tag:blogger.com,1999:blog-128945392009-07-16T11:19:00.870+08:00திருத்தமிழ்தமிழ் மொழி-இனம்-சமயம்-பண்பாடு-வரலாறு தொடர்பான செய்திகள் * tamil moli - inam - samayam - panpaadu - varalaaru todarbaana seytigalசுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.comBlogger140125tag:blogger.com,1999:blog-12894539.post-17416877222724579192009-07-15T01:23:00.004+08:002009-07-15T01:39:30.138+08:00புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது; தமிழுணர்வும் கிடையாது<div><a href="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SlzBYM8kx5I/AAAAAAAAAso/c9TTLTwLEWM/s1600-h/maraimalai+(3).JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5358370278200362898" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SlzBYM8kx5I/AAAAAAAAAso/c9TTLTwLEWM/s320/maraimalai+(3).JPG" border="0" /></a><br /><div align="justify"><strong>“புத்திலக்கியம் (நவின இலக்கியம்) என்ற பெயரில் தமிழ்நாட்டிலும் சரி, மலேசியா, சிங்கை முதலான நாடுகளிலும் சரி எழுதிவருகின்ற புத்திலக்கியவாணர்கள் எவருக்கும் தமிழும் தெரியாது; தமிழுணர்வும் கிடையாது” என்று மலேசியாவுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டு வந்துள்ள பேராசிரியர் ஐயா மறைமலை இலக்குவனார் கூறினார்.<br /></strong><br />கடந்த 11-7-2009இல் பேரா மாநிலம், பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற பொழிவுரை நிகழ்ச்சியில் பேராசிரியர் ஐயா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.<br /><br />மாந்தவியல் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் செம்மாந்த இலக்கைக் கொண்டமைவதே இலக்கியம் எனப்படுவது. அத்தகைய உயரிய இலக்கைக் கொண்டிருக்கும் உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ் இலக்கியம்.<br />தமிழ் இலக்கியமானது மிக நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. உலகில் வேறு எந்த இலக்கியத்திற்கும் இல்லாத மிகச் செம்மையான செழுமையான கட்டமைப்பைக் கொண்டது.<br /><br /><strong>இந்த அடிப்படை உண்மையை உணர்ந்துகொள்ளாமல் - மேற்குலகில் கருக்கொண்டு வளர்ந்த புத்திலக்கியத்தின் வரலாற்றையும் அறிந்துகொள்ளாமல் குருட்டாம் போக்கில் இலக்கியம் படைக்க புறப்பட்டவர்கள் புத்திலக்கியவாணர்கள் என்று ‘பின்நவினத்துத்துவம்’ பற்றி ஆய்வுசெய்தவரும் பல்கலைக்கழகத்தில் கற்பித்தவருமாகிய அவர் தெரிவித்தார்.<br /></strong><br />தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழின் மாண்பையும் தமிழ் இலக்கியத்தின் மேன்மையையும் கண்டு பொறுக்க முடியாத சிலர் ‘நவின இலக்கியத்தை’ படைக்கத் தொடங்கினர்.<br /><br />தமிழ் இலக்கியத்தின் உச்சங்களை எட்டித்தொட முடியாத இந்த இலக்கிய முடவர்கள் எந்த வரைமுறையும் இல்லாத - எந்தவகை இலக்கணமும் இல்லாத - எந்தவகை கட்டமைப்பும் இல்லாத - எந்தவிதத்திலும் மாந்த உய்வுக்கு உதவாத நவின இலக்கியத்தை ‘நவினத்துவம்’, ‘பின்நவினத்துவம்’ என்றெல்லாம் எழுத முனைந்தனர் என்பதுதான் உண்மை.<br /><br />தமிழுக்கு எதிராக இப்படியொரு இலக்கிய வடிவத்தைப் புகுத்தி இரண்டகம் புரிந்தவர்களில் சி.சு.செல்லப்பா, எசு.துரைசாமி(நகுலன்) போன்றோர் முன்னோடிகளாவர். இவர்களின் அடியொற்றி, இன்று தமிழகத்தில் புத்திலக்கியம் என்ற பெயரில் பதர்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பதர்களை மேய்ந்துவிட்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் சிலர் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.<br /><br />இந்தச் சூழலில், மலேசியா வந்திருக்கும் பேராசிரியர் ஐயா, புத்திலக்கியம் பற்றிய தோற்றம் - வரலாறு - வளர்ச்சி பற்றி மிக விரிவாகத் தெளிவுபட விளக்கினார். இவ்வகைப் படைப்புகள் தமிழுக்குள் புகுந்து தமிழ் மக்களின் குடும்பப் பண்பாட்டு நெறிகளில் குழப்பங்களை ஏற்படுத்துவதையும் குறிப்பிட்டு விளக்கினார்.<br /><br /><strong>‘நவினத்துவம்’ என்பதைப் பற்றி விளக்கிய அவர், மேலை நாடுகளில் சீர்கெட்டுச் சின்னபின்னமாகிய வாழ்க்கை முறையில் பிறந்த ஒரு வடிவம் இது. தொழில் புரட்சியின் காரணமாக, மேற்குலகத்தாரிடையே ஏற்பட்ட மனச்சிதைவுகள், மனமுறிவுகள், மணமுறிவுகள், பாலியல் வன்கொடுமைகள், பெண்ணிய வன்முறைகள், சிறார் கொடுமைகள், குடும்பவியல் சிதைவுகள் முதலான குமுகாயக் கொடுங்கேடுகளின் வெளிப்பாடாக முளைத்ததுதான் புத்திலக்கியம்.<br /></strong><br />மேலை நாட்டவரிடையே தோன்றி, மேற்குலகப் பண்பாட்டில் வளர்ந்த ‘நவினத்துவத்தை’ தமிழுக்குள் கொண்டுவருவது, நம்முடைய செவ்வியல் இலக்கிய மரபுக்கு எதிரானது மட்டுமன்று; நீண்ட காலத்தில் தமிழ் இலக்கியத்தின் கட்டமைப்பையும் வரலாற்றுச் சிறப்பையும் வேரோடு தகர்த்துவிடும்.<br /><br />புத்திலக்கியத்தின் ஒரு கூறாக இருக்கும் <strong>‘சொற்களின் மீதான வன்முறை’</strong> <em>(Violation On Sintaks)</em> தமிழின் மொழியியல் கோட்பாடுகளையும் இலக்கண வரன்முறைகளையும் சிதறடிக்கக்கூடியது. ஆங்கிலம் போன்ற கலவைமொழிகளுக்கு வேண்டுமானால் ‘சொற்களின் மீதான வன்முறை’ சிறப்பு சேர்க்கலாம். ஆனால், தமிழின் வளமும் வனப்பும் இதனால் சீரழிந்து போய்விடும்.<br /><br />நவின இலக்கியத்தில் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படும் பல்வேறு உத்திமுறைகள், மூவாயிரம் ஆண்டுக்கும் முன்பே முறுக்கேறி நிற்கும் தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதைப் புத்திலக்கியவாணர்கள் அறிந்திருக்கவில்லை. தமிழ் இலக்கியத்தில் என்ன இருக்கிறது என்று துளிகூட அறிந்துகொள்ளாமல் நவின இலக்கியத்தை உச்சாணிக்கொம்பில் ஏற்றிக் கொண்டாடுவதை அறியாமை என்று சொல்லாமல் இருக்க முடியாது. <strong>புதுமைகள் என்பது பழமையை மறுதளிக்காமல் இருக்க வேண்டும். தொன்மைகளின் தொடர்ச்சியாக முகிழ்க்கும் புதுமைகளில்தாம் உயிர்ப்பும் உயர்வும் காணமுடியும்.<br /></strong><br />அனைத்திற்கும் மேலாக, 'நவினத்துவம்' எழுதும் புத்திலக்கியவாணர்கள் எவருக்கும் தமிழே தெரியாது; தமிழுணர்வும் கிடையாது. அதனால்தான், தொன்மைச் சிறப்புபெற்ற தமிழைச் சிதைத்தேனும் தங்களை முன்படுத்திக்கொள்ள முயன்று முயன்று எழுதுகிறார்கள். புத்திலக்கியத்தை நிலைநிறுத்திவிட ஆளாய்ப் பறக்கிறார்கள்.<br /><br />ஒட்டுமொத்தச் சமுதாயமும் சீர்கெட்டுச் சிதைந்துபோன ஐரோப்பிய நாட்டுப் பண்பாட்டில் உருவாகிய ‘நவினத்துவம்’, இன்னமும் கட்டுக்குலையாமல் இருக்கும் தமிழியப் பண்பாட்டைச் சின்னபின்னப்படுத்துவதற்கு எந்த விதத்திலும் வழிவிட முடியாது - கூடாது.<br /><br /><strong>உள்ளதை உள்ளவாறு சொல்லுவது அல்ல கலை; உணர்ந்தவாறு சொல்லுவது. இப்படி அமைவதே சிறந்த இலக்கியமாகும். கலை கலைக்காக என்பது பிறர் பண்பாடு; கலை வாழ்க்கைக்காக என்பது தமிழ்ப் பண்பாடு. மாந்த வாழ்வை ஒருபடி உயர்த்தப் பயன்படுவது மட்டுமே நல்ல இலக்கிய வடிவம். மாறாக, மனித மனங்களில் ‘வக்கிர’ எண்ணங்களையும் ‘உக்கிர’ உணர்சிகளையும் ஏற்படுத்துகின்ற எதுவும் இலக்கியம் ஆகமாட்டா.<br /></strong><br />உணர்வைப் பக்குவப்படுத்தி, உணர்ச்சியைச் சமன்படுத்தி, மனிதனை மேம்படுத்துவதே இலக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு மாறானதைக் குப்பையில் வீசுவது தமிழனின் கடமையல்ல.. மனிதனாகப் பிறந்தவனின் கடமை.<br /><img id="BLOGGER_PHOTO_ID_5358371286776975650" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SlzCS6L-kSI/AAAAAAAAAsw/60TvGtK0iC4/s400/maraimalai+(4).JPG" border="0" /><br />இவ்வாறு பேசிய பேராசிரியர் ஐயா, இடையிடையில் தமிழகத்திலும் மலேசியாவிலும் எழுதப்பட்ட சில நவினத்துவப் படைப்புகளை மேற்கோள்காட்டி விளக்கமளித்தார். இது நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டத்தினரைப் பாரிய சிரிப்பலைக்குள் தள்ளியது மட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் புத்திலக்கியவாணர்கள் மீது கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியது.</div><br /><p align="justify"> </p></div><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-1741687722272457919?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com4tag:blogger.com,1999:blog-12894539.post-76526862509408416552009-07-08T19:44:00.008+08:002009-07-08T20:37:47.984+08:00கணிதமும் அறிவியலும் மீண்டும் தாய்மொழிக்கே திரும்புகிறது<div align="justify"><strong>அறிவியல் கணித பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கை அதன் நோக்கங்களை அடையத் தவறி விட்டது என்பதை அரசாங்கம் வெளிப்படையாக இன்று(7-7-2009) ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே அந்தக் கொள்கை கைவிடப்படவிருக்கிறது.</strong></div><div align="justify"><strong></strong></div><div align="justify"><strong></strong></div><div align="justify"></div><img id="BLOGGER_PHOTO_ID_5356059337004499058" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 248px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SlSLluIRQHI/AAAAAAAAAsY/JqmAIqy7Beo/s320/muhi11-300x248.jpg" border="0" /><br /><div align="justify">2012ஆம் ஆண்டு தொடக்கம் தேசியப் பள்ளிகளில் அவ்விரு பாடங்களும் மலாய்மொழியிலும் தமிழ் சீனப்பள்ளிகளில் தாய்மொழிகளிலும் கற்பிக்கப்படும் என்று துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகிதின் யாசின் இன்று அறிவித்தார்.</div><br /><div align="justify"></div><div align="justify">2003ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பல்வேறு தரப்பினரின் பலத்த எதிர்ப்புக்கு இடையில் அந்தக் கொள்கையை அறிமுகம் செய்தார்.</div><br /><div align="justify">மலாய் மொழியை மீண்டும் பயன்படுத்துவதற்கும் பள்ளிக்கூடத்தில் எல்லா நிலைகளிலும் ஆங்கில மொழி கற்பிக்கப்படுவதையும் வலுப்படுத்தவும் கல்வி அமைச்சு தெரிவித்த கருத்துகளை அமைச்சரவை இன்று ஏற்றுக் கொண்டதாக அவர் சொன்னார். </div><br /><div align="justify">அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் கொள்கை 2003 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் அது குறித்து கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இப்புதிய எடுக்கப்பட்டிருப்பதாக முகிதின் குறிப்பிட்டார். </div><br /><strong><span style="color:#990000;">இந்த முடிவினால் என்ன நன்மை?</span></strong><br /><br /><div align="justify">2003 தொடங்கி இந்தத் திட்டம் பல்வேறு குறைகூறல்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இப்போது எடுக்கப்பட்ட இந்த முடிவு பெரும்பான்மை மக்களின் மனதில் பாலை வார்த்துள்ளது எனலாம்.</div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">கணிதமும் அறிவியலும் மீண்டும் தாய்மொழிக்குத் திரும்புவதால் தமிழ்க்கல்விக்கு சில நன்மைகள் விளையக்கூடும்.</div><p align="justify"></p><div align="justify"></div><div align="justify"><strong>1.</strong>தமிழ்மொழிக் கல்விக்கு உரிய உரிமை மீண்டுள்ளது.</div><div align="justify"><strong>2.</strong>தமிழ்மொழியும் கணிதம் அறிவியலுக்கு உரிய அறிவுமொழியாக விளங்கும்.</div><div align="justify"><strong>3.</strong>இவ்விரு பாடங்களுக்கான பாடநூல்கள் தமிழ்மொழியில் வெளிவரும்.</div><div align="justify"><strong>4.</strong>கணிதம், அறிவியலுக்குரிய கலைச்சொற்கள் மீட்டெடுக்கப்படும்.</div><div align="justify"><strong>5.</strong>தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவும் அடைவுநிலையும் மேம்படும்.</div><div align="justify"><strong>6.</strong>தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தாய்மொழி ஆளுமை பலப்படும்.</div><div align="justify"><strong>7.</strong>இவ்விரு பாடங்களுக்கான தமிழ் ஆசிரியர்களின் தேவை பெருகும்.</div><div align="justify"></div><p align="justify">ஆங்கிலத்தில் கணிதமும் அறிவியலும் கற்பிக்கும் திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதை ஒப்புக்கொண்ட அரசாங்கம், அதனை மாற்றியமைக்க இனியும் 2012வரையில் காத்திருக்கத்தான் வேண்டுமா?</p><p align="justify"><strong><span style="color:#990000;">முந்தையக் கட்டுரைகள்:-</span></strong></p><p align="justify">1.<a href="http://thirutamil.blogspot.com/2008/12/blog-post.html">கணிதமும் அறிவியலும் தமிழிலா? ஆங்கில தமிழிலா?</a></p><p align="justify">2.<a href="http://thirutamil.blogspot.com/2008/12/blog-post_18.html">அறிவியல் கணிதம்:- ஏழு தெரிவுகளில் எது முடிவு?</a></p><p align="justify"> </p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-7652686250940841655?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com5tag:blogger.com,1999:blog-12894539.post-26829242325220705262009-07-06T13:30:00.008+08:002009-07-06T13:53:53.070+08:00சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு<div align="justify"> <strong><span style="font-size:85%;color:#000000;">சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.</span></strong></div><div align="center"><br /><strong><span style="font-size:85%;color:#ff0000;">(தமிழோடு சீன எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு)</span></strong></div><strong><span style="font-size:85%;color:#ff0000;"><br /></span></strong><img id="BLOGGER_PHOTO_ID_5355217560359410658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 331px; CURSOR: hand; HEIGHT: 233px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SlGN_3woG-I/AAAAAAAAAsA/GOaljhs56J0/s400/china_kalvet2.jpg" border="0" /> <p align="justify"><br />சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.