tag:blogger.com,1999:blog-128148592009-04-01T23:27:50.529+06:00பொட்டல்புதூர் கிராமம் இணையதளம்PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-12814859.post-46183026931737621822009-04-01T23:13:00.005+06:002009-04-01T23:27:21.550+06:00உணவே மருந்தாக!<a href="http://pottalpudur.com/uploaded_images/greens_2015-787498.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://pottalpudur.com/uploaded_images/greens_2015-787493.jpg" border="0" alt="" /></a><br />நாம் உண்ணும் உணவு கட்டுப்பாடன்றி இருந்தால் அதுவே நமக்கு ஊறாக அமையும். இன்றைய உணவு நாளைய பிணி என்ற நிலை மாறி உண்ணும் உணவையே நமக்கு நிவாரணியாக மாற்றியைமைக்க சில வழிகாட்டுதல்கள்.<br /><br />எவ்வளவு, எவ்வாறு உண்பது?<br /><br />உணவு உண்பதில் பின்வரும் நடைமுறைகளைக் கவனிப்பது நலம் பயக்கும்<br /><br />•உணவு உட்கொள்ளும் நேரம்<br />•உண்ணும் முறை<br />•உண்ணும் அளவு<br />•சமைக்கும் முறை<br />•உணவின் வகைகள்<br /><br /><strong>உணவு உட்கொள்ளும் நேரம்</strong><br /><br />உணவை அதற்குரிய சரியான வேளைகளில் உட்கொள்ள வேண்டும். நேரம் தவறிய உணவு முறைகள் உடல் மற்றும் மன நலத்துக்கு ஊறு விளைவிக்கலாம். தங்கள் அலுவல் முறைகளைக் கருத்தில் கொண்டு உண்ணும் நேரத்தில் ஒரு ஒழுங்கு முறையைக் கடைபிடிக்க வேண்டும்<br /><br /><strong>உண்ணும் முறை</strong><br /><br />உண்ணும் முறையில் தனிக் கவனம் வேண்டும். உணவு உண்பதில் அவசரம் காட்டக் கூடாது. நன்கு மென்ற பின்னரே விழுங்க வேண்டும். ஒரு நாளில் எட்டு முதல் பன்னிரண்டு கோப்பைகள் தண்ணீர் அருந்த வேண்டும். உணவை அவசர அவசரமாக விழுங்குவதும் அதிகமாக உண்பதும் உடல் நலத்துக்கு ஊறு விளைவிப்பதாகும்.<br /><br /><strong>உண்ணும் அளவு</strong><br /><br />ஒவ்வொருவரும் தனது வயது, உயரம், எடை, செயல்பாடுகள், வேலை, விளையாட்டு, கடின உழைப்பு, உடற்பயிற்சி முதலியவற்றைக் கருத்தில் கொண்டு தனக்கு தேவையான அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். வயிறு நிரம்ப உண்பதற்குப் பதில் ஒரளவுக்குப் போதும் என்பது வரை உண்பதே சிறந்தது. உணவில் தானிய வகைகளையும் காய்கறிகளையும் சோ்த்துக் கொள்வது நலம்.<br /><br /><strong>சமையல் முறை</strong><br /><br />நாம் தோ்ந்தெடுக்கும் உணவுகள் எவ்வளவு சிறந்ததாக இருப்பினும் சமைக்கும் முறை நல்லதாக அமையாவிடில் அதுவே மோசமாகிவிடும். எனவே உணவு சமைக்கும் போது தனிக் கவனம் செலுத்தவேண்டும். சமைக்கும்போது கவனிக்க வேண்டியவை.<br /><br /><em>1.காய்கறிகளை நிறைய உபயோகிக்க வேண்டும் <br /><br />2.அவித்தல், வேகவைத்தல் முதலியவை சாலச் சிறந்தது <br /><br />3.வறுவல் மற்றும் பொரியல் எப்போதாவது ஒரு முறை மட்டும் செய்க.<br /><br />4.ஒரு முறை பொரித்த எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க.<br /><br />5.மிச்சம் மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடு.<br /><br />6.சமையலில் எண்ணெய், தேங்காய் முதலியவற்றின் அளவைக் குறைக்க வேண்டும்<br /><br />7.ஊறுகாய், அப்பளம் முதலியவை தினசரி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.</em><br /><br /><strong>உடலுக்கு உகந்த உணவுகள்</strong><br /><br /><strong>தானிய வகைகள்</strong><br /><br />அரிசி, கோதுமை முதலியவை நல்ல தானிய வகை உணவினங்களாகும். கோதுமையை அவற்றின் தவிட்டுடன் உபயோகிப்பதே நல்லது. கோதுமையின் தவிட்டை சுத்திகரித்து உருவாக்கப்பட்ட மைதா மாவு உடல் நலத்துக்கு உகந்ததல்ல.