tag:blogger.com,1999:blog-6561225950477795372009-05-31T03:50:00.705-07:00வள்ளுவன்ஒவ்வொரு குறளும் சொல்வதென்னT.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.comBlogger204125tag:blogger.com,1999:blog-656122595047779537.post-20593298371715167102009-05-31T03:47:00.000-07:002009-05-31T03:50:00.717-07:0092 வரைவின் மகளிர்1.அன்பு இல்லாமல்..பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இன்சொல் பேசும் பொது மகளிர்<br />துன்பத்தையே தருவர்.<br /><br />2.ஆதாயம் ஒன்றையே எண்ணி..அதற்கேற்ப இன்சொல் கூறும் பொதுமகளிர் உறவை நம்பி ஏமாறக்கூடாது.<br /><br />3.பணத்துக்காக மட்டுமே ஒருவனைத் தழுவும் பொய்யான தழுவல் என்பது..இருட்டு அறையில் ..பிணத்தை<br />தழுவினாற்போன்றது.<br /><br />4.அருளுடையோர்..பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாக எண்ணுவர்.<br /><br />5.இயற்கை அறிவும்,கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்..விலைமகளிரின் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.<br /><br />6.நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர்..ஒழுக்கமற்ற பொதுமகளிரை நாட மாட்டார்கள்.<br /><br />7.உறுதியற்ற மனம் படைத்தவர் மட்டுமே..தன் மனதில் பொருள் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள<br />பொதுமகளிரை விரும்புவர்.<br /><br />8.வஞ்சம் நிறைந்த பொது மகளிரிடம் ஒருவன் மயங்குதல் என்பது..அறிவில்லாதவனிடம் ஏற்படும்<br />மோகினி மயக்கமாகும்.<br /><br />9.விலை மகளை விரும்புதல்..தெரிந்தே நரகத்தில் விழுவதற்கு சமமாகும்.<br /><br />10.பொதுமகளிர் தொடர்பு,மதுப்பழக்கம்,சூதாட்டம் இம்மூன்றும் அமைந்தவர் வாழ்வு சிறப்புற அமையாது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-2059329837171516710?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-248309547766580182009-05-13T18:02:00.000-07:002009-05-13T18:03:24.957-07:0091.பெண் வழிச் சேறல்1.கடமையுடன் செயல் புரிபவர்கள்..இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதக்கூடாது.<br /><br />2.கடமை தவறி..மனைவியின் பின்னால்..சுற்றித் திரிபவன் நிலை வெட்கப்படும் செயலாகும்.<br /><br />3.மனைவியின் துர்க்குணத்தை திருத்தமுடியாது பணியும் கணவன்.. நல்லோர் முன் நாணித் தலைக்குனிவான்.<br /><br />4.மனைவிக்கு அஞ்சி நடப்பவனின் செயலாற்றல் சிறப்பாக அமையாது.<br /><br />5.நல்லவர்க்கு தீங்கு செய்ய அஞ்சுபவன்..தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.<br /><br />6.மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவர்..தேவாம்சம் பொருந்தியவர்கள் போல சிறப்பான நிலையில் வாழ்ந்தாலும்<br />பெருமை இல்லாதவர் ஆவர்.<br /><br />7.மனைவியின் எல்லாக் கட்டளைக்கும் கீழ்படிந்து நடப்பவனை விட மான உணர்வுள்ள பெண்மை சிறந்ததாகும்.<br /><br />8.மனைவியின் விருப்பப்படி நடப்பவர் ..நண்பர்கள் பற்றி,நற்பணிகள் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.<br /><br />9.ஆணவப் பெண்கள் இடும் கட்டளைக்கு கீழ்ப்படிபவனிடம் ,சிறந்த அறநெறிச் செயல்களோ ..சிறந்த<br />அறிவாற்றலோ இருக்காது.<br /><br />10.சிந்திக்கும் திறன்,உறுதியான மனம் கொண்டவர்கள்..பெண்களிடமே பழியாகக் கிடக்க மாட்டார்கள்<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-24830954776658018?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-11635859320305787932009-05-03T07:51:00.000-07:002009-05-03T07:52:09.243-07:0090.பெரியாரைப் பிழையாமை1.ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தலே..நம்மை காத்திடும் காவல்கள்<br />அனைத்தையும் விடச் சிறந்த காவலாகும்.<br /><br />2.பெரியோர்களை மதிக்காமல் நடந்தால்..நீங்காத துன்பத்தை அடைய நேரிடும்.<br /><br />3.பகையை அழிக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்கள் பேச்சைக் கேட்காது இழித்துப் பேசினால்..அவன் தன்னைத்தானே<br />அழித்துக் கொள்கிறான் என்று பொருள்.<br /><br />4.ஆற்றல் உடையவர்களுக்கு ஆற்றலற்றவர் தீமை செய்தால்..தங்கள் முடிவுக்காலத்தை அவர்களே<br />அழைத்துக் கொள்வது போலாகும்.<br /><br />5.வலிமை பொருந்திய அரசின் கோபத்துக்கு ஆளானவர்கள் எங்கு சென்றாலும் உயிர் வாழ முடியாது.<br /><br />6.தீயால் சுட்டால் கூட ஒரு வேளை உயிர் பிழைக்கலாம்..ஆற்றல் மிக்கவரிடம் தவறிழைப்பவர் தப்பிப்<br />பிழைக்க முடியாது.<br /><br />7.பெருஞ்செல்வத்துடன் சுகமாக இருந்தாலும்..பெரியோரின் கோபத்துக்கு ஆளானவர்கள் முன் அனைத்தும்<br />பயனற்றதாய் விடும்.<br /><br />8.மலை போன்ற பெருமை கொண்ட பெரியவர்களை குலைக்க நினைத்தால்..பெருஞ்செல்வந்தரும் குடியோடு அழிவர்<br /><br />9.உயர்ந்த கொள்கை உடைய பெரியோர்கள்..கோபமடைந்தால் அரசனும்..அரசு இழந்து அழிவான்.<br /><br />10.வசதி வாய்ப்புக்கள்,வலிமையான துணைகள் உடையவராக இருந்தாலும் சான்றோரின் சினத்தை எதிர்த்துத்<br />தப்பிப் பிழைக்க முடியாது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-1163585932030578793?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-21541181341319734642009-04-21T08:32:00.000-07:002009-04-21T08:33:35.515-07:0089.உட்பகை1.இன்பம் தரும் நிழலும்,நீரும் கேடு விளைவிக்கக்கூடியதாக இருந்தால் அவை தீயவை ஆகும்.அதுபோலத்தான்<br />உறவினரின் உட்பகையும்.<br /><br />2.