<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss'><id>tag:blogger.com,1999:blog-29450785</id><updated>2009-11-19T04:44:03.458-08:00</updated><title type='text'>கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default?start-index=26&amp;max-results=25'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>305</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7703587288762096616</id><published>2009-10-18T18:18:00.000-07:00</published><updated>2009-10-19T03:56:18.698-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஆதவன் - யூ டூ சூர்யா??</title><content type='html'>ஆதவன் படத்தை பார்த்து ஒருவர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்து இருப்பாரே ஆனால் அது நடிகர் விஜய்யாகத் தான் இருக்கும். போன வருடத்துக்கு முந்தைய வருடம் இதே மாதிரி தீபாவளிக்கு நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் வெளியானது. அதே தீபாவளிக்கு நடிகர் சூர்யா நடித்த வேல் படமும் வெளியானது. இரண்டு படங்களிலுமே நாயகர்களான விஜய்யும், சூர்யாவும் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தனர். அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பாத்திரமாகவும் மங்கி கேப் போட்டு மற்றொரு பாத்திரமாகவும் நடித்து இருந்தார். வேல் படத்தில் நடித்த சூர்யாவோ இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பி இருந்தார். இரட்டை வேடத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று விஜய்க்கே பாடம் எடுப்பது போல் இருந்தது வேல் படத்தில் சூர்யாவின் நடிப்பு. இத்தனைக்கும் விஜய் சூப்பர் ஹீரோவாக நிலைநாட்டிய பின் அவர் படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து இருந்தவர் நடிகர் சூர்யா&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டும் தீபாவளிக்கு விஜய் நடித்த வேட்டைக்காரன் படமும் சூர்யா நடித்த ஆதவனும் வெளிவரும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. சூப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி படத்துடன் தில்லாக சச்சினை மோத விட்ட விஜய் அழகிய தமிழ் மகன் கொடுத்த பாடத்துக்கு பிறகு சூர்யாவின் ஆதவன் படத்துடன் மோதும் தில் இருந்திருந்தால் ஆச்சரியமே. ஏனோ காரணங்களால் வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளிவரவில்லை. ஒருவேளை வேட்டைக்காரன் வெளிவந்து இருந்தால் நான் கூட நிச்சயமாக ஆதவனை படத்துக்கு போகாமல் வேட்டைக்காரன் படத்தை தான் போய் பார்த்து இருப்பேன். விஜய்காக இல்லை, அனுஷ்காவுக்காக என்ன தான் சூர்யா படம் என்றாலும் ஹீரோயின் நயன்தாரா என்று தெரிந்ததுமே ஆதவன் படத்தை பார்க்கும் ஆர்வம் எனக்கு சுத்தமாக இல்லை. ஆனால் விதி வலியது&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யாவின் ஆதவன் படத்துடன் எப்படி மோதுவது அப்படி மோதினால் கண்டிப்பாக படம் நன்றாக வரவேண்டும் என்ற கட்டாயம் விஜய்க்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால் இப்போது ஆதவன் படத்தை பார்த்துவிட்டு வேட்டைக்காரனை மோதவிடாமல் மிஸ் பண்ணிவிட்டோமே என்று விஜய் நினைத்து இருப்பார். விஜய் ஏற்கனவே நடித்து இதே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய மின்சாரக் கண்ணா படம் மாதிரி தான் இருக்கிறது ஆதவன் படமும். மின்சாரக் கண்ணா படத்தில் விஜய் காமெடி ஹீரோவாக செய்தது போல் தான் சூர்யாவும் செய்து இருக்கிறார். இதே படத்தை மட்டும் நம்ம விஜய் பண்ணி இருந்தால் நம் இணைய கண்மனிகள் படத்தை பிரித்து மேய்ந்து இருப்பார்கள் சூர்யா மேல் கொஞ்சம் நம்பிக்கை இருப்பதால் நம் ரசிகர்கள் பொறுமை காக்கிறார்கள். இந்த பொறுமையை சூர்யா தொடர்ந்து சோதிக்காமல் இருக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;வாரணம் ஆயிரம் படத்தில் மகனாகவும் தந்தையாகவும் சூர்யா முதியவர் வேடத்தில் புகுந்து விளையாடி இருப்பார். இந்த படத்தில் பத்து வயது சூர்யா வருகிறார் ஆனால் அதில் நம்ம சூர்யா நடிக்கவில்லை. அதற்கு பதிலாக மார்ஃபிங் பண்ணி இருக்கிறார்கள் இதை எல்லாம் இந்தியன் படத்திலேயே நாம பாத்தாச்சு. பிதாமகன் படத்தில் ஓடும் ரயிலில் சூர்யா ஏலம் விட்டு பொருட்களை விற்கும் போது கம்பெனிக்கு கட்டுப்படி ஆகவில்லை என்று கன்னட பைங்கிளி அபிநய சரஸ்வதி சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா என்று சொல்லி ஒருவரை ஏமாற்றுவார். இந்த படத்தில் அந்த கன்னடத்து பைங்கிளியுடன் கூடவே நடித்து இருக்கிறார். ஒருவேளை இது சூர்யாவுக்கு கனவுப் படமோ?&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாளைக்கு முன்னால் இதே மாதிரி தான் நடிகர் விக்ரமும் வித்தியாசமான ரோல்களாக தொடர்ந்து செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டார். அதுவே அவருக்கு பின்னால் வினையாக அமைந்துவிட்டது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவரால் தொடர்ந்து நிறைவேற்ற முடியவில்லை. அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் விக்ரமை பார்த்து எம்.ஜி.ஆரை. பாத்திருக்கேன் சிவாஜியை பாத்திருக்கேன் ரஜினிய பாத்திருக்கேன் கமலை பாத்திருக்கேன் ஆனா எல்லோரையும் ஒன்னா இப்போது தாம் பார்க்கிறேன் என்று வசனம் பேசி விக்ரமை புகழ்ந்து இருப்பார். அப்படியே விக்ரமுக்கு போர்வை போர்த்தி அமுக்கிவிட்டார்கள். இந்த படத்திலும் சூர்யாவை பார்த்து வடிவேல் அதே மாதிரி புகழ்ந்து ஒரு வசனம் பேசி இருக்கிறார். சூர்யா சூதுவாது தெரியாத பச்சை புள்ளை என்று அவர் தோன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த நண்பர் தெரிவித்தார். சூர்யா இந்த மாதிரி தடைகளை எல்லாம் தாண்டி வருவாரா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7703587288762096616?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7703587288762096616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7703587288762096616' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7703587288762096616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7703587288762096616'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/10/blog-post.html' title='ஆதவன் - யூ டூ சூர்யா??'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-2428242105316993577</id><published>2009-09-27T06:30:00.000-07:00</published><updated>2009-09-27T07:03:39.244-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மனைவி விஜய் ரசிகையாக அமைந்துவிட்டால்</title><content type='html'>மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள் அப்படி நமக்கு வரம் கொடுக்க நினைக்கும் இறைவன் நமக்கு தரும் மனைவி விஜய் ரசிகையாக அமைந்துவிட்டால் அது வரமா என்று தெரியவில்லை. பார்த்திபன் கனவு படத்தில் புதிதாக திருமணமான ஸ்ரீகாந்த் தன் மனைவி சிநேகாவிடம் பிடித்த படம் பற்றி கேட்டவுடன் சிநேகா தனக்கு பாக்யராஜ் படம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சொல்ல கேட்ட ஸ்ரீகாந்த் டரியலாகி போவாரே அப்படி தான் நானும் திருமணம் ஆன புதிதில் என் மனைவி விஜய் ரசிகை என்று அறிந்து டரியலாகிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் திருமணத்துக்கு முன் பார்த்த ஒரே விஜய் படம் என்றால் அது காதலுக்கு மரியாதை தான் அதுவுமே கூட தியேட்டருக்கு சென்று பார்க்கவில்லை சன் டிவியில் இந்த வாரம் காதல் வாரம் என்று ஒரு வாரம் முழுவதும் இரவு பத்து மணிக்கு காதல் படங்களாக போட்டு காட்டிய போது தான் அந்த படத்தையும் கூட பார்த்தேன். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது எனக்கும் விஜய் படங்களுக்கும் எவ்வளவு தூரம் என்று இதற்கு மேலும் சொல்ல தேவை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் படம் என்றாலே அலறி அடித்து ஓடும் நான் சிவகாசி படம் ரிலீசான முதல் சில நாட்களிலேயே அந்த படத்தை போய் பார்த்தேன் என்றால் இறைவன் எனக்கு எத்தகைய வரம் அருளி இருக்க வேண்டும் என்று எண்ணி என்னை நானே தேற்றிக் கொண்டேன். இந்த மாதிரி சோதனையான சமயங்களில் எல்லாம் எனக்கு ஆறுதலாக அமைவது அக்கம்பக்கத்து நண்பர்கள் தான். நான் என்ன தான் மசாலா படங்களை விரும்பி பார்ப்பதில்லை என்றாலும் தமிழ் சினிமா ரசிகன் தான். தமிழ் சினிமா தவிர்த்து அவ்வப்போது பிறமொழி படங்களையும் பார்ப்பதுண்டு. ஆனால் சில நண்பர்களோ நான் தமிழ் படம் பார்த்தேன் என்று சொன்னாலே என்னை ஏதோ வேற்று கிரகவாசி மாதிரி பார்ப்பார்கள். அவர்கள் எல்லாம் எப்போது டென்சல் வாஷிங்க்டன், பென் அஃப்லெக் என்று ஏதேதோ ஆங்கில பெயர்களை சொல்வார்கள். எப்ப்போதும் அவர்கள் நடித்த படங்களையே பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் கடவுள் மனைவியை விஜய் ரசிகையாகவே கொடுத்து வரம் அருளி இருக்கிறார் என்று நினைக்கும் போது மிகவும் ஆறுதலாக இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணியுடன் சேர்ந்து நான் விஜய் படங்களை பார்ப்பது போலவே அவரும் என்னுடன் சேர்ந்து சில படங்களை பார்ப்பார். அப்படி rang de basanti, a wednesday, taare zameen par, lagaan போன்ற படங்களை பார்த்த போது தங்கமணியும் என்னுடன் சேர்ந்து பார்த்தார். அதிலும் குறிப்பாக a wednesday பார்த்த போது மிகவும் வியப்படைந்து நம்ம ஆட்கள் எப்படியும் கூட படம் எடுக்கிறார்களா என்று மிகவும் ஆச்சரியம் அடைந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்யின் வில்லு பட வெளிவந்த போது நடந்த பிரெஸ் மீட்டில் விஜய் தன் ரசிகர்களை பார்த்து சைலெண்ஸ் என்று சவுண்டுவிட்டதை பார்த்து தங்கமணியிடம் இருந்த விஜய் இமேஜ் ஏற்கனவே சிதறிப் போய் இருந்தது.  இப்படி கால ஓட்டத்தில் வீட்டில் அடிக்கடி கேட்கும் விஜய் புராணம் கொஞ்சம் குறைந்தது. வில்லு படம் பார்க்கலாமா அல்லது அபியும் நானும் பார்க்கலாமா என்ற நிலை வந்த போது நான் பார்க்க விரும்பிய அபியும் நானும் படமே பார்க்கலாம் என்று தங்கமணி ஒத்துக் கொண்ட போது என்னுடைய பொறுமை எனக்கு கொடுத்த பக்குவத்தை எண்ணி நானே என்னை மெச்சிக் கொண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா இனி விஜய் என்னும் டெரரில் இருந்து தப்பித்துவிடலாம் என்று எண்ணிய போது மீண்டும் வந்தது சோதனை. தங்கமணியை தான் சமாளித்தாகிவிட்டதே என்று நினைத்து கொண்டிருந்த போது மீண்டும் ஒரு நாள் விஜய் படம் ஓடிக் கொண்டு இருந்தது இப்போது படத்தை ரசித்துக் கொண்டு இருந்தது தங்கமணி அல்ல எங்கள் அருமை புதல்வி. ஆகா குழந்தைகளை கூட நம்ம விஜய் கவர்ந்துவிடுகிறாரே அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததில் தப்பே இல்லை என்ற உண்மை என் மரமண்டைக்கு அப்போது தான் உரைத்தது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-2428242105316993577?