tag:blogger.com,1999:blog-255939732009-07-15T22:03:17.211+05:30யுவகிருஷ்ணாலக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.comBlogger524125tag:blogger.com,1999:blog-25593973.post-30772709508311030432009-07-11T11:13:00.000+05:302009-07-11T14:00:15.992+05:30ஒரு கடிதம்!சாரு, ஜெயமோகன், பாரா, எஸ்.ரா போன்ற எழுத்தாளர்களின் வலைப்பூக்களுக்கு மட்டும் தான் வாசகர் கடிதங்கள் வரும் என்று நினைத்தால் நீங்கள் முட்டாள். எங்களுக்கும் வாசகர் கடிதம் வருதுல்லே? மைனர்குஞ்சு பேரை கேட்டாலே சும்மா வலையுலகமெல்லாம் அதிருதுல்லே? :-)<br /><br />* - * - * - * - * - * - *<br /><br /><span style="color:#ff0000;">அன்புள்ள லக்கிலுக்,<br /><br />என் பெயர் தமிழழகன், சிங்கப்பூரில் வசிக்கிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தங்களது வலைப்பூவை தொடர்ந்து வாசிக்கிறேன். இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நான் கண்டுகொண்டது என்னவென்றால் உங்களது வலைப்பூ மொக்கையாகவும், குப்பையாகவும், த்ராபையாகவும் இருக்கிறது.<br /><br />நீயெல்லாம் எழுதலேன்னு எவண்டா அடிச்சான். முட்டாப்பயலே இதுவரைக்கும் ஒரு பதிவாவது உருப்படியா எழுதியிருக்கியாடா? இந்த அழகுலே நெறைய வலைப்பூவிலே வேற உனக்கு பங்கிருக்கு. உருப்படியா உன்னால ஒரு கதை எழுத முடிஞ்சிருக்கா, கவிதை எழுத முடிஞ்சிருக்கா, எதையாவது ஒழுங்கா எழுதியிருக்கியா? உனக்கெல்லாம் பின்னூட்டம் போடுற மாய்க்கான்களை முதலிலே ஒதைக்கணும்.<br /><br />அடுத்தமாசம் சென்னை வர்றேண்டா. உன்னை தேடி வந்து உதைக்கிறேன். எனக்காக ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணு. அங்கேயே உன்னை செருப்பால அடிக்கிறேன்.<br /><br />அழியாத அன்புடன்<br />தமிழழகன், சிங்கப்பூர்</span><br /><br />* - * - * - * - * - * - *<br /><br />அன்புள்ள தமிழழகன்,<br /><br />கடந்த இரண்டரை வருடங்களாக நீங்கள் எனது வலைப்பூவை தொடர்ந்து வாசித்து வருவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், என் வலைப்பூ மொக்கை என்பதை இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் உங்களால் கண்டறிய முடிந்தது என்பது வருத்தத்தை தருகிறது. நான் முதல் பதிவு எழுதியபோதே இது ஒரு குப்பை என்று என்ற நுட்பத்தை லட்சோபலட்சம் வாசகர்கள் அப்போதே கண்டுகொண்டார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்னுடைய கைப்பேசி எண்ணை உங்கள் மின்மடலுக்கு அனுப்பியிருக்கிறேன். சென்னை வந்ததும் தொடர்பு கொண்டு செருப்பால் அடிக்கவும்.<br /><br />அன்புடன்<br />லக்கிலுக்<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-3077270950831103043?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com50tag:blogger.com,1999:blog-25593973.post-5154225800344284632009-07-06T21:42:00.000+05:302009-07-06T21:43:07.629+05:30கல்யாணம் - டவுசர் கிழியும், தாவூ தீரும்!<a href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Rw3IKuzyDMI/AAAAAAAAAJw/Y7R31OBVWJs/s1600-h/kiss.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Rw3IKuzyDMI/AAAAAAAAAJw/Y7R31OBVWJs/s400/kiss.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5119968438079589570" /></a><br />கிருஷ்ணன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். நாகேஷைப் போல ஒல்லியான வெடவெட தேகம். நிற்கும்போது கூட ஏதாவது சாய்மானம் அவனுக்கு தேவைப்படும். துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பான். கையையும், காலையும் வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டியாடா என்று அவனை கேட்போம். இரவு 12 மணிக்கு முன்னதாக அவன் வீட்டுக்கு சென்றதாக சரித்திரமேயில்லை. தினமும் பீர், பீச்சு, பிகர், பார்க், சினிமா என்று அலுவலக நேரம் தவிர்த்தும் எந்நேரமும் பிஸியாகவே இருப்பான்.<br /><br />பெயருக்கு ஏற்றாற்போலவே கிருஷ்ணலீலா தான் தினமும். முருங்கை மரத்துக்கு சேலை சுற்றினால் கூட சைட் அடிக்கும் தெய்வீகக் குணம் அவனுக்கு வாய்த்திருந்தது. சித்தாளுவிலிருந்து சிலுக்கு வரை அவன் ஜொள்ளு விடாத பிகர்களே இல்லை. சிலநேரங்களில் பொறாமையாக இருக்கும். இவனுக்கு மட்டும் எப்படி பிகரெல்லாம் மாட்டுது என்று. ஒரு பிகரைப் பார்த்துவிட்டால் ஏதேதோ மேஜிக்கெல்லாம் செய்து எப்படியாவது அவளிடம் பேசிவிடுவான். அவளை ஒருமுறையாவது சிரிக்க வைத்துவிடுவான்.<br /><br />"கிளியோபாட்ராவா இருந்தாலும் என்னைப் பார்த்து குறைந்தபட்சம் ஒரு ஸ்மைலாவது அடிப்பாடா" என்று பீற்றீக் கொள்வான். இத்தனைக்கும் பையனின் பர்சனாலிட்டி ரொம்ப சுமார். மாநிறமாக இருப்பான். மூக்கு கொஞ்சம் நீளம். சுமாரான உயரம். வெடவெட உடலுக்கு சற்றும் பொருந்தாமல் லூசாக டிரஸ் செய்வான். ஆளும் கொஞ்சம் லூசுதான் என்பது வேறு விஷயம்.<br /><br />எப்போதும் அவன் காதல் லீலைகளையே எங்களிடம் பேசிக்கொண்டிருப்பான். ஆறாம் கிளாஸ் படிக்கும்போதே கிருஷ்ணன் காதலித்தானாம். பத்தாம் கிளாஸ் படித்தபோது அவன் கிளாஸ் (கல்யாணமாகாத) டீச்சரை சைக்கிளில் கூப்பிட்டுக் கொண்டு சென்றதிலிருந்து, கிண்டி பார்க்கில் அவனை விட மூத்த பிகரை ப்ரபோஸ் செய்தது வரை கதை கதையாக சொல்லுவான். அவன் சொல்லும் கதைகள் உண்மைதான் என்று அவனுக்கு வரும் டெலிபோன் பேச்சுகள் வாயிலாக அறிந்திருந்தோம்.<br /><br />அவனுக்கு வரும் டெலிபோன் அழைப்புகள் எல்லாமே ஒரே ரகம் தான். "கிருஷ்ணன் இருக்காரா?" என்று தேனை குழைத்து கேட்பாள்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குரல். ஒருநாள் கல்லூரி மாணவி பேசினாள் என்றால், மறுநாள் எக்ஸ்போர்ட் பிகர் (எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணிபுரியும் பிகர்) பேசுவாள். வெரைட்டி வெரைட்டியாக கேர்ள் பிரண்ட்ஸ் வைத்திருந்தான் கிருஷ்ணன். அய்யோ சொக்கா.. சொக்கா... எங்களுக்கெல்லாம் ஒண்ணுகூட அப்போ அமையலே.<br /><br />ஒருவிஷயத்தில் கிருஷ்ணன் உத்தமன். ஏகப்பட்ட பெண்களுடன் நட்பு, காதல் என்றிருந்தாலும் எல்லாமே வெஜிட்டேரியன் அளவிலேயே இருந்தது. அதிகபட்சமாக சில பெண்களிடம் லிப் டூ லிப் கிஸ் மட்டும் வாங்கியிருக்கிறானாம். அவனே சொன்னான். நம்பித்தான் தொலைக்கவேண்டும்.<br /><br />மச்சானுக்கு டவுசர் கிழிந்தது கல்பனா விவகாரத்தில் மட்டும் தான். எல்டாம்ஸ் சாலையில் எங்கள் அலுவலகம் அப்போது. ஒருநாள் யதேச்சையாக மாடியில் நின்று ஸ்டைலாக தம்மடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் தடதடவென்று இறங்கி ஓடினான். மீண்டும் தபதபவென்று மேலே ஏறிவந்தான். லைட்டாக பவுடர் போட்டு தலைசீவி மீண்டும் ஓடினான். அந்த வாரம் முழுக்க "ரன் லோலா ரன்" மாதிரி கிருஷ்ணன் ஓடிக்கொண்டே இருந்தான். அப்புறம் சில மாதங்கள் கழித்து அவன் ஓட்டம் நின்றது.<br /><br />பிறகு ஒருநாள் வேலுமிலிட்டரி ஒயின்ஷாப்பில் தான் கண்களில் நீர்பனிக்க அந்த ரகசியத்தை உடைத்தான். கல்பனா என்ற பிகரை கண்டவுடனேயே காதல்வசப்பட்டு எவ்வளவோ திருவிளையாடல்களை நிகழ்த்தியும் அவள் புறக்கணித்து விட்டாளாம். முதன்முறையாக ஒரு பெண்ணால் புறக்கணிக்கப்பட்ட வேதனை அவன் வார்த்தைகளில் தெரிந்தது.<br /><br />காலச்சக்கரம் உருண்டு தொலைத்தது. அந்த அலுவலகம் எதிர்பாராத வகையில் இழுத்து மூடப்பட்டதால் திசைக்கு ஒன்றாக பறந்தோம். கிருஷ்ணனையும், அவனது பிகர்களையும், பீர் அடித்துவிட்டு அவன் செய்த அலம்பல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து ஒரு கட்டத்தில் முழுக்க கிருஷ்ணனையே மறந்துவிட்டேன்.<br /><br />இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் நான் வேலைபார்க்கும் துணிக்கடைக்கு கிருஷ்ணன் வந்தான். புதியதாக பைக் வாங்கியிருக்கிறான். முன்பெல்லாம் டிவிஎஸ் சேம்ப் இல்லையென்றால் ஒரு ஓட்டை சில்வர் ப்ளஸ்ஸில் வருவான். பீர் புண்ணியத்தால் கொஞ்சமாக சதை போட்டிருந்தது. ஒட்டிப்போயிருந்த அவன் கன்னம் கொஞ்சம் பூசினாற்போல தெரிந்தது.<br /><br />"எனக்கு கல்யாணம்டா மச்சான்!" மகிழ்ச்சியோடு சொன்னான்.<br /><br />"ரொம்ப சந்தோஷம் கிருஷ்ணன். லவ் மேராஜா? ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ்லே சைன் பண்ணனுமா?"<br /><br />"இல்லேடா. அரேஞ்ச்டு மேரேஜ் தான்"<br /><br />ஆச்சரியமாக இருந்தது. கடைசியாக அவன் லவ்விக்கொண்டிருந்த விஜியையும் கழட்டி விட்டுவிட்டான் போலிருக்கிறது.<br /><br />"விஜிக்கு என்னடா ஆச்சி?"<br /><br />"அவளுக்கு கல்யாணம் ஆயி ஒரு குழந்தை இருக்குடா!"<br /><br />பரஸ்பர விசாரிப்புகள், புதிய வேலை, பழைய நினைவுகள் பற்றிய பேச்சுகள் முடிந்ததும் பத்திரிகையை கையில் திணித்து விடைபெற்றான். அவன் கல்யாணத்துக்கு போகமுடியவில்லை. தொலைபேசியில் மட்டும் வாழ்த்து தெரிவித்தேன்.<br /><br />சிலமாதங்களுக்கு முன்பு சைதாப்பேட்டை சிக்னலில் கிருஷ்ணனை பார்த்தேன். ரொம்ப அடக்க ஒடுக்கமாக பைக்கில் உட்கார்ந்திருந்தான். பில்லியனில் கொஞ்சம் ஒல்லியாக இருந்தது அவன் மனைவியாக இருக்கும். முகமெங்கும் மஞ்சள் பூசியிருந்தாள். கிருஷ்ணனின் மனைவியை பார்த்ததுமே புரிந்தது. வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்கு போகக்கூடிய பெண், ராமநாராயணன் படங்களில் வருவது போல அம்மன் பக்தையென்று.<br /><br />கிருஷ்ணனுக்கு கை காட்டினேன். பார்த்து வெறுமனே ஒரு வெற்றுச் சிரிப்பு சிரித்து "நல்லாயிருக்கியாடா?" என்று கேட்டான். அதற்குள் சிக்னல் விழுந்துவிட அவனுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிருஷ்ணனின் மனைவி என் குறித்து ஏதோ கேட்டிருக்க வேண்டும். என்னை லேசாக திரும்பிப் பார்த்து சினேகமாக சிரித்துவிட்டு ஏதோ சொல்லிக்கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டு சென்றான்.<br /><br />சென்றவாரம் கிருஷ்ணனை தி.நகரில் பார்த்தேன்.<br /><br />"நல்லாயிருக்கியாடா. அவசரமா கெளம்பணும்" என்றான்.<br /><br />"ஏண்டா பேசக்கூட நேரமில்லையா உனக்கு"<br /><br />"நீ வேற டைம் இப்பவே 9 ஆவுது. 10 மணிக்கு மேல போனா ராட்சஸி வீட்டை ரெண்டாக்கிடுவா!"<br /><br />"இரு மாப்பிள்ளை. ஒரு பீராவது அடிச்சிட்டு போலாம்"<br /><br />"பீரா? மச்சான் சொன்னா நம்பமாட்டே இப்பவெல்லாம் தம்மு கூட மாசத்துக்கு ஒண்ணு தான் அடிக்கிறேன்"<br /><br />"நெஜமாவா? அப்புறம் விஜி, அனுவெல்லாம் எப்படிடா இருக்காங்க?"<br /><br />"அவங்களையெல்லாம் நினைக்கிறதே இல்லடா. எந்தப் பொண்ணையும் இப்போவெல்லாம் தலைநிமிர்ந்து கூட பாக்குறதில்லே"<br /><br />"அடப்பாவி.. இவ்வளவு சீக்கிரம் நல்லவனாயிட்டியே? எப்படிடா?"<br /><br />"ம்ம்ம்... ஒரு கல்யாணத்தை பண்ணிப்பாரு புரியும்" அவசரமாக கையில் ஏதோ பையை எடுத்துக் கொண்டு ஓடினான். பொண்டாட்டிக்கு புடவை வாங்கியிருப்பான் போலிருக்கிறது.<br /><br />"இவனுக்கு தேவைதான்!" மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-515422580034428463?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com38tag:blogger.com,1999:blog-25593973.post-72147803560001223542009-07-03T10:23:00.001+05:302009-07-03T13:31:26.004+05:30இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை என்ன?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_NFjpiD6NQNU/Sk2rYQiKhlI/AAAAAAAAA5U/AX-6w4K_xvo/s1600-h/rabbit_proof_fence_ver5.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 218px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_NFjpiD6NQNU/Sk2rYQiKhlI/AAAAAAAAA5U/AX-6w4K_xvo/s320/rabbit_proof_fence_ver5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5354123965256861266" border="0" /></a><br /><br /><br /><br />ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, பதிவர்களுக்காக பதிவர்களே நடத்தும் அல்லது திரையிடும் அல்லது ரசிக்கும் உலக சினிமா காண்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு வெற்றிகரமாக சென்றமாதம் முதல் படத்தையும் நாம் அனைவரும் ரசித்தாயிற்று.<br /><br />ஆனால், ஜூலை மாதத்துக்கான படத் தேர்வில் நண்பர்களுடன் இணைந்து கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, விழுந்தது அடி. அதுதான் திரையிடலுக்கான இடம்.<br /><br />தேர்வு செய்து வைத்திருந்த ஹால், சில எதிர்பாராத சிக்கலால் கிடைக்கவில்லை. என்ன செய்யலாம் என பல அரங்குகளை அணுகி, செலவு கையைக் கடித்து அல்லது இடம் கிடைக்காமல் போய், திண்டாடி, இறுதியில் கிழக்குப் பதிப்பக மொட்டை மாடியிலேயே திரையிடலாம் என்ற முடிவுக்கு வருவதற்குள் நாட்கள் நகர்ந்துவிட்டன.<br /><br />சென்ற மாதமே பதிவர்கள் மத்தியில் கிழக்குப்பதிப்பகத்துடன் இணைந்து திரைப்படம் திரையிடுவது குறித்த உரையாடல் நிகழ்ந்தது. இந்த சூழலில் இந்த மாதம் அதே கிழக்குப் பதிப்பக மொட்டை மாடியிலேயே தவிர்க்க இயலாதநிலையில் படம் திரையிடப்படுகிறது.<br /><br />நான்குப்புறமும் துணிகள் கட்டி, படத்தை திரையிட்டு பார்த்து, அப்பாடா... ரசிப்பதில் பிரச்னையில்லை என்று தெரிந்த பிறகே இந்த அறிவிப்பு வெளியாகிறது.<br /><br />இந்த காலதாமத்துக்காகவும், மொட்டை மாடியில் திரையிடல் நடப்பதற்காகவும், நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.<br /><br />திரையிடலுக்கான இடத்தையும், புரொஜக்டரையும் இலவசமாக கொடுத்து உதவி செய்யும் பதிவர் பத்ரிக்கு, பதிவுலக நண்பர்கள் சார்பில் நன்றி.<br /><br />வாய்ப்பும், நேரமும் இருக்கும் அனைத்து பதிவர்களும், பதிவுகளை வாசிப்பவர்களும், தங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் வரும்படி அன்புடன் அழைக்கிறோம். இது நமக்காக, நாமே நடத்தும் விழா.<br /><br /><span style="font-weight: bold;">படத்தின் பெயர்: Rabbit Proof Fence</span> <span style="font-weight: bold;"><br />நாடு : ஆஸ்திரேலியா</span> <span style="font-weight: bold;"><br />இயக்குநர் : ஃபிலிப் நாய்ஸ்</span> <span style="font-weight: bold;"><br />நாள் : ஜூலை 5ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை</span> <span style="font-weight: bold;"><br />நேரம் : சரியாக மாலை 5.30 மணி</span> <span style="font-weight: bold;"><br />இடம் : கிழக்குப்பதிப்பகம், எல்டாம்ஸ் ரோடு, சென்னை</span><br /><br /><br />********<br /><span style="font-weight: bold;">இந்தப் படம் குறித்த ஒரு அறிமுகம்:</span><br />சாதாரணமான சம்பவங்களில் அசாதாரணமான நிகழ்ச்சிகளை புகுத்துவதே ஒரு நல்ல திரைக்கதைக்கு அழகு. எங்கோ, எப்போதோ, யார் சொன்னதாகவோ படித்த நினைவு. கமர்ஷியலாக வெற்றி பெற்ற படங்களாகட்டும், நம் மனதை பாதித்த செல்லூலாயிட் கவிதையாகட்டும் அனைத்தின் உள்ளார்ந்த விஷயமாக இந்த சரடு இருப்பதை யோசித்துப் பார்த்தால் உணர முடியும்.<br /><br />இப்படியான அசாதாரணமான நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் ‘ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்’. அரசாங்கத்தால் கடத்தப்பட்ட மூன்று சிறுமிகள் ஓரிடத்தில் அடைக்கப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்கள் தப்பித்து, 9 வாரங்கள், 1500 மைல் தொலைவை கால்நடையாகவே கடந்து தங்கள் வீட்டை அடைகிறார்கள். வழியில் ஒரு சிறுமி அரசாங்க காவலரிடம் பிடிபட்டு விடுகிறாள். எஞ்சிய இருவரும் எப்படி தங்கள் தாயுடன் சேருகிறார்கள் என்பதுதான் கதை. அரசாங்கத்தால் குழந்தைகள் கடத்தப்பட்டது ஆஸ்திரேலியாவில் சாதாரணமான சம்பவம். ஆனால், 1500 மைல் தொலைவை நடந்தே மூன்று குழந்தைகள் கடந்ததும், தங்கள் தாயுடன் இணைந்ததும் அசாதாரணமான நிகழ்வு.<br /><br />அதுசரி, அரசாங்கம் குழந்தைகளை ஏன் கடத்த வேண்டும்? அல்லது தாயிடமிருந்து ஏன் பிரிக்க வேண்டும்? வேறு வழியில்லை. சில வாக்கியங்களிலாவது ஆஸ்திரேலியாவின் வரலாற்றை சொல்லித்தான் ஆக வேண்டும். அப்போதுதான் ‘ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்’ படத்தின் ஆணிவேர் புரியும்.<br /><br />ஆஸ்திரேலிய கண்டம் அல்லது நாட்டை ஆங்கிலேயர்கள் ஆக்ரமித்தது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான். அதற்கு முன்பிருந்தே அந்த நாட்டில் வசித்தவர்கள் கறுப்பின மக்கள். அதாவது பூர்வ குடிகள். ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் ஆஸ்திரேலியா வருவதற்குள் கலப்பின குழந்தைகள் (ஆங்கில &amp; கறுப்பர்களின் குழந்தைகள்) அதிகரித்துவிட்டார்கள். இப்படி ‘இரண்டுங்கெட்டானாக’ திரிந்த குழந்தைகளுக்கு ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை சொல்லித்தந்து (புகுத்தி?) அவர்களை ஆங்கிலேயர்களாக, ஆங்கிலேயர்களின் வீட்டு வேலைக்காரர்களாக மாற்றும் வேலையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் இறங்கியது. இப்படி பெருகிய தலைமுறையை ‘ஸ்டோலன் ஜெனரேஷன்’ என இன்றும் அழைக்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கலாச்சார மாற்று நிகழ்வு 1900ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை சட்டத்தின் துணையுடன் நடந்தது. இந்த 71 ஆண்டுக் கால வரலாற்றில் 1931ம் ஆண்டு நடந்த சம்பவமே ‘ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்’ திரைப்படம்.<br /><br />2002ம் ஆண்டு வெளியான இந்தப் படம், ஆங்கிலத்தில் தயாரான ஆஸ்திரேலிய படம். ஒரு வகையில் இது அரசியல் படம். மறு வகையில் இது உணர்ச்சிகளின் காவியம். இன்னொரு வகையில் இது காமிராவின் கவிதை. ஆனால், நிஜத்தில் இது உண்மைக்கதை. அதனால்தான் மனதை சுடுகிறது.1999ம் ஆண்டு ‘ஃபாலோ தி ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்’ என்ற நாவல் வெளியானது. உலகளவில் இலக்கிய அந்தஸ்தும் பெற்றது. இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் மோலி என்னும் 14 வயது சிறுமி. வழக்கம்போல் ஆங்கிலேயர்கள் குழந்தைகளை 1931ம் ஆண்டில் ஒருநாள் வலுகட்டாயமாக அழைத்து செல்கிறார்கள். அதில் மோலி, அவளது தங்கை, உறவுக்கார சிறுமி ஆகிய மூவரும் அடக்கம். மோலியின் தலைமையில் மற்ற இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள், தங்கள் கிராமத்தை அடைகிறார்கள், இடையில் உறவுக்கார சிறுமி எப்படி பிடிபடுகிறாள் என்பதை உணர்ச்சியுடன் இந்த நாவல் விவரித்தது. இதில் முக்கியமான விஷயம் இந்த நாவலை எழுதியது மோலியின் மகள். பெயர் டோரிஸ் பில்கிங்டன்.<br /><br />படத்தின் இறுதியில் டைட்டில் கார்டு ஓடும்போது உண்மையான மோலியும், அவளது தங்கையும் கைத்தடியை ஊன்றியபடி நடந்து வருகிறார்கள். அவர்களது பிம்பங்களின் மீது எழுத்து நகர்கிறது. அதுவரையில் இது ஏதோ சினிமாவுக்கான கதை என நினைத்துக் கொண்டிருந்த நமக்கு இது உண்மைக்கதை என புரியும் தருணம் அதுதான். அது மட்டுமேதான். இறுதிவரை இந்த உண்மையை இயக்குனர் சாமர்த்தியமாக மறைத்திருக்கிறார். அதனாலேயே நம் மனதில் ஏற்படும் இனம் புரியாத சோகம் நம்மை விட்டு நீண்ட நாட்களுக்கு அகல மறுக்கிறது.<br /><br />ஃபிலிப் நாய்ஸ் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். நிலக்காட்சிகளை ஒவ்வொரு காட்சியின் தொடக்கத்திலும் லாங் ஷாட், மிட் ஷாட்டில் காட்டிய பிறகே அந்தக்காட்சிக்குள் நுழைவார். ஒருவகையில் இதையே நாய்ஸின் ஸ்டைலாக சொல்லலாம். காட்சிக்கான கனம் இப்படி சூழலை விவரிப்பதில்தான் இருக்கிறது என்பதை நுணுக்கமாக புரிந்து கொண்ட கலைஞன். ‘பேட்ரியாட் கேம்ஸ்’, ‘தி போன் கலெக்டர்’ போன்ற முந்தைய படங்களில் இந்த வித்தையை நாய்ஸ் கையாண்டிருக்கிறார். ஆனால், இந்த ‘ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்’ திரைப்படத்தில்தான் அது அழுத்தமாக பதிந்திருக்கிறது.<br /><br />ப்ளாஷ் பேக் இல்லாத நேர் கோட்டில் இந்தப் படம் நகர்கிறது. கொஞ்சம் பிசகினாலும் சென்டிமெண்ட் படமாகிவிடும் அபாயம். எனவே குழந்தைகளின் பயணத்தையும் அவர்களை கண்டு பிடிக்க ஆங்கிலேய அதிகாரி மேற்கொள்ளும் முயற்சியையும் துல்லியமாக மாறி, மாறி காட்டி பார்வையாளர்களின் கவனம் சிதறாதபடி இயக்கியிருக்கிறார். காட்சிகளின் நகர்வில் வேகம் இருக்கிறது. ஆனால், படம் முழுவதும் இழையோடும் புலம் பெயர்ந்தவர்களின் சோகம் நம்மையும் அறியாமல் அழ வைக்கிறது. புலம் பெயர்ந்தவர்களால் மட்டுமே உணரக் கூடிய அந்த சோகத்தை, அவலத்தை கொஞ்சமாவது மற்றவர்களையும் உணரச் செய்ததை பெரிய விஷயமாக கருதுகிறேன்.<br /><br />ஜீப்பில் வலுக்கட்டாயமாக குழந்தைகள் ஏற்றப்படும்போது மோலியின் தங்கை கதவின் கண்ணாடியில் முகம் பொத்தி அழ, ஏக்கம் கலந்த வெறித்த பார்வையுடன் மோலி தன் அம்மாவை பார்க்கும் காட்சி... தப்பித்து வரும் மூவரில், உறவுக்கார பெண் பிடிபட்டு இழுத்து செல்லப்படும்போது அவள் மோலியை பரட்டை தலையுடன் பார்க்கும் இடம்...ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என நிர்பந்திக்கப்படும்போது மூவரும் பரிதாபமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் காட்சி...<br /><br />என படம் நெடுக கண்கள் நடித்திருக்கின்றன. ஒரு நடிகனுக்கு அல்லது நடிகைக்கு கண்கள் எவ்வளவு அவசியம், வார்த்தைகள் விவரிக்க முடியாத சோகத்தை கருவிழிகள் எப்படி விவரிக்கும்... என்பதற்கு இந்தப் படம் ஒரு பாடம். அகத்தின் உணர்ச்சிகள் கண்களில்தானே தெரியும்?<br /><br />படம் நெடுக தவிப்பு இருக்கிறது. கலாச்சாரங்கள் மாறினால் என்ன? நாகரீகம் வளர்ந்தால் என்ன? மனிதனின் அடிப்படை தவிப்புகள் ஒன்றுதானே? தன்னிடமிருந்து குழந்தை பறிக்கப்படும்போது அந்தத்தாய் கல்லால் தன் நெற்றியில் அடித்துக் கொண்டு அழுகிறாள். பூர்வகுடி தாயார்தான். ஆனால், நாகரீகம் தெரிந்த நம் அம்மா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இருவருக்குள்ளும் இருக்கும் தவிப்பை விவரிக்க மொழி அவசியமா?<br /><br />ஒரே இலக்கை நோக்கித்தான் மூன்று குழந்தைகளும் பயணப்படுகிறார்கள். அம்மாவை பார்க்கவேண்டும். அம்மாவுடனேயே தங்க வேண்டும். ஆனால், இறுதியில் இருவர்தான் இலக்கை எட்டுகிறார்கள். நம் பயணங்களும் அப்படித்தானே அமைகிறது. ஒரே இலக்கை நோக்கி நகரும் நண்பர்கள் இறுதியில் ஒன்றாகவா அடைகிறார்கள்? வாழ்க்கையின் நதியில் அடித்து செல்லப்படும்போது கடலில் சங்கமிக்கும் பாக்கியம் சிலருக்குத்தானே கிடைக்கிறது.<br /><br />பெரியவர்களே இல்லாத உலகில் குழந்தைகள் யாரை நம்புவார்கள்? தங்களைத் தவிர வேறு யாருமே தங்களை காப்பாற்ற மாட்டார்கள் என ஒரு மனிதன் உணர்வது வாழ்க்கையில் அவனை உயர்த்தும். ஆனால், குழந்தைகள் அந்த நிலைக்கு தள்ளப்படுவது எவ்வளவு பெரிய சோகம்? மழலையின் சந்தோஷம் துடைக்கப்பட்டு பயமும் எச்சரிக்கையும் அந்த இடத்தை நிரப்பும் தருணத்தை வாழ்க்கையின் மிகப் பெரிய வன்முறை என்றுத்தானே சொல்லமுடியும்?<br /><br />உலகெங்கும் கேட்கப்படாமலேயே அப்பத்தாக்களின் கதைகள் உலவிக் கொண்டிருக்கின்றன. அம்மாவின் தவிப்பு தீர்க்கப்படாமலேயே அலைந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளின் நம்பிக்கைகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. சூரியனும் உதிக்கிறான், மறைகிறான். எதையும் பார்க்காமல், உணராமல், தீர்க்காமல் நாமும் தேனீர் அருந்திக் கொண்டுத்தான் இருக்கிறோம்...<br /><span style="font-weight: bold;">நள்ளிரவில் தொந்தரவு</span><br />இந்தப்படத்தின் இயக்குனரான ஃபிலிப் நாய்ஸ், ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர். ஹாலிவுட்டில் படங்களை இயக்கிக் கொண்டிருந்தவர். ஹாரிஸன் போர்டின் உதவியாளர். இயக்கிய படங்களில் பெரும்பாலானவை ஆக்ஷன் படங்கள்தான். ஒருநாள் இரவு 3 மணிக்கு ஒரு பெண்ணிடமிருந்து நாய்ஸுக்கு ஃபோன் வந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர் பதறிப்போய் தொலைபேசியை எடுத்தார். மறுமுனையில் பேசியவர் தன் பெயர் கிரிஸ்டின் ஒல்சென் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘சமீபத்தில் ஒரு நாவலை படித்தேன். பிரமாதமாக இருந்தது. மனதை பிசைந்தது. உடனே அதற்கு ஒரு திரைக்கதையை எழுதிவிட்டேன். உங்களால் மட்டும்தான் இந்த திரைக்கதையை படமாக எடுக்க முடியும். உடனே வந்து தரவா?’ நாய்ஸ் அதிர்ந்துவிட்டார். நடு இரவில் இப்படி ஒரு தொலைபேசி அழைப்பா? பேசியவர் யாரென்று அவருக்கு தெரியவே தெரியாது. பேசாமல்விட்டால், நிச்சயம் அந்தப் பெண் தொந்தரவு செய்வாள். அவளது குரல் அப்படித்தான் இருக்கிறது. சலிப்புடன் வரசொன்னார். திரைக்கதையை படித்தார். உடனே படமாக எடுத்துவிட்டார்.<br /><span style="font-weight: bold;">விருதுகள்</span><br />2002ம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய திரைப்பட கல்லூரி விருதை ஒட்டுமொத்தமாக இந்தப்படம் அள்ளியது. சர்வதேச அளவில் 2002ம் ஆண்டுக்கான சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகைக்கான விருதை ஆஸ்பென் ஃபிம்பெஸ்ட் (அமெரிக்கா), ஈடின்பர்க் ஃபிலிம் பெஸ்டிவல் (இங்கிலாந்து), டர்பன் ஃபிலிம் பெஸ்டிவல் (தென்னாப்பிரிக்கா)... ஆகிய இடங்களில் பெற்றது.<br /><br /><span style="font-weight: bold;"><br />நடிக்க மாட்டேன் போ!</span><br /><br />நிஜமான பூர்வகுடி பெண் குழந்தைகளை நடிக்க வைக்க நாய்ஸ் முடிவு செய்தார். இதற்காக பலரை தேர்வும் செய்தார். படத்தின் மைய கதாபாத்திரம் மோலி. இதற்காக சலித்து, சலித்து ஈவர்லின் சேம்பி என்ற பெண்ணை பிடித்தார். இந்தப் பெண் இயக்குனரை படுத்தியபாடு இருக்கிறதே... அது தனி கட்டுரை. இரண்டு முறை சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்பிலிருந்து ஓடிவிட்டாள். ஒருமுறை ஊருக்கு செல்ல டெலிஃபோன் பூத்தில் டிக்கெட் புக் செய்யும்போது பிடிபட்டாள். இந்தப் பெண் வேண்டவே வேண்டாம் என நாய்ஸ் முடிவு செய்து வேறு நடிகையை தேடினார். ஆனாலும் யாராலும் ஈவர்லின் போல் நடிக்க முடியவில்லை. கடைசியில் கெஞ்சி, கெஞ்சி, அவளை மோலியாக நடிக்க வைத்தார். படம் முடிந்தது. நாய்ஸின் தத்துப் பெண்ணாகவே ஈவர்லின் மாறிவிட்டாள். விருதுகளையும் குவித்துவிட்டாள்.<br /><br /><br />**********<br /><br />பதிவு மொத்தமும் - பைத்தியக்காரனின் <a href="http://naayakan.blogspot.com/2009/07/blog-post_03.html">இந்த பதிவிலிருந்து</a><br /><br />அவருக்கு நன்றி.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-7214780356000122354?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com15tag:blogger.com,1999:blog-25593973.post-70189371041562126222009-06-30T15:29:00.009+05:302009-06-30T16:05:33.109+05:30சாரு டைஜஸ்ட்!நானும் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்கிறேன். அவ்வப்போது அங்குமிங்குமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சாரு பற்றி எழுதியவற்றை தொகுத்து தருகிறேன். சாருவின் வாசகன் என்றாலே ஏதோ ரஜினி ரசிகன் என்பது மாதிரி கேவலப்படுத்தும் போக்கு வலையுலகில் பொதுப்புத்தியாய் பதிந்து விட்டிருக்கிறது. ஆனால் வலையுலகம் தாண்டிய தீவிர வாசகர்கள் மத்தியில் அவர் என்றுமே ஹீரோதான். இன்று சாருவை ஏளனப்படுத்துபவர்களும், அவரை இரண்டாகப் பிளந்து வார்த்தைப்போர் நடத்துபவர்களும் கூட ஒருகாலத்தில் சாருவின் வாசகராய் நிச்சயம் இருந்திருப்பார். சாரு ஒருவகையில் கலைஞர் மாதிரி. கலைஞரை புறக்கணித்து எப்படி தமிழக அரசியல் பேச இயலாதோ, அதுபோல சாருவையும், அவரது எழுத்துக்களையும் புறக்கணித்து, தாண்டிக்குதித்தெல்லாம் தற்கால தமிழிலக்கியம் பேசமுடியாது. அவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும், யார்வேண்டுமானாலும் விமர்சனம் வைத்துவிட்டுப் போகட்டும். சாரு ஒரு மேஜிக்மேன். எழுத்துக்களால் வித்தை காட்டுபவர். அவரது வித்தைகள் எனக்கு குதூகலத்தை தருகிறது. அழவைக்கிறது. பைத்தியம் பிடிக்க வைக்கிறது. உன்னதத்தின் உச்சியை எட்ட உதவுகிறது. குத்துக்காலிட்டுப் பார்க்கும் ஒரு ஐந்து வயது சிறுவனின் ஆர்வத்தோடு அவரது வித்தைகளை விரும்புகிறேன். வித்தை காட்டுபவரை நேசிக்கிறேன்.<br /><br />* - * - * - * - * - * - * - * - *<br /><br />அன்பில்லாத வாசுகி!<br /> <br />வா சுகி என்று உன்னை அழைக்க ஆசைதான், செருப்பால் அடிப்பாயோ என்று பயந்து 'வா'வுக்கும் 'சு'வுக்கும் இடைவெளி விடாமல் வாசுகி என்றே அழைக்கிறேன். நீ இப்பிரதியை வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில் என்னை கட்டியணைத்து உதடுகளில் முத்தமழை பொழிய நினைத்திருக்கலாம். முதுகில் கத்தியால் குத்த நினைத்திருக்கலாம். உன்மத்தம் பிடித்து என் தலைமுடியை உலுக்கி தவடையில் அறைய நினைத்திருக்கலாம். நீ தோழியா இல்லை காதலியா என்று பாட்டுப்பாடி பெண்ணிடம் தன் உள்ளத்தினை திறந்தவனை காவல்துறை கைது செய்திருக்கிறது. எக்சிஸ்டெண்சியலிஸ்ட் முனியாண்டியின் பிரதிகளை ஒன்பதாவது நூற்றாண்டு செத்த மூளை கலைத்துப் போட்டதைப் போல என்னுடைய பிரதிகளையும் பதினெட்டாம் நூற்றாண்டின் பழுதடைந்த கிட்னி சீட்டுக்கட்டின் சீட்டுகளைப் போல சிதறவிட்டிருக்கிறது. சரியாக ஒன்பது சீட்டுகள். மீதி எங்கே? நல்லவேளை பூக்கோ அயல்நாட்டில் பிறந்து, வாழ்ந்து, மடிந்துவிட்டார். பூக்களே பூக்களே என்று மரத்தை சுற்றி டூயட் பாடும் தமிழ்பட கதாநாயகன்களை பார்த்து ஏன் தெலுங்குகாரர்கள் சிரிக்கிறார்கள். பூக்கு என்ற வார்த்தைக்கு தெலுங்கில் என்ன பொருள் என்று யாராவது அழகிய இளம் தெலுங்குப் பெண்ணிடம் கேட்டுப்பார்த்தால் நாணுவாளா? சினம் கொள்ளுவாளா? சிணுங்குவாளா?. இவ்வார்த்தைக்கு என்ன பொருளென்று பொதுவெளியில் தமிழில் எழுதினால் என்னை தமிழர்கள் கல்லெடித்து அடிப்பார்களா? பூவால் வருடுவார்களா? நான் ஏன் மனநோயாளியாக படைக்கப்படவில்லை? உலக மகிழ்ச்சியையெல்லாம் ஒரு கோப்பை மதுவில் அடக்கி ஒரே மூச்சில் குடித்து கள்வெறி கிளர்த்தெழ ஆனந்த தாண்டவம் ஆடியிருக்கலாமே? எல்லாம் சரி. எழுத்துக்களை எழுத்துக்களால் எழுத்தாய் எழுத முயற்சித்து எழுத இயலாமல் எழுத்தை பயிற்சித்து எழுத்தை பரிட்சீத்து எழுத்துக்களாய் நானே மாறினாலும் எழுத முடியாமல் தோற்று வெட்கி தலைகுனிந்து எழுதி எழுதி செத்துக்கொண்டிருக்கிறேன். நான் சோம்பேறி. யாராவது எழுத்தாய் மாறி எழுத்துக்களை எழுதுங்கள். வாசிக்க மட்டும் செய்கிறேன்.<br /><br /><a href="http://www.luckylookonline.com/2008/10/blog-post_1447.html">http://www.luckylookonline.com/2008/10/blog-post_1447.html</a><br /><br />* - * - * - * - * - * - * - * - *<br /><br />சாருவை பத்தாண்டுகளுக்கு முன்பாக தூரமாக பார்த்து ரசித்திருக்கிறேன். அப்போது ஸீரோ டிகிரி எழுதிக் கொண்டிருந்ததாக நினைவு. காசாமேஜர் ரோட்டில் இருந்த தினமலர் அலுவலகத்துக்கு எப்போதாவது வருவார். அங்கு ஆபிஸ் பாயாக வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்துமணி இவருக்கு நெருங்கிய நண்பர். சாருவை மட்டுமல்ல ஜி.ஏ, ராஜேஷ்குமார், ஜே.டி.ஆர், அனுராதாரமணன், எஸ்.ஆர்.எஸ், கார்ட்டூன் பீட்டர், ஓவியர் கல்பனா, அலையோசை எம்.பி.மணி என்று ஏகப்பட்டவர்களை பார்க்கும் வாய்ப்பு காசாமேஜர் ரோட்டில் தான் எனக்கு கிடைத்தது.<br /><br />சங்கோஜம் எனது இயல்பு. யாரிடமும் நானாக என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள மாட்டேன். மற்றவர்கள் ரஜினியையோ, கமலையோ பார்க்க ஆசைப்பட்ட நேரத்தில் எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் நேரில் பார்க்கும் ஆர்வம் எனக்கிருந்தது. பிற்பாடு நான் சந்திக்க விரும்பிய பலரையும் (சுஜாதா, மதன், பாலகுமாரன், சுப்ரஜா, நக்கீரன் கோபால், காமராஜ், சிவசுப்பிரமணியம், ஜி.கவுதம், திருமாவேலன், பா.ராகவன், உதயசூரியன், யெஸ்.பாலபாரதி, வாசுதேவன், ப்ரியா கல்யாணராமன், கிருஷ்ணா டாவின்ஸி, தமிழ்மகன், அருள் எழிலன், ப்ரியா கல்யாணராமன், அசோகன், நா.கதிர்வேலன், கண்ணன் என்று ஏகப்பட்ட பத்திரிகையாளர்கள்) நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிலரிடம் பேசியிருக்கிறேன். பலரை தூரத்தில் இருந்து பயத்தோடு, மரியாதையோடு பார்த்ததோடு சரி. இன்னமும் ஒருவரை பார்க்க ஆர்வமுண்டு. அவர் ஆனந்த விகடன் லூசுப்பையன்.<br /><br />இவர்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தபோது அவர்கள் குறித்து நான் மனதுக்குள் கற்பனை செய்து வைத்திருந்த ஒரு தோற்றப்பிம்பம் முற்றிலும் உடைந்துப் போனது. உதாரணத்துக்கு பா.ராகவன் ஷேக்குகள் மாதிரி உடையணிந்திருப்பார், தலையில் யாசர் அராபத் மாதிரி துண்டு கட்டியிருப்பார் என்று நினைத்திருந்தேன். அருள் எழிலன் சேகுவேரா தோற்றத்தில் இருப்பார், இடையில் ஒரு துப்பாக்கியை செருகி வைத்திருப்பார், வீரப்பன் மாதிரி மீசையிருக்கும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். மாறாக ஒருவர் தோற்றத்தில் ஞானப்பழமாகவும், மற்றவர் என்னை மாதிரி கோயிந்தாகவும் இருந்தார். சாரு நான் உருவகப்படுத்தி வைத்திருந்த தோற்றத்துக்கு அச்சு அசலாக பொருந்தியவர். உயரம் மட்டும் கொஞ்சம் கம்மி.<br /><br />சாருவிடம் ஒரு வார்த்தை கூட அப்போது பேசியதில்லை. ஏனோ தெரியவில்லை. சாருவை விட எஸ்.ஆர்.எஸ். தான் அப்போது என்னை மிகவும் கவர்ந்தவர். அவர் மடிப்பாக்கத்து வாசி என்பதால் அவரிடம் சில சமயம் வாலண்டியராக பேசியிருக்கிறேன். எஸ்.ஆர்.எஸ்.ஸை நிறைய பேருக்கு தெரியாது. காண்டு கஜேந்திரன், டமாரு குமாரு கேரக்டர்களையெல்லாம் நான் ஜாலியாக உருவகப்படுத்த எஸ்.ஆர்.எஸ்.ஸின் எழுத்துக்கள் தான் அடிப்படை. ‘தவம்' என்ற மிக சீரியஸான ஒரு நாவலையும் எழுதியவர் அவர். லைட் ரீடிங்கில் ஆர்வம் அதிகமாக இருந்த அந்த வயதில் சாரு என்னை பெரிய அளவில் ஈர்க்கத் தவறினார்.<br /><br />இணையத்தளங்கள் புழக்கத்துக்கு தாராளமாக வந்தபின்னரே சாருவை கோணல்பக்கங்கள் மூலமாக வாசிக்க ஆரம்பித்தேன். ஹெராயின் எப்படிப்பட்ட போதையை தரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் சாருவின் எழுத்துக்கள் அதைவிட போதை தரவல்லது. பைபிளின் பழைய ஏற்பாடு சைஸில் பிரும்மாண்டமாக இருக்கும் ராஸலீலாவை வாசிக்க எடுத்தவர்கள், தூக்கம் பசி மறந்து முழுக்க வாசித்து முடித்தபின் தான் கீழே வைப்பார்கள். சாருவை முழுக்க முழுக்கவெல்லாம் வாசித்ததில்லை. அனேகமாக அவரது எழுத்துக்களை 30 முதல் 40 சதவிகிதம் தான் வாசித்திருப்பேன். சாரு பங்குகொண்டு உருவாக்கிய 'கர்னாடக முரசும் நவீன தமிழிலக்கியத்தின் மீதான் ஒரு அமைப்பியல் ஆய்வும்' நூலை வாசிக்க ஆர்வமாக இருக்கிறது. இதன் பிரதி சாருவிடமே கூட இப்போது இல்லையென்று நினைக்கிறேன்.<br /><br />முதன்முறையாக ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸீரோ டிகிரி வாசித்தபோது பைத்தியமே பிடித்துப் போனது. இதையெல்லாம் நாவல் என்று எப்படி பைத்தியக்காரர்கள் சொல்கிறார்கள் என்றுகூட நினைத்ததுண்டு. ஆனால் பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பை தீவிரப்படுத்திய பின்னர் மீள்வாசிப்பின் போது ஸீரோ டிகிரி வேறு சில பரிமாணங்களை காட்டுகிறது. புதிய வடிவங்களை தமிழிலக்கியத்திற்குள் புகுத்துகிறது என்பதை உணரமுடிந்தது. கண்ணாயிரம் பெருமாள் கேரக்டரை அவர் செதுக்கிய பாணி வெகுவாக கவர்ந்தது.<br /><br />முதல் வாசிப்பில் நான் நிராகரித்த ஸீரோ டிகிரி இன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பல சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஸீரோ டிகிரி தமிழுக்கு மட்டுமே புதிய வடிவமல்ல, இந்திய இலக்கியத்துக்கே புதிய வடிவம் என்பதை இப்போது உணரமுடிகிறது.<br /><br />இரண்டாண்டுகளுக்கு முன்பாக பூகம்பத்தையும், சுனாமியையும் ஏற்படுத்திய ராஸலீலாவுக்கு பிறகு கொஞ்சம் அமைதிகாத்த சாரு இந்த ஆண்டு மே மாதம் மறுபடியும் விஸ்வரூபம் எடுத்தார் குட்டிக்கதைகள் மூலமாக. குட்டிக்கதைகள் என்றதுமே குட்டிகளைப் பற்றியதாக தானிருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு என்னைப் போன்ற ரசிகர்களுக்கு இருந்தது. எதிர்ப்பார்ப்புக்கேற்ப அஸ்வினி என்ற குட்டியிலிருந்தே கதை ஆரம்பமானது. வகையாக கடந்த ஏழு மாதங்களாக தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் கண்ணாயிரம் பெருமாள். சாருவின் ராசியான கூட்டு எண் 9 வரும் வகையில் குட்டிக் கதைகளின் எண்ணிக்கை 108 ஆக நிர்ணயிக்கப்பட்டது.<br /><br />இப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் 106 குட்டிக்கதைகள் இணையத்தில் வெளிவந்துவிட்டது. அடுத்த வாரம் நிறைவு பெற்றுவிடும் என்று நம்புகிறேன். பிட்டு படம் மாதிரி பிட்டு பிட்டாக படித்தாலும் ரசிக்க முடிந்தது. ஒரே புத்தகமாக, நாவலாக இது வெளிவரும் என்று நம்புகிறேன். ஒரே மூச்சில் படிக்கும் அனுபவம் அஜால் குஜாலாக இருக்கக்கூடும்.<br /><br />குட்டிக்கதைகள் நூறை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கண்ணாயிரம் பெருமாள் தற்கொலை முயற்சி, மீராவுக்கு ஸ்கீஃஸோப்ரீனியா என்று அமளிதுமளிப்பட்டது. கண்ணாயிரம் பெருமால் குவார்ட்டர் அடித்துவிட்டு குப்புறப் படுத்துக்கொள்ள கதையின் பாத்திரங்களில் ஒன்றான விஷால் தொடர்ந்தார். வாசகர்கள் பைத்தியம் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள்.<br /><br />சாரு எப்போதோ எம்மெனெம் பற்றி எழுதியது நினைவுக்கு வருகிறது (ராஸலீலா?). எம்மெனெம் தன் மனைவி பெயரை பயன்படுத்தி ஏடாகூடமாக ஒரு ராப் ஆல்பம் தயாரிக்க, அவரது மனைவி தற்கொலைக்கு முயற்சித்து பின்னர் விவாகரத்தும் செய்துவிட்டாராம். கேத்தி ஆக்கர் சொன்னதாக சாரு ஒருமுறை சொல்லியிருந்தார். ”பாத்திரமாக வரும் ‘நான்',ஐயும், லவுகீக ‘நான்'ஐயும் போட்டு குழப்பி, உழப்பிக் கொள்ளக்கூடாது”. இதனால் எல்லாம் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? எனக்கு ஏதோ கொஞ்சம் புரிகிறது.<br /><br />குட்டிக்கதைகள் அனேகமாக இந்த புத்தகக் கண்காட்சிக்கு முழுநீளப் புத்தகமாக வரக்கூடும். அதனால் பூலோகப் பிரளயமும் ஏற்படக்கூடும்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SknmfEjrTTI/AAAAAAAACRE/qBJYYjqp3LA/s1600-h/charu-01.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 336px; height: 396px;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SknmfEjrTTI/AAAAAAAACRE/qBJYYjqp3LA/s400/charu-01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5353063053580258610" /></a> மேலேயிருக்கும் சாருவின் வண்ணப்படம் அவரது படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது. போதையும், அலட்சியமும்... ஆஹா.. தலைவரின் மனநிலை அப்படம் எடுக்கப்பட்டபோது எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது.<br /><br /><a href="http://www.luckylookonline.com/2008/12/blog-post_13.html">http://www.luckylookonline.com/2008/12/blog-post_13.html</a><br /><br />* - * - * - * - * - * - * - * - *<br /><br />சாரு சந்தேகமில்லாமல் 2009ன் ஹீரோ. ஆண்டின் ஆரம்பத்திலேயே அதிரடியாக பத்து புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். எப்போதும் இல்லாத வகையில் நன்றாகவும் அவரது புத்தகங்கள் விற்று வருகிறது. சரியாக சேல்ஸ் ஆகவில்லை என்று இம்முறை புலம்பமாட்டார் என நம்புகிறேன். ரூபாய் தொள்ளாயிரத்துக்கு மொத்தமாக பத்து புத்தகங்களும் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கிறது. உயிர்மை அரங்குக்கு வருபவர்களெல்லாம் கையில் சாரு இல்லாமல் திரும்புவதில்லை. உயிர்மையில் மட்டுமல்ல ஜீயே பப்ளிகேஷனிலும் சாரு சக்கைப்போடு போடுகிறார். ‘ஸீரோ டிகிரி’ மக்கள் பதிப்பு முப்பது ரூபாய்க்கும், கோணல் பக்கங்களின் ஒரு தொகுதி பத்துரூபாய்க்கும் அள்ளிக்கொண்டு போகிறது.<br /><br />முன்பெல்லாம் எல்லோரையும் விட்டு ஒதுங்கி தனியாகப் போய்க்கொண்டிருந்தவர் இப்போது பெரும்பாலும் ஒத்துப் போகிறார் என்று நினைக்கிறேன். புத்தக வெளியீடுகளிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். பொறுமையாக பேசுகிறார். உயிர்மை அரங்கில் இரண்டு நாட்கள் இருந்தார். கையெழுத்து கேட்பவர்களிடம் எல்லாம் முகம் சுளிக்காமல் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறார். ”எக்சிஸ்டென்ஷியலிஸம்னா என்ன?” என்று கேட்ட இளைஞர் ஒருவருக்கு பொறுமையாக பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். விகடன் ஜாலி ஸ்பெஷலுக்கு ஜாலியாக இண்டர்வியூ கொடுக்கிறார். டப்ளினுக்கு போவதெற்கெல்லாம் நேரம் கிடைப்பது இப்போது அரிதாகியிருக்கலாம்.<br /><br />(குட்டிக்கதைகளைத்) காமரூபக் கதைகளைத் தொடர்ந்து அடுத்த தடாலடி பிராஜக்டைத் தொடங்கிவிட்டாராம். அடுத்தாண்டு தொடக்கத்தில் அவரது எழுத்துக்களை இருபது புத்தகங்களாக ஒருசேர வெளியிடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.<br /><br />’சாருவின் தொண்டரடிப்பொடியாழ்வார்’ போன்ற விமர்சனங்கள் எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது. ஒன்றுமில்லாத ரஜினியையே புனிதப் பிம்பமாக்கி மகிழும், முரட்டுத்தனமாக ரசிக்கும் ரசிகமனோபாவம் கொண்ட தமிழ் குமுகாயத்தை சேர்ந்தவர்கள் நாம். சாருவை தூக்கி வைத்துக் கொண்டாட ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. நாத்திகம்-ஆத்திகம் தொடர்பான அவரது கருத்துக்கள் எனக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக (உவகையளிப்பதாக) தோன்றாத போதிலும் சாருவை ஏனோ ரொம்பவும் பிடித்திருக்கிறது. என் கருத்து எனக்கு என்று இருக்கும் சாருவிடம் எதிர்கருத்து வைத்து பிரயோசனம் இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்புறம் மனிதர் மம்மி-ரிட்டர்ன்ஸ் ரேஞ்சில் எதுவாவது நம்மைப் பற்றி எழுதுவானேன், வேலியில் போகும் ஓணாணைப் பிடித்து வேட்டிக்குள் விட்டுப்பானேன்.<br /><br /><a href="http://www.luckylookonline.com/2009/01/blog-post_15.html">http://www.luckylookonline.com/2009/01/blog-post_15.html</a><br /><br />* - * - * - * - * - * - * - * - *<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SknnpFQGc9I/AAAAAAAACRM/NKY8_u517lY/s1600-h/charu.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SknnpFQGc9I/AAAAAAAACRM/NKY8_u517lY/s400/charu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5353064325076906962" /></a>ஒரு காலத்தில் டிகிரி என்ற சொல்லைக் கேட்டதுமே டிகிரி காப்பி தான் நினைவுக்கு வரும். அம்மாவழி சின்னப் பாட்டனார் சிறுவயதில், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த ஒரு அய்யர் மெஸ்ஸில் டிகிரி காப்பி வாங்கித் தருவார். அவரும் அனுபவித்துக் குடிப்பார். தஞ்சையில் பிறக்கவேண்டிய உல்லாசவாசி. தப்பித்தவறி உத்திரமேரூருக்கு அருகில் பிறந்து தொலைத்தார். அவரால் நானும் காஃபி பிரியனானேன். வீட்டில் அனைவருக்கும் தேநீர் பிடித்தாலும், எனக்கு மட்டும் எப்போதும் காஃபி தான். காஃபியை குடிக்கும்போது கசப்பாக உணரவேண்டும். குடித்து முடித்தபின் உதடுகளை நாக்கால் தடவினால் லேசாக தித்திக்க வேண்டும். எனக்குப் பிடித்த காஃபிக்கான இலக்கணம் இது. எனக்காகவென்று அம்மா ஸ்பெஷலாக ஃபில்டர் கூட வாங்கி வைத்திருந்தார். இப்போது இன்ஸ்டண்ட் காஃபிக்கு மாறி சில ஆண்டுகளாகிறது.<br /> <br />எனவே இப்போதெல்லாம் டிகிரி என்ற வார்த்தையைக் கேட்டால் காஃபிக்குப் பதிலாக சாரு நினைவுக்கு வருகிறார். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் சாருவின் ஸீரோ டிகிரியை முதல்முறை வாசித்தபோது மனநிலை சில வாரங்களுக்கு பாதிக்கப்பட்டது. மூளை லட்சம் தடவை கிறுகிறுத்தது. ஒரு கோடி அபின் வில்லைகள் தரக்கூடிய போதையை அப்பிரதி தந்தது. இதன் ஆங்கில மொழியாக்கமும் அதே வாசனையோடு, அதே போதையோடு, அதே கிறுகிறுப்பை அட்சரம் பிசகாமல் தருகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் ஸீரோ டிகிரியை வாசித்து தலைமுடியை பிய்த்துக் கொண்டு அலைகிறேன் என்று சொன்னார். சாருவை புதியதாக வாசிக்க நினைப்பவர்கள் ராஸலீலாவை முடித்துவிட்டு ஸீரோ டிகிரிக்கு வருவது நலம். மனதளவில் யதார்த்த அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கு தயாராக முடியும். அதிர்ச்சி = ஷாக். புத்தகம் ஷாக்கடிக்குமா என்று கேட்டால் ஸீரோ டிகிரி ஷாக்கடிக்கும் என்றே சொல்லுவேன். அப்போது ராஸலீலா? சில சமயம் தலையை தடவிக் கொடுக்கும். சில சமயம் தலையை நீருக்கடியில் அழுத்தி மூச்சு திணறவைக்கும்.<br /> <br />ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கும் பிளாஃப்ட் பப்ளிகேஷன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. ஸீரோவும் சூன்யம் தான். சூன்யத்தின் நிறம் கருப்பு. அதனாலோ என்னவோ நிகழ்ச்சியின் தீமும் கருப்பு. மேடையில் 'நெப்போலியன்' பாட்டிலில் செடியோடு மலர்ந்திருந்த ரோஜாவின் நிறமும் கருப்பு. மேடையின் பேக்டிராப் கருப்பு. சாரு அணிந்திருந்த சட்டையும் கருப்பு. ஐம்பத்தி நான்கு வயதான கமலஹாசனின் இளமைத்தோற்றத்துக்கு சிலிர்க்கிறோம். அவரை விட மூன்று வயது அதிகமான சாரு கமலை விட இளமையாக தெரிகிறார். இன்னும் ஏன் இவரை சினிமாக்காரர்கள் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் நடித்த பாத்திரத்தைப் போன்ற பாத்திரங்களில் சாரு நடித்தால் அள்ளிக்கொண்டுப் போகும்.<br /> <br />புத்தகத்தின் சில அத்தியாயங்களை தமிழில் எழுதிய சாருவும், மலையாளத்தில் எழுதியவரும், ஆங்கிலத்தில் எழுதியவர்களும் வாசித்துக் காட்டினார்கள். மொழிமாற்றமாக (Translation) இல்லாமல் மொழியாக்கமாக (Transcreation) செய்யப்பட்டிருப்பதாக விழாவுக்கு வந்திருந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் சிலர் குறிப்பிட்டார்கள். கலாஸ்ரீ, நிலாஸ்ரீ அத்தியாயத்தை வாசிக்கும்போதெல்லாம் சாரு சரியான பிக்கப்பில் இல்லை. சாருவின் கம்பீரத் தோற்றத்துக்கு ஏற்ற சிம்மக்குரல் அவருக்கு இல்லையோ என்ற தோற்றம் எழுந்தது. மனிதர் மென்மையாக, மெதுவாகப் வாசித்தார். சாரு ரசிகர்கள் பட்டா போட்டு அடிக்கடி வாசிக்கும் அந்த 'எலக்ட்ரிக் சுடுகாடு' அத்தியாயம் வந்தபோது குரலை உயர்த்தி ஏற்ற இறக்கத்தோடு தமிழின் புனிதவார்த்தைகளை சாரு உச்சஸ்தாயியில் வாசித்தபோது அப்ளாஸ் அள்ளிக்கொண்டு போனது. அந்த அத்தியாயத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தது ஆச்சரியமல்ல. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டார்கள். Pussy, Bastard, pitch, fuck, மானே, தேனே போட்டு எப்படியோ அசல் பிரதியில் இருந்த அம்சங்களை கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். அந்த அத்தியாயத்துக்கு மட்டும் மூன்று பாட்டில் ரம் செலவாகியிருக்கும் என்று தெரிகிறது. அதுபோலவே 1930களின் பிராமண குடும்பத்து தமிழை மலையாளம் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்வதற்குள் டவுசர் கிழிந்திருக்கிறது.<br /> <br />ஸீரோ டிகிரியின் ஆங்கிலப் பதிப்பை மட்டும் அமெரிக்க எழுத்தாளர் கேத் ஆக்கருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். தமிழ் பதிப்பை அவரது 'அம்முவுக்கு' சமர்ப்பித்திருந்தார் என்பதாக நினைவு. கேத் ஆக்கர் தன் உடலையே பரிசோதனையாக்கி, விளைவுகளை எழுத்தாக்கியவர் என்று சாரு குறிப்பிட்டார். ராஸலீலா படித்தவர்கள் சாருவும் அத்தகைய எழுத்தாளர் தான் என்பதை உணர முடியும். ஸீரோ டிகிரி ஆங்கிலப் பிரதியை வாசித்த அமெரிக்கர்கள் சிலர் சாரு நிவேதிதா ஒரு பெண் எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம். இப்பிரதி மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளில் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்கள் நூற்றி சில்லறை தான் இருந்ததாம். ஸீரோ டிகிரி மலையாளத்தில் வந்தபின் தீவிர இலக்கிய வெறி கொண்ட மலையாளிகள் தமிழிலும் தீவிர இலக்கியம் குறித்த சில முயற்சிகள் நடந்து வருவதாக அறிந்தார்களாம். ஸீரோ டிகிரிக்கு பின்னர் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களின் எண்ணிக்கை கடந்த ஒன்றரை நூற்றாண்டு கால மொழிமாற்ற நூல்களை விட அதிகம் என்று மலையாள எழுத்தாளர் சக்காரியா குறிப்பிட்டார். தமிழிலக்கியத்தில் சாருவுக்கான இடம் எதுவென்பதை சக்காரியாவின் அந்த கருத்து திடமாக வெளிப்படுத்தியது.<br /><br />* - * - * - * - * - * - * - * - *<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Sknn76iIKOI/AAAAAAAACRU/fd3jrUVaqdQ/s1600-h/charu+(1).jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 255px;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Sknn76iIKOI/AAAAAAAACRU/fd3jrUVaqdQ/s400/charu+(1).