வெளிப்படையாக தெரியும் பகைவர்களைவிட உறவாடி கெடுக்க நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாக<br />இருக்க வேண்டும்.<br /><br />3.உட்பகைக்கு அஞ்சி தன்னை பாதுகாத்துக் கொள்ளாதவனை..அப்பகை பச்சை மண்பாண்டத்தை அறுக்கும்<br />கருவி போல அழித்துவிடும்.<br /><br />4.மனம் திருந்தா உட்பகை உண்டாகுமானால்..அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டை<br />உண்டாக்கும்.<br /><br />5.நெருங்கிய உறவுகளிடையே தோன்றும் உட்பகை..அவர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய துன்பங்களை<br />உண்டாக்கும்.<br /><br />6. உற்றாரிடம் பகைமை ஏற்படுமானால்..அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது அரிதான செயலாகும்.<br /><br />7.ஒரு செப்பு சிமிழின் மூடி பொருந்தி இருப்பது போல வெளிப்பார்வைக்குத் தெரியும்..அதுபோல உட்பகை<br />உள்ளவர் ஒன்றாக இருப்பது போலத் தெரிந்தாலும், பொருந்தி இருக்க மாட்டார்கள்.<br /><br />8.அரத்தினால் அறுக்கப்பட்ட இரும்பு வலிமை இழப்பது போல..உட்பகை குலத்தின் வலிமையை குறைத்துவிடும்.<br /><br />9.எள்ளின் பிளவு போன்று சிறியதாக இருந்தாலும்..உட்பகை குடியைக் கெடுக்கும்.<br /><br />10.மனதால் உடன்பட்டு இல்லாதவருடன் கூடி வாழ்வது என்பது ஒரு சிறு குடிசையில் பாம்புடன் <br />வாழ்வது போல அச்சம் தருவதாகும்<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-2154118134131973464?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-16590844030723147292009-04-06T10:17:00.001-07:002009-04-06T10:17:59.703-07:0088.பகைத்திறம் தெரிதல்1.பகை என்பது பண்புக்கு மாறுபட்டதாதலால்..விளையாட்டாகக்கூட பகை கொள்ள்க்கூடாது.<br /><br />2.படை வீரர்களுடன்கூட பகை கொள்ளலாம்.ஆனால் செயலாற்றல் மிக்க அறிஞர்களின் பகை கூடாது.<br /><br />3.தனியாக இருந்து பகையை தேடிக் கொள்பவன்..புத்தி பேதலித்தவனைவிட முட்டாளாகக் கருதப்படுவான்.<br /><br />4.பகையையும் நட்பாகக் கருதி பழகும் பெருந்தன்மையை உலகம் போற்றும்.<br /><br />5.தனக்குப் பகையோ..இரு பிரிவு..துணையோ இல்லை..அப்படிப்பட்ட சமயத்தில் அந்த பகைவரில் ஒருவனை<br />இனிய துணையாக்கிக் கொள்வதே அறிவுடைமை.<br /><br />6.பகைவனைப் பற்றி ஆராய்ந்து அறிந்திருந்தாலும்..இல்லாவிட்டாலும்..கேடு ஏற்படும் காலத்தில் அவனை அதிகம்<br />நெருங்காமலும்..நட்புக்காட்டியும் சும்மா இருக்க வெண்டும்.<br /><br />7.நம் துன்பத்தை, அறியாத நண்பருக்கு சொல்லக்கூடாது.அதுபோல நம் பலவீனத்தையும் பகைவரிடம் <br />வெளிப்படுத்தக்கூடாது.<br /><br />8.செய்யும் வகையை உணர்ந்து,தன்னையும் வலிமைப் படுத்திக் கொண்டு,தற்காப்பும் தேடிக்கொண்டால் <br />பகைவரின் ஆணவம் அடங்கிவிடும்.<br /><br />9.முள் மரத்தை செடியிலேயே வெட்ட வேண்டும்..பகையையும் அது முற்றும் முன்னே வீழ்த்திட வேண்டும்.<br /><br />10.பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள்..மூச்சு விட்டாலும் ..உயிரோடு இருப்பதாக <br />சொல்ல முடியாது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-1659084403072314729?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-46206727672059945372009-04-02T10:10:00.000-07:002009-04-02T10:11:48.778-07:0087.பகைமாட்சி1.மெலியோரை விட்டுவிட்டு..வலியோரை எதிர்த்து போராட நினைப்பதே பகைமாட்சி.<br /><br />2.அன்பற்றவராய்..துணை யாரும் இல்லாதவராய்.தானும் வலிமையற்றவராயிருப்பவர் <br />பகையை எப்படி வெல்லமுடியும்?<br /><br />3.பயப்படுபவனாய்,அறிவு இல்லாதவனாய்,பண்பு இல்லாதவனாய்,ஈகைக்குணம் இல்லாதவனாய்<br />இருப்பவனை வெல்லுதல் எளிது.<br /><br />4.சினத்தையும்,மனத்தையும் கட்டுப்படுத்தாதவனை எவரும்,எப்போதும்,எங்கும் வெல்லலாம்.<br /><br />5.நல்வழி நாடாமல்,பொருத்தமானவற்றைச் செய்யாமல்,பழிக்கு அஞ்சாமல்,பண்பும் இல்லாமல்<br />இருந்தால் எளிதில் வெல்லப்படுவான். <br /><br />6.யோசிக்காத சினம் உடையவனையும்,பேராசைக் கொண்டவனையும் பகையாக ஏற்று எதிர்கொள்ளலாம்.<br /><br />7.தன்னுடன் இருந்துக்கொண்டு,தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனை<br />பொருள் கொடுத்தாவது பகைவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.<br /><br />8.குணம் இல்லாதவன்,குற்றம் பல செய்தவன் ஆகியவர்களுக்கு துணை யாரும் இருக்கமாட்டார்கள்.<br />அதனால், அவனை பகைவர்கள் எளிதில் வீழ்த்துவர்.<br /><br />9.அறிவற்ற கோழைகள், எதற்கும் பயப்படும் இயல்புடையோர் ஆகியோரின் பகைவர்கள் எளிதில் வெற்றிப் பெறுவர்.<br /><br />10.கல்வி கற்காதவர்களைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய முடியாதவனிடம் என்றும் புகழ்<br />வந்து சேராது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-4620672767205994537?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-73563767027852783032009-03-26T08:29:00.000-07:002009-03-26T08:30:11.306-07:0086.இகல்1.மக்களுடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாத மனமாறுபாடு தீய பண்பாகும்.<br /><br />2.ஒருவன் வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஈடுபட்டால் மாறுபாடு காரணமாக<br />அவனுக்கு துன்பம் தரும் எதையும் செய்யாதிருக்க வேண்டும்.<br /><br />3.மனமாறுபாடு என்னும் நோயை..தங்கள் மனத்தை விட்டு அகற்றினால் நீடித்த புகழ் உண்டாகும்.<br /><br />4.துன்பத்துள் பெரும் துன்பம் பகையுணர்வு..அதை அகற்றினால் இன்பத்திலேயே பெறும் இன்பமாகும்.<br /><br />5.