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/2428242105316993577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=2428242105316993577' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/2428242105316993577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/2428242105316993577'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/blog-post_27.html' title='மனைவி விஜய் ரசிகையாக அமைந்துவிட்டால்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5049626010706270997</id><published>2009-09-22T13:14:00.000-07:00</published><updated>2009-09-22T13:17:40.470-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கமலின் அறச்சீற்றம் - 2</title><content type='html'>முந்தைய இடுகையை வாசிக்காதவர்களுக்கு &lt;a href="http://maruthanayagam.blogspot.com/2009/09/1.html" target="_new"&gt;கமலின் அறச்சீற்றம் - 1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை சில பகுதிகளாக எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன் ஆனால் உன்னைப்போல் ஒருவன் படத்தை வைத்து வலைத்தளங்களில் நடக்கும் மோதல்கள் வெறும் கருத்து மோதல்களையும் தாண்டிச் செல்வதால் இந்த இடுகையோடு முடித்துக் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். பொதுவாக கமலின் படங்கள் வெளிவரும் போதெல்லாம் இந்துத்வ தரப்பிலிருந்து தான் எதிர்ப்பு கிளம்பும். தசாவதாரம் படம் வெளிவரும் முன் தியேட்டர்களில் காட்டப்பட்ட ட்ரெய்லர்களில் சாமி சிலையை ஒருவர் காலால் உதைப்பது போன்ற காட்சியை பார்த்துவிட்டு முதலில் அந்த படத்துக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றது ஏதோ ஒரு இந்து அமைப்புதான். ஆனால் அந்த படத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை என்று சொல்லி ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. மறந்து போய்விட்ட சைவம் - வைணவ பிரச்சினையை மீண்டும் ஊதி ஆதாயம் தேட முயல்கிறார் கமல் என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்தன. தசாவதாரம் பெற்ற பெரு வெற்றியை தொடர்ந்து அந்த எதிர்ப்புகள் எல்லாம் கரைந்து போயின. தசாவதாரம் படம் பார்த்துவிட்டு அது மாதிரி சைவ - வைணவ மோதல்கள் எங்கு நடந்தனவா என்று தெரியவில்லை. இது மாதிரி கமலின் முந்தைய படங்களுக்கும் இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்புகள் வந்து இருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப்போல் ஒருவன் படத்தின் ஒரிஜினலான A Wendesday படத்தில் நான்கு தீவிரவாதிகளையுமே முஸ்லிம்களாக காட்டி இருப்பார்கள். அதை தமிழில் கமல் மூன்று முஸ்லிம்களையும் ஒரு இந்து என்றும் மாற்றி இருக்கிறார். "கான்"கள் ஆதிக்கம் செய்யும் இந்தி சினிமாவிலேயே செய்ய துணியாததை தமிழில் கமல் செய்து காட்டி இருக்கிறார். A Wendesday படத்தில் மாலேகான் குண்டுவெடுப்பு பற்றியும் குறிப்பிடப்படும் ஆனால் அந்த படம் வந்த போது மாலேகானில் குண்டு வைத்தது இந்துக்கள் தான் என்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இருந்தாலும் பெஸ்ட் பேக்கரி, மோதி பெயரை எல்லாம் அப்படியே நிஜத்தில் உள்ள பெயர்களை கமல் குறிப்பிட்டது மாதிரி வேறு யாரும் இதுவரைக்கும் செய்தார்களா என்று தெரியவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்லி வம்பு வளர்க்கும் இந்துத்வா கூட்டம் மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து சாமியாரிணி கைதான போது இந்து தீவிரவாதி என்று யாரும் கிடையாது என்று பசப்பியது. ஆனால் கமலோ அதற்கும் மேலே சென்று ஒரு இந்துவை தீவிரவாதியாக தன் படத்தில் சித்தரித்து இருக்கிறார். இங்கே கமலை மணிரத்னம் உடன் ஒப்பிட்டு பார்க்கலாம். பம்பாய் படம் எடுத்த மணிரத்னம் பிரச்சினை வரும் என்று எண்ணி பால் தாக்கரேவுக்கு ஸ்பெஷல் ஷோ போட்டு காட்டி அவர் சொன்ன இந்துவத்தின் கோர முகம் தெரியும் காட்சிகளை எல்லாம் நீக்கினாராம். அதே மாதிரி மணிரத்னம்  எந்த முஸ்லிம் தலைவருக்கும் போட்டு காட்டவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நெருடலாக இருந்த ஒரு விஷயம் ஒரு தீவிரவாதி தன் மனைவியின் மறைவை பற்றி சொல்லும் போது மற்றொரு தீவிரவாதி அதை நையாண்டி செய்வது தான். இது மதம் என்ற எல்லையையும் தாண்டி மிகவும் மட்டரகமான நகைச்சுவை உணர்வையே காட்டுகிறது. மேலும் இந்த படத்தில் கமல் பாத்திரம் ஒரு முஸ்லிம் என்பதையும் ஏற்க முடியவில்லை. முதலில் இடது கையில் எழுதிவிட்டு பின்னர் காந்திஜியை உதாரணம் காட்டி தன்னால் இரண்டு கைகளாலும் எழுத முடியும் என்று சொன்னது போல் அவரால் அந்த பாத்திரம் முஸ்லிம் அல்ல என்பதையும் மிக எளிதாக சொல்ல முடியும். ஆனால் அப்படி எல்லாம் தெளிவாக எல்லாவற்றையும் சொல்வதற்கு அவர் ஒன்றும் சாதாரண ஆள் அல்ல கலைஞானியாயிற்றே&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் மோகன்லால் இந்த படத்தில் செய்த வேடம் அவருக்கு புதிதல்ல அவர் இதே மாதிரி பாத்திரத்தை Company என்ற இந்தி படத்தில் ஏற்கனவே செய்து இருக்கிறார். அவரின் மலையாளம் கலந்த உச்சரிப்பு எப்போதும் எனக்கு பிடித்ததில்லை ஆனால் இந்த படத்தில் IG பாத்திரத்துக்கு அந்த மலையாள வாசம் மிகவும் பொருந்தி இருக்கிறது. கமல் இந்த படத்தில் முதல்வரின் வீடு முதல்வரின் குரல் எல்லாம் காட்டி மிரட்டி இருக்கிறார். அரசியலுக்கு வருவேன் என்று பூச்சாண்டி காட்டும் நடிகர்களுக்கு நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். பூச்சாண்டி காட்டும் நடிகரை நையாண்டியும் செய்கிறார். ஸ்ரீமன் பல படங்களில் அந்த நடிகருக்கு நண்பராக வருவார் இந்த படத்தில் அவரையே வாருகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் கமலின் வாட்ச், செருப்பு, சாண்ட்விச் பற்றி எல்லாம் கமெண்டு சொல்பவர்களால் எப்படி மற்ற தமிழ் சினிமா படங்களை பார்க்க முடிகிறது என்பது பெரும் புரியாத புதிராக இருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5049626010706270997?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5049626010706270997/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5049626010706270997' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5049626010706270997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5049626010706270997'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/2.html' title='கமலின் அறச்சீற்றம் - 2'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7255086420500454436</id><published>2009-09-21T08:06:00.001-07:00</published><updated>2009-09-21T08:09:52.985-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கமலின் அறச்சீற்றம் - 1</title><content type='html'>முன்னே எல்லாம் கமல் படம் பார்த்தால் தான் குழப்பம் வரும் இப்போது கமல் படம் குறித்த விமர்சங்களை பார்த்தாலே குழப்பம் வரும் போல் இருக்கிறது. முந்தைய சூப்பர் ஹிட் படமான தசாவதாரத்தில் தான் ஒரு ஆத்திகரா நாத்திகரா என்று தீர்மானமாக சொல்லாமலேயே படத்தை முடித்து இருந்தார். இப்போது வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் உன்னைப்போல் ஒருவன் படத்தில் அதையே கொஞ்சம் மாற்றி படத்தின் முக்கிய பாத்திரம் எந்த மதம் என்று சொல்லாமலே இதையும் முடித்து இருக்கிறார். இன்னும் தசாவதாரம் ஆத்திகர் - நாத்திகர் விவாதமே இன்னும் முடிவடையாமல் இருக்கும் போது அடுத்த விவாதத்தை கிளப்பிவிட்டு போய் இருக்கிறார். இதையும் குரூப்பாக விவாதிபந்தற்கென்றே பலரும் இருப்பதால் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இது தான் ஓடிக் கொண்டு இருக்கும். இப்படி எல்லாம் ரசிகனின் நாடித்துடிப்பை துல்லியமாக கணக்கிட்டு தன் விரல் நுனியில் வைத்து இருப்பதால் தான் கலை உலகின் பொன்விழா கடந்து வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறார் நம்ம உலக நாயகன்&lt;br /&gt;&lt;br /&gt;தசாவதார விவகாரம் எந்த அளவுக்கு சூடு பிடித்து ஈமெயில்களில் உலவி வந்தது என்பது நமக்கு தெரியும். அவர் ஸ்ரீனிவாச ராமானுஜராக வந்து ஆத்திகராக காட்டிய ஆக்ரோஷத்தை நாத்திகராக வந்த கோவிந்த காட்டவில்லை. கோவிந்த் பட்டும் படாமலும் தான் பேசுகிறார் அதனால் கமல் நிச்சயம் ஆத்திகர் தான். கமல் நடித்த 10 பாத்திரங்களில் ஒன்றே ஒன்றும் மட்டும் தான் நாத்திகம் பேசுகிறது மற்ற பாத்திரங்கள் எல்லாம் முஸ்லீம் பாத்திரம் உட்பட எல்லாம் கடவுள் நம்பிக்கை இருப்பதாகவே காட்டப்பட்டுள்ளது அதனால் அவர் ஆத்திகர் தான் என்று ஒருபுறமும். என்ன தான் இருந்தாலும் மெயின் பாத்திரமான கோவிந்த் பல இடங்களில் நாத்திக கருத்துகளையே பரப்புகிறது என்றும் விவாதம் சென்றது. இப்படி எல்லாம் ரசிக கண்மணிகள் இருக்க கமல் இரண்டு படம் என்ன இதே மாதிரி அவர் இன்னும் இருபது படங்கள் எடுக்கலாம் அப்போதும் கூட தசாவதார விவாதம் முடிவு பெற்று இருக்காது&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப்போல் ஒருவனின் ஒரிஜினல் கதையான A Wednesday படத்தை இந்தியல் பார்த்த போதே அது குறித்து ஏற்கனவே விமர்சனம் எழுதி இருந்தேன். தமிழ் சினிமாவில் பலரும் பிற மொழிகளில் வந்த படங்களை ரீமேக் செய்து தமிழில் வெளியிடுகிறார்கள். கமலும் அதே மாதிரி ரீமேக் செய்கிறார் ஆனால் அவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பது இந்த படத்தை பார்த்தாலே புரியும். பெரும்பாலும் ரீமேக் செய்பவர்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களை மட்டுமே ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். உன்னைப்போல் ஒருவனின் ஒரிஜினல் படமான A Wednesday வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம் அல்ல ஆனால் அது ஒரு தரமான படம் என்று அனைத்து தரப்பினராலும் பாராட்டப் பெற்றது. இந்தியில் படத்தை பார்த்தபோது இது மாதிரி படம் தமிழில் வருமா என்றே சந்தேகம் இருந்தது. இந்தியில் இந்த படம் வந்தபோது கூட அதில் நஸ்ருதீன் ஷா, அனுபம் கெர் போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் நடித்து இருந்தார்கள் அவர்கள் சிறந்த நடிகர்கள் என்று அறியப்பட்டாலும் அவர்களின் ரீச் மற்ற மாஸ் ஹீரோக்கள் அளவுக்கு கிடையாது. ஒருவேளை ஏதாவது ஒரு மாஸ் ஹீரோவையும் அதில் நடிக்க வைத்து இருந்தால் அந்த படமும் வணிக ரீதியாக வெற்றி பெறுவதோடு அல்லாமல் அதற்கு நல்ல ரீச்சும் கிடைத்து இருக்கும். தமிழில் அதை தானே தயாரித்து நடித்தன் மூலம் அந்த குறையை கமல் போக்கி இருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்கு முன் இந்தி நடிகர் ஷாரூக் கான் அமெரிக்கா சென்ற போது அவர் முஸ்லிம் என்பதால் அவரை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து வைத்து இருந்ததாக சொல்லி ஒரு பிரச்சினை கிளம்பியதே நினைவிருக்கிறதா. ஷாரூக் கானுக்கு ஏற்பட்டது போலவே நம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கும் சோதனை ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. இந்த இரண்டு சம்பவங்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே இதே மாதிரி சோதனை இந்தி நடிகர் அமீர் கானுக்கும் நம் உலகநாயகனுக்கும் நடந்தது எத்தனை பேருக்கு இன்னும் நினைவிருக்கிறது என்பது தெரியவில்லை. கமலுக்கும் அமீர்கானுக்கும் ஒரே மாதிரி சோதனைகள் நடைபெற்றது வியக்க வைக்கும் மற்றொரு ஒற்றுமை.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சதந்திரம் படத்தில் பைலட்டாக கமல் தோன்றும் காட்சிகள் சில கனடாவில் எடுக்கப்பட்டது. அந்த படத்துகாக கமல் ஒரு குறுந்தாடி வேறு வைத்து இருந்தார். இது போதாதா ஒருவரை தடுத்து வைப்பதற்கு. அவர் பெயரோ கமல் Hassan, சிறியதாக தாடி வேறு வைத்து இருக்கிறார் இந்த இரண்டு காரணங்களையும் வைத்து அவரும் ஒரு முஸ்லிம் என்று நினைத்துக் கொண்டு அவரை தடுத்து வைத்து வறுத்து எடுத்துவிட்டார்கள் கனடா நாட்டு அதிகாரிகள் அமெரிக்க வந்த போதும் இந்த பிரச்சினைகள் தொடர்ந்ததாக் அவர் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவத்தை கமலே தன் குரலில் நளதமயந்தி படத்தில் வரும் ஒரு பாடலில் விவரித்து இருப்பார் டைம் இருந்தால் அந்த பாடலை கேட்டுப் பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடுகை உன்னைப்போல் ஒருவன் படம் பற்றியது தானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். படத்தை பற்றி சொல்லாமல் ஏதேதோ சொல்வதாக நீங்கள் நினைக்கலாம், ஒரு படத்தை பார்த்து அதற்கு ஒரு விமர்சனம் எழுதுவது தான் எல்லா படத்துக்கும் செய்வது தானே நம்ம உலகநாயகன் படம் என்றால் கொஞ்சம் பில்டப் வேண்டாமா அதான். இந்த இடுகை கொஞ்சம் நீண்டுவிட்டது அதனால் மீண்டும் அடுத்த இடுகையில் தொடரலாம் அதுவரைக்கும் உங்களுக்கும் போர் அடிக்காமல் இருக்க வேண்டும் அல்லவா அதனால் நம்ம உலக நாயகனுக்கு கனடாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நீங்கள் மறந்துவிட்டிருந்தால் இதை கொஞ்சம் படியுங்கோ மக்களே &lt;a href="http://www.mumbai-central.com/nukkad/apr2002/msg00521.html" target="_new"&gt;கமலுக்கு வந்த சோதனை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7255086420500454436?