tag:blogger.com,1999:blog-32343492198730017332009-07-10T03:20:34.368-07:00தீபம்கோடுகளிலும் நிறங்களிலும் விடுதலைக்காக கருணைக்காக கசிகிற வெளி....தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.comBlogger127125tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-80153979701866685712009-07-09T21:50:00.001-07:002009-07-10T03:17:56.436-07:00முட்கம்பிக்குள் மண்மூடிய கிராமம்<a href="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/SlcLHCvae_I/AAAAAAAABko/f-sbJkefD8w/s1600-h/Sri-Lankan-civilians-001.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5356762497403223026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/SlcLHCvae_I/AAAAAAAABko/f-sbJkefD8w/s400/Sri-Lankan-civilians-001.jpg" border="0" /></a> <strong><span style="color:#ff6666;"><span style="color:#ff0000;">தீபச்செல்வன்</span><br /></span></strong>_______________________<br /><div><div><div>எலலோருக்கும் பகிரமுடியாத </div><div>ஒற்றைக் கிணற்றையும்<br />முட்கம்பி சுற்றி எடுத்திருக்கிறது.<br />தென்னோலைகள் தலைகீழாக தூங்க<br />கண்களுக்கு எட்டிய இடமெல்லாம்<br />வெடித்துச் சிதறிய </div><div>குண்டுகளின் வெற்றுக் கோதுகள் கிடக்கிறது. </div><div><br />வெயில் வந்து </div><div>கூடாரங்களை மேய்ந்துகொண்டிருக்கிறது.<br />முடி பறிக்கப்பட்ட தலைகளை<br />சூரியன் தின்று கொண்டிருக்க<br />முட்கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது<br />காலம் பற்றிய சொற்கள்.<br /><br />குண்டுகளற்ற பெட்டியை தட்டி விரித்து செய்யப்பட்ட<br />இருக்கையில்<br />நீயும் நானும் வைக்கப்பட்டிருக்கிறோம்.<br />தரப்பட்ட நேரங்களை<br />நாமறியாதபடி தின்றுகொண்டிருக்கிறது கடிகாரம்.<br />எப்பொழுதும் வெடிக்க தயாராக<br />ஒரு குண்டு<br />இருக்கையின் கீழிருப்பதைப்போலிருக்கிறது.<br />மீளவும் மீளவும்<br />மனம் வெடித்து சிதறி எங்கும் கொட்டிக்கொண்டிருக்கிறது.<br /><br />எப்பொழுதும் இலங்கங்களை<br />அறிவித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியில்<br />யாரோ சொல்லத் துடிக்கிற<br />சொற்கள்<br />வாசலில் வந்து பொறுத்து நிற்கின்றன.<br />எப்பொழுதும் ஒலிபெருக்கிகளுக்கு கொடுத்துவிட்ட<br />காதுகளுக்கு<br />யாரோ அழைப்பது போல கேட்கிறது.<br /><br />திசை பிரித்து கொண்டு செல்லப்பட்டவர்களாய்<br />இன்னும் தேடிக்கிடைக்கப் பெறாதவர்களுக்காய்<br />விசாரித்துக்கொண்டிருக்கிற<br />தனித்துவிடப்பட்ட சிறுவன் எல்லோரையும் பார்க்கிறான்.<br />மீள்வதற்கு எந்த வழிகளுமற்றுப்போக<br />முட்கம்பி எங்கும் இழுத்துக் கட்டப்படுகிறது.<br /><br />துவக்குகள் வரிசையில் நின்று பார்த்துக்கொண்டிருக்க<br />ஒடுங்கிய முகங்களில்<br />பயங்கரத்துள் கைவிடப்பட்ட துயரம் ஒழுகுகிறது.<br />யாரும் கண்களுக்கு எட்டடிவிடாத முடிவில்<br />தலையை முட்கம்பியில்<br />தொங்கப்போடுகிறான் அந்தச் சிறுவன்.<br /><br />யாரையும் சந்திக்காத வெறுமையில்<br />வெயில் நிரம்பியிருக்கிறது.<br />ஒலிபெருக்கி களைத்து அடங்கிவிட<br />வெயில் இந்தத் தனிக்கிராமத்தை கடந்து சரிகிறது.<br />இரவானதும்<br />மனம் எப்பொழுதும் சிக்குப்பட்டுக்கிடக்கும்<br />அந்தக் கிராமத்தை மண் மூடிக்கொண்டிருக்கிறது. </div><div>_____________<br /><em><span style="font-size:85%;">05.07.2009</span></em> </div></div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-8015397970186668571?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com0tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-28260017086240437702009-07-03T21:02:00.000-07:002009-07-03T22:13:24.253-07:00அபிராஜூன் தங்கை லூர்த்தம்மாவின் கண்கள்<a href="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/Sk7krhjHUBI/AAAAAAAABkI/94OqttfGgRY/s1600-h/former-ltte-child-soldiers1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5354468443381256210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 259px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/Sk7krhjHUBI/AAAAAAAABkI/94OqttfGgRY/s400/former-ltte-child-soldiers1.jpg" border="0" /></a> <strong><span style="color:#ff0000;">o தீபச்செல்வன்</span></strong><br />----------------------------------------------------------------<br /><br />01<br />லூர்த்தம்மாவின் கண்கள் பின்னிரவுகளில்<br />அலைந்து கொண்டிருந்தன.<br />அந்தத் துவக்கு மிகப் பாரமாக இருந்தது<br />என்கிறாள்<br />அபிராஜின் தங்கை லூர்த்தம்மா.<br />அவள் இழுத்துச் செல்லப்பட்டபோது<br />அபிராஜ் புதர் ஒன்றுக்குள் ஒளிந்திருந்தான்.<br /><br />மீளவும் அவள் ஓடி வந்து<br />சருகுகளிற்குள் ஒளிந்துகொண்டாள்.<br />அப்பொழுது அவள் பார்த்துக்கொண்டிருக்க<br />அபிராஜ் இழுத்துச் செல்லப்பட்டான்.<br />கனவு ஒழுகி சருகுகள் ஈரமாக<br />லூர்த்தம்மா அழுதுகொண்டேயிருந்தாள்.<br />அபிராஜ் துவக்கின் சூட்டில்<br />வாடிவிட<br />லூர்த்தம்மாவை தேடிக்கொண்டிருந்தான்.<br />களங்கள் எங்கும் குருதி வடிந்துகொண்டிருந்தது.<br /><br />இனந்தெரியாத கால்களில் மோதுகிறபோது<br />அபிராஜை லூர்த்தம்மா கண்டாள்.<br />குழந்தைகள் சரணடைந்து துவக்குகளை கையளித்தனர்.<br /><br />02<br />அவள் ஒதுங்கும் இடங்களில்<br />துவக்குகள் விழித்துக்கொண்டிருக்கின்றன.<br />லூர்த்தம்மாவுடன்<br />விளையாடிக் கொண்டிருக்கும்<br />சிறுமிகளின் கைகளில் பாரமான இலக்கங்கள்<br />கட்டப்பட்டிருக்கின்றன.<br />மீள மீள அவள்<br />சரணடைந்து கொண்டிருக்கிறாள்.<br />அபிராஜிடம் துப்பாக்கியை கொடுக்கப்பட்டு<br />பரிசோதிக்கப்படுகிறது.<br />வந்திறங்கும் சிறுவர்களுக்காக<br />தயாரிக்கப்படும் இலக்கங்களை<br />அபிராஜ் எண்ணுகிறான்.<br />அபிராஜின் கால்கள் மடங்கிப்போகின்றன.<br /><br />இப்போது லூர்த்தம்மாவின் கண்களை<br />இந்தத் துவக்குகள் காவலிட்டுக் கொண்டிருக்கின்றன.<br />பொம்மைக் கடைகளில்<br />துவக்குகள் தொங்கிக்கொண்டிருக்கிறதாய் வருகிற<br />கனவுகள் இருவரையும் இரவுகளில் அலைத்தன.<br /><br />அபிராஜ் மீள மீள பரிசோதிக்கப்பட்டான்.<br />லூர்த்தம்மாவின் கண்களில்<br />சமரிரவுகளின் துப்பாக்கிகள் குத்திக்கொண்டிருந்தன.<br />துவக்குகள் லூர்த்தம்மாவையும்<br />அபிராஜையும் துரத்திக்கொண்டேயிருக்கின்றன.<br /><br />லூர்த்தம்மாவின் குருதி கசிந்து வாடுகிற கண்கள்<br />அபிராஜின் முன் அலைந்துகொண்டிருந்தன.<br />----------------------------------------------------------------<br /><em><span style="font-size:78%;">(தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளால் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு இயக்கத்தில் சேர்க்கப்பட்ட 15வயதுச் சிறுமியான லூர்த்தம்மாவும் அவளின் அண்ணனான 16வயதுடைய அபிராஜிம் இராணுவத்திடம் சரணடைந்து- கைதுசெய்யப்பட்டு அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் இவர்களுடன் 94 சிறுவர்கள் இருப்பதாகவும் அவர்களில் 44பேர் சிறுமியர்கள் எனவும் லூர்த்தம்மா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தாள்.)</span></em><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-2826001708624043770?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com2tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-46121934167719741352009-07-01T00:14:00.000-07:002009-07-01T00:32:25.139-07:00பாம்புகள் பரிசளித்த சவப்பெட்டிகள்<a href="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SksQzbkEH4I/AAAAAAAABkA/ayVKPGix_BI/s1600-h/610x.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5353391057818361730" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 268px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SksQzbkEH4I/AAAAAAAABkA/ayVKPGix_BI/s400/610x.jpg" border="0" /></a><br /><div><strong><span style="color:#ff6666;">o தீபச்செல்வன்</span> </strong><br />----------------------------------------------------------------<br />கடைசியில் ஒரு நாள் மலசலகூடம்<br />கட்டி முடித்த போது எறிகனைகள் வந்து கொண்டிருந்தன.<br />கிணற்றின் ஆழத்தை<br />அளந்து கொண்டிருந்தபோது வெளியில்<br />வேவு விமானம் பறந்து கொண்டிருந்தது.<br /><br />மரணத்தின் தூதுவர்களை வேடிக்கை<br />பார்த்த நமது வீதிகளை குழந்தைகள் இழந்துவிட<br />நாம் காணாமலிருக்க<br />வீடு அதிர்ந்து போயிருந்தது.<br /><br />சவப்பெட்டிகள் வந்து குவிய<br />நாம் பூக்களாலான ஊச்சலில் ஆடியபடியிருக்க<br />பாம்பு முற்றத்தின் மரத்தில் ஏறிக்கொண்டிருந்தது.<br />விஷத்தின் கனியை<br />பூசையறையில் வைத்து பூக்களை<br />படையல் செய்தபோது<br />மரங்கள் சவப்பெட்டிகளில் நிரப்பப்பட்டது.<br /><br />ராஜாக்களிடம் ஏமாற்றமடைந்த உரையாடல்களிடம்<br />என்றைக்குமான சொற்கள் பலியானது.<br />ஊமையாகிற மேசைகளில்<br />வைத்து சொற்கள் நசுக்கப்பட்டன.<br />பறவைகள் பாம்பாகி பறக்க<br />மேசைகள் சவப்பெட்டியாகி வந்தன.<br /><br />வாக்குமுலங்களின் மேசையில்<br />இன்று பிணங்கள் தரப்படுகையில்<br />நமதாயிருந்த தொன்மையான சொற்களையும்<br />வாழ்நிலத்தையும்<br />சவப்பெட்டி பெருமெடுப்புடன் தின்னத்தொடங்கிற்று.<br /><br />சவப்பெட்டிகள் வாழுகிற ராஜாவின் தீர்ப்பில்<br />மரணம் விதியால் துரத்துகிற பகுதியில்<br />யாரும் அறிமாலிருக்க<br />இனத்தின் நெடுநாளின் வாழ்நிலக்கனவு<br />ஊசிகளால் குத்தி மெல்ல சிதைக்கப்பட்டது.<br /><br />மரணத்தின் அறைகளும்<br />அதிகாரத்தின் மூலைவெளிகளும் அதிகரிக்க<br />வாழ்வென்று காத்திருந்த ஏக்கம் தகனம் செய்யப்பட<br />மரங்கள் ஆணிகளாக்கப்பபட்டு<br />சந்ததியை அறைகிறது.<br /><br />தெரு கிணற்றுக்குள் தவளையாகிப்போகிறது.<br /><br />ஈரம் காயுமுன்பே விட்டு வந்த<br />கட்டிடங்களில் மரணத்தின் படைகள் தமது மொழி எழுத<br />நீயும் நானும் ஒரு சவப்பெட்டியில் என்றைக்கும்<br />மீள முடியாதவர்களாக அடைக்கப்பட்டிருந்தோம்.<br />-------------------------------------------------------<br />13.01.2009</div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-4612193416771974135?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com0tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-16578375181033148932009-06-19T23:20:00.000-07:002009-06-19T23:43:26.186-07:00ஆட்களை இழந்த வெளி<a href="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/SjyCpCwbdFI/AAAAAAAABio/VkPU1uwNW8U/s1600-h/mullativu.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5349294099035550802" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 265px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/SjyCpCwbdFI/AAAAAAAABio/VkPU1uwNW8U/s400/mullativu.JPG" border="0" /></a><strong><span style="color:#c0c0c0;">o தீபச்செல்வன்</span></strong> <div><div>----------------------------------------------------------------<br /><br />வானம் நேற்றுக் காலைவரை<br />உறைந்திருந்தது.<br />இப்பொழுது சிதறி<br />கொட்டிக்கொண்டிருக்கிறது.<br />வானம் அழுகிறதென யாரோ<br />சொல்லிக்கொண்டு போகிறார்கள்.<br />இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை.<br />சனம்<br />தகர்ந்து அடங்கிப்போயிறுக்கிறது.<br />குடி எரிந்து முடிகிறது.<br /><br />டெலிகப்ரர்கள் அலைந்து<br />கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது<br />எரிந்த வாகனங்களை<br />மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா.<br />எல்லாம் நசிந்துபோக<br />அடங்கிக் கிடக்கிறது<br />ஆட்களை இழந்த வெளி.<br /><br />கைப்பற்றப்பட்டவர்களாக<br />குழந்தைகளை தொலைக் காட்சிகள்<br />நாள் முழுவதும்<br />தின்று கொண்டிருந்தது.<br />நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.<br /><br />நந்திக்கடலில்<br />பறவை விழுந்து மிதக்கிறது.<br />பறவைதான் சனங்களை தின்றது<br />என்றனர் படைகள்.<br />நந்திக்கடல்<br />உனது கழுத்தை நனைத்து<br />அழைத்துக்கொண்டு போயிருக்கிறது<br /><br />உடைந்த ஆட்கள் குழிகளில்<br />நிரப்பட்டனா.<br />ஆடகளற்ற வெளி கரைந்து உருகுகிறது<br />மாடு காகத்தை சுமந்து<br />வீழ்ந்து கிடக்கிறது.<br />அந்தச் சிறு கூடுகள்; நிலத்தை<br />பிரித்து சிதறின.<br /><br />இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை.<br />பெரு மழை பெய்கிறது<br />எனினும் நந்திக்கடல் காய்ந்து போகிறது.<br /><br />வானம் உருகிக்கொட்டியபடியிருக்க<br />மிருகம் ஒன்று<br />சூரியனை தின்று கொண்டிருக்கிறது<br />யாருமற்ற நிலத்தில்<br />தப்பிய ஒற்றை ஆட்காட்டிப் பறவை கத்துகிறது.<br />-------------------------------------------------------------------<br />18.05.2009 நந்திக் கடலை அம்மா கடந்த பொழுது </div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-1657837518103314893?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com0tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-76021373115917847572009-06-09T01:55:00.000-07:002009-06-09T02:08:46.238-07:00அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்<a href="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/Si4j7o60faI/AAAAAAAABhI/MpXyOsySXWs/s1600-h/vavuniya+1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5345249315238739362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/Si4j7o60faI/AAAAAAAABhI/MpXyOsySXWs/s400/vavuniya+1.jpg" border="0" /></a><strong><span style="color:#999999;"> o தீபச்செல்வன்</span></strong><br />----------------------------------------------------------------<br /><div><br />இரவு திசைகளை தின்று<br />பரபரத்துக்கொண்டிருக்க<br />நீ புறப்பட்டிருந்த கடலை<br />யாரோ தின்றுகொண்டிருந்தனர்.<br />கையில் இழுபட்ட<br />பிள்ளைகளின் மெலிந்த<br />தோள்ககளைத் தவிர<br />ஒன்றையும் எடுத்துவரவில்லை.<br /><br />அலைச்சலின் பெருந்துயர்கள்<br />கடலில் உன்னை துரத்தி வந்தது<br />வலியின் கோடி முகங்கள் சுற்றியிருக்கிற<br />உன்னை நான் சந்திக்கப்போவதில்லை.<br />வளர்ந்துபோயிருக்கிற<br />தோல்வியின் சொற்கள் எதையும்<br />பகிரவேண்டாம்.<br />ஞாபகங்கள் துடித்துக்கொண்டிருக்கிறது.<br /><br />நடைகள் நிறைந்த மணலையும்<br />துண்டு நிலத்தின் பெரும் புகையையும்<br />சுருட்டி எடுத்து வந்து<br />பூவரசின் வேரை பன்றிகள் தின்னுகிற<br />கவிதை கொண்டு வந்திருக்கிறாய்.<br />அந்தப் பூவரசு சலசலத்துக்கொண்டிருந்த<br />பின்மாலையில்<br />முகத்தை கரைத்துத்தானே வழியனுப்பினாய்.<br /><br />பன்றிகள் கிளறியெறிந்த வீதியில்<br />அந்த பூவரச மரத்தினடியில்<br />கிடக்கிறது நான் உன்னை சந்திக்கிற பொழுதுகள்.<br />நீ வைத்திருக்கிறாய்<br />பூவரச மரத்தின் துயர் படிந்த கிளைகளையும்<br />கிளறுப்பட்ட வீதியின் துகள்களையும்.<br /><br />நீரை விரித்துக்கொண்டிருக்கிற<br />அடரும் கொடிய இரவில்<br />காற்றில் பன்றிகள் முட்களுடன்<br />வந்தன என்கிறாய்.<br />தனித்துப் புறப்பட்ட பயணத்தில்<br />எல்லாமே கரைந்துபோகிறது.<br /><br />வெறுமையின் கீழ் குந்தியிருக்கிற<br />உன்னை பார்க்கப்போவதில்லை.<br />நம்பிக்கை தரமுடியாதிருக்கிற<br />உரையாடல் ஒன்றும் உன்னுடன் வேண்டாம்?<br />கூடாரத்தில் மணல் உதிர்ந்து<br />உன்னை மூடிக்கொண்டிருக்கிறது.<br /><br />காய்ந்துவிடாத குருதியையும்<br />மணல் குடித்து முடிக்காத கண்ணீரையும்<br />கொண்டு வந்திருப்பாய்.<br />கரை அரிபட்டுக்கொண்டிருக்கிற கடலை<br />நீ இறங்கிய பிறகும்<br />யாரோ தின்றுகொண்டிருக்கின்றனர். </div><div>---------------------------------------------------<br /><strong>07.05.2009.</strong> நன்றி <strong>அம்ருதா ஜூன்2009</strong></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-7602137311591784757?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com1tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-28049527390496991952009-05-28T23:44:00.000-07:002009-05-28T23:58:14.742-07:00பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி<a href="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/Sh-G9tQygFI/AAAAAAAABf4/-pE_dFCDL9I/s1600-h/687474702s74616q696p77696r2r636s6q2s70686s746s732s66756p6p2s323030392s30352s7372695s6p616r6o615s636976696p5s7761725s61705s342r6n7067.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5341136077764853842" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 227px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/Sh-G9tQygFI/AAAAAAAABf4/-pE_dFCDL9I/s400/687474702s74616q696p77696r2r636s6q2s70686s746s732s66756p6p2s323030392s30352s7372695s6p616r6o615s636976696p5s7761725s61705s342r6n7067.jpg" border="0" /></a> <div><strong><span style="color:#c0c0c0;">o தீபச்செல்வன்</span></strong><br />----------------------------------------------------------------<br />மண் சிதறி மூடப்பட்ட பதுங்குகுழியில்<br />மூடுண்டு போயிற்று<br />கடைசிவரை வைத்துக் காத்திருந்த<br />உடைந்த முகத்தின் எச்சங்கள்.<br />எங்கள் வெளி அர்த்தமற்றுப்போய்<br />அந்தரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது.<br />மண்ணில்<br />உலகத்தின் யுத்தம் நிகழத்தொடங்கியது.<br /><br />மிகவும் பயங்கரமான வெளியில்<br />தூக்கி வீசப்பட<br />கொதித்து துடித்துக்கொண்டிருக்கிறது மனம்.<br />மண்ணடியில்<br />புதைந்துபோனது விரிந்த வானமும்<br />நெடுநாள் காணாதிருந்த நட்சத்திரங்களும்.<br />வாசல் அடைக்கப்பட்ட குழியில்<br />யாரோ அடைக்கப்பட்டு நாளாகிறது.<br />முகங்கள் வெளியில் தனித்தலைந்தன.<br /><br />மூடிப் புதைத்துவிடப்பட்ட கிராமம்<br />பிணங்களின் கீழ் அழுகிக்கொண்டிருக்கிற வீடு<br />தென்னைமரங்கள் பிடுங்கி நிரப்பட்ட கிணறு<br />எல்லாம் மூச்சடங்கி உயிர் துறக்கிறது.<br />முகமற்ற நகரத்தில்<br />அழிப்பின் சபதம் எழுதப்பட்டு<br />சிறையிலடைக்கப்படுகிறது.<br /><br />அச்சத்தின் சனங்கள் வெளியில்<br />எடுத்து போடப்பட்டனர்.<br />உடைந்த சனங்களை மீளவும்<br />குழிகளில் போட்டு மூடிக்கொண்டு<br />அழிவு புதைக்கப்பட்டு சமதரையாக்கப்பட்டிருக்கிறது.<br />மணல் பரப்பி நடந்து கொண்டிருக்கிறது<br />மனிதாபிமான யுத்தம்.<br /><br />எண்ணி அடுக்கப்பட்ட துண்டங்களாய்<br />வந்து விழுகின்றன<br />தாய்மாரை இழந்த குழந்தைகள்.<br />மழை மூழ்கடித்த இரவில்<br />கடும் சமரில்<br />யாரும் அறியாது இருளை பெய்தபடி<br />நிலவு பதுங்குகுழியில் வந்து ஒளிந்திருந்தது.<br /><br />ஒளியிழந்து கொடியில் அடிபட்டு<br />வீழ்ந்து போகிறது சூரியன்.<br />இருள் பெரு வெள்ளமென வந்து<br />பதுங்குகுழிகளை குடித்து பசியாறின.<br />மண்ணை கிளறி உழுது<br />எச்சரிக்கைகளை விதைக்கப்பட்டன.<br /><br />உலகின் சபையில் யுத்தம் பேராதரைவை பெறுகிறபோது<br />பதுங்குகுழியில் ஒளிந்திருந்த வெளி<br />கனவின் சுடலையாகிய<br />தரையிலிருந்து எழுந்து போகிறது.<br />எங்களுடன் நிலவும் பயங்கரவெளியில்<br />தோய்ந்தபடி அலைந்து கொண்டிருக்கிறது. </div><div>------------------------------------------------------------------------</div><div>29.05.2009</div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-2804952739049699195?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com4tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-51330882699681207742009-05-22T22:57:00.001-07:002009-05-22T23:14:29.085-07:00பந்துகள் கொட்டுகிற காணி<a href="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SheT3efM0fI/AAAAAAAABfQ/rhSOVkZ9Zrk/s1600-h/20090420fp11.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5338898464557027826" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SheT3efM0fI/AAAAAAAABfQ/rhSOVkZ9Zrk/s400/20090420fp11.jpg" border="0" /></a>---------------------------------------------------------<br /><div><strong><span style="color:#999999;">தீபச்செல்வன்</span></strong></div><br /><div>---------------------------------------------------------------<br /><br />மைதானத்துக்கான சமர்<br />ஓய்ந்துபோக மீளவும் தொடங்குகிறது<br />தீராத பேரினநோயின் யுத்தம்.<br />கூடாரத்தில் அடைந்துவிட<br />தாடி வளர்ந்து<br />உன்னை மூடிக்கொண்டிருக்கிறது.<br />உயிர்கள் கறுகிய மைதானத்தை<br />நனைக்கிறது இறுகிய மழை.<br />வாழ்வு<br />கூடாரத்தில் மூடிவைக்கப்பட்டிருக்கிறது.<br /><br />பயங்கரவாதமாக வேர் அறுக்கப்பட்ட<br />பெருமிதங்களால்<br />வாழத்துக்களால் வெற்றியின் களிப்பில்<br />மிதந்துகொண்டிருக்கிற<br />கொண்டாட்டங்களில் நாம் எல்லாவற்றையும்<br />இழந்து போயிருக்கிறோம்.<br />இலக்கங்களாலும் ஒலிபெருக்கிகளாலும்<br />நீ கட்டி வைக்கப்பட்டிருக்கிறாய்.<br /><br />என்னை அழைத்துச் செல்லுகிறபோது<br />முழு மரங்களும் பக்கத்தில் உதிர்ந்ததுபோல<br />அதிருகிறது உனது முகம்.<br />பான்கீமூனின் கைகளில் துவக்கு இருப்பதை<br />நீயும் நானுமே காணுகிறோம்.<br />இன்னும் அடங்காமல் பசித்திருக்கிற<br />துவக்குகளால்<br />சூழப்பட்டிருக்கிறது நமது காணி.<br /><br />மண்ணடியில் நமது சிதைந்த வேரில்<br />திணிக்கப்படுகிற சொல்லாடல்களில்<br />நாம்தான் உன்மையில் தோற்றிருக்கிறோம்.<br />மைதானத்தைவிட்டு<br />வெளியேறிக்கொண்டிருக்கிறது யுத்தம்.<br /><br />நாராயணனின் கைகளிலும்<br />மேனனின் கைகளிலும் பந்துகள் உருளுகின்றன.<br />பந்துகள் கொட்ட<br />தலைகள் சிதறுகிற காணிக்கிராமங்களில்<br />அருசி மூடைகளும் வந்து விழுகின்றன.<br /><br />இனி கனவுகள் குறித்து மிக மௌனமாயிருப்போம்.<br />இறப்பர் கூடாரங்களால் நிரம்பியிருக்கிற<br />காணியில் முட்கம்பிகளில்<br />தொங்கிக்கொண்டிருக்கிறது போரின் பிறகான வாழ்வு.<br /><br />நம்மை வென்றுவிட்டு கிடக்கிற<br />யுத்தம்<br />அறிவிப்பின்றி மெல்ல தொடருகிறது.<br />மனங்கள் காயப்படுத்தப்பட<br />தலைகள் கழற்றப்படுகின்றன.<br />நமது மைதானத்தில்<br />பந்தாடிக்கொண்டிருக்கிறது உலகம்.<br />குடிக்கிற தண்ணீருக்கான<br />வரிசை நீளுகிறது. </div><div>-----------------------------------------------------------------<br />21.05.2009 </div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-5133088269968120774?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com1tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-38518006024697617342009-05-15T22:08:00.000-07:002009-05-15T22:29:54.957-07:00மணலில் தீருகிற துயர்<a href="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/Sg5O6nqlcqI/AAAAAAAABfI/sOyVC-PsiI4/s1600-h/mulli_8509_3.