மனதில் மாறுபாடு உருவானால் அதற்கு இடம் தராது..நடக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்களை வெல்லுதல் முடியாது.<br /><br />6.மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி எளிது என எண்ணுபவர் வாழ்வு..விரைவில் தடம் புரண்டு கெட்டொழியும்.<br /><br />7.பகை உண்ர்வுள்ள தீய அறிவை உடையவர் வெற்றிக்கு வழிவகுக்கும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.<br /><br />8.மனதில் உண்டாகும் மாறுபாட்டை நீக்கிக்கொண்டால்.. நன்மையும்..இல்லையேல் தீமையும் விளையும்.<br /><br />9.தனக்கு நன்மை வரும் போது மாறுபாட்டை நினைக்கமாட்டான்.ஆனால் தனக்குத்தானே கேடு <br />தருவித்துக் கொள்ளும்போது அதை எதிர்ப்பான்.<br /><br />10.மாறுபாடு கொண்டு பகை உணர்வைக் காட்டுவோரை துன்பங்கள் தொடரும்.நட்புணர்வோடு<br />செயல்படுவோர்க்கு நற்பயன் விளையும்<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-7356376702785278303?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-6605183033608681752009-03-21T07:00:00.000-07:002009-03-21T07:01:33.252-07:0085.புல்லறிவாண்மை1.அறிவுப் பஞ்சமே கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்கள் அவ்வளவாக உலகால்<br />பொருட்படுத்தப்படுவது இல்லை.<br />2.அறிவற்றவன் மகிழ்ச்சியுடன் ஒரு பொருளை மற்றவனுக்குக் கொடுத்தால்...<br />அது அப்பொருளை பெறுகிறவன் பெற்றபேறு தான்.<br /><br />3.பகைவரால் கூட வழங்கமுடியா வேதனையை..அறிவற்றவர்கள்<br />தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.<br /><br />4.ஒருவன்...தன்னைத்தானே அறிவுடையோன் என எண்ணிக் கொள்ளும் ஆணவமே..<br />அறியாமை எனப்படும்..<br /><br />5.அறிவற்றவர்..தான் படிக்காத நூல்களையும் படித்ததுபோல காட்டிக் கொண்டால்..அவர்களுக்கு தெரிந்த <br />விஷயங்கள் பற்றியும் சந்தேகம் ஏற்பட்டுவிடும்.<br /><br />6.தனது குற்றத்தை அறிந்து நீக்காதவன் உடலை மறைக்க மட்டும் உடை<br />அணிவது மடைமையாகும்.<br /><br />7.நல்வழிக்கான அறிவுரைகளை ஏற்று...அதன்படி நடக்காத அறிவற்றவர்கள் தனக்குத்தானே<br />பெருந்தீங்கு செய்க் கொள்வர்.<br /><br />8.சொந்தபுத்தியும் இன்றி..சொல்புத்தியும் கேட்காதவர்கள் வாழ்நாள் முழுவதும்<br />அந்நோயினால் துன்பமடைவர்.<br /><br />9.அறிவு இல்லாதவன் தான் அறிந்ததை வைத்து அறிவுடையவனாகக் காட்டிக்கொள்வான்<br />ஆனால் அவனுக்கு அறிவுரை கூறும் அறிவுள்ளவன் அறிவற்ற நிலைக்கு தன்னையே தள்ளிக்<br />கொள்ள நேரிடும்.<br /><br />10.உலகத்தார் உண்டு என்று சொல்வதை ..இல்லை என்று கூறுகிறவன்...ஒரு பேயாக<br />கருதி விலக்கப்படுவான்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-660518303360868175?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com2tag:blogger.com,1999:blog-656122595047779537.post-48368747994758962862009-03-17T20:54:00.000-07:002009-03-17T20:55:57.866-07:0084.பேதைமை1.நமக்கு கேடி விளைவிப்பது எது..நன்மை தருவது எது..என அறியாது நன்மை விடுத்து கேட்டை நாடுவதே<br />பேதைமை எனப்படும்.<br /><br />2.நம்மால் இயலாத செயல்களை செய்ய விரும்புவது பேதைமைகளில் மிகப்பெரிய பேதைமை ஆகும்.<br /><br />3.வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும்,தேட வேண்டியதை தேடாமலும்,அன்பு காட்ட வேண்டியவரிடம்<br />அன்பு காட்டாமலும்,நன்மை எதையும் விரும்பாமையும் பேதைமையின் இயல்பு.<br /><br />4.நூல்களை படித்து உணர்ந்து,அவற்றை பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் செய்துவிட்டு தாங்கள் மட்டும் அப்படி<br />நடக்காவிட்டால் அவர்கள் பேதைகள் ஆவார்கள்.<br /><br />5.தன்னிச்சையாக செயல்படும் ஒரு பேதை..ஏழேழு பிறப்பிற்கும் துன்பமெனும் சேற்றில் அழுந்தி கிடக்க நேரிடும்.<br /><br />6.ஒழுக்க நெறி இல்லாத ஒரு மூடன்..ஒரு செயலை மேற்கொண்டால்..அதைத் தொடரவும் முடியாமல்..அச்செயலும்<br />கெட்டு தானும் தண்டனை அடைவான்.<br /><br />7.அறிவில்லாதவனிடம் சேரும் பெரும் செல்வம் அயலார் சுருட்டிக் கொள்ள பயன்படுமேயன்றி..பாசமுள்ள<br />உறவினர்களுக்கு பயன்படாது.<br /><br />8.முட்டாளின் கையில் பொருள் கிடைத்து விட்டால்..அவன் நிலை பித்து பிடித்தவன் கள்ளையும் குடித்து<br />மயங்கும் கதை ஆகிவிடும்.<br /><br />9.அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது..ஏனெனில் அவர்களிடமிருந்து பிரியும் போது<br />வருத்தம் ஏற்படாது.<br /><br />10.அறிஞர்கள் கூட்டத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது அசுத்தத்தை மிதித்த காலை கழுவாமல் படுக்கையில்<br />வைப்பது போன்றது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-4836874799475896286?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-65223547533518039582009-03-10T09:46:00.000-07:002009-03-10T09:47:30.236-07:0083.கூடா நட்பு1.மனதார இல்லாமல் வெளியே நட்பு பாராட்டுவான் நட்பு..இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போன்ற<br />கல்லுக்கு ஒப்பாகும்.<br /><br />2.உற்றார் போல இருந்து அப்படி இல்லாதவரின் நட்பு..விலை மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக<br />வேறுபட்டு நிற்கும்.<br /><br />3.பல நூல்களை கற்றுத் தேர்ந்த போதிலும்..பகை உணர்வு படைத்தோர் மனம் திருந்துவது நடக்காத காரியம்.<br /><br />4.சிரித்துப் பேசி..சீரழிக்க நினைப்பவரின் நட்புக்கு, அஞ்சி ஒதுங்கவேண்டும்.<br /><br />5.