருக்கும் ஒரே வயசு. ஒரே வருஷம் ஒரே ஊரில் கல்யாணம். ஒரே ஆபீஸில் உத்தியோகம். ஆனால், ராமு ஏகபத்தினி விரதன். சோமு கொஞ்சம் என்னை மாதிரி அலைந்தவன். ஒரு நாள் ராமு, ‘நம்ம ரெண்டு பேர்ல யார் முதல்ல செத்தாலும், எப்படியாவது முயற்சி பண்ணி தொடர்பு வெச்சுக்கிட்டு, நம்ம அனுபவங்களைப் பங்கிட்டுக் கொள்ளணும்டா!' என்றான். ‘சரிடா’ என்றான் சோமு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/sujatha_cartoon_1.jpg" alt="Image hosted by Photobucket.com" align="right"&gt;அடுத்த வருஷம் ஹார்ட் அட்டாக் வந்து சோமு செத்துப் போய்விட்டான். ராமு ரொம்ப அழுதான். எப்படியாவது சோமு தன்னை கான்ட்டாக்ட் பண்ணுவான் என்று நம்பினான். அதற்கேற்றாற்போல, செத்துப்போன பத்தாவது நாள் ராமுவுக்கு போன் வந்தது... "ராமு,  &lt;br /&gt;[படம் - வசந்த் காண்பித்த சைலண்ட் ஜோக்]&lt;br /&gt;&lt;br /&gt;நான்தாண்டா சோமு பேசறேன்!" &lt;br /&gt;&lt;br /&gt;"சோமுவா? ஆச்சர்யம்டா! இத்தனை சீக்கிரம் தொடர்பு கொள்வேனு எதிர்பார்க்கலை. எப்படிடா இருக்கே?" &lt;br /&gt;&lt;br /&gt;"சூப்பர்! இங்கே எல்லா சௌகரியங் களும் இருக்கு. வேளாவேளைக்கு நிறையச் சாப்பாடு, நிறையச் சந்தோஷம். டிவைன்!" &lt;br /&gt;&lt;br /&gt;"வேலை எதுவும் கிடையாதா?" &lt;br /&gt;&lt;br /&gt;"ஒரே ஒரு சுலபமான, எனக்குப் பழக்கமான வேலைதான் கொடுத்திருக்காங்க. காலைல எழுந்து சாப்பிட்ட உடனே ஒரு தடவை, அப்புறம், பத்து மணிக்கு லைட்டா தீனி. அதுக்கப்புறம் ஒரு முறை. மத்தியானம் கொஞ்சம் ஹெவியாகச் சாப்பிட்டுட்டு ரெண்டு முறை மறுபடி அதே சமாசாரம்..!" &lt;br /&gt;&lt;br /&gt;"அட, பரவாயில்லையே! சொர்க்கத்திலேயும் ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்றேனு சொல்லு!" &lt;br /&gt;&lt;br /&gt;"சொர்க்கமா? காங்கேயம்டா! இங்கே நான் ஒரு காளைமாடா பொறந்திருக்கேன்!" &lt;br /&gt;&lt;br /&gt;வசந்த், நான் சிரிக்க யோசிப்பதைப் பார்த்து, "இரண்டாவது ஜோக் கேளுங்க. மரணத்தைப் பத்தி எழுதியிருந்தீங்களே!" &lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லித் தொலை!" &lt;br /&gt;&lt;br /&gt;"ஒருவனுக்கு என்னவோ காரணத்தால் மிக அரிதான வியாதி வந்து, டாக்டர் அவனிடம், 'ஸாரி  &lt;br /&gt;மிஸ்டர் கோதண்டம்! உங்களுக்கு இன்னும் பன்னிரண்டு மணி நேரம்தான் வாழ்க்கை பாக்கியிருக்கிறது!' என்று அறிவித்துவிட்டார். அவன் வீட்டுக்கு வந்து தன் மனைவி பிரமீளாவிடம் இதைச் சொல்லி அழுதான். அவளும் அழுதாள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் யோசித்தாள்... ‘இருக்கிற பன்னிரண்டு மணியை அழுது தீர்க்க வேண்டாம். இன்பமாகக் கழிப்போம்!' என்று முதலில் ஒரு கோயிலுக்குப் போய், அவசரமாகச் சாமி கும்பிட்டு விட்டு, நல்ல ஒட்டலுக்குப் போய் சுவையான உணவு உண்டுவிட்டு, ஒரு சினிமா பார்த்துவிட்டு, வீட்டில் வந்து படுத்தபோது மணி பதினொன்று. &lt;br /&gt;&lt;br /&gt;மனைவி சொன்னாள்... 'மறக்க முடியாதபடி நாம் காதலிப்போம், வா!' என்று அவன் முகத்தை ஏந்தி முத்தம் கொடுத்துவிட்டு, மார்போடு தழுவிக் கொண்டாள். அதன்பின்...’’ &lt;br /&gt;&lt;br /&gt;‘‘டீடெய்ல்ஸ் வேண்டாம்! எனக்குப் புரியும்!’’ &lt;br /&gt;&lt;br /&gt;‘‘சற்று நேரத்தில் கணவன், 'இம்மாதிரி சந்தோஷம் அனுபவித்ததே இல்லை. எத்தனை இன்பம் தந்தாய் பெண்ணே!’ என்றான். 'போதுமா?' என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;'இன்னொரு முறை' என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முறையும் இன்பத்தின் எல்லையைத் தொட்டனர். சிறிது நேரம் கழித்து, கணவன் மனைவியை எழுப்பினான். 'இன்னும் ஒரே ஒரு தடவை கண்ணு!’ என்றான். 'உங்களுக்கென்ன... காலைல எந்திரிக்க வேண்டியதில்லை. நான் மட்டும்தானே எந்திரிக் கணும். போதுங்க!’ என்றாள்.’’ &lt;br /&gt;&lt;br /&gt;நான், "ஆச்சர்யமே இல்லை... உன்னை எவளும் கல்யாணம் செய்துக்கமாட்டா!" என்று அவன் &lt;br /&gt;&lt;br /&gt;மேல் Spiritual Writing, 1998 தொகுப்பை எறிவதற்குள், புறப்பட்டுச் சென்றான். &lt;br /&gt;&lt;br /&gt;விடை: அது, கிரேஸி மோகன் எழுதி எனக்கு அனுப்பிய ஆறுதல் கவிதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி ஆனந்த விகடன்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111571260145002926?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111571260145002926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111571260145002926&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111571260145002926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111571260145002926'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/05/follow-up.html' title='ஹாப்பி பர்த்டே சுஜாதா ! - Follow-up'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111509435029789826</id><published>2005-05-03T09:46:00.000+05:30</published><updated>2005-05-03T10:05:20.423+05:30</updated><title type='text'>ஹாப்பி பர்த்டே சுஜாதா !</title><content type='html'>&lt;img src="http://www.employees.org/~desikan/images/chutti01.jpg", align="right"&gt; சுஜாதா எழுதிய எல்லாவற்றையும் படித்து அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவம் குதூகலம், விளையாட்டு, பக்தி, உற்சாகம், துக்கம் என கலவையானது. ஆனால் நேற்று ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா எழுதிய இந்த கட்டுரை என்னை கொஞ்சம் டிஸ்டர்ப் செய்தது. முதுமை ஒரு தவிர்க்க இயலாத கட்டளை என்ற போதிலும் அதை எதிர்கொள்வது ஒரு கலை. வயோகதிகத்தின் அச்சுறுத்தும் இருண்ட கனவுகளை அங்கதமாக மாற்றி அதனோடு விளையாடுவதற்கு வாழ்க்கையின்மீதான ஒரு பெரிய தரிசனமும் சுய வெளிச்சமும் இருந்தால்தான் சாத்தியம். சுஜாதாவின் இந்தக் கட்டுரை அந்த வெளிச்சத்தை கொஞ்ச நேரம் நம் மனங்களில் ஏற்றுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;அவர் இந்தக் கட்டுரையில் கூறியிருக்கும் ஞாபக மறதி உட்பட பல symptoms எனக்கு இந்த வயதிலியே இருப்பதை நினைத்தால் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தனது 70வது பிறந்த நாள் காணும் திரு.சுஜாதாவிற்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள். அவரை ஸ்ரீரங்கநாதர் நல்ல உடல் நலத்துடன் வைத்துக்கொள்ள பிரார்த்திக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் சுஜாதாவின் தீவிர வாசகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;em&gt;இந்த வார 'கற்றதும் பெற்றதும்'ல்  சுஜாதா...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்குப்பா?" &lt;br /&gt;&lt;br /&gt;"தொடுங்களேன்!" &lt;br /&gt;&lt;br /&gt;சற்று வியப்புடன் தொட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார். &lt;br /&gt;&lt;br /&gt;"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..." &lt;br /&gt;&lt;br /&gt;"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?" &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/ramya_sujatha_small.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!  &lt;br /&gt;&lt;br /&gt;சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!". &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது). &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று. &lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்! &lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;நன்றி: ஆனந்த விகடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://desikann.blogspot.com/2004_05_21_desikann_archive.html"&gt;சுஜாதாவும் நானும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://desikann.blogspot.com/2004_12_09_desikann_archive.html"&gt;சுஜாதாவின் படைப்புக்கள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111509435029789826?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111509435029789826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111509435029789826&amp;isPopup=true' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111509435029789826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111509435029789826'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/05/blog-post.html' title='ஹாப்பி பர்த்டே சுஜாதா !'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111449976270225872</id><published>2005-04-26T12:42:00.000+05:30</published><updated>2005-04-26T12:46:02.706+05:30</updated><title type='text'>கிரிமினல்கள் ஜாக்கிரதை</title><content type='html'>&lt;img src="http://www.kamadenu.com/img/criminalgal_b.jpg" align="left"&gt; கல்கியில் 1994-95 என்று நினைக்கிறேன், "கிரிமினல்கள் ஜாக்கிரதை" என்ற தொடர் வந்து கொண்டிருந்தது. நான் கல்கியில் விரும்பி படித்த தொடர்களில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட ஒரு கிரைம் கதை போல் வாரவாரம் சஸ்பென்ஸ் வைத்து எழுதப்பட்டது. இதில் வந்த நபர்கள் நமக்கு மிகவும் பரிட்சயமானவர்கள் அதனால் சுவாரசியம் மேலும் கூடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளிகளை ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிக்க காவல்துறை பெரிதும் நம்புவது, தடய அறிவியல் துறை என்னும் Forensic science பிரிவைத்தான்.  சிறியதொரு தலைமுடி, ஒரு சொட்டு ரத்தம், ரேகை, உடைந்த பல் என்று கிடைக்கும் அற்பமான ஆதாரங்களை வைத்துக்கொண்டு, அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு குற்றவாளிகளைத் துல்லியமாக அடையாளம் காட்டும் இந்திய தடய அறிவியல் நிபுணர்களுள் டாக்டர் .பி. சந்திரசேகரன் மிக முக்கியமானவர்.  &lt;br /&gt;&lt;br /&gt;கல்கி வார இதழில் தொடராக வெளியான அவரது இந்த அனுபவக் குறிப்புகள் தற்போது நூல் வடிவில் வந்திருக்கிறது.  இதில் தான் காஞ்புரத்தில் முதல் முதலில் சந்தித்த வடகம் பானையில் கானாமல் போன பணம் முதல் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட மொட்டை முருகன் வரை எழுதியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தில் சந்திரசேகரனிடம் முக்கிய பிரமுகர்கள் சிலர் கேட்ட சுவாரசியமான கேள்விகளை முதலில் தருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எம்.ஜி.ஆர். &lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;[எந்த ஒரு விஷயத்தை பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி முழு விபரங்களையும் சேகரித்துத் தருவதால்தான் உங்களுக்குச் சேகரன் என்ற பெயரோ என்று தமாஷாக சொன்ன எம்.ஜி.ஆர் தொடர்ந்து , "ஆனால் என்னுடைய வழக்கில் மட்டும் முக்கியமான தகவலை சேகரித்துத் தர மறந்துவிட்டீர்களே சேகரன்" என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;"இல்லையே... கூடுமானவரை எல்லாத் தகவல்களையும் திரட்டி உதவினேனே" என்றேன் பதற்றதுடன். &lt;br /&gt;&lt;br /&gt;'நான் துப்பாக்கியால் மிக அருகிலிருந்து சுடப்பட்டும், எம்.ஆர். ராதா அண்ணன் தன்னைதானே சுட்டுக் கொண்டபோதும் இருவரின் உயிருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையே; ஏன் ? அதற்கான காரணத்தைக் கண்டறிவவில்லையே சந்திரசேகரன்?" என்றார் எம்.ஜி.ஆர். &lt;br /&gt;&lt;br /&gt;... . . . . . . . எம்.ஜி.ஆர். போன்ற தலைவர் பிழைத்து வந்ததைக் கொண்டாடிக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் 'அருகிலிருந்து சுடப்பட்டும் ஏன் இறக்கவில்லை? என்ற நோக்கில் ஆராய்ச்சி செய்து வெளியிடுவது நாகரிகமாக இருக்காது என்று நான் கருதினேன். இருந்தாலும் அந்த ரீதியிலும் ஆராய்ச்சி செய்து அதற்கான விடையை வைத்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.... ... . . . . &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு விவரங்களையும் எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். எம்.ஜி.ஆருக்கு இந்த விஞ்ஞானபூர்வமான காரணங்களைக் கேட்டது ஒரே சந்தோஷம். "இந்த உண்மைகளைத் தடய அறிவியல் துறைக்கு பயன்படும்படி வெளியிடவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். ]&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது ஜெயலலிதா...