tag:blogger.com,1999:blog-136587632008-05-03T03:10:25.480-07:00பரிசுத்தமானவனின் அடிமைஅப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-13658763.post-44113851057993127672008-04-12T22:14:00.000-07:002008-04-12T22:25:51.200-07:00ஹிஜாப் தரும் சுதந்திரம்!ஹிஜாப் தரும் சுதந்திரம்!<br /><br />என்ன பார்க்கிறாய்?<br />என்னைப் பார்க்கும்போது<br />என்னில் என்ன பார்க்கிறாய்?<br /><br />நான் சுதந்திரப் பறவையா?<br />கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?<br />இயந்திர உலகில் மாட்டியவளா?<br /><br />கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்<br />கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?<br />கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?<br /><br />நாகரீகம் அறியாதவளாக<br />பிணைக்கப்பட்ட கைதியாக<br />நான் தெரிகிறேனோ உனக்கு?<br /><br />எனக்கென்று சொந்தக் குரல்<br />எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்<br />வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்<br /><br />மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?<br />முடியை மறைத்தால் - அநாகரீகமா?<br />காட்ட மறுத்தால் - திணிப்பா?<br />சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி<br />பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்<br />'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே<br /><br />கவலையும், துயரமும்<br />கோபமும், வேதனையும் எனக்கு<br />கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு<br /><br />கண்ணீரின் காரணம்<br />நீ என்னை ஒதுக்குவதாலும்<br />உன் கேலிக் கூத்தாலும் அல்ல<br /><br />நீ உனையே ஒதுக்குவதால்<br />உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்<br />இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்<br /><br />அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக<br />காட்சிப் பொருளாக<br />வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்<br /><br />இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்<br />அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்<br />ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்<br /><br />அமைதியில் என் அழகும்<br />பொறுமையில் என் மென்மையும்<br />ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்<br /><br />மன வலிமை<br />சரியான முடிவெடுக்கும் திறன்<br />சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு<br /><br />வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்<br />உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்<br />குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்<br />கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்<br /><br />கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்<br />கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை<br />அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை<br /><br />அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை<br />ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை<br />கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை<br /><br />உண்மையில் நானே சுதந்திரப் பறவை<br />விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'<br />அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'<br />அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!<br /><br />நன்றி: மின் மடலின் மூலம் கிடைக்கப் பெற்றது.அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-31856551448356136862007-09-01T02:58:00.000-07:002007-09-01T03:17:14.000-07:00சிறந்த முஸ்லிம்சகோதரர்களே!