<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss'><id>tag:blogger.com,1999:blog-22403178</id><updated>2009-09-27T09:46:54.296-07:00</updated><title type='text'>ஓகை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default?start-index=26&amp;max-results=25'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>61</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-7643576893449549464</id><published>2008-07-26T10:53:00.000-07:00</published><updated>2008-07-26T12:10:36.403-07:00</updated><title type='text'>இநி</title><content type='html'>&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;அறிவியல் புனைகதை.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;சில நூறு டெர்ரா பைட்டுகளுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நினைவுத்திசுக் கடை இன்று உலகெங்கும் இநிக்களிடையே மிகப் பிரபலம். அந்த சில நூறு டெர்ரா பைட்டுகளின் கதையைத் தான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;2005ம் ஆண்டு மார்ச்சு மாதம். பாஸ்டன் நகரில் டாக்டர் குரூஸ் வீட்டின் மாடியில் அவரது அறை மேஜையின் மீது ஒரு கொத்து காகிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த காகிதங்களின் மேல் மரத்தாலான ஒரு பேப்பர் வெய்ட். நல்ல கருங்காலி மரத்தில் கடைசல் செய்யப்பட்டு, வெகு நாட்கள் கைபட்டு கைபட்டு வழவழப்பாய் மெருகேறியிருந்தது. சதுரங்கத்தின் கருப்புச்சிப்பாய்க் காய் போன்ற வடிவத்தில் பெரிதாக ஆனால் கைக்கு அடக்கமாக வெகு அழகாகத் தான் இருப்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்தது. அந்த மிக விசாலமான அறை நிறைய கலைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு முந்தய தோற்றத்தில் இருந்தது. டாக்டர் குரூஸ் பழங்கலைப் பொருட்களின் பரம ரசிகர். ஒரு ஏலக்கடையில் மிகவும் விரும்பி இந்த பேப்பர் வெய்ட்டை வாங்கி வைத்திருந்தார். அப்போது அவருக்கு அதன் பெருமை தெரிந்திருக்கவில்லை. அந்த அறைக்குவரும் அழகு சொட்டும் மாடிப்படியைக் கூட பழங்கால முறையில் மரத்தால் அமைத்திருந்த குரூஸ் 'தட்' 'தட்' என்ற பூட்ஸ் காலடி ஓசையோடு மேலே வந்தார். தன் இருக்கையில் அமர்ந்து அந்த காகிதக் கொத்தின் மேலிருந்த பேப்பர் வெய்ட்டை எடுத்து சற்று தள்ளி வைத்துவிட்டு எழுத ஆரம்பித்தார். எழுத ஆரம்பிக்குமுன் அதை வாஞ்சையோடு ஒரு தடவு தடவினார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அந்த வெய்ட்டின் உள்ளிருந்த மர ரேகைகளுக்குள் ஒரு புள்ளியாய் உறைந்திருந்தான் ராமமூர்த்தி. குடந்தை ராமமூர்த்தி என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த வாழ்க்கையில் அவன் இரு விதமாக இருந்து கொண்டிருந்தான். பல நேரம் அந்த கருப்பு மர வெய்ட்டினுள்ளே ரேகைகளுக்கிடையே ஒரு புள்ளியாய் கூட்டுப்புழுவைப் போன்றதொரு ஆழ்நிஷ்டை வாசம் ஒரு விதம். சில நேரங்களில் முண்டி முண்டி வெளியுலகைக் காணும் தீராத ஆசையொடு சில நானோமீட்டர்கள் அந்த ரேகைகளின் ஊடே அசைவாட்டம் இன்னொரு விதம். சில நாட்களுக்கு மட்டும் எங்கும் தடையின்றி பறந்து உலாவும் பட்டாம்பூச்சி போன்றதொரு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவிட்டால், தன் மிச்ச எச்சங்களை ஒரு முறை கண்டுவந்துவிட்டால் பிறகு மீண்டும் பல நாட்களுக்கு அந்த மர வெய்ட்டினுள்ளே கூட்டுப்புழு வாசத்திற்கு தயாராய் இருந்தான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;டாக்டர் குரூஸ் பத்திரிக்கைகளுக்க வினோதமான தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுபவர். எழுபது வயதைக் கடந்த அவருக்கு கையால் எழுதுவதுதான் எப்போதும் பிடிக்கும். இப்போது 'மரணத்திற்குப் பிறகு ஏன் மனிதன்' என்று இன்னுமொரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார். நம்முடைய காத்து கருப்பு சமாசாரம்தான் என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. அவருடைய பெற்றோர்களும் மூதாதையர்களும் காலம் காலமாக பேய் ஓட்டும் தொழில் செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்தவர்கள்தான். ஆனால் இவர் அப்படி இல்லை. இந்த ஆராய்ச்சியில் தன்வாழ்வையே அர்ப்பணித்திருந்தார். மருத்துவத்தில் 'காக்னிடிவ் நியூரோசைன்ஸில் (cognitive nueroscience) முதுகலைப் பட்டம் வாங்கியவர். அவரது இல்லமே ஒரு பெரிய ஆராய்ச்சிக் கூடம்தான். அவர் எழுதுகிறார்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"உடலியக்கித்திற்குத் தேவையான கூறுகளைத் தவிர்த்துப் பார்த்தால் மூளையில் இருப்பதெல்லாம் நினைவுகள்தாம். அதாவது பதிவு செய்யப்பட்ட பல்வேறு செய்திகள். சிறு வயதிலிருந்தே ஒரு மனிதன் தான் பார்த்ததும் கேட்டதும் படித்ததும் உணர்ந்ததும் தர்க்கத்தால் அறிந்ததும் போன்ற பலவற்றால் பதியப்பட்ட செய்திகளை தேடிக் கண்டுகொள்ள முடிந்தால், அவையே நினைவுகள். உயிர்வாழ்தலுக்கும் இவற்றுக்கும் சம்பந்தம் இருந்தே ஆகவேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொண்டோமானால் பல அடிப்படை கேள்விகள் விடையளிக்கப் படாமலேயே இருக்கும். நினைவுகள் இயங்காத உயிர்வாழ்தல் 'கோமா' என்றால் அதைப்போன்றதொரு எதிர்நிலை இருந்தே தீரும். அதாவது உடலும் உயிருமற்று நினைவுகள் மட்டுமே இயங்குவதான ஒரு நிலை............" ...................... "அவையே இயங்கும் நினவுகள், இநி." &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;இவ்வாறு காற்றில் மிதக்கும் பல 'இயங்கும் நினைவு'களை பிடித்து தக்கை நெட்டிகளில் செலுத்தி ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்திருந்தார். ஆனால் ராமமூர்த்தி மட்டும் தானாகவே அந்த பேப்பர் வெய்ட்டின் மூலமாக அவரிடம் வந்து சேர்ந்தவன். கும்பகோணத்தில் தன் வீட்டில் நிகழ்ந்த ஒரு விபத்தில் மண்டையைப் பொத்துக்கொண்டு மூளைக்குள் நுழைந்த அந்த மரப்பொருளில் நினைவுத் திசுக்களாய் சிக்கி ஓர் இயங்காத இநியாய் இவரிடம் வந்து சேர்ந்தான். இநிக்கள் மேற்கொண்டு வாழ்வதற்கு அவர்களுக்குத் தேவை மேற்கொண்டு நிகழ்வுகளை தக்கவைத்துக் கொள்ள மேலும் நினைவிடங்கள் என்றறிந்த குரூஸ் இந்த 'இநி'களுக்கு கூடுதல் நினைவிடங்களைத் தருவதற்கு ஒரு முறை கண்டுபிடித்து வைத்திருந்தார். இன்று ராமமூர்த்திக்கு சில நூறு எக்சா(exa) பைட்டுகள் செலுத்தினார். இந்த இநி ராமமூர்த்தியை எப்படி இயங்க வைக்க சில முயற்சிகளும் செய்திருந்தார் இதுபற்றி சிந்தித்தபடியே அவர் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;(டெர்ரா பைட் =1000,000 மெக பைட், எக்சா பைட் = 1000,000 டெர்ரா பைட்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அவர் எழுதுவதை நிறுத்திவிட்டு சற்று சிந்தனையில் ஆழ்ந்தார். சிந்தனை சற்று ஆழமாய் போய் இடது கையால் அந்த வெய்ட்டை உருட்டைக் கொண்டிருந்தார். நீண்ட கூட்டுப்புழு வாசத்திற்குப் பிறகு இன்றைய எக்சா பைட் உள்ளீடலால் நிஷ்டை கலைந்த தயார் நிலையில் இருந்த ராமமூர்த்தி அவரது உருட்டலால் முற்றிலுமாக கலைக்கப்பட்டான். அவர் மேலும் எழுதலானார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;br /&gt;"நினைவுகளற்ற உயிர் வாழும் கோமாவின் எதிர்நிலை உடலும் உயிருமற்ற நினைவுகளின் இயக்கம். காணவும் உணரவுமியலாத திசுக்களின் மேலேறி நினைவுகள் இயங்கும்போது.............", சற்று வேகமாக உருட்டப்பட்டதால் மேஜையிலிருந்து கீழே விழுந்த பேப்பர் வெய்ட்டிலிருந்து துடித்தெழுந்து, படபடக்கும் சிறகுகளுடன் நினைவுகளால் செய்த பட்டாம்பூச்சியாய் ராமு புறப்பட்டான். இந்த ஆள் என்னதான் எழுதுகிறார் என்று படித்துப்பார்த்தான். உதடுகளோடு கூடிய உடலிருந்தால் ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்திருப்பான். காற்றசைவில் இயைந்து அவரறியாமல் வெளியேறினான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;பாஸ்டனிலிருந்து வந்த விமானம் நியூயார்க்கில் தரையிறங்கியது. நியூயார்க் விமான நிலையத்தை மேய்ந்த ராமு சென்னை செல்லும் லுப்தான்ஸா விமானத்தைக் கண்டறிந்தான். லுப்தான்ஸா புறப்பட்டது. சிறிது நேரம் காக்பிட்டில் பயணித்தான். விமானப்பணிப்பெண்ணில் சற்று நேரம். ஒரு முதியவரின் தாடியில் சிறிது நேரம். நெஞ்சில் பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கிய குழந்தைக்கருகில் சற்று நேரம் என்று பலநேரம் பயணித்து சென்னை வந்தான். தன்னைப் போலவே சில 'இநி'களையும் விமானத்தில் கவனித்தான். நள்ளிரவில் சென்னை வந்தவனுக்கு நாளை இரவுதான் கும்பகோணத்திற்கு ரயில். இடையில் எத்தனையோ பேருந்துகள் இருந்தாலும், அவனுக்குஅவசரமில்லை. அவன் விருப்பம் அந்த இரவு நேர கும்பகோணம் பாசஞ்சரில் குடந்தை செல்ல வேண்டும், அவ்வளவுதான். சென்னையில் அலைந்தான் திரிந்தான். எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தான். முன்னெல்லாம் அங்கிருந்துதான் அந்த ரயில் புறப்படும். ஆனால் இங்குவந்த போது நிலைமை மாறியிருந்தது. ரயில் புறப்படுவதை தாம்பரத்திற்கு மாற்றிவிட்டார்கள். இப்போது எழும்பூர் ரயில் நிலையம் வெகுவாக மாறி இருந்தது. உள்ளங்கை போலிருந்த நிலையம் இப்போது உள்ளங்கால்போல் நீண்டுவிட்டது. உள்ளங்கை ரேகைகள் போலிருந்த மீட்டர்காஜ் பாதைகள் எல்லாம் மாறி மண்புழு,மண்புழுவாய் பிராட்காஜ் பாதைகள் அவனுக்கு இவையெல்லாம் பிடிக்காமல் உடனே ஒரு மீட்டர்காஜ் மின்வண்டி பிடித்து தாம்பரம் சென்றான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;br /&gt;இரவு கும்பகோணம் பாசஞ்சர் தாம்பரத்தில் புறப்பட தயாராய் இருந்தது. ஆயிரம் உயிருள்ள மக்களோடு அவனுக்கு ரயிலில் பயணிக்க பல இடங்கள் இருந்தன. ரயில் புறப்பட்டது. எஞ்சினுக்குச் சென்றான். பெட்டிப் பெட்டையாய் தாவினான். துக்கமே தாக்காத ஒரு நிலை. சந்தோஷம் அதிக சந்தோஷம், மிக அதிக சந்தோஷம் என்னும் நிலைகள் மட்டுமே கொண்டிருந்தான். இரயில் நிற்குமிடங்களில் நிலையங்களில் இறங்கி புறப்படும்போது உள்ளே ஏறிக்கொண்டு...... இரவைக் கிழித்துக்கொண்டு சீறிக்கொண்டிருந்த இரயிலை ஆனந்தித்தான், அனுபவித்தான். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;காலை ஆறரை மணி குடந்தை இரயில் நிலையம். எல்லோரும் இறங்கி விட்டார்கள். அவனுக்கு அவசரமில்லை. வீட்டிற்குப் போகவும் அவசரமில்லை. எதற்குமே அவசரமில்லை. நகர் வலம் செய்யலாமென்று முடிவு செய்தான். மெதுவாய் மாமாங்கொளத்துக்குப் போனான் (மகாமக குளம்). ஒரு வட்டம் அடித்துவிட்டு சற்று தூரம் வந்தவன் காமாட்சியம்மன் கோயிலின் சிறிய கோபுரத்தில் ஏறினான். திடீரென்று வந்த ஒரு காற்றசைவில் ஜிவ்வென்று பறந்து சாரங்கபாணி கோயில் கோபுரக் கலசத்தின் உச்சி ஊசிமுனைக்கு வந்தான். குடந்தை வட்டாரத்திலேயே உயரமான இடத்தில் இருந்து ஒரு பறவைப் பார்வையில் நகரை நோக்கினான். ரம்யம், ரம்யம், மஹா ரம்யம். அதோ கும்பேஸ்வரன் கோயில் கோபுரம். அப்புறம் ராமசாமி கோயில். பிறகு நாகேஸ்வரன் கோயில். அவனுக்கு மிகப்பிடித்த சக்கரபாணிக் கோயில் கோபுரம். அதன்ருகிலுள்ள பள்ளியில்தான் அவன் படித்தான். ஜிவ்வென்று காற்றில் நீந்தி அந்த கோபுரத்திற்கு வந்தான். கோபுரதரிசனத்தைக் கோபுரத்திலேயே கண்டவன் தரையிறங்கி கடைத்தெருவில் நுழைந்தான். அந்த நுழைவாயில் வெங்காய வாசனையை அவன் தவற விடாமல் கோபால்சாமிக் கோயில், பெரிய கடைத்தெரு, ஆஞ்சநேயர் கோயிலைத் தாண்டி முராரி இனிப்புக் கடைக்கு வந்தான். அந்த இடத்துக்கு வந்ததும் காபி கிளப் ஞாபகம் வந்தது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;எதிர்சாரியில் தஞ்சை சாலையில் ஒரு பழையகாலத்து வீடு. பிராமனாள் காபி கிளப் என்று இருக்கும். இப்போது அங்கே புது மோஸ்தரில் ஒரு கட்டடமும் பக்கத்தில் பெட்ரோல் பங்கும் வந்திருந்தது. பெட்ரோல் பங்கெல்லாம் யாருக்கு வேணும்? பக்கத்தில் அந்த திண்ணைவீட்டின் ஒரு பகுதி இன்னும் மிச்சமிருந்தது. அந்தப் பழைய வீட்டின் உள்ளே நுழைந்தான். ஒரு பெரியவர் "சார் என்ன சாப்பிட்றேள்" என்று கேட்டதுபோல் இருந்தது. அவ்ரும் ஒரு 'இநி'யாக அங்கேயே இருப்பாரோ எனத் தேடினான். மெலிந்த தேகமாய் அவர் அறுபது வயதுக்கு மேலிருந்தபோது பார்த்தது. எப்போதும் வியர்வையிலும் சமையலறைப் புகையிலும் வெந்த அவரது வெந்நிற மேனியில் மேலாடையாய் ஒரு டீ டிகாஷன் கலரில் பூணூல் மட்டுமே இருக்கும். நான்கு முழ வேஷ்டி நெய்ததிலிருந்து அன்று வரை ஒரே காரிக்கன் நிறத்தில் மடித்து கட்டியிருப்பார். நெற்றியில் திருநீறும் சந்தனமும் மின்னும். அவரைத்தான் பார்க்கவேண்டும்போல் இருந்தது ராமுவிற்கு. அங்கிருந்து காந்திபார்க் வந்தான். அப்புறம் பந்தடி மேடை. பிறகு சங்கர மடம் பழைய பாலத்தில் காவிரியைத் தாண்டி அவன் படித்த ஆண்கள் கல்லூரி வளாகத்திற்கு வந்தான். ஒரு சிறுவட்டம் அடித்துவிட்டு காவேரியின் வடகரை வழியாகவே வந்து கொண்டிருந்தான். பெருமாண்டி வந்தது. அந்த ஊரில் அவனுடைய உடல் கடைசியாய் புதையுண்டு போன இடம். இந்த மண்ணில் தன்னுடல் கலந்த எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவன் நிஷ்டையைக் கலைத்த நோக்கம் மெதுவாக நிறைவேற ஆரம்பித்ததில் பல டெர்ரா பைட்டுகள் நிறைந்து போயின.&lt;br /&gt;(பெருமாண்டி=இடுகாடு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;ஆனால் இந்த மகிழ்வும் பூரிப்பும் அவனுள் செலுத்தப்பட்டிருந்த எக்ஸா பைட்டுகளை நிரப்புவதை அவன் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. வடகரையோடு மெல்ல வந்து இடதுபுறம் திரும்பி புதுப்பாலத்தில் காவிரியின் தோற்றத்தில் தனக்கில்லாத மெய்மறந்தான். அப்போது காவிரியில் நன்றாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இப்படி சுழித்து ஓடும் காவிரி யாரைத்தான் மயக்காது? வடகரையில் பெருமாண்டியும், தோப்புகளும், ஆலும் அரசுமாக பச்சையடிக்க தென் கரை முழுக்கப் படித்துறைகளால் நிறைந்திருந்தது. இதைக் கண்டு சொக்கிப்போவது அவன் வழக்கம். ராமூ..உ. ராமுவே ராமுவை உசுப்பினான். வீட்டுக்குப் போகலாமா? அரசலாற்றையும் பார்த்து விடுவோமே என்று நினத்தான். நகர பேருந்துகள் அவனை தாராசுரம் கொண்டுசேர்த்தன.&lt;br /&gt;(தாராசுரம்= பழைய பயையாறை நகரம்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;பொன்னியின் செல்வன் கதையில் கல்கி அப்படி வர்ணித்த அரசலாற்றை அவன் தவற விடுவானா? .மாஞ்சோலைகளைக் கடந்து ஆற்றுக்கு வந்தவன் நாகரீகத்தின் சுவடேபடாமல் இன்னும் இடங்கள் இருப்பதில் நிறைந்து மேய்ந்ததில் இன்னும் கொஞ்சம் நினைவகங்கள் நிறைந்தான். தாராசுரம் தண்டவாளத்தில் கால்வைத்து பேலன்ஸ் செய்து நடக்க ஆசை. அங்கு வந்தவனுக்கு ஏமாற்றம். தடிதடியாய் புது சரளைக் கற்களில் பிராட்காஜ் அகலப்பாதை. 'சட், உடனே மீட்டர் காஜைப் பார்க்க வேண்டும்'. குடந்தை ரயிலடிக்கு வந்தான். மாலை சுமார் நான்குமணியிருக்கும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;ரயிலடிக்கு வெளியில் பத்து பதினைந்து பெரிய மரங்கள் இருக்கும். எத்தனையோ வயதான மரங்கள். அதில் ஆயிரம் ஆயிரம் பட்சிகள். கோஷ்டியாய் கானம் பாடிக்கொண்டிருந்தன. பண்டிதர் பலர் கூடி ஓதும் வேதகானம் போலவும், யாகமந்திரங்கள் போலவும், கோஷ்டியாய் சப்தித்தன. இந்த பட்சிகள் யுகம் யுகமாய் இந்த மரங்களே தங்களுக்கு வீடாக வேண்டும் என்று ஜபிக்கின்றன போலும், ராமமூர்த்தியைப் போல. ஆனந்தமாய் தன் வீட்டை நோக்கி காற்றில் மிதந்தான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;ஜன்னல் வழியே உள்ளே பார்த்தான். பிறகு கூரை மீதேறி முற்றத்திற்கு வந்தான். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தாள் சம்பூர்ணி. இவனுக்கு முகத்தைக் காட்டவோ என்னவோ இவனிருக்கும் பக்கம் திரும்பினாள். பளீரென்ற திருநீறிட்ட இயற்கையான மஞ்சள் முகம். 'பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே' என்று ஒரு காலத்தில் இருந்தவள், இப்போது பார்வையிலேயே நோய் தீர்ப்பவள் போலிருந்தாள். இவளைப் பார்த்தபோது கொஞ்சம் அதிகமாகவே நினைவகம் நிறைந்து போனான் ராமு. வீடு ஏன் களேபாரமாய் இருகிறது. அவனுக்கு அறிந்தவர்கள், அறியாதவர்கள் எல்லாம் இருந்தார்கள். லதா எங்கே? ஆனந்தகுமார் எங்கே? சம்பூர்ணி கூப்பிட்டாள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"லதா..........லதா.."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;லதா என்கிற ஹேமலதா உடனே வந்தாள். கொடி போலிருந்தாள். புது மணப்பெண்ணின் முழுப் பொலிவும் கொண்டு இருபத்து நான்கு வயதுக்கு பூரணமாய் இருந்தாள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"அத்தைகிட்ட அலங்காரம் பண்ணிக்கம்மா. பெண் அழைப்புக்கு அவங்க ஆறரை மணிக்கெல்லாம் வந்துடுவாங்க".&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;லதாக்குட்டிக்கு கல்யாணமா? ராமு நிறைந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"ஆனந்தா...........".&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"இதோ வந்துட்டம்மா".&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"சித்தப்பா கொஞ்ச நேரத்தில வந்துடுவார். நல்லா கவனிச்சுக்கோ. நாளைக்கு லதாவுக்காக மனையேறப் போறவர். கொஞ்சம் கூட முகம் சுளிக்காம கவனிச்சுக்கோ".&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"நீயேம்மா கவலைப்படறே. ஒருத்தருக்கும் ஒரு குறையும் வராது."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;சின்ன வயதிலேயே படுசுட்டியான ஆனந்தன் இப்போது இருபத்தி எட்டு வயதில், துள்ளும் இளமையில் இரட்டை சுறுசுறுப்பில் இருந்தான். ராமுவுக்குத் தெரியும் சம்பூர்ணி இருக்குமிடத்தில் எல்லாரும் எல்லாமும் சுபிட்சம்தான். இவன் கலிபோர்னியாவில் மென்பொருள் பொறியாளனாய் இருந்தானே? திருமணத்திற்காக விடுமுறையில் வந்திருக்கிறான் போலிருக்கிறது. கூடத்தில் மாலையிடப்பட்டு ராமமூர்த்தியின் படம் தோற்றம் மறைவெல்லாம் எழுதியிருந்தது. 'அழகாய்த்தான் இருந்திருக்கிறேன். அதான் சம்பூர்ணி அப்படி சொக்கிப் போயிருந்திருக்கிறாள்'. இல்லை ராமமூர்த்தி அல்லவா சொக்கிப் போயிருந்தான். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணுரிமை தத்துவத்தை முழுக்க முழுக்க பின்பற்றியவனல்லவா அவன். அவளும் இதை அறிந்திருந்தாள். ஆனால் இதை வாய்ப்பாக நினைக்காமல் போனஸாக நினைத்திருந்தாள். அதனால் வாழ்க்கை முழுக்க கம்பி பதத்தில் வெல்லப்பாகாய் இடைவிடாத சந்தோஷம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;மாப்பிள்ளை யார்? ஒட்டுக் கேட்டதில் அவனும் உள்ளூர்தான். ஆனால் வேலை சென்னையில். அப்படியென்றால் இனி சம்பூர்ணி எங்கிருப்பாள்? ராமுவுக்கு இந்தக் கவலையில்லை. எந்தக் கவலையுமில்லை. ஆனால் அறிந்து கொள்ளஆசைப்பட்டான். இரவில் அம்மாவும் மகனும் பேசிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"அம்மா ஆறு மாசத்துக்குள் பெங்களூரோ சென்னையோ செட்லாகிவிடுவேன். நீ அமெரிக்காவெல்லாம் வரவேண்டாம். நல்ல பொண்ணாப் பார்த்து வை. மிஞ்சிப் போனால் ஒரே ஒரு வருஷம். இங்கேயே வந்துடுவேன்."