<br /><br /></p><div align="justify">தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர். </div><br /><div align="justify">தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.</div><br /><div align="justify">சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.</div><br /><img id="BLOGGER_PHOTO_ID_5355220755989240978" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 267px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SlGQ54aJnJI/AAAAAAAAAsQ/2fMKTpZQpYc/s320/KublaiKhan.jpg" border="0" /> <p align="center"><span style="color:#ff0000;"><strong><span style="font-size:85%;">(குப்லாய் கான்)</span></strong><br /></span></p><p align="justify">சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. </p><div align="justify">இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும். </div><br /><div align="justify"></div><div align="justify">சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.</div><br /><div align="justify">இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.</div><br /><div align="justify"></div><img id="BLOGGER_PHOTO_ID_5355217230513902514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 331px; CURSOR: hand; HEIGHT: 233px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SlGNsq_VE7I/AAAAAAAAAr4/lwFe2cki2sY/s400/china_kalvet1.jpg" border="0" /><br /><div align="justify">சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. <strong>இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.</strong> இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.</div><br /><ul><li><div align="justify"><span style="font-size:85%;">மூலம்:- தமிழ்க்காவல்.நெட்</span> </div></li></ul><p align="justify"> </p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-2682924232522070526?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com6tag:blogger.com,1999:blog-12894539.post-55811676782669206502009-07-04T20:14:00.016+08:002009-07-04T20:56:51.306+08:00நாளை - சூலை 5:- உலகமெலாம் 'உயிர்த்தெழுவோம்'<div align="center"><strong><span style="color:#000066;">மலேசியாவில் - உயிர்த்தெழுவோம்</span></strong> </div><div align="center"></div><div align="center"><img id="BLOGGER_PHOTO_ID_5354585117405448514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sk9Oy2KLiUI/AAAAAAAAArw/El89DHUih2A/s400/uryitheluvon2009.jpg" border="0" /><strong><span style="font-size:85%;">நாள் :- 5 சூலை 2009 (ஞாயிற்றுக்கிழமை)</span></strong></div><div align="center"><strong><span style="font-size:85%;">நேரம் :- இரவு மணி 7.00 முதல்</span></strong></div><div align="center"><strong><span style="font-size:85%;">இடம் :- சாரணியர் மண்டபம், பிரிக்பீல்ட்டு. கோலாலம்பூர்.</span></strong></div><div align="center"><strong><span style="font-size:85%;">தொடர்புகளுக்கு : 016-3262479 / 012-3142900 / 016-6031085 </span></strong></div><strong><span style="font-size:85%;"><div align="center"><br /></span></strong><strong><span style="color:#000066;">ஒசுலோவில் - உயிர்த்தெழுவோம்</span></strong></div><div align="center"><strong><span style="color:#000066;"></span></strong> </div><div align="center"><strong><span style="color:#000066;"></span></strong></div><img id="BLOGGER_PHOTO_ID_5354584187849580706" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sk9N8vSyoKI/AAAAAAAAAro/OyjzJJ7CX60/s400/uryitheluvon2009+france.jpg" border="0" /><br /><div align="center"><strong><span style="color:#000066;">ஆத்திரேலியா, சிட்னியில்- உயிர்த்தெழுவோம்</span></strong></div><div align="center"><strong><span style="color:#000066;"></span></strong> </div><div align="center"></div><img id="BLOGGER_PHOTO_ID_5354583844805731666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 284px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sk9NoxWw5VI/AAAAAAAAArg/qwEGpsrukmo/s400/Sydney_uyirthezhuvom_TamilNational.jpg" border="0" /><br /><div align="center"><strong><span style="color:#000066;">இத்தாலியில் - உயிர்த்தெழுவோம்</span></strong></div><div align="center"></div><img id="BLOGGER_PHOTO_ID_5354583528834261154" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sk9NWYRS4KI/AAAAAAAAArY/PfLiToHWhwM/s400/ITALYuyirtheluvom-july-05.jpg" border="0" /><br /><div align="center"><strong><span style="color:#000066;">இத்தாலியில் - உயிர்த்தெழுவோம்</span></strong> </div><div align="center"></div><img id="BLOGGER_PHOTO_ID_5354583181998793314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 275px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sk9NCMNRomI/AAAAAAAAArQ/9rJXJ-Hi-DU/s400/Italy_uyirthezhuvom_TamilNational.jpg" border="0" /><br /><div align="center"><strong><span style="color:#000066;">நெதர்லாந்தில் - உயிர்த்தெழுவோம்</span></strong></div><div align="center"></div><img id="BLOGGER_PHOTO_ID_5354580734198191330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 269px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sk9KztcIlOI/AAAAAAAAArI/eNJJElR9Yvc/s400/Germany_uyirthezhuvom_TamilNational.jpg" border="0" /><br /><div align="center"><strong><span style="color:#000066;">நியுசிலாந்தில் - உயிர்த்தெழுவோம்</span></strong></div><div align="center"></div><img id="BLOGGER_PHOTO_ID_5354579987271762242" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sk9KIO6_wUI/AAAAAAAAArA/YYnxNCaba_E/s400/EluchiNaal.jpg" border="0" /><br /><div align="center"></div><div align="center"><strong><span style="color:#000066;">டென்மார்க்கில் - உயிர்த்தெழுவோம்</span></strong></div><div align="center"></div><img id="BLOGGER_PHOTO_ID_5354579722022114514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sk9J4yyjVNI/AAAAAAAAAq4/v7ws9ZAGlKQ/s400/Denmark_uyirthezhuvom_TamilNational.jpg" border="0" /><br /><div align="center"><strong><span style="color:#000066;">கனடா, குயின்சுபர்ககில் - உயிர்த்தெழுவோம்</span></strong></div><div align="center"></div><img id="BLOGGER_PHOTO_ID_5354579426274628434" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 264px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sk9JnlC201I/AAAAAAAAAqw/5LoiovlLLdY/s400/Canada_uyirthezhuvom_TamilNational.jpg" border="0" /><br /><div align="center"></div><div align="center"><strong><span style="color:#000066;">கனடா, கல்கரியில் - உயிர்த்தெழுவோம்</span></strong></div><div align="center"><strong><span style="color:#000066;"></span></strong></div><img id="BLOGGER_PHOTO_ID_5354579074609333090" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sk9JTG_UQ2I/AAAAAAAAAqo/kaqkdU27CeQ/s400/Canada_Calgary_uyirthezhuvom_TamilNational.jpg" border="0" /><br /><div align="center"><strong><span style="color:#000066;">சுவிசில் - உயிர்த்தெழுவோம்</span></strong></div><div align="center"><strong><span style="color:#000066;"></span></strong></div><img id="BLOGGER_PHOTO_ID_5354578689351863170" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sk9I8ryxy4I/AAAAAAAAAqg/xp_8T3M-BA4/s400/basel2.jpg" border="0" /> <div align="center"></div><div align="center"></div><br /><div align="center"><strong><span style="color:#000066;">பெங்களூரில் - உயிர்த்தெழுவோம்</span></strong></div><div align="center"></div><div align="center"><img id="BLOGGER_PHOTO_ID_5354578072001883234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sk9IYv_ErGI/AAAAAAAAAqY/mo-nuGfLJOI/s400/adview__05-07-2009.jpg" border="0" /><br /><div align="center"></div></div><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-5581167678266920650?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com1tag:blogger.com,1999:blog-12894539.post-50566127241328648712009-06-30T22:34:00.007+08:002009-06-30T23:01:40.881+08:00பிரான்சில் நடைபெற்ற தமிழ்மொழி பொதுத் தேர்வு 2009<div align="justify"> <strong><span style="font-size:85%;">உலகின் பல நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி பயிலப்பட்டு வருகின்றது என்பது தமிழர்களில் பலரும் அறியாத செய்தியாக உள்ளது. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி அரசின் அதிகாரத்தோடு நடைபெறுகிறது. இந்நிலையில், பிரான்சு போன்ற நாடுகளிலும் தமிழ்மொழிக் கல்விக்குத் தகுந்த வாய்ப்பு இருக்கிறது என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.</span></strong></div><div align="center"><img id="BLOGGER_PHOTO_ID_5353132243070350754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Skolabfl9aI/AAAAAAAAAp4/E1UA4cRWLkc/s400/france+exam1.bmp" border="0" /></div><div align="center"><strong><span style="color:#000099;">(தேர்வெழுதும் பிரான்சு தமிழ் மாணவர்கள்)<br /></div></span></strong><div align="justify">தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் அனைத்துலக அளவிலாக நடாத்தப்படுகிற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27.06.2009 சனிக்கிழமை 02.00 மணிக்கு பிரான்சில் நடைபெற்றது. பிரான்சில் இயங்கிவரும் 59 தமிழ்ச்சோலைப் பள்ளிகளையும் ஒருங்கிணைக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் பிரான்சில் நடைபெற்ற தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கமைத்திருந்தது. </div><div align="justify"><br /></div><div align="justify">இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 3134 மாணவர்களில் 2979 மாணவர்கள் தேர்வுக்கு அமர்ந்தனர். 163 ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாகவும். தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் 65 பேர் மண்டப ஒழுங்கமைப்பாளர்களாகவும். தமிழ்ச்சோலை உறுப்பினர்கள் 14 பேர் கண்காணிப்பாளர்களாகவும், 7 தலைமைப்பணியக நிருவாகிகள் மண்டப பொறுப்பாளர்களாகவும் கடமையாற்றினர். </div><div align="justify"><br /></div><div align="justify"></div><img id="BLOGGER_PHOTO_ID_5353133684074904034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 268px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SkomuTp2eeI/AAAAAAAAAqA/AAGFDGpCwEc/s400/france+exam3.bmp" border="0" /> <p align="center"> <strong><span style="color:#000099;">(தேர்வை வழிநடத்தும் பொறுப்பாசிரியர்கள்)</span></strong><br /><br /></p><p align="justify">பாரிசும் அதன் புறநகர்ப் பகுதியையும் சேர்ந்த 2987 மாணவர்கள் <em>LA PLACE</em> என்னும் பகுதியில் அமைந்த <em>Maison des Examens</em> என்னும் ஒரே தேர்வு மண்டபத்தில் தோற்றியிருந்தனர். ஏனைய 147 மாணவர்கள் <em>Mulhouse, Toulouse, Montauban, Strasbourg, Rennes, Nice, Lyon, Tours</em> ஆகிய எட்டு மாநிலங்களில் உள்ள தேர்வு மண்டபங்களில் கூடியிருந்தனர். </p><div align="justify">கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு பெருமளவான மாணவர்கள் தேர்வில் அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.</div><div align="justify"> </div><img id="BLOGGER_PHOTO_ID_5353134449551489266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 299px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Skona3RsOPI/AAAAAAAAAqI/lQv6hCDeT6U/s400/france+exam2.bmp" border="0" /> <p align="center"><span style="color:#000099;"><strong>(மண்டபத்திற்கு வெளியில் திரண்டிருக்கும் பெற்றோர்கள்)</strong><br /></span><br /></p><p align="justify">மேலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மிகவும் சிரத்தையோடு அவர்களுக்கான நல்ல வாழ்க்கைப் பாதையையும் எதிர்காலத்தையும் ஏற்படுத்துவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் தமிழ் மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்த வளமான கல்வியையும், பண்பாட்டையும் தமிழ்ச்சோலைகள் வழங்கி வருகின்றது.<br /></p><p align="justify">மேலும் பிரான்சின் கல்வி முறையில் உயர்க்கல்விக்காகத் தமிழ் மொழிக்கல்வியின் தேர்ச்சியும் இணைத்துக்கொள்ளப்படுவதால் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் பயனடைகிறார்கள். தற்போது விடுமுறை விடப்பட்டுள்து.</p><div align="justify"></div><ul><li><div align="justify"><span style="font-size:85%;"><em>நன்றி: அதிர்வு இணையம்</em></span></div></li></ul><p align="justify"> </p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-5056612724132864871?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com1tag:blogger.com,1999:blog-12894539.post-56087675856729571712009-06-22T21:46:00.009+08:002009-06-22T22:40:54.239+08:00"நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம்" என்றால் என்ன? தெரிய வேண்டிய தெளிவுகள்.