<br /><br />நமது இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் நாம் கடைபிடிக்க வேண்டியவைகளாக் கீழ் கண்டவாறு கூறுகின்றார்கள்:<br /><br /><strong>"நமது எல்லாச் செயல்களும், நம்முடைய எண்ணங்களைப் பொருத்தே அமையும்"</strong><br /><br />நம்முடைய எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் பட்சத்தில், நமது செயல்களும் தூய்மையாக இருக்கும். ஆகவே, சகோதரர்களே நம்முடைய எண்ணத்தை தூய்மையானதாக ஆக்குவோம்.<br /><br />மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:<br /><br /><strong>"நான் சொல்லாத ஒன்றை வழிபாடாகச் செய்யாதீர்கள்"</strong><br /><br />ஆம், பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களின் மேன்மையான வணக்கமாக கொள்வது இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை வழிபாடாக ஆக்கிக் கொண்டு வழி கெட்டு இஸ்லாத்திற்கு இழிவு ஏற்படுத்தும் செயலாக ஆக்கிக்கொண்டுள்ளனர்.<br /><br />இறுதியாக, நபி (ஸல்) கூறுகின்றார்கள் :<br /><br /><strong>"இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை தெளிவானது மற்றும் அனுமதிக்கப்பட்டவையும் தெளிவானது, அதைத்தவிர்த்து நாம் அறியாத நமக்கு சந்தேகத்திற்கு உரிய விசயங்களில் நாம் அதை தவிர்த்துக் கொள்ளல் நன்மையானது"</strong> என்பதை மிக தீர்க்கமாக அறிவித்துள்ளார்கள்.<br /><br />சகோதரர்களே... யார் ஒருவர் இப்படிபட்ட விசயங்களை தங்களின் வாழ்கையில் பேணி நடக்கின்றார்களோ, அவர்கள் தங்களின் வாழ்நாளில் சிறந்த முஸ்லிமாக திகழ்வார்கள்.அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-79145871716107562562007-07-28T06:45:00.000-07:002007-07-28T06:54:05.076-07:00முஸ்லிம்களின் தேசப்பற்றைக் கண்டு மெய்சிலிர்த்த தினமலர்"முஸ்லிம்களின் தேசப்பற்றைக் கண்டு மெய்சிலிர்த்த தினமலர்"<br /><br /><br />ஆம் சுதந்திர தின வைரவிழாவின் நெருக்கத்தில் தான் தினமலருக்கு இஸ்லாமியர்களின் சுதந்திர தாகம் எப்படிப்பட்டதாக இருந்தது என்ற ஞானோதயம் ஏற்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தங்களின் சதவிதத்திற்கு மேலாக கலந்துக் கொண்டவர்களின் எழுச்சியைக் கண்டு தினமலர் மெய்சிலிந்த்து நிற்கும் காட்சியை கீழ்காணும் தினமலரின் வலைதளத்தில் காணலாம்.<br /><br /><a href="http://www.dinamalar.com/2007july23/general_ind2.asp">http://www.dinamalar.com/2007july23/general_ind2.asp</a><br /><br /><br />நன்றி: தினமலர்அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-81701089669717542782007-07-08T03:37:00.000-07:002007-07-08T03:51:51.379-07:00இடஒதுக்கீடு கேட்டு கிடு கிடு போராட்டம்ஜூலை 4 ல் முஸ்லிம்கள் நடத்திய இடஒதுக்கீடு போராட்டம் பற்றி ஜூனியர் விகடனில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்ற அமைப்பின் தலைவர் P.ஜைனுல் ஆபிதீனின் விளக்கமான பேட்டி கீழ் காணும் சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.<br /><br /><a href="http://www.tntj.net/Statement/GV_PJ_petti_jul4.asp">http://www.tntj.net/Statement/GV_PJ_petti_jul4.asp</a>அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-42420149480466961342007-07-07T00:05:00.000-07:002007-07-07T00:33:18.643-07:00ஜூலை 4-ல் தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் சிறை நிரப்பும் போராட்டம்ஜூலை 4 ல் தமிழ்நாட்டில் தவ்ஹீது ஜமாத் நடத்திய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம். அதில் ஏராளமான பெண்களும், சிறுவர், சிறுமியர்களும் கலந்துக் கொண்டதை கீழ் காணும் லிங்கில் காணுங்கள்.<br /><br />அரபு நாடுகளில் தான் தங்களுக்கு வாழ்வு என்று எண்ணிக் கொண்டிருந்து முஸ்லிம்கள். இப்பொழுது அந்த மாயையிலிருந்து மீண்டு தங்களின் உரிமைக்காக தெருக்களில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்கள். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு என்றும் துணை நிற்பானாக...