tag:blogger.com,1999:blog-29983556046333058672008-10-14T07:40:52.814-05:00சனிமூலைராகவன் தம்பிhttp://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-2998355604633305867.post-50996011451088458942008-10-10T03:45:00.005-05:002008-10-10T03:56:40.831-05:00நீதிபதிகளின் மீதான முறையீடுகளும் தேசிய நீதித்துறை கவுன்சிலும்<div align="justify"><a href="http://1.bp.blogspot.com/_-03ySXDPAvE/SO8XRSEypyI/AAAAAAAAAgI/RLi_nZtghFM/s1600-h/ENQUIRY.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5255444875841808162" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_-03ySXDPAvE/SO8XRSEypyI/AAAAAAAAAgI/RLi_nZtghFM/s400/ENQUIRY.jpg" border="0" /></a><br /><br /><div align="justify"><span style="color:#000099;">ஜனநாயகத்தின் மிகவும் உறுதியான தூண்களில் ஒன்றான நீதித்துறையின் மீது, அதன் பல பின்னடைவுகளையும் மீறி ஒரு ஆழமான நம்பிக்கை நமக்கு முழுக்க வற்றிவிடாமல் தொட்டும் தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்கள் அல்ல. நம் எல்லோரையும் போல அவர்களும் மிகவும் சாதாரணர்கள்தான் என்கிற ஒரு உண்மையும் எப்போதுமே தொடர்கிறது. அவர்களில் ஒரு சிலரின் நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாக அமைவதில்லை என்பதிலும் நமக்கு நேரடி அனுபவங்கள் உண்டு. நீதிபதிகளில் மிகச்சிலரின் அதீத நடவடிக்கைகளால் அந்தத் தூண் மீது வைத்துள்ள நம்பிக்கையும் சில சமயம் ஆட்டம் கண்டுவிடும் அவல நிலை ஏற்பட்டு விடுகிறது. ஒருசில நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து நாம் படிக்க நேர்ந்த செய்திகள் நீதித்துறை குறித்த மாண்பினையும் மதிப்பினையும் கேள்விக்கு உரியதாக்கிவிடுகிறது.<br /><br />உதாரணத்துக்கு பஞ்சாபில் உயர்நீதிமன்ற நீதிபதியான நிர்மல் யாதவ் என்பவருக்கு அனுப்பிய 15 லட்சரூபாய்கள் அடங்கிய பை ஒன்று நிர்மல்ஜித் கௌர் என்னும் நீதிபதியின் வீட்டுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டு விஷயம் அமர்க்களப்பட்டது. வழக்கறிஞராகத் தான் இருந்த ஒரு வழக்கில் அரசுக்குக் கையகப்படுத்த வேண்டிய தொகையை தன்னுடைய சொந்தக் கணக்கில் சேர்த்துக் கொண்டதாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜஸ்டிஸ் சௌமித்ரா சென் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வரப்போகும் பாராளுமன்றத்தொடரில் இவர் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தாதாக்களுடன் தொடர்பு கொண்ட பதிப்பகம் ஒன்றிடமிருந்து புத்தகம் எழுதுவதற்காக ரூ.70 லட்சம் முன்பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகினர் மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னள் நீதிபதி ஏ.எம்.பட்டாச்சார்யா. தங்கள் உறவினருக்கு சர்வீஸ் கமிஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்க வழிவகை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பஞ்சாப் ஹரியான உயர்நீதிமன்ற நீதிபதிகள் மெஹ்தால் சிங் கில் மற்றும் அமர்பீர் சிங் ஆகியோர் பதவி விலகினர்கள். உச்ச நிதிமன்றத்தின் தலைமை நீதியரசாக இருந்த ஏ.எஸ்.ஆனந்த் மற்றும் அஹ்மதி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.<br /><br />விமர்சனத்துக்கு அப்பாற்பட்டும், எவ்விதக் கேள்விகளுக்கு உட்படுத்த முடியாத சக்திகள் என யாரும் இருந்துவிடக்கூடாது என்பது குடியாட்சித் தத்துவத்தின் அடிப்படை. உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் பாங்கினில் எவ்வித வெளிப்படையான அணுகுமுறையும் கிடையாது. அதற்கான தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. சின்னச்சின்ன நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஏதேனும் தவறுகள் செய்தால் அவர்களைப் பற்றி விசாரணைகள் நடத்தி அவர்களைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு உள்ளது. ஆனல் உயர்நீதிமன்ற நீதிபதியோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியோ ஏதேனும் தவறு செய்தால் பகவான் பார்த்துப்பார்' என்ற ரீதியில் இருந்துவிடலாம். இல்லையென்றால் இன்னொரு வழி இருந்தது. அதாவது, ஒரு உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியின் மீது தொடுக்கப்படும் புகாரின் மீது மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று ஆய்ந்து குற்றம் செய்தவர் என்று தீர்மானிக்க வேண்டும். பிறகு முன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அந்த நீதிபதியை பதவியிறக்கம் செய்ய வேண்டும்.<br /><br />இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்குக் கூட பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. உயர்மட்டத்தில் உள்ள நீதிபதிகளின் முறைகேடுகள் மீதான புகார்களைக் கவனித்து ஆவன செய்ய தேசிய அளவில் ஒரு கவுன்சில் வேண்டும் என்ற குரல் வலுப்பட்டது. 2003ல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்த ஜன கிருஷ்ணமூர்த்தி ஒரு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலுயுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பினர். அரசியலமைப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வெங்கடாசலய்யா கமிஷன், தேசிய நீதித்துறை ஆணையம் அமைத்து தவறிழைக்கும் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.<br /><br />அப்படி ஒரு சட்ட வரைவினை நிறைவேற்றும் வகையில் ஜட்ஜஸ் (இன்க்வரி) அமென்ட்மெண்ட் பில் 2008 என்னும் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மைய அமைச்சரவையின் கேபினெட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின் படி தனிமனிதர்களும் உயர்மட்ட நீதிபதிகளின் மீதான புகார்களை தாக்கல் செய்யலாம். தேசிய நீதித்துறை அமைப்பு ஒன்றையும் நிறுவி நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து தண்டனைகள் வழங்குவதற்கும் வழிவகை செய்கிறது இந்த மசோதா. முன்னர் டிசம்பர் 2006ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இதே போன்ற மசோதாவுயம் வாபஸ் வாங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நம்ம ஊர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைந்த பாராளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் அமைந்த மாற்றங்கள் இந்த மசோதாவில் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ன. முந்தைய மசோதாவின் மீதான சுதர்சன நாச்சியப்பன் எழுப்பிய ஆட்சேபணைகள் மற்றும் கேள்விகளை இன்றைய நாளேடுகளில் சட்டம் குறித்து எழுதும் வல்லமை படைத்த எல்லோரும் வெகுவாக சிலாகித்து இருக்கிறார்கள். அந்த மசோதாவில் சில அடிப்படை மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுடன் இந்தப் புது மசோதா பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படுகிறது.<br /><br /></div><a href="http://4.bp.blogspot.com/_-03ySXDPAvE/SO8Xain4ewI/AAAAAAAAAgQ/oQtReQ_SFzo/s1600-h/sudarsana+nachiappan.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5255445034902780674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_-03ySXDPAvE/SO8Xain4ewI/AAAAAAAAAgQ/oQtReQ_SFzo/s400/sudarsana+nachiappan.jpg" border="0" /></a> <span style="font-size:78%;"> <span style="color:#ff6600;">சுதர்சன நாச்சியப்பன்<br /></span><br /></span>தேசிய நீதித்துறை கவுன்சில் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர், மற்றும் இரு மூத்த நீதியரசர்கள் மற்றும் இரு உயர்நீதிமன்றங்களின் மிகவும் மூத்த நீதியரசர்களைக் கொண்டு அமைக்கப்படும். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் மீதும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதியரசர் மற்றும் நீதிபதிகள் மீதும் ஒரு தனிமனிதர் முறையீடு பதிவு செய்யலாம். முறையீடு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் மீது இருக்கும் பட்சத்தில் அவர் இந்த அமைப்பில் பங்கேற்காமல், கவுன்சிலின் தலைமை குடியரசுத் தலைவரால் அடுத்த மூத்த நிதியரசரிடம் வழக்கு ஒப்படைக்கப்படும். முறையீட்டின் தன்மையை ஆய்ந்து, தக்க விசாரணைகள் செய்து ஒரு நீதிபதியின் மீது குற்றம் நிரூபணம் ஆனல் கவுன்சில் பாராளுமன்றத்துக்குப் பரிந்துரை செய்து அந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்யலாம். (கொஞ்சம் மூச்சு வாங்கிக்கலாம்),<br /><br />உயர்மட்ட நீதிபதிகளின் நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க ஒரு தனிமனிதனுக்கும் அதிகாரம் கிட்டும் அதே நேரத்தில் இன்னொரு ஆபத்து இருப்பதையும் மறுப்பதற்கில்லை. எந்த வழக்கின் தீர்ப்புக்கும் இருபக்கங்கள் உண்டு. ஒன்று வெற்றி. இன்னொன்று தோல்வி. தோல்வியுற்றவர்கள் தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக நோக்கங்களைக் கற்பிக்கும் ஆபத்து எப்போதுமே உண்டு. அதனல் ஒரு நீதிபதியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டினை தேசிய நீதித்துறை குழுமம் தீர ஆராய்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிக்கும் தன் பக்கத்து வாதத்தை முன்வைக்க வாய்ப்பளித்து பிறகே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.<br /><br />எனவே எல்லாவகையிலும் ஒரு பாதுகாப்பான ஒரு மசோதாவாகத்தான் பாமரப் பார்வைக்குப் படுகிறது.<br /><br />ஆனல் சட்ட வல்லுனர்கள் இரு தரப்பிலும் போட்டுக் கிழித்துத் தோரணம் கட்டத் தொடங்கும்போது இந்த மசோதாவின் எல்லாப் பக்கங்களும் நம் பார்வைக்குக் கிட்டும்.<br /><br />எது எப்படியோ தங்கப்பதக்கம் திரைப்படத்தில் சிவாஜி மற்றும் பிரமிளா ஒரு பாடல் காட்சியில் தங்கள் மிகை நடிப்பின் ஊடாக ஒரு கேள்வியைக் கேட்டு பதிலும் கொடுத்துக் கொள்வார்கள். (வார்த்தைகள் அப்படியே இல்லையென்றாலும் பொருள் மாறாமல் கொடுக்க முயற்சிக்கிறேன்)<br /><br /><blockquote>ஊருலே இருக்கிற சின்னச் சின்ன நதியெல்லாம் அந்த வற்றாத ஜீவநதியைப் பார்த்து ஆறுதல்<br />அடையும். அந்த நதியே காய்ந்து போன?<br /><br />பக்தர்கள் தங்கள் குறையை<br />தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க... அந்தத் தெய்வமே கலங்கி நின்னா?... </blockquote><div align="justify">இந்த மாதிரியான சினிமாத்தனமான எடர்னல் கேள்விகளுக்கு எல்லாம் கொஞ்சம் விடை கிடைக்கிற மாதிரி அமைந்திருக்கிறது இந்த மசோதா என்று சொல்லலாமா?<br /><br />இன்னும் ஒன்று. </div><div align="justify"></div><div align="justify"><span style="font-size:130%;"><strong><span style="color:#ff0000;">நாட்டாமை தீர்ப்பை மாத்தி எளுதூ</span></strong>...</span>. </div><div align="justify"></div><div align="justify">என்று யாரும் நீதிபதிகள் அருகில் போவதற்குக் கொஞ்சம் பயப்படுவார்கள் இல்லையா?</span></div></div>ராகவன் தம்பிhttp://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-62835663770492906742008-10-08T04:19:00.007-05:002008-10-10T06:28:33.778-05:00தூரன் பற்றிய ஒரு நல்ல நூல்<div align="justify"><a href="http://1.bp.blogspot.com/_-03ySXDPAvE/SOx8A3kn6YI/AAAAAAAAAfU/GNoYFL8HF3I/s1600-h/book.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5254711219593931138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" height="378" alt="" src="http://1.bp.blogspot.com/_-03ySXDPAvE/SOx8A3kn6YI/AAAAAAAAAfU/GNoYFL8HF3I/s400/book.jpg" width="262" border="0" /></a><span style="color:#990000;"> தொண்டில் கனிந்த தூரன்<br />சிற்பி பாலசுப்பிரமணியம்<br />பாரதீய வித்யா பவன் கேந்திரா<br />352, டி.பி. ரோடு,<br />ஆர்.எஸ்.புரம்<br />கோயம்புத்தூர்- _ 641 002.<br />விலை ரூ. 125/-<br /></span><br /><span style="color:#000099;">இது பெரியசாமித் தூரனின் நூற்றாண்டு. வழக்கப்படி தமிழ் சமூகத்தால் பெருமளவு எந்தவகையிலும் பேசப்படாது, சரியான வகையில் நினைவுகள் கொண்டாடப்படாது விடப்பட்டவர்களில் தூரனும் ஒருவர். ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் ஆண்டிலும் அவரைப் பற்றிய பல தளங்களில் ஆழ்ந்த மௌனம் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு வருத்தமளிக்கும் சூழலில் பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் மையம் பதிப்பித்து இருக்கும் "தொண்டில் கனிந்த தூரன்'' என்னும் நூல் பெரியசாமித் தூரன் போன்ற ஒரு அற்புதப் படைப்பாளியின் பன்முகத் தன்மையை மிகவும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கின்றது. </span></div><span style="color:#000099;"><br /><div align="justify"><br />சிற்பி பாலசுப்பிரமணியம் தொகுப்பாசிரியராகவும் டாக்டர் இராம.இருசுப்பிள்ளை மற்றும் டாக்டர் ஐ.கே.சுப்பிரமணியன் ஆகியோர் இணை ஆசிரியர்களாகவும் இந்த நூலில் அரும் பங்காற்றியிருக்கின்றனர். பாரதிய வித்யா பவன், கோவை மையம் இதுவரை, ராஜாஜி அவர்களின் உரைகள், கட்டுரைகள் அடங்கிய இரு தொகுப்புக்கள், சி.சுப்பிரமணியம் அவர்களைக் குறித்த Passion for Excellence, இசையரசி டி.கே.பட்டம்மாள் பற்றிய, கான சரஸ்வதி ஆகிய நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அந்த நூல்களின் வரிசையில் நூற்றாண்டு காணும் பெரியசாமித் தூரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நூல் வெளியீடு அமைந்துள்ளது. அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் அற்புதமான முன்னுரை இந்த நூலுக்கு அணிசேர்க்கிறது. தூரனின் பன்முகத் திறமைகளைப் பட்டியலிட்டுச் செல்லும் அருட்செல்வர் தூரனைப் போன்றவர்களை அரசு பல துறைகளில் ஆலோசகராக அமர்த்திக் கொண்டிருக்க வேண்டும். அரசு கண்டு கொள்ள வில்லை. இது ஒரு பெரிய குறை. அதே போல, சென்னைப் பல்கலைக் கழகம் ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து அவரைக் கௌரவித்து இருக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறியது ஒரு பெரும் குறை என்று முன்னுரையில் தன்னுடைய வருத்தங்களைப் பதிவு செய்திருக்கிறார் அருட்செல்வர். இது தமிழுக்கு ஒன்றும் புதியதல்ல. தமிழ்ச் சமூகம் பல விசித்திரமான புதிர்களை தன்னுள் அடக்கியது. வைத்துக் கொண்டாட வேண்டிய உன்னதங்களைப் பற்றிய ஆழ்ந்த மௌனத்தைத் தன்னுள் புதைத்திருக்கும். எவ்விதத் தகுதியும் பெறாத சில சராசரிகள் பெருத்த ஆரவாரத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கொண்டாடப்படும். அந்த வகையில் ஒரு ஆழ்ந்த மௌனத்தை உடைக்கும் ஒரு செயல்பாடாக இந்த நூல் வெளியீடு அமைந்திருக்கிறது என மகிழ்ச்சியுடன் சொல்லலாம் என்று தோன்றுகிறது. </div><br /><div align="justify"><br /><br /><a href="http://4.bp.blogspot.com/_-03ySXDPAvE/SOyAYI8pG7I/AAAAAAAAAfc/zqwyhOq7Pxk/s1600-h/thooran.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5254716017441577906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_-03ySXDPAvE/SOyAYI8pG7I/AAAAAAAAAfc/zqwyhOq7Pxk/s400/thooran.jpg" border="0" /></a><br /><br /><br />மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்ட இந்த நூலின் முதல் பகுதியில் தூரனின் வாழ்க்கை வரலாறு மிகவும் தெளிவாக நுட்பமான தகவல்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தூரன் அவர்களின் மிக அரிதான நிழற்படத் தொகுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்படத் தொகுப்புக்கு சிகரம் வைத்தாற்போல, தூரன் அவர்கள் தன் வாழ்நாள் சாதனையாக தமிழ் சமூகத்துக்கு அர்ப்பணித்த கலைக்களஞ்சியங்களின் சில முக்கியமான பக்கங்களையும் குழந்தைகளுக்கான கலைக் களஞ்சியத் தொகுப்பின் படத்தையும் பதிந்து இருப்பது அவரைப் பற்றிய பதிவினை முழுமையாக்குகிறது. இரண்டாம் இயலில் தூரன் எழுத்தோவியங்களில் சிறந்த பகுதிகஙளத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் தூரன் குழந்தைகளுக்காகப் படைத்த கவிதைகள், சமூக அக்கறை கொண்ட கட்டுரைகள் அவருடைய படைப்பு மேதைமையைப் பறை சாற்றுகின்றன. கவிதை, நாடகம், காந்தீயம் போன்றவற்றில் தூரன் காட்டிய அதீதமான அக்கறைகள் குறித்து மிகத் துல்லியமான பதிவுகள் இப்பகுதியில் கிடைக்கின்றன. மூன்றாம் பகுதியில் அன்பர்கள் நெஞ்சில் தூரன் என்னும் தலைப்பில் அவினசிலிங்கம் அய்யா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி, டாக்டர் மு.