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5353064648617240802" /></a>அபத்தமாக பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் கண்டால் எல்லோருக்கும் எரிச்சல் மண்டுவது இயல்பு. ஆயினும் சில நேரங்களில் நம்முடைய ஆதர்சங்களே அபத்தமாக சிந்தித்து, அதையும் எழுதியோ, பேசியோ தொலைக்கும்போது எரிச்சலோடு, கோபமும் இணைந்துக் கொள்கிறது. அதுபோன்ற சீற்றமான, நிதானமற்ற மனநிலையில் இப்போது எழுதுகிறேன்.<br /><br />சிறுவயதிலிருந்தே ஏதாவது பத்திரிகைகளில் சாரு நிவேதிதா என்ற பெயரை காணநேர்ந்தால் அக்கட்டுரையையோ, புனைவையோ தவறவிடாமல் வாசிப்பது என் வழக்கம். சாரு என்ற பெயர் எனக்குள் ஏற்படுத்திய மேஜிக்குகள் எண்ணிலடங்கா. ஒரு அறிவுஜீவியாக இருந்தும் மிக எளிமையாக, வாசகன் அஞ்சாமல் அணுகக்கூடிய மொழிநடை அவருடையது. பெரும்பாலும் சுயபுராணமாக இருந்தாலும் அவருடைய சுய எள்ளல், சுய பச்சாதாபம் போன்றவை வாசிக்க சுவாரஸ்யமானதாகவே இருக்கும். சரோஜாதேவிரக எழுத்தாளர்கள் தவிர்த்து கைமைதுனம் செய்வதை கூட வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் பன்முகப்பார்வை கொண்ட தமிழ் எழுத்தாளர் அவர் ஒருவர் மட்டுமே.<br /><br />அவர் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவர் ஒரு நாத்திகர் என்ற தோற்றம் மிகுந்திருக்கும். எனக்குள்ளும் மிகுந்திருந்தது. சுஜாதா மறைவுக்குப் பின்னர் திடீரென்று சுஜாதாவின் இடத்தை பிடிக்க வேண்டும் (எந்த கொம்பனாலும் பிடிக்கமுடியாது என்பது என் எண்ணம்) என்ற பேராசையாலோ என்னவோ திடீரென தன்னை ஆத்திகர் என்று சமீபத்தில் அறிவித்துக் கொண்டிருக்கிறார். அவர் நாத்திகரோ, ஆத்திகரோ அது யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால் திடீரென புதியதாக ஏற்றுக்கொண்ட ஆத்திக வேடத்துக்காக இறைமறுப்பாளர்களையும், இறைமறுப்பு முற்போக்கு சிந்தனைகளையும் மிக கேவலமாக விமர்சிப்பது சாரு போன்ற (இதுவரை) முற்போக்கு வேடமணிந்த ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல.<br /><br />'விபச்சாரம் ஏன் நடக்கிறது?' என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்தது. சாரு கண்டுபிடித்து விட்டார். இறைமறுப்பு தான் விபச்சாரத்துக்கு காரணமாம். ரஷ்யா ஜார் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தபோதும் கூட மதநெறி தந்த ஆன்மபலத்தால் ரஷ்யர்கள் ஒழுக்கமாக இருந்தார்களாம். ஆனால் கம்யூனிஸம் ஆட்சிக் கட்டிலேறி கடவுள் மறுப்பு விவாதங்களும், சிந்தனைகளும் வந்த பின்னர் ரஷ்யாவில் விபச்சாரம் பெருகி விட்டதாம். எவ்வளவு அபத்தம் இது? கடவுள் மறுப்பு சிந்தனைகளை மட்டுமன்றி கம்யூனிஸத்தின் மீதும் போகிறபோக்கில் சாணி அடித்துவிட்டுப் போகிறார் சாரு. இவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தோதாக அவரது இலங்கை நண்பர் ஒருவருக்கு ரஷ்யாவில் நிகழ்ந்த சில அனுபவங்களை வாதத்துக்கு வலுவாக சேர்த்துக் கொள்கிறார்.<br /><br />அதே சாரு தாய்லாந்து நாட்டின் விபச்சாரம் பற்றியும், பத்து வயது குழந்தைகள் கூட மிகக்குறைவான (50 ரூபாய்) தொகைக்கு விபச்சாரத்துக்கு தயாராக இருப்பது பற்றியும் எழுதுகிறார். தாய்லாந்து நாட்டில் கம்யூனிஸ ஆட்சி நடக்கிறதா? கடவுள் மறுப்பு விவாதங்கள் விவாதிக்கப்படுகிறதா? என்பது பற்றி சாருவுக்கு தெரியாதா? கிட்டத்தட்ட தொண்ணூற்றி ஒன்பது சதவிகித தாய்லாந்து மக்கள் மதநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் கொண்டவர்கள் தானே?<br /><br />தாய்லாந்துக்கு போவானேன்? இந்தியாவில் என்ன வாழுகிறது? இங்கே (இப்போது சாரு உட்பட) தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பேர் இறைநம்பிக்கை கொண்டவர்களாக தானே இருக்கிறார்கள்? இங்கே ஏன் சோனாகஞ்சும், மும்பை சிகப்பு விளக்கு பகுதியும் இருக்கிறது? ஐம்பது ரூபாய்க்கு உடலை அரை மணி நேரத்துக்கு விற்க சென்னையில் கூட விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள் இருப்பது நமக்கு தெரியுமோ இல்லையோ.. சாருவுக்கு நிச்சயமாகத் தெரியும். இதற்கெல்லாம் கூட காரணம் இறைமறுப்பா?<br /><br />இறைமறுப்பு சிந்தனைகளை உலகளவில் பரபரப்பாக விவாதித்த ஜெர்மன் சிந்தனையாளர்களையும்.. அந்நாட்டையும், ஐம்பது ஆண்டுகளாக இறைமறுப்பு கம்யூனிஸ ஆட்சி நடக்கும் கியூபா நாட்டையும் சாரு மறந்துவிட்டாரா? இல்லை அங்கும் விபச்சாரமும், சமூகக்குற்றங்களும் இன்னமும் தலைவிரித்து ஆடுகிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறாரா? மதநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் பெரிதும் கொண்டிருக்கும் அமெரிக்கா.. ஆத்திகர்களையே பெரும்பாலும் அதிபர்களாக ஏற்றுக்கொள்ளும் அமெரிக்கா, சர்வதேச அளவில் மனிதநேயத்துக்கு எதிராக செய்துவரும் மனிதகுல விரோத குற்றங்களுக்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகிறார் சாரு? இறைமறுப்பாளர்களால் உலகுக்கு விளைந்த கேடுகள் அதிகமா? மத அடிப்படைவாதிகளால் உலகுக்கு விளைந்த கேடுகள் அதிகமா? என்பதை சாரு மல்லாந்து படுத்துக் கொண்டு யோசிக்க வேண்டும்.<br /><br />கடவுள் என்ற சொல்லாடல் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பே விபச்சாரம் என்ற தொழிலும், சமூகக்குற்றங்களும் உலகில் பெருகிவிட்டதை உலக வரலாறு வாசித்த யாருமே உணரமுடியும். இன்னமும் சொல்லப்போனால் சமூகக்குற்றங்கள் செய்வதிலிருந்து மனிதனை காக்க மனிதகுலம் கண்டுபிடித்த ஒரு முறையே மதமும், மதத்துக்கு மூலமான கடவுளும் என்றும் கூறலாம். இறைவன் குறித்த தர்க்கங்களில் வெற்றி காணமுடியாமல் கடைசியாக ஆத்திகர்கள் நாத்திகர்கள் மீது வைக்கும் பலகீனமான விமர்சனம் தான் இறைமறுப்பால் சமூகக்குற்றங்கள் பெருகும் என்பது. சாருவும் கூட அப்படிப்பட்ட விமர்சனத்தை எழுதுவதை காணும்போது “சாருவும் இவ்வளவுதானா?” என்ற ஆயாசமும், ஏமாற்றமும் தான் மிஞ்சுகிறது.<br /><br /><a href="http://www.luckylookonline.com/2008/04/blog-post_29.html">http://www.luckylookonline.com/2008/04/blog-post_29.html</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-7018937104156212622?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com17tag:blogger.com,1999:blog-25593973.post-11328372583246378212009-06-30T08:04:00.000+05:302009-06-30T11:27:26.989+05:30நாடோடிகள்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SkmpL5q7z8I/AAAAAAAACQ8/jecELfCbdpE/s1600-h/nadodigal..jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 265px;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SkmpL5q7z8I/AAAAAAAACQ8/jecELfCbdpE/s400/nadodigal..jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5352995654031101890" /></a><br /><span style="font-size:130%;"><strong>மு</strong></span>ருகன் வசித்தது விசாலாட்சி தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இருந்த ஒரு பிளாக்கில். விசாலாட்சி தோட்டத்தை கொஞ்சம் டீசண்டாக சொல்லுவது என்றால் சென்னை-600028 என்று சொல்லலாம். கொஞ்சம் கலீஜாக சொல்லுவதென்றால் சுண்ணாம்புக் கால்வாய் என்றும் சொல்லலாம். சுண்ணாம்புக் கால்வாய் என்று அழைக்கப்படும் பக்கிங்காம் கால்வாய் முருகனின் வீட்டுக்கு பின்னால் தான் ஓடுகிறது.<br /><br />21 வயதான முருகன் பகவான் கிருஷ்ணனின் நிறம் கொண்டவன். நாகேஷ் உடல்வாகு. முன்தலையில் இந்த வயதிலேயே லைட்டாக சொட்டை. முகம் முழுக்க முகப்பரு. தொளதொளவென்று பிரபுதேவா ஸ்டைலில் பேக்கீஸ் பேண்ட். 42 செ.மீ. சைஸுக்கு சத்யா பஜாரில் கலர் கலராக சட்டை வாங்கி போடுவான். மொத்தத்தில் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருப்பான்.<br /><br />முருகன் வேலை பார்த்தது ஒரு சின்ன ஸ்டுடியோவில். ஸ்டுடியோ என்றால் போட்டோ ஸ்டுடியோ அல்ல. ஸ்க்ரீன் ப்ரிண்டிங் தொழிலுக்கு உபயோகப்படுத்தக் கூடிய நெகட்டிவ், பாசிட்டிவ், போட்டோ பிரிண்ட் எடுக்கும் குட்டி ஸ்டுடியோ. அத்தொழிலுக்கு தேவைப்படும் லோகோக்கள் டிசைன் செய்வது, "கலைஞரே" "அம்மாவே" என்று ஆரம்பிக்கும் அரசியல் பத்திரிகை விளம்பரங்களை லே-அவுட் செய்யும் ஸ்டுடியோவாகவும் அது இருந்தது. தன்னை வெளியில் கேமிராமேன் என்று முருகன் அறிமுகப்படுத்திக் கொள்ளுவான். ஆனாலும் அவன் பயன்படுத்துவது கேமிரா அல்ல, என்லார்ஜர். எப்போதும் டார்க்ரூம் வேலை என்பதால் நண்பர்கள் வட்டத்தில் அவனுக்கு பெயர் கருப்பு ஆந்தை.<br /><br />நீல நிற ஹவாய் செருப்பு போட்டு வரும் முருகன் அன்று கட் ஷூ போட்டு வந்தான். முகத்துக்கு பவுடர் அடித்திருந்தான். விசாலாட்சி தோட்டத்திலிருந்து சைக்கிள் மிதித்து எல்டாம்ஸ் ரோடு வரை வந்திருந்ததால் வியர்வையில் பவுடர் திட்டு திட்டாக ஆகி ஏற்கனவே கொடூரமாக இருந்த அவன் முகத்தை இன்னமும் கோரமாக்கி காட்டியது.<br /><br />"இன்னா மூஞ்சி இல்லாதவனே? மேக்கப்பு எல்லாம் தூள் பறக்குது?" என்றேன். அவனை மூஞ்சி இல்லாதவன் என்று தான் கூப்பிடுவேன். இன்னொரு அலுவலக நண்பனுக்கு நெற்றியில் இருந்து டைரக்டாகவே வடிவம் இல்லாமல் மூக்கு அமைந்திருந்ததால் அவன் மூக்கில்லாதவன்.<br /><br />"எங்க பிளாக்குக்கு பக்கத்து பிளாக்குக்கு புதுசா ஒரு பட்லி வந்துருக்குது கிச்சா. லவ் பண்ண ஆரம்பிச்சேட்டேன்" என்றான். அதிர்ச்சியாக இருந்தது. இதென்ன கொடுமை? ஒரு பட்லியை பார்த்ததும் காதலா? இவனுக்கெல்லாம் காதல் கத்தரிக்காய் மாதிரி ஆயிடிச்சி.<br /><br />"மச்சான் உன் மூஞ்சிய கண்ணாடில்லே பார்த்ததே இல்லியாடா? உனக்கெதுக்குடா இந்த கருமம் எல்லாம்?"<br /><br />"டேய் பல்லி! உன் லெவலுக்கே பிகருங்க மாட்டுறப்போ, எனக்கு மாட்டாதா?" என்றான். உண்மையிலேயே என் உடல்வாகு அப்போது பல்லி போல தான் இருந்தது. ஆனாலும் கொஞ்சம் கலராகவும், டீசண்டாகவும் இருந்ததால் பிகர்களை கொஞ்சம் ஈஸியாக டீல் செய்ய முடிந்தது. அந்த அலுவலகத்திலேயே அரைகுறையாகவாவது ஆங்கிலம் பேசுபவன் நான் மட்டுமே என்பதால் பாசிட்டிவ் போடவரும் ஸ்க்ரீன் பிரிண்டிங் பிகர்கள் மத்தியில் நான் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருந்தேன்.<br /><br />ஓனர் வரும் நேரமாகி விட்டதால் நான் கம்ப்யூட்டரை பூட் செய்துவிட்டு சபீனா கவர் போலவே சலீனாவுக்கு டூப்ளிகேட் டிசைன் செய்ய ஆரம்பித்தேன். முருகன் டார்க்ரூமுக்குள் தஞ்சமடைந்தான்.<br /><br /><span style="font-size:130%;"><strong>மா</strong></span>லை 6 மணிக்கு கம்ப்யூட்டர் ரூமுக்குள் (எஸ்டிடி பூத் மாதிரி இருக்கும்) வந்த முருகன் பீர் அடிக்க கூப்பிட்டான் அவனுடைய செலவில். பொதுவாக சம்பளம் வாங்கிய முதல்வாரம் மட்டும் தினசரி பீர் அடிப்போம். மற்ற நாட்களில் நல்ல பிள்ளையாக கிளம்பி விடுவோம்.<br /><br />நான், சுரேஷ், சேகர், பிரபு முருகனோடு வேலுமிலிட்டரி ஒயின்ஸுக்கு போனோம். பிரபு சைட் டிஷ் மட்டுமே சாப்பிடுவான். சுரேஷும், சேகரும் குவார்ட்டர் ரம் வாங்கி ஷேர் செய்து சாப்பிடுவார்கள். நானும், முருகனும் ஆளுக்கு ஒரு ஹேவார்ட்ஸ் 5000.<br /><br />பாதி குடித்ததுமே முருகனுக்கு போதை ஏறத்தொடங்கி விட்டது. கண்கள் அவனுக்கு எப்போதுமே சிவந்திருக்கும். "ஊர்லே இருந்து வந்துருக்கா மஞ்சு. சின்ன வயசுலே பார்த்தது. பத்து வருஷம் கழிச்சி பாக்குறேன்" என்றான்.<br /><br />"என்னடா உளர்றே? தலையும் புரியல, வாலும் புரியல"<br /><br />"நாந்தான் காலைல சொன்னனேடா. ஒரு பிகரை லவ் பண்றேன்னு"<br /><br />"ம்ம்ம்... சொல்லித்தொலை. உம்மூஞ்சிக்கு லவ்வு ஒரு கேடு!"<br /><br />"மச்சான். உங்க ஹெல்ப்புல்லாம் வேணுண்டா. அவளை எப்படியாவது கல்யாணம் கட்டிக்கணும்"<br /><br />தண்ணி வாங்கிக் கொடுத்து ஹெல்ப் கேட்கிறான். வேறுவழியில்லை. ஹெல்ப்புகிறோம் என்று சொல்லி முருகனை சாந்தப் படுத்தினோம். இன்று எல்டாம்ஸ் ரோட்டில் மியூசிக் டுடே இருக்கும் இடத்துக்கு எதிராக அப்போதெல்லாம் நடைவண்டியில் சுண்டல் விற்கும். எல்லோருக்கும் தாராளமாக செலவு செய்து முட்டை பஜ்ஜி, சுண்டல் வாங்கிக் கொடுத்து திருப்தியாக அனுப்பி வைத்தான் முருகன்.<br /><br /><strong><span style="font-size:130%;">அ</span></strong>தன்பின் தினமும் மஞ்சு புராணம் தான் முருகனுக்கு.<br /><br />"45Bயிலே கிண்டிக்கு எக்ஸ்போர்ட் வேலைக்கு போறா"<br /><br />"இன்னைக்கு மஞ்சப்புடவை கட்டிக்கிட்டு சூப்பரா இருந்தா"<br /><br />"முண்டகண்ணியம்மன் கோயிலுக்கு வாராவாரம் வெள்ளிக்கிழமை போறா"<br /><br />"பயமாயிருக்குடா அவளுக்கு ரெண்டு அண்ணனுங்கோ. ஏற்கனவே மயிலாப்பூர் ஸ்டேஷன்லே அவனுங்க மேலே கேசிருக்கு"<br /><br />"எங்க ஊட்டாண்ட இருந்து லஸ் வரைக்கும் மஞ்சுவை பாலோ பண்ணிக்கினே போனேன்"<br /><br />முருகன் சொல்வது அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படாமல் காமெடியாகவே இருந்தது எங்களுக்கு. முருகன் சொல்வதை வைத்து பார்த்தால் மஞ்சு கொஞ்சம் சிகப்பாக இருந்திருக்க வேண்டும். கருப்பு நிற காம்ப்ளக்ஸில் அவதிப் பட்டுக் கொண்டிருந்த முருகனுக்கு மஞ்சுவின் சிகப்பு மையலை தந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். எந்த விஷயமாக இருந்தாலும் தடாலடியாக பேசும் முருகனுக்கு காதலை சொல்வதில் மட்டும் இருந்த தயக்கம் எதற்கு என்று புரியவில்லை.<br /><br />எப்படியோ சில நாட்களாக முருகனுக்கு தைரியம் கொடுத்து தயார் செய்து வைத்திருந்தோம். மயிலாப்பூர் அறுபத்தி மூவர் திருவிழாவுக்கு தோழிகளோடு வரப்போகும் மஞ்சுவிடம் நம்ம ஹீரோ பல்லாயிரம் பேருக்கு நடுவில் காதலை சொல்லிவிட வேண்டும் என்பது எங்கள் ஏற்பாடு. அதே சமயம் மஞ்சுவின் அண்ணன்களின் கழுகுப்பார்வையில் இருந்து தப்பித்து அவளை அருகில் நெருங்க முருகனுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பம் அதுதான்.<br /><br /><span style="font-size:130%;"><strong>நா</strong></span>ள் நெருங்க நெருங்க முருகனுக்கு டென்ஷனாக இருந்ததோ என்னவோ, எங்களுக்கு கொஞ்சம் டென்ஷனாகவே இருந்தது. திருவிழாக் கூட்டத்தில் பொன்னம்பலம், கனல்கண்ணன் ரேஞ்சுக்கு சில பேர் அரிவாளோடு எங்களை துரத்திக் கொண்டு வருவது போன்ற தீக்கனவுகள் எனக்கு வர ஆரம்பித்தது. எப்படியாவது இந்த லவ் மேட்டர் நல்லபடியாக முடிந்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன்.<br /><br />அந்த நாளும் வந்தது. காலையில் வழக்கம்போல முருகன் ஆபிஸுக்கு வந்திருந்தான். அவன் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள் தான் கொஞ்சம் டல்லாக இருந்தோம். அறுபத்து மூவர் திருவிழா ஸ்பெஷலாக எங்கள் அலுவலகத்தில் மாலை ரெண்டு மணி நேரம் பர்மிஷன் எப்போதும் கிடைக்கும்.<br /><br />என் வண்டியை எதிரிலிருந்த முருகர் கோயிலுக்குள் விட்டு விட்டு கால்நடையாகவே முருகன் கோஷ்டியோடு கிளம்பினேன். வழியெல்லாம் மோர், ரஸ்னா இலவசமாக லட்சத்தில் ஒருவன் ரஜினி ரசிகர்மன்றம், நாட்டாமை சரத்குமார் ரசிகர் மன்றம் போன்றவர்களால் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. அதிமுக, திமுகவும் தலா ஒரு பூத் போட்டு பொங்கல், சுண்டல் வழங்கிக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கபாலீஸ்வரர் கோயிலை நோக்கி தேனீக்கள் போல மொய்க்கத் தொடங்கியிருந்தார்கள்.<br /><br />தெற்கு மற்றும் மேற்கு மாடவீதிகள் இணையும் ஜங்ஷனில் ஒரு கடைவாசலில் இருந்த திண்ணைப் போன்ற ஒரு அமைப்பின் மீது ஏறி நின்றுக் கொண்டோம். டென்ஷனாக இருந்ததால் பெரிய மாணிக்சந்த் ஒரு பாக்கெட்டை அப்படியே வாயில் கொட்டிக் கொண்டு அவ்வப்போது புளிச், புளிச்சென்று துப்பிக் கொண்டிருந்தேன். முருகனோ எந்த சலனமும் இல்லாமல் கூட்டத்தை கவனிக்க ஆரம்பித்தான்.<br /><br />சுமார் ஏழரை மணியளவில் முருகனின் தேவதை வந்துகொண்டிருந்தாள். பதினெட்டு, பத்தொன்பது வயதிருக்கலாம். கூட நான்கைந்து எக்ஸ்போர்ட் பிகர்ஸ். முருகன் வர்ணித்த அளவுக்கெல்லாம் சூப்பராக இல்லாவிட்டாலும் முருகனுக்கு அவள் கிடைத்தால் பம்பர் ப்ரைஸ் தான் என்று நினைத்துக் கொண்டேன். முருகன் அவளை நோக்கி கூட்டத்தில் முன்னேற ஆரம்பித்தான். கொஞ்சம் இடைவெளி விட்டு திசைக்கொருவராய் நாங்கள் நான்கு பேரும் முருகனுக்கு பாடிகார்டாக அவனோடவே நகர்ந்தோம்.<br /><br />மஞ்சுவை முருகன் நெருங்க, நெருங்க திக்.. திக்..<br /><br />மஞ்சுவை மிக அருகில் பார்த்த முருகன்,<br /><br />"ஹே மஞ்சு எப்படியிருக்க?" காதலை சொல்லச் சென்றவன் மாதிரியாக இல்லாமல் மிக இயல்பாக பேசினான்.<br /><br />"நான் நல்லா இருக்கன். நீ கூடத்தான் இப்போ ஸ்டைலா இருக்க"<br /><br />"அப்போன்னா நாம கல்யாணம் கட்டிக்கலாமா?"<br /><br />"ம்.. கட்டிக்கலாம்!"<br /><br />முருகனின் காதலை சொல்லும்போது "லாலல்ல்லா, லாலல்ல்லா" என்று எஸ்.ஏ. ராஜ்குமார் மியூசிக் மாதிரி கோரஸ் கேட்கும். பாரதிராஜாவின் வெள்ளுடை தேவதைகள் சுற்றி வந்து நாட்டியம் ஆடுவார்கள். மஞ்சுவின் அண்ணன்கள் எங்களை துரத்தி துரத்தி அடிப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு நாள் பில்டப் கொடுக்கப்பட்ட ஒரு சம்பவம் நல்லவிதமாக முடிந்தாலும் "சப்"பென்று 25 நொடிகளில் முடிந்துவிட்டதே என்று நொந்துபோய் விட்டேன். "ஐ லவ் யூ" கூட சொல்லாமல் பையன் டைரக்டா மேட்டரை முடிச்சிட்டானே என்று எனக்கு வருத்தம் + அதிர்ச்சி.<br /><br /><span style="font-size:130%;"><strong>அ</strong></span>தைவிட பெரிய அதிர்ச்சி அடுத்தவாரமே கிடைத்தது. முருகன் மஞ்சுவோடு எங்கேயோ ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டான். மஞ்சுவின் அண்ணன்கள் முருகனை மட்டுமில்லாமல் முருகனின் நண்பர்களையும் வெட்டுவதற்கு தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றொரு செய்தி கிடைத்தது. தாவு தீர்ந்துப் போய் நான்கைந்து நாளைக்கு நாங்கள் யாருமே ஆபிஸ் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.<br /><br />சிலமாதங்களுக்கு பின் மஞ்சுவின் குடும்பம் முருகனோடு எப்படியோ ராசியாகிவிட்டது. முருகனுக்கு இப்போது இரண்டு குழந்தைகள். பல்வேறு காரணங்களால் நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மயிலாப்பூர் பக்கம் போகும்போது தான் முருகனின் நினைவு வரும். ஒருமுறை அவன் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது மஞ்சுவும், குழந்தைகளும் மட்டும் இருந்தார்கள். முருகன் இப்போது சொந்த பிஸினஸ் செய்கிறானாம். பணத்துக்கு பிரச்சினை இல்லையாம். என்ன தினமும் குடி. அதுமட்டும் தான் பிரச்சினை என்றார் மஞ்சு.<br /><br />எங்க ஆளுங்க இப்படித்தான், டவுசர் அவிழ்க்கும் வேகத்தில் காதலை சொல்லிவிடுவார்கள். அதே டவுசரை திரும்ப மாட்டும் வேகத்துக்குள் கல்யாணம் பண்ணி, பிள்ளையும் பெற்றுவிடுவார்கள்.<br /><br /><b><i><span class="Apple-style-span" style="color:#FF0000;">நல்லவேளையாக முருகனும், மஞ்சுவும் மகிழ்ச்சியாக வாழ்வதாகவே தெரிகிறது. இல்லாவிட்டால் கிச்சா, சுரேஷ், பிரபு, சேகர் ஆகிய நால்வரும் நாடோடிகள் ஆகியிருப்பார்கள். ‘நாடோடி’ திரைப்படம் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, பின்னணி இசை என்று பல தளங்களில் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் படம். படத்தின் இடைவேளை கொடுத்த அதிர்வில் இன்னமும் இதயம் படபடத்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறை இல்லை நான்கைந்து முறை அனைவரும் குடும்பத்தோடு காணவேண்டிய படமென்று சிபாரிசு செய்கிறேன்.</span></i></b><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-1132837258324637821?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com10tag:blogger.com,1999:blog-25593973.post-49958473592935830072009-06-29T08:45:00.001+05:302009-06-29T10:58:34.502+05:30காண்டு கஜேந்திரனுடன் தண்ணி அடிப்போமா?<a href="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/R9kKIwxWzOI/AAAAAAAAAhI/2jn5CjwKBQY/s1600-h/xxx.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/R9kKIwxWzOI/AAAAAAAAAhI/2jn5CjwKBQY/s400/xxx.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5177180392286244066" /></a><br />எல்டாம்ஸ் ரோடு பாடாவதி பாரில் தண்ணியடித்து வாந்தி எடுத்து கொண்டிருந்தபோது பக்கத்தில் வாந்தி எடுத்த குடிகாரர் ஒருவர் எடுத்த வாந்தி இது.<br /><br />“நீங்கள் ஏன் “மப்பு வெள்ளி” என ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாள் முழுக்க தண்ணியடிக்க கூடாது? வாரநாட்களில் தினமும் சரக்கடித்தாலும் வெள்ளிக்கிழமை ஒரு புல் ஓல்டு மாங்கு அடித்து வாந்தி எடுத்தால் போதை சும்மா ஏறுமில்ல.<br /><br />தேனாம்பேட்டையில், நுங்கம்பாக்கத்தில், வளசரவாக்கத்தில் என எல்லா பாரிலும் பெரும்பாலானவர்கள் வெயில் தாங்காமல் அடிப்பது பீரு தான். அதுவும் நீங்கள் ரம் அடித்துவிட்டு வாந்தி எடுத்து சொந்தி (சொல் + வாந்தி - சொல்லால் எடுக்கும் வாந்தி) அடித்தால் குடிகாரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.<br /><br />வாரத்திற்கு ஒரு முறையாவது ரம் அடித்தால் நல்லது, அதிகபட்சம் நாலு குவார்ட்டர் (அல்லது ஒரே புல்) அடித்துவிட்டு பீர், ரம், விஸ்கி, பிராந்தி, சுண்டக்கஞ்சி, சல்பேட்டா என எதைப் பற்றியும் சொந்தி அடிக்கலாம். உதாரணத்திற்கு பெசண்ட் நகர் முனியம்மாவின் சுண்டக்கஞ்சி பாரில் கோடியுடன் எடுத்த வாந்தி, பள்ளிக்கரணையில் கள் அடித்துவிட்டு கல்லால் அடிபட்டது, சரக்கடித்துவிட்டு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போய் சுண்டலை சைட் டிஷ்ஷாக கேட்டது, டோல்கேட்டில் டோபு அடித்தது இதைப் பற்றியெல்லாம் சொந்தி அடித்தால் குடிகாரர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்களை பெற்றுத்தரும். மேலும் சரக்குலகில் இதுவரை யாரும் எடுக்காத வாந்தி இது.<br /><br />பதிவுத் தலைப்புகள் காண்டு எடுத்த வாந்தி கம் சொந்தி - 14 செப்டம்பர் 2009, அசோக் நகர் உதயம் தியேட்டருக்கு பக்கத்து பாரு என்று வரலாம்.<br /><br />உங்களோடு சேர்ந்து சிறப்பாக வாந்தி எடுப்பவருக்கு ஊறுகாய் வாங்கி தரலாம் அல்லது குவார்ட்டரோ, ஹாஃப்போ (துட்டு இருந்தால்) வாங்கி கொடுக்கலாம். காண்டு சொந்தி என ஒரு Brand உருவாக்கலாம்.<br /><br />பிரியாமணியின் ஸ்கர்ட் லெவலுக்கு போதை அபாயகரமாக ஏற வாழ்த்துக்கள்.<br /><br />இதோ சில கேள்விகள்<br /><br />1. காண்டு, சுண்டக்கஞ்சி குடத்துக்கு ரூ.1.25 குறைப்பாம்? நீங்க எப்போ சுண்டக்கஞ்சி வியாபாரம் பண்ண ஆரம்பித்தீர்கள்?<br /><br />2. கால் சென்டரில் வேலை பார்த்தால் ரெண்டு கால் சென்டருக்கு ஏதாவது ஆபத்து வருமா?<br /><br />3. உங்கள் அத்திம்பேர்/மாமா உங்களுடன் தண்ணி அடிக்கிறார்களா? அவர்கள் வாந்தி எடுப்பது இல்லையா?<br /><br />4. பல குடிகாரர்களோடு குடித்து வாந்தி எடுக்கும் நீங்கள் இன்னமும் காஞ்சிபுரம் குடிகாரன் இருள்நீக்கிசுப்புணி அய்யரோடு தண்ணி அடித்ததில்லையா? நங்கநல்லூரிலிருந்து காஞ்சிபுரம் சமீபத்தில் 78 கிலோ மீட்டர் தூரத்தில் தானே இருக்கிறது?<br /><br />5. பரம்பரை குடிகாரர்கள் ஏன் மற்ற குடிகாரர்களை கூட சேர்த்து தண்ணி அடிப்பதில்லை? (ஒரு லெவலுக்கு மேல் சரக்கு அடித்ததும் வாந்தி எடுத்துவிடுவார்கள்)”<br /><br />இப்போது காண்டு கஜேந்திரன். ஸ்காட்சுக்கு ஊறுகாய் தொட்டு கொண்டால் சரியாக வருமா எனத் தெரியவில்லை. <a href="http://madippakkam.blogspot.com/2008/01/4.html">ஏற்கனவே குடிகாரன் கோடியுடன் சேர்ந்து நானும் வாந்தி எடுத்ததுதான்.</a><br /><br />நீங்கள் எப்படி குடிக்கிறீர்கள்? ரொம்பவும் வாந்தி எடுக்கிறீர்களா? இப்பதிவில் பின்னூட்டமாக நீங்கள் வாந்தி எடுத்து வைக்கலாம். ஷகீலா / பரங்கிமலை ஜோதி குறித்த வாந்திகள் இங்கே அனுமதிக்கப்படாது. ஒரு குவார்ட்டர் உட்டுவிட்டு நாளை மீண்டும் வந்து ஃபுல் அடிக்கிறேன்.<br /><br />அன்புடன்,<br />காண்டு கஜேந்திரன்<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-4995847359293583007?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com13tag:blogger.com,1999:blog-25593973.post-26074792804985406072009-06-26T19:30:00.000+05:302009-06-26T19:30:07.700+05:30உங்களில் யார் அடுத்த நயன்தாரா?