<br /><br /><br /><br /><a href="http://www.tntj.net/Statement/July_4_Pager_News.asp">http://www.tntj.net/Statement/July_4_Pager_News.asp</a><br /><br /><br />நன்றி: <a href="http://www.tntj.net/">http://www.tntj.net/</a>அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1144218957679159342006-04-04T23:32:00.000-07:002007-01-27T23:22:47.126-08:00ஒரு முஸ்லிமின் பார்வையில் ஓவியர் உசேன்பிரபல ஓவியர் என்று சொல்லிக் கொள்ளும் எம்.எப். உசேன் என்பவர் இந்தியக் கடவுளர்களை நிர்வாணமாக்கி வரைந்து சில பேரிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார். இயற்கையைத் தவிர மற்றவற்றை ஓவியமாக வரைவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் இந்த வரம்புகளை அப்பட்டமாக மீறும் எம்.எப். உசேனை முஸ்லிம்கள் யாரும் ஆதரிப்பதில்லை. அப்படிச் சொல்வதை விட அவரை முற்றிலும் புறக்கணித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். <br /><br />உசேன் என்ற இந்தக் கிறுக்கனுக்கு எத்தனையோ அமைப்புகள் பட்டங்களை வழங்கி கவுரவித்துள்ளன. இப்படி பட்டம் கொடுத்த அமைப்புகளில் ஒரு அமைப்பு கூட இஸ்லாமிய அமைப்பு அல்ல என்பதை எல்லோரும் கவனிக்க வேண்டும். அதுபோல இவர் வரைந்த ஓவியங்களை முஸ்லிம்கள் அல்லாதவர்கள் தான் ஆயிரங்களையும், லட்சங்களையும் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வளவு ஏன்? எம்.எப். உசேனின் 'எக்ஸ்சிபிஷனு'க்கு முஸ்லிம் யாரும் செல்வதும் இல்லை. அவர் வரைந்த ஓவியங்களை கண்டு ரசிப்பதுமில்லை. இதையும் கருத்தில் கொள்ள வேண்டும். <br /><br />ஆனாலும் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் எப்போதும் சீண்டிப் பார்க்கும் சங்பரிவாரம் - உசேனை ஒரு கருவியாக்கி முஸ்லிம்களை ஆத்திரமூட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியக் கடவுளர்களை இழிவுபடுத்தி ஓவியம் வரைந்த எம்.எப். உசேனை இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று அஜய் சிங் நருவி என்பவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நரேந்திர ஜெயின் உசேனுக்கு ஜாமீனில் வரக் கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். <br /><br />முஸ்லிம்களைப் பொறுத்தவரை உசேன் என்ற கிறுக்கனை ஓவியம் வரையாமல் தடுக்க வேண்டும். இதை அவர் மீறினால் அதற்கான தண்டனையை வழங்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் உசேனை ஆதரிப்பவர்கள் கோவில்களில் இல்லாத ஒன்றை உசேன் வரையவில்லை. சிற்பமாக காட்சியளிக்கும் ஒன்றை ஓவியமாக வரைவதை ஜனநாயகத்தில் தடுக்க முடியாதே! என்கிறார்கள். இவர்களுக்கு தக்க பதிலளிப்பது யாரோ? <br /><br />நன்றி: உணர்வு வார இதழ்.அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1144140213762662972006-04-04T01:37:00.000-07:002006-04-04T01:43:33.780-07:00நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியுமா?"ஒரு மூமின் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு ரக்அத் தொழுது அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு... சூராவை 25 தடவை ஓதிவிட்டு, பின்பு ஸலாம் கொடுத்து விட்டு 'ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி' என்று ஆயிரம் தடவை கூறினால் அன்றைய இரவில் கனவில் என்னை நிச்சயமாக காண்பான். மறுவாரம் வெள்ளி வரும் முன் கனவில் என்னைக் காண்பான். என்னை ஒரு வாரம் பார்த்துவிட்டால் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்."<br /><br />இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஒரு செய்தியை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது 'அல்மவ்ளூஆத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.<br />இதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்றே அறியப்படாதவர்கள் அறிமுகமற்ற பலர் இடம் பெறுவதிலிருந்தே இது பலவீனமான செய்தி தான் என்பது புலனாகும்.