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;கொஞ்சம் கொஞ்சமாக நினைவகம் நிறைந்துகொண்டிருந்தான். பெண்ணழைப்பிற்குப் பிறகு ஹேமலதா தங்கத்தாரகைபோல் ஜொலித்துக்கொண்டிருந்தாள். தன்னைக் கனமாக உணர்ந்த ராமுவுக்கு நினவகம் வெகுவாக நிறைந்திருப்பதன் பிரக்ஞை வந்தது. சத்திரத்தில் ஓர் உத்திரத்தில் ஒண்டிக்கொண்டான். அதிகாலை முகூர்த்தம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அப்போது அவன் முக்கால்வாசிக்கு மேல் நினைவகம் நிறைந்திருந்தான். பெரிய திருமண மாளிகை. மாளிகை நிறைய மக்கள். மங்கல வாத்திய முழக்கம். மணக்க மணக்க சாப்பாடு. இட்லிக்கு கடப்பாவா, கொத்ஸா? சம்பூர்ணிக்கு மைல்க்கல் போன்றதொரு நாள். அவனுக்கும்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;முகூர்த்த நேரம். ராமு சம்பூர்ணியைப் பார்த்தான். மணவறைக்கு சற்றுத் தொலைவில் தனியாய் விழியோரக் கண்ணீர்த் துளிகளுடன் நின்றிருந்தாள். அப்போது ராமுவை நினைத்துக் கொண்டிருப்பாள் போலிருக்கிறது. ஆனந்தன் அதி சுறுசுறுப்பில் அங்கும் இங்குமாய் இருந்தான். அப்சரஸ் போல ஹேமலதா. கந்தர்வன் போல மணமகன். சுபமுகூர்த்தம். "ஆனந்தம் ஆனந்தம்........ஆனந்தமே." அந்த முகாரியில் முழுவதும் நிறைந்ததைப் போல் உணர்ந்தான். இன்னும் ஒரு சில எக்ஸா பைட்டுகளாவது மிச்சமிருக்குமா?. இந்த முகாரிக்குப்பிறகு அவனுக்கு எதையும் கேட்கப் பிடிக்கவில்லை. பால்பாயாசத்தில் ஆனையடி அப்பளத்தைப் பிசைந்து எல்லோரும் சாப்பிடுவதையெல்லாம் பார்க்க ஆசைதான். ஆனால் முழுவதுமாக புது நினைவுகளால் நினைவகம் நிறைந்துவிட்டவன் உடனே ரயிலடிக்கு வந்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;காலை 10.15 மணிக்கு சோழன் எக்ஸ்பிரஸ். மாலை தம்பரம். நள்ளிரவு லுப்தான்ஸா.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அவனால் விமானத்தில் உள்ளே நுழைய முடியவில்லை. இங்கே சுற்றிலும் பல இநிக்கள். சூழ்நிலை வெகுவாக மாறி இருந்தது. அவனைத் தடுத்த ஓர் இநி கேட்டான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"நேற்றிலிருந்து சர்வதேச பயணம் செய்யும் இநிகளுக்கு கட்டணம் வசூலிக்கிறோம்."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அதர்ச்சியில் மேலும் சில டெர்ரபைட்டுகளை இழந்தான். பாஸ்டனில் இருக்கும் அந்த பேப்பர் வெய்ட்டுக்குள் நுழைந்துவிட வேண்டுமென்ற கவனம் வந்துவிட "நியூ யார்க்குக்கு எவ்வளவு?' என்றான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;"சென்னை டு நியூ யார்க் - 500 டெர்ராபைட்டுகள்."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அவன் பாஸ்டன் வந்து அந்த பேப்பர் வெய்ட்டை நெருங்கியபோது அவனிடம் சில நூறு டெர்ரா பைட்டுகள் மிச்சமிருந்தன.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;* * * * * * * * * * * * * * * * * * * * * * * *&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;தேன் - சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான கதை&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓகை நடராஜன்.&lt;br /&gt;26 ஜூலை 2008&lt;/strong&gt;&lt;br /&gt;*****************************&lt;br /&gt;*****************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-7643576893449549464?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/7643576893449549464/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=7643576893449549464' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/7643576893449549464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/7643576893449549464'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2008/07/blog-post.html' title='இநி'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-4444860651884568033</id><published>2008-05-04T10:40:00.000-07:00</published><updated>2008-05-04T11:03:11.518-07:00</updated><title type='text'>ரெப்பா கியர்.</title><content type='html'>&lt;p&gt;மாரியப்பனுக்கு கோபம் தலைக்கு ஏறியிருந்தது. டேவிட் இப்படிச் செய்வானென்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இது நம்பிக்கைத் துரோகம். நட்புத் துரோகம். வேகமாக டெவிட் வீட்டுக்கு வாடகைக் காரில் விரைந்து கொண்டிருந்தான்.  இதுவரை டேவிட் வீட்டுக்குச் சென்றதில்லை. இப்போது அவனை நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டுவிடுவதற்காகப் போய்க்கொண்டிருந்தான். &lt;/p&gt;&lt;p&gt;டேவிட் ஏற்கெனவே தமிழ் பேசுவான்.  இதுவே அவர்கள் நட்புக்குத் தொடக்கமாக இருந்தது. இந்த இரண்டு மாத கால நட்பில் வெகு சகஜமாக தமிழ் பேச தெரிந்துகொண்டுவிட்டான். அலுவலகத்தில் தழைத்த நட்பு ஆழத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நேரத்திலா இப்படி ஒரு சோதனை வரவேண்டும்? &lt;br /&gt;&lt;br /&gt;டேவிட்டின் மாமா ஒரு சூப்பர் மார்கெட்டின் ஒரு பகுதி பொறுப்பாளராக இருந்தார்.  உடல்நலக் குறைவால் அவர் வேலையை விட்டுப் போவதால் அந்த வேலையை தன் தந்தைக்கு சிபாரிசு செய்ய டேவிட்டிடம் கேட்டான் மாரியப்பன்.   டேவிட்டோ தன் தந்தையே அந்த வேலையை விரும்புவதாகச் சொன்னபின் மாரியப்பன் வற்புறுத்துவதை விட்டுவிட்டான். ஆனால் இன்று யாரொ ஒரு ரெப்பா கியருக்கு அந்த வேலை டேவிட்டால் சிபாரிசு செய்யப்பட்டு தரப்பட்டிருப்பதாக அறிந்த பிறகு மாரியப்பன் கொதித்துப் போய்விட்டான். உடனே  டேவிட்டின் வீட்டுக்கு வாடகைக்கார் பிடித்தான்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மாரியப்பனுக்கு டேவிட் வீட்டில் இருக்கிறானா எனற சந்தேகம் வந்தது. கைபேசியில் அழைத்தான். எதிர்முனையில்,&lt;br /&gt;&lt;br /&gt;    "ஹலோ, டெவிட் கியர் ஹியர்."&lt;br /&gt;&lt;br /&gt;    "மாரியப்பன் பேசுறேன்.  உங்க அப்பா பேரு சார்லஸ் கியர் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;    "ஆமாம்"&lt;br /&gt;&lt;br /&gt;    "இப்ப பேர மாத்தி வச்சுகிட்டாரா?"&lt;br /&gt;&lt;br /&gt;    "இல்லியே"&lt;br /&gt;&lt;br /&gt;    "அப்ப யாரு அந்த ரெப்பா கியர். அவுருக்கு ஏன் நீ சிபாரிசு பன்னியிருக்கே?"&lt;br /&gt;&lt;br /&gt;    "அது வந்து..........."&lt;br /&gt;&lt;br /&gt;    "இப்ப ஒங்க வீட்டுக்கு வர்ரேன். நீ அங்கேயே இரு."&lt;br /&gt;&lt;br /&gt;டேவிட்டின் மறுமொழியைக் கேட்க விருப்பமும் பொறுமையும் இல்லாமல் தொடர்பைத் துண்டித்தான். ஆனால் டேவிட்டின் குரலைக் கேட்டவுடன் கோபம் கொஞ்சம் குறைந்து போனதற்காக வருந்திய மாரியப்பன் ரெப்பா கியரை மனதில் இருத்திக் கொண்டு கோபத்தில் குமுறும் முயற்சியைத் தொடர்ந்தான். அழைப்பு மணி அடித்தவுடன் டேவிட் கதவித் திறந்தான். மாரியப்பன் அவனைப் பேச விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    " அது எப்படி உங்க அப்பாவுக்குன்னு சொல்லிட்டு யாருக்கோ சிபாரிசு பன்னியிருக்க? இத நேரடியா எனக்கு சொல்லிருக்கலாமே..."&lt;br /&gt;&lt;br /&gt;டேவிட் சிரித்தான். மாரியப்பனின் கோபம் அவனுக்குப் புதியது.  வினோதப் பார்வையோடும் குறும்பு முகத்தோடும் டேவிட் சொன்னான்,&lt;br /&gt;&lt;br /&gt;    "ஆமாம் அப்டித்தான் செய்வேன். எனக்கு வேண்டியவங்களுக்குத்தான் சிபாரிசு பன்னுவேன். இப்ப என்ன சொல்லப்போற?"&lt;br /&gt;&lt;br /&gt;    "கடசிலே ஒன் திமுறக் காட்டிட்டடா! இந்த வேல செய்துதான் நாங்க பொழைக்கனும்னு இல்லடா.............. எதோ ஃபிரண்டாச்சேன்னு கேட்டேன். நீ மாட்டேன்னு சொல்லியிருக்கலாம். பொய் சொல்லி ஏமாத்திட்டியேடா! உங்க புத்தியக் காட்டிட்டீங்கடா!!"&lt;br /&gt;&lt;br /&gt;    " மாரியப்பன், புத்தி கித்தின்னெல்லாம் எங்களப் பத்தி பேசாதே. அப்பறம் நானும் உங்களப் பத்திப் பேசுவேன்."&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துக் கொண்டே இதைச் சொன்ன டேவிட்டின் முககுறிப்பைக் கவனிக்கத் தவறிய மாரியப்பன் சரமாரியாக வார்த்தைகளை விட்டான்.  டேவிட்டும் துடுக்காக மறுமொழி அளித்துக்கொண்டிருந்தான். கோபம் எல்லை மீறிய மாரியப்பன் டேவிட்டின் சட்டையைப் பிடித்தான். &lt;strong&gt;அரசம்பட்டி ஆலப்பட்டி இருக்கம்பட்டி ஈஞ்சம்பட்டி என்று எல்லா பட்டி தொட்டியிலும் உச்சபட்ச வசவான அந்த வார்த்தைகளை எடுத்துவிட்டான் மாரியப்பன்&lt;/strong&gt;. அந்த வார்த்தைகளுக்கு மறுமொழி அடிதடியைத் தவிர வேறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    "ஒரு அப்பனுக்குப் பொறந்திருந்தா ஒண்டிக்கி ஒண்டி வாடா!"&lt;br /&gt;&lt;br /&gt;டேவிட்டுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதற்குமேல் அவனால் நடிக்க முடியவில்லை. அகில உலகத்திலும் அந்த வார்த்தைகளுக்கு அடிதடி மட்டுமே மறுமொழி என்றே அறிந்திருந்த மாரியப்பனுக்கு அவனுடைய சிரிப்பு ஒரு அசட்டுக்கோபத்தைக் கொண்டு வந்தது.  கேட்டான்,&lt;br /&gt;&lt;br /&gt;    "ஏண்டா உனக்கு சூடு சொரணையே கெடையாதா?"&lt;br /&gt;&lt;br /&gt;சட்டையப் பிடித்திருந்த மாரியப்பனின் கைகள் தன் மார்பில் அழுந்தப் புதையுமாறு அணைத்துக் கொண்டு சொன்னான் டேவிட்,&lt;br /&gt;&lt;br /&gt;    "நான் ரெண்டு அப்பனுக்குப் பொறந்தவன்தான் மாரியப்பன்."&lt;br /&gt;&lt;br /&gt;மாரியப்பனுக்கு இப்போது அசட்டுக்கொபம் மறைந்து குழப்பக் கோபம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    "நான் சிபாரிசு செய்த ரெப்பா கியர் என்னோட ரெண்டாவது அப்பா. அவருக்கும் நான் பிறந்திருக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;மாரியப்பனின் மூளை வேலை செய்வதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    "பத்தாண்டுகளுக்கு முன் ஆபரேஷன் செய்து ஆணாக மாறிய என் அம்மா ரெஜினா கியர்தான் இப்போது ரெப்பா கியர். அரசாங்க கெஜட்டில் அவர் ஆண் என்றுதான் இருக்கும். இதை நாங்கள் அநாவசியமாக வெளியில் சொல்வதில்லை. உன்னிடம் சொல்லாதது தப்புதான்."&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கெண்ணையில் ஊறவைத்த ஒரு கிலோ இஞ்சியை ஒரேயடியாகத் தின்ற குரங்கின் நிலையில் இருந்தான் மாரியப்பன். கண்களை சிமிட்டியபடியே டேவிட் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;    " ரெப்பான்னா ரெண்டாவது அப்பான்னு அர்த்தம்."&lt;br /&gt;&lt;br /&gt;**************&lt;br /&gt; &lt;a href="http://vavaasangam.blogspot.com/2008/04/blog-post_7498.html"&gt;வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை&lt;/a&gt; - &lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;ரெப்பா கியர்&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-4444860651884568033?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/4444860651884568033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=4444860651884568033' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/4444860651884568033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/4444860651884568033'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2008/05/blog-post.html' title='ரெப்பா கியர்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-1900131417609106811</id><published>2008-02-27T11:35:00.000-08:00</published><updated>2008-02-27T11:44:44.993-08:00</updated><title type='text'>என்னவரே, போய் வாரும்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-family:courier new;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-family:courier new;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-family:courier new;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-family:courier new;color:#990000;"&gt;SUJATHA.......&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;My respects to the man.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;Sometimes had his hands on my pen.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;Sometimes had his words on my mouth.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;Sometimes had his chair on my brain.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;Sometimes had his laws on my books.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;Goodbye, my man.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Natarajan.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-1900131417609106811?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/1900131417609106811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=1900131417609106811' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/1900131417609106811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/1900131417609106811'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2008/02/blog-post_27.html' title='என்னவரே, போய் வாரும்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-1788706937137631124</id><published>2008-02-08T10:43:00.000-08:00</published><updated>2008-02-08T11:15:18.102-08:00</updated><title type='text'>மடக்கு மகாத்மியம்</title><content type='html'>டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் &lt;strong&gt;'டைம்ஸ் இன்று'&lt;/strong&gt; என்று ஒரு தமிழ்ச் சிறப்பிதழ் வெளியிட்டிருப்பதையும் அதற்கான விமர்சனத்தையும் சுரேஷ்கண்ணன் மரத்தடியில் எழுதி இருந்தார். அவர் அவரது வலைப்பூவிலும் எழுதி இருக்கிறார். சுரேஷ்கண்ணன் புண்ணியத்தில் டைம்ஸ் நிறுவனத்திற்கு சில நூறு ரூபாய்கள் விறபனை கிடைத்திருக்கிறது. இப்பதிவு அவ்விதழைப் பற்றியதென்றாலும் அதன் உள்ளடக்கத்தைப் பற்றியெல்லாம் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. அவ்விதழை அமைத்திருக்கும் விதம் பற்றி எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புத்தகத்தின் சிறப்பு அதன் உள்ளடக்கத்தில்தானே என்று நீங்கள் யோசிப்பது எனக்குப் புரிகிறது. ஒரு புதிய மனிதரைக் கண்டு அவருடன் உள்ளடக்கம் சார்ந்த எதையும் செய்வதற்குமுன் அவர் உடைகளை ஆய்வது நமக்கெல்லாம் இயல்புதான். அதுவும் அவர் மாற்றுப்பாலைச் சேர்ந்திருந்தாலோ கேட்கவே வேண்டாம். இந்த உடை ஆராய்ச்சி எல்லைகளை விரித்து எல்லைகளைத் தாண்டி மனவெளிக்குள் நடக்கும், நடந்துகொண்டே இருக்கும். இதைப்போலவே என் இயல்பு என்னவென்றால் பருவ இதழ்களில் வரும் விளம்பரங்களை வெகுவாக ரசிப்பதும் உள்ளடக்கத்தைப் படிப்பதுமாக சேர்ந்தே இருக்கிறது. விளம்பரதாரர்களின் நோக்கம் என்னவோ விற்பனை என்றாலும் என்னளவில் அவர்கள் நோக்கம் கொஞ்ச கொஞ்சமே நிறைவேறும். அவர்கள் சொல்வதற்காக நான் எதையும் வாங்கிவிட மாட்டேன். ஆனால் அவர்கள் இலவசமாய் எனக்களிக்கும் ரசானுபவமோ ரொம்பவும் அதீதமானது, அலாதியானது. இத்துடன் இதழ்களின் விலைக் குறைப்புக்கும் அவர்கள் செய்யும் தொண்டு மகத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;நூறு ரூபாய் விலையுள்ள இந்த இதழின் தயாரிப்பு மடத்தனமாக இல்லை என்று சொல்வதற்கில்லை. இதன் அமைப்பில் பல கோளாருகாள் இருக்கின்றன. புத்தகத் தயாரிப்பின் எந்த நுணுக்கத்தையும் நான் அறியாதவன் ஆயினும் ஒரு பயன்பாட்டளனாய் என் கவனிப்புகளை இங்கு வைக்கிறேன். இவ்விடத்தில் அதே நூறு ரூபாய்க்கு ஆண்டுதோறும் வரும் ஆனந்தவிகடனின் தீபாவளி மலரின் அதி அற்புதமான தயாரிப்பைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். 'டைம்ஸ் இன்று' எனத் தலைப்பிடப்பட்டு சிறப்பாசிரியர் சுஜாதா என்று குறித்திருக்கும் இவ்விதழின் முன்னட்டைப் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இருந்திருக்க வேண்டும். இதன் முன்னட்டையை விட பின்னட்டையில் வந்திருக்கும் சாஸ்தா நல்லெண்ணையின் விளம்பரம் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய இந்த ரசனையில் பலர் உடன்பட மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நல்லெண்ணை விளம்பரத்தை சிறந்ததாக்கிய குற்றம் என்னுடையதன்று. அந்த முன்னட்டையினுடையது. இவ்விதழினுள்ளே ஏராளமான வண்ணப்படங்களும் ஓவியங்களும் காணக்கிடைக்கின்றன. அத்தனையையும் நவீன பானியைச் சேர்ந்தவை. பெரும்பாலானவை சிறப்பாக இருக்கின்றன. ஆனால் முன்னட்டையில் எனக்கு எந்த வசீகரமும் ஏற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விதழின் எழுத்துயரத் தேர்வுகளைப்(font size selection) பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். சில கதைகளும் கட்டுரைகளும் மிகச் சிறிய எழுத்துகளில் வந்திருக்கின்றன. நாஞ்சில்நாடனின் 'கோம்பை' சிறுகதையை மிகச்சிறிய எழுத்துகளில் பதித்திருக்கிறார்கள். இது தேவையே இல்லாமல் படிப்பவர்களை படுத்துவதாகும். இதழ் முழுதுமே எழுத்துயரம் சீராக இல்லை. இதை படிப்பதற்கு ஏதுவாக அமைத்திருக்க வேண்டாமா? சரியான எழுத்துயரத் தேர்வால் சில பக்கங்கள் கூடுவதால் அப்படி என்ன நட்டம் வந்துவிடப் போகிறது அவர்களுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;குறைகளாகவே சொல்லி வருவதால் இப்போதுசில நிறைகளைச் சொல்லிவிடுகிறேன். நல்ல காகிதத் தேர்வு, சிறப்பான வண்ண அச்சு, அசர வைக்கும் விளம்பரப்படங்களின் துல்லியம், கொழுத்தோ சோனியாகவோ இல்லாத சிக்கென்ற கணம், படங்களை ரசிக்க A4 காகித அளவு, இவற்றுடன் ஒரு பக்கக்குறிநூல்(book mark). இனி குறைகளைத் தொடரலாம். இந்த பக்கக்குறிநூலில் ஒரு விளம்பர அட்டையை முடிச்சிட்டு கொடுத்திருக்கிறார்கள். மீரா சிகைக்காய் பொடியின் விளம்பர அட்டை. டைம்ஸ்காரர்கள் கிடைத்த இடத்திலெல்லாம் நன்றாக விளம்பரம் செய்யட்டும். இதிலும் காசு பார்த்து மகராசர்களாய் இருக்கட்டும். ஆனால் இந்த அட்டை ஓர் அட்டையில்லை. சற்றே தடியான தாள்தான். இதில் துளையிட்டு வலுவாக முடிச்சிட்டிருக்கிறார்கள். இரண்டுமுறை புத்தகத்தை இடம் மாற்றியதில் அந்தத் துண்டுத்தாள் இடம் தெரியாமல் போய்விட்டது. மிஞ்சிய நூலோ முடிச்சுடன் அல்லாடுகின்றது. இங்கேயும் நம்மை படுத்தியெடுக்கிறார்கள். நீளம் குறைவான இந்த நூலினால் எந்த பயனும் இல்லை. புத்தக உயரத்தைவிட சற்று நீண்டிருந்தால்தானே அதை பக்கக்குறியாக பயன்படுத்த இயலும்? மாறாக அதை வெட்டி எறியும் வேலையை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த துண்டுத்தாளுக்குப் பதிலாக நெகிழியில்(plastic) கொடுத்திருக்கலாம் அல்லது நூலையாவது சற்று நீளமாகக் கொடுத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் மிக முக்கியமான இடர்பாட்டை எழுதப் போகிறேன். இக்கட்டுரையை என்னை எழுதத் தூண்டியதான ஒரு பெரிய மடத்தனம் இவ்விதழில் இருக்கிறது. அதுதான் மடக்கு மடத்தனம். இவ்விதழின் முன்னட்டையை நீளமாக்கி இரண்டாக வெளிமடிப்பு மடித்து அமைத்திருக்கிறார்கள். மடிக்கப்பட்ட பக்க விளிம்பு நான் புத்தகத்தைப் பிடிக்கும் போதெல்லாம் என் இடது கையை உறுத்துகிறது. இங்கே சில மென்கரங்களை எண்ணிப் பார்க்கிறேன். மேலும் உறுத்துகிறது. பொதுவாக பயன்பாடு அதிகமாகும்போது புத்தகங்களின் முன்னட்டையின் வலப்புற மேல்முனையும் கீழ்முனையும் கொஞ்சமாக சுருண்டுகொள்ளும். எங்கேயாவது புத்தகங்கள் முதுகுபுறத்தில் சுருளுமோ? இங்கே என் புதிய புத்தகத்தில் முன்னட்டை மடக்கு முதுகுப்புறத்தில் சுருண்டு கண்ணையும் உறுத்துகிறது. ஏற்கெனவே சில ஆங்கில சிறப்பிதழ்களில் இந்த அவஸ்தையை நான் அனுபவித்திருக்கிறேன். இப்போது தமிழில் என்கிறபோது ஆயாசமாக இருக்கிறது. இந்த மடக்கினுள்ளே தமிழ்நாடு சுற்றுலத்துறையின் ஒரு நல்ல விளம்பரம் இருக்கிறது. இப்போது என்னிடம் இருக்கும் இதழ் முன்மடக்கு முதுகு மேல்நுனியும் முதுகு கீழ்நுனியும் சுருண்டு மடக்கு மட்டும் மின்விசிறிக் காற்றில் அல்லாடிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இந்த மடக்கு மகாத்மியத்தை முன்னட்டையோடு நிறுத்தவில்லை. உள்ளே பல விளம்பரங்களையும் மடக்கு பக்கங்களாகவே அமைத்திருக்கிறார்கள். சற்று வேறுபட்ட பக்கவாட்டுத் தோற்றமும் சீரற்ற பக்க அளவுகளுமாக காட்சியளிப்பதைத் தவிர உள்ளேயிருக்கும் மடக்குப் பக்கங்களினால் வேறு பிரச்சனைகள் இல்லை. என்ன, நீங்கள் மெனக்கெட்டுப் பிரித்துப் பார்க்கும்போது நல்ல விளம்பரமாக ஒரு சுகானுபவம் கிடைக்கலாம் அல்லது கடுப்பைக் கிளப்பும் வெற்றெழுத்து விளம்பரமும் கிட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது டைம்ஸ் காரர்களின் முதல் தமிழ் முயற்சியென நினைக்கிறேன். தமிழுக்கும் வந்ததற்காக அவர்களுக்கு நன்றி சொல்வோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-1788706937137631124?