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7255086420500454436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7255086420500454436' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7255086420500454436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7255086420500454436'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/1.html' title='கமலின் அறச்சீற்றம் - 1'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-3715285975937638626</id><published>2009-09-14T09:21:00.000-07:00</published><updated>2009-09-14T09:23:11.348-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>(கலைப்) பொக்கிஷம் - சேரன் அடித்த சிக்ஸர்</title><content type='html'>நாம் பள்ளி பருவத்தில் பாட புத்தகத்தில் அதுவும் ஆங்கில பாட புத்தகத்தில் ஒரு பாடமாக பண்டித ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா அம்மையாருக்கு எழுதிய கடிதங்கள் பாடமாக இருந்த நினைவு உங்களுக்கும் இருக்கும். அப்போது என் மனதில் ஒரு கேள்வி. நேரு தன் மகளுக்கு கடிதம் எழுதுவது என்பது ஒருவரின் சொந்த விஷயம் அதை ஏன் நமக்கு பாடமாக வைக்க வேண்டும் என்று அப்போது எழுந்தது. பின்னர் ஓரளவு மனம் முதிர்ச்சி அடைந்த போது அதற்கான விடை கிடைத்தது. இப்போது போல் அப்போது இணையம், டிவிட்டர், எஸ்.எம்.எஸ். எல்லாம் கிடையாததால் பெரும்பாலும் கருத்து பரிமாற்றதலுக்கு கடிதங்களே பெரும் பங்காற்றி இருக்கின்றன. கருத்து பரிமாற்றுதலில் முக்கிய பங்கு வகித்ததால் கடிதம் எழுதுவது என்பது நாள்டைவில் ஒரு கலையாகவே மாறிவிட்டது. அதுவும் சிறப்பாக கடிதம் எழுதுவது என்பது இலக்கியத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் எப்போது ஒருவர் பேனா எடுத்து ஒரு கடிதம் தீட்டிவிட்டாரோ அப்போதே இலக்கியவாதி ஆவதற்கான முதல் படியை அவர் எடுத்துவைத்துவிட்டார் என்றே சொல்லலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கூட இணையத்தில் எழுதும் இலக்கியவாதிகள் அவ்வப்போது தங்களுக்கு வாசகர்கள் எழுதும் கடிதங்களை தவறாமல் பிரசிரித்து வருகிறார்கள். பத்திரிக்கைகளுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தவர்கள் பின்னாளில் இலக்கியவாதிகளாக மிளிர்ந்து இருக்கிறார்கள். இப்படி கடிதம் எழுதுவது இலக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனாலேயே நேரு போன்ற பெரும் தலைவர்கள் எழுதிய கடிதங்களை பாடமாக வைத்து இருக்கிறார்கள் என்று பின்னாளில் தெளிவு ஏற்பட்டது. இப்படி கடிதங்களை பாடமாக வைக்கும் போது அதே கடிதங்களை படமாக எடுத்தால் அதன் வடிவம் கவித்துவமாக தானே இருக்கும். அப்படி தான் இருக்கிறது சேரனின் பொக்கிஷம். அந்த வகையில் இந்த படம் ஒரு கலைப்பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு கதைக் களத்தை தேர்ந்தெடுத்ததன் மூலம் சேரன் மீண்டும் ஒருமுறை செஞ்சுர் அடித்து இருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் வேறு ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள். அது குறித்து அதிகமாக தெரியவில்லை. அதானல் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் குறையவில்லை. படம் ஒரு டிபிக்கலான சேரனின் படம். மென்மையான காதலை சொல்லும் படம். இந்த படம் ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டு வந்ததால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் ஓரளவு ஈடு செய்தது என்றே சொல்லலாம். ஆனால் படம் முடிவடையும் கட்டத்தில் கொஞ்சம் சொதப்பலாகவே இருந்தது. படம் முடியும் முன் ஒரு அரை மணி நேரத்துக்கு முன் எழுந்துவந்துவிட்டால் இந்த ஏமாற்றத்தை தவிர்க்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் சேரனின் பெயர் லெனின், மிகவும் பரிச்யமான பெயராக தெரிகிறது. லெனின் என்று பெயர் வைத்துவிட்டதால் கல்கத்தாவுக்கு கப்பல் ஏறிவிட்டாரா சேரன் என்று தெரியவில்லை. அதே போல் நாயகனும், நாயகியும் வேற்று மதத்துகாரர்கள் என்று காட்டி மதத்தை இங்கே நுழைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இருந்தாலும் முஸ்லீம் பெண் பாத்திரத்தில் பத்மப்ரியா கனகச்சிதமாகவே பொருந்துகிறார். ஆனால் அவருடைய கெட்டப் அடிக்கடி நாம் பார்ப்பது தமிழ்ப் படமா அல்லது ஈரானிய படமா என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்துக்கு நாயகியின் தந்தை சம்மதம் அளித்துவிட்டு பின் குடும்பத்தோடு மாயமாகிவிடுவதை அறிந்து சேரன் அழுது புலம்பி கடற்கரையோரம் ஒதுங்கி இருக்கும் கட்டுமரத்தி கண்ணயர்வது போல் காட்டி இருப்பது அப்படியே ஆட்டோகிராப்பை நினைவுபடுத்துகிறது. பாடல்களில் ஒன்றிரண்டு மிகவும் இனிமையாக இருக்கிறது. அதிலும் சேரன் பேரூந்தில் பயணம் செய்யும் போது வரும் பாடல் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பேரூந்து நிலையத்தில் கிளம்புவதற்கு முன் காலியாக இருக்கும் பேரூந்துகளில் மாறி மாறி காதலியுடன் பேசுவது என்று யதார்த்தமாக படத்தை நகர்த்தி இருக்கிறார். அதற்கு திருஷ்டி வைத்தாற் போல் கிளைமேக்ஸில் அப்பட்டமாக யதார்த்தத்தை மீறி இருக்கிறார். மாயக்கண்ணாடியில் சினிமா நட்சத்திரமாக ஆசைப்பட்டு பல சினிமா நட்சத்திரங்களாக நடித்து பேசி காட்டுவாரே அதே மாதிரி இந்த படத்தில் பல இடங்களில் செய்ற்கையாக நடித்து இருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;சேரன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். அவர் ஒரே மாதிரியான ஸ்டீரியோ டைப் படங்களை விட்டு வெளிவந்து பல தரப்பட்ட படங்களை தர முயற்சிக்க வேண்டும். சேரனின் படங்களை ஆட்டோகிராப்புக்கு முன் ஆட்டோகிரப்புக்கு பின் என்று பிரித்தால் ஆட்டோகிராப்புக்கு பின் வந்த படங்கள் எல்லாம் ஸ்டீரியோடைப்பாகவே இருக்கின்றன. அவர் எவ்வளவு தான் இந்த படங்களை வித்தியாசமாக காட்டுவதற்கு முயற்சி செய்தாலும் அதற்கு அவர் மிகவும் கஷ்டப்படுவது பல இடங்களில் நன்றாக தெரிகிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-3715285975937638626?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/3715285975937638626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=3715285975937638626' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3715285975937638626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3715285975937638626'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/blog-post_14.html' title='(கலைப்) பொக்கிஷம் - சேரன் அடித்த சிக்ஸர்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-1465592750805781134</id><published>2009-09-08T07:54:00.001-07:00</published><updated>2009-09-08T07:59:40.645-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>இயக்குநர் ஷங்கருக்கு பிடித்த பத்து டெக்னீஷியன்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/SqZwTgdwd1I/AAAAAAAAALE/mfySLVtlPKY/s1600-h/rajini-kamal.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 306px;" src="http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/SqZwTgdwd1I/AAAAAAAAALE/mfySLVtlPKY/s400/rajini-kamal.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379110285375207250" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க எல்லா பதிவுக்கும் கமல் படம் போடுவோம்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;பிடித்த ஹீரோ - அர்ஜீன் மற்றும் ரஜினி&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த ஹீரோயின் - ஐஸ்வர்யா பச்சன். ஷங்கர், ரஜினி இருவரின் மகள்கள் பெயருமே ஐஸ்வர்யா தான் என்பது கூடுதல் தகவல்&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த கதாசிரியர் - சுஜாதா&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த நடன இயக்குநர் - ராஜூ சுந்தரம்&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த காமெடியன் - விவேக்&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த கலை இயக்குநர் - தோட்டாதரணி&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த ஒளிப்பதிவாளர் - கே.வி.ஆனந்த்&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த ஸ்டண்ட் இயக்குநர் - பீட்டர் ஹெய்ன்&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த தயாரிப்பாளர் - இதை யார் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஜென்டில்மேன் படம் தொடங்கி ஷங்கர் இயக்கிய எல்லாமே பிரம்மாண்ட படங்கள் தான் அதை வைத்து நீங்களே யூகித்து கொள்ளுங்கள்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-1465592750805781134?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/1465592750805781134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=1465592750805781134' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/1465592750805781134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/1465592750805781134'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/blog-post_08.html' title='இயக்குநர் ஷங்கருக்கு பிடித்த பத்து டெக்னீஷியன்கள்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/SqZwTgdwd1I/AAAAAAAAALE/mfySLVtlPKY/s72-c/rajini-kamal.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7373280277515992317</id><published>2009-09-04T08:05:00.000-07:00</published><updated>2009-09-04T08:08:37.710-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கந்தசாமி குழந்தைகளுக்கான படமா?</title><content type='html'>எஸ்.ஜே.சூர்யா என்று ஒருவர் இருந்தாரே நினைவிருக்கிறதா. அவர் எடுத்த நியூ படம் மலையாளத்தில் ஷகீலா படங்கள் செய்த புரட்சியை தமிழில் செய்யக் கூடியதாக இருந்தது. நியூ படம் பெற்ற வெற்றியை பார்த்த பலர் மலையாளத்தில் ஷகீலா ஏற்படுத்திய பூகம்பத்தை இந்த எஸ்.ஜே.சூர்யா தமிழில் செய்துவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக அவரை ஆரம்பத்திலேயே அமுக்கி போட வேண்டும் என்று முடிவு செய்தனர். பல மாதர் அமைப்புகள் அந்த படத்தின் மீது வழக்கு போட்டு அந்த படத்தை தடை செய்துவிட்டனர். பின்னர் அந்த படம் என்ன ஆனது என்று நினைவில்லை. அதற்கு பிறகும் அடங்காமல் எஸ்.ஜே.சூர்யா கொடுத்த அரிய படைப்பு தான் அ.ஆ அதாவது அன்பே ஆருயிரேவாம். அ.ஆ என்பது அரிச்சுவடியை ஆரம்பத்தில் கையில் எடுக்கும் குழந்தைகள் சொல்வது. ஆனால் இந்த எஸ்.ஜே.சூர்யா சொல்லிக் கொடுக்க நினைத்தது பாலர்களுக்கு அல்ல அவர் சொல்லி கொடுக்க நினைத்தது பாலியல் விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த படத்துக்கு அவர் முதலில் வைத்த பெர்ய பி.எஃப். அதாவது பெஸ்ட் ஃபிரெண்டாம். பி.எஃப் என்றால் என்னவென்று உலகுக்கே தெரியும். விஷயம் விபரீதமாவதை உணர்ந்த நம்மவர்கள் அந்த படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். படம் தலைப்பு தமிழில் இல்லை ஆங்கிலத்தில் இருக்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆங்கிலத்தில் இருக்கிறது என்று தான் எதிர்ப்பு தெரிவித்தார்களே தவிர ஆபாசமாக இருக்கிறது என்று யாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக நினைவில்லை. அந்த படம் நல்ல வேளையாக ஊற்றிக் கொண்டுவிட்டது. அப்படி இல்லாமல் அதுவும் நியூ படம் மாதிரி வெற்றி பெற்று இருந்தால் இன்று அவர் தமிழ் சினிமாவில் பெரிய புரட்சியே பண்ணி இருப்பார். ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து அதே ஃபார்முலாவை காப்பி பண்ணும் தமிழ் இயக்குநர்களும் அதே மாதிரி படங்களை கொடுத்து தமிழ் சினிமா என்றாலே போர்னோ என்று ஆகியிருக்கும் நல்லவேளை அப்படி எதுவும் ஆகவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்த போன் விஷயத்து எதற்கு இவ்வளவு பில்டப் என்று கேட்கிறீர்களா. மேலே சொன்ன விஷயங்களை வைத்து அ.ஆ படம் எத்தகையது என்று தெரிந்து இருக்கும். ஆனால் அந்த படம் வந்த போது எஸ்.ஜே.