tag:blogger.com,1999:blog-36703584563425350152008-08-05T02:51:06.355+05:30காலப்பெருங்களம்ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-75420981595564331512008-08-05T01:08:00.010+05:302008-08-05T02:51:06.377+05:30நிச்சயம் ஒருநாள் எங்கள் படைப்புகள் அறியப்படும்<span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;">"ஆப்பிரிக்க இலக்கியங்களுக்கோ, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களுக்கோ எங்கள் சமகாலத்து இலக்கியங்கள் குறைந்து போய்விடவில்லை. ஆனால் அவை உலக அளவுக்கு அறியப்படவில்லை. அங்கீகாரம் பெறவுமில்லை. எங்கள் கண்களுக்கு தெரியாத ஏதோ சூட்சுமமான விதிகளின் பிரகாரம் இலக்கியத்தரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. <span style="color: rgb(204, 0, 0);">நிச்சயம் ஒருநாள் எங்கள் படைப்புகள் அறியப்படும்.</span>"</span><br /> <span style="color: rgb(0, 102, 0);">- <span style="font-weight: bold;">சுந்தர ராமசாமி</span>.</span><br /><br /><span style="font-weight: bold;">1] எதற்காக நம் இலக்கியங்கள் பிறமொழிகளில், மொழிபெயர்க்கப்பட வேண்டும்?</span><br />நாகரிகப் பழமையும்,<br />முற்காலத்திலேயே அடைந்திருந்த பண்பாட்டுச்செழுமையும்,<br />இலக்கியப் புலமையும், பொறியியற்திறனும், கட்டிடக்கலைவடிவமைப்பும்,<br />சிற்பப்பெருங்கலையில் சிறந்தோங்கிய தன்மையும்,<br />வணிகமேலாண்மையில் பழந்தின்று கொட்டைபோட்ட முதிர்ச்சியும், போர்க்கலையும், பரதமும், கூத்தும், இயற்கைவிவசாயமுறைகளும்,<br />தளராத வீரமும், அகலாத ஈரமும் இன்னும் பலபெருஞ்சிறப்புக்களையும்<br />தன்னகத்தே கொண்டு, மூவாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இனம் ஒன்று இருக்கிறது.அதன் இலக்கியங்கள் உலக மனித சமுதாயத்தின் பொக்கிஷம்.<br />என்பதனை பிறதேசத்தவர் உணர்ந்து, அவ் இலக்கியங்களைக் கற்று, அதன்படி ஒழுகி தத்தம் சந்ததியர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் படி செய்வதற்காக!<br /><br /><span style="font-weight: bold;">2]எந்தெந்த மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும்?</span><br />எந்தெந்த மொழிகள் உலகில் எழுதவும், பேசவும் பயன்படுகின்றனவோ,<br />அந்தந்த மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்படவேண்டும்.<br /><br /><span style="font-weight: bold;">3]ஏற்கனவே பல தமிழ் இலக்கியங்கள் பிறமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதே? அவற்றால் எந்தப்பயனும் இல்லையா?</span><br />சே<span style="font-weight: bold;">க்</span>ஷ்பியரின் நூல்களை உலகம் முழுவதும் விழுந்து விழுந்து படிக்கிறது.<br />திருக்குறளை, சிலப்பதிகாரத்தை, மணிமேகலையை, திருவாசகத்தை<br />படிப்பறிவுள்ள உலகமக்களில் எத்தனை பேர் அறிவார்கள்? பிறமொழிநூல்களைவிட நம் நூல்கள் தரம் குறைந்தனவா? ஒருபோதும்<br />இல்லை. எங்கள் நூல்கள் மொழிமாற்றம் செய்யப்படுகையில் எளியமொழிநடையில் கருத்துக்கள் வாசகருக்கு போய் சேரக்கூடிய வகையில் எழுதப்படாமை, அவற்றை பிரபல்யம் அடையாமல் செய்துவிட்டது.<br /><br /><span style="font-weight: bold;">4] நம் இலக்கியங்கள் சிறப்பாக மொழிமாற்றம் அடையும் வேகத்தைக்கூட்ட</span><br /><span style="font-weight: bold;"> இனி என்ன செய்ய வேண்டும்?</span><br />1.அரசாங்க உதவிகளை மட்டுமே நம்பியிருத்தலை அறவே நிறுத்தல்.<br /><br />2.இலாப நோக்கம் அற்ற, அரசியல் மத சாதி சார்பு அற்ற தமிழ் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தல்.<br /><br />3.நிபந்தனைகள் அற்ற, பிரதியுபகாரம் எதிர்பார்க்காத நிதியுதவிகளை<br />தேடிப் பெறுவதற்காக தனிப் பிரிவு ஆரம்பித்தல்.<br /><br />4. பொருத்தமான, திறமையான, பல்மொழியறிவுமிக்க தமிழ் அறிஞர்களை சிறந்த ஊதியம் அளித்து நிறுவனத்தில் இணைத்தல்.<br /><br />5. பொருத்தமான, திறமையான, குறித்த பிறமொழியில் சிறந்த அறிவும், சுவாரசியமான எழுத்துத் திறனும் உள்ள அறிஞர்களை, மொழி வாரியாக,<br />சிறந்த ஊதியம் அளித்து நிறுவனத்தில் இணைத்தல்.<br /><br />6.நிறுவனத்தின் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தக் கூடிய வகையில்<br />பல குறுங்கால, நீண்டகாலதிட்டங்களைத் தீட்டி, விரைந்து அமுல்ப்படுத்தல்.<br /><br />7.மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களை சிறந்த தரத்தில் அச்சிட்டு<br />இலாபம் இல்லாதவகையில் விலை நிர்ணயிக்கப்பட்டு வெளியிடுதல்.<br /><br />8."பிரிட்டிஷ் கவுன்சில்" எவ்வாறு உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தையும்<br />ஆங்கில இலக்கியத்தையும் பரப்புகின்றதோ, அதே போல், பல நாடுகளிலும்<br />கிளைகள் திறந்து, தமிழ்மொழியையும், தமிழிலக்கியங்களையும் பயிற்றுவி்த்தல். தமிழ் தெரிந்திருத்தல் ஒரு பெருமைக்குரிய விடயம் என்ற எண்ணக்கருத்தை பிறநாட்டவரிடம் ஏற்படுத்தல்.<br /><br />9.மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களை மின்னூலாக்கி, எவரும் இணையத்திலிருந்து இலகுவாக பதிவிற்க்கம் செய்யக்கூடியவாறு அமைத்தலுடன், வருங்காலத்தில் அறிவியற்புரட்சியால் வரும் எந்தவொரு உபயோகமான ஊடகங்களின் மூலமும் நம் தயாரிப்புக்கள் மற்றவரை இலகுவாக சென்றடையுமாறு செய்தல்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(51, 0, 153);">மேற்கூறப்பட்ட தன்மைகளை உடைய தன்னார்வ தமிழ்த் தொண்டு நிறுவனங்கள், துளியாய்..., தூறலாய்..., மழையாய்..., பெருங்கடலாய்ப் பெருக வேண்டும் என்பதே தமிழுணர்வுள்ள தமிழர்களின் ஒரே பெருவிருப்பு!</span>ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-12848308630199950982008-08-03T23:11:00.013+05:302008-08-04T01:07:00.444+05:30உருப்படாத தி.மு.க. விற்கான எதிர்க்கணைகள் சில!!1]பொழுதைப் போக்க இலவசத்தொலைக்காட்சி வழங்கும் கருணாநிதியால்,<br />ஏன் உயிரைக்காக்க இலவசத்தலைக்கவசம் வழங்க முடியவில்லை?<br /><br />2]மரணதண்டனையை நீக்க கோரும் கனிமொழி, மதுரையில் சன்குழும தொழிலாளர்கள் அழகிரி ஆதரவாளர்களால் பெற்றோல்குண்டு வீசிக்கொல்லப்பட்டமைக்கு எதிராக, போர்க்கொடி உயர்த்தவில்லை?<br /><br />3]தமிழ் எங்கள் மூச்சு என்று கூவும் கழகத்தின் தூண்களில் ஒருவரான<br />ஆற்காடு வீராசாமி, தன் பெயரின் ஆங்கிலஎழுத்துக்களில் வீராஸ்வாமி<br />என்று மாற்றியது ஏன்?<br /><br />4]மத்திய அரசே கைவசம் உள்ளபோது, தமிழகத்திற்கு எவ்வளவோ முன்னேற்ற அடிக்கற்கள் நாட்டியிருக்கலாம். அதை விடுத்து கனிமொழிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகளை எடுத்தளிப்பதிலேயே குறியாக நிற்கின்ற கருணாநிதியைப் போய் யார் "நிர்வாகத்திறன் கொண்டவர்" என்று<br />புகழ்ந்தது?<br /><br />5] தமிழ் நாட்டிலேயே தலையை பிய்த்துக்கொண்டு நடக்கின்ற மின்சாரப் பற்றாக்குறைச் சண்டைகளுக்கு மத்தியில், இலங்கைக்கு தனுஷ்கோடி-மன்னார் வழியாக மின்சாரம் வழங்குவதைப் பற்றி ஆற்காடு வீராசாமி வாயே திறக்காதது<br />ஏன்?<br /><br />6] உலகத்தமிழர் தலைவராக கழகக் கண்மணிகள் மார்தட்டும் கருணாநிதியால்<br />பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் திறக்கப்பட முடியாத நிலையில் கன்னட வெறியர்களால் தடுக்கப்பட்டு வரும் வள்ளுவர் சிலையை ஏன் திறக்க முடியவில்லை?<br /><br />7] பெரியார் சீடர் என்று தன்னைச்சொல்லும் கருணாநிதி எதற்காக பெண்தெய்வமாக போற்றப்படும் கண்ணகிக்கு சிலை வைத்தார்?