அறம், பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி, செம்மங்குடி சீனிவாசய்யர், டி.கே.பட்டம்மாள், டைகர் வரதாச்சாரியார், கி.வா.ஜகந்நாதன், டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை ஆகிய பல்வேறு துறைகளின் வித்தகர்கள் தூரனைப் பற்றி எழுதிய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது தூரனுடைய பன்முகத்தன்மையின் சிறப்பினை மிகவும் அழுத்தமாக நமக்குத் தருகின்றன. அபூர்வமான வரலாற்றுச் செய்தி ஒன்றும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலகெங்கும் உலவும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது என்றால் உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களை மகிழ்விக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் இருபதாம் நூற்றாண்டின் 80 ஆண்டுகளுக்கு முன்னல் கல்லூரி மாணவராக இருந்த பெரியசாமித் தூரன் அவர்களால் உருவாக்கப்பட்டது என்னும் சிறப்புச் செய்தி ஒன்றும் நமக்குக் கிடைக்கிறது. 1928ம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பெரியசாமித் தூரன், மாணவர்களிடையே கிறிஸ்தவர்கள் உலகெங்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொள்வதைப் போல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் வாழ்த்துக்களைப் பறிமாறிக்கொள்ள வேண்டும் என்னும் கருத்தை வற்புறுத்தினர். பொங்கல் வாழ்த்துக்கள் வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாது, அகலமான குருத்தோலை ஒன்றைக் கொண்டு வந்து அழகாக வெட்டி வர்ணங்கள் தீட்டி முதல் பொங்கல் வாழ்த்தினை உருவாக்கி தமிழறிஞர் கா.நமச்சிவாய முதலியார், திரு.வி.க., கல்கி மற்றும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பினர். திரு.வி.க அவர்கள் இந்த வாழ்த்தினை வரவேற்று தமிழர்கள் அனைவரும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டுரைகள் எழுதினர். பிறகு தமிழர்களிடையே பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் வேகமாகப் பரவியது. தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாகிப் போன பொங்கல் வாழ்த்து முறைக்கு வித்திட்டவர் பெரியசாமித் தூரன் என்பது இந்த நூலில் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. </div><br /><div align="justify"><br />அழகிய அச்சமைப்பும் மிக நேர்த்தியான கட்டமைப்பும், நூற்றாண்டு காணும் ஒரு மாமேதையைப் பற்றிய அற்புதமான பதிவுகளும் கொண்டு விளங்கும் இந்த நூலைத் தமிழுக்கும் உலகத் தமிழர்களுக்கும் வழங்கிய கோவை பாரதிய வித்யா பவன் அமைப்பும் அதன் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயரும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள் என்பதில் ஐயமில்லை.<br /></div></span><span style="color:#000099;"><br /><div align="justify"><br /></div></span><br /><div align="justify"><span style="color:#000099;"></span></div><br /><div align="justify"></div>ராகவன் தம்பிhttp://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-78327724471530244172008-06-07T15:16:00.003-05:002008-06-07T15:26:01.843-05:00சிங்கம் அசிங்கமான கதை - தெலுங்கானா வீரரின் சோகக் கதை<div align="justify"><span style="font-size:100%;color:#663366;"><br />ஒரு அமைப்பு. அந்த அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் தனிநபர் நிறுவனமாக அந்த அமைப்பை நடத்தி வந்தவர். அவரே தலைவரை நியமிப்பார். அவரே எல்லோரையும் நியமிப்பார். தன்னையே ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான பொறுப்பில் நியமித்துக் கொள்வார். </span></div><br /><div align="justify"><span style="font-size:100%;color:#663366;"><br />அவர் தன்னுடைய அமைப்பிலேயே கலாட்டா செய்வார். அவருடைய வலுக்கட்டாயங்களுக்கு யாரும் ஒத்துப் போகாத சூழ்நிலையில் எப்போதும் சட்டைப் பையிலேயே தயாராக வைத்து இருக்கும் ராஜிநாமா கடிதத்தை எடுத்து சபையில் வீசுவார். அவரைத் தவிர அந்த அமைப்பில் யாருக்கும் ஓடியாட நேரம் இருக்காததால் அந்தக் கடிதத்தைத் திரும்பப் பெறச்சொல்லிக் கேட்டுக் கொண்டு அந்த மனிதர் வற்புறுத்தும் தீர்மானங்களை செயல்படுத்துவார்கள் அந்த அமைப்பில்.</span></div><span style="font-size:100%;color:#663366;"><br /><div align="justify"><br />ஒரு முறை அப்படி ஒரு கூட்டத்தில் அவர் முன்வைத்த தீர்மானத்துக்கு தலைவர் ஒத்துக் கொள்ளவில்லை. இவர் சத்தம் போட்டுப் பார்த்தார். அப்போது வேறு தலைவர். அந்தத் தலைவர் அயரவில்லை. நம்மாள் வழக்கமான தன்னுடைய அஸ்திரத்தை சட்டைப் பையில் இருந்து எடுத்து விட்டார். தலைவர் சத்தம் போடாமல் அதை எடுத்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு ""சரி. எல்லா ஆவணங்களையும் நாளை ஒப்படைத்து விடுங்கள்'' என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டார்.</div><br /><div align="justify"><br />நம்ம ஆளுக்குக் கையும் காலும் பதற ஆரம்பித்தது. ஏறத்தாழ ஒரு வாரத்துக்கு அந்தத் தலைவர் வீ்ட்டுக்கும் அலுவலகத்துக்கும் மாறி மாறி அலைந்து தலைவர் சட்டைப் பையில் போட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்ற தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு மீண்டும் தன் டார்ச்சரை தொடர்ந்து வந்தார்.</div><br /><div align="justify"><br />இது நண்பர் ஒருவர் சொன்ன உண்மைக் கதை.</div><br /><div align="justify"><br />ஏறத்தாழ இதே போன்ற ஒரு காரியத்தை செய்து முழித்துக் கொண்டிருக்கிறார் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களின் நிலைமையும் சற்றேறக்குறைய இந்த நிலையை ஒட்டியதுதான்.</div><br /><div align="justify"><br /><br /><a href="http://bp1.blogger.com/_-03ySXDPAvE/SErt91gOkwI/AAAAAAAAAQM/gXN7fz2dUDM/s1600-h/2006092421550101_IvnnN_118.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5209237565597455106" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_-03ySXDPAvE/SErt91gOkwI/AAAAAAAAAQM/gXN7fz2dUDM/s400/2006092421550101_IvnnN_118.jpg" border="0" /></a><br /><br />இத்தனை நாட்கள் அவருடைய தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மாநில அரசும் மைய அரசும் தான் உதாசீனப் படுத்திக் கொண்டு இருந்தார்கள். இப்போது தெலுங்கானா பிரதேசத்து மக்களே அவரை அநியாயத்துக்குப் போட்டுத் தள்ளி விட்டார்கள். இதுவரை எனக்குத் தெரிந்து எந்தத் தலைவருக்கும் நேராத கொள்கை சார்ந்த சோகம் இது.</div><br /><div align="justify"><br />சென்ற ஆண்டு 14 சட்டமன்ற உறுப்பினர்களும் 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் தனி தெலுங்கானா மாநிலத்துக்கான கோரிக்கையை வற்புறுத்தி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தார்கள். அந்தத் தொகுதிகளில் நடந்த மறுதேர்தலில் மக்கள் காங்கிரசுக்கும் தெலுகு தேசத்துக்கும் ஆதரவு அளித்து சந்திரசேகர ராவுக்கும் அவர் கட்சி வேட்பாளர்களுக்கும் அல்வா கொடுத்தார்கள்.