<div align="justify"> <a href="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sj-TEog3bYI/AAAAAAAAApQ/urAMKxVNNNc/s1600-h/photo2fd2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5350156590143466882" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sj-TEog3bYI/AAAAAAAAApQ/urAMKxVNNNc/s320/photo2fd2.jpg" border="0" /></a><br /></div><div align="justify"><br /></div><div align="justify"><strong><span style="font-size:85%;">அண்மையக் காலத்தில் மிகப் பரவலாகப் பேசப்படும் விடயம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படுவதாகும். பரபரப்பாக பேசப்படும் இவ்விடயம் பலருக்கும் தெரியாத ஒன்றாக - பரவலாக அறியப்படாத ஒன்றாக இருக்கின்றது. "நாடு கடந்த அரசாங்கம்" என்றால் என்ன? இதனைப் பற்றிய தெளிவினை வழங்கும் கட்டுரை இது.</span></strong></div><div align="justify"><br /></div><div align="justify">இன்று உலகில் பல, நாடு கடந்த அரசாங்கங்கள் <strong><em>(Provisional Transnational Government)</em></strong> செயற்பட்டு வருகின்றன. இந்த நாடு கடந்த அரசின் முதல் வித்தாக பெலாரசியன் தேசிய குடியரசு காணப்படுகின்றது.</div><div align="justify"><br /></div><div align="justify">நாடு கடந்த அரசாங்கம் என்பது, அரசியலில் ஈடுபடும் அல்லது ஒரு குழுவினர், சொந்த நாட்டில் தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதாகும்.</div><div align="justify"><br />காலப் போக்கில் இந்த அரசானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று சக்திகளையும் அதிகாரங்களையும் மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவது ஆகும்.</div><div align="justify"><br />இரண்டாம் உலகப்போரில் பல ஜரோப்பிய நாடுகளை இட்லரின் நாசிசப் படைகள் கைப்பற்றியதனால், பல ஜரோப்பிய நாடுகள் பிரித்தானியாவில், இவ்வாறான நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்திருந்தனர். ஆகையால் அவர்கள் தேசியம் காப்பாற்றப்பட்டது. 1920 ஆண்டில் பெலருசின் என்ற அமைப்பு தனது நாடு பெலரூசால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்றுவரை, நாடு கடந்த அரசாங்கமாக இயங்கி வருகிறது. </div><div align="justify"> </div><img id="BLOGGER_PHOTO_ID_5350157659002847170" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 149px; CURSOR: hand; HEIGHT: 115px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sj-UC2UzP8I/AAAAAAAAApg/0sUPSYKKEHM/s400/dalai+lama.jpg" border="0" /> <p align="justify">அத்துடன் திபெத்திய பீட பூமியை சீன அரசானது ஆக்கிரமிப்புச் செய்தபோது அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா அவர்கள் இந்தியாவுக்குச் சென்று இன்றுவரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.<br /></p><p align="center"><strong>தற்போது சுமார் 11க்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங்கங்கள் உலகில் இயங்கிவருகின்றன. அதன் விவரம் பின்வரும் அட்டவணையில்:-</strong></p><img id="BLOGGER_PHOTO_ID_5350156748188106210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 386px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sj-TN1RpPeI/AAAAAAAAApY/v_StsW5Ynkg/s400/exile-government.jpg" border="0" /> <div align="justify"></div><div align="center"><strong></strong> </div><div align="center"><strong>நாடு கடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள்:-</strong></div><br /><div align="justify"><strong>1.</strong>அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்</div><br /><div align="justify"><strong>2.</strong>தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுத்துக் கொள்ளுதல் </div><br /><div align="justify"><strong>3.</strong>தேசியத்தின் சட்ட முறைமைகளைப் பாதுகாத்தல்</div><br /><div align="justify"><strong>4.</strong>ஒரு தேசிய இராணுவத்தை காப்பது அல்லது கட்டி எழுப்புதல்</div><br /><div align="justify"><strong>5.</strong>அரசியல் நிலையில் அல்லது அரசதந்திர நிலலயில் நாட்டின் தேசியத்தை ஒன்றுபடுத்துதல்</div><br /><div align="justify"><strong>6.</strong>தேசிய அடையாள அட்டை வழங்குதல்</div><br /><div align="justify"><strong>7.</strong>ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளை உருவாக்குதல்</div><br /><div align="justify"><strong>8.</strong>தேர்தல்களை நடத்துதல்</div><br /><div align="justify"></div><div align="justify">முதலான செயற்பாடுகளை நாடுகடந்த அரசாங்கத்தால் செயல்படுத்த முடியும்.</div><br /><div align="justify"></div><img id="BLOGGER_PHOTO_ID_5350158406162101506" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 166px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sj-UuVtctQI/AAAAAAAAApo/n3PhqwYm9ME/s320/world_map.gif" border="0" /> <p align="justify"><strong>நாடு கடந்த அரசாங்கத்தினை உருவாக்கத் தேவையானவை:-<br /></strong><br />நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க, ஏதாவது ஒரு வெளிநாட்டின் அனுமதி அல்லது முழு அங்கிகாரம் தேவைப்படுகிறது. அந்த நாட்டிலேயே நாடு கடந்த அரசாங்கத்தை நடத்த முடியும்.</p><div align="justify"></div><div align="justify"> </div><div align="justify"><strong>நாடு கடந்த அரசாங்கத்தால் என்ன பயன்:-</strong></div><br /><div align="justify"><strong>1.</strong>பல வெளிநாடுகளில் தமது அரசின் அதிகாரப்படியான தூதுவர்களை நியமிக்க முடியும். </div><br /><div align="justify"></div><div align="justify"><strong>2.</strong>வெளிநாட்டு அரசாங்கங்களுடன், ஒரு நாட்டு அரசாங்கம் போல தகுதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியும்.</div><br /><div align="justify"></div><div align="justify"><strong>3.</strong>குறிப்பிட்ட நாட்டுடன் தனது பிணக்குகள் குறித்து பேச்சுவார்தை நடத்தி தீர்வுகான ஏதுவாக இருக்கும். </div><br /><div align="justify"></div><div align="justify"><strong>4.</strong>பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள எமது சமுதாயத்தினை சமூக, பொருளாதார, பண்பாட்டு அடிப்படையில் பலப்படுத்துவதற்கும், எமது தாய்மண்ணில் சுதந்திரத் தமிழீழ அரசுரிமையைப் பெறுவதற்கும், உலகச் சவால்களை அனைத்துலக நிலையில் அணுகுவதற்கும் இந்த நாடு கடந்த அரசாங்கமானது பெரிதும் உதவியாக இருக்கும். </div><br /><div align="justify"></div><div align="justify">இவ்வாறு பல திறமைகள் இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்கு உண்டு. </div><br /><div align="justify"></div><br /><div align="justify"><strong>நாடு கடந்த அரசாங்கத்திற்கு பாதகம் வருமா?</strong></div><br /><div align="justify">ஆம். நாடு கடந்த அரசாங்கமானது செவ்வனே செயல்பட ஒரு நாட்டின் தஞ்சம் அல்லது அங்கிகாரம் தேவை. தஞ்சம் தரும் வெளி நாடு தனது ஆதரவை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் இதன் அதிகாரம் இழக்கப்படக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது. </div><br /><div align="justify"></div><div align="justify">ஆகவே, மிகவும் பொறுமையுடனும், ஆழ்ந்த அறிவு மற்றும் அரசியல் மதிநுட்பம் கொண்டு கையாளப்படவேண்டிய விடயம் இது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்த பின்னரும் வெளிநாடுகள் தாம் விரும்பும் பட்சத்திலேயே இதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதாவது ஏற்பதும் நிராகரிப்பதும் ஒவ்வொரு வெளிநாட்டின் தனிப்பட்ட விருப்பமாகும்.</div><br /><div align="justify"></div><div align="center"><strong>நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உடனடியாகச் செய்ய வேண்டியன?</strong></div><br /><img id="BLOGGER_PHOTO_ID_5350158967867483650" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 262px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sj-VPCOcpgI/AAAAAAAAApw/PQUURdcMEsk/s320/eelammap.png" border="0" /> <div align="justify">ஈழத்தில் ஒரு இன அழிப்பு நடவடிக்கை நடந்து முடிந்துள்ள போதும் அதற்காக உலக நாடுகள் வருத்தம் தெரிவித்தது தவிர வேறொரு தீர்வையும் பேசவில்லை. ஆகவே, உலக நாடுகள் ஈழச் சிக்கலை இனங்கண்டு, தலையிட்டு, தமிழீழத்தை அங்கீகரித்தால் அன்றி அங்கு அமைதி என்பதையே காணமுடியாது. ஆனால் உலக நாடுகள் தாமாகவே வந்து இதில் தலையிடக்கூடிய நிலை உள்ளதாகத் தெரியவில்லை. </div><br /><div align="justify"></div><div align="justify">எனவே இப்போதைய உலகத்தைச் செயற்பட வைக்க வேண்டும் என்றால் முதலில் ஈழ மக்கள் இப்போதைய நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்று உருவாகுவதற்கும் தனித்துவம், கௌரவம், ஆசைகள், வாழ்வு என்பவற்றைப் பாதுகாப்பது பற்றித் தெளிவு கொள்ள வேண்டும். </div><br /><div align="justify"></div><div align="justify">உண்மை நிலவரம் என்னவென்றால் இலங்கையின் தனித்துவத்தை(இறையாண்மை) ஏற்றுக் கொள்ளும்படி கொழும்பு பல முரட்டு வழிகளைப் பின்பற்றும், இந்தியாவும் சில வேறு நாடுகளும் அதற்கு ஆதரவளிக்கும், ஆனால் நாம் நாடுகடந்த தமிழீழ ஆட்சி முறையால் இவற்றை உடைத்தெறிய வேண்டும்.</div><br /><div align="justify"></div><div align="justify">அனைத்துலக அளவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக புலிகள் இயக்கம் இருந்த போதும் அதன் உலகளாவிய உட்கட்டமைப்பு மிகவும் வலுவான ஒன்று. புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களை ஒற்றுமையாகவும் எழுச்சியுணர்வு உள்ளவர்களாகவும் கட்டிக்காத்து வந்தது புலிகள் இயக்கமே ஆகும். வெளிநாடுகளில் நிறுவப்பட்ட நிருவாக, நிதி அமைப்புகள் யாவும் முழுமையான - முறையான இயக்கத்திலேயே இப்போதும் உள்ளன. </div><br /><div align="justify"></div><div align="justify">எனவே, தற்போது உள்நாட்டில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் வேறுபாடின்றி மக்களுக்காகச் செயற்படவேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தஞ்சம் கொடுக்க ஒரு உலக நாடு தேவை என்பதை விட மிக அவசியமாக இப்போது தேவைப்படுவது உலகம் முழுதும் வாழும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் ஆற்றல் மிகுந்த ஆதரவே யாகும்.</div><br /><p align="justify"></p><p align="justify"> </p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-5608767585672957171?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com1tag:blogger.com,1999:blog-12894539.post-78572175163837511572009-06-19T23:30:00.007+08:002009-06-19T23:41:28.815+08:00"தேசியத் தலைவருக்கு வீரவணக்கம்" புலிகளே அறிவித்ததாக ஓர் அறிவிப்பு<div align="center"><br /></div><div align="center"><a href="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SjuvveuSrRI/AAAAAAAAAoo/Ek9F6jvYMOk/s1600-h/praba+5.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5349062212668534034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 244px; CURSOR: hand; HEIGHT: 166px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SjuvveuSrRI/AAAAAAAAAoo/Ek9F6jvYMOk/s320/praba+5.bmp" border="0" /></a>தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் தாம் வீரவணக்கத்தைச் செலுத்துவதாக அறிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் போராட்டத்தின் அடுத்தபடி நிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.<br /><br /><div align="justify">இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப் பிரிவின் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: </div></div><div align="center"><br /></div><a href="http://www.puthinam.com/full.php?2b1VoUe0dIcYy0ecAA4I3b4q6DX4d3f1e2cc2AmS3d434OO3a030Mt3e"><img id="BLOGGER_PHOTO_ID_5349063442258149890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 209px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sjuw3DTTQgI/AAAAAAAAApA/-dR2dnzF0uE/s400/ltte_20090618001.jpg" border="0" /></a> <p align="center"><strong>(படத்தின் மீது சொடுக்கி முழுச் செய்தியைப் படிக்கவும்)</strong></p><p align="center"> </p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-7857217516383751157?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com0tag:blogger.com,1999:blog-12894539.post-75314266806638267112009-06-12T09:42:00.006+08:002009-06-12T09:55:41.047+08:00உலக மொழிகளில் தமிழுக்கு 15ஆவது இடம்<a href="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SjG1GS-iUvI/AAAAAAAAAoY/X5NVu-mo_9s/s1600-h/nyalam.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5346253352443466482" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 170px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SjG1GS-iUvI/AAAAAAAAAoY/X5NVu-mo_9s/s200/nyalam.JPG" border="0" /></a><br /><div align="justify"><strong>உலகில் இன்று பேசப்படும் மொழிகளில் பழமைவாய்ந்த தமிழ்மொழி 15ஆவது இடத்திற்குத் தரப்படுத்தப்பட்டுள்ளதாக மனிதவுரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது.</strong> </div><br /><div align="justify"></div><div align="justify">உலகில் இன்று 6 ஆயிரத்து 800 மொழிகள் புழக்கத்தில் உள்ளன.</div><br /><br /><br /><div align="justify">அதில், 2 ஆயிரத்து 261 மொழிகள் எழுத்துருவை பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன.</div><br /><div align="justify">1996ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக மொழியுரிமை பிரகடனத்தின் படி ஒரு மொழியின் வரலாற்றுத்தன்மை, அதன் எல்லை, அங்கீகரிப்பு, போற்றவையை அடிப்படையாகக் கொண்டு மொழிகள் தரப்படுத்தப்படுகின்றன.