tag:blogger.com,1999:blog-33145798947116275402009-02-21T05:55:14.353-08:00பயணங்கள்பூனைக்குட்டிnoreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-75253346886361168942008-06-18T11:13:00.001-07:002008-06-18T11:14:33.622-07:00காஷ்மீர் பயணம் - இரண்டாவது நாள் - பெனசிர் கொலை செய்யப்பட்ட அன்றுஇந்தப் பயணத்தைப் பற்றி எழுத நேரம் கிடைக்காததால் பேசியிருக்கிறேன். கீழே வாய்ஸ் பதிவிற்கான லிங்க் இருக்கிறது கேட்டுப்பார்த்து சொல்லுங்கள்.<br /><br /><param name="movie" value="http://media.imeem.com/m/V60T0WztcD/aus=false/"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://media.imeem.com/m/V60T0WztcD/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="110" wmode="transparent"></embed><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2169/2258214626_e5f13b989f_b.jpg"><img src="http://farm3.static.flickr.com/2169/2258214626_e5f13b989f.jpg?v=0" alt="" /></a><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2264/2257543103_009d4d656d_b.jpg"><img src="http://farm3.static.flickr.com/2264/2257543103_009d4d656d.jpg?v=0" alt="" /></a><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2216/2258339036_019e2b9814._bjpg"><img src="http://farm3.static.flickr.com/2216/2258339036_019e2b9814.jpg?v=0" alt="" /></a><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2012/2257543217_a09d0125ef_b.jpg"><img src="http://farm3.static.flickr.com/2012/2257543217_a09d0125ef.jpg?v=0" alt="" /></a><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2068/2257542819_4f6388fa5d_b.jpg"><img src="http://farm3.static.flickr.com/2068/2257542819_4f6388fa5d.jpg?v=0" alt="" /></a><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2013/2257542659_966bebed77_b.jpg"><img src="http://farm3.static.flickr.com/2013/2257542659_966bebed77.jpg?v=0" alt="" /></a><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2058/2258338602_af753b86e7_b.jpg"><img src="http://farm3.static.flickr.com/2058/2258338602_af753b86e7.jpg?v=0" alt="" /></a><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2360/2257542311_07d87ffb76_b.jpg"><img src="http://farm3.static.flickr.com/2360/2257542311_07d87ffb76.jpg?v=0" alt="" /></a><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2143/2257542213_6bb7f2e2a3_b.jpg"><img src="http://farm3.static.flickr.com/2143/2257542213_6bb7f2e2a3.jpg?v=0" alt="" /></a><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2386/2277268600_31c3ba8b3c_b.jpg"><img src="http://farm3.static.flickr.com/2386/2277268600_31c3ba8b3c.jpg?v=0" alt="" /></a><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2139/2276518467_11f79d38cd_b.jpg"><img src="http://farm3.static.flickr.com/2139/2276518467_11f79d38cd.jpg?v=0" alt="" /></a><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2038/2277342834_a67e7a2b89_b.jpg"><img src="http://farm3.static.flickr.com/2038/2277342834_a67e7a2b89.jpg?v=0" alt="" /></a><br /><br /><a href="http://farm3.static.flickr.com/2316/2276453557_1bce9230de_b.jpg"><img src="http://farm3.static.flickr.com/2316/2276453557_1bce9230de.jpg?v=0" alt="" /></a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-7525334688636116894?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-4775598556728896562008-02-07T18:48:00.000-08:002008-02-11T05:19:04.796-08:00காஷ்மீர் பயணம் - டெல்லியிலிருந்து காஷ்மீர்தாஜ்மஹாலிலும் ஆக்ரா கோட்டையிலும் சேர்த்து நிறைய படங்கள் எடுத்தாகியிருந்ததால் எனக்கு அவற்றை ஒரு சிடியில் ஏற்றிக்கொள்வது பெட்டர் என்று பட்டது. டெல்லியில் எனக்குத் தெரிந்த கோல் மார்கெட் பகுதிக்குச் சென்று அதைச் செய்துவிட்டு, நேராய் இந்தியா கேட்டிற்கு வந்தேன். கொஞ்சம் படங்கள் எடுக்கலாமேயென்று நினைத்தவனாய். படமெடுத்து முடித்ததும் ஜம்மு செல்லும் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் பிடிப்பதற்காக புதுதில்லி ரயில்வே ஸ்டேஷன் செல்ல வழி கேட்ட பொழுது தான், தில்லி மெட்ரோ பற்றிய அறிமுகம் கிடைத்தது.<br /><br />தில்லி செக்கட்டரியேட்டில் இருந்து புதுதில்லி ரயில்வே ஸ்டேஷன் வரை செல்லும் மெட்ரோ கிடைக்குமென்று சொல்லி அனுப்பியதால் வந்து பார்த்தால், தில்லி மெட்ரோவின் தரிசனம் கிடைத்தது. ம்ம்ம் நன்றாக செய்திருக்கிறார்கள், மக்கள் அதிகமாக உபயோகிக்கிறார்கள் என்று தெரிந்தது. நான் தில்லியில் வேலை பார்த்த பொழுது அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது தெரியும். இன்னும் இந்தியா முழுவதும் இந்த முன்னேற்ற பரவவேண்டும் என்று நினைத்துக் கொண்டு க்ளாக் ரூமில் இருந்த லக்கேஜ்களைக் கட்டிக்கொண்டு பழையதில்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துசேர்ந்தேன். ஜம்முதாவி எக்ஸ்பிரஸில் நான் மட்டும் தான் போகப்போவதாய் கற்பனை செய்து கொண்டு.<br /><br />கடைசியில் பார்த்தால் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ஃபுல்லாகி என்னை ஆச்சர்யப்படுத்தியது. எல்லாம் வைஷ்ணவா தேவி செல்லும் மக்கள் என்று சீக்கிரமே புரிந்தது. என்னுடன் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் பயணித்தார்கள், கூடவே ஒரு கல்கத்தா குடும்பமும். அந்தக் குடும்பத் தலைவியைப் பார்த்ததும் அப்படியே கல்கத்தா காளியைப் பார்த்த நினைவு வந்தது. தீர்க்கமான புருவங்கள் அகலமான கண்கள் நெற்றியில் பயணத்தின் பொருட்டு வைக்கப்பட்ட திலகம் மற்றும் உடற்கட்டு என நான் அதிசயித்துப் போனேன் என்று தான் சொல்லணும். நான் சைட் அடிக்கவில்லை அந்தம்மாவை அவர்கள் வயதில் பெரியவர்கள், ஆனால் அந்த முகம் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. இன்னமும் நினைத்ததும் நினைவில் வருகிறது என்கிற அளவில்.<br /><br />ஆளுக்கு ஒரு ஜூன்ஸ் பேண்ட் சர்ட் போட்டுக்கொண்டு ஒரு ஸ்வெட்டரை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள், அவர்களுக்கு ஏற்றது போலவே டெல்லியிலும் அவ்வளவு குளிரவில்லை ஆனால் தில்லியில் இருந்து கிளம்பியதும் தான் தாமதம் குளிரடிக்க ஆரம்பித்தது. அவர்கள் முதலில் ஷூவை அணிந்து கொண்டார்கள் பின்னர் ஸ்வெட்டரை ஆனாலும் குளிர் அதிகமாகி ஒவ்வொருவரும் குறிக்கிக் கொண்டு படுத்திருந்தார்கள். என்னிடம் கம்பளி இருந்தாலும் கொடுத்திருக்கலாம் ஆனால் நான் கொண்டு போனதும் ஒரு கம்பளி தான். காலங்கார்த்தாலை க்ளௌஸ் விற்றுக் கொண்டு வந்த பெண்ணை நிறுத்தி க்ளவ்ஸும் மற்றவையும் வாங்கி முதலில் அணிந்து கொண்டது இவர்கள் தான். காலையில் ஒரே பாட்டமாய் புலம்பல் குளிரில் தூங்கவே முடியலை என்று. எல்லா வேடிக்கைகளையும் நான் பின் தொடரும் நிழலின் குரலில் முகத்தை புதைத்துக் கொண்டே கவனித்துக் கொண்டிருந்தேன்.<br /><br />ஜம்மு நாங்கள் இறங்கிய பொழுது குளிராகத்தான் இருந்தது ஆனால் 8, 9 மணிக்கெல்லாம் சாதாரண பெங்களூர் போல் ஆகியிருந்தது சொல்லப்போனால் என்னால் ஸ்வெட்டரை கூட போட்டுக்கொண்டு இருக்கமுடியலை என்பது தான் உண்மை. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வழி எப்பொழுதும் திறந்திருக்காதென்றும் ஜம்மு போய் தான் தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்லியிருந்ததால் ஸ்ரீநகர் செல்வதற்கு புக் செய்திருக்கவில்லை. நானும் அறிவாளியாக ப்ளைட் புக் செய்யும் வெப்சைட்டில் எல்லாம் காஷ்மீர் என்று தேடிக்களைத்து சரி காஷ்மீருக்கு ஏர்போர்ட் கிடையாது என்ற முடிவிற்கே வந்திருந்தேன். ஆனால் கடைசியில் தான் தெரியவந்தது ஸ்ரீநகர் என்பது தான் காஷ்மீர் என்பது. என்ன கொடுமைங்க இது சரவணன். இல்லாவிட்டால் தில்லியில் இருந்து நேராய் ஸ்ரீநகர் பறந்திருப்பேன். ஆனால் என் காஷ்மீர் பயணத்திலேயே மிகவும் ரசித்த/பயந்த/அதிர்ந்த ஒரு பகுதியை விட்டிருப்பேன் :).<br /><br />அதுதான் ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கான என் பயணம். ஜம்மு ரயில்வே ஸ்டேஷனில் இருந்த ஜம்மு காஷ்மீர் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனில் காஷ்மீர் போவதற்கு எவ்வளவு டிக்கெட் என்று கேட்டுவிட்டு சாப்பிடுவதற்காக சென்று வந்தேன். சாப்பிட்டு வந்து பார்த்தால் காஷ்மீருக்கு போக இருந்த பேருந்து போய்விட்டதாகவும் இனிமேல் குறிப்பிட்ட நம்பர் ஆட்கள் வந்தால் மட்டுமே வண்டி அனுப்பப்படும் என்றும் தெரியவந்தது. பின்னர் அதற்கு அருகில் இருந்த டூரிஸத்தின் அலுவலகத்தில் சென்று கேட்ட பொழுது அவர்கள் புக் செய்து தருவதாகவும் ஆனால் ஹவுஸ் போட் இங்கேயே புக் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்கள்.<br /><br />லோன்லி ப்ளானட் புத்தகம் தலையாய் அடித்துக் கொண்டு தில்லியில் இருந்து ஹவுஸ் போட் புக் செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்ததால் அந்தத் தவறைச் செய்யவில்லை, அதுமட்டுமில்லாமல் இந்த நபர்கள் உட்கார்ந்திருந்தது J&K Tourism என்ற அரசாங்கத்தின் போர்ட் போட்டிருந்த கட்டிடத்தில் என்பதால் முதலில் யோசித்து பின்னர் அங்கே ஏற்கனவே உட்கார்ந்திருந்த கப்புள் 1500 ரூபாய்க்கு ஹவுஸ்போட் எடுத்துக் கொள்ள(டீலக்ஸ்) தனியாக எனக்கு டீலக்ஸ்(900 ரூபாய்) எடுத்துக் கொண்டதும். எங்கள் மூவரையும் ஸ்ரீநகர் அனுப்பவதற்கான ஏற்பாடு செய்தார்கள். முதலில் ஒரு சுமோவில் உட்கார வைக்கப்பட்டு பின்னர் ஆறு பேர் சேர்வதற்காக காத்திராமல் அம்பாஸிட்டரில் உட்கார வைக்கப்பட்டோம். அந்தப் பயணத்திற்கான செலவு ஆளுக்கு 400 ரூபாய்கள், அம்பாஸிட்டர் ஓட்டுவதற்காக வந்து உட்கார்ந்ததா ஆளைப் பார்த்தால் குறைந்தது 60 வயது இருக்கும் என்று தெரிந்தது.(கடைசியில் சாச்சா சொல்லப்போய் அவருக்கு வயது 70 என்று தெரிய வந்தது.)<br /><br />எனக்கு அத்தனை பயம் இல்லை, அவர் கொண்டு வந்த வண்டி T Board என்பதால் மட்டுமல்ல தன் உயிரைப் பயணம் வைத்து அத்தனை பெரியவர் ரிஸ்க் எல்லாம் எடுக்க மாட்டார் என்றுதான். நாங்கள் கிளம்பும் பொழுது எங்களுடன் அந்த தாத்தாவின் நண்பரும் சேர்ந்து கொண்டார். (அவரும் டிரைவராம் பயணத்தின் பொழுது தெரியவந்தது) எனக்கு சரியான கடுப்பு அந்த கப்புள் பின்னால் உட்கார்ந்து கொள்ள நான் டிரைவர் அவருடைய நண்பர் எல்லாரும் முன் பக்கம் என எனக்கு கடுப்பாய் இருந்தது.<br /><br />மெதுவாய் நாங்கள் பேச்சுக் கொடுக்க சாச்சாவும் சரி, உடன் வந்தவரும் சரி நன்றாக பேசினார்கள். எனக்குத் தெரிந்து இது போல் போகும் டிரைவர்கள் எல்லாம் இன்பர்மேஷன் மூட்டைகளாக இருப்பார்கள், ரொம்பக் காலமாக எங்கள் வீட்டிற்கு என்று ஒரு அண்ணாவை அழைத்துக் கொண்டு நாங்கள் டூர் போவதுண்டு அவரும் அப்படித்தான். இன்ஃபர்மேஷன் கொடௌன். சாச்சா, காஷ்மீரைப் பற்றி பேச ஆரம்பித்தால் நிறுத்தாமல் பேசுவார், கொஞ்சம் வேகமாக பேசமுடியாது அவருக்கு லேசாய் மூச்சுத் திணறும். தேவதாரு மரத்திலிருந்து, உமர் அப்துல்லா, முஃப்தி முஹம்து சயீத், அவரது மகள், பாகிஸ்தான், அமேரிக்கா என்று நிறைய பேசுவார். ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை என் கதைகளுக்கு பயன்படுத்த உத்தேசித்திருப்பதால் இங்கே கிடையாது :).<br /><br />நாங்கள் ஜம்முவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் காஷ்மீரை நோக்கி நகரத் தொடங்கினோம். மலைப் பாதை அங்கே ஆரம்பித்தது ஒரு புதுப் பிரச்சனை. நான் அறிந்தவரை டிரைவர்கள் சகுனத்தடையாக நினைப்பார்கள் என்பதால் பெரும்பாலும் மரணத்தைப் பற்றி பேசமாட்டார்கள். ஆனால் அந்தப் பாரம்பரியம் காஷ்மீரியர்களுக்குக் கிடையாது போலும், எங்கள் பயணத்தினூடாகவே சாச்சா அந்த இடங்களுக்கான அறிமுகங்களைத் தந்து கொண்டிருந்தார் எப்படியென்றால் இந்தப் பள்ளத்தில் தான் நாலு கார்கள் கீழே விழுந்தன, இரண்டு ஆமி ஜீப்கள் விழுந்தன என்றெல்லாம். அவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தாங்கள் அறிந்த மரணங்களை விபத்துக்களைப் பற்றியெல்லாம் பேசத்தொடங்க, சாதாரணமாக மலைசரிவுப் பயணத்தை ரசிக்கும் என்னை பயமுறுத்தத் தொடங்கினர்.<br /><br />அதே போல் டிரைவர்களே பயப்படும் இடங்களாக இரண்டு மூன்று இடங்களைச் சொன்னார்கள், ஒன்று மண்சரிவு ஏற்படும் இடம் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மேலிருந்து பாறாங்கல் தலையில் விழலாம் என்றும் அந்த இடத்தை கடப்பது என்பது உயிரைப் பணயம் வைத்துத்தான் என்று சொன்னார். இரண்டாவது இடம் ஒரு பாலம் மாதிரியானது அங்கே அடிக்கும் அசுரக் காற்றுக்கு மிலிட்டரி ட்ரக்குகள் கூட கீழே போய்விடுமாம், மூன்றாவது கொஞ்சம் வழுக்கும் தரை கொண்ட ஒரு பள்ளத்தாக்கை தாண்டும் பகுதி. ஆனால் அன்று பனிப்பொழிவு இல்லாததால் கார் வழுக்கவில்லை. அவர் சொல்லிக் கொண்டேயிருக்க எனக்கென்னமோ இன்றைக்கு ரத்தம் பார்க்காமல் காஷ்மீர் போய்ச் சேரமாட்டோம் என்ற உணர்வு வந்திருந்தது.