சூர்யா தொலைக்காட்சியில் வந்து அந்த படம் குழந்தைகளுக்கான படம் என்றும் குழந்தைகள் அந்த படத்தை விரும்பி பார்ப்பார்கள் என்றும் சொன்னார். அதற்கான காரணங்களாக படத்தில் இடம் பெற்று இருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளை மிகவும் கவரும் என்று சொன்னார். அதை நம்பி போய் பார்த்தேன். படம் எப்படி இருந்தது என்று உங்களுக்கே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி நமக்கு தரும் தொல்லைகளில் மெகா சீரியல்களுக்கு அடுத்து முக்கிய இடம் பெறுவது இந்த மாதிரி சினிமா சம்மந்தமான ப்ரமோக்கள் தான். வில்லு படம் தமிழில் வெளிவரும் முதல் ஜேம்ஸ்பாண்டு படம் என்று டாக்டர் விஜய்யும் பிரபுதேவாவும் சேர்ந்து தொலைக்காட்சியில் ஜல்லி அடித்த கொடுமையை எங்கு போய் சொல்வது. அதைவிட கொடுமை நாக்கமூக்க பாடலுக்கு கொடுத்த பில்டப். நாக்கமூக்க என்றால் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்று ஆரம்பித்து அதை கிட்டத்தட்ட ஒரு இலக்கிய ஆராய்ச்சி மாதிரி பேசிக் கொண்டார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது விக்ரமும் தன் பங்குக்கு கந்தசாமி படம் குழந்தைகளுக்கான படம் என்று அள்ளிவிட்டு இருக்கிறார். அவர் எதை வைத்து அப்படி சொன்னார் என்று தான் இன்னும் புரியவில்லை. சரி அவர் நடித்த படம் அப்படி தான் பேசுவார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா. தாணு என்னடாவென்றால் கந்தசாமியை பற்றி தவறாக எழுதுபவர்கள் மன்நோயாளிகள் என்று சொல்லி இருக்கிறார். அய்யா ஐம்பது கோடி போட்டு படம் எடுக்கிறீர்கள் அப்படி எடுக்கும் போது ஏற்கனவே பார்த்த படத்தை திரும்பவும் காட்டுகிறீர்களே புதுசாக ஏதாவது காட்டுங்கள் என்று கேட்பது ஒரு தவறா. அந்நியன் படத்தில் விக்ரம் பிரேக் கேபிள் தயாரிப்பாளரை பார்த்து "குடுத்த காசுக்கு ஏன்டா தரமான பொருளா தயாரிக்க மாட்டேன்றீங்க" என்று கேட்பார். அது மாதிரி தானே இதுவும்&lt;br /&gt;&lt;br /&gt;அந்நியன் படத்தில் நடித்த பின் விக்ரம் ஒரு பேட்டியில் தான் இப்போதெல்லாம் சாலையில் சிக்னல் விழுந்துவிட்டால் பொறுமையாக் நின்று செல்வதாக குறிப்பிட்டு இருந்தார். அதே மாதிரி தான் ஒரு நிலம் பதிவு பண்ணும் போது பெரிய நடிகர் என்று பந்தா ஏதும் பண்ணாமல் சமர்த்தாக சாதாரண மக்களுடன் சேர்ந்து பல மணி நேரம் காத்து இருந்து பதிவு செய்ததாகவும் செய்தி வந்தது. விக்ரமுக்குள் அந்நியன் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கான அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களும் அதே பாதிப்புடன் வருவது தான் கொஞ்சம் ஓவர். &lt;br /&gt;&lt;br /&gt;கந்தசாமி படம் பார்க்க வருபவர்களுக்கு எல்லாம் சேவல் மாஸ்க் இலவசமாக கொடுக்கிறார்களாம். இப்படி படம் பார்க்க வருபவர்களுக்கெல்லாம் கணக்கில்லாமல் மாஸ்க் வாரி வழங்குபவர்கள் படத்தில் நடித்த ஸ்ரேயாவுக்கு ஒரே ஒரு மாஸ்க் கொடுத்து இருக்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7373280277515992317?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7373280277515992317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7373280277515992317' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7373280277515992317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7373280277515992317'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/blog-post.html' title='கந்தசாமி குழந்தைகளுக்கான படமா?'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5891450722326654553</id><published>2009-09-02T08:44:00.001-07:00</published><updated>2009-09-02T08:46:09.880-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மரணத்தின் பட்டியல் (Final Destination 4) &amp; Avatar</title><content type='html'>கதையின் நாயகன் தன் நண்பர்களுடன் கார் ரேஸ் கண்டு களித்து கொண்டு இருக்கிறான். கார் ரேஸ் என்றாலே அங்கே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. நாயகனும் அப்படி ஏதாவது நடக்குமா என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கிறான். அப்போது நாயகனுக்கும் மட்டும் அவர் உள்ளுணர்வில் அடுத்த சில நிமிடங்கள் அந்த கார் பந்தையம் நடைபெறும் அரங்கில் நடக்க போகும் நிகழ்ச்சிகள் கண் முன்னே விரிகின்றன. அரங்கத்தில் தன்னை சுற்றி இருப்பவர்கள் செய்யப் போகும் சிறு சிறு செயல்கள் அவர்கள் பேசுவது என்று அனைத்தும் நாயகனுக்கு மட்டும் முன்கூட்டியே தெரிகின்றன. அடுத்து பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒரு கார் விபத்துக்குள்ளாவது அதன் சங்கிலி தொடர் விளைவாக ஏற்படும் பெரும் அசம்பாவிதமும் அதில் பலர் கோரமாக கொல்லப்படுவது இறுதியில் தானும் மிக கோரமாக கொல்லப்படுவதும் நாயகனுக்கு கனவு போல வந்து போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளுணர்வில் கண்ட காட்சிகளில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் நாயகன் தான் உள்ளுணர்வில் கண்ட காட்சிகள் ஒவ்வொன்றாக நிஜத்தில் நடப்பதை கவனிக்கிறான். இந்த சிறு சிறு நிகவுகள் போலவே தான் உள்ளுணர்வு மூலம் கண்ட கோர விபத்தும் நிஜத்தில் நடந்து விடுமோ என்று அஞ்சுகிறான். அதை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறான். நாயகனால் அரங்கத்தில் சிறு குழப்பம் ஏற்படுகிறது. அந்த சிறு குழப்பத்தின் விளைவாக நாயகனும் அவன் நண்பர்களும் மற்றும் சில பார்வையாளர்களும் அரங்கத்தை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் அரங்கத்தின் வெளியே இருக்கும் போது நாயகன் உள்ளுணர்வில் கண்ட கோர விபத்து நிஜமாகிறது. அதில் பலர் அகால மரணமடைகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனும் நண்பர்களும் நடந்த விபத்தை மறந்து விட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு நினைக்கும் போது அவர்களை ஏதோ ஒன்று துரத்துகிறது. அது தான் மரணம். கார் ரேஸ் மைதானத்தை விட்டு வெளியே வந்து உயிர் பிழைத்தவர்கள் அப்படி மைதானத்தை விட்டு வெளிவராமல் இருந்திருந்தால் அவர்கள் மைதானத்தில் அமர்ந்து இருந்த வரிசைப்படி உயிர் நீத்து இருப்பார்கள். அவர்களோ மைதானத்தை விட்டு வெளியே வந்து இப்போது உயிரோடு இருப்பதால் அவர்களை மைதானத்தில் மரித்து இருக்க வேண்டிய அதே வரிசையில் ஒவ்வொருவராக மரணம் வந்து தழுவுகிறது. ஓவ்வொருவர் கொல்லப்படுவதற்கு முன்னரும் அந்த மரணம் பற்றி நாயகனின் உள்ளுணர்வுக்கு தெரிகிறது. இப்படி பட்டியல் போட்டு கொல்லும் மரணத்தின் பிடியில் இருந்து தன்னால் தன்னையும் தன் நண்பர்களையும் காப்பறுவதற்கு முயற்சி செய்கிறான் நாயகன். அவன் முயற்சிகள் வெற்றி பெறுகின்றனவா என்பது தான் படத்தின் மீதிக் கதை&lt;br /&gt;&lt;br /&gt;Fall வந்துவிட்டாலே களைகட்ட hallooween சீசனும் துவங்கிவிடும். சினிமா மட்டும் அல்லாமல் டிவியில் இனி முழுக்க கோரப் படங்கள் தான் ஆக்கிரமிக்கும். இந்த சீசன் ஆரம்பத்திலேயே வந்த அதிரடி படம் தான் Final Destination 4. இதே வரிசயில் இதற்கு முன் மூன்று படங்கள் வெளிவந்து இருந்தாலும் இந்த படம் 3டி யில் வந்து இருக்கிறது. ஒவ்வொருவர் மரணிக்கும் போது அந்த மரணத்தை மிக மிக கோரமாக் காட்டுவது தான் இந்த பட வரிசையின் சிறப்பு. அதிலும் நாம் அன்றாடம் செய்யும் விஷயங்களே எமனாக மாறி கதாபாத்திரங்களை காவு எடுப்பதை விலாவரியாக காட்டும் போது நமக்கு குலை நடுங்குவதை தவிர்க்க முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் பார்க்க போன இடத்தில் மேலும் இரண்டு நிகழ்ச்சிகள் நடந்தன. முதலாவது கில்மா மேட்ட்ர். படத்தை பார்த்தது எங்களுடன் சேர்ந்து மொத்தம் நாலு பேர் தான். நாங்கள் உள்ளே நுழையும் போதே ஏற்கனவே உள்ளே இருவர் இருந்தனர். அதில் ஒருவர் ஆண் மற்றொருவர் பெண். இருவரும் வேறு வேறு மூலகளில் அமர்ந்து இருந்தனர். படம் ஆரம்பித்தவுடன் அந்த ஆண் இடம் மாறி அந்த பெண் அருகே சென்று அமர்ந்து கொண்டார். சிறுது நேரம் கழித்து பார்த்தால் இருவருமே எஸ்கேப்பு&lt;br /&gt;&lt;br /&gt;படம் போடுவதற்கு முன் அடுத்து வரும் படங்களின் டிரெய்லர்கள் காட்டினார்கள். டிசம்பர் மாதம் வெளிவரவிருக்கும் அவதார் படம் டிரெய்லரும் காட்டினார்கள். டைட்டானிக் படத்துக்கு பிறக்கு நீண்ட இடைவெளிக்கு பின் வெளிவரும் ஜேம்ஸ் காமரூன் படத்தின் டிரெய்லர் காட்டினார்கள். டிரெய்லரே டரியலாக இருந்தது. படத்துக்க்கு முன்பதிவு வேறு ஆரம்பித்துவிட்டதாம். படம் வரட்டும் பார்க்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5891450722326654553?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5891450722326654553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5891450722326654553' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5891450722326654553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5891450722326654553'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/final-destination-4-avatar.html' title='மரணத்தின் பட்டியல் (Final Destination 4) &amp; Avatar'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5254777281607815670</id><published>2009-08-28T08:43:00.001-07:00</published><updated>2009-08-28T08:47:31.652-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>முடியல சாமி !!</title><content type='html'>நம்ம தமிழ் சினிமாவில் பல பேர் அடுத்த சூப்பர் ஸ்டாரா ஆவதற்கு பேயா அலைவது தெரிந்த விஷயம் தான். இளைய தளபதி, தல, லிட்டில் சுப்பர் ஸ்டார் என்று ஒரு கூட்டமே சூப்பர் ஸ்டார் இடத்தை குறிவைத்து அலைந்து கொண்டு இருக்கிறது. அந்த இடத்தை அடைவதற்கு சிலர் அப்படியே சூப்பர் ஸ்டாரை காப்பி அடித்து காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நம்ம தல அஜித்தோ சூப்பர் ஸ்டாரின் பில்லா ரீமேக்கில் நடித்ததோடு அல்லாமல் சூப்பர் ஸ்டாரிடம் மிகவும் நெருக்கம் பேணி வருகிறார். பரமசிவன் படம் முதல் பல தலயின் பட விழாக்களில் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். இப்படி சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகனும் என்று பல பேர் கனவு காண்பது போல் இயக்குநர் ஷங்கர் மாதிரி ஆக வேண்டும் என்று இயக்குநர் சுசி கணேசன் கனவு காண்கிறார் போல் தெரிகிறது. உங்களில் யார் அடுத்த பிரபுதேவா மாதிரி உங்களில் யார் அடுத்த ஷங்கர் என்று போட்டி வைத்தால் அதில் முதலில் கலந்து கொள்வது நம்ம சுசி கணேசன் ஆக தான் இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஷங்கர் மாதிரி ஆக வேண்டும் என்பதில் தவறில்லை ஷங்கரே மணிரத்னம் தான் தன் முன்னோடி என்று சொல்லி இருக்கிறார். சுசி கணேசன் ஷங்கர் படங்களின் ஸ்கிரிப்டை எடுத்து காட்சிகளையும் கேரக்டர்களையும் மட்டும் மாற்றி அப்படியே வெளியிட்டு இருக்கிறார். அந்நியன் படமே ஷங்கரின் முந்தைய படங்களான இந்தியன், முதல்வன் சாயலில் தான் இருந்தது அப்படி இருந்தும் படத்துக்கு உதவிய சில விஷயங்களில் மாறி மாறி நடிக்கும் அந்நியன் விக்ரமின் நடிப்பும் ஒன்று. அது கூட ஆங்கில படமான Me, myself and Irene படத்தில் ஜிம் கேரி மாறி மாறி நடிப்பது போல் தான் இருந்தது. இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு அது புதுசாக இருந்ததால் அமோக வரவேற்பை பெற்றது. அந்நியன் படத்துக்கு தனது நடிப்பால் பலம் சேர்த்தது போல் இந்த படத்தையும் தேற்றி விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ விக்ரம் இந்த படத்தின் ஸ்கிரிப்டை பற்றி கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் படம் மாதிரி ஒரு பெரிய பட்ஜெட், ஷங்கர் பட ராபின்ஹுட் ஹீரோ, ஷங்கர் படத்தில் வருவது போல் படம் முழுக்க ஹீரோவை பிடிக்க பாடுபடும் போலீஸ், அந்நியன் கருடபுராணம் மாதிரி இங்கே ஒரு கந்தசாமி, ஷங்கர் பட அதே ஹீரோயின், ஷங்கர் பட கருவான அதே கருப்பு பணம், ஷங்கர் படம் மாதிரி ஒரு கிளைமேக்ஸ் என்று ஷங்கரின் பாதிப்பு அதிகம் தெரிந்தாலும் மற்ற படங்களின் சாயலும் தெரிகிறது. ஷங்கரின் சமூக பிரச்சினைகளை அலசும் படங்களில் வில்லன் என்று யாரும் இருக்கமாட்டார்கள். இந்த படத்தில் இரு வில்லன்கள் இருப்பது குருவி, வில்லு பட எஃபெக்டை தருகிறது. மெக்சிக்கோவுக்கு படம் நகர்ந்தவுடன் நம்ம விக்ரம் கோட், சூட், கருப்பு கண்ணாடி, அடிக்கடி நடப்பது என அப்படியே அஜித் பில்லா மாதிரி ஆகிவிடுகிறார். ரமணா படத்தில் வருவது போல் ஹீரோவுக்கு ஒரு லாஜிஸ்டிக்ஸ் டீம் வேறு இருக்கிறது. ரமணாவில் அவர்கள் எல்ல்லொரும் ஒரே கல்லூரியில் இருந்து வருவார்கள் இதில் ஒரே பள்ளியில் இருந்து வருகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஒரு பக்கம் ஷங்கர் மாதிரி முயற்சி செய்து கொண்டு இருக்க விக்ரமோ அவ்வை சண்முகி பெண் கமல், இந்தியன் தாத்தா வயதான கமல் என்று கமல் மாதிரி முயன்று இருக்கிறார். இந்தியன் படத்தில் மேரி மாதா குழந்தையை எந்த பக்கத்தில் வைத்து இருப்பார் என்று சொல்லி போலீசு தன் திறமையை வெளிக்காட்டுவார். இதில் விக்ரமும் பக்க வாதம் வந்தால் எந்த பக்கம் வாய் இழுக்கும் என்று சொல்லி தன் திறமையை வெளிக்காட்டுகிறார். சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா என்று அந்நியனில் ஹீரோ ஒரு பிட்டு ஒட்டுவார் இங்கேயும் அதே மாதிரி ஹீரோ ஒரு பிட்டை ஓட்டுகிறார். காதலன் படத்தில் வரும் rap பாடல் மாதிரி ஒரு பாடலும் வருகிறது. காமெடியை பற்றி கேட்கவே வேண்டாம். ஹீரோயின் படம் முழுக்க ஏதோ பேய் அறைந்த மாதிரியே வருகிறார் அவருக்கு சந்திரமுகி எஃபெக்டா என்று தெரியிவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி படத்தில் வரும் எல்லா விஷயங்களுமே ஏதோ ஒரு படத்தை நினைவுபடுத்துகிறது. விக்ரமின் சேவல் கெட்டப் மட்டுமே பார்க்க கொஞ்சம் வித்தியாசமாகவும் படத்தில் இருக்கும் ஒரே புது அம்சமாகவும் இருக்கிறது. இது ஒன்றுக்காக வேண்டுமானால் படத்தை பார்க்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5254777281607815670?