</div><br /><div align="justify"><br />தெலுங்கு ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் ராஜிநாமா செய்த பதினாறு சட்டமன்றத் தொகுதிகளில் அவர்களால் வெறும் ஏழு தொகுதிகளை மட்டும் மீண்டும் பெற முடிந்து இருக்கிறது. பாராளுமன்றத் தொகுதிகளில் நான்கில் இரண்டுதான் அவர்களுக்கு மீண்டும் கிட்டியுள்ளது. தனிப்பட்ட முறையில் சென்ற தேர்தலில் சந்திரசேகரராவ் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று ஒரு சாதனையை நிகழ்த்தினார். இந்த முறை மனிதர் பாவம். பதினைந்து ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவரால் வெற்றி காண முடிந்தது. இத்தனைக்கும் கரீம் நகர் தொகுதியில் டிஆர்எஸ் கட்சியினர் வாக்குச் சாவடிகளில் அழிச்சாட்டியம் செய்தார்கள் என்று செய்திகள் வெளியாகின. இதையும் மீறி படு மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது அந்தக் கட்சி. தெலுங்கானா பகுதியில் டிஆர்எஸ் கட்சியினர் ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.</div><br /><div align="justify"><br />சரி. தெலுங்கானா பிரதேசம் பற்றிய பூகோள விபரங்களை லேசாகப் பார்ப்போம். ஆந்திர மாநிலத்தில் வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிஜாமாபாத், மேடக் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது தெலுங்கானா பகுதி. இந்தப் பகுதியில் கிருஷ்ணா, கோதாவரி நதிகள் ஓடுகின்றன. ஆனாலும் ஆந்திராவின் பிற்படுத்தப்பட்ட பிரதேசம் அது. ஆந்திராவில் "தெலங்கானா" என்ற ஓசையில்தான் உச்சரிக்கிறார்கள்.</div><br /><div align="justify"><br />தெலுங்குப் படங்களில் இந்தத் தெலுங்கானா பகுதி மக்களை ஏறத்தாழ முட்டாள்கள் போல சித்தரிப்பார்கள். அந்தப் பகுதி மக்களைப் பற்றிப் பேசும்போதே உதட்டைக் கடித்துக் கொண்டு நக்கல் அடிக்கிற தொனியில்தான் பேசுவார்கள். </div><br /><div align="justify"><br />இந்த நிலையில் தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக அமைக்கக் கோரி நீண்ட நாட்களாக போராடி வருகிறது தெலுங்கானா ராஷ்டிர சமிதி. கடந்த மக்களவை தேர்தலில் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க உதவி செய்வதாக உறுதியளித்து இவர்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி காரியம் முடிந்ததும் வலுவாக அல்வா கொடுத்தது. அந்த மாநிலம் உருவாக்குதற்கான எந்த நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை மைய அரசு. பலமுறை வற்புறுத்திய டிஆர்எஸ் கட்சியினர் சென்ற ஆண்டு மைய அரசுக்குத் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டார்கள்.<br />இந்தக் கட்சியின் தலைவர் பற்றி சொல்லவேண்டும் என்றால் தெலுங்கு தேசம் கட்சியில் ரொம்ப நாட்கள் இருந்தவர் சந்திரசேகர ராவ். அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோது சட்டசபையில் துணை சபாநாயகர் பொறுப்பில் இருந்தவர். தன்னை கட்சி மதிக்கவில்லை என்றும் தனக்கு சரியான பொறுப்பு தரவில்லை என்றும் குற்றம் சாட்டி அக்கட்சியை விட்டு விலகினார். பிறகு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை துவக்கினார். (நிறைய தேசிய நாளிதழ்கள் மற்றும் ஆங்கில தமிழ் இதழ்கள் கூட தெலுங்கானா ''ராஷ்டிரிய" என்றுதான் தவறாக எழுதுகிறார்கள்). </div><br /><div align="justify"><br />அவர் கட்சி துவங்கியதே ஒரு சுயநல நோக்குடன்தான் என்று அவருடைய அரசியல் எதிரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்து அமைச்சர்களை விலக்கிக் கொண்டதும் நக்ஸலைட்டுகளின் மிரட்டலினால்தான் ஒழிய தெலுங்கானா மாநிலக் கோரிக்கையின் அடிப்படையில் அல்ல என்றும் சொல்கிறார்கள். டிஆர்எஸ் கட்சியின் தொண்டர்கள் சிலரை நக்ஸலைட்டுகள் தாக்கியும் கொன்றும் இருக்கிறார்கள். </div><br /><div align="justify"><br />சோனியா காந்தியிடமும் தில்லியின் பல மூத்த காங்கிரஸ் தலைவர்களுடனும் தனக்கு நெருக்கம் அதிகம் என்று பரவலாக ஆந்திராவில் செய்தியைப் பரப்புவார் சந்திரசேகர ராவ். ஆனால் இவர் ராஜினாமா செய்தபோது இவரை யாரும் கண்டுகொள்ள வில்லை. அதுதான் மாபெரும் சோகம்.</div><br /><div align="justify"><br />சரி. மீ்ண்டும் ஒருமுறை தெலுங்கானா பிரச்னைக்கு வருவோம். வழக்கமாக மற்ற மாநிலங்களில் அவர்கள் பிராந்தியத்தை சார்ந்த பெருமையால். அதன் வளர்ச்சியினால் தனி மாநிலக் கோரிக்கைகள் எழும். ஆனால் தெலுங்கானாவில் வளர்ச்சி என்பது சுத்தமாக இல்லாது போனதால் தனி மாநிலத்துக்கான குரல்கள் எழுந்தன. இத்தனைக்கும் சென்னா ரெட்டியும் நரசிம்ம ராவும் தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்கள். ஆனால் அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு இவர்கள் இருவரும் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அங்கே இருக்கிறார்கள். எனவே நக்ஸலைட்டுகள் அதிகமாக அங்கே உருவாகிறார்கள். மக்கள் போராட்டங்களுக்கு தளம் கிடைக்கிறது அங்கே.</div><br /><div align="justify"><br />ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பு என்பது இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாகத் தொடர்வது. நிஜாம் காலத்தில் இருந்தே ஒடுக்குமுறைகளை எதிர்த்துக் கிளம்பியவர்கள் இப்பகுதி மக்கள். காங்கிரஸ். தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் இந்தப் பகுதி மக்களுக்கு இழைத்த துரோகங்கள்தான் அதிகம். அதன் விளைவுதான் சந்திரசேகர ராவ் போன்றவர்கள் அதனை தங்களுடைய அரசியல் பகடையாக பாவிக்க வழி செய்கிறது.</div><br /><div align="justify"><br />மக்கள் டிஆர்எஸ் கட்சிக்கு அளித்த தோல்வி அந்தக் கட்சியின் தனி மாநிலக் கோரிக்கைக்கு எந்த அளவில் ஆதரவு இருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது. அவருக்கு தெலுங்கானா பகுதி மக்கள் நல்லதொரு பாடத்தை அளித்து இருக்கிறார்கள். இந்தப்பதிவின் துவக்கத்தில் சொன்ன கதைபோலத்தான் சந்திரசேகர ராவுக்கும் நடந்து இருக்கிறது.<br /><br /><br /></span></div>ராகவன் தம்பிhttp://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-85924328136808914412008-06-06T06:01:00.005-05:002008-06-06T06:20:59.969-05:00நம் தாய்மொழியும் நமது குழந்தைகளும்...<a href="http://bp2.blogger.com/_-03ySXDPAvE/SEkcXCPnftI/AAAAAAAAAP8/NtFjPowvmDI/s1600-h/india-child.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5208725626095632082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_-03ySXDPAvE/SEkcXCPnftI/AAAAAAAAAP8/NtFjPowvmDI/s400/india-child.jpg" border="0" /></a> <span style="color:#330033;">நம்முடைய தமிழ் திரைப்படங்களில் நமக்கு அதிகம் காணக்கிடைக்கும் காட்சி இது. கதாநாயக வேடம் புனையும் முதியவர் வழக்கமாகக் கடும் உழைப்பாளி. காலத்தின் கொடுமையால் அவர் சுமார் 20 வயதுள்ள தமிழ் பேசத்தெரியாத ஏதாவது ஒரு சேட்டுப் பெண், தெலுங்கு கன்னடம் அல்லது மலையாளப் பெண் நடிக்கும் கதாநாயகிப் பாத்திரத்தின் வீட்டில் வேலைக்காரராக இருப்பார். இரவல் குரலின் கருணையால் செயற்கையாகத் தமிழ் பேசும் அந்தக் கதாநாயகிப் பெண் நம்முடைய கதாநாயகப் பெரியவரை ஏகத்துக்கும் கேவலப்படுத்திக் கொண்டு இருப்பாள். தோழியருடன் பந்து விளையாடும் போது பந்தைப் பொறுக்கிப் போடச் சொல்வாள். சாணி பொறுக்கச் சொல்வாள். தரையை மெழுகச் சொல்வாள். விறகு பிளக்கச் செய்வாள். வண்டியைத் துடைக்கச் சொல்வாள். தன்னுடைய தோழிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவரை மிகவும் கேவலமாக நடத்துவாள். நம்முடைய கதாநாயக வேடம் அணிந்த பெரியவர் எல்லாவற்றையும் இன்முகத்துடன் பொறுத்துக்கொள்வார். அவள் காலால் இட்ட பணிகளைத் தலையால் செய்வார். பொறுத்துப் பொறுத்து, ஒரு கட்டத்தில் அவமானம் தாங்காது சுனாமி அலையின் சீற்றத்துடன் பொங்கி எழுவார். Look Madam!! <strong>What do you think o yourself? You know who I am? I am B.A., Economics from Krishnagiri Government Arts College you know? First of all, you learn how to give respect and take respect. Understand? You better understand...