<br /><br />என்னுடன் வந்த தம்பதியில் அந்தப் பெண் 'சாச்சா எப்ப காஷ்மீர் போவேம்' என்ற கேள்விக்கு 'பேஹ்ட்டி அது அல்லாவுக்குத்தான் தெரியும்' என்று சொன்னாரே பார்க்கணும். சாச்சா எக்காரணம் கொண்டும் இத்தனை மணிக்குள் காஷ்மீர் போய்விடமுடியும் என்று சொல்லவேயில்லை. மலைச் சரிவும், சாவைப் பற்றிய பயமும், விபத்தாகிவிடக்கூடாது என்ற ஏக்கமும் கூடவே பனிபொழியக் கூடாது என்ற எண்ணமும் ஏற்பட்டது. அதைப் பற்றியும் பெரிய கதைகளை இருவருமே சொன்னார்கள். இந்தப் பாதையில் பனி பொழிந்து ஒரே இடத்தில் 7, 8 நாட்கள் இருக்க நேர்ந்ததைப் பற்றியும், மூடப்பட்ட பாதையைத் திறக்க ஆள்வரும் வரை அங்கேயே தான் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும். நமக்கு நடுங்கத் தொடங்கியது.<br /><br />என்னமோ மழை போல் பனிமழையும் இருக்கும் காஷ்மீர் போனால் அனுபவிக்கலாம் என்று நினைத்துச் சென்றேன். ஆனால் நான் காஷ்மீர் பயணத்தை எல்லாம் முடித்துக் கொண்டு ஸ்ரீநகரில் இருந்து விமானம் ஏறும் பொழுது சாச்சா சொன்ன 'நல்லவேளை பனிப்பொழிவு இல்லை நீங்க தப்பிச்சீங்க' என்பது எவ்வளவு வாஸ்தவமானது என்று புரிந்தது. <br /><br />காஷ்மீருக்குள் நுழையும் ஜவஹர் டனலை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டு ஆப்பிள் ஏற்றி வந்த ட்ரக்குகள் விபத்திற்குள்ளானதால் ரோட் ப்ளாக். சாச்சா முகம் அப்படியே சோகமாகிவிட்டது அந்தச் சமயம் அவர் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் பின்னர் 'நல்லவேளை ஆமி ட்ரக்குகள் அருகில் இருக்கும் காரணத்தால் சீக்கிரம் க்ளியர் ஆகிவிட்டது இல்லாவிட்டால் இன்றைக்கு முழுவதும் அங்கேயே இருந்திருக்க வேண்டியிருக்கும்' என்று சொன்னாரே பார்க்கணும். பின்னர் ஜவஹர் டனலிலும் இரண்டு பக்கங்களில் ஒரு பக்கத்தை அடைத்துவிட்டு மற்றொரு பக்கத்தை மட்டும் காஷ்மீரில் இருந்து வருபவர்களையும் காஷ்மீருக்கு போகிறவர்களையும் உபயோகப்படுத்தும் படியான நிலை.<br /><br />சாச்சா டனலில் செல்லும் பொழுது சொல்லிக் கொண்டிருந்தார், டனல் 3 கிமீ நீளமானது பாதியில் ஏதாவது பிரச்சனை என்றால் வண்டியை திருப்பவோ பின்னால் கொண்டு வரவோ முடியாது மறுபக்கத்தில் இருந்து ட்ரக் கொண்டு வந்துதான் டௌவ் செய்து கொண்டு போக வேண்டுமென்று. ஆமாம் ஒரு ட்ரக் செல்லும் அளவுக்குத்தான் அந்த டனல் இருக்கும். ஆனால் அப்படி எந்த பிரச்சனையும் வராமல் நாங்கள் டனலை க்ராஸ் செய்துவிட்டோம். அதற்குப் பிறகு காஷ்மீர் ப்ளைன் தான், மலைச் சரிவு கிடையாது.<br /><br />சாச்சாவின் ட்ரைவிங் பற்றிச் சொல்ல வேண்டும் அவருடைய அனுபவம் முழுவதையும் வைத்து அவர் ஓட்டிக் கொண்டு வந்தார் என்று தான் சொல்லவேண்டும். ஏறக்குறைய மூன்று நான்கு முறை இமாச்சல் பிரதேஷை காரில் சுற்றியவன் என்ற முறையில் சாச்சா பொறுமையாகவும் நிதானமாகவும் அதே சமயம் வேகமாகவும் காரைச் செலுத்தினார். சொல்லப்போனால் அவருக்கு காஷ்மீரின் எல்லா மூலை முடுக்குகளும் தெரியுமாயிருக்கும். அற்புதமாய் ஓட்டிக் கொண்டு வந்தார். <br /><br />காஷ்மீரை நெருங்கிக் கொண்டிருந்தோம் 24 கிலோமீட்டர் இருக்கும், ஆளரவமில்லாத ரோடு, நிலா வெளிச்சமும் சுத்தமாக இல்லை, காரை ப்ளைன் ரோடு என்பதால் கொஞ்சம் வேகமாகவே ஓட்டி வந்தார் அவர். சட்டென்று ஒரு இறக்கத்தில் இறங்கி மேலேயேறும் பொழுது சட்டென்று இடைபுகுந்த கருப்பு நிறக் கழுதை ஒன்றை இடித்து தூக்கியெறிந்தது என்னவோ சுவாரசியமாய் நாங்கள் பேசி வந்ததால் என்னுடன் இருந்த மற்ற தம்பதியில் கணவரும் நானும் தான் கழுதையைப் பார்த்தது ஆனால் அந்த வேகத்தில் ப்ரேக் எல்லாம் போடுவது ஒன்றும் ப்ரயோஜம் இல்லாதது. நல்ல உயரமான கொழுத்த கழுதைதான், நான் இடிக்கும் முன்னர் அதன் கண்களை மட்டும் காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் பார்த்தேன் கழுதை இறந்திருக்குமாயிருக்கும். சாச்சா காரை நிறுத்தவில்லை அங்கே ஆனால் நிறுத்த வேண்டி வந்தது சீக்கிரமே. கழுதை இடித்த வேகத்தில் பேனட் கொஞ்சம் நசுங்கி குளிர்க்காற்று காருக்குள் வரத் தொடங்கியது. <br /><br />வெளியில் 1 டிகிரி இல்லை 5 டிகிரிக்குள் இருக்கலாம் குளிர். தாங்கமுடியாமல் வண்டியை நிறுத்திப் பார்க்க பானட்டில் அடித்து பின்னர் ஒருபக்க கதவில் இடித்து கழுதை அப்பால் எறியப்பட்டிருந்ததை உணர முடிந்தது. இரத்தக் கறையெல்லாம் ஒன்றும் இல்லை ஆனால் கொஞ்சம் நசுங்கியிருந்தது வண்டி. ஹெட்லைட் ஒன்று காலி. வெளியில் வந்து பார்த்தால் கடுங்குளிர் முதுகுத்தண்டை சிலிருக்க வைக்கும் குளிர். ஆனால் வேறு வழியில்லை அந்த மற்றொரு டிரைவர் நண்பர் பானட்டை காருடன் சேர்த்துக் கட்டி ஒரு மாதிரி காற்று உள்ளே வராமல் இருக்கச் செய்தார். பின்னர் திரும்பவும் வந்து உட்கார்ந்து 100 மீட்டர் சென்றிருப்போம், பானட் மேலே வந்துவிட்டது ரோட்டை மறைத்தவாறு. நல்லவேளைக்கு ரோடு முழுவதும் காலியாக இருந்ததால் தப்பித்தோம் பின்னர் இன்னும் இரண்டு மூன்று கயிறுகள் போட்டு பானட்டைக் கட்டி பயணத்தை முடித்து காஷ்மீர் வந்து சேர்ந்தோம்.<br /><br />அங்கே நடந்த காமெடி பற்றி அப்புறம் ஒரு நாள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R7BKeKgNphI/AAAAAAAAAHk/3Hfpn3O1n7A/s1600-h/IMG_3499.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R7BKeKgNphI/AAAAAAAAAHk/3Hfpn3O1n7A/s400/IMG_3499.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5165710654669956626" /></a><br />சாச்சா<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R7BKA6gNpcI/AAAAAAAAAG8/_t7m1pj8ASw/s1600-h/IMG_3382.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R7BKA6gNpcI/AAAAAAAAAG8/_t7m1pj8ASw/s400/IMG_3382.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5165710152158782914" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_waZb_TzRKms/R7BKBagNpdI/AAAAAAAAAHE/q1g4LgdFlWo/s1600-h/IMG_3384.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_waZb_TzRKms/R7BKBagNpdI/AAAAAAAAAHE/q1g4LgdFlWo/s400/IMG_3384.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5165710160748717522" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R7BKCKgNpeI/AAAAAAAAAHM/iI8eEaXBe5A/s1600-h/IMG_3385.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R7BKCKgNpeI/AAAAAAAAAHM/iI8eEaXBe5A/s400/IMG_3385.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5165710173633619426" /></a><br />ஜம்முவின் landscape புகைவண்டியில் இருந்து<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_waZb_TzRKms/R7BKCagNpfI/AAAAAAAAAHU/NyPz_LkwZvg/s1600-h/IMG_3399.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_waZb_TzRKms/R7BKCagNpfI/AAAAAAAAAHU/NyPz_LkwZvg/s400/IMG_3399.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5165710177928586738" /></a><br />நாங்கள் பயணம் செய்த அம்பாஸிட்டர் - கழுதையை அடித்து தூக்கும் முன்<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R7BKC6gNpgI/AAAAAAAAAHc/FXR_YckbILI/s1600-h/IMG_3443.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R7BKC6gNpgI/AAAAAAAAAHc/FXR_YckbILI/s400/IMG_3443.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5165710186518521346" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_waZb_TzRKms/R7BKeqgNpiI/AAAAAAAAAHs/fa-nPJo9aFE/s1600-h/IMG_3456.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_waZb_TzRKms/R7BKeqgNpiI/AAAAAAAAAHs/fa-nPJo9aFE/s400/IMG_3456.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5165710663259891234" /></a><br />காஷ்மீரில் ரயில்வே ஸ்டேஷன் கொண்டு வருவதற்கான வேலைகள் நடக்கின்றன.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-477559855672889656?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-3825122269323242312008-01-24T05:56:00.000-08:002008-01-24T04:27:05.798-08:00காஷ்மீர் பயணம் - பெங்களூரில் இருந்து ஆக்ரா வரை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R5iAT4ruBJI/AAAAAAAAAFk/8s2UsJmp80s/s1600-h/IMG_3142.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R5iAT4ruBJI/AAAAAAAAAFk/8s2UsJmp80s/s400/IMG_3142.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159014452274529426" /></a><br /><br /><br />பயணம் தன்னந்தனியாய் என்று முடிவானதால் நான் திடமாய் இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் முக்கியமில்லை என்பதால் என்னை நானே திடப்படுத்திக் கொண்டிருந்தேன். <a href="http://imohandoss.blogspot.com/2007/12/blog-post_12.html">முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றிய எண்ணங்களைச்</a> சரிசெய்ய நினைத்து <a href="http://imohandoss.blogspot.com/2007/12/blog-post_19.html">எண்ணங்களையே நெம்புகோளாக்கி சிந்தனைகளைப் புரட்டிப் போட்டு</a> என் பயணத்தைத் தொடங்க முடிந்தாலும் கடைசிவரையிலுமே <a href="http://imohandoss.blogspot.com/2007/12/blog-post_20.html">மரணம் பற்றிய பயம்</a> தொடர்ந்து இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.<br /><br />பத்து நாட்களுக்கான உடைகள், "பின் தொடரும் நிழலின் குரல்" "சாய்வு நாற்காலி" "புதுமைப்பித்தன் சிறுகதைகள்" புத்தகங்கள், Lonely Planet India, காமெரா இவ்வளவே நான் எடுத்துக் கொண்டது. என்னுடைய ப்ளான் பெரிய லக்கேஜ் ஒன்றும் சிறிய காலேஜ் பேக் ஒன்றும் எடுத்துக் கொள்வது. பெரிய லக்கேஜை க்ளாக் ரூம்களில் போட்டுவிட்டு தேவைக்கானவைகளை மட்டும் சிறிய பையில் எடுத்துக் கொண்டு சுற்றுவது. பெரும்பாலான இடங்களில் இந்தத் திட்டம் பயனளித்தது.<br /><br />பெங்களூரில் இருந்து கிளம்பிய கர்நாடகா எக்ஸ்பிரஸ், பெங்களூரில் இருந்து டெல்லி செல்வதிலேயே மோசமான ஒன்று என்பது நான் பயணம் செய்து முடித்த பின்னர் தான் தெரியவந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்குக் கிளம்பத் தொடங்கிய பின் தான் அல்சூரில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆட்டோக்கள் இப்பொழுதெல்லாம் வருவதில்லை என்பது தெரியவந்தது. பின்னர் அக்காவை 'ஆக்டிவா' எடுத்துவரச் சொல்லி என் பெரிய லக்கேஜை எனக்கும் வைக்க இடமில்லாமல் கடைசியில் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போனோம். எனக்கு சாதாரணமாகவே பெண்கள் வண்டி ஓட்டுவதைப் பார்த்து பயமாயிருக்கும். அன்றைக்கும் அப்படித்தான் அக்காவின் பின்னால் உட்கார்ந்து போகணுமா என்று பயந்து போனேன், ஆனால் வேறு வழியில்லாமல் அப்படியே வந்து சேர்ந்தேன்.<br /><br />வரும் பொழுதே ரயில் வண்டியில் உடன் உட்காரப்போவது ஃபேமிலியாயிருந்ததல் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விவரித்துக் கொண்டு வந்திருந்தேன். கடைசியில் நான் சென்ற வண்டியில் கூட உட்கார்ந்து வந்துது ஒரு ஃபேமிலி தான், நான் சொன்ன அத்தனை அட்வான்டேஜ்களும் கிடைத்தாலும் இரவில் கூடுதலாய்க் கிடைத்தது 'குறட்டை' இதன் காரணமாக இரவெல்லாம் சரியான தூக்கம் இல்லாமல் பகலில் மேல் சீட்டைப் பிடித்து நன்றாக ஒரு ஆட்டம் உறங்கினேன். <br /><br />பின் தொடரும் நிழலின் குரலை எடுத்து வைத்து படிக்கத் தொடங்கியதில் சுவாரசியம் ஏற்பட்டு, இரயில் ஆக்ராவை அடையும் பொழுது 300க்கு சம்திங் பக்கங்களைப் படித்திருந்தேன். ஆனால் தொடர்ச்சியாக அல்ல பத்து பக்கம் படிப்பது பின்னர் அதைப் பற்றி யோசிப்பது இப்படியே தொடர்ந்தது. பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம் பற்றி மேலோட்டமாக ரிவ்யூ படித்திருந்ததால் புத்தகம் 'திணிக்கும்' கருத்துக்களைத் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ளாமல் ஒரு பக்கத்து கருத்தாக ஒப்புக் கொண்டிருந்தேன். இணையத்தில் ஸ்டாலின் பற்றி தேடி நிறைய படித்திருந்ததாலும், ஓரளவுக்கு கம்யூனிஸ்ட் போலி கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் போன்ற வரிகளின் அர்த்தத்தை தேடிக் கண்டுபிடித்திருந்ததாலும் அது சாத்தியமானது.<br /><br />உடன் வந்தது ஒரு டெல்லி ஃபேமிலியின் கணவன் மனைவி மற்றும் மகள், டிபிகள் ஹரியானா பொண்ணு என்பதால் பின் தொடரும் நிழலின் குரலை விட்டு கண்கள் அந்தப் பக்கம் நகரவில்லை. RACயில் ஒரு தமிழ் ராணுவ ஜவானும் ஒரு பெங்களூரு 'கால் சென்டர்' பெண்ணும் வந்தார்கள். அதில் அந்தப் பெண் கொஞ்சம் சைட் அடிக்கத் தேவலாம் ரகம் தான் என்றாலும் ரொம்பவும் நவீனமாக இருக்கும் பெண்ணைப் பார்த்தால் வரும் அலர்ஜி வந்ததால், அந்தப் பக்கம் அவ்வப்பொழுது திரும்பும் பார்வை வெகு சீக்கிரமாக மீள புத்தகத்தில் திணிக்க முடிந்தது. ஒரு கதை எழுதும் அளவுக்கு இந்த கவனிப்பு இருந்ததால் கவனிப்பு கதையாக வரும்.