<br /><br />நபி(ஸல்) அவர்களை கனவில் நாம் காண முடியுமா? காண முடியும் என்பதற்கு சிலர் கீழ்க்கண்ட ஹதீஸ்களை ஆதாரமாக வைக்கின்றனர்.<br /><br />"யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.<br /><br />யார் என்னைக் காண்கிறானோ அவன் உண்மையையே கண்டான் என்று நபி(ஸல்) கூறியதாக அபூகதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத்.<br /><br />இந்த ஹதீஸ்கள் மேலெழுந்த வாயாகப் பார்க்கும் போது நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியும் என்று தெரிந்தாலும், உண்மையில் நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டுமானால் அவர்கள் உயிருடன் இருக்கும் போது கனவில் காண்பவர் நபி(ஸல்) அவர்களைத் தான் கண்டு கொண்டார் என்றும் அல்லது இதுவரை நேரில் காணாதவர், கனவின் மூலம் கண்டால் இனி நேரிலும் காண்பார் என்றும் தான் முடிவுக்கு வரவேண்டும். "இந்த முடிவு தான் மேற்கொள்ள வேண்டும்" என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.<br /><br />'யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் (நேரிலும்) விழிப்பிலும் என்னைக் காண்பார். ஏனென்றால் ஷைத்தான் என் வடிவத்தில் வரமாட்டான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.<br /><br />கனவில் கண்டால் நேரிலும் காண்பார் என்றால், நேரில் காண்பது அவர்கள் உயிருடன் உள்ள காலத்திலேயே பொருந்தும். தெளிவான ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மூலம் அவர்கள் உயிருடன் வசிக்காத காலத்தில் உள்ள நம்மைப் போன்றவர்களால் நபி(ஸல்) அவர்களைக் காண முடியாது என்பது தெளிவாகிறது.<br /><br />நன்றி: ஏ1ரியலிசம்.காம்அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1140596175904630472006-02-22T00:03:00.000-08:002006-02-22T00:16:15.916-08:00கொன்றால் பாவம்; தின்றால் போச்சு<a href="http://photos1.blogger.com/blogger/5880/1209/1600/15_2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/5880/1209/320/15_2.jpg" border="0" alt="" /></a><br /><br />திங்கிறதுக்காக கொல்லும் போது... கொய்யோ,மொய்யோன்னு கத்துனக் கூட்டம் - இப்ப<br />திங்கக்கூடாதென்பதற்காக கொல்லுறாங்களே... எங்கேய்யா போச்சு அந்தக் கூட்டம்?<br /><br />உயிரை வதைப்பது பாவம் - இப்ப<br />அதுதான் எல்லோருக்கும் நலம்.<br /><br />கொல்லக் கொல்ல மற்றும் கொல்லாமலே அழியும் - அது வன விலங்கினம்<br />கொல்லக் கொல்ல உருவாகும் - அது மனிதனுக்கு உணவாகும் இனம்.அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1130917570486422852005-11-01T23:41:00.000-08:002005-11-01T23:46:10.500-08:00நோன்பு பெருநாள் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள்<script language="javascript"><br /><!-- function popup(){ win = window.open('', 'Printit','width=700,height=560,toolbar,scrollbars,menubar,resizable,top=100,left=100'); } // --><br /></script><br /><br /><br /><br /><table cellspacing="0" cellpadding="0" width="100%" border="0"><br /><tbody><tr><td align="left"><br /><p align="center"><br /><span style="font-family:comic_sans_ms;font-size:180%;color:#ffff00;">நோன்பு பெருநாள் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள்</span><br /></p><br /><p align="center"></p></td></tr><br /><tr><td align="middle"><br /><table cellspacing="0" cellpadding="0" width="600" align="center" background="http://img.123greetings.com/thumbs/edec_eidulfitr_flwr/flwr05.gif" border="0"><br /><tbody><tr><td valign="center" align="middle" colspan="2"></td></tr><br /><tr><td valign="center" align="middle" colspan="2"><br /><img height="391" alt="Joyous_Eid_Celebration_!" src="http://img.123greetings.com/eventsnew/edec_eidulfitr_flwr/1011-045-05-1042.gif" width="447" /><br /></td></tr><br /><tr><td colspan="2"></td></tr><br /><tr><td colspan="2"></td></tr><br /></tbody></table><br /><br /><br /></td></tr><br /><tr><td align="middle"><br /><p><br /><span style="font-family:comic_sans_ms;font-size:180%;color:#ffff00;">அனைத்து சகோதரர்களுக்கும் என் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள்.