</div><br /><div align="justify">ஆசியாவில் மாத்திரம் 2 ஆயிரத்து 200 மொழிகள் பேசப்படுகின்றன.</div><br /><div align="justify">ஆபிரிக்காவில் 2 ஆயிரம் மொழிகளும், பசுபிக் நாடுகளில் ஆயிரத்து 300 மொழிகளும், ஐரோப்பாவில் 230 மொழிகளும் பேசப்படுகின்றன.</div><br /><div align="justify">இந்தநிலையில், உலகில் வாழும் மொழிகள் என்ற அடிப்படையில் நோக்குமிடத்து தமிழ் மொழி 15 க்கும், 17 க்கும் இடைப்பட்ட இடத்தினைப் பெற்றுள்ளது.</div><br /><div align="justify"></div><div align="justify">மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொரீசியசு, தென்னிந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, மற்றும் 1862 ம் ஆண்டு பிரித்தானிய காலணித்துவத்தைக் கொண்ட இலங்கையின் மலைநாட்டுப்பகுதி என்பவற்றில் தமிழ்மொழி புழக்கத்தில் உள்ளது.</div><br /><div align="justify">தமிழ் மொழிக்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. போர்த்துக்கல், நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் போன்ற இடங்களில், இதற்கான சான்றுகள் உள்ளன.</div><br /><div align="justify">இவற்றை 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததை போன்று நாசமாக்க முடியாது என மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.</div><br /><div align="justify">சுமார், ஆறு பத்தாண்டுகளாக அனைத்துலகச் சமூகத்தினால் பாதிப்புக்குள்ளான தமிழ் மொழி பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.</div><br /><br /><div align="justify"></div><div align="justify"><strong><em><span style="font-size:85%;">-ஆதாரம்:தமிழ்வின்</span></em></strong></div><br /><p align="justify"> </p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-7531426680663826711?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com4tag:blogger.com,1999:blog-12894539.post-35433350909431699982009-06-11T00:55:00.004+08:002009-06-11T01:05:22.667+08:00உயிருக்குப் போராடும் 300,000 தமிழர்களுக்கு உதவ ஓடி வாருங்கள்<a href="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Si_m9eMZqKI/AAAAAAAAAoI/reNI7xOJze0/s1600-h/kalam-pulam.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5345745226463553698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 310px; CURSOR: hand; HEIGHT: 250px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Si_m9eMZqKI/AAAAAAAAAoI/reNI7xOJze0/s400/kalam-pulam.jpg" border="0" /></a><br /><div align="justify"><strong>பாதுகாப்பு வளையம் என்ற தடுப்பு முகாம்களில் 300,000 தமிழர்களை சிங்கள அரசாங்கம் அடைத்து வைத்திருக்கிறது.</strong></div><br /><div align="justify">ஐநாவின் பொதுச் செயலாளர் பான் மூன்-கின்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படுமோசமான சூழ்நிலையில் உண்ண உணவின்றி, குடிநீர் இன்றி, மருத்துவ வசதி இன்றி பரிதவிக்கும் 300,000 தமிழ் மக்களின் உயிர் உங்கள் கையில்!</div><br /><div align="justify"></div><div align="center"><strong>மலேசியர்களே, ஓடி வாருங்கள்!! உயிர்களைக் காப்பாற்றுங்கள்!!!<br />பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், அரிசி, சீனி, மருந்துகள் ஆகியவற்றோடு நிதி உதவியும் அளிக்க ஓடி வாருங்கள்: நாளையல்ல, இன்றே வாருங்கள்.</strong></div><br /><div align="justify"><strong>நிவாரண சேகரிப்பு மையம்:<br /></strong>விவேவகனந்தா ஆசிரமம், ஜாலான் துன் சம்பந்தன், பிரிக்பீல்ட்டு, கோலாலம்பூர்.</div><br /><div align="justify"><strong>நேரம்:</strong> தினமும் காலை மணி 10.00 லிருந்து இரவு மணி 8.00 வரை. </div><br /><div align="justify"><strong>மேல் விவரங்களுக்கு:<br /></strong>இளந்தமிழ் 012-314 3910; மாலா 017-287 4872; தனா 017-376 7140. </div><br /><div align="justify">300,000 தமிழர்கள் அனாதைகளைப்போல் கையேந்தி நிற்கிறார்கள்.<br />அவர்கள் அனாதையானவர்கள் அல்லர். நாம் இருக்கிறோம்!</div><br /><div align="justify">நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் ஆகக் குறைந்தது ஒரு கிலோ சீனி வழங்க முடியும்.</div><br /><div align="justify">வாருங்கள். விரைந்து வாருங்கள். ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் துடிக்கிறது! </div><br /><div align="center"><br /><strong><span style="font-size:180%;color:#006600;">********************************</span></strong></div><br /><div align="center">An Appeal To All Malaysians<br />300,000 Sri Lankan Tamils have been detained in detention centres called “Safety Zones” by the Sinhalese Government of Sri Lanka.</div><br /><div align="center">The conditions obtained in the detention centre to which the UN Secretatry General Ban Moon-kin was taken for a visit had shocked him thoroughly. Imagine the conditions in other detetion centres. There is no food, no drinking water, no medical facilities for the 300,000 Tamils held in the detention centres. </div><br /><div align="center">These starving, uncared for 300,000 Tamil civilians need our help now and that immediately. Please come forward and help them.</div><br /><div align="center">Canned food, rice, sugar, medicines, toliletries and cash donations are most welcome. Receipt will be issued for cash donations.</div><br /><div align="center"><strong>Operation Centre:<br />Vivikananda Asrama, Jalan Tun Sambanthan, Brickfields, Kuala Lumpur.<br />Time: Daily from 10.00 am to 8.00pm.<br />For Further information, please call:<br />Elan 012-314 3910; Mala 017-287 4872; Thana 017-376 7140.</strong></div><br /><div align="center">300,000 Tamils in Sri Lankan detention centres need your help TODAY. </div><div align="center">Please come forward TODAY!</div><br /><div align="center">Good news: 44 Malaysian doctors are ready to leave for Sri Lanka.</div><br /><div align="left"><strong><span style="font-size:85%;">செய்தி:-மலேசியாஇன்று.காம்</span></strong></div><p align="left"> </p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-3543335090943169998?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com0tag:blogger.com,1999:blog-12894539.post-61021938973934115412009-06-07T00:47:00.010+08:002009-06-07T12:37:01.810+08:00வீழ்ந்த வீரர்களும்.. வென்ற கோழைகளும்..<a href="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Siqe_6rh85I/AAAAAAAAAoA/qMXfN2FmOAk/s1600-h/610x.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5344258728749298578" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 216px" alt="" src="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Siqe_6rh85I/AAAAAAAAAoA/qMXfN2FmOAk/s320/610x.jpg" border="0" /></a><br /><strong>முள்ளிவாய்க்கால்....</strong><br /><strong>தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து....</strong><br /><strong>மலைகள் பல சாய்ந்து.....</strong><br /><br /><strong>இரத்தத்தில் </strong><br /><strong>நிலமெல்லாம் குளமாகி......</strong><br /><strong>தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி.....</strong><br /><br /><strong>இறுதிவரை </strong><br /><strong>வீரம் சொல்லிய மண்.....</strong><br /><strong>வேங்கைகை பல சாய்ந்த மண்....</strong><br /><br /><strong>வல்லரசின் </strong><br /><strong>வீரர்களைச் சேர்த்து....</strong><br /><strong></strong><br /><strong>வாங்கி வந்த</strong><br /><strong>குண்டுகளைப் போட்டு....</strong><br /><strong></strong><br /><strong>பறந்து வந்து</strong><br /><strong>எரிமலையை போட்டு....</strong><br /><strong></strong><br /><strong>பாய்ந்து வரும்</strong><br /><strong>பீரங்கியால் தாக்கி...</strong><br /><strong></strong><br /><strong>எத்தனை படுகொலையை</strong><br /><strong>இலகுவாய் செய்துவிட்டு......</strong><br /><strong>வெற்றியாம் வெற்றி....!</strong><br /><strong>அவர்கள் வீரராம் வீரர்....!</strong><br /><strong></strong><br /><strong>கோழையின் வெற்றி</strong><br /><strong>உன் கொல்லைப்புறம் மட்டும் தான்....</strong><br /><strong>வந்தவர்கள் போய்விட்டால்</strong><br /><strong>உன் வாழ்க்கை மட்டம் தான்....</strong><br /><strong></strong><br /><strong>நம் வீரர் பலர் வீழ்ந்தாலும்</strong><br /><strong>விடாத பயம் உனக்கேன்....?</strong><br /><strong>நீ நூற்றுவிட்ட விடுதலை தீ</strong><br /><strong>நாட்களானால் பற்றுமென்றா....?</strong><br /><br /><strong>பதறாதே கோழைகளே</strong><br /><strong>பதில் அதற்கு உன்னிடம் தான்....!</strong><br /><strong>என் நாளும் பக்கத்தில் வரமாட்டார்.....</strong><br /><strong>உலக சன சமூகந்தான்....!</strong><br /><br /><strong>ஓர் இனத்தின் விடுதலையை</strong><br /><strong>ஏளனமாய் பார்க்காதே...</strong><br /><strong>வரலாறுகள் படித்துப் பார்</strong><br /><strong>பின்னர் உன்கண்ணும் தூங்காதே....!</strong><br /><br /><strong>நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்</strong><br /><strong>நம் வீரம் விழவில்லை.....!</strong><br /><strong>விடுதலை கிடைக்கும் வரை</strong><br /><strong>நாம் தூங்கப் போவதில்லை....!</strong><br /><br /><br /><div align="right"><strong><em><span style="font-size:85%;">ஆக்கம்:-இளங்கவி</span></em></strong></div><div align="right"></div><p align="right"></p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-6102193897393411541?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com0tag:blogger.com,1999:blog-12894539.post-89349475989221228842009-06-03T19:13:00.005+08:002009-06-03T19:29:13.343+08:00இயற்கை எய்திய தமிழறிஞர் இரா.திருமுருகனாருக்கு ஆழ்ந்த இரங்கல்<div align="center"><strong>தமிழறிஞர் - முதுபெரும்புலவர் - இலக்கணச்சுடர் - இசைவாணர்</strong> </div><br /><div align="center"><img id="BLOGGER_PHOTO_ID_5343058150711704338" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 279px; CURSOR: hand; HEIGHT: 355px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SiZbFE9tOxI/AAAAAAAAAn4/TNHlpEwy8Gg/s400/thirumuruganar.jpg" border="0" /><br /><strong>முனைவர் இரா திருமுருகனார் அவர்கள் </strong></div><div align="center"><strong>இன்று 03.06.2009 அறிவன் (புதன்) கிழமை அதிகாலை 1.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.</strong></div><div align="center"><br />இவண்:- </div><div align="center">தி. யமுனா (மனைவி) </div><div align="center">தி.அறவாழி (மகன்) </div><div align="center">அ.இரேணுகா அறவாழி (மருமகள்) </div><div align="center">அ.செம்மல் (பெயரன்) </div><div align="center">அ.தென்றல் கார்த்திக் (பெயர்த்தி) </div><div align="center"></div><div align="center">தொடர்புக்கு:</div><div align="center">+ 91 936 266 4390 செல்பேசி</div><div align="center">+ 91 413 2201191 தொலைபேசி </div><div align="center"></div><div align="center"><strong><span style="font-size:180%;">******************************</span></strong></div><div align="justify"><strong>மலேசியத் தமிழ் அன்பர்கள் - தமிழ்ப் பற்றாளர்கள் சார்பில், அன்னாரின் ஆதன் இறைமைத் திருவடியில் அமைதி பெற இறைஞ்சுவதோடு அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தாளாத துயரத்துடன் திருத்தமிழ் வலைப்பதிவின் வழியாக தெரிவித்துக் கொள்கிறேன்</strong></div><div align="justify"></div><div align="center"><strong><span style="font-size:180%;">******************************</span></strong></div><div align="justify"><strong>பி.கு:- திருமுருகனார் வாழ்க்கைக்குறிப்பு அறிய <a href="http://muelangovan.blogspot.com/2008/09/blog-post_21.html">இங்கே </a>சொடுக்குக.</strong></div><p align="justify"> </p><div align="justify"></div><div align="justify"><strong></strong></div><div align="justify"></div><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-8934947598922122884?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com1tag:blogger.com,1999:blog-12894539.post-25833608984922955502009-06-01T12:34:00.006+08:002009-06-01T13:01:42.858+08:00"நல்லவராக; அற்புத மனிதராக இருந்ததுதான் பிரபாகரன் செய்த மாபெரும் தவறு" ‍-சீமான்<div align="justify"><strong><span style="color:#000066;">பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம். வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன்</span> எ‌ன்று இய‌க்குந‌‌‌ர் ‌‌சீமா‌ன் கூ‌றினா‌ர். </strong></div><br /><a href="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SiNdTm551vI/AAAAAAAAAnw/Ym0w_C3Ydjg/s1600-h/seeman.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5342216174433851122" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 100px; CURSOR: hand; HEIGHT: 74px" alt="" src="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SiNdTm551vI/AAAAAAAAAnw/Ym0w_C3Ydjg/s400/seeman.jpg" border="0" /></a><br /><div align="justify"><strong>ஒரு த‌மிழ‌ன் த‌மிழனாக இரு‌ந்தத‌ற்காக ‌கிடை‌த்த ப‌ரிசு இது. ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை‌யி‌ல் ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு ஆதரவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் இ‌ங்கு ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள்.</strong></div><br /><div align="justify"></div><div align="justify">எ‌ன்னை‌‌த் தொட‌ர்‌ந்து 4 முறை ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர்க‌ள். நா‌ன் எ‌ன்ன தவறு செ‌ய்தே‌ன். எ‌ன் இன‌ம் அ‌ழி‌க்க‌ப்படுவதை‌க் க‌‌ண்டு ந‌ல்ல அ‌‌ப்பனு‌க்கு‌ப் ‌பிற‌ந்த எ‌ன்னா‌ல் பொறு‌க்க முடிய‌வி‌ல்லை. நா‌ன் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் எ‌ன் தொ‌‌‌ழி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. எ‌ன்னுடைய காரை எ‌‌ரி‌த்தா‌ர்க‌ள். உ‌யி‌ர் எ‌ன்பது உ‌திரு‌ம் ம‌யிரை‌ப் போ‌ன்றது. ஒரு இல‌ட்ச‌ம் து‌ப்பா‌க்‌கிகளை‌க் கட‌ந்து செ‌ன்று ‌பிரபாகரனை ச‌ந்‌தி‌த்தவ‌ன் நா‌ன். இத‌ற்கெ‌ல்லா‌ம் பய‌ப்பட மா‌ட்டே‌ன். பே‌சினா அடி‌ப்போ‌ம் இதுதா‌ன் ஜனநாயகமா? </div><br /><div align="justify"></div><div align="justify">தா.பா‌ண்டிய‌ன் காரை எ‌‌‌ரி‌த்தா‌ர்க‌ள். யாரை கைது செ‌ய்‌தீ‌ர்க‌ள். த‌மிழ‌ன் மன‌‌தி‌ல் இடி‌விழு‌ந்து ந‌ி‌ற்‌கிறா‌ன். த‌மி‌‌ழ்‌ச்சா‌தி உறை‌ந்து போ‌ய் ‌கிட‌க்‌கிறது. இ‌ந்‌தியா நட‌த்த‌ வே‌ண்டிய போரை நா‌ங்க‌ள் நட‌‌த்‌தியு‌ள்ளோ‌ம் எ‌ன்று ராஜப‌க்சே கொ‌க்க‌ரி‌க்‌கிறா‌ன். 25,000 ஈழ‌த் த‌‌மிழ‌ர்களை உ‌யிரோடு புதை‌த்து‌ள்ளன‌ர் ‌சி‌ங்கள‌வர்க‌ள்.</div><br /><div align="justify"></div><div align="justify">தி‌ருகோணமலையை அமெ‌ரி‌க்காவு‌க்கு ‌வி‌ட்டு‌க் கொடு‌த்‌திரு‌ந்தா‌ல் இ‌வ்வளவு பெ‌ரிய இழ‌ப்பை ச‌ந்‌தி‌த்து இரு‌க்க மா‌ட்டா‌ர். சி‌ங்கள‌வர்க‌ள் செ‌ய்த அ‌ட்டூ‌‌ழிய‌த்தை‌ப் போல நாமு‌ம் செ‌ய்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் ‌பிரபாகர‌ன் செ‌ய்ய‌வி‌ல்லை. க‌ற்ப‌ழி‌ப்புகளை நட‌த்‌தினா‌ர்க‌ள். ப‌ச்‌சிள‌ங் குழ‌ந்தைகளை கொ‌ன்று ‌‌கு‌வி‌த்தா‌ர்க‌ள். பிரபாகர‌ன் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ல், கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து 5 ல‌ட்ச‌‌‌த்‌திற‌்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ம‌க்களை கொ‌ன்று கு‌வி‌த்‌திரு‌க்க முடியு‌ம். அதை அவ‌ர் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை. </div><br /><div align="justify"></div><div align="justify">மரு‌த்துவமனை, ப‌ள்‌ளி‌க்கூட‌ம், பொதும‌க்க‌ள் வாழு‌ம் பகு‌‌திக‌ளி‌ல் கு‌ண்டுபோட வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டா‌ர். இ‌ன்றை‌க்கு, பிரபாகர‌னி‌ன் 75 வயது ‌த‌ந்தையு‌ம், 72 வயது தாயாரு‌ம் ‌சி‌ங்கள இராணுவ‌த்‌தி‌ன் ‌பிடி‌‌யி‌ல் இரு‌க்‌கிறா‌‌ர்க‌ள். விசாரணை எ‌ன்‌‌கிற பெய‌ரி‌ல் அழை‌த்து‌ச் செ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌வ‌ர்களை எ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌சி‌த்ரவதை செ‌ய்‌கிறா‌ர்களோ? தெ‌ரிய‌வி‌ல்லை.</div><br /><div align="justify"></div><div align="justify"><strong>சி‌ங்கள இராணுவ‌‌ம் செ‌ய்த அ‌த்து‌மீற‌ல்களு‌க்கு‌ம் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களு‌க்கு‌ம் ஆதார‌ம் இரு‌ப்பதாக இ‌ன்றை‌க்கு அமெ‌ரி‌க்கா சொ‌ல்‌கிறது. இ‌‌ந்த அமெ‌ரி‌க்கா அ‌ன்றை‌க்கு ஏ‌ன் சொ‌ல்ல‌வி‌ல்லை? ஐ.நா. பொது‌ச் செயல‌ர் பா‌ன் ‌கீ மூ‌ன் எ‌ல்லா‌ம் முடி‌ந்த ‌பிறகு இ‌ன்று இல‌ங்கை‌க்கு செ‌ன்று பா‌ர்வை‌யிடு‌கிறா‌‌ர். உலக‌த் த‌மி‌ழ் இனமே வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தபோது அ‌ன்றை‌க்கு அவ‌ர் செ‌ன்‌றிரு‌க்கலாமே? அ‌ன்று செ‌ல்ல‌‌வி‌ல்லை. </strong></div><br /><div align="justify"></div><div align="justify">சீனா செ‌ங்கொடி தூ‌க்‌கி ‌நி‌ற்‌கிறது. அ‌ந்த‌க் கொடியை தூ‌க்க அத‌ற்கு எ‌ன்ன தகு‌தி இரு‌க்‌கிறது. இ‌‌ங்‌கிலா‌ந்து, இ‌ஸ்ரே‌ல் போ‌ன்ற நாடுக‌ள் எ‌ல்லா‌ம் ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக வ‌ந்து ‌நி‌ற்‌கி‌ன்றன. ஆனா‌ல் இ‌ந்‌தியா எ‌‌திராக உ‌ள்ளது. இதை‌ச் சொ‌ன்னா‌ல் இறையா‌ண்மை ‌மீறலா? </div><br /><div align="justify"></div><div align="justify"><strong>நடேச‌ன், பு‌‌‌லி‌த்தேவ‌ன் உ‌ள்‌ளி‌ட்ட 350 பே‌ர் வெ‌ள்ளை‌க்கொடி தா‌ங்‌கி ‌சி‌ங்கள இராணுவ‌த்தை நோ‌க்‌கி வ‌ந்தா‌ர்க‌ள். அவ‌ர்களை வ‌‌ஞ்சகமாக கொ‌ன்று கொடு‌ஞ்செய‌ல் பு‌ரி‌ந்ததை உல‌கி‌ல் யாராவது க‌ண்டி‌த்து‌ள்ளா‌ர்களா? </strong></div><br /><div align="justify"></div><div align="justify">இதுவரை நட‌ந்தது மு‌ன்னோ‌ட்ட‌ம்தா‌ன். இ‌னி தா‌ண்டா போ‌ர் நட‌க்க‌ப் போ‌கிறது. <strong>5ஆ‌ம் க‌ட்ட‌‌ப் போ‌ரி‌ல் ‌பிரபாகர‌ன் கடைப்பிடி‌த்த மரபுகளை நா‌ங்க‌ள் கடைப்‌பிடி‌க்க‌ப் போ‌வ‌தி‌ல்லை. ஒரு ‌சி‌ங்கள‌வன் கூட ‌‌நி‌‌ம்ம‌தியாக உற‌ங்க முடியாத அள‌வி‌ற்கு தா‌க்குவோ‌ம். கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்துவோ‌ம்.</strong> மானமு‌ள்ள கடை‌சி ஒரு த‌மிழ‌ன் இரு‌க்கு‌ம்வரை ‌சி‌ங்கள‌வர்களு‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் தொடரு‌ம். </div><br /><div align="justify"></div><div align="justify">ந‌‌ள்‌ளிர‌வி‌ல் ஒரு பெ‌ண் நகை அ‌ணி‌ந்து பாதுகா‌ப்பாக நட‌ந்து செ‌ல்லு‌ம் போதுதா‌ன் சுத‌ந்‌திர‌ம் ‌கிடை‌த்து ‌வி‌ட்டதாக அ‌ர்‌த்த‌ம் எ‌‌ன்று கா‌ந்‌தி கூ‌றினா‌ர். இ‌ந்த கா‌ந்‌தி‌யி‌ன் கனவை ‌பிரபாகர‌ன் ‌நனவா‌க்‌கினா‌ர். அ‌‌ற்புதமான த‌மி‌‌ழ்‌‌த் தேச‌த்தை அ‌ங்கு ‌‌நி‌ர்மா‌ணி‌த்தா‌ர். நீ‌தி‌த்துறை, காவ‌ல்துறை உ‌ள்‌ளி‌ட்ட அனை‌த்து துறைகளையு‌ம் க‌ட்டமை‌த்தா‌ர். அ‌ங்கு ‌திருட‌ன் இ‌ல்லை, எ‌ந்த கு‌ற்றமு‌ம் நடைபெற‌வி‌ல்லை. அ‌ப்படி‌ப்ப‌ட்ட தேச‌த்தை ‌சிதை‌த்து ‌வி‌ட்டா‌ர்க‌ள்.</div><br /><div align="justify"></div><div align="justify">இத‌ற்கு காரணமாக இரு‌ந்த இ‌ந்‌திய அரசை க‌ண்டி‌ப்பது தவறா? இ‌ந்‌தியா எ‌ன்றா‌ல் ஒரு தேச‌ம். வா‌‌சுபா‌ய் உ‌ள்‌ளி‌ட்ட வேறு பலரு‌ம் ‌பிரதமராக இரு‌ந்து‌ள்ளா‌ர்க‌ள். தேச‌த்தை நா‌ன் குறை கூற‌வி‌‌ல்லை. கா‌ங்‌கிர‌ஸ் அரசையு‌ம் அத‌ன் தலைமையையு‌ம்தா‌ன் கு‌ற்ற‌ம்சா‌ட்டுகிறே‌ன். </div><br /><div align="justify"></div><div align="justify"><strong>இ‌ங்கு‌ள்ள த‌மிழ‌ர்க‌ள் பல‌ர் நட‌‌ந்து கொ‌ண்டதை ‌நினை‌க்கு‌ம்போது அவமானமாக இரு‌க்‌கிறது. பணமா? போரா‌ட்டமா? எ‌ன்ற கே‌ள்‌வி எழு‌ந்த போது, பண‌த்த‌ி‌ன் ப‌க்க‌ம் சே‌ர்‌ந்து ‌வி‌ட்டானே எ‌ன் த‌மிழ‌ன் எ‌ன்று ‌நினை‌த்து வெ‌ட்க‌ப்படு‌கிறே‌‌ன். எ‌ன் ‌வீ‌ட்டு‌க் கூரை ‌தீ‌ப்‌‌பிடி‌த்து எ‌ரியு‌ம்போதுதா‌ன், த‌ண்‌‌ணீ‌ர் எடு‌த்து வருவே‌ன் எ‌ன்ற எ‌ண்ண‌த்த‌ி‌ல் பல த‌‌மிழ‌ர்க‌ள் இ‌ங்கு உ‌ள்ளன‌ர்.</strong></div><br /><div align="justify"></div><div align="justify">இ‌ந்த‌நிலை ந‌ல்லதா? உன‌க்கு பா‌தி‌ப்பு வரு‌ம் போது உதவுவத‌ற்கு அரு‌கி‌ல் யாரு‌ம் இரு‌க்க மா‌ட்டா‌ர்‌க‌ள். இ‌னிமேலாவது த‌மிழ‌ர்க‌ள் வெகு‌ண்டு எழ வே‌ண்டு‌ம். இ‌ல்லை‌வி‌ட்டா‌ல், த‌மி‌‌ழ் இன‌த்தை கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம். </div><br /><div align="justify"></div><div align="justify"><strong><span style="font-size:130%;">இ‌ன்றை‌க்கு உலக அமை‌தி‌க்கான நோப‌ல் ப‌ரிசு‌க்கு உக‌ந்த நப‌ர் மா‌வீர‌ன் ‌பிரபாகர‌ன்தா‌ன். </span></strong></div><br /><div align="justify"></div><div align="justify">இ‌ந்‌‌தியாவு‌ம் ‌‌சீனாவு‌ம் பா‌‌கி‌ஸ்தானு‌ம் எ‌ந்த கால‌த்‌திலாவது ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்தது‌ண்டா? எ‌ந்த‌ப் ‌பிர‌ச்சினையை எடு‌த்து‌க்கொ‌ண்டாலு‌ம் ‌சீனாவு‌ம், இ‌ந்‌தியாவு‌ம் அ‌ல்லது இ‌ந்‌தியாவு‌ம், பா‌க‌ி‌ஸ்தானு‌ம் ‌எ‌திரு‌ம் பு‌திருமாக‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரையு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌த்து வை‌த்த பெருமை ‌பிரபாகரனை‌த்தா‌ன் சேரு‌ம். பிரபாகர‌னை எ‌தி‌ர்‌ப்பத‌ற்கு‌த்தா‌ன் இவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்து‌ள்ளா‌ர்க‌ள். </div><br /><div align="justify"></div><div align="justify">இல‌‌‌ங்கை‌க்கு எ‌திராக ஐ.நா.சபை‌யி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து, சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து உ‌ள்‌ளி‌ட்ட நாடு‌‌க‌ள் கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் இ‌ன்றை‌க்கு தோ‌ற்கடி‌‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌க்கு ஆதரவாக ‌நி‌‌ன்று இ‌ந்த ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா தோ‌ற்கடி‌த்‌திரு‌க்‌கிறது. </div><br /><div align="justify"></div><div align="justify">தீ‌ர்மான‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்‌றிரு‌ந்தா‌ல் முத‌ல் கு‌ற்றவா‌ளியாக இ‌ந்‌தியா ‌நி‌ன்‌றிரு‌க்கு‌ம். அத‌ன் அரு‌கி‌ல் ‌சீனாவு‌ம், பா‌கி‌சுதானு‌ம் ‌நி‌‌ற்கு‌ம். அ‌ந்த‌ப் ப‌ழி‌க்கு பய‌ந்துதா‌ன் ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌‌‌தியா தோ‌ற்கடி‌த்து‌ள்ளது. </div><br /><div align="justify"></div><div align="justify"><strong>எ‌ங்க‌ள் ஆ‌ழ்மன‌தி‌ல் வேதனை‌த் ‌தீ எ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அது எ‌ப்படி வெடி‌த்து வெ‌ளி‌க்‌கிள‌ம்ப‌ப் போ‌கிறது? எ‌ன்பதை‌‌ப் பா‌ர்‌க்க‌த்தா‌ன் போ‌கி‌றீ‌ர்க‌ள். மான‌மி‌க்க ‌வீர‌ம் பொரு‌ந்‌திய த‌மிழ‌ர்‌ கூ‌ட்ட‌ம் இ‌ன்னு‌ம் இரு‌ப்பதை மற‌ந்து‌விட வே‌ண்டா‌ம்"</strong> எ‌‌ன்று இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பே‌சினா‌ர். </div><div align="justify"></div><div align="justify"><em><span style="font-size:85%;"></span></em> </div><ul><li><div align="justify"><em><span style="font-size:85%;">நன்றி:<a href="http://eelawin.blogspot.com/2009/05/blog-post_31.html">‍‍ஈழம்வின்</a></span></em></div></li></ul><p align="justify"> </p><p align="justify"></p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-2583360898492295550?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com3tag:blogger.com,1999:blog-12894539.post-9157603343888559482009-05-30T12:42:00.006+08:002009-05-30T13:26:20.752+08:00தமிழர் நலனுக்காக பிரிட்டன் குடிமகன் போராடுகிறார்; ஆதரவு கையொப்பமாவது இடுங்கள் தமிழர்களே..!<div align="justify"><strong>ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள வன்கொடுமை அரசாங்கம் மேற்கொண்டுவரும் இனப்படுகொலையையும் மனிதப் பேரழிவையும் கண்டித்து, பிரிட்டனைச் சேர்ந்த ரிம் மாற்றின் என்பவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</strong><br /></div><div align="justify"> </div><div align="justify"></div><img id="BLOGGER_PHOTO_ID_5341480010575344658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SiC_xO0xdBI/AAAAAAAAAnY/DRtXEnSzS1w/s400/tim%2520martin.jpg" border="0" /><br /><div align="justify">ஈழத்தில் தன் சொந்த இனம் - தொப்புள்கொடி உறவு - இரத்ததின் இரத்தமாகிய தமிழ் மக்கள் மிகவும் கொடூரமாகக் கொன்று ஒழிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் - தட்டிக் கேட்காமல் - கண்டனம் தெரிவிக்காமல் - எதுவுமே நடவாததுபோல அலட்டிக்கொள்ளாமல் உணர்வுகெட்ட தமிழர்கள் சிலர் புலன்களைப் பொத்திகொண்டு இருக்கின்றனர்.<br /></div><br /><div align="justify">ஆனால், எந்தவித தொடர்புமே இல்லாத ரிம் மாற்றின் மனித நேயத்தின் அடிப்படையில் தமிழர்கள் நலனை முன்வைத்து உண்ணாநிலைப் பேராட்டத்தில் இறங்கியுள்ள செய்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. </div><br /><div align="justify"></div><div align="justify">ஈழத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பரிதாபமான மனித அவலங்களைத் தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி பிரித்தானியாவில் ரிம் மாற்றின் முன்னெடுக்கும் உண்ணாநிலைப் போராட்டம் 13 ஆவது நாளாக இன்று காரிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.</div><br /><div align="justify">பிரித்தானிய குடிமகனான ரிம் மாற்றின் தனது போராட்டம் தொடர்பாக தெரிவிக்கையில், <strong>“எனது போராட்டத்திற்கு அனைத்துலக சமூகம் குறிப்பாக அமெரிக்கா அரச தலைவர் பராக் ஓபாமா பதில் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை இந்த போராட்டத்தை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தொடர்வேன்”</strong> என்றார்.</div><br /><div align="justify">தொண்டு நிறுவனப் பணியாளரான இவர் சிறிலங்காவிற்குச் சென்று அங்கு தொண்டு பணிகளில் ஈடுபட்டிருந்த காலத்தில் தமிழ் மக்களுடனான தொடர்புகளை நெருக்கமாக ஏற்படுத்திக் கொண்டவர்.</div><br /><div align="justify"><strong>தற்போது அங்கு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அவலங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமலேயே பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழ் மக்களால் நடத்தப்பட்டு வரும் கவனயீர்ப்பு நிகழ்வில் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.</strong> </div><br /><div align="justify">இந்த போராட்டம் நடைபெறும் பகுதிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் ரிம் மாற்றினின் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.</div><br /><div align="justify"></div><div align="justify">ரிம் மாற்றின் தம்முடைய இணையத்தளத்தில் ஈழத் தமிழர்களுக்கு உதவக் கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.</div><br /><div align="justify"></div><div align="justify"><strong><em><span style="color:#000066;">Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, is on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to intervene in the crisis in Sri Lanka and has presented a clear list of demands to protect the civilian population from further devastation. Tim’s full letter to the American president was delivered to the American Embassy on the first day of his hunger strike.