மனம் வேறு..செயல் வேறாக இருப்பவர்களின் நட்புக்கு அஞ்சி ஒதுங்க வேண்டும்.<br /><br />6.நண்பர் போல பகைவர் பழகினாலும்..அவர் சொல்லும் சொற்களில் அவர்களது உண்மைத் தன்மை வெளிப்படும்.<br /><br />7.பகைவரின் சொல் வணக்கம் என்பது..வளையும் வில் போல தீங்கு விளைவிக்கூடியது.<br /><br />8.பகைவர் வணங்கும் கையினுள்ளும் கொலைக்கருவி இருக்கும்.அவர் கண்ணீர் விட்டாலும் அது போலிக்கண்ணீரே<br /><br />9.வெளியே நண்பர் போல மகிழ்ந்து அகத்தில் இகழ்கின்றவரின்..நட்பை நலிவடையச்செய்ய நாமும் அதே முறையை<br />கைப்பிடிக்க வேண்டும்.<br /><br />10.பகைவருடன் பழகும் காலம் வரும்போது..முகத்தளவில் நட்புக் கொண்டு வாய்ப்பு வரும் போது அந்த நட்பை<br />விட்டுவிட வேண்டும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-6522354753351803958?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-26941890702872320812009-03-06T23:01:00.001-08:002009-03-06T23:01:56.169-08:0082.தீ நட்பு1.அன்பு மிகுதியால் பழகுபவர்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பை <br />குறைத்துக் கொள்வதே நல்லது.<br /><br />2.தனக்கு வேண்டும் போது நட்புச் செய்து..பயன் இல்லாத போது நட்பு நீங்குபவர்களின்<br />நட்பைப் பெற்றாலும்..இழந்தாலும் ஒன்றுதான்.<br /><br />3.பயனை எதிப்பார்க்கும் நண்பர்..பொருளை மட்டுமே எதிர்ப்பார்க்கும் விலைமாதர்,கள்வர்<br />போன்றவர்களுக்கு ஒப்பாவார்.<br /><br />4.போர்க்களத்தில்..நம்மைத் தள்ளிவிட்டு ஓடும் அறிவற்ற குதிரையைப் போன்றவர் நட்பைப்<br />பெறுவதைவிட அந்த நட்பு இல்லாததே சிறந்ததாகும்.<br /><br />5.தீய நட்பு..பாதுகாப்பாக அமையாததாகும்...அவர்களுடன் நட்பு கொள்வதைவிட அந்நட்பை<br />ஏற்காமல் இருப்பதே நலம்.<br /><br />6.அறிவில்லாதவரின் நட்பைவிட..அறிவுள்ளவர்களிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு<br />நன்மை தருவதாகும்.<br /><br />7.சிரித்துப்பேசி நடிப்பவரின் நட்பைவிட பகைவர்களால் வரும் துன்பம் பத்து கோடி மடங்கு நன்மை <br />தருவதாகும்.<br /><br />8.நிறைவேற்ற முடியும் செயலையும் முடிக்க விடாதவர் உறவை..அவர் அறியாதபடி மெல்ல மெல்ல<br />விட்டு விட வேண்டும்.<br /><br />9.சொல் ஒன்று,செயல் ஒன்று என்றுள்ளவர்களின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.<br /><br />10.தனியாக உள்ளபோது இனிமையாக பேசி..பொது மன்றத்தில் பழித்துப் பேசுவோர் நட்பு நம்மை<br />சிறிதும் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-2694189070287232081?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-88408150675046415832009-02-25T06:20:00.001-08:002009-02-25T06:20:35.962-08:0081.பழைமை1.பழகிய நண்பர்கள் ...உறவை அழியாமல் பாதுகாப்பதே பழைமை என்பதாகும்.<br /><br />2.பழைய நண்பர்களின் உரிமையைப் பாராட்டும் கடமைதான் சான்றோர்களின் உண்மையான நட்பாகும்.<br /><br />3.பழைய நண்பர்கள் உரிமை எடுத்துக்கொண்டு செய்யும் காரியங்கள்.. நாமே<br />செய்ததுபோல எண்ணாவிடில்.. நட்பு பயனற்றுப்போகும்.<br /><br />4.பழைய நட்பின் உரிமையால்... நண்பர்கள் கேளாமலேயே ஒரு செயல் புரிந்தாலும்..<br />நல்ல நண்பர் எனப்படுபவர் அதை ஏற்றுக் கொள்வர்.<br /><br />5.வருந்தக்கூடிய செயலை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை மட்டுமல்ல..<br />மிகுந்த உரிமையே என்று எண்ண வேண்டும்.<br /><br />6.நீண்டநாள் நண்பகள் தமக்கு கேடு செய்வதாக இருந்தாலும் நட்பின் இலக்கணம்<br />தெரிந்தவர்கள் அந்த நட்பைத் துறக்க மாட்டார்கள்.<br /><br />7.பழைய நண்பர்கள் அன்புடன் அழிவு தரும் செயல்களைச் செய்தாலும்<br />நட்பு கொண்டவர்கள் அன்பு நீங்காமலிருப்பர்.<br /><br />8.பழகிய நண்பர் செய்த தவறுப்பற்றிப் பிறர் கூறினாலும் கேளாமலிருப்பவர்க்கு..<br />அந்நண்பர் தவறு செய்தால் அந்நட்பால் என்ன பயன்.<br /><br />9.பழைய நண்பரின் நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகு போற்றும்.<br /><br />10.பழகிய நண்பர்கள் தவறு செய்தாலும் ..அவர்களிடம் தமக்குள்ள அன்பை <br />நீக்கிக் கொள்ளாதவரை பகைவரும் விரும்புவர்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-8840815067504641583?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com2tag:blogger.com,1999:blog-656122595047779537.post-85727753652198304672009-02-23T08:38:00.000-08:002009-02-23T08:39:58.542-08:0080.நட்பாராய்தல்1.ஆராயாமல் கொள்ளும் தீய நட்பு பின்னர் விடுபட முடியா அளவுக்கு கேடுகளை உண்டாக்கும்.<br /><br />2.மீண்டும்..மீண்டும் ஆராயாமல் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு..இறுதியில் சாவதற்கு காரணமாகிற<br />அளவு துயரத்தைக் கொடுக்கும்.<br /><br />3.குணம்,குடிபிறப்பு,குற்றங்கள்,குறையா இயல்புகள் என அனைத்தும் அறிந்தே ஒருவருடன் நட்பு<br />கொள்ள வேண்டும்.<br /><br />4.உயர்குடியில் பிறந்து பழிக்கு நாணுகின்றவனின் நட்பை எப்பாடுபட்டாவது பெறவேண்டும்.<br /><br />5.தீமையான செயல்களை செய்யும் போது கண்டித்து சொல்லி,அறிவுரை வழங்கும் ஆற்றலுள்ளவரின்<br />நட்பே சிறந்த நட்பாகும்.<br /><br />6.தீமை வருவதும் நன்மைதான்..அப்போதுதான் நம் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியமுடியும்.<br /><br />7.அறிவில்லாதவருடன் செய்துக் கொண்ட நட்பிலிருந்து நீங்குதலே ஒருவனுக்கு பெரும் பயனுடையதாக<br />அமையும்.<br /><br />8.