<br /><br /><strong>பயிறு மற்றும் பருப்பு வகைகள்</strong><br /><br />கடலை, பயிறு மற்றும் பருப்பு வகைகள் நல்ல ஆரோக்கிய உணவுகளாகும். கடலையைத் தொலியுடன் உண்பதே நல்லது. உடலுக்குத் தேவையான புரேதச் சத்துக்கள் பயிறு மற்றும் பருப்பு வகைகளில் உள்ளன. தினசரி உணவில் அவற்றைச் சோ்த்துக் கொள்க.<br /><br /><strong>காய்கறிகள் கீரைகள் மற்றும் பழ வகைகள்</strong><br /><br />உடலுக்கு மிகவும் அத்தியவசியமான தாதுக்கள், மற்றும் ஃபைபர் சத்துக்கள் காய்கறிகளில் உள்ளன. தினசரி உணவில் அவற்றைச் சோ்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் மூன்று முறையேனும் கீரைகளை உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும். பழவகைகளை தினமும் உட்கொள்க.<br /><br /><strong>பால்</strong><br /><br />பாலில் நிறைய புரோட்டீன் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு பாலும் பால் உற்பத்திப் பொருட்களும் சிறந்த உணவாகும். ஆனால் வயது முதிர்ந்தவர்கள் பாலை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.<br /><br /><strong>மீன்</strong><br /><br />மீன் சிறந்தாரு உணவாகும். மீனை தினசரி உணவாகவே உட்கொள்ளலாம். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நல்ல கொழுப்புச் சத்துக்கள் மீன்களில் அடங்கியுள்ளன. மீனைப் பொரியல் வறுவல் செய்வதை விட வேகவைத்து உண்பது சிறந்தது.<br /><br /><strong>இறைச்சி, முட்டை</strong><br /><br />இறைச்சி வாரத்தில் ஓரிரு முறைகள் மட்டும் உட் கொள்க. மட்டன் பீஃப் போன்றவை குறைந்த அளவில் மட்டும் உட்கொள்க. அவற்றின் கொழுப்புகள் இதயத்துக்கு ஊறு விளைவிக்கும்.<br /><br />முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. முதியவர்கள் முட்டை உண்பதைக் குறைக்க வேண்டும். வாரத்தில் ஒன்றோ இரண்டோ உட்கொள்க. குழந்தைகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாதி வேகவைத்த முட்டை கொடுக்கலாம். முட்டையின் வெள்ளைக் கரு தினமும் கொடுக்கலாம். முட்டை, இறைச்சி, முதலியவற்றை வறுவல் அல்லது பொரியல் செய்து உண்பதைத் தவிர்க்கவும்.<br /><br /><strong>சர்க்கரை, நீரிழிவு நோயாளிகள் கவனிக்க</strong><br /><br /><em>1.இனிப்பு உண்பதைத் தவிர்க்க.<br /><br />2.எண்ணெய், தேங்காய் முதலியவை உபயோகிப்பதில் கட்டுப்பாடு வருத்தவும் <br /><br />3.சரியான நேரத்தில் உண்ணவும் <br /><br />4.வறுவல் பொரியல் முதலியவை உண்பதை விட்டு விடவும்<br /><br />5.பழ வகைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டுக்கு அதிகம் வேண்டாம் <br /><br />6.காய்கறிகள், கீரைகள் உணவில் சோ்த்துக் கொள்க.<br /><br />7.தோல் அகற்றிய கோழிக்கறி உண்ணலாம். மாட்டுக் கறி உண்பதைத் தவிர்க்கவும்<br /><br />8.புரோட்டா, பேக்கறி ரொட்டிகள், கேக், ஸாஃப்ட் டிரிங்க்ஸ், முட்டையின் மஞ்சள் கரு முதலியவற்றை தவிர்த்து விடவும்.<br /><br />9.உப்பின் அளவைக் குறைக்கவும்.<br /><br />10.தவிட்டுடன் கூடிய தானியங்களை உட்கொள்ளவும் <br /><br />11.பாலின் அளவைக் குறைக்கவும். தினமும் 250 மில்லி அளவில் அதிகமாக வேண்டாம்.<br /><br />12.உணவின் அளவில் கட்டுப்பாட தேவை<br /><br />13.எட்டு முதல் பன்னிரண்டு கோப்பைகள் வரை நீர் அருந்தவும்.