tag:blogger.com,1999:blog-308805442009-07-09T17:49:45.332-07:00ஒருபக்கம்காலம் விட்டுச் சென்ற தடங்களும் அதன் தொடர்ச்சியாக சில பதிவுகளும்...Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-30880544.post-79968926780102758212009-07-07T21:58:00.000-07:002009-07-09T16:02:07.905-07:00உஷ்! சைலன்ஸ்!’Silence' என்ற பலகையை பெரும்பாலும் நூலகத்திலும், ஆஸ்பத்திரிகளிலும்தான் பார்க்க முடியும். சிறு வயதிலிருந்தே நூல்களோடு பரிச்சயம் அதிகம் இருந்தாலும், நூலகங்களோடு அதிகப் பரிச்சயம் இல்லை. காரணம் எனது மாமா வீட்டிலேயே பீரோ பீரோவாக பைண்ட் புத்தகங்களாக பெரிய நூலகமே வைத்திருந்தார். எல்லா வார / மாத இதழ்களும் வீட்டிலேயே கிடைத்ததனால் நூலகம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதேயில்லை. ஆனாலும் நூலகங்கள் மேல் ஓர் ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. முக்கியமாக அங்கே அமலிலிருக்கும் கட்டாய அமைதி அலாதியானது.<br /><br /><span class="fullpost">சிறு வயதில் நான் படித்தது ஒரு தனியார் மிஷனெரி பள்ளியில். அங்கே நல்ல அருமையான நூலகமும் உண்டு. ஆனால் லைப்ரரியனாக இருந்த லில்லி மிஸ் ரொம்பவே கெடுபிடியானவர். சக ஆசிரியைகளோடு சிரித்து பேசுபவர் எங்களைப் போல மாணவர்களை கண்டாலே சட்டென ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடுவார். அந்த நூலகத்தில் அருமையான ஆங்கில காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் இருக்கும். ஆனால் அந்த காமிக்ஸில் வரும் வேதாளரைப் பற்றியோ, அவரது வீரதீர பிரதாபங்களைப் பற்றியோ நண்பர்களோடு அளவளாவ முடியாது. ஏதாவது பேசினால் புத்தகத்தைப் பிடுங்கி வைத்துக் கொண்டு லைப்ரரி விட்டு வெளியேற்றி விடுவார். ஆசிரியைகளின் குழந்தைகளுக்கு விதிவிலக்கு உண்டு. <br /><br />மதுரை மத்திய நூலகம் நல்லப் பெரியதாக இருக்கும். அண்ணன் இரண்டு லைப்ரரி கார்டுகள் வைத்து பந்தாவாக போய் புத்தகம் எல்லாம் எடுத்து வருவான். பெரும்பாலும் வீட்டிலேயே இருந்துதான் படித்திருக்கிறேன். ஓரிரு சமயம் நானும் ஒட்டிக் கொண்டு போய்வருவேன். அங்கே முன் ஹாலில் நாளிதழ்கள் எல்லாம் வைத்துப் படித்துக் கொண்டு இருப்பார்கள். அதுதான் வீட்டிலேயே வந்து பேப்பர் போடுகிறார்களே அப்புறம் எதற்கு லைப்ரரி வந்து படிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும் :). வரவேற்பறையில் ஒரு விஸிட்டர் புக் வைத்து அதில் பெயரெழுதி கமெண்ட் எல்லாம் எழுதச் சொல்வார்கள். ஒருமுறை கூட நிஜப் பெயரை எழுதியதில்லை. அது ஒரு விளையாட்டுப் போல மனதுக்கு தோன்றிய பெயர்களை கிறுக்கி வைப்பது வழக்கம். லெனின் ஆவி என்றெல்லாம் எழுதியிருப்பார்கள் சிலர். நீளமாக மேஜைப் போட்டு நிறைய பேர் சேர்களில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள். ஏதோ ஒரு குரும்பூர் குப்புசாமி கதையை அந்த அமைதியான சூழலில் உட்கார்ந்து படிக்கிறேன் என்று ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் தூக்கம்தான் வந்தது.<br /><br />காமராசர் பல்கலைகழகத்தில் அருமையான நூலகம் ஒன்று இருக்கிறது. மிட்டாய்கடையைப் பார்த்த குழந்தையைப் போல வாயைப் பிளந்து கொண்டு பார்த்திருந்திருக்கிறேன். ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிகையின் நடுப்பக்கத்தில் நேர்த்தியாக அச்சிட்டிருக்கும் விளையாட்டு வீரர்களின் படங்களை எல்லாம் வெளிச்சுவரில் ஒட்டியிருப்பார்கள். லைப்ரரி உள்ளே இருக்கும் எல்லா பிரதிகளிலும் உத்த்ரவாதமாக நடுப்பக்கப் படங்கள் இருக்காது. அதுதவிர ரெஃப்ரென்ஸ் பகுதியில் என்று தடிதடியாக புத்தகங்கள் வைத்திருப்பார்கள். இருப்பதிலேயே பெரிய புத்தகத்தை வைத்து ஏதோ முக்கியமான குறிப்புகள் எடுப்பது போல ஸீன் எல்லாம் போட்டுப் பார்த்தும் எந்தப் பெண்ணும் வந்து பேனா கூடக் கடன் கேட்கவில்லை. <br /><br />பள்ளி விடுமுறைகளில் மாமா வீட்டிலிருந்து மூட்டை மூட்டையாக புத்தகங்களை கட்டி எடுத்துக் கொண்டு போய் நாள் முழுவதும் விடாமல் படிப்பது ஒரு ‘விடாப்’ பழக்கம். அதுவும் சாண்டில்யனின் ஜலதீபத்தைப் படித்தால், தொடந்து ராஜதிலகம், ராஜமுத்திரை, கடல்புறா, யவனராணி, விஜயமகாதேவி என்று வரிசையாகப் படிக்க வேண்டும் என்ற பழக்கம். அதிலும் யவனராணி மொத்த அத்தியாயங்களும் ஒரே புத்தகமாக பைண்ட் செய்யப்பட்டதால் அதை ஜாக்கிரதையாக கையாண்டு படிக்க வேண்டியிருக்கும். அடுத்து சுஜாதாவின் மூன்று நிமிஷம் கணேஷ், பாதி ராஜ்யம், நைலான் கயிறு, ஏறக்குறைய சொர்க்கம்... தொடர்ந்து பாலகுமாரனின் தாயுமானவன், கரையோர முதலைகள், கண்மணித் தாமரை, கல்கியின் பொன்னியின் செல்வன், தேவனின் சாம்பு (கோபுலுவின் படங்களுடன்) இன்னபிற... இப்படி கோடை விடுமுறை முழுவதும் புத்தகங்கள் புத்தகங்கள்தான். <br /><br />தாத்தா வீட்டில் அவ்வளவு பெரிய கூடத்திற்கு ஒரே ஒரு நாற்பது வாட்ஸ் பல்ப்தான் எரியவிடுவார். ட்யூப்லைட் போட்டால் மின்சாரக் கட்டணம் அதி்கமாகி விடும் என்பதனால் அவ்வளவு சிக்கனமாம். அந்த தம்மாத்தூண்டு வெளிச்சதில் பைண்ட் செய்யப்பட்ட பழைய புத்தகங்களின் மக்கிப் போன தாளில் உற்று உற்றுப் படித்தும் இன்னமும் கண்ணாடி அணிய தேவையில்லாமல் இருப்பது ஒரு ஆச்சர்யம்தான். தாத்தா மட்டும் தண்டி தண்டியாக இருக்கும் ஆங்கில ராமாயணப் புத்தகத்தை படிக்க பெரிய ட்யூப் லைட் போட்டுக் கொள்வார். <br /><br />அழையா விருந்தாளியாக ரூபவாஹினியும், தூர்தர்ஷனும், சன் டீவியும் வந்து வீட்டுக் கூடத்தை ஆக்கிரமிக்கும் வரை வீடே நூலகம் போல்தானிருக்கும். மளிகைக் கடை பொட்டல காகிதங்களில் உள்ள துணுக்குகளைக் கூட விடாமல் படித்துக் கொண்டிருப்போம். பின்னர் திடீரென்று ஆங்கில நாவல்கள் பக்கம் ஆர்வம் எழுந்தது. ஜெஃப்ரி ஆர்ச்சரின் கேன் & அபெல்-ல் ஆரம்பித்து ஜான் க்ரிஷெம், ஜேகே ரௌலிங், ஸிட்னி ஷெல்டன், மைக்கேல் க்ரைடன் என்று பல நாவல்கள் சோறு தண்ணியை மறக்கடித்தன. நடுவே கொஞ்சம் மில்ஸ் & பூன் வகையறாக்கள் படித்து இன்புற்றிருந்தது தனிக் கதை. அதே போல் பள்ளியில் எந்தப் பரிசு வாங்கினாலும் அது பெரும்பாலும் புத்தகங்களாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படி அண்ணனுக்கு கிடைத்த ஒரு புத்தகம் எல் சேஷாத்ரியின் ‘தி ட்ராஜிக் ஸ்டோரி ஆஃப் பார்டிஷன்’. வரலாற்றில் இருந்த ஆர்வத்தினால் மிகவும் சுவையாகவே இருந்தது. தினமணிக் கதிரிலி ரகமியும் சில அரிய தொடர்களை கொடுத்துக் கொண்டிருந்தார் அப்பொழுது.<br /><br />பிறகு வேலைத் தேடும் படலத்தில் கொஞ்சம் புத்தகங்களை மறந்திருந்தது உண்மைதான். அவ்வப்போது லாட்டரி டிக்கட்டில் பரிசு விழுவது போல் சில அறை நண்பர்கள் அருமையான புத்தகங்களை விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் தேர்ட் ரீய்ச், ஷெர்லக் ஹோம்ஸ், பெட்ரண்ட் ரஸ்ஸல், இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு, ஆர்கே லக்ஷ்மண், குஷ்வந்த் சிங், தி ஜாவின் சிறுகதைகள் இப்படி சில. முதல்முறையாக பெங்களூரிலிருந்து மதுரைக்கு திரும்பும்போது பை நிறைய புத்தகங்கள்தான் இருந்தன. வீடு வீடாக மாற நேர்ந்ததில் பல புத்தகங்களை பாதுகாக்க முடியாமல் போன வருத்தத்தில் புத்தகம் வாங்குவதில் நிறைய சுணக்கம் ஏற்பட்டது. தவிரவும் இணையத்தில் நிறைய புத்தகங்கள் கிடைக்க ஆரம்பித்த காலம் அது. திண்ணை போன்ற இணையப் பத்திரிகைகள் சுவாரசியமான பல தொடர்களையும் அளித்ததினால் காகித புத்தகங்களை அவ்வளவாக தேடியதில்லை.<br /><br />அமெரிக்கா வந்த பொழுது மிக சொற்பமான புத்தகங்களைத்தான் கொண்டு வந்தேன். பார்ன்ஸ் & நோபிள்ஸ் போய் ஒரு காபியை வாங்கி உறிஞ்சிக்கொண்டே கைக்கு கிடைத்த புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்துவிட்டு பேசாமல் வீட்டுக்கு வருவதும் சௌகரியமாகத்தான் இருந்தது. சமீபத்தில் சாண்டா கிளாரா நூலகம் போனபோதுதான் அவதானித்தேன். புறச் சூழல் அமைதியாக இருந்தாலும் பலரும் தங்களது ஐபாட், லாப்டாப் சகிதமாக வந்து தங்கள் இஷ்டத்துக்கு வேண்டிய சத்தங்களை ஹெட்போன் அணிந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். சத்தமில்லாமல் பேசுவதற்கு வசதியாக மெசஞ்சர்கள் வேறு. ஆகா... இதுவல்லவா பூலோக சொர்க்கம். <br /><br />தேடி அலசி சுஜாதாவின் மத்யமர் தொகுதியும், உள்ளம் துறந்தவன் என்ற இணைய நாவலும் கூடவே அசோகமித்திரனின் 18வது அட்சக் கோடு-ம் எடுத்து வந்தேன். அசோகமித்திரன் இன்னமும் படிக்கவில்லை. மத்யமர் கதைகளை கல்கியில் தொடராக வந்தபோது படித்திருக்கிறேன். தொகுப்பாக வெளியிட்டவர்கள் கூடவே வாசகர் கடிதங்களையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். இது ஒருவகையில் பின்னூட்டங்களோடு கூடிய பதிவுகளைப் படிப்பது போல இருந்தது. சுஜாதா நேரடியாக பதிலளிக்கவில்லை என்றாலும் கதைகள் வழியாக அவ்வப்போது பதிலளித்துக் கொண்டிருந்தார் என்று புரிந்து கொள்ள முடிந்தது. உதாரணமாக ஒரு கதையில் தனது பெண் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படும் தாய் ஒரு திரைப்பட இயக்குநரிடம் தன்னை இழக்கிறாள். உடன் வந்த கடிதங்கள் பலவற்றிலும் மத்தியதரக் குடும்பங்களின் மானம் காத்தலைப் பற்றி அதீத வியாக்கியானங்கள். ஏதடா வம்பு என்பது போல அடுத்து வந்த கதைகளில் பொலிடிக்கலி சரியாக எழுதி விடுகிறார். இந்த தொகுப்பிலிருந்ததைவிட சிறப்பான கதைகளை அவர் எழுத்தில் ஏற்கெனவே படித்திருக்கிறேன். தமிழில் சிறுகதை வடிவத்தை சிரத்தையாக அமைத்ததில் சுஜாதாவிற்கு முக்கிய பங்கு உண்டு. ‘மத்யமர்’ என்ற அந்த தலைப்பை எண்ணியே பலமுறை வியந்திருக்கிறேன். <br /><br />‘உள்ளம் துறந்தவன்’ அம்பல இணைய தளத்தில் தொடராக வெளிவந்ததாம். நான் படித்ததில்லை. அம்பலம் கட்டணதளமாக இருந்ததும் ஒரு காரணம். அதே காலத்தில் திண்ணை, காலச்சுவடு, ஆனந்தவிகடன், ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இண்டியா எல்லாம் இலவசமாகவே இணையத்தில் இருந்ததினால் கட்டண தளத்திற்கு போகவேண்டிய அவசியம் எழவில்லை. <br /><br />சுஜாதா பெரும்பாலும் தொடர்கதைகளை அதிகம் மெனக்கெடாமல் அநாயாசமாகவே எழுதிச் சென்றிருக்கிறார். இந்தத் தொடரில் ஒரு மர்ம முடிச்சை வைத்துக் கொண்டு மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை பின்புலமாக வைத்துக் கொண்டு காதல், துரோகம், ஏழ்மை, பங்கு வர்த்தகம் போன்றவற்றைப் பின்னி கதை செய்திருக்கிறார். இதயமாற்று சிகிச்சையைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை ஆங்காங்கே தூவி வைத்திருக்கிறார். புத்தகவடிவில் கூட சிற்சில தகவல் பிழைகள் காணப்பட்டன. ஓரிடத்தில் நாகரத்தினம் நாகலிங்கமாக இருக்க, மினர்வா ஆஸ்பத்திரி ஆரமத்தில் நெப்ட்யூனாக வருகிறது. வீராணம் குழாயில் வசிப்பவர்கள் டிவி எல்லாமா வைத்திருப்பார்கள்? அத்தியாயங்களின் முடிவில் வலிந்து புகுத்திய கொக்கிகளோடு உணர்ச்சி குவியலாக பாத்திரங்கள் வருகின்றன. சட் சட்டென மாறும் நிகழ்ச்சிகள் சில சமயம் டிவி மெகா தொடர்கள் போல் இந்தக் கதையும் பாதியில் வேறு பாதைக்கு திரும்பி விடுகிறது. திட்டமிட்டு செய்தாரா இல்லை என்று சொல்ல முடியவில்லை. சுஜாதாவின் நைலான் கயிறு மீண்டும் படித்து மனதை ஆற்றிக் கொள்ள வேண்டும். </span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-7996892678010275821?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-30880544.post-62403285950060252312009-06-17T23:20:00.000-07:002009-06-21T16:55:58.459-07:00காதோரமாய்சாம்பல் நிறத்தில் புஷ்டியாக இருந்த முயலை இரு கைகளிலும் பொத்திக் கொண்டு புருபுருவென மூக்கால் தேய்த்தபடி ஆங்கிலத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தான் சந்துரு. <br /><br />”ஷங்கி... உனக்குத் தெரியுமா... நீ செத்துப் போய்விட்டாய். நாலு மாசம் முன்னாடியே செத்துப் போய்விட்டாய். அது தெரியாம சுத்திட்டு இருக்கியா?” <br /><br /><span class="fullpost">உம்பர்டோ, மைக்கேல் ஜாக்சன், சர்ரியலிசம் என்று கலந்தடித்துக் கதைத்துக் கொண்டிருந்த வைத்தி திடீரென கையில் இருந்த பாட்டிலில் வோட்கா தீர்ந்துவிட்டதை உணர்ந்தான். ”இன்னும் கொஞ்சம் சரக்கு தேத்திக்கிடலாம் இவனே. இதை இப்படியே விட்டுடக் கூடாது. சூடோ மாரல்ஸ் பத்தி நெறயப் பேசனும்”<br /><br />”ரூமில ஒரு ஷிவாஸ் ரீகல் இருக்கு. பாத்து எடுத்திட்டு வா. நான் இங்கேயே இருக்கேன்” பின்னிரவில் புல்வெளியில் படுத்துக் கொண்டு ஏகாந்தமாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவத்தை கலைக்க விரும்பாமல் சொன்னேன். நல்ல குளிர் எடுக்க ஆரம்பித்திருந்தது.<br /><br />”பாத்து தம்பி! மொசலைப் போட்டு கசக்கிறாதீங்க. காதைப் பிடிச்சு தூக்குங்க”<br /><br />ஒரு பொட்டலம் போல் கம்பிளியைப் போர்த்திக் கொண்டு சுள்ளிகள் வைத்து நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தார் அந்தக் கிழவர். ஓட்டல் வாட்ச்மேனா என்று தெரியவில்லை. <br /><br />“யாரும் வளக்கிறாங்களா என்ன?”<br /><br />“ஆமாப்பா. தோ.. அந்த வெள்ளக்கார சாமி ஆசிரமம் இருக்குல்ல. அங்கதான் அந்தப் பொண்ணு நெறய வளக்குது. வாத்து கூட நெறய இருக்கும். காசுக்கு எல்லாம் விக்க மாட்டாங்க” அவர் கை காட்டிய திசையில் பச்சை நிறப் புல்வெளி சரிவுதான் தெரிந்தது. மறுபக்கம் எதுவும் இருக்கலாம். <br /><br />முயலை ஓட விட்டு ஓட விட்டுப் பிடித்துக் கொண்டிருந்த சந்துரு திகைத்து போல் நின்றுவிட்டான். <br /><br />”யார் ஜென்னி? ஜென்னியென்றா சொன்னார்?” சந்துருவிற்கு தமிழ் தெரியாது.<br /><br />“ஜென்னியா? சரியாக் கேக்கல. ஏதோ பொண்ணு வளக்கிற முயல்லாம்பா. கீழே விட்று” கையிலிருந்து பிடுங்கி கீழே விட்டேன். அந்த முயல் சரிவை நோக்கிக் குதித்துக் கொண்டே ஓடிவிட்டது.<br /><br />அந்தக் கம்பளிக் கிழவர் சந்துரு தலையை பிடித்து உலுக்கிக் கொண்டே “ஜென்னியா? ஜென்னி...” என்று மீண்டும் மீண்டும் கேட்பதைப் பார்த்துவிட்டு<br /><br />”தம்பி ரெம்ப சாப்டுருச்சுப் போல. இந்த முசல்லாம் ஆசிரமத்துது தம்பி. அந்தப் பொண்ணு பாசமா வளக்குது”<br /><br />இப்பொழுதுதான் இரண்டு மாதமாகியிருக்கிறது சந்துரு பெங்களூரிலிருந்து சென்னை வந்து. வாக்கியத்துக்கு ஐந்தாறு ஆங்கிலக் கெட்ட வார்த்தையோடு பேசும் ஹை-ஃபை ஆங்கிலம்தான் அவனுடைய மொழி. <br /><br />”ஜென்னி உயிரோடு இருக்கிறாளா?”<br /><br />இரவு வானத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்களில் உர்சா மேஜரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த போது சந்துருவின் திடீர் மௌனம் உறுத்தவே ”என்னடா ஆச்சு? யார் ஜென்னி?” என்று கேட்டேன்.<br /><br />”நீ கேட்கவில்லையா?” கிழவரைக் காட்டிச் சொன்னான். “அவள் உயிரோடுதான் இருக்கிறாள் ஜெய். அவள்தான் நான். நாந்தான் அவள். நான்கு மாதங்களுக்கு முன்னர் எல்லாரையும் சாகடித்துவிட்டார்கள். ஜென்னி, ஷங்கி எல்லாரையும்... எனக்கு இன்னமும் அவள் வாசனை ஞாபகமிருக்கிறது. ஆம்! அவள் இறக்கவில்லை. இதோ என் ஷங்கி இங்கு உயிரோடு இருக்கிறது. ஜென்னியும் உயிரோடுதான் இருக்கிறாள்” <br /><br />அவனது பேச்சிலும் செயலிலுமே ஏதோ பெரிய வித்தியாசம் தெரிந்தது. சாதாரணமாக அவனது செயல்களில் எப்பொழுதும் ஒரு அதீத சுயக் கட்டுப்பாடு இருக்கும். இப்பொழுது வோட்கா அதிமாகிவிட்டதனாலோ என்னவோ அவன் சுதந்திரமாக உற்சாகமாக நின்று கொண்டு பேசினான். அவன் கண்களில் பிரகாசமான ஒளி தெரிந்தது போலிருந்தது. <br /><br />சரிதான். பையனுக்கு சரக்கு இன்றைக்கு அதிகமாகி விட்டது.<br /><br />”ஜெய்... நீ ஜென்னியைப் பார்த்திருக்கிறாயா? இல்லையா? அவள் எவ்வளவு அழகு தெரியுமா? நீ ஒருமுறை அவளைப் பார்த்தால் மயங்கிவிடுவாய் ஜெய்”<br /><br />”டேய்.. படுத்தாதே. எங்கேயோ நான்கு மாதங்களுக்கு முன்னால் பெங்களூரில் செத்துப் போன உனது ஜென்னியும் முயலும் இந்த அர்த்தராத்திரியில் கொடைக்கானல் தமிழ்நாடு ஓட்டல் புல்வெளியில் உயிரோடு வரப்போகிறார்களா என்ன. பேசாமல் இரு. கொஞ்சுகிறேன் என்று முயலை கொடுமைப் படுத்தாதே. செத்துவிடப் போகிறது”<br /><br />அலுவலக சகாக்கள் எல்லாரும் ஆளுக்கு கொஞ்சம் காசுபோட்டு வருடா வருடம் சுற்றுலா செல்வது வழக்கம். இம்முறை கொடைக்கானலில் மூன்று நாட்கள். நல்ல குளிருக்கு சூடா சரக்கேற்றிக் கொண்டு வழக்கம் போல் வைத்தியோடு விவாதித்துக் கொண்டிருந்தால் ஜென்னி, கென்னி என்று... சட்... இந்த வைத்தி வேற சரக்கு தேத்திக் கொண்டு வருகிறேன் என்று போனவன் ஆளையே காணோம்.<br /><br />எங்கள் நிறுவனத்தின் அட்மின் சத்யாவின் உறவினனாகத்தான் சந்திரசேகர் என்னும் சந்துரு அறிமுகமானான். தாய்மொழி தெலுங்கு ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பெங்களூரு. ஏனோ பெங்களூருவில் பொருந்தாமல் வேலை பார்க்க சென்னைக்கு வந்துவிட்டான். அவன் வீட்டில் ஏதோ பிரச்சினை என்றளவில் புரிகிறது. சத்யாவிற்கு அவன் மேல் ஏதோ வெறுப்பு இருந்தது நன்றாகவே தெரிந்தது. ”வசதிப்பட்டா உன் டீம்ல வச்சுக்க ஜெய்காந்த். பையன் மேல எனக்கு பெருசா நம்பிக்கை கிடையாது. அத்தைக்காகத்தான் பாக்குறேன். அப்புறம் என்னத் திட்டாத”.<br /><br />சந்துரு ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவனாக, நவீன நகரவாசி நறுவிசாக, நாசூக்காய் இருப்பான். புருவம் எல்லாம் செதுக்கிக் கொண்டு, தோற்றத்திலும், உடல் மொழியிலும் அதீத கவனம் கொண்டிருப்பான். எப்பொழுதும் அவனிடம் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்தது. முக்கியமாக அவன் குரலும் பேசும் முறையும். எங்கள் நிறுவனம் சிறிய, மத்திய தர, அதிகம் லாபம் ஈட்டாத, மென்பொருள் சேவை நிறுவனம். சொன்ன வேலையை முடித்துக் கொடுப்பதில் சந்துரு சூரன். கூட்டத்தில் அதிகம் கலக்க மாட்டான். ஆனால் எப்படியோ இரண்டு மாதங்களில் எங்கள் கூட்டத்தோடு ஒட்டிவிட்டான். வெள்ளிகிழமை இரவு மொட்டைமாடி கொண்டாட்டங்களில் ஐக்கியமாகி, வைத்தியும் நானும் விவாதிக்கும் விஷயங்கள் புரியாவிட்டாலும் உன்னிப்பாக கவனித்து வருகிறான். எப்பொழுதும் எதையோ தொலைத்து போல ஒரு சோகத்தைக் காட்டிக் கொண்டிருப்பான்.<br /><br />வைத்தி காக்டெயில் கலையில் கில்லாடி. சைனா டீயில் ரம்மை கலந்து சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? சிகரெட் பற்றவைக்க நெருப்புப் பெட்டி கேட்கலாம் என்று தேடினால் சந்துரு அவன்பாட்டுக்கு நடந்துப் போய்க் கொண்டிருந்தான். புல்வெளியைத் தாண்டி ஓட்டல் கேட்டை நோக்கி... வெளியிலா போகப் போகிறான்? அந்தக் கிழவன் ஏதோ ஆசிரமம் என்று கையைக்காட்டி சொன்ன திசை நோக்கி நடந்து போய்க்கொண்டிருக்கிறான் என்று நினைத்தேன். இதுதான் சின்னப் பசங்களோடு பானம் சாப்பிடும்போது பிரச்சினை. தேவையில்லாமல் உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறார்கள். அவன் நடையே வேறுவிதமாக இருந்தது. ஒருவழியாக அவனை மடக்கிப் பிடித்து ரூமிற்க்கு கூட்டி வந்தேன். பற்ற வைக்காத சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே வைத்தி கவுந்தடித்துப் படுத்து மட்டையாகியிருக்க, முரளி எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.<br /><br />”என்ன மச்சி! தூங்கலையா இன்னமும்”<br /><br />”டேய்... மணியப் பாருடா ஆறாகப் போகுது. விடிய விடிய குடிச்சிபிட்டு வந்து என்னைத் தூங்கலையான்னு கேக்கற... 7:30 மணிக்கு பிரேக்ஃபாஸ்ட் ரெடியாயிடுமாம். கெய்ஸர் போட்டிருக்கேன். ஒத்தொருத்தரா குளிச்சு கிளம்ப வேணாமா?”<br /><br />விடுமுறை நாளில் கூட குளிக்க வேண்டும் என்று சொன்னதற்காகவே தனியாக இரண்டு பெக் அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஒருக்களித்து படுத்துக் கொண்டிருந்த சந்துரு முணுமுணுப்பாக ”ஜென்னி... ஜென்னி” என்று முனகிக் கொண்டு கைகளை தொடைக்கிடையில் செருகிக் கொண்டு சுருண்டு படுத்திருந்தான்.<br /><br />”சின்னப் பையன ஏண்டா கெடுக்கறீங்க... ஓவராயிடுச்சுப் போல. பாரு புலம்பிட்டே இருக்கான்” என்றான் முரளி. யாரந்த ஜென்னி? இறந்துவிட்டாள் என்கிறான். பின்னர் இல்லை என்கிறான். ஏதாவது பழைய காதலின் மிச்ச சொச்சமாக இருக்கலாம்.<br /><br />கொடைரோடு வரை ட்ரெய்னில வந்துவிட்டு அங்கிருந்து வோல்வோ பஸ் வைத்துக் கொண்டு கொடைக்கானல் வந்திருந்தோம். ஒம்போது மணிக்கு கும்பலாக எல்லாரும் பஸ் முன்னே சேர்ந்துவிட பேரிஜம் போய் சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டம் போட்டார்கள். எண்ணிப் பார்த்தால் சந்துரு மிஸ்ஸிங். சத்யா என்னிடம் ”நைட் செம டைட்டா ஜெய்? அவன ரொம்ப குடிக்க விடாத. அவன் ஒரு மாதிரி. இப்பத்தான் ரெகவர் ஆயிட்டு வர்றான். சரி அவன்பாட்டுக்கு தூங்கிட்டு இருக்கட்டும்... நாம ஈவ்னிங் வந்து பாத்துக்கலாம்” என்றான்.<br /><br />நான் காலைச் சாப்பாட்டுக்கு சந்துருவை எழுப்ப முயற்சி செய்த போது மப்பு இன்னமும் தெளியவில்லை என்று தெரிந்திருந்தது. ஏனோ அவனைத் தனியா விட்டு செல்ல தயக்கமாக இருந்தது. ஜென்னி கென்னி என்று உளறிக் கொண்டிருக்கிறானே. யாரந்த ஜென்னி?<br /><br />”இல்ல சத்யா... நீங்க எல்லாம் கிளம்புங்க. நான் அவன் தெளிஞ்சு எழுந்ததும் பில்லர் ராக்ஸ்-ல வந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன். தனியா விட்டுப் போறது சரியில்லப்பா”<br /><br />நேற்றிரவு மாதிரி ஏதாவது ஆசிரமத்தை தேடி ஓடினாலும் ஓடிவிடுவான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்றும் இந்த பேரிஜம் ஏரியில் சுற்றிப் பார்க்க என்று ஒன்றும் கிடையாது. பேசாமல் ரூமில் கொஞ்ச நேரம் தூங்கலாம். சேத்தன் பகத்தை கொஞ்சம் புரட்டலாம். பிறகு சந்துருவை மெதுவாக கிளப்பிக் கொண்டு பில்லர் ராக்ஸ் போய் சேர்ந்து விடலாம் என்று ஒரு சோம்பல் திட்டம் போட்டேன். வைத்தி பஸ்சில் ஏற்கெனவே செட்டில் ஆகி தூங்க ஆரம்பித்திருந்தான்.<br /><br />சத்யா தயக்கத்துடன் என்னை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே பஸ்சிலேறிப் போனான். என்ன குடும்பத்தகராறோ... என்னவோ. பொதுவாகவே சங்கோஜியாக தெரியும் சந்துரு, சத்யா தலை தெரிந்தால் சுத்தமாக அமைதியாகிவிடுவான்.<br /><br />ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு ஹிந்திப் பட நாயகன் போல மஃப்ளரை ஸ்டைலாக கழுத்தில் சுற்றிக் கொண்டு சந்துருவை மீண்டும் எழுப்பலாம் என்று அவன் அருகில் போனேன். தூங்காமல் முகத்தில் ஏதோ தவிப்போடு படுத்துக் கொண்டிருந்தான். <br /><br />”ஹேங் ஓவரா? சரி சரி... அப்படியே கிளம்பி ஒரு வாக் போனா தலை சுத்தமாகிவிடும். வா வா” என்று தோளைப் பற்றி உலுக்கினேன். <br /><br />என்னைப் பார்த்தவுடன் மின்சாரம் வந்தது போல் பளீரென்று சிரித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான். அறையில் புதிதாக ஏதோ நறுமணம். <br /><br />”என்னடா வாமிட் எதுவும் பண்ணி வைத்தாயா? பெஃப்யூம் எல்லாம் அதிகமாக இருக்கிறது” என்றேன் <br /><br />மெலிதாக புன்முறுவல் செய்தான். இந்த இரண்டு மாதங்களில் இவ்வளவு பிரகாசமாக அவன் இருந்தது கிடையாது. செழுமையான கன்னமும், பளபள உதடுகளுமாய் முந்தைய இரவு நனைந்த கோழியாய் சுருண்டிருதவனா இவன்? சட்டென என் கைகளைப் பற்றி கட்டியணைத்துக் கொண்டான். ”ஜெய்... உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்”<br /><br />”ஃப்ரெஷாகிக் கொண்டு வா. பில்லர்ஸ் ராக் போகலாம். மற்றவர்கள் எல்லோரும் அங்கே வந்திருப்பார்கள்” என்றேன்.<br /><br />“ஜெய், நீ ஜென்னியைப் பார்க்க வேண்டாமா? என்னை நம்பு ஜெய். அவள் ஒரு அழகான தேவதை. ஆனால் அவளை சாகடித்து விட்டார்கள். எனக்கு இப்பொழுது நன்றாகத் தெரிகிறது அவள் உயிரோடுதான் இருக்கிறாள். நீ ஒருமுறை அவளைப் பார்க்க வேண்டும் கண்டிப்பாய்” தவிப்பான குரலில் பேசினான்.<br /><br />”இங்க பார்... சந்துரு. உன்னோட ஜென்னி யாரென்று தெரியாது. அந்தக் கிழவன் ஏதோ உளறியதில் நீ குழம்பிப் போய்விட்டாய்”<br /><br />சந்துரு நான் சொன்னதை கவனிக்கவே இல்லை. ”ஜென்னி சாகவில்லை ஜெய். நேற்று ஷங்கியை பாத்தாய்தானே நீ? எனக்கு இப்பொழுது எல்லாம் தெளிவாகிவிட்டது. நான் இருக்கறவரைக்கும் ஜென்னிக்கு சாவே கிடையாது” எனக்கு முத்தம் கொடுக்காத குறையாக கட்டிக் கொண்டான். முத்தமே கொடுத்துவிட்ட மாதிரிதான் இருந்தது.<br /><br />”ஓக்கே! ஓக்கே! ஜென்னி சாகவில்லை. நீ முதலில் கிளம்பி அறையை விட்டு வெளியில் வா” என்று நெட்டித் தள்ளிக்கொண்டு வெளியில் வந்தேன். <br /><br />“நீ நம்புகிறாய் அல்லவா?” சந்துரு மிகவும் உற்சாகமாகிவிட்டிருந்தான். நடனமாடுவது போல் இடுப்பை ஆட்டிக் கொண்டே சுழன்று சுழன்று சென்று கொண்டிருந்தான். யாரந்தப் பெண? பெயரைக் கேட்டதும் இவ்வளவு குதூகலிக்கிறான்? ம்ம்ம்... <br /><br />வைத்தி இருந்திருந்தால் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும், டெஸ்டிரோன்ஸின் தூண்டுதலையும் பற்றி ஏதாவது புதிய மேட்டர் சொல்லியிருப்பான். <br /><br />”டேய்... டேய்... அந்தப் பக்கம் பாதை இல்லை. சரிவுதான் இருக்கிறது” என்று எச்சரிப்பதற்குள் சந்துரு சரிவில் இறங்கி நடக்க ஆரம்பித்திருந்தான்.<br /><br />பச்சைப் புல்வெளி சரிந்து இறங்கி சட்டென நிமிர்ந்த போது எதிரில் பெரிய ஓட்டுக்கட்டிடம் ஒன்று தெரிந்தது. சந்துருவின் வேகத்திற்கு ஓடிப் போய் அவன் கையைப் பிடித்து ”எங்கேடா போகிறாய்”<br /><br />”அங்கே பார்.” அவன் குரல் மிகவும் மென்மையாக மாறிவிட்டிருந்தது. <br /><br />ஜோசஃப் ஸ்டான்லி என்ற ஐரிஷ்காரர் தங்கியிருந்த வீடு இப்பொழுது ஆசிரமம் போல் ஆகிவிட்டிருந்ததாக நுழைவு வாயிலில் போர்ட் சொன்னது. சந்துரு தலையை சாய்த்து என்னைப் பார்த்து சிரித்துவிட்டு அங்கே ஓடிக் கொண்டிருந்த முயல்களைக் காட்டினான். ஆகா! மறந்துவிட்டான் என்று நினைத்தால் மீண்டும் ஜென்னி மேட்டருக்கே வந்துவிட்டான் போலிருக்கிறது. சத்யா சொன்னது சரிதான். இவனைக் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும். ஒழுங்காக ஊருக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமே.<br /><br />”இங்க உன் ஜென்னி இருக்கிறாளா என்று தெரிய வேண்டும். அவ்வளவுதானே? இல்லையென்றால் சமர்த்தாக திரும்பிவிட வேண்டும். ரொம்பப் படுத்தக்கூடாது” என்றேன்<br /><br />உள்ளே சுற்றுலா பயனிகளும் சிலரும், தியானத்தில் திளைத்துக் கொண்டு சிலரும் இருக்க சந்துருவால் ஈர்க்கப்பட்டவன் போல் அவன் பின்னேயே நான் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது செல்ஃபோன் அடிக்க எடுத்துப் பார்த்தால் சத்யா.<br /><br />“எங்கேடா இருக்கீங்க? நாங்க பில்லர் ராக்ஸ் வந்தாச்சு”<br /><br />“ஆங் சத்யா... நாங்களும் கிளம்பிட்டோம். உன் கஸிந்தான் ஜென்னின்னு... இங்க ஜோ ஆஸ்ரமம் பக்கமா வந்திட்டான். இதோ கூட்டிட்டு வந்திடரேன்”<br /><br />“என்னது ஜென்னியா? ஓ மை காட்! இப்பத்தான் கொஞ்ச நாளா அதையெல்லாம் மறந்து நார்மலாயிட்டிருக்கான்னு நினச்சேன். ஜெய்.. இந்த மேட்டர் நமக்குள்ள இருக்கட்டும். நீ.. நீ... புரிஞ்சிப்பன்னு நினக்கிறேன். இங்க எப்படியாவது கூட்டிட்டு வந்திடு. எனக்கு சத்தியம்லாம் பண்ணிக் கொடுத்திருகான் அவன்’ அவன் குரலில் ஒரு மிரட்சி இருந்தது. இந்த விஷயத்தின் ஆழம் புரியாமல் மிகவும் குழப்பமாக இருந்தது.<br /><br />“மச்சி... நான் அவனக் கட்டுபடுத்தத்தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.“<br /><br />சந்துரு எங்கே போய்விட்டான்? ஒரு பக்கவாட்டு கதவு வழியாக தோட்டப்பக்கமாக பாதை தெரிந்தது.<br /><br />“நான் நேர்ல வந்து பேசறேன் சத்யா. நீங்க பில்லர் ராக்ஸ்லேயே இருங்க”<br /><br />தோட்டத்திற்கு சென்ற போது அங்கே சிற்சில வலைக் கூண்டுகளும் அதனுள்ளே புஷ்டியான புஸுபுஸு முயல்குட்டிகள் சுற்றிக் கொண்டிருக்க அழகான ஆரஞ்சு கழுத்து ஃப்ளெமிங்கோக்கள் நீரில் திளைத்துக் கொண்டிருந்தன. அந்த சிமெண்ட் பெஞ்சில்தான் அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். <br /><br />அந்தப் பெண்ணைப் பார்த்தால் சுமாராக இருந்தாள். சிரித்தவாறே கையில் ஏதோ தாணியங்களை வைத்து முயல்களுக்குடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். இவள்தான் ஜென்னியா? அவளருகே சென்று<br /><br />“ஹலோ... ஜென்னி?” என்றேன்<br /><br />என் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் கண்களைச் சுருக்கிக் கொண்டு <br /><br />“ஹலோ! என்ன வேணும்? சாமி மலைக்கு மேலே போயிருக்கு. நாளைக்கு வரும். சிலப்போ மேலேயே தங்கிடுவாரு. சிடி, கேஸட் எதுவும் வேணுங்களா?” என்றாள்<br /><br />“இல்ல... நீங்க ஜென்னியா?” விஷயத்தை தெளிவாக்கி கொண்டுவிட்டால் இவனை சீக்கிரம் கொண்டு போய் சத்யாவிடம் விட்டுவிடலாம். நல்லவேளை இதுவரை அமைதியாகத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.<br /><br />சற்று குழப்பமாக பார்த்தவள், சட்டெனத் தெளிவடைந்தவள் போல<br /><br />“நான்... நான்... செல்வி. இவங்கதான் ஜென்னி. இப்பத்தான் வந்தாங்க” என்று பக்கவாட்டில் அவள் காட்டிய இடத்தில் பார்க்கும்போதுதான் சட்டென உறைத்தது. <br /><br />தலைமுடியை சற்றே பின்னுக்கு தள்ளிக்கொண்டு என்னைப் பார்த்து சிரித்ததுக்கொண்டு, கூட்டினில் இருந்த விடுபட்ட பெண்மையாய், பேரானந்தமாய் அங்கே உட்கார்ந்திருந்தது <b>அவன்</b> இல்லை. <br /><br />சாம்பல் நிறத்தில் புஷ்டியாக இருந்த முயலை இரு கைகளிலும் பொத்திக் கொண்டு புருபுருவென மூக்கால் தேய்த்தபடி ஆங்கிலத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தாள் ஜென்னி.<br /><br /><span style="color:#ff0000;">இந்த சிறுகதை <a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html">'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' </a> நடத்தும் <a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html">சிறுகதை போட்டிக்காக</a> எழுதப்பட்டது. போட்டியில் பங்குபெறும் <a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html">கதைகளின் பட்டியலை</a> இங்குக் காணலாம்.</span></span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-6240328595006025231?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-30880544.post-8110152986539107772009-06-12T14:41:00.000-07:002009-06-12T21:14:57.290-07:0032 கேள்விகளும் முந்திரிக்கொட்டை பதில்களும்பதிவுலகில் இடம்பெறும் சங்கிலித்தொடர் இடுகைகள் சுவாரசியமானவை. சமீபத்தில் சுற்றி வரும் 32 கேள்விகள் ஒரு பேட்டிக்குரிய அம்சங்களுடன் இருப்பதால் நிறைய பிரபலங்கள் பங்குபெற்று வெளுத்து வாங்குகிறார்கள். அப்படியான இரு பிரபலங்கள் நம்மையும் கோர்த்து விட்டிருப்பதால் கொலைவெறியுடன் குதித்து விட்டேன். பதில்களை விட இதில் நான் இழுத்து விடப்போகும் பதிவர்கள் பட்டியல் சுவாரசியமானது. மேலும் விவரங்களுக்கு மேலும் படிக்கவும்.