ஊக்கம் குறையும் செயல்களையும்,துன்பம் வரும்போது விலகும் நண்பர்களையும் விட்டுவிட வேண்டும்.<br /><br />9.இறக்கும் தறுவாயிலும்..நமக்கு கேடு வரும்போது கைவிட்டு ஓடிய நண்பர்களின் நினைப்பு வந்தால்..<br />அது உள்ளத்தை வறுத்தும்.<br /><br />10.குற்றமற்றவர்களை நண்பனாகக் கொள்ள வேண்டும்..இல்லாதவர் நட்பை எந்த விலைக் கொடுத்தாவது<br />விலக்க வேண்டும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-8572775365219830467?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-1582924526879617742009-02-18T08:55:00.000-08:002009-02-18T08:56:27.055-08:0079.நட்பு1.நட்பு கொள்வது போல அருமையானது இல்லை.நம் பாதுகாப்புக்கும்<br />அது ஏற்ற செயலாகும்.<br /><br />2.அறிவுடையார் நட்பு வளர்பிறை போல வளர்ந்து முழு நிலவாகும்.<br />அறிவற்றவர் நட்பு தேய்பிறையாய் குறைந்து மறையும்.<br /><br />3.படிக்கப்படிக்க நூல் இன்பம் தரும்...பழகப்பழக பண்புடையார்<br />நட்பு இன்பம் தரும்.<br /><br />4.நட்பு என்பது சிரித்து மகிழ மட்டும் அல்ல..நண்பர்கள் வழி மாறும் போது<br />இடித்து திருத்துவதற்கும் ஆகும்.<br /><br />5.நட்புக்கொள்ள ஒருவருடன் தொடர்பும்..பழக்கமும் இருக்க வேண்டும் என்பதல்ல..<br />அவருடைய ஒத்த மன உணர்ச்சியே போதுமானது.<br /><br />6.முகமலர்ச்சி மட்டும் நட்பு அல்ல..நெஞ்ச மலர்ச்சியும் உண்மையான நட்புக்கு தேவை.<br /><br />7.அழிவைத் தரும் தீமையை நீக்கி..நல்ல வழியில் நடக்கச்செய்து அழிவு காலத்தில் உடனிருந்து<br />துன்பப்படுவதே நட்பாகும்.<br /><br />8.அணிந்திருக்கும் உடை நெகிழும்போது..கைகள் உடனடி செயல்பட்டு சரி செய்வதுபோல<br />நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கிக் களைவதே சிறப்பு.<br /><br />9.மன வேறுபாடு கொள்ளாது தன்னால் முடியும் போதெல்லாம் உதவி செய்து நண்பனை<br />தாங்குவதே நட்பின் சிறப்பாகும்.<br /><br />10.நண்பர்கள் ஒருவருக்கொருவர்..இவர் இப்படி..நான் அப்படி என செயற்கையாக புகழும்போது<br />நட்பின் பெருமை குறையும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-158292452687961774?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com4tag:blogger.com,1999:blog-656122595047779537.post-82127100650917368122009-02-16T09:02:00.000-08:002009-02-16T09:03:56.996-08:0078.படைச்செருக்கு1.பகைவர்களே..என் தலைவனை எதிர்க்காதீர்கள்..அவனை எதிர்த்து நின்று மடிந்தவர் பலர்.<br /><br />2.வலிவற்ற முயலை குறிவைத்து வீழ்த்துவதைக் காட்டிலும்..வலிவான யானையைக் குறிவைத்து<br />அது தப்பினாலும் அது சிறப்புடையதாகும்.<br /><br />3.பகைவனை எதிர்க்கும் வீரமே மிக்க ஆண்மை.துன்பம் வரும்போது பகைவனுக்கும் உதவுதல்<br />ஆண்மையின் உச்சமாகும்.<br /><br />4.வீரன் என்பவன் கையில் உள்ள வேலை ஒரு யானையின் மேல் எறிந்து விட்டு போரைத் தொடர<br />தன் மார்பில் பாய்ந்த வேலை கண்டு மகிழ்பவன் ஆவான்.<br /><br />5.பகைவர் வீசும் வேல் தன் மீது பாயும் போது விழிகளை இமைத்தல் கூட வீரர்க்கு அழகல்ல.<br /><br />6.வீரன் தன் வாழ்நாட்களை கணக்கிட்டு ..விழுப்புண் படாத நாட்களெல்லாம்<br />வீணான நாட்கள் என்று எண்ணுவான்.<br /><br />7.புகழை விரும்பி உயிரைப்பற்றி விரும்பாத வீரரின்..காலில் கட்டப்படும் வீரக்கழல் கூட<br />தனிப்பெருமை பெற்றதாகும்.<br /><br />8.தலைவன் சினந்தாலும் போர்வந்தால் உயிரை எண்ணாமல் போர் செய்யும் வீரர்<br />சிறப்பு குன்றாதவன் ஆவான்.<br /><br />9.தான் சபதம் செய்தபடி போர்களத்தில் சாக வல்லவனை யாரும் இழிவாக பேசமுடியாது.<br /><br />10.தன்னைக் காக்கும் தலைவன் கண்களில் நீர் வருமாறு வீரமரணம் அடையும்<br />சந்தர்ப்பத்தை யாசித்தாவது பெற்றுக்கொள்ளுதல் பெருமை ஆகும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-8212710065091736812?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-87619710991726845192009-02-14T22:43:00.000-08:002009-02-14T22:44:05.103-08:0077.படைமாட்சி1.எல்லா வகைகளிலும் நிறைந்ததாய்..இடையூறுகளுக்கு அஞ்சாததாய்..போரிடக்கூடியதாய் உள்ள படை<br />அரசுக்கு தலையான செல்வமாகும்.<br /><br />2.போரில் அழிவு வந்தாலும்..இடையூறுகளுக்கு அஞ்சாமை..பழம் பெருமைக்கொண்ட படைக்கின்றி வேறு<br />எந்தப் படைக்கும் இருக்க முடியாது.<br /><br />3.எலிகள் கூடி பகையை கக்கினாலும்..நாகத்தின் மூச்சொலிக்கி முன்னால் நிற்க முடியாது.அதுபோல வீரன்<br />வெகுண்டு எழுந்தால் வீணர்கள் விழுந்து விடுவார்கள்.<br /><br />4.அழிவு இல்லாததாய்,வஞ்சனைக்கு இரையாகாததாய் ,பரம்பரை பயமற்ற உறுதி உடையதே உண்மையான<br />படையாகும்.<br /><br />5.எமனே கோபமடைந்து எதிர்த்து வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படை ஆகும்.<br /><br />6.வீரம்,மானம்,சிறந்த வழி நடத்தல்,தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப்<br />பாதுகாக்கும் பண்புகளாகும்.<br /><br />7.எதிர்த்து வரும் பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் ஆற்றல் அறிந்திருப்பின் அதுவே வெற்றிக்கு <br />செல்லாக்கூடிய சிறந்த படையாகும்.<br /><br />8.போர் புரியும் வீரம்,எதிர்ப்பைத் தாங்கும் ஆற்றல் இல்லை என்றாலும் படையின் அணி வகுப்புத் தோற்றம்<br />சிறப்புடையதாக அமைய வேண்டும்.<br /><br />9.சிறுத்து விடாமல்,தலைவனை வெறுக்காமல்,பயன்படா நிலை இல்லாமல்..இருக்கும் படையே வெற்றி பெறும்.<br /><br />10.நீண்ட நாள் நிலைத்திருக்கும் வீரர் பலரை கொண்டதாக இருந்தாலும்..