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5254777281607815670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5254777281607815670' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5254777281607815670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5254777281607815670'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/08/blog-post_28.html' title='முடியல சாமி !!'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-522083662007193012</id><published>2009-08-25T13:34:00.000-07:00</published><updated>2009-08-25T13:35:52.002-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>அச்சமுண்டு அச்சமுண்டு - எப்படி மூன்று மணி நேரம் இழுக்கலாம்</title><content type='html'>சமீபத்தில் வெளியான பொக்கிஷம் படம் மிகவும் நீளமாக இருக்கிறது என்று சில காட்சிகள் நீக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. ஒரு முறை வெளிநாட்டு நண்பரிடம் இந்திய படம் எல்லாம் பார்ப்பீர்களா என்று கேட்ட போது அவர் நான் இந்திய படங்களை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் ஆனால் அதன் நீளம் தான் என்னை தடுக்கிறது. மூன்று மணி நேரம் எல்லாம் என்னால் பொறுமையாக பார்த்து கொண்டு இருக்க முடியாது என்று வெளிப்படையாக சொன்னார். தமிழ் படங்களின் தேவை இல்லாத நீளத்தை குறைப்பது எப்படி என்று அச்சமுண்டு அச்சமுண்டு திரப்படத்தை பார்த்து ஓரளவுக்கு தெரிந்து கொள்ளலாம். இந்த படத்தின் கதை அல்லது கரு என்னவென்பது ஏற்கனவே நம் அனைவருக்கும் தெரியும் ஆதலால் இதை ஒரு விமர்சனமாக இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை. இதே படத்தை நமது கோலிவுட் டைரக்டர்கள் எப்படி மூன்று மணி நேரமாக இழுப்பார்கள் என்ற கோணத்தில் பார்க்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு மாஸ் ஹீரோ படமாக இருந்தால் கண்டிப்பாக ஹீரோவுக்கு பில்டப் கொடுப்பதற்கே முதல் சில நிமிடங்கள் செலவாகிவிடும். அப்புறம் என்ன கண்டிப்பாக ஒரு ஓபனிங் பாடல் தான். இந்த படத்தில் கதாநாயகி கிராமத்து பின்னணியில் இருந்து வருபவராக வசனங்களில் வருகிறது. ஒரு டிபிகல் தமிழ் படமாக இதை எடுக்க வேண்டும் என்றால் நம்ம பட்டணத்து ஹீரோ மிகவும் கஷ்டப்பட்டு கிராமத்துக்கு போய் பெண் பார்த்துவிட்டு வருவதையும் காண்பிக்க வேண்டும். கிராமத்தில் நம்ம ஹீரோ பண்ணும் ஹீரோயிசத்தையும் கொஞ்சம் காண்பிக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கதையை நகர்த்துவதற்கு ஹீரோ குடும்பம் அல்லது ஹீரோயின் குடும்பம் என்று எதையாவது காண்பிக்க வேண்டும். வில்லன் இந்த இரு குடும்பத்துக்கு உள்ளேயும் வரலாம் அல்லது வெளியிலிருந்தும் வரலாம். எப்படி வந்தாலும் வில்லனுக்கும் கதைக்கும் என்ன சம்மந்தம் என்று சொல்வதற்கு ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் ஆவது இருக்க வேண்டும். வில்லன் எந்த அளவுக்கு கொடூரமானவன் என்று காட்டுவதற்கு ரூம் போட்டு யோசித்து ஏதாவது வில்லத்தனங்களை காட்ட வேண்டும். வில்லனுக்கு என்று சில மேனரிசங்களை உருவாக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் படத்தின் முக்கியமான அம்சம் காமெடியாச்சே. காமெடி டிராக் ஒன்று கண்டிப்பாக வேண்டும். அது கதைக்கு ஒட்டவில்லை என்றாலும் பரவாயில்லை ஹீரோவும் காமெடியனும் தோன்றும் படி ஏதாவது காட்சி வைத்து ஒப்பேறிவிடலாம். அப்புறம் சில குத்துப் பாட்டுகள், சண்டைக் காட்சிகள் என்று எல்லாம் சேர்த்து மசாலாவாக மூன்று மணி நேரம் ஒப்பேற்றிவிடலாம். இப்படி எல்லாம் இல்லாத படத்தை நீங்கள் விரும்புபவராக நீங்கள் இருப்பீர்களானால் நிச்சயமாக அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை தைரியமாக பார்க்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-522083662007193012?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/522083662007193012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=522083662007193012' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/522083662007193012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/522083662007193012'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/08/blog-post_25.html' title='அச்சமுண்டு அச்சமுண்டு - எப்படி மூன்று மணி நேரம் இழுக்கலாம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4024349057746496386</id><published>2009-08-20T10:55:00.001-07:00</published><updated>2009-08-20T10:55:45.347-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>ஜின்னா - கருத்து சுதந்திரமாவது கத்திரிக்காயாவது</title><content type='html'>ஜின்னா என்றாலே ஏதாவது பிரிய வேண்டும் போல் இருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கும் முன் இந்த மனிதரால் தான் இந்தியா பிரிந்தது இப்போது அவர் ஆவி (ghost of jinnah) வந்து பா.ஜ.க. முன்னாள் தலைவரான ஜஸ்வந்த் சிங்கை பா.ஜ.க.வில் இருந்து பிரித்துவிட்டது. முப்பது வருடங்கள் கட்சியில் இருந்தவரை விளக்கும் கூட கேட்காமல் பிரிப்பது என்றால் அது ஜின்னா என்ற பெயரால் விளைந்த சம்பவமே. ஜஸ்வந்த் சிங் மாதிரியே முன்னாள் ஒருமுறை பா.ஜ.க. தலைவர் அத்வானியும் ஜின்னாவை புகழ்ந்து பேசினார் அப்போது அவருக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல முனைகளில் இருந்து அடித்த ஆப்பை அவர் இன்னும் மறக்க முடியாமல் தவிக்கிறார். இப்போது ஜஸ்வந்த் ஆழம் தெரியாமல் காலை விட்டு முழித்து கொண்டு இருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சினையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கருத்து சுதந்திரம் பற்றிய விஷயத்தை தான். முற்போக்குவாதிகளின் முக்கியமான ஆயுதங்களில் ஒன்று தான் இந்த கருத்து சுதந்திரம். கவுண்டமணி சொல்வது போல் இந்த முற்போக்குவாதிகளின் தொல்லை பல சமயங்களில் தாங்க முடியாது. இங்கே உண்மையான முற்போக்குவாதிகளை குறை சொல்லவில்லை. ஆனால் முற்போக்குவாதிகளாக காட்டிக் கொண்டு இருக்கும் வேடதாரிகளை (hypocrites) தான் குறிப்பிடுகிறேன். எவன் ஒருவன் ஓவராக கருத்து சுதந்திரம் பற்றி கூவுகிறானோ அவனை கூர்ந்து கவனித்தால் அவன் தாம் மிகப் பெரிய hypocrite ஆக இருப்பான். ஒரு முக்கியமான உதாரணம் சொல்ல வேண்டுமானால் முகமது நபி கார்ட்டூனை ஒரு டென்மார்க் பத்திரிக்கை வெளியிட்ட போது அதற்கு எதிர்ப்பு எழுந்தது. அப்போது கருத்து சுதந்திரத்தை காப்பாற்றுகிறோம் பேர்வழி என்று சொல்லிவிட்டு பல நாட்டு பத்திரிக்கைகள் அதே கார்ட்டூனை மறுபிரசுரம் செய்தன. நம்மூர் தினமலரும் அல்லவா அந்த கார்ட்டூன்களை வெளியிட்டது. இன்று அதே தினமலரை போய் பாருங்கள் ஜஸ்வந்து சிங் நீக்கம் அதிருப்தியாளர்களுக்கு பாடம் என்று வக்காலத்து வாங்குகிறது. ஏன் ஜஸ்வந்து சிங்க்குக்கு மட்டும் கருத்து சுதந்திரம் இல்லையா&lt;br /&gt;&lt;br /&gt;ஜஸ்வந்த் சிங் புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்பது பற்றி எதுவும் தினமலரில் காணப்படவில்லை. மற்ற பத்திரிக்கைகள எல்லாம் ஜஸ்வந்த் சிங் புத்தகத்தில் உள்ள பிரச்சினைக்குரிய பகுதிகளை வெளியிட தினமலர் மட்டும் பூசி மெழுகுகிறது. பாவம் தினமலரின் கருத்து சுதந்திரம் கூட அவ்வளவு தான் போலும். இதை விட குஜராத்து மாநில அரசு செய்ததை நினைத்தால் இன்னும் வியப்பாக இருக்கிறது. அந்த புத்தகத்தையே தடை செய்துவிட்டது. இத்தனை காலம் இதே பாணியில் புத்தகங்களை தடை விதித்து வந்த முல்லாக்களை பரிகாசம் செய்து வந்தவர்கள் தானே குஜராத்தில் இருப்பவர்கள். இப்போது அந்த முல்லாக்களுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் போனால் ஜஸ்வந்த் சிங்குக்கு எதிராக குஜராத் பா.ஜ.க. சார்பில் முல்லாக்கள் பாணியில் ஒரு பத்வா வந்தாலும் வரலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஜஸ்வந்த் சிங் ஒன்றும் ஜின்னாவுக்கும் இந்திய பிரிவினைக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்லவில்லை, அவருடன் மற்றவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்றே சொல்கிறார். அவர் சொல்வது அவரது கருத்து அது ஒன்றும் வேதவாக்கு அல்லவே, அதை எதிர்கொள்ள கூட முடியாத நிலையில் பா.ஜ.க. இருப்பதை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4024349057746496386?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4024349057746496386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4024349057746496386' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4024349057746496386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4024349057746496386'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/08/blog-post_20.html' title='ஜின்னா - கருத்து சுதந்திரமாவது கத்திரிக்காயாவது'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7436708968772789075</id><published>2009-08-14T08:01:00.001-07:00</published><updated>2009-08-14T08:04:31.809-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>சீனா துண்டு துண்டாக உடையுமா?</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இது ஒரு சுதந்திர தின சிறப்பு இடுகை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://farm3.static.flickr.com/2405/2174815848_67ccb57321.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 500px; height: 400px;" src="http://farm3.static.flickr.com/2405/2174815848_67ccb57321.