</span></em></strong></div><br /><div align="justify"><strong><em></em></strong></div><div align="justify"><strong><span style="font-size:130%;">உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அந்த முறைபாடு மனுவில் கையொப்பம் இடவேண்டும் என அந்த மனித நேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். </span></strong></div><br /><div align="justify"></div><div align="justify">தமிழர்களுக்காகப் போராடும் ரிம் மாற்றின் உணர்வைபோல் ஆயிரம் மடங்கு உலகத் தமிழர்கள் பெறவேண்டும். அப்போதுதான் தமிழருக்கு முழு உரிமையும் விடுதலையும் கிடைக்கும்.</div><br /><div align="justify"></div><div align="justify">ரிம் மாற்றின் போராட்டத்திற்குத் துணைநின்று அவருடைய மனிதநேய முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புத்தமிழ் உறவுகளை அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன்.</div><br /><div align="justify"></div><br /><a href="http://www.act-now.info/Site/Online_Appeal.html"><img id="BLOGGER_PHOTO_ID_5341483521483730834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SiDC9l-j75I/AAAAAAAAAng/RBBq3Bvvj24/s320/tim+martin.JPG" border="0" /></a> <div align="center"><strong><span style="font-size:130%;">ரிம் மாற்றின் முறைப்பாட்டு மனுவில் கையொப்பமிட</span></strong></div><div align="center"><a href="hhttp://www.act-now.info/Site/Online_Appeal.html"><strong>PLEASE SIGN THE APPEAL LETTER </strong></a></div><div align="center"><strong><span style="color:#ff0000;"><a href="http://www.act-now.info/Site/Online_Appeal.html">இங்கே சொடுக்கவும்</a></span></strong></div><br /><div align="justify"> </div><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-915760334388855948?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com3tag:blogger.com,1999:blog-12894539.post-64536269160336698342009-05-29T09:43:00.003+08:002009-05-29T10:04:24.108+08:00தலைவர் பிரபாகரன் இருக்கிறார்:- தொடரும் ஆதாரங்கள்<div align="justify"><strong>உலகத் தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மரணச் செய்தியின் ஐயப்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அவர் உயிருடன் இருப்பதற்கான உறுதிப்பாடுகளும் தொடர்ந்து வருகின்றன; அதற்கான புதுப்புது ஆதாரன்ங்களும் வந்த வண்ணம் உள்ளன. </strong><br /></div><div align="justify"><strong></strong></div><div align="justify"><br /></div><div align="justify"><strong>அப்படி கிடைக்கப்பெற்ற புதிய ஆதாரம் இது. கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி காணொளியைப் பார்க்கவும்.</strong></div><br /><br /><div align="justify"><strong></strong></div><p><img id="BLOGGER_PHOTO_ID_5341060537156483410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 224px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Sh9CQqkRuVI/AAAAAAAAAnA/UmpRZj-MeLc/s400/tamil_tiger_0407.jpg" border="0" /></p><p align="center">இணைப்பைச் சொடுக்கவும்:- </p><p align="center"><a href="http://araciyal.com/movies.asp?id=prabhakaran%20alive"><strong>http://araciyal.com/movies.asp?id=prabhakaran%20alive</strong></a><br /></p><div align="justify"></div><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-6453626916033669834?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com2tag:blogger.com,1999:blog-12894539.post-73633775871102187972009-05-26T09:02:00.002+08:002009-05-26T09:09:10.450+08:00மாவீரர் நாளில்.. மீண்டும் பிரபாகரன்:- விகடன் நம்பிக்கை<div style="text-align: justify;">பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன.<br /><br />ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், “அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!” என உறுதியாகச் சொல்கிறார்கள்.<br /><br />மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.<br /><br />அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!<br /><br />“முப்பது வருடப் போராட்ட காலத்தில் ‘அடுத்து என்ன நடக்கும்?’ என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..! <a href="http://eelawin.blogspot.com/2009/05/blog-post_4992.html"><span style="font-style: italic;">(மேலும் படிக்க)</span></a><br /><br /><br /></div><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-7363377587110218797?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com1tag:blogger.com,1999:blog-12894539.post-54327654611375870082009-05-25T12:00:00.002+08:002009-05-25T12:04:31.478+08:00தலைவர் எங்கே?: பொய்ச் செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதா?<div align="justify"><strong>மீண்டும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பற்றிய பல குழப்பச் செய்திகளை தொடர்ந்து விதைப்பதில் வெற்றி கண்டுள்ளது சிங்கள இனவாதம். அதற்கு துணை போவது ஊடக (மீடியா) பயங்கரவாதம்.</strong><a href="http://www.envazhi.com/wp-content/uploads/2009/05/prabhakaran1.jpg"></a></div><div align="justify"><br /><strong>என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல யாராவது எத்தனிக்க முயலும் போதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகள் விடுத்து மக்கள் உணர்வுகளோடு விளையாடுவதும், போராட்டத்தை நீர்த்து விடச் செய்வதுமான வேலை நடந்து வருகிறது.</strong></div><div align="justify"><br /><strong>இலங்கையின் வல்லமை அத்தனை பெரிதா… அல்லது புலிகள் அந்த அளவு இந்த உலகை அச்சுறுத்திவிட்டார்களா… பார்ப்போம்.</strong></div><div align="justify"><br /><strong>இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்திருந்து பதிவு செய்வோம். ஒரு தகவல் என்ற அடிப்படையில் மட்டுமே இப்போது பின்வரும் செய்தியைத் தருகிறோம். அதாவது... <em><a href="http://www.envazhi.com/?p=8283">(மேலும் படிக்க)</a></em></strong></div><p align="justify"><strong><em></em></strong> </p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-5432765461137587008?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com1tag:blogger.com,1999:blog-12894539.post-1154305486635024592009-05-23T22:56:00.003+08:002009-05-23T23:07:05.598+08:00உங்கள் வலைப்பதிவு முடக்கப்படலாம்! உடனடி நடவடிக்கை எடுக்கவும்!<div align="justify"><strong>இப்போதெல்லாம் பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகளில் <span style="color:#ff0000;">malware </span>காணப்படுவது சாதாரணமாகிவிட்டது. அத்துடன் தமது வலைப்பதிவுகள் (பிளாக்) காணாமல் போய்விட்டது என்ற புலம்பல்களும் தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாகி விட்டது. தமிழ் வலைப்பதிவுகளில் <span style="color:#ff0000;">malware </span>பெரும்பாலும் <span style="color:#ff0000;">NTamil திரட்டியின் Vote Button</span> காரணமாகவே வருகின்றது. அல்லது வேறு சில <span style="color:#ff0000;">Gadget</span> காரணாமாக வரக்கூடும். அதுமட்டும் அல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் வேறு <span style="color:#ff0000;">Java script</span> நிரல்கள் மூலமும் வரலாம்.</strong> </div><div align="justify"> </div><div align="justify"></div><div align="center"><strong><span style="font-size:180%;color:#ff0000;">கவனம்..! கவனம்..! கவனம்..!</span></strong></div><div align="center"> </div><div align="justify"></div><div align="center"><strong>இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக என்ன செய்யலாம்? </strong></div><div align="center"><a href="http://subankan.blogspot.com/2009/05/blog-post_23.html">(இங்கே சொடுக்கவும்)</a></div><p align="center"></p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-115430548663502459?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com1tag:blogger.com,1999:blog-12894539.post-33129767973573291082009-05-22T21:49:00.005+08:002009-05-22T21:55:27.264+08:00தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார்: புலிகள் தலைவர் அறிவிப்பு<div align="justify"> <strong>தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்பதை இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.<br /></strong></div><a href="http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShatqXzo0bI/AAAAAAAAAmk/WfWkyQtF60U/s1600-h/பிரபாகரன்4.jpg"></a><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5338645480010859266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 187px; CURSOR: hand; HEIGHT: 247px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/Shatx1nKwwI/AAAAAAAAAms/ar9jWl7YTqE/s400/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D6.JPG" border="0" /><br /><div align="justify"><strong>சிறிலங்கா அரசாங்கத்தினாலும் அதன் இராணுவத்தினாலும் உருவாக்கப்பட்டு பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் உலகத் தமிழ்ச் சமூகத்தைக் அறிவழகன் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். </strong></div><div align="justify"><br /><strong>இது தொடர்பாக அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: </strong></div><div align="justify"><br /><strong>எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார். </strong></div><div align="justify"><br /><strong>தமிழீழ விடுதலைக்கு ஆதரவுக் குரல் எழுப்பி வரும் உலகத் தமிழ்ச் சமுதாயத்தை குழப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்றார் அவர். </strong></div><div align="justify"><br /><strong>சிறிலங்காவில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மூலமாக தனது அடையாளத்தை உறுதிப்படுத்திய அறிவழகன், பாதுகாப்புக் காரணங்களுக்கான தனது இருப்பிடத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் 'தமிழ்நெட்' செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.</strong></div><br /><strong><a href="http://www.puthinam.com/full.php?2b1VoUe0dKcYo0ecKA4A3b4g6D74d3f1e3cc2AmS2d424OO3a030Mt3e">ஆதாரம்: புதினம் செய்தி</a></strong><br /><p><strong></strong> </p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-3312976797357329108?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com0tag:blogger.com,1999:blog-12894539.post-67352373132373271332009-05-21T17:07:00.015+08:002009-05-21T20:13:48.985+08:00மரணத்தை வென்றவர்; தமிழர் மறையாக வாழ்பவர்; தலைவர் பிரபாகரன்<div align="justify"><a href="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShUad3g-M6I/AAAAAAAAAlk/1fKF-fY4LyY/s1600-h/praba+5.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5338202033738363810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 244px; CURSOR: hand; HEIGHT: 166px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShUad3g-M6I/AAAAAAAAAlk/1fKF-fY4LyY/s400/praba+5.bmp" border="0" /></a> <strong>"இதோ தற்கொலை செய்து கொண்டார்; அதோ சுனாமியில் இறந்தார்; இதோ சுடப்பட்டார்; அதோ உடல் கிடைத்தது; இதோ தப்பிக்க முயன்றார்; அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார்; இதோ என் கனவில் வந்தார்; அதோ என் வீட்டருகே வந்து விட்டார்; ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ...! வந்தால் என்ன செய்வது??????" </strong><br /><br /><div align="justify">அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே,</div><br /><div align="justify">இது தான் ஒரு மனிதனின் - ஒரு மாவீரனின் - ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம்; எதிரிக்குத் தருகின்ற அச்சம்! </div><br /><div align="justify"></div><div align="justify">உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விளைவிக்கவில்லை. </div><div align="justify"></div><div align="justify">அதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை. அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது. உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது. </div><br /><img id="BLOGGER_PHOTO_ID_5338205759892110194" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 225px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShUd2whQO3I/AAAAAAAAAl0/b1EokbKL_VA/s400/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D5.jpg" border="0" /><br /><div align="justify"></div><div align="justify">பிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல, அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத் தான் வேண்டும். </div><br /><div align="justify"></div><div align="justify"><strong>அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு போதும் கொள்ளை கொள்ள இயலாது. மரணம் வெறும் உடலின் அடக்கம், மரணம் வெறும் உடல் இயங்கியலின் முடிவே அன்றி அது ஒரு போதும் இயக்கத்தின் நிறுத்தம் அல்ல, அது ஒரு போதும் இன, மொழி அடையாளங்களை வென்றெடுத்த ஒரு முத்திரையின் அழிவு அல்ல.