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5336289377467593378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 299px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/Sg5O6nqlcqI/AAAAAAAABfI/sOyVC-PsiI4/s400/mulli_8509_3.jpg" border="0" /></a>---------------------------------------------------------<br /><strong><span style="color:#ff0000;">தீபச்செல்வன்</span></strong><br />---------------------------------------------------------------<br />மண்மேடுகள் ஒவ்வொன்றாய் விழுகிறது<br />துயர் கொண்டலையும்<br />பிணதேசத்தின் குழந்தைகள்<br />மரணங்களின் கொடு எல்லையில்<br />நின்று இழப்பின் பெருவலிகொண்டனர்.<br />எங்கும் கண்டதில்லை இந்த அழுகைகளை.<br />மிஞ்சியிருக்கிற குழந்தைகள்<br />என்ன சொல்லி அழுகின்றனர்<br />எல்லோருக்கும் கேட்கிறது.<br /><br />கடல்கரையோரமாய் பெயர்ந்தலைந்து<br />மீள அதே இடத்திற்கு<br />திரும்புகிறபோது<br />விழுந்துகொண்டேயிருக்கிறது உயிர்கள்.<br />அதிகாரம் இன்னும் கொளுக்க<br />வானம் சுருங்கி பெயர்ந்து விழுகிறது.<br /><br />யார் கருணைகொண்டு வந்தனர்.<br />குழந்தைகளின் உலகம் மறுக்கப்பட்டு<br />அதிகாரங்களால் அழிவுதானே<br />கொண்டு வரப்படுகிறது.<br />இன்றும் ஆயிரம் பிணங்கள்<br />மண்மேடுகளின் பின்பக்கமாய் விழுந்திருந்தன.<br />மீற்றர்களினால் முன்னேறுகிற<br />படைகள் பிணங்களின் குழந்தைகளை<br />மீட்டு படம் பிடித்தனர்.<br /><br />கீழே வைக்கப்பட்ட ஆயுதங்களை<br />எடுத்து காட்சிப்படுத்தி<br />சுற்றிக்கொண்டிருக்கிற தாக்குதல்களில்<br />அடைந்த வெற்றியின் களிப்பில்<br />கிலோமீற்றர்கள் மேலும் சுருங்குகின்றன.<br />மண் சுருங்கிறதை<br />எல்லோரும் அறிவார்கள்.<br />கைப்பற்றப்பட்ட மண்ணரணால்<br />மூடுப்படுகிறது உயிரிருக்கிற பிணங்கள்.<br /><br />எனினும் மண் விழுகிறது.<br />குழந்தைகள் மீளமீள<br />மணலில் வந்து மோதுகின்றனர்.<br />இங்கில்லை பெருந்துயர்.<br />அதிகாரம் கொள்ளுகிற வெற்றி<br />இறுதிக் கட்டத்தில் நின்றுகொண்டு<br />துயரின் கழுத்தை நெறிக்கிறது.<br /><br />இரண்டு இராணுவ அணிகள்<br />சந்திக்கின்றன.<br />குழந்தைகள் யாருமற்று அநாதைகளாகி<br />அழுகிய பிணங்களை பற்றிப்பிடித்தனர்.<br />அதிகாரங்கள் கூத்தாடுகின்றன.<br />இன்னும் சற்று நேரத்தில் ஓய்ந்தடங்கும்<br /><div>மணலில் மோதுகிற துயர்.<br />சனங்கள் தீருகின்றனர்.<br />மண்மேடுகள் ஒவ்வொன்றாய் விழுகிறது.<br />-------------------------------------------------------------------------------<br />15.05.2009</div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-3851800602469761734?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com1tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-90367489582972968292009-05-07T02:30:00.002-07:002009-05-07T03:07:22.313-07:00நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு<a href="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SgKtHQ0NAzI/AAAAAAAABew/PYTZZe_mP28/s1600-h/vanni_20090422012.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5333015249044702002" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SgKtHQ0NAzI/AAAAAAAABew/PYTZZe_mP28/s400/vanni_20090422012.jpg" border="0" /></a>---------------------------------------------------------<br /><div><strong><span style="color:#ff0000;">தீபச்செல்வன்</span></strong></div><br /><div>---------------------------------------------------------------</div><div>பிழைத்துப்போன களம் உன்னை<br />கொண்டுபோய் நிறுத்தி வைத்திருக்கிறது.<br />நீ கொண்டு செல்ல வேண்டிய<br />பை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது.<br /><br />விளையாடுகிற முத்தமற்று<br />சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று<br />வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க<br />உன்னை களம் கொண்டுபோயிற்று.<br />திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு<br />உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது.<br /><br />அண்ணாவின் கல்லறைதான்<br />ஒரு சொத்தென இருந்தது.<br />அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க<br />கல்லறையும் தகர்ந்து போயிற்று.<br />இப்பொழுது வீடு இல்லை<br />எங்களில் யாரும் வாழ்வதற்கு.<br />அண்ணாவைப்போலவும்<br />அவனின் கனவைப்போலவும்<br />அலைந்துகொண்டிருக்கிறோம்.<br /><br />எல்லாவற்றையும் இழந்து<br />அலைந்து ஒடுங்கியிருக்கிற<br />அச்ச மூட்டுகிற இராத்திரிகளில்<br />பொத்தி வைத்திருந்த<br />உன்னை இழுத்துச் செல்லப்படுகிற<br />எங்கள் விதியை என்ன செய்வது?<br /><br />எங்களை அலைத்துக்கொண்டிருக்கிற எதிரியை<br />நீ எப்படி சுடுவாய்?<br />எவற்றையும் உணர முடியாத<br />அறிந்திருக்காத வயதில்<br />உனக்கு யுத்தம் தரப்பட்டிருக்கிறது.<br />கையில் தரப்பட்டிருக்கிற துவக்கு<br />பிஞ்சு மனதை வேகவைத்துக்கொண்டிருக்கிறது.<br />எதியிடம் சரணடைகிறது எஞ்சிய நிலம்.<br /><br />இப்படி ஒரு கவிதையும்<br />இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்<br />ஏன் என்னை நெருங்கின.<br />கடைசியில் பொய்த்துப்போய்<br />கிடக்கிறது எனது சொற்கள்.<br />இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி<br />நான் ஒரு பரணியெழுதுகிறேன்?<br /><br />ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு<br />நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?<br />யார் உன்னை இழுத்துச் சென்றனர்?<br />அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.<br />அண்ணா நமது தேசத்தைப்போலவே<br />உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.<br /><br />குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்<br />என்று அம்மா சொல்லுகிறாள்.<br /><br />இப்பொழுது நமது நகரமும் இல்லை.<br />வாழ்வுமில்லை.<br />எதுவுமற்ற நாமும் இல்லை.<br />எனினும் நீ வேண்டும்<br />அவியாத கொஞ்ச சோற்றையும்<br />தண்ணிரில் அவித்த பருப்பையும் தின்பதற்கு.<br /><br />விரைவாக வந்துவிடு<br />நாம் மேலும் நிலம் பெயர்ந்தலைவோம்.<br />-----------------------------------------------------------<br />(20.04.2009 தங்கச்சி வேங்கனிக்கு)</div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-9036748958297296829?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com4tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-70882204261126762892009-04-24T23:15:00.000-07:002009-04-24T23:42:41.529-07:00பயமுறுத்துகிற இருள்<a href="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SfKu4oEgzJI/AAAAAAAABeA/7mXA2gfLtL8/s1600-h/DSC00559.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5328513596984970386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SfKu4oEgzJI/AAAAAAAABeA/7mXA2gfLtL8/s400/DSC00559.JPG" border="0" /></a> <span style="font-size:78%;">(புகைப்படம்:தீபச்செல்வன்)</span><br />---------------------------------------------------------<br /><strong><span style="color:#ff0000;">தீபச்செல்வன்</span></strong><br />---------------------------------------------------------------<br /><br />அச்சம் தருகிற இராத்தரிகளையும்<br />ஒரு சிறிய பெட்டியாய் சுருங்கிய பகல்களையும்<br />எனக்கு தந்தீர்கள்?<br />எல்லாத் தெருக்களும் என்னைக் கண்டு<br />அஞ்சுகின்றன.<br />தெருவின் கரையில் பதுங்கியிருக்கிறது<br />என்னை தின்பதற்கு<br />காத்திருக்கிற கத்திகள்.<br /><br />என்னிடம் எந்த சொற்களுமற்று<br />மௌனத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறேன்.<br />அச்சம் தருகிறதாக என் கவிதைகளை<br />எறிந்தீர்கள்.<br />உங்கள் பகலில் பாம்புகள் அலைகிறதை<br />நான் கண்டேன்.<br />எனது பிரதேசத்தில் தரப்பட்ட தெருவில்<br />அகதியாய் திரிய<br />என்னுடைய நினைவுகளை<br />நான் இழந்து வருகிறேன்.<br /><br />அடையாளங்கள்ளற்ற வாழ்வில்<br />நான் எதையும் உணரவில்லை.<br />நிரந்தரமான அடிமையைப்போல என்னை<br />சித்திரிக்கிறது பறிபோயிருக்கிற தெரு.<br />மிகவும் நீளமாக போகிறது எல்லாத்திசைகளும்.<br />அழுவதற்கும் இடமில்லாது<br />அலைந்து கொண்டிருக்கிறேன்.<br /><br />அம்மா சுட்டுத் தருகிற ரொட்டிகளையோ<br />தங்கையுடனான சண்டைகளையோ<br />மீள கொண்டாடுகிற நாள்கள் வரப்போவதில்லை.<br />வீடு பற்றியிருந்த நினைவுகள்<br />சிதறிப்போயிருக்க கால்கள் அலைகின்றன.<br /><br />எனக்காக காத்திருக்கிற மரணம்<br />இந்த தெரு வொன்றில் முடிந்துபோகட்டும்.<br />நிறைவேறாத கனவுகளுடன்<br />மண்ணை முத்திமிடுகிறேன்.<br /><br />இருளில் குவிந்திருக்கின்றன<br />என்னை தொடருகிற எல்லாரது முகங்களும்.<br />அந்நியமாகிற எனது கடலிலும்<br />முற்றிலும் மாற்றப்படுகிற மண்ணிலும்<br />இருள்தான் பரவிக்கொண்டிருக்கிறது.<br /><br />மீண்டும் மீண்டும்<br />பயமுறுத்திக்கொண்டேயிருக்கிறது இருள்.<br />இருளே உன்னை கண்டு<br />நான் அஞ்சுகிறேன்.<br />உன்னையும் அவர்கள்<br />என்னிடமிருந்து பிரித்தனர்.<br />நான் உணருகிறேன்<br />இருள் பெரும் புயலாக வருகிறது.<br />என்ன செய்ய?<br />-------------------------------------------------<br />(08.04.2009 மீளவும் அச்சுறுத்தப்பட்ட இரவில்)<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-7088220426112676289?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com4tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-76339775417775582702009-04-06T22:14:00.000-07:002009-04-22T00:14:34.653-07:00சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்<a href="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/Se7DcawIQdI/AAAAAAAABd4/MCOkMo03sjo/s1600-h/deebam+blog.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5327410302210818514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/Se7DcawIQdI/AAAAAAAABd4/MCOkMo03sjo/s400/deebam+blog.JPG" border="0" /></a><br /><div><a href="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/SdriaDGn9jI/AAAAAAAABcY/lPDtwaOQfFc/s1600-h/28_03_2009_mullai_04_78356_445.jpg"></a>---------------------------------------------------------<br /><strong><span style="color:#ff0000;">தீபச்செல்வன்</span></strong><br />---------------------------------------------------------------<br /><br />இனி திரும்பாத சூரியனுக்காய்<br />நீயும் நானும் சாம்பலில் காத்திருக்கிறோம்.<br />கதிரைகளால் மேலெறியப்படும் குண்டுகள்<br />தின்று தீர்த்துக்கொண்டிருக்கிற<br />வலயத்தில் மூளப்போகிற சண்டையில்<br />அவர்கள் நம்மிடம்<br />எதை எடுக்கப் போகின்றனர்.<br /><br />குண்டுகள் அடக்கிய ஊரில்<br />துவக்கு மெல்ல புகுந்து<br />தின்று கொண்டு நிற்கிறது இறப்பர் குடில்களை.<br /><br />சிறிய ஆயுதங்களால்<br />போரிட கிடைத்திருக்கிற அனுமதியின்<br />இடையில் கனகரக ஆயுதங்கள்<br />அறிவுருத்தியபடி<br />ஓய்ந்துபோயிருக்கிறதை நாம் அறிவோம்.<br />அதன் முற்றுகைகளால் நிறைந்திருக்கிறது<br />சனங்களின் வாழ்நிலம்.<br /><br />போரிற்கு சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது<br />பாதுகாப்பு வலயம்.<br />ஷெல்கள் எந்நேரமும் உலவித்திரிந்து<br />சனங்கள் அறிந்தபடியிருக்க<br />இழுத்துக் கொண்டு போகிறது.<br />ஐ.நாவின் அனுமதி கிடைத்தது<br />அமைதியாக சனங்களை கொன்றகற்றுவதற்கு.<br /><br />மெலிந்து போய்விட்ட சனங்கள்<br />அனுமதியுடன் ஒழிக்கப்படுகின்றனர்.