<br /><br />14. டீ, காஃபி அதிகமாகக் குடிக்கக் கூடாது<br /><br />சர்க்கரை, கொழுப்பு மற்றும் இனிப்பு பதார்த்தங்களை எல்லா வயதினரும் குறைப்பதே சிறந்தது.</em><br /><br />நன்றி – <a href="http://kurinjiyar.blogspot.com/2009/03/blog-post_31.html">கல்ஃப் மாத்யமம்</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-4618302693173762182?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-53858343619248607892008-05-30T22:01:00.004+06:002008-05-30T22:07:17.997+06:00பத்தாம் வகுப்பு தேர்வில் நெல்லை...<strong>எஸ்எஸ்எல்சி-பாளை மாணவி மாநிலத்திலேயே முதலிடம்</strong><br /><br /><a href="http://thatstamil.oneindia.in/news/2008/05/30/tn-sslc-state-topper-ram-ambigai.html">வெள்ளிக்கிழமை, </a>மே 30, 2008 <br /><br />சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்து நெல்லை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.<br /><br />496 மதி்ப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ராம் அம்பிகை.<br /><br />இவர் பாளை செயிண்ட் இக்னேசியஸ் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்தவர் ஆவார். இவரது தந்தை ராம்கோபால் நெல்லை அகில இந்திய வானொலி நிலைய கடை நிலை ஊழியராவார். தாயார் வெள்ளையம்மாள்.<br /><br /><a href="http://pottalpudur.com/uploaded_images/ram-ambikai-250_30052008-741180.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://pottalpudur.com/uploaded_images/ram-ambikai-250_30052008-741177.jpg" border="0" alt="" /></a><br /><br />ராம் அம்பிகை எடுத்துள்ள மதிப்பெண்கள்:<br /><br />தமிழ் - 98<br />ஆங்கிலம் - 99<br />கணக்கு - 100<br />அறிவியல் - 99<br />சமூக அறிவியல்- 100<br /><br />500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று 2 மாணவர்களும் 2 மாணவிகளும் மாநிலத்திலேயே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.<br /><br />அவர்களது விவரம்:<br /><br />1. ஜோசப் ஸ்டாலின், செயிண்ட் ஜான் மேல் நிலைப் பள்ளி, வீரவநல்லூர், சேரண்மாதேவி, நெல்லை மாவட்டம்<br /><br />2. ஷகீனா, சாரா டக்கர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, நெல்லை<br /><br />3. மருதுபாண்டியன், ஹான்ஸ் ரோவர் மேல் நிலைப் பள்ளி, பெரம்பலூர்<br /><br />4. ஸ்வேதா, செயிண்ட் ரபேல்ஸ் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, சாந்தோம், சென்னை<br /><br />493 மதிப்பெண்கள் பெற்று 8 மாணவ-மாணவிகள் மாநிலத்திலேயே மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.<br /><br />அவர்களது விவரம்:<br /><br />1. என். ராம சுவாதிகா, செயிண்ட் இக்னேசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை<br /><br />2. ஜி.கே. உமாபிரியா, செளராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை<br /><br />3. கே. இந்து, செயிண்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம்<br /><br />4. எஸ். செல்வராஜ், ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளி, புலியூர், கரூர் மாவட்டம்<br /><br />5. ஜி. காயத்ரி, அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி<br /><br />6. எம். ரபீகா பேகம், அரசு மேல்நிலைப் பள்ளி, தாமரன்கோட்டை, பட்டுக்கோட்டை<br /><br />7. எம். திருமால், ஏ.கே.