</span><br /></p></td></tr><br /><div align="right"><br /></div><tr><td align="right"><br /><span style="font-family:comic_sans_ms;font-size:180%;color:#ffff00;"><br /><br /><br /></span><br /></td></tr><br /></tbody></table><br /><center><br /><br /><br /><form action="http://cards.ramadan-greetings.com/cgi-bin/cards/thankyou.pl" method="get" target="_top"><br /></form><br /><input type="hidden" value="தமிழ்மணச் சகோதரர்கள்" name="sname"><br /><input type="hidden" value="ramadangreet" name="log"><br /><input type="hidden" value="habeebullaa@gdarabia.com" name="semail"><br /><input type="hidden" value="abdulkuddus35@yahoo.com" name="remail"><br /><input type="hidden" value="அப்துல் குத்தூஸ்" name="rname"><br /><br /><script language="JavaScript"><br />var ref=document.referrer;<br />if(!ref){ref="none";}<br />document.write('<img src="http://www.123greetings.com/cgi-bin/TrackRecord.pl?" width="1" height="1" border="0" />');<br /></script><br /><noscript><br /><img src="http://www.123greetings.com/cgi-bin/TrackRecord.pl?none^Associates_FC_Box" width="1" height="1" border="0" /></noscript><br /><br /><!-- New Tag Footer --><br /><br /><br /></center><center></center>அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1128513087513619602005-10-05T04:49:00.000-07:002006-05-23T03:45:08.080-07:00ரமளான் வினாடி வினா<div align="justify"><br /><strong>ரமளான் முபாரக்<br /></strong><br /><br />அன்பு சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் சலாத்தைக் கூறி, ரமளான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).<br /><br />ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183<br /><br />சங்கைமிகு இந்த ரமளான் மாதத்தை முன்னிட்டு, நாம் இந்த மாதத்தின் சிறப்பை அறியும் வண்ணமும், நம்மை இம்மாதத்தில் இபாதத்திற்காக தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவலிலும் இங்கு வினாடி வினா தொகுக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தை நோக்காமல் அனைவரும் பதில் கொடுக்க முயற்சிக்கவும்.<br /><br /><strong>ரமளான் மாத நோன்பிற்காண கேள்விகள் :<br /></strong><br /><br />1. நோன்பாளிக்கு இரண்டு விதமான சந்தோசங்கள் உள்ளன அவை யாவை?<br /><br />2. நோன்பை விடுவதற்கு யார் யாருக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது?<br /><br />3. நோன்பாளிகள் சொர்க்கத்திற்கு எந்த வாயிலின் வழியாக உள் நுழைவார்கள்?<br /><br />4. குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா?<br /><br />5. எதைக் கொண்டு நோன்பு திறப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்னுரிமை வழங்கியுள்ளார்கள்?<br /><br />6. நோன்பாளி ஒருவர் தன் மனைவியுடன் கூடி விட்டால், அதற்காண பரிகாரம் என்ன?<br /><br />7. யார் ஒருவர், எந்த இரண்டு நடவடிக்கைகளை விடவில்லையோ அவர்களின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்?<br /><br />8. லைலத்துல் கதிர் என்பதன் அர்த்தம் என்ன?<br /><br />9. சஹர் உணவின் முக்கியத்துவம் என்ன?<br /><br />10. சஹர் செய்வதற்குரிய சிறந்த நேரம் எது?<br /><br />11. லைலத்துல் கதிர் இரவின் சிறப்புகள் என்ன?<br /><br />12. ரமளான் மாதத்தில் நன்மைக்காண கூலி எப்படிப்பட்டதாக இருக்கும்?