<br />[சிலை வைத்தது தவறு இல்லை. பெரியார் சீடர் கடவுளுக்கு சிலை வைப்பது ஏன்?]<br /><br />8] திருக்குறளை கசடறக் கற்று உரை எழுதி, "வாழும் வள்ளுவரே" என்று<br />தொண்டர்கள் அழைப்பதை அநுமதித்து வரும் கருணாநிதி,<br />திருக்குறளை வாழ்கையில் பெரும்பாலும் கடைப்பிடிக்காதது ஏன்?<br />[இந்த தலைப்பில் எழுதத்தொடங்கினால் ஒரு பெரும் நூலே எழுதலாம்.]<br /><br />9] கவிதை என்ற பேரில் முரசொலியில் கருணாநிதி எழுதும் சொற்கலவைகளுக்கும் கவித்தரத்திற்கும் சம்பந்தம் குறைவாயுள்ளமை பற்றி,<br />அவருடன் கலந்து உறவாடும் வைரமுத்து,பா.விஜய் போன்றவர்கள் வாய்திறக்காமைக்கு காரணம் என்ன?<br /><br />10] வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டியில்<br />தனக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தமைக்கு காரணம் கலைஞர்தான் என்று கூறியுள்ளார். உண்மையான திறமையின் அடிப்படையில்<br />பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகாமல், சிபாரிசின் அடிப்படையில் மதன்கார்க்கிக்கு இடம் கிடைத்தது எவ்வாறு?<br /><br />11] இவ்வாறு தன் தோழர் மகனுக்கு சிபாரிசு பண்ணி இடமளித்த கழகத்தலைவர்<br />கழகத்தின் அடிமட்டத்தொண்டர்களின் சந்ததிகளுக்கும் சிபாரிசு செய்து உதவலாமே? என்ற பகுத்தறிவு அப்பாவித் தொண்டர்களுக்கு வராமற் போனது ஏன்?<br /><br />12] தன் உறவினருக்குமேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக்கோரி லஞ்சதடுப்புபிரிவு அதிகாரியிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பூங்கோதைக்கு<br />எதிராக ஆதாரங்கள் இருந்தும், வழக்கு தொடராதது ஏன்?<br /><br />13] (பகுத்தறிவு இயக்கமாக வெளிக்காட்டிக்கொள்ளும்) "திராவிட முன்னேற்றக் கழகத்தின் எந்த உறுப்பினரும் சாமி கும்பிடக்கூடாது; கும்பிட்டால் கட்சியில் இருக்க கூடாது. கடவுள் பக்தி உள்ள எவரும் தி.முகவிற்கு வாக்களிக்கத் தெவையில்லை." என்று ஏன் வெளிப்படையாக கருணாநிதி தெரிவிக்கவில்லை?<br /><br />14] வெறுமனே பேச்சில் கொல்லுவேன்,வெட்டுவேன் என்று கூறிய காடுவெட்டி குருவை, அதிகாலையில் கதவை உடைத்து கைது செய்த தி.மு.க.அடிமைக் காவல் அதிகாரிகள், மதுரையில் இரு தமிழர்களின் கொலைக்கு காரணமான<br />செயல்புயல் மு.க.அழகிரியின் வீட்டுக் கதவை ஏன் தடவக்கூட முடியவில்லை?<br /><br />15] விடிதலைப்புலிகளின் தூண்களில் ஒருவரான சு.ப.தமிழ்ச்செல்வன் மரணத்திற்காக கவிதை எழுதிய கருணாநிதி, தமிழ்ச்செல்வனின் படுகொலையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோரை,<br />தம் பெயர்ப் பட்டியை கழற்றிவைத்துவிட்டு வந்த காவற்துறையினரைக்கொண்டு<br />அடித்துக் கலைப்பித்தது ஏன்?ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-49164410525744300532008-04-13T15:00:00.003+05:302008-04-13T15:04:59.783+05:30விழித்தெழுக என் தேசம்! - இரவீந்திரநாத் தாகூர்<strong><span style="color:#663300;">இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,</span></strong><br /><strong><span style="color:#663300;">எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,</span></strong><br /><strong><span style="color:#663300;">சிறைவாச மின்றிஅறிவு வளர்ச்சிக்கு</span></strong><br /><strong><span style="color:#663300;">எங்கே பூரணவிடுதலை உள்ளதோ,</span></strong><br /><strong><span style="color:#663300;">குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்</span></strong><br /><strong><span style="color:#663300;">வெளி உலகின் ஒருமைப்பாடு</span></strong><br /><strong><span style="color:#663300;">எங்கே உடைபட்டுத்துண்டுகளாய்ப்போய்விட படவில்லையோ,</span></strong><br /><strong><span style="color:#663300;">வாய்ச் சொற்கள் எங்கேமெய்நெறிகளின்அடிப்படையிலிருந்து</span></strong><br /><strong><span style="color:#663300;">வெளிப்படையாய் வருகின்றனவோ,</span></strong><br /><strong><span style="color:#663300;">விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி </span></strong><br /><strong><span style="color:#663300;">பூரணத்துவம் நோக்கிதனது கரங்களை நீட்டுகிறதோ,</span></strong><br /><strong><span style="color:#663300;">அடிப்படை தேடிச் செல்லும்தெளிந்தஅறிவோட்டம் </span></strong><br /><strong><span style="color:#663300;">எங்கேபாழடைந்த பழக்கம் என்னும்பாலை மணலில்</span></strong><br /><strong><span style="color:#663300;">வழி தவறிப்போய்விட வில்லையோ,</span></strong><br /><strong><span style="color:#663300;">நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும்</span></strong><br /><strong><span style="color:#663300;">இதயத்தை எங்கேவழிநடத்திச் செல்கிறாயோ, </span></strong><br /><strong><span style="color:#663300;">அந்தவிடுதலைச் சுவர்க்க பூமியில்</span></strong><br /><strong><span style="color:#663300;">எந்தன் பிதாவே!</span></strong><br /><strong><span style="color:#663300;">விழித்தெழுகஎன் தேசம்!</span></strong>ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-61931533759862114172008-03-22T12:53:00.003+05:302008-03-22T13:20:38.197+05:30பழகிய பாரதி !<a href="http://bp2.blogger.com/_6t_5ds8-L4g/R-S5sbl376I/AAAAAAAAABQ/CtFpsG0xatk/s1600-h/b.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5180469644354908066" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_6t_5ds8-L4g/R-S5sbl376I/AAAAAAAAABQ/CtFpsG0xatk/s400/b.jpg" border="0" /></a><br /><p></p><br /><p>பாரதியாரை நேரில் கண்டவர்கள் எவராவது இருப்பார்களா என்று பலவருடம் தேடியலைந்திருக்கிறேன். எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடும் பாண்டிச்சேரியில் உள்ள பாரதி நினைவகமும் போகும் போதெல்லாம் அவரைச் சந்தித்த மனிதர்களில் ஒருவரையாவது பார்க்க முடியுமா என்ற ஆதங்கம் உருவாகும். பாரதியாரை தன்னுடைய பள்ளிவயதில் பார்த்துப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற முதியவரைப் பற்றி அறிந்த போது உடனே காண வேண்டும் என்ற வேட்கை உருவானது.</p><br /><p>நெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் உள்ள பழைய வீடொன்றில் உள்ளே மர நாற்காலியில் அமர்ந்தபடி. பாரதியாரை தான் பார்த்துப் பழகிய தன்னுடைய பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பேசினார் 90 வயதைக்கடந்த கல்யாண சுந்தரம். 1999 ல் நடந்த இந்தச் சந்திப்பின் இரண்டு ஆண்டுகளில் அவர் காலமானார். அந்த சந்திப்பின் வரிவடிவம்.</p><br /><p>தூரத்துமலைகளின் நிசப்தம் நிரம்பிய விசிபுரம் எனப்படும் விக்கிர சிங்கபுரம். வயல்களின் செழுமை காணுமிடமெல்லாம் பச்சையாக விரிந்து கிடக்கிறது. மேகங்கள் சிதறிய வானம். தென்னைகள் நிரம்பிய நிலவளம். ஆற்றோட்டத்தின் வற்றாத நீர்வளம். அதிக பரபரப்பு இல்லாத மென்மையான வாழ்க்கை. </p><br /><p>கல்யாண சுந்தரம் பற்றிக் கேள்விபட்டு அவர் வீடு தெரியாமல் தேடி அலைந்த போது கோவிலின் முன்பாக இருந்த வயதான நபர் யாரைத் தேடுகிறீர்கள் என்று சுத்தமான அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் கேட்டது வியப்பாக இருந்தது. அந்த மனிதர் சட்டை கூட அணிந்திருக்கவில்லை. நாலு முழ வேஷ்டியும் அருவிக்கரை துண்டும் போட்டு இருந்தார்.