<br /><br />கடைசி வரை ஆக்ராவில் இறங்குவதா டெல்லியில் இறங்குவதா என்ற முடிவு எடுக்கப்பட முடியாமலே இருந்தது. பின்னர் உடன் வந்த தமிழ் ஜவான் சொல்லி ஆக்ராவில் இறங்கினேன். ஆக்ரா கன்டோன்ட்மென்டில் இறங்கி தேவையானவற்றை பையில் மாற்றிக் கொண்டு க்ளாக் ரூமில் பெரிய லக்கேஜைப் போட்டுவிட்டு தாஜ்மஹாலை நோக்கி நகர்ந்தேன். வெளியில் வரும் பொழுது ஏறக்குறைய ஏழு மணியிருக்கும் அத்தனை கூட்டம் இல்லை, ரிக்ஷா வாலா 20 ரூபாய் என்று சொன்னது ஆச்சர்யப்பட்டுப் போய் ஏறி உட்கார்ந்தேன். ஏனென்றால் ஜவான் நாற்பது வரை கேட்பார்கள் என்று சொல்லியிருந்தது தான் ஆனால் சில நிமிடங்களிலேயே தெரிந்தது ஏன் 20 ரூபாய் என. உங்களை அந்த எம்போரியம் கூட்டிக் கொண்டு போறேன் இந்த எம்போரியம் கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொல்ல நான் எல்லாவற்றையும் மறுக்க கடைசியில் அந்த ஆள் 40 ரூபாய் பணத்தில் வந்து நின்றார். பயணத்தை முதலிலேயே பிரச்சனையில் ஆரம்பிக்க வேண்டாம் என்று சரியென்று ஒப்புக் கொண்டேன்.<br /><br />தாஜ் மஹால் கேட்டைத் தவிர்த்து வேறெங்கோ இறக்கிவிட முயன்ற அவரது முயற்சியை தவிர்த்து தாஜ்மஹால் கேட் அருகில் இறக்கிவிட வைத்தேன். இந்த ஒட்டுமொத்த சுற்றுப் பயணத்தில் ஆக்ரா ரிக்ஷா வாலாக்கள் போல் ஏமாற்றுபவர்களைப் பார்க்கவேயில்லை ஆக்ரா தாஜ் மஹாலுக்குப் போகிறவர்கள் ஜாக்கிரதை. அத்தனை சீக்கிரம் வந்தது எத்தனை நல்ல விஷயம் என்று தாஜ் மஹாலை விட்டு வெளியேறிய பொழுது தான் தெரிந்தது. தாஜ் மஹாலுக்குப் போகிறவர்கள் ஏழு மணிக்கு முன் சென்றுவிடுங்கள் இல்லாவிட்டால் ஒரு கிலோமீட்டர் தூர கியூவைத் தாண்டித்தான் உள்ளே நுழைய முடியும்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_waZb_TzRKms/R5h_4IruBGI/AAAAAAAAAFM/1jEtjbmgQv4/s1600-h/IMG_3071.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_waZb_TzRKms/R5h_4IruBGI/AAAAAAAAAFM/1jEtjbmgQv4/s400/IMG_3071.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159013975533159522" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R5h_4oruBHI/AAAAAAAAAFU/Rwvp6tHR-S0/s1600-h/IMG_3077.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R5h_4oruBHI/AAAAAAAAAFU/Rwvp6tHR-S0/s400/IMG_3077.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159013984123094130" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R5iAToruBII/AAAAAAAAAFc/FMdZY4rMG9Q/s1600-h/IMG_3113.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R5iAToruBII/AAAAAAAAAFc/FMdZY4rMG9Q/s400/IMG_3113.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159014447979562114" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_waZb_TzRKms/R5iAUIruBKI/AAAAAAAAAFs/7239ZNo98YM/s1600-h/IMG_3176.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_waZb_TzRKms/R5iAUIruBKI/AAAAAAAAAFs/7239ZNo98YM/s400/IMG_3176.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159014456569496738" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R5h_3oruBDI/AAAAAAAAAE0/eSdRqZmq4Vo/s1600-h/IMG_3063.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R5h_3oruBDI/AAAAAAAAAE0/eSdRqZmq4Vo/s400/IMG_3063.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159013966943224882" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R5h_34ruBEI/AAAAAAAAAE8/arWvhggjO2I/s1600-h/IMG_3064.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R5h_34ruBEI/AAAAAAAAAE8/arWvhggjO2I/s400/IMG_3064.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159013971238192194" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R5h_34ruBFI/AAAAAAAAAFE/QOE3lV2JCf0/s1600-h/IMG_3069.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R5h_34ruBFI/AAAAAAAAAFE/QOE3lV2JCf0/s400/IMG_3069.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159013971238192210" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_waZb_TzRKms/R5iAUYruBLI/AAAAAAAAAF0/fg6-Q_9Iri0/s1600-h/IMG_3178.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_waZb_TzRKms/R5iAUYruBLI/AAAAAAAAAF0/fg6-Q_9Iri0/s400/IMG_3178.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159014460864464050" /></a><br /><br />முன்னமே பார்த்தது தான் என்பதால் அத்தனை பெரிய வித்தியாசமில்லை என்றாலும் இந்த முறை அதன் பிரம்மாண்டமும் அழகாகப் பட்டது. நிறைய நேரம் புகைப்படம் எடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன் பின்னர் புகைப்படம் எடுக்க ஆரம்பித்ததும் தான் தாமதம், மூன்றாம் கண் மட்டும் தான் வேலை பார்த்தது. எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும் தாஜ்மஹால் அலுக்கவே அலுக்காது என்று தெரிந்தவன் ஆகையால் என்னை நானே வெளியில் தள்ளிக் கொண்டு வந்தேன்.<br /><br />அடுத்து ஆக்ரோ கோட்டைக்கு போவதற்கு மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் காமெராவிற்காக அங்கேயும் சென்று வந்தேன். ஆக்ரா கோட்டையில் நுழையும் பொழுதெல்லாம் ஏக வெய்யில், டிசம்பர் மாத குளிர்காலத்தில் ஆக்ரா கோட்டை வெய்யில் அழைத்து வந்து வியர்வையில் குளிப்பாட்டியது. இதை நினைக்கும் பொழுது ஒரு சுவையான சம்பவம் நினைவில் வருகிறது என் ஒன்றரை ஆண்டு டெல்லி அனுபவமாகட்டும், என் சித்தப்பாவும் மற்ற நண்பர்களும் சொல்லிக் கேட்பதாகட்டும். டெல்லிக்கு மே மாத விடுமுறையில் வருபவர்கள் தேர்ந்தெடுத்து ஆக்ரா அழைத்துப் போக வற்புறுத்துவதையும் வின்டரில் வரும் உறவினர்கள் சிம்லாவிற்கு அழைத்துச் செல்ல வற்புறுத்துவதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.<br /><br />பல சமயங்களில் நாம் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில்லையில்லையா அதுமாதிரிதான் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் ஆக்ரா கோட்டை படப்பிடிப்பு(:)) முடிந்ததும் ஆக்ரா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து தாஜ் எக்ஸ்பிரஸில் டெல்லி செல்வதற்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் ஒன்றை வாங்கிக் கொண்டு பேசாமல் உட்கார்ந்திருந்தேன் வேடிக்கை பார்த்தவாறு. ஆனால் நான் எதிர்பார்க்காத வண்ணம் தாஜ் எக்ஸ்பிரஸ் இரண்டாவது ஸ்டேஷனிலேயே முழுவதுமாக நிரம்பிவிட, பின்னர் ஒரு மூன்றரை மணிநேர பயணத்தை நின்று கொண்டே தொடர்ந்தேன். <br /><br />தமிழ்நாட்டிலிருந்த வந்திருந்த ஒரு பெரிய கல்லூரி கும்பல் பாடிக் கொண்டு விளையாடிக்கொண்டு வந்ததால் பெரிய அளவில் களைப்பெதுவும் தெரியாமல் டெல்லி வந்து சேர்ந்தேன் ஒரு வழியாய்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_waZb_TzRKms/R5iA-YruBSI/AAAAAAAAAGs/eNkqekGAAMM/s1600-h/IMG_3285.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_waZb_TzRKms/R5iA-YruBSI/AAAAAAAAAGs/eNkqekGAAMM/s400/IMG_3285.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159015182418969890" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R5iA-oruBTI/AAAAAAAAAG0/pscRTDNszsk/s1600-h/IMG_3286.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R5iA-oruBTI/AAAAAAAAAG0/pscRTDNszsk/s400/IMG_3286.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159015186713937202" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_waZb_TzRKms/R5iArYruBNI/AAAAAAAAAGE/HzgB3nkva5o/s1600-h/IMG_3214.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_waZb_TzRKms/R5iArYruBNI/AAAAAAAAAGE/HzgB3nkva5o/s400/IMG_3214.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159014856001455314" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R5iAr4ruBOI/AAAAAAAAAGM/dvDd13Srlbo/s1600-h/IMG_3217.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R5iAr4ruBOI/AAAAAAAAAGM/dvDd13Srlbo/s400/IMG_3217.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159014864591389922" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R5iAr4ruBPI/AAAAAAAAAGU/46r7Ap6SrsQ/s1600-h/IMG_3243.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_waZb_TzRKms/R5iAr4ruBPI/AAAAAAAAAGU/46r7Ap6SrsQ/s400/IMG_3243.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159014864591389938" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_waZb_TzRKms/R5iAsIruBQI/AAAAAAAAAGc/9IcjyheWCbY/s1600-h/IMG_3251.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_waZb_TzRKms/R5iAsIruBQI/AAAAAAAAAGc/9IcjyheWCbY/s400/IMG_3251.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159014868886357250" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_waZb_TzRKms/R5iAsYruBRI/AAAAAAAAAGk/z5yvTcIBZ3M/s1600-h/IMG_3281.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_waZb_TzRKms/R5iAsYruBRI/AAAAAAAAAGk/z5yvTcIBZ3M/s400/IMG_3281.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159014873181324562" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R5iAUoruBMI/AAAAAAAAAF8/cLKplUSbuEY/s1600-h/IMG_3197.jpg"><img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_waZb_TzRKms/R5iAUoruBMI/AAAAAAAAAF8/cLKplUSbuEY/s400/IMG_3197.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5159014465159431362" /></a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-382512226932324231?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-28002591446645547052007-08-15T18:17:00.000-07:002007-08-15T05:50:04.153-07:00அலப்புழா பயணம்இந்தப் பயணத்தைப் பற்றி தெளிவான திட்டம் தயாரானது முதலில். மிகச்சிறு குழு அளவில் தோன்றிய திட்டத்தில் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக திட்டமும் அதனுடைய பலன்களையும் பலவீனங்களையும் கூட்டிக்குறைத்துக் கொண்டது; ஆனால் பலன்கள் அதிகமாயிருந்தது திட்டத்தின் வெற்றி. <br /><br />எங்கள் அலுவலகத்தில் இருந்து நாங்கள் சிறு சிறு பெங்களூருக்குள்ளான பயணங்களை மேற்கொண்டிருந்தோம்; ஆனால் இந்தத் திட்டம் முதலில் இந்தக்குழுவால் தீர்மானிக்கப்பட்டதில்லை. கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட சிலரால் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டாலும் எங்கள் குழுவின் முழு ஆதரவும் இந்தப் பயணத்திற்கு இருந்ததூ. ஏறக்குறைய கலவரஹல்லி பெட்டாவிற்கு வந்திருந்த அனைவரும் இந்தப் பயணத்திற்கும் வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. <br /><br />இந்த முறை நிறைய குடும்பங்கள் பங்கேற்றன என்பது தான் முக்கியமான ஒன்று, இப்பொழுதெல்லாம் குடும்பம் என்ற சொற்ச்சேர்க்ககையில் அடுங்குவது பெரும்பாலும் கணவன் மனைவிதான்; அப்படியில்லாவிட்டால் அவர்களுடன் கூடுதலாக ஒரு குழந்தை. அப்படி இந்தமுறை குழந்தையுடனான இரண்டு குடும்பங்களும் குழந்தை இல்லாத(இதுவரை) இரண்டு குடும்பங்களும் வந்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சில திருமணம் ஆகாத பெண்களும், இதைக் குறிப்பிடுவதற்கு காரணம் பயணங்களில் பெண்களை சேர்த்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சனை தெரிந்து பெரும்பாலும் பெண்கள் அவர்களாய் வருவதில்லை. அப்படியில்லாமல் இந்தப் பயணத்தில் எண்ணிக்கை அதிகமானதால் பெண்களும் வருவதாய் ஒப்புக் கொண்டார்கள்.<br /><br />கேரளாவிற்கு சென்று வருவதற்கான பேருந்தும், படகுப்போட்டியை காண்பதற்கான படகும், அதாவது படகுப்போட்டி நடைபெறும் இடம் ஆறாகயிருப்பதால் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்வதற்கே நமக்கு ஒரு படகு வேண்டும். அந்தப் படகும்; அலப்புழாவில் தங்கியிருப்பதற்கு <a href="http://dictionary.reference.com/browse/backwater">backwater</a>ன் மேல் அமைந்த ஒரு ஹோட்டலும் அடுத்த நாளுக்கான சுற்றுதலுக்கான படகு வீடும் முன்பே பெங்களூருவில் இருந்தே பதிவு செய்யப்பட்டிருந்தன.(இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் படகுப்போட்டியைக் காண்பதற்கான படகு மட்டும் கேரளாவிற்குச் சென்றிருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் முன்பே செய்யப்பட்டிருந்தது.) மொத்தச் செலவாக தனிநபருக்கு 4000 ரூபாய்கள் என்று முடிவானது. இந்த அறிவிப்பிற்குப் பின் எப்பொழுதும் ICICI Directன் முன்னால் உட்கார்ந்திருக்கும் இரண்டு நபர்களின் விலகலுக்குப் பின்னால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது 4000 ரூபாய்கள் அவர்களுக்கு அதிகமாகப் பட்டதை. என்ன செய்வது வருடம் முழுவது அந்த ஸ்கீரின் முன்னால் தவமாய் தவமிருந்தும் அவர்களுக்கு கிடைக்கும் லாபமே 5000 தான் எனும்பொழுது அவர்கள் யோசிப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன் ;-)<br /><br />மதியம் மூன்றரை மணியளவில் கிளம்புவதாக திட்டம் கொஞ்சம் போல் தாமதித்து மூன்றே முக்கால் நாலு மணிக்கு பெங்களூருவில் இருந்து கிளம்பினோம். சென்ற முறை வயநாட் சென்ற பொழுது பயன்படுத்திய அதே வழிதான். பெங்களூர் - மைசூர் - குண்டல்பேட் - வயநாட் - கோழிக்கோட் - திருச்சூர் - அலப்புழா. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் மூன்று நான்கு மணிநேரம் தாமதமாகத்தான் அலப்புழாவிற்கு வந்திருந்தோம். வந்து சேர்ந்ததும் ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு படகில் அமர்ந்து படகுப்போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்ற பொழுது முதல் வரிசையில் எங்கள் படகிற்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் ஒரு படகின் பின்னால் நின்று கொண்டோம்.<br /><br />இன்னும் விரிவாக; அதாவது படகுப்போட்டி நடக்கும் இடம் ஒரு 100 மீட்டர் தடகள் அரங்கமாகக் கொண்டீர்களானால், அதன் ஒருபக்கம் நிலத்தாலும் மறுபக்கம் நீராலும் ஆனது படகுப்போட்டி நடக்கும் பகுதி. நீரால் ஆன பகுதியில் வரிசையாக போட்டி நடைபெறும் இடத்திலிருந்து சற்று இடம் விட்டு படகுகளின் அணிவகுப்பு. போட்டியைப் பார்ப்பதற்காக நாங்கள் திட்டமிட்ட சமயத்திற்கு வரமுடியாததால் எங்கள் படகிற்கு முதல் வரிசையில் இடம் கிடைக்கவில்லை. இன்னொரு படகின் பின்னால் நின்று கொண்டிருந்தோம்; ஆனால் போட்டி ஆரம்பிக்கும் பொழுது முன்னால் நின்ற படகில் நாங்களும் சென்று நின்று கொண்டோம். படகு என்று சொல்கிறேனே தவிர ஒவ்வொரு படகும் குறைந்தபட்சம் இருபத்தைந்து முப்பது நபர்கள் உட்கார நிற்கக்கூடிய வசதியுடையது.<br /><br />மூன்றரை மணியளவில் தொடங்கிய போட்டிகளில் பெரும்பாலும் வெற்றிபெற்றவர்களுக்கும் இரண்டாவது இருந்தவர்களுக்குமான இடைவெளி மிக அதிகமாக இருந்ததால் என்னுடன் பயணம் செய்த மக்களின் ஈடுபாடு போட்டியை ரசிப்பட்தில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. மொத்தமாகவே 4 - 5 போட்டிகள் தான் விறுவிறுப்பைத் தந்தன; இதில் கடைசி ஃபைனலில் போட்டியிட்ட பட்டாரா(pattara)விற்கும் வாய்ப்பாட்டிற்கும் நல்ல மோதல் இருந்தது. பட்டாராவின் சப்போர்ட்டர்கள் நாங்கள் இருந்த படகின் அருகில் இருந்தார்கள் அவர்களுக்கு அருகில் வாய்ப்பாடு படகின் சப்போர்ட்டர்கள். இந்த சப்போர்ட்டர்களின் சண்டை படகுப்போட்டியை விடவும் விருவிருப்பாகயிருந்தது. கடைசியில் போட்டியில் வென்றது வாய்ப்பாடு படகுதான். <br /><br />ஆனால் எங்கள் படகை கடைசி ஃபைனல்ஸின் பொழுது வெளியில் எடுக்க வேண்டிய சிக்கல் வந்ததால் மற்ற போட்டிகளைக் கவனித்ததைப் போல் கடைசிப் போட்டியை தீவிரமாய்க் கவனிக்க முடியவில்லை, படகுப்போட்டி பிரம்மாண்டமாய் இருக்கிறது. ஆனால் நாங்கள் அவதியில் வந்து அவதியில் போட்டியைப் பார்த்து அவதியில் சென்றதால் இன்னுமொறுமுறை போட்டிக்குச் சென்று வரவேண்டும் என்று தோன்றுகிறது. <br /><br />அடுத்த நாள் அலப்புழாவின் backwaterஸில் படகுப்பயணம். இரண்டு பக்கங்களும் தென்னைமரங்களால் ஆன ஆற்றுப்பகுதில்(சொல்லலாமா?) எல்லா வசதிகளுடன் கூடிய படகுவீட்டில் பயணித்தோம்(உள்ளே ஏசி ரூம்கள் எல்லாம் உண்டு!). முன்நாளைப் போலில்லாமல் அமைதியான பயணத்தில் ரசிக்கக்கூடியக் காட்சிகள் அதிகம் இருந்தன. அமைதியாக எந்தச் சிந்தனையும் இல்லாமல் வெறுமனே உட்கார்ந்திருக்க முடிந்தது இருபக்க கரைகளையும் பார்த்தவாறே.<br /><br />உணவு இந்தப் பயணத்தில் மிகவும் அருமையாக அமைந்ததைச் சொல்லித்தான் ஆகவேண்டும். போட்டியைக் காணச் சென்ற பொழுது ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்த சாப்பாடாகட்டும் இரவு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டாதகட்டும் பிரம்மாதமாகயிருந்தது. முன்னமே இத்தனை பேர் நான் வெஜ், வெஜ் என்று சொல்லப்பட்டு விட்டதால் மிக அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டு காத்திருந்தது உணவு. ஞாயிற்றுக்கிழமை காலை படகுப்பயணத்திற்கு முன் சிறிது தூரம் கரைப்பகுதியில் நடந்து திரும்பியது திருப்தியான அனுபவம்.<br /><br />இந்தப் பயணநேரம் முழுவதும்(மொத்தமான பேருந்து பயணத்தில்) என்னுடன் இருந்த புத்தகம் பாவை விளக்கு - அகிலன் உடையது. முகம் மறைத்துக் கொள்வதற்கும், என் வாயால் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும், என் கோபங்களை அடக்கியாளவும் பெரிதும் உபயோகமாகியிருந்தது. வேறென்ன மக்கள் அந்தாக்ஷரி விளையாடத் தொடங்க நான் தமிழ்ப் பாடல்கள் என்று கேட்டேன்; நாட் அலவ்ட் என்று சொன்னவுடன் அழகாய் பாவை விளக்கை புரட்டத் தொடங்கின கைகள். பேருந்து முழுவதையும் ஆக்கிரமித்திருந்த அவர்களின் உற்சாகம் என்னைத் தொடவில்லை நான் அகிலனின் தணிகாசலத்திலும் உமாவிலும் செங்கமலத்திடமும் மூழ்கியிருந்தேன்.<br /><br />பெங்களூரில் மிகச்சுலபமாக LTTE என்ற பட்டம், நீங்கள் தீவிர தமிழராகயிருந்தால் கிடைக்கும்; முன்பே எனக்கு அந்தப் பட்டம் உண்டென்றாலும் ஒட்டுமொத்த பயணத்திலும் மொத்தமாக இந்தி ஆக்கிரமிப்பு செய்த நேரத்தில் பாவை விளக்கின் துணைகொண்டு நான் பயணத்தை எளிதாக்க நேரில் சொல்ல முடியாதவர்கள் மறைமுகமாகவும் நேரில் சொல்லக்கூடிய உரிமையுடையவர்கள், எல்லாம் மென்டாலிட்டி பிரச்சனை என்றும் சொல்லி LTTE என்று ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் கவலைப்படுவதை விட்டு வருடங்களாகிவிட்டது என்பதால் என்னால் இந்தப் பயணத்தை நெருடல் இல்லாமல் ரசிக்க முடிந்தது. <br /><br />வயது குறைவாகயிருந்தாலும் நான் என்னை சிறுபிள்ளையாக இன்னும் நினைத்துக் கொண்டிருக்கவில்லையாதலால் என்னால் அவர்களை கேள்வி கேட்காமல், இதன் காரணமாகவெல்லாம் சங்கடப்படாமல் இந்த விஷயங்களைப் புறக்கணிக்க முடிந்தது. <br /><br />அடுத்த விஷயம் தண்ணியடிப்பது எல்லா சமயங்களிலும் எனக்கென்று பிரச்சனையை இழுத்துவருவது; இந்தப் பயணத்திலும் இவர்கள் புல் லோடடாகத்தான் பயணத்தைத் தொடங்கினார்கள். முன்பக்க சீட்கள் குடும்பத்திற்கானது என்பதால் மட்டுமல்ல எனக்கு பின் சீட்கள் மிகவும் பிடிக்குமென்பதால் தண்ணியடிப்பவர்களுடன் உட்காரமுடிந்திருந்தது. எனக்குத்தெரிந்து அந்தப் பேருந்தில் என்னைத் தவிர்த்து இரண்டு பேர் தான் தண்ணியடிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். பொங்கி வழிந்த செயற்கை உற்சாகத்தில் கலந்துகொள்ளாமல் இருக்க முடியாதென்பதால் கொஞ்சம் போல் வழிந்து கொண்டு உற்சாகப் பெருவெள்ளத்தில் நானும் மூழ்கினேன்.<br /><br />எல்லாவற்றையும் கடந்து மிக அருமையான பயணமாக அமைந்தது இந்த கேரளப் பயணம்.<br /><br /><a href="http://alaithal.blogspot.com/2007/08/blog-post_14.html">புகைப்படங்கள் போட்ட பதிவு</a><br /><br />PS: இது நிறைய அலுவல நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் கலந்துகொண்ட பயணம் ஆதலால்; நண்பருடைய காமெராவைக் கையில் எடுத்தால், அபிஷியல் போட்டோகிராபர் ஆகிவிடும் வாய்ப்பிருந்ததால். நான் எஸ்கேப் ஆகியிருந்தேன் படகுப்போட்டியின் பொழுது காமெராக்கண்களை உதறிவிட்டிருந்ததால். அந்தப் படங்களை நான் எடுக்கவில்லை; நான் இந்தப் பயணத்தில் எடுத்தவைகள் பெரும்பாலும் ஃபோர்ட்ராய்டுகள் என்பதாலும் அவைகளை இணையத்தில் உலவவிடுவதை நான் விரும்பாததாலும் புகைப்படங்கள் இந்தப் பயணத்தில் கொஞ்சம் போல் குறைவே.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-2800259144664554705?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-65471317422871916892007-08-14T18:35:00.000-07:002007-08-14T06:06:01.935-07:00படகுகளின் தேசம் - அலப்புழா படங்கள்<img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-1.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-2.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-3.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-4.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-5.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-6.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-7.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-8.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-9.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-10.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-11.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-12.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-13.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-14.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-15.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-16.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-17.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-18.jpg"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-19.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-20.JPG"/><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_alappuzha-21.JPG"/><br /><br />கேரள தேசத்தின் அழகை மிகச்சிறு இடைவெளியில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அருமையாக அமைந்த பயணம் விரைவில் இதைப் பற்றி எழுதுகிறேன்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-6547131742287191689?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com14tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-46586662822332679212007-08-13T16:51:00.000-07:002007-08-13T04:21:23.216-07:00மாமல்லபுரம் - நீண்ட நாள் ஆசையில் ஒர் பயணம் - படங்கள்<img src="http://farm2.static.flickr.com/1217/1052167967_a217691bf2.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1198/1053056468_67cdde0d54.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1397/1053030380_5109f38ab5.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1164/1053031968_ec4db1baeb.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1297/1052175563_60d6fd294a.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1160/1052176431_c55f8b202e.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1326/1053040978_d18c5f3e1e.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1014/1053041650_1b4e2d3eea.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1202/1052182065_6c85ef8775.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1092/1053044594_03d44c06e9.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1289/1053045156_2546b7a2ff.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1199/1053046580_80121f9c6a.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1340/1053050164_7b9da33853.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1087/1053052200_03b36385f7.jpg?v=1187001946"/><br /><img src="http://farm2.static.flickr.com/1311/1053052884_b7c0e86d2a.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1037/1052196865_b0094c19ac.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1137/1052201229_ae5dc5a03b.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1283/1052205111_ed70124a70.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1149/1053067678_0e0893bd10.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1237/1052210181_316d23e0a3.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1128/1053072018_d20176cf90.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1300/1053072826_f8cdca6768.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1350/1053073676_d5a995ee7e.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1433/1053074074_fe2500f5cd.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1097/1052227027_d1acc8b5f1.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1403/1053090568_98daacafd3.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1001/1053095118_5b0ccad645.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1277/1052235405_22ddaaa417.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1267/1052238779_3208fd51a2.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1360/1052240093_8bcd9a2ecd.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1103/1053101456_47558fd1a8.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1044/1052242497_83d3a56371.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1203/1052247089_e41470a90b.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1206/1053109024_3c74f4ba9a.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1359/1052250827_2b65eca8bc.jpg?v=0"/><br /><br /><img src="http://farm2.static.flickr.com/1313/1053113014_f4b6749e8c.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1303/1052255721_b1de34c794.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1100/1052256415_59fc8856d0.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1283/1053119716_b89d19cf29.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1287/1053120290_f1e76a265b.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1066/1052260853_c599220f52.