டி. நினைவு மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம்<br /><br />8. வி. எம்லின் மெர்சி, செயிண்ட் மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு<br /><br />தமிழில் 3 பேர் முதலிடம்:<br /><br />பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளி மாணடி மோனிஷா, மதுரை திருநகர் சீதாலட்சுமி பள்ளி மாணவி புவனேஸ்வரி, திண்டுக்கல் எம்.எஸ்.பி.எஸ்.என். மெமோரியல் பள்ளி மாணவர் அன்புசெல்வம் ஆகியோர் 100க்கு 99 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-5385834361924860789?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-51268889541460797892008-05-09T11:48:00.000+06:002008-05-09T12:09:10.986+06:00பொட்டல்புதூர் படக்காட்சி<embed id="VideoPlayback" style="width:400px;height:326px" flashvars="" src="http://video.google.com/googleplayer.swf?docid=5148623636235494744&hl=en" type="application/x-shockwave-flash"> </embed><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-5126888954146079789?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-44978167494957846312008-03-03T01:33:00.001+06:002008-03-03T01:36:18.421+06:00பொட்டல்புதூர் தர்ஹாவில் 2 சிறுமிகள் கடத்தல்<a href="http://thatstamil.oneindia.in/news/2008/02/08/tn-two-girls-kidnapped-in-kadaiyanallur.html">வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 8, 2008 </a> <br /> <br />கடையநல்லூர்: பொட்டல்புதூர் தர்ஹாவுக்கு வந்த சிறுமிகளை கடத்திச் சென்ற மர்ம பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.<br /><br />தூத்துககுடி அண்ணா நகரை சேர்ந்த ஜாகீர் உசேன்-பாத்திமா தம்பதிக்கு கவுசியா பர்வின், உள்பட 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் 10 நாட்களுக்கு முன் பொட்டல்புதூர் தர்ஹாவுக்கு வந்தனர்.<br /><br />அதே போல ஆத்தாங்கரைத் தெருவை சேர்ந்த பீர் மைதீனுக்கு 2 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களும் குடும்பத்துடன் தர்ஹாவுக்கு வந்தனர்.<br /><br />நேற்று பிற்பகலில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் ஆட்டோவில் பொட்டல்புதூர் தர்ஹாவுக்கு வந்தனர். அதில் ஒரு பெண் தர்ஹா அருகே நின்று கொண்டு, எனக்கு குழந்தை இல்லை. எனவே குழந்தை பேறுக்காக தலைபிரவாசத்தில் பிறந்த இரண்டு குழந்தைகள் வேண்டும். அவர்களை தத்தெடுதது புது ஆடைகள் மற்றும் நகைகள் போட்டு தொழுகை நடத்தி விட்டு பின்னர் அனுப்பி வைப்பதாக கூறிார்.<br /><br />இதை நம்பிய பீர் மைதீனின் மாமியார், பேத்தி செய்யது பர்வீனை<br />அந்த பெண்ணுடன் அனுப்பி வைத்தார். அதன்பின் அந்த பெண் ஜாகீர் உசேனிடம் கேட்டு அவரது மகள் கவுசியா பர்வீனையும் அழைத்துச் சென்றார்.<br /><br />ஒரு மணி நேரத்தில் குழந்தைகளை அனுப்பி விடுவதாக உறுதியும் அளித்தனர். ஆனால் இரவு 10 மணியாகியும் இரண்டு குழந்தைகளும் திரும்பி வரவில்லை. அவர்களது பெற்றொர் பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் குழந்தைகள் பற்றி எந்த தகவலும் இல்லை.<br /><br />இதையடுத்து ஜாகீர் உசேனும், பீர் மைதீனும் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். அம்பை டிஎஸ்பி ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் ராமர் ஆகியோர் விசாரணை நடத்தி சிறுமிகளை கடத்தி சென்ற பெணகளை தேடி வருகின்றனர்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-4497816749495784631?