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில தினங்கள் முன் செய்திகளில் சீனாவில் ஒருவர் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க வேண்டும் என்றும் அப்படி செய்தால் சீனா எதிர்காலத்தில் இந்தியாவின் போட்டியை சமாளிப்பது எளிதாகும் என்றும் சொல்லி இருக்கிறார். இது போன்ற செய்திகளை வாசிக்கும் போது கம்மியூனிஸ்டுகள் என்றாலே கனவு காண்பவர்களா என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அமெரிக்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார பிரச்சினைகளில் சிக்கி பல முனைகளில் வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறது. ஆனால் நிலைமை சீக்கிரமே சீராகிவிடும் என்று அவ்வப்போது சில நம்பிக்கை தரும் செய்திகளும் வருகின்றன. ஆனால் இதையே மையமாக வைத்து அமெரிக்கா விரைவில் சிதறிவிடும் என்று சில மாதங்களுக்கு முன் ஒரு ரஷ்ய அறிஞர் ஆராய்ச்சி செய்து வெளியிட்டு இருந்தார். அவர் தனி நபர் என்ற முறையில் அந்த ஆராய்ச்சியை செய்து இருந்தாலும் அது நடந்து விடாதா என்ற நப்பாசையில் ரஷ்ய ஊடகங்கள் அந்த ஆராச்ய்ச்சி கட்டுரையை பிரபலபடுத்தி கிட்டத்தட்ட அது ஒரு தீர்க்க தரிசனம் என்ற ரேஞ்சுக்கு கொண்டு சென்றுவிட்டன. இப்போது அதே பாணியில் சீனாவிலும் ஒரு அறிஞர் தோன்றி இருக்கிறார். அவரையும் சீன ஊடகங்கள் பிரபலமாக்க முயற்சி செய்யலாம். ஆனால் ஏற்கனவே இந்திய தரப்பில் இந்த செய்திக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்போது சீன் போடும் நம் சீன தோழர்கள் பாணியிலேயே நாமும் சீனா துண்டு துண்டாக சிதறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு எப்படி காஷ்மீர் ஒரு தலைவலியாக இருந்து வருகிறதோ அதே மாதிரி சீனாவுக்கும் ஒரு பிரதேசம் இருக்கிறது. அது தான் சிங்ஜியாங் மாகாணம். சீனர்கள் அதிகம் காணப்படும் சீனாவின் மற்ற பகுதிகளை போல் அல்லாமல் இந்த சிங்ஜியாங் மாகாணம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கே தன் அதிகாரத்தை நிலைநாட்ட சீனா சீனர்களை கொஞ்சம் கொஞ்சமாக குடியேற்றி வருவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த பகுதி எப்போதும் பதற்றமாகவே இருக்கும். சமீபத்தில் கூட அங்கு பெரும் கலவரம் மூண்டு பின்னர் சீனா தன் வழக்கமான அடக்குமுறையை கடைபிடித்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த பகுதியில் வருடத்துக்கு எப்படியும் ஒரு நூறு பேரையாவது சீனா கொன்றுவிடுகிறதாம். சீனா அஸ்ஸாம், நாகாலாந்து பகுதியில் உள்ள போராளிகளுக்கு உதவுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது அதே போல் நாமும் இந்த சிங்ஜியாங் மாகாண போராளிகளுக்கு உதவி செய்யலாம்&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் மற்றொரு பெரும் தலைவலி தாய்வான். சீனா தாய்வானை தன் நாட்டின் ஒரு பகுதி என்று சொல்லி வர தாய்வானோ தனிச்சையாக இயங்குவதை விரும்புகிறது. தாய்வானுக்கு பெரிய அண்ணன் அமெரிக்காவின் ஆசியும் இருக்கிறது. இந்த அமெரிக்க ஆசியுடன் நம் இந்தியாவின் ஆசியும் இணைந்தால் தாய்வான் சீனாவுக்கு இரட்டை தலைவலியாக விடியும். சீனாவின் மற்றொரு பிரச்சினை திபெத். இங்கேயும் நம் மூக்கை நுழைக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் அழிந்து நாம் வாழ வேண்டும் என்று விரும்புவது நம் பண்பாடு அல்ல ஆனால் எதிரி நம் கண் முன்னாலேயே நமக்கு குழி வெட்டிக் கொண்டு இருக்கும் போது நாம் கண் மூடி தூங்கிக் கொண்டு இருப்பதும் விவேகமல்ல. அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7436708968772789075?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7436708968772789075/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7436708968772789075' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7436708968772789075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7436708968772789075'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/08/blog-post_14.html' title='சீனா துண்டு துண்டாக உடையுமா?'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7944263065244973073</id><published>2009-08-05T12:46:00.000-07:00</published><updated>2009-08-05T12:49:51.557-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>சம்மரில் சந்தித்த ஸ்பானிய-தமிழ் சிறுவர்</title><content type='html'>அமெரிக்காவில் இப்போது கோடைக் காலம் நடந்து கொண்டு இருக்கிறது. வெயில் நன்றாக கொளுத்திக் கொண்டு இருக்கிறது. நான் முதன் முதலாக அமெரிக்கா வந்து இறங்கியதும் இதே மாதிரி கோடை காலத்தில் தான். இந்தியாவில் கோடையின் கொடும் வெயிலை அனுபவித்துவிட்டு இங்கு வந்து இறங்கியபோது இந்த வெயில் எல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் இரவானதும் கோடையிலும் இங்கே சில் என்று ஆகிவிடுகிறது. அதனால் புதிதாக வந்து இருந்ததால் ஸ்வெட்டர் போட்டு கொண்டு நடமாடியதை பலர் ஒரு மாதிரியாக பார்த்தார்கள். கோடை வந்துவிட்டால் இங்கு ஏதோ திருவிழா மாதிரி அல்லவா இருக்கிறது. சாலைகளில் மக்கள் அதிகமாக தென்படுகிறார்கள், வாகனங்களும் பனிக் காலத்தைவிட அதிகமாகவே காணப்படுகிறது, மோட்டார் பைக் ஓட்டுபவர்கள் கோடையின் ஒவ்வொரு வினாடியையும் அனுபவிக்க விழைகிறார்கள். பனிக் காலத்தில் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் மக்கள் கோடையில் தினம் தினம் எங்காவது வெளியே சென்றுவிடுகிறார்கள். பயன்பாடு அதிகரித்ததால் குறைந்து போயிருந்த பெட்ரோல் விலையும் ஏறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கோடை என்றால் குழந்தைகளுக்கும் கொண்டாட்டம் தான். பல பள்ளிகளில் சம்மர் கேம்ப் நடக்கிறது. அலுவலகங்களில் வெள்ளிகிழமை வந்துவிட்டால் பலரும் மதிய உணவு இடைவேளையோட அப்பீட் ஆகிவிடுகிறார்கள். பீச்சுக்கு போனால் மக்கள் நீச்சல் உடைகளில் உலா வருகிறார்கள். பார்க்கிற்கு சென்றால் அங்கும் மிடுக்கான உடைகளில் எடுப்பாக உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி தான் எங்கள் வீட்டுக்கு அருகேயும் ஒரு பார்க் இருக்கிறது. மாலை வேளைகளில் குழந்தைகளை அழைத்து கொண்டு அவ்வப்போது அங்கு செல்வது வழக்கம். பார்க்கிற்கு போனால் அங்கே குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சல் முதலான கேளிக்கை விளையாட்டுகள் இருக்கும் அங்கே சில சமயங்களில் வளர்ந்த பதின்ம வயதினரும் வந்து ஆக்கிரமித்து கொள்வார்கள். பதின்ம வயதினராக இருப்பதால் இவர்கள் பெருமாலும் தங்களது ஆண் அல்லது பெண் நண்பர்களுடன் வருவதால் இவர்கள் பண்ணும் சேட்டைகளும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இவர்களை பற்றி தங்கமணியிடம் திட்டி கொண்டு இருந்த போது தங்கமணி இந்த மாதிரி குழந்தைகள் விளையாடும் இடத்துக்கெல்லாம் வந்துவிட்டால் எல்லோருமே குழந்தைகளாகி விடுவார்கள் அதனால் இதை எல்லாம் குறை சொல்ல முடியாது என்று விளக்கம் கொடுத்தார். அவர்கள் குழந்தைகளாக் மாறிவிடுவதில் பிரச்சினை இல்லை ஆனால் குழந்தை பருவத்தில் போட்ட உடைகளையே இன்னும் அணிந்து கொண்டு வருவது தான் கொஞ்சம் ஓவர். அதிலும் அத்தகைய உடையை அணிந்து கொண்டு சறுக்கு மரத்தில் தலைகீழாக படுத்து கொண்டு வேறு இருப்பார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் அப்பார்மென்டில் மேல் தளத்திலேயே மற்றொரு தமிழ் குடும்பமும் இருக்கிறது. அவர்கள் வீட்டிலேயும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களும் எங்களுடன் சேர்ந்து கொள்வது வழக்கம். இவ்வாறு அவர்களுடன் சென்ற போது ஊஞ்சலில் இரு சிறுவர்கள் ஆடிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் அவர்களுடைய தந்தையுடன் வந்து இருந்தார்கள். அவர்களை பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது அவர்கள் ஹிஸ்பானியர்கள் என்பது. குழந்தைகள் எல்லோரும் விளையாடிக் கொண்டு இருந்த போது நம்ம பக்கத்து வீட்டு தமிழ் நண்பர் அந்த ஸ்பானிய சிறுவர்களிடம் தெள்ள தெளிவான மதுரை தமிழில் பேச ஆரம்பித்துவிட்டார். நான் கொஞ்சம் ஆச்சர்யம் அடைந்து அவரிடம் கேட்ட போது அந்த சிறுவர்களுடைய தந்தை தான் ஸ்பானியர் என்றும் தாயார் இலங்கையை சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. அதனால் அந்த சிறுவர்கள் வீட்டில் தமிழ் தான் பேசுகிறார்கள் என்றும் சொன்னார். நமக்கு கொஞ்சம் பெருமையாகவே இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் மற்றொரு நிகழ்வை நினைவுபடுத்தியது. இரு முறை வாஷிங்க்டன் சென்ற போது காரை ஒரு பார்க்கிங்கில் போட்டுவிட்டு நெடுந்தூரம் நடந்து அதிபர் மாளிகை அருகே வந்து அடைந்தோம். அப்போது பசிக்க ஆரம்பித்துவிட்டது நடந்த களைப்பு வேறு அதனால் சாப்பிடும் முடிவுடன் ஸ்பானியர் போல் தோற்றம் அளித்த ஒருவரிடம் போய் இங்கே அருகில் இந்தியன் ரெஸ்டாரன்ட் இருக்கிறதா என்று கேட்ட போது அவர் கூலாக ஐ டோண்ட் நோ இங்கிலிஷ் என்று அமெரிக்க அதிபர் மாளிகையின் கூப்பிடு தூரத்தில் நின்று கொண்டு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். கல்லூரி காலத்தில் அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவுடன் GRE, TOEFL புத்தகங்கள் எல்லாம் படித்தது வீண் என்று அப்போது புரிந்தது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7944263065244973073?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7944263065244973073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7944263065244973073' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7944263065244973073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7944263065244973073'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/08/blog-post.html' title='சம்மரில் சந்தித்த ஸ்பானிய-தமிழ் சிறுவர்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5691513036372251543</id><published>2009-07-24T03:56:00.000-07:00</published><updated>2009-07-24T06:11:19.036-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>திரு.ஜெயமோகன், திரு.அ.முத்துலிங்கம் அவர்களுடன் நடந்த சந்திப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/Smmxxlv-DGI/AAAAAAAAAK8/PMC_S2lZzjE/s1600-h/JeMo-AM.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/Smmxxlv-DGI/AAAAAAAAAK8/PMC_S2lZzjE/s400/JeMo-AM.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5362012296866303074" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் இலக்கியத்துக்கும் மிக அதிக தூரம். இதை திரு.ஜெயமோகன் அவர்களுடன் நடந்த சந்திப்பிலேயே சொல்லியும்விட்டேன். ஆனால் என் வாழ்வில் எதிர்பாராதவிதமாக இரு புகழ்பெற்ற எழுத்தாளர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயமாக கருதுகிறேன். நான் முதலில் சந்தித்த எழுத்தாளர் திரு.மாலன் அவர்கள். சிங்கப்பூரில் நடந்த தமிழ் ஆர்வலர்கள் மாநாட்டுக்கு வந்திருந்த பிரபலங்களில் அவரும் ஒருவர். அதோடு சிங்கப்பூரில் இருக்கும் போது திசைகள் இணைய தளத்தை தொடங்கியும் வைத்தார். இன்று திரு.ஜெயமோகன் அவர்களுக்கு நம்ம சிறில் அலெக்ஸ் தலைமையில் ஒரு டீம் இருப்பது போலவே அப்போது திரு.மாலன் அவர்களுக்கும் ஒரு டீம் சிங்கப்பூரில் இருந்தது. அவர்களில் ஒருவருடன் இருந்த நட்பால் தற்செயலாக திரு.மாலன் சிங்கப்பூர் வந்திருக்கும் விஷயம் தெரிய வந்தது. அப்போதும் ஒரு இலக்கிய ஆர்வத்தில் அல்லாமல் அந்த டீமுடன் சேர்ந்து ஒரு டெக்னிக்கல் மெம்பராகவே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் திரு.மாலன் அவர்களை பற்றி முன்னரே மிகவும் நன்றாக எனக்கு பரிச்ச்யம் ஆகி இருந்தது அவரது 'எனது ஜன்னலுக்கு வெளியே' கட்டுரைகள் மூலம். சிறு வயதில் தினமணி மட்டும் தான் வாசிக்கும் வழக்கம் இருந்தது. தினமணி புதிதாக வாசிப்பவருக்கு ஒருவிதமாக அன்னியமாக தோன்றும் ஆனால் அதன் எழுத்து நடையை வாசித்து பழகிவிட்டால் பின்னர் தினமணியை விட்டுவிடுவது அவ்வளவு சுலபமல்ல. அப்போது தினமணிக் கதிரில் மாலன் அவர்களின் கட்டுரைகள் வாராவாரம் வெளிவரும். அப்படி அவரை பற்றி ஓரளவுக்கு தெரிந்து இருந்ததால் அவருடன் சிறுது அளவளாவ முடிந்தது&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது திரு.ஜெயமோகன் அவர்களின் அமெரிக்க பயணம் குறித்து முன்னரே அறிந்து இருந்தாலும் அவரது பயண திட்டத்தில் பாஸ்டன், நியூ ஜெர்சி போன்ற இடங்கள் மட்டுமே இருக்கலாம் என்று ஏதோ ஒரு முன்முடிவு செய்து இருந்தேன். இலக்கியத்தில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் தமிழ் சம்மந்தமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வம் இருந்தது. அதுவும் அந்த நிகழ்ச்சியில் சினிமாவோ அல்லது அரசியலோ இருக்கும் என்றால் அந்த ஆர்வம் இன்னும் அதிகமாகும். இந்த காரணத்தினாலேயே பதிவர் கூட்டங்களில் கலந்து கொள்ளும் வழக்கமும் உண்டானது. ஒரு நாள் பாஸ்டன் பாலா திரு.