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SkSzWbF3mdI/AAAAAAAACQs/XwOJy9EBxmM/s1600-h/image..jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 283px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SkSzWbF3mdI/AAAAAAAACQs/XwOJy9EBxmM/s400/image..jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5351599455033858514" /></a><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">போ</span></b>னமாதத்தில் ஒரு நாள் அதிகாலை ஏழரை மணிக்கு, லுங்கி கட்டிக்கொண்டு லைட்டான மேக்கப்பில் சத்யன் டீ ஸ்டால் வாசலில் இருந்த பொட்டீக்கடையில் குமுதம் ரிப்போர்ட்டர் (Branding.. Branding) வாங்கப் போயிருந்தேன். தினத்தந்தியைப் புரட்டிக் கொண்டிருந்த அவர் பப்ளிக் கக்கூசில் க்யூவுக்கு நிற்கும் அவசரத்தோடு சொன்னார்.<br /><br />“தம்பி.. ஒரு நிமிஷம் நில்லு! மேட்டர் கேள்விப்பட்டியா?” - அண்ணாச்சி சரியான சரக்கு வண்டி. முந்தைய நைட்டு அடித்த ஓல்டு மாங்க் கப்பு கப்பென்று அசுகந்தமாய் தேநீர்க்கடை முழுக்க பரவியது. டீ குடித்துக் கொண்டிருந்த சிலர் வாந்தி வரும் முகபாவத்தை காட்டினார்கள்.<br /><br />“சொல்லுங்கண்ணே!” ஜூனியர் விகடனில் செல்போன் டவர் பிரச்சினைக்கு போட்டோவோடு பேட்டி கொடுத்ததிலிருந்து - அந்தப் பேட்டியால் வேறு பிரயோசனமில்லை. இன்னும் ஏகப்பட்ட டவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிறுவப்படுகிறது என்பது வேறு விஷயம் - மடிப்பாக்கத்தில் நிஜமாகவே நான் ஒரு செலிபிரிட்டி. எந்த பொதுப்பிரச்சினையாக இருந்தாலும் ட்ராபிக் ராமசாமியிடம் சொல்லுவது போல சிலபேர் என்னிடம் சொல்கிறார்கள்.<br /><br />“நம்ம ஊரு ரொம்ப கெட்டுப்போச்சி. நைட்டுலே என்னென்னவோ அசிங்கம் நடக்குது!”<br /><br />ஆஹா. ’மேட்டர்’ நழுவி டீயில் விழுதே. கலர் போட்டோவோடு இன்னொரு ஜூ.வி. பேட்டி.<br /><br />“என்னாச்சுண்ணே!”<br /><br />“நம்ப குளம் வத்திப் போச்சுல்லே. வத்திப் போனது இந்த பொறுக்கி பயலுங்களுக்கு வசதியாப் போச்சி”<br /><br />மடிப்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகில் குளம் என்ற பெயரில் ஒரு மட்டமான குட்டை உண்டு. சோழர் காலத்தில் ஓதீஸ்வரர் கோயில் குளமாக இருந்தது மட்டுமே அக்குளத்துக்கு எஞ்சி நிற்கும் பெருமை. குளத்தைச் சுற்றி குடியிருப்புகள் ஏற்பட்டு, கழிவுகள் அசால்ட்டாக குளத்துக்கு திருப்பி விடப்படுவதால் அது குளமா இல்லை கூவமா என்று குடியிருப்புச் சங்கங்களால் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.<br /><br />பல ஏக்கர் பரப்பளவு வாய்ந்தது என்பதால், அதை ஆட்டை போட்டு துட்டாக்கிவிடலாம் என்ற ஆசை லோக்கல் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. எனவே தற்காலிகமாக குப்பை கொட்டி குப்பை மேடாக்கி மடக்கிப் போடும் திட்டத்தோடு இருக்கிறார்கள். மழைக்காலங்களில் மட்டும் மழைநீர் தூய்மையாக பொழிந்து, குளத்தில் தேங்கி ஓரிருநாட்களில் அசுத்தமாகிவிடும்.<br /><br />அக்டோபர் தொடங்கி ஏப்ரல் வரை கருமையான நீர் குளத்தை அலங்கரிக்கும். எருமைகளுக்கு இக்காலக்கட்டம் கொண்டாட்டமானது. பச்சையான ஆகாயத்தாமரை இலைகளை கருப்பாக எங்காவது பார்த்திருக்கிறீர்களா? மடிப்பாக்கத்தில் மழைக்காலத்தில் பார்க்கலாம். இப்படிப்பட்ட கொடூரக்குளத்தை நம்பியும் விறால் மீன்கள் வளருகிறது என்பது இயற்கைக்கே சவால் விடும் விஷயம். மீன்பாடி வண்டியில் மூட்டை மூட்டையாக பிடித்துக் கொண்டு போகிறார்கள்.<br /><br />மடிப்பாக்கத்தின் தன்னிகரில்லா தெருநாய்களின் வேடந்தாங்கலும் இந்த குளமே. நாள் முழுக்க தெருக்களில் போவோர் வருவோரை கடித்துவிட்டு, இரவுகளில் ‘இன்னபிற’ மேட்டர்களுக்காக நாய்கள் மாநாடு இங்கே நடக்கும்.<br /><br />இச்சிறப்புகள் வாய்ந்த குளத்தைப் பற்றிதான் நம்ம அண்ணாச்சி சொல்லிக் கொண்டிருக்கிறார்.<br /><br />105 டிகிரி வெயிலில் சாக்கடைநீரும் கூட வற்றிப்போக, குப்பைமேட்டுக்கு இடையில் கான்க்ரீட் கொட்டி பசங்க சில பேர் போனமாதம் கிரிக்கெட் பிட்ச் அமைத்து விளையாடி வருகிறார்கள். உண்மையிலேயே நல்ல பசங்க. அந்தப் பசங்களைதான் இவர் பொறுக்கிப் பசங்க என்கிறாரோ என்று சந்தேகம் வந்தது. மேலும் சரக்கு வண்டி அண்ணாச்சி தொடர்ந்தார்.<br /><br />“நேத்து நைட்டு சுமாரா பண்ணிரண்டரை, ஒரு மணி இருக்கும். நாய்ங்க ரொம்ப மோசமா ஊளையிட்டிக்கிட்டிருந்திச்சி. திடீர்னு எல்லாமே சைலண்ட் ஆயிட்டதாலே தூக்கம் களைஞ்சிப்போயி வெளியே வந்தேன்”<br /><br />இந்த நாய்கள் ஊளையிடல் பற்றி இடைசெருகியே ஆகவேண்டும். குளிர்காலமான கார்த்திகை மாதத்தில் துணைதேட ஊளையிடுகின்றன. இரவுகளிலும் அனல் வீசும் மே, ஜூன் மாதங்களில் ஊளையிட காரணமேயில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். தின்ற குப்பை ஜீரணமாகாமல் ஊளையிடுகின்றன என்பது என்னுடைய அறிவியல் கண்டுப்பிடிப்பு.<br /><br />வெளியே வந்த அண்ணாச்சி கண்டினியூகிறார்.<br /><br />“அதுக்கு முன்னாடி லைட்டா ஆட்டோ சத்தம் கேட்டுச்சி. குளத்துக்கு நடுவுலே பசங்க கிரிக்கெட் ஆட பிச்சி போட்டிருக்கானுங்க இல்லே. அங்கே ஒரு ஷேர் ஆட்டோ நின்னுச்சி. நாலு தடிப்பயலுக எறங்கி பிஸ்கட் பாக்கெட்டை பிரிச்சி நாய்ங்களுக்கு போட்டு சைலண்டு ஆக்கிட்டிருந்தானுங்க”<br /><br />“ம்.. ஒருவேளை தண்ணியடிக்க வந்திருப்பானுங்களோ”<br /><br />“அப்படி வந்திருந்தானுங்கன்னா நானும் போயி ஒரு பெக் அடிச்சிருக்க மாட்டேனா? பின்னாடியே ஒரு பொண்ணு எறங்கிச்சிப்பா. அப்புறமென்ன நடக்கக்கூடாத அசிங்கமெல்லாம் நடந்தது. எல்லா கருமத்தையும் தூரமா ஒளிஞ்சி நின்னு பார்த்தேன்”<br /><br />“நெஜமாவா அண்ணாச்சி? நம்ம ஊருப்பசங்க பொண்ணு மேட்டர்லே எல்லாம் இவ்ளோ மோசமில்லையே? யாராவது வெளியூரு ஆளுங்களா இருக்கும்”<br /><br />“அட நீ ஒண்ணு. அந்தப் பசங்க நம்ம ரூட்லே ஆட்டோ ஓட்டுற பசங்கதான். எனக்கு தெரியாதா என்ன?”<br /><br />“அப்புறம்?”<br /><br />“தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு கடைசி வீட்டு கதவைத் தட்டி அந்த அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு போயி நியாயம் கேட்டேன்” - அண்ணாச்சி குறிப்பிடும் கடைசி வீட்டம்மா கிட்டத்தட்ட சொர்ணாக்கா மாதிரி இருப்பார். அவர் வீட்டு கதவைத்தட்டி கூப்பிடதான் அண்ணாச்சிக்கு தைரியம் தேவைப்பட்டதே தவிர, பொறுக்கிப்பசங்களிடம் போயி நியாயம் கேட்க தேவையான தில்லு அவரிடமே இருந்தது.<br /><br />“நல்ல வேளை செஞ்சீங்க?”<br /><br />“அடப்போப்பா. அவனுங்க அந்தம்மாவை நாங்க இன்னா உன் கைய புடிச்சா இழுத்தோம்னு சொல்லி பிரச்சினை பண்ணிட்டானுங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை” என்றார்.<br /><br />“கவலைப்படாதீங்க அண்ணாச்சி. தலைவரு கிட்டே சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். இல்லேன்னா போலிஸுக்கு போவலாம்” என்றேன்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">அ</span></b>ண்ணாச்சி சொன்னதை கேட்டதிலிருந்து ஒரு க்யூர்யாஸிட்டி (தமிழ்லே மிகச்சரியான வார்த்தை குறுகுறுப்பா?) இருந்தது. கையும், காண்டமுமாக பசங்களை சம்பந்தப்பட்ட குஜிலியோடு பிடிக்க வேண்டுமென்று. சில இலக்கியப் பணிகள் சுமையைக் கூட்ட அப்போதைக்கு மறந்துப்போனேன்.<br /><br />ஆனாலும் பராபரியாக நிறைய செய்திகள் தினமும் வந்துக்கொண்டிருந்தன. குட்டையில் எஞ்சியிருக்கும் தண்ணீரில் குஜிலியோடு பசங்க ஜலக்கிரீடை செய்வதாகவும், காலையில் போய் பார்த்தால் நிறைய நிரோத்து (எந்த பிராண்டாக இருந்தாலும் நம்ம ஆளுகளுக்கு அது நிரோத் தான்) விழுந்து கிடப்பதாகவும், சரக்கு பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணமே இருந்தன.<br /><br />போனவாரத்தில் ஒருநாள் முரளியை துணைக்கு அழைத்துக் கொண்டேன். முரளி என்னுடைய பாடிகார்ட்-கம்-நண்பன். பாடிகார்ட் என்று வார்த்தைக்கு சொன்னாலும் அவனுடைய பாடி கோழி பாடி. ஆனாலும் வாய் உதாரில் பெரிய ரவுடி போல பில்டப் கொடுக்கக்கூடிய சாமர்த்தியம் கொண்டவன். ஏற்கனவே இதே குளத்தில் நள்ளிரவில் பேய்கள் குளிப்பதாக பரவிய மர்ம வதந்தியை அவனுடைய உதவியால் கட்டுடைத்து பகுத்தறிவு சேவை செய்த புண்ணியம் எனக்குண்டு. இரவுகளில் யாரோ தண்ணீரை மொண்டு மொண்டு குளிப்பது போல சத்தம் வந்தது உண்மைதான். முரளியின் உதவியோடு புலன்விசாரணை செய்ததில் வெறிநாய்கள் வெறிதீர குளத்தில் உருண்டு, புரண்டு விளையாடியதால் ஏற்பட்ட சத்தம் அது என்பதை தரவுகளோடு பொதுமக்களுக்கு நிரூபித்தேன்.<br /><br />மனிதன் க்ளைமேக்ஸ் ரஜினி கணக்காக அன்று இரவு பதினோரு, பதினொன்றரை மணியளவில் காஸ்ட்யூம்ஸ், கேன்வாஸ் ஷூ எல்லாம் அணிந்தேன். அச்சந்தர்ப்பத்துக்கு பொருத்தமில்லாத தொப்பி ஒன்றும் ஸ்டைலுக்கு அணிந்துகொண்டேன். இடையில் ஒரு பாதுகாப்புக்காக காய்கறி வெட்டும் கத்தி ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டேன். அப்பாவின் அந்தக்காலத்து பெரிய டார்ச்சையும் எடுத்துக் கொண்டேன். முரளிக்கு சிக்னல் கொடுத்தேன். ஏதோ ஆந்தை அலறுகிறது என்று நினைத்து புரண்டு படுத்திருக்கிறான் மூதேவி.<br /><br />இவன்களை வைத்துக்கொண்டு புல்லு கூட புடுங்கமுடியாது என்று புலம்பியபடியே கதவைத்தட்டி எழுப்பி அழைத்துச் சென்றேன். நக்சல்பாரிகளுக்காக லால்கரில் போராடும் பழங்குடியினர் கெட்டப்பில் இருந்தான். மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் மருதுபாண்டி, வெள்ளைத்துரை மாதிரி லுங்கி கட்டிக்கொண்டு வெற்றுடம்பில் கருப்பு பெட்ஷீட் போர்த்தியிருந்தான். கையில் ஒரு டெர்ரர் லுக்குக்காக கோல் ஒன்றும் வைத்திருந்தான். அவனைப் பார்க்க எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது.<br /><br />குளத்தை நெருங்கும்போது தூரத்தில் சிகரெட் நெருப்பு இரண்டு மூன்று தெரிந்தது. அவர்களிடம் போய் என்ன பேசப்போகிறோம் என்ற திட்டம் எதுவுமில்லை என்றாலும், ஏதோ ஒரு ஆர்வத்தில் இருவரும் பயணித்தோம். ஏற்கனவே இதே மாதிரி விவகாரத்தை (குஜிலி மேட்டர் அல்ல, வெறும் தண்ணி மேட்டர்) போலிஸ் ப்ரெண்ட்ஸ் துணையோடு சுமூகமாக தீர்த்துவைத்த அனுபவமும் எங்களுக்குண்டு.<br /><br />அருகில் நெருங்கியபோது கசமுசா சத்தம் எழுந்தது. நான்கைந்து பயல்கள் அவசரமாக எழுந்து நின்றார்கள். ஆட்டோ எதையும் காணவில்லை. இரண்டு மூன்று பைக்குகள் மட்டுமே.<br /><br />“அட நம்ம அண்ணண்டா” - நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது பிறந்த பயல் ஒருத்தன் கையில் பீர்பாட்டிலோடு சொன்னான்.<br /><br />முரளி குரல் கொடுத்தான் “ஏண்டா ஊடுங்க இருக்குற எடத்துலே இதுமாதிரி குட்சிட்டு கும்மாளம் போட்டா வெளங்குமா? உங்க அப்பன் ஆயியெல்லாம் கேக்க மாட்டாங்களாடா?”<br /><br />“இல்லேன்னா. இன்னிக்கு மட்டும்தான். ஊர்லே இருந்து ப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க. பார்ட்டி கொடுக்கறோம். நீயும் கொஞ்சம் சாப்பிடுண்ணா” - தாகமாக இருந்தாலும், சின்ன பயல்களிடம் வாங்கி குடிக்க மனசு ஒப்பவில்லை. வாழ்த்து(?) சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம்.<br /><br /><br /><span class="Apple-style-span" style="font-size: large;"><b>இ</b></span>தெல்லாம் சரக்கு அண்ணாச்சி கிளப்பிவிட்ட வதந்தியாகதான் இருக்கணும். ஆனா சாட்சிக்கு கடைசி வீட்டு அம்மாவை வேறு அலிபியாக சேர்த்திருக்கிறாரே என்று குழப்பமாக இருந்தது. கடைசி வீட்டு அம்மாவும் கூட அவ்வப்போது சரக்கு சாப்பிடுவதை ஹாபியாக கொண்டிருக்கிறார் என்பதால் அவரது சாட்சியும் நம்புவதற்கில்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.<br /><br />இன்று காலை அலுவலகத்துக்கு பைக்கில் வந்துக்கொண்டிருந்தேன். பெந்தேகொஸ்தே சர்ச் அருகில் சரக்கு அண்ணாச்சி கை காட்டி வண்டியை நிறுத்தினார்.<br /><br />“விஷயம் தெரியுமா தம்பி. நேத்து நைட்டு அந்த ஷேர் ஆட்டோ பசங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் துட்டு மேட்டருலே செம தகராறு. ஒரே சத்தம். அக்கம் பக்கம் யாரும் தூங்க முடியல”<br /><br />“இல்லியே அண்ணாச்சி. வெசாரிச்சி பார்த்ததுலே எப்பனாச்சுக்கும் சில பசங்க தண்ணி அடிக்கிறானுங்க. மத்த கலாட்டா ஏதுமில்லைன்னு சொல்றாங்களே?”<br /><br />“அப்ப நானென்ன பொய்யா சொல்றேன். வேணும்னா கடைசி வூட்டு அம்மாவை கேட்டுப் பாறேன்! நேத்து அவங்களும்தான் பாத்தாங்க!”<br /><br />ஷேர் ஆட்டோ அழகி குழப்பம் மறுபடியும் மனசை ஆக்கிரமிக்கிறது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-2607479280498540607?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com10tag:blogger.com,1999:blog-25593973.post-654485996286842092009-06-26T08:10:00.000+05:302009-06-26T11:16:10.304+05:30MJ - வாழும் வரலாறு!<a href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RwMit-zyDBI/AAAAAAAAAIY/0zFY45aHLEE/s1600-h/michael_jackson.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RwMit-zyDBI/AAAAAAAAAIY/0zFY45aHLEE/s400/michael_jackson.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5116971774972660754" /></a><br />MJவை உங்களுக்கு தெரியாது என்றால் உங்களுக்கு கண்களும், காதுகளும் இருப்பதே வீண்! செவிக்கு இசை, கண்களுக்கு நடனம் - கலக்கல் கிராபிக்ஸ் என்று இருபதாம் நூற்றாண்டின் கடைசித் தலைமுறையை கட்டிப்போட்டவர் நம்ம மைக்கேல் ஜாக்சன். சமீபத்தில் 1950ல் என்று சொல்லுபவர்களுக்கு எப்படி எல்விஸ் பிரெஸ்லியோ அதுபோல சமீபத்தில் 1991ல் என்று சொல்லும் இளைய தலைமுறைக்கு மைக்கேல் ஜாக்சன்.<br /><br />1958ல் பிறந்த மைக்கேல் ஜாக்சனுக்கு இப்போது வயது 49 (கரெக்டா சொல்லிட்டேன்!). அவர் பாடும் மொழி புரியாதென்றாலும் :-( நடனமும், பீட்டும் கால்களை தாளம் போட வைக்கும். சிறுவயதில் கமலென்றால் என்ன வெறியோ அதே வெறி MJ மீதும் இருந்தது. அவரது Beat it சிறுவயதில் எனக்கு செம பேவரைட். Billie Jeanல் அவர் நடத்திய Moon Walk எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.<br /><br />8 கிராமி அவார்டுகளை ஒரே இரவில் பெற்றவர். பாடகர், நல்ல நடனக்காரர் என்ற பிம்பங்களை தாண்டி மிக அருமையான இயக்குனர். கிராபிக்ஸ் பிரபலமடைந்த காலக்கட்டத்தில் அவரது ஆல்பங்களுக்கு மிகச்சரியான முறையில் கிராபிக்ஸ்களை பயன்படுத்தினார். Black &amp; Whiteல் அவர் பயன்படுத்திய மார்பிங் உத்தி அதன்பின்னர் பல பாப் பாடல்களிலும், திரைப்பாடல்களிலும், விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது. நான் மார்பிங் படித்ததே அந்த பாடலைப் பார்த்து தான்.<br /><br />MJவின் பாடல்கள் பல நடன இயக்குனர்களுக்கும், கலைத்துறையை சார்ந்தவர்களுக்கும் நல்ல ரெபரென்ஸ். டைரக்டர் ஷங்கர் இன்றுவரை MJ பாடல்களை வைத்தே விஷுவல்ஸ்களை ஒப்பேத்தி வருவது நல்ல உதாரணம். MJவின் Smooth Criminal முக்காலா முக்காப்புலா முதல் தீ.. தீ... ஜெகஜோதீ.. ஜோதீ.. ஜோதீ.. வரை பல வடிவங்களுக்கு மாறியிருக்கிறது. ஒரு ஆல்பத்தில் பரதநாட்டியத்தையும் மேற்கத்திய முறைக்கு மாற்றி அழகாக பயன்படுத்தியிருப்பார். They don't care of us பாடல் மூலமாக ஜாக்ஸன் புரட்சிக்காரனாகவும் அறியப்பட்டார்.<br /><br />கருப்பர் இனத்தில் பிறந்தவரான மைக்கேல் ஜாக்சன் பல பிளாஸ்டிக் சர்ஜரிகள் மூலமாக கிட்டத்தட்ட வெள்ளையராக உருவத்தில் மாறிவிட்டார். கின்னஸ் புத்தகம் வெளியீட்டாளர்களால் "Most Successful Entertainer of All Time" என்று பாராட்டப்பட்டவர். இதுவரை வெளியிடப்பட்ட இசை ஆல்பங்களிலேயே முறியடிக்கப்படாத சாதனை படைத்தது ஜாக்ஸனின் "த்ரில்லர்". அந்த ஆல்பம் மட்டும் 104 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகி எட்டாத உயரத்தில் ஜாக்ஸனை நிறுத்தியது.<br /><br /><a href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RwMijuzyDAI/AAAAAAAAAIQ/RDuP_gzlsJ8/s1600-h/michaeljackson-pedophile.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RwMijuzyDAI/AAAAAAAAAIQ/RDuP_gzlsJ8/s400/michaeljackson-pedophile.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5116971598879001602" /></a>சமூகசேவைகளுக்காக தன் வருமானத்தில் பெரும் பகுதியை செலவழிப்பவர் ஜாக்ஸன். அவர் தற்போது வசிக்கும் இல்லம் அமெரிக்காவில் பெரும் பிரசித்தி பெற்றது. அவரது இல்லம் ஒரு தனி அரசாங்கம் என்று அமெரிக்க ஊடகங்கள் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறது. அவருக்கு மனநிலை சரியில்லை என்றும் சொல்வார்கள். சர்ச்சைகளுக்கும் ஜாக்ஸன் வாழ்வில் குறையில்லை. திருமணம் - டைவோர்ஸ் - மீண்டும் திருமணம் - மீண்டும் டைவோர்ஸ் என்று பர்சனல் வாழ்க்கை அவருக்கு நிலையில்லாததாகவே இதுவரை இருந்திருக்கிறது.<br /><br />அனாதை குழந்தைகளுடனான தவறான உறவு, ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை முன்னறிவிப்பில்லாமல் நிறுத்துவது, தேவையில்லாத விளம்பர ஸ்டண்ட் என்று ஜாக்ஸன் மீது அடுக்கடுக்காக (சில சமயங்களில் அபத்தமாக)குற்றங்கள் தொடர்ந்து சாட்டப்பட்டாலும் அவரது ரசிகர்களுக்கு அதைப் பற்றிய கவலையெல்லாம் இல்லை. அவர்கள் ரசிப்பது ஜாக்ஸனின் இசையையும், நடனத்தையும்... அதைத் தவிர்த்து ஜாக்ஸனின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலை கொள்ளப் போவதில்லை.<br /><br />உலகின் கடைசி மனிதனுக்கு காது கேட்கும் வரை MJன் இசை காற்றில் வியாபித்திருக்கும்!<br /><br /><span class="Apple-style-span" style="color:#FF0000;"><i><span class="Apple-style-span" style="font-size: small;">இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்மண நட்சத்திரமாக இருந்தபோது எழுதியது. இசை மீண்டும் ஒருமுறை இறந்துவிட்டது! :-(</span></i></span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-65448599628684209?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com23tag:blogger.com,1999:blog-25593973.post-40836771778106380302009-06-24T08:05:00.000+05:302009-06-24T13:56:54.405+05:30’அவள்!’<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Sj86yU3fi_I/AAAAAAAACQU/6SAK-H6u0lU/s1600-h/aval..jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Sj86yU3fi_I/AAAAAAAACQU/6SAK-H6u0lU/s400/aval..jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5350059518608772082" /></a><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">வி</span></b>க்கித்துப் போயிருந்தான்.<br /><br />அப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை.<br /><br />“நீ மட்டும் யோக்கியமா?”<br /><br />யோக்கியம், அயோக்கியம் வேறுபாடுகள் பார்க்கும் நிலையிலா அப்போதிருந்தான்?<br /><br />ப்ளாஷ்பேக் ஸ்டார்ட்ஸ்...<br /><br /><br /><span class="Apple-style-span" style="font-size: large;"><b>வா</b></span>ர்த்தைகளுக்கு வாய்ப்பின்றி காலைக் கட்டிக் கொண்டு அழுத மாமா.<br /><br />”நீங்கதான் எங்க குடும்ப தெய்வம்” - அழுதுகொண்டே அரற்றிய அத்தை.<br /><br />“மாமா நீங்க இந்த நேரத்துலே உதவலேன்னா குடும்பத்தோடு தூக்குப் போட்டுக்கிட்டு செத்துடுவோம்” - மாமா மகன்.<br /><br />தன்னை வளர்த்தெடுத்த குடும்பம் ஒப்பாரி வைத்து அழுவதைப் பார்த்து அவனும் அழுதான்.<br /><br />மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள் ‘அவள்’<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">உ</span></b>லகமே மகிழ்ச்சியைக் கொண்டாடிய அந்த புத்தாண்டு இரவு அவளுக்கு மட்டும் துயர் தந்ததாய் இருந்தது.<br /><br />“உங்க மாமா குடும்ப கவுரவம் உங்களுக்கு முக்கியமானதா இருக்கலாம். அதுக்காக நான்?”<br /><br />“.................”<br /><br />இரண்டு நாட்களுக்கு முன்பாக மட்டுமே அவளுக்கு திருவேற்காட்டில் ரகசியத் தாலி காட்டியிருந்தான். இரண்டாண்டு தெய்வீகக் காதல். இன்னும் திருமணமானது ரெண்டு வீட்டுக்கும் தெரியாது.<br /><br />அழுதான். திரும்ப திரும்ப அழுதான். அழுகையைத் தவிர்த்து அவனிடம் வேறு ஆயுதமில்லை. ஆண் அழுவது அசிங்கம். அதைவிட அசிங்கம் வேறெதுவுமில்லை.<br /><br />அழுத அவனை வெறுத்தாள். வெறித்தாள், ’போய்த்தொலை’ என்ற மனோபாவத்தோடு.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">அ</span></b>ழகான ஆண்குழந்தை.<br /><br />“அப்பனை உரிச்சு வெச்சிருக்கு” சொன்னபோது திடுக்கிடலாய் நிமிர்ந்தாள் ’அவள்’. அவனும் கூட.<br /><br />அவனுக்கும், அவளுக்கும், அவள் குடும்பத்துக்கும் மட்டும்தானே தெரியும் அப்பன் யாரென்பது.<br /><br />அவனுக்கு குழந்தை பிறந்தது என்று சுற்றம் கொண்டாடியது. யாரோ ஒருவனின் குழந்தைக்கு இனிஷியல் மட்டுமே தரவேண்டிய தன் விதியை நினைத்து மீண்டும் அழுதான். தனிமையில் அழுதான்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">கு</span></b>டும்பத்தோடு திருவேற்காடு போயிருந்தான். இனிஷியல் மகனை தோளில் சாய்த்திருந்தான்.<br /><br />ஆயிரம் கல்யாணம் நடத்திவைத்த அர்ச்சகருக்கு இவன் முகம் மட்டும் நினைவில் இருந்து தொலைக்க வேண்டுமா?<br /><br />“இதுதான் உன் ஆம்படையான்னா, அன்னைக்கு தாலி கட்டினியே? அந்தப் பொண்ணு யாருவோய்?”<br /><br />உண்மை விளங்கி திரும்பவும் மாமா அழுதார்.<br /><br />“உன் வாழ்க்கையையும் வீணடிச்சிட்டேனே?” தலையில் அடித்துக் கொண்டு அழுதார். சந்நிதியில் அழுதார். சுற்றி வேடிக்கைப் பார்ப்பவர்கள் குறித்த பிரக்ஞ்சை இன்றி அழுதார்.<br /><br />ச்சே. இந்த ஆளுக்கு அழமட்டும் தான் தெரியும்.<br /><br />’அவள்’ இம்முறை பார்த்தாள். வெறுப்போடு பார்த்தாள். கண்களில் தீக்கங்குகளை வைத்துப் பார்த்தாள்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">“யா</span></b>ரு போனுலே?”<br /><br />“யாரா இருந்தா உனக்கென்ன?” அவள்.<br /><br />பேருக்கு கணவன் - மனைவியாக இருப்பவர்கள் பேசிக்கொள்வது இப்படித்தானே இருக்கும்? உடலைப் பகிர்ந்துகொள்ள முடியாதவர்களால் உள்ளத்தை மட்டுமா பகிர்ந்துகொள்ள முடியும்?<br /><br />அடிக்கடி அவளுக்கு போன் வந்தது. குழந்தை அழுவதைக் கூட சட்டை செய்யாமல் போனில் பேசினாள். சிரித்து சிரித்துப் பேசினாள். ஒருவேளை தான் இனிஷியல் கொடுத்த குழந்தையின் உண்மை அப்பனோ?<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">நே</span></b>ரங்கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்தாள்.<br /><br />குழந்தையை க்ரெச்சில் சேர்த்திருந்தாள். எதையும் அவன் கேட்டதில்லை.<br /><br />ஒருநாள் பொறுக்கமாட்டாமல் கேட்டான்.<br /><br />”எங்கே போயிட்டு வர்றே?”<br /><br />லேசான வார்த்தைகளில் தொடங்கிய உரையாடல் சூடுபிடித்து உச்சத்தை அடைந்தது.<br /><br />அப்போதுதான் கேட்டாள் அவள்.<br /><br />“நீ மட்டும் யோக்கியமா?”<br /><br />முதல் பத்தியில் தொடங்கிய பிளாஷ்பேக் முடிவுக்கு வந்தது.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">வி</span></b>டிந்த பொழுது மோசமான பொழுது.<br /><br />அவள் ஓடிவிட்டிருந்தால் குழந்தையோடும், கட்டியச் சேலையோடும்.<br /><br />குழந்தைக்கு உண்மையான இனிஷியல் ஒருவேளை கிடைத்திருக்கக் கூடும்.<br /><br />மாமா திரும்ப அழுதார். அவர் குடும்பமே சேர்ந்து அழுதது. அழுமூஞ்சிக் குடும்பம்.<br /><br />ஊரை காலி செய்தான். வீட்டை விற்றான். பணிமாற்றல் வாங்கினான்.<br /><br />“இன்னொரு கல்யாணத்துக்கு பொண்ணும் வேணும்னா பார்க்கட்டா?” விசும்பியபடியே கேட்ட மாமாவை முறைத்தான்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">உ</span></b>டல் வேட்கையோடு அங்கே போனவனுக்கு உள்ளம் வெடித்தது. சுக்கு நூறாய். சுக்கு ஆயிரமாய். சுக்கு லட்சமாய்.<br /><br />மூன்றாவது பத்தியில் பார்த்த ‘அவள்’ இவள்.<br /><br />சினிமா ஆசையில் ஓடிவரும் இளம்பெண்களுக்கும், குடும்பத்தை மறந்து திருட்டு காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் சிலருக்கும் ஏற்படும் அதே கதி.<br /><br />பாவத்தை மறைக்க, மறுக்க என்ன செய்வதென்று புரியவில்லை.. தான் தோன்றித்தனமாக நடந்துகொண்டான்.<br /><br />அவளின் நகைகளை இவளுக்கு போட்டு அழகு பார்த்தான்.<br /><br />“இனிமே நீயே வெச்சுக்கோ” அவனுக்கே கேட்காமல் முணுமுணுத்தான்.