<br /><br />13. இறுதி தீர்ப்பு நாளில் ஒரு அடியானின் எந்த இரண்டு செயல்கள் அவனுக்கு அல்லஹ்விடம் பரிந்துரைச் செய்யும்?<br /><br />14. தீராத நோயின் காரணமாக நோன்பை நோற்காதோருக்காண பரிகாரம் என்ன?<br /><br />15. லைலத்துல் கத்ருடைய நாள் எது?<br /><br />16. நோன்பாளி வாந்தி எடுக்கலாமா?<br /><br />17. அல்லாஹ்விடத்தில் நோன்பாளியின் வாயின் வாடை எப்படிப்பட்டதாக இருக்கும்?<br /><br />18. நோன்பாளி ஊசி போட்டுக் கொள்ளலாமா? விபரமாக விளக்கவும்?<br /><br />19. நிய்யத் என்றால் என்ன? நோன்பு நோற்பவர் எப்படி நிய்யத் வைக்க வேண்டும்?<br /><br />20. ரமளானில் விடுபட்ட நோன்புகளை என்ன செய்ய வேண்டும்?<br /><br /><br /><br />வஸ்ஸலாம்.<br /> </div>அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1125228992805414502005-08-28T04:28:00.000-07:002005-08-29T04:38:48.086-07:00தமிழகத்தில் இஸ்லாமியர்<div align="justify">அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.</div><br /><div align="justify">சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ - பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.</div><br /><div align="justify">மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.</div><br /><div align="justify">இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.</div><br /><div align="justify">பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.</div><br /><div align="justify">வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ - பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் - துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.</div><br /><div align="justify">இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட - இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.</div><br /><div align="justify">தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.</div><br /><div align="justify">தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.</div><br /><div align="justify">கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.</div><br /><div align="justify">தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.</div><br /><div align="justify">இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க - மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.</div><br /><div align="justify">இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.</div><br /><div align="justify">தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.</div><br /><br />நன்றி : தினமணி.அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1121515711176475922005-07-16T05:02:00.000-07:002005-07-16T05:14:30.343-07:00ஒரு ஜப்பானிய பெண்மணி இஸ்லாத்திற்கு மாறிய கதை<p align="justify"><b><font size="4">நான் சத்திய மார்க்கமாம் இஸ்லாத்திற்கு மாறிய <br />கதை </font></b><font size="4"><br><br /></font><b>(ஜப்பானியப் பெண்மணியான கவுலா அவர்கள் தன்னுடைய அனுபவத்தை <br />விவரிக்கின்றார்கள்) <br><br /></b><br><br />பிரான்ஸில் நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் பெரும்பாலான ஜப்பானியர்களைப் போலவே <br />நானும் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. நான் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியம் <br />முதுகலை படித்துக் கொண்டிருந்தேன்.