</strong></div><br /><div align="justify"></div><div align="justify">கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே சிதைக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் அழிவை, தொன்மையை, கலை, கலாச்சார வெளிப்பாடுகளை, மொழியின் நுண்ணிய வடிவங்களை ஒரு தனி மனிதனின் விடுதலைப் போராட்டம் மீட்டெடுத்து எங்கள் இளைஞர்களின் கைகளில் கொடுத்திருக்கிறது. </div><img id="BLOGGER_PHOTO_ID_5338205511285112066" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 124px; CURSOR: hand; HEIGHT: 91px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShUdoSYufQI/AAAAAAAAAls/j2m0TrSfez4/s400/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D3.jpg" border="0" /><br /><div align="justify"></div><div align="justify">அந்தத் தனி மனிதன் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும், புவியெங்கும் பரந்து விரிந்த எம் தமிழ்ச் சகோதரர்களின் உளமெங்கும் நிறைந்து இருக்கிறான், திரைப்பட மாயைகளில், ஆன்மீக அழிவுகளில், திராவிடக் கட்சிகளின் நீர்த்துப் புரையோடிப் போன கொள்கைகளில் கரைந்து போய் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்த எமது இனத்தின் இளைஞர்களை தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் அடையாளத்தை அழிப்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் முயன்றால் கூட முடியாது வீணர்களே……!!</div><br /><div align="justify"></div><div align="justify"><strong>உலகின் மூத்த குடிகளில் ஒன்றான எங்கள் இனம் தனது அடையாளங்களை உலகெங்கும் பொருளாதார ஓட்டங்களில் தொலைத்துக் கரைந்து கொண்டிருந்த போது இயற்கை எமக்கு வகுத்தக் கொடுத்த ஒரு கலங்கரை விளக்கம் தான் பிரபாகரன் என்கிற மனிதனின் விடுதலை வேட்கை. அந்த விடுதலை வேட்கையின் பின்னால் எண்ணற்ற தமிழ் இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் அணிவகுத்து நின்றன, தமிழ் இளைஞன் தமிழில் உரையாடுவதை பெருமையாக எண்ணத் துவங்கியதே இந்த மாவீரனின் வரவுக்குப் பின்னால் தானாய் நிகழ்ந்தது.</strong></div><a href="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShUeMJf3BwI/AAAAAAAAAmE/812RlpJTCzI/s1600-h/praba+2.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5338206127374403330" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 211px; CURSOR: hand; HEIGHT: 244px" alt="" src="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShUeMJf3BwI/AAAAAAAAAmE/812RlpJTCzI/s320/praba+2.bmp" border="0" /></a><br /><br /><div align="justify">எங்கோ கிடக்கும் இன, மொழி அடையாள உறவுகளை எல்லாம் தனது உறவாய், தனது குருதியாய் தமிழன் சிந்தனை செய்யத் துவங்கியதே பிரபாகரன் என்கிற விடிவெள்ளி செய்த விடுதலை வேள்வி. காலம் எங்கள் இனத்திற்கு ஒரு பன்னாட்டு அடையாளம் தருவதற்கு விளைவித்த அருந்தவம் தான் பிரபாகரன் என்கிற ஒரு அடையாளம், களப் போராட்டமாய் இருந்தாலும் அது அறவழிப் போராட்டமாய், பண்பாட்டு வெளியாய் நிகழ்ந்த ஒரு அற்புதம் தான் மாவீரன் பிரபாகரன் என்கிற அடையாளம்.</div><br /><div align="justify"></div><div align="justify"><strong>சாதிகள், மதங்கள், வர்க்க பேதங்கள், பாலின ஆளுமைகள் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அரசை, அறம் சார்ந்த தமிழ் கலாசார வலிமையை உலகின் எந்த ஒரு வல்லாதிக்க சக்திகளின் உதவியும் இன்றி தனி ஒருவனாய் நடத்தி வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்த தமிழர்களின் நெறி தான் பிரபாகரன்.</strong> உலகின் பல்வேறு சக்திகள் கண்டு நடுங்கின அந்த மாவீரனைக் கண்டு, உலகின் அடுத்த வல்லரசு என்று தன்னைத் தானே பறைசாற்றிக் கொள்ளும் இந்திய ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்கள் அருகாமையில் ஒரு அறநெறி ஆட்சி அமைந்து தங்கள் கொள்ளைகளுக்கு கொல்லி வைக்கப் போகிறதோ என்கிற அச்சம் நிறைந்து அதனை அழிக்கும் செயல்களில் ஆவலாய் இருந்தது. </div><br /><div align="justify"></div><div align="justify">இவற்றை எல்லாம் கடந்து 33 ஆண்டுகள் தொடர்ந்து தான் கொண்ட இலட்சியத்தில் தமிழின விடுதலை என்கிற நெருப்பை ஒரு அணையாத விளக்காய்க் கொண்டு வந்து நமது கைகளில் தவழ விட்டிருக்கிற அந்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற செய்தி வேண்டுமானால் அந்த மாவீரனைக் கொன்று வண்ணக் கலவைகள் பூசிக் கனவுகளில் திளைக்கும் தமிழின விரோதிகளுக்கு தித்திக்கும் செய்தியாய் சில காலங்கள் இருக்கலாம், ஒரு போதும் உண்மையாய் தமிழ் உணர்வுகளின் இதய சிம்மாசனங்களில் இருக்கப் போவதில்லை. </div><br /><div align="justify"></div><div align="justify"><a href="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShUd_U7XDDI/AAAAAAAAAl8/a_jN2d-56Mk/s1600-h/பிரபாகரன்2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5338205907104238642" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 87px; CURSOR: hand; HEIGHT: 104px" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShUd_U7XDDI/AAAAAAAAAl8/a_jN2d-56Mk/s400/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D2.jpg" border="0" /></a>உலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசிய போதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது, மரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல. </div><div align="justify"></div><div align="justify"><strong>மாறாக, அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு, அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான்.</strong></div><br /><div align="justify">மரணம் தாண்டி வாழும் விடுதலையின் முகவரியை அழிக்க நினைக்கும் மூடர்களுக்குத் தெரியாது!!! விடுதலையின், வெற்றி முத்திரையை உலகெங்கும் தமிழரின் இதயத்தில் இருத்திக் காட்டிய மாவீரனுக்கு அழிவென்பது உடலால் இல்லையென்று!!! எம் இனம் முழுக்க நிறைந்து கிடக்கும் உணர்வுகளின் எதிரொலியை, எதிரிகளே, அழிக்க முடியாதென்ற உண்மை ஒரு போதும் புரியாது உங்களுக்கு, மரணம் எம்மைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கலாம், ஒரு போதும் எங்கள் விடுதலை வேட்கையை அல்ல.</div><br /><div align="justify"></div><div align="justify">எங்கள் விடுதலையின் பெயரைச் சொல்லி எச்சில் பொறுக்கும் ஏளன அரசியல் வீணர்களே. எங்கள் தலைவனின் துப்பாக்கித் தோட்டாக்களில் இல்லாத எந்த விடுதலையின் சுவடுகளும் உங்கள் மக்கள் மன்றங்களில் இல்லை. எங்கள் போராளிகளின் உடைந்த கால்களின் வலிமையும் இல்லாத உங்கள் இறையாண்மையின் பெயரில் எங்கள் விடுதலையை இனி சிறுமைப்படுத்த வேண்டாம், <strong>சிதறடிக்கப்படும் எங்கள் குருதியின் வெம்மையில் ஒரு நாள் சுதந்திர ஈழம் மலர்ந்தே தீரும். </strong></div><br /><img id="BLOGGER_PHOTO_ID_5338206285380624850" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 244px; CURSOR: hand; HEIGHT: 184px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShUeVWHeodI/AAAAAAAAAmM/2H-h8LoTvUU/s320/praba+1.bmp" border="0" /> <div align="justify"><strong>மரணம் தாண்டி ஒரு தமிழ் மறையாகிப் போன பிரபாகரன் என்கிற அடையாளத்தை இன்னும் எத்தனை வல்லாதிக்கப் பேரினவாதிகள் வந்தாலும் துடைத்தழிக்க முடியாது.</strong> </div><div align="justify"></div><div align="justify">உண்மையில் மரணம் என்கிற இயற்கையின் மடியில் அவர் விழுந்திருந்தாலும் அந்த மாவீரனுக்குச் செய்யும் மரியாதையும், வீரவணக்கமும், அழுகையும் புலம்பலும் அல்ல, அந்த மாமனிதன் உலகெங்கும் தமிழ் மக்களின் உயிரில் பற்ற வைத்த விடுதலைப் பெருந்தீயின் வெம்மையை சிதறாமல் அவன் காலடிகளில் கொண்டு சேர்ப்பதே சிறந்த வீர வணக்கம். </div><div align="justify"></div><br /><img id="BLOGGER_PHOTO_ID_5338206467164827138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 171px; CURSOR: hand; HEIGHT: 244px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShUef7UNbgI/AAAAAAAAAmU/z0MRdt02doI/s320/untitled.bmp" border="0" /><br /><div align="justify"><strong>மரணத்தை வென்று எம் இன விடுதலை வரலாற்றில் நிரந்தரத் தலைவனாய் வாழும் பிரபாகரன் என்னும் பெயரில் உறுதி ஏற்போம், ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் உணர்வால் ஒன்று பட்டு எதிர்காலத் தமிழினத்தை சமூகப் பொருளாதார நிலைகளில் வெற்றி பெற்ற இனமாக, சாதி மத வேறுபாடுகளைக் கடந்த பேரினமாக மாற்றிக் காட்டுவோம், <span style="color:#cc0000;">தமிழ் ஈழம் என்னும் தணியாத தாகத்தை வென்று காட்டுவோம். </span></strong></div><div align="justify"><strong><span style="color:#cc0000;"></span></strong></div><div align="center"><strong><span style="font-size:130%;color:#cc0000;">தமிழரின் தாகம்; தமிழீழத் தாயகம்</span></strong></div><p align="right"><span style="font-size:85%;"><em>நன்றி:கை.அறிவழகன்</em></span></p><p align="right"></p></div><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-6735237313237327133?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com0tag:blogger.com,1999:blog-12894539.post-86946120203255719442009-05-19T18:44:00.001+08:002009-05-19T18:47:34.581+08:00நம்பிக்கையோடு இருப்போம்..! பொறுமையோடு காத்திருப்போம்..!<strong>தமீழத் தலைவர் – உலகத் தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றிய பேரதிர்ச்சியான செய்திகளையும் படங்களையும் காணொளிகளையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.<br /><br />சிறிலங்கா சொல்லும் செய்தியையும் காட்டும் படங்களையும் அப்படியே எடுத்து உலக ஊடகங்கள் ஓயாமல் ஒலி – ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.<br /><br />இணைய ஊடகத்திலும் இச்செய்திகள் காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. கொடுந்தீயாகத் தமிழர்கள் உணர்வுகளை சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றன.<br /><br />இந்த அவலச் செய்திகளுக்கு இடையில், தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய நம்பிக்கை இன்னமும் முற்றிலும் தளர்ந்துவிடவில்லை – தமிழர் மனங்கள் இன்னமும் சோர்ந்துவிடவில்லை – உணர்வுகள் இன்னமும் உறங்கிவிடவில்லை!<br /><br />இருந்தாலும்கூட, வல்லாதிக்க இலங்கையின் போக்கினாலும் வல்லரசு ஊடகங்களின் தாக்கத்தாலும் உலகமெங்கும் விரிந்து பரந்திருக்கும் தமிழர்கள் சொல்லொனா அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாகி தவித்துக் கொண்டிருக்கின்றனர் – கண்ணீரில் புலம்பிக் கொண்டிருக்கின்றனர் – கடுமையான மனப்போராட்டத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.<br /><br />தமிழ் மக்களின் உள்ளமும் உயிரும் ஒவ்வொரு நொடியும் மரண வேதனையில் வெந்துக் கொண்ருக்கின்றன.<br /><br />எது எப்படியிருப்பினும், தலைவர் கட்டியெழுப்பிய விடுதலை இயக்கத்தின் மீது முழு நம்பிக்கையும் அசைக்க முடியாத பற்றுதலும் ஆழமான பிடிமானமும் மிக மிக உறுதியாக இருப்பதால்... வாருங்கள் தோழர்களே..<br /><br />நம்பிக்கையோடு இருப்போம்..! பொறுமையோடு காத்திருப்போம்..!<br /><br />எவன் வந்து எந்தச் செய்தியைச் சொன்னாலும் சொல்லட்டும்.. எந்தப் படத்தைக் காட்டினாலும் காட்டட்டும்.. என்ன ஆதாரத்தை கொடுத்தாலும் கொடுக்கட்டும்..!!</strong><br /><br /><strong>தலைவரின் நிழலில் வளர்ந்த நமது உடன்பிறப்புகள் – நமது உறவுகள் – நமது போராளிகள் – நமது இரத்தத்தின் இரத்தங்கள் மிக விரைவிலே இரண்டில் ஒன்றைச் சொல்லுவார்கள்.. நமது மரண வலிகளுக்கு முடிவொன்று கூறுவார்கள்..!<br /><br />தமிழ் உறவுகளே.. அன்பு உடன் பிறப்புகளே..<br />அதுவரை காத்திருப்போம்!<br />நம்பிக்கையோடு பொறுத்திருப்போம்!</strong><br /><p> </p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-8694612020325571944?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com2tag:blogger.com,1999:blog-12894539.post-41890563548132321502009-05-19T13:44:00.008+08:002009-05-19T14:09:16.084+08:00தலைவர் பிரபாகரன் மரணம் உறுதிசெய்யப்படவில்லை: மகிந்தா வாய் திறக்கவில்லை<div align="justify"><strong><span style="color:#006600;">இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே இன்று நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை ஆரம்பிக்கப்பட்டு 9.45 மணிக்கு சிறப்புரை ஆற்றினார்.</span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><ul><li><div align="justify"><strong><span style="color:#006600;">தமிழில் அவர் 5 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர், ‘’இலங்கையில் நடந்த போர் தமிழர்களுடனான போர் அல்ல; விடுதலைப்புலிகளுடனான போர்" என்றார். </span></strong></div></li></ul><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;">இப்போர் முடிவுக்கு வந்துவிட்டது.</span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><ul><li><div align="justify"><strong><span style="color:#006600;">ஆனால், <span style="font-size:130%;color:#003333;">"விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை’’</span> இது தொடர்பாக இராசபக்சே எதுவும் தெரிவிக்கவில்லை.