</strong> என்கிற ரகத்தில் கைகால்களை ஆட்டி எழுச்சிமிகு வசனங்களைப் பேசுவார். அரங்கில் விசில் சத்தமும் கரவொலியும் வானை முட்டும். நம்முடைய கதாநாயகப் பெரியவரின் ஆங்கில வசனத்தைக் கேட்டு திக்கு முக்காடிப் போவாள் அந்தக் கதாநாயகிப் பெண். அவளுடைய போக்கு உடனடியாகத் தலைகீழாக மாறிப் போய்விடும். அவளுடைய மனதில் சொல்லொணா வண்ணம் காதல் கரைபுரண்டு ஓடும். உடனடியாக வரும் அடுத்த காட்சியில், இருவரும் நைல் நதி அல்லது தேம்ஸ் நதிக்கரையோரத்தில் கைகோர்த்துக் கொள்வார்கள். அல்லது கதாநாயகப் பெரியவர் தலைமுதல் கால்வரை போர்த்திய ஆடையுடனும் கதாநாயகி அந்தக் குளிரில் அரைக்கால் மீட்டர் துணியை உடுத்திக் கொண்டு, ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் புரியாத தமிழில் ஏகப்பட்ட வாத்திய இரைச்சல்களுடன் பாடி ஆடுவார்கள். அங்கே இருமனங்களும் செம்புலப் பெயல் நீர் கலந்தாற்போல் கலந்து விடும்.<br /></span><br /><p align="justify"><span style="color:#330033;">இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்தக் கதாநாயகியின் மனமாற்றத்துக்கு மூலகாரணமாக அமைவது நம்முடைய கதாநாயகப் பெரியவர் பொரிந்து தள்ளிய ஆங்கிலம்தான். அவர் பேசிய ஆங்கிலம் தான் அந்த அம்மணியின் மனத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த அளவு ஆங்கிலம் தெரிந்த இவர் கண்டிப்பாக நல்லவராகவும் வல்லவராகவும் இருந்துதான் ஆகவேண்டும். இந்த அளவு ஆங்கிலம் பேசும் இவருக்குத் தெரியாதது ஒன்றும் இருக்க முடியாது என்றமுடிவுக்குக் கதாநாயகிப் பெண் தள்ளப்பட்டு விடுவாள்.<br /></span></p><br /><p align="justify"><span style="color:#330033;">நம்முடைய குழந்தைகளின் அறிவுத் திறனை அளப்பதற்கும் நாம் இந்தத் தமிழ்த் திரைப்படத்தின் கதாநாயகிப் பெண் மேற்கொள்ளும் இது போன்ற அளவு கோலைத்தான் அதிகமாகப் பயன் படுத்துகிறோம். குழந்தைகள் புத்திசாலிகள் ஆகத்திகழ வேண்டும் என்றால் அவர்கள் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களை அநியாயமாக வற்புறுத்துகிறோம். அதற்காக சைக்கிளையோ, ஸ்கூட்டரையோ காரையோ வீட்டையோ விற்றாவது அந்தக் குழந்தை ஆங்கிலம் படிக்க வேண்டும். நல்ல ஆங்கிலத்தில் பேசியே ஆகவேண்டும் என்று அவர்கள் மீது திணிக்கிறோம். இந்த வன்முறையின் கொடுமையான விளைவாக நம்முடைய குழந்தைகளுக்கு நம் தாய்மொழியின் அருமை, அதன் இனிமை, அதன் வளமை, அதன் பெருமை பிடிபடாமல் போய்விடுகிறது. பல குடும்பங்களில் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு குடும்ப வழக்கமாகக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்று அவர்கள் மீது ஒருவகையான வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு எந்தவகையான இன்பத்தை மறுக்கிறோம் என்பதனை உணர்ந்து கொள்ளாமல் அவர்களை ஆங்கிலம் ஒப்பிக்கும் கிளிகளாக மாற்ற முயற்சிக்கிறோம்.<br /></span></p><br /><p align="justify"><span style="color:#330033;">உலகில் உள்ள எத்தனையோ ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வது அல்லது அதில் பாண்டித்தியம் பெறுவது என்பது ஒன்றும் தவறான காரியம் அல்ல. கண்டிப்பாகத் தாய்மொழியைத் தவிர இன்னும் பிறமொழிகளைக் கற்றுக்கொள்வது மனநல ரீதியில் மிகவும் அற்புதமான விஷயம்தான். ஆனால் தாய்மொழியை முற்றாகப் புறக்கணிக்க வைத்து ஒரு மேட்டிமை பாவனைக்காக ஆங்கிலத்தை அவர்கள் மீது திணிப்பது என்பது நம்முடைய குழந்தைகளுக்கு எதிராக நாம் கருத்து ரீதியாகத் திணிக்கும் ஒருவகையான வன்முறைதான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.<br /></span></p><br /><a href="http://bp2.blogger.com/_-03ySXDPAvE/SEkcguVRm0I/AAAAAAAAAQE/1jcAQp9mXVE/s1600-h/Indian-Child.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5208725792549346114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_-03ySXDPAvE/SEkcguVRm0I/AAAAAAAAAQE/1jcAQp9mXVE/s400/Indian-Child.jpg" border="0" /></a> <span style="color:#330033;">மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியாது. இங்கே தில்லியில் அந்தக் கொடுமை சற்று அதிகம்தான் என்று நினைக்கிறேன். தாங்கள் தமிழர்கள் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் என்று வெளியில் காட்டிக்கொள்வதை ஒரு அவமானமாக நினைக்கும் ஒரு மனப்பாங்கை குழந்தைகளிடத்தில் இங்குள்ள தலைநகர்த் தமிழர்கள் வளர்த்து வருகிறோம். இது குறித்து ஏற்கனவே ஒரு சனிமூலை கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன். தன்னைத் தமிழர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பாத நல்லவர்களின் மனப்பாங்கு மற்றும் போக்கு குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதனை மீண்டும் இங்கு விவரிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இங்கு நான் சொல்ல விரும்புவது நம்முடைய குழந்தைகளை, நம்முடைய மொழியில் இருந்து விலக்கி வைக்கும் மனப்பாங்கைப் பற்றித்தான். தலைநகரில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் என்பது அவர்கள் வீட்டில் எப்போதாவது பேசிக்கொள்ளும் ஒரு காட்டுமிராண்டி பாஷை. தொலைக் காட்சிகளில் பெற்றோர்கள் பார்க்கும் அசட்டுத்தனமான தொடர்களில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொண்டும் எப்போதும் அழுது கொண்டும் பேசப்படும் ஒரு மொழி. அவ்வளவுதான். தமிழுக்கு அதற்கு மேல் அங்கே வேலையும் பயன்பாடும் இல்லை.<br /></span><br /><p align="justify"><span style="color:#330033;">அதிலும் சில தமிழ்ப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் எதிரில் மிகவும் கவனமாகத் தமிழ் பேசுவதைத் தவிர்த்துத் தனியறையில் காதல் செய்யும் போதும் சண்டை போடும் போது மட்டுமே தமிழ் பேசிக்கொள்கிறார்கள். சில வீடுகளில் தமிழ்த் திரைப்படங்களைக் கூடக் குழந்தைகள் எங்காவது வெளியில் விளையாடப் போகும்போதுதான் தொலைக்காட்சிப் பெட்டியில் போட்டுப் பார்க்கிறார்கள். (ஆனால் இது ஒருவகையில் இது அந்தக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும் காரியம்தான். அதனால், இதனை சற்று சகித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது). சில வீடுகளில் சிறுகுழந்தைகளிடம் தமிழ் பேசினால் அந்தக் குழந்தை பேயைக் கண்டது போல மிரண்டு போகிறது என்று பெருமையுடன் விருந்தாளிகளிடம் சொல்பவர்களும் உண்டு.<br /></span></p><br /><p align="justify"><span style="color:#330033;">எதையும் சிந்திக்கும்போது நமக்குப் பழக்கமான, நமக்குள் ஊறிப்போன ஒரு மொழியில் சிந்திக்கும்போது சற்று உருப்படியாகச் சிந்திக்கலாம் என்று மொழியியல் அறிஞர்கள் அடிக்கடி வலியுறுத்துகிறார்கள். சிந்தனை அளவில் நமக்குப் பரிச்சயமான மொழியின் தளத்தில் இயங்கும்போது அதன் ஓட்டம் சீராக அமையும் என்பதும் இயற்கை. எனவே அடிப்படை மொழியான தாய்மொழியை மனத்தளவில் சிந்தனை அளிவல் வலுப்படுத்தினாலே பல பெரிய காரியங்களை சாதிக்கலாம். ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால், சிந்தனை ஓட்டத்தில் நமக்குச் சரளமான தாய்மொழியை ஒதுக்கி வைத்து, அந்நிய மொழிகளையும் அறைகுறையாகக் கற்றுக்கொடுத்து, சிந்தனை ஓட்டத்தைத் தடைபடச் செய்கிறோமோ என்றும் தோன்றுகிறது. இதனை என்னால் சரியாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மொழியியல் அறிஞர்களும், மனவியல் அறிஞர்களும் இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகவும் சொல்லலாம். என்னுடைய சிற்றறிவுக்கு எட்டுவது என்ன என்றால், குழந்தைகளின் மீதான இந்த அறைகுறை மொழித் திணிப்பு என்பது அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சொல்ல வருவதை சரியான முறையில் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு அசௌகர்ய நிலைக்குத் தள்ளப் படுகிறார்களோ என்றும் தோன்றுகிறது. இங்கு தலைநகரில் இந்தியில் சிந்தித்து அதனை மனத்தளவில் உடடினயாக மொழிமாற்றம் செய்து வார்த்தைக் கோர்வைகளைத் தவறாக முன்வைக்கும் பலரைக் காணமுடிகிறது. இதற்கான உடனடி உதாரணமாக என்னுடைய இருமகள்களின் தமிழைச் சொல்லலாம். எங்கள் வீட்டில் வலுக்கட்டாயமாகத் தமிழில் பேசி, அவர்களைத் தமிழ் படிக்க வைத்தே இந்த நிலை என்றால், தமிழை முற்றாக ஒதுக்கி வைத்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே பேசவைத்து, வளர்க்கப்படும் குழந்தைகளின் நிலை என்ன என்று நினைத்துப் பாருங்கள். தமிழ் புழங்கும் சூழல் அவர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி இருக்கும்போது ஆங்கிலத்தை மட்டுமே அவர்கள் மீது திணித்து வளர்ப்பது என்பது எந்தக் கொடுமையில் சேர்ப்பது என்று சொல்லத் தெரியவில்லை. இதன் விளைவு என்னவென்றால் அந்தக் குழந்தைகளுக்கு எந்த மொழியின் பாலும் பற்றும் பாண்டித்யமும் ஆழமும் ஞானமும் இல்லாமல் போய்விடும். எல்லாமே அறைகுறையாகத் தான் இருக்கும்.