<br><br /><br><br />சார்ட்டர், நீச்சஸ், காமஸ் போன்ற நாத்திகவாதிகளே எனக்கு மிகவும் பிடித்த <br />சிந்தனையாளர்களாயிருந்தனர். ஆனால் அதே நேரத்தில் நான் மதத்தைப் பற்றிப் படிப்பதிலும் <br />மிகவும் ஆர்வமுடையவளாக இருந்தேன். அது ஏதோ தேவைக்காக அல்ல. ஆனால் உண்மையைத் தெரிந்து <br />கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தினால் தான். மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது என்பதைப் <br />பற்றியெல்லாம் தெரிய நான் விரும்பவில்லை. ஆனால் எப்படி வாழ்வது என்பதே என்னடைய <br />அக்கறையாக இருந்து வந்தது. நான் என்றொரு உணர்வு வெகு காலமாகவே எனக்கு இருந்து வந்தது. <br />கடவுள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் எனக்கு ஒன்றாகவே இருந்தது. நான் உண்மையைத் <br />தெரிந்து என்னுடைய வாழ்க்கைப் பாதையை, கடவுளுடனோ அல்லது கடவுள் இல்லாமலோ, <br />தேர்ந்தெடுக்க விரும்பினேன்.<br><br /><br><br />இஸ்லாத்தைத் தவிர உள்ள எல்லா மதப் புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். <br />படிப்பதற்குத் தகுதியான ஒரு மதமாக இஸ்லாம் இருக்கும் என்று நான் ஒரு போதும் <br />எண்ணியதில்லை. என்னைப் பொறுத்தவரை அது முட்டாள்களின் ஒருவகையான பழங்காலத்திய சிலை <br />வணக்கமே என்று எண்ணியிருந்தேன். (நான் எவ்வளவு அறியாதவளாகயிருந்திருக்கிறேன்). நான் <br />கிறிஸ்தவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு பைபிளைப் படித்தேன். சில வருடங்களுக்குப் <br />பிறகு கடவுள் இருக்கிறார் என நம்பினேன். இறைவன் இருக்கத் தான் வேண்டும் என நான் <br />நம்பினாலும் அவன் இருப்பதை நான் உணர முடியவில்லை. நான் சர்ச்சில் தொழுது பார்த்தேன். <br />ஆனால் அது வீணில் தான் முடிந்தது. இறைவன் இல்லாமலிருப்பதைத் தவிர வேறு எதையும் நான் <br />உணரவில்லை.<br><br /><br><br />ஜென் அல்லது யோகா மூலமாக இறைவனை உணரலாம் என்று நினைத்துக் கொண்டு நான் புத்த <br />மதத்தைப் படித்தேன். கிறிஸ்தவ மதத்தில் இருந்ததைப் போலவே பல உண்மையான விசயங்கள் <br />அதிலும் இருந்ததைக் கண்டேன். ஆனாலும் நான் புரிந்து கொள்ளவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ <br />முடியாத ஏராளமான விசயங்கள் அதில் இருந்தன. என்னைப் பொறுத்தவரையில், இறைவன் இருந்தால் <br />அவன் எல்லோருக்குமுள்ள இறைவனாக இருக்க வேண்டும். மேலும் சத்தியம் என்பது <br />எளிமையானதாகவும் எல்லோராலும் புரிந்து கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும். ஏன் <br />மக்கள் தங்களுடைய வழமையான வாழ்க்கையைத் துறந்து விட்டு இறைவனுக்கே தங்களை <br />அர்ப்பணிக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.<br><br /><br><br />இறைவனைத் தேடும் கடும் முயற்சியின் இறுதியை அடைய என்ன செய்வது என எனக்கு <br />தெரியாமலிருந்தது. அப்பொழுது தான் நான் ஒரு அல்ஜீரிய முஸ்லிமைச் சந்தித்தேன். <br />பிரான்ஸிலேயே பிறந்து வளர்ந்த அவனுக்கு எப்படித் தொழுவது என்று கூடத் தெரியவில்லை. <br />அவனுடைய வாழ்க்கை ஒரு சரியான முஸ்லிமின் வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தது. <br />ஆயினும் அவன் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவனாக இருந்தான். ஆனால் எந்தவொரு <br />அறிவுமேயில்லாமல் இறைவனை நம்புவதென்பது என்னை எரிச்சல்படுத்தி இஸ்லாத்தைக் கற்கத் <br />தூண்டியது. ஆரம்பமாக பிரஞ்சு மொழியிலுள்ள திருக்குர்ஆனை வாங்கிப் படித்தேன். ஆனால் <br />என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. அது மிகவும் விநோதமாகவும் <br />போரடிப்பதாகவும் இருந்தது. தனியாக அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு <br />விட்டு எனக்கு உதவி செய்யும்படி யாரையாவது கேட்பதற்காக பாரீசிலுள்ள பள்ளிவாசலுக்குச் <br />சென்றேன். சகோதரிகள் என்னை நன்றாக வரவேற்றனர். இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம் <br />பெண்களை நான் சந்திப்பது அதுவே முதல் முறை.