<br /><br /><span class="fullpost"><a href="http://jyovramsundar.blogspot.com/2008/06/45.html">எசகுபிசகான விளையாட்டை </a>எளிதான <a href="http://jyovramsundar.blogspot.com/2008/04/blog-post.html">மொழியிலும்</a>, வாக்கியங்களை கலைத்துப் போட்டாலே <a href="http://jyovramsundar.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88">கவிதைதான் </a>என்றில்லாமல் கவிதையையே கலைத்துப் போட்டு <a href="http://jyovramsundar.blogspot.com/search/label/%E0%AE%85-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88">அ-கவிதை</a> என்றும் வாசகர்களின் மனதில் <a href="http://www.writerpara.com/paper/">ஆக்கர் </a>போடும் அன்பர் <a href="http://jyovramsundar.blogspot.com/2009/06/blog-post_09.html">ஜ்யோவ்ராம் சுந்தரும்</a><br /><br /><a href="http://nchokkan.wordpress.com/my-books/">புத்தக சுனாமி</a>, <a href="http://nhm.in/shop/N.-Chokkan.html">கிழக்கின் விடிவெள்ளி</a>, தொய்வில்லாத தொடர்கதைகளின் துருவ நட்சத்திரமும், கன்னடிய நாட்டில் மையம் கொண்டு தமிழ் வெகுஜன ஊடகத்தை புயலென ஊடுருவிய ’இளைய <a href="http://www.writerpara.com/paper/">பாரா</a>’ என்றழைக்கப்படும் <a href="http://nchokkan.wordpress.com/2009/06/08/qa/">என்.சொக்கனும்</a><br /><br />அழைத்ததால் விளைந்த விபரீதத்தைதான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.<br /><br />1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?<br /><br />பெற்றோர் வைத்த பெயர்தான். பிடிக்கிறதோ பிடிக்கலையோ, பெயரை மாற்றிக் கொள்வதாக உத்தேசம் இல்லை.<br /><br />2) கடைசியா அழுதது எப்போது?<br /><br />ஆண்கள் அழுதாலும் வெளியில் சொல்லிக் கொள்ளக் கூடாதாம். திரைப்படங்களில் உணர்ச்சிகரமான காட்சிகளை கண்டால் கண்கள் கரைகட்டிவிடும் சாதாரணந்தான் நான்.<br /><br />3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?<br /><br />கையால் எழுதுவதை கிட்டத்தட்ட மறந்தே விட்டேன். எழுதினாலும் அவ்வளவு அழகாக இருக்காது. விண்ணப்பங்களிலும், செக் புக்கிலும் போடுவதற்கென்றே தனியாக கையெழுத்து பழகினேன். இதுவரை அந்தக் கையெழுத்தை மாற்றியதே இல்லை. பிடிக்கும்.<br /><br />4) பிடித்த மதிய உணவு?<br /><br />புளிப்பு அதிமான குழம்பும், உருளைக் கிழங்கும், அப்பளமும், தயிர்சாதமும் எப்போதும் ஃபேவரைட். கிடைக்காத பட்சத்தில் எல்லா வகை உணவும் சம்மதமே.<br /><br />5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?<br /><br />கண்டிப்பாக. சந்தித்த முதலில் தானாக பேச முன்வரத் தயங்கினாலும், நல்ல நண்பனாகவே இருந்திருக்கிறேன் எப்பொழுதும்.<br /><br />6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?<br /><br />அருவிதான் எப்பொழுதும். கடலில் குளித்தால் உப்பு அரிக்கும். பின்னர் நல்ல தண்ணீரில் மீண்டும் குளிக்க வேண்டும்.<br /><br />7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?<br /><br />உடல்மொழி மற்றும் சிரிப்பு. <br /><br />9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?<br /><br />பிடித்தது - சகஜமாக பழகும் சுபாவம். சிரித்த முகம்.<br />பிடிக்காதது - அப்படி எதுவும் இருக்கிறதா என்ன? (தப்பிச்சிட்டோம்ல!)<br /><br />10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?<br /><br />அப்படி எதுவும் இல்லை. <br /><br />11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?<br /><br />சாம்பல் நிற மேலாடையும், அரைக்கால் சட்டையும்.<br /><br />12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?<br /><br />கந்தசாமி பாட்டு. இதெல்லாம் டூப்பு. <br /><br />13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?<br /><br />கறுப்பு மை. <br /><br />14) பிடித்த மணம்?<br /><br />முகர்வதற்காக உள்ள எல்லா மணமும். <br /><br />15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?<br /><br />இடுகையின் இறுதியில் பெரிய பட்டியலே இருக்கிறது.<br /><br />16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?<br /><br />படிக்கும் அனுபவத்திற்காகவே படிப்பவன் நான். சுந்தரின் பிரபல எழுத்துகளை பரவலாக்கும் பதிவுகள் பிடிக்கும். சொக்கனின் அனுபவச் சிதறல்களை படிக்க பிடிக்கும்.<br /><br />17) பிடித்த விளையாட்டு?<br /><br />எல்லா விளையாட்டுகளும். கல்லூரிக்காலத்தில் கூடைப்பந்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன்.<br /><br />18) கண்ணாடி அணிபவரா?<br /><br />இல்லை.<br /><br />19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?<br /><br />ஃபார்முலா, க்ளிஷேக்கள் இல்லாத எந்த திரைப்படமும் பிடிக்கும்.<br /><br />20) கடைசியாகப் பார்த்த படம்?<br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Vantage_Point_(film)">Vantage Point</a><br /><br />21) பிடித்த பருவ காலம் எது?<br /><br />குளிர்காலம். அதுவும் பனிவிழும் மலர்வனமாக இருந்தால்...<br /><br />22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?<br /><br />புதுமைபித்தனின் சிறுகதைகள் இணையத்தில் கிடைத்தது. மற்றபடி இணையத்தில் ‘கண்ட’தையும் மேய்ந்து கொண்டே...<br /><br />23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?<br /><br />படம் எதுவும் இல்லை. இருந்தாலும் அடிக்கடி மாற்றுவதில்லை.<br /><br />24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?<br /><br />சத்தமாக பேசும் சத்தம் மட்டும் பிடிக்காது. <br /><br />25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?<br /><br />அதிக தூர பிரயாணம் என்றால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இருமுறை பிரயாணம் செய்திருக்கிறேன்.<br /><br />26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?<br /><br />தனித்திறமை என்று பட்டியல் போடும் தனித்திறமை கிடையாது. பல வருடங்கள் கழித்தாலும் ஒருமுறை படித்ததிலேயே சிலவற்றை நினைவுகூர முடிவது வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.<br /><br />27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?<br /><br />என்னால் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது? அவரவர்க்கு அவரவர் நியாயம்.<br /><br />28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?<br /><br />சோம்பல்<br /><br />29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?<br /><br />நிறைய சுற்றுவது இல்லை. நானொரு வீட்டுப் (இணையப்) பறவை :)<br /><br />30) எப்படி இருக்கணும்னு ஆசை?<br /><br />இப்படியே.<br /><br />31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?<br /><br />அப்படி ‘முக்கி’ய காரியம் ஒன்றும் பெரிதாக இல்லை.<br /><br />32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க<br /><br />வாழ்க்கை - விடை தெரியாத புதிர். கிடைக்காத விடையை தேடிக் கொண்டே இருப்பதுதான் சுவாரசியமான வாழ்க்கை. <br /><br />நான் அறிந்த, வாசிக்கும் பலரும் ஏற்கெனவே இந்தத் தொடரில் பங்கேற்று விட்டாலும் இந்தத் தொடரை தொடரும் உத்வேகத்தோடு நான் அழைக்கும் பதிவர்கள்:<br /><br /><a href="http://marchoflaw.blogspot.com/">பிரபு ராஜதுரை</a> - மிகவும் தீர்க்கமாகவும் முழுமையாகவும் எழுதக்கூடிய மிகச் சிலப் பதிவர்களில் ஒருவர். வக்கீல் தொழிலில் இருக்கும் இவரின் அனுபவங்களும், கருத்துகளும், சினிமா பற்றிய பதிவுகளும் மிகவும் சுவாரசியமானவை. இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை. வேலை அழுத்தமாக இருக்கலாம். ஆனாலும் இந்தக் கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலளிப்பார் என்று நினைக்கிறேன். <br /><br /><a href="http://elavasam.blogspot.com/">இலவச கொத்தனார்</a> - வெண்பா, குறுக்கெழுத்து, விக்கி பதிவுகள், புதசெவி என்று சுவாரசியமாக எழுதிக் கொண்டிருந்தவருக்கு அநியாயமாக அலுவலக வேலைகள் எல்லாம் செய்யச் சொல்கிறார்களாம். இந்த மீம்-ஐ முன்னிட்டாவது ஒரு புதசெவி பதிவு போடுவார் என்று எதிர்பார்க்கலாம். தொடர்ந்து விக்கி பசங்களையும் (பெருசுகளையும்) இந்த மீம்-க்குள் கோர்த்து விடுவார் என்று நம்புகிறேன்.<br /><br /><a href="http://radhasriram.blogspot.com/search?updated-max=2009-05-28T17%3A08%3A00-07%3A00&max-results=1">இராதா ஸ்ரீராம் </a>- நடைபாதையில் அதிகம் நடமாட்டமில்லை என்றாலும் தொடர்ந்து மற்ற பதிவர்களை வாசித்து ஊக்குவிப்பவர். சென்ற வருடம் சந்தித்த காட்டு தீ அனுபவத்தின் பாதிப்பு இன்னமும் இருக்கலாம். இந்தத் தொடரை தொடர்ந்து அதிக பதிவுகளிடுவார் என்று நம்பப்படுகிறது.<br /><br /><a href="http://senshe-kathalan.blogspot.com/">சென்ஷி</a> - இவரின் உண்மைப் பெயர் தெரியாது. ஆனால் தமிழ் பதிவுலகின் ரொமாண்டிக் காதலர் என்று மட்டும் தெரியும் :) திடீர் திடீரென்று பின் நவீனத்துவ பாய்ச்சல், மாய-யதார்தத மயக்கம் எல்லாம் காட்டுவார். இவருடைய ஒரு <a href="http://www.parisalkaaran.com/2008/07/blog-post_12.html">பதிவைப் </a>பற்றி <a href="http://www.parisalkaaran.com/">பரிசல்காரன் </a>செய்த <a href="http://www.parisalkaaran.com/2008/07/blog-post_12.html">ஆய்வு </a>பதிவுலகில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.<br /><br /><a href="http://penathal.blogspot.com/">பினாத்தல் சுரேஷ்</a> - தமிழ் பதிவுலகின் முதுபெரும் எழுத்தாளர். இவரின் அங்கத நடைக்கு அநேக வாசகர்கள் உண்டு. அவ்வப்போது ஃப்ளாஷ் அடித்து பதிவுலகை பிரகாசமாக்கிவிடுவார். ’என்ன எழுதுவது’ என்று யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல். இதைப் பற்றியும் எழுதுங்களேன் சுரேஷ்.<br /><br /><a href="http://paathasaari.blogspot.com/">வெங்கிராஜா</a> நல்ல புனைக்கதை எழுத்தாளர். நிறைய திரைப்படங்களைப் பற்றிய முழுமையான விமர்சனம் எழுதியிருக்கிறார். கடந்த சங்கமம் போட்டியில் முதல் பரிசு பெற்ற படைப்பாளி. <br /><br /><a href="http://ammanchi.blogspot.com/">அம்பி</a> திருமணம், குடும்பம் எல்லா பொறுப்புகள் கூடிய போதும் பொறுப்பாக கோபிகா, நயந்தாரா என்று பதிவுகள் போட்டுக்கொண்டிருந்த தம்பியை இப்படி அநியாய ஆபீசரா ஆக்கி ஆப்பு வைத்துவிட்டார்களே என்று வருத்தமாக இருக்கிறது. உங்களின் 32 நண்பிகளின் பெயரோடு இந்த 32 கேள்விகளையும் சிறப்பிக்க வேண்டுகிறேன்.<br /><br /><a href="http://pitchaipathiram.blogspot.com/">சுரேஷ் கண்ணன்</a> இலக்கியம், புத்தகம், சினிமா என்று பல தளங்களில் தீர்க்கமாக எழுதக் கூடியவர். திரைப்படங்கள் பார்ப்பதற்கு சில நல்ல யோசனைகள் தந்திருக்கிறார். <br /><br /><a href="http://papernpencil.blogspot.com/">விஜி</a> இவர் ஒரு ஆங்கிலப் பதிவர். ஆனால் தமிழ் பதிவுகளை ஆர்வமாக படிக்கிறவர். இவரால் இந்தத் தொடர் ஆங்கிலப் பதிவுகளுக்கும் சென்றால் நல்லதே. <br /><br /><a href="http://thendral2007.blogspot.com/">தென்றல்</a> - ஒரே மாநிலத்தில்தான் (கலிபோர்னியா) இருவரும் இருக்கிறோம். ஆனால் சந்திக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. நல்ல தகவல் செறிந்த பதிவுகள் இடுபவர். இப்பொழுதுதான் இந்திய பயனத்திலிருந்து திரும்பியிருக்கிறார். தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.<br /><br /><a href="http://www.enn-ennangal.blogspot.com/">பரத்</a> - சக ட்விட்டரர். நிறைய வாசிப்பவர். படம் பார்ப்பவர். எல்லாம் தாண்டி ட்விட்டரில் சிநேகமாக உரையாடுபவர். முந்தைய ஒரு மீம் ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டவர். இந்த ஆட்டத்தில் இவருக்கும் ஒரு துண்டை போட்டு வைக்கிறேன் :). வாங்க பரத். வந்து கலக்குங்க!</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-811015298653910777?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-30880544.post-36139491030702093742009-06-11T16:23:00.000-07:002009-06-12T09:51:21.197-07:00முங்காவின் முத்தம்'இலியாஸ்! இலியாஸ்!’ என்று கண்ணாடி சுவற்றை தனது முட்டை வாயால் இடித்துக் கொண்டிருந்தான் முங்கா. நீரின் அடியில் இருந்த காவி நிறக்கற்களை வாயால் கவ்வி எடுத்துக் கொண்டு வந்து கண்ணாடி சுவற்றின் மேல் இடித்தான். அகல இலைகளோடு மிதந்து கொண்டிருந்த லில்லி ’இங்கேருந்து கத்தினா அவனுக்கு எப்படி கேட்கும்?. மேலே போய் கத்து’ என்றது.<br /> <br /><span class="fullpost">’நான் அவளை மீண்டும் பாத்தேன் இன்றைக்கு. வட்டவடிவமாக பிரகாசமான பொன் மஞ்சள் நிலவைப் போல் சிரித்த முகத்துடன் தோன்றினாள். அவள் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம் தெரிந்தது.’<br /> <br />’ஓ! அந்த மஞ்சள் அழகியா. அவள் பெயர் கிம்னோ. இலியாஸிடம் முதுகுத்தண்டு சிகிச்சைக்கு வருகிறாள். இங்கு இருக்கும் வாளிப்பான தங்க மீன்களை எல்லாம் விட்டுவிட்டு உன்னைப் பார்த்து சிரிக்கிறாள் என்றால் அவள் பார்வையில்தான் கோளாறு. நீ ஒரு சோம்பேறி’<br /> <br />‘இல்லை. அந்த கூனன் ராகி அங்கே மேஜை மேலிருந்து காமவெறியோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் பார்வை எனக்கு ஊசிகளாக குத்துகின்றன. அதான் பதுங்கிக் கொண்டிருக்கிறேன்’<br /> <br />‘அவனைத்தான் தண்ணீர் டிரம்மில் போட்டு சுற்றோ சுற்று என்று சுற்றி, புனுக்குக்காக பிதுக்கி எடுத்து விட்டானே இலியாஸ். ஒரு வாரத்துக்கு அவனால் நடக்கக் கூட முடியாது’<br /> <br />’நான் அவளை மீண்டும் பார்க்க வேண்டும்’<br /><br />‘இங்கிருந்து சமுத்திரம் போகிற வழியில் எங்காவது அவள் முகம் தென்படலாம்’ <br /><br />‘சமுத்திரத்தில் என்ன இருக்கும்?’<br /> <br />‘பெரிய பிரம்மம் இருக்கும். நிறைய நீந்தலாம். ராகியிடமிருந்து உனக்கு விடுதலை கிடைத்துவிடும். பெரிய பெரிய செடிகள் கூட உண்டு. சரணம், சரணம் என்று சொல்லிக் கொண்டே போ’<br /><br />‘கிம்னோவை மீண்டும் பார்க்க முடியும் அல்லவா?’<br /> <br />முங்கா தனது சிறிய வாலை துழாவிக் கொண்டே தொட்டியை சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பதை கவனித்த இலியாஸ்ஸுக்கு மிகுந்த சந்தோஷம். நல்ல கருந்தேக்கு பலகையை வெட்டியெடுத்தது போல கட்டுக்கோப்பான உடலுடன் இருப்பான் இலியாஸ். வெள்ளைப் பற்கள் பளீரிட வட்டக் கண்ணாடி வழியே முங்காவைப் பார்த்துக் கேட்டான்.<br /> <br />‘எதற்காக பரபரப்பாக தொட்டியை சுற்றி சுற்றி வருகிறாய்? இவ்வளவு அவசரமாக?’<br /> <br />தான் சமுத்திரம் நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக சொன்னான் முங்கா. தொட்டியின் பக்கவாட்டில் மஞ்சள் வெளிச்சப் புகை நடுவே இருக்கும் ஃப்ளோரஸண்ட் விளக்குகளை காட்டி அது போல நூறு கோடி விளக்குகளைக் கடந்தால் சமுத்திரம் என்று அம்மா சொல்லியிருக்கிறாள் என்றான். லில்லிதான் விளக்குகளின் எண்ணிக்கைக்கு கணக்கு வைத்திருக்கிறாள். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவளுக்கு பதினொன்றுக்கு மேல் எண்ணத் தெரியாது.<br /><br />இலியாஸ் கிம்னோவிடம் பல்வேறு படிவங்களை கொடுத்து சம்பிரதாயங்களை பூர்த்தி செய்த பின்னர் சிகிச்சையைத் தொடங்கினான். சுற்றிலும் வகை வகையாக தசைகளை வலுப்படுத்தும் உபகரணங்களுக்கு நடுவில் ஒல்லியான மேஜையில் கிம்னோவைப் படுக்க வைத்து அவளுடைய முதுகில் மசாஜ் செய்தான். <br /> <br />‘உனது முதுகெலும்பு படு மோசமாகிவிட்டது. பதினெட்டு மணி நேரத்திற்கும் மேல் உட்கார்ந்தே வேலை செய்கிறாய் என்று நினைக்கிறேன். நரம்பு மண்டலம் மொத்தமும் பாதிக்கப்பட்டு பொட்டலம் போல் சுருண்டு போய்விட்டது’ என்றான். திமிலில்லாத சிறிய காதுகளைக் கொண்ட ஜாக்வின் மாட்டின் வாலில் தினமும் நாலங்குலம் வெட்டியெடுத்து சூப் வைத்துக் கொடுத்தான். மூன்றே வாரத்தில் கிம்னோவின் முதுகெலும்பு பிரமாதமாக புத்தம் புதியதாகி மாட்டு வால் போல் வெளியே நீண்டு வளர்ந்திருந்தது. அவளால் இப்பொழுது பத்து மைல்கள் நிற்காமல் ஓட முடிகிறது. இரண்டு மணி நேரங்கள் நீச்சலடிக்க முடிகிறது. ஆனால் காதல் செய்ய முடியாமல் கடுமையான மூச்சிரைப்பு நோய் இருந்தது. அவளது நுரையீரலில் களிம்பாக சளி படிந்து இருக்கிறது. <br /> <br />தொட்டியின் அடியில் கற்களை புரட்டுவதும் கண்ணாடிச் சுவரை இடிப்பதுமாக இருந்த முங்காவை நிறைய வேடிக்கைப் பார்த்தாள். <br /><br />‘இலியாஸ் கைராசிக்காரந்தான். ஆனால் பெண்கள் என்றால் அதிகமாக வழிகிறான்’ என்று முங்காவிற்கு அதிகம் கோபமாக இருந்தது.<br /> <br />’நீ கிம்னோவை முத்தமிட விரும்புகிறாயா?’ இலியாஸ் வட்டக் கண்ணாடி வழியாக முங்காவைப் பார்த்துக் கேட்டான். <br /> <br />‘பார்! நீ பிறந்த அதே குளத்தில்தான் நானும் தலைபிரட்டையாகப் பிறந்தேன். காங்கோ நாட்டு அழகி என்னை முத்தமிட்டாள். நான் இப்படியாகி விட்டேன்’ என்றான் இலியாஸ்.<br /> <br />’முத்தத்தின் மூலம் ஆயிரக் கணக்கான கிருமிகள் தொற்றிக் கொள்ளும்’ என்று சிடுசிடுத்தாள் கிம்னோ. <br /><br />‘நீ புரட்டும் கற்களில் பச்சைக் கற்கள் தோன்றினால் எடுத்து வைத்துக் கொள். அதில் மாவாங் மூலிகைகள் இருக்கிறது. அந்தக் கற்களோடு நீ கிம்னோவை முத்தமிடலாம்’ என்றான் இலியாஸ்.<br /><br />முங்கா தொட்டியை சுற்றிச் சுற்றி வந்து சிறிய சிவப்பு கற்களை முட்டை வடிவ வாயால் கவ்வி தள்ளித்தள்ளிப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த முக்கியமான நாளில் முங்கா வாய் கொள்ளாமல் பச்சை கற்களை கொண்டு மேல்பரப்பில் சுற்றிக் கொண்டிருந்தான்.<br /><br />சிறிய வலை மூலம் அவனைத் தூக்கிய இலியாஸ், அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த கிம்னோவின் குவிந்த உதடுகளுக்கு அருகில் கொண்டு சென்றான். கண்களை விரித்துக் கொண்டு கிம்னோ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, முங்கா காற்றில் எழும்பி பறந்தவாறே உற்சாகமாக கத்திக் கொண்டே திறந்திருந்த அவள் வாயினுள் விழுந்தான். பட்பட் என்று வாலை அடித்துக்கொண்டே கிம்னோவின் வயிற்றினுள்ளே வழுக்கிக் கொண்டு போனான்.<br /><br />’முங்கா மூலிகைகளை உனது நுரையீரலுக்கு கொண்டு சேர்த்து விடுவான். இனி உனக்கு மூச்சிரைப்பே வராது’ என்று சொல்லியவாறே இலியாஸ் கிம்னோவின் உதடுகளை தனது உதட்டால் மூடினான்.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-3613949103070209374?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-30880544.post-7004616679891779742009-06-07T14:49:00.000-07:002009-06-08T01:02:04.023-07:00பார்த்ததில் பிடித்தது - 2கடந்த சில மாதங்களாக பார்த்த திரைப்படங்களைப் பற்றி பதிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்து செயல்படுத்தாமல் விட்டதால் சற்றே பெரிய பட்டியலாக நீண்டுவிட்டது.<br /><br /><a href="http://www.sridharblogs.com/2008/11/7.html">பார்த்ததில் பிடித்தது - 1</a><br /><br /><span class="fullpost"><strong><span style="color:#000099;">மலையாளம்</span></strong><br /><br />மம்மூக்காவின் <a href="http://en.wikipedia.org/wiki/Karutha_Pakshikal">கருத்த பக்ஷிகள் </a>மற்றும் <a href="http://en.wikipedia.org/wiki/Oru_Vadakkan_Veeragatha">ஒரு வடக்கன் வீரகதா</a> என்ற இரண்டு படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு படங்களுக்கும் இடைவெளி சுமார் இருபது வருடங்களாவது இருக்கும். ஆனால் மம்மூக்கா அப்படியே அதே கம்பீரத்துடன் இருக்கிறார். கருத்த பக்ஷிகள் கொஞ்சம் டிரமாடைஸ் செய்யப்பட்ட படமாக இருந்தாலும், மிகவும் காத்திரமான படம். பத்மப்ரியா துணிச்சலான பெண்ணிற்கும் அரை பைத்தியத்திற்கும் வித்தியாசம் உணர்ந்து நடிக்க முயற்சிக்கலாம். இறுதியில் அந்த கண் தெரியாத குழந்தை ‘காற்றை பிடிக்கான்’ என்று சொல்லும்போது மனம் கனத்துதான் போகின்றது. வடக்கன் வீரகதாவிற்காக மம்மூக்காவிற்கு தேசிய விருது கிடைத்தது நினைவிருக்கிறது. எம்டிவி-யின் (M T Vasudevan Nair) கதைக்கு முன்பாக துரோகியாக மட்டுமே அறியப்பட்டிருந்த சந்துவின் பாத்திரத்திற்கு மம்மூக்கா நன்றாகவே உயிர் கொடுத்திருந்தார். களரி சண்டைகள் இயல்பாக நம்பமான முறையில் படமாக்கப்பட்டிருந்தன.<br /><br />திலீப்பின் தென்காசி பட்டணம், கல்யாணராமன் போன்ற படங்களும் பார்த்தேன். மிகவும் எளிமையான முறையில் அழகாக கதை சொல்கிறார்கள். இயல்பான படம் பார்த்த திருப்தி கிடைத்தது.<br /><br /><span style="color:#000099;"><strong>தமிழ்</strong> </span><br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Pasanga">பசங்க</a> ஒரு அறிமுக இயக்க்நரின் படத்திற்கே உரிய உணர்ச்சிகரமான கதை. ஆனால் அதைக் கொடுத்திருக்கும் விதம் அருமையாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது படத்தின் மண்வாசனை கமழும் வசனங்கள் மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு. வகுப்பில் உறுதி மொழி எடுப்பது, ப்ராக்ரஸ் ரிப்போர்ட் கொடுக்கும்போது கைதட்டி உற்சாகப் படுத்துவது, ‘இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு’ என்று போன் பேச தொடங்குவது போன்ற இயல்பாக சிரிப்பை வரவழைக்கும் உரையாடல்கள், போதும் பொண்ணு, சோப்பி பொண்ணு போன்ற ரிஃப்ரெஷிங்கான பெயர்கள்... இப்படி ஒரு பெரிய பட்டியலே போடலாம். தவிர்த்திருக்க வேண்டியது பசங்களுக்கு கொடுக்கப்படும் சினிமாத்தனமான பில்டப். கூட்டமாக வருவது, வில்லத்தனமாக பேசுவது, பெரிய தாதா படங்களுக்கு கொடுக்கப்படும் பின்னனி இசை, ஆரம்ப போலிஸ் ஸ்டேஷன் காட்சிகள் எல்லாம் ஒவ்வாமை ஏற்படுத்தி விடுகின்றன. இயக்குநர் பாண்டிராஜ் இப்பொழுது மதில் மேல் பூனையாக இருக்கிறார். அடுத்த படத்தில் எந்தப் பக்கம் தாவுகிறார் என்று தெரிந்து விடும்.<br /><br /><span style="color:#000099;"><strong>ஈரானி</strong> </span><br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Gaav">The Cow</a> பாரசீகத்தில் பசுவை ‘காவ்’ என்று சொல்கிறார்கள். சமஸ்கிருதத்திலும் / ஹிந்தியிலும் அப்படித்தான் என்பது ஒரு ஆச்சர்யமானது. பசுவை இவ்வளவு நேசிக்க முடியுமா என்பது போல் இருக்கிறது ஹாசனின் பாசம். அவர் பசுவை குளிப்பாட்டி துடைத்து விடுவது மிகவும் இயல்பான நடிப்பு. ஒரு நாள் அந்தப் பசு இறந்து போக அவர் என்னவாகிறார் என்பதும், அதனை அந்த கிராம மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும்தான் கதை. மிகவும் நுண்ணிய உணர்வுகள் பிரதானபடுத்தி எடுக்கப்படும் படங்களை வேற்று மொழிகளில் பார்ப்பதில் ஒரு வசதி. இதெல்லாம் ஒரு படமா என்று நகைக்க அதிகம் பேர் பார்த்திருக்க மாட்டார்கள். விவாதம் செய்து நேர விரயம் செய்ய வேண்டாம்.<br /><br /><span style="color:#000099;"><strong>ரோமானியா</strong> </span><br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/4_Months,_3_Weeks_and_2_Days">4 Months, 3 Weeks and 2 Days</a> மிகவும் பாதித்த ஒரு படம். நேரம் இருப்பின் தனிப் பதிவாக இந்தப் படத்தை பற்றி எழுதலாம். கறுப்பு / வெள்ளையாக பாத்திரங்களின் படைக்காமல் பல்வேறு படிமங்களாக கொண்டு கதை சொல்வது மிகவும் சிரமமானது. ரோமேனியாவில் இரு கல்லூரிப் பெண்கள் கம்யூனிச ஆட்சியின் போது கருக்கலைப்பு செய்ய முயல்வதில் தொடங்குகிறது படம். இறுதியில் கருக்கலைப்பு முடிந்துவிடுகிறது, அங்கே சூழ்ந்து நிற்கும் வெறுமையோடு படம் முடிவடைகிறது. ஒடிலியா (Otilia) தனது நண்பிக்காக சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் டாக்டரின் இச்சைக்கு இணங்குவதும் தொடர்ந்து தனது காதலனை அவனது வீட்டில் சந்தித்து அவனோடு சண்டை போட்டு பிரிவதும் ஒரு மனித மனத்தின் இரு வேறு புள்ளிகளாக சித்திரிக்கப் படுகிறது. ஒடிலியாவின் போக்கில் கதை சொல்லப்பட்டாலும், கேப்ரியலாவின் பாத்திரம் அருமையாக சொல்லப்பட்டிருக்கும். படத்தில் பல காட்சிகள் ஒரே ஷாட்டாக, கேமரா எந்தப் பக்கமும் நகராத வகையில் எடுக்கப்பட்டிருக்கும். ஒடிலியாவின் காதலன் வீட்டில் நடக்கும் டின்னர் பார்டி ஒரு எடுத்துக் காட்டு.<br /><br /><span style="color:#000099;"><strong>ஜெர்மன்</strong> </span><br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Run_Lola_Run">Run Loila Run</a> இது ஒரு பரீட்சார்த்த சினிமா ஆனால் பெரு வெற்றிப் பெற்ற முயற்சி என்று சொல்ல வேண்டும். திரைப்படங்களில் கதை சொல்லும் முயற்சியில் இந்தப் படம் ஒரு மைல் கல். லோலாவைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும் அவளுடைய ஓட்டம் அந்த சம்பவங்களில் ஏற்படுத்தும் பாதிப்பையும் காட்டுகிறது படம். அவள் காதலன் மானி ஒரு கள்ளக் கடத்தல் செய்யும்போது பணப்பையைத் தொலைத்துவிட சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். லோலா ஓடத் துவங்குகிறாள். படிகளில் ஒரு நாயை எதிர்கொள்கிறாள். அது குரைப்பதினால் வேகமாக ஓடுகிறாள். வழியில் பலரை சந்திக்கிறாள். அதாவது பலரின் செயல்களை அவளுடைய ஓட்டம் பாதிக்கிறது. ஒரு வீடில்லாத ஏழை மானி ட்ரெயினில் தவறவிட்ட பணப்பையுடன் லோலாவின் ஓட்டத்தின் நடுவில் வருகிறான். லோலா தனது தந்தையை வங்கியில் சந்தித்து பணம் கேட்கிறாள். அவர் முடியாது என்று சொல்வதோடு நில்லாமல் அவள் தன் பெண்ணே அல்ல என்றும் தான் அவளுடைய அம்மாவை விவாகரத்து செய்யப் போவதாகவும் சொல்கிறார். இப்படியாக தொடர்ந்து செல்லும் சம்பவங்கள் மானியுடன் லோல இணைந்து செய்யும் ஒரு கொள்ளை சம்பவத்தில் முடிகின்றன. போலிஸ் லோலாவை சுட்டு விடுகிறது. அவளது முதல் ஓட்டம் முடிய, இரண்டாவது ஓட்டம் துவங்குகிறது. இந்த ஓட்டத்தின் தொடக்கத்தில் லோலா ஓடும்போது மாடிப்படியில் எதிர்படும் நாய் அவளை தடுக்கி விட அவளுடைய கால் சுளுக்கிக் கொள்கிறது. சில நொடிகளை அவள் தவற விடுகிறாள். அதனால் தொடர்ச்சியாக வரும் சம்பவங்களில் ஏற்படும் மாற்றங்களும் புதிய கதையைக் கொண்டுச் செல்கின்றன. மூன்றாம் ஓட்டத்தில் லோலா வேகமாக நாயைத் தாண்டி விடுகிறாள். இந்தப் படத்தைப் பார்ப்பது விவரிக்க முடியாத அனுபவம். கட்டாயம் தவறவிடக் கூடாத திரைப்படம் இது.<br /><br /><span style="color:#000099;"><strong>ஆங்கிலம்</strong> </span><br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Basic_Instinct">Basic Instinct </a>- Series <a href="http://en.wikipedia.org/wiki/Basic_Instinct">1</a> &amp; <a href="http://en.wikipedia.org/wiki/Basic_Instinct_2">2</a> - அபாயங்களுக்கு அடிமை என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. பணக்கார எழுத்தாளர் கேத்தரீன் ட்ராமல் ஒரு Risk Adict. அவர் எழுதும் கதைகள் போலவே அட்சரம் பிசகாமல் கொலைகள் நிகழ்கின்றன. அவரே செய்தாரா இல்லை அந்தக் கதையைப் படித்த மனநோயாளி யாரேனும் செய்த கொலைகளா என்பதுதான் இந்த இரு திரைப்படங்களின் அடிநாதம். முதல் படத்தில் இருந்த ஒரு மிஸ்டிக்கல்தன்மை இரண்டாம் படத்தில் க்ளினிக்கலி பெர்ஃபெக்ட் தன்மையாக மாறிப் போய்விட்டது. தொன்னூறுகளில் வெளியான முதல் படத்தின் மூலம் ஷாரன் ஸ்டோன் திரை ஆளுமை மிகப் பெரும் வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட பதினான்கு வருடங்கள் கழித்து இரண்டாம் பாகத்திலும் இளமை குன்றாமல் நடித்திருந்தார்.<br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Schindler">Schindler's List</a> ஸ்பீல்பெர்குக்கு இயக்குநருக்கான ஆஸ்கர் விருது பெற்றுக் கொடுத்த முதல் படம். இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகளினால் நடந்தேறிய யூத இனப் படுகொலையை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆஸ்கர் ஷிண்ட்லர என்னும் ஜெர்மானியர் தன்னுடைய அரவணைப்பில் நிறைய யூதர்களை ஜெர்மானிய இனவெறியர்களிடமிருந்து பாதுகாக்கிறார். இந்தப் படத்தில் அநேகமாக ஷிண்ட்லரின் பட்டியலில் இருந்த அனைத்து யூதர்களின் பெயரும் சொல்லப்பட்டு விடுகின்றன. ஒரு ஆவணப் படத்தின் தீர்க்கத்தோடு எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படம்.<br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Shrek">Shrek - Series</a> அனிமேஷன் படங்களில் முன்னோடியானப் படம். நான்கு பாகங்கள் இதுவரை வந்திருக்கின்றன. அனிமேஷன் படங்களில் வால்ட் டிஸ்னியின் மோனோபோலியை முடிவுக்கு கொண்டு வந்தப் படம் என்றும் சொல்லலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் யுனிவர்ஸல் ஸ்டுடியோவில் ஷ்ரேக் 4 பார்தத்து ஒரு சிறந்த அனுபவம். இனி வரும் காலங்களில் நிறைய 4-டி படங்கள் உருவாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.<br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Slumdog_Millionaire">Slumdog Millionnaire</a> எட்டு ஆஸ்கர்களையும், கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள் என்ற எதிர்பார்ப்பில் ஒரு பென்ஹர், காந்தி, டைட்டானிக் ரேஞ்சுக்கு எதிர்பார்த்துக் கொண்டு போனதில் மிகவும் ஏமாற்றம் கொடுத்தப் படம். திரைக்கதை அமைப்பும், எடிட்டிங்கும் மிகவும் அருமை என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.<br /><br /><span style="color:#000099;"><strong>ஹிந்தி</strong> </span><br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/A_Wednesday">A Wednesday</a> நஸ்ருதீன் ஷா மணிக்கட்டை முறுக்கிக் கொண்டு காஃபி குடித்துக் கொண்டே செல்ஃபோன் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்கிறார். வசனங்கள் மிகவும் கூர்மையானது. ஆம் ஆத்மி (பொது ஜனம்) பிரதிநிதியாக அவர் போடும் திட்டங்கள் பாதியிலேயே புரிந்து விடுகிறது. இந்தியத் திரைப்படங்களில் போலிஸும் தொழில்நுட்பம் பயன்படுத்துவதில் திறமைசாலிகள் என்று காண்பிக்கும் ஒரே படம் என்று நினைக்கிறேன். <a href="http://en.wikipedia.org/wiki/Enemy_of_the_State_(film)">எனிமி ஆஃப் த ஸ்டேட் </a>போன்ற படங்கள் வருவதற்கு இன்னமும் காலம் இருக்கிறது.<br /><br />ஜாக்கிசானின் தீவிர ரசிகனாக சில படங்களும் பார்த்தேன். சான் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக நடித்த <a href="http://en.wikipedia.org/wiki/Gorgeous_(film)">கார்ஜியஸ்</a> அவர் பாணி படங்களிலிருந்து விலகி புதுமையாக இருந்தது.<br /><br /><strong><span style="color:#000099;">குறும்படம்</span> </strong>- Signs<br /><br />இதுவரை பொறுமையாகப் படித்தவர்களுக்கு ஒரு அருமையான குறும்படம் இங்கே.