tag:blogger.com,1999:blog-25741222341193742852008-07-17T06:59:32.792+05:30தமிழ் செய்திகள்.....kumarnoreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-2574122234119374285.post-79580545814801936212008-06-27T06:13:00.000+05:302008-06-27T06:14:36.627+05:30# சித்த மருத்துவமசித்தர் என்ற சொல்லுக்குச் சித்தமானவர்கள் என்றும் பொருள் உண்டு. அவர்கள் அறிவியலை ஞானமாக்கியவர்கள். அவர்கள் மனித வாழ்க்கைக்குச் சித்தமானதைக் கண்டு சொன்னார்கள். உணவை உண்பதில் மருத்துவம் சார்ந்த நெறிமுறைகளை ஏற்படுத்தினார்கள். சுகவாழ்வுக்காக அறிவியல்ரீதியான சில வழக்கங் களை ஏற்படுத்தினார்கள்.<br /><br />அவ்வாறு வந்தது தான் மனிதனின் தலைமுடி அளவு குறைவாய் இருத்தல் என்பது ஆரோக்கியமானது என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. மேலைநாடுகளில் பெரும்பாலான ஆண்கள் தலையில் அதிக முடியையும் பெரிய மீசையையும் வைப்பதே இல்லை.<br />ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.<br />பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டுவதில்லை.தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிக அவசியம் எனக் கண்டவர்கள் பழந்தமிழர்கள். தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தப் பாலுமே அதற்கு ஈடாகாது. இன்றைக்கு மேல்நாடுகளில் தாய்ப்பால் குந்தைகளுக்குக் கொடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றார்கள். ஆடும், மாடும், நாயும் தாய்ப் பாலைத் தம் குட்டிகளுக்குக் கொடுக்கிறபோது மனிதர் மட்டும் ஏன் மாற்றுப்பால், மாட்டுப்பால் தேடுகின்றனர்.<br />குழந்தை பிறந்ததும் இயற்கையாகவே தாயின் மார்பில் பால் சுரக்கும். அது குழந்தை குடிக்கத்தான். அதனைக் கொடுக்காமல் விடுவது நாகரீகம் என்றும் மேனி அழகுக்கு நல்லது என்றும் நினைக்கின்றனர் சிலர். ஆனால் இவ்வாறு பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்காமல் விடுவதால் மார்பகப் புற்றுநோயே வருகிறதாம்.<br />கர்ப்பம் தரிக்காமல் இருக்க இயற்கைக்கு எதிராக ஊசி போட்டுக் கொள்கிறார்கள். மாத்திரை சாப்பிடுகிறார்கள். இவற்றால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் இந்த உடலே கர்ப்பம் தரிக்காமல் இருக்க இயற்கையான முறையில் சில வழிகளைச் சொல்லியிருக்கிறது.<br />வாரத்தில் ஒருநாள் மாதத்தில் பலநாள் பட்டினி(சில நோயாளிகள் தவிர்ந்த)யாய் இருப்பது உடலுக்கு நல்லது என்பது பழந்தமிழன் மருத்துவம். பட்டினி இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முடிகிறது. நோய் எதிர்ப்பாற்றலை மிகுதிப்படுத்தலாம். நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். உடலில் உள்ள மோசமான கிருமிகளை அழிக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை.<br /><br />இவற்றை நனைவில் கொண்டுதான் தவஞானிகள் உண்ணாவிரதத்தையும் பேசா விரதத்தையும் ஒருநாள் (வாரம் ஒரு முறை) பின்பற்றினர். அதிகாலைத் துயில் எழுதல் உடல் நலத்திற்கு நல்லது. நீண்ட வயது வாழ்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் அதிகாலை எழுபவர்களாகத்தான் இருப்பார்கள். அதிகாலையில் காற்று தூய்மையாக இருக்கும். சுத்தமான பிராணவாயு தெருக்களில் அப்போது கிடைக்கும்.<br />குறிப்பாக மார்கழி, தை மாதங்களில் மிக நல்ல தரமான பிராண வாயு கிடைக்கும். இது பூமி சுழற்சியினால் ஏற்படும் செயல். எனவேதான் இதனை சுவாசிக்கும் பொருட்டு ஆண்கள் மார்கழி பஜனைக்குப் போக வைக்கப்பட்டார்கள். பெண்களை வீட்டு வாசலில் கோலம் போட வைத்தார்கள். கோலம் போடுவது பண்பாட்டு மரபு. அதே நேரத்தில் நம் கண்ணுக்குத் தெரியாத சிறிய உயினங்களுக்கு உணவுக் கொடை இடுவதே முக்கியமானது.<br />ஆனால் இன்று தானிய மாவைத் தவிர்த்து வெள்ளைக்கல்லை அரைத்து மாவாக்கிக் கோலம் போடுகிறார் கள். இதனால் எறும்புகள் ஏமாந்தது நமக்குத் தெரியுமா என்ன?<br />அதே நேரத்தில் இந்த வெள்ளைக் கல் மாவு காற்றிலே கலந்து மனிதர்களின் மூச்சிலே இணைந்து நலத்திற்கு கேட்டை விளைவிக்கும். எத்தனை பேர் இதனை உணர்ந்தோம்?. நம்மை அறியாமலே நம் தெருக்களில் வளரும் வேப்பிலை மரம் செய்யும் நன்மை தெரியுமா? அது காற்றைத் தூய்மைப் படுத்துகிறது. நிழல் தருகிறது. தொற்று நோய்களைத் தடுக்க உதவுகிறது. அம்மை நோய் கண்டவர்களுக்கு வேப்பிலைப் படுக்கை சுகமானது. வயிற்றுப் புண், குஷ்டம், சர்க்கரை நோய்களுக்கு அதன் இலைகள் அருமருந்து. <br />எனவே தான் தமிழர்களோடு வேப்பமரம் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது.வில்வ இலையில் மருத்துவம் இருக்கிறது. உடலில் உள்ள ஐம்பூதங்களைச் சமநிலைப்படுத்துவது அதன் தீர்த்தம். எனவேதான் சில கோயில்களில் வில்வ இலைத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. வாழைப்பழம் புத்திசாலிகள் சாப்பிடும் பழம். ஏழைகளின் ஆப்பிள். உண்பவருக்குப் பல நன்மைகள் இப் பழத்தால் கிடைக்கின்றன. இது பழந்தமிழன் பண்பாட்டுப் பழமாகவும் இருக்கிறது. <br />அதே போன்ற அந்தப் பழம் தரும் வாழைமரம் தமிழர்களின் பண்பாட்டு மரமாகயிருக்கிறது.அதன் இலையில் உண்பது சுவைக்கு மட்டுமல்ல நலத்திற்கும் உதவுகிறது. சுற்றுப்புறச் சூழலுக்கும் நண்பனாக இருக்கிறது. தொடர்ந்து வாழை இலையில் உண்பவர்களின் கண்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். அதன் தண்டுகள் சிறுநீர்க்கல் அடைப்புகளை நீக்கும். எனவே தான் மருந்தாகப் பயன்படுகிற மரங்களைப் பழந்தமிழர் வீட்டுத் தோட்டத்துக்குள் கொண்டு வந்தனர். தமிழன் வீட்டுத் தோட்டத்து மரங்கள், செடிகள், கொடிகள் உணவிற்கும் மருந்திற்கும் பயன்படுகின்றன. <br />ஆனால் இன்றைய மேல்நாட்டு நிாககத்தில் வெறும் அழகுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட மரம், செடி, கொடிகளே வீட்டுத் தோட்டத்தில் இருக் கின்றன. வீட்டுத் தோட்டத்தில் கறிவேப்பிலை இருந்தால் சாம்பாருக்கு உதவும். துளசிச் செடியின் இலைகள் வாயில் போட்டு மெல்ல உதவும். இஞ்சிச் செடியில் கிடைக்கும் இஞ்சி செரிமானத்திற்கு உதவும். மஞ்சள் செடியின் மஞ்சள் பூசிக் குளிக்க உதவும். மஞ்சள் சிறந்த ஒரு கிருமி நாசினி. ஆகவேதான் மஞ்சள் தூளைத் தண்ணீல் கரைத்து வீட்டு வாசலில் தெளிப்பார்கள். கிராமத்து திருவிழாக்களில் மஞ்சள் நீராட்டுதல் ஒரு அர்த்தத்தோடு வந்ததுதான். வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் முருங்கைக்கீரை ஆண்மையைப் பெருக்கும். கீழாநெல்லி மஞ்சள் காமாலை நோய்க்கு அருமருந்தாகும். அந்த மருந்து ஆங்கில மருந்தைவிட பலனை அள்ளித் தரவல்லது. அதன் சக்தி உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானிகள் கீழாநெல்லியை மாத்திரையில் கொண்டு வந்துள்ளனர். இது தமிழர் மருத்துவத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.<br />தமிழர் மருத்துவமாகிய சித்த மருத்துவம் 2,50,000 மூலிகை களைக் கொண்டு மருத்துவம் பேசுகிறது. இவற்றை நாம், ஆங்கில மருந்து என்பனவற்றை மட்டும் நம்பிக்கொண்டு புரிந்து கொள்ளாதது பெரிய தவறு. சித்த மருத்துவம் பக்க விளைவு அல்லது பின் விளைவு இல்லாத மருத்துவம். இந்த நாட்டின் இயற்கைச் சூழலுக்கேற்ப தட்ப- வெப்பநிலைகளுக்கேற்ப, கால மாற்றங்களுக்கேற்ப இயற்கையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளே அவைகள்.<br />அதே நேரத்தில் இயற்கை விதிகளுக்குட்பட்டு இயற்கை நெறியோடு உணவினை உண்ணுவதே உடலுக்கு நலம் சேர்க்கும் என்கிறது சித்த மருத்துவம். எனவே தமிழ்ச் சித்தர்களின் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்தச் சித்தமானால் அது நம்மை நிச்சயம் வாழ வைக்கும்.