&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;[அப்போது மரபனு(DNA) பரிசோதனை ஆராய்ச்சி முற்று பெறாத காலகட்டம். உலகமெங்கும் இது போன்ற கேஸ்களில் ரத்ததைச் சோதித்து கண்டுபிடிக்கும் HLA சோதனைதான் நடைமுறையில் இருந்தது.....&lt;br /&gt;&lt;br /&gt;.....  HLA சோதனை பற்றி விளக்கும் போது முதல்வர் ஜெயலலிதா ஒரு கேள்வி கேட்டார். "ஒரு கணவனுக்கு 'ஏ' குருப் ரத்தம், மனைவிக்கும் 'ஏ' குருப் என்று வைத்துக் கொள்ளுங்கள்; உங்கள் HLA சோதனைப்படி குழந்தைக்கு 'ஏ' குரூப்போ அல்லது 'ஓ' குரூப்போ இருக்க வேண்டும்; அடுத்த வீட்டுக் காரனுடன் மனைவிக்கு தொடர்பு வைத்திருப்ப்தாக கணவர் சந்தேகப்படும்பட்சத்தில் அடுத்த வீட்டுக்காரனுக்கும் 'ஏ' குரூப் ரத்தம் இருக்கும்பட்சத்தில் குழந்தைக்கு அப்பா யார் என்று எப்படி நிர்ணயிப்பீர்கள் ?" ]&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிய கேள்விகளுக்கு சந்தரசேகரன் என்ன விடையளித்தார் என்பதை புத்தகத்தை வாங்கி படித்துக்கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ராஜிவ் காந்தி விடுதலைப்புளிகளால் கொல்லப்பட்டதை விவரிக்கும் சந்திரசேகர் ஆர்.டி.எக்ஸ் (RDX) பற்றி ஒரு சிறு குறிப்பு தருகிறார். &lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;[ ஆர்.டி.எக்ஸ் என்றால் 'ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் எக்ஸ்ப்லோசிவ்' என்று பொருள்.  அமெரிக்க ராணுவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததுதான் இந்த வெடிமருந்து. இதன் ரசாயனப் பெயர் சைக்கிளொமைட் என்பதாகும். திடமும் அல்ல திரவமும் அல்ல. சப்பாத்தி மாவை எப்படி தட்டையாக உருண்டையாக நமக்கு தேவைப்பட்டது போல் செய்து கொள்கிறோமோ அது போலவே இந்த ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்தையும் தேவைக்கேற்றபடி செய்துக்கொள்ள முடியும். இந்த மருந்தை 40 கி.மீட்டருக்கு நீளமாக வைத்து ஒரு முனையைப் பற்ற வைத்தால் அதே நேரத்தில் மறுமுனையும் எரியும். இதிலிருந்து ஆர்.டி.எக்ஸ் நெருப்பைக் 'கடத்தும்' வேகத்தை ஊகித்துக் கொள்ளுங்கள். இந்த மருந்தை பற்ற வைக்க 197 டிகிரி வெப்பம் உருவாக்கப்பட வேண்டும் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்தில் வைக்கப்பட்டிருக்கும் ரவைகள், அது வெடிக்கும் போது ஒரு வினாடிக்குள் 26000 அடி பாயும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட கொடுமையான வெடிமருந்து ஆர்.டி.எக்ஸ்.!.]&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பத்மநாபா கொலை; பாதியில் நின்ற சோதனை" என்ற தலைபில் இவ்வாறு எழுதியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;[ பத்மநாபா கொலை வழக்கில் தடயங்கள் சோதனைகள் செய்து கொண்டுயிருந்த போது, அன்றைய தமிழக அரசு "தடய சோதனைகள் போதும்.... கிளம்பலாம்" என்று தகவல் வந்தது ...." எனக்கு ஒரே ஆச்சரியம்! ஏன் பாதியில் நிறுத்தச் சொல்கிறார்கள் என்று புரியாமல் நான் செகரித்தவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். ....&lt;br /&gt;&lt;br /&gt;வருந்ததக்க விஷயம் என்னவென்றால் இது சம்பந்தமாக எந்த அறிக்கையும் அரசு எங்களிடம் கேட்கவில்லை என்பது தான்.....&lt;br /&gt;&lt;br /&gt;அது தவிர கோர்டிலும் சாட்சி சொல்லவும் அழைக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் எங்களைப் போதுமான அளவு சோதனை செய்ய அனுமதித்திருந்தால் எதிர்காலத்துக்கும் அது பயனுள்ளதாக அமைந்திருக்குமே என்று இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். ...]&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், சுப்பிரமணியம் சுவாமி 'தடா' ரவியுடன் இருக்கும் சந்தேகப் படம், சில்க் ஸ்மிதா மரணம், நடுக்கடலில் தீ, ஆட்டோ சங்கர், அண்ணா அடைந்த அதிர்ச்சி, எல்.ஐ.சி எப்படி எரிந்தது ?, நடராஜர் சிலையை எப்படி மீட்கப்பட்டது என்று பல சுவாரசியமான கட்டுரைகள் இப்புத்தகத்தில் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக சந்திரசேகரன் இவ்வாறு எழுதுகிறார். ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;[ தடய அறிவியல் துறையில் எனது சேவையை பாராட்டி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது. இந்த துறையில் யாரும் இது போன்ற உயர்ந்த விருதைப் பெற்றதில்லை. விருது பெற்றவுடன் என்னை நேரடியாகப் பாராட்டியவர்கள் மூப்பனாரும், திருநாவுக்கரசு மட்டுமே....ஆனால் சட்டமன்றத்தில் சொல்லி தங்கள் நெருக்கடிகளைச் சமாளித்துக்கொண்ட மற்ற தமிழக அரசியல்வாதிகளிடமிருந்து எந்த ஒரு பாராட்டும் இல்லை. தமிழ், தமிழன் என்று பேசுவர்களுக்கு சக தமிழனைப் பாராட்ட் மனம் வரவில்லையே என்று ஏக்கப் பெருமூச்சு வருகிறது. ....விஞ்ஞானம் வளர வளர கிரிமினல்களும் ஹைடெக் ஆக மாறிவிட்டார்கள். அவர்கள் முகமூடிகளைக் கிழிக்கும் வகையில் என் பணி தொடரும்.]&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் சந்திரசேகரனின் அனுபவங்களை எழுத்து வடிவம் தந்திருப்பவர் ப்ரியன், கல்கி இதழில் தொடர்ந்து அரசியல் கட்டுரைகள் எழுதி வருபவர். &lt;br /&gt;&lt;br /&gt;["கிரிமினல்கள் ஜாக்கிரதை!", &lt;a href="http://www.newhorizonmedia.co.in/"&gt;கிழக்கு பதிப்பகம்&lt;/a&gt;, 126 பக்கங்கள், ரூபாய் 50/=, படிக்க 1 மணி நேரம்]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111449976270225872?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111449976270225872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111449976270225872&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111449976270225872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111449976270225872'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/04/blog-post_26.html' title='கிரிமினல்கள் ஜாக்கிரதை'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111336623166198504</id><published>2005-04-13T09:47:00.000+05:30</published><updated>2005-04-13T09:59:44.036+05:30</updated><title type='text'>தசாவதாரம் -  தி மிஸ்ஸிங் லிங்க்</title><content type='html'>உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாடு பலருக்கு தெரிந்திருக்கலாம். லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானிதான் முதன்முதலாக மாற்று சிந்தனையைத் தூண்டினார்.  ‘‘ஒவ்வொரு வகையான உயிரினமும் திடீர் திடீரென படைக்கப்பட்டன என்பது நம்புகிறமாதிரி இல்லை. அற்ப உயிரியான பாக்டீரியாகூட அப்பா, அம்மா இல்லாமல் பிறக்காது. எல்லா உயிரினங்களின் தலைமுறைகளும் பெருகும் விதம் இதான்! அப்படி பார்க்கப் போனால்,  மனித இனத்த உருவாக்கிய முதல் அப்பா, அம்மா யார்? ஒவ்வொரு இனத்தின் முதல் தலைமுறை யாராக இருக்கும்? இதை நாம் கண்டறிய வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/evolution1.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;இதன்பிறகு பலர் மனதிலும் இதே கேள்வி எழுந்தது.... &lt;br /&gt;அடுத்த சில வருஷங்களில் பரிணாமக் கொள்கையை அறிவித்த சார்லஸ் டார்வின், பல்வேறு உயிரினங்களும் தோன்றுவதற்கு ‘இயற்கைத் தேர்வு’தான் ((Natural selection) காரணம் என்றார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது! &lt;br /&gt;அது- கடலில் இருக்கும் பாசி, மீன்கள், ஆமைகள், நத்தைகள், காடுகளில் இருக்கும் குரங்கு போன்ற உயிரினங்கள், பறவைகள் என எல்லாமே ஏதோ ஒருவகையில் மனிதர்களுக்கு மூதாதையர்கள் என்றால் எல்லோருக்கும் அதிர்ச்சி வராதா?&lt;br /&gt;அப்படியானால் நாம் அவற்றை என்ன உறவுமுறை சொல்லி அழைப்பது? பாசி... கொள்ளுத் தாத்தா, பூண்டோடு அழிந்துவிட்ட டினோஸர்கள்... எள்ளுத் தாத்தா, குரங்கு... பெரியப்பா, சிம்பன்ஸி வகைகள்... மனிதனின் சித்தப்பா என்றெல்லாம் டார்வின் அடுக்கியபோது பலருக்கு கோபம் வந்துவிட்டது. ஆனால், உண்மை அதுதான் என்று காலப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது! &lt;br /&gt;(படம்: பூமியின் உயிர் சுழர்ச்சி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/evolution.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;டார்வினின் தியரி இப்படிப் போகிறது... ‘பூமியின் சூழ்நிலை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிவிடுகிறது. பூமியில் இருந்த உயிரினங்களும் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறிவந்தன. ஒரு அப்பா, அம்மாவுக்கு பிறக்கும் அடுத்த தலைமுறை உயிரினம் தன அப்பா, அம்மாவின் குணங்கள் கொண்ட நூறு சதவிகித ஜெராக்ஸ் காப்பியாக இல்லாமல், அதன் தாய் &amp; தந்தை சந்தித்த புதிய பிரச்னைகளை எதிர்கொள்ளும் விதமாக குணத்திலும் உடல் அமைப்பிலும் மிகமிக நுட்பமான சில மாற்றங் களோடுதான் பிறக்கிறது. கால ஓட்டத்தில் புதிதுபுதிதாக எழும் இயற்கையின் சவால்களைத் தாக்குப் பிடிக்க முடியாத உயிரினங்கள் மடிந்து போகின்றன. அந்த புதிய சவால்களைத் தாக்குப் பிடிக்கக் கூடிய வகையில் புதிய உயிரினங்கள் உருவாகின்றன.  லட்சக்கணக்கான வருஷங்கள்... ஆயிரக்கணக்கான தலைமுறைகள்... ஒவ்வொரு உயிரினமும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் இருந்தன. ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு உயிரினத்துக்கு பிறந்த வாரிசு, அதேமாதிரி இல்லாமல் புதிய இனமாக தலை எடுத்தது. &lt;br /&gt;(படம்: முதல் உயிர் நீரிலிருந்து நிலத்திற்கு, நாஸா வெளியிட்ட படம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/pasi.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;பரிணாம வளர்ச்சியும் அப்படித்தான் என்பது டார்வின் கட்சி! காலப்போக்கில், அறிவியல்ரீதியாக இது நிரூபிக்கப்பட்டது. நம் உடலில் இருக்கும் அதே போன்ற மரபணுக்கள்தான் பாக்டீரியா, பாசிகள், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என எல்லாவற்றின் உடம்பிலும் இருக்கின்றன. ‘அப்படின்னா எல்லாரும் பங்காளிங்கதான். முதன்முதலாக ஆழ்கடலில் எட்டிப்பார்த்த நீலப்பச்சைப் பாசிதான் நமக்கு மூதாதையர். அது அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கியது. இப்படித்தான் படிப்படியாக உயிர்கள் தோன்றுவது நிகழ்ந்தது’ என்றார் டார்வின். பாசியிலிருந்து பரிணாம வளர்ச்சியில் முன்னேறிய இந்த இனம் தான் இன்று வலைப்பதிவு எழுதிக்கொண்டிருக்கிறது; பின்னூட்டங்களில் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது.(படம்: நீலப்பச்சைப் பாசி)&lt;br /&gt;&lt;br /&gt;சரி சார் சரி,  அந்த ஒற்றை நீலப்பச்சைப் பாசியிலிருந்துதான் சகல உயிரினங்களும் தோன்றியதாக வைத்துக் கொள்வோம். அந்த முதல் பாசி எங்கிருந்து வந்தது ?. உயிர்கள் எதுவுமே இல்லாத சூழலில் அதன் வருகை எப்படி நிகழ்ந்தது ? அது எப்படி பெருகியது ? அதிலிருந்து விலங்கினங்கள் எப்படி தோன்றியிருக்கும்?’ என அடுக்கடுக்கான கேள்விகள். எழுந்தது .பல நிபுணர்கள் ஒவ்வொரு தியரியாக சொன்னார்கள் ஆனால், கடைசியில் ஓபாரின் என்ற ரஷ்ய விஞ்ஞானி சொன்னதான் உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. ‘வானத்திலிருந்து வந்த மின்னல், கடலுக்கடியில் சில ரசாயன மாற்றங்களைச் செய்தது. அதன் விளைவாக உயிர்களின் அடிப்படைப் பொருட்களான மூலக்கூறுகள் கிளம்பின. அதிலிருந்துதான் உயிர் தோன்றியது’’ என்றார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;பிற்பாடு சிகாகோவைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டான்லி மில்லர், 1953ஆம் ஆண்டு இந்த தத்துவம் உண்மை என்று நிரூபித்தும் காட்டினார். மூடிய ஒரு குடுவயில் ஆதிக்காலத்தில் கடல் இருந்த சூழ்நிலையை உருவாக்கி, மின்சாரத்தின் மூலம் செயற்கை மின்னல அந்த குடுவைக்குள் ஏற்படுத்தினார். அதன் விளைவாக செயற்கைக் கடலின் அடியில் உயிர் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவானது. கவனிக்கவும்! சூழ்நிலைதான் ஏற்பட்டது! புதிய உயிரே தோன்றிவிடவில்லை. அது மனிதனால் ஆகக்கூடிய காரியமும் இல்லை!. &lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் உயிரினங்கள் தோன்றிய மொத்த வரலாற்றையும் சுருக்கி ஒரு வருஷம் என்கிற கற்பனை காலண்டருக்குள் அடைத்தால், பாசி தோன்றியது ஜனவரி முதல் தேதி... மனிதன் தோன்றியது டிசம்பர் முப்பத்தோறாம் தேதி! அதாவது அவன்தான் கடைசிக் குழந்தை | இப்போதுள்ள உயிர்களிலேயே பரிபூரணமான குழந்தை! &lt;br /&gt;&lt;br /&gt;உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டுக்கும் திருமாலின் பத்து அவதாரங்களுக்கும் சம்பந்தம் இருக்கு என்றால்  சிரிப்பீர்கள். எளிமையாக சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/avatars.