<br /> <br /><object height="295" width="480"><param name="movie" value="http://www.youtube.com/v/uy0HNWto0UY&amp;hl=en&amp;fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><br /><embed src="http://www.youtube.com/v/uy0HNWto0UY&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"></embed></object><br /><br /><br />அவ்வப்போது அச்சுபிச்சு காமெடி படங்களும் விரும்பிப் பார்ப்பதுண்டு. Policy Academy Series-ல் சில படங்களும், கல்லூரிக் காதல் / டேட்டிங் படங்கள் சிலவும் பார்த்து ரசித்தேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் :)<br /><br />இன்னமும் பல திரைப்படங்கள் பற்றி எழுத வேண்டும். விரைவில் அடுத்தப் பட்டியல்.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-700461667989177974?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-30880544.post-54379519922411532612009-05-03T02:38:00.000-07:002009-06-20T05:46:30.545-07:00எரனைக்கல் மோதிரம்<strong>முன்குறிப்பு:</strong> ஒரு குறும்படத்திற்கான கதை வடிவம் இது.<br /><br /><strong><span style="color:#ff0000;">முதல் காட்சி:</span></strong> ஒரு பேருந்தின் உட்புறம். வால்வோ பேருந்தில் உள்ளது போல அகலமான ஜன்னல் கண்ணாடியுடன் கூடிய, பேருந்தின் வலதுபுறத்தில் இருக்கும், இருவர் உட்கார்ந்து கொள்ளக்கூடிய முதல் வரிசை இருக்கை. இருக்கைக்கு இடது பக்கம் பேருந்தின் நடுவில் இருக்கக்கூடிய கம்பம் இருக்கிறது. காலை நேரத்து சூரிய வெளிச்சம் உள்ளே பரவியிருக்கிறது. பேருந்து நின்றிருப்பதால் எந்தவித அசைவும் தெரியாமல் இருக்கிறது.<br /><br /><span class="fullpost">ஜன்னலோர இருக்கையில் ஒரு இளைஞன் மடியில் ஒரு பிரயாணப் பையுடன் உட்கார்ந்திருக்கிறான். பக்கத்து இருக்கையில் ஒரு தண்ணீர் பாட்டில். அரைக்கண்ணாடி அணிந்து கொண்டு, வெயில்காலத்திற்கேற்ற பருத்தியில் கறுப்பு நிற வட்டககாலர் பனியனும் முக்கால்-கால்சட்டையும் அணிந்து தனது வலதுபக்கம் ஜன்னல் வழியே வெளியில் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரே திசையில் பார்க்காமல் அங்குமிங்குமாக பரபரப்பு இல்லாமல் பராக்கு பார்த்துக் கொண்டிருக்கிறான்.<br /><br />வெள்ளை நிற அரைக்கை சட்டையும் சாதாரண கால்சராயும் (ஜீன்ஸ் கிடையாது) அணிந்த நடுத்தர வயதுக்காரர் நடுக்கம்பத்திற்கு அருகில் வந்து நிற்கிறார். கேமராவில் தெரிவது அவரது இடது பக்கவாட்டு தோற்றம். தாராளமான தொப்பையுடன், கைவிரல்களில் நிறைய மோதிரங்களோடு, தூக்கி விட்ட காலரில் கர்சீப் செருகிக் கொண்டு, நெற்றியில் சந்தனப் பொட்டோடு, வாயில் பான்பராக் அடக்கிக் கொண்டு, கொஞ்சம் முன்வழுக்கையோடு இருக்கிறார்.<br /><br /><strong>நடுத்தரவயதுக்காரர்:</strong> A-2 இதானே?<br /><br /><strong>இளைஞன்: </strong>(சின்ன திடுக்கிடலோடு ஜன்னலை விட்டு இடதுபக்கம் திரும்பி பார்த்து) யெஸ். இதுதான்.<br /><br /><strong>நடு:</strong> (இளைஞன் மடியிலிருக்கும் பையைச் சுட்டிக் காட்டிக் கொண்டே) பையை வேணாக் கொடுங்க. மேல வச்சிடறேன்<br /><br /><strong>இளை:</strong> (ஒரு கையால் பையை மேலும் நெருக்கமாக அணைத்துக் கொண்டு, புன்சிரிப்போடு) இட்ஸ் ஆல்ரைட்! லெட் இட் பி!<br /><br />இளைஞனின் புன்னகையில் ஒருவித நெருக்கமின்மை இருக்கிறது. மீண்டும் ஜன்னல் வழியாக பராக்கு பார்க்க ஆரம்பித்துவிட்டான். நடுத்தரவயதுக்காரர் இளைஞனின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ‘துறுதுறு’வென சுற்றுமுற்றும் பார்க்கிறார். இரண்டு மூன்று செய்கைகளில் அவர் சௌகரியமாக உட்கார முயல்கிறார் என்று தெரிகிறது. பிறகு வலதுபக்கம் திரும்பி இளைஞனைப் அளவெடுப்பதுபோல பார்க்கிறார்.<br /><br /><strong>நடு:</strong> இன்னிக்கு கூட்டமே இல்லைப் போல. டே டைம்ல அடிக்கடி நான் டிராவல் பண்றதில்லை<br /><br />இளைஞனிடமிருந்து பதில் இல்லை.<br /><br /><strong>நடு:</strong> நீங்க லெஃப்ட் ஹேண்டா?<br /><br />பதில் இல்லை. நடுத்தரவயதுக்காரர் சுவாதீனமாக இளைஞனின் தோள்பட்டையை மெல்ல சுரண்டி<br /><br /><strong>நடு:</strong> நீங்க லெஃப்ட் ஹேண்ட்தானே?<br /><br /><strong>இளை:</strong> (இம்முறை சின்ன திடுக்கிடலோடு திரும்பிய இளைஞன்)ஹ! ஏன் கேக்கறீங்க?<br /><br /><strong>நடு:</strong> இல்ல.. வாட்சை ரைட் ஹாண்ட்ல கட்டியிருக்கீங்களேன்னு கேட்டேன்<br /><br /><strong>இளை:</strong> (அரைப் புன்னகையோடு) ஆமாம். சின்ன வயசுலேந்து அப்படியே பளகிடுச்சு<br /><br />அவனுக்கு ‘ழ’கரம் அவ்வளவாக பழகவில்லைப் போல. அவனது தமிழ் கொஞ்சம் கொச்சையாக இருந்தாலும் அதிகம் இலக்கணம் சிதையாத உச்சரிப்பு.<br /><br /><strong>நடு:</strong> சிலர் எழுதறது மட்டும் இடது கையா இருக்கும். செய்கையெல்லாம் வலது கை. (மீண்டும் அவன் பக்கம் திரும்பி) நீங்க டிரைவர்கிட்ட அட்ரஸ் எழுதி கொடுக்கும்போது கவனிச்சேன்.<br /><br />நடுத்தர வயதுக்காரர் பெரிதாக புன்னகைக்கிறார். பெரியதாக ஏதோ கண்டுபிடித்துவிட்ட வெற்றிப் புன்னகை. பிறகு ஜன்னலுக்கு வெளியே கொஞ்சம் எக்கிப் பார்த்து<br /><br /><strong>நடு:</strong> பஸ்ச எப்பக் கெளப்புவீங்க? சாயந்திரமா ஆறரை ஏழுக்கு சென்னைப் போயிரலாம்ல<br /><br /><strong>வெளிக்குரல்:</strong> தோ! ஒம்பதரைக்கு பொறப்பட்டுர்ரலாம். செல்லாத்தா அருளோட சுருக்கவே சென்னைப் போயிரலாம். சவுரியமா உக்காந்துக்குங்க.<br /><br /><strong>இளை:</strong> (அவரைத் திரும்பிப் பார்த்து கொஞ்சம் தயக்கமாக) எதுக்கு ஏஜ், அட்ரஸ் எல்லாம் எழுதச் சொல்றாங்க.<br /><br /><strong>நடு:</strong> போன மாசம் சிறுகலாம்பட்டி பக்கம் ஒரு மோசமான ஆக்ஸிடண்ட ஆயி பஸ் அப்பளமா நொறுங்கிடுச்சி. இதே டிராவல்ஸ்தான். பேசஞ்சர்ஸ் பலபேரை காண்டாக்டே பண்ண முடியாம பிரச்சினையாப் போச்சி. அதான் புதுசா இந்த ரூல் போட்டிருக்காங்க. (சிரித்துக் கொண்டே) சும்மா ஒரு ரெண்டு மாசத்துகு ஷார்ப்பா இருப்பாங்க போகப் போக மறந்துருவாங்க. (மீண்டும் சிரிப்பு). சொல்றதுதான் ஏழு மணி. எப்படியும் ஒம்பதாவது ஆயிடும். ரெட்டைகுளம் செக்போஸ்ட்ல ஈவ்னிங் ட்ராஃபிக் வேற இருக்கும்.<br /><br /><strong>இளை:</strong> ஓ... செக்போஸ்ட்ல ப்ராப்ளமா? (அவரை திரும்பிப் பார்த்து) எனக்கு இன்னிக்கு நைட் ஃப்ளைட் வேற இருக்கு. சீக்கிரமா போயிட்டா பெட்டர்.<br /><br /><strong>நடு:</strong> எத்தனை மணிக்கு?<br /><br /><strong>இளை:</strong> மிட்நைட் ஒன்றரை மணிக்கு.<br /><br /><strong>நடு:</strong> அதுக்கென்ன. தாராளமாப் போயிடலாம். மீனம்பாக்கத்திலேயே இறங்கிட்டு டக்குனு ஒரு டாக்ஸி பிடிச்சி ஏர்போர்ட் போயிருங்க. கால் டாக்ஸி நம்பர் நம்மகிட்ட இருக்கு. லக்கேஜ் கம்மியா இருக்குன்னா ஆட்டோலயேப் போயிடலாம். டொமஸ்டிக்கா, இண்ட்ர ரேஷனலா? எந்தூருப் போறீங்க? (இண்டர்நேஷனல்தான் அப்படி சொல்கிறார்)<br /><br /><strong>இளை:</strong> (மெதுவாக) சிகாகோ.<br /><br /><strong>நடு:</strong> (புரியாமல் பார்க்க)<br /><br /><strong>இளை:</strong> அமெரிக்கா. சிகாகோவுக்குப் போறேன்.<br /><br /><strong>நடு:</strong> அமெரிக்காவா? யூ சாஃப்ட்வேர் இஞ்சினியர்?<br /><br /><strong>இளை:</strong> நோ! நோ! நான் சிகாகோல ஜ்வெல்லரி பிஸினஸ் பாக்கிறேன். மை ஃபாதர் ஹஸ் அ ஜ்வெல்லரி ஷாப் தேர். பொறந்ததுலேந்து அங்கதான். அம்மா இங்க டாஞ்சூர் பக்கம். சும்மா சுத்திப் பாக்க வந்தேன்... இட்ஸ் வெரி ஹாட் ஓவர் ஹியர்’ (அரைப் புன்னகை) ‘ஹவ் எபவுட் யூ?<br /><br />அவன் தன்னைப் பற்றி கேட்கிறான் என்பதை கொஞ்சம் தாமதமாக புரிந்து கொண்டு, அவனது கையைப் பிடித்து குலுக்கிக் கொண்டே<br /><br /><strong>நடு:</strong> குட் மீட்டிங் யூ. ஐம் இன் சென்னை ஹியர். மி லக்ஷ்மிகாந்தன். ஃப்லிம் இண்டஸ்ட்ரி. ரைட்டர். ரைட்டர் ஃபார் சினிமா. மாயவலை சினிமா யூ நோ?<br /><br />இளைஞன் சிரித்தவாறே அவரைக் கையமர்த்திவிட்டு<br /><br /><strong>இளை:</strong> தமிழ் நல்லாவே புரியும். ஐ’ம் மனோ. சிகாகோல கூட அம்மா வீட்டுல தமிள்லதான் பேசுவாங்க. ஐ கேன் ஈவன் ரீட் தமிள். சொல்லுங்க<br /><br />கொஞ்சம் இடைவெளி விட்டு<br /><br /><strong>மனோ:</strong> ஆர் யு எ ஃப்லிம் டைரக்டர்?<br /><br /><strong>லக்ஷ்:</strong> தமிழ் படிக்கவே தெரியுங்களா... ரொம்ப நல்லது. நான் டைரக்டர் எல்லாம் இல்லை. ரைட்டர் சினிமாவுக்கு கதை எழுதுவேன். சின்னச் சின்ன டிராக், டைரக்டருக்கு சீன் சொல்றது... இந்த மாதிரி. நீங்க தமிழ் சினிமா பாப்பீங்களா?<br /><br /><strong>மனோ:</strong> இல்ல. நாட் மச். நான் சினிமாவே அவ்வளவா பாக்குறது இல்ல<br /><br /><strong>லக்ஷ்:</strong> மாயவலைன்னு ஒரு த்ரில்லர் படம் லேட்டஸ்டா வந்திருக்கு பாருங்க. டைட்டில்ல என் பேர் கூட வரும். ரெண்டு மூணு க்ரௌட் சீன்ல கூட வருவேன். மொத்தம் முப்பத்தேழு செகண்ட் (கெக்கெக்கென என்ற சிரித்தவாறே) சின்ன வயசிலேந்து கதை கேட்டு, சொல்லி, எப்பவும் கதை நெனப்புதான் நமக்கு. (மனோவிடம் நெருங்கினாப்போல வந்து சத்தத்தை சற்றே குறைத்துக் கொண்டு) நம்மளத் தேடி கதைத் தானா வரும்.<br /><br /><strong>மனோ:</strong> (அசுவாரசியமாக) ஓ!<br /><br /><strong>லக்ஷ்:</strong> (இன்னமும் உற்சாகமாக) இப்பப் பாருங்க. இந்த பஸ்சோட டிரைவரை நீஙகளும் பாத்தீங்க. நானும் பாத்தேன். அவர நல்லா கவனிச்சீங்களா? அவருகிட்ட ஒரு கதை கிடைச்சுது. (கண்ணைச் சிமிட்டிக்கொண்டே) நாம பாக்க வேண்டிய இடத்துல சரியா பாத்தா... கெடச்சுரும்.<br /><br /><strong>மனோ:</strong> ம்ம்ம்...<br /><br /><strong>லக்ஷ்:</strong> என்ன கதைன்னு கேக்கறீங்களா? (இல்லைன்னு மனோ தலையாட்டினதை பொருட்படுத்தாமல்) அவர் வலது கையை கவனிச்சீங்களா? மோதிரம் போட்ட தடம் இருக்கு. ஆனா மோதிரம் இல்லை. சட்டைப் பையில பச்சக் கலர் நோட்டீஸ் மடிச்சி வச்சிருக்காரு. பேச்சுவாக்கில செல்லாத்தான்னு சொன்னாரில்ல. தூம்பரம்பாக்கம் செல்ல மாரியம்மன் கோவில் பக்கத்தவரா இருக்கும். அங்க அதிகமான கம்யூனிட்டி யாரு சொல்லுங்க பாப்பம்?<br /><br /><strong>மனோ:</strong> (குழப்பபமாக பார்க்க)<br /><br /><strong>லக்ஷ்:</strong> நீங்க அமெரிக்காவுல வளந்தவுங்க. உங்களுக்கு தெரிஞ்சிருக்க நாயமில்லை. அவங்க சாதியில எப்பவுமே வீட்டு விசேசத்துக்கு நோட்டிஸ் அடிச்சிருவாங்க. பத்திரிகை வைக்கறது தனி. ஒவ்வொரு சடங்குக்கும் ஒவ்வொரு கலர்ல அடிப்பாங்க. சந்தோசமான சடங்கு எல்லாம் பச்சக் கலர் நோட்டீஸா இருக்கும். முக்கியமா பொண்ணு சமஞ்சிடுச்சின்னு வச்சிக்குங்க கண்டிப்பா நோட்டீஸ் போட்டு பரிசம் போட்டு, சீர் வச்சு ஏகபட்ட செலவு செய்வாங்க. பசுமையா செழிப்பா குடும்பம் வளரனும்ல. இவரு வயசைப் பாத்தா பத்து பதிமூணு வயசுல பொண்ணு இருக்க சான்ஸ் இல்ல. இவரோட அக்கா மகளுக்கோ இல்ல நெருங்கிய சொந்தகாரவுக மகளுக்கோ சடங்கு. இவர் சீர் செய்ய மோதிரத்தை அடமானம் வச்சிருக்கார். (நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே வந்தவர், அவன் தோளில் தட்டி சிரித்துக் கொண்டே) கேட்டுப் பாருங்க. கிட்டத்தட்ட இந்த மாதிரிதான் ஏதாவது கதை இருக்கும் அவர்கிட்ட (மீண்டும் ஒரு சிரிப்பு)<br /><br /><strong>மனோ:</strong> (ரசித்து சிரித்தவாறே) ‘ஓ! தட்ஸ் டூ மச். அமேஸிங் கெஸ்ஸிங்.<br /><br />இளைஞன் நடுத்தரவயதுக்காரரை திரும்பி பார்க்க, அவர் அவனைப் பார்த்து மீண்டும் சிரிக்கிறார்.<br /><br />முதல் காட்சி முடிவுற்றதற்கு அறிகுறியாக விளக்கணைகிறது.<br /><br />தொடர்ந்து பஸ்சின் வெளிப்புறம் காட்டப்படுகிறது. பஸ் மெதுவாக புறப்பட்டு சாலயில் செல்கிறது. இரண்டு மூன்று காட்சிகளில் பஸ் சாலையில் இப்புறமிருந்து அப்புறம் செல்வது காட்டப்படுகிறது.<br /><br /><strong><span style="color:#ff0000;">இரண்டாம் காட்சி:</span></strong> மீண்டும் பஸ்சின் உட்புறம். பஸ் பயனித்துக் கொண்டிருப்பது மெல்லிய அசைவுகளின் மூலம் தெரிகிறது. இளைஞன் கையில் பத்திரிகையில் ஏதோ படித்துக் கொண்டிருக்கிறான். நடுத்தரவயதுக்காரர் கையில் செல்போனை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்.<br /><br /><strong>லக்ஷ்:</strong> (மனோவையே பார்த்தவாறே) இந்தப் பக்கம் எந்தூருக்கு வந்தீங்க?<br /><br />கேட்டவாறே மனோவின் முகத்தைப் பார்க்க, அவனும் பத்திரிகையிலிருந்து நிமிர்ந்து அவரைப் பார்த்து கொஞ்சம் நிதானித்துவிட்டு<br /><br /><strong>மனோ: </strong>இங்க பள்மனூர்ன்னு ஒரு வில்லேஜ்<br /><br /><strong>லக்ஷ்:</strong> எந்தூரு? ஏழுகல் ஜமீனா? (புரியாமல் பார்க்கும் மனோவிடம் விளக்கமாக) பழமனூர்னா... அது எரனைக்கல் பக்கம் வருமே. அங்கப் பாத்தீங்கன்னா எரனைக்கல் சுத்தி ஏழு ஊரு இருக்கும். கொக்கி மாதிரி வளஞ்சு வரும். நடுவுல எரனைக்கல். ஏழுகல் ஜமீன்னு கூட சொல்லுவோம் நாங்கள்லாம். அந்த ஏழூர்ல பழமனூர் கூட ஒண்ணு. நம்ம சொந்தகாரவுங்க நெறய இருக்காங்க அங்க. நீங்க எதுவும் ரிலேஷன்ஸ் பாக்க வந்தீங்களோ?<br /><br /><strong>மனோ:</strong> ம்ம்.. இல்லல்ல. சும்மா. ஜஸ்ட் லைக் தட். (முன்னாடி இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து குடிக்கிறான்)<br /><br /><strong>லக்ஷ்:</strong> ஏஸி போட்டாலும் பாருங்க... வெயிலுக்கு தண்ணீர் நெறய எடுத்துக்கவேண்டியிருக்கும். குடிங்க குடிங்க (மனோ கையை உற்றுப் பார்த்து) உங்க மோதிரம் டிஸைன் நல்லா இருக்கு. ஆனா லேடிஸ் மாடல் போல<br /><br /><strong>மனோ:</strong> ஆங்! (வாயைத் துடைத்துக் கொண்டே அனிச்சையாக விரலை பார்த்துக்கொண்டே) ஓ! இதுவா! திஸ் இஸ் நாட் மைன். இது... இது... அம்மாவோடது. (லக்ஷ்மிகாந்தனை திரும்பிப் பார்த்து) ஷி டைட் ஸிக்ஸ் மன்த்ஸ் எகோ. நான் சும்மா போட்டுட்டிருக்கேன் அவங்க நெனப்பா.<br /><br /><strong>லக்ஷ்:</strong> (வருத்தம் தொனிக்க) ஓ!<br /><br />ஓரிரு விநாடிகள் கழித்து<br /><br /><strong>லக்ஷ்:</strong> என்ன விசயமா எரனைக்கல்லுக்கு வந்தீங்க? எதுவும் சொத்து வில்லங்கம் மேட்டரா? எரனைக்கல்லு ஜமீன் குடும்பம்தான் அங்கல்லாம் பஞ்சாயத்து பண்ணி வக்கிறது. ஆனா இப்ப அந்த ஜமீனே வாரிசு தகராறுல பத்து பண்ணிரெண்டு வருசமா கோர்ட் வாய்தான்னு இழுத்திட்டிருக்கு. ஒரு காலத்தில பெரிய ஜமீந்தான். எட்டூருக்கு கண்ணு விட்டெறியும் பாருங்க. சுத்துவட்டாரத்தில நெறய காலேஜ், ஆசுபத்திரின்னு ஏகப்பட்டது இருக்கு. நீங்க எதுவும் சொத்து பஞ்சாயத்துக்கு வந்தீங்களோ?<br /><br /><strong>மனோ:</strong> நோ நோ.. சும்மா பள்மனூர் வந்துட்டுப் போலாம்னு. எங்க அம்மா படிச்சது அங்கதான்.<br /><br /><strong>லக்ஷ்:</strong> பள்மனூர் டீச்சர்ஸ் ட்ரெய்னிங் காலேஜ்லயா படிச்சாங்க?<br /><br /><strong>மனோ:</strong> ம்ம். ஆமாம். நெறய சொல்லியிருக்காங்க.<br /><br /><strong>லக்ஷ்:</strong> நம்ம சகலைதான் அங்க கோவில் தர்மகர்த்தாவா இருக்காரு. ஊர்ல யாரும் சொந்தம் பந்தம், உங்க அம்மாவோட கூடப் படிச்சவுங்க, தெரிஞ்சவங்க யாரையும் பாக்கனும்னு வந்தீங்களா?<br /><br /><strong>மனோ:</strong> இல்ல யாரையும் லொகேட் பண்ண முடியல (அவரைத் திரும்பிப் பார்த்து) இந்த காலேஜ் பத்தி, அவங்க ஃப்ரெண்ட்ஸ் பத்தியெல்லாம். நிறைய சொல்லியிருக்காங்க. ஷி ஹாட் லாட் ஆஃப் ஃபன். அதான் சுத்தி பாத்திட்டுப் போலாம்னு. இட்ஸ் எ லவ்லி ப்ளேஸ்<br /><br /><strong>லக்ஷ்:</strong> அட.. சின்ன ஊர்தான் தம்பி. ஈஸியா பிடிச்சிறலாமே. என்ன பெயர்னு சொல்லுங்க. அப்பால நான் முடிஞ்சா தகவல் சொல்லி உட்டுர்றேன்<br /><br /><strong>மனோ:</strong> நிறய ஞாபகம் இல்ல. ஹேமாவதி சொல்வாங்க. கிருஷ்ண... குமார், சென்பகவல்லி இப்படி சில ஃப்ரெண்ட்ஸ் சொல்வாங்க. வீ யூஸ்ட் டு டாக் எ லாட். (பிறகு மெதுவாக லக்ஷ்மிகாந்தனைப் பார்த்து) ஐ ரியல்லி மிஸ் ஹர் நௌ. அப்புறமாப் பேசலாமே.<br /><br />சில நொடிகள் மௌனம். தொடர்ந்து மனோ கையிலிருந்த வார பத்திரிகையை முகத்தின் மீது மூடிக் கொண்டு தூங்க யத்தனிக்க. லக்ஷ்மிகாந்தன் அவன் கையில் இருந்த மோதிரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். காட்சி முடிவடைகிறது.<br /><br /><strong><span style="color:#ff0000;">மூன்றாவது காட்சி:</span></strong><br /><br />தூங்கிக்கொண்டிருந்த மனோ திடுக்கிட்டவாறு எழுந்திருந்து ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறான். பேருந்தின் உள் விளக்குகள் எரிய வெளியில் இருட்டி விட்டது தெரிகிறது.<br /><br /><strong>லக்ஷ்: </strong>(கையில் செல்போனில் பரபரப்பாக எதையோ அழுத்திக் கொண்டே)முழிச்சிட்டிங்களா? நானே எழுப்பனும்னு நெனச்சிட்டிருந்தேன்.<br /><br /><strong>மனோ: </strong>வாட்ஸ் த டைம் நௌ? சென்னை வந்தாச்சா? (கொட்டாவியை விட்டுக் கொண்டே)<br /><br /><strong>லக்ஷ்:</strong> அரை அவர்ல ஜிஎஸ்டி ரோட் வந்திரும். இங்க இதப் பாருங்க<br /><br />அவர் செல்போனைக் மனோவின் முகத்திற்கு நேராக காட்டுகின்றார். அதில் ஒரு மத்திய வயது மனிதரின் படம். டை கட்டிக் கொண்டு, கோட் அணிந்திருந்த பாஸ்போர்ட் சைஸ் படம்.<br /><br /><strong>மனோ:</strong> (கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டே) வாட்? என்னாதிது?<br /><br /><strong>லக்ஷ்:</strong> இவர்தான் நீங்க தேடிட்டு வந்த கிருஷ்ணகுமார். சொன்னீங்களே உங்க அம்மாகூட படிச்சவர்ன்னு.<br /><br />மனோ ஒரு திடுக்கிடலோடு அவரைத் திரும்பிப் பார்க்க<br /><br /><strong>லக்ஷ்: </strong>அவர்தான் இவர். யாருன்னு தெரியுதா? உங்க அம்மா இவரோட முழுப்பெயரைச் சொல்லலப் போலிருக்கு. (சில நொடிகள் இடைவெளி விட்டு, அழுத்தமாக) கிருஷ்ணராஜ குமார பூபதி. இவர்தான் எரனைக்கல்லு ஜமீனோட கடைசி வாரிசு. இப்பத்தான் நம்ம ஃப்ரெண்ட் ஒருத்தர்கிட்ட பேசி ஜமீந்தார் எழுதின புத்தகத்துல இருந்து போட்டோவ எடுத்து மெசேஜ் போடச் சொன்னேன்.<br /><br />மனோவின் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்<br /><br /><strong>மனோ:</strong> ஓ! (கொஞ்சம் தடுமாறியவாறே) ஐ டோண்ட் நோ ஆக்சுவலி. அம்மா சொன்ன ஃப்ரெண்டு இவர்தானான்னு (செல்போனை அவர்கிட்ட திருப்பி கொடுத்துக் கொண்டே) பட் ஐ ஷுட் அட்மிட் தட்... நீங்க ரொம்ப ஃபாஸ்ட்தான். நிறைய கெஸ் பண்றீங்க<br /><br /><strong>லக்ஷ்:</strong> இதுக்கே ஃபாஸ்ட்னா, உங்க முழுக் கதையும் எனக்கு வந்திடுச்சே. உங்களப் பத்திதான் ஃபோன் மேல ஃபோன் போயிட்டிருக்கு (செல்ஃபோனை காட்டி சிரிக்கிறார்). சரியான இடத்துல பாத்தா சரியான தகவல் கிடைக்கும். இதுல என்னாத்த கெஸ்ஸு.. (சில நொடிகள் இடைவெளிவிட்டு) பேசஞ்சர் லிஸ்ட்ல உங்க வயசு இருபத்தாறுன்னு எழுதியிருந்தீங்க. தம்பி எம்பத்தி மூணாம் வருசம் எந்த தேதில பொறந்தீங்க?<br /><br /><strong>மனோ: </strong>(கொஞ்சம் குழப்பத்துடன்) என்ன எதுவும் ஜோசியம் சொல்லப் போறீங்களா?<br /><br />லக்ஷ்மிகாந்தன் தொடர்ந்து புருவத்தில் கேள்விக்குறியோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்க ஜன்னல் பக்கமாக திரும்பி சில நொடிகள் நோட்டம் விட்டுவிட்டு மனோ அவரை மீண்டும் திரும்பிப் பார்க்கிறான்.<br /><br /><strong>மனோ: </strong>(அவரைத் தவிர்க்க முடியாமல்) செப்டம்பர் பத்து. ஐ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் யுர் கொஸ்டின்ஸ்.<br /><br /><strong>லக்ஷ்:</strong> (கண்களை தாழ்த்தி விரல்களில் சில கணக்குப் போட்டவர், உற்சாகத்துடன் நிமிர்ந்து பார்த்து) கரெக்ட்டு. இது மட்டும் சொல்லுங்க. உங்க அம்மா பேரு நர்மதாவா? அவங்க பழமனூர்ல படிச்சது எம்பத்திரெண்டு, எம்பத்தி மூணாம் வருசமா? எப்பா... எவ்ளோ பெரிய மேட்டர் இது...<br /><br /><strong>மனோ: </strong>(சிறிது திடுக்கிடலோடு) வொய்? எதுக்கு இதெல்லாம் கேக்கறீங்க?<br /><br /><strong>லக்ஷ்:</strong> அட... எம்புட்டுப் பெரிய விஷயம் யோசிச்சிட்டிருக்கேன். சட்டுபுட்டுன்னு சொல்லுங்க தம்பி.<br /><br /><strong>மனோ: </strong>பட்.. என்னப் பத்தி எதுக்கு இவ்ளோ கேக்கறீங்க?<br /><br />மனோவின் இடதுகையைப் பற்றிக் கொண்டு மோதிரத்தை தொட்டுப் காண்பிக்கிறார்.<br /><br /><strong>லக்ஷ்: </strong>எல்லாம் இந்த மோதிரத்துல தோணின ஸ்பார்க்தான். இந்த டிஸைன் பாத்தீங்களா.<br /><br /><strong>மனோ: </strong>யா! வெரி ரிச் அண்ட் ஈஸ்த்தடிக்கலி டிஸைண்ட்.<br /><br /><strong>லக்ஷ்:</strong> அந்த காலத்து ராணிங்க போடற மாடல் தம்பி. நடுவில பெரிய் சிவப்புக் கல். சுத்திவர சின்ன வைரக்கல்லு பதிச்சு... ஆனாப் பாருங்க... இந்த வைரக்கல்லு வரிசை... வட்டமா இல்லாம கொக்கி போல வளைஞ்சு இருக்கு. எத்தனை கல்லு எண்ணிப் பாருங்க. ஏழு இருக்குது. இதுதான் ஏழுகல்லு ஜமீனோட அமைப்பு. இது எரனைக்கல் ஜமீன் டிஸைன் நகை. (மனோவைப் பார்த்து) அவங்க சிம்பல் இதுதான். நிறைய பொருள்ல போட்டிருப்பாங்க. (கொஞ்சம இடைவெளிவிட்டு) இது உங்க அம்மாவோட மோதிரம், அவங்க டீச்சர் ட்ரெய்னிங் படிச்சதா சொன்னவுடனே எனக்கு பொறி தட்டிச்சு. ஜமீந்தார் புத்தகத்துல எல்லாம் எழுதியிருக்கார்.<br /><br /><strong>மனோ: </strong>(அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டு) இல்ல.. நீங்க சொல்றது புரியல்ல. ப்ளீஸ் கையை விடுங்க.<br /><br /><strong>லக்ஷ்:</strong> கிருஷ்ணகுமார் நர்மதாவை சந்திச்சது 82-ம் வருசம் பழமனூர் காலேஜ்ல. சிநேகமாயிட்டாங்க. புது வருசக் கொண்டாட்டதுல கல்யாணம் நிச்சயம் பண்ணிகிட்டு மோதிரம் எல்லாம் போட்டிருக்கார். ஆனா நர்மதா குடும்பத்தில ஒத்துக்கிலை. அவங்க தெலுங்கு செட்டி குடும்பம். (தொடராமல் நிறுத்தி மனோவின் முகத்தையே பார்த்தார்)<br /><br /><strong>மனோ: </strong>(லேசான தடுமாற்றத்தோடு) இதெல்லாம்.. இதெல்லாம்... புக்ல இருக்கா<br /><strong>லக்ஷ்: </strong>ஆமாம்... ரொம்பவே லவ் பண்ணிட்டிருதிருக்காங்க. இன்னமும் டீடெய்லாவே எழுதியிருந்தார் அவங்க பழக்கத்தைப் பத்தி. நீங்க பொறந்த தேதியும் வச்சு பார்த்தா... ம்ம்ம்... (மீண்டும் செல்போன் படத்தையும் மனோவின் முகத்தையும் ஒப்பிட்டு பார்ப்பது போல் பார்க்கிறார்) இதையெல்லாம் விட பெரிய மேட்டர் ஒண்ணு இருக்கு. ஜமீந்தாரோட அப்பா பேரு தெரியுமா? விஸ்வநாதராஜ மனோகர பூபதி. மனோகர்ன்னுதான் கையெழுத்தெல்லாம் போடுவாராம்.<br /><br />மனோ பதில் பேசாமல் ஜன்னல் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.<br /><br /><strong>லக்ஷ்:</strong> தம்பி! இங்கதான் கிளைமேக்ஸ் வருது. கிட்டத்தட்ட நூறு கோடி ரூபா சொத்து. வாரிசு இல்லாம பதிமூணு வருசமா வழக்கு நடந்து வாய்தா போயிட்டிருக்கு. இன்னிக்கு அந்த வழக்குக்கு தீர்ப்பா (அழுத்தமாக) நீங்க வந்திருக்கீங்க...<br /><br />சில விநாடிகள் பேச்சே இல்லாமல் இருக்கிறது. மனோவின் விரல்கள் மோதிரத்தை கழட்டுவதும் போடுவதுமாக இருக்க ஜன்னல் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பிறகு பளபளத்த கண்களோடு லக்ஷ்மிகாந்தனை நோக்கி திரும்பி<br /><br /><strong>மனோ: </strong>லக்ஷ்மிகாந்த். யு ஆர் சம்திங் அமேசிங் யார். என்ன சொல்றதின்னே தெரியல எனக்கு. பட்... ப்ளீஸ் இந்த கதையெல்லாம் இப்ப வேணாம். ஐ’ம் இன் எ ஹர்ரி (தனது பையை சரியாக மூடிக்கொண்டே) அந்த புத்தகத்தில நீங்க படிச்சதுக்கும் மேல நிறைய கதைகள் அம்மா சொல்லிருக்காங்க லக்ஷ்மிகாந்த். அதையெல்லாம் இப்ப டிஸ்கஸ் பண்ண முடியாது. ஆனா எனக்கும் சரி செத்துப் போன அம்மாக்கும் சரி. மை ஃபாதர் இஸ் வெரி இம்பார்டண்ட் ஃபர் அஸ். எங்க அம்மாக்கு முழு சப்போர்டா இருந்தவர் அவர்தான். ஐ டோண்ட் ஹவ் டு நோ எனி நியூ ஜமீந்தார். தயவுசெஞ்சு இந்தக் கதையெல்லாம் மறந்துடுங்க. நான் இறங்கனும் இப்ப (எழுகிறான்)<br /><br /><strong>லக்ஷ்:</strong> (பரபரப்பாக அவனைப் பிடித்து அமர வைத்து) தம்பி! தப்பா எடுத்துக்காதீங்க! இது ரொம்ப பெரிய மேட்டர். நீங்க கொஞ்சம் டயம் கொடுங்க. ஒருவாரத்தில எல்லாத்தையும் க்ளியர் பண்ண்டலாம். அதென்னவோ டிஎன்ஏ டெஸ்ட் இருக்காமே... பயனத்தை கொஞ்சம் ஒத்தி வச்சீங்கன்னா... ஒரு வக்கீல் வச்சு பேசிக்கிடலாம்.<br /><br /><strong>மனோ:</strong> (அவரின் கைகளை விடுவித்துக் கொண்டே) ப்ளீஸ். ப்ளீஸ். இதெல்லாம் முடிஞ்சி போன கதை எனக்கு. (அவர் கையைப் பிடித்து விரித்து எரனைக்கல் மோதிரத்தை அதில் வைத்தவாறே) இந்தக் மோதிரமும் எனக்கு இனி வேண்டாம். என் ஞாபகார்த்தமாவே உங்ககிட்டேயே இருக்கட்டும். (திட்டவட்டமான குரலில்) எல்லாத்தையும் மறந்திடுங்க.<br /><br />இருக்கையை விட்டு எழுந்து லக்ஷ்மிகாந்தனை கடந்து இறங்கப் போகிறான். லக்ஷ்மிகாந்தன் அவன் கைகளைப் பற்றி இழுக்க முயற்சிக்க... விடுவித்துக் கொண்டு விலகுகிறான்.<br /><br />லக்ஷ்மிகாந்தனின் வருத்தமான முகத்தோடு காட்சி முடிவடைகிறது.<br /><br /><strong><span style="color:#ff0000;">நான்காம் காட்சி: </span></strong><br /><br />அது ஒரு அறையின் கட்டில். பின்னால் சின்னதாக ஜன்னல் இருக்க வெளியில் இருட்டிருக்க அறையினுள் விளக்கு வெளிச்சம். கட்டிலின் மேல் லக்ஷ்மிகாந்தன் கால்களை நீட்டி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு மாலை நாளிதழ் படித்துக் கொண்டிருக்கிறார். சினிமா செய்திகளை முதலில் படிக்கும் பழக்கத்தினால் பின்னாலிருந்து படித்துக் கொண்டே வருகிறார். முதல் பக்கம் இருக்கும் செய்தியை படித்துக் கொண்டிருக்கும்போதே பரபரப்பாக நிமிர்ந்து உட்கார்கிறார். வாய்விட்டு படித்துக் கொண்டே வருகிறார்.<br /><br /><strong>லக்ஷ்: </strong>எரனைக்கல் ஜமீனில் துணிகர கொள்ளை. 50 லட்ச நகைகள் மற்றும் பணம் அபேஸ். ஐயோ... கறுப்பு கலர் குவாலிஸ் காரில் வந்த கொள்ளை கூட்டத்தினரை போலிஸார் மடக்கினர். நகைகளுடன் தலைமறைவாகிவிட்ட இளைஞரைத் தேடி வலைவீச்சு. தொடர்ந்து படிக்க செய்திகளுக்கு 6-ம் பக்கம் பார்க்க.<br /><br />பரபரப்பாக பேப்பரை புரட்டுகிறார். சில நொடிகளில் மீண்டும் முதல் பக்கம். பிறகு மீண்டும் அடுத்த பக்கங்கள். அப்படியே காட்சி முடிகிறது.<br /><br /><span style="color:#ff0000;">இந்த சிறுகதை <a href="http://tamil.blogkut.com/">சங்கமம் குழு</a> நடத்தும் <a href="http://tamil.blogkut.com/contest0409_.php">பேருந்து சிறுகதை போட்டிக்காக</a> எழுதப்பட்டது. </span><br /><br />இலவச இணைப்பாக ஒரு குறும்படம் - <strong>கறுப்பு பொத்தான்</strong><br /><br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/QrKnhOJ-R80&amp;hl=en&amp;fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/QrKnhOJ-R80&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /></span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-5437951992241153261?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-30880544.post-45222666813588261882009-04-30T18:21:00.001-07:002009-05-06T06:58:01.335-07:00சாதனையும், சமூக தொடர்புவலைகளும்<a href="http://dubukku.blogspot.com/">டுபுக்கு </a>என்ற பெயரில் பதிவிடும் திரு. ரெங்கராமன் இரு துருவங்களுக்கும் பயனம் செய்த முதல் இந்தியரைப் பற்றிய இடுகை ஒன்று <a href="http://dubukku.blogspot.com/2009/04/blog-post.html">இங்கே பதிவிட்டிருக்கிறார்</a>. தொடர்ந்த சில விவாதங்கள் <a href="http://dubukku.blogspot.com/2009/04/blog-post_27.html">இங்கேயும் </a>அளிக்கப்பட்டிருக்கின்றன. நானும் அந்த இடுகைகளில் சில கருத்துகள் தெரிவித்திருந்தேன். <br /><br /><span class="fullpost">’சாரா’ (எ) சரஸ்வதி காமேஸ்வரன் ஏகப்பட்ட பிரயத்தனங்களுக்குப் பிறகு இரண்டே இரண்டு பெண்மனிகள் கொண்ட குழுவில் எந்த வெளி ஆதரவாளரும் இல்லாமல் தன் சுயமுயற்சியில் இரண்டு துருவங்களுக்கும் 2007ல் போய் வந்திருக்கிறார். இவர் இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்றாலும் அதனை ஊடகங்கள் சரியாக அங்கீகரிக்காமல் விட்டுவிட்டன என்று ரெங்கராமன் வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். சரஸ்வதியின் நண்பர் <a href="http://www.blogger.com/profile/05008712429421685911">பொயட்ரீயும் </a>இதனை ஊடகங்களுக்கு முறையாக எடுத்து செல்வதில் உள்ள கசப்பான அனுபவங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். <br /><br />சரஸ்வதி காமேஸ்வரன் வட துருவத்திற்கும், தென் துருவத்திற்கும் சென்ற செய்திகளின் தொகுப்பு இணையத்தில் கீழிருக்கும் சுட்டிகளில் பதியப்பட்டிருக்கின்றன. ரெங்கராமனின் பதிவுகளில் மேலும் பல தகவல்கள் இருக்கிறது.<br /><br /><a href="http://www.polarexplorers.com/ExpeditionTracker2007.htm#SP1deg">Expedition Tracker</a><br /><br /><a href="http://www.icetrek.com/index.php?id=729">Icetrek Expeditions</a><br /><br />சாதனையாளர்களை ஊடகங்கள் சரியானபடி அங்கீகரிக்காதது வருத்தம் அளித்தாலும், ஊடகங்களிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. NDTV-லோ நாளிதழ்களிலோ வெளிவரும் செய்திகளை அங்கீகாரம் என்று எண்ணுவதை விட முறையான வகையில் சாதனைகளை பதிவு செய்து இணையத்தின் மூலம் அதிக பேரைச் சென்றடைவதால் அதிகமாக பிரபலமடைய முடியும். இன்றைய இணைய உலகில் அதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. ஒரு நாள் டீவியில் வெளியிடப்படும் செய்திகளை காட்டிலும் இணையத்தில் முறையாக பதிவிடப்படும் செய்திகள் அதிகமானவர்களை அதிக நாட்களுக்கு சென்றடையும் என்பது எனது கருத்து. <br /><br />அது என்ன ‘முறையாக’ பதியப்படும் விஷயங்கள்? இணையத்தின் பலமே அது பல்கிப் பெருகி பரவும் தன்மையைக் கொண்டது - Geometrical Progression போல. முறையாக பதியப்பட்டால் அதன் பலன்களும் பல மடங்குகள் அதிகமே. இன்றைய காலகட்டத்தில் Social Networking எனப்படும் சமூக தொடர்பு வலை உங்களையும் உங்கள் சாதனைகளையும் பிரபலமாக்க ஏராளமான வழிவகைகள் செய்து தருகின்றது.