<br />நன்றி- தென்செய்தி <br />(பழந்தமிழர் உணவு, உடை, அறிவியல், மருத்துவம், விளையாட்டு முதலான பல்வேறு செய்திகள் குறித்து விரிவாக விளக்கும் நூல் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். அந்த நூலிலிருந்து..).<br />Article:<br />http://thirutamil.blogspot.com/2008/06/blog-post.html<div class="blogger-post-footer"><img src="http://www.ancientscripts.com/images/tamil.gif" /></div>kumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2574122234119374285.post-71480974503546754742008-06-16T22:54:00.001+05:302008-06-16T23:00:32.232+05:30# “தேர்வு” பற்றி ஜெயமோகன்.. www.jayamohan.inஇன்று அஜிதனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள். நாலைந்து நாட்களாகவே அருண்மொழி பதற்றமாக இருந்தாள். பதற்றத்தை எனக்கும் தொற்றவைக்க முயன்றாள். நான் பதற்றப்படக்கூடாது என்ற எண்ணத்துடன் இருந்தாலும் மெல்லமெல்ல மாறிக் கொண்டிருப்பதாகவும் எனக்கு ஓர் எண்ணம்.<br />காலையில் அருண்மொழி எழுந்துவந்ததும் நான் என் வழக்கமான உபதேசத்தை ஆரம்பித்தேன். ”இதோ பார் அருணா, அவன் என்ன மார்க் வாங்கிறானோ அதான் அவன்… அவன் எப்டி இருந்தாலும் அவன் நம்ம புள்ளை…அந்த மார்க் இந்த மார்க்னு அனாவசியமா நீ எதிர்பார்ப்புகளை வளத்துக்காதே..அதை அவன் மேலே சுமத்தி அவன் மனசில கவலைய வளர விடக்கூடாது… தயவு செஞ்சு நான் சொல்றதைக் கேள். மார்க்கைப்பத்தி நீ அலட்டிக்கிடாதே…அவன் வாங்குற மார்க்கை அவனே வந்து சொல்லட்டும்…நல்ல மார்க்கா இருந்தா சந்தோஷப்படுவோம்…இல்லேண்ணா விட்டிருவோம்…”<br />”இல்ல ஜெயன், ஒரு நாநூறாவது இல்லாட்டி அவன் ·பஸ்ட் குரூப் எடுக்கமுடியாது…சரி, உனக்கு எல்லாரையும் தெரியும்…..ஆனா முந்நூத்தி எழுபத்தஞ்சாவது எடுக்கணும்ல?” நான் எரிச்சலுடன் ”ஏன் ·பஸ்ட் குரூப் எடுக்கணும்னு ஏதாவது வேண்டுதலா? மத்த குரூப்லயும் பிள்ளைங்க படிக்குதுல்ல? பேசாம இரு… பாஸ் ஆனாபோரும்… அதுகூட எதிர்பார்ப்பா இல்ல…” அவள் சோகமாக ”நான் அதுக்காச் சொல்லல்லை”என்றாள். ”…நீ எதுக்காகவும் சொல்லவேண்டாம்…” ”நல்லாத்தான் எழுதியிருக்கான்னு சொன்னான்…” ”அது அவன் சொல்றது. அவன் கையெழுத்தைப்பத்தி உனக்குத்தான் தெரியுமே”<br />எல்லா சிக்கல்களும் ஆரம்பித்தது அங்கிருந்துதான். அதற்கு முக்கியமான காரணமும் நானே. முதிரா இலட்சியவாதங்கள். அப்போது தருமபுரியில் வேலைபார்த்தோம். எல்.கெ.ஜியில் பையனைச் சேர்க்க முனைந்தபோது ”…நல்ல ஸ்கூல் அது இதுண்ணு சொல்றதெல்லாம் சும்மா டுபாக்கூர்… ஏதாவது ஒரு ஸ்கூலிலே போய் எழுத்து கத்துக்கிடணும்… அவ்வளவுதான்…இது இப்ப என்ன? எந்த ஸ்கூல் வீட்டு பக்கத்துல இருக்கோ அதுல சேக்கணும்.அதான் நல்லது.சும்மா குழந்தைகளை அங்க இங்கன்னு வேன்லயும் ஆட்டோலயும் போட்டு அலைக்கழிக்கக் கூடாது…” என்றேன்<br />அதை அவளும் ஏற்றுக் கொள்ளவே அவனை அருகே செந்தில்நகரில் ஒரு பள்ளியில் சேர்த்தோம். அங்கே கூலிவேலைக்கு ஆளெடுப்பதுபோல வீட்டில் சும்மா இருக்கும் பெண்களை வைத்து வகுப்பு எடுத்தார்கள். ”இப்பவே படிப்பு அது இதுண்ணெல்லாம் ஓவர் எக்ஸைட் ஆகவேண்டாம்… பிள்ளை அவன் பாட்டுக்கு வளரட்டும். கொஞ்சம் தெளிஞ்சதுக்குப் பிறகு அவனே படிப்பான்”என்றேன். சதா குழந்தைகள் படிப்பை பற்றியே பேசும் சக ஊழியர்கள் மேல் இருந்த கசப்பும் ஏகத்தாளமும் அப்படிச் சொல்லவைத்தன. அவனுடன் இரவு பகலாக விளையாடுவதில் காட்டிய உற்சாகத்தை அவன் என்ன படிக்கிறான் என்பதில் செலுத்தவில்லை.<br />யு.கெ.ஜி முடித்து ஒன்றாம் வகுப்பு குமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் பள்ளியில். அங்கேசென்றபோது அவர்கள் சொன்னார்கள், பையன் சராசரிக்கும் மிகக் கீழே, அவனுக்கு எழுதவே வரவில்லை என. சோதித்துப் பார்த்தால் அது உண்மை. அவனுக்கு ஒன்றுமே தெரியாது. மெல்லமெல்ல அவனை பயிற்றுவிக்க முயன்றபோதுதான் மெல்லமெல்ல அதன் உள் விஷயங்கள் எனக்குத் தெரிந்தன. அஜிதனுக்கு சிறுவயதிலேயே இடது கைப்பழக்கம். அதை பொதுவாகக் கவனித்திருந்தோம் என்றாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடிதடி,நுட்பமான வேலை என்றால் மட்டும்தான் இடது கை. அவன் பள்ளியில் அவனை முரட்டுத்தனமாக வலது கைக்குப் பழக்கியிருக்கிறார்கள். அவன் அதற்கு ஒத்துவராதபோது அவனை தொடர்ந்து அடித்திருக்கிறார்கள். அந்தப் பள்ளி பாதிரிமார்கள் நடத்துவது. ”டிசிப்ளின் இருந்தா எல்லாம் வந்திரும்சார்.. ”என்பார் அந்த பாதிரியார். கூட எப்போதும் கையில் கம்புடன் ஒரு கன்யா ஸ்தீரீ.<br />சின்ன வயதில் மழலையர் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அவன் தொடர்ந்து அடம்பிடிப்பான். அது சிறுவயதில் என் வழக்கமும் கூட. நான் ஐந்தாம் வகுப்புவரை அடம் பிடித்தவன். ”நீ இப்டி ராப்பகலா அவன்கிட்டே கொஞ்சி குலவினா அவன் எப்டி ஸ்கூலுக்குப் போவான்..?”என்று அருண்மொழி சொல்வாள். அதற்காக அவனைக் கொஞ்சாமல் விடமுடியுமா? நான் அவனிடமிருந்து புதிதாகக் கற்றுக் கொண்டே இருந்த நாட்கள் அவை. ”இப்டி பையன் கிட்டே பேசிட்டே இருக்கக் கூடாது சார்… அப்றம் அவங்க செல்லம் கொஞ்ச ஆரம்பிச்சிருவாங்க”என்றார் பக்கத்து வீட்டுக்காரர். ‘கொஞ்சிட்டுப்போறான் சார்!” .அதை அப்போது அப்படித்தான் எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவன் மனதில் பள்ளிக் கல்வி பற்றி மிக ஆழமான ஒரு கசப்பை, எதிர்ப்புணர்வை அந்த மழலையர் பள்ளி உருவாக்கியிருந்தது.<br />நான் அவனை மீண்டும் இடது கைக்கு மாற்ற முயன்றேன். அது இன்னும் சிக்கலை உருவாக்குகிறது என்று தோன்றவே விட்டுவிட்டேன். வலது கைக்கு பழகிவிட்டிருந்தான். ஆனால் எழுத்துக்கள் மிக மிகச் சிக்கலாக இருக்கும். ஆச்சரியமாக சிலசமயம் அப்படியே கண்ணாடிப்பிம்பம் போலவே முழு வார்த்தையையும் எழுதிவிடுவான். அவனை பயிற்றுவிக்க முயலும் தோறும் அவனுக்கு பீதியும் விரக்தியும் ஏற்பட்டது. முதல் பத்து நிமிடங்களுக்குப் பின் அப்படியே மூளை ஸ்தம்பித்து விடும். அதன் பின்னர் ஒரு சொல் கூட கற்பிக்க முடியாது.<br />சுந்தர ராமசாமியிடம் இதைப்பற்றிச் சொன்னேன். ”நீங்க டீச் பண்ணாதீங்கோ…பிள்ளைகளை டீச் பண்றதுக்கு சுத்தமா தகுதியில்லாத ஆள் அவங்க அப்பாதான்…இப்ப உள்ள தேவை ஏபீசீடீ சொல்லிக் குடுக்கிறது. நீங்க அவன் எதிர்காலத்தைப் பத்தி கவலைப்பட்டு அவன்மேல ஏறி உக்கார டிரை பண்ணுவீங்க…டியூஷன் வைங்க…அப்டியே விட்டிருங்க… செடிகள்லாம் பாறையையே மீறி வளந்திருது..குழந்தைகளுக்கு எல்லாத்தையும் தாண்டி வளரக்கூடிய உயிர்ச்சக்தி இருக்கு…” என்றார்.<br />அப்போது ஆரம்பித்த டியூஷன். ஆனால் டியூஷன் ஆசிரியர்கள் என்னை தெருவில் பார்த்தால் புலம்புவார்கள். ”இ-ங்கிற எழுத்தை மட்டும் ஒரு ரெண்டாம் கிளாஸ் பையனுக்கு ஒரு வாரமாச் சொல்லித்தாறேன் சார்…என்ன சார் சொல்றது?” அவன் எப்படியோ ஒன்றைக் கற்றுக் கொண்டான். மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளின் சில பாவனைகள். இதை எங்கோ அவன் கவனித்திருக்க வேண்டும். ஆசிரியைகள் எது சொன்னாலும் வாயை ஒருமாதிரி காட்டுவான். மண்டையை உருட்டுவான். அவர்கள் மெல்லமெல்ல அவனை அடிப்பதை நிறுத்தவே அதை தொடர ஆரம்பித்தான். ஆனால் இது வெளியேதான். வீட்டில் அவன் அசாதாரணமான சுட்டி. அவனுடைய நகைச்சுவை உணர்வையும் சாகசத்தன்மையையும் நான் ஒவ்வொரு கணமும் வியந்துகொண்டிருந்தேன்.<br />இரண்டாம் வகுப்பு ஆசிரியை என்னிடம் சொன்னாள் ”சார் பையனுக்கு எதாவது டிரீட்மெண்ட் எடுங்க சார்… பொறவு சொல்லலேண்ணு சொல்லப்பிடாது” அடிவயிற்றைக் கவ்விய அச்சத்துடன் ”என்ன மேடம்?” என்றேன். ”அவனுக்கு பிரெய்ன் குரோத்ல என்னமோ பிரச்சினை இருக்கு சார்…”. நான் கடும் சினத்துடன் ”… சும்மா எதாவது சொல்லி அவன் வாழ்க்கைய கெடுத்திராதீங்க…அவனுக்கு ஒண்ணுமில்லை. கைமாறி எழுதவச்சதினால கொஞ்சம் எழுத்து மோசமா இருக்கும்..