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-3569333925513887172008-01-17T01:51:00.000+06:002008-01-17T01:54:25.126+06:00நினைவலைகள்<strong>''ஆட்டோகிராப்''</strong> <br /><br /><br /><a href="http://thatstamil.oneindia.in/art-culture/essays/2007/autograph-by-abdul-kayum-181207.html">அப்துல் கையூம்</a><br /><br />ஆட்டோகிராப் என்றதுமே சேரனின் திரைப்படம்தான் சட்டென்று நமக்கு நினைவில் வரும். வாழ்க்கையில் நாம் சந்தித்த - நமக்கு பிடித்தமான நபர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருப்போம். அதை பாதுகாத்து வைத்திருக்கும் சுகமே அலாதியானது.<br /><br />புரோநோட் அல்லது காசோலையில் காணப்படும் கையெழுத்துகளுக்கு ஒரு விலையுண்டு. ஆனால் ஆட்டோகிராப் கையெழுத்துக்கள் விலைமதிப்பற்றது. அந்த கிறுக்கல்கள் ஆயிரமாயிரம் கதைகள் சொல்லும். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைக்கும் சுருக்கெழுத்து அவைகள்.<br /><br />ஆங்கிலத்தில் 'கிராஃப்' என்றாலே தொடர்புகளை காட்டும் வரைபடம் என்று பொருள். 20 பக்கங்கள் கொண்ட ஐந்தொகை காட்டும் வரவுச்செலவு கணக்கை ஒரு சிறிய 'கிராஃப்' வரைபடம் முழு சாராம்சத்தையும் உணர்த்திவிடும்.<br /><br />நட்பின் ஆழத்தை நாசுக்காய் உணர்த்தும் தற்கையெழுத்துச் சுவடிக்கு 'ஆட்டோகிராப்' என்ற அர்த்தமுள்ள பெயரிட்டார்களே. அவர்களுடைய முதுகில் ஒரு சபாஷ் போட வேண்டும். ஆழ்ந்த உட்கருத்தோடு சூட்டப்பட்ட பெயர் என்பதினால்.<br /><br />அன்னம் விடு தூது, புறா விடு தூது என்று காப்பியங்களில் நாம் படித்திருப்போம். நட்புக்கு ஆட்டோகிராப் விடும் தூது அளவிட முடியாது. தூது சென்றடைந்தவனை அது இறக்கை கட்டி பறக்க வைக்கும். அத்தூது ஆழ்மனதையும் ஊடுருவும் சக்தி படைத்தது.<br /><br />ஆட்டோகிராப் என்பது நட்பிலக்கணத்தின் மேற்கோள் புத்தகம்; கடந்துப் போன நினைவுகளின் கையடக்க கைப்பிரதி; ஆழமான உறவுகளின் ஆவண ஏடு; அர்த்தமுள்ள அகராதி; பள்ளிச் சரித்திரத்தின் குறிப்புதவி நூல் (Reference book); சங்கமத்தின் சங்கப் பலகை; உணர்வுகளின் ஓலைச்சுவடி; இளம் பிராயத்தின் இதிகாசம்; தோழமையின் தொல்காப்பியம். இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.<br /><br />உலகத்திலேயே மிகச் சிறிய வசீகரமான கவிதை உண்டெனில் அது ஆட்டோகிராப் வசனமாகத்தான் இருக்க முடியும். சந்தம் இருக்கின்றதோ இல்லையோ பந்தம் இருக்கும். விடலைப் பருவத்தின் வியாக்யானத்தை அந்த ஓரிரு வரிகள் விவரித்து விடும். புரட்டிப் பார்க்கையில் மனதில் ஒரு சொல்லவொணா தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை ஒரு நிமிடம் நிலை குலையச் செய்துவிடும்.<br /><br />சமய கிரகந்தங்களுக்கு எதிர்ப்பதம் என்னவென்று எனைக் கேட்டால் தயக்கமின்றி ஆட்டோகிராப் என்று பதிலுரைப்பேன். வேதங்கள் மனதை இலகுவாக்கும். அதற்குமாறாக ஆட்டோகிராப்போ மனதை கனக்க வைத்து விடும். ஒவ்வொரு புரட்டலின் போதும் ஆழ்மனதில் மூச்சுக்காற்றினூடே ஒரு விசும்பல் ஒலியும் சேர்ந்தெழும்.<br /><br />டயரிக்கும் ஆட்டோகிராப்பிற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. முன்னது தேதி சொல்லும். பின்னது பழைய சேதி சொல்லும். டயரி உள்ளத்தை பதிவு செய்யும். ஆட்டோகிராப் உள்ளத்தின் ஆழத்தை பதிவு செய்யும். வருடம் கழிந்ததும் டயரியின் மதிப்பு போய்விடும். வருடங்கள் கூடிப்போக ஆட்டோகிராப்பின் மதிப்பும் கூடிக்கொண்டே போகும்.