<br /><br />அதன்பின் ஒருவரியும் பேசவில்லை இருவரும். முன்பு மனதால் இணைந்தவர்கள் இன்று உடலாலும் இணைந்தார்கள்.<br /><br />அவள் முகம் பார்த்தான்.<br /><br />அழுதான். திரும்ப திரும்ப அழுதான். அழுகையைத் தவிர்த்து அவனிடம் வேறு ஆயுதமில்லை. ஆண் அழுவது அசிங்கம். அதைவிட அசிங்கம் வேறெதுவுமில்லை.<br /><br />அழுத அவனை வெறுத்தாள். வெறித்தாள், இப்போதும் ’போய்த்தொலை’ என்ற மனோபாவத்தோடு.<br /><br /><a href="http://uyirodai.blogspot.com/2009/06/blog-post_22.html">உயிரோடை சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதை!</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-4083677177810638030?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com16tag:blogger.com,1999:blog-25593973.post-2500586213279824802009-06-23T19:34:00.002+05:302009-06-23T19:34:01.621+05:30பார்வை!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SkDEJfFIFUI/AAAAAAAACQk/kdzidvosdHs/s1600-h/vision..jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SkDEJfFIFUI/AAAAAAAACQk/kdzidvosdHs/s400/vision..jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5350492024557016386" /></a><br />ஆட்டோவிலிருந்து இறங்கும்போது உச்சிவெயில் உண்மையாகவே மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. பிளந்துவிட்ட மண்டையை ஈரக்கர்ச்சீப்பால் மூடினேன். சிகப்பான சென்ட்ரல் அடுப்பில் காணக்கிடைக்கும் தீக்கங்குகள் மாதிரி கனகனவென்றிருந்தது. கொடுத்ததை வாங்கிச் செல்லும் ஆட்டோ டிரைவர் வாய்ப்பது முன்னோர் எக்காலத்திலேயோ செய்த புண்ணியம். பயணச்சுமையை முதுகில் தாங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினேன். இரண்டு மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ். மணி ஒன்று நாற்பத்தி ஐந்து.<br /><br />சரியான நடைமேடை கண்டறிந்து, என் பெட்டியை அடைவதற்குள் சட்டை வியர்வையால் தொப்பலாகிவிட்டிருந்தது. சன்னலோரத்தில் அமர்ந்தேன். லேசான காற்று வியர்வையால் நனைந்த உடல்மீது பட்டது இதமாக இருந்தது. திறந்திருந்த சன்னல் வழியாக பார்வையை ஓட்டினேன். இருப்புப் பாதையில் தேங்கியிருந்த அழுக்கு நீரை இரு காக்கைகள் அருந்திக் கொண்டிருந்தன. அலகால் நீரை உறிஞ்சி வானத்தைப் பார்த்து காக்கைகள் நீரருந்தும் பாணியே அழகுதான்.<br /><br />என் பக்கத்தில் நாற்பது கூட்டல் வயதுடையவர் அமர்ந்தார். வெள்ளைச்சட்டை. கருப்பு கால்சட்டை. கையில் தினகரன். செய்தித்தாளைப் பிரித்தவாறே பேச ஆரம்பித்தார்.<br /><br />“ராஜபக்‌ஷேவை போட்டுத் தள்ளணும் சார்”<br /><br />“ஆமாங்க. டிவி பார்க்குறப்போவெல்லாம் மனசு பிசையுது” பதிலுக்கு பேசியாக வேண்டும். அதுதான் மரியாதை.<br /><br />“நான் சந்திரசூடன்ங்க. கோயமுத்தூரு. மெட்ராஸ் ஹைகோர்ட்டுலே லாயரா இருக்கேன்” உடனடியாக அறிமுகப்படுத்திக் கொண்டார். கைகொடுத்து என்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.<br /><br />ரயில் கிளம்பப் போவதாக இந்தி, ஆங்கிலம், தமிழில் கொஞ்சம் சுமாரான பெண்குரலில் அறிவிப்பு கொடுத்தார்கள். இஞ்சின் பெட்டியிலிருந்து ஹாரன் சத்தம் கேட்டது. பெட்டி இருக்கைகள் கிட்டத்தட்ட முழுமை அடைந்து இருக்க, எதிர் இருக்கை மட்டும் காலியாக இருந்தது கண்ணை உறுத்தியது.<br /><br />அவசர அவசரமாக ஒரு பெரியவரும், இருபத்தெட்டு முதல் முப்பது வயது மதிக்கத்தவனும் வந்து அமர்ந்தார்கள். அந்த மதிக்கத்தக்கவன் பெரியவரின் மகனாக இருக்கக் கூடும். எனக்கென்னவோ அவனைப் பார்த்ததுமே பிடிக்கவில்லை. சிலபேரை பார்த்ததுமே பிடித்துவிடும். பழகியவுடன் கசந்துவிடும்.<br /><br />அவன் முகம் வெறிகொண்ட வேங்கையைப் போல இருந்தது. அவனது கண்கள் என்னை மிகவும் துன்புறுத்தியது. அவன் ஒரு சைக்கோ என்று உள்ளுணர்வு உறுத்தியது. இவனோடு பழகினாலும் இவனைப் பிடிக்காது என்று தோன்றியது. பெரியவர் வெள்ளைச் சட்டையும், வேட்டியும் கொஞ்சம் அழுக்காக அணிந்திருந்தார். அவனோ கசங்கிப்போன சட்டையும், சாயம்போன கால்சட்டையுமாக நாகரிகத்துக்கு தொடர்பில்லாதவனாக இருந்தான்.<br /><br />பக்கத்திலிருந்த லாயரைப் பார்த்தேன். சகப்பயணியாக என்னை திருப்தியோடு பார்த்தவருக்கு எதிர் இருக்கை பயணிகள் அதிருப்தியை தந்திருக்கிறார்கள் என்பது பார்வையிலேயே தெரிந்தது.<br /><br />பெரியவர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்தார். ரயில் கிளம்பியது. காணாததை கண்டவன் மாதிரி அந்த பிஸ்கட்டை பிடுங்கி கடித்தான் அவன். பிஸ்கட் துணுக்கு சிதறியது. வாயெல்லாம் துகள்கள். நிமிர்ந்துப் பார்த்த எனக்கோ அருவருப்பாக இருந்தது. லாயருக்கும் அதேபோல இருந்திருக்க வேண்டும். ஒரு டவல் துண்டினை எடுத்து முகத்தில் போர்த்திக்கொண்டு இருக்கையில் வசதியாக சாய்ந்தார். அனேகமாக தூங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்.<br /><br />ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க ஜன்னல் வழியாக காற்று ஜம்மென்று உள்நுழைந்தது. திடீரென்று அவன் உட்கார்ந்த நிலையில் குதித்தவாறே, “அப்பா.. அப்பா.. மரமெல்லாம் பச்சையா அழகாருக்குப்பா” என்று கொஞ்சம் சத்தமாக சொன்னான். பெரியவர் பதிலுக்கு “ம்” என்றார். ஒருவேளை மனநிலைப் பிறழ்ந்தவனோ?<br /><br />“அப்பா அங்கே பாருங்க. எவ்ளோ அழகாயிருக்கு!” குதூகலமான குரலில் கத்தினான். எரிச்சல் மண்டியது.<br /><br />பக்கத்திலிருந்தவர் துயில் களைந்து காதுக்கு பக்கத்தில் வந்து சொன்னார். “க்ராக்கு பய சார்!”<br /><br />திடீரென்று இருண்டதைப் போல தோன்றியது. சடசடவென்று மழைத்துளி விழுந்தது. வானம்தான் எவ்வளவு வேகமாக மாற்றத்துக்கு தயாராகிறது. ஜன்னலை மூட எழுந்தேன். அவன் முரட்டுத்தனமாக என் கையைப் பற்றி முறைத்தான். இச்சூழலில் அவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பி, உட்கார்ந்தேன். பெரியவரைப் பார்த்தேன். கெஞ்சும் தொனியில் ஒரு பார்வை பார்த்தார்.<br /><br />“அப்பா. மழை ஜோன்னு பெய்யுது. ஹைய்யா. ரொம்ப அழகா இருக்கு. சூப்பரா இருக்கு” என்னவோ மழையைப் பார்த்ததே இல்லை என்பது மாதிரி கத்தினான். பெட்டியில் இருந்த மற்றவர்கள் வித்தியாசமாக திரும்பிப் பார்த்தார்கள். பெரியவர் பாவமான தொனியிலேயே அமர்ந்திருந்தார்.<br /><br />ரயில்வேகத்தில் மழைத்துளி ஜன்னலுக்குள் புகுந்து என் சட்டையை நனைக்க, இதற்குமேல் பொறுக்க முடியாது என்ற நிலையில் ஜன்னலை மூட மீண்டும் எழுந்தேன்.<br /><br />”ஜன்னலை மூடாதீங்க!” முரட்டுக்குரலில் சொன்னான். எரிச்சல் எல்லை மீறிப் போனது.<br /><br />“ஏன் சார்? பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே இவனை சேர்த்து சரி செய்யுறதை விட்டுட்டு, வயசான காலத்துலே இப்படி கஷ்டப்படறீங்க?” பெரியவரிடம் கொஞ்சம் காட்டமாகவே கேட்டேன். அவனது முகம் இருளடைந்தது. இதெல்லாம் மட்டும் புரியும்.<br /><br />அவர் அமைதியாக சொன்னார்.<br /><br />“தயவுசெஞ்சு தொந்தரவுக்கு மன்னிச்சுடுங்க தம்பி. ஆஸ்பத்திரியிலிருந்து தான் வர்றோம். அவனுக்கு ஜூரம் வந்து பத்து வயசுலே பார்வை போயிடிச்சி. போனவாரம் தான் கண் தானம் மூலமா அவனுக்கு மறுபடியும் பார்வை கிடைச்சிருக்கு. மழையும், மரமும் அவனுக்கு புதுசாதான் தெரியும்”<br /><br />ஜன்னலை மூடாமலேயே லேசாக அதிர்ச்சியடைந்து இருக்கையில் சாய்ந்தேன். பக்கத்து சீட்டுக்காரர் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். அவன் எதுவும் நடக்காதது போல மீண்டும் மழையை ரசிக்க ஆரம்பித்தான். கடந்துச்சென்ற டீனேஜ் பெண் ஒருத்தியின் டீஷர்ட்டில் ”Don't Judge Too Soon” என்று எழுதியிருந்தது.<br /><br /><i><span class="Apple-style-span" style="font-size:small;"><span class="Apple-style-span" style="color:#FF0000;">நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஆங்கில மின்னஞ்சல் சமாச்சாரத்தை தழுவி புனையப்பட்ட கதை.</span></span></i><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-250058621327982480?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com29tag:blogger.com,1999:blog-25593973.post-36251202577910676022009-06-23T07:25:00.002+05:302009-06-23T11:01:45.547+05:30லட்சிய நாயகன் எங்கே?இளைஞர்களின் விடிவெள்ளி, மக்களின் பேசிக் கான்செப்ட் - மைண்ட்செட்டை மாற்ற வந்த மகான், ஐந்து ஆண்டுகளில் ஐநூறு கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்த நினைத்தவர், நானூறு நாட்களை ஏழைக்குழந்தைகளுக்காக செலவிட்ட வள்ளல், ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களை தொழிலதிபர் ஆக்கியவர், இதுவரை தேர்தலில் போட்டியிட்டவர்களிலேயே இளைஞர் - படித்தவர், ஏழ்மையிலிருந்து அரசியலுக்கு வந்த ஒரே ஒருவர், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வும், ஊக்கமும், ஆதரவும் தந்தவர், விளம்பரம் மீது ஆர்வமில்லா வெள்ளந்தி மனிதர், ஒரிஜினல் யூத் ஐகான், யூத் பூத் அமைத்து இளைஞர்களை முன்னேற்ற வந்தவர், தென்சென்னையை இந்தியாவின் சிறந்த தொகுதியாக்க களமிறங்கிய லட்சிய நாயகனை மே 16-ஆம் தேதியிலிருந்து காணவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி அல்லது சோழிங்கநல்லூர் தொகுதியில் அவரை நிறுத்தி கும்மியடிக்க அவசரமாக தேவைப்படுகிறார். கண்டுபிடித்து தருபவர்களுக்கு நான்கு இட்லியும், கெட்டி சட்னியும் பார்சல் செய்து தரப்படும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-3625120257791067602?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com41tag:blogger.com,1999:blog-25593973.post-44066120467837191612009-06-22T08:17:00.001+05:302009-06-22T16:16:46.296+05:30ஆச்சரியம்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Sj9gY5Xw69I/AAAAAAAACQc/JdAlDMJa86k/s1600-h/surprise.gif"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 331px; height: 321px;" src="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Sj9gY5Xw69I/AAAAAAAACQc/JdAlDMJa86k/s400/surprise.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5350100863173061586" /></a><br />சென்னையில் லேண்ட்மார்க்குக்கு போயிருப்பீர்கள். ஹாரிபார்ட்டர் சீரியஸ் ரிலீஸ் ஆகும் நேரத்தில் போனால் ஹாரிபார்ட்டர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். எங்குப் பார்த்தாலும் புத்தகங்கள். எல்லாமே ஆங்கிலம். நம்மைப் போன்ற தமிழ் வாசகர்கள் தேடிப்பிடித்து தமிழ் புத்தகங்களை பிடிக்க வேண்டும். போனால் போகிறதென்று ஏதாவது ஒரு மூலையில் இடஒதுக்கீடு கொடுத்திருப்பார்கள்.<br /><br />போனவாரம் போனவர்களுக்கு ஆச்சரியம். அதிர்ச்சி. எண்ட்ரன்ஸுக்குள் நுழைந்ததுமே கண்ணுக்கு படுகிறது போல அப்புத்தகத்தை கொத்து கொத்தாக அடுக்கியிருக்கிறார்கள். கடைக்கு வருபவர்கள் அனேகமாக எல்லோருமே அப்புத்தகத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். டாப் செல்லர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒரு தமிழ் புத்தகம். ஒரு தமிழ் புத்தகத்துக்கு இவ்வளவு கிரேஸ் வாசகர்களிடம் இருந்ததை முதன்முறையாகப் பார்க்க முடிகிறது. நிஜமாகவே தமிழில் அதிகம் விற்பனையாகும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர் அதை எழுதியவராக தான் இருக்க முடியும்.<br /><br />லேண்ட்மார்க்கில் மட்டுமே பதினொரு நாளில் விற்பனை ஆயிரத்தை கடந்துவிட்டதாம். ஒட்டுமொத்தமாக ஒரு மாதத்தில் இப்புத்தகம் ஆறாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருப்பதாக கேள்வி.<br /><br />யானை மட்டுமல்ல, புலியும் கூட இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்!<br /><br /><a href="http://nhm.in/shop/978-81-8493-150-1.html">அப்புத்தகம் இங்கே!</a><br /><br />* - * - * - * - * - * - *<br /><br />உரையாடல் அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான கதைகள் செஞ்சுரியைத் தாண்டிவிட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் சத்தமே இல்லாமல் இன்னொரு கோஷ்டியும் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.<br /><br />போட்டியாளர்கள் தேனீக்களைப் போன்றவர்கள். <a href="http://uyirodai.blogspot.com/2009/06/blog-post_14.html">இங்கும் மொத்தமாக மொய்ப்பார்கள்</a> என்று நம்புகிறேன்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-4406612046783719161?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com16tag:blogger.com,1999:blog-25593973.post-52881970272539604982009-06-20T08:35:00.000+05:302009-06-20T10:35:56.057+05:30சைபர் க்ரைம்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjxuFLSlTnI/AAAAAAAACQE/be2luPyTwNI/s1600-h/cyber+crime..jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjxuFLSlTnI/AAAAAAAACQE/be2luPyTwNI/s400/cyber+crime..jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5349271492618440306" /></a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-5288197027253960498?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com72tag:blogger.com,1999:blog-25593973.post-90528719864635541262009-06-19T19:30:00.003+05:302009-06-19T19:30:00.405+05:30நம்பிக்கை!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjtTc9BCA9I/AAAAAAAACP8/7lEGKS_B8ys/s1600-h/Prabhakaran.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 218px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjtTc9BCA9I/AAAAAAAACP8/7lEGKS_B8ys/s400/Prabhakaran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5348960739312927698" /></a><br />நம்பிக்கை என்ற சொல்லின்மீதே நம்பகத்தன்மை இழக்கக்கூடிய அவலச்சூழல். உண்மையை நாம் நம்ப விரும்பாமல் இருக்கலாம். நம்பவிரும்பவில்லை என்பதால் உண்மை பொய்யாகி விடாது. உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளை நம்பாமல் பொய்யாய் எவ்வளவு நாட்களுக்கு நம்மை நாமே ஏமாற்றி வாழமுடியும்? தரவுகளோடு பேசப்படும் உண்மையை நம்பாததே மூடநம்பிக்கை. அறிவியலுக்கும் முரணானது. பகுத்தறிவாளர்களுக்கும் மூடநம்பிக்கையுண்டு என்பது சிலகாலமாய் நிரூபணமாகியிருக்கிறது. மாவீரர் தினம் வரை மட்டுமாவது பொறுத்திருக்க நினைத்தவர்கள் தலையில் பேரிடி விழுந்திருக்கிறது.<br /><br />செய்தி 1 : மாவீரன் பிரபாகரன் வீரக்காவியமாகி விட்டதாக புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.<br /><br />செய்தி 2 : “பிரபாகரன் தலைமையில் தமிழீழம் அமைப்போம்!” - பழ.நெடுமாறன் வீரமுழக்கம்! - இன்றைய ’நெற்றிக்கண்’ புலனாய்வு வார இதழில்! <br /><br />உசுப்பேத்தி, உசுப்பேத்தியே இன்னும் எத்தனை முத்துக்குமரன்களை தீக்குளிக்க வைக்கப் போகிறோமோ?<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjtTUrd05RI/AAAAAAAACP0/ktbwpHBJESo/s1600-h/DILT-Statement-Tamil1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 243px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjtTUrd05RI/AAAAAAAACP0/ktbwpHBJESo/s400/DILT-Statement-Tamil1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5348960597162910994" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjtTPHP8njI/AAAAAAAACPs/gVTNURfaN14/s1600-h/DILT-Statement-Tamil2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 343px;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjtTPHP8njI/AAAAAAAACPs/gVTNURfaN14/s400/DILT-Statement-Tamil2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5348960501541674546" /></a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-9052871986463554126?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com20tag:blogger.com,1999:blog-25593973.post-66130141674170953812009-06-18T22:30:00.000+05:302009-06-19T10:43:24.470+05:30+2<a href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCQOvR5W7jI/AAAAAAAAAvQ/FwxQOtJTWSc/s1600-h/result.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCQOvR5W7jI/AAAAAAAAAvQ/FwxQOtJTWSc/s400/result.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198296075313016370" /></a><br />+2 ரிசல்ட் வெளியாகும் போதெல்லாம் இந்தப் பரபரப்பை நீங்களும் அனுபவித்திருக்கலாம். அலுவலகத்தில் கணினி இருக்கும் எல்லோரது மேஜையும் காலையிலேயே பரபரப்பாக இருக்கும். அலுவலக உதவியாளர்களில் ஆரம்பித்து மேலதிகாரிகள் வரையும் கூட “என் மச்சினிச்சி எழுதியிருக்கா, இந்தாங்க நம்பர், பாஸ் பண்ணிட்டிருப்பா.. ஆனா மார்க் என்னன்னு பாருங்க” என்பார்கள். நான் +2 தேர்வெழுதியபோது இணையம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. மாலைமுரசு அல்லது மாலைமலர் சிறப்பு பதிவைப் பார்த்துதான் நம்பர் வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.<br /><br />இன்றைய சூழலில் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லாருமே தேறிவிடுகிறார்கள். அப்போதெல்லாம் பத்துக்கு மூன்று பேர் அல்லது நாலு பேர் வெற்றிவாய்ப்பை இழந்துவிடுவார்கள். மறுநாள் காலை தினத்தந்தி பார்த்தால் ”மாணவன் தற்கொலை - பெற்றோர் கதறல்!” ரீதியிலான செய்திகளை நிறைய பார்க்கமுடியும்.<br /><br />பலவருடங்களுக்கு முன்பு நடந்தது என்றாலும் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காலை ஐந்தரை மணிக்கெல்லாம் அப்பா என்னை எழுப்புகிறார். அவர் நாலு, நாலரைக்கெல்லாம் எழுந்து கார்த்திகேயபுரம் பால் பூத்துக்கு சென்று பால் வாங்கிவருவது வழக்கம். நானோ ஏழரை, எட்டு மணிக்கு எழுந்து “அம்மா காப்பி ரெடியா?” என்று கேட்பேன்.<br /><br />“சீக்கிரம் எழுந்திருடா. இன்னைக்கு உனக்கு ரிசல்ட் வருது!”<br /><br />“ரிசல்ட் பதினொரு மணிக்கு தாம்பா வரும். கொஞ்ச நேரம் தூங்குறேனே?”<br /><br />“ச்சீ.. இன்னைக்கு கூட இவனுக்கு தூக்கமா? புள்ளைய பெத்துக்கறதுக்கு பதிலா ஒரு தொல்லைய பெத்து வெச்சுருக்கேன்! எழுந்துர்றா.. கோயிலுக்கு போவணும்!”<br /><br />வேண்டாவெறுப்பாக எழுந்தேன். குளித்து முடித்து அப்பாவின் சொல்படி பட்டை அடித்துக்கொண்டு தாத்தா - பாட்டி படம் முன்னால் நின்று பிரார்த்தனை செய்தேன். சாமி படங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. அப்போதே எனக்குள் கடவுள் மறுப்பு சிந்தனை இருந்திருக்கிறது என்பதை நினைத்தால் இப்போது பெருமையாக இருக்கிறது. கல்யாண கந்தசாமி கோயிலுக்கு சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துப் போனார் அப்பா.<br /><br />“கடகராசி, ஆயில்ய நட்சத்திரம். பேரு குமரன். இன்னைக்கு ரிசல்ட் வருது. பாஸ் பண்ணனும்னு சொல்லி ஒரு அர்ச்சனை பண்ணுங்கோ சாமி!” அர்ச்சனைத் தட்டில் ஒரு இருபது ரூபாய்.<br /><br />நான் ஒழுங்காக எழுதி இருந்தால் பாஸ் செய்யப்போகிறேன். இதற்கு போய் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க நினைக்கிறாரே அப்பா என்று கோபம் வந்தது. வேண்டா வெறுப்பாக நவக்கிரகங்களை அப்பாவோடு சுற்றினேன். கோயிலில் என்னைப் போல நிறைய மாணவர்களும், மாணவிகளும்.. என் அப்பாவைப் போல நிறைய அப்பாக்களும் வந்திருந்தார்கள். அன்றைக்கு கல்யாண கந்தசாமிக்கும், அர்ச்சனை செய்த அய்யருக்கும் நல்ல வசூல்.<br /><br />வீட்டுக்கு திரும்பும் வழியில் மூர்த்தி எதிர்பட்டார். அவர் ஒரு ஈழத்தமிழர். எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த ஒரு வீட்டில் குடியிருந்தார். சிறுவயதில் எப்போதோ ஒருமுறை அவரிடம் ”பெரியவன் ஆகி பிரபாகரன் மாதிரி துப்பாக்கியெல்லாம் வெச்சுப்பேன், கெட்டவங்களை சுடுவேன்” என்று சொல்லியிருந்தேன். அதனால் அவருக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்.<br /><br />“என்ன சார்? குமாருக்கு இன்னைக்கு ரிசல்ட்டா?” ஜாலியாக கேட்டார்.<br /><br />“ஆமாம் மூர்த்தி. பையன் விளையாட்டுப் பையன் தான்னாலும், எப்படியாவது பாஸ் பண்ணிடுவான்!”<br /><br />அப்பாவுக்கு என் மீதிருந்த நம்பிக்கை பயம் கொடுத்தது. என்ன எழுதி கிழித்திருந்தேன் என்பது எனக்குத்தானே தெரியும்? நான் படித்தது காமர்ஸ் க்ரூப். தமிழ், ஆங்கிலம் மொழிகள் தவிர்த்து காமர்ஸ், எகனாமிக்ஸ், மேத்ஸ், அக்கவுண்டன்ஸி சப்ஜெக்டுகள் இருந்தது. பத்தாவது வரை தமிழ்வழிக்கல்வி படித்திருந்த என்னை தேவையில்லாமல் +1 சேரும்போது ஆங்கிலவழிக்கு மாற்றியிருந்தார் அப்பா.<br /><br />தமிழைப் பொறுத்தவரை எனக்கு பிரச்சினையில்லை. தமிழில் நான் தோல்வியடைந்தால் தான் அது அதிசயம். ஆங்கிலமும் பரவாயில்லை. காமர்ஸ், எகனாமிக்ஸ் இரண்டுமே கதை எழுதி சமாளித்துவிட்டேன். அக்கவுண்டன்ஸி பிட் அடித்திருந்தேன். மேத்ஸ் மட்டுமே எனக்கு பெருத்த சந்தேகத்தை விளைவித்தது, இரண்டு ஆண்டுகளாக மேத்ஸ் க்ளாஸ் அட்டெண்ட் செய்ததாக நினைவில்லை, ட்யூஷனும் வைத்துக்கொள்ளவில்லை. தேர்வெழுதும் போது எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஆனந்தராஜ் ஒழுங்காக எழுதியிருந்தான் என்றால் நான் தேறிவிடுவேன், என்னைப் பார்த்து எழுதிய சிவராமனும் தேறிவிடுவான்.<br /><br />எட்டு மணிக்கு அப்பா அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டார். பதினொரு மணிக்காக நான் காத்திருக்க ஆரம்பித்தேன். மடிப்பாக்கம் கூட்டுரோடுக்கு பதினொரு மணிக்கு மாலைமுரசு வந்துவிடும். ஆனால் பத்தரை மணிக்கே செயிண்ட்தாமஸ் மவுண்டுக்கு பேப்பர் வந்துவிடும். சைக்கிளை எடுத்துக்கொண்டு செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு சென்று பேப்பரை வாங்கிவிட தீர்மானித்தேன். உதவிக்கு பக்கத்து வீட்டு கோபாலையும் அழைத்துக் கொண்டேன்.<br /><br />பத்தேகால் மணிக்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன். அங்கிருந்த நியூஸ் பேப்பர் ஸ்டால் முன் பெரிய கூட்டம். ரஜினிபடத்தை முதல் நாள் பார்க்க க்யூவில் நிற்பதைப் போல டென்ஷன். பத்தரை மணிக்கு மாலைமலர் வந்தது. காசுகொடுத்து வாங்கிய பேப்பர் கசங்கி இருந்தது கொஞ்சம் கடுப்படித்தது. செங்கை-எம்.ஜி.ஆர் மாவட்ட முடிவுகளை பார்க்கத் தொடங்கினேன். என் ரெஜிஸ்டர் எண்ணை நினைவில் வைத்திருந்தாலும், பதட்டத்தில் மறந்துவிடுவேனோ என்று கையிலும் எழுதி வைத்திருந்தேன். கோபாலும் ஆர்வத்தோடு எண்களை பார்த்துக்கொண்டே வந்தான்.<br /><br />ம்ஹூம்... என் எண் மட்டுமல்ல, என் எண்ணுக்கு அருகிலிருந்த பல எண்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இருந்தால் தானே தெரிவதற்கு? வாழ்க்கையிலே முதல் தடவையாக பெரிய தோல்வி. விளையாட்டில் கூட தோற்க விரும்பாத என் மனம் உடைந்து, கண்கள் கலங்கியது. அப்பா எப்படியும் ரிசல்ட் பார்த்திருப்பார். வீட்டுக்கு வந்து மிதிப்பாரா தெரியவில்லை. அப்பா அடிப்பாரோ இல்லையோ கண்டிப்பாக அம்மாவிடம் அடி உண்டு.<br /><br />சோர்வாக சைக்கிளை மிதித்தேன். என்னைவிட கோபாலுக்கு தான் சோகம் அதிகமாக இருந்தது. வரும் வழியில் ஒரு சூப்பர் ஃபிகர் அவள் அம்மாவோடு எதிரில் வந்துகொண்டிருந்தாள். “தம்பி! ரிசல்ட்டு தானே? கொஞ்சம் பேப்பர் காட்டுப்பா!” என்று அத்தை (அழகான பெண்ணுக்கு அம்மாவெல்லாம் நமக்கு அத்தைதானே?) கேட்க, தாராளமாக பேப்பரை கொடுத்தேன். ஃபிகர் ஆர்வத்தோடு அது எண் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தது.<br /><br />“அம்மா. நான் பாஸ் ஆயிட்டேன்!” குதூகலமாக அந்த ஃபிகர் சொல்ல, எனக்கு வெறுப்பாக இருந்தது. போலியாக சிரித்தேன்.<br /><br />“ரொம்ப தேங்க்ஸ் தம்பி. நீ பாஸ் ஆயிட்டியா?” அத்தை கேட்க, ஃபிகர் எதிரில் என் கவுரவத்தை காத்துக் கொள்வதற்காக “பாஸ் ஆயிட்டேங்க..” என்று பொய் சொன்னேன்.<br /><br />நான் ஃபெயில் ஆனது குறித்து கூட எனக்கு பதட்டமில்லை, என்னோடு ஒண்ணாம் வகுப்பில் இருந்து கூட படித்த செந்தில் பாஸ் ஆகியிருக்கக்கூடாது என்று மனதுக்குள் வேண்டிகொண்டேன். அவனுடைய எண் வேறு எனக்குத் தெரியாது. நேராக செந்தில் வீட்டுக்கு சைக்கிளை விட்டேன். நல்லவேளையாக வீட்டில் தான் இருந்தான்.