அதுக்காக?”என்றேன். எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. ”நாங்க சொல்லியாச்சு..இனி எங்கமேலே பழி சொல்லக்கூடாது…” ” ஏய், இனி இந்தபேச்சை எவளாவது எடுத்தீங்கண்ணா வெட்டிப் போட்டிருவேன்…” என்று தெருவில் நின்று கூவினேன். பையனை அணைத்தபடி கிட்டத்தட்ட ஓடினேன்.<br />அருண்மொழியிடம் சொன்ன போது அவள் கதறி விட்டாள். ஒன்றும் தெரியாமல் அஜிதனும் அழுதான். அவனையே பார்த்தேன். உண்மையிலேயே மூளைத்திறனில் ஏதாவது சிக்கலா? வீடு முழுக்க புத்தகங்கள். இரவுபகலாக புத்தகம் பார்க்கும் புத்தகப் பிரியன் அவன். அந்தவயதிலேயே நான் அவனுக்கு பலநூறு கதைகளைச் சொல்லியிருந்தேன், கணிசமான கதைகளை அவனே மீண்டும் சொல்வான். மொத்த ராமாயண, மகாபாரதத்தையே அவனுக்கு நான்கு நான்கு மணிநேரம் வீதம் சொல்லி கேசட்டில் பதிவு செய்து வைத்திருந்தேன் [அதில் ”தசரதனுக்கு நாலு மனைவி…மனைவீண்ணா…” என நான் இழுக்க ” …எங்க அம்மா உனக்கு மனைவிதானே..மேலே சொல்லு’ என அவன் மழலையில் சொல்லும் இடம் என் நண்பர்களால் மிக விரும்பபட்டிருந்தது] மந்தபுத்தி என்று சொல்லும்படி என்ன இருக்கிறது? ஒருவேளை வளர வளந்த்தான் தெரியுமோ? ஒன்றும் புரியவில்லை.<br />சிலநாட்கள் கழித்துதான் அவன் பள்ளியில் அப்படி நடிப்பதை கண்டுபிடித்தேன். ஆனால் அது அவனுக்கே தெரியாது. அவனுக்கு எல்லா மிஸ்ஸ¤ம் ‘கெட்டமிஸ்’, ‘தடிச்சி மிஸ்’ தான். ஆசிரியர்கள் அவனை மனமார வெறுத்தார்கள். அவனது கல்வி வாழ்க்கையில் அவனை விரும்பிய ஒரு ஆசிரியரை ஒன்பதாம் வகுப்பு வரை அவன் காண நேர்ந்ததில்லை. எல்லா பாடங்களிலும் அவனுக்கு சிவப்பு மைதான். எப்போதோ ஒருமுறை எழுபது மதிப்பெண் கணிதத்துக்கு வாங்கியது தவிர்த்தால் அவன் எப்போதுமே தேர்வுகளில் வென்றதில்லை. அவனது வகுப்புப் பாட நூல்கள் எழுதப்படாமலிருக்கும். அவற்றை ஆசிரியர்கள் அவனை அடித்து வதைத்துப் பார்த்தபின் வேறு பையன்க¨ளை வைத்து எழுத வைப்பார்கள். அந்த எழுத்துக்களை இவனது எழுத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அருண்மொழி கண்ணீர் விட்டு அழுவாள்.<br />ஆனால் மூன்றாம் வகுப்பு முதல் அவன் பெரும் வாசகன். ஒரே இரவில் சிவகாமியின் சபதத்தை வாசிக்கும்போது அவன் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது தமிழுக்கு அவனுக்கு நூற்றுக்கு பூஜ்யம் மதிப்பெண் அளித்தாள் ஆசிரியை. சோவியத் ருஷ்ய வெளியீடுகளான அறிவியல்நூல்களை இரவு பகலாக படிப்பவனுக்கு அறிவியலில் ஒரே பாடத்தில் ஒரே வினாவைக்கூட எழுதத் தெரியவில்லை. முனைவர் ஏ.கெ.பெருமாளின் அத்தனை வரலாற்று நூல்களையும் ஆறாம் வகுப்புக்குள் அவன் வாசித்திருந்தான், வரலாற்றில் ஒருபோதும் இரட்டை இலக்க மதிப்பெண் வென்றதில்லை.<br />வீட்டுக்கு வந்திருந்த நண்பர் பாவண்ணனிடம் புலம்பியபோது அவர் சொன்னார், ”தம்பிக்கு அறிவில்லைன்னா அறிவான பிள்ளைகளே உலகத்திலே இல்லைண்ணு அர்த்தம்..அவனுக்கு சொல்லிக்குடுக்க டீச்சர்களால முடியலை. கவலைப்படாதீங்க.. அவனே படிப்பான்…”. முதல் பிரச்சினை எழுத்துதான். ·பூக்கோ சொல்லியிருக்கிறார் என்று நினைவு, நம் பண்பாட்டில் முதலில் குழந்தையின் விரல்களுக்கு ஆக்ரோபேடிக்ஸ் சொல்லிக் கொடுக்கிறோம் என. அதைக் கற்காமல் உலகமே அவனுக்கு இல்லை. எழுத முடியாமையில் இருந்து உருவான கசப்பு காரணமாக பள்ளிமேலேயே கடும் துவேஷம்.<br />அதன்பின் நகர்கோயிலில் புகழ்பெற்ற கிறித்துவ பள்ளியில் அவனைச் சேர்த்தோம். அவன் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி. கூடவே என் வாழ்க்கையையும். அனேகமாக தினமும் எனக்கான கட்டளைகள். அதன்படிப் பள்ளிக்குச் சென்றால் கொலைக்குற்றவாளியை நடத்துவது போல நடத்துவார்கள். மணிக்கணக்காக யார் யாருக்காகவோ காத்திருக்க வேண்டும். முதலில் ·பாதர். அவரிடம் அனுமதி பெற்றபின் ஸிஸ்டர். அவர் சொன்னபின் வகுப்பு ஆசிரியை. அதன் பின் பாட ஆசிரியை. ஒவ்வொருவரும் எனக்கு உபதேசங்கள் அளிப்பார்கள். வசைபாடுவார்கள். மிரட்டுவார்கள். என் இது நாள் வரையிலான வாழ்க்கையில் நான் மிக அதிகமாக எங்காவது அவமானமும் சிறுமையும் பட்டிருக்கிறேன் என்றால் அந்தப் பள்ளியில்தான்.<br />அஜிதனை அவன் ஒரு உதவாக்கரை என்றும், முட்டாள் என்றும் முழுமையாக நம்பச் செய்தது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளி அளித்த அழுத்தம் காரணமாக நானும் அக்காலத்தில் அவனிடம் சற்றே கடுமையாக நடந்து கொண்டேன். நாலைந்துமுறை அவனை அடித்திருக்கிறேன். ‘முன்னேற்ற’ சீட்டை தூக்கி வீசியிருக்கிறேன். புத்தகங்களை கிழித்து எறிந்திருக்கிறேன். அதன் பின் அவனை அணைத்து கண்ணிருடன் சமாதானம் செய்வேன். இரவில் தூங்கும் அவனைப் பார்த்தபடி நிற்பேன். என் தந்தைக்கு நான் கடுமையான மன உளைச்சல்களை அளித்திருக்கிறேன். ஆன்மீகத்தேடல் அது இது என்று வீட்டை விட்டு ஓடியிருக்கிறேன். என்னைப் பிரிந்தபோது அவர் மனம் உடைந்து பலநாட்கள் ஆஸ்பத்தியிரில் கிடந்திருக்கிறார். அந்தப் பாவம்தான் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதா என மனம் ஏங்கும்<br />அவன் ஆறாம் வகுப்பு படிக்கும்போதுஒருநாள் என் கழுத்துவலிக்காக காயத்திருமேனி எண்ணையை போட்டு நீவி விட அவனிடம் சொன்னேன். நான் குப்புறக் கிடக்க அவன் என் மீது அமர்ந்திருந்தான். அருண்மொழி அவ்வழியாகசென்றாள். என்னிடம் ”ஏன், சொல்லியிருந்தா நான் போட்டுவிடமாட்டேனா?” என்றாள். ”இதில போட்டிருக்கு…உலகத்திலேயே நமக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்கதான் போட்டு விடணும்ணு…” என்றேன்.<br />சட்டென்று முதுகில் கண்ணீர் சூடாக விழுவதை அறிந்தேன். எழுந்து பார்த்தால் அழுது கொண்டிருந்தான். ”என்னடா? என்னடா?”என்றேன். பதில் சொல்லாமல் குறுகி அமர்ந்து அழுதான். ”என்னடா?” என்று கேட்டபோது ”உனக்கு நெஜமாவே என்னைய ரொம்ப பிடிக்குமா?”என்றான் ”என்னடா இது முட்டாத்தனமா கேட்டுட்டு…அப்பாக்கு உலகத்திலேயே உன்னைத்தான் ரொம்பப் பிடிக்கும்… இதுகூட தெரியாதா உனக்கு?” என்றேன். அப்படியே சீறல்போன்று ஒலி எழுப்பி அழுதான். ”நான் நெனைச்சேன், உனக்கு என்னை பிடிக்கல்லேண்ணு…நீ பெரிய ஆளு…புக்கெல்லாம் எளுதறே…காலேஜ் சாரெல்லாம் உன்னை தேடி வராங்க..நான் மக்குதானே..எனக்கு ஒண்ணுமே தெரியல்ல… அதான் நீயும் அம்மாவும் என்னை அடிக்கிறீங்க…நான் இனிமே ஸ்கூலுக்கு போகல்லை..என்னைய ஓட்டலிலே சேத்துவிடு..நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு ரூபா கொண்டுவந்து அம்மாட்ட குடுப்பேன்….”<br />அந்த நிமிடத்தில் என் நெஞ்சு பொங்கியதை இப்போதும் கை நடுங்காமல் எண்ண இயலவில்லை. எப்போதோ அந்த ஓட்டல் பேச்சு அருண்மொழி வாயில் வந்திருக்கிறது– படிக்காவிட்டால் ஓட்டல் வேலைக்குத்தான் போக வேண்டும் என்று. அப்படியே அவனை அணைத்துக் கொண்டேன்.<br />”நீ மக்குண்ணு யாருடா சொன்னா? ” ”எங்க மிஸ் எல்லாருமே சொல்றாங்க…அம்மாவும் சொன்னாங்க..நீ கூட சொன்னே..”நான் அவனை அணைத்து ”நீ மக்குன்னா உலகத்திலே யாருமே புத்திசாலி இல்லை…அப்பா உன் மேல உள்ள ஆசையிலதானே அப்டி சொன்னேன்” என்றேன்.<br />அன்று அவனிடம் வெளியே கூட்டிப்போய் பேசினேன். நான் ஒரு மாணவனாக எத்தனை கொடுமைபடுத்தப்பட்டேன் என்று சொன்னேன். என்னை பெரும்பாலான ஆசிரியர்கள் வெறுத்தார்கள். அடித்தார்கள். எனக்கு கணக்கு கொஞ்சம்கூட வரவில்லை. என் அப்பா என் விருப்பத்தை மீறி என்னை வணிகவியல் பாடத்தில் சேர்த்தார். நான் அதில் ஒரு முறைகூட தேர்ச்சி பெறவில்லை, படிப்பை முடிக்கவும் இல்லை.