<br /><br />இழந்து போக முடியாத<br />தேசம் பற்றிய கனவை நீயும் நானும்<br />மறக்க நிர்பந்திக்கப்படுகிற நடவடிக்கையில்<br />நீயும் நானும் எல்லாவற்றையும்<br />பிரிந்து துரத்தி அலைக்கப்டுகிறோம்.<br /><br />வாழ்வுக்கான பெருங்கனவை<br />அதிகாரங்களின் கனவுக்கூட்டங்கள்<br />கூடிச் சிதைத்தனர்.<br />நாம் கூடு கலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம்.<br /><br />போரிட்டு செத்துக்கொண்டிருந்தது<br />பெருநிலம்.<br />சடலங்களாய் அள்ளுண்டு போகிறது<br />வளர்த்தெடுக்கப்பட்ட கனவு.<br />முடிவு நெருங்குகிற கடைசிக் களத்தில்<br />தொடங்கக் காத்திருக்கிறது<br />எல்லை கடந்து பரவுகிற போர்.<br /><br />அம்மாவே உன்னைப் போலிருந்த<br />எனது நகரத்தை நான் பிரிந்தேன்.<br />தங்கையே உன்னுடன் வளர்த்த<br />எனது கனவுகளை நான் இழந்தேன்.<br />அவர்கள் எல்லாவற்றையும் என்னிடமிருந்து<br />பிரித்தனர்.<br />தூரத்தே சென்று தொலைகிறது எனது தெரு.<br /><br />அதிகாரங்களின் முற்றுகையில்<br />வழிகளற்று துடித்துக்கிடக்கிறது<br />நமது வாழ்வின் போராட்டம்<br />கனவுகளுடன் குண்டேறி விழுந்த பேராளிகளின்<br />மூடுப்படாத விழிகளுடன்.<br />நான் எல்லாவற்றையும் இழந்தேன்.<br /><br />எப்படி உன்னை பதுக்கி<br />காத்துக்கொள்ளுவாய்?<br />அச்சங்களில் ஒளிந்திருக்கிற தங்கையின்<br />துடிக்கிற மனதை பொத்தி எதற்குள் வைப்பாய்?<br />நமக்கெதிராக வந்திருக்கிற போர்<br />பாதுகாப்பு வலயத்தின்<br />எல்லை கடந்து பரவுகிறதுபோல்<br />எல்லா இடமிருந்தும் வருகிறது.<br /><br />மெலிந்து போய்விட்ட சனங்கள்<br />அனுமதியுடன் ஒழிக்கப்படுகின்றனர்.<br />--------------------------------------------------------------<br />07.04.2009</div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-7633977541777558270?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com1tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-62660189687066464802009-03-16T02:33:00.001-07:002009-03-16T02:46:57.554-07:00ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்<a href="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/Sb4fnISbmYI/AAAAAAAABbw/7gpfAG80XEk/s1600-h/20090203_05E.jpg"></a><br /><div><a href="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/Sb4fnISbmYI/AAAAAAAABbw/7gpfAG80XEk/s1600-h/20090203_05E.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5313719367443913090" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/Sb4fnISbmYI/AAAAAAAABbw/7gpfAG80XEk/s400/20090203_05E.jpg" border="0" /></a> ---------------------------------------------------------<br /><div><strong><span style="color:#ff0000;">தீபச்செல்வன்</span></strong><br />---------------------------------------------------------------<br />இப்படித்தான் அந்த கொடுமிருகம்<br />இந்த நகரத்தையும் தின்று கொண்டிருந்தது.<br />கடல் மேலும் காய்ந்துவிட<br />மிருகத்திற்கஞ்சி மண் சுருங்கி ஓடுகிறது.<br /><br />கால்களிற்குள் நீளுகிற அலைச்சலில்<br />தொலைந்து போன பொருட்கள் மிதிபடுகிற<br />நடைக்கனவுடன்<br />உன்னை தேடியலைகிறேன்<br />பின்னேரம் சுற்றுகிற முற்றுகையில்.<br /><br />மண் கிளம்பி பெயர்கிறது.<br />சந்தி உடைந்து படைகளின் கால்களால்<br />எத்துப்படுகிறது.<br />சுவருக்குப் பக்கத்தில் நிற்கிற<br />மிருகம் பின் கோடியை தின்னுகிறது.<br /><br />கூரைகளை கடித்து துப்பிவிட்டு<br />ஒழுங்கையை பிடித்துச் செல்லுகிறது.<br />முகப்பை நகங்களால் விறாண்டி<br />தனது மொழியில் பறகள் வரைகிறது.<br />பேய்கள் புகுந்து அடித்து<br />கடைகளை தின்றிருக்க<br />பனைகளின் தலைகள் அறுக்கப்பட்டிருக்கின்றன.<br /><br />கடலில் புதைந்து கிடந்த<br />உனது சொற்களில் வடிகின்றன<br />இந்த சின்ன நகரத்தின் பாடல்கள்.<br />சாம்பலை நிரப்பி<br />எறியப்பட்டிருக்கிற சாடியில்<br />உன்னை அடைத்து வைத்திருந்தனர்.<br /><br />கடைசி வார்த்தைகளால்<br />நம்மை வதைத்துக் கொண்டிருக்கிற<br />கர்ஜிப்பில் கடைசியாயிருந்த<br />நகரம்<br />மூச்சடங்கி கிடக்கிற பறவையைப்போல<br />துடித்து உயிரற்றுக் கிடக்கிறது.<br /><br />இப்படித்தான் அந்த கொடுமிருகம்<br />நம்மை குறித்து ஒரு நாள்<br />அச்சுறுத்தியபடியிருந்தது.<br />நகரங்கள் ஆட்களற்றுப்போனது.<br /><br />பசிக்கு ஏற்றபடி கால்களால்<br />நகரத்தை வளைத்து வைத்து<br />தின்றுகொண்டிருக்கிறது ஒற்றை மிருகம்.<br />கிளம்புகிற மண் வீதிகளால் பெருகி வழிகிறது.<br />----------------------------------------------------------------------------------<br />03.03.2009,புதுக்குடியிருப்பு,நகரம்,வீழ்ச்சி. </div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-6266018968706646480?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com0tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-33599395220010030762009-02-26T00:59:00.000-08:002009-02-28T20:16:39.530-08:00எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி<a href="http://1.bp.blogspot.com/_v_RS-3lzur0/SaZi8kX6M7I/AAAAAAAABbY/73jVDvp8Bi0/s1600-h/jhkk.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5307038003598341042" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_v_RS-3lzur0/SaZi8kX6M7I/AAAAAAAABbY/73jVDvp8Bi0/s400/jhkk.bmp" border="0" /></a>----------------------------------------------------------------------------<br /><strong><span style="color:#ff0000;">தீபச்செல்வன்<br /></span></strong>____________________________________<br /><br />தரப்பால்களின் கீழாய் கிடந்து<br />அடங்குகிறது நமது எல்லா வழிகளும்.<br /><br />துப்பாக்கியின் நுனியில்<br />வடிகிற முகத்தில்<br />எழுகிறது நமது எலும்புக்கூட்டின் நினைவுகள்.<br />எல்லாமே சட்டென தலைகீழாகிறது<br />நிலத்தை எரித்துக் கொண்டிருக்கிற<br />துவக்கு<br />சாம்பலை எதிராய் கிளம்புகிறது.<br /><br />சனங்களின் குருதி கடலில் குதித்து<br />தப்பிச் செல்லுகிறது.<br />வழியில் தற்கொலை செய்துகொள்ள<br />துடிக்கிறது மீதமிருக்கிற நகரத்தின் சுவடு.<br />ஒரு மாபெரும் அரசனின்<br />ஒற்றை வாளில்<br />முழுச் சுவரும் வெட்டுண்டுபோகிறது.<br /><br />பிள்ளைகளை அனுப்பிய தாய்மாரின்<br />கண்ணீரைத்தவிர<br />குறுகிய நிலத்தில் எதுவும் இல்லை.<br />மிகவும் கொடுமையான அனுபவங்களை<br />வானத்திற்கு மேலால்<br />கடல் நிரம்புகிறது.<br />இப்பொழுது கடைசி வாழ்விற்கான<br />அநாதைக் கெஞ்சல்<br />எதுவுமற்று வெளித்து கேட்டுக்கொண்டிருக்கிறது.<br /><br />முகத்தின் முன்னாலொரு ட்ராங்கியின் துவக்கு<br />குத்திக்கொண்டிருப்பதைபோலவே<br />எப்பொழுதும் துரத்துகிறது<br />தோல்வியின் பிறகான கூச்சல்.<br />இன்றைக்கான தோல்வி பரிசளிக்கப்படுகிற<br />அலங்கரிக்கப்பட்ட மேடையில்<br />அழுகையை<br />தள்ளிக்கொண்டு<br />ஆக்கிரமிப்பின் சொற்கள<br />ஒலிவாங்கியினுள் நுழைகிறது.<br /><br />தேசம் முழுக்க புழுக்கிறது.<br /><br />வெளியேறுகிற வழி ஆக்கிரமிப்பின்<br />வலையாக<br />கடல் நமது எல்லாம் புதைகிற கிடங்காகிறது.<br />கனவு மற்றும் அதற்காய் சிந்திய குருதி<br />பறிக்கப்பட்ட<br />நிலத்தில் அழிக்கப்படுகிறது.<br /><br />வீழ்ந்த நகரம் தற்கொலை செய்துகொள்ளுகிறது.<br />கைப்பற்றப்பட்ட அதன் சுவர்கள்<br />உக்கத்தொடங்குகிற<br />எலும்புக்கூடாய் பிரிகையடைகிறது.<br />சனங்களுடன் வெளியேற்றப்படுகின்றன<br />தற்கொலையுண்ட நகரத்தின் எலும்புக்கூடுகள்.<br /><br />இனியொன்றும் இல்லை துயரங்களைத்தவிர.<br />சயனைட்டை அணைக்கிறது வாழ்வு.<br />வெளியேற வழியற்ற நிலம் அந்தரித்து திரிகிறது.<br /><br />பதுங்குகுழிகளை அள்ளி ஏற்றுவதற்கு<br />கடலால் வருகிறது எண்ணெய் கொதிக்கிற கிணறு.<br />பிள்ளைகளை கொன்று தாய்மார்களை<br />பிடித்துச் செல்லுகிறது சிங்கம்.<br />தரப்பாலை சுற்றிக்கொண்டிருக்கிறது பாம்பின் புகை.<br />-----------------------------------------------------------------------------<br />(25.02.2009 வன்னி மக்களை வெளியேற்ற<br />அமரிக்காவும், இந்தியாவும் உதவுவதாக அறிவித்துள்ளது)<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-3359939522001003076?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com0tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-20368599476511804252009-02-18T20:47:00.000-08:002009-02-19T02:10:38.690-08:00கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி<a href="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/SZ0r8oDaGRI/AAAAAAAABaA/igwja5Y7v1Y/s1600-h/vanni_20090217011+1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5304444256656169234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 299px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/SZ0r8oDaGRI/AAAAAAAABaA/igwja5Y7v1Y/s400/vanni_20090217011+1.jpg" border="0" /></a>----------------------------------------------------------------------------<br /><strong><span style="color:#ff0000;">தீபச்செல்வன்</span></strong><br />____________________________________<br /><br /><div><div></div><div>ஒரு பக்கத்து வானத்தில்<br />முட்டிக் கிடக்கிற அவலத்தில்<br />பெருந்துயர் மிகு சொற்கள் உதிக்கின்றன.<br />எல்லாருக்குமான<br />பாவங்களைச் சுமக்கிற<br />சனங்களின் குருதியை கழுவுகிற<br />துண்டுக் கடலில்<br />கறுப்பு இரவு நடந்து திரிகிறது.<br /><br />எல்லாவற்றையும் கிடங்கிலிருந்து<br />கழித்து<br />ஓ.. என்ற<br />பெரும் அழுகையை மணல்வெளியில்<br />புதைத்தபடியிருக்கிறாய்.<br />வானம் தாறுமாறாய் கழிகிறது.<br /><br />சப்பாத்துகள் நெருக்கி கடலில்<br />தள்ளிவிடத்துடிக்கிற ஒரு துண்டு நிலத்தில்<br />எச்சரிக்கப்பட்டிருக்கிற<br />மணல் வாழ்வு உருந்துகொண்டிருக்கிறது.<br /><br />எல்லாவற்றையும் இழந்து<br />ஒடிவருகிற இரவு<br />மிருகத்தின் வாயில் சிக்குண்டுவிடுகிறது.<br />எறிகனை கடித்த<br />காயத்திலிருந்து கொட்டுகிற கனவுகளை<br />மிதிக்கிறது<br />மண்ணை குடிக்கிற டாங்கிகள்.<br />வழியின் காயங்களை<br />உப்புக் காற்று கழுவுகிறது.<br /><br />நெடுநாளின் பெருந்துயர் பொதிந்த<br />அடைபட்ட காட்டு வழிகளின் சொற்களை<br />கேட்டுத்துடித்துக்கொண்டிருக்கிறேன்.<br /><br />உன்னைச் சூழ்ந்திருக்கிற<br />பற்களின் கோரமான வாய்களில்<br />எதற்கும் மேலால் ஒலிக்கிற பசிக்கான பாடல்களில்<br />கரைந்துகொண்டிருக்கிறது<br />உனக்காய் என்னிடமிருக்கிற பதுங்குகுழி.<br /><br />பெருமௌனத்தை கடல் குழப்பி<br />பார்த்துக்கொண்டிருக்கிறது.<br />துண்டுக் கடற்கரையை<br />அளந்தபடியிருக்கிறது எச்சரிக்கை.<br />காற்றுள் புகுந்து<br />யாரும் அறியாதபடி மிக அமைதியாக<br />வந்து வெடிக்கிறது முதலாவது எறிகனை.<br /><br />பின்னிரவை தொடரக் காத்திருக்கிற<br />மற்றைய எறிகனைகளில் அதிருகிறது கடல்.<br />அசைவற்றிருக்கிற கரையிலிருந்து<br />குருதியின் பாரம்<br />வெறுமையை அரித்துக்கொண்டிருக்கிறது.<br /><br />உன்னிடமிருக்கிற பெருஞ்சொற்களில்<br />சிலதை<br />நான் கேட்டு முடித்தபோது<br />நாம் சேருவதற்கான கனவு<br />நீயிருக்கிற மணற் பதுங்குகுழியின்<br />மூலையில் உருந்துகொண்டிருக்கிற மணலில்<br />புதைய அதற்குள் கடலின் மௌனம் நுழைகிறது.<br /><br />அதிர்ந்து கொண்டிருக்கிறது<br />மணற்குழியின் பெருந்துயர்மிகு சொற்கள்.