<br /></span></p><br /><p align="justify"><span style="color:#330033;">இந்த நிலையில் தலைநகரில் மரபிசை கற்றுக் கொள்ளவும் மரபுசார் நடனவகைகளைக் கற்றுக்கொள்ளவும் திருப்புகழ், பாசுரங்கள், திருவருட்பா போன்றவற்றைக் கற்றுக்கொள்ளவும் தங்கள் குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும் பெற்றோர்களைத் தலைவணங்கத் தோன்றுகிறது. இவை நம்முடைய குழந்தைகளை நம்முடைய மரபுடன் ஒத்திசைய வைக்கும் காரியத்தை ஆற்றுபவவை. ஒரு சிறிய அளவிலாவது நம்முடைய மொழியின் வளமையை, பெருமையை, அவர்கள் வளர்ந்த பிறகாவது உணர்ந்து கொள்ள வழிவகை செய்பவவை.<br /></span></p><br /><p align="justify"><span style="color:#330033;">நம்முடைய குழந்தைகளுக்கு நம்முடைய மொழியுடன் நாம் செய்து வைக்கும் பரிச்சயம் குறித்தும், அவர்களுடைய அறிவுத் திறனை ஆங்கிலம் வழி அளப்பதையும் குறித்து நான் சற்று மிகைப்படுத்திச் சொல்வது போலக்கூடச் சில சமயம் தோன்றும். இந்த விஷயத்தை எனக்கே உரிய மிகச் சிறிய அளவிலான ஞானத்தின் விளைவால் சற்றுப் பகிடி செய்வது போலத் தோன்றினாலும் இதன் அடிநாதமாக மிக ஆழமான வேதனை தொக்கி நிற்பதை எப்படி சரியாக விளக்கிச் சொல்வது என்று தெரியவில்லை. </span></p><p align="justify"><span style="color:#cc0000;"><strong>ஏப்ரல் 2008 வடக்கு வாசல் இதழில் வெளியான கட்டுரை.</strong></span></p><br /><br /><p align="justify"><span style="color:#330033;"></span></p>ராகவன் தம்பிhttp://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-30775637135237393842008-06-02T01:22:00.007-05:002008-06-02T02:50:58.528-05:00கர்நாடகத் தேர்தல் - மோசமான பக்கத்து வீட்டில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்...<div align="justify"><span style="font-size:100%;color:#000099;"></span></div><p align="justify"><span style="font-size:100%;color:#000099;">கர்நாடகத் தேர்தல் முடிவுகள் பற்றிக் கோட்டு சூட்டு போட்ட ஆட்கள் ஊடகங்களில் மாறி மாறிக் கடித்துக் குதறித் துப்பிய பின் எங்கேனும் கொஞ்சம் மிச்சம் இருந்தால் என் பங்குக்கு நானும் பிளேடு போடலாம் என்று இந்தப் பதிவு.<br /><br />இரு வாரங்களுக்கு முன்பு மைய அரசில் பொறுப்பேற்ற நான்காவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிய ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த தோல்வியைக் கண்டு கலங்கிப் போயிருக்கிறது. அதுவும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரே ஆண்டில் நடக்க இருக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைத்த இந்தத் தோல்வி என்பது சற்று ஆட்டம் கொடுக்க வைக்கிற விஷயம்தான். கடந்த நான்கு ஆண்டுகளில் 25 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்த காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி தொடர்ச்சியாக 16 தோல்விகளை சந்தித்து இருக்கிறது. 2004ல் காங்கிரஸ் கட்சி, ஆந்திர பிரதேசம், அருணச்சல பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெற்றி கண்டது ஆனால் கர்நாடகா, ஒரிஸ்ஸô, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. 2005ல் ஹரியானா மாநிலத்தில் மட்டுமே வெற்றியைப் பறித்த காங்கிரஸ் பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் படுதோல்வியைத் தழுவியது. 2006ல் அஸ்ஸôமில் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் மிகச் சிறிய அளவில் வெற்றி கண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதே ஆண்டு மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் தோல்வி கண்டது. 2007ல் குட்டி மாநிலங்களான மணிப்பூர் கோவா போன்ற இடங்களில் வெற்றிகண்ட காங்கிரஸ், பஞ்சாப், உத்தரகாண்டம், ஹிமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. 2008ல் நிலைமை படுமோசமாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் பெரும்பான்மை பெற்று வரமுடியவில்லை. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் படுதோல்வியைத் தழுவியுள்ளது.<br /><br />நான் மேலே சொன்ன எல்லா மாநிலங்களிலும் மக்கள் வாக்களித்து இருக்கும் முறையைப் பார்க்கும்போது அவர்கள் ஐக்கிய முற்போக்கு முன்னணியின் கொள்கைகளுக்கு எதிராக, அவர்கள் அறிவித்த திட்டங்களின் தோல்விகளுக்கு தோல்விகளுக்கு எதிராகத்தான் வாக்களித்து இருக்கிறார்கள் என்பது நன்கு புலனாகிறது.<br /><br />(அடடே... நானும் ஒரு அழுக்குக் கோட்டு போட்டுக் கொண்டு தூர்தர்ஷன் பேட்டிகளில் உட்காரலாம் போலிருக்கிறதே?)<br /><br />கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கிட்டிய வெற்றி தென்னகத்தில் அவர்களுடைய வருகையைப் பதிவு செய்திருக்கிறது. ஆனால் இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஒரு தீர்ப்பாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறதே தவிர, பாரதிய ஜனதா கட்சிக்கு ஏதோ முழு அங்கீகாரம் கிடைத்தது என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.<br /><br />கர்நாடகத் தேர்தல் வெற்றி அவர்களுக்குப் பாராளுமன்றத்தின் கதவுகளைத் திறந்து விடுமா என்று இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது.<br /><br />தேவே கௌடா மற்றும் குமாரசாமி கோஷ்டிகள் செய்த அரசியல் துரோகத்துக்கு அடி கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அந்தக் கட்சிக்குக் கிடைத்த மிகக் குறைவான வாக்குகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.<br /><br />இன்னொரு முக்கியமான விஷயம்.<br /><br />எப்போதும் நாம் கல்யாண வீட்டில் கல்யாணம் பண்ணி வைக்கும் சாஸ்திரிகளை மறந்து விடுகிறோம்.<br /><br />பொதுவாக வட மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வன்முறை அதிகம் இருக்கும். Muscle Power அதிகம் பாவிக்கப்படும். தென்னகத்தில் நடக்கும் தேர்தல்களில் Muscle Power குறைந்து Money Power அதிகம் இருக்கும். </span></p><p align="justify"><span style="font-size:100%;color:#000099;">Muscle Power காட்டுபவர்களைக் கூட நான்கு தட்டுத் தட்டி விழுக்காட்டலாம். Money Power காட்டுபவர்கள் கொஞ்சம் ஆபத்தான ஆசாமிகள். அவர்கள் எந்த எல்லை வரை வேண்டுமானாலும் போய் விளையாட்டுக் காட்டுவார்கள். அப்படிப்பட்ட விளையாட்டு வித்தகர்கள் தமிழகத்தைப் போலவே, கர்நாடகாவிலும் மிக அதிகம். Money Power காட்டி விளையாட்டுக் காட்டும் வித்தகர்களுக்கும் விளையாட்டுக்காட்டி இந்தத் தேர்தலை மிகவும் நேர்மையாகவும், திறமையாகவும் அருமையாகவும் நடத்திக் காட்டிய கோபால்சாமியும் அவருடைய அதிகாரிகளும் நம்முடைய பாராட்டுக்கும் தலைவணக்கங்களுக்கும் உரித்தானவர்கள்.<a href="http://bp1.blogger.com/_-03ySXDPAvE/SEOT8LtYJgI/AAAAAAAAAO4/q8HbQXPbQhQ/s1600-h/200804election1.jpg"></p><img id="BLOGGER_PHOTO_ID_5207168256314975746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_-03ySXDPAvE/SEOT8LtYJgI/AAAAAAAAAO4/q8HbQXPbQhQ/s400/200804election1.jpg" border="0" /></a><br />கர்நாடக மக்கள் தண்ணீர் தராத மஹாபாவிகளாக இருக்கலாம். ஒரு மோசமான பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம். மொழி வெறி மற்றும் இன வெறி பிடித்தவர்களாக இருக்கலாம். ஆனால் தேர்தலில் அவர்கள் புத்திசாலிகளாக வாக்களித்து இருக்கிறார்கள்.