<br />”எங்க அப்பாட்ட பணம் இல்லை. அதனால பயப்பட்டார். நான் அப்டி இல்லை. பணம் வேணும்ணா அதை நான் சம்பாதிப்பேன். அதனால் நீஇனிமே உனக்கு பிடிச்சதை மட்டும் படி… உனக்கு வேண்டிய பணத்தை நானே சம்பாதிக்கிறேன்” என்றேன். ”…இனி மூணுமாசம். இந்த பள்ளிகூடத்திலே இருந்து உன்னை கூட்டிட்டுபோய் கவர்மெண்ட் ஸ்கூலிலே சேக்கிறேன்..அங்க உங்கிட்ட யாருமே படிக்கச் சொல்ல மாட்டாங்க… நான் இனி ஒருமுறைகூட உங்கிட்ட படிக்கச் சொல்லமாட்டேன்..மார்க் என்னன்னே கேட்க மாட்டேன்..இனிமே உன்னை யாருமே படிப்பு விஷயமா திட்ட மாட்டாங்க…போருமா?”<br />மறுவருடம் அரசினர் பள்ளியில் சேர்த்தபோது நண்பர்கள் எதிர்த்தார்கள். நீலகண்டன் அரவிந்தன் ”நீங்கள் உணர்ச்சிவசப்படுறீங்க….இதெல்லாம் அப்டி முடிவுசெய்ற விஷயம் இல்லை” என்றார். வசந்தகுமார் மட்டும்தான் ”சேர்த்து விடுங்க ஜெயன் படிப்பு வரலேண்ணா என்ன, போராடி ஜெயிக்கிற புத்தி வரட்டும்”என்றார்<br />ஏழாம் வகுப்பு முதல் அரசாங்கப் பள்ளி. அப்பள்ளி அவனுக்குக் காட்டிய உலகமே வேறு. வீட்டில் சாப்பாடு இல்லாமல் பையன்கள் மதியம் சாப்பிடாமல் பசித்திருபபர்கள் என்ற தகவல் அவன் உலகையே பல நாட்கள் பல மாதங்கள் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. தனிமையில் அதை எண்ணி அவன் கண்ணீர் விட்டிருக்கிறான். அவனது சக மாணவர்கள் சனி ஞாயிறில் கூலிவேலைக்குச் சென்று வருவார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவே அவனுக்கு கஷ்டம் இருந்தது. பெரும்பாலான நாட்களில் அவன் கொண்டுபோகும் சாப்பாட்டை பையன்கள் சாப்பிட அவன் சத்துணவாக அளிக்கப்படும் உணவை உண்பான். மீன் , இறைச்சி கொண்டுபோகும் நாட்களில் பெரிய டிபன் கேரியர் நிறைய கொண்டுசென்றாக வேண்டும். எங்கே முத்தாரம்மன் கோயிலில் கஞ்சி ஊற்றினாலும் பையன்களுடன் சேர்ந்து போய் சாப்பிட்டு விடுவான். அவனைப்போன்ற பையன்கள் வளரும் பருவத்து வயிற்றின் தீவிரத்தால் அலைவதை அவனே அவர்களுடன் வாழ்ந்து கற்றான்.நானே ஒருமுறை அவனை ஒரு அன்னதான வரிசையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.<br />புதிய பள்ளி அவனுக்கு நண்பர்களை அளித்தது. நண்பர்கள் அவனுக்கு தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தார்கள். பள்ளிக்கு மகிழ்ச்சியாகச்செல்லும் அஜிதனை முதல்முறையாகக் காண ஆரம்பித்தோம். அவன் படித்த கிறித்தவப் பள்ளியில் பள்ளிக்குள் நுழைந்த மறு கணமே வரிசை உருவாகிவிடும். எப்போதும் ஆசிரியர்களின் கண்காணிப்பு இருக்கும். விளையாட்டுகூட விளையாட்டு ஆசிரியரால் அளிக்கப்படும் ஒரு பயிற்சி மட்டுமே. ஒருவரோடு ஒருவர் பேசுவதும் சிரிப்பதும் கடுமையான குற்றம் அங்கே. அத்தனை வருடங்கள் அத்தகைய பள்ளிகளில் படித்தும்கூட அவன் நட்பு என்றால் என்ன என்று அறிந்தது இல்லை. அதைவிட மோசமான விஷயம், நட்பு என்றால் தவறு என்றே கற்பிக்கப்பட்ட குழந்தைகள் அங்கே படித்தார்கள். அந்தஸ்து , சாதி, மதம் நோக்கி கணக்கிட்டே நட்பு கொள்ள வேண்டும் என்று அங்குள்ள குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டிருந்தது.<br />இதை ஒரு கொள்கையாகச் சொல்லவில்லை. இப்போதெல்லாம் எனக்கு கொள்கை என்றாலே பயமாக இருக்கிறது. பள்ளிக்கல்வியை இப்போது நேர் பாதிக்கு மேல் நாம் பாதிரிமார்கள் அல்லது துறவியர் கையில் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் அதற்கான தகுதி கொண்டவர்கள் தானா என்றே எனக்கு ஐயமாக இருக்கிறது. பொதுவாகவே அவர்கள் உலக நிராகரிப்பை இயல்பாகக் கொண்டவர்கள். உற்சாகம், உயிர்துடிப்பு அனைத்தையும் அவர்கள் மீறல்களாகவே காண்கிறார்கள். கொஞ்சம்கூட படைப்பூக்கம் அவர்களிடம் இருப்பதில்லை. அவர்களின் உலகம் ‘கூடாதவற்றின்’ தொகை. அவர்களின் ஞானம் என்பது விலக்குகளின் பட்டியலே. அவர்களிடம் புத்துலகம் நோக்கி உற்சாகமாக மலர்ந்தெழ வேண்டிய குழந்தைகளை நாம் ஒபப்டைக்கலாமா? அவர்களின் பள்ளியில் பயின்ற மாணவர் ஒரு ‘பயிற்றுவிக்கப்பட்ட’ மூளையாக ஆகலாம். லௌகீகமாக வெல்லலாம். ஆனால் அவன் இழப்பவை அவன் அடைவனவற்றை விட பல மடங்கு அதிகம் அல்லவா?<br />இப்போது அந்தப்பள்ளியில் ஆசிரியை வகுப்பில் இல்லாதபோது மாணவர்களை கண்காணிக்க ‘குளோஸ்டு சர்க்யூட் ‘ காமிராக்களை பொருத்தியிருப்பதாகவும், அதைச் சொல்லியே பெற்றோர்களை கவர்வதாகவும் சொன்னார்கள். நம்பவே முடியவில்லை. கண்காணிப்பின் அடக்குமுறையைப் பற்றி எழுதிய ஃபூக்கோ இங்கேவந்து கற்றுக் கொள்ள வேண்டும்.<br />இந்த அரசுப்ப்பள்ளியில் எல்லமே கட்டற்றுதான். சட்டை கிழியாமல் அஜிதன் பள்ளி விட்டு வரும் நாட்கள் குறைவு. சண்டைகள் சச்சரவுகள். அதைவிட தீவிரமான நட்புகள். பரீட்சைக்கு முந்தையநாள் இரவில் கூப்பிட்டு பொங்கும் பேரார்வத்துடன் ஸிலபஸ் என்ன என்று கேட்கும் சக மாணவன் அஜய்குமார் தான் அஜிதனின் உயிர்நண்பன். ஒருவனின் பையில் இருந்து பணத்தை பிடுங்கி இன்னொருவன் சாப்பிடலாம். ”எங்க வீட்லே அம்மை தேங்காத்தொவையலையே போட்டு கழுத்தறுக்கிறாடா. பணமில்ல பாத்துக்கோ…உங்கம்மைட்ட நல்ல கோளியா குடுத்தனுப்பச் சொல்லு’ என்று எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் சொல்லியனுப்பலாம். இந்த உலகமே வேறு. அஜிதனுக்கு அழுக்கில்லா சீருடை அணிந்து போகும் ‘கான்வெண்ட்’ பையன்கள் மேல் உள்ள இளக்காரமும் நக்கலும் சாதாரணமல்ல. ”என்னடா பண்ணுவீங்க?” ”கொடுமைல்லாம் ஒண்ணும் பண்றதில்ல அப்பா…டேய், இங்கவாடான்னு கூப்பிட்டு மண்டையிலே ஒரு தட்டு தட்டி அனுப்பிருவோம். முறைச்சான்னா மட்டும்தான் அடி”<br />ஆனால் நான் அவனை கைவிட்டுவிட்டதாக நண்பர்கள் சொன்னது தவறு என நானறிவேன். அவனுடன் எப்போதும் பேசிக் கோண்டே இருந்தேன். அவன் பேசுவதைக் கேட்டுக் கோண்டே இருந்தேன். அது ஒரு கடமையாக அல்ல. உண்மையிலேயே பையன்களின் உலகம்போல உற்சாகமான ஓர் உலகம் வேறு இல்லை.நகைச்சுவை உணர்வு கொண்ட அஜிதனைப்போன்ற ஒரு பையனின் உலகம் குமிழியும் கொப்பளிப்புமான ஒன்று [ ஒரு டீம் பையன்க அவனுகளுக்குள்ள பேசறது வேற லேங்வேஜ் அப்பா.. அதில ஒருத்தனை தனியா கூப்பிட்டேன். சின்னப்பையன். ‘டேய் என்ன பாசைடா பேசறீங்க?’ன்னு கேட்டேன். அதுக்கு அவன் ‘தெலுங்குடப்பிங் அண்ணா’ ன்னு சொல்றான்]<br />மேலும் அவனிடம் நான் எதைவேண்டுமானாலும் பேசலாம். அத்வைதத்துக்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் உள்ள வேறுபாடு. தல்ஸ்தோய் ரயில் நிலையத்தில் இறந்ததில் உள்ள குறியீட்டு அர்த்தம். வீட்டுக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் பேராசிரியர்கள், விமரிசகர்கள், ஆய்வாளர்கள் அனைவருக்கும் அவனை தெரியும். அவர்கள் பேசுவது அவனுக்குப் புரியும் என்று அவர்கள் அறிவார்கள். அவன் கேட்டு அறிந்து வளர்வது ஓர் அறிவார்ந்த உலகம். அவனது மோகமே அதில்தான். ”தோளுக்குமேலே வளர்ந்தா தோழன்னு சொல்றாங்களே அப்பா” ”ஆமாடா. அது ரைட்டுதான்..” ”அப்றம் சொல்லு மச்சி…” என்பது அவன் பாணி. ”என்னடா சினிமாக்கு போனியா?”என்று ஒருநாள் விளையாட்டாக கேட்டேன் ”இந்த பார். நான் போனா உன்னால இந்த ஜென்மத்திலே கண்டுபிடிக்க முடியாது… நீயே ஒரு தத்தக்காபித்தக்கா எங்க போனாலும் நான் கூட்டிட்டுபோகணும் உன்னை… சினிமாவுக்குப் போகல்லை. தெரியாம போக மாட்டேன் போருமா?”<br />ஒரு கட்டத்தில் அஜிதனுக்கு புனைகதைகளில் ஆர்வம் போய் இயற்கையியலில் ஆர்வம் பிறந்தது. அதற்கு முதற்காரணம் . சு.தியடோர் பாஸ்கரன் .இரண்டாம் காரணம் அ.முத்துலிங்கம். அது தீயாக பற்றிக் கொள்ள அதிலேயே நாட்கள். பறவைகளை பார்ப்பது ‘லை·ப் லிஸ்ட்’ தயாரிப்பது [117] அதைப்பற்றிய நூல்களை சேகரிப்பது என ஒரு உக்கிரமான பொழுதுபோக்கு பற்றிக் கொண்டது. ‘நேஷனல் ஜ்யாக்ர·பிக்’ சேனலில் ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு பெயர்கள் ஓடிக் கொண்டிருந்தன. ”எவ்ளவு பேரு..”