<br />----------------------------------------------------------------------------<br />18.02.2009. (பொக்கனை,கடற்கரை,மணற்பதுங்குகுழி,<br />அம்மா,தங்கச்சி,தொலைபேசி,உரையாடல்.) //<br /><br />நீண்டநாட்களுக்குப் பிறகு தற்போது பொக்கனை<br />கடற்கரையிலிருக்கிற அம்மாவுடனும் தங்கச்சியுடனும்<br />நான்கு நிமிடங்கள் கதைத்தேன்.//</div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-2036859947651180425?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com0tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-41030219915870825572009-02-13T21:01:00.000-08:002009-02-13T21:34:11.661-08:00அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்<a href="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/SZZUtkLp6kI/AAAAAAAABZg/JK_j4hnfif8/s1600-h/puthu_13_02_2009_007.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5302518753058744898" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 288px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/SZZUtkLp6kI/AAAAAAAABZg/JK_j4hnfif8/s400/puthu_13_02_2009_007.jpg" border="0" /></a>----------------------------------------------------------------------------<br /><div><div><strong><span style="color:#ff0000;">தீபச்செல்வன்</span></strong></div><div>____________________________________ </div><div> </div><div>இலைகொட்டியிருக்கிற அலம்பல்களில்<br />குந்துகிறது துரத்தப்படுகிற கூரையின் துண்டு.<br /><br />களப்புவெளி விரிய இடையில்<br />சிக்குண்டு விடுகிற<br />பயணங்கள் தடுக்கப்பட்ட ஒற்றைப் பேருந்துக்குள்<br />ஒளிந்திருக்கும் குழந்தைகளை<br />தேடுகின்றன எறிகனைகள்.<br /><br />ஒற்றை புளியமரத்துடன்<br />மாத்தளன் வெளித்துக்கிடக்கிறது.<br /><br />விமானங்கள் குவிந்து எறிகிற குண்டுகள்<br />விழப்போகிற<br />அறிவிக்கப்ட்ட பாதுகாப்பு வலயத்தில்<br />நிறைகிற சுடு மணலில்<br />இப்போதிருக்கிற<br />குழந்தைகளின் பாதங்கள் வாடிப்புதைகின்றன.<br /><br />ஒரு சில பனைகளுக்கிடையில்<br />படருகிறது மணலின் வெம்மை.<br />உவர்க்களியில் கொதிக்கிற ஈரலிப்பில்<br />எழுத முடியாத சொற்கள் புதைகின்றன.<br /><br />உப்புவெளியில் பாதிச்சூரியன்<br />சுருண்டு விழ அனல் காற்றில் பறந்துபோகிறது<br />இல்லாத குழந்தைகளது<br />அகற்றிக்கொண்டு வரப்படுகிற சட்டைகள்.<br />கிணியாத்தடிகளில்<br />கட்டப்பட்டிருக்கிற கயிறுகளுக்கிடையில்<br />தொங்குகிறது<br />நேரம் குறித்திருக்கிற கொடு நெருப்பின்<br />கடைசித்துளி.<br /><br />உடல்வேலன் முள்ளுகளுக்குள் வந்து<br />மிரட்டுகிற இரவில்<br />பாதிநகரங்களின் நிழல் விழகிறதென<br />கைவிடப்பட்ட குழந்தைகள் அழுதனர்.<br /><br />மண் துடித்து கடல்மேல் எழுகிறது.<br /><br />முன்பொரு வலயத்தில் சிதறுண்டுவர்களின்<br />பெயர்களை<br />யாருமற்ற சிறுவன் சுடு மணலில் எழுத<br />கள்ளிச்செடிகளின் நிழலில் கிடக்கிறது<br />மிஞ்சியிருக்கிற ஒற்றைப்பொதி.<br /><br />நறுவிலி உவர்நிலக்காடுகளில் அலைகிற<br />பெருங்குரல்களை தள்ளுண்டுபோகிற<br />கடல் மட்டும் கேட்டுத் துடிக்கிறது.<br /><br />ஒற்றைத் தென்னை மரத்துடன்<br />வட்டுவால் வெளித்துக் கிடக்கிறது.<br /><br />தொடுவாய்ப்பிரிப்பில் காய்ந்த கோப்பையில்<br />மிதக்கிறது இனத்தின் பெருங்கனவு.<br />ஒரு பெருமிருகம்<br />முள்ளிவாய்க்காலை குடிக்க<br />திட்டுமிடுகிற குருட்டிரவில்<br />அறிவிக்கப்பட்ட வலயத்தின் மேலாக<br />பற்கள் விழ பெரும்பாம்பு பறக்கிறது.<br /><br />மணல் சுடாகி கொதிக்கிற கரையில்<br />பொட்டென மிதக்கிறது கடல்.<br />------------------------------------------------------------------------<br />12.02.2009, புதிய,பாதுகாப்புவலயம்,அறிவிப்பு, </div><div>வட்வால்,மாத்தளன்,இடையில். </div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-4103021991587082557?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com0tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-40345331041267910732009-02-10T00:41:00.001-08:002009-02-10T00:55:13.102-08:00தாகம் பாய்கிற நதிக்கான கனவு<a href="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SZFArilhARI/AAAAAAAABYU/YedUjTquhCA/s1600-h/children"><img id="BLOGGER_PHOTO_ID_5301089353154494738" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 322px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SZFArilhARI/AAAAAAAABYU/YedUjTquhCA/s400/children%27s.JPG" border="0" /></a><br /><div>----------------------------------------------------------------------------<br /><strong><span style="font-size:130%;color:#ff0000;">தீபச்செல்வன்</span></strong><br />____________________________________ </div><br /><div><br />தண்ணீர் வற்றுகிற வாய்க்காலினை<br />சிரட்டையால் தோண்டுகிற சிறுவனிடம்<br />பாலைவனம் எரிகிற தாகம் முட்டியிருந்தது.<br /><br />வெறும் குடங்களில்<br />ஏங்கங்களை நிரப்பி வைத்திருக்க<br />ஒரு இரவில் பிட்டுடன்<br />அருந்திய தண்ணீர் ஒரு நதியென<br />கனவில் பாய்ந்து கொண்டிருக்கிறது.<br /><br />எல்லாத்திசைகளிலிருந்தும் எறிகனைகள்<br />வருகிறபோது<br />குழந்தைகளை காத்துக்கொள்ளுகிற<br />கோயில்களை கூப்பிட்டோம்.<br />வானம் முழுக்க விமானங்கள்<br />நிறைகிறபோது குழந்தைகளை<br />கூட்டி அணைத்தோம்.<br />கோயிலிலும் தெய்வங்கள் வெளியேறின.<br /><br />சிதறுண்டுபோன மனித உடல்கள்களை<br />விட்டுச்செல்கிற போது அவலத்தின் பெரு நதி<br />கிணறுகளை அள்ளிச் செல்ல<br />தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து<br />வானம் வெளியேறுகிறது.<br /><br />கிணறுகள் எங்கும் குழந்தைகள்<br />ஒளிந்திருக்க தண்ணீர் முழுவதும் வற்றிப்போனது.<br /><br />கூட்டுக்குள் வைத்து வேட்டையாடப்டுகிற<br />பறவைகளிடம் இனியொரு நதியினெ வளர்ந்த கனவு<br />முழுவதும் சுட்டு விழுத்தப்படுகிறது.<br />ஒரு நிமிடத்திலேயே<br />பிரிந்தபோன வாய்க்காலின் கரையில்<br />தென்னை மரத்தில் சிரட்டைகள் உதிர<br />வாய்க்காலில் பாலைவனம் பாய்கிறது.<br /><br />பொதிகளுக்குள் தண்ணீர் தாகங்களை<br />நிரப்பி சுமக்கிற தெருவின்; நடுவில்<br />கிணறு திறபட்டிருக்க அதற்குள்<br />மூடுண்டு போகிற தணலெரிந்தன.<br /><br />அந்தச் சிறுவனும் இல்லை.<br />வாய்க்காலும் இல்லை.<br />பெருகுகிற தண்ணீருக்கான தாகத்தில்<br />குடங்கள் திரிய வாளிகளுள்<br />சிறுவர்களின் வளர்ப்பு மீன்கள்<br />உடல் காய்ந்து அலைந்தன.<br /><br />காய்ந்த ரொட்டியின் மீது<br />அவன் எழுதிய சொற்கள் வெறுமையாயிருக்கிற<br />ரொட்டித்தகரங்களில் சுடுபட்டன.<br /><br />இல்லாத மாவுக்கு வரிசை கட்டி நிற்கிற<br />கடையில் பிட்டு சுமக்கிற தேவாரங்கள் நினைவு வர<br />குறைந்து வருகிற தரையில்<br />தண்ணீர் மேலும் காய்கிறது.<br /><br />தண்ணீருக்கான வழிகள்<br />அடைபட்டுடிருக்க<br />வாழ்வின் கனவின் நதி இனியொரு இரவில்<br />முற்றுகை அதிகரித்த காட்டினுள்<br />மீள பெயர்ந்து பாய்கிறது.<br />------------------------------------------------------------------------------------<br /><strong>13.01.2009</strong></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-4034533104126791073?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com0tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-14639024412207312112009-02-04T23:11:00.000-08:002009-02-04T23:21:34.372-08:00யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்<a href="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/SYqSHPQRJRI/AAAAAAAABX0/gCQQbpnFsvk/s1600-h/20090128_Mullaitiu07+1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5299208564606313746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/SYqSHPQRJRI/AAAAAAAABX0/gCQQbpnFsvk/s400/20090128_Mullaitiu07+1.jpg" border="0" /></a> ----------------------------------------------------------------------------<br /><strong><span style="font-size:130%;color:#ff0000;">தீபச்செல்வன்</span></strong><br />____________________________________<br /><div><br />கடலின் நகரத்திலும் கொடிகள்<br />அசைந்து கொண்டிருக்க சனங்கள்<br />காலக்களின் அடிகளையும்<br />எடுத்துச் சென்றனர்.<br />அலைச்சல் மிகுந்து போயிருக்கிற<br />கால்களினை உடைத்து<br />கொள்ளுகிற ஷெல்களின்<br />சத்தத்தில் அதிர்ந்து போகிற<br />வாழ்வு எழுதிய நகரம்<br />அதிகாரத்தின் கையுள் சுருங்குகிறது.<br /><br />கொடியின் நிழலில் தள்ளியிருந்த<br />நகரத்தின் வெறுமைக்குள்<br />படைகளின் வெற்றிக்<br />கூச்சல்கள் திமிறி நிறைந்தன.<br /><br />கடைசி நிழலில் ஒதுங்கியிருக்கிற<br />பல கிராமங்களின்<br />குளங்களில் அடுப்புகள் மிதக்கின்றன.<br /><br />யாருமற்ற நகரின் தெருவில் நின்று<br />தவித்து திரிகிற நாயின் எச்சிலின் வெம்மையில்<br />கொதிக்கிற<br />துண்டுச் சுவர்களில்<br />நமது பெருந்தவிப்பு பிரதிபலிக்கிறது.<br /><br />வரலாறுகளுக்கான தோல்விகளை திணிக்கிற<br />அதிகாரம் சிரித்து எரிக்கிற<br />நகரத்தின் சாம்பலில் கனவு சுடுபடுகிறது.<br />சனங்களை தின்று பறக்கிற<br />கொடியின் நிழலில்<br />கொடும் கதிரைகள் பசித்தலைய<br />அழிகிற நகரத்தின் அடியில் வாழ்வு புதைகிறது.<br /><br />இருக்கிற எல்லாவற்றையும் கொண்டு செல்லுகிற<br />யுத்தம்<br />அழிவுகளையும் தோல்வியையும்<br />அடிமைத்தனத்தையும்<br />தந்து கொண்டு சொற்களால் வதைத்தபடியிருக்கிறது.<br /><br />இன்னொரு நகரத்தில் இன்னொரு முற்றுகையில்<br />நசிகிற கனவின்<br />மீது விழுகிற குண்டுகள் காயப்படுத்திய<br />நம்பிக்கையை<br />பெருந்தேசியத்திற்குள் வற்புறுத்துகிற கொடி<br />மிரட்டுகிறது.<br /><br />பெருந்தேசியத்துக்கான மிகவும் கொலுப்படைந்த<br />வெறியில் சிங்கம் தனததிகாரத்தில்<br />கடலை தின்று குதிக்க<br />சூரியன் பழமையான கடலினுள் புதைகிறது.<br /><br />வாழ்ந்து கொண்டிருந்த சனங்களது நகரத்தின்<br />வாழ்வினையும் கனவுகளையும்<br />தேடியலைந்து தின்று முடித்துவிட்டு<br />உடைந்த சுவர்களினையும்<br />நினைவுகள் எழுதப்பட்ட கற்களையும்<br />பசித்தலைகிற கொடியின் நிழல் மேலும் மிதிக்கிறது.<br />----------------------------------------------------------------------------------<br /><span style="font-size:85%;">28.01.2009 முல்லைத்தீவு நகரத்தினுள்<br />இலங்கைப் படைகள் நுழைந்தன.</span> </div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-1463902441220731211?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com0tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-87224542542948405532009-01-27T01:59:00.000-08:002009-01-29T21:46:53.135-08:00சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/SYKN_TwgETI/AAAAAAAABXk/po_qIPnrCvQ/s1600-h/vanni_20090129003+1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/SYKN_TwgETI/AAAAAAAABXk/po_qIPnrCvQ/s400/vanni_20090129003+1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5296952230516101426" border="0" /></a><br />----------------------------------------------------------------------------<br /><div><strong><span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" >தீபச்செல்வன்</span></strong><br />____________________________________<br /><br />எல்லாவற்றையும் நமது மண்ணிலிருந்து<br />துரத்தபடுகிற நாட்களில்<br />சுதந்திரம் பெருமனதுடன்<br />மரணத்தை வழங்க காத்திருக்கிறது.