</p><br /><p>கல்யாண சுந்தரம் என்றதும் எந்தக் கல்யாண சுந்தரம் என்று ஆங்கிலத்திலே தொடர்ந்தார். விபரம் சொன்னதும் அப்படி ஒருவர் இருக்கிறாரா என்று தெரியாது எதற்கும் கேட்கலாம் என்றபடியே தனது பையன் அமெரிக்காவில் இருப்பதால் தான் சில வருடம் அமெரிக்கா சென்று இருந்ததாகவும் தற்போது ஊரிலே தங்கிவிட்டதாக சொன்னார். கல்யாண சுந்தரம் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை அவரது உறவினர்கள் திருநெல்வேலியில் வங்கியில் வேலை செய்கிறார்கள் என்றவுடன் கண்டுபிடிப்பது சுலபமாகயிருந்தது.</p><br /><p>தன்னைப் பார்க்க வந்திருப்பவர் யார் என்று புரியாத குழப்பத்துடன் அருகில் வரச்சொன்னார். அருகில் அமர்ந்து விவரித்த போது உற்றுப்பார்த்தபடியே உங்களை பார்த்து இருக்கிறேனா என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். ஏதோ யோசனைக்குப்பிறகு என்னை எப்படி உங்களுக்குத் தெரியும். யாரு அடையாளம் சொன்னது? என்னிடம் கேட்டார். </p><br /><p>பாரதியாரைப் பற்றி படிச்சிருக்கேன். பாரதியாரோட பழகின யாராவது ஒருத்தரை நேர்ல பாக்கணும் ரொம்ப நாள் ஆசை. அப்படி விசாரிச்சிகிட்டு இருக்கும் போது உங்களைப் பத்தி சொன்னாங்க. ஆனா முகவரி கிடைக்கலை. அதைத் தேடி பிடிச்சி வர்றதுக்குள்ளே ரெண்டு மாசமாகி போச்சி என்றேன்.</p><br /><p>என்னை உற்று நோக்கியபடியே உங்களுக்குப் பாரதியாரை ரொம்பப் பிடிக்குமா ? என்று கேட்டார். மனம் பின்னோக்கி செல்லத்துவங்கியது.</p><br /><p>என்னோட பள்ளி வயசில பாரதியாரை வாசிக்க ஆரம்பிச்சேன். அந்தக் கவிதைகளை வாசிக்க வாசிக்க உடம்புக்குள்ளே விறுவிறுனு ஏதோ செய்யுது. திடீர்னு உலகத்து மேலே கோவம் வருது. வீட்ல சொல்லிக்குடுத்த தேவாரம் திருவாசகம் எல்லாத்தையும் விட பாரதியார் மேல பெரிய ஈர்ப்பு உருவானது.பாரதியாரைப் படிக்கிறது வெவ்வேறு வயசில வெவ்வேறு அனுபவம் குடுத்திருக்கு. கல்லூரி நாட்களில் எப்பவும் என் பைக்குள்ளே பாரதியார் கவிதைகள் புத்தகமிருக்கும். பல முறை எட்டயபுரத்துக்குப் போயிருக்கேன். எங்கோ அந்த ஊரோட ஆழத்தில பாரதியாரோட எலும்புகள் முணங்கிக்கிட்டு இருக்கிற மாதிரி சப்தம் கேட்டிருக்கு. என்னோட ஆதர்சனங்களில் பாரதியாரும் ஒருத்தர் என்றபடியே அவரிடம் நீங்க பாரதியாரை எப்போ பாத்தீங்க என்று கேட்டேன்.</p><br /><p>அவரும் தன் நினைவில் ஆழ்ந்து போனபடியே சொன்னார் . 1919 ம் வருஷம் பாரதியார் கடையத்துக்கு வந்தாரு. அப்போ நான் சின்னப் பையன். புதுசா எது வந்தாலும் வேடிக்கை பாக்கிற மாதிரிதான் பாரதியாரையும் வேடிக்கை பார்க்கப் போனோம். அவர் மனைவி செல்லம்மா வீடு அக்ரஹாரத்தில் இருந்தது. அவர் மனைவியோட சகோதரர் அப்பாத்துரை தான் பாரதியாரை கவனிச்சுக்கிட்டு இருந்தார்.ரொம்ப மிடுக்கான ஆளு, குரல் கார்வையா இருக்கும். தெருவிலே நேரே நடந்து மிலிட்டரிக்காரர் மாதிரிப் போவாரு. சாயங்காலமாச்சுன்னா கல்யாணியம்மன் கோயிலுக்குப் போவாரு... அவருக்கு அக்ரஹராத்தில மதிப்பே இல்லை. யாரோடயும் சேரவும் மாட்டாரு... அவங்களும் இவரை ரொம்பத் தாழ்வாதான் நடத்தினாங்க. என்று விவரித்தபடியே மௌனத்தில் ஆழ்ந்து போனார்.</p><br /><p>அதைப் பத்தி நானும் வாசித்திருக்கிறேன். பாரதியார் நல்லா பாடுவார்னு நாமக்கல் கவிஞர் தன் புத்தகத்திலே ஒரு சம்பவத்தை எழுதியிருக்கிறார். அதிகாலையில் எழுந்து பாரதியார் பாடுனதை அவர் கேட்டதாகவும் அது மிகசிறப்பாக இருந்தாகவும் வருது. நீங்க அவர் பாடி கேட்டு இருக்கீங்களா?</p><br /><p>இல்லை என்று மறுத்தபடியே சொன்னார்.</p><br /><p>அப்போ நான் ரொம்பச் சின்னப் பையன். அக்ரஹாரத்தில இருந்த எல்லாருக்கும் நல்லாப் பாடத் தெரியும். ஆனா.. பாரதியார் பாடி நான் கேட்டதில்லை. தனியா மலைப்பக்கம் போயி உட்கார்ந்துகிட்டு அவரா பேசிகிட்டு ஏதையாவது சொல்லிகிட்டு இருக்கிறதை பாத்து இருக்கேன். அப்போ அவரைப் பத்தி அதிகம் தெரியாதில்லையா. அதனாலே ரொம்பப் பழக முடியலை. ஆனா இப்போ ரேடியோவில பாரதியார் பாட்டு போடுறப்போ.. நிறைய தடவை என்னை மீறி அழுதிருக்கேன். இப்பேர்பட்ட மனுசனை நாம நேர்ல பாத்து இருக்கமேனு.. மனசுக்குள்ளே சந்தோஷமாவும் இருக்கு. நெல்லைல அந்தக் காலத்தில ஊர்வலம் போறவங்க கூட பாரதியார் பாட்டைப் பாடிகிட்டு போனாவங்க. கேட்டா அது நம்ம மனசில அப்படியே வந்து ஒட்டிகிடும்.</p><br /><p>அது நிஜம் என்பது அவரது பார்வையிலே தெரிந்தது. மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் அவரைப் பத்தின ஞாபகங்களைச் சொல்லுங்க என்றேன்.</p><br /><p>ஒரு நாள் ஊருக்கு வெளியில ஒரு கழுதைக் குட்டி படுத்துக் கிடந்தது. கழுதைக் குட்டி கிட்டே போய் பாரதியார் உட்கார்ந்துகிட்டு அதைத் தடவித் தடவி விட்டுக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருந்தாரு. சின்னப்பிள்ளைகளுக்குத் தர்ற மாதிரி முத்தமெல்லாம் குடுத்தாரு. பார்க்கிறவங்க இந்த ஆளுக்குப் புத்தி கெட்டு போச்சுன்னு சொல்லிக்கிட்டுப் போனாங்க. இவரு அதைப் பத்தியெல்லாம் கவலைப்படலை என்றபோது குறுக்கிட்டு கேட்டேன் "உங்களுக்கு அப்போ வயது என்ன இருக்கும்?".</p><br /><p>பள்ளிக்கூடத்தில படிச்சுக்கிட்டு இருக்கேன். பத்து, பனிரெண்டு வயசு இருக்கும். பாரதியாரோட மக சகுந்தலா நான் படிச்ச ஸ்கூல்ல சின்ன வகுப்பிலே படிச்சுக்கிட்டு இருந்தா... நான் பாரதியாரைப் பார்க்கப் போனா வீட்டில திட்டுவாங்க.. யாருக்கும் தெரியாமத்தான் போயி பார்ப்பேன். என் வயசு பையன்க நாலஞ்சு பேர் தினம் போயி அவரைப் பாத்து பேசுவோம். அவரு எங்களைக் கூட்டிக்கிட்டு ஊரைவிட்டு வெளியே வந்து மலையடிவாரத்தில் உட்கார்ந்து பேசிகிட்டு இருப்பாரு.அக்ரஹராத்தில இருந்த ஆட்கள் அவரைக் கண்டா முகத்தைத் திருப்பிகிடுவாங்க. அப்பாத்துரை மட்டும் தான் அத்திம்பேர்னோ, ஓய் பாரதின்னோ கூப்பிட்டுப்பேசுவார்.</p><br /><p>பாரதியார் தினம் கடுதாசி எழுதுவார். அதை தபால்ல சேர்க்க வேண்டியது எங்க வேலை. அவருக்கு கஞ்சாப் புகைக்கிற பழக்கம் இருந்துச்சு. அதை ஏற்பாடு பண்றதுக்கு ஆறுமுகம்னு ஒருத்தன் இருந்தான். புகைகுழல் ஏற்பாடு பண்ண, வீட்டுக் கிணற்றில இருக்க தண்ணிக்கயிற்று நுனியை வெட்டி எடுத்துக்கிடுவாரு. அது சன்னமா இருக்கும். அதை மெல்லுசாப் பொசுக்கி அதை ஈரத்துணியிலே சுத்தி ஏற்பாடு செய்வாங்க. புகைக்க புகைக்க அவர் கண்ணு துடிச்சுக்கிட்டேயிருக்கும். செவசெவனு பாக்கவே பயமா இருக்கும். ஆனா குழந்தை மாதிரி பேசுவார் எப்பவாவது அவர் கவிதைகளைப் பாடுவாரு. எழுதி வச்சதப் பாடுறாரா, இல்லை இப்போதான் புனைஞ்சு பாடுறாரான்னு தெரியாது. ஆனா எதுக்க இருக்க ஆள் அவர் குரலைவிட்டு விலக முடியாம இருக்கற மாதிரிப் பாடுவாரு என்று விவரித்தார்.</p><br /><p>அவரோட கவிதைகளை அப்பவே வாசிச்சு இருக்கீங்களா? என்றதுமஸ்வதந்திர கீதங்கள், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு போன்ற பொஸ்தகங்களை எல்லாம் நாலணாவிற்கு விற்பாரு. நாங்க வாங்கிப் படிப்போம். இப்போ அவர் புஸ்தகத்தை 60 ரூபா, நூறு ரூபான்னு விக்கிறாங்களே எதுலயும் அப்பிடிச் சுத்தமா பதிப்பிச்ச கவிதை இருக்காது என விளக்கம் சொன்னார். தினசரி பாரதியாரைப் பார்ப்பீங்களா? அவரோட யாராவது நண்பர்களா இருந்தார்களா என்று கேட்டதும் கல்யாணசுந்தரம் தன் நினைவில் அமிழ்ந்தபடியே, ஆறு மாசம் இருக்கும். தினம் பார்ப்போம். அவர் அக்ரஹாரத்தில இருந்தாலும் அதுக்குக் கட்டுப்பட்டு நடக்கலை. நல்ல மீச வச்சிருந்தார். அல்பெர்கா கோட்டு, விறைப்பா கையை வெச்சுக்கிட்டு நடப்பாரு. அவர் நடந்து போகும்போது சில பேர் அவர் முன்னாடியே, பிரஷ்டன்... பிரஷ்டன்னு சொல்லி விலகிப் போறதப் பாத்திருக்கேன். யாரும் அவருக்கு மதிப்புக் குடுக்கலை. கொஞ்சநாள் அவரை அக்ரஹாரத்துக்குள்ளவே சேத்துக்கலை. வெளியே ஒரு இடத்தில தனியா இருந்தாரு. வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு கொடுத்திட்டு வருவாங்க. சில நாள் சலவை தொழிலாளி வீட்ல கூடச் சாப்பிடுவார். அவருக்குப் பேதம் கிடையாது.