<br /><br />ஆட்டோகிராப்பில் உயிர் எழுத்துண்டு. மெய்யெழுத்துமுண்டு. சுருங்கச் சொன்னால் உயிருக்குயிரான எழுத்துக்கள். பசாங்கு இல்லாத மெய்யான எழுத்துக்கள். மொத்தத்தில் அவை உயிர்மெய் எழுத்துக்கள். ஆச்சரியம் என்னவெனில் அத்தனையும் மெல்லினங்கள்.<br /><br />வல்லினத்தில் வசனம் எழுதும் நண்பர்களும் உண்டு. ஆனால் உள்ளர்த்தம் சுத்தமாக இருக்கும். ஒரு நண்பன் என் ஆட்டோகிராப்பில் "நீ என் செருப்புக்குச் சமம், விவரம் அடுத்த பக்கத்தில்" என்று எழுதியிருந்தான். 'ஜோட்டால்' அடித்ததுபோல் இருந்தது. கொதித்துப் போனேன். அடுத்த பக்கத்தை படித்ததும் அப்படியே நெகிழ்ந்துப் போனேன்.<br /><br />"Friends are like shoes, some loose, some tight, some fit just right.<br />They help you walk through life. Thanks for being my size"<br /><br />Colourful Memories என்று சொல்லுவார்கள். வண்ணமயமான எண்ணங்களை இந்த ஆட்டோகிராப் சுவடி தாங்குவதாலோ என்னவோ பல வண்ணங்களில் காகிதங்கள் கலந்திருக்கும். அந்த 'கலர் பக்கங்கள்' நம் கண்முன்னே விரித்துக் காட்டும் மெகா தொடரில் 'பிளாக்-அண்ட்-ஒயிட்' பிளாஷ்பாக் காட்சிகள் இடம்பெறும்.<br /><br />ஆட்டோகிராப்பின் நீல நிற காகிதத்தில் என் நண்பனொருவன் இப்படி எழுதியிருந்தான்:<br /><br />"This Page is Blue<br />My friendship is true"<br /><br />சமீபத்தில் அறிவுமதியின் அற்புதமான கவிதையொன்றை இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. (நினைவிலிருந்ததை வைத்து எழுதுகிறேன். வார்த்தைகள் சிலது மாறியிருக்கலாம்.)<br /><br />"அவள்<br />ஆட்டோகிராப்பில்<br />கையெழுத்திட்டாள்.<br />அது<br />பிரிவதற்கான உடன்படிக்கை என்பதை<br />அறியாமலேயே"<br /><br />எத்தனை ஆழமான வரிகள்? தேசத்தின் உறவுக்காக உடன்படிக்கை போடுவதுண்டு. நேசத்தின் பிரிவுக்காக போடப்படும் உடன்படிக்கை என்பது விந்தையன்றோ?<br /><br />தஞ்சை சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் நான் ஆரம்ப பள்ளிப் படிப்பை முடிக்கையில் பள்ளித் தோழி என் ஆட்டோகிராப்பில் எழுதிய வார்த்தைகள் இது:<br /><br />When twilight drops her curtain<br />And pins it with a star,<br />Remember that you have a friend<br />Though she may wander far.<br /><br />இரவு வேளைகளில் அந்த வானத்துக் கறுப்பு திரைச்சீலையில் குத்தப்பட்டிருக்கும் அந்த நட்சத்திர குண்டூசியை காணும்போதெல்லாம் தோழியின் முகம் என் கண்ணில் பளிச்சிடும். அதே கண்சிமிட்டல். அதே குறுகுறு பார்வை.<br /><br />பள்ளி வாழ்க்கையின் 'கிளைமாக்ஸ்' காட்சிகளில் அதிகமான நண்பர்கள் எழுதும் வாசகம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.<br /><br />"There are many Silver ships<br />There are many Golden ships<br />But the best ship is friendship"<br /><br />எனது கல்லூரி வாழ்க்கையின் அடையாளமாக நான் பாதுகாத்து வைத்திருந்த ஆட்டோகிராப்பை புரட்டியபோது நண்பன் ரஃபி எழுதிய வாசகம் என்னைக் கவர்ந்திழுத்தது.<br /><br />"உன் நினைவுகள்<br />என் மனதில்<br />போட்டோகிராப்பாய்<br />பதிந்திருக்க<br />நீயேன் வீணாக<br />ஆட்டோகிராப்பை<br />நீட்டுகிறாய்"<br /><br />என்று எழுதியிருந்தான். அன்று அவனுள் பீறிட்டெழுந்த கற்பனை வேகம் இன்று அவனை நாடறிந்த ஒரு எழுத்தாளனாக அடையாளம் காட்டி இருப்பதை நினைக்கையில் மனதுக்குள் ஒரு மத்தாப்பு.