<br /><br /><a href="http://www.wikipedia.org/">Wikipedia </a>- இது ஒரு இணைய ஆவணக் களஞ்சியம். இங்கு யாரும் தங்களைப் பற்றியோ அல்லது தங்களுக்கு தெரிந்த சாதனையாளர்கள் / சாதனைகள் / நிகழ்வுகள் / செய்திகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் இலவசமாக பதிவு செய்யலாம். பதிவு செய்யப்படும்போது எல்லாவித தகவல்களும் கொடுத்து விடுவது நல்லது. நாளை யாராவது ஒருவர் ‘தமிழர், வட துருவம்’ என்று தமிழிலோ, ஆங்கிலத்திலோ கூகுளில் தேடினால் இது சரியாக விக்கிபீடியாவின் சம்பந்தபட்ட பக்கத்தை கொண்டு வரும் வகையில் எல்லா தகவல்களும் பதியப்பட வேண்டும். உதாரணத்திற்கு மேலே தரப்பட்டுள்ள trekking பற்றிய பதிவுகளில் சரஸ்வதி காமேஸ்வரன் ‘சாரா’ என்றே குறிப்பிடப்படுகிறார். அதனால் விக்கி பக்கத்தில அவரது பொதுப் பெயரான ‘சாரா’ என்பதையும் சரியாக குறிப்பிட வேண்டியது அவசியம். <br /><br />உதாரணத்திற்கு <a href="http://en.wikipedia.org/wiki/List_of_firsts_in_the_Geographic_North_Pole">முதலில் வட துருவத்தை சென்றடைந்தவர்களைப் பற்றிய பட்டியல் </a>இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. இது போல சாராவிற்கு பல பக்கங்கள் தொகுக்கப்பட்டு ஆவணப் படுத்தலாம். தமிழிலும் ஆவணப்படுத்துவது முக்கியம். <br /><br />சொந்த தளம்: என்னதான் விக்கிபீடியாவில் தொகுக்கப்பட்டு ஆவணபடுத்தப்பட்டாலும், பயனக் கட்டுரைகள், புகைப்படங்கள், வீடியோக்கள், நண்பர்களின் தளங்களில் இணைக்கப்பட்ட விவரங்கள் இவை எல்லாவற்றையும் தொகுத்து வைக்க சிறந்த இடம் சொந்த தளம்தான். மிகவும் எளிமையான முறையில், சிக்கனமாக, தனது பயனத்தை சுவாரசியமான கட்டுரைகளாக தொகுத்து வைக்கலாம். <br /><br /><a href="http://www.facebook.com/">Facebook</a>: சொந்த தளம் இருந்தாலும் அதை பலருக்கும் அறிமுகப்படுத்த பலரையும் தொடர்பு கொள்ள வேண்டும். பைசா செலவில்லாத, ஆனால் மிகப்பெரிய நெட்வொர்க்கிங் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய தளம் இது. உங்கள் நண்பர்களும், நண்பர்களின் தொடர்புகளும், இணையத்தை புழங்கக் கூடிய யாரும் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவிகரமான இடம்.<br /><br /><a href="http://www.orkut.com/">Orkut</a>: Facebook உங்களுக்கு ஒரு முகவரி என்றால் Orkut இன்னொரு வகையில் அதே சாத்தியங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். இதில் பெரிதும் குழுமங்களாக மக்கள் பங்கு பெறுகிறார்கள். நிறைய விவாதங்களும் நடைபெறும். உங்களைப் பற்றிய விபரங்களை இணையத்தில் மக்கள் தேடக்கூடிய முக்கிய இடமாக இன்றும் இருக்கிறது ஆர்க்குட்.<br /><br /><a href="http://wordpress.com/">பதிவு (Blog)</a> சொந்த தளம் எல்லாம் அதிகப்படி என்று நினைக்கிறவர்கள் Blogs-ல் இலவச சேவை வழங்கிகள் மூலமாக தங்களைப் பற்றிய விவரங்களைப் பதியலாம். திரட்டிகள் மூலமாக, கூகுள் ரீடர் மூலமாக, இன்னமும் பல சாதனங்கள் மூலமாக இந்தப் பதிவுகளின் விஸ்தீரணம் மிகவும் அதிகம்.<br /><br />அதிக பக்கங்களில், அதிக நெட்வொர்க்கில் பதிவதின் மூலம் கூகுள் போன்ற தேடு பொறியில் முதல் பக்கத்திலேயே உங்களுடைய தகவல்கள் தெரியப்படுவதற்கு சாத்தியங்கள் அதிகம்.<br /><br />மேலும் <a href="http://www.linkedin.com/">LinkedIn</a>, மின்னஞ்சல் குழுமங்கள், ட்விட்டர் போன்ற பல தகவல் தொடர்புகள் மூலம் உங்களைப் பற்றிய செய்திகள், சாதனைகள் எல்லாவற்றையும் பதியலாம். தற்போதைய இந்திய தொலைகாட்சிகள் மற்றும் செய்திதாள்கள் இந்த இணையப் புரட்சியில் பின்தங்கியே இருக்கின்றன. இணையத்தில் நீங்கள் அதிகப்படியான மக்களை சென்றடைந்தால் ஊடகங்கள் உங்கள் பின்னே தானாக வரும்.<br /><br />இணையம் அல்லாத சில வழிகளிலும் ஊடகங்களைச் சென்றடையலாம். ஆனால் அதற்கு தேவையான அளவில் செய்தியை வடிவமைப்பது முக்கியம். இலவச மென்பொருட்களைக் கொண்டே சிறப்பான முறையில் செய்தியை வடிவமைத்து ஒரு Flier போன்று ஊடகங்களுக்கு மின்னஞ்சல் செய்வதனால் உடனடி கவனம் பெறும். அந்தந்த துறைக்கென்று நிறைய குழுமங்கள் இருக்கின்றன. அந்த குழுமங்களுக்கு சரியான முறையில் செய்தியை சேர்ப்பித்து அந்த குழுமங்களின் வாயிலாக பத்திரிகை ஊடகங்களுக்கு செய்தியை கொண்டு செல்லலாம். Event Management வல்லுனர்கள் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ஊடகப் பார்வைக்கு கொண்டு செல்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். என்ன கொஞ்சம் செலவாகலாம்.<br /><br />ஒன்றுமே செய்யாமலேயே இணையத்தினால் புகழ் பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு சாதனையாளர் என்றால் இணையத்தின் மூலமாக முறையாக சந்தைபடுத்தி உங்களுக்கு உரிய அங்கீகாரம் கட்டாயம் பெறலாம். </span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-4522266681358826188?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-30880544.post-34856774800723045902009-04-28T03:12:00.001-07:002009-04-28T03:36:07.167-07:00உலக மகா எழுத்தாளர்களால் எரிச்சல்!இணையத்தின் பல்வேறு சாதனைகளில் ஒன்று எழுத்தாளர்களை இணையத்திலும் எழுத வைத்து அவர்களையும் சாதாரணர்களாக ஆக்கியது. முன்பு இலக்கிய சச்சரவுகளை தேடித்தேடி படிக்க பத்திரிகைகளை நாடியிருக்கிறேன். ஆனால் சில ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களினால்’ ஏற்படும் எரிச்சலுக்கு படிப்பதையே நிறுத்திவிடலாமா என்று தோன்றுகிறது.<br /><br /><span class="fullpost">சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் படித்திருக்கிறீர்களா? கணையாழியின் கடைசிப் பக்கங்கள்? ’21-ம் நூற்றாண்டின் விளிம்பில்’ மற்றும் ’கற்றதும் பெற்றதும்’ கட்டுரைத் தொடர்கள்? ஸ்ரீரங்கத்து அடையவளஞ்சான் சந்திலிருந்து, எமஐடி-யில் படித்ததும், ஏர்போர்ட்டில் கண்காணிப்பாளராக வேலை செய்ததும், பெங்களூர் ஜாலஹள்ளிக்கு குடி பெயர்ந்ததும், இந்திய தேர்தலை நவீனபடுத்திய ‘மின்னனு ஓட்டு இயந்திரம்’ அறிமுகப் படுத்தியதும், பாலகுமாரனுக்கு சிறுகதை எழுதுவது எப்படி என்று சொன்னதும், அவருடைய திரையுலக நண்பர்கள் பற்றிய செய்திகளும் இன்னபிற செய்திகளும் சாதாரண வாசகனாக மட்டும் இருக்கக் கூடிய, அவருடன் வேறெந்த பரிச்சயமும் இல்லாத என்னைப் போன்றவர்களுக்குக் கூட தெரிந்திருக்கும் வகையில் அவரே வெளிப்படையாக எழுதியிருக்கிறார். அவர் கடைசி காலத்தில் காசுக்கு கஷ்டப்பட்டார் என்றெல்லாம் எழுதுவது வாசகர்களை முட்டாளாக்கும் மோசடி வேலை. <br /><br />உலகமகா எழுத்தாளர்களால் எள்ளல் செய்யப்படும் ‘மிடில் கிளாஸ் மோரன்’களுக்காகவே சுஜாதா ’மத்தியமர்’ என்னும் தொடர் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக எழுதியிருக்கிறார். சுஜாதாவை படிக்காமலேயே அவரை பெரிய எழுத்தாளராக மதிப்பதாக பம்மாத்து காட்டுவது எந்த பதிப்பாளரை திருப்திபடுத்த? எரிச்சல்! <br /><br />ஐயா உலக மகா எழுத்தாளர்களே! நீங்கள் எழுத்தாளர்கள் என்னும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள ஏதாவது படிக்கும்படி எழுதுங்கள். இந்த கடித போக்குவரத்துகள், சுய சொறிதல்கள், தம்பட்டங்கள் எல்லாம் புளித்துப் போன பழைய கஞ்சி. கடிகாரம் போல் நிற்காமல் ஓடும் ஹிட் கௌண்டர்களை எல்லாம் நம்பாமல் உங்களின் தரத்தை நீங்களே உணர்ந்து கொள்ளூம் காலம் எப்பொழுது வரும்?<br /><br />வரிக்கு வரி தொடுப்பு கொடுத்து விமர்சித்து எழுத ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் வியவஸ்தைகெட்ட தளங்களுக்கு வீண் விளம்பரம் வேண்டாம் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-3485677480072304590?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-30880544.post-50580579635320633322009-03-20T10:01:00.000-07:002009-06-20T05:45:08.792-07:00கமிஷன் மண்டி சுப்பையாசுப்பையாவை எனக்கு பள்ளிக் காலத்திலிருந்தே தெரியும். கல்லூரியில் நாங்களிருவருமே கணக்கு பாடம்தான் எடுத்தோம். கணக்கின் மீது பெரிதாக விருப்பு என்றெல்லாம் இல்லை. அதுதான் கிடைத்தது. ராஜா கல்லூரி வகுப்பில்தான் பழக்கமானான். பக்கத்தில் எம்.என். காலனியில்தான் வீடு என்பதால் வெகு சீக்கிரம் தோஸ்த் ஆகிவிட்டான். சுப்பையாவிற்கும் ராஜாவிற்கும் இடையே ஒரு ஸ்பெஷல் உறவுதான் என்று சொல்ல வேண்டும்.<br /><br /><span class="fullpost">கல்லூரியில் சேர்ந்த முதல் வாரத்தில், கட்டுடலுடன் சின்னதாக அரைக்கை சட்டை போட்டுக் கொண்டு நரைத்த மீசையுடன் மாடர்ன் அல்ஜீப்ரா எடுத்த மேஜர் இராகவன் ஒரு சிக்கலான தேற்றத்தை விளக்க சுப்பையாவைத்தான் முதலில் கூப்பிட்டார். இராகவன் என்.சி.சி ஆபிஸர் என்பதால் நாங்களாக அவரை மேஜர் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தோம். ‘இஃப் யு ஆர் நாட் பிஹேவிங் பிராப்பர்லி, ஐ வில் த்ரோ யு பிஸிக்கலி அவுட் ஆஃப் த கிளாஸ். ஐ ஹேவ் த எபிலிட்டி... யு பி கேர்ஃபுல்’ என்று எங்களைப் போன்ற இளைஞர் கூட்டத்தின் முன் தனது ஐம்பத்தைந்து வயதிலும் உதார் விடும் தைரியம் அவருக்குதான் உண்டு. தொடர்ச்சியாக பிடித்த சிகரெட்டினால் அவருக்கு பின்னர் இதய நோய் வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்த போது கடைசியாகப் பார்த்தேன். ஒடுங்கிப் போய் படுக்கையில் படுத்து இருந்தாலும் திடீரென்று உத்வேகத்தோடு எழுந்து சாக்பீஸை விட்டெறிந்து ஏதாவது தேற்றம் விளக்கி சொல்லச் சொல்வாரோ என்று கொஞ்சம் பயமாகவே இருந்தது.<br /><br />சுப்பையா வெகுளியான தெற்கத்திப் பையன். ஒரு அசட்டு சிரிப்போடுதான் எதையுமே பேசத் தொடங்குவான். அவன் உளறி, கிளறி தேற்றத்தை ஒப்பேற்ற... அடித்தொண்டையில் இராகவன் ‘எந்த ஸ்கூலு நீ?’ என்றார். நாங்கள் படித்த ஸ்கூலை சுப்பையா சொன்னவுடன் ‘நெனச்சேன். போய் ஒக்காரு. உருப்படற கேஸா தெரியல’ என்று விரட்டிவிட்டார்.<br /><br />ராஜாவிற்கு ஒருவனை பார்த்தவுடன் எடை போடுகிற திறமை இருந்தது. அல்லது அப்படி இருப்பதாக சொல்லிக் கொள்வான். பழுப்பு நிற பல்லோடு, அழுத்தி பின்னோக்கி சீவிய தலையோடு, கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு மாதிரி ஸ்டைலாகத்தான் வருவான். பேச்சில் பத்து சதவீதம் கூட உண்மை இருக்காது. ஆனால் தன்னம்பிக்கையோடு எல்லாரையும் வளைத்து விடுவான். சுப்பையாவின் அப்பா மாட்டுத் தரகு கமிஷன் மண்டி வைத்திருந்தபடியால் ராஜா அப்படித்தான் அவனை விளிப்பான். கல்லூரி முழுவதும் சுப்பையா ‘கமிஷன் மண்டி’ சுப்பையாதான். எனக்கும் ராஜாவிற்கும் வெகு சீக்கிரம் கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகி கல்லூரியில் பிரபலம் ஆகிவிட்டோம். எங்களையறியாமல் சுப்பையாவும் எங்கள் செட்டில் ஐக்கியமாகியிருந்தான். ராஜா காலால் சொல்வதை தலையால் செய்யும் ஆதர்ச அல்லக்கை ஆகிவிட்டிருந்தான்.<br /><br />‘போன வருஷ சீனியர் சீத்தாராமன் தெரியும்ல? இந்த புக்க படிச்சிதான் ஐஐஎஸ்ஸி என்டிரென்ஸ்ல பாஸ் பண்ணினான்.’ என்றோ<br /><br />‘இதான் மெய்யப்பன் யுனிவர்ஸிட்டி டீமில செலக்ட் ஆன டென்னிஸ் ராக்கெட்’ என்றோ<br /><br />ஏதாவது படம் போட்டு சுப்பையாவிடம் பல பொருட்களை சகாய விலையில் விற்றுவிடுவான். கிடைத்த பணத்தில் நானும் அவனும் பத்து ரூபாய்க்கு விற்ற ராமராஜன் கலர் டி-சர்ட்களோடு கல்லூரியில் உலா வந்தோம். பிரதியுபகாரமாக சுப்பையாவிற்கு எச்சி தம்மடிப்பது, மலையாளப் படங்கள் பார்ப்பது போன்ற சில பிரத்யேக பயிற்சிகள் அளித்து அவனையும் வளர்த்து விட்டான்.<br /><br />ராஜலஷ்மி எங்களைவிட மூன்று செட் மூத்தவள். ஆங்கிலத்தில் எம்.ஃபில் பண்ணிக் கொண்டிருக்கும் போதே தற்காலிக போஸ்டிங்கில் எங்களுக்கும் ஆங்கில பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள். அவள் மாமாதான் ஆங்கிலத்துறை தலைவர் என்பது பின்னர் புரிந்து கொண்ட செய்தி. ராஜலஷ்மி ஆங்கிலப் பாடம் எடுக்கும் போது மட்டும் சுப்பையாவிற்கு அப்படி தூக்கம் தூக்கமாக வரும். கரும்பலகையை முறைத்துப் பார்த்துக் கொண்டே அவன் சொக்கி விழுவதைப் ராஜலஷ்மி பெரிதுபடுத்தாமல் தவிர்த்தே வந்திருந்தாள். ராஜலஷ்மியின் தாத்தா வீடு எங்கள் தெருதான். நாங்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடும்போது அடிக்கடி அவர் வீட்டில்தான் பந்து போய் விழும். அந்த முசுட்டு தாத்தா பந்தையே கொடுக்க மாட்டார். ராஜலஷ்மி அவள் தாத்தா வீட்டிற்கு வரும்போது நட்பு பயனமாக எல்லை தாண்டி வீட்டிற்குள் சென்று பந்துகளை மீட்டுக்கொண்டு வருவேன். சிநேக புன்முறுவலோடு ஓரிரு வார்த்தைகள் பேசுவாள். ராஜாவிற்கு அவள் தூரத்து சொந்தம் என்பதால் அவன் இன்னமும் சகஜமாகவே கடலை வறுப்பான்.<br /><br />ஒரு தீபாவளியின்போது ஜிலுஜிலுவென்று எண்ணெய்க் குளியல் முடிந்த கையோடு எங்கள் வீட்டுக்கு பலகாரங்கள் கொண்டு வந்து கொடுத்தாள். எனது புத்தாடைகளைப் பார்த்து ‘நைஸ் ஷர்ட்’ என்று பாராட்டிவிட்டுச் சென்றாள். பிறகு ராஜா வெறுங்கையில் ராக்கெட் விடுகிறேன் என்று ஒரு ராக்கெட்டை முசுட்டு தாத்தாவின் வீட்டிற்குள் விட்டுவிட பெரிய ரகளை ஆகிவிட்டது. மூக்குவிடைக்க தாத்தா ‘காள்’ ‘காள்’ என்று கத்த அவர் பின்னாலிருந்த ராஜல்ஷ்மி எங்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்..<br /><br />வழக்கம்போல் ராஜலஷ்மியின் வகுப்பில் அரைகுறைத்தூக்கத்தில் இருந்த சுப்பையாவின் இரு காதிலும் ராஜா கோல்ட் ஃபிளேக் சிகரெட்டை சொருகி வைத்துவிட அது தெரியாமல் அவன் தீவிரமாக சாமியாடிக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைப் பார்த்து வகுப்பறையே வழித்துக் கொண்டு சிரிக்க இம்முறை ராஜலஷ்மி டிபார்ட்மெண்டில் போட்டுக் கொடுத்து விட்டாள். ஆங்கிலத் துறையின் ஒரே பசுங்கிளியாக அவள் இருந்தபடியால், மாமாக்கள், தாத்தாக்கள் ஆன எல்லா பேராசிரியர்களும் தீவிரமாக களத்தில் குதித்துவிட்டார்கள். சுப்பையாவை சஸ்பெண்ட் செய்யப் போகிறார்கள் என்ற நிலைமை ஆகிவிட்டது. சுப்பையா ராஜாவின் பெயரை வெள்யிடாவிட்டாலும், ஆசிரியர் குழுவிடம் ராஜலஷ்மி ராஜாவின் பெயரையும் ஹிண்ட் செய்துவிட்டிருந்தாள். ராஜாவிற்கும் தர்மசங்கடமான நிலைமை ஆகிவிட்டது. ஒருபக்கம் சொந்தக்கார பெண். இன்னொருபக்கம் அல்லக்கை நண்பன்.<br /><br />திடீர் திருப்பமாக ஸ்டாஃப் டாய்லெட்டில் ராஜலஷ்மியையும் ஆங்கிலத்துறை எச் ஓ டி-ஆன அவள் மாமாவையும் சேர்த்து வைத்து கன்னா பின்னாவென்று கெட்டகெட்ட வார்த்தையில் கிறுக்கி வைத்துவிட அவள் கல்லூரியிலிருந்து நின்றுவிட வேண்டியதாகிவிட்டது. அவளே போனபிறகு ஆங்கிலத்துறையிலிருந்த மற்ற மாமாக்களுக்கு ’மோட்டிவேஷன்’ சுத்தமாக போய்விட, சுப்பையாவை விட்டுவிட்டார்கள். கழிப்பறையில் யார் எழுதியது என்று தெரியாவிட்டாலும் ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித பீதி நிலவியது என்னவோ உண்மைதான். ராஜா எழுதியிருக்க மாட்டான் என்று நம்பினாலும், அவன் அந்த விஷயத்தில் நிறையவே சலம்பினான். சஸ்பென்ஷனிலிருந்து தப்பியதும், ராஜாவின் அலப்பறையினாலும், சுப்பையாவிற்கு அவன் மேல் பன்மடங்கு மரியாதை வந்துவிட்டது. தன்னை பொதுவில் காட்டிக் கொடுக்காத கமிஷன் மண்டி மேல் ராஜாவிற்கும் பாசம் கூடிவிட்டது.<br /><br />பட்டப்படிப்பு முடிந்தவுடன் அவரவர் பாதையில் பிரிந்து விட்டோம். சுப்பையா டிஎன்பிஎஸ்ஸி எழுதி வருவாய்த்துறையில் குமாஸ்தாவாக சேர்ந்தான். ராஜா கல்கத்தாவில் ஐஐஎஸ்-ல் புள்ளியியல் மேற்படிப்பு படிக்கச் சென்றான். நான் அங்கே இங்கே என்று சுற்றி வேலை கிடைக்காமல் கொஞ்ச நாட்கள் சென்னையில் பாண்டி பஜாரில் சாலையோரத்தில் பொம்மைகள் விற்றுக் கொண்டிருந்தேன். அப்பொழுத்தான் சுப்பையா கல்யாண பத்திரிகை கொடுத்ததாக ஞாபகம். திருமணம் ஆன சில வருடங்களிலே வீடு கட்ட ஆரம்பித்துவிட்டான். பின்னர் ஏற்பட்ட ஐடி துறை அலையில் ராஜா ஏறி ஏதேதோ சம்பந்தமில்லாத வேலைகள் செய்து லண்டன் சென்று செட்டிலாகிவிட்டான். நான் ரியல் எஸ்டேட், எல ஐ சி என்று பல்வேறு தரகு வேலைகள் செய்துவிட்டு இப்பொழுத்தான் இரண்டு வருடமாக டிபார்மெண்டல் ஸ்டோர் வைத்து ஒரு மாதிரி பொழப்பு ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.<br /><br />போன பொங்கலுக்கு ராஜா ஊருக்கு வந்தபோது சந்தித்தோம். வழுக்கை அதிகமானதால் முழு மொட்டை அடித்துக் கொண்டு குறுந்தாடியோடு அதே அதிரடி ராஜா. ’கமிஷன் மண்டியை மீட் பண்ணனுமே’ என்று ஆசைபட்டதால் சுப்பையாவை தேடிப் போனோம். கிட்டத்தட்ட பதினைந்து வருடம் கழித்து மூன்று பேரும் சேர்ந்து சந்தித்தோம் என்று நினைக்கிறேன். சுப்பையா கதர் வேட்டி கதர் சட்டையில் நன்றாக செழுமையாக இருந்தான். அரசியல் கட்சி பொறுப்புகள், ரோட்டரி கிளப் என்று சமூக அந்தஸ்தில் ஓரிரு படிகள் உயர்ந்திருந்தான். பேச்சுவாக்கில்,<br /><br />’போன வருசம்னு நெனக்கிறேன்... மீனாட்சி திருக்கல்யாணத்து போது நம்ம பழய இங்க்லீசு டீச்சர் ராஜலஷ்மியை பாத்தேம்பா. ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம். இங்ங்னதான் விளாச்ச்சேரில இருக்காங்களாம். ரெண்டு பொண்ணுங்கப்பா அதுக்கு’ என்றான்.<br /><br />உடனே ராஜா ‘ரெண்டுமே பொண்ணாமா? மொத பொண்ணு பொறந்தபோது ஈமெயில் அனுப்பினான்னு நெனக்கிறேன்’ என்றான்<br /><br />‘உன்ன பத்தி, சிர்தரை பத்தியெல்லாம் கேட்டுச்சுப்பா. ப்ச்ச்... அந்த டாய்லெட் மேட்டர்தான் நெனக்க ரொம்ப கஷ்டமாப் போச்சி. ஆனா இப்ப நெனக்கையில் சிரிச்சிகிட்டோம் ரெண்டு பேரும்’ என்றவாறே ராஜாவைப் பாத்தான் சுப்பையா.<br /><br />‘ஏய்... அது இன்னமுமா நியாபகம் வச்சிட்டு இருக்காளாமா?’ என்றவாறே பெரிதாக சிரித்தான் ராஜா.<br /><br />‘டு பி ஹானெஸ்ட்.. எனக்கு அங்க என்னா எழுதியிருந்ததுன்னு கூட தெரியாது. எவனோ ஒரு கபோதிப் பய எழுதிபிட்டான். ஆனா, கமிஷன் மண்டி, எப்படியோ உன் மேட்டர் சால்வ் ஆயிடுச்சுல்ல. சஸ்பென்ஷன்னாலும் ஒண்ணும் புடுங்கியிருக்க முடியாது. ஆர்ட்ஸ் பசங்கிட்ட ஸ்ட்ரைக் வரைக்கும் பேசி வச்சிருந்தேன். கள்ளந்திரியிலிருந்து பசங்க செட் கொணாந்து பெரிய ரகளையெல்லாம் பிளான் பண்ணியிருந்தோம்’ வழக்கமான ராஜா சலம்பல். எங்களிருவரையும் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு...<br /><br />‘நிஜம்மாவே எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா’ என்றான்<br /><br />‘தெரியும்’ என்றான் சுப்பையா. பிறகு என்னைப் பார்த்தவாறே ‘ராஜலஷ்மி எல்லாம் சொல்லிச்சு. அன்னிக்கு நீ வெளில வரசொல்ல பாத்திச்சாம்.’ என்றான்.<br /><br />நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களும் அப்புறம் ஒன்றும் கேட்கவில்லை.</span><br /><br /><span style="color:#ff0000;">இந்த சிறுகதை <a href="http://tamil.blogkut.com/">சங்கமம் குழு</a> நடத்தும் <a href="http://tamil.blogkut.com/contest0309.php">கல்லூரி சிறுகதை போட்டிக்காக</a> எழுதப்பட்டது. </span></span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-5058057963532063332?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-30880544.post-21251998761880706582009-02-27T21:35:00.000-08:002009-03-24T21:40:43.109-07:00திருத்தி எழுதியவன்<span style="color:#000000;"><strong><span style="color:#ff0000;">வ</span></strong>சுமதி</span> அக்கா நல்ல நெகுநெகுவென்று உயரமாக செம்பு நிறத்தில் இருப்பார். சாட்டை போல் நீண்டிருக்கும் பின்னலை முன்னாடி எடுத்து விட்டு நீவிக் கொண்டே காதருகே குனிந்து ‘என்னதான் சொல்றார் உங்க சார்?’ என்று அவர் கேட்கும்போது கண்களில் குறும்பு மின்னும். பாலமுருகன் சார் கொடுக்கும் கடிதத்தை பாதுகாப்பாக அரைஞான் கொடியின் பக்கவாட்டில் சொருகி வைத்திருந்து வசுமதி அக்காவிடம் கொடுப்பதுதான் அப்போதைய எனது முக்கிய பணி. அதுவும் கூடத்து ஊஞ்சலில் ஹாண்டில் பார் மீசையோடு உட்கார்ந்திருக்கும் ரகோத்தமன் மாமாவிற்கு சந்தேகம் வராமல் கடிதத்தை அக்காவிடம் சேர்ப்பிக்க வேண்டும். ’போடா அந்தண்டை’ என்று என்னை துரத்தி விட்டு மொட்டை மாடி கைப்பிடிச் சுவரின் குறுகிய நிழலில் அமர்ந்து அக்கா அந்த கடிதத்தை திரும்பி திரும்பி படிப்பாள். அருகே எப்போதும் ரேடியோ பாடிக் கொண்டே இருக்கும். ரஙகநாயகி மாமி ‘ஏடி! எங்கடி தொலஞ்ச’ என்று குரல் கொடுக்கும் வரை ஒரே கடிதத்தை மாற்றி மாற்றி படிப்பாள்.<br /><br /><span class="fullpost">ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு வெளியே அறிவியலின் சுவாரசியங்களை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவர் பாலமுருகன் சார்தான். கரலைபாளையத்தின் வரலாற்றில் ஹாம் ரேடியோ வைத்திருந்த ஒரே ஜீவன் அவர்தான். பல நாட்டு சிற்றலைகளை அவர் வீட்டு ரேடியோவில் நான் கேட்டிருக்கிறேன். பாலமுருகன் சார் கரலைபாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கு வரும்வரை வசுமதி அக்காவிற்கு சலங்கை ஒலியும், விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பும், எப்போதும் மடியிலேயே சுருண்டு படுத்திருக்கும் சோனியும்தான் தெரியும். சோனி ஒரு சோம்பேறி பூனைக்குட்டி. ரங்கநாயகி மாமி கரண்டியை வைத்து தாம்பாளத்தில் ‘நங்’கென ஓசை எழுப்பி சமிக்ஞை கொடுத்தவுடன் உடனே துள்ளி எழுந்து பால் குடிக்க ஓடிவிடும். அலாரிப்பு, தில்லானா என்றிருந்த வசுமதி அக்காவின் உலகம், பின்னர் பாலமுருகன் சாரின் காதல் கடிதங்களால் நிரம்பி வழிந்தது. எல்லாம் அந்த சனியன் பிடித்த செவ்வாய்கிழமைவரைதான்.<br /><br />மொட்டை மாடியின் வெயிலை பொருட்படுத்தாமல் சாரின் கடிதத்தை அக்கா படித்துக் கொண்டிருக்க அருகில் இருந்த ரேடியோவில் அந்த அறிவிப்பு வெளியானது.<br /><br />’நேயர்களே! இந்த பிரபஞ்சத்தின் மிக முக்கியமான கணம் இதோ இன்னமும் சில நொடிகளில். 12 மணி 34 நிமிடம் 56 நொடி 7-ம் தேதி 8-ம் மாதம் 90-ம் வருடம்... இதோ’<br /><br />நான் வாசலில் சோனியை கொஞ்சிக் கொண்டு நின்றிருந்தேன். அதிவேகமான காற்று அக்காவின் மென்மையான விரல்களை வென்று அந்த கடித காகிதங்களை சுழற்றிக் கொண்டு போய் வீட்டு முன்னால் தெருவில் பரத்திவிட்டது. நான் பரபரத்து தெருவில் இறங்கி பொறுக்குவதற்குள் விரித்து பிடித்த குடையுடன் ரகோத்தமன் மாமா வெளியில் வந்துவிட்டார்.<br /><br />’என்னடா பேப்பர் அது?’<br /><br />ஹேண்டில் பார் மீசைக்கு பின்னாலிருந்து கரகரப்பான குரலில் கேள்வி கேட்டுக் கொண்டே அந்த காகிதங்களை கைப்பற்றினார் மாமா. பாலமுருகன் சாரின் காதலுக்கு அத்தோடு ஆயுசு முடிந்தது. மாமாவின் செல்வாக்கினால் வேலை இழந்த போது கூட அவர் இடிந்துவிடவில்லை. அடுத்த இரண்டாம் வெள்ளிகிழமையே அக்காவிற்கு அந்தியூரில் கல்யாணம் நிச்சயம் ஆன போதுதான் ஆடிப் போனார். மனசு ஒடிந்து போன நிலையில் தீரமான செயல் தற்கொலைதானா என்ன? சாரை சந்தித்தால் கட்டாயம் கேட்க வேண்டும்.<br /><p align="center">o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o </p><br />’<strong><span style="color:#ff0000;">நோ</span></strong>பல் பரிசு’ ஆராய்ச்சி தொகுப்பினை மூடி வைத்துக் கொண்டே ‘கண்டிப்பாக இது நோபல் பரிசை வெல்லக்கூடிய கூடிய ஆராய்ச்சி. வான்கூவர் ஸ்பேஸ் ஸயின்ஸ் காண்ஃப்ரன்ஸில் இந்த பேப்பர்தான் திருப்புமுனையாக இருக்கப் போகிறது. எனக்கு முழுத் திருப்தி!’ என்று புன்னகைத்தபடியே சொன்னார் க்ளென் வெஸ்ஸெல். எங்கள் ஆராய்ச்சி கூடத்தின் துணைத்தலைவர்.<br /><br />‘மிக்க நன்றி சார்!’ இவர் இவ்வளவு தூரம் திருப்தியடைவார் என்று எதிர்பார்க்கவில்லை.<br /><br />‘உனது கணித விளக்கங்களை முழுவதுமாக பார்க்கவில்லை. ஆனால் நீ சொல்வதை வைத்து பார்த்தால் கடந்த கால ரேடியோ அலைகளை தொடர்ந்து பின்னோக்கி போக முடியும் என்கிறாய். அதுதானே Adaptive Wave Tracing என்று சொல்லியிருந்தாய்?’ உதட்டை மடித்து ஈரப்படுத்திக் கொண்டே கேட்டார்.<br /><br />‘யெஸ் ஸார்! என்னுடைய பள்ளி ஆசிரியர் பாலமுருகன் இதனைப் பற்றி அப்ஸ்ட்ராக்டாக பேசுவார். சிறு வயதிலேயே மனதில் பதிந்து போன விசயம். அவர் அதர்வன வேதம், எகிப்திய பழக்கங்கள், ஊடு மந்திரம் என்றெல்லாம் விளக்கம் சொல்லியிருந்தார்’<br /><br />‘ஓ! தயவுசெய்து அந்த விஷயங்களை இந்த ஆராய்ச்சியில் கொண்டு வந்து விடாதே. நீ சொல்லியிருக்கும் பாய்ஸன் டிஸ்ட்ரிப்யூஷன் அணுகுமுறை மிகச் சரி. ப்ரிண்ஸ்டன் பல்கலைகழகத்தில் இது தொடர்பான ஒரு ஆய்வு கட்டுரை வாசிக்கப்பட்டது. ஆனால் நீ பல படிகள் மேலே சென்றிருக்கிறாய். விண்வெளி அறிவியலில் இது ஒரு மைல் கல்.’<br /><br />அவருக்கு பக்கவாட்டிலிருந்த இருந்த அறையைக் காட்டி ‘நமது சிம்பிக்ப்ளூ (SIMBICBLUE) ஒரு பிரும்மராட்சசன். இவனால்தான் இந்த ஆராய்ச்சி சாத்தியமானது!’ என்றேன். சிம்பிக்ப்ளு என்பது ஒரு பிரும்மாண்டமான சூப்பர் கணிணி. சுருக்கமாக சிப்ளு என்று எங்கள் குழுவில் கூப்பிடுவோம்.<br /><br />சிப்ளூவோடு விரலால் உரையாடிக் கொண்டே ’இதைக் கேளுங்களேன்’ என்றேன் க்ளென்னிடம்.<br /><br />’நேயர்களே! இந்த பிரபஞ்சத்தின் மிக முக்கியமான கணம் இதோ இன்னமும் சில நொடிகளில். 12 மணி 34 நிமிடம் 56 நொடி 7-ம் தேதி 8-ம் மாதம் 90-ம் வருடம்... இதோ’ வசீகரமான குரலில் ஒரு தமிழ் அறிவிப்பு. 1990-களில் விவிதபாரதியில் பிரபலமான வானொலி அறிவிப்பாளர் செழியனின் குரல் அப்படியே அட்சரம் பிசகாமல் தமிழில் ஒலித்தது.<br /><br />அந்த தமிழ் அறிவிப்பினை க்ளென்னுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டு ‘பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் இந்த பிரபஞ்சத்தில் செலுத்தப்பட்ட அந்த ரேடியோ அலைகளை சிப்ளு கவர்ந்து, தொகுத்து இப்பொழுது நமக்கு ஒலிக்க செய்திருக்கிறான். செழியன் அன்று விவிதபாரதியில் பேசியதை இன்று நேரடியாக நாம் கேட்கிறோம் சார். வேறு எங்கும் பதிவு செய்யப்பட்டதல்ல’ எனது குரல் நெகிழ்ந்து தழுதழுத்தது. எட்டு வருடம் இரவு பகலாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெற்றியை பகிரும்போது ஏற்படும் நெகிழ்ச்சி. பாலமுருகன் சார்... நீங்கள் இதையெல்லாம் பார்க்க கொடுத்துவைக்கவில்லையே.<br /><br />‘அது மட்டுமல்ல க்ளென்! இரண்டாம் உலகப் போரின்போது பதியப்பட்ட சில ரேடியோ அறிவிப்புகளை சிப்ளூவிடம் கொடுத்தால்.. ‘ அவர் கண்கள் மின்ன என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். ‘அந்த ரேடியோ அலைகள் எந்த நாளில், எங்கிருந்து செலுத்தப்பட்டது என்பதை மிகச்சரியாக சிப்ளூ கணித்துவிடுவான். Adaptive Wave Tracing’<br /><br />’பிரமாதம்! இதன் பயண்களின் எல்லை என்னை பிரமிக்க வைக்கிறது’ அவர் கண்களில் டாலர்கள் கோடிகளில் குவிகின்றன.<br /><p align="center">o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o </p><br /><strong><span style="color:#ff0000;">எ</span></strong>னது அடுத்த கட்ட சோதனைய க்ளென்னிடம் நான் சொல்லவில்லை. அதை நேரடியாக பாலமுருகன் சாரிடம் சொல்லிவிடப் போகிறேன். அதற்கு முன்னால் அவரிடம் கேட்டு விட வேண்டும்.<br /><br />’ஏன் இப்படி கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனீர்கள்?’<br /><br />இரண்டாம் கட்ட சோதனை கொஞ்சம் சிக்கலானது. Grandfather Paradox என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். விளைவுகளை தீர்மானமாக சொல்லிவிட முடியாது. ஆனால் இந்த சோதனையின் சாத்தியமாக வசுமதி அக்காவின் காதல் வெற்றி பெறலாம். பாலமுருகன் சாரின் தற்கொலை தடுக்கப்படலாம். இந்த ஆராய்ச்சியின் வித்து அவரிடம் அன்றே இருந்தது. அவரின் வழிகாட்டுதலில் நான் தற்போது எட்டியிருக்கும் உயரங்களை விட அதிக உயரங்களை அடையலாம். எல்லாம் ‘லாம்’கள்தான் என்றாலும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.<br /><br />பாலமுருகன் சாரின் பிரேதப்பரிசோதனை அறிக்கை, மற்றும் வசுமதி அக்கா, சோனி, ரகோத்தமன் மாமா, ரங்கநாயகி மாமி என்று எல்லோர் பற்றிய தகவல்களையும் சேர்த்து இந்த ஆராய்ச்சி தொகுப்போடு மிகவும் ஜாக்கிரதையாக எனது லைப்ரரியில் பத்திரப்படுத்தியிருக்கிறேன்.<br /><br />நாளை இந்த ஆராய்ச்சியின் முழு வெற்றியையும் இந்த உலகம் உணரப் போவதற்கு நீங்கள்தான் சாட்சி.<br /><p align="center">o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o </p><br /><strong><span style="color:#ff0000;">இ</span></strong>தோ சிப்ளூ இரண்டாம்கட்ட சோதனையை தொடங்கிவிட்டான், செழியனின் அறிவிப்பை தொடர்ந்து...<br /><br />சிப்ளூவால் ரேடியோ அலைகளை ட்ரேஸ் செய்து அது புறப்பட்ட இடத்தை கணிக்க மட்டுமல்ல, மேலும் சில ஜாலங்கள் செய்ய முடியும். சிப்ளூ தான் தொடரும் ரேடியோ அலைகளில் சில எல்லைகுட்பட்டு மாற்றங்கள் செய்ய முடியும். லாக்கர்ஹீட் ரேடியோ ஷிஃப்ட் என்று கேள்விப்பட்டிருப்பீர்களா? கேள்விபடாவிட்டாலும் கவலையில்லை. எளிமையாக சொல்வது என்றால் செழியனின் அறிவிப்பை ட்ரேஸ் செய்து விவிதபாரதியிலிருந்து அது ஒலிபரப்பும் முன்னர் ஒரு சின்ன மாற்றம் செய்துவிடப் போகிறான்.<br /><br />ஆம்! 1990-ம் வருடம் இந்த உலகம் கேட்கப்போவது சிப்ளூவினால் மாற்றம் செய்யப்பட்ட செழியனின் அறிவிப்பு. ஒரு அழகிய ஓவியத்தில் சிறிய கரும்புள்ளி விழுந்துவிட்டது. கொஞ்சம் போல் வெண்மை வண்ணத்தை வைத்து அந்த கறையை துடைத்து விட்டால் படம் முழு சோபை பெற்று விடாது? இதோ சிப்ளூ திருத்தி எழுதப் போகிறான்.<br /><br />வா! எனது நவீன பிரம்மாவே! இந்த பிரபஞ்சத்தில் பின்னோக்கி பயணித்து போ. நடந்த நிகழ்ச்சிகளில் ஒரு சின்ன பிழை திருத்தம். இப்பொழுதிலிருந்து நீங்களும் இந்த சோதனையில் ஒரு பாத்திரம். நாளைய பிரபஞ்சத்தில் இந்த ஆராய்ச்சி பேசப்படுவதில் உங்கள் பங்கும் இருக்கிறது நண்பரே.<br /><p align="center">o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o </p><br /><strong><span style="color:#ff0000;">மொ</span></strong>ட்டை மாடியின் வெயிலை பொருட்படுத்தாமல் சாரின் கடிதத்தை அக்கா படித்துக் கொண்டிருக்க அருகில் இருந்த ரேடியோவில் அந்த அறிவிப்பு வெளியானது.<br /><br />’நேயர்களே! இந்த பிரபஞ்சத்தின் மிக முக்கியமான கணம் இதோ இன்னமும் சில நொடிகளில். 12 மணி 34 நிமிடம் 56 நொடி 7-ம் தேதி 8-ம் மாதம் 90-ம் வருடம்... இதோ’<br /><br />நான் வாசலில் சோனியை கொஞ்சிக் கொண்டு நின்றிருந்தேன். அறிவிப்பின் முடிவில் ’நங்’ன்று ஒரு சத்தம். பித்தளை தாம்பாளத்தில் ஓங்கி அடித்தது போல். என் கையிலிருந்த சோனி எகிறி குதித்து ஓடியது. ’ஏய்!’ என்று நான் கூப்பிட்டுக் கொண்டே திரும்பினேன். திடீரென்று அதிவேகமான காற்று அக்காவின் மென்மையான விரல்களை வென்று அந்த கடித காகிதங்களை சுழற்றிக் கொண்டு போய் வீட்டு வாசலில் பரத்திவிட்டது. நான் பரபரத்து தெருவில் இறங்கி பொறுக்குவதற்குள்...<br /><br />’சை! புறப்படும்போது இந்த சனியன் வேற குறுக்கே போறது. ரங்கநாயகி! கொஞ்சம் தேத்தம் எடுத்துண்டு வா’ விரித்து பிடித்த குடையுடன் ரகோத்தமன் மாமா வீட்டு வாசலில் திரும்பி படியேறி உள்ளே போனார்.<br /><p align="center">o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o </p><br />எனது தொண்டை ஏன் இப்படி எரிகிறது? கண்கள் வேறு காந்துகிறது ஏழெட்டு நாட்களாக தூங்காத மாதிரி ஏனிப்படி.. ’வசுக்கா’ என்று முனகுகிறேன்.<br /><br />’முழிச்சிட்டியா?’ என்று பக்கத்திலிருந்து ஆதுரமான குரல்.<br /><br />’ரொம்பத்தான் பயமுறுத்திட்டே ரெண்டு நாளா’ ஆமாம். பாலமுருகன் சார்தான். அவரேதான்.<br /><br />’சார்! சார்!’ தழுதழுக்க... சட்டென எல்லாம் மறந்து போய் விட்ட மாதிரி... எங்கோ ஒரு சங்கிலி உடைந்து போன மாதிரி வெறுமையாய் உணர்கிறேன்.