<br />இனவாதம் வடிவமைத்த<br />போர் நம்மை ஊடுருவி ஆளுகிறது.<br />வெல்ல முடியாதிருந்து<br />நமக்கெதிராயிருக்கிற யுத்தம்<br />ஆட்களற்ற நகரத்தை தோற்கடிக்கிறது.<br /><br />கடலில் குதிக்கிற நகரத்தின்<br />சொற்பமற்ற எண்ணிகையான சனங்களுக்கு<br />எல்லாம் இத்தோடு முடிந்து போகிறது.<br />அகலமான கால்களினால் ஆக்கிரமிக்கிற யுத்தம்<br />சமாதானத்தை பேசுகிறது.<br /><br />நாம் சொற்ப எண்ணிக்கையானவர்களாக<br />ஒதுக்கி முடிக்கப்படுகையில்<br />அழித்து முடிக்கப்படுகிற பயங்கரவாதிகளானோம்.<br />இனம் பற்றி வளர்த்த பேரெடுப்பு முடிகிற<br />கடைசி நிமிடத்திற்கென வருகிற<br />இனவாதப் புன்னகை<br />மனிதர்களை தின்றுகொண்டு வருகிற யுத்தமாகி<br />மனிதாபிமானம் பேசுகிறது.<br /><br />கடைசியில் நமது சுயநலமும்<br />நமதினத்தை வாழ்நாள் சிறையிலடைத்தது.<br />இலங்கை ஈழத்தை கடலில் தாட்டு<br />தமிழர்களை புதைத்து கொடி ஏற்றுகிறது.<br />கடலில் இனி பொதிகள் சுமக்க விதிப்பட்டோம்.<br /><br />நமது வாழ்வுரிமை முழுவதும் பலியிடப்படுகிறது.<br />துரோகங்கள் பிரித்தாடப்பட்டு<br />உலகம் பலிவாங்குகிறது.<br />நமது தேசம் முழுவதும் புதைக்கப்படுகிற<br />நடவடிக்கையில் நமதாயிருந்த வாழ்வு<br />பயங்கரவாதம் எனப்படுகிறது.<br /><br />இனவாதம் சிறைக்குள் இழுத்துக்கொண்டு<br />கிட்டிய தூரத்தில் விடுவிக்கப்படுகிற<br />நாம் நிரந்தர அடிமைகளாக்கப்பட<br />காயமடைந்த உடலிலிருந்து<br />துண்டு மனம் வெளியேறுகிறது.<br /><br />இனி எதையும் மனதின் ஆழத்திலும்<br />தேட முடியாதவர்களாக விதிப்படுகிறது.<br />ஏற்கடிமுடியாத அரசின்<br />ஆட்சியின் தாழ்வாரத்தில்<br />நிலத்திற்கான பெரும் வெறி மழையில் ஒதுங்குகிறோம்.<br />எல்லாம் இழந்தவர்களாக மாற்றப்படுகிறது.<br /><br />வரலாறு மறந்தவர்களாக நிர்பந்திக்கப்பட<br />நமது குழந்தைகள் சொற்ப<br />எண்ணிக்கை ஆக்கப்பட்டனர்.<br />இனி நமக்கில்லை வாழுகிற தேசமும்<br />தொன்மையான பொருட்களும்<br />மிகவும் பசுமையான சொற்களும்.<br />எல்லாம் துரத்தப்பட<br />நமது இனம் பெரிய அகதியாக<br />அதனுடன் நிலமும் அழிகிறது.<br />-----------------------------------------------------------------------------<br />14.02.2009<span style="font-size:85%;"></span></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-8722454254294840553?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com3tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-23603866485731536752009-01-19T00:46:00.000-08:002009-01-19T02:15:37.434-08:00சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்<a href="http://1.bp.blogspot.com/_v_RS-3lzur0/SXRFaOHKbRI/AAAAAAAABVs/GC-KVmI40z8/s1600-h/deebam.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5292931778834230546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_v_RS-3lzur0/SXRFaOHKbRI/AAAAAAAABVs/GC-KVmI40z8/s400/deebam.JPG" border="0" /></a>----------------------------------------------------------------------------<br /><strong><span style="font-size:130%;color:#ff0000;">தீபச்செல்வன்</span></strong><br />____________________________________<br /><br />பொதிகளில் போட்டு அடைத்து வைத்திருக்கிற<br />வாழ்வை வெளியிலெடுக்க முன்பே<br />இந்தக் கிராமம் எழும்பி திசைகளற்று போகிறது.<br /><br />விதியெனப்பட்ட வசங்களில்<br />கிராமங்கள் நிமிடங்களுக்குள்<br />மலை வீழ்வதுபோல வசப்பட<br />கொண்டு செல்ல முடியாத பொதிகள் அதிகரிக்கிறது.<br />விட்டு வந்தவை ஆடுகள் எனில்<br />வழி தவறியவர்கள் நாங்களாயிருந்தோம்.<br /><br />உலகத்திற்கு அழுது காட்டுகிற<br />மூட்டை சுமக்கிற நிலமைகளில் கண்களற்றுப்போக<br />கண்ணீரில் மிதக்கிறது விதியெனில்<br />வீடுகள் இழந்தும்<br />வெளியில் வரதவர்களாய் இருந்தோம்.<br /><br />மாடுகளை பட்டியில் விட்டு வர<br />படைகள் எல்லாவற்றையும் அடித்துத் தின்றனர்<br />தண்ணீருக்கு அலைகிற குழந்தையை கொண்டு<br />வலியை சுமக்க பாடு கொண்டவர்களாயிருந்தோம்.<br /><br />எறிகனைகளிற்குள் தஞ்சமடைகிறது<br />நமதாய்ப்போன கொடிய விதியெனில்<br />நமதாயிருந்த ஊர்களை சுமந்து சென்று<br />கடலினுள் போட்டுக் கொண்டோம்.<br />சுமக்க வேண்டியவை தவறுப்பட்டு படைகளின்<br />கால்களுக்குள் மிதிபட<br />சந்ததிக்கு கையளிக்கிற பெரிய சுமைகள்<br />இழுபட்டு பின் தொடர்ந்தன.<br /><br />ஆயுதங்கள் எல்லாவற்றையும்<br />கையாண்டு முடிக்கிற தேசத்தில்<br />அழுகை நசிகிறது.<br />அழுகையின் மிகப்பெரிய மூட்டை<br />இடுப்பிலும் தலையில் கால்களுக்கு பின்னாலும்<br />தொடர கொண்டு செல்ல வேண்டிய<br />பொதிகளை படைகள் கைப்பற்ற நாம் விட்டு வந்தோம்.<br /><br />மறுக்கப்பட்ட வெளியில் வாழ<br />அனுமதி மறுத்து பிரகடனம் நிறைவேற்றப்படுகையில்<br />பலியிடக்காத்திருந்த<br />எறிகனைக்குள் ஒளிந்து கொண்டு<br />குழந்தையின் மூச்சை பொதியிலடைத்து<br />அதிகாரத்தின் கயிறுகள் கட்டுண்டவர்களாயிருந்தோம்.<br /><br />படைகளிடம் சரணடைந்து<br />நிரந்தர பொதிகளை சுமக்கிறபோது<br />நமது பெரும் இனக் கூட்டத்தில்<br />சுமைகளின் பெரும் பொதிகள் விழுந்தன.<br /><br />அதிகாரம் அடிமைக் கொடியினை திணித்து<br />சுற்றி வளைத்து பிடித்துக் கொள்ளுகிறது.<br />வழியில் தனிமை அதனை மிஞ்குகிற பாரத்துடன்<br />கைவிடப்பட்ட ஆடுகள் அவற்றை சுமக்கின்றன.<br /><br />நமதெனப்பட்டவை எல்லாம் பொதிகளில்<br />அடைத்தபடி தொலைபட்டுப்போக<br />யாரோ என்பதுடன் சந்ததியின் அழுகைக்கான<br />பாரமான மிகவும் பெரிய பொதிகள்<br />குழந்தைகளது கைகளில் இருந்தன.<br />----------------------------------------------------------------------------<br />13.01.2009<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-2360386648573153675?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com2tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-90238360655289203622009-01-14T22:24:00.000-08:002009-01-16T01:07:21.948-08:00மரண நெடில் வெளி இரவு<a href="http://1.bp.blogspot.com/_v_RS-3lzur0/SW7XqZGL1LI/AAAAAAAABVk/l1-5rZ78A-o/s1600-h/Paranthan-Mullaithivu_Road_3.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5291403735498216626" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 280px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_v_RS-3lzur0/SW7XqZGL1LI/AAAAAAAABVk/l1-5rZ78A-o/s400/Paranthan-Mullaithivu_Road_3.jpg" border="0" /></a>----------------------------------------------------------------------------<br /><strong><span style="font-size:130%;color:#ff0000;">தீபச்செல்வன்</span></strong><br />____________________________________<br /><br />வானம் எமக்கில்லை எனப்படுகிறது.<br />காடல் பிரித்து அள்ளி எடுக்கப்பட்ட பட்டினத்தில்<br />மனங்களை புதைத்து வருகிற<br />ட்ராங்கியில் தலைகள் நசிந்து கொண்டிருக்க<br />தெருக்கள் கடலில் தொலைந்தன.<br /><br />தோல்விப்படுத்திய மிகவும் அகலமான<br />கைகள் எல்லாவற்றையும் கடலில் கொண்டுபோய்<br />கரைத்துக்கொண்டிருக்கிறது.<br />வார்த்தைகளற்ற இரவில் மரண நெடிலில்<br />நமது வீடற்ற வெளி முழ்குகிறது.<br /><br />முகங்கள் கிழிக்கப்படுகிற தீர்வில்<br />தப்பிச் செல்ல வழிகளற்று <br />ஒடுங்கிய இரணடு மரங்களினிடையில்<br />ஒரு பொந்து வழங்கப்பட்டிருக்கிறது.<br /><br />ஒரு பெரிய உலகத்தின்; வெடிகள்; கொட்டுகிற<br />கண்ணாடியில் <br />குழந்தைகள் சிரிக்கிற பிம்பங்கள் தெரிகிறது.<br /><br />தொன்மங்கள் கண்டுபிடிப்பதற்கு தொடங்கிய <br />படைகளின் வருகைகளின் போது<br />இரண்டொரு நாய்கள் திரிகிற நகரத்தில் <br />ஊழைச்சொற்கள் கேட்க<br />பிராணிகளின் புன்னகை மிதிபடுகிறது.<br /><br />எல்லாம் களவாடிய பிறகு<br />மிஞ்சியிருந்த மனங்கள்<br />தேடியழிக்கத் தொடங்கியபோது<br />உடைகளின் புதிய நிறங்களில் சிங்கம் திரிந்தது.<br /><br />மெல்ல மெல்ல பேய்களின் கதை நடந்தேற<br />ஒரு நாள் கூட்டங்களாய் <br />ஆடுகள் மாட்டிக்கொண்டன.<br />பற்கள் கூர்மையடைய மிருங்களின்<br />நடமாட்டங்களும் பாய்ச்சல்களும் அதிரிக்க<br />பூதங்கள் கதிரைகளை தின்னத்தொடங்கின.<br /><br />தனித்தனியாய் துண்டாடப்பட்ட <br />யாரோ எனப்பட்டவர்களாய் வழிகள் முடவும்<br />இரவுகள் அலைகிற நாட்களில் கறுப்பு நிலவுகள்<br />அதிகரித்து<br />வானத்திலிருந்து உதிர<br />பூதங்கள் தாம் சொன்னதை நடத்தின.<br /><br />தாண்டுபோன கடலினுள்<br />பெரு வானம் விழுந்துகிடக்க <br />ஆட்களற்ற வெளியில் பொதிகள் எங்கும்<br />சிதறிக்கிடக்க மரண நெடிலடிக்கிற<br />தோல்வி ஒரு வரலாற்றை எழுதியபடியிருந்தது.<br /><br />அதிகாரத்தின் கால்களுக்குள் மிதிபடுகிறது <br />நமது வாழ்வெளியின் <br />இருப்பை கொண்டிருக்கிற மண்.<br />-----------------------------------------------------------<br />13.01.2009<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-9023836065528920362?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com0tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-27907052373275135712009-01-04T02:14:00.000-08:002009-01-06T04:41:35.427-08:00கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்<a href="http://1.bp.blogspot.com/_v_RS-3lzur0/SWCNsybrDkI/AAAAAAAABU8/Dkc0H3MLmHo/s1600-h/kilinochchi.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5287381763124563522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_v_RS-3lzur0/SWCNsybrDkI/AAAAAAAABU8/Dkc0H3MLmHo/s400/kilinochchi.JPG" border="0" /></a>----------------------------------------------------------------------------<br /><div><strong><span style="font-size:130%;color:#ff6600;">தீபச்செல்வன்</span></strong></div><div>____________________________________</div><br /><strong>01<br /></strong>நமது வாழ்வின் கனவு நகரமே<br />படைகள் உன்னை மிதிக்கும் பொழுது<br />நமது மனம் மிதிபடுகிறது.<br />கிளிநொச்சிக்குளத்தில் கந்தசாமிகோயில் முழ்கியது.<br />அதிகாரத்தின் கைகளிற்குள்<br />அடங்க முடியாத நகரம் நேற்றிரவு பின்வாங்கியது.<br />ஆழமான கிணறுகள்<br />வசந்தநகரை விட்டு பின்வாங்கின.<br /><br />நமது நகரம் வீழ்ந்தது என்று<br />அறிவிக்கப்படுகையில் பெரும்துயர் சூழ்கிறது.<br />மெல்ல மெல்ல படைகள்<br />கடிக்கத்தொடங்கிய நாட்களில்<br />வீடுகள் எங்கோ போயிருந்தன.<br />கடைகள்<br />கரடிப்போக்கைவிட்டு பின்வாங்கின.<br /><br />எனது வீடு முழுவதையும்<br />தின்றுவிட்டு பெருமிதம் கொள்ளுகிற<br />படைகள் நகரமெங்கும்;<br />நுழைந்து கொடிகளை<br />பறக்க விடுகையில்<br />காயம் ஆறாதிருந்த கட்டிடங்கள்<br />வெருண்டன.<br />ஐந்தடி ஆறு<br />இரத்தினபுரத்தைவிட்டு பின்வாங்கியது.<br /><br />இந்தப்போர் எனது நகரத்தை<br />தின்று பசியாறுகிறது.<br />நான் வீட்டினை இழந்தேன்.<br />மரங்களையும் இழந்தேன்.<br />ஜனாதிபதியின் மிகுந்த மகிழ்ச்சியில்<br />போர்மீதிருக்கும் ஆசையில்<br />எனது கடைத்தெருக்களை<br />நான் இழந்தேன்.<br />புதிய கட்டிடங்கள் அறிவியல்நகரை<br />விட்டு பின்வாங்கின.<br /><br />நேற்று வந்திருந்து பேசிய<br />சமாதானம் இன்று வந்து<br />கொடூரமாய் சிதைத்துக் கொண்டிருக்கிறது.<br />வாழைமரங்கள்<br />திருவையாற்றை விட்டு பின்வாங்கின.<br /><br />தமிழர்களின் கனவு நகரம்<br />தோற்றுவிட்டதாய்<br />சிங்களவர்கள் வெடி கொளுத்தி ஆடுகிறபோது<br />மனம் படு காயமடைகிறது.