</p><br /><p>ஒரு நாள் பாரதியார் இன்னைக்குச் 'சாகாமல் இருப்பது எப்படி?' ன்னு சொற்பொழிவு செய்யப் போறாருன்னு தண்டோரா போடச் சொன்னாரு. நிறைய கூட்டம். அங்கே வந்து நின்னுகிட்டு.நீங்க எல்லாம் உயிரோட இருந்து என்ன பிரயோசனம்னு சொல்லுங்க நான் சாகாமா இருக்கிறது எப்படினு சொல்லித்தர்றேனு சொன்னாரு. கூட்டத்தில ஒரே சலசலப்பு. பாரதியார் கூட்டத்தைப் பாத்துக்கிட்டே, ' ஜெயபேரிகை கொட்டடா' பாட்டைப் பாடினாரு. கண்ணு அப்பிடி அம்பு மாதிரி கூர்மையா இருக்கு. கொட்டடா, கொட்டடான்னு அவர் சொல்ற வேகத்தைக் கேட்ட தண்டோரா போடுறவன் நம்மளைத்தான் சொல்றாரு போல இருக்குன்னு நினைச்சு நிஜமாவே தண்டோராவை அடிச்சான்.அவ்வளவு வீரமாப் பாடுவாரு. அந்த குரல் மனசிலயே இருக்கு. </p><br /><p>அவருக்குப் பொய் பேசினா பிடிக்காது. திட்டுவாரு. கோபப்பட்டு எதாவது செய்துட்டாலும் பிறகு மன்னிப்புக் கேட்டுக்கிடுவாரு. வயது வித்தியாசம் பாக்காம மன்னிப்புக் கேட்டுடுவாரு. அவரோட மதிப்பு அன்னைக்கு எனக்குத் தெரியிலே. வீட்டுல திட்டுவாங்கன்னு பயந்துகிட்டே பழகுவோம். </p><br /><p>யார்கிட்டயும் நிமிர்ந்து பாத்துதான் பேசுவாரு. அவரு தெய்வத்தை வேண்டுறபோது எதிரே நிக்கற மாதிரிதான் அம்மா... சக்தினு உரக்கச் சொல்வாரு. எல்லாத்துலயும் அவருக்கு சக்தி இருக்கிறமாதிரிதான்சொல்வாரு. </p><br /><p>அவர்கிட்டே ரொம்ப நாளா யானையோட விளையாடுற பழக்கம் இருந்துச்சு. கோவில்ல இருந்த யானைகிட்டே போயி, பாகன் கிட்டே காசு குடுத்துட்டு யானையைத் தொட்டுப் பாக்கட்டா' ன்னு கேப்பாரு. அதுக்கு என்ன, பாருங்க சாமின்னு சொல்வான். தும்பிக்கையைச் சுத்தி கையைப் போட்டுக்கிட்டு முத்தம் குடுப்பாரு. சில சமயம் பல்லுல மெல்ல அதைக் கடிப்பாரு. அதுக்கு வலிக்கவா போகுது .விளையாடிகிட்டேயிருப்பார். அதுதான் பின்னாடி அவருக்கு வினையா வந்துச்சு. யானைன்னா ஆச்சரியமா பார்ப்பாரு. சின்னப்பிள்ளை மாதிரி என்றார்.</p><br /><p>கல்யாணசுந்தரம் பேச்சின் ஊடே யாரோயோ அழைத்து காபி கொண்டு வரச்சொன்னார். வீட்டிலிருந்த ஒரு பெண் எங்கள் பேச்சை உன்னிப்பாக கவனித்தபடியே நின்று கொண்டிருந்தார். உங்களோட குடும்பத்தைப் பத்தி சொல்லுங்க? என்றேன்.</p><br /><p>நான் 'குற்றாலக் குறவஞ்சி' எழுதின திரிகூடராசப்பக் கவிராயர் வம்சாவழியில பிறந்தவன். நாடகம், கவிதை, கதையெல்லாம் எழுதியிருக்கிறேன். பாரதியார் மேல கூட கவிதைகள் பாடியிருக்கேன். இப்போ எனக்கு 92 வயசாகுது. கல்கியில அந்தக் காலத்துல 'கண்ணா மூச்சி'ங்கற என் கதை பரிசு வாங்கியிருக்கு. எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு அரசாங்க வேலைக்குப் போயிட்டேன். பாரதியோட பழகுற சந்தர்ப்பம் கிடைச்சது என் வாழ்க்கையில பெரிய பாக்கியம். யாருக்கு அது கிடைக்கும் என்றார்.</p><br /><p>புதுமைப்பித்தனைத்தெரியுமா? என்று கேட்டேன். அவரது முகம் இறுக்கம்கலைந்து இயல்பானது. </p><br /><p>அவரு எனக்கு சொந்தக்காரர்தான். பார்த்ததில்லையே தவிர கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கதைகளைப் படிச்சிருக்கிறேன். புதுமைப்பித்தனை விருத்தாசலம்னு சொன்னாத்தான் இங்க பலருக்கும் தெரியும். அவுங்க அப்பா தாசில்தார். பெரிய ஆராய்ச்சியாளர். புஸ்தகமெல்லாம் எழுதியிருக்கிறாரு என்றபடியே வீட்டிலிருந்த பெண்ணிடம் விருத்தாசலம் வீடு திருநெல்வேலியில் எங்கே இருந்தது என்று விசாரிக்கத் துவங்கினார்.</p><br /><p>காபி வந்தது. அந்த பெண் அய்யாவுக்கு பழசு எல்லாம் அப்படியே ஞாபகமிருக்கும். நீங்க கேளுங்க என்று என்னிடம் சொன்னார். இப்போ பாரதியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? என்றேன்.அவர்கூட கொஞ்ச காலம் பழகினதுக்கு எனக்கே இந்த மரியாதை கிடைக்குதுன்னா பாத்துக்கோங்க. எல்லாம் தெய்வ சித்தம் என்றபடியே கண்களை மூடிக்கொண்டார்.</p><br /><p>சற்றே தயக்கத்துடன் உங்க கையை நான் தொட்டுப் பாக்கலாமா? என்று கேட்டேன். புரியாதவரைப் போல எதுக்காக என்றார். பாரதியாரைத் தொட்டு இருக்கீங்கல்லே அதான். என்றதும் அவராக என் கைகளை எடுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டார்.</p><br /><p>நடுங்கிக் கொண்டிருக்கும் அந்த வயசாளியின் கைகளில் இருந்த வெம்மை என் உடலினுள் பரவுகிறது. கண்ணுக்குத் தெரியாத மகாகவிஞனின் கரத்தைத் தொடுவது போன்ற மன நெருக்கமும் சந்தோஷமும் உண்டானது. சில நிமிசங்களில் அவரது கண்களில் கண்ணீர் வழியத் துவங்கியது. பேச்சற்ற மௌனத்தில் இருவரும் அமர்ந்திருந்தோம். இவரது மனதிலும் பாரதியார் மெல்லத் ததும்பிக் கொண்டிருந்தார். அந்த மௌனத்தைக் கலைக்காமல் அங்கிருந்து விடைபெற்றுத் திரும்பி வந்துவிட்டேன். </p><br /><p>மௌனத்தைக் காப்பாற்றுவது எளிதானதில்லை என்று எனக்குத் தெரியும்.</p><br /><p>- எழுத்தாளர் ராமகிருஷ்ணன் [<a href="http://www.sramakrishnan.com/">http://www.sramakrishnan.com/</a>]</p><br /><p></p><br /><p></p>ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-10641153014572521152008-03-22T12:23:00.005+05:302008-03-22T12:36:45.395+05:30தமிழக அரசின் தமிழ்ப்பணிகளில் சில திருத்தங்கள் தேவை!தமிழைச் செம்மொழியாக அறிவித்திருப்பதைக் குறித்து நாமனைவரும் மிக்க பெருமிதம் கொண்டுள்ளோம். இச்செம்மொழியை மேம்படுத்த இந்திய அரசு ஏராளமான நிதி ஒதுக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. மைசூரிலிருக்கும் தமிழ்ச் செம்மொழி உயராய்வு மையத்தைச் சென்னைக்கு மாற்ற முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது தமிழக அரசு. இம்மையத்தின் முதல்கட்டப் பணிகளாகக் கீழ்க்கண்டவை முன்மொழியப்பட்டுள்ளன.<br /><br />Definitive Editions of Ancient Tamil Works<br />Translation of Ancient Tamil Works<br />Historical Grammar of Tamil<br />Antiquity of Tamil: An Inter-Disciplinary Research<br />Synchronic And Diachronic Study of Tamil Dialects<br />India As a Linguistic Area<br />Digital Library For Ancient Tamil Studies<br />Online Teaching of Classical Tamil<br />Corpus Development For Classical Tamil Works<br />Visual Episodes on Classical Tamil<br /><br />இத்திட்டத்தின்படி சங்க இலக்கியங்களை நல்ல உரையுடன் கூடிய ஒரு பதிப்பாகக் கொண்டு வரச் சில தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஒரு முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழில் நிறைஞர் மற்றும் முனைவர்ப்பட்ட (M.Phil, Ph.D) ஆய்வுகள் மேற்கொள்ளும் மற்றும் மேற்கொண்ட மாணவர்களுக்குச் சங்க இலக்கியம் மற்றும் சமய இலக்கியங்களில் வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கென நல்ல தமிழ் அறிஞர்களைக் கொண்டு வகுப்புகள் எடுக்கப் பயிற்சிப் பட்டறைகளுக்காகப் பல்லாயிரம் ரூபாய் செலவழிக்கப்படுகின்றது. இத்திட்டங்கள் தமிழை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்குடன் தொடங்கப்பட்டவை. எனவே மிகவும் போற்றத்தக்கன.