<br /><br />அவருடைய வழக்கமான வசீகர புன்னகையோடு ‘என்ன திடீர்னு வசு நினப்பு? அவதான் அந்தியூர் ஐயர் பையனைக் கட்டிக்கிட்டு அமெரிக்கா போய் வருசம் பத்து பதினஞ்சு ஆயிருக்குமேப்பா. ம்ம்ம்... என்னாச்சு உனக்கு? இன்னமும் கெறக்கமாத்தான் இருக்கா? நல்லவேளை அதிகமா நெருப்பு காயம் இல்லை. ரெண்டு நாளா டிஸ்சார்ஜ் ஆயிடலாம்னு சொல்லிட்டாரு டாக்டர்.’<br /><br />’நெருப்பா?’<br /><br />’ம்ம்ம். எல்லாம் அந்த கெழட்டு பூனை சோனி வேலைதான். பிரஸ்ல எரிஞ்சிட்டிருந்த மெழுவர்த்தியை தட்டிவிட்டு எல்லாம் தீப்பிடிச்சிடுச்சு. ஆறுமுகம் பதறிப்போய் தண்ணி மண்ணுன்னு தத்தளிச்சு கொண்டாறதுக்குள்ள... எல்லா பொஸ்தகமும் எரிஞ்சுப் போச்சுப்பா. நீ தப்பினதே பெரிய புண்ணியம். ரொம்பவே பதறிப் போயிட்டோம்’<br /><br />எனக்கு கிறுகிறுவென தலையை சுற்றியது. எரிந்து போயிற்றா? நான் எதையோ இழந்தது போல்... ’எல்லாம் போச்சா?’ என்கிறேன் முனகலாக.<br /><br />’டென்த் ஸ்டாண்டேர்டு சைன்ஸ் கைட் மொத்தமும் போச்சுப்பா. ப்ரிண்டானது, பைண்ட்ல இருந்தது, மேனுஸ்க்ரிப்ட் எல்லாம் போச்சு. வேற என்னென்ன ஆர்டர் எடுத்து வச்சிருந்தியோ நீயு’ என்றார் உச்சுக்கொட்டிக்கொண்டே. தொடர்ந்து ’சரி. ஒன்னும் பிரச்சினையில்ல. கைட்-ஐ திரும்பி எழுதிடலாம். புது சிலபஸ்ங்கிறதுனால கொஞ்சம் லேட்டாவும்.’ என்கிறார்.<br /><br />அய்யோ... அய்யோ... இல்ல. வேற ஏதோ தப்பாகிவிட்டது. நான்... நான்... இல்லை. வேறு ஏதோ எனக்கு குழப்பம்.<br /><br />ஆ! சுறுசுறுவென நினைவுகள் சுழன்று அடிக்கின்றன. சாரோட குரல் தூரத்தில் கேட்கிறது. அறிவியல் பாட கைடா? அதுதானா? வேறேதோ ஒண்ணு மறந்து போன மாதிரி. என்னென்னமோ பிம்பங்கள் மனதில் மாறிமாறி மோதுகின்றன.<br /><br />’சார்!’<br /><br />’என்னா?’<br /><br />’ஜூனுக்குள்ள ப்ரிண்டாகி கடைக்கு போவனும். உங்க ஸ்கூல்ல எதுனா பி எஃப் லோன் கிடைக்குதுன்னா பாருங்களேன்’ என்கிறேன் நான், என் குரலையே நம்ப முடியாமல்.<br /><p align="center">o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o </p><br />ஆழி பதிப்பகம் நடத்திய <a href="http://aazhipublishers.com/sujatha.html">அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைப் போட்டிக்காக</a> எழுதியது. பரிசு பெறவில்லை எனினும் எனக்கு திருப்தியாக இருந்த படைப்பு. இதை எழுத ஊக்குவித்த <a href="http://masivakumar.blogspot.com/2007/02/7.html">ஜெயராதா</a>, <a href="http://jyovramsundar.blogspot.com/">ஜ்யோவ்ராம் சுந்தர் </a>போன்ற நண்பர்களுக்கும், படித்து கருத்து சொன்ன <a href="http://penathal.blogspot.com/">சுரேஷ்</a>, <a href="http://twitter.com/dynobuoy">டைனோக்கும் </a>நன்றிகள் பல. கருத்தே சொல்லாமல் ஓபி அடித்த <a href="http://elavasam.blogspot.com/">இலவசனாருக்கு </a>இங்கே எனது கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறேன்.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-2125199876188070658?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-30880544.post-85954769695354064102009-02-11T09:28:00.000-08:002009-02-15T01:25:10.681-08:00அரைகுறை கடவுள்அகோரி, பிச்சைக்காரர்களின் உலகம், pirates of the caribeean sea போன்ற photo-shoot, இளையராஜாவின் இசை, ஜெமோவின் கதை-வசனம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வந்த படம் பாலாவின் ‘நான் கடவுள்’. வணிகரீதியாக ஓரளவிற்கு வெற்றியடைந்திருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், ஒரு படைப்பாக தோல்விதான். <br /><br /><span class="fullpost">பொதுவாக நான் பாலாவின் படங்களில் எனக்கு சில அம்சஙகள் பிடித்திருந்தாலும், பல விமர்சஙகளும் இருந்ததுண்டு. விளிம்பு நிலை மனிதர்களை பாத்திரமாக அமைப்பதை தவிர, அவர் படங்கள் பெரும்பாலும் ‘தட்டையான’ போக்கையே கொண்டிருக்கும். அந்த பாத்திரங்களின் குணாதிசயங்கள் கதை போக்கிற்கு எந்தவித மாறுபட்ட பங்காற்றலும் செய்யாது ஒட்டாமல் இருப்பது போல் இருக்கும். படம் பார்ப்பவரின் கற்பனையை தூண்டாமல் நேரிடையான காட்சிபடுத்துதல் பிரதானமாக இருக்கும். அதுவே அவருடைய படங்களின் பெருவாரியான வெற்றிக்கு ஒரு காரணம். ஒருவகையில் எம்ஜியார் படங்களின் சூத்திரமும் அதுதான். இந்தப் படத்தில் வரும் அகோரி பாத்திரம் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அகோரிகளுக்கு நல்லவர்கள், கெட்டவர்கள் யாரென்று தெரியும். அவர்கள் மோட்சம் அளிக்கும் அருள் பெற்றவர்கள் என்று வசனங்கள் முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகின்றன. பிற்பகுதியில் பார்வையாளனுக்கு எந்த வித சந்தேகமும் எழாவண்ணம் அவை காட்சியமைக்கப்படுகின்றன. ஆனால் அகோரிகள் பற்றி இப்படியா ‘கருப்பு / வெள்ளை’யாக சொல்ல முடியும்? கஞ்சா குடிப்பது எந்த வகையில் அகோரிகளை சிவனுக்கு அருகில் கொண்டு செல்கிறது? சுடுகாட்டில் யோகம் செய்யும் அகோரிகள் இறந்த உடல்களை புசிக்கின்றார்களா? அது யோகமா இல்லை மனப்பிறழ்வா? போன்ற கேள்விகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு சராசரி தமிழ்படத்தில் தவறில்லாமல் தீர்ப்பு சொல்லும் நாட்டாமைக்கு நிகராக ஒரு அகோரி சாமியார். <br /><br />ஜெமோவின் கதைகளில் கதாபாத்திரங்கள் பல குறியீடுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும். ‘மத்தகம்’ கதையைப் பற்றி அவரிடம் உரையாடிய சந்தர்ப்பத்தில் அவர் எழுதியதை விட வாசகனால் பல மடங்கு விஸ்தீரிக்க முடிந்தது புரிந்தது. ஜெமோவின் ’ஏழாம் உலகம்’ சொல்லும் பிச்சைக்கார உலகத்தை ஓரளவிற்கு கண் முன்னே நிறுத்துகிறார் பாலா. ‘அம்பானின்னா யாருப்பா?’ ‘செல்போன் விக்கிறவங்க. உனக்கு அதெல்லாம் புரியாது’ போன்ற வசனங்கள் மிகவும் ரசமான நுட்பமான கிண்டல். ஆனால் நீதிமன்ற காட்சிகளின் முழுப் பரிமானமும் புரியவில்லை. நீதிமன்ற / அரசு இயந்திரங்களில் இரண்டற கலந்துவிட்ட சாதி, மத அரசியலை எள்ளல் செய்வது போல் இருந்தாலும் அழுத்தம் இல்லை. இராமர் பால விவகாரத்தில் வேதாந்தி செய்த கோமாளிதனத்தை உதாரணம் காட்டுவது ஒட்டவில்லை.<br /><br />‘நம்மளைப் போன்ற நாதியத்தவங்களுக்கு ஏதய்யா சாமி’ என்று வயதான பிச்சைக்காரர் புலம்பும்போதும் ‘எங்களைப் போன்ற நிர்கதியான பிச்சைக்காரர்களால் கடவுளுக்கு என்ன புகழ்?’ என்று பாதிக்கப்பட்ட குருட்டு பிச்சைக்காரி கேள்வி கேட்கும்போதும் நிதர்சனம் பளீரென்று அறைகிறது. ஆனால், இந்தக் கேள்விகளுக்கு பதிலாக ஒரு சூப்பர் மேன் சாமியார் வந்து மசாலாத்தனமாக சண்டையிட்டு கெட்டவர்களை போட்டுத் தள்ளிவிட்டு, நிராதரவான பிச்சைகாரிக்கு மோட்சம் அளிக்கிறார். மிகவும் ஏமாற்றமளிக்கும் திரைக்கதை. இதற்கு மேல் படத்தைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. <br /><br />ஆனால் இந்த ‘சூப்பர் சாமியார்’ அடிதடி கதைக்கு ‘அஹம் பிரம்மாஸ்மி’ போன்ற tagline எல்லாம் அதிகப்படி. பர பிரும்மம் ஜகன்நாதம்.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-8595476969535406410?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com41tag:blogger.com,1999:blog-30880544.post-20102362189101560042008-12-31T14:50:00.000-08:002008-12-31T18:44:41.614-08:00உறுதியாகச் சொல்கிறேன்நண்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். <br /><br />கடந்த சில வருடங்களாகவே இணையத்தின் இண்டு இடுக்கெல்லாம் புகுந்து தேடி படித்துக் கொண்டிருந்தவன் ஆர்வத்தோடு எழுதவும் தொடங்கியது 2008-ல்தான். பின்னர் சில பல வேலை அழுத்தங்கள் காரணமாக வரைவில் இருக்கும் பதிவுகளை கூட வெளியிடாமல் ‘அப்புறமா பாத்துக்கலாம்’ என்று போட்டு வைத்தாகிவிட்டது. 2009-ல் நிலைமை மாறும் என்று நம்புகிறேன்.<br /><br /><span class="fullpost">இந்தப் பதிவை தொடங்கியதே புனைவுகள் நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வத்தினால்தான். மொத்தம் <a href="http://www.sridharblogs.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88">ஒன்பது சிறுகதைகள் </a>எழுதியிருக்கிறேன் என்பதில் ஒரு சின்ன திருப்தி. நிறைய <a href="http://www.sridharblogs.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE">சினிமா பற்றி </a>எழுதியிருக்கிறேன் என்று தெரிகிறது. வரைவில் இருக்கும் ஒரு பத்து இடுகைகள் உட்பட எல்லா இடுகைகளுக்கும் Netflix-தான் ஆகப் பெரிய காரணம். புது வருடத்தில் இன்னமும் நிறைய படங்களை அறிமுகப்படுத்த ஆசை. முடியுமா?<br /><br />தொழில் சார்ந்து நிறைய எழுத வேண்டும் என்ற விழைவு உண்டு. <a href="http://wikipasanga.blogspot.com/">விக்கி பசங்களுக்கு </a>வாக்குறுதி கொடுத்த HTML பற்றிய தமிழ் இடுகைத் தொடர் 2009-ல் சாத்தியமாகுமா? அதற்குள் வேறு யாராவது எழுதிவிடுவார்களோ?<br /><br />யார் என்ன கிண்டல் அடித்தாலும் விடாமல் தமிழில் கவிதை வடிவத்தை கையகப்படுத்தி ஒரு சில படைப்புகளை வெளியிடும் தனியாத கொலை வெறி இருக்கிறது. <br /><br />மக்களுக்கு பயனுறும் வகையில் சில இணைய தளங்களை அமைக்கும் ஆர்வம் இருக்கிறது. தற்போது உடல்நலத் துறையில் கண் பதித்திருப்பதால் கூடிய சீக்கிரம் ஒரு சேவை தளத்தை உருவாக்கி காட்ட வேண்டும். <br /><br />எப்படி இருந்த நான் இப்படி ‘மிக’ நல்லவனாகி கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் முழுமையான TeeTotellar-ஆக மாறிவிடும் உத்தேசம் இருக்கிறது.<br /><br />இன்னமும் ட்விட்டரில் விரிவாக தொடர்பு கொள்வது, தொழில்நுட்ப வலைத்தளங்கள் தொடங்குவது, எழுத நினைத்திருக்கும் பரீட்சைகள், தொடர்ந்து செய்ய வேண்டிய உடற்பயிற்சி என்று ஒரு பெரும் பட்டியல் ஓடுகிறது.<br /><br />New Year's is a harmless annual institution, of no particular use to anybody save as a scapegoat for promiscuous drunks, and friendly calls and humbug resolutions.<br /><br />- Mark Twain</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-2010236218910156004?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-30880544.post-23101837344663104062008-11-27T18:08:00.001-08:002008-11-28T22:18:30.125-08:00மரத்துப் போய்விட்ட மனதுமும்பையில் தொடரும் தீவிரவாத தாக்குதலில் பலியான மக்களுக்கு அஞ்சலி. <br /><br />மேலும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போலிசார், ராணுவம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் எல்லாரும் வெற்றி பெற்று மும்பை மாநகரம் அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப பிரார்த்தனைகள்.<br /><br /><span class="fullpost">ஏழு வருடங்களுக்கு முன்னர் ஒரு வேலை நிமித்தமாக அமெரிக்காவில் சிகாகோ பக்கத்தில் ஒரு சிறிய ஊரில் ஆறு மாதங்கள் வேலை பார்த்தேன். ஒரு மென்பொருள் வடிவமைக்கும் சிறிய இந்தியக் குழுவில் நானும் ஒரு அங்கதினன். அலுவலகம் போவது / வருவது எல்லாமே குழுப் பயனம்தான். காலையில் அலுவலகம் சென்றதுமே பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒரு பிளேன் நியூயார்க் உலக வர்த்தக கோபுரத்தை தகர்த்து விட்டது என்று செய்திகள். பெரும் பரபரப்பு தொற்றிக் கொள்ள ‘டைம்ஸ்’ இணைய தளத்தை பார்வையிட்டு எங்கள் குழுவிடையே விவாதித்துக் கொண்டிருந்தோம். வீட்டிற்கு வந்து Fox News-ல் பார்க்கும்போது இரண்டாம் கோபுரம் தாக்கப்பட்டதை லைவ்-ஆக காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இந்தியாவிற்கு தொலைபேச முடியாத அளவிற்கு எல்லா இணைப்புகளும் உபயோகத்தில் இருந்தன. சிகாகோவில் 105 மாடி உயரக் கட்டிடம் (’சியர்ஸ் டவர்ஸ்’) இருந்ததினால் அடுத்த இலக்காக அது இருக்குமோ என்று எல்லாரும் பயந்து கொண்டிருந்தோம். எல்லாவற்றையும் விட ஆசியர்கள் மேல் அமெரிக்கர்களுக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அந்த நகரத்தில் இருந்து சொற்ப ஆசியர்களில் நாங்களும் அடக்கம். ஓரிரு மாதங்கள்வரை தெருவில் நடந்து போனால் கூர்மையான பார்வைகளை தவிர்க்க முடியாது. ஒரு முறை சைக்கிளில் சென்று கொண்டிருந்த அமெரிக்கர் ஒருவர் நின்று என்னை உறுத்துப் பார்த்துவிட்டு உரக்க வெறுப்பை உமிழும் வார்தைகளை கொட்டிவிட்டுப் போனார்.<br /><br />2001-க்கு முன்னர் நடந்த மும்பை குண்டுவெடிப்போ வேறு சில ஒருங்கிணைந்த தீவிரவாத தாக்குதல்களை தினசரி தாள்களில் அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் பாதிப்பு எப்படி இருந்தது என்று இப்பொழுது சொல்லத் தெரியவில்லை. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு செய்தி ஊடகங்களின் பங்கு மிகவும் அதிகரித்து விட்டது. இந்தியப் பாராளுமன்ற தாக்குதலைப் பற்றி NDTV-ல் விலாவாரியாக கார்டூன் படம் போல விவரித்து சொல்லும்போது எவ்வளவு நுணுக்கமான தகவல்கள் என்று பிரமித்துப் போயிருக்கிறேன். தற்போது நடக்கும் தாக்குதலையும், மீட்பு நடவடிக்கைகளையும் CNN IBN நேரடி ஒளிபரப்புவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது. தொடர்ந்து போலிஸார் வேண்டுகோள் விடுத்து பிறகே நேரடி ஒளிபரப்பை நிறுத்தினார்கள். செய்தி ஒளிபரப்பில் இது வளர்ச்சி மாதிரி தோன்றவில்லை. ஏதேனும் புலிட்ஸர் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் பார்த்தவர்களுக்கு மனது மரத்துப் போய்விட்டது.<br /><br />தற்போது மும்பையில் நடந்த தாக்குதல் ஒருங்கிணைந்த தீவிரவாதம் (Organized Terrorist Attack). தீவிரவாதிகளின் நோக்கம் பணம் பறிப்பதோ, கைதிகளை விடுதலை செய்வதோ இல்லை. பொதுமக்களின் அமைதி வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பது. இது ஒருவகையில் தற்கொலை போர்முறைதான். இதற்காக அவர்கள் பெருமளவு மூளைச் சலவை செய்யப்பட்டு ப்ரொபஷனல் முறையில் தயார்படுத்தப் பட்டிருப்பார்கள். இந்த தயாரிப்புக்கு செலவு செய்யப்பட்ட நேரமும், இளமையும், சித்தாந்தங்களும் மிகவும் அதிகம். இதை எண்ணிப் பார்க்கையில் தீவிரவாத தடைச் சட்டமோ, போலிஸின் தீவிர கண்காணிப்போ இம்மாதிரி செயல்களை எதிர்காலத்தில் தடுத்து நிறுத்தும் என்று தோன்றவில்லை. விதைக்கப்பட்ட நஞ்சு விளைந்து கொண்டே இருக்கும். <br /><br />இதற்கு மாற்றாக எல்லோருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய தலைமை கண்டிப்பாக தேவை. கடுமையான சட்டங்களும், அதனை தீவிரமாக அமல்படுத்துவதும் தவிர அந்த சட்டங்களின் நோக்கத்தை தெளிவான பார்வையில் மக்களுக்கு எடுத்து செல்வதில் ஊடகங்களின் பங்கு முக்கியம். <br /><br />இப்பொழுதே இணையப் பதிவுகளில் சிலவற்றில் வெறுப்பை வளர்க்கும் எழுத்துகளை பார்க்க முடிகிறது. இன்னமும் சில நாட்களில் முற்போக்காளர்களாக அறிவித்துக் கொள்ளும், லைம் லைட்டுக்கு ஏங்கும் சில ஆத்மாக்கள் இந்திய இறையாண்மையைப் பற்றி புதிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள். அதையும் படித்துக் கொண்டிருப்போம் மரத்துப் போன மனதோடு.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-2310183734466310406?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-30880544.post-35443434573751440032008-11-26T18:03:00.000-08:002008-11-26T21:05:56.237-08:007 திரைப்படங்கள்அவ்வப்போது ஏதாவது ஒரு திரைப்படத்தை பின்னிரவில் பார்ப்பது சமீபத்திய வழக்கமாகி விட்டது. இந்த genre என்று இல்லாமல் ஏற்கெனவே பார்த்தவர்களின் சிபாரிசை மட்டும் வைத்துக் கொண்டு படங்களை தேடிப் பிடித்து பார்த்து கொண்டிருக்கிறேன். சமீபத்தில் பார்த்த ஏழு படங்களைப் பற்றி குட்டி விமர்சனங்கள். மற்ற தகவல்களுக்கு விக்கிபீடியாவை அணுகவும்.<br /><br /><span class='fullpost'><a href="http://en.wikipedia.org/wiki/The_Lives_of_Others">The Lives of Others (German)</a> சென்ற வருடத்தின் சிறந்த வெளிநாட்டுப் படமாக அகாடமி விருது வாங்கியப் படம். இதன் விருதுகள் பற்றி தெரியாமல் ஒரு த்ரில்லர் படம் என்றுதான் பார்க்க ஆரம்பித்தேன். பெர்லின் சுவர் வீழ்வதற்கு முன்னர் கிழக்கு ஜெர்மனியின் சோஷியலிச அரசாங்கத்தின் பின்புலத்தில் அருமையான ஒற்றர் / காதல் கதை. Gert Weisler என்னும் ரகசிய போலிசாக வருபவரின் உணர்ச்சி காட்டாத முகம் ஒற்றன் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தம். வெகு நுணுக்கமாக காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். தான் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் சோஷலிசம் ஆட்சியாளர்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று புரிந்து கொண்டாலும் தனது வேலையை தொடர்ந்து செய்கிறார். மிகமிக மெதுவாக தான் கண்காணிக்கிறவர்கள் மேல் பரிதாபம் கொண்டு சிற்ச்சில செய்திகளை அரசாங்கத்திடமிருந்து மறைக்கிறார். ஆனாலும் தனது சகா மற்றும் மேலாளரின் சந்தேகத்திற்கு இடமாகி உப்புசப்பில்லாத வேலைக்கு மாற்றப்பட்டு... மிகவும் அழகாக விரிந்து கொண்டே போகிறது கதை. இந்தப் படத்தைத் பார்த்துவிடு தொடர்ந்து பெர்லின் சுவர் வீழ்ந்ததை ஒரு முறை மனக்கண்ணில் நினைத்துப் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறது. <br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Manhattan_Murder_Mystery">Manhattan Murder Mystery (ஆங்கிலம்)</a> கச்சிதமான கதைக்கு ஒரு உதாரணம். Woodey Allen-ஐ பற்றி நிறைய படித்திருந்தாலும், இதுதான் அவர் நடித்ததில் நான் பார்த்த முதல் படம். மனிதர் காமெடியில் பின்னி பெடலெடுக்கிறார். பல்வேறு நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர் உளறுவது மிகவும் சிரிப்பாக இருக்கும். நடு இரவில் மனைவி பக்கத்து அபார்ட்மெண்டில் துப்பறிய போகும்போது மனைவியை தடுக்க முயலாமல் புலம்பிக் கொண்டே பின்னால் அவரும் வந்து அங்கு இருக்கும் பீங்கான் பொம்மையை உடைத்து, சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிறது. கமல்ஹாசன் நிறைய உடி ஆலன் படங்கள் பார்த்திருக்கிறார் என்பது ‘பஞ்ச தந்திரம்’ போன்ற படங்களில் தெரிகிறது. மண வாழ்க்கையில் போரடித்துப் போயிருக்கும் மனைவிக்கும், பக்கத்து வீட்டில் நடந்த ஒரு கொலைக்கும், நடுவில் ஊசலாடுவது தனது திருமண வாழ்க்கை என்று உணர்ந்து கொண்டு மனிதர் படாத பாடு படுகிறார். அவர் மனைவி கேரோலாக Diane Keaton. இருவரும் பேசும்போது கணவன் மனைவி உறவின் உரிமையையும்,அலுப்பையும் அழகாகவே காண்பிக்கிறார்கள். கடைசி காட்சி மிகவும் டிராமாத்தனமாக இருந்தாலும், சின்னச் சின்ன வசனங்களில் தொடர்ந்து சிரிப்பை வரவழைக்கிறார்கள். <br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Indiana_Jones_and_the_Kingdom_of_the_Crystal_Skull">Indiana Jones and the Kingdom the Crystal Skull (ஆங்கிலம்)</a> முந்தைய இண்டியானா படங்களான <a href="http://en.wikipedia.org/wiki/Raiders_of_the_Lost_Ark">ரைடர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க்</a>, <a href="http://en.wikipedia.org/wiki/Indiana_Jones_and_the_Last_Crusade">லாஸ்ட் க்ருஸேட் </a>போன்று நூறு சதவீத ஈர்ப்பு இல்லாவிட்டாலும், வேற்று கிரக வாசிகள், மர்ம கோவில்கள், அணுஆயுத சோதனை என்று அருமையாகவே கதை பண்ணியிருக்கிறார்கள். ஹாரிஸன் தாத்தா கொஞ்சம் சோகையாக சிரிக்கிறார். ஆனால் இந்த வயதிலும் விடாமல் சாட்டையை சுண்டி சண்டை போடுகிறார். முந்தைய படங்களில் போடும் சண்டையை விட இதில் கொஞ்சம் குடும்ப சண்டையும் போடுகிறார். ’என்ன பேரு இது’ என்று கிண்டலாக கேட்கும்போதும், Mutt தனது பையன்தான் என்று தெரிந்தது ‘ஏன் ஸ்கூல் படிப்பை பாதியில நிறுத்தின’ என்று கோபமாக கத்துவதும் இண்டியானா ஜோன்ஸின் பாத்திரத்தோடு ஒன்றிப் போக முடிகிறது. Mutt சீப்பை நீரில் நனைத்து தலை வாரும் மேனரிசம் 80-களில் இந்தியாவில் கூட இருந்தது என்று நினைக்கிறேன். இண்டியானா கதைகளில் எப்பொழுதும் அவருக்கு ஒரு ‘வாழ்வா / சாவா’ பிரச்சினை வந்து, அதிலிருந்து அவர் சாணக்கியத்தனமாக தப்பிக்கும் காட்சிகள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் பல காட்சிகள் மம்மி போன்ற படங்களில் ஏற்கெனவே வந்துவிட்டது போலிருப்பதால் கொஞ்சம் பிரமிப்பு குறைவுதான். <br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Monsoon_Wedding">Monsoon Wedding (ஹிந்தி / ஆங்கிலம்)</a> மீரா நாயரின் எல்லா படங்களையும் விடாமல் பார்த்திருக்கிறேன். Johnny Depp-ஐ வைத்து ‘சாந்தாராம்’ என்று ஒரு படம் தயாரிப்பில் இருக்கிறது. Monsoon Wedding படம் வெளியான போது வசுந்தரா தாஸின் திருமண அலங்காரம் மிகவும் பிரபலம். நான் இப்பொழுது பார்த்தது இரண்டாம் முறை. காஸ்மோபாலிட்டன் காதல் சிக்கல், தூபே - அலிஸின் வெகுளிக் காதல், உயர் மத்தியதர குடும்பத்து கொண்டாட்டங்கள், உறவு சிக்கல்கள், குழந்தைகளை தவறாக பயன்படுத்துவது (child abuse), விரிவான கல்யாண சடங்குகள் என்று என்று பெரிய கேன்வாஸை வைத்துக் கொண்டு அழகாக கதை புனைந்திருக்கிறார் என்று தெரிகிறது. நான் முதலில் பார்த்தபோது என்னைக் கவர்ந்தது நஸ்ருதீன் ஷா மற்றும் தூபேவாக வரும் விஜய் ராஸ் (Vijay Raaz). ஆனால் ரஜத் கபூரின் subtle நடிப்பு அப்பொழுது கவனம் பெற்றிருந்தாலும் அதிகமாக கவரவில்லை. 6-7 வருடங்களில் அவரின் மற்ற படங்களான ’தில் சாதா ஹை’,‘மிக்ஸட் டபுள்ஸ்’, ‘பேஜா ஃப்ரை’ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு இப்பொழுது மீண்டும் இந்தப் படத்தைப் பார்க்கும் ஒன்று புரிகிறது. அமெரிக்கையான உடல்மொழியும், ஊடே தெறிக்கும் ஒரு குள்ளநரித்தனமும், குழந்தை போன்ற முகபாவமும் வைத்துக் கொண்டு முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். ஷெஃபாலி ஷெட்டியின் அகண்ட கண்கள் கவிதையாக நடிக்கின்றன. சில காட்சிகளின் இறுக்கம் நம்மையும் கட்டிப் போடுகிறது. நஸ்ருதீன் ஷா ’என்ன செய்வதென்றே தெரியவில்லை’ என்று சொல்லும்போது நாமும் அப்படியே உணருகிறோம். இறுதிக்காட்சியில் தூபேவும் அலிஸும் எல்லோரோடு நடனத்தில் சேர்ந்து ஆடும்போது நம்மையும் சந்தோஷம் பற்றிக் கொள்கிறது. திருமண வேலைகளினால் ஏற்படும் அழுத்தத்தையும் திருமண இரவில் குடும்ப உறுப்பினர்களோடு நடனமாடும் சந்தோஷத்திலும் நஸ்ருதின் ஒரு இம்மியளவு கூட மாறாமல் இயல்பாக இருக்கிறார். திருமண வீட்டைச் சுற்றி நடக்கின்ற கதையில் ஆங்காங்கே இடைச்செருகலாக மும்பையின் தெருக்களை பின்னனி இசையோடு வருவது அழகான ஹைக்கூ. <br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Sancharam">சஞ்சாரம் (மலையாளம்)</a> யதேச்சையாக சிக்கிய படம், மிகப்பெரும் பிரமிப்பைத் தந்தது. Ligy J Pullapally இயக்கியிருக்கும் இந்தப் படம் இந்திய திரைப்படங்களிலே மிக தைரியமான படம் (bold film) என்று சொல்லலாம். கேரளத்தின் உள்ளடங்கிய ஒரு சிறு கிராமத்தில் சிறு வயது சிநேகதிகள் கிரணும், டிலைலாவும். இருவரும் ஒன்றாகவே விளையாடி, பழகி வளர்ந்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும்போது அவர்களை அறியாமலேயே ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்படுகின்றனர். இது வெளியில் தெரிந்துவுடன் அந்த சிறு கிராமம் அதை எப்படி எதிர்கொள்கிறது என்பதை மிக இயல்பாக சொல்கின்றார் இயக்குநர். இந்த முன்னறிவிப்பை படித்தததும் ஒருவித அவநம்பிக்கையோடுதான் படத்தை பார்க்க துவங்கினேன். இம்மாதிரியான bold படங்கள் படைக்கப்படும்போது அமெச்சூர்தனமாக சிதைந்து போகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஆச்சர்யமாக நன்றாகவே எடுத்திருந்தார். இத்தனைக்கும் லிஜி ஒரு பெண் என்று தெரிகிறது. விக்கிபீடியாவில் அவரைப் பற்றிய குறிப்புகள் இல்லை. கேரளத்தில் பிறந்து பின்னர் சிகாகோவில் வசிப்பதாக தெரிகிறது. <br /><br />டிலைலா முதலில் கிரணோடு பழகும்போது பிரியவே மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார். ஆனால் அவருக்கு சமூகத்தை எதிர்த்து நிற்க முடியவில்லை. பிறகு தனது அம்மா நிச்சயிக்கும் கட்டாய திருமணத்திற்கு உடன்படுகிறார். டிலைலாவின் பாட்டி பாத்திரத்தின் வடிவமைப்பு மிகவும் ஈர்த்தது. அவரோடு டிலைலாவின் நேசம் அழகான ஒரு கவிதை. ஒரு பெண்ணான கிரண் இன்னொரு பெண்ணை காதலிக்கும் செய்தி கேள்விப்பட்டவுடன் கிரணின் அம்மா ‘யு ஆர் சோ அன்னேச்சுரல்’ என்கிறார் கோபமாக. கிரண் பதிலுக்கு ‘ஐ அம் நாட் அந்நேச்சுரல்’ என்கிறார். இந்த ஒரு வசனத்தில் படத்தின் சாராம்சம் அடங்கிவிடுகின்றது. கிரண் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்கும் கோவிந்தன் மாமாவும் இப்படிப்பட்ட பாலின குழப்பத்தில் இருக்கிறார் என்று ஓரிரெண்டு வசனங்கள் மூலமாக தெரிகிறது. இறுதியில் கூட்டிலிருந்து பறக்கும் பட்டாம்பூச்சி போல் கிரண் நடந்து செல்வது போல் காண்பிக்கிறார்கள். <br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Aamir_(film)">ஆமிர் (ஹிந்தி)</a> மும்பையின் தற்போதைய சூழலில் இந்தப் படம் மிகவும் முக்கியமானதாகி விடுகிறது. கோவிந்த் நிஹ்லானியின் <a href="http://en.wikipedia.org/wiki/Dev_(film)">தேவ் </a>பேசப்பட அளவிற்கு இந்தப் படம் பேசப்பட்டதா என்று தெரியவில்லை. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இசை. முடிவு ஊகிக்க கூடியதாக இருந்தாலும் நடித்தவர்கள் எல்லாரும் மிகவும் தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்கள். வசனங்கள் மிகவும் கூர்மை. தவறவிடாமல் பார்க்கப்பட வேண்டிய ஒரு படம்.<br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Vaaranam_Aayiram">வாரணம் ஆயிரம் (தமிழ்)</a> இந்தப் பட்டியலிலேயே, அதிக செலவு செய்து பார்த்ததும், அதிக நேரம் செலவழித்து பார்த்ததும், அதிக அளவில் ஏமாற்றம் அடைந்ததும், கொஞசம் சந்தோஷம் அடைந்ததுமான படம் இதுதான். <a href="http://snapjudge.com/2008/11/17/vaaranam-aayiram-surya-gautham/">பாஸ்டன் பாலா </a>ஒரு நல்ல தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். எனக்கு கௌதம் மேனம் மேல் உள்ள ஒரு நம்பிக்கை அவர் சினிமாவிற்குண்டான தேய்வழக்குகளை (cliches) அதிகம் பயனபடுத்த மாட்டார் என்பது. ஆனால் பாருங்கள் அவரே சில தேய்வழக்குகள் உருவாக்கி விடுவார் போலிருக்கிறது. இன்னும் இரண்டு படங்களில் இவரும் நம்மை சலிப்படைய வைத்துவிடுவார்ப் போல. தந்தையை ஆராதிக்கும் மகனாகவும், மகனுக்கு நல்வழிகாட்டும் தந்தையாகவும் சூர்யா இரட்டை வேடத்தில் ஜொலிக்கிறார். கூட அன்பான அம்மாவாக சிம்ரன். அன்பான குடும்ப உறவுகளை அழகாகவே சொல்கிறார்கள். தேவையில்லாமல் எங்கெங்கோ ஜம்படித்து படம் இறுதியில் சிம்ரன் வாயால் ‘வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி’ போல சூர்யா வந்து திருமணம் செய்ததாக சொல்லி தலைப்பை நியாயப்படுத்துகிறார்கள். அவர் செய்த லைப்ரரியன் விடு தூதுவிற்கு எல்லாம் ஆண்டாளின் பாசுரம் பில்டப் கொடுப்பது கொஞ்சம் அதிகமாகத்தான் படுகிறது.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-3544343457375144003?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-30880544.post-27318406738344482082008-11-09T14:08:00.000-08:002008-11-11T17:12:31.290-08:00முட்டாள் பெட்டி'நீங்கள் ரெகுலராக டிவி பார்ப்பவரா?'<br /><br />'ஆமாம்'.<br /><br />'டிவியில் உங்களுக்கு பிடித்தது என்ன?'<br /><br />'டிவியை அணைக்கும் சுவிட்ச்தான்'<br /><br />மிகப் பழைய ஜோக். கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து வருகிறேன். அதற்கு முன்னால் வாராந்திர விடுமுறையானாலும், இல்லை விநாயகர் பிறந்த விடுமுறை தினமானாலும், டிவியின் முன்னால் அசையாத உருளைகிழங்கு போல் இருந்தவன்தான். வாஸ்து பிரகாரம் டிவியை தென்மேற்கு மூலையில் வைக்காதீர்கள், அப்புறம் சொர்க்கம் தொடர் சீக்கிரம் முடிந்துவிடும் என்று சொல்லுமளவிற்கு டிவியின் ஆதிக்கம் பெருக ஒருவித ஒவ்வாமை வந்துவிட்டது. கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தவுடன் ஏதோ நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு டிவியே வாங்காமல் தவிர்த்து வருகிறேன். அதனால் நேரம் மிச்சம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் அதிக நேரம் வலை மேய்வதற்கும், நினைத்த திரைப்படங்களை பார்ப்பதற்கும் மிகவும் வசதியாக இருக்கிறது.<br /><br /><span class='fullpost'>தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில், அதுவும் கொடைக்கானல் ரிலே ஸ்டேஷன் இயங்காத காலத்தில் எங்கள் தாத்தா டிவி வாங்க முடிவு செய்தார். கலர் டிவி என்பது அம்பானி வீட்டில் மட்டும் இருந்த காலம். ஒரு கருப்பு வெள்ளை டிவி வாங்கினார். கூடவே 25 அடி உயரத்திற்கு ஆண்டெனா தேவை என்று மெக்கானிக் சொல்லி அதையும் வாங்கினார். இலங்கை ரூபவாஹினி மட்டும் வந்தது என்று நினைக்கிறேன். கீழே ஒருவர் டிவி பார்த்து டைரக்ஷன்ஸ் கொடுக்க மேலே ஆண்டெனாவை 423 டிகிரிக்கு சுற்று என்று சுற்றும் போது ஏதோ ஒரு மைக்ரோ டிகிரியில் ரூபவாஹினியின் புறா படம் அலைஅலையாக வரும். பௌர்ணமி காலத்தில் துல்லியமாகவும் அமாவசை காலத்தில் புள்ளி புள்ளியாகவும் படம் தெரிகிறது என்றெல்லாம் லூனார் காலண்டர் வகுத்து வைத்திருந்தோம். புதன் கிழமை இரவு தமிழ் திரைப்படம் போடுவார்கள் என்பதினால் மாலையே எங்கள் வீட்டில் உணவு எல்லாம் முடித்துவிட்டு நடந்து தாத்தா வீட்டிற்கு போய் தேவுடு காத்துக் கொண்டிருப்போம். படம் வருமா வராதா என்பது பெரும் சஸ்பென்ஸ். 'மூன்று முடிச்சு' படத்தில் ரஜினியை ஸ்ரீதேவி 'டீக் ஹை' என்று நக்கலடிக்கும் காட்சிகள் எல்லாம் திரைச்சித்திரம் மாதிரி படம் இல்லாமல் வசனம் மட்டும் கேட்டு புளகாங்கிதப் பட்டுக் கொண்டிருந்தது ஒரு காலம்.<br /><br />தூர்தர்ஷன் கொடைக்கானல் ரிலே ஸ்டேஷன் தொடங்க தமிழகத்திற்கு விடி வெள்ளி ஏற்பட்டது. மாலை 4:30 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிவரை தமிழ் நிகழ்ச்சிகள். செவ்வாய் கிழமை ஒரு மணி நேரம் நாடகம். வியாழக்கிழமை அரைமணி நேர ஸ்பான்ஸர்ஸ் ப்ரோர்கிராம் என்று அச்சுபிச்சு காமெடித்தொடர். வெள்ளிகிழமை சரித்திர புகழ்வாய்ந்த ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக் கிழமை மாலை திரைப்படம் என்று ஒரு கை விரலில் எண்ணிவிடக் கூடிய டிவி நிகழ்ச்சிகள். எஸ்வி சேகரும், கிரேசி மோகனும் 2 மணி நேரக் கதையை 13 வாரங்களுக்கு ஜவ்வ்வ்வ்வ்வாக இழுத்து காமெடி பண்ணிக் கொண்டிருக்க, ஒரே செட்டில் திரைச்சீலை வண்ணத்தை மட்டும் மாற்றி மாற்றி செவ்வாய்கிழமை டிராமாக்களை ஒப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். <br /><br />இப்படியாக இருந்த க்ரியேட்டிவிடி வறட்சியில் இந்திக்காரர்கள் மெகா சீரியல் என்னும் வெள்ளத்தை பாய்ச்சினார்கள். ஹம்லோக், புனியாத் போன்ற சீரியல்கள் இரவு 9 மணியை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தன. அரைகுறை ஹிந்தி அறிவை வைத்துக் கொண்டு, லாலுவின் காமெடியையும், சீட்டியின் துடுக்குத்தனத்தையும் ரசித்துக் கொண்டிருப்போம். நடுவில் கிரன் ஜுனேஜாவின் ஆராதனா ஸ்டைல் காதல் காட்சிகளை கண்டு களித்து விட்டு மறுநாள் பள்ளியில் கிளுகிளுப்பாக விவாதித்தது உண்டு. பின்னாளில் இவர் மகாபாரதத்தில் கங்கையாக வந்து நம் வாயிலும் கங்கையை ஜொள்ளிட வைத்தவர். யே ஜோ ஹை ஜிந்தகி போன்ற Sitcom-களை பெரிதும் ரசித்ததுண்டு. அதில் வெரைட்டியாக வரும் சதீஷ் ஷா இன்னமும் ஹிந்திப் படங்களில் அதே தோற்றத்தில் வருகிறார். எல்லா ஹீரோக்களுக்கும் அப்பாவாக வரும் இப்போதைய அலோக்நாத்தான் புனியாத் கதாநாயகன். தாத்தாவிற்கு ஹிந்தி மீது நல்லபிப்ராயம் கிடையாது என்பதாலும், 9 மணிக்கு மேலாக தூங்காமல் இருப்பது கிரிமினல் குற்றம் என்று அவர் நம்பியதாலும் தமிழக கரெண்ட் கரெண்ட் நிலைமை மாதிரி எப்போ பார்ப்போம் எப்போ பார்க்க மாட்டோம் என்று எந்த நிச்சயமும் கிடையாது.