<br /><br />"மச்சான்.. பேப்பர் வந்துடிச்சாடா?” ஆர்வத்தோடு கேட்டான்.<br /><br />“ம்ம்.. வந்துருச்சிடா.. உன் நம்பர் என்ன?”<br /><br />“நானே பார்த்துக்கறேன். கொடுடா!” என்றான். அவனுடைய அம்மா எட்டிப் பார்த்தார்.<br /><br />”கிருஷ்ணா.. நீ பாஸ் ஆயிட்டியாடா?” அம்மா நிலைமை புரியாமல் கேள்வி கேட்டார்.<br /><br />எந்த பதிலும் சொல்லாமல், செந்தில் ரிசல்ட் என்ன ஆயிற்று என்று பார்த்துக் கொண்டிருந்தேன். என் நிலைமையே பரவாயில்லை. செந்தில் தேடிக்கொண்டே இருந்தான். இருந்த எல்லாப் பக்கங்களையும் புரட்டி, புரட்டி தேடினான். திருவண்ணாமலை மாவட்ட தேர்வு முடிவுகளையெல்லாம் கூட தேடிப் பார்த்தான்.<br /><br />“மச்சான். அது நம்ப டிஸ்ட்ரிக்ட் ரிசல்ட் இல்லேடா!”<br /><br />“பரவாயில்லை.. பார்த்துக்கலாம். ஏதாவது ப்ரிண்டிங் மிஸ்டேக் ஆகியிருக்காதா என்ன?” செந்திலின் பதில் எனக்கு மகிழ்ச்சியை வரவழைத்தது. பையனும் காலி. சூப்பர்!<br /><br />“செந்திலு! என்னாடா ஆச்சி?” செந்தில் அம்மா கேட்டார்.<br /><br />“பார்த்துக்கிட்டே இருக்கேம்மா!”<br /><br />“எத்தனை தடவை பார்த்தாலும் நம்பர் இருந்தாதானேடா தெரியும்?” <br /><br />செந்திலுக்கு சொல்ல விடையேதும் இல்லை. எங்கள் வகுப்பில் இருந்த இருபத்தாறு பேர்களில் பத்தொன்பது பேர் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டார்கள் என்று புள்ளிவிவரம் தெரிவித்தது. பரவாயில்லை மெஜாரிட்டி எங்கள் பக்கம் தான்.<br /><br />ஆயினும் பின்னர் மதிப்பெண்கள் வந்தபிறகு கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. மேத்ஸ் எக்ஸாம் ஆனந்தராஜை பார்த்து எழுதினேன். அந்த தறுதலை ஏகப்பட்ட அடிஷனல் ஷீட் வாங்கி எழுதினான். உலகத்திலே மேத்ஸ் எக்ஸாமை கற்பனை செய்து எழுதிய ஒரே நாயாக அவன் தான் இருப்பான். அந்த ராஸ்கலுக்கு கிடைத்த மார்க் இருநூறுக்கு பதிமூன்று. அவனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதிய அப்பாவியான நான் பெற்றதோ இருநூறுக்கு முப்பத்தொன்று. என்னைப் பார்த்து எழுதிய சிவராமன் எழுபது மதிப்பெண் பெற்று வெற்றியே பெற்றுவிட்டான். என்னத்தை தான் பேப்பர் திருத்தினான்களோ தெரியவில்லை.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-6613014167417095381?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com28tag:blogger.com,1999:blog-25593973.post-22904435571596867032009-06-16T20:30:00.000+05:302009-06-17T11:07:18.322+05:30ஓட்ரா வண்டியை!<a href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SD0CMjPyoDI/AAAAAAAAAxY/G6dqLXkegr0/s1600-h/summa.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SD0CMjPyoDI/AAAAAAAAAxY/G6dqLXkegr0/s400/summa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5205319158953320498" /></a><br />இளையகண்ணனுக்கு வயது நாற்பது இருக்கலாம். நரைத்த தன் தலையை நன்கு மைபூசி மறைத்திருந்தாலும், சில இடங்களில் எட்டிப் பார்க்கும் நரையை ‘பித்த நரை' என்று சொல்லிக்கொள்வார். பழைய பாக்யராஜ் படங்களின் கதாநாயகிகள் அணிவது போல தடிமனான கறுப்பு ப்ரேம் கண்ணாடி. முதுமையால் மாறிப்போன தன் தோற்றத்தை இளமையாக காட்டிக்கொள்வதில் ஆர்வம் அதிகம். பாப் மியூசிக் பாடும் இளைஞர்கள் அணிவது போல ஒரு வட்டவடிவ தொப்பி. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத மனிதர் இளைய கண்ணன்.<br /><br />இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணிப்பது அவருக்கு பிடிக்கும். வேகமாக செல்லும்போது முகத்தில் அறையும் சில்லென்ற காற்றுக்காக மட்டுமல்ல, இருசக்கர வாகனங்களில் செல்லும் சகப்பயணிய்களான நாகரிகமங்கைகளை கலைப்பார்வையோடு காணவும் அவருக்கு இந்த விருப்பமிருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓட்டுனர் உரிமம் வாங்கியிருந்தாலும், அரசு சட்டம் போடுவதற்கு முன்பே விலையுயர்ந்த ஹெல்மெட் வாங்கி விட்டார் என்றாலும், சைக்கிள் தவிர்த்து வேறெதுவும் ஓட்டத் தெரியாது என்பது அவரது அந்தரங்க சோகம்.<br /><br />பொல்லாதவன் பட தனுஷ் போல நகரில் இருக்கும் எல்லா இருசக்கர வாகன விற்பனை நிலையங்களுக்கும் சென்று புதியதாக வந்திருக்கும் வண்டி எது, எவ்வளவு விலை, எந்த வண்டியில் எவ்வளவு எரிபொருள் சேமிக்க முடியும் என எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பார். நகரின் அனைத்து இருசக்கர வாகன விற்பனை நிலைய மேலாளர்களுக்கும் இவரை தெரியும். எப்படியும் வண்டி வாங்கப் போவதில்லை, வாங்கினாலும் ஓட்டத் தெரியாது, ஆனாலும் இறைவனை கேள்வி கேட்ட தருமி மாதிரி எதையாவது மாதாமாதம் புதியதாக கேட்டு கடுப்பேத்திக் கொண்டேயிருக்கிறார் என்பதால் நகரிலும், புறநகரிலும் இருக்கும் இருசக்கர வாகன விற்பனை நிலையங்கள் அனைத்திலும் 'இளைய கண்ணனுக்கு இங்கேவர அனுமதியில்லை!' என்று டிஜிட்டலில் பலகை வைத்திருக்கிறார்கள்.<br /><br />இளைய கண்ணன் அப்படியும் விடுவதாக இல்லை. தன் அடிப்பொடிகள் யாரையாவது வைத்து ‘கடைசியாக வந்த இருசக்கர வாகனம் எது? எவ்வளவு விலை? என்னென்ன புதிய வசதிகள்' என்று கேட்டுத் தெரிந்துவைத்துக் கொள்கிறார். இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கூட தங்கள் வாகனங்களை பற்றி இளையகண்ணனுக்கு தெரிந்த அளவுக்கு தெரியாது.<br /><br />தன்னை இளைஞனாக காட்டிக்கொள்ள அவர் செய்யும் இன்னொரு உபாயம் சுவாரஸ்யமானது. அவரை சுற்றி எந்நேரமும் இளைஞர்களாகவே இருப்பது போல பார்த்துக் கொள்வார். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வாசல்களிலும், டீக்கடை பெஞ்சுகளில் “ஹேய் மாம்ஸ், ஹாய் மச்சிஸ்!” என்று பேசிக்கொண்டு சமீபத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த வாலிபன் போல தன்னைத் தானே அடையாளப்படுத்திக் கொள்வார்.<br /><br />இருசக்கர வாகனம் வைத்திருக்கும் இளைஞன் எவனாவது மாட்டினால் போதும், முன்னூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு நகர்வலம் வருவார். வண்டி ஓட்டுபவன் மனம் சோர்ந்துப் போய் அந்த வண்டியை விற்றுவிட்டு சைக்கிள் வாங்கிவிடலாமா என்று யோசிப்பான். வண்டியில் போகும்போது இருபக்கமும் பார்த்தவாறே வருவார். ஏதாவது பெண்கள் இருசக்கர வாகனங்களில் வந்துவிட்டால் போதும் தலைவர் குஷியாகி விடுவார். “மாப்புள்ளே, பேக் வியூல அசத்தலா இருக்கு. அந்த புள்ளை முகத்தை பார்க்கணும். வேகமா ஓட்ரா வண்டியை” என்று நாட்டாமை விஜயகுமார் மாதிரி ஆணையிடுவார். இவரது கதறல் முன்னால் போகும் புள்ளைக்கே கேட்டுவிடும். வயதானவர் என்பதால் இவரை திட்டாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் அப்பாவி இளைஞனை “பொறுக்கி!” என்று அந்த புள்ளை திட்டிவிட்டு, காறி உமிழ்ந்துவிட்டுப் போகும்.<br /><br />“இப்பவெல்லாம் எல்லாப் பொண்ணுங்களும் ஹெல்மெட் போட்டு முகத்தை மூடிக்குது. இல்லேன்னா துணியை எடுத்து தாலிபான் மாதிரி மறைச்சிக்குதுங்க...” என்று அவ்வப்போது வருத்தப்படுவார்.<br /><br />என்னுடைய போதாத நேரம், ஒருநாள் இளையகண்ணனிடம் நான் மாட்டிக் கொண்டேன்.<br /><br />“மாப்புள்ளே மவுண்ட்ரோடு போடா!”<br /><br />“என்னண்ணே அங்கே ஏதாவது வேலையா?”<br /><br />“சும்மா ஜாலியா போலாம்டா. நெறைய புள்ளைங்க ஸ்பென்சர்ஸ் வருவாங்க ஜாலியா சைட் அடிச்சிக்கிட்டே டைம்பாஸ் பண்ணலாம். அப்படியே ஈவ்னிங் பீச்சுக்கு போயிட்டோம்னா இன்னைக்கு பொழுது நல்லபடியா போகும்”<br /><br />“அண்ணே எனக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லைண்ணே” என்று முனகிக்கொண்டே வண்டியை கிளப்பினேன்.<br /><br />மதிய நேரம் என்பதால் அனல்காற்று முகத்தில் அறைந்தது. ஹெல்மெட் போட்டிருந்ததால் தலையில் வியர்வை வழிந்து நசநசத்தது. பில்லியனில் உட்கார்ந்திருந்த அண்ணனோ சாலையை ரசிக்க ஆரம்பித்துவிட்டார். “என்னாச்சி இன்னைக்கு சன் டிவியில் ஏதாவது விஜய் படமா? பொண்ணுங்க அவ்வளவா காணோமே?”<br /><br />தலையெழுத்தே என்று முணுமுணுத்துக் கொண்டு மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தேன். எப்போதும் சிகப்பு நிற விளக்கு எரியும் நந்தனம் சிக்னலில் நிற்கவேண்டியதாயிற்று. என் வண்டிக்கு நான்கைந்து வண்டிகள் முன்பாக ஒரு கருப்புப்புடவை ஸ்கூட்டரில் ஒயிலாக அமர்ந்திருந்தது. அண்ணன் எப்படியோ எட்டிப் பார்த்துவிட்டார். “மாப்புள்ளே அந்த கருப்புப் புடவையை ஃபாலோ பண்ணுடா! செம கிளாமரா தெரியுது” என்றார்.<br /><br />பச்சை சிக்னல் கிடைத்ததுமே நானும் வண்டியை விரட்ட ஆரம்பித்தேன். ம்ஹூம், புயல் வேகத்தில் சென்ற கருப்புப் புடவையை தாண்டுவது அவ்வளவு சுலபமாக இல்லை. அடுத்த சிக்னல்.. அடுத்த சிக்னல்.. என்று இரண்டு மூன்று சிக்னல்களை தாண்டிதான் தேனாம்பேட்டையில் பிடிக்கமுடிந்தது. அண்ணன் கருப்புப் புடவையை பார்க்க வசதியாக சிக்னல் எல்லைக்கோட்டை தாண்டி வண்டியை நிறுத்தினேன். இருபதடி தூரத்தில் நின்றிருந்த போக்குவரத்துக் காவலர், இந்த வண்டியை மடக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.<br /><br />முகத்தை பவுடர் போட்ட கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்டு தலையை ஸ்டைலாக, என்னவோ விருப்பமேயில்லாமல் திருப்புபவர்போல திருப்பி கருப்புப் புடவையை கண்டவர், “டேய், வண்டியை ஓட்ரா!” என்றார்.<br /><br />“என்னாச்சிண்ணே! சிக்னல் இன்னும் விழலை? எப்படி போவமுடியும்?”<br /><br />“எப்படியாவது போடா. ஃபைன் வேணும்னா நான் கட்டிக்கறேன். அந்த கருப்புப்புடவை வேற யாருமில்லே. உன்னோட அண்ணிதான்! வீட்டுலே பார்த்து சலிச்ச முகத்தை தான் இங்கேயும் பார்க்கணுமா? என்னை பார்த்துடப் போறா. சீக்கிரம் விடு”<br /><br />பாவம். லென்சு மாமா மாதிரி வீட்டில் என்ன ரீல் விட்டுவிட்டு ஊர் சுற்ற வந்தாரோ என்று எண்ணிக்கொண்டே ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-2290443557159686703?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com20tag:blogger.com,1999:blog-25593973.post-65357625777924860052009-06-15T15:45:00.000+05:302009-06-15T15:45:04.127+05:30தொழில் ரகசியம்!<a href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCqDrhtQfRI/AAAAAAAAAvc/XxZG8dVZQ2g/s1600-h/IPL.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200113503558466834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCqDrhtQfRI/AAAAAAAAAvc/XxZG8dVZQ2g/s400/IPL.jpg" border="0" /></a><br /><strong><span style="font-size:180%;">20 - 20</span></strong> என்.பி.எல். போட்டிகளில் ஆட்டம் முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வைசாக் கிங்ஸ் அணியினருக்கு இது மிக முக்கியமான போட்டி. முதலில் ஆடிய மதுரை கில்லி அணியினர் நூற்று இருபது ஓட்டங்களுக்குள் சுருண்டு விட்டதால் வைசாக் கிங்ஸ் மிக சுலபமாக வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. இன்னமும் ஐந்து ஓவர்கள் கைவசம் இருக்கிறது, ஆறு விக்கெட்டுகள் கைவசம் வைத்திருக்கும் வைசாக் அணி இன்னமும் இருபத்தி ஐந்து ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும். இப்போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வைசாக் அணிக்கு கிடைக்கும்.<br /><br />பதினாறாவது ஓவரில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம். அதுவரை அதிரடியாக ஆடி ரன் குவித்துக் கொண்டிருந்த வைசாக் கிங்ஸ் கேப்டன் நகுல் ஆர்யா சிக்ஸருக்கு முதல் பந்தையே தூக்க, பவுண்டரி லைனில் இருந்தவர் மிக கவனமாக எல்லைக்கோட்டை தொடாமல் அந்த கேட்சை பிடித்தார். இருப்பினும் ஐந்துவிக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் வைசாக் வென்றுவிடும் என்றே அனைவரும் கருதினார்கள். மாறாக அதே ஓவரில் அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் எல்.பி.டபிள்யூ, போல்டு, ரன் அவுட் என்று பொறுப்பில்லாமல் அவுட் ஆக பதினேழாவது ஓவரில் பதினைந்து ரன்கள் வித்தியாசத்தில் மதுரை கில்லி அணி வென்று தன் அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டது. சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவிய வைசாக் அணியினர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு எதிரணியினருக்கு கைகுலுக்கினார்கள்.<br /><br />பத்திரிகையாளர்கள் வைசாக் அணியின் உரிமையாளரும், ஆசியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான அஜய் புல்லையாவை சூழ்ந்துகொண்டார்கள்.<br /><br />“என்.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக உங்கள் அணி தான் கோப்பையை வெல்லும் என்று சொன்னீர்களே? இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?”<br /><br />“என் அணி கோப்பையை வெல்லப்போவது இல்லை என்று சொல்லப் போகிறேன்!”<br /><br />“இருந்த அணிகளிலேயே மிக அதிக விலைக்கு அதாவது ஐநூறு கோடி ரூபாய்க்கு இந்த அணியை வாங்கியிருக்கிறீர்கள். இதர செலவுகளாக ஒரு இருநூற்றி ஐம்பது கோடி செலவழித்திருப்பீர்கள். பணம் வீணாகிவிட்டது என்று கவலை கொள்கிறீர்களா?”<br /><br />“ம்... நான் ஒரு தொழிலதிபர். பண இழப்பு எனக்கு வருத்தத்தை தரவில்லையென்று பொய் சொல்லமாட்டேன். அணியின் கேப்டன் நகுல் ஆர்யாவையும், பயிற்சியாளரையும் நம்பி தோற்றுவிட்டேன். நான் தேர்ந்தெடுத்த அணியை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டிருந்தால் என் அணி வென்றிருக்கும்!”<br /><br />“பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறீர்களே? மீதி இருக்கும் போட்டிகளில் இதனால் உங்கள் அணியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படாதா?”<br /><br />இதற்குள்ளாக புல்லையாவின் அந்தரங்க பாதுகாவலர்களும், உதவியாளர்களும் அவரை காருக்கு அழைத்துச் சென்றுவிட பத்திரிகையாளர்களின் மற்ற கேள்விக்கு அவரால் விடையளிக்க இயலவில்லை. பத்திரிகையாளர்கள் கூட்டமாக வைசாக் அணியின் கேப்டன் நகுல் ஆர்யாவை சூழ்ந்தார்கள்.<br /><br />“உங்களால் தான் வைசாக் அணி தோற்றதாக அணியின் உரிமையாளர் குற்றம் சாட்டுகிறாரே?”<br /><br />நகுலின் முகம் சிவந்தது. உதடுகள் துடிதுடித்தது. இருப்பினும் ஒரு நொடியில் தன்னை சரிசெய்துகொண்டு புன்னகைத்தவாறே, “அவர் ஒரு நல்ல தொழிலதிபர். இதைத்தவிர சொல்ல வேறொன்றுமில்லை” என்றவாறே மைதானத்தை விட்டு வெளியேறினான்.<br /><br /><br /><strong><span style="font-size:180%;">அ</span></strong>ஜய் புல்லையாவின் அந்தரங்க அலுவல் அறை அது. அவரது மகன் தேஜாவை தவிர வேறு யாருக்கும் அந்த அறைக்குள் செல்ல அனுமதியில்லை. தேஜா இருபது வயது இளமைப்புயல். பதினெட்டு வயதிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் பொறுப்பேற்றவன். பிறந்ததிலிருந்தே குளிரூட்டப்பட்ட அறைகளில் மட்டுமே வாழ்ந்தவன் என்பதால் ரோஜாப்பூ நிறத்திலிருந்தான். தலை கலைந்திருந்ததை கைகளால் சரிசெய்தான். முகம் சற்று வாட்டமாக இருந்தது. கிரிக்கெட் ரசிகன் என்பதால் என்.பி.எல். போட்டிகளில் ஒரு அணியை தங்கள் குழுமம் வாங்குவது என்பது அவன் செய்திருந்த முடிவு.<br /><br />“அப்பா! விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமானது. தோற்றவுடனேயே நம் அணித்தலைவரின் தலையை நீங்கள் உருட்டியது நாகரிகமானது அல்ல!” கொஞ்சம் சீற்றத்தோடே தந்தையிடம் சொன்னான்.<br /><br />“வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்துக் கொள்ள நாம் விளையாட்டு வீரர்கள் அல்ல. தொழிலதிபர்கள். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பல லட்சங்களை பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தது. விவரம் புரியாமல் வார்த்தைகளை விடமாட்டேன் தேஜா!”<br /><br />“புரியவில்லை அப்பா. இந்தப் போட்டிகளில் வென்றிருந்தால் நமக்கு ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். இருப்பினும் இப்போதே கூட ஸ்பான்ஸர்கள் மூலமாக நாம் ஈட்டிய வருவாயை கணக்கெடுத்துப் பார்த்தால் நமக்கு நஷ்டம் எதுவுமில்லை. அப்படியிருக்க ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை நம் அணி தோல்விகளுக்கு பொறுப்பேற்க செய்ததில் நமக்கென்ன லாபம்?” நகுலின் தீவிர விசிறியான தேஜா தன் அபிமான வீரனுக்கு தன் தந்தையாலேயே ஏற்பட்ட அவமானத்தால் வருத்தத்தில் இருந்தான்.<br /><br />கனிவாக தன் மகனைப் பார்த்த புல்லையா, “உலகின் முதல் தொழில் எது தேஜா?”<br /><br />“விபச்சாரம்!”<br /><br />“இல்லை.. ஊழல்! சாத்தான் ஆதாம் மூலமாக செய்த ஆப்பிள் ஊழல் தான் உலகின் முதல் தொழில்!”<br /><br />“சரி!”<br /><br />“ஊழல் என்ற வார்த்தையை சமூகம் அருவருப்பாக நோக்கினாலும் கூட தொழில் செய்பவர்கள் ஊழல் செய்யாமல் எந்த தொழிலையும் செய்யமுடியாது. உண்மையில் சொல்லப்போனால் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களைவிட பன்மடங்கு தனியார் துறைகளில் ஊழல் செய்து சம்பாதிக்க முடியும். சம்பாதிப்பது தானே நமது தொழில்?”<br /><br />“புரியவில்லை அப்பா. நம் அணித்தலைவர் அவமானப்படுத்தப் பட்டதற்கும் நீங்கள் கொடுக்கும் வியாக்கியானங்களுக்கும் என்ன தொடர்பு?”<br /><br />“பொறு. அதற்குதான் வருகிறேன். நம் அணியை ஐநூறு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறேன். ஏறத்தாழ இருநூற்றி ஐம்பது கோடி செலவழித்து விளம்பரப்படுத்தியிருக்கிறேன். நம் அணி வென்றால் நமக்கு ஆயிரம் கோடி ரூபாய் தான் வரும். அதே நேரத்தில் நம் அணி வெல்லும் என்று தொழில்முறை சூதாட்டக்காரர்கள் கட்டியிருக்கும் பந்தயத் தொகை எவ்வளவு தெரியுமா?”<br /><br />“ஐயாயிரம் கோடி ரூபாய் இருக்கலாம். இருந்ததிலேயே சிறந்த அணி நம் அணி என்பதால் இவ்வளவு பெரிய தொகை பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக பத்துக்கு எட்டு பேர் நம் அணிதான் கோப்பையை வெல்லும் என்றார்கள்”<br /><br />“நீ சொல்லுவது சரி. ஆனால் நம் அணி தோற்கும் என்று பண்ணிரெண்டாயிரம் கோடிக்கு பந்தயம் கட்டப்பட்டிருப்பது உனக்குத் தெரியுமா?”<br /><br />“தெரியாது அப்பா”<br /><br />“ஆம் மகனே. நம் அணி தோற்கும் என்று நம் ஆட்கள் மூலமாக நான் மட்டுமே பத்தாயிரம் கோடி ரூபாய் கட்டியிருக்கிறேன்! இப்போது சொல். நம் அணி தோற்றால் யாருக்கு லாபம்”<br /><br />வியப்போடு, “லாபம் இருக்கட்டும் அப்பா. நம் அணி வென்றிருந்தால் நமக்கு தானே கவுரவம்?”<br /><br />“கவுரவத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு. இங்கே சம்பாதிப்பவன் தான் வெற்றி பெற்றவன். நிறைய பணம் சம்பாதித்தவனை கவுரவமும், புகழும் தானே தேடி வரும்! நம் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறப் போகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஆயிரம் கோடி அளவில் நான் நன்கொடை தரவேண்டும். நான் முப்பது ஆண்டுகளாக பாடுபட்டு சேர்த்தப் பணத்தை தரச்சொல்கிறாயா? ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை தான் ஊழல்வாதிகளுக்கு தரமுடியும்!”<br /><br />“என்ன இருந்தாலும் நகுலின் பெயர் அசிங்கப்பட்டது எனக்கு நல்லதாகப் படவில்லை. அவர் நம்முடைய நல்ல நண்பர்!”<br /><br />“கவலைப்படாதே நகுலின் பெயர் பாதிக்கப்படாது. கடைசி இரு போட்டிகளில் அவன் சதம் அடிப்பான், இழந்த பெயரை மீட்டுக் கொள்வான். அதற்கும் நான் ஏற்பாடு செய்துவிட்டேன்!”<br /><br />“அதற்கும் கூடவா ஏற்பாடு?”<br /><br />“ம்ம்.. நகுல் நம் அணியின் தலைமை பொறுப்பேற்க நாலு கோடி பேசியிருந்தோம் இல்லையா? நமக்கு பத்தாயிரம் கோடி அளவிலான லாபத்தை அவன் தந்திருப்பதால் அவனுக்கு பேசியிருந்த தொகையை விட நூறு மடங்கு அதிகம் தருவதாக உறுதியளித்திருக்கிறேன். உனக்கு சந்தோஷம் தானே?”<br /><br />“சந்தோஷம் அப்பா!” நகுல் ஏன் தன் தந்தையை நல்ல தொழிலதிபர் என்று சொன்னான் என்று புரிந்ததால் அர்த்தத்தோடு சிரித்தான் தேஜா!<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-6535762577792486005?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com24tag:blogger.com,1999:blog-25593973.post-58088603354694240412009-06-15T11:47:00.006+05:302009-06-15T12:16:32.183+05:30தேவதைகளும், கண்ணாடிகளும்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjXtzwJlqZI/AAAAAAAACPU/2Dq_XNyar3g/s1600-h/angel.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjXtzwJlqZI/AAAAAAAACPU/2Dq_XNyar3g/s400/angel.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347441605926562194" /></a><br />தேவதைகள் எப்போதும் அருள் மட்டுமே பாலித்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது அச்சுறுத்தவும் செய்கிறார்கள். வாடிகன் தேவதைகள் ஏஞ்சல்ஸ் & டிமான்ஸில் உலகை அச்சத்தில் ஆழ்த்தியது மாதிரி.<br /><br />போப்பாண்டவர் செத்துப் போகிறார். புதுப்போப்பை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் முக்கியமான நான்கு கார்டினல்கள் காணவில்லை. ஒரு ஆய்வுக்கூடத்தில் மிகமுக்கியமான ’வயல்’ (Vial) என்று சொல்லக்கூடிய விஷயம் ஒன்று கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது. அந்த வயலால் வாடிகன் அழிவதை தடுக்க அமெரிக்காவில் இருந்து புரொபசர் ஒருவர் கிளம்பிவருகிறார். அவர் நாத்திகர். அவருக்கும் வாடிகனின் புனிதர்கள் சிலருக்கும் அவ்வப்போது நாத்திக, ஆத்திக விவாதம் நடைபெறுகிறது.<br /><br />வாடிகனுக்கு புதியதாக வில்லன்கள் முளைத்துவிடவில்லை. அது முன்னூறு, நானூறு ஆண்டு பகை என்று புரொபசர் விளக்குகிறார். அவர்கள் பெயர் இலுமினாய்ட்ஸாம். அறிவியல் வெறியர்கள். மதஅடிப்படைவாத தீவிரவாதத்துக்கு எதிரான விஞ்ஞான தீவிரவாதிகள். கடத்தப்பட்ட கார்டினல் ஒவ்வொருவராக இலுமினாய்டிகள் கொன்றுகொண்டே வர, கடைசி கார்டினலையும் கொன்று விட்டு, அந்த வயல் மூலமாக வாடிக்கனையே அழிப்பது இலுமினாய்டுகளின் திட்டம்.<br /><br />புரொபசரால் கார்டினல்களை காப்பாற்ற முடிந்ததா? வயலால் வாடிகன் அழியாமல் காக்கமுடிந்ததா என்பதே படம். படம் முழுக்க ஹிட்ச்காக் பாணியில் திடீர் திடீரென பலர்மீது சந்தேகத்தின் நிழல் விழுகிறது. யார் குணச்சித்திரம்? எவன் துரோகி? எவன் வில்லன்? என்பது யாரும் எதிர்பாராத அடுக்கடுக்கான சஸ்பென்ஸ்.<br /><br />டான்பிரவுன் இந்த நாவலை எழுதியதுமே இதை தமிழில் தசாவதாரமாக உல்டா அடித்து எடுத்துவிட்டார்கள். ஹாலிவுட்காரர்கள் கொஞ்சம் சோம்பேறிகள். தசாவதாரம் வெளிவந்து ஒருவருடம் கழித்துதான் இப்படத்தை வெளியிட முடிந்திருக்கிறது.<br /><br />* - * - * - * - * - * - * - *<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjXttNIeSRI/AAAAAAAACPM/0zfqSpnZ6b0/s1600-h/mirrors.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjXttNIeSRI/AAAAAAAACPM/0zfqSpnZ6b0/s400/mirrors.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347441493447428370" /></a>அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அவரவர் முக அழகை கண்ணாடிதான் வெளிக்காட்டும். முகத்தை மட்டுமன்றி பேய்களையும் கண்ணாடிகள் காட்டுவது பைபிள்கால சினிமா ஸ்ட்ரேட்டஜி. மிர்ரர்ஸ் திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல.<br /><br />நியூயார்க் நகரில் டிடெக்டிவ்வாக பணியாற்றிய ஒருவர், ஒரு குற்றம் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்படுகிறார். வேறு பணி கிடைக்காத நிலையில் தீவிபத்தில் எப்போதோ எரிந்துப்போன மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் நைட் வாட்சேமனாக பணியாற்றி வயிற்றைக் கழுவுகிறார்.<br /><br />இரவு வேளைகளில் ரவுண்ட்ஸ் வரும்போது கிட்டத்தட்ட அழிந்துப்போன அந்த பிரம்மாண்ட கட்டத்தின் ஒரு பகுதியில் சில கண்ணாடிகள் மட்டும் பளிச்சென இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார். அக் கண்ணாடிகளுக்குள் அடைந்துக் கிடக்கும் ஆவிகள் அடுத்த சில நாட்களில் அவரது வாழ்க்கையில் ஆடும் பேயாட்டம் தான் மிர்ரர்ஸ். படத்தின் ஒலிப்பதிவு பயங்கரமானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பயமென்னும் உணர்வை ஏற்படுத்திய படம் இது. இப்படத்தின் முடிவும் யாரும் எதிர்ப்பார்க்க இயலாதது.