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;முதலில் ஒரு செல்லிலிருந்து கடலில் தோன்றிய முதல் உயிரினம் மீன் என்றால் இது மச்சாவதாரம். பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை, தவளை போன்றவை தோன்றியது - இது கூர்மாவதாரம். அதன் பின் நிலத்தில் மட்டும் வாழும் உயிரனமாக (பன்றி) வராகவதாரம். பின் நான்காவதாக மனிதனுமின்றி, மிருகமுமின்றி நரசிங்காவதாரம்.  ஐந்தாவதாக ஒரு குள்ளமனிதனாக வாமனாவதாரம். ( இதற்கு பிறகு வருவோம்). ஆறாவதாக,  மனிதன் கொஞ்சம் விலங்குகளின் தன்மையுடன் கூடிய பரசுராமாவதாரம். ஏழாவதாக முழுமனிதனாக இராமாவதாரம். எட்டாவதாக குறும்பு செய்யும் மனிதனாக கிருஷ்ணாவதாரம். ஒன்பதாவது விவசாயம் பார்க்கும் மனிதனாக பலராமவதாரம். &lt;br /&gt;&lt;br /&gt;டார்வினுக்கு இந்து மதத்தில் உள்ள 10 அவதாரங்களைத் தெரிய வாய்ப்பு இல்லை.  ஆரம்பத்தில் உயிரனங்கள் தண்ணீரில் தோன்றியது. பிறகு அதே உயிரினம் தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் தகுதி பெற்றது. அதன் பிறகு நிலத்தில் வாழும் விலங்குகள். அடுத்து படிப்படியாக அந்த விலங்குகள் வளர்ச்சி பெற்று குரங்காகி அதிலிருந்து மனிதன் தோன்றினான்.  மீனில் ஆரம்பித்து 5-வது அவதாரமாக வருவது வாமன அவதாரம். நான்கு அவதாரங்களை அடுத்து விடுபட்ட இந்த குள்ளமான வாமன அவதாரம்தான் - ''மிஸ்ஸிங் லிங்க்'' என்பது உயிரின வளர்ச்சிப் படிகளில் அடிக்கடி உபயோகிக்கப்படும் ஒரு சொல்.  குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று விஞ்ஞானம் ஒப்புக் கொண்டாலும் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த&lt;span style="font-weight:bold;"&gt; மிஸ்ஸிங் லிங்க் &lt;/span&gt;எதுவென்று விஞ்ஞானிகள் அவ்வப்போது தலையை பிய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைப் பார்த்தால் விடுப்படவில்லை என்பது தெளிவாகுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/dwarf.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;சமீபத்தில் அதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால் நம்புவீர்களா ? ஆம் கடந்த அக்டோபர் மாதம் விஞ்ஞானிகள் குள்ள மனிதனின் எலும்புக்கூடுகளை இந்தோனேஷியாவில் கண்டுபிடித்துள்ளார்கள்.  இந்த மனிதனின் உயரம் மூன்று வயது குழந்தையின் உயரம்.  இவர்கள் மண்டை ஓடுகள் ஒரு சாத்துக்குடி அளவே இருப்பதாக படங்கள் காட்டுகிறது. இந்த மனிதன் 18,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் கண்டுபிடிக்கபட்ட இடத்தில் கல்லினாலான ஆயுதங்கள், மற்றும் மிருகங்களின் எலும்புகூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனிதனுக்கு&lt;span style="font-style:italic;"&gt; Hobbit&lt;/span&gt; என்று பெயர் வைத்துள்ளார்கள். (Lord of the Rings என்ற படத்தில் வரும் குள்ள மனிதனின் பெயர் )&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ்ஸிங் லிங்க் கிடைத்துவிட்டதா ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.&lt;br /&gt;படங்கள் உதவி: NASA&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;References : &lt;/span&gt;&lt;br /&gt;அச்ச ரேகை, தீர்வு ரேகை - டாக்டர் எம்.பி.இராமன், ஜூனியர் விகடன்&lt;br /&gt;இலக்கியத்தியல் அறிவியல் - சிங்கை கிருஷ்ணன் &lt;br /&gt;http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2004/10/28/DWARF.TMP&lt;br /&gt;http://news.nationalgeographic.com/news/2004/10/1027_041027_homo_floresiensis.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111336623166198504?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111336623166198504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111336623166198504&amp;isPopup=true' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111336623166198504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111336623166198504'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/04/blog-post_13.html' title='தசாவதாரம் -  தி மிஸ்ஸிங் லிங்க்'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111312493674192061</id><published>2005-04-10T14:40:00.000+05:30</published><updated>2005-04-10T14:59:39.276+05:30</updated><title type='text'>திருமெய்யம்</title><content type='html'>"இன்னிக்கு கடைசி நாள் எதாவது நல்லாதா எழுது" என்றது வேதாளம்&lt;br /&gt;"போன மாசம் திருமெய்யம் போனேன் அதை பற்றி எழுதவா ?" என்றான் விக்கிரமாதித்தன்.&lt;br /&gt;"எதையாவது புரியும்படியாக எழுது" &lt;br /&gt;"சரி பார்க்கிறேன்" என்ற விக்கிரமாதித்தன் திருமெய்யம் பற்றி எழுத ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;* - *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்&lt;br /&gt; கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட&lt;br /&gt; மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்&lt;br /&gt; கையானை கைதொழாக் கையல்லகண்டாமே.”&lt;/strong&gt;&lt;em&gt;(பெரிய திருமொழி, 2016, 11-7-5)&lt;/em&gt;என்று திருமங்கையாழ்வார் பாடிய திருமெய்யத்திற்கு திருச்சியிலிருந்து பேருந்தில் சென்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த நூற்றெட்டுத் திருப்பதிகளில் ஒன்றாக விளங்குகிறது. திருச்சி - புதுகோட்டை - காரைக்குடி சாலையில் புதுகோட்டையிலிருந்து தெற்கே 20கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருமெய்யம் ஒரு கிராமும் கிடையாது, நகரமும் கிடையாது. இது ஒரு சிற்றூராட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;திருமெய்யம் என்ற பெயர் திருமெயம் என்று மருவி வழங்கப்படுகின்றது ( டாக்டர் ர.பி.சேதுபிள்ளை, புதுகோட்டை கல்வெட்டுக்கள் எண் 340, காலம் 1256). கோயிலில் உள்ள பெருமாள் பெயர் திருமெய்யன் அதனால் இவ்வூருக்கு திருமெய்யம் என்ற பெயர் வரலாயிற்று. (தனியாகு பெயர் ). திருவரங்கத்தில் எழுதருளியிருக்கும் பெருமாளுக்கோ அவன் எழுந்தருளியுள்ள இடம் அரங்கமாக ஆற்றினிடையில் அமைந்திருந்ததால் இடத்தின் பெயரால் அரங்கன் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. (இடவாகுபெயர்). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/thirumayam_sivantemple.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;திருமெய்யம் குன்றின் செங்குத்தான தென்முகச்சரிவில் சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை குகைகோயில்கள் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று அறுபதுதடி தூரத்தில் அமைந்துளது. இங்கு ஒரு காலத்தில் ஒரு வழியாகவே சிவனையும், திருமாலையும் தரிசிக்கும் படியாகத்தான் சந்நிதிகள் அமைந்திருந்தன. ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட சமயச்சச்சரவுகள் காரணமாக தொன்மையான சிறப்புமிக்க பரதநாட்டியத்தின் நுணுக்கங்களைத் தெரியபடுத்தும் திருமெய்யத்துக் கல்வெட்டுக்கள் சிதைத்து அவற்றின் மேலேயே ஹொய்சள நாட்டுத்தளபதி அப்பன்னா சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையில் சமரசம் செய்து வைத்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டுக்கள் இருக்கிறது. இன்று சந்நிதிகளுக்கு நடுவில் ஒரு மதில் சுவர் நிர்மாணிக்கப்பட்டு சிவன், விஷ்ணு கோயில்கள் தனித்தனியாக விளங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கிபி 630-688ல் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது தான் திருமெய்யம். கருவரையுடன் கூடிய குடைவரைக் கோவிலை மட்டும் தான் பல்லவர்கள் கட்டியுள்ளார்கள். அங்கு உள்ள சத்திய மூர்த்திப் பெருமாள் கோயில் முழுவதும் படிபடியாக பலரால் பிற்காலத்தில் சோழர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், விஜய நகர அரசர்கள், நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முதலானோர்கள் பல நிலைகளில் இக்கோயிலை கட்டியுள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/thirumayam_pallikondaperuma.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;குடைவரை கோயிலில் ஐந்து தலைகளை உடைய ஆதிசேஷன் மீது சயனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். காலடியில் பூமாதேவி, மார்பினில் திருமகள், இடமிருந்து வலமாக கருடன், தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலதுகோடியில் மது,கைடபன் முதலான அரக்கர்கள் என அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர கோயில் சுவற்றில் சூலக் குறிகளால் ஆதிசேஷன் அக்கினி ஜூவாலைகள் அசுரர்களை தாக்குகிறது. ஆராயவேண்டிய சிற்ப்பங்கள். இவை தவிர, கானப்பறை, பேரிகை, சல்லிகை, தக்கை, தண்ணுமை தடாகமும், தடாரி, உடுக்கை, கிடக்கை, கரடிக்கை முதலான பண்டைக்கால கருவிகளும் மலையில் வடிக்கப்பட்டுள்ளன!.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு உள்ள பெருமாள் பெரிய திருமேனியுடன் முப்பது அடிநீளத்தில் ( அரங்கநாதனை விட பெரிய திருமேனி) காட்சியளிக்கிறார். &lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/thirumayam_sathyapushkarani.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;நூற்றெட்டுத் திருப்பதிகளில் திருவெள்ளரையும், திருமெய்யமும் தீர்த்தங்களால் தனிச் சிறப்புப் பெற்றவைகளாகும். திருவெள்ளரையில் உள்ள ஸ்வஸ்திக் குளம் நான்கு துறைகளுடன் கூடியது குளிப்பவர்கள் பார்க்க முடியாது. திருமெய்யம் சத்திய தீர்த்தத்தின் சிறப்போ தாமரை மலர் தோற்றத்தில் எண்கோண வடிவில் எட்டுத்துறைகளுடன் கூடியதாகும். &lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோயிலுக்கு மேல் இருக்கும் கோட்டை ஒரு சின்ன குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்த கோட்டை ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஊமையன் வீரப்பாண்டிய கட்டபொம்மனின் தம்பி. இந்த கோட்டை ராமனாதபுரம் இரகுநாத சேதுபதியால்(1678) கட்டப்பட்டது. பிறகு(1728) தன் மாமன் இரகுநாத ராயத் தொண்டைமானுக்கு கொடுக்கப்பட்டது.  இந்த கோட்டை ஏழு பிரகாரங்களை கொண்டவை. கடைசி பிரகாரம் தற்போது குப்பை தொட்டியாக பயண்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/thirumayam_fort.jpg" alt="Image hosted by Photobucket.com" align="right"&gt;இவ்வளவு பழமைவாய்ந்த கோயிலுக்கு செல்லும் வழியில் "ஷாருக்கான் ரசிகர் மன்றம்" என்ற பலகை இருப்பது விந்தை. திரும்பி வரும் போது பேருந்தில் சரத்குமார் நான்கு வேடத்தில்  நடித்த "நாட்டாமை"  படம் பார்த்துக்கொண்டு வந்தேன்(பேருந்தில் இரண்டு டிவி). "நாட்டாமை தீர்ப்பை மாற்றி எழுது" என்று வில்லன் கூறியவுடன் நான் இறங்கும் இடம் வந்தது. சுவாரசியமான படம்தான். நாட்டாமை - NOTஆமை.&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் உதவி: http://www.pudukkottai.org&lt;br /&gt;&lt;br /&gt;* - * &lt;br /&gt;"கேள்விகள் எதாவது உண்டா ? " என்றான் விக்கிரமாதித்தன்&lt;br /&gt;"இன்னிக்கு தப்பிச்சே, கேள்விகள் கிடையாது, ஆனால் கூடிய சிக்கிரம் சந்திப்போம்" என்றது வேதாளம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: &lt;br /&gt;நட்சத்திரபதிவாக தேர்ந்தெடுத்த காசிக்கும்.&lt;br /&gt;டைம் இல்லை என்ற பொய்யை நம்பிய மதிக்கும்,&lt;br /&gt;வேதாளம் போல் முருங்கை மரம் ஏரிய பிளாக்கருக்கும்,&lt;br /&gt;என் கட்டுரைகளை படித்த அனைவருக்கும், &lt;br /&gt;படித்து தவராமல் '-' வாக்குகள் போட்டு என் தெனாவெட்டை அடக்கிய சிலருக்கும்&lt;br /&gt;என் ஸ்பெஷல் நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111312493674192061?