<br /><br />சன் டிவியின் தமிழ்மாலை தொடங்கி எங்கள் வயிற்றில் பாலை வார்த்தது. பாலசந்தர் தொடர்ந்து சீரியல் செய்து கொடுக்க, ரெகோ, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆனந்த கீதன், ரபி பெர்னார்ட், ரமேஷ் பிரபா என்று பலரும் வெரைட்டியாக வந்து கலக்கினார்கள். பெப்ஸி உமா அன்றிலிருந்து இன்று வரை 'அய்யோ... அப்படியா!' என்று வெட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார். உடையார் தொடங்கிய கோல்டன் ஈகிள் டிவி, ஜெயின் டிவி, ராஜ் டிவி என்று பலதும் இருந்தாலும் சன் டிவியின் நேர்த்தியை யாரும் தொடமுடியவில்லை. நாகாவின் ரமணி vs ரமணி (முதல் பாகம்) எனக்கு மிகவும் பிடித்த டிவி நிகழ்ச்சிகளில் ஒன்று. தூர்தர்ஷனின் வந்த எஸ்வி சேகரின் 'வண்ணக்கோலங்கள்' போலவே ஒவ்வொரு நாளும் ஒரு சிறுகதை போல் நகைச்சுவையாக நகரும் தொடர். இரண்டாம் பாகம் கொஞ்சம் அறுவைதான். பாலக்காட்டு பாஷையை வைத்து வந்த 'லூட்டி' சீரியல் கொஞ்சம் நன்றாக இருந்தது. <br /><br />நாடெங்கும் கேபிள் புரட்சி நடக்கும் வரை DD-யின் மெட்ரோவும், அதில் புரட்சி செய்த 'மெட்ரோ' பிரியாவும் சென்னைவாசிகளுக்கு மட்டுமே கிடைத்த லக்ஸுரி. 'டிஸ்கவரி' சேனலை காரணம் காட்டி அப்பாவிடம் கேபிள் கனெக்ஷ்ன் வாங்கிவிட்டு ஸ்டார் மூவிஸும், எம் டிவியும் பார்த்து, பார்த்து பொழுதை கழித்துக் கொண்டிருக்கும்போதுதான் ஸோனி டிவியில் சில அமெரிக்க நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார்கள். என்பதுகளில் அமெரிக்காவை கலக்கிய டிவி நிகழ்ச்சிகளை ஹிந்திப்படுத்தி தொன்னூறுகளில் தினசரி நிகழ்ச்சியாக ஒளிபரப்பினார்கள். தினசரி காலை 9 மணி முதல் 11:30 மணி வரை நான்கு தொடர்கள் தொடர்ந்து வரும். காலையில் அப்பா அலுவலகம் கிளம்பிப் போகும்போது எழுப்பிவிட்டுச் செல்ல, அம்மா கொடுக்கும் காப்பியை எடுத்துக் கொண்டு டிவியின் முன்னால் உட்கார்ந்துவிடுவேன். ஒரே நடிகர்களை வைத்துக் கொண்டு வருடகணக்காக எடுத்த நிகழ்ச்சிகள். இன்று குழந்தையாக பார்க்கும் Gary Colman ஒரு சில வாரங்களில் வளர்ந்து விடுவார். <a href="http://en.wikipedia.org/wiki/Silver_Spoons">Silver Spoons</a>, <a href="http://en.wikipedia.org/wiki/Who's_the_Boss%3F">Who is the Boss</a>, <a href="http://en.wikipedia.org/wiki/Diff'rent_Strokes">Different Strokes</a>, <a href="http://en.wikipedia.org/wiki/Bewitched">Bewtiched </a> என்று மராத்தான் பந்தயம் போல சிரிப்பு ஓட்டம். இப்பொழுதும் யு-ட்யூபில் நிறைய எபிசோடுகள் காணக் கிடைக்கின்றன. இந்த சீரியல்களைப் பற்றி தனியாக ஒரு இடுகையே போடலாம். நேர்த்தியான கதையமைப்பு. குடும்ப அமைப்புகளையும், காதலையும், தனி மனித வேல்யூக்களையும், உளவியல் சிக்கல்களையும் நகைச்சுவையோடு சொல்லும் கதைகள். <br /><br />Who is the Boss-ல் வரும் <a href="http://en.wikipedia.org/wiki/Tony_Danza">Tony Danza</a>-க்கு பெரும் ரசிகனானேன். புரூக்ளினில் வளர்ந்த ஒரு இத்தாலியன் பின்னர் கனெக்டிகட்டில் உள்ள அமெரிக்க வீட்டில் ஹவுஸ்கீப்பராக வேலை செய்கிறார். மனைவியை இழந்த டோனி தனது சிறு பெண் குழந்தையோடு (Samantha) செல்வந்தரான Angelina Bower வீட்டிற்கு ஹவுஸ்கீப்பர் வேலை கேட்டு வருவதிலிருந்து துவங்குகிறது இந்த தொடர். ஆஞ்சலினா விவாகரத்தாகி தனது சிறு மகனோடும் (Jonathan) அருகாமையில் வசிக்கும் அம்மாவோடும் (Mona Robinson) விளம்பரத் துறையில் பெரிய பணியில் இருக்கிறார். வீட்டுத் தலைவராக ஆஞ்சலினாவும், வீட்டு வேலையாளாக டோனியும் இருக்க, அவர்களிடையே இருக்கும் நுண்ணிய உணர்வு போராட்டங்களை நகைச்சுவையாக சொல்லிச் செல்கிறது. டோனி டான்ஸா சமையல் செய்வது தவிர, பேஸ்பால் வீரனாக, பாக்ஸிங் வீரனாக, வாலிபால் / பாஸ்கெட்பால் விளையாட்டுகளிலும் சிறந்தவனாக, பெண்களின் கனவு நாயகனாக, பொறுப்பான தந்தையாக நகைச்சுவை கலந்த நடிப்பில் அடித்து ஆடுவார். இந்தத் தொடரின் பாடலையும் அவரேப் பாடியிருந்தார். கிட்டத்தட்ட பதினோரு வருடங்கள் வெளியானது என்று நினைக்கிறேன். தொடரின் துவக்கத்தில் சிறு குழந்தையாக வரும் சமந்தா தொடர் முடியும் பொழுது திருமணம் செய்து கொண்டுவிடுகிறார். <br /><br />என்பதுகளில் அமெரிக்கர்களின் லிவிங் ரூமை ஆக்கிரமித்த இன்னொருவர் Gary Coleman என்ற குழந்தை நட்சத்திரம். Different Strokes-ல் இவர் நடித்த Arnold Jackson பாத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. ந்யூயார்க்கில் வசிக்கும் அமெரிக்கரான Philip Drummond என்ற வெள்ளையர் தனது வீட்டில் வேலை செய்யும் கறுப்பின பெண் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட அவரின் அநாதையான இரண்டு குழந்தைகளையும் (Willis Jackson & Arnold Jackson) தத்தெடுத்து வளர்க்கிறார். நகைச்சுவையோடு அக்காலத்தில் நிலவிய நிறவெறியையும் தொட்டு அருமையாக கதை பண்ணியிருப்பார்கள். தனது குழந்தை நடிப்பில் அமெரிக்கர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பின்னர் ஏனோ சோபிக்கவில்லை. <br /><br />நமது டிவி தொடர்கள் இன்னமும் பாலைவனமாகவே கற்பனை வறட்சியோடு இருக்கின்றன. நேற்று ஒரு நண்பர் வீட்டில் பார்த்த தொடரில் ராதிகா இரட்டை வேடத்தில் மாற்றி மாற்றி டயலாக்குகள் பேசி இரண்டு வருடக் கதையையும் சொல்லிவிட்டார். நமது தமிழ் தாய்மார்கள்தான் எவ்வளவு சுலபமாக நேரத்தை தானம் கொடுத்து விடுகிறார்கள். முட்டாள் பெட்டி என்று சொல்வதை விட முட்டாள் 'பார்க்கும்' பெட்டி என்று சொல்ல வேண்டுமோ?</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-2731840673834448208?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-30880544.post-78297199866399782912008-11-08T23:25:00.000-08:002008-11-09T02:16:50.190-08:00கதைகளுக்கான கதைபுதிதாக தலைமை பொறுபேற்றுக் கொண்ட அதிகாரி பெரும் உத்வேகத்தோடு தனது அலுவலகம் வருகிறார். அங்கே எல்லாரும் சுறுசுறுப்பாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்க சுவரோரமாக ஒருவன் மட்டும் விச்ராந்தியாக நின்று கொண்டிருக்கிறான். வேலை எதுவும் செய்யாமல் சும்மா நின்று கொண்டிருக்கும் அவனைப் பார்த்தவுடன் தலைமை அதிகாரியின் இரத்த அழுத்தம் எகிறுகிறது. நேராக அவனிடம் போய் அடிக்குரலில் 'உனது மாதச் சம்பளம் எவ்வளவு? என்கிறார். 'ஐந்தாயிரம் ரூபாய்' என்கிறான். உடனே தனது காரியதரிசியைப் பார்த்து 'இவனுக்கு இரண்டு மாத சம்பளத்தைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள்' என்று சொல்லிவிட்டு எல்லாரையும் அர்த்தபுஷ்டியோடு பார்த்துவிட்டு சென்று விடுகிறார். காரியதரிசி அவன் கையில் பத்தாயிரம் ரூபாயை கொடுத்து விட்டு அனுதாபமாக 'இனிமேல் என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்கிறார். 'ஆபிசிற்கு திரும்ப வேண்டியதுதான். நான் கூரியர் டெலிவரி செய்ய வந்தவன்' என்கிறான் அவன்.<br /><br />இந்த மாதிரிதான் நான் ஒன்றை நினைத்து எழுத வேறு ஒன்று வாசகர்களை சென்றடைந்து விடுகிறது. இதுவரை இந்த தளத்தில் நான் எழுதிய சில சிறுகதைகளைப் பற்றின சில குறிப்புகள் எழுதி வைக்கிறேன் இங்கே.<br /><br /><br /><span class="fullpost"><a href="http://www.sridharblogs.com/2008/07/blog-post_8776.html">வெடிப்பு</a><br /><br />நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் Ryze-ல் அங்கத்தினராக இருந்தேன். நண்பர்கள் சிலர் என் வலைப்பக்கத்தில் ஏதாவது எழுதி வைக்கக் கூடாதா என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது படித்துக் கொண்டிருந்த A brief history of the time-ன் தாக்கத்தில் எழுந்த சிறு பொறிதான் இது. மிகவும் சிறிய கதை. நண்பர் யோசிப்பவர் இதன் பாதிப்பில் எழுதியதாக ஒரு <a href="http://kathaiezuthukiren.blogspot.com/2008/10/blog-post.html?showComment=1223360340000#c3210421277732638845">அருமையான கதை </a>எழுதியிருந்தார். <br /><br /><a href="http://www.sridharblogs.com/2008/07/blog-post_18.html">கடவுளும் கந்தசாமியும்</a> <br /><br />கண்ணபிரான் ரவிசங்கரின் மாதவி பந்தல் இடுகைகளுக்கு தொடர் வாசகன் நான். அவரின் <a href="http://madhavipanthal.blogspot.com/2008/07/1.html">இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? </a>என்ற பதிவை ஒட்டி ஒரு நீண்ட பின்னூட்டம் இட்டு தனி மெயிலில் அனுப்பியிருந்தேன் அவருக்கு. அதை தொடர்ந்து 'இம்மை / மறுமை' தத்துவத்தின்பாற் எழுதப்பட்ட கதை. இந்த தலைப்பிற்காக கதையின் பாத்திரமும் கந்தசாமியாகிவிட்டார் :-)<br /><br /><a href="http://www.sridharblogs.com/2008/07/blog-post_21.html">சாயா சந்திரனின் பதிவுகள் சில...</a> <br /><br />சிறில் அலெக்ஸ் ஒரு <a href="http://cyrilalex.com/?p=440">அறி-புனை போட்டி </a>அறிவித்திருந்த நேரம் நாமும் அதில் பங்கேற்கலாமே என்ற ஒரே நோக்கத்தில்தான் இந்த வலைத்தளமே துவங்கப் பட்டது. அந்த போட்டிக்காக எழுதப்பட்ட முதல் சிறுகதை இது. இதன் முதல் வடிவம் வேறு மாதிரி எழுதி நண்பர்கள் <a href="http://penathal.blogspot.com/">பெனாத்தல் சுரேஷ்</a>, <a href="http://elavasam.blogspot.com/">இலவச கொத்தனார் </a>இருவருக்கும் அனுப்பி, தொந்தரவு தாங்காமல் அவர்களும் 'பாவமே' என்று கருத்தெல்லாம் சொல்லியிருந்தார்கள். கடைசியில் கொஞ்சம் வடிவம் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. சூரியனின் மனைவி பெயர் சாயா. அதாவது நிழல். அதே போல் இந்தக் கதையின் நாயகி சாயாவும் நிஜமல்ல. இந்தக் கதையில் இருக்கும் பதிவுகளுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு ப்ளாக் போன்று வடிவமைத்து லிங்க், டேக் (tag) எல்லாம் சரியாக கொடுத்திருந்தேன். கமெண்டுகள் எண்ணிக்கை ஒவ்வொரு பதிவிற்கும் கூடிக் கொண்டே போகும். இப்பொழுது படித்தாலும் இறுதியில் ஒரு 'திடுக்' ஏற்படுகிறது.<br /><br /><a href="http://www.sridharblogs.com/2008/07/blog-post_23.html">மீண்டும் ஒரு காதல் கதை</a><br /><br />'கதாசிரியன் எழுதும் கதை அவனைத் தாண்டி தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது' இதுதான் நான் <a href="http://penathal.blogspot.com/">பெனாத்தல் சுரேஷிடம் </a>முதலில் சொன்னது. அவர் 'எழுதுங்க! சூப்பரா வரும்' என்று ஊக்குவிக்க தொடர்ந்து இரண்டு மூன்று வரைவுகள் மாற்றி மாற்றி இந்தக் கதை எழுதப்பட்டது. இதைப் படித்து பலரும் புரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். பஞ்சதந்திர கதைகள் போல ஒரு வடிவம். எழுத்தாளன் ஒரு தானியங்கி கதைசொல்லி நிரலி மூலம் கதை எழுதுகிறான். அந்த கதையின் பாத்திரங்கள் அந்த எழுத்தாளனையே அந்தக் கதைக்குள் இழுத்துவிடுகின்றன. எழுத்தாளன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் கதை முடிந்துவிடுகிறது. இறுதியில் கதையின் கதையாக ஒரு சின்ன துக்கடா. கதாசிரியனின் உண்மை மனைவி கதையின் பாத்திரமாக தெரிகிறாள். இது வாசகரின் கற்பனையை பலவகையிலும் தூண்டி விடும் வகையில் எழுதப்பட்டது.<br /><br />இந்தக் கதையை ஒரு வாசகனாக வாசித்த எனக்குத் தோன்றிய ஒரு விவரணை '7 வருட அலுப்பில் முறிந்து போக இருந்த திருமண உறவை புதுப்பிக்க கதாசிரியன் தன் கதையை தானே எழுதுகிறான். அதில் தனது மனைவியின் பழைய காதலனாக அவனே ஒரு புதிய வடிவமெடுக்கிறான்'. :-) இன்னமும் சில விவரணைகளும் சாத்தியமே என்று தோன்றுகிறது. <br /><br />(இப்ப மட்டு என்ன புரிந்தது என்று கேட்கிறீர்களா? :-)))<br /><br /><a href="http://www.sridharblogs.com/2008/07/blog-post_31.html">ஆண்டிரமீடா ஆதி மனிதர்கள்</a> <br /><br />வழமையான பாணியில் எழுதப்பட்ட அறிவியல் புனைவு என்று சொல்லலாம். புதுமையாக யோசித்தது பூமி 2.0 மேம்படுத்துதல்:-). நண்பர் <a href="http://jyovramsundar.blogspot.com/">ஜ்யோவ்ராம் சுந்தர் </a>கூகுள் ரீடரில் பாராட்டு குறிப்போடு பகிர்ந்தது (Share) மகிழ்ச்சியாக இருந்தது.<br /><br /><a href="http://www.sridharblogs.com/2008/07/blog-post_31.html">ரசவாதம் - சில குறிப்புகள்</a><br /><br />ஜெயமோகன் தொடர்ச்சியாக எழுதிய <a href="http://jeyamohan.in/?cat=27">அறிவியல் புனைவுகளை </a>திண்ணையில் படித்திருக்கிறேன். அந்த பாதிப்பில் <a href="http://cyrilalex.com/?p=440">சிறில் அலெக்ஸின் சிறுகதை போட்டிக்கு </a>நான்காவது கதையாக, இறுதி நாளன்று எழுதி அனுப்பியது இது. நடுவர் ஜெயமோகனேதான். மொத்தம் வந்த என்பத்தி நாலு கதைகளில் <a href="http://cyrilalex.com/?p=450">இரண்டாவதாக இந்தக் கதையை </a>அவர் தேர்ந்தெடுத்ததது மிகவும் மகிழ்ச்சியான சம்பவம். பைத்தியக்காரன் போன்ற எழுத்தாளர்களும் பாராட்டியிருந்தார்கள். சில நண்பர்கள் சுவாரசியம் கம்மி என்று சொல்லிவிட்டார்கள். <br /><br />இரும்பை தங்கமாக்கும் வித்தையான ரசவாதத்தைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் சித்தர் பாடல்களில் காணக் கிடைக்கின்றன என்று சொல்பவர்கள் உண்டு. இப்பொழுதும் இதனை நம்புவர்கள் இருக்கிறார்கள். இதனைப் பற்றி சற்று ஆராய்ந்து பார்த்ததில் பதினைந்தாம் நூற்றாண்டில் <a href="http://www.alchemylab.com/count_saint_germain.htm">ஜெர்மனியில் ஒரு மருத்துவர் ரசவாதத்தை </a>நிகழ்த்தி காட்டியதாக கதைகள் கிடைத்தன. திரைகடலோடி திரவியம் தேடிய தமிழர்கள் ஜெர்மனி வரை போன மாதிரி கற்பனை செய்து கொண்டு ரசவாதம் பற்றிய சில முக்கிய குறிப்புகள் தமிழகத்திற்கு வந்ததாக அமைக்கப்பட்ட கதை. கதையை ஒரு கடித பாணியில் தொடங்கி முடிவில் ரசவாதம் போன்ற செப்பிடு வித்தைகளினால் மனிதன் மனம் எப்படியெல்லாம் அல்லல்படுகின்றது என்று சொல்லி முடிகிறது. 'எழுதப்படாத கதையைப் பற்றி ஒரு வாசகர் கடிதம்' என்றுதான் இந்தக் கதையை முதலில் அமைத்திருந்தேன். <br /><br /><a href="http://www.sridharblogs.com/2008/08/blog-post_08.html">பைசல் ஆன பழைய கணக்கு</a><br /><br />பள்ளியில் Non-detailed பாடமாக படித்த ஒரு கதை. பெயர் மறந்து போயிற்று. தான் சிறு வயதில் படித்த பள்ளிக்கு மீண்டும் ஒரு மாணவர் வருகிறார். தான் வாழ்க்கையில் தோலிவியுற்றதற்கு காரணம் தனக்கு பாடம் போதித்த ஆசிரியர்களே என்று குற்றஞ்சாட்டி தனது பள்ளிக் கட்டணத்தை திருப்பிக் கேட்கிறார். என்ன செய்வது என்று திகைத்த தலைமையாசிரியர் அந்த மாணவர் வஞ்சக திட்டத்தோடுதான் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார் என்று புரிந்து கொண்டு அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். அதாவது எல்லா ஆசிரியர்களும் அந்த பழைய மாணவருக்கு மீண்டும் ஒரு பரீட்சை வைக்க வேண்டும். அதில் அவர் தேர்ச்சி பெற்றால் கல்வி கட்டணம் திருப்பியளிக்கப் படமாட்டாது. அந்த தேர்வில் அவர் தோற்றுவிட்டால் பணம் திருப்பியளிக்கப்படும். ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு கேள்வி கேட்பார்கள். ஆசிரியர் கேட்கும் சுலபமான கேள்வியும், மாணவர் வேண்டுமென்றே முட்டாள்தனமாக சொல்லும் பதிலும், அந்த பதில்தான் சரியான பதில் என்று ஆசிரியர்கள் நிறுவுவதும் செம தமாஷாக இருக்கும். இறுதியில் கணித ஆசிரியர் மட்டும் தான் இரண்டு கேள்விகள் கேட்கப் போவதாக பீடிகை போட்டுவிட்டு ஒரு கனித புதிரை கேட்கிறார். மாணவர் வழக்கம் போல தவறான விடை சொல்ல எல்லா ஆசிரியரும் திகைக்கும் வண்ணம் கணித ஆசிரியரும் அந்த விடை தவறுதான் என்று ஒத்துக் கொள்கிறார். மாணவருக்கு பயங்கர சந்தோஷம். அடுத்து கணித ஆசிரியர் பள்ளி மாணவருக்கு திருப்பி செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் எவ்வளவு என்று வினவ, மாணவர் உற்சாகமாக கணக்குப் போட்டு துல்லியமான விடையைச் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் கணித ஆசிரியர் 'இந்த விடை மிகச் சரி. இரண்டு கேள்விகளில் இதுதான் கடினமான கேள்வி. அதை சரியாக சொன்ன மாணவர் தேர்வில் வெற்றி பெறுகிறார்' என்று அறிவித்து விடுகிறார். மூலக் கதை கிடைத்தால் முழுவதுமாக பதிவிடுகிறேன்.<br /><br />அதே பாதிப்பில் எழுதப்பட்ட கதை. நண்பர் சென்ஷி பாராட்டி இதைப் போலவே ஒரு <a href="http://senshe-kathalan.blogspot.com/2008/08/blog-post_08.html">அனுபவத்தையும் </a>தனது பதிவில் இட்டிருந்தார்.<br /><br /><a href="http://www.sridharblogs.com/2008/09/blog-post_17.html">சவரம் செய்த முகம்</a><br /><br />இந்தக் கதையின் வடிவம் கொஞ்சம் வித்தியாசம். இறுதி பத்தியை எடுத்துவிட்டு பார்த்தால் சாதாரண அனுபவ குறிப்பு போலவே எழுதப்பட்டு இருக்கும். கதையை வெளியிட அரைமணி முன்னதாகத்தான் அந்த முடிவு உதித்தது. இந்தக் கதையைப் பற்றி ஒரு நண்பரிடம் 'படித்தியா' என்று கேட்டபோது 'அதில் என்ன படிக்க இருக்கிறது? ஷேவ் செய்யறதைப் பத்தி எழுதியிருக்க' என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். பல நண்பர்களுக்கு பிடித்து இருந்தது. சிலர் 'விறுவிறுப்பு' குறைவாக இருக்கிறது என்று அபிப்ராயபட்டிருந்தார்கள். நண்பர் <a href="http://usthamizhan.blogspot.com/">யு எஸ் தமிழர் </a>எல்லாரையும் இறுதியில் வில்லனாக ஆக்கிவிடுகிறேன் என்றும் வருத்தப் பட்டிருந்தார்.<br /><br /><a href="http://www.sridharblogs.com/2008/10/blog-post_31.html">ஒரு முத்தத்தைத் தொடர்ந்து...</a><br /><br />இதை ஒரு துப்பறியும் கதையாக எழுத திட்டமிடவேயில்லை. ஒரு திருமணத்திற்காக வெளியூர் செல்லும் நண்பர்கள் தற்செயலாக ஒரு முத்தமிடலை காண நேரிட அதனைத் தொடர்ந்து நடைபெறும் சில சம்பவங்கள். இந்தக் கதையில் நிகழ்பவை எல்லாம் தற்செயலான தொடர்பில்லாத சம்பவங்கள். ஆனால் படிக்கிறவரை தொடர்புபடுத்திக் கொள்ள வைக்கிறது. <br /><br />i) நண்பர்கள் காலையில் கண்ட சம்பவத்தில் ஒரு பெண் தலையில் ஒரு ஸ்கார்ஃப் அணிந்திருக்கிறாள். அதிலிருந்துதான் பயனம் துவங்குகிறது. அதே ஸ்கார்ஃபைதான் செல்வா டீச்சர் வாங்கிருந்தார் என்பதற்கான தீர்மானமான ஆதாரம் இல்லை. கடையில் வேலை பார்க்கும் பெண் சொல்லும் வசனத்திலும் 'ரெட் உலன் ஸ்கார்ஃப்' என்றுதான் சொல்லப்படுகிறது. மஞ்சள் எம்பிராய்டரி என்றெல்லாம் விரிவான விளக்கம் சொல்லி அதே ஸ்கார்ஃப்தான் விற்பனை ஆனது என்று நிரூபிக்கப் படவில்லை. அதன் சாதகம் குறைவே. அப்படியே இருந்தாலும்... <br /><br />ii) கடைக்கு பக்கத்தில் இருக்கும் பள்ளி என்பதினால் மட்டுமே ஜோதி ஸ்கூலில் வேலை பார்க்கும் செல்வநாயகி டீச்சர்தான் வாங்கியிருப்பார் என்று தீர்மானமாக சொல்ல முடியாது. வேறு செல்வா டீச்சர் சுற்றுவட்டாரத்தில் இருக்க சாத்தியங்கள் உண்டு. <br /><br />iii) வாகீசனின் மனைவி செல்வா டீச்சர் என்று எங்கும் சொல்லப்படவில்லை. 'சொல்லு செல்வா' என்று ஒரு முறை போனில் பேசுகிறார். மனைவியோடுதான் பேசினார் என்று சொல்லப்படவில்லை. எங்குமே அவர் மனைவியை 'செல்வா' என்று விளிக்கவில்லை. மனைவி ஜோதி ஸ்கூலில் வேலை பார்க்கிறார் என்று சொல்கிறார். ஸ்போர்ட் டீச்சர் என்று சொல்லவே இல்லை. <br /><br />iv) பேம்ஃபெல்டின் உள்ளே முதலாளி அம்மா படம் இருக்கிறது என்று டிரைவர் சொல்கிறார். ஆனால் உள்ளே இருப்பது செல்வநாயகி டீச்சரின் போட்டோ மட்டும்தான் என்று சொல்லப் படவில்லை. வேறு படங்களும் இருக்கலாம். அதில் ஒன்று வாகீசனின் மனைவியாக இருக்கலாம். <br /><br />v) பேஃபிள்ட்டிலுள்ள படத்தில் செல்வநாயகி டீச்சர் முழுக்கை சட்டை அணிந்து அதை மடித்து விட்டிருக்கிறார். இந்த ஒன்றை மட்டும் வைத்து அவர்தான் முதலில் இருந்த முத்தக் காட்சியிலும் இருந்தார் என்று எப்படி சொல்ல முடியும்? <br /><br />இம்மாதிரி சம்பவங்களின் தொடர்ச்சியின்மையை கவனமாகவே எழுதியிருந்தேன். ஆனால் அவை தொடர்பாகவும் இருக்க சில சாத்தியங்கள் இருப்பது போலவும் அமைக்கப் பட்டிருந்தன. எல்லா சாத்தியங்களும் கூட்டிப் பார்த்தால் இலட்ச்சத்தில் ஒரு பங்கு கூட தேறாது. இந்தக் கதையை படித்த பெரும்பாலோனோர் அந்தப் பாதையிலேயே பயனம் செய்து முடிவை அணுகியிருந்தார்கள். அந்த வகையில் இது வாசகர்களுக்கு வெற்றிப் பெற்றுக் கொடுத்த கதை :-) பல நண்பர்கள் பாராட்டியிருந்தார்கள். <br /><br />இனியும் தொடர்ந்து சில கதை முயற்சிகளை செய்வதாக எண்ணம் இருக்கிறது. அதன் குறிப்புகளையும் பதிவு செய்ய நினைத்திருக்கிறேன்.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-7829719986639978291?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-30880544.post-26564978513694367382008-10-31T20:54:00.000-07:002008-11-02T19:29:01.341-08:00ஒரு முத்தத்தைத் தொடர்ந்து...திடுமென்று அந்தக் காட்சி உறைத்தது. பக்கத்தில் முழுக்கை சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டு நெருக்கமாக நின்று கொண்டிருந்தவரின் கழுத்தில் கைகளை மாலை போல் போட்டுக் கொண்டு அவள் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். வெகு சுதந்திரமாக லஜ்ஜையில்லாமல் அவர்கள் இருவரும் மோன நிலையில் இருக்க, அறைக்குள் வந்து ராஜ்குமாருக்கும், கார்த்திக்கும் சமிக்ஞை செய்தேன். மூவருமாக மாறிமாறி அந்தக் காட்சியை பாத்ரூம் ஜன்னல் சதுரத்தில் வழியே எட்டிப் பார்க்க, ராஜ்குமார் அந்த காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய தொடங்கிவிட்டான்... <br /><br /><span class="fullpost">இன்று காலை பத்தரை மணிக்குத்தான் இந்த ஓட்டல் அறைக்கு வந்தோம். கார்த்தி மிகவும் உற்சாகமாக இருந்தான். பசுமையான பூமியும் சுந்தரமான பெண்களும் குளிர்ந்த காற்றும் அவனுக்கு அதிக சந்தோஷத்தை தந்திருந்தன. நீளமான சுருட்டை முடியுடனும் பென்சில் மீசையுடனமிருந்த ஓட்டல் மானேஜர் மதிய உணவிற்கு ஓட்டல் பின்புறமிருந்த பரிமளா மெஸ்சை சிபாரிசு செய்தார். மோர் குழம்பை இரண்டு முறை விட்டு சாப்பிட்டுவிட்டு பரிசுப் பொருள் வாங்க சின்ன கடைத் தெருவின் சில அங்காடிகளில் சுற்றினோம். ராஜ்குமார் வழக்கம் போல் சிரிக்கும் புத்தரின் சிலையொன்றை பீங்கானில் வாங்கினான். அதிர்ஷ்டம் கொடுக்கும் பரிசுப் பொருளாம் அது. அறைக்குப் போய் முகம் கழுவி உடைமாற்றி திருமண மண்டபத்திற்கு போக சரியாக இருக்கும். வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசை கச்சேரி இருக்கிறது.<br /><br />பாத்ரூமில் ஷேவ் செய்யும்போது கவனித்தேன் ஜன்னலின் கண்ணாடி பட்டை ஒன்று தவறி இன்னொன்று கோணிக் கொண்டு இருந்தது. எம்பி நின்று சரி செய்யும்போது இரண்டாவது கண்ணாடி பட்டையும் கையோடு வந்துவிட்டது. இரண்டாம் மாடி ஜன்னலிலிருந்து பார்த்தால் பெருமாள் கோவில் கோபுரம் தெரிகிறதா என்று எட்டிப் பார்த்தேன். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அல்லவா? ஜன்னலுக்கு கீழே ஓட்டலின் பக்கவாட்டுப் பகுதியில் நடமாட்டமேயில்லாத சின்ன சந்து நிச்சலனமாக இருந்தது. ஓட்டலுக்கு அடுத்திருந்த அரைகுறையாக கட்டப்பட்டு அப்படியே விடப்பட்டிருந்த கட்டிடத்தின் நிழலில் அந்தப் பெண் நின்றிருந்தாள். இந்த உயரத்திலிருந்து பார்த்தால் உச்சந்தலைதான் பிரதானமாக தெரிந்தது. அதையும் மூடியவாறு மஞ்சள் நிறத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது சிவப்பு நிற ஸ்கார்ஃப் வேறு. திடுமென்று அந்தக் காட்சி உறைத்தது. பக்கத்தில் முழுக்கை சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டு நெருக்கமாக நின்று கொண்டிருந்தவரின் கழுத்தில் கைகளை மாலை போல் போட்டுக் கொண்டு அவள் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். வெகு சுதந்திரமாக லஜ்ஜையில்லாமல் அவர்கள் இருவரும் மோன நிலையில் இருக்க, அறைக்குள் வந்து ராஜ்குமாருக்கும், கார்த்திக்கும் சமிக்ஞை செய்தேன். மூவருமாக மாறிமாறி அந்தக் காட்சியை பாத்ரூம் ஜன்னல் சதுரத்தில் வழியே எட்டிப் பார்க்க, ராஜ்குமார் அந்த காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய தொடங்கிவிட்டான்.<br /><br />அநிச்சையாக அவள் கண்கள் எங்கள் அறை ஜன்னலில் நிலைகொள்ள சட்டென தவம் கலைந்து பரபரப்பாக பேசியவாறே அவர்கள் இருவரும் சந்து முனை திரும்பி வேகமாக சென்று விட்டார்கள். 'ஓவ்.. ஓவ்வ்...' என்று நாங்களும் உற்சாகமாக கூவி அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, குளியலறையை விட்டு வெளியேறினோம். <br /><br />திருமண வரவேற்புக்கு தயாராகி ஆட்டோ பிடிக்க நடக்கும்போது கார்த்தி சொன்னான்.<br /><br />'மச்சி! அவ தலையில கட்டியிருந்த ஸ்கார்ஃப்... நான் அதை ஏற்கெனவே பாத்திருக்கேன்டா. இப்ப கிஃப்ட் வாங்கப் போனோமே அந்தக் கடையில் இருந்திச்சுன்னு நினக்கிறேன். ஐ ஹட் சீன் தட். நல்லா ஞாபகமிருக்கு' என்றான் அழுத்தமாக.<br /><br />'எந்தக் கடை?'<br /><br />'அந்த புறா, முயல் எல்லாம் படம் போட்டு வாசல்ல பெருசா கண்ணாடி இருந்திச்சே, அந்தக் கடைதான்'<br /><br />'அதுவா? அடுத்த ரைட்ல வரும்ல. ஒரு எட்டு எட்டிப் போய் பாத்திறலாமா' என்றான் ராஜ்குமார்.<br /><br />ஏதோ துப்பறியும் தீவிரத்தோடு அந்தக் கடையில் நுழைந்து கார்த்தி சொன்ன இடத்தில் பார்த்த பொழுது அங்கே எந்த ஸ்கார்ஃபும் இல்லை. <br /><br />'எதுவும் கிஃப்ட ஐட்டம்ஸ் பாக்குறீங்களா சார்? இந்த டேபிள் லாம்ப் புது மாடல் சார்' என்ற சிப்பந்தியிடம் ஸ்கார்ஃபை பத்தி கேட்ட போது<br /><br />'தெரியலையே சார். இங்கதான் பாத்தீங்களா? போயிடுச்சுப் போல. நெக்ஸ்ட் வீக் வாங்கி வைக்கிறேன் சார்' என்று சம்பிரதாயமாக சொன்னார். ஊசி குத்திய பலூனாக எங்கள் துப்பறியும் ஆர்வம் காலியாக, கண்ணாடி டால்ஃபினை பரிசுக் காகிதத்தில் சுற்றிக் கொண்டிருந்த பெண் மேஜைக்கு அந்தப் புறமிருந்து சொன்னாள்<br /><br />'அந்த சேப்புக் கலர் உல்லன் ஸ்கார்ஃபா சார்? நம்ம செல்வா டீச்சர் இன்னிக்குத்தான் வாங்கிட்டு போனாங்க' என்றாள்.<br /><br />'நல்லா இருந்திச்சே வாங்கலாம்னு நினச்சோம்.. ஹிஹி' என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தோம். <br /><br />கார்த்தி ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டே 'பொதுவா டீச்சர்னா லேடீஸ்தானே. செல்வா டீச்சர்ன்னு சொல்றாங்க' என்றான். நான் அழுத்தமாக,<br /><br />'மச்சி, இதெல்லாம் ஆவறதில்லை. ஏதோ முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் கனெக்ஷன் கொடுக்க ட்ரை பண்ற. லேட்டாப் போனா ரிசப்ஷன்ல டிஃபன் கிடைக்காது. சீக்கிரம் போலாம்' என்றேன். <br /><br />'தேவி திருமண மகால், காஸாகான் ரோடு, சங்ககிரிபுரம்' என்று கல்யாண பத்திரிகையிலிருந்து விலாசத்தைப் படித்துவிட்டு 'போலாம் தம்பி. 150 ரூவா ஆகும். ஏறிக்குங்க' என்றார் ஆட்டோக்காரர்.<br /><br />ஏறி உட்கார்ந்து சிறிது தூரம் சென்றவுடன் இடது பக்கம் பெட்ரோல் பங்கில் திரும்பி உள்ளே போகாமல் வெளியேவே நிறுத்திவிட்டு 'பெட்ரோல் போட்டுக்கறேன் தம்பி. ஒரு 10 நிமிசம்' என்றவர், கார்த்தி கையில் புகையும் சிகரெட்டைப் பார்த்தவாறே 'சிகரெட்டை தாட்டி உட்ருங்களேன். பெட்ரோல் பங்க்ல இருக்கோம்ல' என்றார். கார்த்தி கீழே இறங்கியவாறே 'நான் இங்கியே நின்னுகிட்டிருக்கேன். நீங்க முடிச்சிட்டு வாங்க' என்றான்.<br /><br />ஆட்டோ ட்ரைவர் பில் போட கவுண்டருக்குப் போய்விட்டார். ராஜ்குமார் 'இவன் எங்கடா ரோட்டை கிராஸ் பண்ணி எங்கியோ போய்டிருக்கான்' என்று சொன்ன பிறகுதான் கவனித்தேன், கார்த்தி ரோடை குறுக்கே கடந்து எதிர்சாரிக்கு சென்று கொண்டிருந்தான். அங்கே பெரிய காம்பவுண்ட் கேட் போட்டு மேலே அரைவட்டமாக இரும்பு க்ரில்லில் பெயர் எழுதியிருந்தது. 'ஜோதி மெட்ரிகுலேஷன் பள்ளி'. <br /><br />'டே! எதுக்குடா இவன் ஸ்கூலுக்கு போயிட்டிருக்கான்?' என்று நான் கேட்ட கேள்வி எனக்கே உறைப்பதற்குள் ராஜ்குமாரும் வேகமாக ரோட்டை கடக்க ஓடிக் கொண்டிருந்தான். வழக்கம் போல நானும் அவன் பின்னே ஓடினேன்.<br /><br />அந்த ஸ்கூல் காம்பவுண்டு பெரிதாக இருந்தது. பெரிய கேட்டுக்கு பக்கத்திலேயே காவலாளிக் கூண்டும் உள்ளே இரண்டு தனியார் காவலாளிகளும் இருந்தார்கள்.<br /><br />ஒட்ட முடி வெட்டியிருந்த நடுத்தர வயது காவலர் 'யாரை சார் பாக்கனும்? ஆபீஸ் டைம் முடிஞ்சுப் போச்சே சார். சாட்டர்டே ஹாஃப்டேதான்' என்றார் கூண்டின் ஜன்னல் வழியாக.<br /><br />'செல்வா டீச்சர்' என்று தயக்கமான குரலில் சொன்னான் கார்த்தி.<br /><br />'எந்த ஸ்கூல்?' என்றார்<br /><br />'இந்த ஸ்கூல்தான். ஜோதி மெட்ரிகுலேஷன்' என்று தன்னிச்சையாக காம்பவுண்ட் கேட்டின் மேல் வளைவாக எழுதப் பட்டிருந்த பெயரைப் பார்த்துக் கொண்டான்.<br /><br />'அது சரி சார். உள்ளே மூணு ஸ்கூல் இருக்கு. எலிமெண்டரி ஸ்கூல் இருக்கு. ம்யூசிக் ஸ்கூல் இருக்கு. எந்த ஸ்கூல் டீச்சரைக் கேக்கறீங்க? என்ன கிளாஸ் எடுக்கிறாங்க?' என்றார்.<br /><br />பைத்தியக்காரத்தனத்திற்கும் ஒரு அளவு உண்டு. இப்படியா தானாக போய் உளறி மாட்டிக் கொள்வான், என்று நான் தவித்துக் கொண்டிருந்த போது, உள்ளே இருந்த இன்னொரு காவலர்,<br /><br />'செல்வநாயகி டீச்சரா சார்? தாஸு, நம்ம ஸ்போர்ட்ஸ் டீச்சர்ப்பா. நீங்க யாரு? என்ன வேணும்?' என்றவாறே அவரும் ஜன்னல் நோக்கி வந்தார்.<br /><br />கார்த்தி புன்னகைத்துக் கொண்டே 'ஆமாம் செல்வநாயகி டீச்சர்தான். நான் ரிலேஷன். கஸின் பிரதர்.' திரும்பி எங்களைப் பார்த்து கண்களை சிமிட்டினான்.<br /><br />தாஸ் மேஜை மேலிருந்த பதிவேடுகளை பார்த்துக் கொண்டே 'செல்வநாயகி டீச்சர் மார்னிங் ஷிப்ட். அதுவும் முடிஞ்சிருச்சே. இந்நேரம் கெளம்பியிருப்பாங்க வீட்டுக்கு.' என்றார்<br /><br />இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் நாங்கள் அவரையே பார்த்துக் கொண்டிருக்க.<br /><br />'எதுனா அவசர செய்தியா சார்? நாங்க வேணா உள்ள போய் இருந்தா சொல்லிடறோம். இருக்க மாட்டாங்க. ஸ்கூல் பஸ் கிளம்பிப் போய் 15 நிமிஷத்துக்கு மேல ஆயிருச்சு.'