<br /><br />ஒன்று இந்தத் தேர்தலில் பிரிவினை பேசும் வாட்டாள் நாகராஜ் போன்ற விருதாவான ஆட்களை அவர்கள் படுகேவலமாகத் தோற்கடித்து இருக்கிறார்கள்.<br /><br />இரண்டாவது கர்நாடகாவில் தேர்தலில் நின்ற எல்லா திரைப்பட நடிகர்களையும் கட்சி வித்தியாசம் இல்லாமல் படுதோல்வி அடைய வைத்திருக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.<br /><br />இந்த விஷயத்தில் மட்டும் தமிழகம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.<br /></span>ராகவன் தம்பிhttp://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-75374058949764570702008-05-30T01:30:00.006-05:002008-05-30T01:50:52.653-05:00குழந்தைகளும் தேர்வுகளும்...<p></p><p><a href="http://bp0.blogger.com/_-03ySXDPAvE/SD-fa5uUR7I/AAAAAAAAAN0/tutje79en9U/s1600-h/sanimoolai1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5206054978784085938" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_-03ySXDPAvE/SD-fa5uUR7I/AAAAAAAAAN0/tutje79en9U/s400/sanimoolai1.jpg" border="0" /></a> <span style="font-size:100%;color:#663300;">பிப்ரவரி மாத வடக்கு வாசல் இதழில், மேல்நிலை வகுப்புத் தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில நல்ல அறிவுரைகளை வழங்கியிருந்தார் சனத் குமார். அது பெற்றோர்கள் பலருக்கும் பிடித்திருந்தது என்று சொன்னார்கள். </span><span style="font-size:100%;color:#663300;">மாணவர்களுக்குப் பிடித்திருக்குமா என்று தெரியாது.<br /></span></p><p><span style="font-size:100%;color:#663300;"><br /></span> </p><p><span style="font-size:100%;color:#663300;">இது ஒருவேளை ஒரு தற்செயலான விஷயமாகக் கூட இருக்கலாம். பல ஆங்கில நாளேடுகளில் பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் சுமார் அரைப்பக்கத்துக்கு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தேர்வுக்குத் தயார் செய்து கொள்வதற்கான அறிவுரைகளும் மனநல நிபுணர்களிடம் பேட்டிகள், கட்டுரைகள், அறிவுரைகள் என்று தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அவை எல்லாமே மிகவும் அற்புதமான விஷயங்கள். மிகவும் தேவையானவை. ஆங்கில நாளேடுகளில் வந்த ஒட்டு மொத்த கட்டுரைகளில் சாராம்சமாக ஒரு விஷயம் மிகவும் பிரதானமாக இருந்தது.</span></p><p><span style="font-size:100%;color:#663300;"><br /> </p></span><p><span style="font-size:100%;color:#663300;">அந்தக் கட்டுரைகளில் மாணவர்களுக்குச் சொன்னதை விடப் பெற்றோர்களுக்குத் தந்த அறிவுரைகள்தான் மிகவும் பிரதானமாக இருந்தன. நாமும்தான் நேரில் பார்க்கிறோமே, பிளஸ் டூ படிக்கும் மாணவ மாணவியருக்கு அவர்களுடைய பாடத் திட்டங்கள் இழைக்கும் கொடுமையை விட பெற்றோர்கள் அதிகமாகக் கொடுமை இழைக்கிறார்களோ என்று சில சமயங்களில் தோன்றும். சமீப ஆண்டுகளாக இது ஏகத்துக்கும் அதிகரித்து இருக்கிறது. சில சமயங்களில் நம்மைக் கவலை கொள்ளக் கூட வைக்கிறது.</span></p><p><span style="font-size:100%;color:#663300;"><br /> </p></span><p><span style="font-size:100%;color:#663300;">இப்போது பிளஸ் டூ பரிட்சைகள் நடந்து கொண்டிருப்பதால் இதைப் பற்றிக் கொஞ்சம் அதிகமாகப் பேசுகிறோமோ என்று தோன்றுகிறது.</span></p><p><span style="font-size:100%;color:#663300;"><br /> </p></span><p><span style="font-size:100%;color:#663300;">ஆனால் குழந்தைகள் மீதான கொடுமைகள் அவர்கள் நர்சரிப் பள்ளி செல்லும் பருவத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. அவர்கள் சுமக்கும் மூட்டைகள், வீட்டுப் பாடங்கள், அவர்களைப் போட்டிகளுக்குத் தயார் செய்தல், அவர்களுக்குப் பாட்டு வகுப்புக்கள், நடன வகுப்புக்கள், கராத்தே வகுப்புக்கள், அபாக்கஸ் வகுப்புக்கள், நீச்சல் பயிற்சி, குதிரை ஏறும் பயிற்சி, வேத வகுப்புக்கள், திருப்புகழ் வகுப்புக்கள், விஷ்ணு சஹஸ்ரநாம வகுப்புக்கள் இப்படி ஏகமாகப் பயிற்சிகள், வகுப்புக்கள். குழந்தைகளைத் தீயிலும், கயிற்றின் மேலும் தண்ணீரின் மேலும் நடக்கப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பாததுதான் பாக்கி. அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் எல்லாம் ஆகவேண்டும். எல்லாவற்றிலும் முதலிடம் வேண்டும். துரதிருஷ்டவசமாக முதலிடம் என்பது ஒன்றுதான். அதை யாராவது ஒரு குழந்தைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலிடத்தைப் பிரிக்க முடியாது.</span></p><p><span style="font-size:100%;color:#663300;"><br /> </p></span><p><span style="font-size:100%;color:#663300;">அப்படி முதலிடம் வராத குழந்தையை உண்டு இல்லை என்று ஆக்கும் பெற்றோர்களைப் பார்த்து இருக்கிறேன். எனக்குத் தெரிந்து பஞ்சமா பாதகங்களில் ஒன்று, சிறு பிஞ்சுக் குழந்தைகளுக்கு இடையில் போட்டி வைக்கும் காரியம். முன்பு, சில வேளைகளில் தில்லியில் சில தமிழ் அமைப்புக்கள் குழந்தைகளுக்கு இடையே பாடல்கள் ஒப்பிக்கும் போட்டி போன்ற விஷயங்களுக்கு வலுக் கட்டாயமாக நடுவராக உட்கார வைத்து விடுவார்கள். வேண்டாம் என்று அதிகமாக மறுத்தால் அதை வேறுவகையாக எடுத்துக்கொள்ளும் அபாயம் இருப்பதால் வழக்கமாக ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதனை ஏற்றுக் கொண்டு விடுவேன். அந்தப் போட்டியில் குழந்தைகளை பாரதியாரின் பாடல்களைப் பாட வைத்தார்கள்.</span></p><p><span style="font-size:100%;color:#663300;"><br /> </p></span><p><span style="font-size:100%;color:#663300;">நீங்களும் கவனித்து இருக்கலாம். பிள்ளையார் படத்தை யார் எப்படி எந்த வகையில் கோணலாகப் போட்டாலும் அது ஏதோ ஒரு வகையில் அழகாகவே தோன்றுகிற மாதிரி காட்சியளிக்கும். அதே போல, கோணல்மாணலாக ஒரு தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு திசைக்கு ஒன்றாக மீசையை வரைந்து கொண்டு நின்றாலும் பாரதி வேஷம் கட்டிக் கொண்ட குழந்தைகளை உடனே உச்சிமுகர்ந்து முத்தமிடத் தோன்றும். பாரதியின் பாடல்களை எந்த மோசமான பாடகர் அல்லது பாடகி எப்படிக் கண்றாவியாகக் கழுத்தை நெறித்துக் கொல்ல முயற்சித்தாலும் அந்தப் பாடல் நன்றாகவே இருப்பது போல இருக்கும். பாரதியார் பாடல்களுக்கு, ஒப்பனையால் ஒரு ஐம்பது வருடங்களைக் குறைத்துக் கொள்ள முயற்சிக்கிற நடனமணிகள் காமாசோமா என்று ஆடினாலும் அதுவும் மிக நன்றாகவே இருப்பது போல இருக்கும். இந்த நிலையில், குழந்தைகள் பாரதியின் பாடல்களைப் பாடினால் கேட்க வேண்டுமா? அதுவும். தலைநகரில் தமிழ்ச்சூழலில் அதிகம் வளராத குழந்தைகள். ஆரம்பப் பாடங்களைத் தமிழில் படிக்காத குழந்தைகள். அவர்கள் மிகவும் சிரமங்கள் எடுத்துக் கற்றுக் கொண்டு கணீரென்று முயற்சிப்பதைக் கேட்கும் போது உண்மையில் மெய் உருகும். மழலைக் குரல்களில் பாரதியின் பாடலைக் கேட்பது அதிசுகம். நதிக்கரையோரம் நீரோட்டத்தின் திசையுடன் சேர்ந்து மாலை வேளைகளில் நடந்து செல்வதைப் போன்ற சுகமான விஷயம் அது. இதில் போட்டிகள் வைத்து ஏன் அவர்களைக் கொடுமைப் படுத்த வேண்டும் என்று தோன்றும். பாடல் உச்சரிப்புக்கு எதற்கு அவர்களுக்குத் தனியாக மதிப்பெண்கள் வழங்க வேண்டும்? வயதான கிழங்கட்டைகளே “பாரத தேஷம் என்று பெயர் ஷொல்லுவார்” “”ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம், ஷொல்லடி ஷிவஷக்தி” என்று மேடைக்கு மேடை பிய்த்து எறியும்போது குழந்தைகள் எப்படி உச்சரித்தால் என்ன? மழலைப் பிஞ்சுகள் பாரதியின் பாடலை எப்படி உச்சரித்தாலும் அதில் எங்கிருந்தோ ஒரு தனி அழகு கூடிவிடுகிறதே? அப்புறம் என்ன ஒரு இதுக்கு உச்சரிப்புக்கும் வெளிப்பாட்டுக்கும் மதிப்பெண்கள்?