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111312493674192061/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111312493674192061&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111312493674192061'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111312493674192061'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/04/blog-post_10.html' title='திருமெய்யம்'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111301517248230162</id><published>2005-04-09T08:22:00.000+05:30</published><updated>2005-05-12T13:30:29.480+05:30</updated><title type='text'>அட நாம இப்படித்தான்</title><content type='html'>"நீ கேள்வி கேட்பதும், அதற்கு நான் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதும் இன்னும் எத்தனை நாளைக்கு" என்றான் விக்கிரமாதிதன்.&lt;br /&gt;"இன்னும் இரண்டு நாளக்கு, அது வரை கொஞ்சம் 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கோ" என்றது வேதாளம்&lt;br /&gt;"அட்ஜஸ்டா ?" &lt;br /&gt;"அது என்ன கெட்ட வார்த்தையா ? நான் சொல்லக் கூடாதா?" &lt;br /&gt;"கெட்ட வார்த்தை இல்லை, எப்போதும் கேட்கும் வார்த்தை" என்ற விக்கிரமாதித்தன் தொடர்ந்து எழுத ஆரம்பித்தான்.&lt;br /&gt;* - * &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அட நாம இப்படித்தான்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியர்கள் என்று நம்மை அடையாளம் காட்டுவது எது ? நம்முடைய பாரம்பரியமா ? சமயமா  ? என்றால் கிடையாது. நம்முடைய தினப்படி நடவடிக்ககைகள் தான் நம்மை இந்தியர்கள் என்று அடையாளம் காட்டுகிறது. சிலவற்றை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய பல நடவடிக்கைகள் conserve and recycle முறையினாலானது. சிக்கனமாக இருப்பதை பெருமையாக நினைத்துக்கொள்கிறோம். நம்முடைய உபதேசங்கள், பாடல்கள் பலவற்றில் நம்முடைய ஆசைகளை விட்டுவிட உபதேசிக்கின்றன(உத: பஜகோவிந்தம்-2 பாடல்). நாம் மகிழ்ச்சியையும் செலவையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/plant.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;இதற்கு பல உதாரணங்கள் கூறலாம்.  பழைய துணி, பாத்திரங்களை விற்று புது பாத்திரங்களை வாங்குகிறோம். காலி டப்பாகளில் ரோஜா வளர்க்கிறோம். எப்பாவாது உபயோகப்படும் என்று பரணில் குப்பைகளை அடைத்து வைக்கிறோம். பெப்ஸி குடித்துவிட்டு அந்த பாட்டிலை வாட்டர் பாட்டிலாக உபயோகிக்கிறோம். செல் போன் மீட்டர் ஏறாமல் இருக்க உங்கள் நண்பருக்கு "மிஸ்ட் கால்" குடுக்கிறீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;புதிய பூப்போட்ட டிசைன் சோஃபா செட்டை வாங்கியவுடன், அழுக்காகாமல் இருக்க ஒரு துணியை போட்டு முடி விடுகிறோம். அது அழுக்காமல் இருக்க அதன் மேல் உட்காராமல் பாயில் உட்காருகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/degree.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;படிப்பு நமக்கு ரொம்ப முக்கியம். அது நமக்கு ஒரு பாஸ்போர்ட் போல். நம்முடைய பெயர் பலகையில் பெயருக்கு பின்னால் நாம் என்ன படித்தோம் என்பதை போட்டுக்கொள்வோம். டிப்ளமோ, பக்கத்து தெரு இன்ஸ்டிட்யுடில் கொடுத்த டிகிரி என்று எதையும் விட்டுவைப்பதில்லை. தற்போது எந்த படிப்பு மார்க்கெட்டில் முதலாவது இருக்கிறதோ அதற்கு மதிப்பு கொடுக்கிறோம். பெண்ணுக்கு US மாப்பிள்ளையை பார்க்கிறோம். USக்கு போனவுடன் அதை பல பேரிடம் சொல்லி மகிழ்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைக்கிறோம். அமெரிக்கா போனவுடன் தான் தமிழ் பற்று வருகிறது. பக்கத்து வீட்டுக்காரர் தன் பிள்ளைகளை டான்ஸ் கிளாசில் சேர்த்திருக்கார் என்று நாமும் சேர்க்கிறோம். குழந்தைகளின் ஆசையை நாம் கேட்பதே கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;அழகாக இருக்கும் குழந்தைக்கு திருஷ்டி பொட்டு வைக்கிறோம். காருக்கு முன்னாடி எலுமிச்சம் பழத்தை தொங்கவிடுகிறோம். நல்ல செய்தியை கண்பட்டுவிட போகிறது என்று மறைக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;பணம் செலவு செய்யாமல் அந்தராக்ஷரி விளையாடுகிறோம். பஜனை/ஐய்யப்பா பாடல்களை "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா" டியுனில் கேட்கிறோம். யாராவது தெருவில் சண்டை போட்டால் நின்று நிதானமாக வேடிக்கை பார்க்கிறோம். செந்தில் கவுண்டமணியிடம் அடி வாங்கும் போது ரசித்து சிரிக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் செய்து முடிக்க முயற்சி செய்கிறோம். எல்லா வகை உணவையும் ஒரே பிளேட்டில் தாலி என்று சாப்பிடுகிறோம். ஆக்ஷன், காமெடி, பாட்டு என்று எல்லாவற்றையும் ஒரே படத்தில் பார்த்துக் ரசிக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/spit.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;எங்கு சென்றாலும் நாம் நமது அடையாளங்களை விட்டுவிட்டு செல்கிறோம். லிப்ட், பொது கழிப்பிடங்கள் என்று. நம் அடையாளங்கள் இரண்டு - ஒன்று துப்புவது, மற்றொன்று கிறுக்குவது. காந்தியடிகள் ஒரு முறை - நாம் எல்லோரும் சேர்ந்து துப்பினால் இங்லாந்து முழ்கிவிடும் என்றார். ஆனால் இன்றோ எல்லோரும் துப்பினால் பல கண்டங்கள் மூழ்கிவிடும். Dr. பி.ஸ் விவேக் துப்புவதில் ஒரு சின்ன ஒரு ஆராய்ச்சியோ செய்துள்ளார் - மும்பையில் உள்ள 10% மக்கள் துப்பினால் அது வருடத்திற்கு ஐந்து லட்சம் லிட்டர் எச்சில் ஆகிறது. இதை கொண்டு மும்பையை 58 முறை முழ்கடிக்கலாம். சீ.சீ தூ.&lt;br /&gt;&lt;br /&gt;பொது இடங்கள், பஸ் சீட்டுக்கு முன், கழிப்பிடங்கள் எல்லாவற்றிலும் "I Love ...." அல்லது, ஆண்-பெண் அசிங்கமான படம், அல்லது அட்லீஸ்டு ஒரு கெட்டவார்த்தை என்று கிறுக்கப்பட்டிருக்கும். காலி இடம் நம் கண்ணை உருத்தும். &lt;br /&gt;&lt;br /&gt;காம்பெவுண்ட் சுவற்றில் பிள்ளையார், காளி, ஏசுநாதர், ஒரு மசூதி என்று வரைந்து வைத்திருப்பார்கள். பக்தியினால் கிடையாது. நாம் மதில் சுவற்றில் ஒண்ணுக்கு அடிக்க கூடாது என்பதற்காக. &lt;br /&gt;&lt;br /&gt;பாபருக்கு வேண்டும் மசூதி&lt;br /&gt;ராமருக்கு வேண்டும் கோயில்&lt;br /&gt;ஜனங்களுக்கு வேண்டும் &lt;br /&gt;சுகாதாரமான கழிப்பறைகளேனும் &lt;br /&gt;(நன்றி: மனுஷ்ய புத்திரன் )&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வரும் விருந்தாளி நீங்கள் செய்த ஸ்வீட்டை விரும்பி சாப்பிடுகிறார். அவர் வீட்டுக்கு கொஞ்சம் பார்சல் வேண்டும் என்கிறார். நீங்கள் அவருக்கு உங்கள் வீட்டுல் உள்ள விலையுயந்த டப்பர்வேரில் கொடுக்காமல் ஒரு சாதாரன பிளாஸ்டிக் டப்பாவை தேர்ந்தெடுத்து அதில் தான் கொடுப்பீர்கள். நிறைய செய்திருந்தாலும் வீட்டில் வேலை செய்பவருக்கு அடுத்த நாள் அது கெட்டுபோக இருபது செகண்ட் இருக்கும் போது தான் கொடுக்க மனசு வரும். &lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் மார்கெட் சென்றால் எக்ஸ்டரா கேரிபேக் எடுத்து வந்து குப்பை தொட்டிக்கு உபயோகிப்பீர்கள். கிப்ட் வந்தால் ஜிகினா பேப்பரை கிழிக்காமல் எடுத்து வைத்துக்கொள்வீர்கள். பக்கத்து வீட்டு மாமி தீபாவளிக்கு கொடுத்த பளவுஸ் பிட்டை எதிர்த்த வீட்டு மாமிக்கு கார்த்திகைக்கு கொடுப்பீர்கள். ஏரோப்பிளேனில் கொடுக்கும் பொருட்களை தவறாமல் வீட்டுக்கு எடுத்து வருவீர்கள். (கொடுத்த காசுக்கு இது கூட எடுக்கவில்லை என்றால் எப்படி என்று சமாதனம் சொல்லிக்கொள்வீர்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;பிளாஸ்டிக் என்றால் நமக்கு தனி மோகம். கார் வாங்கினால் அதன் சீட்டின் மேல் இருக்கும் பிளாஸ்டிக் பேப்பரை பிரிக்கமாட்டோம். மற்றவர்களுக்கு அது புதிய கார் என்று எப்படி நம்பவைப்பது.  ஃபிரிட்ஜ் பாக்கிங் காகிதத்தை எடுத்து பத்திரப்படுத்தி அதில் வடாம் காய உபயோகிப்போம். வெளிநாட்டு பொருட்களில் வரும் பிளாஸ்டிக் காகிதத்தை பத்திரபடுத்திவைப்போம். நம் செல் போன்களுக்கு பிளாஸ்டிக் சட்டை போடுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன நடிக்கிறார்கள் ? என்ன கதை ? என்ன லாஜிக் ? என்று சினிமாவை குறை கூறிக்கொண்டே பிளாக்கில் டிக்கேட் வாங்கி படம் பார்போம், அல்லது திருட்டு விசிடிக்கு அலைவோம். சீரியல்களை குறைக்கூறிக்கொண்டு, ஆபிஸிலிருந்து லேட்டாக வந்து மனைவி/அம்மாவிடம் சாப்பிடும் போது 'இன்று என்ன நடந்தது" என்று கேட்டு தெரிந்துக்கொள்வோம். வெள்ளிக்கிழமை மனைவி கோவிலுக்கு அழைக்கும் போது தலைவலி என்று சாக்கு சொல்லி, F டிவி பார்ப்போம். டிவியில் வரும் ஆணுரை விளம்பரத்தை பார்த்து முகம் சுளிப்போம். ஆனால் ஷக்கிலாவையும், மும்தாஜையும் நடு இரவில் நினைபோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/adjust.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;ஒரு இந்தியன் அட்ஜஸ்ட் என்ற வார்த்தையை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சொல்கிறான். இந்த ஆங்கில வார்த்தை தற்போது எல்லா இந்திய மொழிகளிலும் சாதாரணமாக உபயோகிக்கப்படுகிறது. "சொல்ப அட்ஜஸ்ட் மாடி", "தோடா அட்ஜஸ்ட் கரோ", "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கோ" போன்ற வார்த்தை நாம் தினமும் கேட்பது. அட்ஜட் என்ற வார்த்தையே நம் எல்லா அகராதியிலும் அட்ஜஸ்ட் செய்து இடம் பெற்றிறுக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பஸ்சில் ஒருவர் காலை மிதித்தால், ஃபுட்போர்டில் தொங்கி பஸ்சிற்குள் செல்லும் போது, தூங்கி பக்கத்து சீட்டில் இருப்பவர் மேல் சாயும் போது, டிரேயினில் உட்கார இடம் கேட்கும் போது, ரசத்தில் உப்பு அதிகமாக இருக்கும் போது, ஹோட்டலில் சாம்பார் இல்லாத போது, பார்கிங்கில் இடம் கிடைக்காமல் பக்கத்தில் இருக்கும் காரின் கண்ணாடியை மடக்கிவிட சொல்லும் போது,&lt;br /&gt;மாமியாரால் சித்திரவதை பட்டு பிறந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு அம்மா கூறும் அறிவுரை "நீ தான் கொஞ்சம் அவர்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்'. சினிமா வில்லன் "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே உன்னை ராணி போல் வைத்துக்கொள்வேன் இல்லை... " என்று சகட்டுமெனிக்கு நாம் தினமும் அட்ஜஸ்ட் என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஜஸ்டிஸ் M.C.ஜெயின் ஒரு முறை கொஞ்சம் கடுப்பாகி "I think I am adjusting too much" என்றார். டைம்ஸ் (செப் 27 பதிப்பில்) இந்திய அதிகாரி ஒருவர் "India would offer to "adjust" the Line of Control by a matter of miles" என்று சொன்னதாக குறிப்பிடபட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அழைப்பு மணிகள்&lt;br /&gt;வேலை செய்யாவிட்டாலும் &lt;br /&gt;வந்த யாரும் திரும்பிப் போனதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;குளியலறைக்கு தாழ்ப்பாள் இல்லாத &lt;br /&gt;இந்த ஒன்றரை வருடத்தில் &lt;br /&gt;யாருடைய அந்தரங்கத்திற்கும்&lt;br /&gt;அபாயம் நிகழ்ந்துவிடவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;நாற்காலியின் ஒடிந்த கால்&lt;br /&gt;சிறு சமன் குலைவுக்கு மேல்&lt;br /&gt;விருந்தாளிக்கு &lt;br /&gt;எந்த அவமதிப்பையும் ஏற்படுத்தாது&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரமாய் &lt;br /&gt;பிரேக் சரியில்லாத வாகனத்தில்தான்&lt;br /&gt;கடந்து திரும்புகிறேன்&lt;br /&gt;தெய்வம் துணையிருக்கும் இந்த நகரத்தை&lt;br /&gt;&lt;br /&gt;அடிவயிற்றின் இடப்பக்க வலி&lt;br /&gt;இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.&lt;br /&gt;குறிப்பிட்ட கோணத்தில் கொஞ்சம்படுத்துக் கொண்டால் &lt;br /&gt;சமாளித்துக் கொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;எலா இடத்திலும் &lt;br /&gt;சீர்படுத்த வேண்டியை ஏராளம்&lt;br /&gt;என்றாலும் சிக்கலற்றது &lt;br /&gt;தமிழ் வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி: மனுஷ்ய புத்திரன் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/garbage.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;குப்பை போடுவதில் நாம் வல்லவர்கள். அதில் பலவிதம். அபார்ட்மெண்டில் வாழ்பவர்கள், குப்பையை விட்டிலிருந்து பால்கனிக்கு எடுத்து செல்வார்கள் பிறகு நியூட்டனின் புவியிற்ப்பு சக்தி மற்றவற்றை பார்த்துக்கொள்ளும். பால்கனியில் தலை வாரும் பெண்கள், சீப்போடு வரும் தலைமயிரை சுருட்டி கீழே போடுவார்கள். அது அடுத்த பால்கனியில் விழும். இது வருடத்தின் 365 நாட்களும் நடக்கும் (இதில் லீப் இயரும் அடங்கும்). காரில் போகும் போது, பிரிட்ஜ் அல்லது மேம்பாலம் வந்தால் சிப்ஸ் பாக்கேட், சாக்கிலேட் பேப்பர் போன்றவற்றை தூக்கி போட நாம் குழந்தைகளை பழக்குகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/child.