<br /><br />02<br />ஆட்களற்ற நகரத்தில்<br />அவர்களின் கனவுகளையும் நம்பிக்கையும்<br />படைகள் தேடியழித்துக் கொண்டிருந்தனர்.<br />கனகாம்பிகைக்குளத்தில் நூலகம் முழ்கியது.<br /><br />நமது கனவின் நகரம் அழிந்துபோகாது?<br />திசைகளை மூடுகிற போர்<br />மரணத்தின் குழியில்<br />நம்மை தனிமையிலிட துடிக்கிறது.<br />தோல்விப்படுத்த முனைகிற<br />சிங்கங்கள் பற்களை கொண்டலைகிறது.<br />தோல்வி திணிக்கப்பட<br />சிதைந்த நகரத்தின் கொடுமையான<br />அனுபவத்திலிருந்து கோபம்; தூண்டப்படுகிறது.<br />வைத்தியசாலை<br />ஆனந்தபுரத்தைவிட்டு பின்வாங்கியது.<br /><br />நாம் விட்டுச்செல்ல முடியாத நகரத்தில்<br />படைகள் நுழைய முடியாதிருக்கிறது.<br />தரைகளில் பதுங்கும் கண்களில்<br />இன்னும் சூடேறுகிறது<br />என்றும் தீரமுடியாத தாகத்தை<br />சவப்பெட்டிகளாக்குகிற கனவில்<br />வாழ்வுக்கான ஏக்கம் சாம்பலாவதில்லை?<br />மீனாட்சி அம்மன்<br />ஜெயந்திநகரை விட்டு பின்வாங்கினாள்.<br /><br />நமது வாழ்வின் கனவு நகரமே<br />படைகள் உன்னை மிதிக்கும் பொழுது<br />நமது மனம் மிதிபடுகிறது<br />உன்னை மீள உயிருட்டுகிற கனவு<br />மீண்டும் வளருகிறது.<br />குளத்தடிக்காடுகள்<br />அம்பாள்நகரை விட்டு பின்வாங்கின.<br /><br />நம்மை அழிக்கிற கனவு வளர்க்கிற<br />கொழும்பு<br />கிளிநொச்சியை தின்று மகிழுகிறது.<br /><br />03<br />கனவு ஒருபோதும் உதிரப்போவதில்லை<br />அவலமாகிப்போன நம்பிக்கை<br />மீள துளிர்கிற தருணம் அதிகரிக்கிறது.<br />அம்பாள்குளத்தில் வாய்க்கால்கள் முழ்கின.<br /><br />இந்த நகரத்தில் படைகள்<br />தங்குகிற நாட்களை எண்ணுவதிலிருந்தே<br />நாம் மீண்டும் திரும்புகிற<br />நாட்களில் தங்கியிருக்கிறோம்.<br />நாகதம்பிரான்<br />உதய நகரை விட்டு பின்வாங்கினார்.<br /><br />படைகள் பலியிடத்துடிக்கிற<br />நமது நகரத்தை<br />நாங்கள் விட்டு வந்தோம்.<br />மாமரங்கள்<br />திருநகரை விட்டு பின்வாங்கின.<br /><br />எங்கள் வாழ்வு தின்று களிக்கிற<br />அரசுகள் துரத்திக்கொண்டேயிருக்கிறது.<br />நாங்கள் குருதி சுமந்து<br />கட்டிய நகரம் நொருங்கியபடியிருக்கிறது.<br />தலையில் நமது நகரத்தை<br />சுமந்படி திரிகிறோம்.<br />துயிலுமில்ல வீதி<br />கனகபுரத்தை விட்டு பின்வாங்கியது.<br /><br />பூக்களை பலியிடுகிற அரசு<br />எங்கள் கனவின் தலைநகரத்தில்<br />தனது கொடியை பறக்கவிடத்துடிக்கிறது.<br />ஜனாதிபதியின் உணவுக்கோப்பையில்<br />மண் நிறைகிறது.<br />வெறிகலந்த வெற்றிச்சொற்களை<br />சகிக்காத நீளமான வீதி நெளிகிறது.<br />மாதுளை மரங்கள்<br />சிவநகரை விட்டு பின்வாங்கின.<br /><br />முழுக்கனவையும் நசுக்குகிற பேரெடுப்புடன்<br />தெற்கு வடக்கை ஆக்கிரமித்திருக்கிறது.<br /><br />04<br />பரந்தன் மீண்டும் சிதைகிறது.<br />சின்னக்கடைகளையும் வீதிகளையும்<br />படைகள் கைகளிற்குள் போட்டு பிசைந்தனர்.<br />பறவைகள்<br />மலையாளபுரத்தை விட்டு பின்வாங்கின.<br /><br />நமது பிரியம் மிகுந்த தெருவே<br />சின்ன ஒழுங்கைகளே<br />படைகளது அகன்ற காலடியில்<br />அதிகாரத்திடம் நசுங்குவது கண்டு துடிக்கிறோம்.<br />முறிப்புக்குளத்தில் ஆடுகள் மூழ்கின.<br /><br />வாய்க்கால்களில் படைகள்<br />கால்களை நனைக்கிறபோது வயல்கள் எல்லாம்<br />தரிசாகிப்போகிறது.<br />பானைகளற்று கைகளில் வேகுகிற<br />பாதி அரிசியில் நமது கிராமங்கள்<br />ஒடுங்கி துடிக்கின்றன.<br />விட்டு வந்த கிராமங்களில்<br />தனியே உருளுகின்றன சைக்கிள்கள்.<br />முத்துமாரி அம்மன்<br />செல்வாநகரை விட்டு பின்வாங்கினாள்.<br /><br />தோட்டங்கள் அழிந்துபோக<br />காட்டு இலைகளை வறுத்து பசியாறுகிற<br />குழந்தைகள் குளிக்க ஏங்குகின்றனர்.<br />எல்லா மரங்களையும் அடிமைப்படுத்துகிற<br />அதே படைகள்<br />சுவர்களையும் கூரைகளையும்<br />எங்களிடமிருந்து பிரித்தனர்.<br />கூழாமரம்<br />உருத்திரபுரத்தை விட்டு பின்வாங்கியது.<br /><br />அகதிவெளிகளில் சாய்கிற<br />மரங்களில் இலைகள் உதிருகிறபோது<br />மீண்டும் எங்கள் வீடுகள் துளிர்க்கும்<br />என்று எங்கள் குழந்தைகளுக்கு<br />சொல்லி பதுங்குகிறோம்.<br />இரணைமடுக்குளத்தில்<br />சமாதானசெயலகம் முழ்கியது.<br /><br />ஒரு இனம் மற்றொரு இனத்தின்<br />வாழ்வை அழித்துக்கொண்டிருக்கிறது.<br /><br />05<br />இரணைமடுவே கிளிநொச்சி நகரம்<br />தண்ணீரில் மூழ்கி தவிக்கிறது.<br />சனங்களிடமிருந்து<br />பிரிக்கப்பட்ட நகரை படைகள் ஆளுகிறது.<br />தலைகளில் அதிகரிக்கிற சுமையில்<br />எதிரியின் கொடுமையான சொற்கள்<br />எங்களை மேலும் வருத்துகிறது.<br />பசுமை மிகுந்த வயல்கள்<br />கணேசபுரத்தை விட்டு பின்வாங்கின.<br /><br />வீழ முடியாத நகரத்தை<br />விட்டுச் செல்லுகிற<br />சனங்களின் கண்ணீரை பருகி<br />வெடி கொழுத்தப்படுகிறது.<br />இரணைமடுக்காடே உன்னை<br />நம்புகிற சனங்கள் மீள<br />திரும்புகிற ஏக்கத்துடன் அலைகின்றனர்.<br />மாடுகள்<br />கனகாம்பிகையை விட்டு பின்வாங்கின.<br /><br />நெடுநாளாய் கற்கள் கொண்டு<br />கட்டிய நகரத்தை வாழ்வுக்கான திட்டங்களை<br />தின்று பெருமித ஏக்கம் கொள்ளுகிறது<br />உன்னிடம் புதையப்போகிற படைகள்.<br />கொய்யா மரங்கள்<br />ஆனந்தநகரை விட்டு பின்வாங்கின.<br /><br />பயங்கரவாதச் சனங்களாக்கப்பட்ட<br />எங்கள் அழகிய வாழ்வை சிதைத்து<br />கனவின் தலைநகர் வீழ்ந்தது எனப்பட்டது.<br />ஒரு சிங்கள வெடியிலிருந்து<br />மீண்டும் நமது போர்க்களம் திறபடுகிறது.<br />தென்னைமரங்கள்<br />பாரதிபுரத்தை விட்டு பின்வாங்கின.<br /><br />எல்லாவற்றையும் எடுத்து செல்ல முடியாதபோது<br />நாம் உன்னை மட்டும் சுமந்து வந்தோம்.<br />கிளிநொச்சி நகரமே உன்னை வைத்து<br />செய்த எல்லாவற்றையும்<br />படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன.<br />உடைந்த சுவர்களில் மெலிந்த சனங்கள்<br />கனவுகளை எழுதிச்சென்றனர்.<br /><br />வாழ்வுக்கான ஏக்கம் இன்னும் அதிகரிக்க<br />கிளிநொச்சி நகரத்தோடு<br />வாழ்வுக்கான தேசம் மேலும் ஒடுங்கியபடியிருக்கிறது.<br />குந்தியிருக்க முடியாத நிலத்தில்<br />ஒடுங்கியிருக்கிற நகரத்தில்<br />முழுத்தேசத்திற்கான கனவு வளருகிறது.<br /><br />ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது<br />போரெடுத்து நிற்கிறது.<br />--------------------------------------------------------------------------------<br />(கிளிநொச்சி,வீழ்ச்சி,புலிகள்,பின்நகர்வு,<br />படைகள்,கைப்பற்றல்,அரசு,வெற்றி. 02.01.2009)<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-2790705237327513571?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com3tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-79324850745980881022008-12-29T20:57:00.000-08:002008-12-29T22:21:35.043-08:00மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்<a href="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SVm3LmqZiyI/AAAAAAAABUQ/GD6HSBt0rrg/s1600-h/dddd.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5285457047680813858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 298px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SVm3LmqZiyI/AAAAAAAABUQ/GD6HSBt0rrg/s400/dddd.JPG" border="0" /></a>-----------------------------------------------------------------------------<span style="font-size:130%;color:#ff6600;"><strong>கவிதை:தீபச்செல்வன்</strong></span><br />____________________________________<br /><div><div><strong><span style="color:#ffcc99;">01<br /></span></strong>மாங்குளத்தினுள் படைகள்<br />நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.<br /><br />ஒரு நாட்டை நோக்கி யுத்தம்<br />அறிவிக்கப்படுகையில்<br />மரணம் குறித்து படைகள் அறியாதிருந்தன.<br />கடலுக்கு மிகவும்<br />நெருக்கமான சனங்களை துரத்துகையில்<br />படங்குகளில் தென்னை மரங்கள் பெயர்ந்தன.<br /><br />எனக்கு மிகவும் பிடித்த கடலே<br />உனக்கு தனிமை பரிசளிக்கப்படுகிற<br />யுத்தத்திடம் எதுவரை காயப்படப்போகிறாய்?<br />படைகளை நீ மூழ்கடிப்பாய்<br />எனத்தான் நம்பிப் பெயர்கின்றன படகுகள்.<br /><br />மனிதர்களை நெடுநாளாய் தின்று கொளுத்த<br />யுத்தத்திடம் வீதியும் கடலும்<br />முதலில் பலியிடப்படுவது<br />கண்டு மணல்கள் அலைகின்றன.<br /><br /><strong><span style="color:#ffcc99;">02<br /></span></strong>புளியங்குளத்தினுள் படைகள்<br />நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.<br /><br />பசிய காடுகளே குண்டுகளை கொண்டெறிந்து<br />வேர்களை அறுக்கிற படைகளின்<br />துப்பாக்கிகள் மறைந்திருக்கின்றன.<br />அது இன்னும் முன்னே செல்ல<br />காத்திருக்கிறது.<br />மரங்களில் தோல்வி எழுத முனைகிறது.<br /><br />எனது காடுகள் ஒடுங்காதிருக்கின்றன.<br />படைகள் வேர்களால்<br />புதைக்கப்படு நாளை அறியாதிருந்தன.<br />காடுகளினுள் மரங்களின்<br />குருதி கசிற இடைவெளிகளில்<br />துப்பாக்கிகள் நீட்டப்பட<br />மரங்களின் தலைகள் அறுத்தெறியப்பட்டிருந்தன.<br /><br />காடுகளை வேட்டையாடுகிற<br />படைகளிடம் முதலில் சனங்கள் வேட்டையாடப்பட்டன.<br />பாலைமரங்களிடம் மூளுகிற<br />மௌனத்தின் தீயில் காடுகளால்<br />படைகள் எரிக்கப்படு நளை அறியாதிருந்தனர்.<br /><br /><span style="color:#ffcc99;"><strong>03<br /></strong></span>கனகராயன் குளத்தினுள் படைகள்<br />நுழைந்து நின்று வெற்றி அறிவிக்கின்றன.<br /><br />மரங்கள் மிதக்கிற ஆற்றினிடையில்<br />சனங்களின் குருதியும்<br />சதைகளும் இராணுவத்தொப்பிகளில்<br />நிரப்பியபடி வந்தன.<br />வெள்ளம் ஆற்றை அள்ளிச்செல்லுகிற<br />மழைநாட்களில் படைகள்<br />துப்பாக்கிகளை நனைத்து<br />மெல்ல புகுந்தன.<br />கரைகள் மீதியற்று கரைகிறது.<br /><br />ஆறுகள் அறுபட்டு திசையிழந்து திரிந்தன.<br />ஜனாதிபதி மாளிகையின்<br />தாழ்வாரங்களின் மீது மோதி<br />தரையிலிருந்து எழும்புகின்றன.<br />ஜனாதிபதி ஆற்றை வெட்டி எறிய<br />புதியபெயர்கள் காத்திருக்க<br />படைகள் ஆற்றை கால்களுக்கிடையில்<br />சுற்றி வைத்திருந்தனர்.<br /><br />படைகள் ஆறுகளால்<br />இழுத்துச் செல்லப்படு நாளை அறியாதிருந்தனர்.<br /><br /><strong><span style="color:#ffcc99;">04</span></strong></div><div>அலம்பிலினுள் படைகள்<br />நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.<br /><br />வீதிகளை பிடித்து தின்றபடி<br />செல்லுகிற படைகளின்<br />காலடியில் வீடுகள் மிதிபட<br />புத்தகம் கிழிந்து பறக்கிறது.<br />வெற்றியின் களிப்பில்<br />ஆளில்லாத கிணற்றில்<br />நாய் ஊளையிடுகிற<br />சத்தம் நிரம்புகிறது.<br /><br />யாருமில்லாத ஊரின்<br />நடுவில் படைகள் விரித்து வைத்திருக்கிற<br />வரைபடத்தில்<br />நமது கிராமத்தின் ஆடுகள்<br />அலைவதை நான் கண்டேன்.<br /><br />உடைந்த வீட்டின் மீதியை<br />தின்று இன்னொரு கிராமம்மீது பசித்திருக்கிற<br />படைகள் ஆடுகளால்<br />தின்னப்படு நாளை அறியாதிருந்தனர்.<br /><br /><strong><span style="color:#ffcc99;">05</span></strong><br />குமுழமுனையுள் படைகள்<br />நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.<br /><br />இரவை கைப்பற்றிய படைகள்<br />பகலில் மீது தாக்கத் தொடங்கினர்.<br />சனங்கள் இருளில் திரிய சூரியனது<br />திசையில் அடுத்த யுத்தம் அறிவிக்கப்பட்டது.<br /><br />விளக்குகள் அணைய<br />முகங்கள் விறைத்திருக்க படைகள்<br />எறிந்து விளையாடுகிற<br />எறிகணைகளில் தென்னைகள் பட்டெறிந்தன.<br /><br />தென்னைகள் சரிகிற இரவில்<br />வீடுகள் நசிய படைகள் புகுந்தன.<br />குளத்தின் முகத்தை படைகள் பிடிக்க<br />தண்ணீர் வெருண்டு புகுகிற<br />ஊரில் கிணறுகள் மூழ்கின.