<br /><br />ஆனால் தமிழை மேம்படுத்த அரசு செய்யக்கூடியது இவை மட்டும்தானா? இத்திட்டங்களால் மெய்யான பயன் ஏதேனுமுண்டா? இப்பட்டியலில் உள்ள சில திட்டங்கள் அவசியமானவைதானா என்று ஆராயப்புகுந்தோமானால், அவசியமில்லை என்றுதான் தோன்றுகிறது. பல வருடங்களுக்கு முன்னமே திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் சிறந்த தமிழ் அறிஞர்களின் துணைகொண்டு நல்ல உரையுடன் கூடிய சங்க இலக்கிய நூல்களைப் பதிப்பித்திருக்கின்றனர். அப்புத்தகங்கள் இப்பொழுது கிடைப்பதில்லை. ஏற்கனவே செய்துவிட்ட இந்தப் பணியை மறுபடியும் தொடக்கத்திலிருந்து செய்வதனால் என்ன பயன் விளையும்? அப்புத்தகங்களை மறுபதிப்பு செய்து குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்கும் வகை செய்தாலே போதுமே. அதற்கு இப்பொழுது செலவாகும் தொகையில் ஒரு சிறுபங்கு தொகைதான் செலவாகும். மக்களுக்கும் நல்ல சங்க இலக்கியப் பதிப்பு கிடைக்கும்.<br /><br />தமிழில் நிறைஞர் மற்றும் முனைவர்ப்பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களோ, தங்கள் பாடத்திட்டங்களில் சங்க இலக்கியங்களையும் சமய இலக்கியங்களையும் ஏற்கனவே படித்து அதைப்பற்றி நன்கு அலசி விவாதம் செய்யும் திறன்பெற்றிருக்கின்றனர். அவர்களுக்கு மேலும் அவற்றைப் பற்றியே வகுப்புகள் எடுப்பதால் என்ன முன்னேற்றம் ஏற்படும்? இதுவும் அவசியமில்லாத செலவாகவல்லவா இருக்கின்றது. இப்பயனில்லாத திட்டங்களுக்குப் பதில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்துப் பல பயன்தரும் திட்டங்களை அரசு செயல்படுத்தலாம். நிறைஞர் மற்றும் முனைவர்ப்பட்ட மாணவர்களுக்குச் சங்க இலக்கிய வகுப்பெடுப்பதை விடுத்து, அவர்களைப் பல குழுக்களாகப் பிரித்துத் தமிழ் இலக்கியங்களை நுட்பமாகப் பல வகையில் ஆராயும் வகை செய்யலாம். இப்படி ஆராய்ந்து தெளிந்த கருத்துகளைப் பொதுமக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் எளிய தமிழ்நடையில் சிறுசிறு புத்தகங்களாய்ப் பதிப்பிக்கலாம்.<br /><br />சங்க இலக்கியங்களுக்குப் பதில் அவசியமான பல பதிப்புகளை அரசு கொண்டு வரலாம். உதாரணமாக இதுவரை பதிப்பிக்கப்படாத தமிழ்க் கல்வெட்டுகளைப் பதிப்பித்தால் வரலாற்றாய்வாளர்களுக்கும், வரலாற்றில் ஆர்வம் கொண்ட பொதுமக்களுக்கும், மற்றும் வரலாறு பயிலும் மாணவர்களுக்கும் எவ்வளவோ உபயோகமாக இருக்கும். மேலும் தமிழக வரலாற்றை முழுமையாகத் தெரிவிக்கும் வகையில் ஒரு நூலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சிறந்த வரலாற்றறிஞர்களின் துணைகொண்டு தமிழ் வரலாற்றினைப் பற்றிய முழுமையான நூலைப் பதிப்பிக்க முயற்சி செய்யலாம். கோயிற்கலைகள் சம்பந்தப்பட்ட பல சொற்கள் இன்றளவும் சமஸ்கிருத மொழியிலேயே வழங்கி வருகின்றது. இவ்வார்தைகளுக்குத் தமிழ் அறிஞர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்துப் பல தமிழ் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளை ஆராய்ந்து சரியான தமிழ்ப்பதங்களை ஒரு அகராதிபோல் பதிப்பிக்கலாம். இப்படிச்செய்வது தமிழிலேயே கோயிற்கலைகளைப் பற்றிப் பயிலவும் எழுதவும் வகை செய்யும். மேலும் சமஸ்கிருத எழுத்துக்கு ஈடான பழந்தமிழ்ச் சொற்களும் புத்துயிர் பெறும்.<br /><br />பழங்கோயில்கள் அழியாமலும், அவற்றிலுள்ள கல்வெட்டுகள் பாழாகாமலும் அக்கோயில்களுக்கு நிதி ஒதுக்கி அவற்றைச் சீர்படுத்திப் பாதுகாக்கலாம். அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கித் தமிழ்வரலாற்று மாணவர்களுக்கும், வரலாற்றில் ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் முன்வருபவர்களுக்கும் அகழ்வாராய்ச்சி எப்படிச் செய்வது என்பது பற்றி வகுப்பெடுத்து அவர்களைத் தயார்படுத்தி மேலும் மேலும் பல அகழ்வாராய்ச்சிகள் செய்யலாம். இது ஏதோ ஒரு திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியில் வேறொரு திட்டத்தைச் செயல்படுத்தக் கோரும் விண்ணப்பமல்ல. தமிழ்மொழி வரலாறும் தமிழக வரலாறும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கல்வெட்டுகள் மற்றும் பானையோடுகளில் பொறிந்திருந்த எழுத்துகள் மூலமாகவே தமிழ் எழுத்துவடிவம் கி.மு 500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று அறிவியல் பூர்வமாய் நிறுவியுள்ளனர். இதுபோல மேலும் பல அகழ்வாராய்ச்சிகள் செய்வதன் மூலம் தமிழ் எழுத்துகள் மற்றும் பழந்தமிழரின் கலாசாரம் பற்றிய பல புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியும்.<br /><br />மேலும் பிறமொழியிலுள்ள அரிய நூல்களைத் தமிழ்ப்படுத்தி வெளியிடலாம். அறிவியல் தமிழ் வளர்ச்சியுற கணிதம், மருத்துவம், பொறியியல் என அறிவியல் நூல்களைத் தமிழில் வெளியிடலாம். இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஊடகங்கள் செலுத்திவரும் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், தமிழகத்திலிருக்கும் ஊடகங்களும் தமிழில் பிறமொழிச்சொற்கலப்பைச் செவ்வனே செய்து வருகின்றன. இது தமிழனுக்குத் தலைகுனிவு தரும் செயல்தான். ஆனால் இப்படி எதுவும் நேராமல், ஊடகத்தமிழ் மறுமலர்ச்சி பெறும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்தால், எல்லாத் தொலைக்காட்சிகளும் <a href="http://www.makkal.tv/">மக்கள் தொலைக்காட்சி</a> போல் மாற வாய்ப்புண்டு.<br /><br />வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்றில்லாமல், நாமும் வீழாமல், தமிழும் வாழ, ஒதுக்கீடு செய்யும் நிதியை முறையாகப் பயன்படுத்தி, ஆக்கபூர்வமான புதுமையான திட்டங்களை ஏற்படுத்தி, அவற்றைச் சீரான முறையில் செயல்படுத்தினால் தமிழ் மேன்மேலும் முன்னேற்றமடைந்து எக்காலத்திலும் செம்மொழியாக நிலைத்து நீடூழிவாழும்.<br /><br />நன்றி- வரலாறு மின்னிதழ் [<a href="http://www.varalaaru.com/">http://www.varalaaru.com/</a>]ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-66917465911380997982008-03-22T11:55:00.003+05:302008-03-22T12:16:41.606+05:30அருணகிரிநாதர் அருளிய முதல் திருப்புகழ்-"முத்தைத்தரு"<span style="font-size:78%;">ராகம்: கௌளை</span><br /><span style="font-size:78%;">தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு</span><br />தத்தத்தன தத்தத் தனதன<br />தத்தத்தன தத்தத் தனதன<br />தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான........<br /><br /><span style="font-size:78%;">பாடல்.......