என்றேன். ”அந்த லிஸ்டுல ஒரு நாள் ஜெ.அஜிதன் பேரும் இருக்கும்” என்றான். பிறகு சிறிய சிரிப்புடன் ”..அந்த ஏரியால உள்ளவங்க யாருக்கும் ஜெயமோகன்னா யாருண்ணே தெரிஞ்சிருக்காது…அய்யாதான் பெரிய ஆளு அங்கே”<br />ஒரு கனவு உருவாகிவிட்டிருப்பதை நான் கண்டேன். வெற்றியும் தோல்வியும் காலத்தின் அளவிலா ஆட்டத்தில் எங்கோ எப்படியோ தீர்மானமாகிறது.ஆனால் இதேவயதில் என்னை அலைக்கழித்தது இதேபோன்ற ஒரு பெருங்கனவுதான். உக்கிரமான மின்சாரம் ஓடும் கம்பிபோல என்னை அது தகிக்க வைத்தது அன்று. அந்த தகிப்பைக் கண்டேன். இளமைக்கு அழகு அத்தகைய கனவுதான்.<br />அவன் படிப்புமீது கவனம்செலுத்துவதாகவும் அதற்குக் காரணம் அந்த கனவே என்றும் அருண்மொழி சொன்னாள். வாக்குறுதியின்படி நான் மதிப்பெண்களைக் கவனிப்பதில்லை. சிலமாதம் முன்பு சொன்னான் ”இப்ப நீ வேணுமானா மார்க்கைப் பாக்கலாம்”. சிரித்தபடி ”வேண்டாம்” என்று பேனாவை மூடினேன்.<br />ஒன்பது மணிக்கு இணையத் தொடர்பு மூலம் தேர்வு முடிவுகளைப் பார்த்தேன். அருண்மொழி பதற்றமாக இருந்தாள். அவனும் பதற்றமாகவே இருந்தான். நான் பதற்றமில்லை என்று சொல்லிக் கொண்டேன். மதிப்பெண்கள். ஐநூறுக்கு நாநூற்று அறுபது. 92 சதவீதம். கணிதத்தில் 99. அறிவியலில் 97. மதிப்பெண்கள் குறைந்தது தமிழில்தான், கையெழுத்து காரணமாக. ”அப்பா உன் மூஞ்சியிலே கரிய அள்ளி பூசிட்டேன்ல?”என்றான் சிரித்தபடி. ”ஆமாடா”என்றேன். ”சும்மா ஜாலியாச் சொன்னேன்பா….உனக்காகத்தானே நான் படிச்சதே”<br />சாயங்காலம் அ.கா.பெருமாள் வந்தார். ”நல்ல மார்க்..இனி எதுக்கு சர்ககர் ஸ்கூல்? பேசாம கான்வெண்டிலே சேருங்க” என்று பல பக்கங்களில் இருந்தும் உபதேசங்கள் வந்தன என்பதை அவரிடம் சொன்னேன். ”அதுபின்னே நம்மாளுக புத்தி அப்டித்தானே போகும்?” என்றார்.<br />ஆனால் இப்போது இதெல்லாம் நாம் சொல்லும் இடத்தில் இல்லை. அஜிதன் அவனே போய் அரசுப்ப்ள்ளியில் தலைமையாசிரியரை பார்த்து விண்ணபப படிவமே வாங்கிவந்துவிட்டான். ”·பஸ்ட் குரூப் கெடைக்குமா? ” என்றான். ”கெடைக்குமாவா? கூப்பிட்டு உக்கர வச்சு குடுப்பாங்க…” என்றார் அ.கா.பெருமாள். ”பிள்ளைகளுக்கு மார்க் இருந்தாலே பெத்தவங்களுக்கு ஒரு கெத்துதான்”<br />நாளை மறுநாள் மதிப்பெண் அட்டை கிடைக்கும். அதற்கு அடுத்த நாள் சேர்த்துவிடவேண்டும். நான் ”நீ போனால் போதாதா அருணா?”என்றேன்.அஜிதன் ”இல்லப்பா நீ வரணும்..நீ தான் வரணும்…” என்றான்.<br />பத்தாம் வகுப்பு தமிழாசிரியைக்கு…<br />Article:<br />http://jeyamohan.in/?p=488<div class="blogger-post-footer"><img src="http://www.ancientscripts.com/images/tamil.gif" /></div>kumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2574122234119374285.post-61012737143128128942008-04-16T22:46:00.000+05:302008-04-16T22:49:10.569+05:30# தலைநிமிர்ந்த தமிழச்சிகள்Thiruvengimalai Saravanan......................<br />இந்த வார சாதனை மங்கை ஒரு வீரமங்கை. வீரம் என்றதும் வாள் சண்டை, கத்திச் சண்டை, போர் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். இந்த மங்கை சங்கீதத்தில் வீரத்தையும் தீரத்தையும் காட்டிய மங்கை.<br />இந்த சம்பவத்தைப் பாருங்கள். ஒருமுறை ஒரு நாதஸ்வர கச்சேரி நடந்துகொண்டிருந்தது. வாசித்துக் கொண்டிருந்தவர் நாதஸ்வர மாமேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. மிகப் பெரிய இசை மேதைகளெல்லாம் முன்வரிசையில் அமர்ந்து நாதஸ்வர இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வீணை தனம்மாளும் அமர்ந்திருக்கிறார். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திலிருந்து ‘தர்பார்’ ராகம் தவமாய் வந்து கொண்டிருந்தது. அதில் லேசாக ‘நாயகி’ ராகமும் கலந்துவிட்டது. சட்டென்று எழுந்துவிட்டார் வீணை தனம்மாள். தர்பாரில் எப்படி நாயகியைக் கலப்பது என்று அவருக்கு கோபம். எல்லோருக்கும்<br />அதிர்ச்சி. ராஜரத்தினம் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது. ‘தர்பாரில் நாயகிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாதா?’ என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சமாளித்தார். பிறகு தனம்மாளுக்காக சுத்தமான தர்பாரை வாசித்தார். இது வீணை தனம்மாளின் கோபத்துக்கு ஓர் உதாரணம். அவரது கோபம் எப்போதும் சங்கீதத்தின் அடிப்படையில் வருவது. கர்நாடக சங்கீதத்தின் மேல் அத்தனை காதல். பாசம். சங்கீதத்துக்கு எந்தவித<br />சங்கடமும் வந்துவிடக்கூடாது.<br />இவரது கச்சேரிக்குச் செல்பவர்கள் எப்போதும் சற்று கவனத்துடன் இருப்பார்கள். அரங்கில் சின்ன பேச்சு சத்தம் வந்தால்கூட தனம்மாளுக்குப் பிடிக்காது. வாசிப்பதை நிறுத்திவிடுவார். அரங்கில் சங்கீதம் மட்டுமே<br />கேட்க வேண்டும் என்பது அவர் விருப்பம். இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவரது இசையைக் கேட்க கூட்டம் அலைமோதும். காரணம் அவரிடமிருந்த இசைக்கலை.<br />வீணை தனம்மாள் பிறந்தது 1868_ல். ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அவரது பெயரை மிகுந்த மரியாதையுடன்தான் கர்நாடக சங்கீத மேதைகள் உச்சரிப்பார்கள்.<br />இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த தனம்மாளுக்கு சிறு வயதிலேயே இசைமீது ஆர்வம் வந்துவிட்டது. அதற்குக் காரணம் அவரது குடும்பம். இவரது பாட்டி காமாட்சி அந்தக் காலத்தில் சிறந்த வாய்ப்பாட்டு வித்தகி. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷ்யாமா சாஸ்திரிகளின் சிஷ்யை. இவரது பெண் வழிப் பேத்திதான் தனம்மாள். இவரது தாயார் சுந்தரம்மாளும் நல்ல இசைக்கலைஞர்.<br />இசைக்குடும்பத்தில் பிறந்துவிட்டதால் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்தது. என்றாலும் அன்றைய காலத்தில் பெண்கள் இசைத்துறைக்கு வருவது என்பது மிகவும் சிரமமான காரியம். வீட்டைவிட்டே பெண்கள் வெளியே வரக்கூடாது என்றிருந்த சமயத்தில், வீணை தனம்மாளுக்கு வீணை மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் வீட்டில் தாயாரும், பாட்டியும் வாய்ப்பாட்டுதான் சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் மிகச்சிறு வயதிலேயே அருமையாகப் பாடுவார் தனம்மாள்.<br />இந்த வாய்ப்பாட்டே அவருக்கு ஒரு வாய்ப்பை பெற்றுத்தந்தது.<br />வீணை தனம்மாளின் தாயார், மாணிக்க முதலியார் என்ற பெரிய செல்வந்தர் வீட்டில் பூஜைப் பாத்திரங்களை கழுவிக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார். தாயுடன் தனம்மாளும் அவரது வீட்டுக்குச் செல்வ துண்டு. ஒருமுறை அங்கே தனம்மாள் பாட, மாணிக்க முதலியாருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. தனம்மாளின் தாயாருக்கு சம்பளத்தை ஏற்றிக்கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு தனம்மாள் வீணை பயில ஆரம்பித்தார்.<br />வீணை தனம்மாளின் முதல் கச்சேரி ஏழு வயதில் நடந்தது என்றால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. சகோதரி ரூபாவதியுடன் தனம்மாள் வாய்ப்பாட்டு பாட, வயலின் இசைத்தது தம்பி நாராயணசாமி. இந்த சிறுசுகளின் கச்சேரி மெல்ல பிரபலமடையத் துவங்கியது. தனம்மாளின் திறமை வெளிஉலகுக்கு தெரிய ஆரம்பித்தது.<br />அந்தக் காலத்தில் மயிலை சவுரியம்மாள்தான் வீணை வாசிப்பில் மிகப் பிரபலம். அவரைப் போல வரவேண்டும் என்பதுதான் தனம்மாளின் லட்சியம். அதற்காக வீணைக் கலையை ஒரு தவம் போலவே கற்றார். சவுரியம்மாளின் சீடரான பாலகிருஷ்ணனிடம் வீணை வாசிப்பின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.