<br><br /><br><br />கிறிஸ்தவ பெண்களுடன் இருக்கும் போது மிகவும் அந்நியத்தை உணர்ந்த நான், வியக்கும் <br />வகையில் முஸ்லிம் சகோதரிகளோடு மிகவும் அன்னியோன்யமாக இருப்பதாக உணர்ந்தேன். ஒவ்வொரு <br />வார இறுதியிலும் நடக்கும் சொற்பொழிவில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். முஸ்லிம் சகோதரி <br />ஒருவரால் கொடுக்கப்பட்ட பத்தகம் ஒன்றை படித்தும் வந்தேன். சொற்பொழிவின் ஒவ்வொரு <br />வாக்கியமும், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் நான் முன்னர் ஒரு போதும் அறியாத ஆத்மீக <br />திருப்தியை தரும் இறை வெளிப்பாடாகவே எனக்கு இருந்தது. சத்திய ஊற்றில் மூழ்கிய உணர்வு <br />என்னுள் பொங்கியது. அதிசயமானது என்னவெனில், ஸுப்ஹானல்லாஹ்..! நான் ஸஜ்தாவிலிருக்கும் <br />போது இறைவன் எனக்கு மிக அருகிலிருக்கும் உணர்வைப் பெற்றேன்.<br><br /><br><br />ஹிஜாப் பற்றி கவுலாவின் கருத்தும் அனுபவமும் :<br><br />இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவிய போது பள்ளிக் கூடத்திற்குள் <br />ஹிஜாப் அணிவதைப் பற்றி மிகவும் சூடான சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. மதங்களோடு <br />சரிசம நிலையில் இருக்க வேண்டிய பள்ளியின் கொள்கைக்கு அது எதிரானது என பெரும்பாலோர் <br />கருதினர். முஸ்லிம் மாணவிகள் தங்கள் தலையை ஸ்கார்ப்பினால் மறைப்பது போன்ற சிறிய <br />விசயத்திற்காக அவர்கள் ஏன் அவ்வளவு வருத்தப்படுகிறார்கள் என அப்பொழுது <br />முஸ்லிமாகாதிருந்த எனக்குப் புரியவில்லை. ஆனால் வேலை இல்லாத் திண்டாட்டம், பெரிய <br />நகரங்களில் நிலவிய பாதுகாப்பின்மை போன்ற மிகவும் மோசமான பிரச்னைகளை எதிர் கொள்ள <br />நேரிட்ட பிரஞ்சு மக்கள் அரபு நாடுகளிலிருந்து பணி புரிவதற்காக ஆட்கள் வருவதை எண்ணி <br />மிகவும் எரிச்சல்பட்டார்கள். அவர்கள் தங்களின் நகரங்களிலிருந்து பள்ளிகளிலும் ஹிஜாபை <br />கண்டு மிகவம் மனக் கிலேசத்திற்குள்ளானார்கள்.<br><br /><br><br />மறுபுறம் அரபு நாடுகளில், மேற்கத்திய கலாச்சாரம் வேர்விட்டதால் பர்தா மறைந்து <br />போவதற்குப் பதிலாக, மிகப் பெரும்பான்மையான மேற்கத்தியர்களும் மற்றும் சில <br />அரபியர்களும் விரும்பி எதிர் பார்த்துக் கொண்டிருந்ததற்கு மாற்றமாக, ஹிஜாபிற்கு, <br />குறிப்பாக இளம் பெண்கள், ஏராளமாக திரும்பி வருவது காணப்பட்டுக் கொண்டிருந்தது.<br><br /><br><br />தற்பொழுது ஹிஜாபின் மறுமலர்ச்சியால் பிரதிபலிக்கப்பட்ட இஸ்லாமிய எழுச்சி <br />காலனித்துவம் மற்றும் பொருளதாரப் பின்னடைவுகளால் அடிக்கடி பாதிக்கப்பட்ட அரபு <br />முஸ்லிம்கள் தங்களுடைய கௌரவம், மற்றும் தனித்தன்மை ஆகியவற்றை காப்பாற்றிக் கொள்ள <br />செய்யும் முயற்சியே என்று கருதப்படுகிறது.<br><br /><br><br />அரபுகள் இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றி வாழ்வது தொன்று தொட்டு வரும் நடைமுறைகளைப் <br />பின்பற்றுவதாலோ அல்லது மேற்கத்திய எதிர்ப்பு மனப்பான்மையாலே ஏற்பட்டிருக்கலாம் என்று <br />ஜப்பானியர்களுக்கு தோன்றலாம். ஏனெனில் மேற்கத்தியவர்களுடன் தொடர்பு கொண்ட பிஜீ <br />காலத்தில் அவர்களும் இத்தகைய எதிர்ப்புணர்ச்சியை உணர்ந்திருக்கின்றனர். அதனால் தான் <br />மேற்கத்திய வாழ்க்கை முறை, உடை ஆகியவற்றிற்கு எதிர்ப்பாகச் செயல்படுகின்றனர். மனிதன் <br />எப்போதுமே பழமைவாத உணர்வுகளைக் கொண்டவனாக இருக்கிறான். ஆகவே தான் புதிய அல்ல <br />தெரியாத எதுவாக இருந்தாலும் அது அவனுக்கு நன்னமை பயக்கக் கூடியதா அல்லது தீமை <br />பயக்கக் கூடியதா என்று உணராமல் எதிர்க்கிறான். தங்களுடைய பரம்பரை பழக்க <br />வழக்கத்திற்கு அடிமையானதாலும் தங்களுடைய துயரமிக்க நிலையை சரிவர தெரிந்து <br />கொள்ளாததாலுமே முஸ்லிம் பெண்கள் ''நசுக்கப்பட்ட சூழ்நிலை'' யின் சின்னமாக ஹிஜாபை <br />அணிய வேண்டுமென வற்புறுத்துகின்றனர் என சிலர் இன்னும் நினைக்கின்றனர். பெண் விடுதலை <br />மற்றும் சுதந்திர இயக்கம் அவர்களின் சிந்தனையை தட்டி எழுப்பினால் அவர்கள் ஹிஜாபை <br />தூர எறிந்து விடுவார்கள் எனவும் அவர்கள் நினைக்கின்றனர்.<br><br /><br><br />இஸ்லாத்தைப் பற்றி சொற்ப அறிவே உள்ள சிலர் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான கண்ணோட்டத்த&#