<br /><br />ஆட்டோவில் போய்க் கொண்டிருக்கும் போது கார்த்தி தன்னுடைய அனுமானங்களை சொல்லிக் கொண்டே வந்தான் 'லாஜிக்கலாப் பாரு. ஸ்கூல் பக்கத்தில் கடைத் தெரு, பக்கத்தில நம்ம ஓட்டல். செவப்பு கலர் ஸ்கார்ஃப். வாங்கிட்டுப் போனது செல்வா டீச்சர்ன்னு கடையில சொல்றாங்க'.<br /><br />'ஸோ வாட்' என்றேன். அவன் அதுக்கப்புறம் ஒன்றும் சொல்லவில்லை. தேவையில்லாமல் இந்த சிறிய விசயத்தை கார்த்தி சிக்கலாக்க முயல்கிறான் என்று தோன்றியது. எதற்காக ஸ்கூலுக்கு எல்லாம் போய் துப்பறிகிற பிடிவாதம்?<br /><br />ரோடு போடும் பணி நடந்து கொண்டிருந்ததால் ஒரு பாதி சாலை மூடப்பட்டு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தன. மெதுவாக போகும் வண்டியில் காற்று இல்லாமல் புழுக்கமாக இருந்தது. ஆட்டோ டிரைவரிடம் 'வேற வழியில்லையாங்க? ரொம்ப ட்ராஃபிக்கா இருக்கும் போலிருக்கே.' என்றான் ராஜ்குமார்.<br /><br />'கொஞ்சம் சுத்திப் போவனும் தம்பி. இப்படிக்கா ரைட்ல கட் பண்ணி இறக்கத்துல போனா இருவது நிமிசத்துல டீச்சர்ஸ் காலனி பிடிச்சிடலாம் அங்கிருந்து ஜான்சி பாலம் தாண்டினா கல்யாண மண்டபம் வந்திரும். தோ... போயிடலாம்' என்றார்.<br /><br />கார்த்தி மெதுவாக 'டீச்சர்ஸ் காலனின்னா, டீச்சர்ஸுங்களுக்கு மட்டும் தனி காலனி இருக்கா என்ன?' மெதுவாக நூல் விட்டுப் பார்க்கிறான் என்று தெரிந்தது.<br /><br />'அப்படி இல்ல தம்பி. பஸ்ஸ்டாண்ட் பக்கம் ஜோதி இசுகூலு இருக்குல்ல, அந்த டீச்சருங்களுக்காக வீடு கட்டி கொடுத்தாங்க. ஆனா இப்ப நெறய வெளி ஆளுங்க எல்லாம் சேந்து பெருசாயிடுச்சு தம்பி. ராசமுத்து ஐயா காலத்தப்ப வீடு கட்டி கொடுத்தாரு. எத்தினி இசுகூலு, காலேசு. அவரெல்லாம் மனுசனில்ல. தெய்வம்' <br /><br />ரிசப்ஷனில் டிஃபனாக முந்திரி பகோடாவையும், கல்கண்டு சாதத்தையும் சாப்பிட்டுவிட்டு, மண்டபம் முழுவதும் நிரம்பியிருந்த சொந்தங்களின் களேபர சத்தங்களுக்கும், அவ்வப்போது இசைக்குழுவினரின் 'அலோலோ', 'கொய்ய்ங்' என்ற பூர்வாங்க தயாரிப்பு வேலைகளுக்கும் நடுவே தனியாக உட்கார்ந்து பராக்கு பார்த்துக் கொண்டிருந்தபோது மகாவின் தம்பி சகாதேவன் வந்தான்.<br /><br />'ரொம்ப போரடிக்குதுங்களாண்ணா... மகா இப்பதான் கோவிலுக்கு பூக்கூடை எடுக்கப் போயிருக்கான். மாப்பிள்ளை பூக்கூடை எடுக்கிறது எங்க பக்கத்தில ஒரு சடங்கு. வர்ற நேரம்தான்.' என்று சொல்லிவிட்டு, அருகில் நின்றிருந்த இரட்டை நாடி மனிதரை அறிமுகபடுத்தி வைத்தான். <br /><br />'இவரு எங்க மாமா. மாப்பிள்ளை ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இவர் பொறுப்புதான்.' கண்களை சிமிட்டியவாறே 'பாக்கத்தான் பெரிய மனுசன் மாதிரி இருப்பாரு. ஆனா பக்கா யூத்து' என்று கொஞ்சம் இடைவெளி விட்டு 'அப்படின்னு அவரே சொல்லிக்கிருவாரு' என்றான்.<br /><br />அவர் சிரித்துக் கொண்டே அவன் முதுகில் ஓங்கி தட்டியவாறே 'நான் பாக்க டவுசரில ஒண்ணுகிருந்த பய, என்னையே லந்து பண்றியா நீயு' என்றவர் எங்களிடம் சம்பிரதாயமாக 'ஐ ஆம் வாகீசன். ரியல் எஸ்டேட் பண்றேன்.' என்றவாறே விசிட்டிங் கார்ட் விநியோகித்தார். 'எங்க பக்கம் கல்யாணம் எல்லாம் இப்படித்தான். ஏகப்பட்ட சடங்கா இருக்கும். எல்லாம் சடங்கையும் முடிக்கிறதுக்குள்ள கட்டிக்கப் போற பொண்ணு பேரு கூட மறந்து போயிரும் பாருங்க. அம்புட்டு கட்டுகோப்பாமாம். ஆமா... உங்களுக்கு எங்க ரூம் போட்டிருக்குது?' என்றவாறே சகஜமாக எங்களை ஜோதியில ஐக்கியமடைய வைத்தார்.<br /><br />பரிசுப் பொருளை கொடுத்துவிட்டு வீடியோ வெளிச்சத்தில் நனைந்தவாறே மகாதேவனிடமும் மறுநாள் மிஸஸ் மகாதேவனாகப் போகும் தேன்மொழியிடமும் வாழ்த்துகள் பரிமாறிவிட்டு ஓரமாக உட்கார்ந்திருந்தோம். என்ன செய்வது என்று தெரியாமல் இரைச்சலான பாட்டுகளைக் கேட்டுக் கொண்டே கல்யாண மண்டபத்திற்கும் பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்கும் நடையாக நடந்து கொண்டிருந்த போது வாகீசன் மீண்டும் பிரசன்னமானார்.<br /><br />'அட, ஒங்களத்தான் தேடி சுத்திட்டிருக்கேன். சாப்பாடு பந்தி போட்டிருக்காங்கன்னு மாடிக்கு போயிடாதீங்க. ஒங்களுக்கு சாப்பாடு இங்க இல்லன்ன்னுட்டான் மகா.' என்று சிரித்துவிட்டு, 'மாயர்ஸ் ஓட்டல் போயிடுவோம். அங்கதான் இன்னிக்கு எல்லா பார்ட்டியும்.' கிட்ட வந்து மெதுவான குரலில் 'ஸ்பெசல் பாட்டு எல்லாம் போடச் சொல்லியிருக்கேன். அரைமணியில கெளம்பிறலாம்' என்று சொல்லிவிட்டு கூட்டத்தில் கலந்துவிட்டார்.<br /><br />வாகீசனின் கார் புதிதாக, பெரியதாக, வாசனையாக இருந்தது. சடசடவென்று பல விசயங்களைப் பற்றி கலகலப்பாகப் பேசிக் கொண்டே வந்தார். நியான் விளக்குகள் மின்ன 'மாரியர்ஸ்' ஓட்டல் உயரமாக வெளிச்சமாக இருக்க, சீருடை பணியாளர்கள் வாகீசனைப் பார்த்து சிநேகமான சிரிப்பை சிந்திவிட்டு சென்றார்கள். <br /><br />'வாரத்துக்கு எப்படியும் மூணு பார்ட்டி இருக்கும். நமக்கு வீடு இங்கதான், பக்கத்தில டீச்சர்ஸ் காலனி. எல்லாப் பசங்களும் நம்மப் பசங்கதான். இது நமக்கு நல்ல தோதான இடம்.' என்றவர் கொஞ்சம் அழுத்தமாக 'எல்லாத்துக்கும்' என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தார்.<br /><br />'டீச்சர்ஸ் காலனியா? அது ஜோதி ஸ்கூல் லே-அவுட்டுன்னு சொன்னாங்களே' என்று கார்த்தி கேட்க, <br /><br />'அட! நம்ம ஏரியா பத்தியும் தெரிஞ்சு வச்சிருக்கீங்கப் போல. நம்ம வொய்ஃப்பும் அங்கதானே வொர்க் பண்றது. ஸ்கூல் ப்ராப்பர்டி எல்லாம் பாதிதான். இப்ப நிறைய எக்ஸ்டெண்ட் பண்ணிட்டோம்ல' என்று சொல்லிக் கொண்டே வந்தவர் செல்போன் சத்தம் போட எடுத்து பாத்தபடியே 'ஒரு நிமிசம்' என்றார். <br /><br />'சொல்லு செல்வா. இங்கதான் மாரியர்ஸ்ல இருக்கேன்' என்று பேசியவாறே விலகிப் போக நாங்கள் ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்துக் கொண்ட்டோம். அரையிருட்டில் முகம் தெளிவாகத் தெரியவில்லையென்றாலும் கார்த்தி மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தான் என்பது அவன் கிள்ளிய கிள்ளலில் தெரிந்தது.<br /><br />நடு இரவைத் தாண்டியும் பார்ட்டி நடந்து கொண்டிருக்க எல்லாரும் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். ராஜ்குமார் கேட்ட ஐஸ்கிரீம் சண்டே (sundae) அங்கே இல்லை. ஓட்டலில் கிச்சனை மூடிவிட்டுப் போயிருந்தார்கள்.<br /><br />'நடு ராத்திரில ஐஸ்க்ரீமா? நல்ல டேஸ்டுய்யா உனக்கு. நமக்கும் இப்படித்தான். நல்லா மழை பெய்யும்போது நட்ஸ் நிறையப் போட்டு குளிரக் குளிர ஃபட்ஜ் சாப்பிடனும். இவங்க கிட்ட முதல்லேயே சொல்லியிருந்தா எடுத்து வச்சிருப்பானுங்க. சரி வாங்க. வேற ஐடியா பண்ணுவோம்.' என்றார் அங்கிள் உற்சாகமாக.<br /><br />எங்கள் மூவரை மட்டும் தனியே பார்ட்டியிலிருந்து பிரித்தெடுத்து அவரது வண்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு அமைதியான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் கொண்டு நிறுத்தினார்.<br /><br />'நம்ம வீடுதான். எப்பவும் ஐஸ்க்ரீம் ஸ்டாக் இருக்கும். மெல்ல வாங்க' என்றார்.<br /><br />'அய்யோ அங்கிள்! எதுக்கு இந்த சிரமம்லாம்... இவன் கேட்டான்னு நீங்க எதுக்கு இந்நேரத்துக்கு வீட்டுல டிஸ்டர்ப் பண்ணிகிட்டு...' நான் பதட்டமாக சொல்ல, கார்த்தி இருட்டில் உறங்கும் வீட்டை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்.<br /><br />'நம்ம கையில ஒரு சாவி இருக்கு கண்ணு.' என்று வீட்டுக் கதவை சாவி போட்டு திறந்துவிட்டு, 'வொய்ஃப் மார்னிங் ஷிஃப்ட்ங்கிறதுனால எப்பவும் சீக்கிரம் தூங்கிப் பழக்கம். இன்னிக்கு கல்யாண அலைச்சல் வேற ஜாஸ்தியாயிருக்கும். தூங்கியிருப்பா அப்பவே' என்றார் கிசுகிசுப்பாக.<br /><br />டைனிங் ஹால்ல உக்காந்து கொண்டு பெரிய டீவியில் ஹாரிஸ் நார்டனின் பழையப் படத்தை பார்த்துக் கொண்டே ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஹாரிஸ் நார்டன் 'மெக்னோலியா'வில் எப்படி ஆஸ்கர் அவார்டை கோட்டை விட்டார் என்று பேச்சு திசை திரும்ப 'ஹாரிஸ் நார்டனோட புல் கலெக்ஷன் வச்சிருக்கேன். போன மாசம் வந்த 'ஒல்டு மெமரிஸ்'வரை' என்றார் புன்னகைத்துக் கொண்டே. <br /><br />'நான் இன்னும் பாக்கலை' என்றேன் ஏக்கமாக.<br /><br />'அடப்பாவி! செமைப் படம்யா அது. ரெண்டு நாள் தூங்க முடியல என்னால பாத்திட்டு. உங்க ஓட்டல் ரூம்ல டீவி இருக்குல்ல? டிவிடி ப்ளேயர் எடுத்திட்டுப் போய் இன்னிக்கேப் பாத்திருங்க. நாளைக்கு முகூர்த்தம் 11 மணிக்கப்புறம்தானே.' என்று சொன்னவர், வேண்டாம் என்று தடுக்க முற்படுவதற்குள் 'இருங்க டிவிடி பிளேயர் உள்ள பெட்ரூமில இருக்கு. எடுத்திட்டு வர்றேன்.' என்று உள்ளே போய்விட்டார். <br /><br />கார்த்தி அவர் அரைகுறையாக திறந்து வைத்துவிட்டு சென்ற பெட்ரூம் கதவையே பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென உள்ளேப் புகுந்து 'எங்கே செல்வா டீச்சர்' என்று கேட்டு விடுவானோ என்று கொஞ்சம் பயமாக இருந்தது. உள்ளேயிருந்து தூக்க கலக்கத்துடன் ஒரு பெண் குரல் சன்னமாக 'சாப்பிட்டீங்களா?' என்று கேட்டது. <br /><br />'ஆச்சும்மா. இந்த ஏவி கார்ட் இங்கதான் சுருட்டி வச்சிருந்தேன். தோ... கிடைச்சிடுச்சி.' என்றது அங்கிள் குரல்.<br /><br />'எங்கியாச்சும் வெளில போறீங்களா என்ன?'<br /><br />'இல்லம்மா... கெஸ்ட் வந்திருக்காங்க. நம்ம மாப்பிள்ள ஃப்ரெண்ட்ஸ். தோ அனுப்பிட்டு வந்திடறேன்'<br /><br />'என்னா குளிரு. ஏஸியை கொஞ்சம் குறைச்சிருங்களேன். அப்படியே அந்த அயர்ன் போர்டு மேல இருக்கற ஸ்கார்ஃபை எடுத்து கொடுத்திட்டுப் போங்க. சீக்கிரம் வந்து தூங்குங்க'<br /><br />'தோ... வந்துட்டேன்' என்றார் வாகீசன்.<br /><br />எழுந்து எட்டிப் பார்க்க முயன்ற கார்த்தியை தோளைப் பிடித்து உட்கார வைக்க வேண்டியதாயிருந்தது. <br /><br />ராஜ்குமார் மெதுவாக 'சாரி அங்கிள்! முதல்ல வீட்டுக்கு வர்றப்ப வெறுங்கையோட வந்திட்டோம். ஏதாவது பிஸ்கெட் பாக்கெட்டாவது வாங்கிட்டு வந்திருக்கலாம். <br /><br />'வீட்டுக்குதான் வர்றோம்னு தெரியாது. திடும்னு கூட்டிட்டு வந்திட்டீங்க. நெக்ஸ்ட் டைம் ப்ரிப்பேர்டா வரோம்' என்று நானும் ஒத்துப்பாட<br /><br />'நல்லவேளை பிஸ்கெட் பாக்கெட் எதும் வாங்கிட்டு வரல நீங்க. எம்புட்டு பிஸ்கெட்டு நானும் என் பொண்டாட்டியும் மட்டும் திங்கறது.' என்றவர் 'அப்படியே கண்டிப்பா எதுனா வாங்கிட்டுத்தான் வருவேன்னா நல்ல சரக்கு பாட்டில் எதுனா பிடிச்சிட்டு வாங்க. யூஸ்புல்லா இருக்கும்' என்றார். கூடவே வெள்ளையாக, இனிமையாக, உற்சாகமாக அவரின் ட்ரேட் மார்க் சிரிப்பு. எங்களுக்கு இப்பொழுது பழகிவிட்டது.<br /><br />ரூமிற்கு வந்தபிறகும் நாங்கள் அவ்வளவாக பேசிக் கொள்ளவில்லை. இன்று நடந்த சம்பவங்களுக்கிடையே எந்த தொடர்புமில்லை என்று தெளிவாகத் புத்திக்கு தெரிந்தாலும் ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு... அதுவும் கார்த்தி மிகவும் தீவிரமாக ஏதோ உருவகம் பண்ணுவது அவனது மௌனத்திலிருந்தே தெரிகிறது. <br /><br />அதிகாலையில் மௌனவிரதத்தை கலைத்தவன் என்னை தவிர்த்து ராஜ்குமாரிடம் பேசிக் கொண்டிருர்ந்தான். <br /><br />'மச்சி! ஐ ஸ்மெல்ட் இட் மச்சி.'<br /><br />'கார்த்தி, இதெல்லாம் தற்செயலான சம்பவங்கள். தேவையில்லாம குழப்பிக்காதே. நேத்திக்கு அங்கிள் வீட்டுல பெட்ரூமையே அப்படி பாத்திட்டிருந்த? யுர் பிஹேவியர் வாஸ் அப்ஸொல்யூட்லி ப்ரிபோஸ்ட்ரஸ். முழு முட்டாள் நீ!'<br /><br />'சுந்து, நீ பேசாம இரு. நான் குமார்கிட்ட பேசிட்டு இருக்கேன். உனக்கு இந்த லாஜிக் எல்லாம் புரியாது'<br /><br />பேச்சு உரக்க வலுத்துக் கொண்டிருக்க ராஜ்குமார் சமாதானக் குரலில்,<br /><br />'இருங்கப்பா. இருங்கப்பா. லெட்ஸ் டேக எ அப்ஜெக்டிவ் லுக். கார்த்தி நீ என்ன சொல்ல வர்ற'<br /><br />கார்த்தி அழுத்தம்திருத்தமாக 'நேத்து காலையில நாம பாத்த பொண்ணும் அங்கிளோட ஒய்ஃபும் ஒரே ஆளுன்னு... ஆளுன்னு...' கொஞ்சம் தயங்கியபடி 'ஒண்ணா இருக்ககூடிய சாத்தியங்கள் மிக அதிகமா தெரியுது'<br /><br />'சரி அதுக்கு என்ன இப்ப?'<br /><br />'அங்கிளை நினச்சா கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஸச் எ ஸ்வீட் மேன்' <br /><br />நான் குறுக்கிட்டு<br /><br />'குமார்... நீயே சொல்லு இதுல என்ன மன்னாங்கட்டி லாஜிக் இருக்கு. அந்தப் பொண்ணை முதல்ல பாத்தது நான். இன்னொருவாட்டி பாத்தா எனக்கே அடையாளம் சொல்லத் தெரியாது. அவ்வளவு தூரத்தில பாத்திருக்கேன். அந்த ஸ்கார்ஃபை கார்த்தி தவிர யாரும் கடையில பாக்கல. செல்வா டீச்சர் யாரு? அவங்க வாங்கினது அதே ஸ்கார்ஃபா? அங்கிளோட வொஃய்ப் பேரும் செல்வநாயகிதானா? அவங்கதான் ஜோதி ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டீச்சரா? எவ்வளவு கேள்விகள். தேவையில்லாம யார் மேலயோ பழி போடறது நல்லால்ல.'<br /><br />'அப்ப, அந்த பெண்ணுக்கும் அங்கிளுக்கு ஒரு சம்பந்தமுமில்லைன்னு சொல்றியா'<br /><br />'டேய்... சுத்த பேத்தல்டா இது'<br /><br />ராஜ்குமார் மெதுவாக சொன்னான். 'எனக்கும் சுந்து சொல்றது சரிதான்னு தோணுது. ஆனா அதே சமயம் அங்கிளை நெனச்சா பாவமா இருக்கு. அதனால...' என்று கொக்கி போட்டுவிட்டு நிறுத்தினான்.<br /><br />'இது என்ன தீர்ப்பு சொல்ற டைம்மா? கிவ் மீ எ பிரேக்' <br /><br />'இல்ல மச்சி! நான் என்ன சொல்ல வர்றேன்னா... ' என்று என்னை சமாதானமாக தோளைப் பிடித்து அழுத்திவிட்டு 'அந்த வீடியோவை அங்கிளுக்கு MMS பண்ணிட்டேன். அவருக்கு சம்பந்தமில்லைன்னா நோ ப்ராப்ளம். ஜஸ்ட் எ ஃப்ன் வீடியோ. இல்ல கார்த்தி சொல்ற மாதிரின்னா அங்கிளுக்கு தெரியபடுத்தின திருப்தி நமக்கு' என்றான்<br /><br />மை காட்! எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. <br /><br />'டேய்... திஸ் இஸ் ஹைலி ரிடிகுலஸ். மொதல்ல நீ ரிகார்ட் பண்ணினதே தப்பு. அதை இப்படி MMS பண்றது ரொம்ப தப்பு.' கார்த்தியும் இதை எதிர்பார்க்கவில்லை.<br /><br />'மச்சி, ஆர் யு இன்ஸேன். இன்னிக்கு கல்யாணத்தில் அங்கிளை எப்படிர்றா ஃபேஸ் பண்றது?'<br /><br />அதற்கு அவசியம் இருக்கவில்லை. <br /><br />'என்ன மிட் நைட்ல ஸ்பெஷல் ஐஸ்க்ரீம் எப்படி இருந்திச்சு?' என்று கேட்ட சகாதேவனிடம் 'சூப்பர்ப்பா. என்ன அங்கிள்ல காலைலேந்து காணோம்' என்று சாதாரணமாக கேட்பது போல் கேட்டேன்.<br /><br />'ஆமாம். அவசர வேலையா ராமநகரம் போயிருக்கார். ஏதோ பிஸினெஸ் கால். ஆண்ட்டிதான் சொன்னாங்க நடுராத்திரில டிவிடி பாத்திட்டு இருந்தீங்களாம்? எதுனா சாமி படமாண்ணா? அங்கிள் நிறைய வச்சிருப்பாரே' <br /><br />'ஆண்ட்டி வந்திருக்காங்களா என்ன? நேத்துக் கூட மீட் பண்ண முடியல' என்றான் கார்த்தி.<br /><br />'இங்கதான இருந்தாங்க. மகா குரூப் போட்டோக்கு கூப்பிட்டிருக்கான். வாங்க'<br /><br />மேடையில் பெரியவர்கள் எல்லாரும் மணமக்களுக்கு திருநீறு பூசிவிட்டு மொய்ப்பணம் அளிக்க பக்கத்திலேயே இரண்டு பேர் சேர் போட்டுக் கொண்டு உட்கார்ந்து பொறுப்பாக வரவு வைத்துக் கொண்டிருந்தார்கள். சாப்பாடு ஹாலில் வரிசையில் நின்று சாப்பிடும் அளவுக்கு அலைமோதும் கூட்டம். பாலம் கிச்சனின் ஸ்பெஷல் மட்டன் பிரியாணிதான் அன்றைய மெனுவின் முக்கிய ஐட்டம். மாலை பஸ்ஸை பிடிக்க வேண்டும் என்பதால் ஓட்டல் திரும்பியாகிவிட்டது. ஒரு குட்டி தூக்கம் போடும் முயற்சியில் இருக்கும்பொழுது போது ரூம் பெல் அடித்தது. திறந்தால் வாசலில் நரைத்த தாடியுடனும் காவிப் பல்லுடனும் 'நான் வாகீசன் சார் வூட்டு டிரைவர். சார் டிவிடி பிளேயர் எடுத்திட்டு வரச் சொன்னாரு' என்று சொல்லிக் கொண்டு ஒருவர் நின்றார்.<br /><br />'ஓ! அங்கிள் வரலையா? நேத்து அவரே செல்ஃப்ல வந்தாரே' என்று நான் சற்று குழப்பத்துடன் கேட்க<br /><br />'நேத்து கல்யாண வேலைக்காக வேற ஒரு வண்டில இருந்தேன் சார். இப்பத்தான் ராமநகரத்திலேந்து ரிடர்ன் ஆனோம். அய்யாவை வீட்டுல விட்டுட்டு வந்தேன்' என்றார்.<br /><br />'உங்க பேரு?'<br /><br />'சங்கராமன் சார்' <br /><br />'இருங்க நானே எடுத்திட்டு வர்றேன்' அங்கிள் வராமல் டிரைவர் மட்டும் அனுப்பியது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், டிவிடி பிளேயரை பத்திரமாக திருப்பி கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பும் உறுத்தியது. <br /><br />'இருக்கட்டும் சார். நானே எடுத்திக்கிறேன்' என்று அவரே டிவிடி பிளேயரை தூக்கிச் சென்றார். கூடவே கார் வரைச் சென்றேன். டிரைவரின் பக்கத்து சீட்டில் பத்திரமாக வைத்துவிட்டு, திறந்திருந்த கிளவ் பாக்ஸை மூடும்போது உள்ளே இருந்த வழவழப்பான வண்ணக் காகிதங்களில் 'ஜோதி மெட்ரிக்குலேஷன் பள்ளி'யின் பேம்ஃபிளட்டுகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரிந்தது. நேர்த்தியான வடிவமைப்பில் மூன்றாக மடக்கி வைக்கப் பட்ட மார்க்கெட்டிங் தாள்கள். ஏதோ உந்துதலில் எடுத்துப் பார்க்க, சங்கராமன் சொன்னார் 'அம்மா ஸ்கூல் விளம்பரங்க. உள்ளாற அம்மா படம் போட்டிருக்கும் பாருங்க. பிரிச்சுப் பாருங்க' என்றார் பெருமையாக.<br /><br />பேம்ஃப்ளட்டை பிரித்தால் உள்ளே பள்ளியின் விளையாட்டு வசதிகளைப் பற்றி விரிவாக பல புள்ளிவிவரங்களின் குறிக்கப் பட்டிருந்தது. அருகில் நான்கைந்து சிறுவர் சிறுமியர் ஓட்டப் பந்தயத்தின் தொடக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நிலையில் இருக்க, அருகில் கழுத்தில் தொங்கும் விசிலுடனும், கையில் ஸ்டாப் வாட்சுடன், கிராப் செய்த தலைமுடியுடனும், முழுக்கைச் சட்டையின் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு செல்வநாயகி டீச்சர் நின்று கொண்டிருந்தார்.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-2656497851369436738?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com58tag:blogger.com,1999:blog-30880544.post-45115671761507202162008-10-22T16:49:00.000-07:002008-10-25T15:19:31.363-07:00குழந்தைக் கதைகள் - 1நீங்கள் சிறு வயதில் கேட்ட, பகிர்ந்த, மகிழ்ந்த கதைகளை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எனது ஒன்றரை வயது மகனின் கதை கேட்கும் ஆசைக்காக நான் தேடியபோது எனது நினைவலைகளில் சிக்கி மீண்ட சில கதைகளை இங்கே பதிவு செய்கிறேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சில கதைகள் இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் முழுவதுமாக நினைவில் அப்படியே நிற்கின்றன.<br /><br /><span class="fullpost">இந்தக் கதையின் கட்டமைப்பும், அது குழந்தைகளுக்கு மறைமுகமாக சொல்லித்தரும் விசயங்களும் (ஆடு மேய்ப்பது இடையன். மீன் பிடிப்பது வலைஞன். சட்டி செய்வது குயவன்) போன்ற விசயங்கள் மிகவும் வியப்பானவை. இந்தக் கதையை சொல்வதற்கு என்று தனி முறை வேறு வைத்து இருக்கிறார்கள். சொல்கிற விதமாக சொன்னால் உத்தரவாதமாக குழந்தைகள் தூங்கிவிடுகின்றன. முடிந்தவரையில் நான் கேட்ட கதைகளை அப்படியேதான் கொடுத்திருக்கிறேன். இறுதியில் மட்டும் சில பிற்சேர்க்கைகள் இருக்கலாம். எல்லாம் 'மத்தியதட்டு' பொதுபுத்தியின் விளைவுதான் :)<br /><br />சந்தோஷமா சிரிச்சுப் பறந்துகிட்டிருந்த 'ஈ'க்கு ஒரு சோகம். திடீர்ன்னு அதோட பேரு அதுக்கு மறந்து போச்சு. சுத்துமுத்தும் பாத்த ஈ அங்கே மேய்ஞ்சிகிட்டிருந்த ஒரு ஆட்டுகுட்டியப் பாத்து கேட்டதாம்:<br /><br /><span style="color:#cc0000;">ஈ:</span> <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! என் பெயர் என்ன? </span><br /><br /><span style="color:#cc0000;">ஆகு:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />எங்க அம்மாகிட்டப் போய் கேளு.</span><br /><br />உடனே அந்த ஈ அந்த குட்டியோட அம்மாகிட்டப் போய் கேட்டுதாம்.<br /><br /><span style="color:#cc0000;">ஈ:</span> <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />என் பெயர் என்ன?</span><br /><br /><span style="color:#cc0000;">ஆகு அம்மா:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />என்னை மேய்க்கும் இடையன்கிட்ட போய் கேளு!</span><br /><br />சரிதான்னுட்டு... அங்க பக்கத்திலேயே இருந்த ஆடு மேய்க்கிற இடையன்கிட்டப் போய்,<br /><br /><span style="color:#cc0000;">ஈ:</span> <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />தாயை மேய்க்கும் இடையா! என் பெயர் என்ன?</span><br /><br /><span style="color:#cc0000;">இடை:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />என் கையிலிருக்கும் கோல்கிட்டக் கேளு!</span><br /><br /><span style="color:#cc0000;">ஈ:</span> <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!<br />என் பெயர் என்ன?</span><br /><br /><span style="color:#cc0000;">கோல்:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />நான் வளர்ந்த கொடிமரத்துகிட்டப் போய்க் கேளு!</span><br /><br />அந்த கொடிமரத்தை தேடிப் போய்க் கேட்டுதாம்....<br /><br /><span style="color:#cc0000;">ஈ:</span> <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!<br />கோல் வளர்ந்த கொடிமரமே!<br />என் பெயர் என்ன?</span><br /><br /><span style="color:#cc0000;">கொடி:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />என் மேலிருக்கிற கொக்குகிட்டப் போய்க் கேளு!</span><br /><br /><span style="color:#cc0000;">ஈ:</span> <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!<br />கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!<br />என் பெயர் என்ன?</span><br /><br /><span style="color:#cc0000;">கொக்:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />நான் தண்ணி குடிக்கிற குளத்துகிட்டேப் போய்க் கேளு!</span><br /><br />அந்த கொக்கு தண்ணி குடிக்கும் குளத்துக்குப் போய் <br /><br /><span style="color:#cc0000;">ஈ:</span> <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!<br />கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!<br />கொக்கும் குடிக்கும் குளமே!<br />என் பெயர் என்ன?</span><br /><br /><span style="color:#cc0000;">குள:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />என்கிட்டே இருக்கற மீன்கிட்டப் போய்க் கேளு!</span><br /><br />உடனே அந்த ஈ மீன்களைத் தேடிப் பிடிச்சுக் கேட்டுச்சாம்... <br /><br /><span style="color:#cc0000;">ஈ:</span> <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!<br />கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!<br />கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!<br />என் பெயர் என்ன?</span><br /><br /><br /><span style="color:#cc0000;">மீன்:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />என்னைப் பிடிக்கும் வலைஞன்கிட்டப் போய்க் கேளு!</span><br /><br />உடனே அந்த ஈ வலைஞனை தேடிப் போய் கேட்டுச்சாம்.<br /><br /><span style="color:#cc0000;">ஈ:</span> <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!<br />கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!<br />கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!<br />மீன் பிடிக்கும் வலைஞா!<br />என் பெயர் என்ன?</span><br /><br /><span style="color:#cc0000;">வலை:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />என் கையிலிருக்கிற சட்டிகிட்டப் போய்க் கேளு!</span><br /><br /><span style="color:#cc0000;">ஈ</span>: <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!<br />கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!<br />கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!<br />மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!<br />என் பெயர் என்ன?</span><br /><br /><span style="color:#cc0000;">சட்டி:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />என்னை செய்யும் குயவன்கிட்டப் போய்க் கேளு!</span><br /><br />சரிதான். இன்னைக்கு பேரைக் கண்டுபிடிக்காம விட்டுர்றதில்லைன்னுட்டு அந்த குயவனைத் தேடிப் போச்சாம்.<br /><br /><span style="color:#cc0000;">ஈ:</span> <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!<br />கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!<br />கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!<br />மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி! <br />சட்டி பண்ணும் குயவா!<br />என் பெயர் என்ன?</span><br /><br /><span style="color:#cc0000;">குய:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />என் கையிலிருக்கிற மண்ணுகிட்டப் போய்க் கேளு!</span><br /><br /><span style="color:#cc0000;">ஈ</span>: <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!<br />கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!<br />கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!<br />மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி! <br />சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!<br />என் பெயர் என்ன?</span><br /><br /><span style="color:#cc0000;">மண்:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />என் மேல் வளந்திருக்கிற புல்கிட்டேப் போய்க் கேளு!</span><br /><br /><span style="color:#cc0000;">ஈ:</span> <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!<br />கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!<br />கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!<br />மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி! <br />சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே! <br />மண் மேலிருக்கும் புல்லே!<br />என் பெயர் என்ன?</span><br /><br /><span style="color:#cc0000;">புல்:</span> <span style="color:#0000FF;">எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!<br />என்னைத் திங்குற குதிரைகிட்டப் போய்க் கேளு!</span><br /><br /><span style="color:#cc0000;">ஈ:</span> <span style="color:#0000FF;">கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!<br />தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!<br />கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!<br />கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!<br />மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி! <br />சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே! <br />மண் மேலிருக்கும் புல்லே! புல் தின்னும் குதிரை!<br />என் பெயர் என்ன?</span><br /><br /><span style="color:#cc0000;">குதி:</span> <span style="color:#0000FF;">ஹீஈஈஈஈஈ! ஹீஈஈஈஈ</span><br /><br />அப்படின்னு குதிரை சிரிச்சிச்சாம். உடனே ஈ-க்கு தன்னோட பெயர் 'ஈ'ன்னு ஞாபகம் வந்திடுச்சு. குதிரைக்கு ஒரு நன்றி சொல்லிட்டு சந்தோசமா புறப்பிட்டுச்சாம்.<br /><br /><span style="color:#cc0000;">குதி</span>: <span style="color:#0000FF;">ஏ! ஈ.... தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கனும். இல்லைன்னா இந்த மாதிரிதான் பெயர் மறந்து போய் ஒவ்வொருத்தரா கேட்டுட்டு இருக்கனும்.</span><br /><br />அப்படின்னு சொல்லிச்சாம். அதனால எல்லா குழந்தைகளும் தினமும் ஒரு டம்ளர் பால் கட்டாயம் குடிச்சிடுங்க :-))</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-4511567176150720216?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-30880544.post-86214861693131178492008-10-20T16:25:00.000-07:002008-10-24T22:23:43.597-07:00Proof of the Puddingபுட்டிங்-ஐ (Pudding) சாப்பிடுவதுதான் அதனுடைய நிரூபனம் (வெற்றி) என்று சொல்வார்கள். <a href="http://cyrilaex.com/">சிறில் அலெக்ஸ்</a> ஒரு <a href="http://cyrilalex.com/?p=440">அறிபுனை சிறுகதைப் போட்டி </a>அறிவித்த போது பதிவுலகில் பலரும் ஆர்வமுடன் பங்கேற்க முன்வந்தனர். <a href="http://jeyamohan.in/">எழுத்தாளர் ஜெயமோகன் </a>பரிசுக்குரிய கதைகளை தேர்வு செய்வார் என்றுசொன்னது ஒரு பெரிய உந்துதல். <span class="fullpost"><a href="http://www.thinnai.com/">திண்ணையில் </a>அவர் தொடர்ச்சியாக சில <a href="http://jeyamohan.in/?cat=27">அறிபுனைவுகளை </a>விளையாட்டுப் போல எழுதியிருந்த போது தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். நண்பர் <a href="http://penathal.blogspot.com/">பெனாத்தல் சுரேஷுடன் </a>உரையாடும்போது 'நீங்களும் சிறுகதை எழுதுங்கள்' என்று உற்சாகபடுத்தினார். விளைவு ஒரு பதிவை தொடங்கி <a href="http://www.sridharblogs.com/search/label/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88">நான்கு கதைகளையும் </a>எழுதி போட்டிக்கு அனுப்பி வைத்தேன். இன்று அதில் ஒரு கதையான <a href="http://www.sridharblogs.com/2008/07/blog-post_31.html">ரஸவாதம் </a>போட்டியில் <a href="http://cyrilalex.com/?p=450">இரண்டாம் நிலையில் </a>தேர்வாகியிருக்கிறது என்று அறியும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.<br /><br />இல்லாத கதையைப் பற்றிய ஒரு விவாதம் நடந்தால் எப்படி இருக்கும் என்றுதான் இந்த கதையை எழுதத் துவங்கினேன். ரஸவாதம் என்பது எப்பொழுதும் ஒரு மிஸ்டீக்கலான கரு என்பதனால் அதையே மையப் பொருளாக வைத்து எழுத முயற்சித்தேன். நண்பர் <a href="http://jyovramsundar.blogspot.com/">ஜ்யோவ்ராம் சுந்தர்</a> எல்லா புனைவு முயற்சிகளுக்கும் மிகுந்த ஊக்கம் அளித்தது போல இதையும் பாராட்டியிருந்தார். நிறைய நண்பர்கள் பாராட்டி எழுதினாலும் கொஞ்சம் சுவாரசியம் கம்மி என்று அபிப்ராயபட்டிருந்தார்கள். எல்லாருடைய வாசிப்பிற்கும், கருத்து பரிமாற்றதிற்கும் மிக்க நன்றி.<br /><br />-o0O0o-o0O0o-o0O0o--o0O0o-o0O0o-<br /><br />இணையப் பதிவுகளில் அனுபவங்களையும், விவாதங்களையும், கருத்துகளையும் கடை பரப்புவதைத் தாண்டி செய்தி விமர்சனத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அமெரிக்க தேர்தலைப் பற்றி <a href="http://uspresident08.wordpress.com/">பாஸ்டன் பாலா ரிப்போர்டிங் </a>செய்யும் விதம் மிகவும் அருமை. வெகுஜன பத்திரிகைகளை விட மிகத் திறமையாக செய்திகளை தொகுத்து பல்வேறு கருத்து பரிமாற்றங்களும் செய்து வருகிறார். அமெரிக்க தேர்தல் பற்றிய நல்ல கருத்து களஞ்சியமாக உருவெடுத்து வருகிறது இந்தத் தளம். <a href="http://snapjudge.com/">வாழ்த்துகள் பாபா</a>. <br /><br />இதே முறையில் கடந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலின் போது இட்லிவடை தளம் வெகு விரைவாக முடிவுகளை வெளியிட்டு பதிவுகளின் இன்னொரு பரிமானத்தை புரிய வைத்தது. இட்லிவடை தொடங்கி <a href="http://idlyvadai.blogspot.com/2008/10/5_20.html">ஐந்து வருடங்கள் </a>ஆகின்றதாம். <a href="http://idlyvadai.blogspot.com/">வாழ்த்துகள் இட்லிவடை</a>.