ஜெயமோகன் அவர்களின் அடுத்த சந்திப்பு கனேக்டிகட்டில் என்று தெரிவித்த போது நம்ம ஊரிலேயே நடக்கும் சந்திப்பில் கண்டிப்பாக கலந்து கொண்டே ஆக வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால் நான் சந்தித்த இரு எழுத்தாளர்களுமே தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள். முதலில் திரு.மாலன் அவர்கள் நிகழிச்சியில் போய் இணைந்ததுமே கொஞ்சம் தயக்கத்துடனே இருந்தேன். பின்னர் அவரின் நெல்லை தமிழ் கேட்டதும் அட நம்ம பகுதிகாரர் என்று என்னுள் இருந்த தயக்கம் கலைந்தது. இப்போதும் திரு.ஜெயமோகன் அவர்களின் பேச்சிலும் குமரி தமிழ் கொஞ்சி விளையாடியது. இந்த சந்திப்பில் முதல் சில மணி நேரங்கள் மிகவும் சீரியஸாகவே சென்றது. பல விஷயங்களை அலசி ஆராய்ந்தார்கள். அயன் ராண்ட் என்ற பெயரையே அப்போது தாம் முதன் முதலாக கேட்கிறேன் அப்படி பட்ட நான் அந்த விவாதங்களில் கலந்து கொள்ள் முடியுமா. அதனால் அமைதியாக இருந்து விவாதத்தை கவனித்து கொண்டு இருந்தேன். அப்புறம் ஓவொருவராக தங்களை அறிமுகப்படுதியபோது சக வலைப்பதிவர்கள் செய்த கிண்டல்களால் கொஞ்சம் என்னுள் இருந்த இறுக்கம் கலைந்தது. நேரம் செல்ல செல்ல திரு.ஜெயமோகன் அவர்கள் சினிமா துறையில் தனது அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்டார்கள். நம்ம ஏரியாவாச்சே அதனால் நல்ல ஆர்வம் ஏற்பட்டது. அவர் ரஜினி பற்றி ஏதாவது பேசி இருந்தால் நானும் ஜோதியில் ஐக்கியமாகி இருப்பேன். இருந்தாலும் சினிமா பற்றி அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தன. திரு.ஜெயமோகன் அவர்களை சந்தித்த அனுபவம் நான் எதிர்பாக்காததும் அதற்காக திட்டமிடாததாலும் கண்னிமைக்கும் நேரத்தில் தோன்றி மறைந்த ஒரு கனவாகவே தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்திப்பில் நான் சந்தித்த மற்றொரு பிரபலம் திரு.அ.முத்துலிங்கம். கனடாவில் வசித்துவந்தாலும் ஈழத் தமிழில் இனிமையாக கதைக்கிறார். அவர் பேசுவதை கேட்கும் போது 'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாரதி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5691513036372251543?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5691513036372251543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5691513036372251543' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5691513036372251543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5691513036372251543'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/07/blog-post.html' title='திரு.ஜெயமோகன், திரு.அ.முத்துலிங்கம் அவர்களுடன் நடந்த சந்திப்பு'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/Smmxxlv-DGI/AAAAAAAAAK8/PMC_S2lZzjE/s72-c/JeMo-AM.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7295133617158015667</id><published>2009-06-09T13:34:00.000-07:00</published><updated>2009-06-09T13:44:40.914-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>Now it's Bing Translator</title><content type='html'>மைக்ரோசாஃப்ட் கூகிளுக்கு எதிராக ஃபுல் கோதாவில் இறங்கிவிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே கூகிளின் கோட்டையான தேடுதல் சந்தையில் நுழைந்து கூகிள் என்னும் சிங்கத்தின் பிடரியை பிடித்து உலுக்கி வருவது தெரிந்ததே. இந்த போட்டியால் கூகிளா, பிங்கா (Bing) என்ற உலகெங்கும் விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. நமக்கே வம்பு இரண்டு சேவைகளையுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் &lt;a href="http://www.bingandgoogle.com/" target="new"&gt;Bing &amp; Google&lt;/a&gt; என்ற தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;கூகிள் தேடுதல் தளத்திலேயே தேடுவதோடு அல்லாமல் சிறு சிறு கனக்குகள், நாணய மதிப்புகளை கணக்கிடுதல், மொழிபெயர்த்தல் போன்ற கூடுதல் சேவைகளையும் வழங்கி வருகிறது. மைக்ரோசாஃப்டும் கூகிளை விடுவதாக் இல்லை. அவர்களும் தங்கள் மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குகிறார்கள். அதன் முகவரி &lt;a href="http://www.microsofttranslator.com/Default.aspx" target="_new"&gt;Bing Translator&lt;/a&gt;. இந்த மொழிபெயர்ப்பு சேவையை வலைத்தளம் நடத்தும் பிறருக்கும் வழங்குவதாக அதில் தெரிவித்து இருக்கிறார்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7295133617158015667?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7295133617158015667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7295133617158015667' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7295133617158015667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7295133617158015667'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/06/now-its-bing-translator.html' title='Now it&apos;s Bing Translator'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-211383530428298119</id><published>2009-06-05T10:41:00.001-07:00</published><updated>2009-06-05T12:37:00.574-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>Thamizmanam Vs Tamilish : Dollar Vs Euro</title><content type='html'>தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் என்றவுடன் அவற்றை ஒப்புநோக்கும் இயல்புடன் அனுகுவது பலருக்கும் இயல்பான ஒன்று. சுருக்கமாக சொல்லப் போனால் இவை இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக பார்த்து பழகிவிட்டோம். ஆனால் அவை இரண்டும் வெவ்வேறு நாணய முறைகள் என்பதை உணர்ந்து கொண்டால் பல குழப்பங்கள் தீரும்&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தமிழிஷ் பற்றி பார்க்கலாம். தமிழிஷ் தளத்தின் சிறப்பம்சம் அதில் பதிவர்கள் மட்டுமல்லாமல் வாசகர்களும் பங்கு பெறலாம். உதாரணத்துக்கு பதிவே எழுதாத ஒருவர் தான் வாசித்ததில் தனக்கு பிடித்தமான இடுகையை தமிழிஷ் தளத்தில் இணைக்கலாம், அடுத்த நாள் அதே நபர் தனக்கு பிடித்த மற்றொரு படைப்பையும் வேறொரு தளத்தில் இருந்து தன்னுடைய தமிழிஷ் கணக்கில் இணைக்கலாம். இப்படி இவர் இணைக்கும் படைப்புகளை விரும்பும் மற்றவர்கள் அதற்கு வாக்களித்து அந்த படைப்புகளை பிரபலமாக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இங்கே பெரும்பாலும் பதிவர்களே தங்கள் படைப்புகளை இணைக்கிறார்கள். இதனால் தமிழ்மணத்தில் விழும் வாக்குகள் அந்தந்த படைப்பாளியின் ஈகோவை உரசிப் பார்க்கிறது. நெகடிவ் ஓட்டுகள் விழும்போது அந்த ஈகோ மிகவும் காயப்படுகிறது. இதை தவிர்க்கவே பலர் தங்களை ஏதாவது ஒரு குழுக்களில் ஐக்கியமாக்கிவிடுகிறார்கள். நெகடிவ் ஓட்டுகள் விழுந்தாலும் தங்கள் குழு தங்கள் உதவிக்கு வரும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. தமிழ்மணம் சமீபத்தில் செய்த சில மாற்றங்கள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவை. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்த ஒருவர் முதலில் தமிழிஷ் தளத்தில் மட்டும் இயங்கி வந்தார். நன்றாக எழுதக் கூடிய அவரை நல்லெண்ணத்தின் அடிப்படியில் மற்றொரு நண்பர் தமிழ்மணத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். நண்பர் பொத்துப்படையாக எழுதினாலும் அவரை ராகிங் செய்வது போல் ஒரு குழு அவரை காய்ச்சி எடுத்தது. இப்போது அந்த நண்பர் எழுதுவதையே நிறுத்திவிட்டார். இந்த குழு மனப்பான்மையை ஒழிக்கும் ஏதேனும் திட்டம் கொண்டு வந்தால் தமிழ்மணம் மென்மேலும் மெருகேறும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-211383530428298119?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/211383530428298119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=211383530428298119' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/211383530428298119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/211383530428298119'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/06/thamizmanam-vs-tamilish-dollar-vs-euro.html' title='Thamizmanam Vs Tamilish : Dollar Vs Euro'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-6897585475403849364</id><published>2009-06-04T11:58:00.001-07:00</published><updated>2009-06-04T12:04:36.223-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>Search Bing &amp; Google  side by side</title><content type='html'>கூகிள் ஏற்கனவே தேடுதல் சேவையில் கொடி கட்டி பறக்கிறது. இந்த துறையில் நெடுங்காலமாக கால் ஊன்ற நினைத்தது மைக்ரோசாஃப்ட். இதற்காகவே அது யாஹூவை வாங்குவதற்கு முயற்சியும் செய்தது. அந்த முயற்சி கைகூடாமல் போகவே தொடர்ந்து சோர்ந்துவிடாமல் தேடுதல் சந்தையில் முதலீடு செய்து வந்தது. அதன் பலனாக இப்போது ஓரளவுக்கு புகழ் பெற தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு சேவைகளையும் ஒரு சேர பயன்படுத்துவதற்கும் ஒரு தளம் வந்துவிட்டது. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.bingandgoogle.com/"&gt;Bing &amp;amp; Google&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-6897585475403849364?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/6897585475403849364/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=6897585475403849364' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/6897585475403849364'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/6897585475403849364'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/06/search-bing-google-side-by-side.html' title='Search Bing &amp; Google  side by side'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-3257570447138178913</id><published>2009-05-19T18:21:00.001-07:00</published><updated>2009-05-19T18:21:29.433-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடியோ'/><title type='text'>இவர்கள் பேசியது - தேர்தலுக்கு முன்னும், பின்னும் - வீடியோ</title><content type='html'>&lt;object classid='clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000' codebase='http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=8,0,0,0' width='474' height='392' id='IBNLive' align='middle'&gt;&lt;br /&gt;&lt;param name='allowScriptAccess' value='always' /&gt;&lt;br /&gt;&lt;param name='allowFullScreen' value='true' /&gt;&lt;br /&gt;&lt;param name='movie' value='http://features.ibnlive.in.com/videos/video_player_ibnlive.swf?digmi=05_2009&amp;di=before_313.jpg&amp;flv=C1520A46F5A03B820B85FADC2E7111C8385B6EFE0E8D09D692202B007C9F6465250AF9776187481B42E0EC7A9A0B83F19C6669118A745B72F748D359A7C37F761736996666390DF55C65CF521B44E1E97882' /&gt;&lt;br /&gt;&lt;param name='quality' value='high' /&gt;&lt;br /&gt;&lt;param name='bgcolor' value='#ffffff' /&gt; &lt;br /&gt;&lt;embed src='http://features.ibnlive.in.com/videos/video_player_ibnlive.swf?digmi=05_2009&amp;di=before_313.jpg&amp;flv=C1520A46F5A03B820B85FADC2E7111C8385B6EFE0E8D09D692202B007C9F6465250AF9776187481B42E0EC7A9A0B83F19C6669118A745B72F748D359A7C37F761736996666390DF55C65CF521B44E1E97882' quality='high' bgcolor='#ffffff' width='474' height='392' name='IBNLive' align='middle' allowScriptAccess='always' allowFullScreen='true' type='application/x-shockwave-flash' pluginspage='http://www.macromedia.com/go/getflashplayer'&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-3257570447138178913?