<br /><br />ஒரு சில பழைய பாடல்கள் நம்மை கடந்த காலத்திற்கு 'பிக்னிக்' அழைத்துச் செல்லும். ஒரு சில சினிமா படங்கள் சொல்லாமல் கொள்ளாமலேயே நம்மை 'தரதர'வென்று இழுத்துச் சென்று இளமைக் கால மணற்வெளியில் 'சம்மர் கேம்ப்'பே போட்டுவிடும்.<br /><br />"பசுமை நிறைந்த நினைவுகளே! பாடித் திரிந்த பறைவைகளே!" என்ற பாடல் வானொலியில் ஒலிக்கும்போதெல்லாம் என் பள்ளி வாழ்க்கைக்கு சர்ரென்று ஒரு 'U-Turn' எடுத்து அவசர அவசரமாக ஓடிச்சென்று என் வகுப்பிலுள்ள குட்டி மேஜை நாற்காலியில் அமர்ந்து அந்த கரும்பலகையில் காட்சிதரும் இளமைக்கால திரைப்படத்தில் மூழ்கி விடுவேன்.<br /><br />40+ ஆசாமிகளுக்கு இந்தப் பாடல் என்றால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் "முஸ்தபா முஸ்தபா" பாடலை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.<br /><br />பாலுமகேந்திராவின் "அழியாத கோலங்கள்" படத்தை பார்த்துவிட்டு தூக்கமிழந்து பல நாட்கள் தவித்திருக்கிறேன். ஒன்றாகவே இருந்து ஒன்றாகவே பழகிய சிறுவயது நண்பர்களில் ஒருவன் – அந்த குண்டுப்பையன் - இறந்து விடுவான்.<br /><br />அதை தொடர்புபடுத்தி உயிரோடு இருந்த என் நண்பன் உண்மையாகவே இறந்து விட்டால் நாமும் இதுபோல அழுது புரள்வோமோ என்று கற்பனைச் செய்து தலையணையில் முகம் புதைத்து குலுங்க குலுங்க அழுதிருக்கிறேன். இப்பொழுது நினைத்தால் படு அபத்தமாகப் படுகிறது. அன்று அந்த சோக நினைவுகள் ஒரு சுகத்தை அளித்ததென்னவோ உண்மை.<br /><br />சமீபத்தில் பார்த்த "பள்ளிக்கூடம்" திரைப்படமும் அதேபோன்று ஒரு தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. தங்கர்பச்சனின் கதாபாத்திரத்திற்கு இணையான ஒரு வெகுளியான குணச்சித்திர பாத்திரத்தை ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் சந்தித்திருக்கக்கூடும்.<br /><br />அன்றிரவு பஹ்ரைன் வானொலியில், வாய்ஸ் எஃப்.எம். 104.2 அலைவரிசையில், ஜக்ஜித் சிங்கின் ஒரு 'ஜபர்தஸ்த்' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. "ஓ காகஸ் கி கஷ்தி. ஓ பாரிஷ் கா பாணி" என்று குழைந்து குழைந்து பாடி மனுஷர் என் இதயத்தை இலகுவாய் பிசைந்துக் கொண்டிருந்தார்.<br /><br />இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் என் உடம்புக்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றம் ஏற்படும். இளமைக் காலத்தில் நான் சுவைத்த அந்த காக்காய்க்கடி கமர்கட்டின் வாசத்தை என் நாசி மானசீகமாய் உணரும். "ஆயிரம் தாமரை மொட்டுக்களே! வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்!" என்று பாடிய வண்ணம் என்னைச் சுற்றி வெள்ளை உடை தரித்த தேவதைகள் ஒன்று கூடி 'டிஸ்கோ டான்டியா' ஆடுவார்கள்.<br /><br />அந்த அற்புதமான கஜலின் அர்த்தங்களை அருந்தமிழில் மொழிபெயர்த்து அசைபோட்டுப் பார்த்தேன். கடைவாயில் கடலை மிட்டாயாய் இனித்தது.<br /><br />"என் செல்வத்தை பிடுங்கிக்கொள்<br />நான் சம்பாதித்த புகழ் அத்தனையும் பறித்துக் கொள்<br />என் வாலிபத்தை வேண்டுமானலும் எடுத்துக் கொள்<br />ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம்<br />என் குழந்தை பருவத்தை மாத்திரம் திருப்பித் தந்து விடு<br />மறக்க முடியாத அந்த மழைத் தூறல்<br />ஆஹா.. அந்த காகிதக் கப்பல்."<br /><br />ஜக்ஜித்சிங்கின் அந்த கொஞ்சல் மொழி என்னை என்னவோ செய்தது. Nostalgic ஜுரத்தில் ஜன்னி கண்டு குளிர்க்காய்ச்சல் வந்தது போல் ஒரு பிரக்ஞை. அந்த பால்ய பருவம் திரும்பவும் வருமா? கவலை என்றால் 'கிலோ என்ன விலை?' என்று கேட்கின்ற வயதல்லவா அது? கரைந்து போன காலம் திரும்ப வராததுதான்.