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1162/1053124026_8874642ecf.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1061/1052264271_9315736791.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1206/1052265499_731c4c95aa.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1298/1053126722_733bc92600.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1386/1052267447_13d6a1afe3.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1157/1052268631_e91a21a2f7.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1224/1053131694_9117c683dc.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1070/1053133798_6cce8a34bd.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1080/1053134508_40963ca439.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1196/1052279685_f0b99807ed.jpg?v=0"/><br /><img src="http://farm2.static.flickr.com/1229/1052283351_5d037c0e07.jpg?v=0"/><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-4658666282233267921?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com23tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-61325229718218970752007-08-01T12:58:00.000-07:002007-08-01T23:09:12.261-07:00தேவதைகளின் தேசம்ஹோட்டலில் கொடுத்திருந்த கம்பளிக்குள் புகுந்து கொண்டு 12 மணிநேரம் கழித்துத்தான் எழுந்தேன். நண்பர்கள் கசகசவென்று பேசிக்கொண்டிருந்ததால் விழிப்பு வந்தாலும்; இப்படி அவர்கள் வெகுநேரமாய் பேசிக் கொண்டிருந்ததாய்ச் சொன்னார்கள். என்ன விஷயம் என்று கேட்டால் இவர்கள் மீண்டும் யானை பார்க்கப் போக, இந்த முறை யானைக் கூட்டத்தைப் புகைப்படம் எடுத்துவிட்டு வரும் வழியில் தனி யானை ஒன்று இவர்கள் துரத்தியதாகவும் அதனிடம் இருந்து தப்பித்து வந்த கதையை சொல்லிக் கொண்டிருந்தார்கள். <br /><br />பிறகு பார்த்தால் தான் தெரிகிறது இவர்கள் யானையை பேக்ரவுண்டாக வைத்து இன்னொரு ஃபார்மேஷனை புகைப்படம் எடுக்க நினைத்திருக்கிறார்கள். யானைக்கு கோபம் வந்திருக்க வேண்டும்; துரத்தோ துரத்தென்று துரத்தியிருக்கிறது இவர்களை. என்னுடன் அறையில் இருந்த நண்பர்கள் இருவர் ராயல் சேலஞ்சை அலாக்காக அடுத்துவிட்டு; பறவையினங்கள் ஒன்றிரண்டைக் கடித்து குதிறிப் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் தான் நினைவில் வந்தது நேற்றிரவு இரவு உணவு சாப்பிடாதது. பின்னர் காலை உணவு சாப்பிட்டு விட்டு; பனாசுரா டேமிற்கு செல்லத் திட்டமிட்டோம். <br /><br />சுல்தான் பத்தேரியில் இருந்து சுமார் 30KM தூரத்தில் இருக்கிறது இந்த பனாசுரா டேம். இரண்டு மாதத்திற்கு முன்னால் அணையில் தண்ணீர் இல்லையென்று போட்டிங் சர்வீஸை நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது அணை நிரம்பியிருக்கும் வேளையில் போட்கள் வேலை செய்யாததால் வெறும் புகைப்படங்கள் மட்டும் எடுத்துவிட்டுக் கிளம்பினோம். ஒரு நாள் முழுவதையுமே கூட அங்கே செலவிட விஷயங்கள் இருந்தாலும் இவர்களுடைய பயண முறை அங்கிருந்து வேகமாய் எங்களை நகரவைத்தது. பின்னர் திரும்பவும் சுல்தான் பத்தேரி வந்து மதிய உணவை முடித்துக் கொண்டு(சுமார் 4 மணி அளவில்) கேரளாவில் இருந்து கிளம்பினோம்.<br /><br />மனம் முழுவதும் ரம்மியம் ஒட்டிக்கொண்டதைப் போன்ற ஒரு உணர்வு; அழகான ஊர் இன்னமும் இயற்கையை அழிக்காமல் மக்கள். கர்நாடக கேரள எல்லையைக் கடக்கும் பொழுது ஒரு விஷயம் புரிந்தது கிட்டத்தட்ட ஒன்றிரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் மக்கள் வெவ்வேறான மொழி பேசிக்கொண்டு; வித்தியாசமான அனுபவம். நிறைவான அனுபவங்களுடன் எங்கள் பயணம் மீண்டும் பெங்களூருவை நோக்கி பயணம். ஆறரை மணியில் இருந்து ஏழு, ஏழேகால் மணி வரை வண்டி ஓட்டுவது கடினம் இருட்டும் செட்டாகியிருக்காது வெளிச்சமும் இருக்காது. இந்த மக்களும் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் அவர்களுடைய வண்டி ஓட்டும் அனுபவம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.<br /><br />வரும் வழியில் மைசூர் - பெங்களூர் சாலையில் Cafe Day ஒன்று உண்டு என்றும் அங்கே நிறுத்தி இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்றும் ப்ளான். அருமையான ரோடு மைசூர் - பெங்களூர் ஹைவே. இன்னொரு நாள் என்னுடைய கீர போண்டாவில் போகும் உத்தேசம் உள்ளது தனியாக.<br /><br />Cafe Dayல் சாப்பிட உட்கார்ந்த பொழுது உள்ளே பரபரப்பு என்னவென்று பார்த்தால் யாரோ ஒரு செலிப்ரட்டி வந்திருந்தார். எங்களுக்கும் போஸ்டர்கள் பார்த்து முகம் தெரிந்தாலும் யாரென்று தெரியவில்லை; சும்மா போய் புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் தான். கூட வந்த ஒரு தமிழ்நாட்டு நண்பர் அவரிடம் நேராய் சென்று "நீங்க செலிபிரட்டி என்று தெரிகிறது ஆனால் யாரென்று தெரியவில்லை. உங்களை இண்ட்ரொடியூஸ் செய்து கொள்ள முடியாமா எனக்கேட்க."<br /><br />நபர் கொஞ்சமும் முகம் சுணுங்காமல்,<br /><br />"நான் சிவராஜ்குமார் ராஜ்குமாரின் பையன்" என்று அறிமுகப்படுத்துக் கொண்டார். நம்மூரில் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படம் ஒன்று வந்ததில்லையா அது உண்மையில் கன்னட படம் ஜோகி. கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆன படம் அது; அதில் நடித்திருந்தவர் தான் இந்த சிவராஜ்குமார். பின்னர் இரண்டு ஸ்நாப்ஸ் எடுத்துக் கொண்டு அவருடைய பிரைவசியை ரொம்பவும் டிஸ்டர்ப் செய்யாமல் நகர்ந்து விட்டோம். <br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_wayanad-07.JPG"/><br /><br /><img src="http://img174.imageshack.us/img174/1664/img3943zv8.jpg"/><br /><br /><img src="http://img174.imageshack.us/img174/9805/img3944js4.jpg"/><br /><br /><img src="http://img406.imageshack.us/img406/7880/img4033lx2.jpg"/><br /><br /><img src="http://img406.imageshack.us/img406/7987/img4034qe7.jpg"/><br /><br /><img src="http://img406.imageshack.us/img406/4875/img4035sn2.jpg"/><br /><br /><img src="http://img406.imageshack.us/img406/113/img4039fv9.jpg"/><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_wayanad-08.JPG"/><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_wayanad-09.JPG"/><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_wayanad-010.JPG"/><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_wayanad-011.JPG"/><br /><br />மனுஷர் ரொம்பவும் கூல், நீங்க எல்லாம் எந்த ஊரு என்று கேட்டவர் மெட்ராஸ் என்று நண்பர் சொன்னதும் ப்ராப்பர் மெட்ராஸா என்று கேட்டார். ஏனென்றால் பொதுவாக நார்த் இண்டியாவில் தமிழ்நாட்டில் இருந்து வந்தாலே மெட்ராஸ் என்று சொல்லும் பழக்கம் உண்டு. உடனே நண்பர் ஆமாம் ப்ராப்பர் மெட்ராஸ் தான் என்று சொல்ல, நானும் பார்ன் அண்ட் ப்ராட்டப் இன் மெட்ராஸ் தான்; கோடம்பாக்கம் என்று சொல்லி எங்கள் பயணத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். நம்மூரில் பச்சா பசங்க எல்லாம் படம் காண்பிக்கும் பொழுது சிவராஜ்குமார் எந்த வித பந்தாவும் இல்லாமல் நடந்து கொண்டது வியப்பாயிருந்தது. பெரும்பாலும் Cafe Dayல் யாரும் அவரை பெரிதாய் கண்டுகொள்ளாவிட்டாலும் அவரைப் பற்றி தெரிந்துதான் இருந்தது. பின்னர் சிக்கன் பர்கர், கோல்ட் காப்பி குடித்துவிட்டு பெங்களூர் வந்த பொழுது மணி இரவு 1.00. <br /><br />------------------------------------<br /><br />கேமெரா கண்களில் பதிவு செய்யாவிட்டாலும் மனதில் பதிவாகியிருந்தார்கள் கேரள பெண்கள். கேரளா கடவுளின் தேசம் மட்டுமல்ல தேவதைகளின் தேசமும் தான் ;-)<br /><br />இந்தப் பயணத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய ஜல்லிக் குறிப்பு - <a href="http://imohandoss.blogspot.com/2007/07/blog-post_6098.html">கடவுளின் தேசம்</a><br /><br />இன்னும் நிறைய படங்கள் - <a href="http://alaithal.blogspot.com/2007/07/wayanad-photos.html">Wayanad photos</a><br /><br />முந்தைய பகுதி - <a href="http://alaithal.blogspot.com/2007/07/tour-de-wayanad.html">Tour de Wayanad</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-6132522971821897075?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com18tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-24497817194582445732007-07-31T21:52:00.000-07:002007-07-31T09:30:17.027-07:00Tour de Wayanadவழக்கம் போல் இந்த முறையும் மூன்று மணிக்கு மீட்டிங் பாய்ண்ட் வரவேண்டும் என்று நண்பர் சொல்லியிருந்தார். நானிருக்கும் அல்சூரில் இருந்து ஜெயநகர் 4 ப்ளாக்கிற்கு என் வண்டியில் வந்து அங்கே என் பைக்கை ஓரங்கட்டி விட்டு நண்பருடைய வண்டியில் கிளம்ப வேண்டும். எல்லாம் சரியாக நடக்க நாங்கள் மொத்தம் ஏழுபேர், ஆறுவண்டியில் 3.00 மணி சனிக்கிழமை காலையில் கிளம்பினோம். நண்பர் அவருடைய வீட்டிற்கு சென்றிருந்த பொழுதுதான் என்னிடம் நாம் வயநாட் போகிறோம் என்ற விஷயத்தைச் சொன்னார். சொல்லப்போனால் இது ப்ளானில் இருந்த டூர் தான்; ஆனால் நான் என் சொந்த வண்டியில் செல்வதாய் உத்தேசித்திருந்த ஒன்று.<br /><br />ஜெயநகரில் இருந்து பன்சங்கரி வழியாக மைசூர் ரோட்டை பிடிக்கும் வரை கொஞ்சம் போல் மெதுவாய் சென்றவர்கள் மைசூர் ரோட்டில் வேகமெடுத்தார்கள். இந்த பைக்கிங் க்ரூப் ஒரு ஃபார்மேஷனிலேயே செல்வார்கள் என்பதால் பெரும்பாலும் 90 - 100 KM/Hourல் செல்வார்கள். Bullet மற்றும் Karizma வின் ஒளிவிளக்குகள் நன்றாய் இருக்குமாதலால், மீதமிருந்த மூன்று Pulzar'கள் இவர்களின் பின்னாலே பெரும்பான்மையான இரவு நேரங்களில் வருவார்கள். அதைப்போலவே முன்சொன்ன வண்டிகளின் வேகமும் பல்ஸரை விடவும் அதிகம்.<br /><br />இந்த க்ரூப்பில் ஒரு நபர் ஏற்கனவே இதே போன்ற ஒரு பயணத்தைச் செய்தவன் ஆகையாலும், இந்த வழி பெரும்பாலும் நேர் பாதையாக இருந்ததாலும் பயணம் இலகுவாகவேயிருந்தது. பெங்களூரில் கிளம்பிய எங்களுடைய அடுத்த ஸ்டாப் மாண்டியா, பின்னர் மைசூர், கிட்டத்தட்ட பெங்களூரில் இருந்து 120 KM இருக்கும். பின்னர் அங்கிருந்து நஞ்சாக்குட் குண்டல்பேட் வழியான பயணத்தில் கர்நாடக - கேரள வனப்பகுதி வரும். பண்டிப்பூர் வனவிலங்குப் பூங்கா இங்கேதான் இருக்கிறது. <br /><br />சாருநிவேதிதா எழுதியிருப்பார் இந்த ஊரில் பைக்கையும் பைக் ஒட்டுவதையும் ஒரு விஷயத்தோடு(ஹிஹி நான் சொல்லலை) ஒப்பிட்டு; சாதாரண வண்டி ஓட்டுபவர்களுக்கே இப்படி என்றால் என்னுடன் பயணம் செய்த நண்பர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே கேரளா செல்பவர்கள் அவர்களுக்கு எப்படி. அங்கங்கே நிறுத்து வாகனங்களை புகைப்படம் எடுத்தவாரே இருக்கும் எங்கள் பயணம்.<br /><br />இந்தக் காட்டுப் பகுதியில் கூட ரோடு பிரம்மாதமாகயிருந்தது இருநூறு மீட்டர்கள் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தாலும் நல்ல ரோடுதான். பெங்களூர் - மாண்டியா - மைசூர் - குண்டல்பேட் - கேரளா வரை ரோட் பிரம்மாதமாகயிருந்தது. கர்நாடக காட்டுப் பகுதியும் கேரள காட்டுப்பகுதியும் அருமையாக இருந்தது. கர்நாடகக் காட்டுப் பகுதியைத் தாண்டும் பொழுது தென்பட்ட யானைகளை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் நண்பர்கள். பொதுவாக யானைகள் கூட்டமாகயிருந்தால் ஒன்றும் செய்யாதுதான் என்றாலும்; அதில் ஒரு குட்டி யானை இருக்கப் போக அது புகைப்படம் எடுத்த நண்பரைத் துரத்த விழுந்தடித்து நண்பர் வந்து சேர்ந்தார்.<br /><br />ஃபார்மேஷனில் கடைசியாக வந்தவர் என்பதாலும்; ஏகப்பட்ட வளைவுகளுடன் கூடியதாக இருந்ததாலும், நண்பர் யானைக்கூட்டத்தை தன் எக்ஸ்ரே கண்களால் கண்டுபிடித்திருந்ததாலும் நாங்கள் பார்க்கவில்லை. பின்னர் ஆளைக் காணோம் என்று திரும்பி வந்து பார்க்க நண்பர் சேற்றில் விழுந்து எழுந்து வந்திருந்தார். எனது அலுவலகத் தோழர் நானும் சென்று இப்போதே யானையைப் பார்க்கவேண்டும் என்று வற்புறுத்திய போதும்; அவரை இழுத்துக் கொண்டு வந்தோம். கர்நாடக எல்லையைக் கடந்து கேரள எல்லைக்குள் நுழையும் இடத்தில் இருந்த செக்யூரிட்டி கார்ட்கள். ஏற்கனவே யானையைக் காண்பிக்காமல் வருவதால் கோபமாக இருந்த நண்பரிடம். "நைட்டு ஒரு பர்டிக்குலர் நேரத்திற்கு ஒரு புலியொன்னு இந்தப் பக்கம் வரும்"னு சொல்லப்போக ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு பால்ஸ் ஒன்றிற்கு போய்விட்டு இங்கே இரவு வருவதாக நண்பர்களில் சிலர் முடிவெடுத்தார்கள்.<br /><br />புலி தன்னுடைய எல்லை விஷயத்தில் ரொம்பவும் சரியாய் இருக்குமாம்; தன்னுடைய எல்லைக்குள் இன்னொரு புலியின் ஆதிக்கம் இருக்கிறதா இல்லையா என்று வெரிஃபை செய்வதற்காக இரவு நேரத்தில் சுற்றும் என்றும் அந்த கார்ட்கள் சொன்னார்கள். நானோ வெள்ளிக்கிழமை இரவு சினிமா பாரடைசியோவில் எடுத்துவந்த உலக சினிமாக்கள் இரண்டை(<a href="http://en.wikipedia.org/wiki/The_Scent_of_Green_Papaya">The scent of the green papaya</a>, <a href="http://www.imdb.com/title/tt0084893/">We of the never never</a> )பார்த்துவிட்டு ஒரு மணி நேர உறக்கத்தில் பயணம் செய்யத் தொடங்கியதாலும்; புல்லட்டில் இருந்து கீழே விழுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததாலும் தூங்கிக்கொண்டே வந்து கொண்டிருந்தேன். அதனால் என்னுடைய அன்றைய இரவு ப்ளான் முழுவதுமாக தூங்குவது தான்.