<br />சங்கீதம் பாடுவதில் இளம் வயதிலேயே நிறைய புதுமைகள் செய்யத் துவங்கினார் வீணை தனம்மாள். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா என்று அனைத்து பாடல்களையும் மேடையில் சீராகப் பாடி சங்கீத ரசிகர்களின் மனம் கவர்ந்தார். எட்டயபுரம் குமார எட்டேந்திரரின் சாகித்யங்களைப் பாடியதில் அவருடைய புகழ் மேலும் பரவியது.<br />வீணை தனம்மாளின் மிகப் பெரிய புதுமை அவரே பாடி, வீணை வாசித்தது. பொதுவாக கர்நாடக சங்கீத மேடைகளில் பாடுபவர் ஒருவராகவும் வீணை வாசிப்பவர் வேறொருவராகவும்தான் இருப்பார்கள். ஆனால் தனம்மாள் இந்த இரண்டு கலைகளிலும் வித்தியாசமாக இருந்ததால் பாடிக்கொண்டே வீணை வாசிப்பார். இரண்டிலுமே அவரது இசை மேதாவிலாசம் வெளிப்படும். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் பயணித்து இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவரது கச்சேரிகள் அனைத்திலும் கட்டுப்பாடுகள் நிறைய இருக்கும். யாரும் பேசக்கூடாது, ‘இந்தப் பாடல் வேண்டும்’ என்று துண்டுச்சீட்டு கொடுப்பது, கை தட்டுவது, ‘பேஷ்’ என்று சொல்வது போன்ற பல சங்கதிகளுக்கு அங்கே தடை. இசை ஒன்றே அங்கே ஆட்சி செய்யவேண்டும்.<br />1916_ல் பரோடாவில் நடந்த இந்திய இசை மாநாட்டில் கச்சேரி செய்ததும்; 1935_ம் ஆண்டு காங்கிரஸ் இல்லத்தில் பத்தாயிரம் பேர் சபையில் கச்சேரி செய்ததும் இவரது வாழ்க்கையில் திருப்புமுனைகள். கொலம்பியா நிறுவனம்தான் அன்றைய இசைக்கலைஞர்களின் இசைத் தட்டுகளை வெளியிட்டு வந்தது. ஆனால் ஒரு சமூகத்து இசைக்கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் வீணை தனம்மாளின் எழுச்சியைக் கண்டு, தவிர்க்க இயலாமல் அவரது இசைத்தட்டுகளையும் வெளியிடத் துவங்கியது.<br />தனக்குப் பிறகு தனது இசை நின்றுவிடக் கூடாது என்பதற்காக தனது வாரிசுகளுக்கும் இசை அறிவை போதித்தார் தனம்மாள். ராஜலட்சுமி, லட்சுமிரத்தினம் என்ற அவரது மூத்த மகள்கள் சிறந்த பாடகிகளாக உருவானார்கள். ஜெயம்மாள், காமாட்சி என்ற அடுத்த இரண்டு பெண்களையும் ‘இரண்டாவது தனம்மாக்கள்’ என்று இசையுலகத்தினர் அழைத்தார்கள். இவர்களில் ஜெயம்மாளின் மகள் பாலசரஸ்வதி பிற்காலத்தில் மிகப் பெரிய நாட்டிய மேதையாக உருவானார். தனம்மாளின் இரண்டு மகன்களில் ரங்கநாதன் மிருதங்கத்திலும், விஸ்வநாதன் புல்லாங்குழலிலும் கெட்டிக்காரர்கள்.<br />வீணையிலும் வாய்ப்பாட்டிலும் இசை ரசிகர்களுக்கு சந்தோஷப் பரவசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த தனம்மாளின் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக அமையவில்லை. பெரிய குடும்பம். சம்பாதிக்கும் பணம் முழுவதும் குடும்பச் செலவுக்கே சரியாக இருந்தது. தனம்மாளுக்கு நிரந்தர பணக்கஷ்டம்தான். உடல் தளர்ந்து போன காலத்தில் உறவினர்கள் எல்லோரும் தனம்மாளைக் கைவிட்டார்கள். அப்போதும் கக்சேரிகள் செய்தார். இசை ஆர்வத்தால் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை அந்தக் கஷ்டமான சூழலிலும் கற்றார். பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போக, தனம்மாளின் வீடு ஏலத்தில் போனது. தனது இறுதிக் காலத்தை பேத்தி பாலசரஸ்வதியுடன் கழித்தார்.<br />1938_ம் வருடம் தனது அறு பதாவது வயதில் தனம்மாள் காலமானார். கர்நாடக இசையுலகம் தனது பேரரசிகளில் ஒருவரை இழந்தது.<br />ஆனால் அவரது இசை அவரை மறக்கமுடியாத மங்கையாக்கியிருக்கிறது..<br />நன்றி: டாக்டர் பக்கிரிசாமிபாரதி.<br />அரசு இசைக்கல்லூரி. சென்னை_28.<br />பைம்பொழில்மீரானின் ‘தலை சிறந்த தமிழச்சிகள்’ ‘தோழமை’ வெளியீடு. சென்னை_78.<br />தமிழ் கூறும் நல்லு லகம் அதிகம் அறி யாத பெயர். ஆனால், அறிய வேண்டிய பெயர். வீரம்மாள் என்ற பெயருக்கு ஏற்றபடி வாழ்க்கையை வீரத்துடன் எதிர்கொண்டவர்.<br />பள்ளியில் படிக் கும்போது விடு முறைக் காலங்களில் கூலி வேலை செய்த, குப்பை சுமந்த, களை எடுத்த, சித்தாள் வேலை செய்த ஒரு பெண், தன் வாழ்க்கையில் செய்த அற்புதமான காரியங்களைத் திரும்பிப் பார்க்கையில் பிரமிப்பாய் இருக்கிறது.<br />திருச்சி வானொலியில் மிகப் பிரபலமான நிலையக் கலைஞர், ஆதரவற்ற பெண்களுக்காக திருச்சியில் ‘அன்னை ஆசிரமத்தைத் துவக்கி யவர், பெண்கள் தங்கிப் படிக்க ‘நாகம்மை இல்லத்தை நிறுவியவர்… இப்படி அவரது பிற்கால வாழ்க்கையில் சாதித்தவை பல.<br />சரி, யார் இந்த வீரம்மாள்?<br />திருச்சி மாவட்டம். திருப்பராய்த்துறையில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட சமுதாயத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தவர் தான் அந்த வீரம்மாள். வேம்பு _ பெரியக்காள் என்ற தம்பதியரின் ஏழாவது குழந்தை. 1924_ம் ஆண்டு மே மாதம்<br />16_ம் நாள் பிறந்தவர். அப்பா வேம்பு சாதாரண விவசாயத் தொழிலாளி.<br />வீரம்மாளுக்கு வீட்டில் வைத்த பெயர் வீராயி. குழந்தைக்கு ஏழு வயதாகியும் பள்ளிக்கு அனுப்ப யாரும் முயற்சிக்கவில்லை. அண்ணன்மார்களும் அண்ணிமார் களும் ‘பெண்குழந்தை எதற்குப் படிக்கவேண்டும்’ என்று அலட்சியப்படுத்திவிட்டார்கள். அந்தத்தெரு பையன்கள் எல்லோரும் பக்கத்து ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளிக்குச் செல்வதைக் கண்டு அவர்களோடு வீரம்மாளும் வீட்டார் யாருக்கும் தெரியாமல் போய்விட்டார். 52 பிள்ளைகள் படித்த அந்த ஆரம்பப் பள்ளியில் வீரம்மாள் மட்டுமே பெண் குழந்தை. அதற்காக வீரம்மாள் வெட்கப்படவோ பயப்படவோ இல்லை.<br />வீரம்மாளின் கல்வி ஆர்வம் வெளியில் தெரிந்ததும் பெற்றோரும் தடை சொல்லவில்லை. அந்தக் காலத்தில் படிப்பில் ஆர்வமும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் மட்டும் கல்வி கிடைத்துவிடாது. அதற்கு வேறு சில தடைகளும் அந்தச் சமயத்தில் உண்டு. இந்தத் தடையைப் பாருங்கள்.<br />ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்காக நடுநிலைப் பள்ளியில் சேர்க்க வீராயியை அவரது தந்தை அழைத்துச் சென்றார். ‘‘இது பிரா மணக் குழந்தைகளும், சாதி இந்துக் குழந்தைகளும் படிக்கும் பள்ளி. இங்கு ஹரிஜனக் குழந்தையான வீராயியைச் சேர்த்தால், தனியாகத்தான் உட்கார வைக்க முடியும். குழந்தைகள் அவளை கல்லால் அடித்து விரட்டினாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.’’ என்று கிராம முன்சீப்பும், தலைமை ஆசிரியரும் சொல்லிவிட்டார்கள். அதனால் அருகில் உள்ள ஜீயபுரத்தில் சேர்ந்து. தினமும் 8 கி.மீ. நடந்தே போய் படிக்க வேண்டியதாகிவிட்டது.<br />பள்ளியில் இப்படியரு பிரச்சினை என்றால் வீட்டில் ஒரு சிக்கல். வீட்டு வேலைகளைச் செய்தால்தான் பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள், அதையும் செய்ய வேண்டிய கட்டாயம் அந்தப் பிஞ்சுக் குழந்தை வீராயிக்கு நேர்ந்தது.<br />ஆறாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் மகாவீரர், புத்தர் ஆகியோர் பற்றிய பாடம் ஆசிரியரால் நடத்தப் பெற்றது. அதில் வரும் 1.பொய் சொல்லக் கூடாது. 2. திருடக் கூடாது. 3. உயிர் வதை செய்யக்கூடாது 4. மது அருந்தக் கூடாது. 5. ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது என்ற புத்தரின் பஞ்சசீலத்தை வீரம்மாள் பள்ளிப் பருவத்திலேயே கற்று மனதில் பதித்துக் கொண்டார். அவர் இறக்கும்வரை அதைக் கடைப்பிடித்தும் வந்தார். புலால் உண்ணக்கூடாது என்று அன்றே முடிவு செய்து கடைசிவரை அதில் உறுதியாக இருந்தார். தினசரி பள்ளிக்கு நீண்டதூரம் நடந்து செல்லும்போது பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டே போவார். காலுக்குச் செருப்புகூட கிடையாது. எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை வீரம்மாள் ஊரிலிருந்து பன்னிரண்டு கி.