</span><br /><span style="color:#006600;"><strong>முத்தைத்தரு பத்தித் திருநகை</strong></span><br /><span style="color:#006600;"><strong>அத்திக்கிறை சத்திச் சரவண</strong></span><br /><span style="color:#006600;"><strong>முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்</strong></span><br /><span style="color:#006600;"><strong></strong></span><br /><span style="color:#006600;"><strong>முக்கட்பர மற்குச் சுருதியின்</strong></span><br /><span style="color:#006600;"><strong>முற்பட்டது கற்பித் திருவரும்</strong></span><br /><span style="color:#006600;"><strong>முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்</strong></span><br /><span style="color:#006600;"><strong></strong></span><br /><span style="color:#006600;"><strong>பத்துத்தலை தத்தக் கணைதொடு</strong></span><br /><span style="color:#006600;"><strong>ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு</strong></span><br /><span style="color:#006600;"><strong>பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்</strong></span><br /><span style="color:#006600;"><strong></strong></span><br /><span style="color:#006600;"><strong>பத்தற்கிர தத்தைக் கடவிய</strong></span><br /><span style="color:#006600;"><strong>பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்</strong></span><br /><span style="color:#006600;"><strong>பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே</strong></span><br /><span style="color:#006600;"><strong></strong></span><br /><span style="color:#006600;"><strong>தித்தித்தெய ஒத்தப் பரிபுர</strong></span><br /><span style="color:#006600;"><strong>நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி</strong></span><br /><span style="color:#006600;"><strong>திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்</strong></span><br /><span style="color:#006600;"><strong></strong></span><br /><span style="color:#006600;"><strong>திக்குப்பரி அட்டப் பயிரவர்</strong></span><br /><span style="color:#006600;"><strong>தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு</strong></span><br /><span style="color:#006600;"><strong>சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்</strong></span><br /><span style="color:#006600;"><strong></strong></span><br /><span style="color:#006600;"><strong>கொத்துப்பறை கொட்டக் களமிசை</strong></span><br /><span style="color:#006600;"><strong>குக்குக்குகு குக்குக் குகுகுகு</strong></span><br /><span style="color:#006600;"><strong>குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை</strong></span><br /><span style="color:#006600;"><strong></strong></span><br /><span style="color:#006600;"><strong>கொட்புற்றெழ நட்புற் றவுணரை</strong></span><br /><span style="color:#006600;"><strong>வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி</strong></span><br /><span style="color:#006600;"><strong>குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.</strong></span><br /><br /><strong>"முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை "</strong><br />முத்தினைப் போன்றொதொரு வெண்ணிறத்தின் எழிலுக்குஒத்ததாய் அமைந்தவொரு ஒளிமிகு இளஞ் சிரிப்புடனேதேவர்க்குத் தலைவனாம் இந்திரன் பெற்றிட்டதேவயானை எனும் கரிமகளின் நாயகனே!<br /><br /><strong>"சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர"</strong><br />அன்னையாம் உமையவள் அன்புடன் ஈன்றிட்ட சக்திவேல் எனும் ஆயுதத்தை கையினில் ஏந்துகின்றசரவணபவ என்கின்ற அறுமுகக் கடவுளே!முக்தியெனும் வீடுநிலை பெற வித்தாக இருப்பவரே!தந்தைக்கே ஒரு மந்திரத்தின் பொருள் சொல்லி தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்ற குருவான சிவனுக்கும் குருவான பெருங்கடவுளே!<br /><br /><strong>"என ஓதும் முக்கட் பரமற்குச் சுருதியின்முற்பட்டது கற்பித்து இருவரும்முப்பத்து மு வர்க்கத்து அமரரும் ..... அடிபேணப்"</strong><br />என்றெல்லாம் உனைத்துதிக்கும் முக்கண்ணன் பரமசிவனுக்கு முன்மைக்கெல்லாம் மூத்ததான முழுமுதற் பொருளானசுருதியெனும் வேதத்தின் முற்றுப் பொருளான<br />"ஓம்" என்னும் தனிமந்திரத்தை மடி மீதமர்ந்து உபதேசித்து அடிமுடி அறியவெண்ணி அங்குமிங்கும் அலைந்தபிரமன் திருமால் இருவரும் கூடமுப்பத்து முக்கோடி தேவரும் சேர்ந்து நின்னடி பணிந்து வாழ்த்தி நின்றிடவும்,<br /><br /><strong>"பத்துத்தலை தத்தக் கணை தொடு"</strong><br />திக்குக்கொரு தலையெனப் பத்துத்தலை படைத்திட்ட இராவணனின் தலைகள் சிதறி வீழ அன்றங்கு ஓர் அம்பை விட்டு அவுணரை அழித்த,<br /><br /><strong>"ஒற்றைக்கிரி மத்தைப் பொருது"</strong><br />ஒப்புவமை இலாத மந்திரமெனும் மலையினைமத்தாகவே கொண்டு பாற்கடலைக் கடைந்திட்ட,<br /><br /><strong>"ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்"</strong><br />அன்றொருநாள் அண்ணன் தம்பிகளுக்கிடையே மூண்டதோர் பாரதப் போரின் பதின்மூன்றாம் நாளினிலே அதமத்தின் வழி நின்று அபிமன்யுவைக் கொன்ற ஜயத்திரதன் எனும் அரசர் கோமானை, "மறுநாள் மாலை சூரியன் மறைவதற்குள் என்மகனின் மறைவுக்குக் காரணமான ஜயத்திரதனைக் கொல்லானேயாகில், அக்கினியில் புகுந்து அன்றே உயிர் துறப்பேன்" என சூளுரைத்த பக்தனாகிய அர்ச்சுனனை காக்கவென 'போரிலே ஈடுபடேன்' எனும் வாக்கினையும் மறந்துதன் கையில் தாங்கியுள்ள சக்கரத்தை விட்டெறிந்துசூரியனைச் சிலகாலம் சயனிக்கச் செய்ததாலே வெளிவந்த சிந்துராசனாம் ஜயத்திரதனைவிரைவாகக் கொல்லச் செய்தருளி உதவிட்ட,<br /><br /><strong>"பத்தற்கு இரதத்தைக் கடவிய"</strong><br />இத்துணை வல்லமை இயல்புடனே படைத்திருந்தும் அத்தனையும் காட்டாமல் அடக்கமாக நண்பனுக்குத் தேரோட்ட இசைந்து தேர்ப்பாகனாய் வந்திட்ட<br /><br /><strong>"பச்சைப் புயல்"</strong><br />மரகதம் என்கின்ற பச்சைமணியின் நிறத்தினை ஒத்திட்ட, அன்பருக்கு அருளிடவே புயல் போல வந்தருளும் மரகத வண்ணன், பச்சைமாமணி வண்ணனும்<br /><br /><strong>"மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ..... ஒருநாளே"</strong><br />மெச்சுகின்ற பரம் பொருளே! என்னை நீ பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் ஒருநாளும்உண்டோ என நான் இறைஞ்சுகின்றேனே!<br /><br /><span style="color:#990000;">[இனி வரும் வரிகள் முருகன் அசுரருடன் செய்த போரினை விரிவாக வர்ணிக்கிறது]</span><br /><strong>"தித்தித்தெய ஒத்தப் பரிபுரநிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி</strong><br /><strong>திக்கொட்க நடிக்கக்"</strong><br />தித்தித்தெய என்கின்ற தாளத்துக்கு இசைவாகமுத்துகள் அமைந்த சிலம்பினை அணிந்த நர்த்தனம் செய்கின்ற பதங்களை வைத்து பார்த்தவர் நடுங்கும் பத்திரகாளியும் எத்திக்கும் சுழன்று தாண்டவம் செய்யவும்,<br /><br /><strong>"கழுகொடு ..... கழுது ஆடத்"</strong><br />பிணங்களைக் கொத்தவெனக் காத்திருக்கும் கழுகுகளுடன் பிணந்தின்னும் பேய்களும் சேர்ந்தங்கு கூத்தாடவும்,<br /><br /><strong>"திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு</strong><br /><strong>சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக ..... என ஓதக்"</strong><br />எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும் அட்டப் பயிரவர் என்கின்ற எண்மரும் ஆட்டத்தில் அழகிய இக்கூத்தினுக்கு ஏற்ப தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக என்னுமோர் தாள ஓசையினைக் கூறிடவும்,<br /><br /><strong>"கொத்துப்பறை கொட்டக்"</strong><br />கூடவே தாரை, தமுக்கு, தப்பட்டம் என்கின்ற பற்பல பறைவாத்தியங்களையும் முன்சொன்ன தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக என்கின்ற அதே தாளத்தில் அழகுற முழங்கிடவும்,<br /><br />"களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகுகுத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை கொட்புற்று எழ"<br />பலகாலம் வாழ்ந்திருந்து, பல போர்களைப் பார்த்திட்ட கிழமான முதிர்ந்த கோட்டான்களும் மகிழ்ந்து குக்குக்குகு குக்குக் குகுகுகு, "குத்திப் புதை", "புக்குப் பிடி" எனகூக்குரலிட்டுக் குழறி, வட்டமெனச் சுழன்று இட்டமுடன் மேலே எழுந்திடவும்,<br /><br /><strong>"நட்புற்று அவுணரை வெட்டிப் பலி யிட்டுக்"</strong><br />தனக்கு வரமளித்த சிவனாரின் மகனென்னும் இணக்கத்தை மறந்து பகைகொண்ட அசுரர்களைவெட்டிக்கொன்றங்கு குவித்துப் பலிகொண்டு,<br /><br /><strong>"குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ..... பெருமாளே."