<br /><br />கடந்த வாரம் இந்தியாவில் வெளியாகியிருக்கும் இப்படம், கடந்த வருடமே ஹாலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. இது இந்தியாவில் வெளியாகுவதற்கு முன்பே இப்படத்தை அச்சு அசலாக, சில காட்சிகளோடு சேர்த்து 13பி என்று இந்தியிலும், யாவரும் நலம் என்று தமிழிலும் படமெடுத்து துட்டு பார்த்துவிட்டார்கள். இந்த அழகில் 13பி படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய யாரோ ஒரு கோயிந்து கேட்டிருப்பதாக இயக்குனர் பேட்டி வேறு தருகிறார்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-5808860335469424041?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com20tag:blogger.com,1999:blog-25593973.post-75828515630549367482009-06-13T10:32:00.000+05:302009-06-13T10:32:11.397+05:30எங்கே போனது என் அல்வா துண்டு?<a href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SDT-HTPyn9I/AAAAAAAAAwk/XxvpD7ZpS8M/s1600-h/maze.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5203062870898810834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SDT-HTPyn9I/AAAAAAAAAwk/XxvpD7ZpS8M/s400/maze.jpg" border="0" /></a><br />வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று 'ச்சூ' கொட்டுகிறோம். அந்த குடும்பம் எப்படி, ஏன் வாழ்ந்தது? எங்கே சறுக்கி கெட்டது? என்று யாராவது யோசித்திருக்கிறோமா? யோசித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும். கிடைத்த வாய்ப்பை எண்ணி சிலாகித்து அந்த குடும்பத்தின் அப்போதைய உறுப்பினர்கள் திருப்திபட்டு இருப்பார்கள். அடுத்த வாய்ப்புக்கான தேடல் குறித்து சிந்தனை ஏதும் அவர்களுக்கு இருந்திருக்காது. புதிய மாற்றங்களுக்கான இடைவிடா தேடுதல் தான் அடுத்தக்கட்ட நகர்வுக்கு வழிவகுக்கும். மாற்றம், தேடுதல் குறித்து நகைச்சுவையாக, எளியமொழியில் அலசுகிறது ‘எங்கே போனது என் அல்வா துண்டு' என்ற புத்தகம்.<br /><br />ஒரு இனிப்புக்கடையில் நான்கு ஜீவராசிகள் வாழுகிறது, வாசு - அரி என்ற இரண்டு எலிகளும், அச்சுபிச்சு - விவேக் என்ற இரண்டு குட்டியூண்டு மனிதர்களும் அவர்கள். அந்த இனிப்புக்கடையின் ஆறாம் எண் அறையில் பெட்டி பெட்டியாக, விதம்விதமாக அடுக்கிவைக்கப்பட்ட அல்வாதுண்டுகள் தான் அவர்களது வாழ்க்கை. தினமும் ஆறாம் எண் அறைக்கு வந்து அல்வாக்களை வயிறுமுட்டும் வரையில் தின்று அவர்களது வாழ்க்கை இனிமையாக கழிகிறது. “அல்வா துண்டுகள் சாப்பிடுவது எப்போதும் அலாதி இன்பமே!”<br /><br />ஒரு நாள் திடீரென ஆறாம் எண் அறை காலியாகிக் கிடக்கிறது. நால்வரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இனி ஜீவனத்துக்கு என்ன செய்வது என்று தலைமீது கை வைத்து உட்கார்ந்துவிடுகிறார்கள். வாசு - அரி இரு எலிகளும் இனிப்புக்கடையின் வேறு அறை எதிலாவது அல்வாத்துண்டுகள் கிடைக்கும், தேடிப்பார்த்து சாப்பிடலாம் என்று தங்கள் தேடலை ஆரம்பிக்கின்றன. அச்சுபிச்சுவும், விவேக்கும் இந்த அறையிலேயே யாராவது இனிமேல் வந்து அல்வாத்துண்டுகளை அடுக்குவார்கள், அப்போது சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று அறையிலேயே தவம் கிடக்கிறார்கள். “எவ்வளவுக்கெவ்வளவு அல்வாத்துண்டு உங்களுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை சேமித்து வைப்பதும்!”<br /><br />பல அறைகளில் இடைவிடாது தேடி ஒன்பதாவது என் அறையில் வேறுரக அல்வாத்துண்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதை வாசுவும், அரியும் காண்கிறார்கள். தங்கள் தேடுதலுக்கு பலன் கிடைத்தது குறித்து மகிழ்கிறார்கள். இங்கே அல்வாத்துண்டு காலி ஆனாலும் கூட அடுத்த தேடலுக்கு மனதளவில் ஆயத்தமாகிறார்கள். மாறாக ஆறாம் எண் அறையில் தங்கிவிட்ட அச்சுபிச்சு - விவேக் கோஷ்டி பட்டினியில் வாடுகிறது. புதிய அல்வாத்துண்டுகளை தேடுவதற்கு எந்த முனைப்பும் காட்டாமல் சோம்பேறித்தனமாக நாட்களை கடத்துகிறது. “நீ மாறவில்லையெனில் சுவடுகளே இல்லாமல் அழிந்துப் போவாய்!”<br /><br />நீண்டநாட்களாக உணவில்லாமல் வாழும் அவலநிலை அச்சுபிச்சுவையும், விவேக்கையும் சூழ, புதிய அல்வாத்துண்டுகளை தேடுவோம் என்று விவேக் ஆலோசனை கூறுகிறான். புதிய அல்வாத்துண்டை தேட தான் தயாரில்லை, புதியதாக கிடைத்தாலும் அது ஏற்கனவே கிடைத்த அல்வாத்துண்டுக்கு இணையாகாது என்று கூறி அச்சுபிச்சு அந்த ஆலோசனையை நிராகரிக்கிறான். வேறுவழியில்லாமல் தனியாக தன் தேடுதலை தொடங்குகிறான் விவேக். பலமணி நேர அயராத தேடுதலுக்குப் பின்னரும் அவனால் அல்வாத்துண்டுகளை கண்டறிய இயலாததால் மனக்கிலேசம் அடைகிறான். எதிர்காலம் குறித்து அச்சம் கொள்கிறான். “நீ பயப்படவில்லையெனில் என்னவெல்லாம் செய்திருப்பாய்?”<br /><br />இருப்பினும் தன்னால் எப்படியாவது அல்வாத்துண்டுகளை கண்டறிந்து வாழமுடியும் என்ற தன்னம்பிக்கையை தனக்கு தானே வளர்த்துக் கொள்கிறான். இதுவரை அவன் தேடாத புதிய இடங்களை தேடுகிறான். எந்தவொரு வாய்ப்பையும் அவன் தவறவிடுவதாக இல்லை. கண்ணில் பட்ட வழியிலெல்லாம் பயணிக்கிறான். பலநாட்களாக சோம்பேறித்தனமாக, உல்லாசமாக வாழ்ந்த வாழ்க்கைக்கும், அயராத தேடுதலில், உழைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை கண்டறிகிறான். “பயத்தை தகர்த்து! முன்னேறுதலில் நீ சுதந்திரமாக உணர்வாய்!”<br /><br />ஒருவாறாக ஏற்கனவே வாசுவும், அரியும் கண்டறிந்த அல்வாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒன்பதாவது எண் அறையை கண்டறிகிறான் விவேக். வாசுவும், அரியும் இவனை மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். பலநாள் பசி தந்த களைப்பும், ஓயாத உழைப்பு தந்த சோர்வும் காரணமாக ஏராளமாக உண்கிறான் விவேக். ஆறாம் எண் அறையில் அல்வாத்துண்டுகள் காலியான போதே தன் தேடுதலை ஆரம்பித்திருந்தால் இவ்வளவு அலைச்சல் ஏற்பட்டிருக்கிறாது என்பதை நினைத்துப் பார்க்கிறான். “எவ்வளவு சீக்கிரமாக பழசை உதறுகிறோமோ, அவ்வளவு சீக்கிரமாக புதுசு கிடைக்கும்!”<br /><br />தன் நண்பன் அச்சுபிச்சுவும் இந்த அறைக்கு வந்தால் நன்றாக இருக்கும், அவன் வருவானா என்று ஏங்குகிறான் விவேக். இந்த அறையில் இருக்கும் அல்வாத்துண்டுகளும் ஒருநாள் திடீரென காணாமல் போகும். அப்போது தன் அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகவேண்டும் என்று மனதளவில் உறுதிகொள்கிறான். எதுவுமே நிலையானதல்ல, மாற்றங்கள் வருவதும், அதனால் விளையும் விளைவுகளை எதிர்கொள்வதும் தான் வாழ்க்கை என்பதை உணர்கிறான். “சிறிய மாற்றங்களை முதலிலேயே கண்டுபிடித்து விடுவது, பின்னால் வருகிற பெரிய மாற்றங்களுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் உதவும்” என்ற அறிவுரையோடு முடிகிறது இந்த நாற்பத்தியெட்டு பக்க புத்தகம்.<br /><br />நூல் வெளியீடு : அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600017. விலை : ரூ.15. இந்நூலின் மூலம் ஆங்கிலத்தில் பல லட்சம் பிரதிகள் விற்ற <a href="http://www.whomovedmycheese.com/">'WHO MOVED MY CHEESE'</a> என்ற புத்தகம். கே.ஆர். மணி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.<br /><br />இப்புத்தகத்தில் அல்வாத்துண்டு என்பது வாய்ப்புகளை உருவகப்படுத்துகிறது. எலி, சிறிய மனிதர்கள் என நான்கே நான்கு கதாபாத்திரங்களை வைத்து மிக எளிய மொழியில் கனமான விஷயங்களை சொல்ல பயன்படுத்தும் உத்தி புதிது. இவ்வகை எழுத்துக்களை 'நெம்புகோல் எழுத்துக்கள்' என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். வாசிக்க குழந்தைகளுக்கான இலக்கியம் போல தோற்றமளித்தாலும் இப்புத்தகம் முழுக்க முழுக்க வாய்ப்புகள் குறித்த அவசியத்தை பெரியவர்களுக்கு போதிக்கிறது.<br /><br />குளமாய் தேங்கிக் கிடக்கும் நீர் கோடை வந்தால் வற்றிவிடும், ஆறாய் ஓடும் நீரோ கடலில் கலந்து சாகாவரம் பெறும். நாம் குளத்து நீராய் வாழப்போகிறோமா, இல்லை ஆற்றுநீராய் வாழப்போகிறோமா? என்று முடிவெடுக்கும் உரிமை நம்மிடமே இருக்கிறது. தொடர்ச்சியாக இயங்கி, அடுத்தக்கட்ட நகர்வுக்கு ஆற்றுநீரைப் போல நம்மை தயார்செய்து வைப்பதின் மூலம் மட்டுமே நம் காலத்துக்கு பிறகும், நம்மைப் பற்றிய நினைவலைகளை மட்டுமாவது உலகில் வாழவைக்க முடியும் என்பது நிதர்சனம். மாற்றங்களுக்கு தயாரில்லாத மனிதனும், சமூகமும் வாழ்ந்ததற்கு எந்த அடையாளமும் எதிர்காலத்தில் இருக்கப்போவதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, எதிர்காலத்தில் தனக்கென ஏராள வாய்ப்புகளை தன்முனைப்போடு ஏற்படுத்துகிறவனே வரலாற்றில் இடம்பெறுகிறான்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-7582851563054936748?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com39tag:blogger.com,1999:blog-25593973.post-48861070350439286602009-06-12T15:17:00.011+05:302009-06-12T15:35:17.508+05:30கேமிரா<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjImWi5yWUI/AAAAAAAACO0/K2Kz2CHGu3M/s1600-h/NestorStudios-Hollywood-1913.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 202px;" src="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjImWi5yWUI/AAAAAAAACO0/K2Kz2CHGu3M/s400/NestorStudios-Hollywood-1913.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5346377876410358082" /></a><div style="text-align: center;"><b><span class="Apple-style-span" style="color:#FF0000;">ஹாலிவுட்டில் உருவான முதல் சினிமா ஸ்டுடியோ (1913</span></b>)</div><br /><br />முந்தையப் பதிவான <a href="http://www.luckylookonline.com/2009/06/blog-post_997.html"><b><span class="Apple-style-span" style="color:#3333FF;">ஸ்டார்ட்</span></b></a> படித்துவிட்டு இப்பதிவை ஸ்டார்ட் செய்யவும். அல்லது மொட்டைத் தாத்தா குட்டையில் விழுந்தான் எனும் கதையாக இதை மட்டுமாவது படித்து தொலைக்கவும்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="color:#FF0000;">சினிமாத்தொழில் சூடுபிடித்தது எப்போது?</span></b><br /><br />லூமியரின் கண்டுபிடிப்புக்கு பின்னாலும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு நரசிம்மராவ் மாதிரி மந்தமாகவே இத்துறை இருந்தது. ஒரு தொழிலாகவும் அங்கீகரிக்கப்படாமல், கலையாகவும் அங்கீகரிக்கப்படாமல் ரெண்டுங்கெட்டாத் தனமாக, இக்கண்டுபிடிப்பை எவ்வகையில் பயன்படுத்துவது என்று புரியாமல் தான் எல்லோரும் இருந்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் எல்லாமே மவுனப்படங்களாக, துண்டுப்படங்களாக, த்ராபைகளாக வெளிவந்தவை. 1910களின் மத்தியில் தான் கதையோடு கூடிய படங்கள் சுமாராக வர ஆரம்பித்தன. பெரும்பாலானவை நகைச்சுவைப் படங்கள். பின்னணியில் இசை மட்டும் இருக்கும்.<br /><br />1929ல் கதாபாத்திரங்கள் பேசும் வகையிலான படங்கள் வெளிவரத் தொடங்கியது. உடனே தேங்காய்மூடி எழுத்தாளர்கள் சினிமாவை நோக்கி ப்டையெடுக்க ஆரம்பித்தார்கள். நடிக்கும்போதே சத்தமாக கொடூரமான குரலில் வசனத்தை பேசி நடிகர்கள் நடிப்பார்கள், அது பிலிமில் பதிவு செய்யப்படும் வசதி அப்போது வந்தது. மவுனப்படங்கள் காலத்தில் சக்கைபோடு போட்ட சார்லிசாப்ளின் போன்றவர்களுக்கு பேசி நடிப்பது கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது. பேசும் படங்கள் வந்தபின்னரும் சார்லிசாப்ளின் மவுனப்படங்கள் எடுத்து சக்கையைத் தொடர்ந்து போடுபோடுவென போட்டுக் கொண்டிருந்தார். பேசும்படங்கள் வரத்தொடங்கியபின் சினிமாத்தொழில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளரத் தொடங்கியது. நிறைய திரையரங்குகள் முளைத்தன. உலகின் பலநாடுகளிலும் அந்தந்த மொழிகளில் படங்கள் உருவாக்கப்பட்டன.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="color:#FF0000;">ஸ்டுடியோக்கள் தோன்றியது எப்போது?</span></b><br /><br />பேசும்படம் வர ஆரம்பித்த காலக்கட்டத்தில் தொழிலதிபர்களின் பார்வை சினிமாத்தொழிலின் பக்கம் திரும்பியது. மக்களிடையே இந்த ஊடகத்துக்கு இருந்த செல்வாக்கை மிகச்சரியாக யூகித்து, வசூலை வாரிக் கொட்டிக்கொள்ள முடியும் என்று கணித்தார்கள். 1920களிலேயே ஸ்டியோக்கள் தோன்ற தொடங்கினாலும் குறிப்பாக 1934லிருந்து 1946 வரையிலான காலக்கட்டத்தில் ஹாலிவுட்டில் ஏராளமான ஸ்டுடியோக்கள் தொபுக்கடீரென்று தோன்றத் தொடங்கின.<br /><br />ட்வெண்டியத் செஞ்சுரி பாக்ஸ், பாரமவுண்ட் பிக்சர்ஸ், மெட்ரோ-கோல்ட்வின்-மேயர், வார்னர் பிரதர்ஸ் ஆகியவை அப்போது தோன்றி இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் உலகப்புகழ் பெற்ற ஸ்டுடியோக்கள். இந்த ஸ்டுடியோக்கள் ஆரம்பத்தில் நீண்டநாள் ஒப்பந்த அடிப்படையில் நடிக நடிகையரையும், இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்ப பணியாளர்களையும் மாதசம்பளத்துக்கு பணிக்கு அமர்த்தினார்கள். எனவே சினிமாத் தொழிலாளர்கள் அப்போது கூலிக்கு மாரடிப்பவர்களாகவே இருந்தார்கள்.<br /><br />ஆரம்பத்தில் இந்த ஸ்டியோக்களில் தயாரிக்கப்படும் படங்களை அவர்களது தியேட்டர்களிலேயே வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். பிற்பாடு தியேட்டர் தொழிலும் விரிவாக தனியாக இயங்க ஆரம்பித்ததால் ஸ்டுடியோக்காரர்கள் படத்தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த தொடங்கினார்கள்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="color:#FF0000;">சினிமா என்றாலே அடிக்கடி ஹாலிவுட் என்ற வார்த்தையை சொல்கிறார்களே? ஹாலிவுட் என்பது எது?</span></b><br /><br />ஹாலிவுட் - சினிமாவை நேசிப்பவர்களுக்கும், உருவாக்குபவர்களுக்குமான மெக்கா. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஒரு மாவட்டம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் நீட்சியாக தானாக உருவான கலைநகரம். சினிமா உருவான காலம் அது. திரையில் நகரும் உருவங்களை கண்ட மக்கள் பீதி அடைந்தார்கள். அது ஏதோ பில்லி, சூனியத்தின் வேலை என்று மத அடிப்படை வாதிகள் மக்களை அச்சுறுத்தி வைத்திருந்தார்கள். சினிமா தொழில் சார்ந்தவர்களை பில்லி, சூனியம் வைப்பவர்கள் என்று கருதி பழமைவாதிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை விட்டு துரத்தியடித்தார்கள்.<br /><br />அப்படி துரத்தி அடிக்கப்பட்டவர்கள் தஞ்சம் அடைந்த பகுதி காடுகளும், மலைகளுமாக இருந்தது. கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னரே வரலாறு படைத்த ஸ்டுடியோக்கள் அங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்றைய அந்த பொட்டல் காடு தான் இன்றைய ஹாலிவுட்.<br /><br />சினிமாத் தொழில் இப்போது வெஸ்ட்சைட், பர்பேங்க் போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வந்தாலும் கூட தொழில்நுட்ப பணிகள் இன்னமும் ஹாலிவுட்டிலேயே நடந்து வருகிறது. வரலாற்று புகழ்பெற்ற ஹாலிவுட் தியேட்டர்களுக்கு வந்து செல்வதை லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பெருமையாக கருதுகின்றனர். அகாடமிக் விருதுகள் வழங்கும் விழா ஹாலிவுட்டிலேயே தொடர்ந்து பாரம்பரியமாக நடந்து வருகிறது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjImh8OeA0I/AAAAAAAACO8/DuyNdcnl9W0/s1600-h/Hollywood-1885.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjImh8OeA0I/AAAAAAAACO8/DuyNdcnl9W0/s400/Hollywood-1885.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5346378072186553154" /></a><div style="text-align: center;"><b><span class="Apple-style-span" style="color:#FF0000;">அன்றைய ஹாலிவுட் (188</span></b><b><span class="Apple-style-span" style="color:#FF0000;">5)</span></b></div><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjImsntRQ5I/AAAAAAAACPE/XWlOnJ8e7Gk/s1600-h/kodak+theatre.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjImsntRQ5I/AAAAAAAACPE/XWlOnJ8e7Gk/s400/kodak+theatre.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5346378255657157522" /></a><span class="Apple-style-span" style="color:#FF0000;"><div style="text-align: center;"><span class="Apple-style-span" style="font-weight: bold; ">இன்றைய ஹாலிவுட் (2009)</span></div></span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-4886107035043928660?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com8tag:blogger.com,1999:blog-25593973.post-16424079714248247122009-06-12T08:02:00.000+05:302009-06-12T10:21:02.993+05:30ரெண்டக்கா.. ரெண்டக்கா.. ரெண்டக்கா..<a href="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SBL7iVHDulI/AAAAAAAAAtY/C4TExX97HQ8/s1600-h/art.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SBL7iVHDulI/AAAAAAAAAtY/C4TExX97HQ8/s400/art.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5193489887512476242" /></a><br />என் பையன் பிறந்தபோது தலையில் இரட்டைச்சுழி இருந்தது. இரட்டைச்சுழியுடன் பிறப்பவனுக்கு இரண்டு மனைவிகள் என்று என் பாட்டி சின்னவயதில் சொல்லி இருந்தாள். என்னோடு படித்த முருகனுக்கு இரட்டைச்சுழி தான். ஆனால் அவன் சந்நியாசம் வாங்கிக் கொண்டு சாமியாராக போய்விட்டான். பையன் பிறந்த நேரத்தை கணித்த ஜோசியக்காரரும் “பையன் முருகனின் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான். வள்ளி - தெய்வானை சகிதமாக வாழ்வான்” என்று புளியைக் கரைத்தார். ஜோசியத்திலோ, சுழியிலோ எனக்கு சற்றும் நம்பிக்கையில்லை.<br /><br />* - * - * - * - * - * - * -<br /><br />நீண்ட வருடங்கள் கழித்து பிறந்த முதல் குழந்தை என்பதால் அவனுக்கு எதை வாங்கினாலும் ரெண்டு, ரெண்டாகவே வாங்கினேன். பீடிங் பாட்டில் தொடங்கி உடைகள் வரை எல்லாமே ரெண்டு தான். அவனுக்கு ஒன்று பிடிக்காவிட்டால் இன்னொன்று பிடிக்குமே என்று வேறு வேறு வண்ணங்களில், வேறு வேறு வடிவங்களில் ஒன்றுக்கு இரண்டாக எல்லாவற்றையும் வாங்கித் தர தொடங்கினேன். நானே அவனை இதுபோல பழக்கி விட்டு விட்டதால் அவனும் எதை கேட்டாலும் ரெண்டாக கேட்டு அடம்பிடிப்பான். அடுத்து அவனுக்கு ஒரு தங்கை பிறந்தபோது “ஒரே ஒரு தங்கச்சி பாப்பாதானா?” என்று அழுது, ஆர்ப்பாட்டம் செய்ய இன்னொரு தங்கையை அவனுக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நான் ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது. ஆனாலும் அவன் ஒரே ஒரு அம்மாவோடு திருப்திபட்டு விட்டான், இந்த விஷயத்தில் மட்டும் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்! :-(<br /><br />* - * - * - * - * - * - * -<br /><br />பையனுக்கு நான் அதிக செல்லம் கொடுத்து வளர்த்திருந்தாலும் கூட அதற்கு இரட்டிப்பு பலன் இருந்தது. ஒரு மகனாக அவன் எனக்கு சேர்த்த பெருமைகள் ஏராளம். படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டி. எந்தப் போட்டியில் கலந்துகொண்டாலும் ஒன்றுக்கு இரண்டாக பரிசுகள் வாங்கி குவிப்பான். சிறுவயதில் அவனுக்கு நான் ரெண்டு ரெண்டாக வாங்கிக் கொடுத்து ஏற்படுத்திய பழக்கம் மட்டும் அவனிடம் மாறவில்லை. எப்போது அவனுக்கு உடை எடுத்தாலும் இரண்டு செட் எடுப்பது வழக்கம். பள்ளிக்கு போக ஒரு சைக்கிள், ட்யூஷனுக்கு போக இன்னொரு சைக்கிள் என்று சைக்கிளை கூட இரண்டாக வாங்கி கொடுத்தேன்.<br /><br />* - * - * - * - * - * - * -<br /><br />நல்ல மதிப்பெண் வாங்கி பள்ளிக்கல்வியை முடித்ததும் அவனை கல்லூரியில் சேர்க்க விரும்பினேன். இதிலும் இரட்டை குதிரை சவாரி செய்ய விரும்பினான். பகலில் தொழில்நுட்ப கல்வி ஒன்றை கற்றவன், மாலைகல்லூரியில் பயின்று பட்டம் பெற்றான். படித்து முடித்தவன் வேலைக்கு சென்றதும் கூட இரட்டை வேலை தான். இரண்டு நிறுவனங்களில் பகுதி நேரமாக பணியாற்றி இரட்டைச் சம்பளம் வாங்கினான். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பது போல இப்போது அவனே சம்பாதித்து செலவழிக்கும் போதும்கூட எது வாங்கினாலும் இரண்டு, இரண்டாக தான் வாங்குகிறான். இரண்டு பைக், இரண்டு கார் வைத்திருக்கிறான். அவற்றை நிறுத்துவதற்காகவே இப்போது இரண்டு வீடு வாங்கியிருக்கிறான்.<br /><br />* - * - * - * - * - * - * -<br /><br />கல்யாண வயதுக்கு வந்துவிட்ட மகனுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத்தர விரும்புகிறேன். என் மைத்துனரின் மகளை அவளுக்கு மணமுடித்து வைக்க என் மனைவிக்கு ஆசை. பிரச்சினை என்னவென்றால் என் மைத்துனருக்கு இருப்பது இரண்டு மகள்கள்!<br /><br />* - * - * - * - * - * - * -<br /><br />இப்படிக்கு<br />யாரோ ஒரு அப்பா!<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-1642407971424824712?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com17tag:blogger.com,1999:blog-25593973.post-40938148958969191892009-06-10T12:56:00.005+05:302009-06-10T13:05:44.380+05:30ஸ்டார்ட்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Si9hE6_K4lI/AAAAAAAACOk/l3--G50-rlU/s1600-h/lumier.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 321px;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Si9hE6_K4lI/AAAAAAAACOk/l3--G50-rlU/s400/lumier.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5345598019893650002" /></a><br /><b><span class="Apple-style-span" style="color:#FF0000;">சோறு சமைக்க என்ன தேவை?</span></b><br /><br />அரிசி என்று சுலபமாக சொல்லிவிடலாம். அரிசி எங்கிருந்து வருகிறது? நெல். நெல் எங்கிருந்து வருகிறது? நெற்பயிர். நெற்பயிர் வளர என்ன செய்திருக்க வேண்டும்? பெரிய வயல் போட்டிருக்க வேண்டும். வயல் தானாகவே வளர்ந்துவிடுமா? விதைநெல் அவசியமில்லையா? இப்போது சொல்லுங்கள், சோறு சமைக்க என்ன தேவை? விதைநெல் தானே? இது வேளாண்மை சம்பந்தப்பட்ட பதிவு அல்ல என்பதால் நாம் நேரடியாக டாபிக்குக்கு வந்துவிடலாம்.<br /><br />சோறு லாஜிக்தான் சினிமாவுக்கும். சினிமா பார்க்க என்ன தேவை என்று கேட்டால் டிவியும், சினிமா தியேட்டரும் என்று இப்போது சொல்லிவிட மாட்டீர்கள் தானே? நாம் வசதியாக வீட்டில் கால்மேல்கால் போட்டு உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ஏதாவது புதுப்படத்தை பார்ப்பதாக இருந்தாலும் சரி, பிளாக்கில் டிக்கெட் வாங்கி தியேட்டரில் படம் பார்ப்பதாக இருந்தாலும் சரி. சினிமாவை உருவாக்க கேமிரா தேவை. கேமிரா தான் அடிப்படை. விதை நெல் என்ற ஒன்றில்லாவிட்டால், எப்படி சோறு சாத்தியமில்லையோ.. அதுபோல கேமிரா இல்லாவிட்டால் சினிமாவும் சாத்தியப்படாது.<br /><br />உலகத்தையும், மனிதர்களையும் எம்பெருமான் படைத்த மாதிரி கேமிராவையும் அவரே படைத்து விட்டிருந்தால் பிரச்சினையில்லை. மனிதன் உருவானபோது கேமிரா என்றொரு வஸ்து இல்லாததால் அதை ஒருத்தர் கண்டுபிடித்து தொலைக்க வேண்டியதாயிற்று.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="color:#FF0000;">கேமிராவை கண்டுபிடித்தது யார்?</span></b><br /><br />கேமிராவை எந்தரோ மாகானுபவலு கண்டுபிடித்திருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த கேமிராவை வைத்து போட்டோ மட்டும் தான் எடுக்க முடிந்தது. மூவி கேமிராவை கண்டுபிடித்த புண்ணியவானின் பெயர் லூயிஸ் லூமியர். ஒரு பிரெஞ்சுக்காரர். இவரது சகோதரரோடு இணைந்து இதை கண்டறிந்தார். போனவாரம் நீங்கள் பார்த்த ஒரு படம் படு த்ராபை என்றால், நீங்கள் திட்டவேண்டியது அந்தப் படத்தின் டைரக்டரை அல்ல. லூமியரைத்தான். லூமியர் சினிமாவை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் கண்ட த்ராபை படங்களை நாம் பார்க்க வேண்டிய அவசியம் வந்திருக்காது இல்லையா?<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="color:#FF0000;">லூமியரின் கேமிரா எப்படியிருந்தது?</span></b><br /><br />இவர் கண்டுபிடித்திருந்த கேமிராவின் தரம் படுமோசமாம். படம் எல்லாம் அவுட் ஆஃப் போகஸில் கண்ணறாவியாக வந்து விழுமாம். லூமியர் தன் அழகான காதலி ஒருத்தியை தான் கண்டுபிடித்த கேமிராவால் படமெடுத்து அவரது காதலே கேள்விக்குறியானது என்று அந்தக் காலத்து ஆட்கள் பேசிக்கொள்வார்கள். அவர் கண்டறிந்தது பிளாக் &amp; ஒயிட் மூவி கேமிரா. ஆட்டை படமெடுத்தால் குதிரை மாதிரி தெரியுமாம். குதிரையை படமெடுத்தால் டைனோசர் மாதிரி தெரியுமாம். அதனாலென்ன? மூவி கேமிரா என்கிற கான்செப்டை கண்டுபிடித்தாரே, அதுபோதும். லூமியருக்கு பின்னால் வந்த கெட்டிக்காரர்கள் சிலர் இவரது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அட்டகாசமாக கேமிராக்களை கண்டுபிடித்தார்கள்.