<br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_wayanad-01.JPG"/><br /><br />கர்நாடக எல்லையைக் கடந்து கேரள எல்லைக்குள் நுழைந்ததும் கொடுத்துவைத்தது போல் அருமையான சாரல் வீசத் தொடங்கியது. அதிலிருந்து நாங்கள் எங்களுடைய இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பும்வரை சாரல் - கொஞ்சம் மிருதுவான மழை மட்டும் தான் பெய்துகொண்டிருந்தது. எல்லோரும் பயமுறுத்தினார்கள் வயநாட்டில் ஏகமாய் மழை பெய்வதாய்; ஆனால் அப்படி ஒன்றும் இல்லை.<br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_wayanad-02.JPG"/><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_wayanad-03.JPG"/><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_wayanad-04.JPG"/><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_wayanad-05.JPG"/><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_wayanad-06.JPG"/><br /><br /><br />நண்பர் முன்பே வந்தவர் என்பதால் Sulthan Batheryல் அருமையான ஒரு ஓட்டலை நோக்கியிருந்தது எங்கள் பயணம். 3 பெட்ரூம் அறைகள் 500 ரூபாய்க்கு, நல்ல ஓட்டல் அறைகள் டீவியுடனும் கீழே ரெஸ்டாரண்ட் உடனும்; ஹோட்டல் ரீஜன்ஸி இருப்பது சுல்தான் பத்தேரியிலேயே. ஆயுர்வேதிக் மஸாஜும் செய்யப்படும் என்று சொல்லியிருந்தார்கள்; ஒரு மணிநேரம் கிடைத்தால் செய்து கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தேன் ரொம்பவும் பிஸி ஷெட்யூலாகப் போய்விட்டதால் முடியவில்லை. இன்னொரு நினைத்து முடியாமல் போன விஷயம் லாலேட்டனின் Hallo படம். ஹோட்டலுக்கு எதிர்த்தார்ப்போலவே தியேட்டர், ஆசீப்பை வம்பிழுக்கவாவது படம் பார்க்கணும் என்று நினைத்திருந்தேன்; முடியவில்லை.<br /><br />போய்ச் சேர்ந்ததும் சின்ன குளியல் ஒன்றைப் போட்டுவிட்டு அனைவரும் அரைமணிநேரத்தில் ரெடியானார்கள். நாங்கள் அன்று ஒரு அருவிக்குப் போகப்போகிறோம் என்ற ப்ளான் சொல்லப்பட்டிருந்தது அப்படியே இன்னும் இரண்டு இடங்கள். இங்கிருந்து தொடங்கியது தான் என்னுடைய "கடவுளின் தேசத்திற்"கான பயணம். அருமையான லாண்ட்ஸ்கேப் எல்லாவற்றையுமே நிறுத்து புகைப்படம் எடுக்கும் ஆர்வம் எனக்கிருந்தது. ஆனால் நிறுத்திய இடங்கள் மிகவும் குறைவு(Budd Break க்காமாம் ;-)). <br /><br />சில விஷயங்களை விவரிக்க முடியாதென்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஒன்று தான் என்னுடைய இந்தப் பயணமும். சோகமாகவும் சந்தோஷமாகவும் மாறி மாறி இருப்பேன் என்று என்னுடைய நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கம்ப்ளெய்ண்ட் செய்வார்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றாய் மாற எனக்கு அவகாசம் அதிகம் பிடிப்பதில்லை அதைப் போலவே காரணமும். ஆனால் எல்லாவற்றையும் கடந்து நான் சந்தோஷமாகயிருந்தேன் இந்தப் பயணத்தின் பொழுது. <br /><br />சுல்தான் பத்தேரியிலிருந்து 40KMல் இருக்கிறது நாங்கள் சென்ற சோச்சிபூரா(சரிதானா) நீர்வீழ்ச்சி. இந்தப் பகுதியில் இருக்கும் மீன்முட்டி நீர்வீழ்ச்சி தான் ரொம்பவும் பிரபலமானது என்றாலும் ஒரு வாரம் பெய்த தொடர்ச்சியான மழையால் அந்த நீர்வீழ்ச்சிக்குப் போகும் வழிகள் இல்லாமல் போனதால் இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்திருந்தோம். முன்பே ப்ளான் செய்தது போல் நீர்வீழ்ச்சிக்கு போகும் முன்பே சாப்பாட்டிற்குச் சொல்லிவிட்டுச் சென்றோம். அதனால் நாங்கள் குளித்துவிட்டு வந்ததும் சூடான(சுவையான இல்லை ;-)) சாப்பாடு கிடைத்தது.<br /><br />இதில் பயணம் செய்த பெரும்பாலான நண்பர்களுடன் நான் முன்பே முத்தத்தி சென்றிருந்ததால் எனக்கு யார் யார் உள்ளே இறங்குவார்கள் என்று தெரியும். மேலும் பயமுறுத்திவிட்டதால் நண்பர்கள் பக்கத்தில் கூட வரமாட்டேன் என்று சொல்லி காலைக்கூட நனைக்காமல் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் சுல்தான் பத்தேரியில் இருந்து சோச்சிபாரா நீர்வீழ்ச்சி வரை சூப்பரான டிரவை செய்து கொண்டு வந்திருந்தார்கள்; அவர்களுக்குத் தேவையானது அதுதான் நீர்வீழ்ச்சி இரண்டாவது விஷயம். 80KM வேகத்தில் அந்த மலைமுகடுகளில் பயணம், ரிஸ்க் தான் என்றாலும் பிரம்மாதமான அனுபவம்.(அவர்கள் ரொம்பவும் செக்யூர்டா வண்டி ஓட்டுவார்கள் - வேகம் என்றாலும் சேஃப்டி இருக்கும்)<br /><br /><embed src="http://media.imeem.com/v/EdRiIRRVsD/aus=false/pv=2" type="application/x-shockwave-flash" width="400" height="325" allowFullScreen="true"></embed><br /><br />நாங்கள் நான்கு பேர் அருவியில் இறங்கிவிட்டு வந்ததும் கிளம்பினோம் சாப்பாடு அந்தப் பசிக்கும் அந்த இடத்திற்கும் ஏதுவாய் இருக்கு சாப்பிட்டு முடித்து திரும்பவும் ஹோட்டலுக்கு வரவே நாங்கள் நினைத்ததை விடவும் நேரமாகிவிட்டதால் மற்றவர்களுடைய புலி பார்க்கும் ப்ளான் கேன்ஸலாகியிருந்தது. அங்கே போய்ச் சேர்ந்ததும் எனக்கும் சரியான தூக்கம் வந்ததால் நானும் லாலேட்டன் படத்தை டிராப் செய்து(அண்ணாச்சி தப்பிச்சீங்க) தூங்கிப்போனேன். சொல்லப்போனால் 12 மணிநேரம். காலை ஒன்பது மணிக்கு எழுப்பி காண்பித்தார்களே போட்டோக்கள் பயந்தே போயிருந்தென். அந்த புலி பார்க்கும் க்ரூப் காலையில் 5.30 க்கு எழுந்து மீண்டும் 50 KM பயணம் செய்து கர்நாடகா-கேரளா பார்டருக்கு சென்றிருக்கிறது அங்கே யானைகளுடன் நடந்த அனுபவம். படங்களுடன் அடுத்தப் பதிவு.<br /><br />இந்தப் பயணத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய ஜல்லிக் குறிப்பு - <a href="http://imohandoss.blogspot.com/2007/07/blog-post_6098.html">கடவுளின் தேசம்</a><br /><br />இன்னும் நிறைய படங்கள் - <a href="http://alaithal.blogspot.com/2007/07/wayanad-photos.html">Wayanad photos</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-2449781719458244573?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-14568680994643813452007-07-30T22:58:00.000-07:002007-07-31T23:13:30.977-07:00Wayanad photosஏகப்பட்ட படங்கள் போட்டிருக்கிறேன்; கொஞ்சம் போல் நேரம் எடுக்கலாம்.<br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-10.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-11.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-12.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-13.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-14.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-15.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-16.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-17.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-18.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-19.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-20.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-21.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-22.JPG"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-23.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-24.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-25.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-26.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-27.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-28.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-29.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-30.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-31.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-32.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-33.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-34.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-35.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-36.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-37.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-38.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-39.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-40.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-41.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-42.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-43.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-44.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-45.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-46.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-47.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-48.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-49.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-50.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-51.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-52.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-53.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-54.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-55.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-56.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-57.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-58.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-59.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-60.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-61.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-62.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-63.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-64.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-65.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-66.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-67.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-68.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-69.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-70.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-71.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-72.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-73.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-74.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-75.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-76.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-77.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-78.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-79.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-80.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-81.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-82.jpg"/><br /><br /><img src="http://mohandoss.i.tour.googlepages.com/tour_de_wayanad-83.jpg"/><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-1456868099464381345?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-50884233406383273202007-06-27T15:36:00.000-07:002007-06-27T03:06:46.943-07:00என் டிரெக்கிங் அனுபவங்கள் - கலவாரஹல்லி பெட்டாநீங்கள் பயணம் செய்வதில் விருப்பம் உடையவரா என்ற கேள்விக்கான பதில் கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கும். பயணம் செய்வதில் விருப்பம் என்பது எதைப் பொறுத்து இருக்க வேண்டும் பணத்தைப் பொறுத்தா மனதைப் பொறுத்தா? நிச்சயமாக நகைகள் வாங்கிக் குமிக்காமல் செலவு செய்து உலகச் சுற்றுப் பயணம் செய்யும் நபர்களை குறை சொல்லவில்லை. ஆனாலும் பயணம் மனதைப் பொறுத்து இருக்க வேண்டும்; நல்ல உதாரணம் ட்ரெக்கிங் செய்வது.<br /><br />நீங்கள் 1,50,000 ரூபாய்கள் வைத்திருந்தால் உலகத்தின் மூலைகளுக்குச் சென்று மீள முடியும். அங்கேயும் கொஞ்சம் செலவு செய்தால் முக்கிய இடங்களில் உள்ள முக்கிய பகுதிகளுக்குச் செல்லமுடியும். விலை உயர்ந்த காமிரா கைகளில் வைத்திருந்தால் அழகான போட்டோக்கள் எடுக்க முடியும். ஆனால் ட்ரெக்கிங் செய்வது வித்தியாசமாகயிருக்கும், உங்களின் உடலும் மனமும் ஒருமித்து ஒத்துழைத்தால் தான் டிரெக்கிங் செய்யமுடியும். வேண்டுமானால் ஒன்றிரண்டு தடவைகள் உங்களால் நண்பர்களுக்கு படம் காண்பிப்பதற்காக டிரெக்கிங் செய்ய முடியும். முழுவதுமாக பயணம் செய்யும் ஆர்வமிருந்தால் டிரெக்கிங் அற்புதமான ஒரு விஷயம் என்பது புரிபடும்.