</strong><br />அவுணர் குலத்துக்கு இசைவாய் நின்றிட்ட கிரௌஞ்சமெனும் மாமலையும் வேலாலே குத்துண்டு பொடிப்பொடியாய் உடைந்துபட அறவழியில் நின்றன்று அசுரருடன் போர் செய்த பெருமையிற் சிறந்தவரே!*************************************************************************************[அருஞ்சொற்பொருள்:<br /> அத்திக்கிறை:: தெய்வயானை அம்மைக்குத் தலைவரே!;<br /> சுருதி:: வேதம்;<br /> ஒற்றைகிரி:: ஒப்பற்ற மந்தரமலை;<br /> திகிரி: சக்கரம்;<br />பச்சைப்புயல்:: பச்சைமாமலை போல் மேனி கொண்ட திருமால்;<br /> பரிபுர:: சிலம்புகள் அணிந்த;<br /> கழுது:: பேய்கள்;<br /> சித்ரப் பவுரி:: அழகிய கூத்து;<br />கொத்துப்பறை:: கூட்டமாக பல பறை வாத்தியங்கள்;<br /> முதுகூகை:: கிழக்கோட்டான்;<br />கொட்பு:: சுழலுதல்;<br />அவுணர்:: அரக்கர்;<br />குலகிரி:: அசுரர்களின் குலத்துக்கு இயைந்த கிரௌஞ்ச மலை;<br />பொரவல:: போர் செய்ய வல்ல;<br />பெருமாள்:: பெருமை மிகுந்தவர் ]*************************************************************************************அருணாசலத்தில், அருணகிரிநாதர் முருகனிடமிருந்து, "சொல்லற; சும்மா இரு!" என உபதேசம் பெறுகிறார்.அதனைக் கேட்டு, சமாதியில் ஆழ்ந்த அருணகிரியார் முன் முருகப்பெருமான் மீண்டும் தோன்றி, "நம் புகழைப் பாடுக!" எனப் பணிக்கிறான்."என்ன சொல்லிப் பாடுவேன்? எப்படி உன்னை அழைப்பேன், கல்வியறிவு சிறிதுமில்லா இவ்வேழை" என அருணகிரியார் வேண்டுகிறார்."முத்தைத்தரு" எனத் தொடங்கிப் பாடு என செவ்வேட் பரமனும் அருள எழுந்ததே இந்தப் பாடல்.அதன் பின்னர் திறந்த வெள்ளம்தான் திருப்புகழ்!*************************************************************************************'மு' எனும் சொல்லைப் பிரித்தால் வருவது, ம்,உ,அ.இம்மூன்றும் சேர்ந்ததே பிரணவம் என்னும் ஓம் எனும் மந்திரம்.பிரணவத்தில் தொடங்கியே திருப்புகழ் அமைந்ததைக் கண்டு மகிழ்வோம்!*************************************************************************************வேலும் மயிலும் துணை!முருகன் அருள் முன்னிற்கும்!அருணகிரிநாதர் தாள் வாழ்க!*************************************************************************************<br /><span style="font-size:78%;">நன்றி- VSK <a href="http://aaththigam.blogspot.com/">ஆத்திகம்</a> வலைப்பதிவு</span>ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-64592040698813910842008-03-05T19:17:00.001+05:302008-03-05T19:20:21.494+05:30தமிழ்க் கணிமை விருது - பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.<span style="font-size:78%;"><strong>விசேட வேண்டுகோள்</strong> : இந்த அறிவித்தலை தங்களால் இயன்ற அளவில் பிற வலைப்பதிவுகள், மின்னஞ்சல் குழுக்கள், சஞ்சிகைகள் பிற ஊடகங்களில் மறுபிரசூரம் செய்து உதவ வேண்டுகிறேன்<br /></span>தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுகான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல்விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும்.<br /><br /> 2007 ஆம் ஆண்டில் கனடாவின் மாண்ட்ரியாலைச் சேர்ந்த முனைவர் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு முதல் விருது வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சயைனான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.<br /><br />2008 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.<br /><br />பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இறுதிநாள்: 31 மார்ச்சு 2008<br />பரிந்துரைகளை tcaward {at} gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செயப்படும்.<br />பரிந்துரை படிவங்களை <a href="http://tcaward.googlepages.com/" modo="false">http://tcaward.googlepages.com/ </a>தளத்திலிருந்து பெறமுடியும்.ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-55799298240197562772008-02-28T14:47:00.004+05:302008-02-28T15:22:57.105+05:30இழந்து விட்டோம் ஒரு உன்னத படைப்பாளியை!!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_6t_5ds8-L4g/R8aDTJCS1NI/AAAAAAAAAAw/DFJHajHErJI/s1600-h/sujatha.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_6t_5ds8-L4g/R8aDTJCS1NI/AAAAAAAAAAw/DFJHajHErJI/s400/sujatha.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5171965586947888338" border="0" /></a><br />தமிழ் நவீன எழுத்தாக்கத்தில் மாபெரும் புரட்சி செய்த<br />எழுத்தாளர் சுஜாதா [ரங்கராஜன்] அவர்கள், 27-02-2008 புதன்கிழமை இரவு9.30மணியளவில், தமிழ்கூறும் நல்லுலகை விட்டு<br />மறைந்தார்.<br /><br />அறிவியற் கருத்துக்களை தமிழுக்குள் கொண்டு வருவதில்<br />தன்னையும் தன் எழுத்தையும் அர்ப்பணித்து உழைத்த அந்த<br />எழுத்துச்சிற்பியின் மறைவு, தமிழ்மொழிக்கும் தமிழர் சமுதாயத்திற்கும்<br />மறுக்க முடியாத மாபெரும் இழப்பு!<br /><br />தமிழ் சமுதாயத்தின் நலனிலும் தமிழர்தம் தொழினுட்ப வளர்ச்சியிலும்<br />மிகுந்த அக்கறை கொண்ட சுஜாதா அவர்கள், ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளிலும் ஈடுபாடு காட்டினார். ஈழத்தமிழர்களின் படைப்புக்களை<br />வெளிக்கொண்டு வருவதிலும் பங்களித்தார்.<br /><br />புனைகதை,சிறுகதை,அறிவியற்கட்டுர<div id="mb_0"><wbr>ைகள்,கவிதை,பண்டைத்தமிழிலக்கியம<wbr>்,<br />திரைக்கதையாக்கம் என்று சுஜாதா தடம்பதித்த துறைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த அளவு பன்முகப்பட்ட அறிவைக்கொண்ட அவரின் சிம்மாசனம் இனி வெறுமையாகவே இருக்க பொகிறது.<br /><br />நவீன எழுத்துச் சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த அஞலிகள் உரித்தாகுக.<br /><br />ஆதித்தன்.<br />பெங்களூர். 28-02-2008.<br /><br /></div>ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-14092386484202348782008-02-28T14:07:00.006+05:302008-02-28T14:15:56.230+05:30என். சொக்கன் - தமிழ் எழுத்தாளர்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_6t_5ds8-L4g/R8Z0TZCS1MI/AAAAAAAAAAo/K6k_2m7h2g8/s1600-h/s.gif"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_6t_5ds8-L4g/R8Z0TZCS1MI/AAAAAAAAAAo/K6k_2m7h2g8/s320/s.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5171949098568438978" border="0" /></a><br /><p><b><br /></b></p><p><b>என். சொக்கன்</b> (N. Chokkan, பிறப்பு: ஜனவரி 17, 1977; ஆத்தூர், சேலம்) என்ற பெயரில் எழுதும் <i>நாகசுப்பிரமணியன் சொக்கநாதன்</i> ஒரு <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D" title="தமிழ்">தமிழ்</a> எழுத்தாளர் ஆவார்.