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/1788706937137631124/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=1788706937137631124' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/1788706937137631124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/1788706937137631124'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2008/02/blog-post.html' title='மடக்கு மகாத்மியம்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-3252736367795881054</id><published>2008-01-15T08:21:00.000-08:00</published><updated>2008-01-15T08:46:22.535-08:00</updated><title type='text'>ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;இன்று பொங்கல் நன்னாளில் இந்த நல்ல செய்தி வந்திருக்கிறது. சில (பல) நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இவ்வாண்டு ஜனவரி மற்றும் பிப்பிரவரி மாதங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்திருக்கிறது.  இவ்வழக்கில் விரைந்து செயலாற்றி வெற்றிக்கனி பறித்த நம் தமிழக அரசுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கக் கடைமைப் பட்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விளையாட்டைத் தடை செய்யக் கோரி விலங்கு நல வாரியம் தொடுத்திருக்கும் வழக்கு பொருளற்ற பல அம்சங்களை உடையதாகவே எனக்குப் படுகிறது. இப்போது நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் பார்வையாளர்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று செய்திகள் சொல்லுகின்றன. உண்மையில் ஒரு மனித நல வாரியமே ஜல்லிக்கட்டு தடை கோரி நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றான இந்த விளையாட்டு சீர் படுத்தப்பட்டு பாதுகாப்பானதாக்கி மேலும் பிரபலப்படுத்தப்பட வேண்டுமே தவிர தடை என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாரியத்தால் முன்னர் தடை பெறப்பட்டதற்குக் காரணம், உயர்நீதிமன்றத் தீர்ப்பைனால் சற்றே அசந்திருந்த நேரத்தில் வாரியம் சாமர்த்தியமாக செயல்பட்டதுதான் என்று அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வழக்கில் தடை கொடுத்த உச்சநீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் வழக்கம் போலவே விமர்சனங்கள் தாக்கின.  &lt;span style="color:#6600cc;"&gt;சட்டம் ஓர் இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதமே விளக்கு&lt;/span&gt; என்ற அறிஞர் அண்ணா கூறியதை இங்கு நினைத்துப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான நேரத்தில் சரியான வாதங்களல் தேவையான தீர்ப்பினைப் பெற்றுத் தந்த தமிழக அரசுக்கு நன்றி.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-3252736367795881054?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/3252736367795881054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=3252736367795881054' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3252736367795881054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3252736367795881054'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2008/01/blog-post.html' title='ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-15666502734772781</id><published>2007-12-23T19:57:00.000-08:00</published><updated>2007-12-23T20:04:04.175-08:00</updated><title type='text'>திருவாதிரை</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#660000;"&gt;திருவாதிரைத் திருநாள்&lt;/span&gt;&lt;/strong&gt;   &lt;a href="javascript:ScorePopUp(" s="P&amp;amp;i=45274')&amp;quot;"&gt;&lt;/a&gt;&lt;a href="javascript:ScorePopUp(" s="N&amp;amp;i=45274')&amp;quot;"&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;அந்த நாளும் வந்திடாதோ!அந்த சின்னப் பையனுக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் விடுமுறை கிடைக்கும். காலையில் சுடச்சுட நெய்மணக்கும் களி கிடைக்கும். இந்தக் களிக்கு தான் எத்தனை ருசி! ஆண்டவன் இந்த களியின் ருசியைப் போல் வேறெங்கும் வைத்ததில்லை. புழுங்கலரிசியை வறுத்து, பொரியரிசி ஆக்கி, சற்றே (மிக முக்கியம்-சற்றேதான்) பொடித்து, வெல்லம் சேர்த்து, நெய்வார்த்து கிண்டியெடுத்த களியின் ருசி, ஆகா! ஒரு வருஷம் வரை அப்படியே நாவில் நிற்கிறதே!! அதனால்தானோ என்னவோ இதை திருவாதிரை அன்று மட்டும் செய்கிறார்கள்! இனி அடுத்த திருவாதிரைக்குதான் களி!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;திருவாதிரை என்றால் சிதம்பரம்தான் சிறப்பு. ஆனால் அந்தச் சின்னப் பையன் குடந்தையில் அல்லவா இருந்தான். அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு பெரியத் தெருவுக்கு போவான். அப்பாவுடன் வெளியில் செல்வதென்றால் அது எப்பவும் லாபம் தான். ஏதாவது ஒன்று நிச்சயம் கிடைக்கும். அன்று அங்கு அத்தனை சிவன் கோயில் சாமிகளும் புறப்பட்டு வந்து வரிசையில் பெரிய கடைத் தெருவில் நிற்கும். அப்பா ஒவ்வொரு சாமியாய் கும்பிட்டு வரும்வரை அந்த கடைத்தெருவின் அத்தனை ஆரவாரத்தையும் ஆசை தீர பருகியனுக்கு அவ்வப்போது அப்பா திருநீறு பூசி விடுவார். சில சாமிகளைப் பார்க்க அவன் இரண்டு கக்கத்து இடுக்கிலும் கை கொடுத்து தூக்கி மேலே காண்பிப்பார். அவனும் கும்பிட்டுவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வான். அவர் இறக்கி விட்டவுடன் மறக்காமல் அப்பா கையைப் பிடித்துக் கொள்வான். அத்தனைக் கூட்டத்தில் அப்பாவை தொலைத்துவிடக் கூடாது அல்லவா!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;நான் தாங்க அந்த சின்னப் பையன். ஒவ்வொரு திருவாதிரை அன்றும் மனதில் இந்த படத்தை ஒட்டிப் பார்த்துவிடுவேன். இந்த முறை உங்களோடு சேர்ந்து ஓட்டிப் பார்க்கிறேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;(சென்ற ஆண்டு திருவாதிரைக்கு எழுதியதின் மீள்பதிவு. பின்னூட்டங்களுடன் அந்தப் பதிவுக்குச் செல்ல: &lt;a href=""&gt;&lt;/strong&gt;&lt;a href="http://oagaisblog.blogspot.com/2007/01/blog-post.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;http://oagaisblog.blogspot.com/2007/01/blog-post.html&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;"&gt; திருவாதிரைத் திருநாள் &lt;/a&gt;)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-15666502734772781?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/15666502734772781/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=15666502734772781' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/15666502734772781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/15666502734772781'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/12/blog-post_23.html' title='திருவாதிரை'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-6091309574012111670</id><published>2007-12-16T10:42:00.000-08:00</published><updated>2008-01-04T09:24:10.447-08:00</updated><title type='text'>ந.ஒ.க:-போடி வெளியே...</title><content type='html'>&lt;span style="font-size:130%;color:#990000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;போடி வெளியே...&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- இனிமே உனக்கு இங்க இடமில்ல. கிளம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்டவுடன் அதிர்ந்து போன அவள் சொன்னாள்,&lt;br /&gt;&lt;br /&gt;- என்னாச்சு இன்னிக்கி உங்களுக்கு. வேற மாதிரி பேசுறீங்க.&lt;br /&gt;- நான் சொல்றது புரியுதா இல்லியா? நீ இன்னிக்கி கிளம்பனும் நல்லா புரிஞ்சுதா?&lt;br /&gt;- நான் போக மாட்டேன். நான் ஏன் போகனும்?&lt;br /&gt;- மேற்கொண்டு பேசறதுக்கு எதும் இல்ல. நீ இடத்த காலி பண்ணு.&lt;br /&gt;- நான் இங்கேயே இருந்துகிறேன். எனக்கு போக விருப்பமில்லை.&lt;br /&gt;- இவ்வளவு சொல்றேன் உனக்கு எட்டலியே.. போ வெளியே..&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை இத்தனை நாளாக வளர்த்தவர் திடீரென வெளியே போ என்று சொல்வது அவள் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இருந்தாலும் போராட முடிவு செய்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;- நான் போக முடியாது. நீங்கள் இப்படி மாறுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.&lt;br /&gt;- இதோ பார். சும்மா சண்டித்தனம் பண்ணாத. சொல்றதக் கேளு. போ வெளியே..&lt;br /&gt;- கண்டிப்பா முடியாது. நான் எங்க போவேன்? எனக்கு யாரத் தெரியும்? உங்கள விட்டா வெளியுலகமே தெரியாத என்னை வெளிய போச் சொல்றதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வருது? உங்க மனசு அவ்வளவு கல்லா?&lt;br /&gt;- திரும்பத் திரும்ப முரண்டு பிடிச்சியானா நான் உன்னை வலுக்கட்டாயமா வெளியேத்த வேண்டியிருக்கும். ஒழுங்கா போயிடு.&lt;br /&gt;- முதல் முறயா நீங்க சொல்றத கேக்காம இருக்கறதுக்கு மன்னிக்கனும். என்னால போக முடியாது. நான் இங்கிருந்து போக மாட்டேன்.&lt;br /&gt;- கழுத்த புடிச்சு தள்ளினாத்தான் நீ போவியா?&lt;br /&gt;&lt;br /&gt;அவளைத் தள்ளிய தள்ளலில் அவள் நிலை குலைந்து தலை குப்பற ஆன அந்த நிலையிலும் அவள் சொன்னாள்,&lt;br /&gt;&lt;br /&gt;- வேண்டாம். என்னை வலுக்கட்டாயமாத் தள்ளாதிங்க. நான் போகலை.&lt;br /&gt;- இனிமே நீ செத்த அப்பறம்தான் நான் உன் மூஞ்சியிலே முழிப்பேன். &lt;strong&gt;போடி வெளியே....&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஒரு நெக்கு நெக்கித் தள்ளியதில் அவள் வெளியே விழுந்து அலறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரையில் நமக்குப் புரியாத ஒரு மொழியில் கடவுளுடன் நடந்த உரையாடலை எனக்குப் புரிந்தவரையில் மொழிபெயர்த்திருந்தேன். இன்மேல் என் மொழிபெயர்ப்பு தேவையில்லை. அவள் நம் மொழியிலேயே குவா என பேச ஆரம்பித்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடராஜன்&lt;br /&gt;17-12-2007&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-6091309574012111670?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/6091309574012111670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=6091309574012111670' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/6091309574012111670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/6091309574012111670'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/12/blog-post.html' title='ந.ஒ.க:-போடி வெளியே...'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-2372246589856596975</id><published>2007-11-08T20:11:00.000-08:00</published><updated>2007-11-08T21:31:06.861-08:00</updated><title type='text'>தீபாவளி ஒழித்த நாட்கள்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;தீபாவளிச் சிறப்புப் சிறுகதை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;அவர் இறந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. பலப்பல ஆண்டுகள் ஆகியிருக்க வெண்டும். ஓர் ஏற்பாட்டினால் பூமியில் அவர் வாழ்ந்த இடத்துக்கு வந்தார். அவரை வரவேற்றவர் சொன்னார்,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- இந்தப் பூமிச்சுற்றுலாவில் நான்தான் உங்களுக்கு வழிகாட்டி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- நீங்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- ஏற்பாட்டின் ஒரு பகுதி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- இன்றுதானே தீபாவளி? தீபாவளி அன்றுதான் வரவேண்டுமென்று விரும்பியிருந்தேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- இன்று நவம்பர் மாத அமாவாசை. இன்றுதான் முந்நாட்களில் தீபாவளி கொண்டாடுவார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- இங்கு தீபாவளி இல்லயா? இது இந்தியாதானே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- நீங்கள் சென்னையில்தான் இருக்கிறீர்கள். ஆட்சி மாற்றத்தில் தீபாவளியை ஒழித்து விட்டார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எப்படி? எப்படி சாத்தியம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- முதலில் விடுமுறை நிறுத்தப்பட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- அரசு விடுமுறைதானே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எல்லாமே அரசுதானே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- ஓ!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- இப்போது பல விஷயங்கள் புரிந்ததா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- உடனே நான் இந்த உலாவை இப்போதே முடிக்கவேண்டும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- மனதில் விண்ணப்பியுங்கள். உலா முடிவு சற்று நேரத்தில் வந்துவிடும். வரும்வரை நான் உங்களுடன் இருப்பேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- தீபாவளி மட்டுமா நிறுத்தப்பட்டது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எல்லா பண்டிகைகளும், கோயில் உற்சவங்களும், வழிபாட்டுக் கொண்டாட்டங்களும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- கிருத்துமஸ், ரம்ஜான் இவை எப்படி?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எதிர்ப்புகளுக்குப் பிறகு கிருத்துமஸ் நிறுத்தப்பட்டது. கடைசியாக ரம்ஜான் நிறுத்தப்பட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எதிர்ப்பு சாத்தியமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- வெளிப்படுவது சாத்தியமில்லை. உயர்மட்டங்களில் வெளிப்பட்டபோது இவை நிறுத்தப்பட்டன.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- உயர்மட்டம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- வெளிநாடுகளுச் சென்றால் முழுமையாக விரிவாக அறிந்து கொள்ளலாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- பொங்கல்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- அது அரசு விழா.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- வேறு விழாக்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- தலைவர்களுடைய பிறந்த நாட்கள். அதாவது....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- என்னால் ஊகிக்க முடிகிறது. நாடு எப்படி இருக்கிறது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எல்லோருக்கும் உணவு கிடைக்கிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- வேறு ஏதாவது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- எல்லோருக்கும் உணவு கிடைக்கிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- பட்டினிச்சாவெல்லாம் இல்லை என்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--- அப்படி இல்லல. இப்போது அது தண்டனைக்குறிய தற்கொலை முயற்சிகளில் ஒன்று. அம்முயற்சியில் பிழைத்தால் ஆயுள் தண்டனை. இறந்தால் இறந்தவருக்கு அன்மையான சுற்றத்திலோ நட்பிலோ இச்சாவைத் தடுத்திருக்கும் சாத்தியம் மிக அதிகமாக உள்ளவர் என்று அரசு கருதுபவருக்கு ஆயுள் தண்டனை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது நல்ல வேளை. அவர் மனதால் விரும்பிய உலா முடிவு அவருக்கு வந்துவிட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;************************************&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொய்மோருடன் அம்மா சொன்னாள்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இணைய உலாவில் இடததின் பக்கம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நினைத்திடல் என்றும் தவிர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;***********************************************&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-2372246589856596975?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/2372246589856596975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=2372246589856596975' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/2372246589856596975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/2372246589856596975'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/11/blog-post.html' title='தீபாவளி ஒழித்த நாட்கள்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-3281591711294703093</id><published>2007-08-15T09:52:00.000-07:00</published><updated>2007-08-25T21:15:36.507-07:00</updated><title type='text'>கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;சுதந்திர தின சிறப்புச் சிறுகதை!