<br /><br />இப்படித்தான் நாங்கள் சமீபத்தில் டிரெக்கிங் செய்த ஒரு இடம், அந்த இடத்தில் போட்டோக்களைப் பார்த்ததில் இருந்தே எங்கள் க்ரூப்பிற்கு அந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. ஆனால் விண்டரில் சென்றால் தான் நன்றாகயிருக்கும் என்று கேள்விப்பட்டதால் ஒரு வாரம் பொறுத்திருந்தனர் பின்னர் பரவாயில்லாமல் இருந்த ஒரு மழை வாரத்திற்குப் பிறகு நாங்கள் டிரெக் செய்த இடம் தான் கலவரஹல்லி பெட்டா.<br /><br /><br /><a href="javascript:void;" onmousedown="toggleDiv('original');">இந்தப் படங்களைப் பார்த்து நாங்கள் விழுந்தோம</a>, எங்களுடைய சொந்தப் படம் இல்லை என்பதால் மறைத்திருக்கிறேன்.<br /><br /><div id="original" style="display: none;"><br /><br />இப்படித்தான் இருக்குமாம் வின்டரில், அந்த ட்ரிப் ஒன்னு பாக்கியிருக்கு. ;)<br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-real1.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-real2.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-real3.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-real4.jpg" height="480" width="640" /><br /><br /></div><br /><br />சாஃப்ட்வேர் மக்களிடம் IST பற்றி கேட்டால் நன்றாகச் சொல்வார்கள் விளக்கம், ஆனால் 4.30 பெங்களூரில் இருந்து கிளம்புவோம் என்ற ப்ளான் போட்டதும் நிறைய பேர் வரமாட்டார்கள் என்று தான் எங்கள் கம்பெனியிலேயே பலர் நினைத்தார்கள். ஆனால் சரியாக 4.30க்கு பெங்களூரில் இருந்து கிளம்பினோம். இங்கிருந்து சுமார் 70 KM ஹைதராபாத் ரோட்டில் உள்ளது கலவாரஹல்லி. கீழிருந்து எங்களுக்கு இரண்டு மணிநேரம் பிடித்தது மழை உச்சியை அடைய, படிக்கட்டுக்கள் எல்லாம் கிடையாது மலையில் மீது இருக்கும் நடைபாதையில் தான் ஏறவேண்டும். கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது முதல் முறையாக ட்ரெக் செய்த சில நண்பர்களுக்கு.<br /><br />ஆனால் மலை உச்சி, அத்தனை கடினமான வழியை கடந்துவந்ததற்கான பலனாக காட்சியளித்தது. ஆளாளுக்கு ஒரு மூட்டை சாப்பாடு(ஸ்நாக்ஸ், ட்ரிங்க்ஸ்(கூல்), பழங்கள்) கட்டிக்கொண்டு மேலேறியதால் நன்றாக சாப்பிட்டு என்ஜாய் செய்துவிட்டு கீழிறங்கினோம். நீங்கள் பெங்களூரில் இருக்கிறீரா? winter ல் செல்லக்கூடிய மிக அழகான ஒரு இடம் கலவாரஹல்லி, மூன்லைட் ட்ரெக்கிங் செய்வதாக இப்போதே உத்தேசித்து விண்டருக்காக காத்திருக்கிறோம்.<br /><br />ஒரு வீடியோ சில புகைப்படங்கள். வீடியோ பற்றி சில வரிகள்<br /><br />வீடியோவில் இருக்கும் நபர் முதல் முறையாக ட்ரெக்கிங் செய்பவர். அதனால் ஆரம்பத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டார் பின்னர் ஓவர் Enthu வாகி தலைவர் தான் முதலில் சென்றார். நண்பர்கள் இடையில் எங்கேயோ மறைத்து வைத்திருந்த உற்சாக பானம் சாப்பிட்ட பிறகு தான் அப்படி ஆனார் என்று சொல்லி வம்பிழுதார்கள். ஆனால் ஸ்ட்ரிக்ட்டா "ஹாட் டிர்ங்க்ஸ்" அலவ்ட் கிடையாது.<br /><br /><embed src="http://media.imeem.com/v/epm_hrSdfA/aus=false/" type="application/x-shockwave-flash" width="400" height="346"></embed><br /><br />பாதை முழுவதும் இத்தனை கஷ்டம் இல்லையென்றாலும் அந்த இடம் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.<br /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-01.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-02.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-03.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-04.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-05.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-06.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-07.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-08.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-09.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-010.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-011.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-012.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-013.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-014.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-015.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-016.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-017.jpg" height="640" width="480" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-018.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-019.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-020.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-023.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-024.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-025.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-026.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-027.jpg" height="480" width="640" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/kalavarahalli-028.jpg" height="480" width="640" /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-5088423340638327320?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-82916634651570016062007-06-25T05:07:00.000-07:002007-06-25T06:03:08.157-07:00முத்தத்தி பயணம்சனிக்கிழமை இரவு பத்துமணிக்கு தொலைபேசினார் நண்பர், <a href="http://xbhp.com/">xBhp</a> என்ற டூவீலர் க்ரூப். தங்களுடைய நான்காண்டு நிறைவுவிழாவை கொண்டாட முத்தத்தி செல்வதாகவும் வருவதாகயிருந்தால் வரலாம் என்றும் என்னைக் கேட்க, சொல்லவும் வேண்டுமா சரியென்று சொல்லி கிளம்பினேன்.<br /><br />ஞாயிறு காலை 5.45ற்கு பெங்களூர், "மெட்ரோ" அருகே அஸம்பிள் பாய்ண்டிற்கு வந்த பொழுது ஒருவர் மட்டும் தான் நின்று கொண்டிருந்தார். பின்னர் அடுத்த 15 நிமிடத்தில் மீதி நண்பர்களும் வந்துவிட மொத்தம் ஒன்பது பைக்களில் பயணம் தொடங்கியது, இரண்டு Comet 250 CC, மூன்று கரீஸ்மா 223 CC, மூன்று பல்ஸர் இரண்டு 150CC ஒரு 180 CC, அப்புறம் நம்ம ராயல் என்பீல்ட் 350 CC எல்லாம் கிளம்பினோம். இதில் வந்த அனைவருக்கும் ஸ்போர்ட்ஸ் பைக் மீது இருக்கும் காதல் அவர்களுடைய பேச்சுவார்த்தைகளிலேயே தெரிந்தது.<br /><br />வெறும் அதைப் பற்றிய பேச்சுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன், எனக்கு பயணங்களின் மீது காதல் இருந்தாலும் ஸ்போர்ட்ஸ் பைக் பற்றிய புரிதல்கள் நிறைய இல்லாததால் ஆரம்பத்தில் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது பின்னர் அதுவும் சரியானது. கனஹப்புராவிற்கு முன்னரே காலை ப்ரேக் பாஸ்ட்டை முடித்துவிட்டு, போவது காடென்பதால் மதிய உணவிற்கும் அங்கேயே பார்சல் செய்து கொண்டு புறப்பட்டோம்.<br /><br />கனஹப்புரா வரை பாதை ஒன்றும் பிரச்சனையில்லை, அங்கேயிருந்து முத்தத்திக்கு கொஞ்சம் முன்வரை அதாவது 20 KM முன்வரை ஓரளவிற்கு பாதை இருந்தது. ஆனால் அந்த 20KM டிராவல் சூப்பரோ சூப்பர், காவேரி ஒரு பக்கம் ஓடிவர இன்னொரு பக்கம் காட்டுப்பாதையில் இந்த ஒன்பது பைக்களின் அணிவகுப்பு.<br /><br />பின்னர் முத்தத்தியில் இறங்கி பிரம்மாதமான காவேரி நீரில் குளியல் ஒன்றைப் போட்டுவிட்டு மதிய உணவு சாப்பிட்டோம். பின்னர் சங்கமம் என்று ஒரு இடம் அருகில் இருப்பதாகவும் அங்கே செல்லலாம் என்றும் ப்ளான் இருந்தது ஆனால் அந்த இடம் கும்பல் அதிகமாகயிருக்கும் என்பதால் ப்ளானை மாற்றி அங்கே போகவில்லை, முத்தத்தியில் இருந்து மீண்டும் கனஹப்புரா வரும் வழியில் இருந்த இன்னொரு இடத்தில் நிறுத்தி கொஞ்ச நேரம் அளவளாவிவிட்டு மீண்டும் பெங்களூர் கிளம்பினோம்.<br /><br />பெங்களூர் வந்ததும் பலத்த மழை கொட்டியது. ஏற்கனவே நெகிழ்ந்திருந்த உள்ளத்தைப் போல் உடலும் நெகிழ்ந்தது மழையால். நாங்கள் எடுத்த புகைப்படங்களை இப்பொழுது போடுகிறேன் மற்றவை வந்ததும் அவற்றையும் போடுகிறேன்.<br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-14.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-13.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-11.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-12.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-6.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-7.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-8.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-9.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-10.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-5.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-4.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-1.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-2.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi-3.jpg" /><br /><br /><img src="http://kundavai.googlepages.com/tour_de_muththaththi.jpg" /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-8291663465157001606?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-19187418954648107512007-05-24T02:41:00.000-07:002007-05-24T03:14:08.487-07:00பயணம் சில குறிப்புக்கள்நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது தான் என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து இன்னொரு வீட்டில் தங்க ஆரம்பித்தது. அதற்கு முன் வரை பயணம் என்று பெரிதாக ஒன்றையும் நான் செய்திருந்ததில்லை. எல்லாம் ஆரம்பித்தது அந்த வருடத்தில் தான் என்று சுலபமாகச் சொல்லலாம். அதற்குப் பிறகு நிறைய செய்திருக்கிறேன்.<br /><br />அப்பொழுதெல்லாம் டைரி எழுதும் பழக்கமும் பெரும்பாலும் கிடையாது என்பதால், அத்தனை அழுத்தம் திருத்தமாக நடந்தது என்ன என்று எழுத முடியாவிட்டாலும். இன்றும் பசுமையாகவே நினைவில் இருக்கின்றன பெரும்பான்மையான என்னுடைய பயணங்கள். எல்லாவற்றையும் பற்றி எழுதவேண்டுமென்றோ முடியுமென்றோ நினைக்காவிட்டாலும். இன்றிருக்கும் நினைவுகள் இன்னும் இருபது வருடங்களில் இருக்கும் வாய்ப்புக்கள் குறைவு என்பதால் எழுதிவைப்பது, பிற்காலத்தில் மழைப் பொழுதுகளின் போது சூடாக தேநீர் அருந்தும் இனிமையைத் தரும் என்பதால் இரண்டு வரி எழுதிவைக்கவே விரும்புகிறேன். <br /><br />பயணங்களைப் பற்றி சுவையாக எழுதியவர் என்றால் எனக்கு தற்சமயங்களில் எல்லாம் நினைவில் வருபவர் எஸ். ராமகிருஷ்ணன் தான். எழுதியதை விடுத்து உற்சாகமாக கதைத்தவர் என்றால் நான் என்னுடைய அறைத் தோழன் ஞானசேகரைக் குறிப்பிட முடியும். பொங்கும் உற்சாகத்துடன் பையன் தன்னுடைய பயணங்களைப் பற்றி பேசுவான். நாங்கள் ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஒன்றாகயிருந்திருக்கிறோம் என்றாலும் பெரும்பாலும் பேசிய விஷயங்கள், பயணங்களைப் பற்றியும், சினிமா புத்தகங்களைப் பற்றியுமே இருக்கும்.<br /><br />புகைப்படங்களாலும் வீடியோக்களாலும் மட்டுமே நிரப்பப்படுவதாக இல்லாமல் நல்ல எழுத்துக்களால் என்னுடைய பயணப் பக்கங்கள் நிரப்படவேண்டும் என்றே விரும்புகிறேன்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-1918741895464810751?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-43102560753043236262007-05-23T07:36:00.001-07:002007-06-25T06:02:46.858-07:00கங்கை கொண்ட சோழபுரம் - பயணம்அப்பொழுதுதான் எங்கள் கல்லூரி இறுதித் தேர்வு முடிந்திருந்தது. கல்லூரி வாழ்வில் அனைவரும் பேர்வெல் பார்ட்டி கொண்டாடியிருப்பீர்கள். ஆனால் நாங்கள் (நான் மற்றும் என் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர்) கொண்டாடவில்லை. எங்களுக்குத் தெரியும் அந்தக் கல்லூரியில் நாங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லையென்று. அதாவது நாங்கள் அந்தக் கல்லூரியை பிரிவதற்காக வருந்தவேயில்லை. நாங்கள் ஏற்கனவே முடிவெடுத்திருந்ததைப் போல் ஒரு சுற்றுப்பயணத்தைத் தொடங்கினோம்.<br /><br />2003 மேயிலிருந்து அடுத்த 2004 மே வரை நான் ஊர் சுற்றியது மிகவும் அதிகம். முதலில் என் கல்லூரி நண்பர்களுடனான பயணம். நாங்கள் அனைவரும் முதலில் திருச்சியிலிருந்து கிளம்பி பிரபுவின்(துறையூர்) வீட்டிற்கு வந்திருந்தோம். முதலில் எங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம், மொத்தம் ஆறு பேர், நான், ராஜேஷ், உதயசங்கர், பிரபு, பார்த்திபன், ராஜாமணி. இதில் பிரபுவையும் ராஜாமணியையும் தவிர்த்து எங்கள் அனைவருக்கும் எந்த பேப்பர்களும் பாக்கியில்லை. கொஞ்சம் நன்றாய் படிக்கும் சொம்பு கும்பல் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ஆனால் நான் அதில் சேர்ந்தது தான் ஆச்சர்யமே. நன்றாய் படிக்க மாட்டேனா என்றால் அப்படியில்லை. கொஞ்சம் ரௌடி, ஒரு முறை கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தும், லீவ் போட்டுக்கொண்டு பெங்களூர் வரை வந்து ஊர் சுற்றியதால் ஹாஸ்டலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தேன் அது வேறு ஒரு கதை.