<br /><br />என்னடா பாபாவிற்கும், இட்லிவடைக்கும் தனித்தனியே வாழ்த்துகள் சொல்கிறானே என்று சிரிக்காதீர்கள். I am an asinner (அப்பாவி). <br /><br />-o0O0o-o0O0o-o0O0o--o0O0o-o0O0o-<br /><br />இணையப் பதிவுகளினால் பணம் சம்பாதிக்க முயல்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது ஹிட் கௌண்டர்களை நம்பாமல் வேறு வகையில் தளத்திற்கான ட்ராஃபிக்கை அளவிடுவது. இந்த ஹிட் கௌண்டர்கள் என்பது பெரும்பாலும் யாராவது மூன்றாமவர் எழுதி இணைக்கப்பட்ட இலவச செயலியாகத்தான் இருக்கும். உலாவியை ஒரு முறை ரிப்ரெஷ் செய்ய ஜிவ்வென்று விநாடிக்கு இரண்டு, மூன்று ஹிட் என்று சென்னை ஆட்டோ கணக்கில் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போகும். இந்த மாதிரியான இலவச செயலிகளின் நம்பகத்தன்மைக்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. விளம்பரங்கள் தருகிறவர்கள் முதலில் பார்ப்பது உங்கள் தளங்கள் தேடுபொறியில் எந்த ரேங்கில் வருகிறது என்றுதான். 'சினிமா' என்று தேடுபொறியில் தேடினால் முதலில் சிக்கும் பத்து பதினைந்து தளங்களில்தான் சினிமா பற்றிய விளம்பரங்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். Meta tag, Keywords, பக்க தலைப்பு போன்றவற்றை சரியான முறையில் பயன்படுத்தி தேடு பொறியில் முன்னனியில் கொண்டு வருவது முக்கியம். யூனிக்கோடு தமிழ் இன்னமும் பக்க தலைப்புகளில் சதுரமாகத்தான் தெரிகிறது. எல்லாவற்றிலும் முக்கியமானது அழகியல் என்று சொல்லப்படும் aesthetic sense. இணைய தளத்தை பார்த்தவுடன் பிடித்துப் போக வேண்டும் என்பது மிக முக்கியம். <br /><br />அடுத்தபடியாக உள்ளடக்கம். உங்கள் இணைய பக்கங்களை படிக்க வருபவர்களை இணைய வர்த்தகத்தில் ஈடுபடுத்தும் நோக்கோடு உள்ளடக்கம் இருக்க வேண்டும். உதாரணம் சமையல் குறிப்புகள். அந்த தளத்தில் ஹோட்டல்கள், சமையல் புத்தகங்கள், போன் மூலம் ஆர்டர் செய்யும் உணவகங்கள் என்று விளம்பரங்களை ஊக்குவிக்கலாம். புனைவுகளை மட்டும் நம்பியிருப்ப்போர் புத்தக வர்த்தகத்தை மேற்கொள்ளலாம். மொத்தத்தில் இணையத்திற்கான எழுத்து ஒரு திட்டத்தோடு இருந்தால் வருவாய் உறுதி. Just blogging is Just an ego trip.<br /><br />-o0O0o-o0O0o-o0O0o--o0O0o-o0O0o-<br /><br />ஒரு வழியாக குறித்து வைத்திருந்த படமான <a href="http://en.wikipedia.org/wiki/Children_of_Heaven">Children of Heaven </a>பார்த்துவிட்டேன். 1997-ல் ஒரு கோடி ரூபாய்க்குள்ளான பட்ஜெட்டில் படமாக்கப்பட்ட படம். தெளிந்த நீரோட்டமான கதை. நூல் பிடித்தாற்ப் போல செல்கிறது. இந்த படத்தை இயக்கிய மஜித் மஜிதிக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாதென்பது உபரி தகவல். இந்த திரைப்படத்தைப் பற்றி நிறைய பதிவுகள் ஏற்கெனவே எழுதப்பட்டு விட்டன. கதையை வேண்டுபவர்களுக்கு <a href="http://en.wikipedia.org/wiki/Children_of_Heaven">விக்கிபீடியாவில் கதையும்</a> இருக்கிறது. திரைப்படத்தின் தொடக்கத்தில் அலி தனது தங்கை சாராவின் (Zahra) காலணிகளை தொலைத்து விடுகிறான். இறுதிவரை அவனால் அவளுக்கு காலணிகள் வாங்கித் தரமுடியவில்லை. அவன் தங்கை சாரா-விற்கும் அவனுக்கும் நடக்கும் உரையாடல்கள் மூலமாக அவர்களின் உலகத்தைப் பற்றிய புரிதலை நமக்கு தருகிறார் இயக்குநர். தங்கையின் ஷூவை தாந்தான் தொலைத்தது என்று தெரிந்தால் அப்பா கோபப்படுவார் என்பதை விட தங்கைக்கு புது ஷூ வாங்க அப்பா கடன் வாங்குவாரே என்று கவலைப்படுகிறான். தந்தையின் கஷ்டமான நிலை புரிந்து அலியின் ஒரே காலணியை பகிர்ந்து கொள்கிறார்கள். காலை சாரா பள்ளிக்கு அலியின் சற்றே அளவிற்ப் பெரிதான காலணியை அணிந்து கொண்டு போகிறாள். மூன்றாம் வகுப்பு படிக்கும் அலியின் பள்ளி மதியம் துவங்குகிறது. வழியில் அவன் காத்திருக்க சாரா ஓடி வந்து அவனிடம் ஷூக்களை கொடுக்க அவன் பள்ளிக்கு ஓடிச் செல்கிறான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிக்கல். ஒரு நாள் சாரா சாக்கடையை தாண்டி குதிக்கும் போது அந்த அளவில் பெரிதான ஷூ கழன்று சாக்கடையில் விழுந்து விடுகிறது. கடைத்தெருவில் சிலரின் உதவியோடு அதை அவள் மீட்டெடுத்துக் கொண்டு வருகிறாள். காலணியை மாற்றிக் கொண்டு பள்ளி செல்லும் அலி தாமதமாக போய் பிரின்ஸிபாலிடம் மாட்டிக் கொள்கிறான். இப்படியாக ஒரே ஜோடி காலணியோடு இருவரும் பற்ப்பல பிரச்சினைகளை எதிர்கொண்டு மீள்கிறார்கள். சாராவிற்கு அலியின் காலணிகள் பிடிக்கவேயில்லை. சாராவின் தொலைந்து போன காலணியோ வேறு ஒரு கண்ணிழந்த சிகரெட் வியாபாரியின் குழந்தையிடம் போய்ச் சேருகிறது. அந்த பெண்ணும் சாராவின் பள்ளியிலேயே படிக்கிறாள். தனது ஷூக்கள் பறிபோன வேதனையும் கொந்தளிப்பும் கொண்டு அந்தப் குழந்தையை பார்க்கிறாள் சாரா. அலி வகுப்பில் முதலாவதாக வந்ததற்கு பரிசாக கிடைத்த பேனாவை சாராவிற்கு கொடுக்கிறான். பாசத்துடனே அவன் தருகிறான். சாரா அந்தப் பேனாவை தவற விடும்பொழுது அந்த கண்ணில்லாத வியாபாரியின் பெண் அதை கண்டெடுத்து சாராவிடமே சேர்ப்பிக்கின்றாள். இப்படியாக குழந்தைகளின் உலகத்தை மிகவும் யதார்த்தமாக சித்திரித்து கொண்டே போகிறார் மஜிதி. <br /><br />இறுதியில் அலி ஒரு தீர்வு கண்டுபிடிக்கிறான். நான்கு கிலோமீட்டர்கள் ஓட்டப் பந்தயத்திற்கான அறிவிப்பு வருகிறது. மூன்றாவது பரிசாக ஒரு ஜோடி காலணிகள். இதைக் கண்டவுடன் சாராவிடம் தீர்மானமாக சொல்கிறான் தான் மூன்றாவது பரிசை அவளுக்காக வென்று வருவதாக. போட்டியில கலந்து கொண்டு தீவிரமாக ஓடுகிறான். கணக்காக மூன்றாவது பரிசை வெல்ல வேண்டுமென்று தனக்கு கிடைத்த முதல் நிலையை விட்டுக் கொடுத்து முன்னே இருவரை செல்ல விடுகிறான். ஆனால் அடுத்து வரும் சிறுவன் இவனைத் தள்ளிவிட கீழே விழுந்து எழுந்து உத்வேகத்துடன் ஓடுகிறான். இறுதிக் கோட்டை அடைந்தவுடன் கீழே வீழ்பவனை அவன் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியரும் தலைமையாசிரியரும் தூக்கி கொண்டாடுகிறார்கள். ஆனால் சோகம், அவன் மூன்றாவதாக வரவில்லை. முதல் பரிசை வென்றுவிட்டான். அவனால் தங்கைக்கு காலணிகளை வாங்கித் தரவே முடியவில்லை.<br /><br />ஆனால் அதற்கு முன்னர் ஒரு வெள்ளிக்கிழமை (இரானின் விடுமுறை நாள்) அலியும் அவன் தந்தையும் நகரத்திற்கு சென்று தோட்ட வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறார்கள். அலி ஒரு பணக்கார வீட்டின் சிறுவனோடு பேசி அந்த தோட்ட வேலையைப் பெற காரணியாக இருக்கிறான். அந்தப் பணத்தில் அவன் தந்தை இரு குழந்தைகளுக்கும் புதிய ஷூக்கள் வாங்கிக் கொண்டு வருகிறார். ஆம். அந்த குழந்தைகளுக்கு சொர்க்கம் மீண்டும் கிடைத்துவிடும். ஆனால் அவர்களின் புரிதலும், பகிர்தலுமே ஒரு சொர்க்கமாகத்தானே இருக்கிறது. பலரும் போற்றும் இந்தப் படத்தில் எல்லாம் நேரிடையான காட்சியமைப்புகளே. இறுதிக் காட்சியைத் தவிர எந்தவித சஜெஸ்டிவ் காட்சியமைப்பும் கிடையாது. ஓட்டபந்தயத்தில் ஜெயித்தாலும் தனது திட்டப்படி தோல்வியடைந்துவிட்டதாக மறுகும் அலி கொப்பளித்திருக்கும் தனது பாதங்களை தங்கமீன்கள் நிறைந்திருக்கும் குட்டையில் வைத்துக் கொள்கிறான். அத்தோடு முடித்து விடுகிறார்கள் படத்தை. நம் மனக்கண்ணில் தலைக்கு ஸ்கார்ஃப் கட்டிக் கொண்டு ஓடும் சாக்ராவும், கண்களில் கண்ணீரோடு பிரின்ஸிபாலிடம் மன்றாடும் அலியும் அப்படியே தங்கிவிடுகிறார்கள். A Simple tale with heavenly children.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-8621486169313117849?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-30880544.post-24802577080097799902008-10-12T14:57:00.000-07:002008-10-12T23:39:46.781-07:00சினிமாவோடு சில நினைவுகள் - Memeசினிமா அனுபவங்களைப் பற்றி <a href="http://nagarjunan.blogspot.com/2008/10/blog-post_08.html">நாகார்ஜுனன் </a>பதிவு செய்ய <a href="http://icarusprakash.wordpress.com/2008/10/09/movies-a-meme/">இகாரஸ் பிரகாஷ் </a>மீம்-ஆக தொடர <a href="http://www.enn-ennangal.blogspot.com/">பரத் </a>என்னையும் தொடருங்கள் என்று அழைத்திருக்கிறார். இதோ...<br /><br /><span class="fullpost"><span style="color:#000099;">1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்? </span><br /><br />சிறு வயதில் நிறைய படங்களுக்கு பெற்றோருடன் சென்ற ஞாபகம் இருக்கிறது. எது முதல் படம் என்று சொல்ல முடியவில்லை. சிவப்பு ரோஜாக்களின் தேசலான ஞாபகங்கள் இருப்பதாக அம்மாவிடம் சொன்னதிற்கு ஆச்சர்யபட்டார். நான்கு வயது அப்பொழுது எனக்கு. கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு மீண்டும் கோகிலாவிற்கு சைக்கிள் ரிக்ஷாவில் போனது ஞாபகம் இருந்தது. படத்தின் காட்சிகள் எதுவும் ஞாபகமில்லை. சித்தப்பாவின் திருமண கொண்டாட்டமாக மதுரை செண்டிரலில் சவால் என்றொரு படம் குடும்பம் குழந்தைகளோடு இரவுக் காட்சி சென்றோம். டைட்டில் மட்டும் பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். பின்னர் அண்ணன் சீன்-பை-சீன் கதை சொல்ல மனம் ஆறுதல் அடைந்தது. இந்தப் படங்கள் எல்லாம் டிவிக்களில் 3-4 முறை முழுவதும் பார்த்துவிட்டதால், என் குழந்தைக் கால ஞாபக சக்தியை உறுதியாக சொல்ல முடியவில்லை. நன்றாக விவரம் தெரிந்தவுடன் வீட்டில் சொல்லிவிட்டு தனியாக சென்று பார்த்த முதல் படம் 'சின்னத்தம்பி பெரியதம்பி'. மதுரை தேவி டாக்கீஸில் மதிய காட்சி. பிறகு 10-ம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறையில் வரிசையாக தனியாக சென்று திரைப்படங்களாக பார்த்து தள்ளினேன். அது என்னமோ தனியாக சினிமா பார்ப்பது எனக்கு சௌகரியமாகவே இருக்கிறது.<br /><br /><span style="color:#000099;">2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? </span><br /><br />சரோஜா. வெளியான இரண்டாம் நாள் பார்த்த படம். எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாததால் ஏமாற்றம் அளிக்கவில்லை. அந்த அனுபவம் <a href="http://www.sridharblogs.com/2008/09/blog-post.html">இங்கே.</a><br /><br /><span style="color:#000099;">3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?<br /></span><br />வீட்டில் பார்த்தப் படம் 'பொய் சொல்லப் போறோம்'. Khosla ka Ghosla பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்ததால் ஆர்வமாகவே பார்த்தேன். நன்றாகவே இருந்தது. சில பல கிள்ஷேக்களை தவிர்த்திருந்தால் முதல்தரமாக வந்திருக்க வேண்டிய படம். மௌலியை இவ்வளவு காலமாக மிஸ் செய்திருக்கிறோம். அமெரிக்கா வீசா பற்றிய ஒரு சில அடிப்படை அறிவோடு சில காட்சிகளை அமைத்திருக்கலாம். என்னமோ ட்ரைவிங் லைசன்ஸ் ரேஞ்சுக்கு இடைத்தரகர் பாஸ்கி கேட்கும் இடங்களிலெல்லாம் கையெழுத்துப் போட்டவுடன் வீஸா கிடைத்துவிடுகிறது.<br /><br /><span style="color:#000099;">4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா</span><br /><br />எந்த படத்தையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் விடாமல் பார்க்கும் வழக்கமுள்ளவன். ஒரு சில காட்சிகள் பாதித்தாலும் ஏதாவது நொட்டை, நொள்ளை சொல்லிக் கொண்டிருப்பவந்தான். <strong>சலங்கை ஒலி </strong>ரீ-ரிலிஸ் பொழுது மாமா சர்பிரைஸாக கூட்டிக் கொண்டு போனார். படம் பார்த்த சில மணி நேரங்கள் பேச முடியாமல் பாலகிருஷ்ணனுக்காக மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தேன். <strong>சிப்பிக்குள் முத்து </strong>பார்த்து உருகினாலும், எஸ்பிபியின் இரவல் குரல் ஏனோ நெருடலாக இருந்தது. டிவியில் <strong>அவள் அப்படித்தான் </strong>பார்த்த பொழுது இதுதான்டா திரைப்படம் என்று தீர்மானமாக சொல்ல முடிந்தது. இந்த பட்டியலில் உச்சத்தில் இருப்பது '<strong>மகாநதி'</strong>. மசாலாத்தனங்கள் இருந்தாலும், தஞ்சாவூரிலிருந்து கொல்கத்தா வரை அலைக்கழிக்கப்பட்டு தூக்கத்தில் பெனாத்தும் காவேரி உலுக்கி விட்டாள் மனதை.<br /><br /><span style="color:#000099;">5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?</span><br /><br />நடிகை ஷோபா தற்கொலையைப் பற்றி பாலகுமாரன் சாவியில் (திசைகள்?) எழுதினார். பின்னர் ஒரு பேட்டியில், பாலுமகேந்திரா அந்த செய்தியை எழுதிய விதத்தில் காயப்பட்டதாக பாலகுமாரனிடம் சொன்னதாக பாலகுமாரனே எழுதினார். என்னவென்று புரியாமல் படித்துக் கொண்டிருந்தேன் இந்த செய்திகளை எல்லாம். சமீபத்தில் அனுஹாசனின் நிகழ்ச்சியில் பாலுமகேந்திரா சொன்னது 'மூன்றாம் பிறை கதை என்பது நானும் ஷோபாவும்தான்'. சினிமாவின் ஃப்ரேமிற்குள்ளும் வெளியேயும் மிகுந்த தாக்கம் ஏற்படுத்தியவர் 'பூந்தேனில் கலந்து, பொன்வண்டு எழுந்து' என்று கள்ளம் கபடமில்லாமல் சிரிக்கும் ஷோபா. என்ன நடந்தது ஷோபா?<br /><br /><span style="color:#000099;">5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?</span><br /><br />இயக்குநர் ஸ்ரீதர், கர்ணன் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப சமாச்சாரங்களைப் பற்றி தமிழ் சினிமா நிருபர்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே (exaggeration) எழுதி வந்திருக்கிறார்கள். நாயகன், அபூர்வ சகோதரர்கள், இதயத்தை திருடாதே, தொடங்கி நேற்றைய பில்லா, தசாவதாரம் வரை தொழில்நுட்பத்தின் மூலம் சினிமாவின் வீச்சை அதிக படுத்திய படங்கள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. ஆனால் இது நிறைவான பட்டியல் இல்லை. இந்தப் படங்களில் எல்லாம் ஏதோ ஒரு இடத்தில் சமரசம் செய்து கொண்டுவிடுகிறார்கள். இந்த ஆடியன்ஸ்க்கு இது போதும் என்ற எண்ணமா என்று தெரியவில்லை. நாம் போகவேண்டிய தூரம் இன்னமும் நிறைய இருக்கிறது என்பதுதான் உண்மை.<br /><br /><span style="color:#000099;">6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா</span><br /><br />தமிழ் சினிமா பற்றிய செய்திகளில் முக்கால்வாசி கிசுகிசுக்கள்தானே. இது பெரும்பாலும் சினிமா செய்திகளை ரிப்போர்ட் செய்யும் நிருபர்களின் அரசியல் என்றுதான் நினைக்கிறேன். தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் எழுதிய உபயோகமான புத்தகங்கள் பற்றிய அறிமுகம் உண்டு. பெரும்பாலும் வெற்றி பெற்ற இயக்குநர்கள், நடிகர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவிற்கென ஆய்வு நூல்கள் எதுவும் எனக்கு தெரிந்து அதிகம் இல்லை. நிறைய துணுக்கு (trivia) செய்திகள் படிப்பேன். அதனால் ஒரு உபயோகம் இல்லையென்றாலும், நண்பர்கள் வட்டாரத்தில் out-of-touch-ஆக உணராமல் இருக்க முடிகிறது.<br /><br /><span style="color:#000099;">7.தமிழ்ச்சினிமா இசை?</span><br /><br />நான் பெரிய இசை ஆர்வலன் இல்லை. ஆஹா சிற்றலையில் வைரமுத்து போன்றவர்களின் விளக்கங்களுடன் பாடல்கள் கேட்க பிடிக்கும். கண்ணதாசனின் பாடல்களின் எளிமை மிகவும் ஆச்சரியகரமானது. மற்றபடி 'இளையராஜா அவ்வளவுதான் காலி. ரஹ்மான் சுட்டுப் போட்ட பாடல்' போன்ற விவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுவேன்.<br /><br /><span style="color:#000099;">8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?</span><br /><br />இந்தியப் படங்கள் என்றால் தமிழைத் தவிர பெரும்பாலும் மலையாளமும், இந்தியும்தான் நான் பார்த்த பிற மொழி திரைப்படங்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய வங்காளப் படங்கள் பார்த்திருக்கிறேன். மற்ற இந்திய மொழிப் படங்களில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இந்தியாவிற்கு வெளியே பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள்தான். ஒரு சில இரானியப் படங்களை குறித்து வைத்திருக்கிறேன். சமீபத்தில் பார்த்த படங்களில் அதிகம் தாக்கம் ஏற்படுத்திய படங்கள் என்றால் <a href="http://www.sridharblogs.com/2008/09/blog-post_24.html">Taare Zameen par </a>என்ற இந்திப் படமும், <a href="http://www.sridharblogs.com/2008/08/roshomon.html">Roshomon </a>என்ற ஜப்பானிய படமும், <a href="http://www.sridharblogs.com/2008/09/blog-post_18.html">Lust, Caution </a>என்ற சீனப் படமும் சொல்லலாம். பெரும்பாலும் <a href="http://en.wikipedia.org/wiki/A_Fish_Called_Wanda">Fish called Wanda </a>போன்ற காமெடிப் படங்களையே விரும்புகிறேன்.<br /><br /><span style="color:#000099;">9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?</span><br /><br />நேரடித் தொடர்பு கண்டிப்பாக கிடையாது. ஒரு காலத்தில் சினிமா பார்ப்பதினால் நேர விரயம் அதிகம் என்று வைராக்கியமாக சினிமா பார்க்காமல் இருந்ததுண்டு. ஆனால் இப்பொழுதும் விஷுவல் மீடியம் மேல் உள்ள தீவிர ஈடுபாட்டால் நாகேஷ் குக்குனூர் மாதிரி ஏதாவது முயற்சி செய்யும் ஆசை இருக்கிறது. அட ஆசைப்பட கூடவா வெட்கப் படுவது?<br /><br /><span style="color:#000099;">10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?</span><br /><br />தமிழ்சினிமா பெரும்பாலும் விடலைப் பருவத்து இளைஞர்களையும், பெண்களையும் மட்டுமே நம்பியிருக்கிறது. வெகு சில படங்களே எல்லாருக்கும் விருந்தாக அமைகிறது. வணிக எதிர்காலம் பிரகாசமாகத்தான் இருக்கிறது. கலாபூர்வமான முயற்சிகளின் நிலைதான் கேள்விக்குரியதாக இருக்கிறது. மண்வாசனையோடு வரும் படங்களும் கூட வன்முறையை பெருமளவிற்கு நம்பியிருப்பது கவலைக்குரியது.<br /><br /><span style="color:#000099;">11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?</span><br /><br />ஓராண்டு என்பது குறுகிய இடைவெளிதான். டிவிக்கள் கொஞ்சம் திணறினாலும் சமாளித்து விடுவார்கள். சினிமா பற்றி படிக்காமல் கொஞ்சம் போரடித்தாலும் ஓராண்டு கழித்து சேர்த்து வைத்து குமுறி குமுறி எடுத்து விட மாட்டார்களா என்ன... மெள்ளப் படித்துக் கொள்ளலாம்.<br /><br />இந்தத் தொடர் விளையாட்டில் இன்னமும் 5 பேரை அழைக்க வேண்டுமாம். இப்பொழுது பதிவுலகில் பெருந்தலைகள் பலரும் பங்கேற்பதால் <a href="http://www.eramurukan.in/tamil/home.html">இரா முருகன்</a>, <a href="http://jeyamohan.in/">ஞாநி</a>, <a href="http://jeyamohan.in/">ஜெமோ</a>, <a href="http://www.charuonline.com/">சாரு</a>, <a href="http://www.sramakrishnan.com/">எஸ் ரா </a>, <a href="http://www.writerpara.net/">பாரா</a> போன்றோரையும் கோர்த்து விட ஆசைதான். அதிகம் ஆசைப்படாமல், நாம் கூப்பிட்டால் குறைந்தபட்சம் அழைப்பை படித்து பார்க்கும் நெருக்கத்தில் இருக்கும் ஐந்து பேர் இதோ.<br /><br />முதலில் <a href="http://kappiguys.blogspot.com/">கப்பிப் பயலைக் </a>கூப்பிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் <a href="http://umakathir.blogspot.com/2008/10/blog-post_12.html">தம்பி </a>ஏற்கெனவே கூப்பிட்டு விட்டார்ப் போல.<br /><br /><a href="http://dharumi.blogspot.com/">தருமி </a>- நமக்கு முந்தைய தலைமுறை. நல்லதொரு சினிமா ரசனையாளர். <br /><br /><a href="http://vinaiaanathogai.blogspot.com/">வளர்மதி </a>- இவர் எழுத்து, சினிமா, டாக்குமெண்டரி, கருத்தரங்குகள் என்று பலதரப்பட்ட தளங்களில் இயங்கும் மனிதர். நாம் அழைத்தால் தொடர்விளையாட்டில் பங்கேற்பார் என்ற ஒரு நம்பிக்கைதான். <br /><br /><a href="http://elavasam.blogspot.com/">இலவசக் கொத்தனார் </a>- நகைச்சுவைப் படங்களின் ரசனனயாளர். அவ்வப்பொழுது சில ஃப்ரெஞ்சுப் படங்களைப் பற்றி குறிப்பிட்டு ஆச்சர்யப் படுத்துவார்.<br /><br /><a href="http://nunippul.blogspot.com/">உஷா</a> - இணையத்தில் பிரபலமான மற்றுமொரு எழுத்தாளர். இவருடைய <a href="http://nunippul.blogspot.com/2008/09/blog-post.html">சித்தப்பா ஒருவர் திரைத்துறையில் </a>பிரபலமாக இருப்பதால் நேரடி பங்களிப்பு அனுபவம் இருக்கலாம். :-)<br /><br /><a href="http://gragavan.blogspot.com/">ஜி இராகவன்</a> - சினிமா, திரை இசைப் பற்றிய ஏகப்பட்ட செய்திகள் பதிந்திருக்கிறார். <a href="http://vavaasangam.blogspot.com/2008/02/blog-post_07.html">இவர் இயக்குநராக </a>சில சமயம் கனவு கூட கண்டு கொண்டிருந்தார். </span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-2480257708009779990?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-30880544.post-55751397629145566192008-10-11T10:45:00.000-07:002008-10-11T13:48:39.187-07:00மந்தையாட்டுக் கலாச்சாரம்நண்பர் <a href="http://jyovramsundar.blogspot.com/">ஜ்யோவ்ராம் சுந்தர் </a>மிகவும் தீவிரமாக இந்தியாவில் அமல்படுத்தப் பட்டிருக்கும் புகைத்தடை சட்டம் பற்றி தொடர் பதிவுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார் :). அதில் ஒரு பதிவில் நண்பர் <a href="http://vinaiaanathogai.blogspot.com/">வளர்மதி </a>மந்தையாட்டு கலாச்சார நோய்க்குறி பற்றி குறிப்பிட அது சில நினைவுகளை கிளறி விட்டது.<br /><br /><span class="fullpost">கல்லூரியில் NCC-ல் தீவிரமாக இருந்த போது சில கேம்ப்களில் (camp) பங்கேற்றிருக்கிறேன். என்னுடைய முதல் அனுபவமாக ஒரு பேஸிக் லீடர்ஷிப் கேம்ப் ஒன்று மதுரை பசுமலையில் நடந்தது. கேம்ப் நடந்த பள்ளியின் பெயர் தற்சமயம் நினைவில்லை. பன்னிரெண்டு நாட்கள் நடந்த கேம்ப். நல்ல மார்கழி மாதக் குளிரில் காலை 5 மணிக்கு எழுந்து கிராஸ் கண்ட்ரி என்னும் சொல்லப்படும் நீண்ட தூர (6 கிமி) ஓட்டம். பிறகு உப்புசப்பில்லாத ஒரு டிபன். தினப்படி பரேடு மற்றும் ட்ரில் என்று பிழிந்து எடுத்துவிடுவார்கள். சனி, ஞாயிறு விடுமுறை எல்லாம் கிடையாது. மாலை வேளை எப்பொழுதும் கொண்டாட்டமாக இருக்கும். எல்லா மாணவர்களையும் வரிசையாக பக்கத்தில் இருக்கும் திருப்பரங்குன்றம் கண்மாய்க்கு இட்டுச் செல்வார்கள். நல்ல பெரிய குளம். செம்மண் பூமி என்பதால் கலங்கலாக இருக்கும். நீச்சல் தெரியாதென்றாலும் உள்ளே விழுந்தெழுந்து அடித்துப் புரண்டு விளையாடுவோம். ஒரு மணி நேரமாவது கொண்டாட்டம் தொடரும். பின்னர் பள்ளிக்குப் போய் நல்ல உடை உடுத்தி ரோல் கால் பரேடு. அங்கே ஏதாவது பாட்டு, டான்ஸ், நகைச்சுவை, மிமிக்ரி என்று கலாய்த்தலாக பொழுது போக, எட்டு எட்டரை மணிக்கு இரவு உணவு. இரண்டு மூன்று நாட்களில் கவனித்தால் நமது நண்பரொருவர் இந்த கண்மாய் குளியலில் கலக்காமல் பம்புசெட் பக்கமாக குளிக்கப் போய்க் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் சிரிப்பாக இருந்தது. 'ஏன்யா கம்மாயில குளிக்க என்ன பயமா? நீச்சல் தெரியாதுன்னா பரவாயில்லைய்யா.... நான்லாம் இப்பத்தான் தண்ணிக்குள்ள விழுந்து எழுந்துகிட்டு இருக்கேன். வாய்யா சும்மா.' என்றேன். அதற்கு அவர் 'யோவ்! அது எருமைங்க குளிப்பாட்டுற கம்மாய்னு தெரியாதா உனக்கு. அந்த குட்டையில என்னத்தை போய் முங்கி குளிச்சு சுத்தமாவுறதுன்னு'ன்னார். அட உண்மைதான். நாங்கள் ஒரு பக்கம் குதித்து கும்மாளம் போட்டுக்கொண்டிருக்க, நூறடிக்கு அந்தப் பக்கம் எருமைகளை உள்ளே அமிழ்த்தி தேய்த்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் உணர்ந்தேன். நான் எதை குளியல் என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ அது குளியல் இல்லை வெறும் களியாட்டம் மட்டும்தான். பிரச்சினை கண்மாயின் கலங்கலான நீரிலோ, எருமைகள் குளிப்பதிலோ இல்லை. நாம் எதை செய்கிறோமோ அதை உணர்ந்து செய்வதில்தான். மறுநாள் மந்தையிலிருந்து ஒரு ஆடு பிரிந்து பம்புசெட்டிற்கு போய்விட்டது.<br /><br />போனவருடம் அமெரிக்கா வருமுன்னர் இந்தியாவில் சில மாதங்கள் சொந்தமாக கார் வைத்து ஓட்டிக் பழகிக் கொண்டிருந்தேன். இந்தியாவில் எங்கே போக வேண்டுமென்றாலும் 'ஆட்டோ' என்று கைதட்டி அழைத்து பழகிவிட்டதால், அமெரிக்கா வந்த புதிதில் மிகவும் சிரமமாக போய்விட்டது. எங்கு போவதென்றாலும் யாரையாவது, அவர்களின் காரையாவது நம்பி இருக்க வேண்டிய நிலைமை. அருகில் நண்பர்களே இல்லாத ஊரில் ஓரிரு வாரங்களில் வெறுத்தே போய்விட்டது. நிறைய இடங்களில் கார்கள் வாடகைக்கு கிடைக்கும். புதிய கார்கள் கூட சகாயமான ரேட்டில் ஒரு நாள், இரு நாட்கள், வார இறுதி என்று வாடகைக்கு தருவார்கள். சரி நாமும் ஒரு காரை வாடகைக்கு எடுத்து 20 மைல் தொலைவில் இருக்கும் ஒரு நண்பரின் வீட்டுக்கு போய் வரலாமென்று முடிவு செய்து ஒரு காரையும் வாடகைக்கு எடுத்துவிட்டேன். நம்புங்கள் அந்த காரில் ஏறி அமர்ந்த பிறகுதான் User Manual பிரித்து படித்துக் கொண்டிருந்தேன். இந்திய கார்களுக்கும் இங்குள்ள சாதாரண கார்களுக்குமே நிறைய மாற்றங்கள். ஒரு வழியாக வீட்டிற்கு எடுத்து வந்தாகிவிட்டது. மறுநாள் அதிகாலையிலே கிளம்பிவிட்டேன். அது ஒரு உள் சாலை என்பதாலும், நேரமும் அதிகாலை என்பதாலும் போக்குவரத்தே இல்லை. என்னமோ வித்தியாசமாக இருக்கிறது என்று தெரிகிறது ஆனால் என்ன வித்தியாசம் என்று புரியவில்லல. ஓரிரெண்டு நிமிடங்கள் ஆனப்புறம்தான் உறைத்தது நான் இந்திய ஞாபகத்தில் இடது பக்கமாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்று. நல்லவேளை போலிஸ் யாரும் அந்நேரத்தில் சாலையில் இருக்கவில்லை. அப்படியே ஏதாவது போலிஸ்காரர் பிடித்தாலும் வாதிட்டு பார்க்கலாம். ஆனால் பருப்பு வேகாது என்பதுதான் உண்மை. மந்தையிலிருந்து விலகி ஓட்டிக் கொண்டிருந்தவன் மீண்டும் மந்தைக்குள் சேர்ந்தது மற்ற ஆடுகளுடன் வண்டி ஓட்ட ஆரம்பித்தேன்.<br /><br />இப்படி நிறைய தடவை இந்த ஆடு மந்தைக்குள் போவதும் வருவதுமாகவே இருந்திருக்கிறது. ஆடு மந்தையில் இருப்பதில் தவறில்லை. ஆனால் மந்தையில் இருக்கிறோமா இல்லையா என்று தெரியாமல் இருப்பதுதான் பிரச்சினையே. <br /><br />ஜ்யோவ்ராம் சுந்தர் புகைபிடிக்கும் சட்டம் தவறான முறையில் செயல்படுத்தப் பட்டிருப்பதாக சொல்வதற்கு முக்கியமாக இரண்டு வாதங்கள் வைக்கின்றார்:<br /><br />1. வெளிப்படையாக புகையிலை / சிகரெட் விற்கிறார்கள். ஆனால் பொது இடத்தில் புகைபிடித்தால் அது தண்டனைக்குரிய குற்றமாக சொல்கிறார்கள். இது முரணானது.<br /><br />எந்தவொரு பொருளுக்குமே பயன்பாட்டு முறை என்று இருக்கிறது. புகையிலை நுரையீறலை பாதிக்கும் வஸ்து என்பதே சமீப கண்டுபிடிப்புதான். அதன் பிறகுதான் எச்சரிக்கையோடு (statutory warning) சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இப்பொழுது அடுத்த படி சென்றிருக்கிறார்கள். <br /><br />2. மதுக்கூடங்களில், பேருந்து நிலையங்களில் தடை ஆனால் விமான நிலையங்களில், நட்சத்திர விடுதிகளில் அனுமதி என்பது எப்படி சமமான சட்டமாக இருக்க முடியும்? பணக்காரகளுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டமா?<br /><br />நன்றாக பாருங்கள். விமான நிலையம் என்பதினால் மட்டும் அங்கே புகைக்க அனுமதி கிடையாது. புகைக்கும் அறை என்று தனியாக ஒன்று இருப்பதினால் அங்கே மட்டும் புகைக்க அனுமதி உண்டு. நட்சத்திர விடுதியோ உங்கள் அலுவலகமோ, புகைப்பாளர்கள் மற்றவர்களை பாதிக்காத அளவில் புகைக்கும் விழிப்புணர்வைத்தான் வலியுறுத்துகிறது. உங்கள் அலுவலகத்தில் நீங்கள் smoking zone வைத்துக் கொள்ள தடை கிடையாது. அதற்கென்று வரைமுறையும் இருக்கிறது.<br /><br />அறிவியல் முன்னேற்றத்தினால் பல தெளிவுகள் கிடைக்கின்றது. அதில் ஒன்றுதான் சிகரெட் புகையினால் சுற்று சூழல் மாசுபடுவதும், புகைக்காதவர்களின் உடல்நிலை பாதிப்படைவதும். 'நான் இப்படி உபயோகித்து பழகிவிட்டேன். அறிவியல் தரவுகளை எல்லாம் நம்ப முடியாது' என்று சொல்வது மந்தையாட்டு கலாச்சாரம்தானே. <br /><br />When you realise you are a sheep, you no longer belong in the herd.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30880544-5575139762914556619?l=www.sridharblogs.com'/></div>Sridhar Narayananhttp://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-30880544.post-30449650300729072152008-10-04T01:56:00.000-07:002008-10-04T02:47:34.746-07:00கடவுளின் பத்து கட்டளைகள்இந்த வாரம் Netflix-ல் <a href="http://www.epicstoriesofthebible.com/movie_overview.php">Ten Commandments </a>அனிமேஷன் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இது பைபிளின் (பழைய ஏற்பாடு) அடிப்படையாக கொண்ட கதை. உயர்தர அனிமேஷன். ஆபிரகாமிய மதங்களின் இறைதூதர்களில் மிகவும் அடக்கமானவர் மோசஸ் என்னும் மூசா. <span class="fullpost">புகழ்பெற்ற நடிகர் கிறிஸ்டியன் ஸ்லேட்டர் இறைத்தூதர் மோசஸ் பாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். சிறு வயதில் கிறிஸ்துவ பள்ளிக்கூடத்தில் படித்தபொழுது பைபிளும் (புதிய ஏற்பாடு) ஒரு பாடம். அப்பொழுது சுவாரசியமான கதைகள் பல படித்த அனுபவம் உண்டு. அது கிளறி விட்ட சில எண்ணங்கள் சில இங்கே.<br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Moses">மோசஸ் </a> எகிப்தில் ஹீப்ரு (யூத) இனத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறக்கிறார். ஹீப்ரு இனத்தையே வெறுக்கும் ஃபேரோ (Pharaoh என்பது எகிப்தின் அரசருக்கான பெயர்) ஹீப்ரு குழந்தைகள் அத்தனையும் அழிக்க சொல்ல மோசஸின் தாய் அவரை ஒரு கூடையில் வைத்து நைல் ஆற்றில் விட்டுவிடுகிறாள். அதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தை அரச குடும்பத்தைச் சேர்ந்து அரச குடும்பத்தில் வளர்கிறது. அடுத்த ஃபேரோ-ஆகப் போகும் ராம்ஸீஸ்-வுடன் (Ramseyes) ஒன்றாக வளர்ந்து கல்வி கேள்விகளில் தேர்ச்சிப் பெறுகிறார். இளைஞரான பின்னர் தனது பூர்விகம் தெரிந்ததும் ஹீப்ரு இனத்தில் கலந்து அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்கிறார். கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்து எகிப்திலிருந்து ஹீப்ரு இனத்தை விடுவிக்க ஃபேரோ-உடன் (Pharoah) பேச்சுவார்த்தை நடத்துகிறார். முதலில் மறுக்கும் அரசன், எகிப்தியர்கள் மேல் தொடர்ச்சியாக பத்து பேரழிவுகள் தாக்க மோசஸின் வேண்டுகோளை ஏற்று ஹீப்ரு இனத்தை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறார். மோசஸ் ஹீப்ரு இனத்தினரை அழைத்துக் கொண்டு 40 ஆண்டுக் காலம் அலைந்து திரிகிறார். இஸ்ரேலினர் எப்படி வாழ வேண்டும் என்ற வழிமுறைகளை கடவுளிடமிருந்து பெறுகிறார். அவைகளில் முதன்மையானது இந்த <a href="http://e