</span></strong></div></li></ul><p align="justify"><strong><span style="color:#006600;">பாராளுமன்ற உரையில் பிரபாகரனைப்பற்றி எதுவுமே பேசவில்லை. பிரபாகரன் என்ற பெயரையே அவர் உச்சரிக்கவில்லை. <a href="http://thirutamil.blogspot.com/2009/05/blog-post_18.html">(மேலும் செய்திகள்)</a></span></strong></p><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#006600;"></span></strong></div><div align="justify"><strong><em><span style="font-size:85%;color:#000000;"></span></em></strong></div><div align="justify"><strong><em><span style="font-size:85%;color:#000000;"></span></em></strong></div><div align="right"><strong><em><span style="font-size:85%;color:#000000;">நன்றி</span></em></strong><a href="http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8652"><strong><em><span style="font-size:85%;color:#000000;">-நக்கீரன்</span></em></strong></a></div><p align="justify"></p><p align="justify"></p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-4189056354813232150?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com1tag:blogger.com,1999:blog-12894539.post-1211478589156459742009-05-19T11:58:00.007+08:002009-05-19T12:05:28.589+08:00இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட 18 பேர் பட்டியல். "தலைவர் பெயர் இல்லை"<div align="justify"><strong>பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பது இலங்கை பாதுகாப்பு அமைச்சகமே சாட்சியாக இருக்கிறது….</strong></div><div align="justify"><strong></strong></div><div align="justify"><strong></strong></div><div align="justify"><strong></strong></div><div align="justify"><strong>ஆம்… படையினர் அடையாளம் கண்டுள்ளதாக 18 பேர் பட்டியல், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.</strong></div><div align="justify"><br /><strong><span style="font-size:130%;color:#003300;">அந்தப் பட்டியலில் மேதகு வே.பிரபாகரன் பெயர் இடம்பெறவில்லை.</span> <a href="http://thirutamil.blogspot.com/2009/05/blog-post_18.html">(மேலும் படிக்க)</a></strong></div><p align="justify"> </p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-121147858915645974?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com1tag:blogger.com,1999:blog-12894539.post-5174810170801245392009-05-19T06:49:00.003+08:002009-05-19T07:01:48.304+08:00தலைவர் பிரபாகரன் வேறு இடத்தில் உள்ளார்: சானல் 4 செய்தி<div align="justify"><strong>இன்று(18.05.2009) மாலை சானல் 4 தொலைக்காட்சிக்குப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் செல்வராசா பத்மநாதன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேறு இடத்தில் இருப்பதாகவும் சற்று முன்னர் அங்கு தான் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். </strong><strong>இந்தச் செய்தி உலகை உலுக்கியுள்ளது. <a href="http://thirutamil.blogspot.com/2009/05/blog-post_18.html">(மேலும் படிக்க)</a></strong></div><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-517481017080124539?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com0tag:blogger.com,1999:blog-12894539.post-77980730929034905572009-05-19T01:19:00.003+08:002009-05-19T01:25:31.768+08:00புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது உண்மையா? குளோபல் செய்தி ஆய்வு<div align="justify"><strong><span style="color:#990000;">இதுவரை அரசாங்கப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சாவோ இராணுவத் தளபதி சரத் பொன்சோகாவோ அல்லது இலங்கையின் முப்படைகளின் தளபதியான மகிந்த இராசபக்சாவோ பிரபாகரன் கொல்லப்பட்டதனை அதிகாரப்படியாக அறிவிக்கவில்லை.</span></strong></div><p align="justify"> </p><div align="justify"><strong><span style="color:#990000;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">அரசாங்கத்தினுடைய அதிகார இணையத்தளம் விடுதலைப்புலிகளின் அதிஉயர் மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கின்றது. அரச பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக வெளியிட்டுள்ள செய்தியை தற்பொழுது விலக்கிக் கொண்டுள்ளது. ராணுவத்தின் இணையத் தளமும் விடுதலைப்புலிகளின் அதி உயர் மட்டத் தலைவர்கள் மரணித்ததான செய்தியை விலக்கிக் கொண்டுள்ளது. <a href="http://thirutamil.blogspot.com/2009/05/blog-post_18.html">(மேலும் படிக்க)</a></span></strong></div><p align="justify"></p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-7798073092903490557?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com2tag:blogger.com,1999:blog-12894539.post-51484658185637380312009-05-18T19:01:00.014+08:002009-05-19T14:12:10.637+08:00தலைவர் பிரபாகரன் பற்றிய அதிர்ச்சித் தகவல் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை<div align="justify"><a href="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShFAtl3Hr2I/AAAAAAAAAlc/dAyef8Da93Y/s1600-h/8989_1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5337118185412341602" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 160px" alt="" src="http://1.bp.blogspot.com/_6KDxNeBPslQ/ShFAtl3Hr2I/AAAAAAAAAlc/dAyef8Da93Y/s200/8989_1.jpg" border="0" /></a></div><div align="justify"></div><div align="justify"><strong><span style="color:#cc0000;"><span style="font-size:85%;color:#000000;"></span></span></strong></div><div align="justify"><strong><span style="color:#cc0000;"><span style="font-size:85%;color:#000000;"><span style="font-size:130%;color:#ff0000;">[புதிது] <span style="font-size:100%;color:#003300;">இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே இன்று நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை ஆரம்பிக்கப்பட்டு 9.45 மணிக்கு சிறப்புரை ஆற்றினார்.<br /><br />தமிழில் அவர் 5 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர், ‘’இலங்கையில் நடந்த போர் தமிழர்களுடனான போர் அல்ல; விடுதலைப்புலிகளுடனான போர்" என்றார்.<br /><br />இப்போர் முடிவுக்கு வந்துவிட்டது.<br /><br />ஆனால், <span style="color:#000066;">"விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை’’</span> இது தொடர்பாக இராசபக்சே எதுவும் தெரிவிக்கவில்லை.</span></span></span></span></strong></div><div align="justify"><strong><span style="color:#cc0000;"><span style="font-size:85%;color:#000000;"><span style="font-size:130%;color:#ff0000;"><span style="font-size:100%;color:#003300;"></span></span></span></span></strong> </div><div align="justify"><strong><span style="color:#cc0000;"><span style="font-size:85%;color:#000000;"><span style="font-size:130%;color:#ff0000;"><span style="font-size:100%;color:#003300;">பாராளுமன்ற உரையில் பிரபாகரனைப்பற்றி எதுவுமே பேசவில்லை. பிரபாகரன் என்ற பெயரையே அவர் உச்சரிக்கவில்லை. </span><a href="http://www.envazhi.com/?p=8019"><span style="font-size:100%;color:#003300;">(மேலும் படிக்க)</span></a><br /><span style="font-size:100%;"><br /></div></span></span></span></span></strong><div align="center"><strong><span style="font-size:130%;color:#000000;">********************************</span></strong></div><ul><li><div align="justify"><strong><span style="color:#cc0000;"><span style="font-size:85%;color:#000000;"><span style="font-size:130%;color:#ff0000;"><span style="font-size:100%;"><span style="color:#006600;">தமிழினத் தலைவர்</span> <span style="color:#006600;">வே.</span></span><span style="font-size:100%;color:#006600;">பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகமே சாட்சியாக இருக்கிறது….<br /><br />ஆம்…! படையினர் அடையாளம் கண்டுள்ளதாக 18 பேர் பட்டியல், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.</span></span></span></span></strong></div></li><strong><span style="color:#cc0000;"><span style="font-size:85%;color:#000000;"><span style="font-size:130%;color:#ff0000;"><span style="font-size:100%;"><li><div align="justify"><br /></span><span style="font-size:130%;"><span style="color:#006600;">அந்தப் பட்டியலில் மேதகு வே.பிரபாகரன் பெயர் இடம்பெறவில்லை.</span> </span><a href="http://globen.wordpress.com/2009/05/19/prabhakaran-2/">(மேலும் படிக்க)</a></div></li></ul><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"></div><div align="center"><span style="color:#000000;">******************************</span></span></span></span></strong></div><ul><li><div align="justify"><strong><span style="color:#cc0000;"><span style="font-size:85%;color:#000000;">இன்று(18.05.2009) மாலை சனல் 4 தொலைக்காட்சிக்கு புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் எஸ்.பத்மநாதன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேறு இடத்தில் இருப்பதாகவும் சற்று முன்னர் அங்கு தான் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். உலக ஊடகங்கள் தலைவர் பற்றி வேறு விதமாக அறிவித்துவரும் வேளையில் இச்செய்தி உலகையே உலுக்கியுள்ளது. <a href="http://athirvu.com/target_news.php?subaction=showfull&amp;id=1242674585&amp;archive=&amp;start_from=&amp;ucat=4&amp;">(மேலும் படிக்க)</a></span></span></strong></div></li></ul><div align="justify"><strong><span style="font-size:85%;"></span></strong></div><div align="center"><span style="font-size:130%;">****************************</span></div><ul><li><div align="justify"><strong><span style="color:#cc0000;">இதுவரை அரசாங்கப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சாவோ இராணுவத் தளபதி சரத் பொன்சோகாவோ அல்லது இலங்கையின் முப்படைகளின் தளபதியான மகிந்த இராசபக்சாவோ பிரபாகரன் கொல்லப்பட்டதனை அதிகாரப்படியாக அறிவிக்கவில்லை. <a href="http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=9696&amp;cat=1">(மேலும் படிக்க)</a></span></strong></div></li></ul><div align="justify"></div><div align="center"><strong><span style="font-size:130%;">*************************</span></strong></div><ul><li><div align="justify"><strong><span style="color:#cc0000;">விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் இன்று காலை போர்ப்பகுதியில் இருந்து தப்பிச்செல்லும் பொழுது இலங்கை ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதிபடுத்தப்படவில்லை என இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.</span></strong><strong><span style="color:#cc0000;"><a href="http://sangamamlive.in/index.php?/content/view/2336/">(மேலும் படிக்க)</a></span></strong></div></li></ul><div align="right"><strong><span style="color:#cc0000;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#cc0000;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#cc0000;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#cc0000;"></span></strong></div><div align="center"><strong><span style="font-size:130%;color:#000000;">************************</span></strong></div><ul><li><div align="justify"><strong><span style="color:#cc0000;">தமிழ் மக்களே தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்கள் இலங்கை இராணுவத்தால் வெளியிடப்படுகிறது. சற்றுப் பொறுமை காத்திடுங்கள். இலங்கை இராணுவம் கூறிவருவதை ஆதாராபூர்வமாக நிரூபிக்க முடியாது. தற்போது அவர்களால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. <a href="http://athirvu.com/target_news.php?subaction=showfull&amp;id=1242640415&amp;archive=&amp;start_from=&amp;ucat=4&amp;">(மேலும் படிக்க)</a></span></strong></div></li></ul><p align="center"><strong><span style="font-size:130%;color:#000000;">*************************</span></strong></p><ul><li><div align="justify"><strong><span style="color:#cc0000;">NDTV செய்தி நிறுவனம்! வேலுபிள்ளை பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்திருகின்றது, இந்த செய்தியை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுருப்பதாகவும், DNA( மரபணு ) சோதனைக்கு பிறகு தான் உறுதியாக சொல்ல முடியும் என்றும் இலங்கை அரசாங்கம் கூறியிருபதாகவும், NDTV செய்தி நிறுவனம் செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கின்றது! <a href="http://seidhigal.wordpress.com/2009/05/18/விடுதலை-புலிகளின்-தலைவர்/">(மேலும் படிக்க)</a></span></strong></div></li></ul><p align="center"><span style="font-size:130%;color:#000000;">****************************</span></p><ul><li><div align="justify"><strong><span style="color:#cc0000;">விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இன்றைய ஊடக மகாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.வெள்ளை முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிடையில் பிரபாகரன் இருப்பதற்கான தகவல்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.<a href="http://www.ponmaalai.com/2009/05/blog-post_1275.html"> (மேலும் படிக்க)</a></span></strong></div></li></ul><p align="justify"></p><div class="blogger-post-footer">*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*<img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12894539-5148465818563738031?l=thirutamil.blogspot.com'/></div>சுப.நற்குணன்http://www.blogger.com/profile/14702174238706253994suba.nargunan@gmail.com6