<br /><br />படைகள் கிணறுகளால்<br />விழுத்தப்படு நாளை அறியாதிருந்தனர்.<br /><br /><strong><span style="color:#ffcc99;">06<br /></span></strong>ஒலுமடுவினுள் படைகள்<br />நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.<br /><br />வீதியின் நடுவில் காடு<br />தனியே கிடந்து துடிக்கிற பகலில்<br />ஒரு பள்ளிக்கூடம் அகப்பட்டது.<br />மேலுமாய் துயரத்தை அனுபவிக்கிற<br />கிராமத்தில் மீண்டும்<br />படைகள் புகுந்த வெற்றியில்<br />கோழிகளின் இறக்கைகள் மிஞ்சின.<br /><br />மாடுகளின் எலும்புகள்<br />கண்டு பொறுக்குகிற படைகள்<br />சனங்களின் தலைகளை தேடினர்.<br />கொழும்பின் பசியில்<br />மாடுகளை படைகள் மேய்ந்தனர்.<br /><br />படைகள் மாடுகளால்<br />முட்டப்படு நாளை அறியாதிருந்தனர்.<br /><br /><strong><span style="color:#ffcc99;">07</span></strong><br />அம்பகாமத்தினுள் படைகள்<br />நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.<br /><br />காய்கறிகளை வெட்டி வீசுகிற<br />படைகள் கிழங்குகளை பிடுங்கி எறிந்தனர்.<br />பூக்கள் மறுக்கிற பூமரங்களை<br />படர்ந்த கொடிகளை வேரில் சுட்டனர்.<br />கைகளை தேடுகிற<br />படலைகள் ஓட்டைகளால் நிறைய<br />அதனூடே ஷெல்கள் நுழைந்தன.<br /><br />கடலின் படலையில் மரணம்<br />படைகளை பார்த்தபடி<br />காத்திருக்கிறது.<br />சனங்களின் தவிப்பில் கொந்தளிக்கிற<br />கடலை போர் தாக்கிக் கொண்டிருந்தது.<br />ஆடுகள் கடலில் அலைய<br />கிணறுகள் மிதந்தன.<br /><br />முல்லைத்தீவிடம் கால்<br />பதிக்க குதிக்கிற படைகள்<br />கடலிடம் தோற்கப்படு நாளை அறியாதிருந்தனர்.<br /><br />மற்றொரு சந்தையும்<br />மருத்துவமனையும் நொருங்குப்படத் தொடங்க<br />இரண்டு பெரிய நகரங்களினிடையில்<br />ஒரு வீதியில் தமது வீடுகளை<br />தேடுகிற சனங்கள் அலைகின்றனர்.<br />--------------------------------------------------------------------------------<br /><span style="font-size:85%;">21.12.2008.முல்லைத்தீவு.இராணுவநடவடிக்கை.பலமுனைகள்</span> </div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-7932485074598088102?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com1tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-77341786210642294432008-12-29T01:17:00.000-08:002008-12-29T22:40:32.515-08:00மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்<a href="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/SViWrnKNFQI/AAAAAAAABUA/7YE9Z7h9gRw/s1600-h/13511777.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5285139838709601538" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 260px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_v_RS-3lzur0/SViWrnKNFQI/AAAAAAAABUA/7YE9Z7h9gRw/s400/13511777.jpg" border="0" /></a>-----------------------------------------------------------------------------<span style="font-size:130%;color:#ff9966;"><strong>கவிதை:தீபச்செல்வன்<br /></strong></span>____________________________________<br /><br />மலைப்பாம்பு அரிசி மூட்டைகளுடன்<br />வருகிறது.<br /><br />தனது வருகைக்கு முன்பாகவே<br />கொளுத்த மலைப்பாம்பு<br />நமது வாக்கு மூலங்களை<br />அவசரமாகவே தின்று விடுகிறது.<br /><br />பாம்புகள் உட்புகுந்தலைகிற<br />நகரங்களில்<br />அவைகள் எழுப்புகிற புற்றுகளில்<br />முட்டைகளைப்போல<br />வாக்கு மூலங்கள்<br />விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.<br /><br />மலைப்பாம்பு ஒன்றினது<br />வருகையை முன்னிட்டு<br />திருத்தப்படுகிற வீதியில்<br />வரவேற்பதற்காய்<br />குழந்தைகள் வரவழைக்கப்படுகிறார்கள்.<br /><br />பிணைந்து கிடக்கிற இரண்டு<br />கைகளிற்குள்<br />பெருமெடுப்பில் அடிக்கிற<br />ஆயுத வெக்கையில்<br />முகங்கள் அவிகின்றன.<br /><br />கொடிகள் நாட்டப்பட்ட<br />கதிரைகளின் முன்பாக<br />எனது நகரை<br />பெரும் புற்றாக்க அலைகிற<br />பெரும் பாம்பின் கனவுடன்<br />மலைப்பாம்பு பால் குடிக்கிறது.<br /><br />ஒடுங்கிய பிரதேசத்தில்<br />அலைச்சல் மிகுந்த இரவில்<br />வாக்குமூலங்கள் மட்டும் மிஞ்சியிருக்கின்றன.<br /><br />எல்லாவற்றையும் தின்ற பாம்பு<br />வானத்தையும்<br />சமுத்திரத்தையும்<br />தின்றபடி<br />வருகையை திட்டமிடுகிறது.<br /><br />கோழிக்குஞ்சுகள்<br />கூடைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றன.<br /><br />முட்டைகள் தின்று<br />அலைந்து கொண்டிருக்கிற பாம்புகளிடமிருந்து<br />கோழிக்குஞ்சுகளை<br />காப்பாற்றுகிற மலைப்பாம்பு<br />இன்னும் சில நாட்களில் வருகிறது.<br /><br />முட்டைகளில் ஒளிந்திருக்கிற<br />குழந்தைகள்<br />வாக்குமூலங்களுடன்<br />வரவேற்க காத்திருக்கிறார்கள்.<br />--------------------------------------------------------------------------------<br /><span style="font-size:85%;">26.12.2008.பிரணாப்முகர்ஜியின் கொழும்பு வருகையை முன்வைத்து</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-7734178621064229443?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com0tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-64750475195816286522008-12-26T20:37:00.000-08:002008-12-29T22:38:06.123-08:00மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்<a href="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SVW1fqIRZ_I/AAAAAAAABTY/stQIi2sB-AI/s1600-h/madu.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5284329293278701554" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 297px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_v_RS-3lzur0/SVW1fqIRZ_I/AAAAAAAABTY/stQIi2sB-AI/s400/madu.JPG" border="0" /></a>-----------------------------------------------------------------------------<span style="color:#ffff00;"><span style="font-size:130%;"><strong>கவிதை:தீபச்செல்வன்</strong></span><br /></span><div>____________________________________</div><br /><div><br />சிலவேளை மாடுகள்<br />பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.<br />மேய்ச்சல் தரைகளில்<br />குண்டுகள் காத்திருந்தன.<br />மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள்.<br /><br />மிஞ்சியிருக்கும் இரண்டு<br />மாடுகளின்<br />சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன.<br />மாதாவின் தலை<br />அவளது கைகளுக்கு<br />எட்டாமல் விழுந்திருக்கிறது.<br /><br />மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்.<br /><br />தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில்<br />வாழுகிற மாடுகளாயிருந்தன.<br />தடைசெய்யப்பட்ட<br />குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன.<br />ஒரு குழந்தை<br />வாய்க்காலில் மறைந்து<br />தப்பியிருக்க<br />மாட்டுக்கன்றுகள்<br />பால் காயு முன்பாகவே<br />இறந்து கிடக்கின்றன.<br /><br />கொம்பு முளைத்த மாடுகளிடம்<br />எந்தத்துவக்குகளும் இல்லை.<br />இராணுவ உடைகளையும்<br />அணிந்திருக்கவில்லை.<br />வெடித்துச் சிதறிய குண்டு<br />மாடுகளை அள்ளி எடுத்த<br />பட்டியில்<br />துணைக்கு ஒரு நாய் மட்டும் நிற்கிறது.<br /><br />சிதறிய சதைகளை<br />தின்ன முடியாதிருக்கும் மீறிய பலிகளில்<br />நாய் ஊழையிடுகிறது.<br />பாலுக்கு அழுகிற குழந்தை<br />தலை துண்டிக்கப்பட்டிருக்கிற<br />மாதாவை தேடுகிறது<br />இறந்த பசுவை<br />தேடுகிற கன்றினைபோல.<br /><br />காயப்பட்ட உடல் பகுதியிலிருந்தும்<br />பட்டியிலிருந்தும்<br />மேய்ச்சலுக்காய் திரிந்த<br />தரைகளிலிருந்தும்<br />குருதிதான் பெருக்கெடுக்கிறது.<br /><br />மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்?<br /><br />பசுக்கள் குழந்தைகளுக்கு<br />பாலினை கொடுத்தது<br />பெருந்தவறு என்கிறது பராசூட் கொத்தணிக்குண்டு.<br />வாய்களை மீறி<br />மாடுகளிடம் அழுகை வருகிறது.<br /><br />அவைகள் எதையும் பேசப்போவதில்லை?<br />குண்டுகளோடும்<br />கட்டளையிடுகிற இராணுவத் தளபதிகளோடும்<br />அதிகாரத்தோடும்?<br /><br />மாதாவிடமும் எந்த<br />திருச்சொற்களும் இல்லை.<br /><br />மாதாவும் மாடுகளும்<br />வாய்பேசாத பிராணிகளாகவே இருக்க<br />மேய்ச்சல் தரைகளில்<br />மேலும் பல குண்டுகள் காத்திருந்தன.<br />---------------------------------------------------------------------------<br /><span style="font-size:85%;">24.12.2008.குஞ்சுப்பரந்தன்,மதாகோவில்,85மாடுகள்.</span> </div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-6475047519581628652?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com0tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-3222254012591396332008-12-21T23:30:00.000-08:002008-12-24T20:33:39.551-08:00நீர் அறிந்திருக்காத சிலுவைகள்<a href="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/SU9KnqXY3vI/AAAAAAAABTQ/LmFPUbcl8Vg/s1600-h/kilanthai.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5282522933176622834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 317px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_v_RS-3lzur0/SU9KnqXY3vI/AAAAAAAABTQ/LmFPUbcl8Vg/s400/kilanthai.JPG" border="0" /></a>-----------------------------------------------------------------------------<strong><span style="font-size:130%;color:#ff0000;">கவிதை:தீபச்செல்வன்</span></strong><br />____________________________________<br />வாழ்வுக்கு தவிக்கிற குழந்தைகள்<br />மறைந்திருக்கிற தரையில்<br />சிலுவைகள் புதைக்கப்பட்டிருக்க<br />யேசுவே நீர் இங்கு பிறக்க வேண்டாம்.<br /><br />உமக்கான மாட்டுத்தொழுவங்கள்<br />எம்மிடம் இல்லை.<br />வைக்கோல் பட்டறைகளும் இல்லை;.<br /><br />நீர் அறிந்திருக்காத சிலுவைகளை<br />நாம் சுமக்கிறோம்.<br /><br />மழைக்காலத்தில் ஏணைகள்<br />இல்லாமல் தடிகளில் உறங்குகிற<br />குழந்தைகளை<br />வெட்டிப்போட கத்திகளுடன் திரிகின்றன<br />ஏரோது மன்னின் படைகள்.<br /><br />குதிரைகள் அலருகிற இரவில்<br />குழந்தைகளை நாம் கட்டுக்குள்<br />கொண்டு வைத்திருக்கிறோம்.<br /><br />படுக்கைகளில் குருதி வழிந்தோடுகிறது<br />தூக்கத்தில் பறி எடுத்த<br />குழந்தையை விமானம் தின்று<br />வீசிவிட்டுப் போகிறது.<br /><br />நீர் மீண்டும் ஒரு சிலுவையை<br />இங்கு விட்டுச் செல்ல வேண்டாம்.<br /><br />உம்மால் தாங்கிக் கொள்ள முடியாத<br />வலிகளான தொழுவங்களில்<br />போரிடம் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன<br />நமது தேசத்தின் குழந்தைகள்.<br /><br />நீர் இந்த தேசத்தில்<br />இப்போது பிறக்க வேண்டாம்.<br /><br />கத்திகள் அலைகிற காடுகளில்<br />நம்முடன் எங்கு வரப் போகிறீர்?<br />வெட்டுப்பட்ட சொற்களுடன்<br />நாம் ஒரு பாடலை தேடுகிற போரில்<br />நீர் சுமந்திராத<br />சிலுவைகளை சுமக்கிறோம்.<br /><br />ஏராது மன்னன் பெரும் பசியுடன் வாளுக்கு<br />இரை தேடுகிற நாட்களில்<br />இங்கு எண்ணிக்கையற்ற மரியாள்கள்<br />தமது குழந்தைகளை கொண்டு ஒளிகின்றனர்.<br />--------------------------------------------------------------<br />20.12.2008.வன்னி.குழந்தைகள்.யேசுபிறப்பு.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3234349219873001733-322225401259139633?l=deebam.blogspot.com'/></div>தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303deebachelvan@gmail.com2