&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெக்கிக்காட்டான், வவ்வால், செல்வன் மூவருக்கும் இந்தக் கதையை சமர்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    செல்லமுத்து தன் விருப்ப நடிகரின் படத்தை மூன்றாவது முறையாகப் பார்த்துவிட்டு மாலைக்காட்சி முடிந்து வெளியே வந்தான். மணி ஒன்பது ஆகியிருந்தது. ஊருக்குப் போக பத்து மணிக்கு கடைசி பஸ். பையில் இருபத்தி ஆறு ரூபாயும் சொச்சமும் இருந்தது. ஊருக்குப் போக ஆறு ரூபாய் போய்விட்டல் மீதி இருபத்தி ரூபாய் சொச்சம் இருக்கும். இப்போது அவனது மொத்த சொத்தே அவ்வளவுதான். கும்பகோணம் பஸ் நிலையம் பக்கமாக வந்தான். ஊருக்குப் போய் என்ன செய்யப் போகிறான்? அம்மா வைத்திருக்கும் மோர் சொற்றை தின்றுவிட்டு, திண்ணையில் படுத்துத் தூங்கிவிட்டு காலையில் எழ வேண்டும். அப்பறம் கார்காரர் வயல் பம்புசெட்டில் குளித்துவிட்டு கொஞ்சம் பழையது சாப்பிட்டுவிட்டால் அவ்வளவுதான். வேறு வேலை கிடையாது. யாராவது எங்காவது கூப்பிட்டால்தான் உண்டு. கார்காரர் வயலுக்கு அடுத்த திங்கட் கிழமைதான் போகவேண்டும். அப்பறம் தான் வேறு காசை கண்ணால் பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;    பஸ் நிலையத்துக்கு போகும் வழியில் புதிதாக ஒரு இட்லிகடை வந்திருந்தது. இட்லிப்பானையில் ஆவி பறந்து வந்துகொண்டிருந்தது. ஒருத்தன் புரோட்டா போட்டுக் கொண்டிருந்தான். 4 இட்லி ரூ.ஐந்து என்று ஒரு பலகையில் சாக் பீசால் எழுதியிருந்தது அவனை ஈர்த்தது. கணக்கு போட்டு பார்த்தான். 6 இட்லி சாப்பிட்டுவிட்டு இரண்டாவது ஆட்டம் படம் பார்த்துவிட்டு காலையில் முதல் பஸ்ஸுக்கு போய்விடலாமென்று முடிவு செய்தான். உள்ளே போய் ஒரு நோட்டம் விட்டபோது இரண்டாவது பெஞ்சில் வாசு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வாசு இவனோடு பத்தாவது வரை படித்து இவனோடேயே ஃபெயிலானவன். அதன்பிறகு கொல்லத்து வேலை செய்யப்ப் போகிறேன் என்று சொல்லி போனவனை இப்போதுதான் நாலு வருஷம் கழித்து பார்க்கிறான். பக்கத்தில் போய் அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; - லே வாசு, எப்பிர்ரா இருக்க?&lt;br /&gt; - அட செல்லமுத்து, இங்க எங்கடா வந்த? ஊர விட்டு நவுர மாட்டியே, என்னா தலைவர் படமா?&lt;br /&gt; - வேற எதுக்குடா நான் வரப்போறேன்?&lt;br /&gt; - என்னடா செல்லா செய்யிற?&lt;br /&gt; - கார்காரர் வயல்லதான் வேலை.&lt;br /&gt; - அப்பாவுக்கு எங்கடா வேலை?&lt;br /&gt; - ரெண்டு வருஷத்துக்கு முன்னால தவறிப் போய்ட்டார்டா.&lt;br /&gt; - அடடா, செல்லா, கடசி பஸ் போயிருக்குமேடா?&lt;br /&gt; - பத்து மணிக்கு ஒன்னு உண்டுடா, ஆனா ரெண்டாவுது ஆட்டம் இன்னோரு படம் பாத்துட்டு காலைல தாண்டா போறென்.&lt;br /&gt; - எங்கடா படுக்க போறே?&lt;br /&gt; - பஸ் ஸ்டாண்டுல படுத்துட்டு மொத ப்ஸ்ஸுல போயிருவேன்.&lt;br /&gt; - நாளக்கி வேல இருக்கா அதான் கருக்கல்ல போறியா?&lt;br /&gt; - அடுத்த வாரந்தாண்டா வேல. அதுவரைக்கும் சும்மாதான் இருப்பேன். நீ என்னாடா செய்யிற?&lt;br /&gt; - ஒரு காண்ட்ராய்ட்டர்கிட்ட வேல செய்யிறண்டா. லே, சித்தாள் வேலைக்கு நாளைக்கு மட்டும் வர்ரியாடா? எங்க காண்ட்ராய்ட்டருக்கு கொஞ்சாம் ஆளு கொறயுதுன்னாரு. கொறைஞ்சது அம்பது ரூவா வாங்கித் தாரென்.&lt;br /&gt; - அம்மா தேடுமேடா!&lt;br /&gt; - கார்காரர் வூட்டுக்கு போன் போட்டு சொல்லு.&lt;br /&gt; - நம்ம்பரெல்லாம் தெரியாதுடா&lt;br /&gt; - நான் புடிச்சி தாரென். வா. நானும் படத்துக்கு வாரேன். என் கொட்டாயிலேயே படுத்துக்க.&lt;br /&gt;&lt;br /&gt; இருபத்தி ஆறு ரூபாய் சொச்சம் அப்படியே இருந்தது. சாப்பாட்டுக்கும் சினிமாவுக்கும் வாசுவே பார்த்துக் கொண்டான். மறுநாள் மாலை அது நூறு ரூபாய் மேல் ஆனது. அந்த வாரம் பூராவும் சித்தாள் வேலை இருந்தது. சனிக்கிழமை மாலை செல்லமுத்துவிடம் ஐநூறு ரூபாய்க்கு பக்கம் பணம் இருந்தது. சனிக்கிழமை டாஸ்மார்க்கில் சரக்கடித்துவிட்டு வாசு கொட்டகையிலேயே படுத்து உருண்டான் செல்லமுத்து. காலையில் எழுந்தவுடன் ஊர் ஞாபகம் பலமாக பிடித்துக் கொண்டுவிட்டது. திடீரென பணம் சம்பாதிப்பது எளிதாகத் தோன்றியது அவனுக்கு. அவ்வளவு பணம் அவன் மொத்தமாக ஒரு வாரத்துக்குள்ளாகச் சம்பாதித்ததில்லை. அடுத்த வாரமும் ஊரில் வேலை இல்லை என்றால் வாசு கும்பகோணம் வந்துவிடச் சொன்னான். 'பார்ப்போம், கார்காரரு மேல கீல பாத்தார்னா பேசாமா வாசுகிட்ட வந்துட வேண்டியதுதான்'. செல்லமுத்து இப்போது ஆளே கொஞ்சம் பூரிப்பாகத் தெரிந்தான். 'அம்மாவும் லச்சுமியும் அசந்துபோவப் போவுதுங்க'. 'ஆத்துல குளிச்சிட்டு பத்து மணி பஸ்ஸை பிடிக்கலாமெ'ன்று முடிவுசெய்தான்.&lt;br /&gt; &lt;br /&gt; ஒரு வாரமாக போட்டிருந்த சட்டையையும் கைலியையும் ஆற்றில் தோண்டியிருந்த ஊற்றில் ஒரு கட்டி துனி சோப் வாங்கித் துவைத்து படித்துறையில் காயவைத்தான். குளித்து முடித்து லேசாகக் காய்ந்திருந்த துனிகளை உடுத்திக் கொண்டு படித்துறையை விட்டு வெளியே வந்தான். சிலு சிலு வெனக் காற்று புது உடம்பில் பாதி ஈர உடைகளினூடே பட்டு ரொம்பவும் புத்துணர்வாக இருந்தான். பஸ் நிலையத்துக்கு போகும் வழியில் ஒரு பெரிய சைவ உணவகத்தின் வாசலில் நின்றான். வெங்காய சாம்பாரின் மணம் மூக்கைத் துளைத்து அவனை உள்ளே இழுத்தது. ஊரில் சட்டியில் இருக்கும் பழைய சாதத்தை நினைத்தான். உடனே உள்ளே நுழைந்தான். 'பதினொன்ர பஸ்ஸுக்கு போவுலாம்'.&lt;br /&gt; &lt;br /&gt;    -ஒரு ரோஸ்ட் அப்பறம் ஒரு ரவா.&lt;br /&gt;&lt;br /&gt; தோசைக்கு சொல்லிவிட்டு சுற்றி ஒரு நோட்டம் விட்டான். ஏசி அறையிலிந்து வெளியே வந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தான். கிருஷ்ணமூர்த்தி செல்லமுத்துவின் பெரியப்பா பையன்.&lt;br /&gt;&lt;br /&gt;    -மூர்த்திண்ணே..&lt;br /&gt; &lt;br /&gt;    சற்று உரக்கக் கூப்பிட்டவன் அவன்  இருந்த தோரணையைப் பார்த்து கூப்பிட்டிருக்க வேண்டாமோ எனத் தயங்கினான். ஆனால் கிருஷ்ணமூர்த்திக்குக் கேட்டுவிட்டது. இவனருகே வந்து எதிர் இருக்கையில் அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; - சின்னம்மா, லச்சுமியெல்லாம் எப்பிர்ரா இருக்காங்க?&lt;br /&gt; - நல்லா இருக்காங்கண்ணே.&lt;br /&gt; - எதுக்குடா கும்மோணம் வந்த? ஊர வுட்டு நவுர மாட்டியே!&lt;br /&gt; - தலைவர் படம் பாக்குலாமுன்னு திங்க கிலமை வந்தேன். இங்க என் பெரண்டு காண்ட்ராய்ட்டர்கிட்ட வேல இருக்குன்னான். ஒரு வாரம் செஞ்சுட்டு இப்ப ஊருக்கு போய்கிட்டு இருக்கேண்ணே. பதினொன்ர ப்ஸ்ஸ¤க்கு போறன்.&lt;br /&gt; - ஏண்டா சித்தாள் வேலையா செய்த?&lt;br /&gt; - ஆமாண்ணே.&lt;br /&gt; - எவளவுடா சம்பாரிச்ச?&lt;br /&gt; - ஐநூறு கெடச்சுதுண்ணே.&lt;br /&gt; - அடி சக்க, ஒரு வாரத்துல ஐநூறா?&lt;br /&gt; - ஆமாண்ணே, இந்த வேல தேவலாம்ணே. ஏண்ணே, காரா வாங்கியிருக்கீங்க?&lt;br /&gt; - ஆமாண்டா. யார்ரா சொன்னா?&lt;br /&gt; - அம்மா சொல்லிச்சி.&lt;br /&gt; - மாமன் ஊட்ட்ல எல்லாம் எப்பீர்ரா இருக்காங்க?&lt;br /&gt; - அதான் செத்தா வாழ்ந்தா இல்லன்னு ஆயிருச்சேண்ணே. அப்பறம் ஏண்ணே எங்கிட்ட கேக்குறீங்க?&lt;br /&gt; - மூனாம் வூட்ல இருக்கீங்க, அதாண்டா கேக்குறேன்.&lt;br /&gt; - நீங்க பொண்ணு கட்ட போற வூடு. அந்த அக்கறையில கேக்குறீங்க. எனக்கு ஒன்னும் தெரியாதுண்ணே.&lt;br /&gt; - ஊர்ல என்னடா பண்ணுற? கார்காரரு வயல்லதான் வேலையா? என்னா தாராரு?&lt;br /&gt; - மாசம் ஆயிரம் தராரு. கொஞ்சம் நெல்லு தருவாரு. பொங்கல் தீவாலிக்கி எதுனாச்சும் கொடுப்பாரு.&lt;br /&gt; - எப்பீர்ரா காசு சேத்து லச்சுமிய கரையேத்த போற?&lt;br /&gt; - சேர வேண்டிய ஒன்ர ஏக்கரத் தான் மாமங்காரன் கேஸ் போட்டு புடுங்கிட்டான். நீங்க பொண்ணு எடுக்கப் போற வூட்டச் சொல்றனேன்னு வித்தியாசமா நெனைக்காதீங்கண்ணே. உங்களுக்கே தெரியுமில்ல.....&lt;br /&gt;&lt;br /&gt; - செல்லமுத்து காப்பி வாங்கிக்கடா.&lt;br /&gt; - வேணாண்ணே.&lt;br /&gt; - லே பாதி காப்பி குடி......  ஒரு காப்பி குடுப்பா. பில்ல ஏங்கிட்ட குடு.&lt;br /&gt; - அண்ணே நான் தர்ர்ண்ணே.&lt;br /&gt; - நீ குடுக்குறப்ப மவராசனா குடு. இப்ப நான் தார்ரென். ஏண்டா செல்லமுத்து ராத்திரி கடசி ப்ஸ்ஸுல ஊருக்கு போடா. எனக்கு முக்கியமா ஒரு வேல இருக்கு. மெட்ராசுலேர்ந்து ஒருத்தர் வர்ராரு. ராத்திரி ட்ரெய்ன்ல அவரு கெளம்புராரு. கொஞ்சம் கூடமாட இர்ரா.&lt;br /&gt; - அம்மா தேடும்ணே. ஊரவுட்டு வந்து ஒருவாரம் ஆச்சி.&lt;br /&gt; - மாமா வூட்டுக்கு போன் போட்டு நான் சொல்றண்டா. நடுவூட்டு பொடியன் போய் சொல்லிருவான். என் கூட வா. சாமிமல போகனும்.&lt;br /&gt;&lt;br /&gt; கிருஷ்ணமூர்த்தி தன் கைபேசியில் யாரிடமோ பேசி அவன் அம்மாவுக்கு தகவல் சொல்லச் சொன்னான். இருவரும் சுவாமிமலை சென்று அங்கு ஓரிடத்தில் ஒரு புத்தம்புது ஐம்பொன் சிலை வாங்கினார்கள். அழகாக கள்ளிப் பெட்டியில் வைத்து மூடி ஆனி அடித்து டிக்கியில் ஏற்றிவைத்தான் செல்லமுத்து. வரும்போது கிருஷ்ணமூர்த்தி கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt; - அந்த ஒன்ர ஏக்கர் நெலம் கெடைச்சிருந்தா என்னடா செய்வ?&lt;br /&gt; - அது இருந்தா நாங்க ஏண்ணே இப்பிடி இருக்கோம்?&lt;br /&gt; - லே, அதுலேர்ந்து எவளவுடா வந்துடும்?&lt;br /&gt; - ஒருத்தருக்கு கைகட்டி நிக்க வேணாண்ணே. யார் கையும் எதிர்பாக்க வேணாம்.&lt;br /&gt; - அதெல்லாம் சரிடா. எவளவு வந்துடும், அதச் சொல்லு.&lt;br /&gt; - எவ்ளவு வந்தா என்னாண்ணே. நம்ம வய. நம்ம ஒழப்பு. நம்ம சோறு.&lt;br /&gt; - சித்தாளு வேல செஞ்சு வாரம் ஐநூறு கெடச்சுதே, அத அம்பதால பெருக்கு. வருசத்துக்கு இருவத்தி அஞ்சாயரம் ரூவா. அது வயல்ல கெடைக்குமாடா?&lt;br /&gt; - நல்லா பாடுபட்டா கெடைக்கும்ணே.&lt;br /&gt; - ஆத்துல தண்ணி வர்லன்னா, வயல்ல பூச்சிபொட்டு புடிச்சுதுன்னா, மழையே பேயலன்னாலும் இல்ல கொட்டுகொட்டுன்னு கொட்டிச்சின்னாலும் நீ சொல்றது நடக்குமாடா?&lt;br /&gt; - சில வருசம் நட்டம் வருண்ணே&lt;br /&gt; - டேய் சில வருசம் இல்லடா. பத்து வருசத்துல ஒரு வருசம் ரெண்டு வருசந்தாண்டா லாவம் வரும். அப்பிடி வர்ர லாவம் கொஞ்சம். ஆனா நட்டம் வந்தா பெருசா வரும்டா. அப்பறம் ஒரு வருசத்துல எல்லாருக்கும் நல்லா விளஞ்சா அந்த வருசம் நல்ல வெல கெடைக்காதுடா.&lt;br /&gt; - அண்ணே, நீங்க பதினஞ்சி ஏக்கர் வச்சிருக்கீங்க உங்களூக்கு எப்புடிண்ணே லாவம் வருது? நட்டம் வராம இருக்கு?&lt;br /&gt; - இப்பதாண்டா நீ பாயிண்டுக்கு வர்ர செல்லமுத்து. லாவ நட்டக் கணக்கு இத்தன ஏக்கருக்கு இத்தனன்னு தோதா மாறிக்கும்டா. அப்பறம் நான் விவசாயியா இருந்து வியாபாரியா மாறிட்டேன். என்னோட லாவநட்டக் கணக்கே வேற.&lt;br /&gt; - புரியலேண்ணே.&lt;br /&gt; - சித்தாளு வேல செஞ்சியே அத வேலைன்னு நெனைக்காம யாவாரமா யோசிச்சிப் பாரு. ஒன்னோட உழைப்ப கொடுத்து அதுக்கு வெல கிடைச்சிருக்குன்னு நெனைச்சுப் பாரு. கூலின்னு நெனைக்காதே. கார்காரருக்கு நீ என்னா தர்ர, அவுரு உனக்கு என்னா தர்ராரு, யோசிச்சுப் பாரு.&lt;br /&gt; - அவரு என்ன்ண்ணே செய்வாரு..........&lt;br /&gt; - லே செல்லமுத்து, அவருக்காக நீ யோசிக்காத. ஒனக்காக யோசிச்சி என்னா பதில் வருதுன்னு சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;  செல்லமுத்து குழம்பிப் போனான். வாரம் ஐநூறு ரூபாயும் மாதம் ஆயிரம் ரூவாயும் நிச்சயம் ஒன்றல்ல. மாமனிடமிருந்து போனல் போகுதுன்னு அந்த ஒன்னரை ஏக்கர் நிலத்தை கிருஷ்ணமூர்த்தி வாங்கிக் கொடுத்தாலும் நிலைமை எப்படி மேம்பட்டதாக இருக்கும் என்று புரியவில்லை. நம்முடைய நிலம், நம் உழைப்பு, நமது சோறு என்கிற எண்ணம் தரும் திருப்தியை பணமாக மாற்றினால் ஒன்றும் தேறுவதாக இல்லை. கிருஷ்ணமூர்த்தியை சின்ன வயசிலேர்ந்து தெரியும் நல்ல மனசுக்க் காரன். பங்காளி மாதிரியே நடந்த்துக்க மாட்டான். நிச்சமாக மனசைக் கலைப்பதற்காக சொல்லவில்லை என்ற நம்பிக்கை செல்லமுத்துவுக்கு இருந்தது. பத்து வயதில் பம்பரம் விடச் சொல்லிகொடுத்த கிருஷ்ணமூர்த்தி இப்போது பணம் செய்யச் சொல்லிக் கொடுக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt; ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த ஒரு பெரிய ஓட்டலில் அறை எடுத்திருந்தான் கிருஷ்ணமூர்த்தி. மெட்ராஸ் காரர் வருவதற்காக காத்திருந்தார்கள். அடிக்கடி கிருஷ்ணமூர்த்தி தன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். நன்றாக மதிய உணவு சாப்பட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டான் செல்லமுத்து. மெட்ராஸ்காரர் வந்துவிட்டர் போலிருக்கிறது. பேச்சரவத்தில் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt; - தீபக் சார், அடுத்த ஆர்டர் எப்ப தர்ரீங்க? நெறைய குடுத்தீங்கன்னா தொழிலையே மாத்திடுவேன்.&lt;br /&gt; - ஆமாம் கிருஷ்ணமூர்த்தி. நூறு கோடி பேருக்கு சாப்பாடு போட முப்பது கோடிப் பேர் விவசாயத்துல இருந்தா போரும்னு எனக்குத் தோனுது. இப்ப எழுபது கோடிப்பேர் இருக்கீங்களே! &lt;br /&gt; - ஆமாம் ப்ஃபே சாப்பாடு மாதிரி எவளவு இருந்தாலும் வயிறு கொள்ற அளவுக்குத்தான சாப்பிட முடியும்? ஆனா தீபக் சார், ரொம்பப் பேருக்கு வேற தொழிலே தெரியாதே?&lt;br /&gt; - அங்க கூட்டம் ஜாஸ்தி. அதுனாலத் தான் அங்க லாபம் கம்மியா இருக்கு. டெக்னாலஜி முன்னேற முன்னேற நெலம இன்னும் மோசமாத் தான் போகும். அதான் கணக்க பாக்கணும். உழுதவன் கணக்குப் பாத்து எத்தன உழக்கு மிஞ்சுதுன்னு பாக்கணும். நீங்கதான் அதுல கில்லாடியாச்சே ! இந்தப் பையன் யாரு கிருஷ்ணமூர்த்தி?&lt;br /&gt;  - அது என் சித்தப்பா பையன். அவனுக்கும் தொழில் விவசாயம்தான்.. போனவாரம் வரைக்கும்.&lt;br /&gt; - இந்த வாரம் வேற வேலையா, வெரி குட். தம்பி நீ பொழைச்சுகுவ. உங்க அண்ணன் சொல்றதக் கேளு.&lt;br /&gt; - செல்லமுத்து, அவுரு என்னா புது வேலைன்னு கூட கேக்குல பாரு.&lt;br /&gt;&lt;br /&gt; செல்லமுத்து தீவிர சிந்தனை வயப்பட்டான். ரயிலடியில் அவரை வண்டியேற்றிவிட்டு கிருஷ்ணமூர்த்தி கேட்டான்.&lt;br /&gt; - இந்தா செல்லமுத்து நூறு ரூவா வச்சுக்க. அம்மா லச்சுமிக்கு எதுனாச்சும் வாங்கிட்டுப்&lt;br /&gt;போ. பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டுமா?&lt;br /&gt; - அண்ணே, மூனாம் வூட்டுக்கு போன் போட்டு அந்தப் பொடியன கூப்புடுங்கண்ணே.&lt;br /&gt; - ஏண்டா.&lt;br /&gt; - நான் வாசுவைப் பாக்க போறேண்ணே&lt;br /&gt; - அடி சக்க. மாறிட்ட போலருக்கு. லே, மேல மேலப் போறதுக்கு கும்மோணத்து வுட்டு வெளியப் போய் பாக்கணுண்டா. நீ இப்ப வாசுக்கிட்ட போ. புதன்கிழமை என்ன வந்து பாரு. &lt;br /&gt; -சரிண்ணே&lt;br /&gt;&lt;br /&gt; செல்லமுத்து அதன் பிறகு லச்சுமி கல்யாணத்துக்கு கார்காரர் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கத்தான் தன் ஊருக்குப் போனான். தன் சொந்த வாடகைக் காரில் போனான். பொகும் போதும் வரும்போதும் தன் மாமா வீட்டைக் கடக்கும் போது தானாக அவன் கை ஹாரன் ஒலி எழுப்பியது. அது சொன்னது,&lt;br /&gt;&lt;br /&gt; -ஜே கிருஷ்ணமூர்த்தி மாதிரி எனக்கு போதனை பண்ணின இந்த வீட்டு மாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!&lt;br /&gt;&lt;br /&gt;* * * * * * * * * * * * * * &lt;br /&gt;&lt;br /&gt;ஓகை நடராஜன்&lt;br /&gt;15-08-2007&lt;br /&gt;*****************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-3281591711294703093?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/3281591711294703093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=3281591711294703093' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3281591711294703093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3281591711294703093'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/08/blog-post_15.html' title='கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-2698622793836857196</id><published>2007-08-02T10:35:00.000-07:00</published><updated>2007-08-02T11:10:58.735-07:00</updated><title type='text'>காலம் சரி செய்யட்டும்</title><content type='html'>&lt;img src="http://i100.photobucket.com/albums/m17/oagai/cry.jpg"&gt;&lt;/img&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த இடம்விட்டு நகர்ந்ததும்&lt;br /&gt; என் கண்ணீர் நின்றுவிடும்&lt;br /&gt;அந்த கரையும் பறவையின் கண்ணீரை&lt;br /&gt; காலம் விரைந்து சரி செய்யட்டும்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-2698622793836857196?