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;பப்பு, டிங்கு, குக்கூ, டோலி, டிட்டு, குட்டு, ஜில்லு, கிச்சு, சேச்சு என்ற வார்த்தைகள் அகராதியில் இல்லை ஆனால் அவற்றை தினமும் நாம் உபயோகிக்கும் வார்த்தைகள். குழந்தைகளை கூப்பிடும் பெயர்கள். இது எப்படி ஒரு குழந்தைக்கு வைக்கபடுகிறது என்று யாராவது ஆராயலாம். கிருஷ்ணா - கிச்சாவகவும், சேஷாத்திரி 'சேச்சு'வாதும் எழுதப்படாத விதி. &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய பழைய கம்பெனியின் CEOவுடன் ஒரு முறை தாஜ் ஹோட்டலுக்கு லஞ்சுக்கு சென்றிருந்தோம். அப்போது எங்கள் CEOவின் நெருங்கிய நண்பர் அவரை "ஏய் டிங்கு இங்க எப்படி" என்று அவரை அழைத்தார். எங்கள் CEO முகத்தில் ஒரு வேதனை கலந்த புன்னகையை பார்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/bargain.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;பேரம் பேசுதல் என்பது நம் பிறவி குணம். பெண்கள் இதில் வல்லவர்கள். பூக்காரி, கீரைக்காரி, துணிக்கடை என்று எதையும் விட்டுவைக்கமாட்டார்கள். சில கடைகளில் "Fixed Price" என்று போட்டப்பட்டிருந்தாலும் நாம் பேரம் பேசுவோம். சரவண பவனில் 60 ரூபாய்க்கு ஃபிரைட்ரைஸ் சாப்பிடுவோம், ஆனால் வேளியே பார்க்கிங்கில் இரண்டு ரூபாய்க்கு சண்டை போடுவோம்.  ஒரு முறை என் நண்பனும் நானும் அமெரிக்காவில் ஒரு கடைக்கு சென்றிருந்தோம். என் நண்பன் ஒரு பொருளை எடுத்து இதை $2 க்கு கொடுக்க முடியுமா என்றான். கடைக்காரர் அந்த பொருளை அவனுக்கு இலவசமாக கொடுத்தார். அது தான் அவன் கடைசியாக பேரம் பேசியது. &lt;br /&gt;&lt;br /&gt;முழம் மூன்றுரூபாய் என்று &lt;br /&gt;தௌதவாகச் சொன்னாள் அவள்&lt;br /&gt;இரண்டரை ரூபாய் வீதம்&lt;br /&gt;இரண்டு முழம் கொடு&lt;br /&gt;தெள்ளத் தெளிவாகச் சொன்னேன் நான்&lt;br /&gt;மூன்று நிமிடங்களுக்கும்&lt;br /&gt;மேலாகநீண்டு கொண்டு போனது&lt;br /&gt;முழம் மூன்று ரூபாய்க்கான&lt;br /&gt;அவளது நியாயங்களும்&lt;br /&gt;இரண்டரை ரூபாய்க்கான&lt;br /&gt;எனது விளக்கங்களும்&lt;br /&gt;இறுதியாகஐந்தரை ரூபாய்க்கு&lt;br /&gt;இரண்டு முழம் பூவை&lt;br /&gt;சுருட்டிக் கொடுத்துவிட்டு&lt;br /&gt;இரண்டி அடிக்கு அப்பால்&lt;br /&gt;இயல்பாகத்தான் துப்பினாள்&lt;br /&gt;வெற்றிலை பாக்கு எச்சிலை&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும்&lt;br /&gt;சந்தேகமாகத்தானிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;ஷோரூம்காரன்&lt;br /&gt;சொன்ன விலைக்கு&lt;br /&gt;நான்செருப்பு வாங்கி அணிவதை&lt;br /&gt;பார்த்திருப்பாளோ அந்த பூக்காரி?&lt;br /&gt;(நன்றி: ஜெய பாஸ்கரன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/recommendation.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;நாம் Letter Head வைத்துக் கொள்வதே ரெகமண்டேஷன் எழுதுவதற்குத் தான். பாஸ்போர்ட், ரெயில்வே டிக்கெட், காலேஜில்/ஸ்கூல் சீட், போலிஸ் கேஸ், வேலைக்கு, சாக்கடை அடைப்புக்கு, வண்டி லைசன்ஸ் என்று எல்லாவற்றிருக்கும் இதை உபயோகிக்கிறோம். இந்திய கிரிக்கெட், அரசியல், சினிமா சென்சார் என்று இதில் எதையும் வீட்டுவைக்கவில்லை. ஏன் நம் குழந்தைகளே எதாவது வேண்டுமானல் அம்மவிடம் ரெகமெண்டேஷனுக்கு செல்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;டிராபிக் சிக்கினலில் மஞ்சள் கலர் மாறியவுடன், உடனே ஹார்ன் அடித்து முன்னால் இருப்பவருக்கு BPயை ஏற்றுவோம், அவர் திரும்பி பார்த்தால் நாம் வேறு எங்காவது திரும்பிக்கொள்வோம் அல்லது மேலே பறக்கும் காக்காயை ரசிப்போம்.  &lt;br /&gt;&lt;br /&gt;லேட்டாக வருவது என்பது நமக்கு ஒரு ஃபேஷன். அரசியல் விழாக்களில் தலைவர் லேட்டாகத்தான் வருவார். "இதோ வருகிறார், இதோ வருகிறார்" என்று ஸ்பீக்கரில் அலரிக்கொண்டேயிருக்கும். கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டுக்கார்கள் லேட்டாகதான் வரவேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு மரியாதை. கவர்மெண்ட் ஆபிஸில் காலை ஒன்பது மணிக்கு போய் எப்ப சார் ஆபிஸரை பார்க்கலாம் என்றால் பியூன் நம்மை ஒரு மாதிரி பார்பார். ஏன் சினிமாவில் கூட போலிஸ் லேட்டாகத்தான் வரும். &lt;br /&gt;&lt;br /&gt;எதையும் போட்டு குழப்பிக்கொள்வோம். ஆகஸ்ட் 15 சுதந்திர தினமா, குடியரசு தினமா?. ஜார்கண்டில் சிபுசோரனா ? சிம்ரனா ?&lt;br /&gt;சினிமாவில் அரசியலும், அரசியலில் சினிமாவையும் போட்டு குழப்பிக்கொள்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஜாதி இருக்க கூடாது என்று சொல்லிக்கொள்வோம். ஆனால் மேட்ரிமோனியலில் ஜாதியின் பெயரை ஸ்பெலிங் மிஸ்டேக் இல்லாமல் கொடுப்போம். யாரையாவது திட்ட வேண்டும் என்றால் ஜாதியின் பெயரை உபயோகிப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;தேவ பாஷையில் &lt;br /&gt;தேர்ச்சி மிக்க சாஸ்திரி ஒருவர்&lt;br /&gt;சபையில் சொன்னார்;&lt;br /&gt;"ஜாதி வேண்டும்"&lt;br /&gt;"ஜாதி வேண்டும்:"&lt;br /&gt;&lt;br /&gt;உடனே சீறி &lt;br /&gt;ஒரு தமிழ் மறவர்&lt;br /&gt;ஓங்கிக் கத்தினார்;&lt;br /&gt;"ஓய் ஓய், இனிநீர் &lt;br /&gt;ஜாதி வேண்டும்&lt;br /&gt;என்றால் பொருமையாய்&lt;br /&gt;இருக்க முடியாது என்னால்&lt;br /&gt;சரியாய்ச்&lt;br /&gt;சாதி வேண்டும்&lt;br /&gt;என்றே சாற்றும்"&lt;br /&gt;(நன்றி: மீரா)&lt;br /&gt;&lt;br /&gt;வெளி வேஷத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்போம். நாம் கருப்பாக இருந்தாலும் நமக்கு அமையும் மனைவி சிகப்பாக இருக்க வேண்டும். நன்றாக டிரஸ் செய்து கொள்வோம் ஆனால் உள்ளே கிழிந்த பனியன் போட்டுக்கொள்வோம். வரவேற்பறையில் சுவாமி விவேகானந்தர், ரமண மகரிஷி புத்தகங்கள், டாய்லட்டில் குமுதம் நடுப்பக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/rules2.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;சமயத்துக்கு தகுந்தார் போல் rulesயை மாற்றிக்கொள்வோம். காலில் போப்பரை மிதித்தால் சரஸ்வதி என்று கண்ணில் ஒற்றிக்கொள்வோம், அமெரிக்கா சென்றவுடன் டாய்லட் போனவுடன் டிஸ்யூ பேப்பரால் துடைத்து போடுவோம். ராத்திரி பத்து மணிக்கு மேல் ஒன்வேயில் போவோம். க்யூக்களை மீறுவோம். ஆர்.டி.ஓ, கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணம் கொடுத்து சலுகைகள் வாங்குவோம். &lt;br /&gt;&lt;br /&gt;லஞ்சம் என்பது கடவுளிடமிருந்து ஆரம்பிக்கிறது. பரிட்சையில் பாஸ் செய்தால் தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய். கொஞ்சம் கடினமான காரியம் என்றால் திருப்பதி  வேங்கடாசலபதிக்கு உங்கள் சம்பளத்தில் ஒரு பங்கு கமிஷன் என்று லஞ்சத்தை கடவுளிடமிருந்து ஆரம்பிக்கிறோம். இதை நம் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக யோசித்துப் பார்த்தால் இது எல்லாம் நாம் கலாச்சார வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கின்றன. பிரச்சனைகளை தவிர்ப்பதை விட அதனோடு வாழ்ப் பழகிக் கொள்வது நமக்கு சிக்கலற்றதாகிறது. இந்தியாவில் உள்ள பிரச்சினைகளுக்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட் மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ புரட்சி வந்திருக்கும். விட்டுக் கொடுத்தலும் சமாதான சக வாழ்வும் இந்தியர்களின் தன்மையாகிறது. நாம் ஒவ்வொருவரிடமும் பல நல்ல மற்றும் சில கொல்ல வேண்டிய குணங்கள் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;* - * &lt;br /&gt;"நீ நல்லவனா? கெட்டவனா ?" என்று நாயகன் கமல் ஸ்டைலில் கேட்டது வேதாளம்&lt;br /&gt;"கடவுள் பாதி மிருகம் பாதி" என்றான் விக்கிரமாதிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;Week பத்திரிக்கையில் வந்த கட்டுரையை தழுவி எழுதியது. படங்கள் உதவி: The Week.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111301517248230162?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111301517248230162/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111301517248230162&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111301517248230162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111301517248230162'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/04/blog-post_09.html' title='அட நாம இப்படித்தான்'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111295116647116242</id><published>2005-04-08T14:35:00.000+05:30</published><updated>2005-04-08T14:40:47.436+05:30</updated><title type='text'>Blog, Email, Phone, SMS</title><content type='html'>"இன்னிக்கு என்ன எழுதப்போற" என்றது வேதாளம்&lt;br /&gt;"இன்னிக்கு திரு.ராமசாமி பற்றி எழுதப்போறேன்" என்றான் விக்கிரமாதித்தன்.&lt;br /&gt;"என்ன ? திரும்பவும் ராமசாமியா ? ஜாக்கிரதை" என்று எச்சரித்தது வேதாளம்&lt;br /&gt;"அட இது வேற ராமசாமிப்பா" என்ற விக்கிரமாதித்தன் மேற்கொண்டு எழுத ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;* - *&lt;br /&gt;&lt;strong&gt;Blog, Email, Phone, SMS.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நாளை திரு.ராமசாமி வீட்டுக்குப் போகிறேன். அவர் டையரியில் என் வலைப்பதிவை பற்றிய கருத்துக்களை எழுதியுள்ளாராம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Blog:&lt;/strong&gt;&lt;br /&gt;நான் வலைப்பதிவு ஆரம்பித்து சுமார் பத்து மாதம் ஆகிறது. &lt;a href="http://desikann.blogspot.com/2004_10_07_desikann_archive.html"&gt;'பெண்'களூர்&lt;/a&gt; பற்றி எழுதியவுடன் நிறைய பெண்கள் என் பக்கத்திற்கு வந்து பாராட்டிவிட்டு போனார்கள். அப்படி வந்தவர்களில் லதாவும் ஒருவர். பெங்களூர் வாசி. அவர் அப்பா பெயர் ராமசாமி. சொந்த ஊர் திருச்சி.&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என் வலைப்பதிவை படித்துவிட்டு அவர் எனக்கு அனுப்பிய ஈ-மெயில்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Email:&lt;/strong&gt;&lt;br /&gt;Dear Mr.Desikan,&lt;br /&gt;&lt;br /&gt;Namaskaram. My Name is Ramaswamy. I understand from my daughter Latha that you write articles in the Internet. I got the chance of reading your articles. God has gifted you with a very good writing skill. And I am also very happy to note that you have got this good opportunity to express your writing skills. I have read some of your articles, ones that come to my mind immediately is what you have written about your father, about Sujatha, your family and about SriRangam. I am from Trichy and reading your articles brought back nostalgic memories. Thank You! I do not know how to give my comments or compliments in the article. So I have written down my comments about your articles in a book. I take this opportunity to invite you to our home. Please visit us alongwith your family when you are free. There is one thing that I want to mention here. In your article about SriRangam, have you mentioned anywhere about Thulakanachiyar. I did not see any reference to it. I do not know if I have missed reading it. I am not very adept in using the computer. In this day of community fights and religion massacres, it is an important fact that even today in SriRangam, among all Aaazhvaars, Thulakanaachiyar, after Abishekam is first adorned with a Lungi and Vazhipaadu is also done in muslim style. I do not have all the facts with me. Maybe I am wrong too. But it will be highly appreciated if you can send me the right details about this, if you have not done this already. Children today do not evince much interest in our tradition and heritage and culture. When you find time, also write about Kumbakonam Oppiliyappan Temple. That temple town is also a treasure to research on.