<br /><br />ஒரு முறை கல்லூரியிலிருந்து "பார்ட்" பெஸ்டிவலிற்கு பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வைக்கப்பட்ட போட்டியில் நான் வெற்றி பெற்றிருந்தும் மேலாளர் சொன்னார் என்பதற்காக வேறொரு பெண்ணை அனுப்பிவிட கல்லூரியின் அனைத்து தமிழ்ச்சங்க பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொண்டேன், அந்த நாட்களில் இது ஒரு பெரும் பிரச்சனையாய் இருந்தது. இப்படியாக நன்றாய்ப் படித்துக் கொண்டும் வம்பிழுத்துக் கொண்டிருந்ததால் கொஞ்சம் இல்லை நன்றாகவே கெட்டப்பெயர் வாங்கியிருந்தேன்.<br /><br />வந்துட்டேன் பயணத்திற்கு, இப்படியாக நாங்கள் சுற்றுலாவை துறையூரிலிருந்து தொடங்கினோம், பிரபுவின் வற்புறுத்தலுக்காக மட்டுமே துறையூர் வந்திருந்தோம் ஏற்கனவே பார்த்த ஊர், பார்த்த இடங்கள். இருந்தாலும் புளியஞ்சோலை என்ற பெயர் மனதின் ஓரத்தில் அனைவருக்குமே அறித்துக் கொண்டிருந்ததால் வந்து சேர்ந்த இரவு பிரபுவின் வீட்டில், டைட்டானிக் படம் பார்த்தோம். ஆமாம் பிரபு காதலித்துக் கொண்டிருந்தான். புளியஞ்சோலையில்லாமல் நாங்கள் துறையூர் வந்ததற்கு இன்னொரு காரணம் அவன் காதல். அந்தப் பெண்ணை எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழியென்று கூப்பிட்டுவந்திருந்தான் எங்களை. அது ஒரு பெரிய தமாசு.<br /><br /><br /><img src="http://www.tamiloviam.com/img/MohandassTour1.jpg" /><br /><br />காலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்து பார்த்தால், கிராமமே எழுந்திருந்தது. வாழ்க்கையில் நான் முதன்முதலில் ஒரு கிராமத்தை நினைவு தெரிந்து பார்த்தேனேயானால் அது துறையூர் தான். பிரபுவின் அம்மா காலையில் எழுந்து எங்களுக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு நாங்கள் கிணற்றில் குளித்துவிட்டு வருவதற்குள். ஆறு பேருக்கும் எலுமிச்சை சாதம் தயார்செய்து வைத்திருந்தார்கள். இன்று சொல்கிறேன், அவர்கள் எலுமிச்சை சாதம் செய்து தருவதாகச் சொன்னால் வேலைப் பளுவின் இடையிலும் புளியஞ்சோலை சென்றுவரத் தயாராயிருக்கிறேன்.<br /><br />புளியஞ்சோலை என்று நான் சொன்ன ஊரை உங்களில் பெரும்பால் ஆனவர்களுக்கு தெரிந்து வாய்ப்பிருக்கிறது. அது ஒரு மலையடிவாரம், அங்கே ஆறு மலைமேலிருந்து ஒடிவருகிறது. மிக ரம்மியமான இடம், ஆனால் கொஞ்சம் மோசமான இடமும் கூட, திருச்சி காதலர்களுக்கான இடங்களில் புளியஞ்சோலையும் ஒன்று. காலையில் ஓட்டிக்கொண்டுவந்து விட்டு சாயங்காலம் திரும்பும் ஓட்டிக்கொண்டு போவதை அனாயாசமாகப் பார்க்கலாம்.<br /><br />நாங்கள் நன்றாய் மலையில் உள்வரை சென்று அருமையாக கலக்கப்படாமல் இருந்த ஆற்றுநீரை ஐந்துமணிநேரம் கலக்கிவிட்டு, பின்னர் எடுத்த பசியில் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதத்தை முடித்திருந்தோம். இந்த விஷயத்தில் பெரியவர்களின் அனுபவம் ஆச்சர்யம் அளிக்கும். நாங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் பிரபுவின் அம்மா கட்டிக்கொடுத்த அதிகப்படியான சாதம் எங்களுக்கு சொல்லப்போனால் மிகச்சரியாக இருந்தது.<br /><br /><img src="http://www.tamiloviam.com/img/MohandassTour2.jpg" /><br /><br />இப்படியாக நாங்கள் புளியஞ்சோலை பயணத்தை முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்த ஊர், ஜெயங்கொண்டம், இது பார்த்திபனுடைய சொந்த ஊர். அவர்கள் வீட்டில் தறிநெய்வது தான் தொழில். அம்மா அப்பா தம்பி, தங்கை சில சமயங்களில் பார்த்தியும் நெய்வதுண்டு என்று சொல்ல எங்கள் அனைவருக்கும் நாங்களும் நெய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆனால் அதையெல்லாம் சொல்லி அவர்கள் பிழைப்பை கெடுத்து விடாமல் தவிர்த்துக் கொண்டோம்.<br /><br />இன்னுமொரு விஷயம் பயணத்தை தவிர்த்து, நாங்கள் அனைவரும் கல்லூரி படிப்பவர்கள் எங்கள் வீடுகளும் அத்துனை வசதியானது கிடையாது, அதுவும் கல்லூரி படிக்கும் ஆறு தடிமாடுகளுக்கு சாப்பாடு ஆக்கிப்போடுவதென்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அதனால் நாங்கள் பயணத்தின் ஆரம்பத்திலேயே கணக்குப்போட்டுக் கொண்டது. யாருடைய வீட்டிலும் சாப்பிடுவது இல்லையென்று. ஆனால் பிரபுவின் வீட்டிலேயே இந்த விரதம் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் புளியஞ்சோலையில் சாப்பிட வேறு இடம் கிடைக்காது என்ற காரணத்தால் அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.<br /><br />காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு தயாராகிவிடவேண்டும், பெரும்பாலும் இரவுகளில் தூங்குவதில்லை சீட்டுக்கட்டு(ஏஸ்) ஆட்டம் போடத் தொடங்கினால் அது முடிய இரண்டு மணிநேரம் ஆகும் பிறகு பிரபுவை வம்பிழுக்க ஆரம்பித்தோமானால் ஒரு வழியாக நாங்கள் தூங்க மூன்று மணியாகிவிடும் பிறகு ஒரு மணிநேரத்தில் எழுந்து கிளம்பிவிடவேண்டும். வேண்டுமானால் தங்கும் வீட்டில் காப்பி சாப்பிடாலாம்.<br /><br />ஆனால் நாங்கள் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டுமே, எப்படியும் அந்த ஊரை தெரிந்தவன் ஒருவன் இருப்பான் என்பதால் அவனிடம் கேட்டுக்கொண்டு அன்லிமிட்டட் மீல்ஸ் கிடைக்கும் கடைக்குச் சென்றுதான் சாப்பிடுவது, காலை மதியம் இரண்டிற்கும் சேர்த்து ஹோட்டலில் சாப்பாடு சமைத்து தயாரான பதினொன்று மணிவாக்கில் உட்கார்ந்தோமானால் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டுத்தான் நகர்வது.<br /><br /><img src="http://www.tamiloviam.com/img/MohandassTour3.jpg" /><br /><br />ஜெயங்கொண்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது அது, பார்த்திபனின் வீட்டிற்று பக்கத்தில் ஜோசியக்காரர் ஒருவர் வீடும் இருந்தது. பார்த்தின் வற்புறுத்தி அனைவரும் ஜோசியம் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட என்னைத் தவிர்த்த அனைவரும் பார்த்தனர்.<br /><br />பின்னர் நாங்கள் வந்திறங்கிய இடம் தான், ஜெயங்கொண்ட சோழபுரம் எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல் தெரிகிறதா, அதுதான் கங்கை கொண்ட சோழபுரம். ராஜேந்திரன் அதாவது ராஜராஜனின் மகன் கட்டியக் கோவில், தந்தைக்கும் மகனுக்கும் என்ன காண்டு என்று தெரியாது. அப்பனைப் போலவே மகனும் பிரம்மாண்டமாய் ஒரு கோவில் கட்டியிருந்தான்.<br /><br />ஆரம்பத்தில் மிகவும் மோசமாக பராமரிக்கப்பட்டு இருந்ததாகவும் தற்சமயம் இந்திய தொல்பொருள் துறையினரிடம் இருப்பதலால் கொஞ்சம் நன்றாய் இருப்பதாகவும் பார்த்திபன் சொன்னான். வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோவிலை பார்த்தே ஆவது என நான் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்ததால், அவனுடைய அப்பா போட்டுக் கொடுத்த பிளானையை கொஞ்சம் மாற்றி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்திருந்தோம்.<br /><br />அழகான அமைதியான ஊர், புல்வெளிகளுக்கு மத்தியில் சிவன் கோவில். மற்றவர்கள் ரொம்பத் தீவிரமாக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க நான் சுற்றிப் பார்த்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.<br /><br />அந்தக் கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி சிறு அறிமுகம்.<br /><br /><span style="color:#3333ff;">உடையார்ப் பாளயம் தாலுகாவில் 16 மைல் நீளத்திற்கு வடக்குத் தெற்காக ஒரு கரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வலிமை வாய்நத பல பெரிய கலிங்குள் உள்ளன. இது முன் காலத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்குக் கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரியின் முக்கியமான வருவாய்க் காலாகும்.<br /><br />ஏரியின் வடபகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கு கொண்டு வருகிறது. இந்த ஏரி தூர்ந்து விட்டதால், பல ஆண்டுகளாக அது எவ்விதத்திலும் பயன்படவில்லை. அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதிலும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி, படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த கொடுஞ்செயலால் அழிந்து விட்டதாகத் தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டுவருகிறது.<br /><br />ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கைகொண்டபுரம் என்னும் பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும், அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோயில் இருக்கிறது. அதற்கு அருகே காடுசூழப்பட்ட பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலை மேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ளன.<br /><br />இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுப் படுத்துகின்னற. மிகப் பரந்த பகுதியில் அழகிய ஒரு அரண்மணை இருந்தது என்றும் அதன் பல்வேறு பகுதிகள் தான் இவ்வாறு இடிபாடுகளாகக் காட்டியளிக்கின்றன என்றும் கிராமத்திலுள்ள முதியோர் சொல்கின்றனர்.<br /><br />இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கைகொண்டபுரம் முடியடைய மன்னர் ஒருவரின் செல்வமுக் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது. இப்போது ஒற்றையடிப்பாதை ஓட இல்லாத காடாகக் காட்சி தரும் பகுதியில் மைல் கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி வளத்தை வாரி வழங்கிற்று.<br /><br />இந்த மாபெரும் அணையை மீண்டும் கட்டவேண்டும் என்று அடிக்கடி பேசப்பட்டு வந்திருக்கிறுது.<br /><br />என்று 1855 ம் ஆண்டில் வெளியான ஸ்தல சஞ்சிகை ஒன்று நினைவு கூர்கிறது.<br /><br />இவ்வாறெல்லாம் நினைவுகூறப்படும் கங்கை கொண்ட சோழபுரம், இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இம் மன்னனை பற்றிய ஒரு சிறு குறிப்பு, தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும், ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இவனது தந்தை இவனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன். பெருநிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற்குழுக்கள் ஆகிறோரது உரிமைகளைப் பாதுகாக்கவும். அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமுக் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வீரரைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு.<br /><br />புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புக்களை அழிக்கவும் வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவி புரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றிய பின், அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறு செய்ய அவன் ஒரு சிறந்த கடற்படையும் வைத்திருந்தான்.<br /><br />இக்கடற்படை உதவியுடன் கிழக்கிந்திய தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இராஜேந்தின் தன்நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும் மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக்கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப்பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான்.<br /></span><br />வரலாற்றின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவனான இராஜேந்திரனின் அரண்மனையும் தலைநகரமும் இன்றிருக்கும் நிலையை நினைத்து கண்ணீர்தான் வந்தது.<br /><br />இது ஒரு பெரிய சுற்றுலாக் கதையென்பதால் இதனை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். பின்னர் நாங்கள், மீனாட்சி அம்மன்கோவில், பெரிய கோவில், சூரியனார்க் கோவில், பாரி ஆட்சி செய்த ஒரு மலைக்கோட்டையில் இருக்கும் ஒரு கோவில் (பெயர் மறந்துவிட்டது) என ஏறக்குறைய 20 கோவில்களுக்கு மேல் சென்றோம். முடிந்தால் என் பக்கத்தில் அதைப்பற்றி குறிப்புக்களை எழுத முனைகிறேன்.<br /><br />--------------------------------<br /><br />இது நான் தமிழோவியத்திற்காக எழுதிய ஒரு பதிவு.<br /><br /><a href="http://www.tamiloviam.com/unicode/06220606.asp">பதின்மத்தில் நான் செய்த பயணம்</a><br /><br />நன்றி தமிழோவியம். வாய்ஸ் பதிவு போட்டப்ப நினைவில் வந்தது, தேடிப் பார்த்தேன் என் பதிவில் என் கண்ணில் படாததால் மீண்டும் ஒருமுறை.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-4310256075304323626?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3314579894711627540.post-73075992070868174492007-05-23T07:33:00.000-07:002007-05-23T07:54:18.176-07:00அறிமுகம்எப்பொழுதுமே பயணம் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவனாகவே இருந்திருக்கிறேன். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அதிகம் செய்யாதவனாக நான் ஒரு காலக்கட்டம் வரை அடங்கியிருந்ததால் தான் இப்பொழுது பீறிட்டுக் கிளம்பும் உற்சாகமாய் பயணம் செய்து கொண்டேயிருக்கிறேன். <br /><br />பல இடங்களுக்கு சமீப காலங்களில் சென்றிருக்கிறேன்; இன்னும் போகவேண்டிய இடங்கள் எண்ணற்றவையாக இருக்கின்றன. இங்கே அந்தப் பதிவுகளை சேகரித்து வைக்க முயற்சிக்கிறேன். இனிய அனுபவங்களை பின்நாட்களில் படிக்கும் பொழுது ஏற்படும் சுகானுபவத்திற்காக இந்தப் பதிவு.<br /><br />தொடர்ச்சியாக இந்தப் பதிவு அமைய வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3314579894711627540-7307599207086817449?l=alaithal.blogspot.com'/></div>பூனைக்குட்டிnoreply@blogger.com1