மீ. தூரம் உள்ள குளித்தலைக்கு ரயில்மூலம் சென்று படித்து வந்தார்.<br />பள்ளியில் படிக்கும்போதே விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறையிலும் கூலி வேலைக்குச் செல்வார். மண் சுமப்பது, வயலுக்கு குப்பை சுமப்பது, வாழைக்கு களை வெட்டுவது, சித்தாள் வேலை என்று செய்து காசு சேர்த்துதான் தன் பள்ளிப் படிப்பை அவரால் தொடர முடிந்தது.<br />பள்ளி இறுதி வகுப்பு படித்து முடிந்தவுடன் வீரம்மாளுக்குத் திருமணம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இலங்கையைச் சேர்ந்தவரை மணம் முடித்தார்கள். திருமணத் திற்குப் பின்பும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், அவர் கணவர் இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் வீரம்மாள் ஆறு மாத கர்ப்பிணி ஆனார். வீட்டில் பல தொல்லைகளுக்கு இடையேயும் தொடர்ந்து படித்தார். ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு கி.மீ. நடந்து வந்து படிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் பயிற்சிப் பள்ளி ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்கத் துவங்கினார். இந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.<br />திடீரென்று ஒரு நாள் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அழைப்பு அவருக்கு வந்தது. ‘யுத்தத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேசச் சொல்லி யிருந்தார்கள். வானொலி நிலையத்தில் பத்து நிமிடம் பேசிவிட்டு வந்தார். பிறகு இரண்டுமுறை வெவ்வேறு தலைப்புகளில் ‘பெண் உலகம்’ நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.<br />1945 மே மாதம் 10_ம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதே நேரம் திருச்சி வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞர் பணியும் கிடைத்தது. வீரம்மாள் அந்த வேலையில் சேர்ந்துகொண்டார். தொடர்ந்து, இரண்டா வதாக ஆண் குழந்தையும் பிறந்தது. அப்போதுதான் தன் கணவருக்கு ஏற்கெனவே ஒரு இலங்கைப் பெண்னோடு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதனால், அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது.<br />வானொலியில் ஈரோடு, கோவை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சென்னை ஆகிய பகுதி மக்கள் பேசும் பாணியிலே பேசி நாடகங்களில் நடித்தார். வீரம்மாளின் பல குரல் திறமை இங்கு உதவியது. பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த கிராம சமுதாயப் பகுதியான ‘ஆப்பக்கார அங்காயி’ என்ற ஒரு நிகழ்ச்சியில், வீராயி ஆப்பக்கார அங்காயி ஆக இருந்து ஆப்பக்கடைக்கு வரும் பலதரப்பட்ட மக்களுடன் பேசி, வானொலி ரசிகர்களை அசத்தினார்.<br />வானொலி நிலையக் கலைஞர் வேலைக்கு இடையிலும் தாழ்த் தப்பட்ட _ தீண்டப்படாத மக்கள் முன் னேற்றத்திற்காக கிராமம் கிராமமாய் சென்று சமூக சேவை புரிந்தார்.<br />அந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கம் தமிழகத்தில் வேகமாய் பரவிக் கொண்டிருந்தது. வீரம்மாள் தந்தை பெரியாரின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பெரியார் திருச்சிக்கு வரும் போதெல்லாம் அவர் தங்கி இருக்கும் வக்கீல் வீட்டிற்கு வீரம்மாளை வரும்படி சொல்லி அனுப்புவார். அவரும் தவறாமல் போய் சமூக சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவார்.<br />பேச்சோடு மட்டும் தனது சமுதாயப் பணிகள் நின்றுவிடக் கூடாது என்று நினைத்த வீரம்மாள், கிராமப்புற ஏழை எளிய மாணவிகளுக்கு உதவ நினைத்தார்.<br />அப்போது கிராம ஆரம்பப் பள்ளிகளில் எங்கோ ஒன்றிரண்டு ஆதிதிராவிட பெண் குழந்தைகள்தான் படித்து வந்தார்கள். அவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு கிடையாது. காரணம், அந்தக் காலத்தில் ஏராளமான கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் கிடையாது.<br />அதனால் திருச்சியில் தாழ்த்தப் பட்ட பெண்கள் தங்கியிருந்து உயர் நிலைப்பள்ளியில் படிக்க ஏதுவாக ஒரு விடுதி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக பல இடங்களில் ஆதரவு திரட்டினார். இப்படி உருவானதுதான் ‘நாகம்மையார் மாணவியர் விடுதி’. அத்துடன் அவரது சேவை நிற்க வில்லை.<br />திருச்சியில் ‘அன்னை ஆசிரம’த்தை நிறுவி ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள் என்று பலருக்கும் அடைக்கலம் கொடுத்த வேடந்தாங்கல் அவர். திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ‘அன்னை’ என்றால், அது வீரம்மாள் தான் என்று போற்றும் அளவிற்கு சேவை புரிந்தவர். அதனால் தென்னகத்து அன்னை தெரஸா என்றே அழைக்கப்பட்டார்.<br />பலதரப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து இன்று தமிழ் உலகம் பேசும் சரித்திரமாக மாறியிருப்பதுதான், அவர் உருவாக்கிய ‘தமிழ்நாடு பெண்கள் நலச்சங்கம்’. சின்னஞ்சிறிய திண்ணை ஒன்றில் மூதறிஞர் ராஜாஜியின் வாழ்த்துக்களுடன் பெருந்தலைவர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் தற்போதைய வயது அறுபதுக்கு மேல்.<br />கணவனை விட்டுப் பிரிந்த பின்னர் வெள்ளை ஆடை அணிய ஆரம்பித்தவர் கடைசிவரை, வெள்ளை ஆடையுடனேயே வாழ்ந்தார். சேவை மனப்பான்மைக்கு அந்த வெள்ளை உடை ஒரு குறியீடாக அமைந்தது.<br />2006_ல் வீரம்மாள் மறைந்தார். அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள பல நலப் பணிகள் இன்றைக்கும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சோகங்களும், சோதனைகளும், துன்பங்களும், போராட்டங்களும் நிறைந்தது வீரம்மாளின் வாழ்க்கை. இத்தகைய சோகங்களின் சோதனை களிலும் துவண்டு விடாது, மற்றவர்களின் வாழ்க்கையிலாவது அத்தகைய சோகங்கள், துயரங்கள் வராமல் பாடுபட்ட வீரம்மாள் உண்மையிலேயே வீர _ அம்மாதான்..<br />செல்வச் செழிப்பில் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும் எளிமைவாதிகளாகவும் இருப்பது மிக அரிது. இந்த அரிதான குணங்களுடன் கல்வி சேவையும் ஆன்மிக சேவையும் கலந்தால்… அப்படியரு ஆச்சரியமான, அபூர்வமான குணங்களுடன் வாழ்ந்தவர்தான் சிகப்பி ஆச்சி. செட்டிநாட்டு அரசர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமியின் மனைவி.<br />ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு என்பதை நாம் காலம் காலமாகக் கேட்டு வருகிறோம். ஆனால் கண்கூடாகப் பார்ப்பது டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமியின் வாழ்க்கையில்தான். அவரது ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்பும் சற்று உற்று நோக்கினால் சிகப்பி ஆச்சியின் கைவண்ணம் இருக்கும்.<br />கைவண்ணம் என்று சொல்லும்போது இங்கே ஒரு சோகமான, அதேநேரம் தன்னம்பிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.<br />சிகப்பி ஆச்சிக்கு இடதுகை பாதி செயலிழந்து விரல்கள் மூடியேதான் இருக்கும். அதேபோல் இடது கால் பலவீனமடைந்து சற்று விந்திவிந்திதான் நடப்பார். ஆனால் சாதாரணமாய் பார்ப்பவர்களுக்கு இது தெரியாது. இந்த சோகம் அவருக்கு பக்கவாத நோயால் ஏற்பட்டது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்தக் குறைகளுடன்தான் அத்தனை காரியங்களையும் செய்திருக்கிறார் என்றால், அவர் மறக்க முடியாத மங்கைதானே?<br />சிகப்பி ஆச்சி பிறந்தது 1938_ம் வருடம். செட்டிநாட்டு பள்ளத்தூரில் இவரது குடும்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. ராணி மெய்யம்மையின் உடன்பிறந்த தம்பி உ.அ.உ.க.ராம.