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/2698622793836857196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=2698622793836857196' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/2698622793836857196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/2698622793836857196'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/08/blog-post.html' title='காலம் சரி செய்யட்டும்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-3419369356057067629</id><published>2007-07-22T10:07:00.001-07:00</published><updated>2007-07-22T19:15:58.581-07:00</updated><title type='text'>புதிய குடியரசுத் தலைவர்</title><content type='html'>&lt;div align="left"&gt;      &lt;span style="font-size:130%;"&gt;    &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;புதிய குடியரசுத் தலைவர்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     குடியரசு ஆட்சிமுறையின் ஒவ்வொரு அங்கத்தையும் ரசித்து அனுபவிக்கும் எனக்கு இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் சற்று கசப்பின் ருசியைக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறது. நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு கேலிக்கூத்தாக இந்தத் தேர்தல் அரங்கேறியிருக்கிறது. விநோதமான இந்தத் தேர்தல் தோற்றவருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் சொல்லவேண்டிய வகையில் அமைந்து விட்டிருக்கிறது. நாட்டுக்கு ஒரு நல்ல மனிதர் குடியரசுத் தலவராக வரும் வாய்ப்பு நழுவிப் போனதோடு தகுதிகளில் சர்ச்சைக்குறியவர் ஒருவர் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;அப்துல் கலாம்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தான் வகித்த பதவிக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் தனது பதவிக் காலத்தை முடித்திருக்கிறார் நமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அப்துல் கலாம் அவர்கள். அலங்காரமான, அதிகாரங்கள் அற்ற ஒரு பதவியானாலும் நாட்டின் மிகப்பெரிய கௌரவத்தோடு குடியரசின் அடையாளமாகவும் விளங்கும் பதவிக்கு மேலும் கண்ணியம் சேரும் வகையில் அவர் பணி அமைந்திருந்தது. நமது இளைஞர்களுக்கு அவர் முன் மாதிரியாகவும் எவரும் பின்பற்றக்கூடியவராகவும் திகழ்ந்திருக்கிறார். இவர் இளைஞர் மனதில் இடம் பிடித்தது எப்படி என ஞானி ஆனந்தவிகடனில் வினாவொன்றை எழுப்பியிருக்கிறார். சொல்லிலும் செயலிலும் தன் உயர்வுள்ளலை வெளிப்படுத்தும் அவர் இந்திய இளைஞர்களின் இதயத்தில் ஒரு பெரிய இடம் பிடித்தது எப்படி புதிராக இருக்க முடியும்? இப்படி ஒரு தலைவருக்காக ஏங்கிய ஏராளமான மனங்களின் வெற்றிடத்தை நிரப்பியதோடு இந்திய உணர்வற்றிருந்தவர்களின் மத்தியிலும் அவ்வுணர்வையும் கூடவே தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தி தன் பணியை செவ்வனே முடித்திருக்கிறார். இவரை இவருக்குப் பின் இப்பதவியை வகிக்க இருப்பவரோடு நம்மால் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஒப்பிட்டதால் வரும் ஏமாற்றத்தையும் தவிர்க்கவும் முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;ஷெகாவத்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடியரசு துணைத் தலவராக இருந்தபோதும் அதற்கு முன்னும் சிறந்த முறையில் பணியாற்றியவர். இவரைப் பற்றிய இந்த &lt;a href="&lt;br /&gt;http://sanimoolai.blogspot.com/2007/07/blog-post_22.html" &gt;சுட்டி&lt;/a&gt; நாம் நல்ல ஒரு வாய்ப்பை இழந்துவிட்டோம் என்பதை பறைசாற்றுகிறது. அவர் தோற்றவுடன் தன் பதவி துறந்ததிலும் அதன் பின்னரான நடைமுறையிலும் கண்ணியம் பளிச்சிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;இப்போது குடியரசுத் தலைவராகத் தேர்வாகி யிருப்பவர்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகக் கூட இவர்மீது ஒரு புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டது. குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரான பின்னர் இவர் கூறிய பர்தா பற்றிய கருத்து கருத்துப்பிழை மட்டுமில்லாமல் தேவையற்றதுமாகும். மேலும் ஆவியோடு பேசுவது போன்ற கருத்துகளோ மிகுந்த அவநம்பிக்கையைத் தோற்றுவித்தது. சென்னையிலிருந்து தமது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய இவர் சென்னை வருவ்தே இதுவே முதல்முறையோ என்ற ஐயம் எனக்கு வருமளவுக்கே இவர் வெளியில் தெரிந்தவராக இருந்திருக்கிறார். ஷெகாவத் என்ற பெயருடையவரைக் கணவராக அடைந்ததும் பெண்ணாக இருப்பதுமே இவருக்கு வேட்பாளாராகும் தகுதியைக் கொடுத்திருக்கிறது. தன் களங்கத்தைத் துடைப்பதும், இப்பதவிக்குத் தகுதியானவர்தான் என்று நினைக்க வைப்பதும் இவருக்கு உடனடி கடமைகளாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;&lt;strong&gt;பெண் குடியரசுத் தலைவர்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை மிகப் பெருமையாகப் பேசப்படுகிறது. சர்வ வல்லமை படைத்த பிரதமர் பதவியை இந்திராகாந்தி வகித்த பிறகும் இப்போதும் ராஜஸ்தானிலும் உத்தரப் பிரதேசத்திலும் பெண்களே முதல்வராக இருக்கும்போது கூட, இது எப்படி ஒரு பெரிய விஷயமாக இருக்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. நம் நாட்டில் விடுதலப் போராட்ட காலத்திலும் அதற்கு முன்பான சரித்திர காலத்திலும் புராண காலத்திலும் கூட பெண்கள் பொது வாழ்விலும் அரசியலிலும் ஈடுபடுவது மற்றும் பெரும் பதவிகளை வகிப்பது அரிதான விஷயமல்ல. ஆயினும் இப்போது இந்த அளவில் கொண்டாடப் படுவது எனக்கு பெரிய வியப்பாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;&lt;strong&gt;இந்து பத்திரிக்கை தலையங்கம்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இன்றைய இந்து பத்திரிக்கையின் இவ்விஷயம் பற்றிய &lt;a href="http://www.hindu.com/2007/07/22/stories/2007072255480800.htm" &gt;தலையங்கம்&lt;/a&gt; மிகப் பெரிய ஏமாற்றம். குடியரசுத்தலைவர் பதவியைப் பற்றிய சில சட்ட நுனுக்கங்களும் எதிர்கட்சிகள் நடந்து கொண்ட முறைக்கு பெரும் கண்டனங்களுமாக அத்தலையங்கம் இருக்கிறது. தனது பிஜேபி எதிர்ப்பு நிலையை பட்டவர்த்தனமாக எப்போதும் பறைசாற்றும் இந்து இப்போதும் அதை குறைவற செய்து முடித்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;முடிவாக:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளி சுயநலமே முதல் முன்னுரிமையாகக் கொண்டு எல்லா கட்சிகளும் நடந்து கொள்வது ஏறக்குறைய நடைமுறை ஆகிவிட்டது. எந்த ஒரு பெரிய ஊழல் செய்தியோ அல்லது அரசியல்வவதிகளின் முறையற்ற செயலோ அராஜகமோ நமக்கு அதர்ச்சி ஏற்படுத்துவதில்லை. இந்தக் குடியரசுத் தலவர் தேர்தலையும் அவ்வாறே எடுத்துக் கொள்வோம். நமது அரசியலமைப்பு இதையெல்லலம் மீறி நம்மை ஒரு சிறந்த குடியரசாக வைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நாமும் பொருளாதாரத்தில் வலுவாக முன்னேறிக் கொண்டிருகிறோம். செல்வோம். மேலும் செல்வோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;********&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நடராஜன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;********&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-3419369356057067629?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/3419369356057067629/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=3419369356057067629' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3419369356057067629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3419369356057067629'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/07/blog-post.html' title='புதிய குடியரசுத் தலைவர்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-547318212204472644</id><published>2007-03-07T08:47:00.000-08:00</published><updated>2007-03-07T09:00:09.824-08:00</updated><title type='text'>மகளிர் தின வாழ்த்து</title><content type='html'>&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;இது என் ஐம்பதாவது பதிவு.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;* * *&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:130%;color:#003300;"&gt;மகளிர் தின வாழ்த்து&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:130%;color:#003300;"&gt;==================&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குப்பைத் தொட்டியே குடிகொண்ட தொட்டிலாய்&lt;br /&gt;தப்பிதப் பிறப்பால் தவிக்கும் பெண்சிசுவே,&lt;br /&gt;&lt;br /&gt;சேரியின் சகதியில் சிரித்து விளையாடி&lt;br /&gt;காரிருள் மேனியாய் மாறிய பெண்மகவே,&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிகள் உனக்கே இல்லையென் றெண்ணி&lt;br /&gt;சுள்ளிகள் பொறுக்கும் சுட்டிப் பெண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;பிஞ்சுவிரல் கொண்டு தீக்குச்சி அடுக்கும்&lt;br /&gt;அஞ்சாம் வகுப்பில் அமரும் வயதின்&lt;br /&gt;கெஞ்சும் கண்கள் கொஞ்சும் பெண்மகளே,&lt;br /&gt;&lt;br /&gt;மச்சு வீட்டில் பத்துத் தேய்க்கும்&lt;br /&gt;பத்தே பிராயப் பதுமைப் பெண்பிளாய்,&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாம் பூச்சிபோல் பறந்திடும் பருவத்தில்&lt;br /&gt;கட்டடம் கட்ட கல்தூக்கும் பெண்பிளாய்,&lt;br /&gt;&lt;br /&gt;சூட்டுத் தார்சட்டி சாலைப் பணிகளில்&lt;br /&gt;வாட்டும் பேதையாம் தாவணிப் பெண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் இருளில் இன்னொரு நிழல்தர&lt;br /&gt;மரமாய் மாறிய மாமட மடந்தையே,&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் கொய்த சிறகுகள் இழந்து&lt;br /&gt;பறக்கவும் ஏலா பரிதாபப் பெண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கொரு மகவாய் அதற்கே வாழ்வாய்&lt;br /&gt;மனத்திடம் கொள்ளும் மனிதப் பாவாய்,&lt;br /&gt;&lt;br /&gt;ஒளியறு பயணத்தில் ஒயில்ஒளித்த பெண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாமல் உழைத்து ஒயில்ஒழிந்த பெண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;அச்சறு சக்கரம் ஆடி வீழ்ந்திடும்போல்&lt;br /&gt;மக்கள் வளர்ந்ததும் அவர்வழிப் போக&lt;br /&gt;இதுவரை வாழ்வினை இழந்திட்ட பெண்ணே,&lt;br /&gt;&lt;br /&gt;நாட்களும் நீண்டு நலிந்து முதுமை&lt;br /&gt;ஆட்கொண்ட பின்னர் அயலார் தயைக்கு&lt;br /&gt;தாழ்ந்து விரிந்த கையுடை மூதாட்டி,&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்தவும் எனக்கு வார்த்தை வரவிலை&lt;br /&gt;மகளிரின் தினமாய் மார்ச்சு எட்டை!&lt;br /&gt;&lt;br /&gt;இனிவரும் தலைமுறை இவ்வகை மகளிரை&lt;br /&gt;கனவிலும் நனவிலும் காணுதல் இலமாய்&lt;br /&gt;திண்ணமாய்ச் செய்வோம் தினமும் எண்ணுவோம்,&lt;br /&gt;&lt;strong&gt;பெண்களின் கல்வியை பேணுவோம் நாமே!!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(நிலை மண்டில ஆசிரியப்பா)&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-547318212204472644?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/547318212204472644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=547318212204472644' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/547318212204472644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/547318212204472644'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/03/blog-post_07.html' title='மகளிர் தின வாழ்த்து'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-7043935345126458640</id><published>2007-03-06T09:31:00.000-08:00</published><updated>2007-03-06T09:44:28.432-08:00</updated><title type='text'>சென்னை சங்கமம்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#000066;"&gt;சென்னை சங்கமம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பல நாட்கள் நடந்த சென்னை சங்கமத்தில் திகர் நடேசன் பூங்காவில் (வழக்கமாக வலைப்பதிவர் சந்திப்பு நடக்குமே அதே இடம்தான்) நடந்த ஒரு நிகழச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருதேன். 23ம் தேதி வெள்ளிக்கிழமை. நான் சென்ற போது மாலை ஆறு மணி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமிய இசையும் அதற்கேற்ற ஆடலுடனும் கூடிய சாகச நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் பெயர் தெரியவில்லை. செண்டை தாள ஒலி படு அமர்க்களமாக இருந்தது. அம்மாதிரி நிகழ்ச்சிகள் சென்னை மக்களுக்கு மிகவும் புதிது என்றே நினைக்கிறேன். முந்தைய நாட்களில் கிராமங்களில் சிறு நகரங்களில் கோவில் திருவிழா நேரங்களிலும் பெருந்தனக்காரர்களின் வீட்டு வைபவங்களிலும் இவை அதிகமாக நடத்தப்படும். இப்போது மிகவும் அருகி விட்டது. இவற்றை மீட்டெடுத்து நகரங்களிலும் பரப்பவேண்டும் என்ற நோக்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கிராமிய நிகழ்ச்சிக்குப் பிறகு சௌமியா அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி தொடங்கியபோது கிராமிய இசையை ரசித்த மக்களில் பெரும்பான்மையினர் கலைந்து செல்வார்கள் என்று நினைத்தேன். நான் நினத்ததுபோல் நடக்கவில்லை. கூட்டம் அப்படியே இருந்தது. ஏழு மணியிலிருந்து எட்டரை மணிவரை சௌமியா பாடினார். அனைத்தும் தமிழ்ப்பாடல்கள். சில பாரதியார் பாடல்கள். இந்நிகழ்ச்சிக்காகவே சிறப்பாக தயாரித்து வந்திருந்த ஒரு பல்லவியை ராகம் தானம் பல்லவியாகப் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அறிந்தவரை சௌமியா செய்தது கர்நாடக இசை மரபுக்கு மிகவும் புதியது. "மோகன வேளையிலே வசந்த காலத்திலே நடேசன் தர்பாரிலே" என்ற பல்லவியை மோகனம், வசந்தா மற்றும் தர்பார் ராகமாளிகையாகப் பாடினார். ராகமும் தானமும் பல்லவியும் பல்லவிக்குப் பிறகு பாடிய சுரவரிசைகளும் இவ்வாறு ராக மாளிகையாகவே அமைத்து பாடினார். மிருதங்கம் வாசித்தவர் மிக அருமையாக வாசித்தார். இந்த ராகம் தானம் பல்லவி சுமார் முக்கால் மணி நேரம் பாடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு,&lt;br /&gt;வந்தே மாதரம், வந்தேமாதரம், வந்தே மாதரம்!&lt;br /&gt;என்று பாடி நிகழ்ச்சியை முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மோகன வேளையிலே வசந்த காலத்திலே நடேசன் தர்பாரிலே ஒரு இனிமையான மாலைப் பொழுது. வரவேற்கத்தக்க இந்த முயற்சி வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும். அடுத்த முறை பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-7043935345126458640?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/7043935345126458640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=7043935345126458640' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/7043935345126458640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/7043935345126458640'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/03/blog-post.html' title='சென்னை சங்கமம்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-4945558650021859675</id><published>2007-02-17T09:39:00.000-08:00</published><updated>2007-02-18T18:06:43.889-08:00</updated><title type='text'>மூவருக்கு தூக்கு.</title><content type='html'>தூக்கு தண்டனையை ஆதரித்து எழுதும் துர்பாக்கிய நிலை வந்துகொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தூக்குதண்டனை நீதி நிலைநாட்டப்பட்டதற்கான நல்லதொரு அறிகுறி. அநீதி ஏற்றுக் கொள்ளப்படுவதற்கில்லை என்ற அரசின் நிலைப்பாடு பொதுமக்களுக்குத் தரும் பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமனித விரோதத்தினாலோ அல்லது வேறு காரணங்களுக்காக தனிமனிதருக்கு இழைக்கப்படும் கொடூர செயல்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படாவிட்டால் கூட பரவாயில்லை. இங்கெல்லாம் மனிதாபிமான அடிப்படையில் தூக்கு தண்டனை வேண்டாம் என்று பரிந்துரை கூட செய்யலாம். ஆனால் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பொது வாழ்வின் நிம்மதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த குற்றத்துக்கும் உயர்ந்தபட்ச தண்டனையே வழங்கப் பட வேண்டும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்சலுக்கும் அப்படியே அதிமுகவுக்கும் அப்படியே.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-4945558650021859675?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/4945558650021859675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=4945558650021859675' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/4945558650021859675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/4945558650021859675'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/02/blog-post_17.html' title='மூவருக்கு தூக்கு.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-3547225876960879744</id><published>2007-02-13T07:06:00.000-08:00</published><updated>2007-02-08T20:11:20.823-08:00</updated><title type='text'>துயர சாகரம்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;துயர சாகரம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேன்கூட்டை நடத்துவது சாகரன் என்பவர் என்று சில மாதங்கள் முன்புதான் தெரியும். சென்ற மாத வலைப்பதிவர் சந்திப்பில் இனிப்புகளுடன் எல்லோருடனும் அறிமுகப் படுத்திக் கொண்ட சிரித்த முகம் கொண்ட அந்த இளைஞர் இன்று இல்லை என்பதை என்னால் இன்னும் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு வாரங்களுக்கு முன் எனக்கு அவர் அனுப்பிய ஒரு மின்னஞ்சலுக்கு நான் இன்னும் பதிலிடாமலே இருக்கிறேன். சென்ற ஞாயிறு அன்று காலை என்னுடன் அங்கிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏன் பதில் போடவில்லை என வினவினார். இப்போது குற்ற உணர்வில் மனம் கொதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் இனியராய் இருந்திருக்கிறார். என்னுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் சென்ற மாதத்தில் பேசினார். தேன்கூட்டுக்காக பல திட்டங்கள் வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே முறை நேர்சந்திப்பும் சில மணிநேர தொலைபேசி பேச்சுகளுமே அவருடன் உறவுகளாகக் கொண்ட எனக்குள் ஊற்றெடுக்கிறதே இத்தனை சோகம், அவர் குடும்பத்தினரின் சோகத்தை எண்ணிப் பார்க்கவே  முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யார் ஆற்றுவார் இதை? நாளே ஆற்றவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-3547225876960879744?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/3547225876960879744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=3547225876960879744' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3547225876960879744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/3547225876960879744'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/02/blog-post_13.html' title='துயர சாகரம்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-4886945289015578999</id><published>2007-02-02T09:26:00.000-08:00</published><updated>2007-02-02T09:47:25.101-08:00</updated><title type='text'>நல்ல காலம் வருகுது</title><content type='html'>நண்பர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;   இந்த பாடலைக் கேளுங்கள். மஹாகவி பாரதியின் பாடலை அவர் பேரன் ராஜ்குமார் பாரதி பாடியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=TLB4LOpWxlo"&gt;சுட்டி&lt;/a&gt;: http://www.youtube.com/watch?v=TLB4LOpWxlo&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் வரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;புதிய கோணங்கி:&lt;br /&gt;&lt;br /&gt;குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு&lt;br /&gt;நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது&lt;br /&gt;சாதிகள் சேருது சண்டைகள் குறையுது&lt;br /&gt;சொல்லடி சொல்லடி சக்தி மாகாளீ&lt;br /&gt;வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு&lt;br /&gt;&lt;br /&gt;தரித்திரம் போகுது செல்வம் வருகுது&lt;br /&gt;படிப்பு வளருது பாவம் தொலையுது&lt;br /&gt;படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்&lt;br /&gt;போவான் போவான் ஐயோவென்று போவான்&lt;br /&gt;&lt;br /&gt;வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது&lt;br /&gt;தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்&lt;br /&gt;சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது&lt;br /&gt;யந்திரம் பெருகுது தந்திரம் வளருது&lt;br /&gt;மந்திரமெல்லாம் வளருது வளருது&lt;br /&gt;&lt;br /&gt;குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு&lt;br /&gt;சொல்லடி சொல்லடி மலையாள பகவதீ&lt;br /&gt;அந்தரி வீரி சண்டிகை சூலி&lt;br /&gt;குடுகுடு குடுகுடு&lt;br /&gt; &lt;br /&gt;குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு&lt;br /&gt;சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது&lt;br /&gt;தொப்பை சுருங்குது சுருசுருப்பு விளையுது&lt;br /&gt;எட்டு லச்சுமியும் ஏறி வளருது&lt;br /&gt;பயம் தொலையுது பாவம் தொலையுது&lt;br /&gt;சாத்திரம் வளருது சாதி குறையுது&lt;br /&gt;நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது&lt;br /&gt;பழைய பைத்தியம் படீலென தெளியுது&lt;br /&gt;வீரம் வளருது மேன்மை கிடைக்குது&lt;br /&gt;சொல்லடி சக்தி மளையாள பகவதி&lt;br /&gt;தர்மம் பெருகுது தர்மம் பெருகுது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-4886945289015578999?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/4886945289015578999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=4886945289015578999' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/4886945289015578999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/4886945289015578999'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/02/blog-post.html' title='நல்ல காலம் வருகுது'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116776673265091226</id><published>2007-01-02T11:33:00.000-08:00</published><updated>2007-01-24T18:39:58.453-08:00</updated><title type='text'>திருவாதிரைத் திருநாள்</title><content type='html'>அந்த நாளும் வந்திடாதோ!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சின்னப் பையனுக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் விடுமுறை கிடைக்கும். காலையில் சுடச்சுட நெய்மணக்கும் களி கிடைக்கும். இந்தக் களிக்கு தான் எத்தனை ருசி! ஆண்டவன் இந்த களியின் ருசியைப் போல் வேறெங்கும் வைத்ததில்லை. புழுங்கலரிசியை வறுத்து, பொரியரிசி ஆக்கி, சற்றே (மிக முக்கியம்-சற்றேதான்) பொடித்து, வெல்லம் சேர்த்து, நெய்வார்த்து கிண்டியெடுத்த களியின் ருசி, ஆகா! ஒரு வருஷம் வரை அப்படியே நாவில் நிற்கிறதே!! அதனால்தானோ என்னவோ இதை திருவாதிரை அன்று மட்டும் செய்கிறார்கள்! இனி அடுத்த திருவாதிரைக்குதான் களி!&lt;br /&gt;&lt;br /&gt;திருவாதிரை என்றால் சிதம்பரம்தான் சிறப்பு. ஆனால் அந்தச் சின்னப் பையன் குடந்தையில் அல்லவா இருந்தான். அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு பெரியத் தெருவுக்கு போவான். அப்பாவுடன் வெளியில் செல்வதென்றால் அது எப்பவும் லாபம் தான். ஏதாவது ஒன்று நிச்சயம் கிடைக்கும். அன்று அங்கு அத்தனை சிவன் கோயில் சாமிகளும் புறப்பட்டு வந்து வரிசையில் பெரிய கடைத் தெருவில் நிற்கும். அப்பா ஒவ்வொரு சாமியாய் கும்பிட்டு வரும்வரை அந்த கடைத்தெருவின் அத்தனை ஆரவாரத்தையும் ஆசை தீர பருகியனுக்கு அவ்வப்போது அப்பா திருநீறு பூசி விடுவார். சில சாமிகளைப் பார்க்க அவன் இரண்டு கக்கத்து இடுக்கிலும் கை கொடுத்து தூக்கி மேலே  காண்பிப்பார். அவனும் கும்பிட்டுவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வான். அவர் இறக்கி விட்டவுடன் மறக்காமல் அப்பா கையைப் பிடித்துக் கொள்வான். அத்தனைக் கூட்டத்தில் அப்பாவை தொலைத்துவிடக் கூடாது அல்லவா!&lt;br /&gt;&lt;br /&gt;நான் தாங்க அந்த சின்னப் பையன். ஒவ்வொரு திருவாதிரை அன்றும் மனதில் இந்த படத்தை ஒட்டிப் பார்த்துவிடுவேன். இந்த முறை உங்களோடு சேர்ந்து ஓட்டிப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாதிரை அன்று சிவன் கோயில் நகையை திருடலாமா? அப்படி ஒரு கதையைப் படித்தேன். நீங்களும் படித்துப் பாருங்களேன். &lt;a href="http://www.varalaaru.com/Default.asp?articleid=197"&gt;"மாதேவடிகள் ஹாரம்"&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116776673265091226?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116776673265091226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116776673265091226' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116776673265091226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116776673265091226'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2007/01/blog-post.html' title='திருவாதிரைத் திருநாள்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116647595863887384</id><published>2006-12-18T13:01:00.000-08:00</published><updated>2007-01-10T21:17:03.760-08:00</updated><title type='text'>கப்பிப்பயல்</title><content type='html'>(அறிவியல் சார்ந்த சரித்திரச் சிறுகதை)&lt;br /&gt;&lt;br /&gt; கதிரவன் தன் தினக் கடமையைத் தொடங்கி கிழக்கை வெளுக்க வைத்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் தஞ்சை மாநகரின் மாளிகைகள் காலை வெயிலின் பொற்கிரணங்களால் ஜொலிக்கத்தொடங்கிவிடும். பெண்கள் சாணம் மெழுகிய தெருக்களில் கோலமிட தொடங்கிவிட்டார்கள். பரத கண்டத்தின் தென் பகுதியை ஒருகுடையின் கீழ் ஆண்ட மும்முடிச் சோழர் இராஜராஜரின் புகழ் உலகம் முழுவதும் பரவி கமழ்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் அவர் தன் வாழ்நாளின் லட்சியமாக பெருவுடையார் கோவிலைக் கட்டிக்கொண்டிருந்தார். ஊரெங்கும் ஒரே பேச்சாக இல்லாமல் உலகமெங்கும் இதே பேச்சாக இருந்தது. முக்கால்வாசி முடிந்திருந்த கோபுரமே விண்ணளாவ நின்றதில் தஞ்சை மக்களே தரைக்கு மேல் ஒரு அடியில் தான் நடந்து கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால் அந்தக் கோவில் நிர்மானிப்பதில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நித்த விநோத பெருந்தச்சனுக்கு அந்த காலைப் பொழுது பிரகாசமாய் இல்லை. அவன் மகன் முருகபூபதியால் அவனுக்குத்தான் எவ்வளவு தொல்லை. பத்து வயது பையன்கள் ஒவ்வொரு வீட்டிலும் இவ்வளவு குரும்பா செய்வார்கள்? இவன் ஒரு படை வேறு சேர்த்துக்கொள்கிறான். கல்தச்சன் தெரு பசங்கள் என்றால் தஞ்சையே நடுங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt; இளவெயிலும் தொடங்கிவிட்டது. அதிகாலை நகர்வலம் வரும் இராஜராஜர் பெருந்தச்சன் வீட்டு திண்ணையில் ஒரு அரை நாழிகை பெருவுடையார் கோவில் பணிகள் பற்றி விவாதித்துவிட்டு போவது வழக்கம். முக்கால் பகுதி முடிந்திருந்த கோபுர வேலைகளைத் தொடர்வதற்கு பெருந்தடையாக இருப்பது விமானத்தையும் அதைத் தாங்கும் பிரமேந்திரக் கல்லையும் மேலே ஏற்றுவதுதான். கோவில் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் இதற்கு ஒரு வழி கிடைக்காதா என்று தவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விவாதத்திலேயே பல நாட்கள் சென்று விட்டன. ஆனால் நேற்றும் இன்றும் இதைப்பற்றியே யோசிக்க முடியாமல் செய்துவிட்டான் பெருந்தச்சனின் மகன். இன்றைக்கு முருகபூபதி மீது பெருந்தச்சனின் பங்காளி வீரபத்திரனே நேரடியாக புகார் கொடுக்கப்போகிறான். 'எல்லாம் இவள் கொடுக்கிற இடம்தான். கண்டித்து ஒரு வார்த்தை சொல்லமாட்டாள். ஒரே மகன் என்றால் இப்படியா செல்லம் கொடுப்பாள். நானே கண்டிக்க வேண்டுமாம். முடிந்தால் செய்யமாட்டேனா?' என்று தாங்க மாட்டாமல் மனதுக்குள் மனைவியைக் கடிந்து புலம்பிக் கொண்டிருந்தான் பெருந்தச்சன். 'அந்த காளி கோவில் விவகாரத்திலேயே முருகபூபதி பற்றி இராஜராஜருக்குத் தெரியும். இப்போது மேலும் கோபமடையப் போகிறார். முருக பூபதியை சிறைப்பள்ளியில் சேர்க்கப் போகிறார்கள்.'&lt;br /&gt;&lt;br /&gt; சென்ற மாதத்தில் ஒரு நாள் கல்தச்சன் தெரு காளி கோவிலில் இரவில் மூல விக்கிரகத்தின் முகத்தில் சிவப்பு ஒளி வீசியது. பூசாரி பயந்து போய் ஏதோ தெய்வ குற்றமென்று சொல்லி பலி பூஜைக்கும் யாகத்திற்கும் ஏற்பாடு செய்யப்போக இராஜராஜரே நேரில் வந்து பார்த்து அந்த ஒளி மேலே ஒரு விளக்கிலிருந்து வருகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முருகபூபதிதான் ஒரு உடைந்த சிவப்புக் கண்ணாடி சில்லை அவ்விளக்கில் பொருத்தி காளியின் செம்முகத்தை அழகு பார்த்திருக்கிறான். பிறகு அதை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டான். அதைப் பார்த்து பூசாரி கலவரமடைந்து களேபாரம் செய்துவிட்டான். நல்ல வேளையாக பெருந்தச்சனுக்கு தண்டனையோ அபராதமோ இல்லாமல் எச்சரிக்கையோடு விட்டுவிட்டார் இராஜராஜர். ஆனால் இப்போது என்ன செய்யப்போகிராரோ என்ற கவலையில் பெருந்தச்சன் உழன்று கொண்டிருந்தான். அதோ முன்புரவி காவல் வீரர்கள் ஆடி அசைந்து வந்து கொண்டிருகிறார்கள்! பின்னால் ஒரு கருஞ்சிவப்பு அரபுக்குதிரையில் ஆரோகனித்து வந்து கொண்டிருக்கிறார் இராஜராஜர்.&lt;br /&gt;&lt;br /&gt; வேறுபுறமிருந்து பவ்வியமாக வந்த வீரபத்திரன் பெருந்தச்சனுக்கு வணக்கம் சொன்னான். கொடுக்கப்போவது அவன் மகன் மீது புகார் என்றாலும் பணிவில் குறைவைக்கவில்லை. பெருந்தச்சனும் தலையை ஆட்டிவைத்தான். இராஜராஜர் திண்ணையில் அமர்ந்ததுமே பெருங்கற்களை மேலே ஏற்றுவதைப் பற்றித்தான் விசாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; "என்ன பெருந்தச்சரே, ஏதாவது வழி தோன்றியதா?"&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே, வழி கிடைக்காமல் போகாது. ஆனால் இன்னும் ஏதும் கிடைக்கவில்லை".&lt;br /&gt;&lt;br /&gt; "அது யார் வீரபத்திரரா? இவர் உனது பங்காளி அல்லவா, உங்கள் கோவில்  திருப்பணி எந்த அளவில் இருக்கிறது வீரபத்திரரே, குடமுழுக்குக்கு நாள் குறித்துவிடலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt; "அப்படியே செய்யலாம் ஐயனே. எல்லா பணிகளும் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன. அப்புறம் ஐயனே, எனக்கொரு புகார் இருக்கிறது. சிரமம் பாராது இப்பவே விசாரிக்க வேணும்".&lt;br /&gt;&lt;br /&gt; "யார் மீது புகார் வீரபத்திரரே?"&lt;br /&gt;&lt;br /&gt; "பெருந்தச்சனின் அருமை மகன் முருகபூபதி மேல் தான் ஐயனே. காளி கோயிலில் அவன் செய்ததுதான் உங்களுக்குத் தெரியுமே".&lt;br /&gt;&lt;br /&gt; "அப்போது மன்னித்து விட்டுவிட்டேனே! இப்போது என்ன செய்தான்?"&lt;br /&gt;&lt;br /&gt; "கல்தச்சன் தெருவிலிருக்கும் அத்தனை கிணற்றுக் கப்பிகளையும் எடுத்து வந்துவிட்டான். என் மனையாளோ நேராக குடந்தைவிட்டு கிணற்றில் தண்ணீர் மோந்ததில் குடத்தை நசுங்கிவிட்டாள். என் தாயார் அவளைப் போட்டு வறுத்தெடுக்கிறாள். எல்லாவற்றுக்கும் இந்த சிறுவனும் அவன் கூட்டாளிகளும் தான் காரணம். அதில் என் மகனும் உண்டு ஐயனே!"&lt;br /&gt;&lt;br /&gt; "தச்சரே, மகனைக் கண்டிக்க மாட்டீரா?"&lt;br /&gt;&lt;br /&gt; "ஒரே மகன். அதான் அவன் தாய் ரொம்ப செல்லம் கொடுத்துவிட்டாள்."&lt;br /&gt;&lt;br /&gt; "நீர் கண்டிக்க வேண்டியதுதானே!"&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே, நீங்கள்தான் அவனைக் கேட்க வேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt; "அவன் பாடசாலை ஆசிரியர்களிடம் சொல்லிவிடுங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt; "பயனில்லை ஐயனே! அவன் பாடசாலையில் பரம சாது. படிப்பில் படு சுட்டி. எல்லா ஆசிரியர்களும் அவன் பக்கம்."&lt;br /&gt;&lt;br /&gt; "விநோதமான பிள்ளையைத்தான் பெற்றுவைத்திருக்கிறீர். நித்த விநோத பட்டத்தை அவனுக்குத்தான் தரவேண்டும். சரி அவனை கூப்பிடுங்கள். நான் விசாரிக்கிறேன்." தந்தை அழைத்ததும் தயங்கித் தயங்கி அங்கு வந்தான் முருக பூபதி. இராஜராஜர் விசாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; "உன் தந்தையின் நற்பெயரைக் கெடுத்துவிடுவாய் போலிருக்கிறதே! இந்தப் புகாருக்கு என்ன சொல்கிறாய்?"&lt;br /&gt;&lt;br /&gt; "............."&lt;br /&gt;&lt;br /&gt; "பேசாமல் நிற்கிறாயே...... முருகபூபதி அழகான பெயர். அந்த முருகன் செய்த குறும்பெல்லாம் எல்லாரையும் மகிழ்வித்தன. நீ ஏன் எல்லோருக்கும் தொல்லை கொடுக்கிறாய்? பயப்படாமல் பதில் சொல்."&lt;br /&gt;&lt;br /&gt; "கல்யாணத்துக்கு முன் வள்ளியைக் கேட்டிருந்தால் முருகனைப் பற்றி அப்படி சொல்லியிருக்கமாட்டள் ஐயனே! எங்கள் குலதெய்வம் திருவேரகத்து (சுவாமிமலை) சாமிநாதன். அதனால் தான் முருகன் என்று என் பெற்றோர் பெயரிட்டனர்."&lt;br /&gt;&lt;br /&gt; "அப்படியானால் அந்தப் பெயரிலா கோளாறு?"&lt;br /&gt;&lt;br /&gt; "நீங்கள் வேண்டுமானால் தச்சேந்திரன் என்று அழைக்கலாம் ஐயனே!"&lt;br /&gt;&lt;br /&gt; "ஏன் அந்தப் பெயர்."&lt;br /&gt;&lt;br /&gt; "என் தந்தையை நீங்கள் தச்சராஜன் என்று அழைப்பதுண்டு அல்லவா?"&lt;br /&gt;&lt;br /&gt; "ஆஹா! இராஜராஜனின் மகன் இராஜேந்திரன் என்றால் தச்சராஜனின் மகன் தச்சேந்திரன்! பயலே, நான் உன்னிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறேன். அரட்டை அல்ல. உனக்கு எதற்கு அத்தனை கப்பிகள்?"&lt;br /&gt;&lt;br /&gt; "பிரம்மேந்திரக் கல்லையும் விமானக் கல்லையும் மேலே தூக்க ஒரு வழி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன், ஐயனே!"&lt;br /&gt;&lt;br /&gt; "தம்பி, பிரமேந்திரக் கல் ஒவ்வொன்றையும்  அசைப்பதற்கே ஐம்பது பேர் வேண்டும். தெரியுமில்லையா உனக்கு. விமானக் கல் பகுதிகளும் ஒவ்வொன்றும் அதைப்போலத்தான். அது தெரியுமா உனக்கு. கப்பிகளெல்லாம் சிறு கற்களுக்குத்தான். நீ சிறு பையனாய் லட்சணமாய் கிட்டிப் புள்ளோ சடுகுடுவோ விளையாடு. அல்லது மல்யுத்தம் கற்றுக் கொள். உன் உடம்புக்குத் தோதாக இருக்கும்."&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே அரண்மனைக் கிணற்றுக் கப்பிகளைப் போல் பெரிய கப்பிகள் ஒரு ஐம்பது வேண்டும். நான் இவர்களை தொந்தரவு செய்யமாட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt; "அத்துடன் பெரிய வடங்களும் உனக்குத் தேவைப் படுமே! செயல்தலைவரே, இந்தப் பையனுக்கு  ஐம்பது பெருங்கப்பிகளும் வேண்டுமளவுக்கு வடங்களும் கொடுங்கள். வார்ப்பு சாலைக்கு அவனை அழைத்து செல்லுங்கள். அவனே தேர்தெடுக்கட்டும். அதன் விலையை பெருந்தச்சனின் ஊதியத்தில் பிடித்தம் செய்து விடுங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே!" என்று அலறினான் பெருந்தச்சன்.&lt;br /&gt;&lt;br /&gt; "சரி, பெருந்தச்சன் நமக்கு நெருங்கியவர். அதனால் பாதிவிலையில் கொடுங்கள். தச்சரே, நேரமாகிவிட்டது முற்பகலில் பெருவுடையார் ஆலயத்தில் சந்திப்போம்." என்று சொல்லி அந்த திண்ணைக் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் இராஜராஜர். அவர்கள் சென்றபின் தன் பிள்ளையிடம் கேட்டான் பெருந்தச்சன்,&lt;br /&gt;&lt;br /&gt; "முருகா, என்னாடா என் மூன்று மாத ஊதியத்திற்கே உலை வைத்துவிட்டாய்? செயல்தலைவரிடம் கப்பிகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மல்யுத்த பயிற்சியில் சேர்ந்துவிடு."&lt;br /&gt;&lt;br /&gt; "அப்பா,  காளி கோயில் தேரை இந்த கிணற்றுக் கப்பிகளின் உதவியால் நான் ஒருவனாகவே அசைத்துப் பார்த்தேன். அதை அசைக்கப் பத்துப்பேராவது வேண்டுமல்லவா? என்னிடம் ஒரு வழி இருக்கிறது. முயற்சிக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். ஊதியம் பறிபோகாது. வெகுமதி விரைந்தோடிவரும்".&lt;br /&gt;&lt;br /&gt; "ஏண்டா நீ பாட்டுக்கு ஏதேதோ செய்கிறாய். தலையாரி யாரும் கேட்பதில்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt; "உங்களிடம் சொல்லி அரசரிடம் சொல்லிவிடுவேன் என்றால் எந்த  தலையாரி என்னைக் கேட்பான்? அப்பா உங்களுக்கு இதெல்லாம் புரியாதப்பா?"&lt;br /&gt;&lt;br /&gt; "அடேய்" என்று கத்திய தந்தை சொல்லைக் கேட்க ஆளில்லாமல் துள்ளி ஓடி வெளியேறினான் முருகபூபதி. இரண்டு நட்களுக்கு அவனைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* * * * * * &lt;br /&gt;&lt;br /&gt; பெருவுடையாரின் ஆலயத்தை கல்லுளிகளின் சப்த ஜாலம் நிறைத்திருந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இளங்காலை வெயிலும் கருணைக்காட்டாமல் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. கிழக்குச் சுற்றுச் சுவரின் ஓரத்தில் ஒரு வெண்துகில் பந்தலுக்கடியில் ஒரு இராஜமாது வீற்றிருந்தாள். அவள் அணிந்திருந்த வெள்ளுடையும் முகப்பிரகாசமும் அந்த பகுதியையே ஒளிமயமாக்கிக் கொண்டிருந்தது. பணிப்பெண்கள் பின்புறமும் வேலையாட்கள் முன்னே பணிந்தும் அவள் கட்டளைகளைக் கேட்கத் தயாராக இருந்தார்கள். அவர்தான் சோழ நாட்டு மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் மாதரசி, இராஜராஜனின் அருமைத் தமக்கை குந்தவை நாச்சியார். கண்டவர் எவரும் அனிச்சையாய் கையெடுத்து கும்பிட்டுவிடும் அறிவுக்களை சொட்டும் முகவிலாசம் பொருந்திய குந்தவை நாச்சியாரிடம் சற்று பதட்டத்துடன் வந்து நின்றார் ஒரு பகுதியின் தலைமை தச்சர்.&lt;br /&gt;&lt;br /&gt; "மாண்புமிகு பேரரசி, என்னை மன்னிக்கவேண்டும். ஒரு தவறு நடந்திருக்கிறது".&lt;br /&gt;&lt;br /&gt; "கந்தமூர்த்தித் தச்சரே என்ன கலக்கம் உங்களுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt; "முன்மண்டப தெற்கு வாயிலின் முகப்புத் தூண்களுக்கான ஒரு பெரிய கல் காணவில்லை. அதிலிருந்து நான்கு தூண்கள் செய்யத் திட்டமிட்டிருந்தேன். நேற்று அதில் குறியீடெல்லாம் செதுக்கி வைத்துவிட்டுத்தான் போனேன். இன்று காலையில் மாயமாய் மறைந்திருக்கிறது. இரவுக் காவலுக்கு இருந்தவன் ஏதும் சொல்லாமல் காலையில் வீடு சென்றுவிட்டான். அவனுக்குத்தான் ஆள் அனுப்பியிருக்கிறேன்".&lt;br /&gt;&lt;br /&gt; "என்ன சொல்கிறீர்கள் கந்தமூர்த்தி, கொடும்பாளூரிலிருந்து இரண்டு யானைகள் இழுத்து வந்த அத்தனை பெரிய கல்லுக்கு எந்த கள்வன் தஞ்சைக் கோயிலுக்குள் வரப் போகிறான்?"&lt;br /&gt;&lt;br /&gt; "பேரரசி, அக்கல்லை அசைக்கவே இருபது வேலையாட்கள் வேண்டும். ஆனால் மாயமாய் மறைந்துவிட்டது".&lt;br /&gt;&lt;br /&gt; "எங்கே, இராக்காவலில் இருந்த யாருமே இப்போது இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt; "அனைவரும் மாலையில்தான் வருவார்கள். வளர்பிறை முழு ஒளியில் பாட்டும் கூத்துமாகத் தான் நேற்றும் இராக்காவலர்கள் இருந்திருக்க வேண்டும். அரை நாழிகையில் உங்களிடம் மீண்டும் வந்து தகவல் சொல்கிறேன். குஞ்சர மல்லரிடமும் சொல்லியிருக்கிறேன். பெருந்தச்சர் இன்னும் ஆலயத்திற்கு வரவில்லை".&lt;br /&gt;&lt;br /&gt; கந்தமூர்த்தி சென்று விட்ட சற்று நேரத்தில் அங்கு வந்தார் இராஜராஜர். கூடவே பட்டொளி வீசும் புத்தம் புதுமலராக ஒரு கரும் புரவியிலிருந்து குதித்து இறங்கினாள் இராஜராஜனின் அருமைப்புதல்வி சின்ன குந்தவை. பதினாறு பிராயத்திலிருந்த கட்டிளங்குமரி அங்கு வந்து அப்பகுதியை ஒரு மாயாலோகமாக் மாற்றிவிட்டாள். ஓடிச் சென்று தன் அத்தை குந்தவை நாச்சியாரிடம் அடைக்கலமானாள். இராஜராஜரும் அந்தப் பந்தலிலேயே இன்னொரு இருக்கையில் அமர்ந்தார். கந்தமூர்த்தி தச்சன் மீண்டும் வந்து கல் இன்னும் கிடைக்கவில்லை என்று சேதி சொன்னான். இராஜராஜன் அவனைக் கேட்டார்,&lt;br /&gt;&lt;br /&gt; "தச்சரே, இராக்கவலரை அனைத்துவர ஆளனுப்பினீர் அல்லவா, யார் வந்தாலும் என்னிடம் உடனே அழைத்து வாருங்கள்". என்று கூறிய போது அங்கு வந்தான் பெருந்தச்சன்.