&lt;br /&gt;&lt;br /&gt;Please accept my respects and admiration for having attained a recognition from someone as great as Sujatha (Mr.Rangarajan). I am an ardent fan of Mr.Rangarajan and have been one of his millions of fans from the day he started writing. It is a pleasure to know someone like you, though not belonging to Mr.Rangarajan’s family, has access to his books. They say it takes one talent to recognize another. Whenever you speak to Mr.Rangarajan next, kindly tell him that I am a long time reader of his books and admire him a lot. Also convey my humble regards. Thank you.&lt;br /&gt;&lt;br /&gt;My sincere wishes to Mrs.Sujatha Desikan and your daughter Aandal. I suppose my daughter Latha must have told you that I wanted to name her Aandal. Owing to a lot of pressure from relatives and friends I had to name my daughter anything but Aandal. I do not know if I still regret it, but that time I thought it was not right to break so many hearts, importantly my wife’s, just to make myself happy. But I am very happy that your small child is called so. My blessings and wishes are with her.&lt;br /&gt;&lt;br /&gt;Sincerely,&lt;br /&gt;Ramaswamy.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இந்த ஈ-மெயில் வந்த அடுத்த வியாழன் லதா என்னை தொலைபேசியில் அழைத்தாள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Phone&lt;br /&gt;&lt;/strong&gt;"தேசிகன், This week'nd I will be in Chennai will you be available ?"&lt;br /&gt;"இருப்பேனே..."&lt;br /&gt;"I want to go to Booklands and Appa would also like to meet you.."&lt;br /&gt;"தாராளமா வாங்க. என் வீட்டுக்குப் பக்கத்தில் தான் New Booklands இருக்கிறது. It is my pleasure, I will take you there"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆனால் ஞாயிற்றுக்கிழமை அவர்களால் என்னை சந்திக்க முடியவில்லை. திங்கட்கிழமை மதியம் &lt;/span&gt;&lt;a href="http://www.lazygeek.net"&gt;&lt;span style="color:#000099;"&gt;குருவிடமிருந்து&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000099;"&gt; எனக்கு ஒரு SMS வந்தது. அது....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;SMS:&lt;br /&gt;&lt;/strong&gt;"Heard that latha's dad expired y'day. wanted to inform U"&lt;br /&gt;&lt;br /&gt;* - *&lt;br /&gt;"உன் வலைப்பதிவை பற்றி என்ன எழுதியிருப்பார் ?" என்றது வேதாளம்.&lt;br /&gt;"தெரியாது" என்றான் விக்கிரமாதித்தன் உண்மையாகவே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111295116647116242?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111295116647116242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111295116647116242&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111295116647116242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111295116647116242'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/04/blog-email-phone-sms.html' title='Blog, Email, Phone, SMS'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111284694113561149</id><published>2005-04-07T09:29:00.000+05:30</published><updated>2005-04-07T10:41:41.053+05:30</updated><title type='text'>என் பேர் ஆண்டாள் - 2</title><content type='html'>"நேற்று GPS பற்றி எழுதினது நன்றாக இருந்தது,  டையம் கிடைக்கும் போது அதை தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று இருக்கிறேன்" என்றது வேதாளம்&lt;br /&gt;"நான் தமிழில்தானே எழுதியிருந்தேன்" என்றான் விக்கிரமாதித்தன்.&lt;br /&gt;"அதில் உள்ள் ஆங்கில வார்த்தைகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை.."&lt;br /&gt;"என்ன நக்கலா ? சரி இன்று என் பெண் எழுதப்போறா" என்ற விக்கிரமாத்தித்தன் தன் மகளை எழுதச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;* - * &lt;br /&gt;&lt;strong&gt;என் பேர் ஆண்டாள் - 2&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/andal_art_4.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/andal_art_5.jpg" alt="Image hosted by Photobucket.com" align="right"&gt;எனக்கு பர்த்டே முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சு. அப்பா சைக்கிள் வாங்கித்தர்றேன்னு சொன்னா ஆனா, இன்னும் வாங்கித்தரல. எனக்கு பிடிச்ச ரைம் "Rain Rain go away". அப்பா சொல்ரா மெட்ராசில மழையே இல்லை இதை எதுக்கு பாடரன்னு.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/andal_art_3.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt; எனக்கு பிடிச்ச toy ஆப்பாவோட லாப்டாப் தான். அப்பா அதை தரமாட்டேங்கிறா. ஒரு நாள் அப்பா துங்கரப்ப நைஸா எடுக்கப்போறேன். இப்போ எனக்கு லீவ் அதனால கார்த்தால பல்தேச்சிட்டு Mulan படம் பாப்பேன், அப்பறம் Nemo, அப்பறம் Tom &amp; Jerry, அப்பறம் ராத்திரி Pogoல Mr.Bean, அப்பறம் தூங்கிடுவேன்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/andal_art_12.jpg" alt="Image hosted by Photobucket.com" align="right"&gt;இப்போ "அ ஆ இ ஈ" எல்லாம் நல்லா வரையறேன். அப்பா சொல்லித்தந்தா. 'ஃ' எனக்கு ரொம்ப ஈஸி. மூணு டாட் வெச்சா போறும். 'இ' ரொம்ப கஷ்டம் தெரியுமா?. அம்மா பாட்டு சொல்லிதருவா. இன்னும் சுருதி சரியா சேரலைன்னு சொல்லரா. என்னால அவ்வளவு தான் முடியும்னு அம்மாவுக்கு தெரியலை.  &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/andal_art_10.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;போன வாரம் டிரெயின்ல பெங்களூர் போனேன். ரொம்ப குளிர்ன்னு அப்பா சொன்னா. லைட்டா சில்லுனு இருந்தது அவ்வளவுதான். ஒரு நாள் morning என்னை டிரஸ் பண்ணி Ryan ஸ்கூல சாக்கிலேட் தருவா வான்னு அப்பா, அம்மா கூட்டிண்டு போனா. அங்கே ஒரு மிஸ் என்னை ஒரு கிளாஸ் ரூமுக்கு அழைச்சுண்டு போனா. &lt;br /&gt;"What is your name?"&lt;br /&gt;"Andal"&lt;br /&gt;"Nice Name"&lt;br /&gt;"What is this ?"&lt;br /&gt;"Apple"&lt;br /&gt;"This ?"&lt;br /&gt;"Elephant"&lt;br /&gt;சாக்லேட் கொடுத்தா வாங்கிண்டு வந்தேன். தாங்க்ஸ் சொல்ல மறந்துட்டேன். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/andal_art_1.jpg" alt="Image hosted by Photobucket.com" align="right"&gt; UKG இந்த ஸ்கூல்ல தான் சேரப்போரேன். என் கிட்ட அப்பா ஒரு வார்த்தை பிடிச்சிருக்கான்னு கேட்கவேயில்லை. பழைய ஸ்கூல்ல எனக்கு நிறைய friends இருக்கா. அப்பாவுக்கு இதெல்லாம் தெரியல. ஹம்சினின்னு ஒரு ஃபிரண்டு இருக்கா. எனக்கு ஒரு சூப்பர் ரைம் சொல்லி குடுத்தா..அதை சொல்லட்டுமா ?&lt;br /&gt;பாலாஜி பஜ்ஜி&lt;br /&gt;ஃபிரிட்ஜ் குள்ள ஐஸ்&lt;br /&gt;ஐஸ் குள்ள தண்ணி&lt;br /&gt;தண்ணி குள்ள நுரை&lt;br /&gt;விட்டான் பாரு அரை.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt; &lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/andal_art_11a.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt; எனக்கு பிங்க் கலர் ரொம்ப பிடிக்கும். பிங்க் கிரேயான்ல வீட்டு wallல் நல்லா வரைஞ்சியிருக்கேன். ஆத்துக்கு வந்தா காமிக்கிறேன். ஆனா அம்மா wallல கிறுக்கக் கூடாதுனு சொல்ரா. &lt;br /&gt;மைலாப்பூரில ஒரு கோயில் இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்பாவோட weekendல போவேன். கேசவா உம்மாச்சி இருக்கு. அங்கே ஒரு மாடு இருக்கு பிளாக் கலர். நா அதுக்கு கிரை கொடுப்பேன். சமத்தா சாப்புடும். நான் சாப்பிடர சீட்டோஸ் அதுக்கு பிடிக்காது. சொல்ல மரந்துட்டேனே அதுக்கு ஒரு பேபி மாடு இருக்கு அதுவும் பிளாக் கலர். &lt;br /&gt;இன்னும் இரண்டு மாசத்தில பெங்களூர் வந்துடுவேன் அப்பறம் நிறைய பேசரேன். பை.&lt;br /&gt;(நான் ரிசண்டா வரஞ்ச பிக்சர்ஸ். நல்லாயிருக்கா ?)&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://desikann.blogspot.com/2004_06_01_desikann_archive.html"&gt;என் பேர் ஆண்டாள் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* - * &lt;br /&gt;"சரி, பிறந்த நாள் முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சு நீ எப்போ ஆண்டாளுக்கு சைக்கிள் வாங்கித்தரப்போற ?" என்றது வேதாளம்&lt;br /&gt;"என்ன கேட்ட, காதில் சரியா விழவில்லை" என்று விக்கிரமாதித்தன் பொய் சொன்னான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111284694113561149?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111284694113561149/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111284694113561149&amp;isPopup=true' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111284694113561149'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111284694113561149'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/04/2.html' title='என் பேர் ஆண்டாள் - 2'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111276041455888971</id><published>2005-04-06T09:28:00.000+05:30</published><updated>2005-04-06T11:48:39.500+05:30</updated><title type='text'>GPS - Global Positioning System</title><content type='html'>"போன பதிவுல எந்த காட்டுக்கு போனப்பா எனக்கும் கொஞ்சம் சொல்லேன்" என்றது வேதாளம். &lt;br /&gt;"எனக்கு தெரியாதுப்பா என்கிட்ட என்ன GPS சாதனமா இருக்கு" என்றான் விக்கிரமாதித்தன்.&lt;br /&gt;"அது என்னப்பா GPS, அதை பற்றி சொல்லேன்" &lt;br /&gt;"சரி எனக்கு தெரிந்த வரை உனக்கு எளிமையா சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்" என்று விக்கிரமாதித்தன் GPS பற்றி எழுத ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;GPS - Global Positioning System. &lt;/strong&gt;&lt;br /&gt;இதை பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். சில  வருடங்களுக்கு முன் நான் பாரிஸ் சென்ற போது எனக்கு இந்த தொழில்நுட்பம்  அறிமுகமானது. எப்படி என்று சொல்வதற்கு முன் GPS எப்படி வேலை செய்கிறது என்று  பார்க்கலாம். நம் முன்னோர்கள் இடங்களை குறிக்க பெரிய நினைவு சின்னங்கள்,  வரைபடங்கள், நட்சத்திரங்களின் அமைப்பு போன்றவற்றை அடையாளமாக  உபயோகித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று 4000 ரூபாய்க்கு ஒரு GPS சாதனம் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு நீங்கள்  எங்கே இருக்கிறீர்கள் என்று சுலபமாக சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/gps_27satellite.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dod.mil"&gt;(Photo courtesy U.S. Department of Defense)&lt;/a&gt;&lt;br /&gt;(Artist's concept of the GPS satellite constellation )&lt;br /&gt;&lt;br /&gt;GPS என்று நாம் கூறுவது பெரும்பாலும் GPS ரிசீவரையே குறிக்கிறது. 27 (அதில் மூன்று  ஸ்டெப்னிகள்) செயற்கைகோள்களை கொண்டு அமைக்கபட்டுள்ளது. அமெரிக்க  ரானுவத்தால் ராணுவத்திற்கு உருவாக்கப்பட்ட இது தற்போது எல்லோருக்கும் பயன்படும்  விதமாக இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 2000 கிலோ எடை உள்ள இச்செயற்கைகோள்கள் பூமியை 12,000 மையில்  வேகத்தில் சுற்றுகின்றது. அதாவது பூமியை ஒரு நாளைக்கு இரண்டு முறை வலம்  வருகிறது. பூமியில் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் தலைக்கு மேல் குறைந்தபட்சம்  நான்கு செயற்கைகோள்கள் தெரியும்படி அதை அமைத்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/gps_satellite.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt; &lt;br /&gt;&lt;a href="http://www.army.mil"&gt;(Photo courtesy U.S. Army A GPS satellite)&lt;/a&gt;&lt;br /&gt;GPS ரிசீவர் வேலை என்னவென்றால் இந்த நான்கு செயர்கைகோள்களை எங்கே என்றும்  அதன் இடைப்பட்ட தூரம் எவ்வளவு என்று கண்டுபிடிக்க வேண்டும். இதை  வைத்துக்கொண்டு எங்கே இருக்கிறோம் என்று கண்டுபிடிக்கிறது. இந்த உத்திக்கு பெயர் -  &lt;em&gt;Trilateration&lt;/em&gt;. ஒரு சின்ன உதாரணம் கொண்டு இதை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/chennai_gps1.