தலைமை தாங்க சரியான தலைவர்<br />இல்லை எனில் அப்படை நிலைத்து நிற்காது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-8761971099172684519?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-61750587503906923622009-02-12T07:31:00.000-08:002009-02-12T07:32:22.934-08:0076.பொருள் செயல்வகை1.மதிக்கத்தக்காதவர்களையும்..மதிக்கச் செய்வது அவர்களிடம் உள்ள பணமே ஆகும்.<br /><br />2.பொருள் இல்லாதவரை இகழ்வதும்..உள்ளவரை புகழ்வதும் உலக நடப்பு ஆகும்.<br /><br />3.செல்வம் என்னும் அணையாவிளக்கு கையில் இருந்தால் நினைத்த இடத்திற்குச்<br />சென்று துன்பம் என்னும் இருளை போக்கிடலாம்.<br /><br />4.தீய வழியில் சேர்க்கப்படாத செல்வம் அறநெறியைக் காட்டி ஒருவருக்கு இன்பத்தைத் தரும்.<br /><br />5.பெரும் செல்வம் வந்தாலும் அது அருள் நெறியிலோ..அன்பு வழியிலோ வரவில்லை என்னும்போது<br />அதை புறக்கணித்து விட வேண்டும்.<br /><br />6.வரி,சுங்கம்,பகை நாடு,செலுத்தும் கப்பம் ஆகியவை அரசுக்குரிய செல்வமாகும்.<br /><br />7.அன்பு பெற்றெடுக்கும் அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலித்தாயால் வளர்க்கப்படும்.<br /><br />8.தன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு தொழில் செய்தல்..மலையின் மேல் ஏறி யானைகளின்<br />போரைப் பார்ப்பது போல எளிதானதாகும்.<br /><br />9.தன்னுடைய பகைவனின் செருக்கை அழிக்கவல்லது பொருளே ஆகும்.<br /><br />10.சிறந்ததான பொருளை ஈட்டியவர்க்கு..அறமும்..இன்பமும்..எளிதாக வந்து சேரும்<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-6175058750390692362?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com1tag:blogger.com,1999:blog-656122595047779537.post-42799013904071421312009-02-09T05:11:00.000-08:002009-02-09T05:12:55.113-08:0075.அரண்1.போர் செய்யச் செல்பவர்க்கும் கோட்டை சிறந்ததாகும்..பகைவர்க்கு அஞ்சித் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும்<br />கோட்டை பயன்படும்.<br /><br />2.தெளிந்த நீர்,பரந்த நிலம்,மலையும்,காடும் இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.<br /><br />3.உயரம்,அகலம்,உறுதி,அழிக்க முடியாத அமைப்பு இவை நான்கும் அமைந்திருப்பதே அரண்.<br /><br />4.காக்க வேண்டிய இடம் சிறியதாய்.மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய்,தன்னை எதிர்க்கும் பகைவரின் ஊக்கத்தை<br />அழிக்கக்கூடியதே அரண் ஆகும்.<br /><br />5.பகைவரால் கைப்பற்ற முடியாததாய்,உள்ளே தேவையான அளவு உணவுப் பொருள் கொண்டதாய்..போர் புரிய<br />எளிதானதாய் அமைந்ததே அரண் ஆகும்.<br /><br />6.தன்னிடம் உள்ளவர்க்கு எல்லாப் பொருளும் உடையதாய், போர்க்காலத்தில் உதவ வலிமை மிக்க வீரர்களை<br />உடையதே அரண் ஆகும். <br /><br />7.முற்றுகையிட்டும், முற்றுகை இடாமல் போர் செய்தும்,வஞ்சனை செய்தும் பகைவரால் கைப்பற்ற முடியாத<br />வலிமையுடையதே அரண் ஆகும்.<br /><br />8.முற்றுகை இடும் வல்லமை கொண்டு,உள்ளிருந்துக்கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில்<br />அமைந்ததே அரண்.<br /><br />9.போர் முனையில் பகைவர் அழியும்படி உள்ளிருந்துக்கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் பெருமைப்<br />பெற்றதே அரண்.<br /><br />10.கோட்டைக்கு தேவையான சிறப்புகள் இருந்தாலும்..உள்ளிருந்து போர் புரிபவர் திறமையற்றவராய் இருந்தால்<br />பயனில்லை.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-4279901390407142131?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com1tag:blogger.com,1999:blog-656122595047779537.post-42512849305218933302009-02-08T08:40:00.000-08:002009-02-08T08:41:40.264-08:0074.நாடு1.குறையா விளை பொருளும்,சிறந்த அறிஞர்களும் பழி இல்லா செல்வம் உடையவரும்<br />கொண்டதே சிறந்த நாடாகும்.<br /><br />2.மிக்க பொருள்வளம் கொண்டதாய்..எல்லோராலும் விரும்பத்தக்கதாய்,கேடு இல்லாததாய்<br />நல்ல விளைச்சல் உள்ளதாய் அமைவதே சிறந்த நாடு.<br /><br />3.வேற்று நாட்டு மக்கள் குடியேறும்போது ஏற்படும் சுமையைத் தாங்கி..அரசுக்கு வரிகளை<br />ஒழுங்காகச் செலுத்தும் மக்களையும் பெற்றதே சிறந்த நாடு.<br /><br />4.பசியும், நோயும், பகையும் இல்லாத நாடு சிறந்த நாடாகும்.<br /><br />5.பல குழுக்களால் உட்பகையும்,அரசில் பங்குக்கொள்ளும் கொலைகாரர்களும் இல்லாததே<br />சிறந்த நாடாகும்.<br /><br />6.பகைவரால் கெடுக்கப்படாததாய் கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ளதே<br />நாடுகள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.<br /><br />7.நிலத்தடி நீர்,மழை ஆகிய இரு வகை நீர் வளமும்..அதற்கேற்ப மலைத்தொடரும்..மலையிலிருந்து<br />வரும் நீர்வளமான ஆறும், பாதுகாப்பான அரணும் நாட்டிற்கு முக்கியம்.<br /><br />8.நோயற்ற வாழ்வு,விளைச்சல்,பொருள்வளம்,இன்பவாழ்வு,பாதுகாப்பு ஆகிய ஐந்தும்நாட்டிற்கு அழகு.<br /><br />9.இடைவிடா முயற்சியால் வளம் பெறும் நாடுகளைவிட..இயற்கையிலேயே வளங்களைக் கொண்ட<br />நாடே சிறந்த நாடாம்.<br /><br />10.நல்ல தலைவன் அமையாத நாட்டில் எல்லா வளங்கள் இருந்தாலும் பயனின்றிப் போகும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-4251284930521893330?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-82621233438474711642009-02-06T07:44:00.001-08:002009-02-06T07:46:06.204-08:0073.அவை அஞ்சாமை1.சொற்களின் அளவறிந்தவர்கள்..