</p> <p>தொண்ணூறுகளில் எழுதத் துவங்கிய என். சொக்கன் இதுவரை சுமார் நூறு சிறுகதைகளும் இரு நாவல்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நூல்கள் வடிவில் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார். இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் வெளி வந்துள்ளன.</p> <p><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D" title="சேலம்">சேலம்</a> ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D" title="பெங்களூர்">பெங்களூரில்</a> வசிக்கும் என். சொக்கன் ஒரு மென்பொருள் நிபுணர் ஆவார். இணையத்தில் இவர் தொடங்கி, நடத்திவந்த 'தினம் ஒரு கவிதை' என்னும் மடலாடற்குழு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவாகும்.<br /></p><h3><span class="mw-headline">சிறுகதைத் தொகுப்புகள்</span></h3> <ul><li>பச்சை பார்க்கர் பேனா</li><li>உன் நிலைக்கண்ணாடியில் என் முகம்</li><li>மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)</li></ul><br /><h3><span class="mw-headline">வாழ்க்கை வரலாறுகள்</span></h3> <ul><li>அம்பானி ஒரு வெற்றிக்கதை</li><li>பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்</li><li>இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி: ரூபாய் பத்தாயிரம், பத்தாயிரம் கோடி ஆன கதை</li><li>அஸிம் ப்ரேம்ஜி: கம்ப்யூட்டர்ஜி</li><li>லஷ்மி மிட்டல்: இரும்புக்கை மாயாவி</li><li>சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதை</li><li>திராவிட்:இந்திய பெருஞ்சுவர்</li><li>ஷேக்ஸ்பியர்:நாடகமல்ல, வாழ்க்கை</li><li>நெப்போலியன்: போர்க்களப் புயல்</li><li>சல்மான் ரஷ்டி: ஃபத்வா முதல் பத்மாவரை</li><li>குஷ்வந்த் சிங்: வாழ்வெல்லாம் புன்னகை</li><li>அண்ணா(ந்து பார்!)</li><li>வீரப்பன்: வாழ்வும் வதமும்</li><li>வாத்து எலி வால்ட் டிஸ்னி</li><li>சார்லி சாப்ளின் கதை</li><li>நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்</li></ul> <p><a name=".E0.AE.85.E0.AE.B0.E0.AE.9A.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.B2.E0.AF.8D"></a></p> <h3><span class="editsection"></span><span class="mw-headline">அரசியல்</span></h3> <ul><li>மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே (நேபாளத்தின் அரசியல் வரலாறு)</li><li>அயோத்தி: நேற்றுவரை</li><li>கேஜிபி: அடி அல்லது அழி</li><li>Hamas: பயங்கரத்தின் முகவரி</li><li>CIA: அடாவடிக் கோட்டை</li></ul><br /><h3><span class="mw-headline">குழந்தைகளுக்கான படைப்புகள்</span></h3> <ul><li>கம்ப்யூட்டர்</li><li>விண்வெளிப் பயணம்</li><li>டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?</li><li>அப்துல் கலாம்</li><li>இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி</li><li>பில் கேட்ஸ்</li><li>அறிஞர் அண்ணா</li><li>நெப்போலியன்</li></ul><br /><h3><span class="mw-headline">பிற</span></h3> <ul><li>தேடு: கூகுளின் வெற்றிக்கதை</li><li>நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா</li><li>வல்லினம் மெல்லினம் இடையினம் (மென்பொருள் துறைபற்றிய பன்முகப் பதிவுகள்)</li><li>நலம் தரும் வைட்டமின்கள்</li></ul> <p><a name="English" id="English"></a></p> <h3><span class="editsection"></span> <span class="mw-headline">English</span></h3> <ul><li>Hi Computer</li><li>Vicky In Space</li><li>Narayana Murthy: IT Guru (Translated By: Lakshmi Venkatraman)</li><li>Dhirubai Ambani: (Translated By: R Krishnan)</li></ul> <p><a name=".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.95.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.A4.E0.AF.8A.E0.AE.9F.E0.AE.B0.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"></a></p> <h2><span class="editsection"></span><span class="mw-headline"> வெளியாகும் தொடர்கள்</span></h2> <ul><li>கில்'லேடி'கள் ('பெண்ணே நீ' மாத இதழ்)</li><li>வெற்றிக்குச் சில புத்தகங்கள் ('குமுதம்' வார இதழ்)</li></ul> <p><a name=".E0.AE.8E.E0.AE.A9.E0.AF.8D._.E0.AE.9A.E0.AF.8A.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.A9.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.AA.E0.AF.87.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D_.2F_.E0.AE.85.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"></a></p> <h2><span class="editsection"></span> <span class="mw-headline">என். சொக்கனின் பேட்டிகள் / அறிமுகங்கள்</span></h2> <ul><li><a href="http://etamil.blogspot.com/2006/06/chat-meet-chokkan.html" class="external free" title="http://etamil.blogspot.com/2006/06/chat-meet-chokkan.html" rel="nofollow">http://etamil.blogspot.com/2006/06/chat-meet-chokkan.html</a></li><li><a href="http://www.nilacharal.com/tamil/suvai127.html" class="external free" title="http://www.nilacharal.com/tamil/suvai127.html" rel="nofollow">http://www.nilacharal.com/tamil/suvai127.html</a></li><li><a href="http://www.hindu.com/thehindu/holnus/006200801221860.htm" class="external free" title="http://www.hindu.com/thehindu/holnus/006200801221860.htm" rel="nofollow">http://www.hindu.com/thehindu/holnus/006200801221860.htm</a> (ஆங்கிலம்)</li><li><a href="http://www.blonnet.com/ew/2008/01/28/stories/2008012850140400.htm" class="external free" title="http://www.blonnet.com/ew/2008/01/28/stories/2008012850140400.htm" rel="nofollow">http://www.blonnet.com/ew/2008/01/28/stories/2008012850140400.htm</a> (ஆங்கிலம்)</li></ul><span style="font-size:85%;"><br /></span><h3 style="font-weight: normal;" id="siteSub"><span style="font-size:85%;"> - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.</span></h3>ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-25248275014075652382008-02-28T14:02:00.000+05:302008-02-28T14:06:47.852+05:30நாளை ஒரு காலம் வரும்மூடிய கதவுகள் உடைப்போம்!<br /> முத்தமிழ் கானம் இசைப்போம்!<br />நாடில்லை தமிழர்க்கு என்ற<br /> நகைப்புறு சொல்லைத் தகர்ப்போம்!<br />வாடிய பனைகள் சிரிக்கும்!<br /> வசந்தங்கள் வந்தெமை அழைக்கும்!<br />தேடிய சுதந்திரம் நாளை<br /> செந்தமிழ் ஈழமாய்க் களிக்கும்!<br /><br />- ஆதித்தன்ஆதித்தன்http://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3670358456342535015.post-4473317102968633262008-02-26T20:47:00.002+05:302008-02-26T20:56:31.631+05:30சிங்கை நகர் - பண்டைய ஈழத் தமிழர் தலைநகரம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_6t_5ds8-L4g/R8Qum5CS1LI/AAAAAAAAAAg/_baTlyAfBg4/s1600-h/vallipuram.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_6t_5ds8-L4g/R8Qum5CS1LI/AAAAAAAAAAg/_baTlyAfBg4/s400/vallipuram.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5171309517808522418" border="0" /></a> <span style="font-size:78%;"> வல்லிபுரத் திருமால் கோயில் </span><br /><br /><p>சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகி