tag:blogger.com,1999:blog-19355143.post-82772217521002468772007-06-09T01:19:00.000-07:002008-06-22T06:05:51.102-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 7.<div style="TEXT-ALIGN: right"><span style="TEXT-DECORATION: underline"></span><a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html">முன்னுரை</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html">பாகம் 1</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html">பாகம் 2</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html">பாகம் 3</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html">பாகம் 4</a> <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html">பாகம் 5</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/6.html">பாகம் 6</a></div><br /><span style="FONT-WEIGHT: bold">இப்போது ஏன் இந்த முடிவு?</span><br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்:</span> <blockquote>நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.</blockquote><span style="FONT-WEIGHT: bold">ஏது மரியாதை?</span><br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> நீங்க பி.ஏ., வரைக்கும் படிச்சிருக்கீங்களே அதுக்காகவாவது கிராமத்தில் மரியாதை காட்டமாட்டார்களா?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்:</span> எங்கே காட்டுறங்க? இல்லையே!<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> உங்க சாதியாரைத் தவிர, பிற சாதியார் மரியாதை காட்டறாங்களா?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்:</span> <blockquote>எங்க காட்டறாங்க?. வெள்ள வேட்டி, வெள்ள சட்டை மோட்டுகிட்டு போனாலே, அதோ போறான் பாரு வெள்ள வேட்டி கட்டிக்கிட்டு, படிச்சுப்புட்டானாம் அப்படீன்னு கிண்டல் செய்றாங்க. டிபார்ட்மெண்டில கூட படிச்சாலும் பட்டம் பெற்றாலும் துவேஷம் தான் பண்றாங்க.</blockquote><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> இங்க பொருளாதாரத்தில் எப்படி? தொழில் முறை என்ன?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்: </span>இங்க பெரும்பாலும் விவசாயம் பண்றாங்க; எல்லாருக்குமே சொந்ததைடங்கள் இருக்கு.<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்: </span>நீங்க யாராவது தினக் கூலிகளாக இருக்கீங்களா?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்:</span> தினக்கூலிகளும் பத்து இருபது பேர் இருக்காங்க. அவங்கலும் மதம் மாறியிருக்காங்க.<br /><br /><span style="FONT-WEIGHT: bold">துவேஷமே காரணம்</span><br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> <blockquote>மற்ற கிராமத்திலே இருக்கிற தாழ்த்தப்பட்டவங்களை விட, குறிப்பா திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிறவங்க படிப்புத்துறையில் முன்னேறுனவங்க பொருளாதாரரீதியில் - எடுத்துக்கிட்டாலும் மற்றவங்களைவிட நல்ல நிலையில் இருக்கிறீங்க. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த எண்ணம் தோண வேண்டிய அவசியமென்ன?</blockquote><span style="COLOR: rgb(153,0,0)">உமர்:</span> <blockquote>துவேஷம் தான் காரணம். மனித உரிமை தான் வேண்டும். படிப்பு பரவப்பரவ மக்களுக்கு பகுத்தறிவு உண்டாகுது. அப்போது இதுல இருக்கிறதனால என்ன நன்மைன்னு சிந்திக்கிறாங்க. நம்மை மனுசனா மதிக்காத சாதியில ஏன் இருக்கணும்? நம்மை மதிக்கிற மதத்துக்கு போயிடலாமேன்னு நினைக்கிறாங்க.</blockquote><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> நீங்க பெரியார் கூட்டங்களையெல்லாம் கேட்டிருக்கீங்கள்ள, அந்தக் கொள்கையில் நம்பிக்கை உண்டா?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்:</span> ஆமா!<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> <blockquote>இருந்தாலும் நீங்க இளைஞர்கள், உங்க சமுதாயத்தில் இருக்கிற பெரியவங்க என்ன நினைக்கிறாங்க? அவங்க மதம் மாற ஆதரவா இருந்தாங்களா?<br /></blockquote><span style="COLOR: rgb(0,0,153)">இறைவன் நாடினால் வளரும்.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-8277221752100246877?l=islamiccollections.blogspot.com'/></div>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964abusumaiyaha@gmail.com0