அவையிலிருப்போரை அறிந்து..பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.<br /><br />2.கற்றவரின் முன்..தான் கற்றதை அவர்கள் மனதில் பதிய சொல்லும் வல்லவர்..கற்றவர்களைவிட<br />கற்றவராக மதிக்கப்படுவர்.<br /><br />3.பகைவர்களைக் கண்டு அஞ்சாமல் சாகத்துணிந்தவர் பலர் உள்ளனர்..ஆனால்..அறிவுடையோர் உள்ள<br />அவையில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரே உள்ளனர்.<br /><br />4.அறிஞர்கள் அவையில் நாம் கற்றதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவு எடுத்துச் சொல்லி ..நம்மைவிட<br />கற்றவர்களிடம் தெரியாததைக் கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும்.<br /><br />5.அவையில் பேசும்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அஞ்சாமல் விடை அளிக்கும் அளவுக்கு ஏற்றவகையில்<br />கற்றிருக்க வேண்டும்.<br /><br />6. கோழைகளுக்கு வாளால் என்ன பயன்? அதுபோல அவையில் பேச அஞ்சுபவர் கற்றும் பயனில்லை.<br /><br />7.அவையில் பேச அஞ்சுபவன் கற்ற நூல்..போர்க்களத்தில் கோழையின் கையில் ஏந்தியுள்ள வாளுக்கு சமம்.<br /><br />8.அறிவுடையோர் உள்ள அவையில்..அவர்கள் மனதில் பதிய கருத்துக்களை சொல்ல முடியாதவர்..என்ன<br />படித்து என்ன பயன்?<br /><br />9.நூல் பல கற்றும் அறிஞர்கள் நிறைந்த அவையில் பேச அஞ்சுபவர்..கல்லாதவரைவிட இழிவானவர்களாக<br />கருதப்படுவர்.<br /><br />10.அவைக்கு அஞ்சி தாம் படித்ததைக் கேட்போர் கவரும் வண்ணம் கூற அஞ்சுபவர்..உயிருடன் இருந்தும்<br />இறந்தவர் ஆவார்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-8262123343847471164?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-36107321899271964012009-02-03T08:32:00.000-08:002009-02-03T08:33:24.442-08:0072.அவை அறிதல்1.ஒவ்வொரு சொல்லின் தன்மையை உணர்ந்த அறிஞர்கள், அவையினரின் தன்மையும் உணர்ந்து..அதற்கேற்ப<br />ஆராய்ந்து பேசுவார்கள்.<br /><br />2.சொற்களின் வழிமுறையறிந்தவர் அவையினரின் நேரத்தையும்,நிலையையும் உணர்ந்து சொல்ல வேண்டும்.<br /><br />3.அவையின் தன்மையை அறியாது..சொற்களை பயன்படுத்துவோர்களுக்கு சொற்களின் வகையும் பேசும் திறமையும்<br />கிடையாது.<br />4.அறிவாளிகளின் முன் அறிவாளியாகவும்..அறிவற்றவர் முன் அறிவில்லாதவர் போலவும் இருக்க வேண்டும்.<br /><br />5.அறிவாளிகள் மிகுந்த இடத்தில் பேசாத அடக்கம் ஒருவனுக்கு எல்லா நன்மைகளையும் தரும். <br /><br />6.அறிவுடையோர் முன் ஆற்றும் உரையில் குற்றம் ஏற்படின் அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு<br />சமமாகும்.<br />7.குற்றமற்ற சொற்களை தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துபவரிடம் அவர் கற்ற கல்வியின் பெருமை விளங்கும்.<br /><br />8.உணரும் தன்மை உள்ளவர் முன் கற்றவர் பேசுவதென்பது..தானே வளரும் பயிரில் நீர் ஊற்றுவதற்கு சமமாகும்.<br /><br />9.நல்ல அறிஞர்கள் சூழ்ந்த அவையில்..மனதில் பதியுமாறு பேசுபவர்..சொல்வன்மை உள்ளவர் ஆவார்..அறிவற்றோர்<br />அவையில் பேசாதிருப்பதே சிறந்தது.<br /><br />10.அறிவுள்ளவர்கள்..அறிவில்லாதவர் நிறைந்த கூட்டத்தில் பேசுவது தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய<br />அமிழ்தம் போல வீணாகிவிடும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-3610732189927196401?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-87769219603123800842009-01-31T05:23:00.001-08:002009-01-31T05:23:50.870-08:0071.குறிப்பறிதல்1.ஒருவன் ஏதும் சொல்லாமலேயே அவர் முகம் நோக்கி கருத்து அறிபவன் உலகத்துக்கு<br />அணிகலனாவான்.<br />2.ஒருவன் மனதில் உள்ளதை உணர வல்லவரை தெய்வத்தோடு ஒப்பிடலாம்.<br /><br />3.முகம்,கண்,இவற்றின் குறிப்புகளால் உள்ளக் குறிப்பை உணருபவரை எதைக் கொடுத்தாவது<br />நம் துணை ஆக்கிக் கொள்ள வேண்டும்.<br />4.ஒருவன் மனதில் உள்ளதை.. அவன் கூறாமலேயே அறிந்துக் கொள்பவர் போல மற்றவர்கள் <br />உறுப்பால் ஒன்று பட்டாலும் அறிவால் வேறுபட்டவர்கள்.<br />5.ஒருவனது முகக் குறிப்பு உள்ளத்தில் உள்ளதைக் காட்டிவிடும் எனும் போது..அதை உணர<br />முடியாதவர்களுக்கு கண்கள் இருந்தும் பயனில்லை.<br />6.ஒருவன் மனதில் உள்ளதை அவன் முகம்..தன் எதிரில் உள்ளதை காட்டும் கண்ணாடிப் போலக்<br />காட்டிவிடும்.<br />7.உள்ளத்தில் உள்ள விருப்பு,வெறுப்புகளை தெரிவிக்கும் முகத்தைவிட அறிவு மிக்கது ஏதுமில்லை.<br /><br />8.முகக் குறிப்பால் உள்ளத்தில் உள்ளதை அறிபவர் முன் ஒருவன் நின்றாலே போதுமானது ஆகும்.<br /><br />9.கண் பார்வையின் வேறுபாடுகளை புரிந்துக் கொள்ளக் கூடியவர்கள்..ஒருவரின் கண்களைப் பார்த்தே<br />அவரிடம் உள்ளது நட்பா..பகையா என கூறிவிடுவர்.<br />10.தாம் நுட்பமான அறிவுடையோர் என்பவர்..பிறர் மனத்தில் உள்ளதை ஆராய்ந்து அறிய பயன்படுத்துவது<br />அவர்களின் கண்களையே ஆகும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-8776921960312380084?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-65906539468818773592009-01-30T08:31:00.000-08:002009-01-30T08:32:41.356-08:0070.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்1.மன்னருடன் பழகுபவர் நெருப்பில் குளிர் காய்பவர்போல் அணுகியும்<br />அணுகாமலும் இருக்கவேண்டும்.<br /><br />2.மன்னர் விரும்புவதைத் தாம் விரும்பாமலிருத்தல்,அரசரால்<br />நிலையான ஆக்கத்தைப் பெற்றுத்தரும்.<br /><br />3.அரசரிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் தவறுகள்<br />நேராமல் காத்துக்கொள்ளவேண்டும்.அரசனுக்கு சந்தேகம் வந்துவிட்டால் தீர்ப்பது எளிதல்ல.<br /><br />4.வல்லமை உள்ள பெரியவர்கள் முன் மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும் <br />நகைப்பதையும் தவிர்த்து அடக்கமயிருக்கவேண்டும்.<br /><br />5.அரசர் பிறருடன் பேசும்போது அதை ஒட்டுக்கேட்கக்கூடாது.அது என்ன வென்றும்<br />கேட்கக்கூடாது.அவர் என்ன என்று சொன்னால் மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டும்.<br /><br />6.அரசர் குறிப்பறிந்து தக்க காலம் எதிர்நோக்கி வெறுப்பில்லாதவற்றையும்,<br />விருப்பமானவற்றையும் அவர் விரும்பும்படி சொல்லவேண்டும்.<br /><br />7.விரும்பிக்கேட்டாலும் பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்<br />பயனற்றவற்றை சொல்லாமல் விடவேண்டும்.<br /><br />8.அரசர் எனக்கு இளையவர் ..எனக்கு இன்னமுறையில் சொந்தம் என்று எல்லாம்<br />சொல்லாமல் நம் நிலைக்கு ஏற்றபடி நடக்கவேண்டும்.<br /><br />9.நாம் அரசரால் விரும்பபட்டோம் என்ற துணிவில் அரசர் விரும்பாதவற்றை <br />அறிவுடையோர் செய்யமாட்டார்கள்.<br /><br />10.நெருங்கி அரசருடன் பழகுவதாலேயே தகாத காரியங்களை செய்தால் அது<br />துன்பத்தையேத் தரும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-6590653946881877359?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-46502156888141998062009-01-28T05:15:00.000-08:002009-01-28T05:19:26.196-08:0069.தூது1.அன்பான குணம்,தகுதியான குடிப்பிறப்பு,அரசர் விரும்பும் சிறந்த பண்பு பெற்றிருப்பதே<br />தூதுவனின் தகுதிகளாகும்.<br /><br />2.அன்பு,அறிவு ஆராய்ந்து பேசும் சொல்வன்மை இம்மூன்றும் தூது செல்வோருக்கு தேவையான<br />பண்புகளாகும்.<br /><br />3.வேற்று நாட்டவனிடம்..தன் நாட்டிற்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைக்கும் தூதுவனே..<br />நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.<br /><br />4.தூது உரைப்போர்.. அறிவு,தோற்றம்,ஆய்ந்த கல்வி ஆகிய மூன்றும்..நிறைந்தவராக இருத்தல்<br />வேண்டும்.<br /><br />5.பலவற்றை தொகுத்திச் சொல்லி..பயனற்றவைகளை நீக்கி மகிழுமாறு சொல்லி..அரசனுக்கு<br />நன்மை உண்டாக்குபவனே தூதுவன்.<br /><br />6.கற்கவேண்டியவற்றை கற்று..பிறரின் பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில்<br />பதிய சொல்லி.. காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றனவே தூதுவன்.<br /><br />7.செய்யவேண்டிய கடமையை தெளிவாக அறிந்து,செய்யும் காலத்தை எதிர் நோக்கித் தக்க<br />இடத்தையும் ஆராய்ந்து சொல்பவனே தூதுவன்.<br /><br />8.துணிவு,துணை,தூய ஒழுக்கம் இவை மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.<br /><br />9.ஒரு அரசின் கருத்தை மற்றொரு அரசுக்கு எடுத்துக் கூறும்போது..வாய்த் தவறிக்கூட<br />குற்றமான சொற்களை சொல்லாதவனே தகுதியான தூதுவன் ஆவான்.<br /><br />10.தனக்கு அழிவு வந்தாலும்..அதற்காக பயப்படாது..தன் அரசனுக்கு நன்மையை உண்டாக்குபவனே<br />தூதுவன் ஆவான்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-4650215688814199806?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0tag:blogger.com,1999:blog-656122595047779537.post-54023454617803084792009-01-26T08:57:00.000-08:002009-01-26T08:58:36.813-08:0068.வினை செயல்வகை1.ஒரு செயலில் ஈடுபடும்முன் அச்செயலால் எழப்போகும் சாதக,பாதங்கள் பற்றி<br />ஆராயவேண்டும்..முடிவெடுத்தபின் காலந்தாழ்த்தக்கூடாது.<br /><br />2.மெதுவாக செய்யவேண்டிய காரியங்களை காலந்தாழ்த்தே செய்யலாம்.<br />ஆனால் விரைவாக செய்ய வேண்டியதை உடனே செய்யவேண்டும்.<br /><br />3.இயலும் இடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது.<br />இயலாத இடமாயின் அதன் வழி அறிந்து செயலை முடிக்க வேண்டும்.<br /><br />4.ஏற்ற செயல்.. எதிர்கொண்ட பகை இவற்றை முழுதும் முடிக்காது விட்டுவிட்டால்<br />அது நெருப்பைஅரைகுறையாக அணைத்தாற் போலாகிவிடும்.<br /><br />5.வேண்டிய போருள்,அதற்கான கருவி,காலம்,செயல்முறை,இடம் ஆகியவற்றை....<br />ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன் பார்த்துக்கொள்ளவேண்டும்.<br /><br />6.செயலை முடிக்கும் வகையும்,வரக்கூடிய இடையூறும்,முடிந்தபின் கிடைக்கும்<br />பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்யவேண்டும்.<br /><br />7.ஒரு செயலை செய்பவன் அச்செயலைக்குறித்து நன்கு அறிந்தவனின் கருத்தை<br />முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.<br /><br />8.ஒரு செயலில் ஈடுபடும்போதே ...அது தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்தல்<br />ஒரு யானையை பயன்படுத்தி மற்ற யானையை பிடிப்பது போன்றதாகும்.<br /><br />9.நண்பருக்கு...நல்ல உதவியை செய்வதைவிட..பகைவராய் உள்ளவரை தன்னுடன்<br />சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத்தக்கதாகும்.<br /><br />10.நம்மைவிட வலிமையுள்ளவரை எதிர்க்க நம்முடன் உள்ளவரே அஞ்சும்போது...<br />வேண்டுவது கிடைக்குமானால் வலியோரை பணிந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்வர்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/656122595047779537-5402345461780308479?l=radhakrishnantv.blogspot.com'/></div>T.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/18409842294176045634sowmyatheatres@gmail.com0