அருணாசலம்தான் சிகப்பி ஆச்சியின் தந்தை. மிக செல்வச் செழிப்பான குடும்பம். செல்வம் குவிந்திருந்தாலும் அந்தக் குடும்பத்தினர் அதிகம் தேடியது கல்விச் செல்வத்தை. பெண்களை பள்ளிக்கு அனுப்பத் தயங்கிய காலகட்டம் அது. ஆனால், நகரத்தார்கள் பொருட்செல்வத்தைத் தேடியது மட்டுமில்லாமல் எப்போதும் கல்விச் செல்வத்தையும் சேர்த்தே தேடினார்கள். சிகப்பி சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் பள்ளிக் கல்வியை முடித்து, பிறகு ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இங்கே இன்னொரு முக்கிய விஷயம், பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பில் சிகப்பி ஆச்சிதான் முதலிடம்.<br />சிகப்பி ஆச்சியின் முறைமாப்பிள்ளைதான் எம்.ஏ.எம்.ராமசாமி. சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாய் விளையாடி வளர்ந்தவர்கள். இவர்களுக்குத் திருமணம் நடக்கும்போது எம்.ஏ.எம்.முக்கு இருபத்தொரு வயது. சிகப்பி ஆச்சிக்குப் பதினாறு. கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். செட்டிநாட்டு அரசரின் குடும்பத்தில் மருமகளாய் அடியெடுத்து வைத்த பிறகும் தனது படிப்பைத் தொடர்ந்தார். இதற்கு அவரது கணவரும் அவரது குடும்பத்தாரும் நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள்.<br />ராஜா வீட்டின் மருமகள் என்பது சாதாரண விஷயமல்ல. நிறைய குடும்பப் பொறுப்புகள் உண்டு. செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியாருக்கு இரண்டு மகன்கள். குமாரராஜா முத்தையா மூத்தவர். இவரது மனைவி குமார ராணி மீனா முத்தையா. எம்.ஏ.எம். ராமசாமி இளையவர். இவரது மனைவிதான் சிகப்பி ஆச்சி.<br />ஒரே வீட்டில் இரண்டு மருமகள்கள் இருந்தாலும் இருவருக்குள்ளும் எந்த சச்சரவோ சண்டையோ வந்தது கிடையாது. இருவரும் மிக ஒற்றுமையாக குடும்பக் காரியங்களைக் கவனித்தார்கள். அவர்களின் ஒற்றுமை செட்டிநாடு முழுவதும் பிரசித்தி பெற்றது.<br />குடும்பப் பொறுப்புகள் இருந்தாலும் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. பொதுவாய் ‘தாயைப்போல பிள்ளை’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இங்கு மாமியாரைப் போல் மருமகள். மாமியார் ராணி மெய்யம்மைக்கு கல்வி சேவையில் ஆர்வம் அதிகம். ஏழை மக்களுக்குக் கல்வி கொடுக்கவேண்டும் என்பது அவர்களது தீராத ஆசை. அந்த சேவை மனப்பான்மை சிகப்பி ஆச்சிக்கும் வந்தது.<br />சென்னை அடையாறிலுள்ள ராணி மெய்யம்மை பள்ளி இவரது முயற்சியில் உருவானதுதான்.<br />1973_ம் வருடம் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியின் செயலாளராக தனது இறுதி மூச்சு வரை இருந்தார் சிகப்பி ஆச்சி. இந்தப் பள்ளியைத் தொடர்ந்து ஏழு பள்ளிகளையும் சென்னையில் துவக்கினார். இந்தப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினான்காயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளைத் துவக்கியதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று அன்றாடப் பணிகளைக் கவனிப்பார். பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தையும் நிர்வகித்துக்கொண்டு பள்ளிகளைக் கவனித்துக் கொள்வது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. ஆனால் சிகப்பி ஆச்சிக்கு அது எளிதாய் வந்தது. காரணம் அவர் நேரத்தை மிகவும் திட்டமிட்டு பயன் படுத்துவதில் கெட்டிக்காரர்.<br />அதிகாலை ஐந்து மணிக்கு அவரது தினசரி வாழ்க்கை துவங்கும். இரவு படுக்கச் செல்லும் நேரம் பதினொன்று. ஆறு மணி நேரம்தான் தூக்கம். பல செல்வந்தர் பெண்களைப் போல் மதியம் உறங்குவது, தோழிகளுடன் அரட்டையடிப்பது போன்ற பழக்கங்கள் சிகப்பி ஆச்சிக்குக் கிடையாது. உழைப்பு, எளிமை இவைதான் அவர் அதிகம் நம்பிய இரண்டு விஷயங்கள்.<br />நேரத்தை உபயோகமாய் செலவழிப்பது போன்று இன்னொரு நல்ல பழக்கமும் சிகப்பி ஆச்சியிடம் இருந்தது. அது, டைரிக் குறிப்புகள் எழுதுவது. உறவினர்கள், நண்பர்கள், முக்கியமானவர்கள் பற்றிய அத்தனை விவரங்களையும் அதில் எழுதி வைத்திருப்பாராம். கிட்டத்தட்ட முப்பது டைரிகளில் இந்தக் குறிப்புகள் இருந்தனவாம். இந்த டைரிகள் மூலம் எந்த உறவினர், நண்பர் பற்றிய விவரங்களையும் சட்டென்று தெரிந்துகொள்ள இயலும்.<br />பள்ளிகளைத் துவக்கிய சிகப்பி ஆச்சி சமூகத்துக்குப் பயன்தரும் இன்னொரு காரியத்தையும் செய்தார். சென்னைக்குப் படிக்க வரும் பெண்கள் தங்க ஒரு பெண்கள் விடுதியையும் எத்திராஜ் சாலையில் முப்பது வருஷத்திற்கு முன்பு துவக்கினார். ராணி மெய்யம்மை ஹாஸ்டல் என்றழைக்கப்படும் அந்தப் பெண்கள் விடுதி, இன்றும் சென்னையில் மிகப் பிரபலமானது.<br />கல்விப் பணி ஒருபுறமிருக்க, ஆன்மிகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. கணவர் எம்.ஏ.எம். ராமசாமி ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வருவார். அதனால் சென்னையில் ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்டவேண்டும் என்று தீர்மானித்தார் சிகப்பி ஆச்சி. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதன் விளைவுதான், ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஐயப்பன் கோயில். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலைபுரத்திலும் ஐயப்பன் கோயிலைக் கட்டினார்.<br />கல்விப் பணி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிகப்பி ஆச்சி. அவரும் குமாரராணி மீனாவும் இணைந்து சென்னைக்கு அருகே உள்ள நாவலூர் கிராமத்தைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்துக்கு வேண்டிய சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.<br />சென்ற மாதம் கேளம் பாக்கத்தில் நூறு ஏக்கர் பரப் பளவில் ‘செட்டிநாடு ஹெல்த் சிட்டி’ என்ற ஒரு மருத்துவ நகரத்தின் திறப்புவிழா நடந்தது.<br />மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் பயிற்சிக் கல்லூரி, மருத்துவமனை, மருந்தியல் கல்லூரி என முழுக்க முழுக்க மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவ நகரம் அது. இந்த நகரம் வருவதற்கு மிக முக்கியக் காரணமாயிருந்தவர் சிகப்பி ஆச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் திட்டம் துவக்கப்படும்போது உயிரோடு இருந்தவர், அது முடிக்கப்படும்போது நம்முடன் இல்லை. சென்ற வருடம் சிகப்பி ஆச்சி காலமாகிவிட்டார்.<br />அவர் காலமாகிவிட்டாலும் அவர் உருவாக்கியவை காலம் காலமாக அவரது பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.றீ<br />மாமியார் மெச்சியவர்!<br />மாமியார் ராணி மெய்யம்மையார் வெளிநாட்டிற்குச் செல்லும் போதெல்லாம் கூடவே தனது சின்ன மருமகள் சிகப்பி ஆச்சியை அழைத்துச் செல்வது வழக்கம். மாமியாருக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார். ஆங்கில இலக்கியம் படித்ததால் மாமியாருக்கு அழகாக மொழி பெயர்த்துச் சொல்வது அவருக்கு எளிதாக இருந்தது. தங்கள் பள்ளியில் வேலை செய்த ஆசிரியர்கள் பணியில் ஓய்வு பெறும் நாளில் ஆச்சியே வீட்டிலிருந்து குறைந்தது பத்து வகையான பலகாரங்களைச் செய்துகொண்டு வந்து அனைவருக்கும் விருந்து படைப்பது இவருடைய வழக்கமாக இருந்தது. பெண்களுக்கென்று உருவான பள்ளிகளுக்கு தன் மாமியார் பெயரையும், ஆண்களுக்கென்று உருவாக்கிய பள்ளிகளில் தன் மாமனார் பெயரையும் சூட்டுவது இவரது வழக்கம்.<br />‘‘அய்த்தான் எனக்கு ஒண்ணுமில்ல!’’<br />சிகப்பி ஆச்சியைப் பற்றி அவரது கணவர் செட்டிநாட்டரசர் டாக்டர். எம்.ஏ.எம்.ராமசாமியிடம் கேட்டோம். ‘‘நாங்கள் கணவன் மனைவியாக 42 வருடங்கள் வாழ்ந்தோம். அதற்கு முன்னால் சிறுவயதிலிருந்தே எனக்கு நல்ல பழக்கம். ஒருமுறை நாங்கள் திருப்பதிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கமாய் அதிகாலைப் பயணங்களின்போது கார் டிரைவர் குளித்துவிட்டுத்தான்