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/3257570447138178913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=3257570447138178913' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3257570447138178913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3257570447138178913'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/05/blog-post_1216.html' title='இவர்கள் பேசியது - தேர்தலுக்கு முன்னும், பின்னும் - வீடியோ'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-8664371751174744607</id><published>2009-05-15T05:28:00.000-07:00</published><updated>2009-05-15T05:32:52.552-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ப்ரியாமணி ரஸ்க் சாப்பிட ரிஸ்க் எடுப்பவர்</title><content type='html'>படத்தின் இடது ஓரத்தில் இருப்பவரை கவனிக்கவும். பிரியாமணி நீச்சல் உடை போட்டு போஸ் கொடுப்பதெல்லாம் ஓகே தான் ஆனா அவங்களுக்கு நீச்சல் தான் தெரியாது போல் இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/Sg1gZRW7hnI/AAAAAAAAAKw/p1woL5rsXfw/s1600-h/priyamani2_003.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 268px;" src="http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/Sg1gZRW7hnI/AAAAAAAAAKw/p1woL5rsXfw/s400/priyamani2_003.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5336027120776480370" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-8664371751174744607?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/8664371751174744607/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=8664371751174744607' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/8664371751174744607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/8664371751174744607'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/05/blog-post.html' title='ப்ரியாமணி ரஸ்க் சாப்பிட ரிஸ்க் எடுப்பவர்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/Sg1gZRW7hnI/AAAAAAAAAKw/p1woL5rsXfw/s72-c/priyamani2_003.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4836696386902188312</id><published>2009-04-18T19:19:00.000-07:00</published><updated>2009-04-18T19:22:57.385-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடியோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>49-o பற்றி ஞானியின் வீடியோ</title><content type='html'>&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/ccK0O-Ppf1A&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ccK0O-Ppf1A&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4836696386902188312?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4836696386902188312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4836696386902188312' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4836696386902188312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4836696386902188312'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/04/49-o.html' title='49-o பற்றி ஞானியின் வீடியோ'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7855342972699389945</id><published>2009-04-04T20:19:00.000-07:00</published><updated>2009-04-08T09:28:40.460-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>டாக்டர் விஜய்க்கு சில யோசனைகள்</title><content type='html'>நம்ம டாக்டர் விஜய் சவுண்டு விட்டாலும் விட்டாரு அவர எல்லோரும் சேர்ந்து வார்றாங்க. அடுத்த படம் வேட்டைக்காரன் அப்படின்னு சொல்றாங்க. அடுத்த ரஜினி கனவில் இருந்த நம்ம டாக்டர் விஜய் அடுத்த எம்.ஜி.ஆர். ஆக பிரமோசன் ஆகிவிட்டதால் ஏதோ எம்.ஜி.ஆர். படம் ரேஞ்சுக்கு படத்துக்கு பேர் வேற வச்சாச்சு அப்படியும் படம் போனியாகாமல் இருக்க தான் இந்த சில யோசனைகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. பல பேர் பாடல்காட்சிகளுக்கு எழுந்து சென்றுவிடுவதால் ஆங்கில படம் மாதிரி பாடல் காட்சிகளே இல்லாமல் படம் எடுத்து உலகத்தரம் அல்லது ஹாலிவுட் தரம் என்று சொல்லலாம்&lt;br /&gt;2. பலர் இண்டர்வெல்லுடன் அப்பீட் ஆகிவிடுவதால் இண்டர்வெல்லுக்கும் கட் சொல்லிவிடலாம்&lt;br /&gt;3. ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று சொல்லி விற்றால் ஓவ்வொருவரும் இன்னொருவரை அழைத்து வருவார்கள் அப்படியாவது கூட்டம் சேர வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்கலாம்&lt;br /&gt;4. சிறு வயதில் பேய் படம் ஓடும் தியேட்டர்களில் படம் முழுவதும் யார் பார்க்கிறார்களோ அவர்களுக்கு பரிசு என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்ததாக நினைவு அது மாதிரி விஜய்யும் தன் படத்துக்கு ஏதாவது பரிசுத் திட்டம் அறிவிக்கலாம். முக்கியமாக தான் நடிக்கும் படத்தின் கதை என்ன என்று கேள்வி வைத்தால் பரிசுத் தொகையும் மிச்சமாகும்&lt;br /&gt;5. தன் படம் ஓடும் தியேட்டர்களில் ஏசி ஒழுங்காக வேலை செய்யுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் வெயில் காலத்தில் தூங்குவதற்காகவாவது சிலர் வரலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஐடியாக்கள் எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் பேசாமல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்துவிடலாம் அங்கே எப்படி நடித்தாலும் செல்லுபடியாகும். ஆனால் ஏற்கனவே தமிழக அரசியலில் JKR குதித்துவிட்டதால் அமெரிக்க அரசியலுக்கு டிரை பண்ணலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7855342972699389945?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7855342972699389945/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7855342972699389945' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7855342972699389945'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7855342972699389945'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/04/blog-post_04.html' title='டாக்டர் விஜய்க்கு சில யோசனைகள்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7716697205958450565</id><published>2009-04-04T19:16:00.000-07:00</published><updated>2009-04-04T19:17:28.826-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடியோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஜப்பானியர்களின் ரஜினி மோகம்</title><content type='html'>நிச்சயமாக இது அன்பால சேர்ந்த கூட்டம் தான். இந்த வீடியோவை அறிமுகப்படுத்திய நண்பர் கார்த்திக்கு நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/3ytUOoa1SBE&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/3ytUOoa1SBE&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7716697205958450565?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7716697205958450565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7716697205958450565' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7716697205958450565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7716697205958450565'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/04/blog-post.html' title='ஜப்பானியர்களின் ரஜினி மோகம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4065036790390892848</id><published>2009-03-19T18:40:00.000-07:00</published><updated>2009-03-19T18:53:19.642-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>விஜய் - சிம்பு: ஆறு ஒற்றுமைகள்</title><content type='html'>1. இருவருமே ரஜினியை காப்பி அடிப்பவர்கள். ஒருவர் இளைய தளபதி மற்றவர் லிட்டில் ஸ்டார்&lt;br /&gt;2. இருவருமே சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்&lt;br /&gt;3. இருவரின் தந்தையருமே அரசியல் தொடர்பு உள்ளவர்கள்&lt;br /&gt;4. இருவருமே சிறு வயதில் தங்கள் தந்தை இயக்கிய படங்களில் நடித்தவர்கள்&lt;br /&gt;5. இருவருமே நன்றாக நடனம் ஆடுபவர்கள்&lt;br /&gt;6. இருவருமே தாங்கள் நடிக்கும் படங்களில் பேசிப் பேசியே பார்ப்பவர்களை கொல்பவர்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4065036790390892848?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4065036790390892848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4065036790390892848' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4065036790390892848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4065036790390892848'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/03/blog-post_19.html' title='விஜய் - சிம்பு: ஆறு ஒற்றுமைகள்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7911993631645264463</id><published>2009-03-10T10:00:00.000-07:00</published><updated>2009-03-10T10:01:22.693-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கேப்டன், கூட்டணி, கலக்கம்</title><content type='html'>நோ கமெண்ட்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_2jgYHX-LSt8/SbSB8zxZ0LI/AAAAAAAAAC0/u9cAyVK-sgQ/s1600-h/vijaykanth.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 213px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_2jgYHX-LSt8/SbSB8zxZ0LI/AAAAAAAAAC0/u9cAyVK-sgQ/s320/vijaykanth.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5311012742266212530" border="0"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7911993631645264463?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7911993631645264463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7911993631645264463' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7911993631645264463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7911993631645264463'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/03/blog-post.html' title='கேப்டன், கூட்டணி, கலக்கம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2jgYHX-LSt8/SbSB8zxZ0LI/AAAAAAAAAC0/u9cAyVK-sgQ/s72-c/vijaykanth.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7434412721664527889</id><published>2009-02-28T18:06:00.000-08:00</published><updated>2009-03-07T08:30:43.872-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>ஜார்ஜ் புஷ் தற்கொலை முயற்சியா?</title><content type='html'>இது ஏதோ பரபரப்புக்காக வைத்த தலைப்பு அல்ல அமெரிக்க இதழ் ஒன்றில் வெளியான தகவல் தான் இது. அந்த இதழின் வலைப்பக்கத்துக்கு செல்ல படத்தின் மீது கிளிக்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.globemagazine.com/story/307"&gt;&lt;img src="http://coverawards.com/wp-content/uploads/2009/02/globemagazinegeorgewbushbarackobamaoctupletmomcamillamichaeljacksonmarkpasetskycoverawards.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7434412721664527889?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7434412721664527889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7434412721664527889' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7434412721664527889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7434412721664527889'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/02/blog-post_28.html' title='ஜார்ஜ் புஷ் தற்கொலை முயற்சியா?'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06292060380602465543'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry></feed>