</span></p><p><span style="font-size:100%;color:#663300;"><br /> </p></span><p><span style="font-size:100%;color:#663300;">இதில் உச்சகட்டக் கொடுமை என்னவென்றால், பரிசு பெறாத குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பும்போது அம்மாக்களும் அப்பாக்களும் அந்தக் குழந்தையைக் கரித்துக் கொட்டிக் கொண்டே இழுத்துச் செல்வார்கள். திக்கித் தடுமாறும் குழந்தைகளுக்கு அன்று பரிசு கிடைக்காது. ஆனால், அந்தக் குழந்தைகள் திக்கித் தடுமாறுவதும் ஒரு கவித்துவமான விஷயமாக ஏன் இந்த அமைப்பாளர்களுக்குத் தெரிய மாட்டேன் என்கிறது?நான் ஒரு அமைப்பு நடத்திய குழந்தைகளுக்கான பாரதியார் பாட்டுப் போட்டியின் போது சொல்லிக்கூட சொல்லி இருக்கிறேன். அதாவது 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் போட்டி என்று எதுவும் வேண்டாம். கலந்து கொள்ளும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஏதாவது நினைவுப் பரிசு கொடுக்கலாமே என்று சொன்னேன். தமிழ் அமைப்புக்களின் சாஸ்திர சம்பிரதாய வழக்கப்படி இந்த ஆலோசனையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. நினைவுத் திறன், உச்சரிப்புத் திறன், வெளிப்பாட்டுத்திறன் என்று பிரித்துப் பிரித்து தலா 10 மதிப்பெண்கள் வழங்குமாறு நடுவர்களுக்கு நிபந்தனை விதித்து இருந்தார்கள். நான் எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாவற்றுக்கும் தலா பத்து மதிப்பெண்கள் வழங்கினேன். அடுத்த ஆண்டுப் போட்டிகளில் இருந்து என்னை நடுவராக அழைப்பதை நிறுத்தி விட்டார்கள். எனக்கும் அது மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தது.</span></p><p><span style="font-size:100%;color:#663300;"><br /> </p></span><p><span style="font-size:100%;color:#663300;">அடுத்து, குழந்தைகளை அவர்களுடைய வயதுக்கு மீறிப் பேச வைப்பது. இந்த வி‘யம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் இருந்தே தமிழ்த் திரைப்படங்களில் காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பது. வயதுக்கு மீறிய, நடை உடை பாவனைகளில் அவர்களைத் திணிப்பது. தோட்டத்தில் மலர்ந்த ஒரு ரோஜா மலரின் மீது துணி காயப்போடும் கிளிப்பைக் குத்தி வைப்பது போன்ற காரியம் இது. பெற்றோர்கள் குழந்தைகளைப் பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்வார்கள். அந்தக் குழந்தையை இயற்கையாகப் பேச அனுமதித்தால் அது தூள் கிளப்பி விட்டு வந்து விடும். அம்மாவோ அப்பாவோ அக்காவோ ஆசிரியரோ அல்லது பக்கத்து வீட்டு மாமாவோ அந்தக் குழந்தை போட்டியில் பேசுவதற்கான பேச்சைத் தயார் செய்வார்கள். இது முதல் கட்டம். இந்தக் கட்டத்தில் அந்தக் குழந்தையின் மன முதிர்ச்சி, அந்தப் பிஞ்சு மனம் உள்வாங்கக் கூடிய விஷயங்கள், அதன் கிரகிக்கும் சக்தி, வெளிப்பாட்டுக்கான ஒரு நேரிடையான உத்தி போன்றவற்றை சுத்தமாக உதாசீனப்படுத்துவார்கள். குழந்தைகள் உரக்கக் கத்த வேண்டும். பைத்தியம் பிடித்தது போலக் கைகால்களை உதறிப் பேசவேண்டும் என்பதை மிக முக்கியமாக சொல்லிக் கொடுப்பார்கள். இப்போது பெற்றோர்களின் வேலை மிகவும் சுலபமாகி விட்டது. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு ரூபங்களில் பல தமிழ்ச் சானல்களில் வரும் பட்டிமன்றங்களையும். அரட்டை அரங்கங்களையும் குழந்தைகளோடு சேர்ந்து பார்த்து இந்த நிகழ்ச்சிகளின் பேச்சாளர்கள் பேசுவது போன்ற போலியான பாவங்களும், தொனிகளும், அங்க அசைவுகளும் அந்தக் குழந்தைகளின் மனங்களில் ஏற்றப்படும். அதே பாவனைகளில்.தொலைக்காட்சிகளில் இந்த நிகழ்ச்சிகளை நீங்கள் திறந்த மனத்துடன் என்றாவது பாருங்கள். அதில் கலந்து கொண்டு பேசுபவர்களின் கண்களையும் பாவனைகளையும் சற்று உற்றுப் பாருங்கள். அவற்றில் எத்தனை பொய்மைகள் கலந்து இருக்கின்றன என்று தெரியும். <span style="color:#660000;"><strong>சில நேரங்களில், இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள், நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள் வெளிக்காட்டும் பாவனைகள், வெடிக்கும் சிரிப்பு, மூக்கு சிந்தி அழுவது இவையெல்லாம் ஏதோ ஒரு மனநல விடுதிக்குச் சென்று மனநலம் பீடித்தவர்களை நாம் வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு அவை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.</strong></span> </span></p><p><span style="font-size:100%;color:#663300;"></span> </p><p><span style="font-size:100%;color:#663300;">இதைப் பற்றி ஏதாவது விமர்சனங்களை முன் வைத்தால் நம்முடைய சமூக அக்கறைகள் பற்றிய கேள்விகளை மிக உரக்க எழுப்புவார்கள். வெறும் கூச்சலும் அழுகையும் மட்டுமே ஒருவருடைய சமூக அக்கறையை உறுதிப்படுத்தாது என்று இவர்களுக்கு யார் சொல்வது? இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மனநோய் பீடித்த கண்றாவிகளை, அந்த பாவனைகளை, அந்தத் தொனிகளை, அந்த அங்கச் சேஷ்டைகளை நம் குழந்தைகளின் மனங்களில் ஏற்றி, அதே போன்ற சிந்தனா முறைகளை உட்புகுத்தி அவர்களை மேடை ஏற்றினால், வாழ்நாளெல்லாம் அவர்களுடைய ரசனை, மதிப்பீடுகள் வேறு எந்த வகையில் அமையும்? எந்த விதமான அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்ச்சி அவர்களுக்குள் காரியமாற்றும்? வயதாகி வளர்ந்து ஒரு மூன்றாம் தர நடிகனின் கட் அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்யாமல் அவனால் வேறு என்ன செய்ய முடியும்? எந்த சமூக அக்கறையும் அரசியல் ஞானமும் இல்லாதவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டாடுவதைத் தவிர அவனால் என்ன செய்ய முடியும்? எனவே, ஊடகங்கள் வழியாகவும் நாம் குழந்தைகளின் மீது அறிவு ரீதியான வன்முறைகளைப் பிரயோகித்து வருகிறோம். நம்மிடம் உள்ள மூர்க்கங்களையும் மூடத்தனங்களையும் அவர்கள் மீது ஏற்றி நம்முடைய பிம்பங்களாக மட்டுமே அவர்களைக் கொண்டுவர முயற்சிக்கிறோம். எது எப்படியாக இருந்தாலும் அவர்கள் பரீட்சையில் மதிப்பெண்கள் மட்டும் பெற்றுக்கொண்டு வந்தால் போதும். அசட்டுத்தனமான பேச்சுப் போட்டிகளிலும் படு அபத்தமான பட்டிமன்றங்களிலும் கலந்து கொண்டு தொண்டை கிழியக் கத்தியாக வேண்டும். ஏதாவது ஒரு செங்கல்லையாவது பரிசாக வீட்டுக்குக் கொண்டு வரவேண்டும். இதற்காக அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இல்லையா?<br /><br /></p><a href="http://bp3.blogger.com/_-03ySXDPAvE/SD-fipuUR8I/AAAAAAAAAN8/qnDgScQVaw4/s1600-h/sanimoolai.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5206055111928072130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_-03ySXDPAvE/SD-fipuUR8I/AAAAAAAAAN8/qnDgScQVaw4/s400/sanimoolai.jpg" border="0" /></a><br /><br /></span><p></p><p align="justify"><span style="font-size:100%;color:#cc0000;"><strong><em>வடக்கு வாசல் மார்ச் 2008 இதழில் வெளியான கட்டுரை</em></strong></span></p><p align="justify"><span style="font-size:100%;color:#663300;"></span></p><br /></span>ராகவன் தம்பிhttp://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-43571371852844376592008-05-28T09:16:00.003-05:002008-05-28T09:56:49.007-05:00கொண்டாட்டங்களும் தவிப்பும்...<div align="center"><a href="http://bp1.blogger.com/_-03ySXDPAvE/SD1q-zhPL7I/AAAAAAAAANs/WFugYaN61DE/s1600-h/edi+foto.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5205434371524210610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_-03ySXDPAvE/SD1q-zhPL7I/AAAAAAAAANs/WFugYaN61DE/s400/edi+foto.jpg" border="0" /></a> <span style="color:#330000;"><strong>பரிசல் ஏறியதால் பதவிக்கு ஏறிய மாவீரர்</strong></span></div><div align="center"><span style="color:#330000;"><strong><br /></strong></span><div align="justify"><span style="color:#996633;">கர்நாடகத்தில் காங்கிரசும் குமாரசாமியும் எவ்வித உட்டாலங்கடி வேலைகளையும் முயற்சிக்காததால் எடியூரப்பா தலைமையில்தான் அரசு அமையும் என்று உறுதிப்பட்டிருக்கிறது. கர்நாடக