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;நீங்கள் சென்னைக்கு புதிது. ஷாப்பிங் போய் எங்கோ துலைந்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  பக்கத்தில் இருக்கும் ஒரு சென்னை வாசியிடம் &lt;br /&gt;"சார் நான் எங்கே இருக்கிறேன் ?" என்று கேட்கிறீர்கள்&lt;br /&gt;"கஸ்மாலம், நீ கோடம்பாக்கம் லிபர்ட்டி டாக்கீஸிலிருந்து மூணு கிமீ தூரத்தில இருக்கே"  என்று நக்கலாக பதிலலிக்கிறார். ( "A" - கோடம்பாக்கம் லிபர்ட்டி டாக்கீஸை குறிக்கிறது).&lt;br /&gt;இந்த தகவலை வைத்துக்கொண்டு என்ன செய்வது ?. கோடம்பாக்கம் மூன்று கிமீ சுற்றளவில் நீங்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்காலாம் அல்லவா ?&lt;br /&gt;( பார்க்க நீல நிற குறியீடுகள் )&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/chennai_gps2.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;பக்கத்தில் இருக்கும் ஒரு பெண்மணியிடம் கேட்கிறீர்கள்.&lt;br /&gt;"நான் எங்கே இருக்கிறேன் ?" என்று&lt;br /&gt;அவளும் சளைத்தவள் அல்ல, &lt;br /&gt;"ம்ம். இங்கிருந்து தேனாம்பேட்டை சன் டிவி அலுவலகம் முன்று கிமீ" என்று பதில் அளிக்கிறாள்.&lt;br /&gt;(B-தேனாம்பேட்டை சன் டிவி அலுவலகத்தை குறிக்கிறது).&lt;br /&gt;இப்போது நீங்கள் மேப்பில் இரண்டு வட்டங்களை போடுகிறீர்கள். அதன் intersection  இரண்டு இடங்களில் இருப்பதால் இந்த இரண்டு இடங்களில் நிங்கள் எங்கே  வேண்டுமானாலும் இருக்கலாம். &lt;br /&gt;&lt;/p&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/chennai_gps3.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;சரி, சென்னைவாசிகளே கொஞ்சம் வில்லங்கமானவர்கள் என்று ஒரு ஆட்டோ டிரைவரிடம்&lt;br /&gt;"இங்கிருந்து மாம்பலம் அயோத்தியா மண்டபம் எவ்வளவு தூரம்பா ?" என்று கேட்கிறீர்கள்.&lt;br /&gt;"3 கிமீ, ஆட்டோவில் குந்து சாமி வீட்டாண்ட விட்டுறேன்" என்று கூறுகிறார். &lt;br /&gt;(C- அயோத்தியா மண்டபத்தை குறிக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். முன்றாம்  வட்டத்தை போடுங்கள் அவ்வளவுதான். இந்த மூன்று வட்டங்களும் சேரும் இடம்தான்  நீங்கள் இருக்கும் இடம். நீங்கள் தி.நகரில், பனகல் பார்க்கில் இருக்கிறீர்கள். &lt;br /&gt;( சென்னை மேப் உதவி : http://www.mapsofindia.com/ ) &lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக நீங்கள் வைத்துள்ள GPS சாதனம் இடத்தை கண்டுபிடிக்க அதற்கு இரண்டு தகவல்கள் தேவை படுகிறது&lt;br /&gt;1. தன் தலைக்கு மேல் குறைந்த பட்சம் மூன்று செயற்கைகோள்கள்&lt;br /&gt;2. சாதனத்திற்கும் செயற்கைகோள்களுக்கும் உள்ள தூரம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு தகவல்களுமே செயற்கைகோள்களிலிருந்து வரும் ரேடியோ அலைகளை அலசி கண்டுபிடிக்கிறது. ரேடியோ அலைகள் ஒளியின் வேகத்தில் செல்ல கூடியவை (ஒரு  வினாடிக்கு 186,000 மையில்கள் செல்லகூடியவை). செயற்கைகோள்கள் Pseudo  Random Number என்பதை அனுப்பிக்கொண்டே இருக்கும். நம் கையில் உள்ள GPS  சாதனம் தனக்கு வந்து சேரும் தகவல் எவ்வளவு நேரத்தில் வந்தது என்று கணக்கிட்டு செயற்கைகோள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கணக்கிடும். &lt;br /&gt;&lt;br /&gt;( மேலும் விபரங்களுக்கு Googleலை நாடுங்கள் ). &lt;br /&gt;சரி என் பாரிஸ் அனுபவத்திற்கு வருகிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;பாரிஸில் என் அலுவலகத்தில் எனக்கு ஒரு ஹோட்டல் புக் செய்திருந்தார்கள். அது எங்கே என்று எனக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. டாக்ஸி டிரைவரிடம் அந்த ஹோட்டல்  முகவரி அச்சிடப்பட்ட காகிதத்தை கொடுத்தேன். அவருக்கும் அந்த ஹோட்டல் எங்குள்ளது  என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/GPS_car.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left"&gt;அப்போது காரின் ஸ்டீரியோ பக்கத்தில் ஒரு பட்டனை தட்டினார், ஒரு மிகச் சிறிய கீபோர்ட் வெளியே வந்தது, அதில் அந்த ஹோட்டலின் முகவரியை உள்ளிட்டார். கார் ஸ்டீரியோ மேல் இருக்கும் திரையில் ஒரு மேப் தெரிந்தது. நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் சாரி  உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள், எந்த வழியாக போகவேண்டும் என்று சில நொடியிகளில் வரைபடத்தில் தெரிந்தது. புறப்பிட்ட பின் இந்த வழியாக போனால் இவ்வளவு நேரம்  மிச்சமாகும், இடையில் எவ்வளவு சிக்னல்கள், வேகத்தடை என்று பல விஷயங்களை  சொன்னது. டிரைவரிடம் காரை நிறுத்த சொல்லி முன் சீட்டில் வந்து உட்கார்ந்து  கொண்டேன். நாங்கள் போகும் வேகத்தை வைத்து, இன்னும் எவ்வளவு நேரத்தில்  போகலாம் என்று கணக்கிட்டு கூறியது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய கார்களில் இன்னும் கொஞ்ச நாட்களில் வந்துவிடும் என்று சொல்கிறார்கள். தமிழ்  பேர் வைக்க சொல்லி ரோட்டில் அரசியல் கலாட்டா, கண்ணமாபேட்டை சவ ஊர்வலம்  போன்றவற்றை உங்களுக்கு எச்சரிக்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது செல் போனில் GPS போல் ஒன்று வருவதை சிலர் கவனித்திரிபீர்கள். இதற்கு  "Cell Display Information" என்று பேர். உங்கள் செல் போன் எந்த டவர் பக்கத்தில் உள்ளது என்று சொல்லு உத்தி. இந்த தகவலை வைத்துக்கொண்டு நீங்கள் எந்த  ஏரியாவில் இருக்கிறீர்கள் என்று சொல்லும். &lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு S13 கம்பார்ட்மெண்டில் ஏறினேன்.என்  பக்கத்தில் இருந்த பெண்&lt;br /&gt;"சார் my friend is in S2, if you dont mind can you exchange the seat" என்றாள்.&lt;br /&gt;ஒரு பெண்ணிடம் முடியாது என்று எப்படி சொல்வது?&lt;br /&gt;"ok, with pleasure" என்று டிக்கேட்டை வாங்கிக்கொண்டு சென்றேன். அப்போது  என் செல் போனில் "Chennai Central" என்று காட்டியது. S13க்கும், S2க்கும்  நடுவில் முதல் வகுப்பு, AC-2Tier, AC-3Tier என்று ஏகப்பட்ட பெட்டிகள். ஒரு  வழியாக S2வில் ஏறி உட்கார்ந்து செல் போனை பார்த்தேன் அதில் "Sowkarpet"  என்றது. அவ்வளவு தூரம். S1னில் பெங்களூர் என்று காண்பித்தால் கூட ஆச்சிரியபடுவதிற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நீ இந்த மாதிரி பெண்களிடம் வழிவது உன் மனைவிக்கு தெரியுமா" என்றது வேதாளம்&lt;br /&gt;விக்கிரமாதித்தன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111276041455888971?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111276041455888971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111276041455888971&amp;isPopup=true' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111276041455888971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111276041455888971'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/04/gps-global-positioning-system.html' title='GPS - Global Positioning System'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111267354990943005</id><published>2005-04-05T09:19:00.000+05:30</published><updated>2005-04-05T10:10:49.283+05:30</updated><title type='text'>நானும் ஒரு டஜன் பெண்களும்</title><content type='html'>"நேற்று காமிக்ஸ் பற்றி எழுதி ஏதோ காமெடி பண்ணிட்டே இன்று என்ன எழுதப் போற" என்றது வேதாளம். &lt;br /&gt;விக்கிரமாதித்தன் மௌனமாக இருந்தான்.&lt;br /&gt;"நீ எப்போதும் எனக்கு பதில் சொல்லிடுவே இன்னிக்கு என்ன ஆச்சு?" &lt;br /&gt;"யோசிக்கிறேன்.. இன்று ஒரு Sci-Fi-Short எழுதலாம் என்று இருக்கிறேன்" &lt;br /&gt;"சுலபமாக எதையாவது எடுத்துக்கொண்டு தப்பிக்கலாம் என்று மற்றும் நினைக்காதே, பின்னூட்டத்தில் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்று எச்சரித்தது வேதாளம். &lt;br /&gt;"இதே டயலாக்கை எத்தனை முறை சொல்வே" என்று விக்கிரமாதித்தன் Sci-Fi-Shortடை எழுத  ஆரம்பித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நானும் ஒரு டஜன் பெண்களும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/forest.jpg" alt="Image hosted by Photobucket.com" width="300" height="375" align="right"&gt;சந்தேகமே இல்லை. இன்றோடு நான் தொலைந்து நான்கு நாட்கள் ஆகிறது. கடைசியாக குமுதம் பக்தியில் இலவச இணைப்பாக கொடுத்த சின்ன சொம்பில் உள்ள கங்கை நீரை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டேன். அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இப்போது அடர்ந்த காட்டுக்குள் இருக்கிறேன். "Born In USA" என்ற பனியன். முழங்கால் பெர்முடா என்று அப்படியே இந்த காட்டுக்குள் வந்துவிட்டேன். கையில் அந்த இலவச குமுதம் சொம்பும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;'கீச் கீச்' பறவைகள், தூரத்தில் அருவியின் சத்தம், பச்சை நிறத்தில் செடி கொடிகள், பூக்கள், வண்டுகள், முயல்கள், சற்று முன் நின்ற மழையினால் மரத்திலிருந்து சொட்டும் மழைத்துளி சற்றே மெலிதான குளிர் காற்று ....கவிதை எழுத வேண்டும் போல் இருக்கிறது. எழுதினால் எதாவது பசித்த புலி வந்து வந்து சாப்பிட்டுவிமோ என்ற பயம். மூன்று நாட்களாக தேடிவிட்டேன் இந்த காட்டில் யாருமே இல்லை. ராத்திரி கொஞ்சம் பயமாக இருக்கிறது. சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லை. பழங்கள் நிறைய கிடைக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் இரண்டு செட் ஜட்டி, பனியன் கொண்டு வந்திருப்பேன். ஒன்றையே துவைத்து..கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அருவிக்கு இடது பக்கம் இன்னும் தேடி பார்க்கவில்லை. அங்கேயும் யாரவது இருப்பார்களா என்று சந்தேகம் தான். பழங்களை சாப்பிட்டுவிட்டு மரத்தடியில் கண்ணயர்ந்த நேரத்தில், சிரிப்போலி கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். பக்கத்தில் சரியாக ஒரு டஜன் பெண்கள். எல்லோருக்கும் 18 அல்லது மிஞ்சிபோனால் 19 வயதுதான் இருக்கும். நடுவில் அந்த பெண் மட்டும் கொஞ்சம் வயதானவள் போல் தோற்றமளித்தாள் அவளுக்கு 22 வயது இருக்கும். எல்லோரும் ஒருவிதமான டிரஸ் அணிந்திருந்தார்கள். மேலே துப்பட்டா போல் துணியும், கீழே துடை தெரியும் படி டென்னிஸ் பாவடையும் அணிந்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தயங்கி "ஹலோ" என்றேன்.  எல்லோரும் கோரஸாக சிரித்தார்கள். எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. அந்த 22 வயது பெண் தான் என் முன் வந்து என்னை மேலும் கிழும் பார்த்தாள்&lt;br /&gt;"நீ ஆணா ?" என்றாள்&lt;br /&gt;அவள் கொஞ்சுகிறாளா கெஞ்சுகிறாளா என்று கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. &lt;br /&gt;"நீங்களே கண்டு பிடியுங்களேன்" &lt;br /&gt;"'கிளுக்' என்று சிரித்துவிட்டு "மீசையிருக்கிறது அதனால் ஆணாகத்தான் இருக்க வேண்டும்" என்றாள். &lt;br /&gt;புன்னகைத்தேன். &lt;br /&gt;"சில வருடங்கள் முன் பெரிய நரிக்கூட்டம் வந்து எல்லா ஆண்களையும் ..." என்று லேசாக விசும்பத் தொடங்கினாள்.&lt;br /&gt;அவள் கண்களை துடைத்துவிட, பாக்கெட்டில் கர்ச்சீப் இருக்கிறதா என்று பார்த்தேன், இல்லை. &lt;br /&gt;"அதற்கு மேல் கேட்காதீர்கள்..." என்றாள்&lt;br /&gt;"கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் இனிமேல்" என்று அவள் கண்களை துடைத்து ஆறுதல் கூறினேன்.&lt;br /&gt;அவள் மூக்கு அதற்குள் சிகப்பாகியிருந்தது.&lt;br /&gt;"பல வருஷங்களாக குழந்தைகளுக்காக ஆண்களை தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றாள். &lt;br /&gt;"இனிமேல் நான் இருக்கிறேன், கவலை படாதீர்கள்" என்று அவள் கைகளை பற்றினேன். அவள் அதற்கு ஆட்சேபிக்கவில்லை. &lt;br /&gt;"நான் காண்பது கனவா ?" என்றேன். &lt;br /&gt;'கிளுக்' என்று சிரித்துவிட்டு "கிள்ளிப்பாருங்கள் என்று அவள் துடையை காண்பித்தாள்"&lt;br /&gt;மெதுவாக கிள்ளினேன். மன்னிக்கவும் தொட்டேன்.&lt;br /&gt;"ஆ.." என்று செல்லமாக என்னை அடிக்க வந்தாள். &lt;br /&gt;"சரி எப்ப ஆரம்பிக்கலாம்" என்றேன். &lt;br /&gt;ஓரத்தில் இருந்த அந்த உசரமான பெண் "உங்களுக்கு சம்மதம் என்றால் இப்பவே" என்றாள். &lt;br /&gt;"சரி" என்று சட்டையை பித்தான்களை ....&lt;br /&gt;"குழந்தைகள் அங்கே இருக்கிறார்கள்" என்றாள்&lt;br /&gt;"என்ன?" என்றேன் குழப்பமாக &lt;br /&gt;"ஆமாம், எங்களுக்கு நிறைய அழகான காட்டு வாசி ஆண்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு ...(தமிழ்மணத்தில் என் வலைப்பதிவு நீக்கப்படும் அபாயம் இருப்பதால் மேற்கொண்டு விவரிப்பது உத்தமம் இல்லை) ஆகவே நாங்கள் எப்போதும் பிசியாக இருக்கிறோம்! அதனால் எங்களுக்கு குழந்தைகளை பார்த்துக்கொள்ள தான் நேரம் இல்லை!" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நின்று கொண்டிருந்த பெண் என் கையை பற்றி "கவலைப்படாதீர்கள் எங்கள் குழந்தைகளுக்கு நேப்கின் மாற்றினால் உங்களுக்கு சுலபமாக பொழுது போகும்" என்றாள். எனக்கு குழப்பமாக இருந்தது. &lt;br /&gt;மீண்டும். "நான் காண்பது கனவா ?" என்றேன் &lt;br /&gt;அந்த பெண் என் அருகே வந்து என் தொடையை வலிக்கும் அளவிற்கு கிள்ளினாள்&lt;br /&gt;"ஆ.." என்று அலரினேன்.&lt;br /&gt;ஒரு உசரமான பெண் என் கையை பற்றி அருவிக்கு இடது பக்கத்தில் அழைத்து சென்றாள். என் காதருகே வந்து கண்சிமிட்டி "தப்பிக்க மட்டும் நினைக்காதே" என்று சொல்லி "கிளுக்" என்று சிரித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;SF கதை கரு உதவி &lt;/em&gt;: Paul O'Neill&lt;br /&gt;&lt;em&gt;டிஜிடல் ஓவியம் உதவி &lt;/em&gt;:  http://www.dtm2002.3d.pl/&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஏதோ பிரபந்தம் எழுதும் ஒரு நாமம் போட்ட ஆசாமி என்று நினைத்துக் கொண்டிருந்தேன் இவ்வளவு மோசமாக எழுதுகிறாயே ?" என்றது வேதாளம். &lt;br /&gt;விக்கிரமாதித்தன் பதில் சொல்ல முடியாமல் அசடுவழிந்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111267354990943005?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111267354990943005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111267354990943005&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111267354990943005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111267354990943005'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/04/blog-post_05.html' title='நானும் ஒரு டஜன் பெண்களும்'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6799842.post-111259105730050628</id><published>2005-04-04T10:33:00.000+05:30</published><updated>2005-04-04T10:38:10.753+05:30</updated><title type='text'>ஆஸ்ட்ரிக்ஸ்</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/vikramadithyan.gif" alt="Image hosted by Photobucket.com" align="left" width="168" height="229"&gt;தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் பிளாகில் அந்த கமெண்டை பார்த்தான்.  கிளிக் செய்து அவன் அதை படிக்க ஆரம்பித்தான். அதனுள் இருந்த அனாமதேய வேதாளத்தின் கமெண்ட் சிரித்துக்கொண்டே "பிளாக் எழுதும் உன்னுடைய லட்சியத்தை பாராட்டிகிறேன்!, அதற்கு நீ எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை மெச்சுகிறேன். ஆனால் உன்னுடைய கடும் முயற்சிகளால் உனக்கு இதுவரை எதாவது பலன் கிடைத்துள்ளதா என்று யோசித்துப்பார். நீ வீணாக ஏன் இவ்வாறு சிரமப்படுகிறாய்? மிஞ்சி போனால் வாத்தியார் சொல்லும் 15 நிமிடப் புகழ் அல்லது தமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரத்துக்கு ஏன் எவ்வளவு கஷ்டப்படுகிறாய். தமிழ் வலைப்பதிவுக்கு என்று ஒரு அகராதி இருக்கிறது அதிலிருந்து கொஞ்சம் வேளியே வந்து இதுவரை யாரும் எழுதாத தலைப்புக்களை எழுத முடியுமா ? கண்டிப்பாக - சுஜாதா, சுனாமி, சாமி, மாமி, பெரியார், பெரியவாள், இலக்கியம்... போன்ற வார்த்தைகள் வர கூடாது. இதை தவிர உன்னால் வேறு ஏதாவது எழுத முடியுமா ?" என்றது. &lt;br /&gt;&lt;br /&gt;முயற்சி செய்து பார்க்கிறேன் என்று கூறிய விக்கிரமாதித்தன் முதல் தலைப்பாக அஸ்ட்ரிக்ஸ் பற்றி எழுத ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;strong&gt;ஆஸ்ட்ரிக்ஸ் ( Asterix )&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/intro-asterix.gif" alt="Image hosted by Photobucket.com" align="right" width="143" height="190"&gt;ஆஸ்ட்ரிக்ஸை நான் எட்டாவதில் முதன்முதலில் படித்தேன். பக்கத்து வீட்டு நண்பன் அதை வைத்து படித்துக்கொண்டிருப்பான். முதல் வாசிப்பில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் தொடர்ந்து வாசித்ததில் பிடித்து போய்விட்டது. அன்று முதல் இன்று வரை எல்லா ஆஸ்டரிக்ஸ் புத்தகத்தையும் படித்து முடித்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அஸ்டரிக்ஸை உருவாக்கியவர்கள் இருவர் - எழுத்தாளர் René Goscinny (1926-1977) மற்றும் ஓவியர் Albert Uderzo (1927). அவர்களை பற்றி ஒரு சின்ன முன்னுரை...&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/goscinny.gif" alt="Image hosted by Photobucket.com" align="left" width="144" height="225"&gt;René Goscinny (1926-1977). காஸினி பாரிஸில் பிறந்தவர். 17 வயதில் அவர் தந்தை இறந்து போனதால் வேலை தேட வேண்டிய சூழ்நிலை. ஒரு உதவி கணக்கெழுதுபவராக பணியில் சேர்ந்தார். 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த்தார். அதன்பிறகு  ஒரு ஆர்ட் ஸ்டுடியோவில் வேலைக்குச் சென்றார். அங்கு ஓவியர்கள் Harvey Kurtzman, Will Elder &amp; John Severin சந்தித்தார் ( இவர்கள் தான் பிற்பாடு MAD பத்திரிக்கை ஆரம்பித்தவர்கள் ). பிறகு பெல்ஜியம் ஓவியர்கள் JiJளூ and Morris சந்தித்தார் ( Morris பிற்பாடு Lucky Luke காமிக்ஸ் ஆரம்பித்தவர்). மோரிஸ் காஸினியை தன் காமிக்ஸ¤க்கு கதை வசனம் எழுதும் வேலையில் சேர்ந்தார். ஆனால் ஓவியம் வரையவும் அவருக்கு விருப்பமிருந்தது. Dick Dicks என்ற கதாபாத்திரத்தை வடிவமைத்தார். ஓவியத்தைவிட அவர் ந்கைச்சுவையாக வசனம் எழுதுவதில் சிறந்து விளங்கினார். பிறகு 1951ல் ஐரோப்பா திரும்பினார். World Pressல் ஆல்பர்ட் உடர்ஸொவை முதன்முதலில் சந்தித்தார். 1959ல் காஸினி, உடர்ஸொ மற்றும் ஜீன் மைக்கில் சார்லியர் Pilote என்ற புதிய காமிக்ஸை நிறுவினர். அது மிகுந்த வெற்றியாக அவர்களுக்கு அமைந்தது. காஸினி தான் கடைசிகாலம் வரை தலைமை ஆசிரியாராக இருந்தார். பல நல்ல நகைச்சுவை கதைகளை தந்தார்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/uderzo.gif" alt="Image hosted by Photobucket.com" align="left" width="167" height="225"&gt;Albert Uderzo (1927).  ஓவியர் ஆல்பர்ட் உடர்ஸொ 1927 ஆம் ஆண்டு பிரான்ஸில் Fismes என்ற இடத்தில் பிறந்தவர். பிறக்கும் போது அவருக்கு இரண்டு கைகளிலும் ஆறு விரல்கள் இருந்தது. பதின்நான்கு ஆண்டுகள் கழித்து, அவருடைய ஓவியம் பிரசுரம் ஆனது. அப்போது அவருக்கு இரண்டு கைகளிலும் 5 விரல்கள்தான் இருந்தது. அவரை Edmond Calvo என்ற பிரசித்தி பெற்ற ஓவியர் ஊக்கம் அளித்தார். 1945ல் உடர்ஸொ ஒரு அசிஸ்டண்ட் என்ஜினியராக பணிபுரிந்தார். பிறகு அனிமேஷன் தொழிலில் ஈடுப்பாடார். அது அவருக்கு அவ்வளவு திருப்த்தி தருவதாக இல்லை. தன் 19 வயசில் பத்திரிக்கைக்கு தொழிலுக்கு வந்தார். 1950ல் Jean-Michel Charlier &amp; Renளூ Goscinnyயை சந்த்தித்தார். 1959ல் ஆஸ்ட்ரிக்ஸ் வெளிவந்தது. &lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;29 அக்டடீபர் 1959 ஆம் ஆண்டு Pilote என்ற புத்தகத்தில் தொடராக வந்த கதையை 1961 ஆம் ஆண்டு புத்தகமாக வந்தது. இப்புத்தகம் 6000 பிரதிகள் அச்சிடப்பட்டது. 1965ஆம் ஆண்டு "Asterix and Cleopatra" என்ற புத்தகம் பெரும் சாதனை படைத்தது. இப்புத்தகம் 1967 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 1,000,000 பிரதிகளை தாண்டியது. Goscinny வசனம் எழுத uderzo அதற்கு படம் வரைந்தார். 1977 ஆம் ஆண்டு காஸினி காலமான பின் உடர்ஸொ இரண்டயும் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/asterix-obelix.gif" alt="Image hosted by Photobucket.com" align="left" width="150" height="114"&gt;ஆஸ்ட்ரிக்ஸ் வாழ்வது கிமு 50. ஒரு சிறிய கிராமம். தற்போதய பிரட்டனி. இக்கிராமத்தில் வசிப்பவர்கள் ஒருவிதமான பானத்தை (கரைசலை) குடித்து சூப்பர் மேன் போல் சண்டை போடுவார்கள். ரோமாபுரி படைகளை அடித்து விரட்டுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஜூலியஸ் சீஸர் இந்த கிராமத்தை மட்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதில் வரும் எல்லா கதைகளுமே எப்படி இவர்கள் ஜூலியஸ் சீஸரின் படைகளை எள்ளிநகையாடுகிறார்கள் என்ற அடிப்படை கருவை கொண்டவை. அதில் அலுக்காமல் இருப்பது அதில் உள்ள கதை அமைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஆஸ்டரிக்ஸ் தான் எப்போதும் கதாநாயகன். கொஞ்சம் குள்ளமானவன் ஆனால் தந்திரமிக்கவன். இவனுக்கு ஒப்ளிக்ஸ் என்ற குண்டு நண்பன், அவனுடைய நாய் டாக்மேட்டிக்ஸ் அபஸ்சுரத்தில் பாடும் பாணன் கோக்கோ·போனிக்ஸ். இவர்களுடைய குரு காட்ட·பிக்ஸ் இப்படி பல பாத்திரங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகத்தின் வெற்றி இது பல வயதினருக்கும் ஏற்றதாக எழுதப்பட்டுள்ளதுதான். நான் சிறு வயதில் படித்ததில் இது ஒரு folk tale போல் இருந்தது. காலேஜில் படிக்கும் போது அதில் உள்ள பல நகைச்சுவை புரிந்தது. தற்போது படிக்கும் போது அதில் உள்ள சிலேடை(pun) உத்திகள், கிண்டல், அல்யூஷன்(indirect meaning) போன்றவை புரிகிறது. போன மாதம் படிக்கும் போது அதில் பல பிரபலானவர்களின் கேலிசித்திரங்கள் என்னை வியப்படைய செய்தன. &lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/connery.gif" alt="Image hosted by Photobucket.com" align="left" width="160" height="173"&gt; &lt;br /&gt;பிற்பாடு வந்த புத்தகங்களில் பல 20ஆம் நூற்றாண்டுகளில் உள்ளவர்களின் கேலிசித்திரங்கள் பல வந்துள்ளது. Asterix and the Black Gold என்ற புத்தகத்தில் ரோமாபுரி உளவாளியாக ஒருவர் ஜேம்ஸ் பாண்ட் (Sean Connery-James Bond) போல் தோற்றம்&lt;br /&gt;அளிப்பார்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/stan-olli.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left" width="161" height="134"&gt;Obelix and Co என்ற புத்தகத்தில் சிப்பாய்கள் Stan Laurel and Oliver Hardy போல்&lt;br /&gt;இருப்பார்கள். &lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v166/desikann/an-08-beatles.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left" width="177" height="142"&gt;Asterix in Britain என்ற புத்தகத்தில் நான்கு பேர் Beatles இசைகுழுவில் இருப்பவர்கள் போல் இருப்பார்கள். ஏன் அஸ்ட்ரிக்ஸை வடிவமைத்த இதை வடிவமைத்த காஸினி மற்றும் உடர்ஸொவும் சில இடங்களில் வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகம் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கபட்டுள்ளது. பெங்காலி, ஹிந்தியில் மொழிபெயர்க்க பட்டுள்ளது. தமிழில் ? கிடையாது என்று நினைக்கிறேன்.  &lt;br /&gt;தமிழில் யாராவது ஆஸ்ட்ரிக்ஸை கொண்டுவருவார்களா ? என்றது வேதாளம். விக்கிரமாதித்தன் பதில் சொல்லமுடியாமல் முழித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;[Special thanks to Hans Selles &amp; Hendrik Jan Hoogeboom of http://www.asterix-obelix.nl/ for providing me information and encouraging me to write this article in tamil]&lt;br /&gt;&lt;em&gt;[All images are ©  R.Goscinny &amp; A.Uderzo]&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6799842-111259105730050628?l=desikann.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://desikann.blogspot.com/feeds/111259105730050628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=6799842&amp;postID=111259105730050628&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111259105730050628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6799842/posts/default/111259105730050628'/><link rel='alternate' type='text/html' href='http://desikann.blogspot.com/2005/04/blog-post.html' title='ஆஸ்ட்ரிக்ஸ்'/><author><name>Desikan</name><uri>http://www.blogger.com/profile/03237144548606109528</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='08285147282555191053'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>13</thr:total></entry></feed>