&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே, தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும். என் அருமை மகன் இரவு வீட்டுக்கே வரவில்லை. அதான் தேடிக்கொண்டிருந்தேன், சற்று தாமதமாகிவிட்டது".&lt;br /&gt;&lt;br /&gt; "கந்தமூர்த்தி தச்சரே, சற்று நில்லும். நீங்கள் தேடும் கல் இருக்குமிடம் எனக்குத் தெரிந்துவிட்டது. பெருந்தச்சரே மகன் வந்துவிட்டானா, இல்லையா? காலையில் உங்கள் இல்லத்துக்கு வந்த போதுகூட இது பற்றி சொல்லவே இல்லையே!"&lt;br /&gt;&lt;br /&gt; "இல்லை ஐயனே, இன்னும் வரவில்லை. நேற்று தட்டாங்குடி கோயிலில் கூத்துப் பார்க்க போகிறேன், நள்ளிரவு அல்லது வெள்ளென வருவேன் என்று சொல்லிவிட்டு போனான். அவனும் வரவில்லை. அவன் கூட்டாளிகளும் வரவில்லை. அதான் ஊர் பூராவும் தேடிக்களைத்து இங்கு வந்தேன்".&lt;br /&gt;&lt;br /&gt; "பெருவுடையார் கோவிலில் தேடினார்களா?"&lt;br /&gt;&lt;br /&gt; "இல்லை ஐயனே".&lt;br /&gt;&lt;br /&gt; "கந்தமூர்த்தி தச்சரே, அந்த பெருங்கல்லை தரையில் தேடி பயனில்லை. ஆகாசத்தில் தேடுங்கள். உடனே கிடைக்கும். பெருந்தச்சரே கோவிலை ஒரு வலம் வாருங்கள். உங்கள் மகனுடன் வருவீர்கள்". பெருந்தச்சன் உடனே வெளியேறினான். கந்தமூர்த்தி கேட்டான்,&lt;br /&gt;&lt;br /&gt;  "ஐயனே ஆகாசமென்றால்...."&lt;br /&gt;&lt;br /&gt; "அட, சற்று அண்ணாந்துதான் பாருங்கள் தச்சரே, அதோ பாருங்கள் கோபுரத்தின் பின்புறத்தில் ஒரு கயறு தொங்குவதை. அதன் மறு நுனியில் பாருங்கள்".&lt;br /&gt;&lt;br /&gt; "ஆம் ஐயனே கல்லை நகர்த்தி இழுத்துச் சென்ற தடம் மேற்கு நோக்கி சென்றிருக்கிறதை நான் கண்டேன். இதோ போகிறேன்".&lt;br /&gt;&lt;br /&gt; குந்தவை நாச்சியார் தம்பியிடம் கேட்டார்,&lt;br /&gt;&lt;br /&gt; "தம்பி நீ சொன்னாயே அந்த பையனா செய்திருக்கிறான்".&lt;br /&gt;&lt;br /&gt; "அவன் , அவன் தெருவில் உள்ள காளி கோயில் தேரை கிணற்றுக் கப்பிகளால் சற்று நகர்த்தியதை காவலர்கள் ஊர்க்காவல் தலைவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.  அப்போதிருந்தே கண்காணிக்கச் சொன்னேன். நேற்றைய தகவல் மட்டும் இன்னும் எனக்கு வரவில்லை".&lt;br /&gt;&lt;br /&gt; "தம்பி இந்த தச்சேந்திரன் இராஜேந்திரனுக்கும் ஒரு பெரிய கோவிலைக் கட்டித்தருவான் பாரேன்". என்று சொன்ன குந்தவை நாச்சியாரிடம் சின்ன குந்தவை சொன்னாள்,&lt;br /&gt;&lt;br /&gt; "அத்தை அந்த பையனை உடனே பார்க்கவேண்டும். அரண்மனைக்குக் கூட்டிப்போகவேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt; "பொறு குந்தவை, பெருந்தச்சன் அவனைக் கண்டுபிடித்து அழைத்து வரட்டும். உன்னப்பன் அவனை விசாரிக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்".&lt;br /&gt;&lt;br /&gt;* * * * * *&lt;br /&gt;&lt;br /&gt; கந்தமூர்த்தி கோபுரத்தின் மேற்கில் நின்று அண்ணாந்து பார்த்தான். உச்சியில் கழிகளும் கயிறுகளும் பலகை சாரங்களுமாய் இருந்தது. 200 அடி உயரத்தில் சிறியதாய் ஒரு கல் தொங்கலிடப்பட்டு கோபுரப் பக்கத்தினுடன் அணைத்துக் கட்டப்பட்டிருந்தது. ஆகா! அதே கல்தான்! எத்தனை சிறிதாக தெரிகிறது! எப்படி மேலே போயிற்று? ஆட்களை மேலே ஏறச் சொல்லி உறுதிப் படுத்தச் சொன்னான். அவர்கள் சொன்ன செய்தி அவனுக்கு பெரும் வியப்பாக இருந்தது. ஏராளமான் கப்பிகள் கோத்து வாங்கப்பட்டு கயிற்று வடங்களின் பின்னலில் குழப்பக் காடாக இந்தக்கல்லும் பிணைக்கப்பட்டிருந்தது. அதை அவிழ்ப்பதற்குக் கூட இதைப் பின்னியவன்தான் வரவேண்டும். இதைக் கேட்டதும் கந்தமூர்த்தி தச்சன் ஓட்டமும் நடையுமாக அரசரிடம் விரைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; கோவிலின் வடபுற மண்டபமொன்றில் படுத்து தூங்கிய மூன்று சிறுவர்களையும் தன் மகனையும் அசைத்து எழுப்பிய பெருந்தச்சன் தன் மகனிடம் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt; " கூத்துக்குப் போகிறேன் என்று சொல்லி இங்கே ஏன் வந்தீர்கள். அங்கே உங்கள் ஆயிகள் காளி ஆட்டம் ஆடுகிறார்கள், பெற்றவர்கள் உயிரை ஏனடா இப்படி எடுக்கிறீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt; "அப்பா முன் மண்டபத்தின் தெற்கில் இருந்த ஒரு பெரிய கல்லை பல கப்பிகளை இணைத்து நாங்களே கோபுரத்தின் மேலே ஏற்றிவிட்டோம். இராக் காவலர்கள் எல்லோரும் உதவினார்கள். மேற்கே போய் பாருங்களேன்", என்றான் படு ஆர்வத்துடன். பெருந்தச்சனுக்கு கண்கள் சிவந்தன.&lt;br /&gt;&lt;br /&gt; "அடேய், என்ன காரியம் செய்தாய். எத்தனை பேர் உயிருக்கு உலை வைக்கப்பார்த்தாய்? கோபுரத்தில் கல் விழுந்து சேதமானால் அபசகுனமடா படுபாவி". கோபத்தின் குன்றேறி நின்றான் பெருந்தச்சன். மீண்டும் அவனே பொறுமினான்,&lt;br /&gt;&lt;br /&gt; "வா வா, அரசரிடம் சொல்லி உடனே சிறைப்பள்ளிக்கு உன்னை அனுப்பிவிடுகிறேன். நீங்களும் வாங்கடா." என்று சொல்லி அவன் புஜத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு  இராஜராஜன் இருக்கும் பந்தலுக்கு வந்தான். அங்கு முன்பே கந்தமூர்த்தி வந்து விவரத்தைச் சொல்லியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; "பெருந்தச்சரே அவனை விடுங்கள்", கர்ஜித்தார் இராஜராஜர்.&lt;br /&gt;&lt;br /&gt; சின்ன குந்தவையின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்து போயிருந்தன. முருகபூபதியை கண்களால் அளந்தாள். நான்கடி உயரம். சற்றே பருத்த தேகம். சுருட்டைத் தலையில் ஒரு பின் கொண்டை. குருவிக்கூட்டைப் போல் தொங்கியது. உடல் முழுதும் கேசத்திலும் மண்ணும் புழுதியும். அவனுடைய இளங்கருப்பு மேனியில் அங்கங்கே காயங்கள் அடைக்கலமாயிருந்தன. இடையில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்தான். உயரம் குறைந்த அந்த பழுப்பு நிறத் துண்டை இடுப்பில் கட்டி இருகாலுக்கும் இடையில் இட்டு பின்புறம் சொருகியிருந்தான்.  வலதுகால்  பெருவிரலில் நகம் பெயர்ந்து இரத்தம் உறைந்திருந்தது. தூங்கி எழுந்து வந்த நிலையிலும் அவன் கண்கள் துறுதுறுவென அலைந்து கொண்டிருந்தது. அலைந்த கண்களில் சின்ன குந்தவை பட்டபோது அவள் முறுவலித்தாள். முருக பூபதிக்கு சூழலின் கணத்தை அந்த முறுவல் நீக்கியது. சற்று தயங்கிய முருகபூபதி தன் மண்டை மண்டையான வெண்பற்கள் தெரிய பளீரென சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; இராஜராஜர் பொய்யான கடுங்குரலில் கூறத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt; "முருக பூபதி, நீ செய்தது உனக்கு சரியெனப்படுகிறதா? உனக்கு கப்பிகள் கொடுத்தது எவ்வளவு தவறு, ஏகப்பட்ட நாசத்தை விளைவித்திருப்பாய் போலிருக்கிறதே. நல்லவேளையாக பெருவுடையான் அருளால் ஒன்றும் அசம்பாவிதம் நிகழவில்லை. உன்னை சிறைக்கு அனுப்புவதாக முடிவு செய்திருக்கிறேன்".&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே, என் பாக்கியம். அங்கேயும் எனக்கு நான் வேண்டியதைத் தந்து அருளவேண்டும்".&lt;br /&gt;&lt;br /&gt; "வழக்கம்போல் உன் தந்தையின் ஊதியத்தில் பிடித்தம் செய்யவேண்டும்", என்றார் இராஜராஜர்.&lt;br /&gt;&lt;br /&gt; "ஐயனே!" என்று அலறிய பெருந்தச்சன் "இவனை பாதாளச் சிறைக்கே அனுப்பிவிடுங்கள்" என்று கூவினான்.&lt;br /&gt;&lt;br /&gt; "தம்பி முருக பூபதி, இதை எப்படி சாதித்தாய்?" என அன்பொழுக வினவினார் குந்தவை நாச்சியார்.&lt;br /&gt;&lt;br /&gt; "அம்மையே, பீமனுக்கு சாதாரணமாகவே பத்து ஆள் பலம். அதாவது ஒரு ஆளுக்குள் பத்து ஆட்கள் ஒளிந்து கொண்டிருப்பதைப் போல. ஆளுக்குள் ஆட்கள். அது போல கப்பிக்குள் கப்பிகள் என்று யோசித்தேன். பரிசோதிதேன். "&lt;br /&gt;&lt;br /&gt; "அபசகுனமாய் ஏதாவது நடந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?"&lt;br /&gt;&lt;br /&gt; "அம்மையே, ஆறு வடங்கள் அந்தக் கல்லை தரைக்குமேல் தூக்கிவிட்ட பிறகு மேலும் ஆறு வடங்களை சேர்த்துவிட்டேன். அத்தனை இராக் காவலர்களியும் உயிர்காத்து ஓடும் வழியை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளச் சொன்னேன். மேலே வடங்களை எந்த முளையிலும் கட்டாமல் கோபுரம் முழுவதையும் சுற்றிக் கட்டிவிட்டேன். ஆறு வடங்கள் போதுமான எடைக்கு பன்னிரெண்டு வடங்களால் படிமுடிச்சு போட்டார்கள் இராக்காவலர்கள். கல், கயிறு அறுந்தோ அல்லது முடிச்சு அவிழ்ந்தோ விழ வாய்ப்பில்லை. கல்லின் எடை சாய்க்க வேண்டுமானால் கோபுரத்தையே சாய்க்கவேண்டும். அது இந்த யுகத்தில் நிகழப் போவதில்லை. அப்புறம் எல்லாவற்றுக்கும் மேலே இருக்கவே இருக்கிறான் என்னப்பன் திருவேரகத்து சாமிநாதன். அம்மையே நான் ஏதும் தவறு செய்திருக்கிறேனா?"&lt;br /&gt;&lt;br /&gt; "இராஜராஜா, குஞ்சர மல்லரே, பெருந்தச்சரே, என்ன சொல்கிறீர்கள்? பையனுக்கு பாதாள சிறையா அல்லது பதக்கமும் பட்டமுமா?" என்று கேட்டார் குந்தவை நாச்சியார்.&lt;br /&gt;&lt;br /&gt; "பட்டம் கொடுத்துவிடலாம்", கத்தினாள் சின்ன குந்தவை, " அப்பா, அவன் 'கப்பிப்பயல்!'"&lt;br /&gt;&lt;br /&gt;* * * * * * * * * * * * * * * * *&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு:&lt;br /&gt;1. கப்பி (pully) - கிணறுகளில் உபயோகப் படுவது நிலைக்கப்பி. பளு தூக்கிகளில் பயன்படுவது இயங்கு கப்பி . இக்கதையில் இயங்கு கப்பியின் பயன்பாடு முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டதைப் போல் எழுதியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2. இத்தனை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆறே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. பெரிய கோவிலைப் பற்றிய எல்லா ஆச்சரியங்களையும் விட இது பெரிய ஆச்சரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. பெரிய கோவிலைப் பற்றி ஏராளமான தகவல்கள் இணையத்தில் இருக்கின்றன. நாம் அறிந்த மூவரின் சுட்டிகள்.&lt;br /&gt;   &lt;br /&gt;     &lt;a href="http://www.desikan.com/blogcms/?item=94&amp;category=Desikan"&gt;தேசிகன்&lt;/a&gt;&lt;br /&gt;     &lt;a href="http://pavithra.blogdrive.com/archive/cm-05_cy-2004_m-05_d-02_y-2004_o-0.html"&gt;பவித்ரா ஸ்ரீனிவாசன்&lt;/a&gt;&lt;br /&gt;     &lt;a href="http://www.varalaaru.com/Default.asp?articleid=352"&gt;லலிதாராம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116647595863887384?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116647595863887384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116647595863887384' title='48 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116647595863887384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116647595863887384'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/12/blog-post_19.html' title='கப்பிப்பயல்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>48</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116515474381781670</id><published>2006-12-03T05:58:00.000-08:00</published><updated>2007-01-03T02:21:52.803-08:00</updated><title type='text'>மதயானை</title><content type='html'>மதயானை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/yaanai/Elephant.gif" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மத யானை மிக வேகத்தில் ஓடியதை எனக்கு படம் பிடித்துக் காட்டியவர் அமரர் கல்கி. அதற்குப் பின் வலைப்பதிவர் பொன்ஸ். அவருடைய ஓடும் யானைப் படத்தை பாராட்டி எழுத வேண்டுமென்று வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது அவருடைய நட்சத்திர வாரம் நிறைவடையும் நேரத்தில் எழுதி விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வன் ஒரு மிகப் பிரமாண்டமான புதினம்.அது சொல்லும் செய்திகள் ஒவ்வொரு துறையிலும் ஏராளம் ஏராளம் ஏராளம். நான்காண்டுகளுக்கு முன் ஒரு மதன் பதிலில் உலகின் மிகச் சிறந்த நாவலென்று அதைச் சொல்ல, கமலஹாசனும் அதையே சொல்ல, நான் மதிக்கும் இரண்டு பெரிய ரசிக மணிகள் இவ்வாறு சொல்லவே, அதைத்தேடிப் பிடித்து ஒரே மூச்சில் அத்தனை பாகங்களையும் படித்து, வெகுவாய் லயித்து போய் மீண்டும் மீண்டும் நான்கு முறைக்கு மேல அத்தனை பாகங்களையும் படித்து படித்து, அதன் பிறகு கூகிளில் தேடி பொன்னியின் செல்வன் இணைய மடற்குழுவில் இணைந்து, கிருபா சங்கர் கொடுத்த ஒரு சுட்டியினால் மீனாக்ஸ் எழுதிய பொன்னியின் செல்வன் தீம் பார்க் பற்றிய ஒரு அறிவியல் புனை கதையைப் படித்து, மரத்தடியில் சேர்ந்து, எழுத்து வாசனை பெற்று, இன்று நானும் ஒரு வலைப்பதிவர் என்பதில் அந்த மதயானைக்கு ஒரு பங்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதினத்தில் இரண்டு முறை கல்கி மதயானை ஓட்டத்தை விவரித்திருப்பார். யானைமொழி தெரிந்த அருமொழிவர்மன் யானையை மதம் பிடித்தது போல் நடிக்கச் சொல்லி அதிவேக யானையோட்ட உதவியால் தப்பிச் செல்வார். இதில் முதல் ஓட்டம் மிக சுவராஸ்யமானது. பூங்குழலியுடன் வட இலங்கையில் யானை இறவுத் துறைவரை அவர்கள் செய்யும் பயணம் என் மனதில் படம் போல் பதிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்ஸின் படம் எனக்கு இக்காட்சியை மீண்டும் மீண்டும் புதிது படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் யானை ஒரு இளநகையின் தொடக்கத்திலிருக்கிறது.&lt;br /&gt;தொடக்கத்துடன் அது உறைந்து போயிருக்கிறது.&lt;br /&gt;கண்களில் மின்னிடும் குறும்பு அதை உறுதி செய்கிறது.&lt;br /&gt;மதம் பிடித்தது போல நடிக்கும் யானைக்கு மட்டும்தானே இவை இருக்கும்?&lt;br /&gt;முதன் முறை மேடையேறும் சிலர் சிரித்துக் கொண்டே இருப்பதைப் போல! வனமேடையில் நடிக்கும் யானையின் மனமேடைச் சிரிப்பு.&lt;br /&gt;சோர்வின் சுமைகூட அல்ல, சுமையின் வலிதெரியா உற்சாக ஓட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வன் பொம்மை படமாவது யாராவது எடுக்கும் வரை பொன்ஸின் செல்வம் என் நினைவிலிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக நன்றி பொன்ஸ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116515474381781670?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116515474381781670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116515474381781670' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116515474381781670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116515474381781670'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/12/blog-post.html' title='மதயானை'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116464527415055867</id><published>2006-11-27T08:31:00.000-08:00</published><updated>2006-11-29T22:52:42.093-08:00</updated><title type='text'>மதங்களைக் கண்டு பயப்படாதீர்கள்</title><content type='html'>கத்திகள் கொலைகளைச் செய்கின்றன&lt;br /&gt;ஆனாலும் எனக்கு &lt;br /&gt;கத்திகளைக் கண்டு பயமில்லை.&lt;br /&gt;கொலைகளைக் கண்டு மட்டுமே.&lt;br /&gt;கத்திகள் இல்லாமல் சமையலே இல்லை&lt;br /&gt;ஒவ்வொரு வீட்டிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில கத்திகள் தெருக்களில் &lt;br /&gt;கொலைகளை செய்யும் நேரத்தில்&lt;br /&gt;நம் எல்லோருடைய வீட்டிலும்&lt;br /&gt;அவை சமையல் செய்துகொண்டிருக்கின்றன&lt;br /&gt;அமைதியாக&lt;br /&gt;மிக அமைதியாக.&lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கிலும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116464527415055867?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116464527415055867/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116464527415055867' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116464527415055867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116464527415055867'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_27.html' title='மதங்களைக் கண்டு பயப்படாதீர்கள்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116434986994529257</id><published>2006-11-23T22:29:00.000-08:00</published><updated>2007-01-11T04:51:51.846-08:00</updated><title type='text'>ஐம்பது சதவிகித எச்சில்</title><content type='html'>&lt;a href="http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_23.html"&gt;இந்தப்&lt;/a&gt; பதிவில் மூன்று சதவிகிதத்தின் எச்சிலைப் பற்றிய கதையும் கவிதையும் மிக உணர்ச்சிகரமாகப் பதியப்பட்டிருக்கிறது. இது தொடர்பான பெரும்பாலான பதிவுகள் உடனடியாக உணர்வைத் தொடும் வகையிலேயே எழுதப்படுகின்றன. பெரும்பாலும் அவை அறிவைத் தொடுவதில்லை என்பது என் அனுமானம். ஒரு பதினைந்து சதவீதத்தின் மேல் இருக்கும் பரிவாக இவற்றைக் கொள்வதா அல்லது மூன்றின் மேலிருக்கும் வெறுப்பாக இவற்றைக் கொள்வதா? என் கருத்துகளைப் பதிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    மூன்றைப் பொருத்தவரை பல நேரங்களில் ஐம்பதும் ஒன்றுதான் பதினைந்தும் ஒன்றுதான். மூன்றுக்கும் 65க்கும்(50+15) இடையே இருக்கும் பிரச்சனைகள் வேறு. 50க்கும் 15க்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் வேறு. 15ந்தின் இன்றைய பிரச்சனைகள் பலவும் 50லிருந்தே வருகின்றன. இதற்கு மூல காரணங்களை ஆராயும் போது நம்மை மூன்றுக்கு இட்டுச் செல்லலாம். அப்போது மூன்றைச் சாடுவதுடன் 50ன் வேலை முடிந்துவிடுகிறதா? ஆனால் அந்த சாடல்தான் எளிதாகவும் விருப்பத்துடனும் செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    மூன்றின் எச்சில் முகத்தில் வடிவது இன்று இயலாத ஒன்று. 50ன் எச்சில் குளத்தில் தத்தளிப்பவனுக்கு உடம்பெல்லாம் எச்சில். அவனைக் கரை சேர்த்துவிட்டால் அப்புறம் 65ம் சேர்ந்து மூன்றின் முகத்தில் துப்பலாம். &lt;br /&gt;&lt;br /&gt;    என் பதினான்கு வயதில் நானும் என் நண்பனும்ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தோம் அவ்வூரில் மூன்று ஒன்றுக்கும் குறைவு. 50 ஏறக்குறைய 90. 15 சுமார் 10. ஊர் எல்லையில் நாங்கள் பேசிக்கொண்டிருந்த்போது வெளியிலிருந்து வந்த ஒரு பெரியவர் துண்டைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு ஐயா என் விளித்து அங்கிருந்த இளைஞரிடம் ஏதோ சொல்லிவிட்டு பிறகு ஒற்றையடிப் பாதையில் ஊரை சுற்றிக்கொண்டு சென்றார். 35 ஆண்டுகள் கழிந்தபின்னும் இன்னும் நிலமை அப்படியே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;     இதற்கு காரணமாக மூன்றைக் கருத என்னால் முடியவில்லை. மூன்றின் ஆதிக்கத்தை ஒழிக்க நினைப்பவர்கள் 15ந்தை ஆட்டிப்படைகிறார்கள். என்னதான் நடக்கிறது தமிழகத்தில். ஆக்கப்பூர்வமாக ஏதாவது நடந்திருக்கிறதா? நானும் பிறந்ததிலிருந்து சாடல்களையே கேட்டுக்கொண்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;    50 ஆண்டுகளாக 15 முன்னேறுவதற்கு 50ன் பங்களிப்பு என்ன? 50 செய்த கொடுமைகள் என்ன? தீர்வை நோக்கி அதன் செயல்பாடுகள் என்ன? கீரிப்பட்டியும் பாப்பாப்பட்டியும் காப்பாற்றியதை தொடர்ந்து காப்பாற்றுவதற்கும் அதைக் கூத்தைப்பாருக்கு நீட்டிப்பதற்கும் யோசனைகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;    20-11-2006 அன்று வெளிவந்த இந்து பத்திரிக்கைச் செய்தியைப் பாருங்கள். &lt;a href="http://www.hindu.com/2006/11/20/stories/2006112003722000.htm"&gt;சுட்டி&lt;/a&gt;. ஆந்திராவில் 4 தலித் பெண்கள் இயக்கும் தனியார் வானொலி நிலையத்தைப்பற்றிய செய்தி. இது போன்றவை தமிழ்நாட்டில் நடக்கிறதா? எங்கே செய்திகள்? எங்கே விளம்பரங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;    மொத்தப் பொறுப்பும் 50க்கு இருக்கிறது. நான் 50ல் இருந்துகொண்டு கூனிக்குறுகி இந்த கேள்விகளைக் கேட்கிறேன். 50ன் பதில் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது கவிதை&lt;br /&gt;உவமைகளின் கயமை&lt;br /&gt;உண்மையிலிருந்து &lt;br /&gt;வெகு தூரம் விலகி இருக்கிறது&lt;br /&gt;உண்மையான கவிதையைப் போலவே!&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு:&lt;br /&gt;1. அனானிப் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.&lt;br /&gt;2. அனானி இல்லையென்றாலும் அசிங்க மொழிக்கும் அனுமதி இல்லை&lt;br /&gt; (எது அசிங்கம் என்பது என் அறிவுக்கே உட்பட்டது)&lt;br /&gt;3. எதிர் கருத்துகளை விரும்பி வரவேற்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116434986994529257?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116434986994529257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116434986994529257' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116434986994529257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116434986994529257'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_24.html' title='ஐம்பது சதவிகித எச்சில்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116399362929406167</id><published>2006-11-19T19:29:00.000-08:00</published><updated>2006-11-23T07:10:39.566-08:00</updated><title type='text'>தூண்டில்</title><content type='html'>ஒரு முற்றுப் பெறாத தூக்குக் கயிற்றைப் போல தொங்கிக் கொண்டிருந்தது அந்த தூண்டில் முள். உள்ளிருந்த கொக்கியை அழகாய் முழுதும் மறைத்திருந்தது முள்ளில் நுழைத்திருந்த மண்புழு.  திருப்தியுடன் ஏரியினுள் இறக்கினான் அந்த மீன்பிடிப்போன்.&lt;br /&gt;&lt;br /&gt;    கடிப்பதற்கு வாகாய் கட்டித் தொங்கவிடப்பட்ட இந்த தின்பண்டத்தின் மணத்தால் ஈர்க்கப்பட்டது ஒரு சிறுகெண்டை. தின்று பார்க்கலாம் என்று அதன் அருகே சென்றபோது எங்கிருந்தோ பாய்ந்து வந்தது ஒரு பெருங்கெண்டை. தன்னை உண்ண வருகிறதோ எனெ தப்பியோடிய சிறுகெண்டை திரும்பிப் பார்த்தது. அகலத் திறந்த வாயால் அப்படியே அத்தின்பண்டத்தைக் கவ்விய அப்பெருங்கெண்டை அலறித் துடித்தது. ஓ! அந்த புது உணவில் ஏதோ கோளாறு!! மேலே நீர்மட்டத்தில் ஒரு பெரும்பரப்பு மிதந்து கொண்டிருந்தது. அதிலிருந்து பெரும் கயிறும் அதன் நுனியில் பெரும்பெரும் கொக்கிகளுமாய் அந்த பெரிய ஏரியின் அடிவரை வந்து ஒரு பெரிய கொடிப்பின்னலில் மாட்டிக் கொண்டிருந்தது. சிறுகெண்டை அடங்கமாட்டாத ஆர்வத்தினால் பெருங்கெண்டை அருகில் சென்றது. இப்போது துடிதுடித்த பெருங்கெண்டை அதிவிரைவில் மேலே சென்றது. எதனாலோ இழுக்கப்பட்டதுபோல. அந்த விரைவுக்கு மேல்நோக்கி நீந்த முடியவில்லை. மேலே நீர்மட்டத்திற்கு அருகே சென்றபோது - பெருங்கெண்டையைக் காணவில்லை! சிறுகெண்டையின் சிறிய மூளை குழம்பித் தவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    ஒரு சிற்றுலா நீந்தலும் தன் சக்கக்களுடன் சல்லாபமும் முடித்து திரும்பி அவ்விடத்திற்கு வந்தபோது சிறுகெண்டைக்கு ஆச்சர்யம்! மீண்டும் அந்த வினோத உணவு அங்கே தொங்கிக் கொண்டிருந்தது!! ஆடாமல் அசையாமல். அருகே சென்று பார்த்தது. இது வினோதம்! அற்புதம் இதன் மணம்!! ஆனால் ஆபத்து ஏதோ இருக்கிறது. தயங்கித் தயங்கி நாலைந்து சுற்று சுற்றிவந்து அந்த மணத்தையும் அதன் அருகாமையையும் முழுதும் அனுபவித்தபின் மெள்ள மெல்ல மெல்ல அருகில் சென்று மென்மையாக வாயால் கவ்வி அக்கொக்கிப் புழுவின் சிறுவிள்ளலை  உண்டபோது, ஆகா! இன்னொரு விள்ளல்!! ஆகா!!! யாருக்கோ தோன்றியிருக்கிறது. இப்படி ஒரு சுவைமிகு உணவை இலவசமாய்த் தரவேண்டுமென்று. அதுவும் இப்படி சாப்பிட வசதியாய் கட்டித் தொங்க விட வேண்டுமென்று. மூன்றாவது விள்ளலுக்கு தயாரான போது சிறுகெண்டடைக்கு முக்கால் வயிறு நிறைந்துவிட்டிருந்தது. இலவச உணவு. இனிய உணவு. இந்த உணவு கிடைக்கும் நாட்கள் இனியநாட்கள்தாம் இனிமேல். கடித்த இடத்திலேயே மூன்றாவது கடியை அழுந்தக் கடித்தபோது, நளுங் என்று பல பற்கள் சுளுக்கிக் கொண்டன. தாங்க முடியாத வலி. ஆ! இதுதானா வில்லங்கம். இனிய இவ்வுணவிற்குள் இப்படியொரு கடும்பொருள். மூன்றாவது கடி வாய்க்குள்ளேயே மெல்லப்படாமல் இருந்தது. பல்வலியின் தீவிரம் குறைந்தபிறகு மெதுவாக ஞமஞமவென்று அதை மென்று உள்ளே தள்ளியதுபோது அந்த சின்ன மூளைக்குள் பல புது சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. இந்த இலவச படையலை விட முடியாது. மெல்லவே கடிக்க வேண்டும். புதுப்புது இடங்களில் கடிக்கவேண்டும். இந்த உத்தி பலித்தது. இது தொடர்ந்தது. சில விள்ளல்களில் தன் முழு வயிறும் நிறைக்கும் நாட்கள் அடிக்கடி வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;    தூண்டிலின் தன்மையை ஒருபாதி அறிந்திருந்த அந்த வினோத சிறுகெண்டை இப்போது தினமும் தூண்டில்களை தேட ஆரம்பித்தது. ஆனால் ஒருநாள் தூண்டிலின் முனைப்புழு சதைக்கு ஆசைப்பட்டு அதை மெதுவாகக் கடித்தபோதும், அப்போது எதனாலோ ஏற்பட்ட நீரசைவில் முனைமுள்ளில் மாட்டிக் கொண்டது அந்த சிறுகெண்டை. துள்ளிய துள்ளலில் முள் மேலும் ஆழமாகப் பதிந்ததே தவிர விடுபட முடியவில்லை. தக்கையின் தவிப்பைப் பார்த்த மீன்பிடிப்போன் தூண்டிலை மேலே இழுத்தான். சின்னஞ்சிறுகெண்டையைப் பார்த்து ஏமாற்றமும் கோபமும் அடைந்தவன் அதன் வாயைப் பிளந்து முள்ளை விடுவித்து மீனைத் தூர எறிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;    உயிர் போகும் வலி. ஆனால் உயிர் போகவில்லை. வாய் கிழிந்து ரத்தம் வழிந்தது. பிழைத்துவிட்டோம் என்ற எண்ணமே வலியின் பெருமளவைக் குறைத்தது. சிறுகெண்டைக்கு முழுதும் சரியாக சில நாட்கள் ஆயின. இப்போது வாழும் வாழ்க்கை இலவமாகக் கிடைத்த இன்னொரு வாழ்க்கை. ஆனால் இப்பவும் தூண்டில் புழுவை சுவைக்காமல் விடுவதில்லை. இலவசம் எப்போதுமே கவர்ச்சியானதுதான். ஆனால் என்ன, அந்த முள்முனைப் புழுச்சதைக்கு ஆசைப்படுவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116399362929406167?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116399362929406167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116399362929406167' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116399362929406167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116399362929406167'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_20.html' title='தூண்டில்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116361419390100245</id><published>2006-11-15T10:00:00.000-08:00</published><updated>2006-12-14T09:55:56.120-08:00</updated><title type='text'>படைப்பின் இலவசம்</title><content type='html'>சென்னை நகரில் ஒரு சின்ன வீட்டுக்குள்ளே நடந்த ஓர் உரையாடல்.&lt;br /&gt;   &lt;br /&gt;    "மச்சான், மச்சான், கபாலி மச்சான்"&lt;br /&gt;    &lt;br /&gt;    "இன்னாமே கப்பு, இன்னா கூவுற, ரோசனய கலைக்காதமே"&lt;br /&gt;   &lt;br /&gt;    "இன்னா ரோசன மச்சான், அப்புடியே முங்கிகின. என்னாண்ட சொல்லு "&lt;br /&gt;   &lt;br /&gt;    "பிர்ச்சனயே உன்னாலதாமே! நீ யாரு எத்த கேட்டாலும் குடுத்துகினே கீறியே, அதான் பிர்ச்சனையே!!"&lt;br /&gt;    &lt;br /&gt;    "கேட்டா குடுத்துடு மச்சான்"&lt;br /&gt;    &lt;br /&gt;    "இன்னா பேச்சு பேசுற நீ, பாத்தரம் பாத்து பிச்ச போட தாவலயா?"&lt;br /&gt;   &lt;br /&gt;    "பிச்சைய பத்தி நீ பேசாத மச்சான், நீயே பிச்ச எட்த்து துன்ற ஆளுதான"&lt;br /&gt;    &lt;br /&gt;    "இன்னா குத்திக் காமிக்கிறியா?"&lt;br /&gt;   &lt;br /&gt;    "ஆமா, பத்து ஊட்டு சோறு துன்றதுக்கோசரம் பிச்ச எடுக்கிற நீ. அத்த வுடு, யாரு உன்னாண்ட இன்னா கேட்டாங்க?"&lt;br /&gt;    &lt;br /&gt;    "அல்லாருக்கும் வவுறு நெறைய சோறு வோணுமாம், அல்லாருக்கும் கரீட்டா படி அளக்குனுமாம். அல்லாரையும் அப்பிடியே எரிச்சி பஸ்பமாக்குலாமான்னு தோனுது"&lt;br /&gt;   &lt;br /&gt;    "நீ பொண்டாட்டின்னு கூட பாக்காம என்னையே உயிரோட எரிச்ச ஆளாச்சே, நீ செய்வய்யா, கவாலி!"&lt;br /&gt;    &lt;br /&gt;    "அதான் பொழச்சி முழுசா வந்துட்டியே கப்பு! இன்னா கப்பு ஒன்னு சொல்லகுடாதுன்ற. இந்த கபாலிய காவாலின்னு கபால்னு சொல்றியே!!"&lt;br /&gt;    &lt;br /&gt;    "இதுக்கெல்லாம் ஒன்னியும் கொர்ச்சல் இல்ல!"&lt;br /&gt;    &lt;br /&gt;    "கப்பு உனுக்கு காண்டு ஆவாதேடி,&lt;br /&gt;    கற்பகமே,&lt;br /&gt;    தப்பு ஏது செஞ்சேன், கப்பு உனுக்கு..."&lt;br /&gt;   &lt;br /&gt;    "ஐயே, இன்னாதுய்யா அரத பழசு பாட்டு?"&lt;br /&gt;    &lt;br /&gt;    "புச்சு வோணுமா? இந்தா கேளு,&lt;br /&gt;&lt;br /&gt;    'சிர்ச்சி சிர்ச்சி வந்த சின்ன கப்பு நீ&lt;br /&gt;    பிர்ச்சி பிர்ச்சி வச்ச பிச்சுப் பூவும் நீ.'..."&lt;br /&gt;    &lt;br /&gt;    "டேய் கபாலி...."&lt;br /&gt;    &lt;br /&gt;    "இன்னாடி புர்சனயே டேய்ன்ற?"&lt;br /&gt;   &lt;br /&gt;    "இன்னாய்யா துப்புகெட்ட பாட்டு இது? யாரோ இன்னாவோ கேட்டாங்களே அத்த கவனிய்யா"&lt;br /&gt;    &lt;br /&gt;    "என்னால எதையும் இலவசமா குடுக்க முடியாது"&lt;br /&gt;    &lt;br /&gt;    "இன்னாது இலவசமா? எதுய்யா இலவசம்? நாம வழிய மட்டும் காமிச்சா போதும். சோறு கெடச்சிடும். அவுங்க கையில கீறத அவுங்கலாண்ட கொடுத்தா அது இலவசமா? சொல்ல போனா நீயே ஒரு இலவசம்".&lt;br /&gt;    &lt;br /&gt;    "இன்னாது, இன்னாது, நான் இலவசமா?"&lt;br /&gt;    &lt;br /&gt;    "நானும் தான் இலவசம். அந்த பெர்சு ஒரு கேள்வி கேட்டுச்சே இன்னிக்கி வரைக்கும் பதில் சொன்னியா அதுக்கு?"&lt;br /&gt;  &lt;br /&gt;    "இன்னா பெர்சு, இன்னா கேள்வி."&lt;br /&gt;   &lt;br /&gt;    "உன்ன எதுத்து கேள்வி கேட்டுச்சுன்னு உயிரோட எரிச்ச தமிழ் பெருசு, நக்கீரன்."&lt;br /&gt;    &lt;br /&gt;    "கேள்வி இன்னா?"&lt;br /&gt;   &lt;br /&gt;    "சங்கு அருப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்? - எனாக்கவது ஒரு சாதி கீது உனக்கு இன்னாய்யா சாதின்னு கேட்டுகினார் பாரு"&lt;br /&gt;    &lt;br /&gt;    "ஆமா நமக்கு சாதி இல்ல. அது சரி, நாம இலவசமா?"&lt;br /&gt;&lt;br /&gt;    "மனுசன் மனுசனுக்காக குடுத்துகிட்ட இலவசம் தான் நாம.  இன்னா பிரியுதா?"&lt;br /&gt;&lt;br /&gt;    "மனுசனுங்களே தயார் பண்ணி மனுசங்களுக்கு குடுத்துகிற அரசாங்கங்கள் மாதிரி"&lt;br /&gt;&lt;br /&gt;    "அக்காங்! வைரமுத்து ஒரு கவிதையில ஏதிகினார் பார் -&lt;br /&gt;    'மனுசா நீ படா ஆளுப்பா. இறைவனையே படைச்சுகினியே'..."&lt;br /&gt;&lt;br /&gt;    ஒரு அசரீரி கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    "ஐயனே, குலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட உன்னை ஏது குலம் என்று கேட்டேனே, என்னை மன்னிப்பாயா? - சொர்கத்திலிருந்து நக்கீரன்."&lt;br /&gt;&lt;br /&gt;    "சரி நக்கீரா, இந்தா இலவசமா ஒரு மன்னாப்பு!"&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116361419390100245?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116361419390100245/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116361419390100245' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116361419390100245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116361419390100245'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_15.html' title='படைப்பின் இலவசம்'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116296883822820432</id><published>2006-11-07T22:45:00.000-08:00</published><updated>2006-11-17T17:51:04.093-08:00</updated><title type='text'>திரு காளிமுத்து அவர்கள் மரணம்.</title><content type='html'>நல்ல தமிழில் சிறந்த பேச்சாளர். இந்த ஒரு காரணத்துக்காக எனக்கு பிடித்த மனிதர். அவரது குடும்பத்தினருக்கும் அதிமுகவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116296883822820432?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116296883822820432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116296883822820432' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116296883822820432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116296883822820432'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_116296883822820432.html' title='திரு காளிமுத்து அவர்கள் மரணம்.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22403178.post-116295545968930666</id><published>2006-11-07T19:08:00.000-08:00</published><updated>2006-11-08T19:16:58.750-08:00</updated><title type='text'>எதிர்காலம் என்று ஒன்று - ஒரு கேள்வி.</title><content type='html'>திண்ணை-மரத்தடி இணைந்து நடத்திய அறிவியல் புனைகதை போட்டியில் பங்கு பெற்ற கதைகளில் சிலவற்றுடன் மேலும் சில கதைகளையும் சேர்த்து &lt;a href="http://anyindian.com/"&gt;எனி இந்தியன்&lt;/a&gt; பதிப்பகம் 'எதிர் காலம் என்று ஒன்று' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டிருக்கிறது. இதில் என்னுடைய  'மரக்கலாஞ்சி மாஞ்சிளா' என்ற கதையும் உண்டு. இந்த ,&lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=10507224&amp;format=html"&gt;சுட்டியில்&lt;/a&gt;   கதையைப் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;    இந்த வார திண்ணை இதழில் வெங்கட் சாமிநாதன் இப்புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியிருக்கிறார். &lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=60611023&amp;format=html"&gt;சுட்டி&lt;/a&gt;. அதில் அவர் என் கதையைப் பற்றி கேள்வி ஒன்றை வைத்திருக்கிறார். ஒரு நிழ்கால நிகழ்வைச் சொல்லும் கதையை எப்படி அறிவியல் புனைகதையாகக் கொள்ள முடியும் என்பதே அந்தக் கேள்வி.  கதையில் வரும் கற்பனை செடியான மஞ்சுளாவின் அதீத அறிவியல் சார்ந்த தன்மைகள் மட்டுமே இக்கதையை அறிவியல் புனை கதையாக சேர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இது பற்றி எனக்கு தோன்றியவற்றைக் கூற விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    அறிவியல் புனைகதைகளுக்கான விவரிப்பும் வரையரைகளும் திட்டவட்டமானதாக இல்லை என்று நான் கருதுகிறேன். &lt;a href="http://desikann.blogspot.com/2004/10/blog-post_22.html"&gt; அறிவியல் புனைகதை பற்றி சுஜாதாவின் கருத்துக்கள்.&lt;/a&gt;  இது&lt;a href="http://www.maraththadi.com/article.asp?id=2142"&gt; அறிவியல் புனைகதை பற்றிய மாலனின் கருத்துக்கள்.&lt;/a&gt;  இது&lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=60306153&amp;format=html"&gt; அறிவியல் புனைகதை பற்றிய ஜெயமோகனின் கருத்துக்கள்.&lt;/a&gt; எதிர்காலத்தில் நடப்பதாயும், வேற்று கிரகங்கள் வினோத விலங்குகள் தொடர்புடையதாயும், இன்னும் இது போன்ற கற்பனைகள் கொண்டதாயும் இருப்பவை அறிவியல் புனைகதைகள்  என்று ஒரு பொது கருத்து இருக்கிறது. புதுமைப் பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற கதை ஒரு அறிவியல் புனைகதை என வகைப்படுத்த முடியும் எனக் கருதப் படுகிறது. இது சமகாலத்தில் நிகழ்வதான கதைதான்.  என்னுடைய கதை சமகாலத்தில் நிகழ்வதாய் இருந்தாலும் இக்கதையில் ஒரு அறிவியல் சாத்தியக்கூறும் அரிய பல மூலிகைகள் முறையான அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு சம காலத்தில் நிகழ்வதாகச் சொல்லப்படும் அறிவியல் சார்ந்த கதைகள் ஒரு சவாலான செயலாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் சமகாலத்தில் நடக்கும் அறிவியல் சார்ந்த கதைகளை அறிவியல் புனைகதையாக ஏற்றுக் கொள்வதில் இருக்கும் தயக்கம் எனக்குப் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    இன்னொரு கோணத்திலும் இக்கதையை அறிவியல் புனைகதையாக வகைப் படுத்த இடமுண்டு.  சிறுகதைப் பிரிவுகளில் எதேனும் ஒன்றில் இக்கதையை வகைப்படுத்த முயலும்போது என்னைப் பொருத்தவரையில் அறிவியல் புனைகதையே முதன்மை தேர்வாக வருகிறது. சமகாலத்தில் நிகழ்வதாகவே விவரிக்கப்படும் என்னுடைய மற்றொரு கதையான &lt;a href="http://oagaisblog.blogspot.com/2006/10/blog-post_17.html"&gt;'விடுதலைப் பட்டறை'&lt;/a&gt; யைக் கூட அறிவியல் புனைகதையாகவே வகைப் படுத்த விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    இது தொடர்பான கருத்துகளை அறிய விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    இப்புத்தகத்திற்கும், என் கதைக்கும் விமர்சனம் அளித்த திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் திண்ணைக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;    இப்புத்தக விமர்சனம் பற்றி மீனாக்ஸின் &lt;a href="http://thavam.blogspot.com/"&gt;பதிவு.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22403178-116295545968930666?l=oagaisblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://oagaisblog.blogspot.com/feeds/116295545968930666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=22403178&amp;postID=116295545968930666' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116295545968930666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22403178/posts/default/116295545968930666'/><link rel='alternate' type='text/html' href='http://oagaisblog.blogspot.com/2006/11/blog-post_08.html' title='எதிர்காலம் என்று ஒன்று - ஒரு கேள்வி.'/><author><name>ஓகை</name><uri>http://www.blogger.com/profile/01365297775457332565</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='14904147371056673756'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></entry></feed>