<br /><br />ஒரு பெரிய வி.ஐ.பி. சூட்கேஸ் சைஸில் கேமிராவை உருவாக்கியிருந்தார் லூமியர். அவர் ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா. அந்த கேமிராவிலேயே ஃபிலிமை கழுவி பாசிட்டிவ்வும் போட முடியும். அதுவே புரொஜக்டரும் கூட. காலையில் அந்த கேமிராவை வைத்து எதையாவது படம்பிடித்து, மதியம் ஃபிலிம் டெவலப் செய்து, மாலையில் யாருக்காவது ஃபிலிம் காட்டி கழுத்தறுப்பது லூமியரின் வழக்கமாக இருந்திருக்கிறது. அவர் எடுத்த மொக்கை படத்தை போட்டுக் காட்டிவிடுவாரோ என்று அவரது சகாக்கள் லூமியரின் தலை தெரிந்ததுமே தலைதெரிக்க ஓடியிருக்கிறார்கள்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="color:#FF0000;">அப்படி என்னதான் லூமியர் ஷூட் செய்தார்?</span></b><br /><br />கண்ணில் கண்டதையெல்லாம் தன் கேமிராவுக்குள் அடக்கினார். எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ரயில்நிலையத்துக்குள் நுழைவதை பெரும் சிரமத்துக்கிடையே படமாக்கினார். தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் தலையெழுத்தே என்று வேலை செய்ய கூட்டமாக நுழைவதை படமாக்கினார். நதியொன்றில் படகுகளில் மக்கள் மகிழ்ச்சியாக பிக்னிக் போவதை படமாக்கினார். லூமியர் எடுத்த படமொன்றில் திரையில் ரயில் தோன்றும் காட்சியைப் பார்த்த சில கோயிந்துகள் உயிர்தப்ப ஓடியிருக்கிறார்கள். திரையில் வரும் ரயில் நம்மீது மோதி விபத்து ஏற்பட்டால் என்னாவது என்ற பயமாம்.<br /><br />அவர் எடுத்தது எல்லாமே ஓரிரண்டு நிமிடங்களுக்கு ஓடும் துண்டு படங்கள் தான். எல்லோருக்கும் ஓசியில் தான் போட்டு காட்டியிருக்கிறார். தான் கண்டுபிடித்த கேமிராவை வைத்து பெரியதாக லூமியரால் துட்டு எதுவும் சம்பாதித்துவிட முடியவில்லை.<br /><br />லூமியர் ஒருமுறை சொன்னார். “சினிமா என்பது ஒரு கண்டுபிடிப்பு மட்டுமே. இதற்கு எதிர்காலமெல்லாம் கிடையாது, இதைவைத்து காசு சம்பாதிக்க முடியாது”. இன்று கோடி கோடியாக சம்பளம் பெறும் நடிகர்கள் லூமியரின் அந்த கூற்றை நினைத்து வாய்விட்டு சிரிக்கிறார்களாம். லூமியர் ஒரு பொழைக்கத் தெரியாத மனுஷன்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="color:#FF0000;">லூமியரின் கேமிரா மட்டும் தான் அப்போது புழக்கத்தில் இருந்ததா?</span></b><br /><br />லூமியருக்கு சிஷ்யர்கள் என்று சொல்லிக்கொண்டு பல அல்லக்கைகள் இருந்தார்கள். லூமியரின் கேமிராவைப் போலவே ஆளுக்கொரு கேமிராவை உருவாக்கி கண்ணில் கண்டதையெல்லாம் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு உருப்படாத சிஷ்யன் அக்காலத்து பிரெஞ்சு அழகிகளை அவர்களுக்கு தெரியாமலேயே ஜொள்ளுவிட்டு படமாக்கி, அழகிகளின் அப்பாக்களிடம் தர்ம அடி வாங்கிய சம்பவமும் நடந்ததுண்டு.<br /><br />லூமியருக்கு சரியான போட்டியாளர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தார். நம் எல்லோருக்கும் ரெண்டாங்கிளாஸ் அறிவியல் புத்தகத்திலேயே அறிமுகமான தாமஸ் ஆல்வா எடிசன் தான் அவர். அவரும் லூமியரைப் போலவே ஒரு கேமிராவை வைத்திருந்தார். அந்தோ பரிதாபம். அந்த கேமிரா யானை சைஸில் இருந்ததால் அதை வைத்து அவரால் அவுட்டோர் ஷூட்டிங் நடத்தமுடியவில்லை.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-4093814895896919189?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com14tag:blogger.com,1999:blog-25593973.post-10317565245323473352009-06-10T10:54:00.002+05:302009-06-10T10:57:48.961+05:30தமிழ் பதிவர்கள், தமிழ் விக்கிபீடியா!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Si9EORFS1hI/AAAAAAAACOc/eAseTfetSD8/s1600-h/hindu.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 255px;" src="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Si9EORFS1hI/AAAAAAAACOc/eAseTfetSD8/s400/hindu.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5345566294606534162" /></a><div style="text-align: center;"><i>படம் உதவி : தி ஹிந்து</i></div><br /><br />தமிழ் வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி சென்னையில் சூன் 13, 2009 அன்று ஒரு கூட்டம் நடைபெறுகிறது. தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார்.<br /><br />நாள்: சூன் 13, 2009 சனிக்கிழமை மாலை 6 மணி.<br />இடம்: கிழக்குப் பதிப்பகம் மொட்டை மாடி<br />முகவரி: New Horizon media, எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018<br /><br />விவரங்களுக்கு விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகள் பார்க்கவும்.<br /><br />அனைத்து தமிழ் வலைப்பதிவர்கள், தமிழ் விக்கிப்பீடியர்களை வரவேற்கிறோம்.<br /><br /><a href="http://thoughtsintamil.blogspot.com/2009/06/blog-post_5808.html">தொடர்புடைய பத்ரியின் பதிவு!</a><br /><br /><a href="http://tamilwikipedia.blogspot.com/2009/06/blog-post.html">தொடர்புடைய தமிழ்விக்கிபீடியா பதிவு!</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-1031756524532347335?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com5tag:blogger.com,1999:blog-25593973.post-83797883058505892072009-06-09T15:24:00.001+05:302009-06-09T15:27:52.551+05:30சில விளம்பரங்கள்!டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம்.<br /><br /><a href="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCvVoxtQfSI/AAAAAAAAAvk/nduFFZ0b62Y/s1600-h/dog.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCvVoxtQfSI/AAAAAAAAAvk/nduFFZ0b62Y/s400/dog.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5200485091244014882" /></a><br />வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும்.<br /><br />இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திருக்கிறேன், பொறாமை கொண்டிருக்கிறேன். அன்றாட வாழ்வின் இயல்பான சம்பவங்களை முப்பது நொடி விளம்பரமாக மாற்றுவது மிக சவாலானது. பலரையும் கவர்ந்த விளம்பரங்கள் அவை.<br /><br /><br />ஆண்களின் உள்ளாடைகளுக்கான விளம்பரம் இது. ஒரு கட்டுடல் வாலிபன் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு வெளியே வருகிறான். அவன் வரும் அதே நேரத்தில் அதே அறைக்குள் அவனது பெண் நண்பி நுழைகிறாள். அவன் கட்டுடலை பார்த்து மயங்கினாளோ இல்லையோ, அவனது உள்ளாடையை கண்டு மயங்கி கண்களில் காமத்தை காட்டுகிறாள். அறைக்கதவு மூடப்படுகிறது.<br /><br /><br />ஒரு நவீன தொலைக்காட்சிக்கான விளம்பரம் ஒன்று. மிகப்பெரிய அந்த தொலைக்காட்சியின் திரையை நோக்கி அரைகுறை ஆடையுடன் ஒரு அழகி வருகிறாள். தொலைக்காட்சியில் ஒரு ஆணின் உருவம் ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சியை நெருங்கும் அந்த அழகி ஒரு காதலனை காண்பது போல விரகதாபத்தை உதடுகளில் தேக்கி அருகில் வருகிறாள். அருகில் வந்தவள் உடலை ஒரு மாதிரியாக முறுக்கி தன் வனப்பை காட்டுகிறாள். அதாவது அந்த தொலைக்காட்சியின் வடிவம் செக்ஸியாக இருக்கிறதாம், ஒரு ஆணின் கட்டுடலுக்கு நிகரானதாக இருக்கிறதாம். அதைக்கண்டு அவள் காமவசப்படுகிறாளாம்.<br /><br /><br />ஒரு இளம் மனைவி தன் கணவனின் பெயரை உச்சரித்தவாறே வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையாக வருகிறாள். எங்குமே அவள் கணவனை காணவில்லை. தோட்டத்துக்கு முன்பாக இருக்கும் போர்டிகோவுக்கு வருகிறாள். ஒரு நாற்காலி தெரிகிறது. நாற்காலிக்கு பக்கவாட்டில் கணவனின் கையும், காலும் அலங்கோலமாக விரிந்து கிடக்கிறது. காப்பி கோப்பை சிதறிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட அவன் மரணித்துவிட்டதாக நினைத்து மனைவி ஓவென்று கதறியவாறே ஓடிவருகிறாள். கணவனோ வாக்மேனில் இசை கேட்டு மெய்மறந்திருக்கிறான். மனைவியின் கதறலை கேட்டு ஓடிவந்து அணைத்துக் கொள்கிறான். லைப் இன்சூரன்ஸ் செய்து தொலையுங்கள் என்பதற்கான விளம்பரம் இது.<br /><br /><br />மேற்கண்ட விளம்பரங்களில் வோடபோன் நிறுவனத்தின் விளம்பரம் மட்டுமே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஒரு நாயை துன்புறுத்தி படம் பிடித்திருக்கிறார்கள் என்று யாரோ ஒரு விலங்குகள் நல ஆர்வலர் புகார் செய்ய, வோடபோன் நிறுவனத்துக்கு நோட்டிஸ் சென்றிருக்கிறது. வோடபோன் நிறுவனமும் எதுக்கு வம்பு? என்று தன் விளம்பரங்களை வாபஸ் வாங்கிக் கொண்டிருக்கிறது.<br /><br />நன்கு பயிற்சி பெற்ற ஒரு நாய் துன்புறுத்தல் ஏதும் செய்யப்படாமல், நாய்க்கு எந்த ஆபத்தும் இல்லாத வகையில் நடித்துக் கொடுத்திருக்கும் விளம்பரத்துக்கே இந்த கதியென்றால் இனிமேல் இயக்குனர் ராமநாராயணன் படமென்று எதையும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக இம்சை அரசன் திரைப்படத்தில் குதிரைகள் பயன்படுத்தப் பட்டதால் படமே வெளிவரமுடியாத அவலநிலை ஏற்பட்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.<br /><br />விலங்குகளுக்கு இவ்வளவு பரிவு காட்டும் இந்திய அரசு நம் கதாநாயகர்களால் மிக மோசமாக பந்தாடப்படும், பல மாடிக்கட்டிடங்களின் உயரத்தில் இருந்து தூக்கிவீசப்படும் வில்லனின் அடியாட்கள் என்று சித்தரிக்கப்படும் மனிதர்களின் மீது கொஞ்சமாவது பரிவு காட்டியிருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். திரைப்படங்களில் மட்டுமல்லாது விளம்பரங்களிலும் மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். விலங்குகள் நல ஆர்வலர்களும் நாயோ, பூனையோ பாதிக்கப்பட்டால் மட்டும் தான் புகார் அனுப்புவார்கள் போலிருக்கிறது. சமூக விலங்கான மனிதனுக்கு அவர்களது நேசிப்பில் இருந்து விதிவிலக்கு அளித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />அடுத்து நான் குறிப்பிட்டிருக்கும் இரு விளம்பரங்களும் மிக மிக அபத்தமானது. விளம்பரப்படுத்தப்பட்ட பொருளை வாங்கும் வகையில் எந்த வகையில் இவ்விளம்பரங்கள் பார்வையாளனை ஊக்குவிக்கிறது என்று தெரியாமல் தாவூ தீர்ந்துக் கொண்டிருக்கிறேன். ஷகீலா பட போஸ்டர்களை கிழித்து, சாணம் அடிக்கும் பெண்ணுரிமைப் போராளிகள், எஃப் டிவிக்கு தடை விதிக்கக் கோரிய ஃபெமினிஸ்டுகள் கண்ணில் இந்த விளம்பரங்களெல்லாம் இதுவரை கண்ணில் படவில்லை போலிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இன்னமும் யாரும் இவ்விளம்பரங்களில் பெண்களும், அவர்களது உணர்வுகளும் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து எந்த கவலையும் படவில்லை.<br /><br />கடைசி விளம்பரம் மிகக்கொடூரமானது. மனித உணர்வுகளோடு, மன பலகீனத்தோடு விளையாடுவது. இன்சூரன்ஸ் விளம்பரங்களுக்கு உலகளவில் ஒரு சட்டம் உண்டு. விளம்பரத்தை காணும் பார்வையாளரை இன்சூரன்ஸ் எடுக்கச் சொல்லி வற்புறுத்தாத அளவுக்கு விளம்பரம் அமைய வேண்டும். அதனால் தான் இன்சூரன்ஸ் விளம்பரங்களில் Insurance is the subject matter of solicitation என்ற வாசகம் கட்டாயமாக இடம்பெறுகிறது. மாறாக இவ்விளம்பரமோ மரணம் குறித்த அச்சத்தை மிக மோசமாக பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.<br /><br />சிகரெட் மற்றும் மது விளம்பரங்களுக்கு நம் நாட்டில் தடையுண்டு. தொலைக்காட்சி விளம்பரங்களோ அல்லது ஹோர்டிங் மற்றும் பத்திரிகை விளம்பரங்களோ இவற்றுக்காக செய்யப்படக்கூடாது. ஆனாலும் நீங்கள் இவ்விளம்பரங்களை பரவலாக காணலாம். அதே பிராண்டிங்குக்கு, அதே பெயரில் விளம்பரம் செய்யப்பட்டாலும் அவை மியூசிக் சிடி என்றோ, மினரல் வாட்டர் என்றோ எனர்ஜி டிரிங்க் என்ற தயாரிப்புப் பெயரிலோ தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.<br /><br /><a href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCvVuRtQfTI/AAAAAAAAAvs/Le7rTW4WJCU/s1600-h/ogilvy.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCvVuRtQfTI/AAAAAAAAAvs/Le7rTW4WJCU/s400/ogilvy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5200485185733295410" /></a>எதற்கு தடை விதிப்பது? எதை அனுமதிப்பது? எதை யார் திடீரென்று எதிர்ப்பார்கள்? போன்றவை குறித்த தெளிவான மனநிலை இந்தியர்களுக்கு இல்லை. இந்த கோக்குமாக்கு மனநிலையை வெளிநாட்டவர்கள் மிக கேலியாக பார்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிவதில்லை. விளம்பர உலகின் தந்தை என்று அறியப்படுபவர் டேவிட் ஓகில்வி. இவர் எழுதிய ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' என்ற புத்தகம் உலகளவில் விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான பைபிள் என்று போற்றப்படுகிறது. அப்புத்தகத்தை வாசிக்காதவர்கள் யாரும் விளம்பரத்துறையில் முழுமையாக பணிபுரிய இயலாது. அந்தப் புத்தகத்திலேயே இந்தியா குறித்த நையாண்டி மறைமுகமாக இடம்பெற்றிருக்கிறது.<br /><br />முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸ் நகரின் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சிக்னல் ஒன்றில் அந்த ஹோர்டிங் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. ஒரு பெண் நிற்கிறாள், அவளை பின்புறமாக படமெடுத்திருக்கிறார்கள். அவள் மேல்கச்சையும், கீழே ஒரு உள்ளாடையும் மட்டும் அணிந்திருக்கிறாள். “அடுத்த வாரம் இதே இடத்தை பாருங்கள். நான் இந்த ஆடைகளை கூட துறந்திருப்பேன்” என்றொரு வாசகம் அச்சிடப்பட்டிருக்கிறது.<br /><br />அவ்விளம்பரத்தை கண்ட பலர் ஒருவாரம் காத்திருந்து, அடுத்த வாரம் அதே விளம்பரத்தை காண்கிறார்கள். சொன்னபடியே அந்த பெண் ஆடையில்லாமல் இருக்கிறாள். ஆனால் பின்புற அழகு மட்டுமே தெரிகிறது. மீண்டும் ஒரு வாசகம் “அடுத்த வாரம் பார்த்தீர்களென்றால் நான் திரும்பி நிற்பேன்”. பின்புறத்தையே பார்த்து சூடானவர்கள் முன்புறத்தை காண கொலைவெறியோடு ஒருவாரம் காத்திருக்க நேர்ந்தது.<br /><br />அவர்கள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. விளம்பரம் மாற்றப்பட்டு அந்தப் பெண் ஆடையில்லாமல் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டு வாசகம் இவ்வாறாக அமைந்தது “நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை என்றுமே மீறுவதில்லை”. வாசகத்துக்கு கீழே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.<br /><br />சமீபத்தில் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய புள்ளிராஜா ரக விளம்பரங்களுக்கெல்லாம் முன்னோடி இந்த விளம்பரம். இவ்வகை விளம்பரங்களை teaser ads என்பார்கள். நம் வசதிக்காக தமிழில் 'சீண்டல் விளம்பரங்கள்' என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். இவ்விளம்பரத்தை உருவாக்கியவர் ஓகில்வி. இவ்விளம்பரம் சம்பந்தமாக ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பவர் “இதுபோன்ற விளம்பரங்களை என்னால் உலகின் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வெளியிடமுடியும், ஒரே ஒரு நாட்டைத் தவிர, அந்நாடு இந்தியா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.<br /><br />இப்போது தடைகோரப்பட்ட வோடபோன் நாய் விளம்பரத்தை எடுத்த விளம்பர நிறுவனம் ஓகில்வி உருவாக்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br /><br />ஓக்கே சீரியஸ் போதும், சமீபத்தில் என்னைக் கவர்ந்த விளம்பரங்களுள் ஒன்றை சொல்கிறேன். சன் டிடிஎச்-காக எடுக்கப்பட்டிருக்கும் விளம்பரம் தொழில்நுட்ப அளவிலும், உள்ளடக்க அளவிலும் மிக தரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. “வீட்டுக்கு வீடு சன் டைரக்ட்” என்ற வரிகளோடு தொடங்கும் கலக்கல் பீட் பாடல் சூப்பராக இருக்கிறது. பதிவு செய்த குரலை அப்படியே ஒலிபரப்பாமல் கம்ப்யூட்டரில் ஏதோ தில்லாலங்கடி வேலை செய்திருப்பதால் குரலில் கஞ்சா தடவிய போதை இருக்கிறது. தமன்னா இவ்வளவு அழகா? என்று வியக்க வைக்கிறது இவ்விளம்பரம். சினிமாவில் கூட யாரும் தமன்னாவை இவ்வளவு அழகாக காட்டியதில்லை. நடனம் இசைக்கு ஏற்றவாறு ஜாடிக்கேத்த மூடி மாதிரி செம ஃபிட் ஆக இருக்கிறது. விளம்பரத்தில் திருஷ்டி படிகாரம் மாதிரி பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகையான ரேணுகா வருகிறார். அவர் சம்பந்தப்பட்டவற்றை மற்றும் அகற்றி, இன்னமும் கொஞ்சம் தமன்னாவை எக்ஸ்ட்ராவாக காட்டினால் செம சூப்பராக இருக்கும்!!<br /><br />இதுமாதிரி நிறைய விளம்பர டெக்னிக்குகளையும், விளம்பரங்களையும் பற்றி தமிழில் முழுமையாக அறிந்துகொள்ள <a href="http://www.luckylookonline.com/2008/11/blog-post_25.html">“சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்”</a> நூலை வாங்கி பயனடையுங்கள் :-)<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-8379788305850589207?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com56tag:blogger.com,1999:blog-25593973.post-44704004559717239062009-06-09T10:58:00.008+05:302009-06-09T11:35:26.244+05:30அரசியல்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Si37MU5ztZI/AAAAAAAACOU/XXJqcU2zoEM/s1600-h/image.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Si37MU5ztZI/AAAAAAAACOU/XXJqcU2zoEM/s400/image.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5345204521946822034" /></a><br /><b><span class="Apple-style-span" style="font-size:large;">அ</span></b>ந்தக் காலத்தில் அவர் அதிரடியான பெயர் பெற்ற அரசியல்வாதி. பருவமழை பொய்த்து அந்த ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் வரலாற்றுப் பிரசித்திப் பெற்றது. அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்ததால் அவர் தொகுதி மக்கள் தினமும் அவர் வீடு தேடி வந்து தண்ணீருக்காக தாங்கள் படும் பாட்டை புலம்பிவிட்டு செல்வார்கள்.<br /><br />சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசிப்பார்த்தார். முடிஞ்சவரைக்கும் தண்ணியை மக்களுக்கு கொடுக்கறோம். இதுக்கு மேல இருந்தாதானே தரமுடியும்? என்றார்கள். உடனே தன் சொந்தப் பணத்தை செலவு செய்து தொகுதி முழுக்க லாரிகளில் தினமும் சப்ளை செய்தார் அவர். ஒருநாள் இருநாள் அல்ல. அடுத்து மழைக்காலம் வந்து தண்ணீர் சப்ளை சீராகும் வரை கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு இந்தப் பணியை செய்துக் கொண்டிருந்தார்.<br /><br />அரசாங்கத்தாலேயே முடியாத வேலையை தனிநபராக செய்த அவர் இன்றளவும் அப்பகுதி மக்களால் தெய்வமாக போற்றப்படுகிறார்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size:large;">மு</span></b>ன்னாள் முதல்வர் அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது முயற்சியில் கட்டப்பட்ட காய்கறி மார்க்கெட் அது. மார்க்கெட் வந்துவிட்டாலே அதைசார்ந்து நடைபாதை வியாபாரிகளும் உருவாகிவிடுவது வழக்கமான ஒன்று. அந்த மார்க்கெட்டை சுற்றிலும் நூற்றுக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் உருவாகிவிட மார்க்கெட்டில் கடை வைத்திருந்த கடை முதலாளிகள் பிரச்சினை செய்ய ஆரம்பித்தார்கள்.<br /><br />மார்க்கெட்டை கட்டித் தந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் அப்போது முதல்வராக இருந்தார். நடைபாதை வியாபாரிகள் முழுக்க அவரது கட்சிக்காரர்கள் என்பதால் மார்க்கெட் முதலாளிகளால் இவர்களை அரசியல்ரீதியாக அசைக்க முடியவில்லை. அரசியல் செயலிழக்கும் நேரங்களில் அதிகாரிகளே முதலாளிகளுக்கு துணை. அப்பகுதி காவல்நிலைய அதிகாரிகளோடு பேசினார்கள். தரவேண்டியதை தந்தார்கள். இதைத் தொடர்ந்து தினமும் நடைபாதை வியாபாரிகள் மீது அதிகாரப்பூர்வமான வன்முறை தொடர ஆரம்பித்தது.<br /><br />ஐந்துக்கும், பத்துக்கும் தினமும் நடைபாதைகளில் கூவிக்கூவி விற்பவர்கள் அனாதைகள் ஆனார்கள். முதல்வரோ அயல்நாட்டு சிகிச்சைக்கு சென்றிருந்தார். எதிர்பாராவிதமாக இவர்களுக்கு ஆதரவாக காவல்துறையை எதிர்த்து போராட்டம் நடத்த வந்தவர் அப்பகுதியில் இருந்த பிரபலமான எதிர்க்கட்சிக்காரர்.<br /><br />பல பேரை சந்தித்தார். நடைபாதை வியாபாரிகளின் அவலத்தை கோட்டை வரை எதிரொலித்தார். காவல்துறை மேலதிகாரிகளை தினமும் பார்த்து பேசினார். ஒருவழியாக நடைபாதை வியாபாரிகளுக்கு நீதி கிடைத்தது. மார்க்கெட்டிற்குள் இருக்கும் கடைகளின் வியாபாரத்தை பாதிக்காதவாறு அவர்களுக்கு போதிய இடம் மார்க்கெட்டை சுற்றி வழங்கப்பட்டது.<br /><br />கட்சி பாகுபாடு பார்க்காமல் தங்கள் வாழ்வாதாரத்துக்கு வகை செய்த அந்த எதிர்க்கட்சிக்காரருக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற ஆவலில் வியாபாரிகள் சிலர் அவரிடம் கேட்டார்கள். “அண்ணே உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க. செய்யுறோம்”. அவர் பதிலளித்தார். “ஃபில்டர் வைக்காத ஒரே ஒரு சிகரெட்டு மட்டும் வாங்கிக் கொடுங்கப்பா. ஒரு வாரமா பேசிப்பேசி தொண்டை வரளுது”.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">இ</span></b>ன்றைய துணைமுதல்வர் அவர். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வேளச்சேரி பகுதி மக்களுக்கு அவர் பக்கத்து வீட்டுக்காரர். வேளச்சேரி செக்போஸ்ட் அம்மன் கோயிலை தாண்டி அவரது கார் வந்துகொண்டிருக்கிறது. கன்னிகாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் சாவு விழுந்திருக்கிறது. வாசலில் பிணத்தை வைத்து உறவினர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். கார் கண்ணாடி வழியாக அவர் பார்க்கிறார். பால்மணம் மாறா குழந்தைகள் இருவரும் ஒரு இளம்பெண்ணும் கதறுவதை கண்டதுமே இறந்தவரின் மனைவியும், குழந்தைகளும் என்பதை உணர்கிறார். உடனே காரை நிறுத்தச் சொல்கிறார்.<br /><br />அந்த சாவு வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொன்னவர் அந்த இளைஞரின் திடீர் மரணம் பற்றி கேட்டறிகிறார். விதவையான அப்பெண்ணுக்கு அவர் மேயராக இருந்த மாநகராட்சியில் பணி உறுதி கொடுக்கிறார். தன்னுடைய உதவியாளரிடம் சொல்லி உடனடி பண உதவியும் தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறார். இறந்தவர் வீட்டு வாசலில் பறந்து கொண்டிருந்தது எதிர்க்கட்சிக் கொடி.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size:large;">க</span></b>டந்த மாதம் செய்தித்தாள்களில் நீங்கள் வாசித்திருக்கலாம். ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் இருந்து 96 பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். இவர்களில் 21 பேர் எஸ்.சி/எஸ்.டி வகுப்பை சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இத்தேர்வில் வெல்லுபவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள். திடீரென எப்படி இது சாத்தியம்?<br /><br />ஐ.ஏ.எஸ். தேர்வில் வெல்ல இலவசப் பயிற்சி மையம் ஒன்றினை ஒரு அரசியல்வாதி, கட்சி/சாதி/வர்க்க பாகுபாடு எதுவுமின்றி நடத்திவருவதே இதற்கு காரணம். இதே அரசியல்வாதி சென்னை வேளச்சேரி பகுதியில் தன் கட்சித்தலைவி பெயரில் ஒரு தரமான இலவச திருமண மண்டபத்தையும் மக்களுக்காக நடத்தி வருகிறார். இந்த திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணங்களில் பெரும்பாலும் அவருடைய எதிர்க்கட்சியை சார்ந்தவர்களுடையது. முதல் பத்தியில் நாம் சொன்ன அதே அரசியல்வாதி இவர்தான்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size:large;">ந</span></b>ம் பதிவுகளில் மெசேஜ் இல்லை, மெசேஜ் இல்லையென்று நிறைய பேர் குறைபட்டுக் கொள்கிறார்கள். இந்தப் பதிவு சொல்லவரும் மெசேஜ் : அரசியல் உட்பட எதையுமே கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தியின் ஒற்றைப் பார்வையில் மட்டுமே அணுகக் கூடாது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-4470400455971723906?l=www.luckylookonline.com'/></div>லக்கிலுக்http://www.blogger.com/profile/15749767493269752127luckylook32@gmail.com23