<br /><br />ஆனால் மனமென்ற சிறையில் மறுபடியும் பூட்டி வைத்து, அந்த மலரும் நினைவுகளை அசைபோட்டு அழகுற ரசிக்க முடியுமே?. அந்த பழைய ஞாபகங்களில் அப்படியே மூழ்கிட முடியும். இயந்திர வாழ்க்கையை கணநேரமாவது மறக்க முடியும். நிகழ்காலத்து பிரச்சினைகளை சற்று நேரம் மூட்டைகட்டி வைக்க உதவும் காயகல்பம் அல்லவோ அது?<br /><br />கரைந்துப் போன அந்த 'காலச்சுவடு'கள் கவண் எறியாய் (Catapult) ஏன் என்னைத் தாக்குகிறது? பம்பரமாய் ஏன் எனக்குள் சுழல்கிறது? எனக்குள்ளே இந்த கேள்வியை வேள்வி நடத்தி பார்த்தேன். அவ்வரிகள் ஆன்மாவிலிருந்து பீறிட்டெழும் அனுபவம் கலந்த வரிகள் என்பதினாலா? இல்லை; இதயத்தில் புதைந்துக் கிடக்கும் என் இளம் பிராயத்து நினைவுகளை ஏர்க்கலப்பையாய்க் கிளறுவதாலா? சரியாக சொல்லத் தெரியவில்லை.<br /><br />சிறுவனாக இருக்கையில், புதிதாக வாங்கிய என் பம்பரத்தை தரையில் வட்டத்தின் நடுவில் வைத்து நண்பர்கள் அவரவர்கள் பம்பரத்தை சுழல வைத்து 'அபிட்' என்று ஆணியால் ஓங்கி குத்துகையில் என் இதயமே வெடிப்பது போல் இருக்கும்.<br /><br />நியு காலேஜில் படிக்கையில் ராகிங்கின் போது ஒருவன் நீச்சல் தெரியுமா? என்று கேட்க, தெரியும் என்று நான் சொல்ல "எங்கே தரையில் நீச்சல் அடித்து காட்டு" என்று அவன் சொல்ல, "இல்லை எனக்கு தண்ணீரில்தான் அடிக்கத்தெரியும்" என்று நான் சொல்ல, ஒரு டம்ளர் தண்ணீரை தரையில் ஊற்றி "இப்போது அடி பார்ப்போம்" என்று அவன் கூற, அந்த அனுபவம் எனக்கு இதயம் தாங்கும் இதயத்தை - ஒரு மனோபக்குவத்தை அளித்தது.<br /><br />அண்மையில் நான் கேள்வியுற்ற ஒரு சேதி என் மனதில் பேரிடியாய் தாக்கியது. பல காலம் என்னோடு ஒன்றாகப் பழகிய என் வகுப்புத் தோழன் ரஸ்மாரா. கம்பத்தைச் சேர்ந்தவன். இவன் அகால மரணம் எய்தி விட்டான் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. உண்மையென்று அறிந்ததும் என்னையறியாமல் தேம்பித் தேம்பி அழுதேன்.<br /><br />அன்று எதிர்பாராத விதமாக ஆட்டோகிராப் ஒன்று என் கண்ணில் தென்பட்டது. அதில் அவன் எழுதியிருந்த வார்த்தைகள் வாழ்க்கையின் அர்த்தங்களை எனக்கு கற்பித்தது.<br /><br />"உறவு என்றொரு சொல்லிருந்தால்<br />பிரிவு என்றொரு பொருளிருக்கும்"<br /><br />கண்ணதாசனின் வரிகளை எழுதியிருந்தான்.<br /><br />"ஏ இறைவா!" அவன் 'பிரிவு' என்று குறிப்பிட்டது இந்த பிரிவைத்தானா?<br /><br />அருகே நின்ற என் ஆறு வயது மகள் மோனா கேட்டாள் "ஏன் டாடி அழுவுறீங்க?". அவளது பிஞ்சு விரல்களை என் கன்னத்தை தடவிக் கொண்டிருந்தது.<br /><br />" டாடி இந்த பழைய புஸ்தகத்தே மேலேந்து எடுத்தேனா? அதான் கண்ணுலே தூசி விழுந்துடுச்சு. நீ போய் படிடா" என்று சமாளித்தேன்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-356933392551388717?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-17963317666148525462008-01-17T00:33:00.000+06:002008-01-17T00:35:55.601+06:00கிராமத்து முடிதிருத்தும் நிலையம்.<a href="http://thatstamil.oneindia.in/art-culture/poems/2008/a-poem-by-shanmuga-110108.html">சண்முகா</a><br /><br />குளத்தங் கரையினிலே<br />கூரைக் கொட்டகை,<br /><br />தலையாய அதிகாரியும்<br />தலைவணங்கித் தானமர<br /><br />பல கை அபிநயங்கள்<br />பலகையில் அமர்ந்து.<br /><br />நால்வரோடு நாமும் சேர்ந்து<br />கல் திண்ணைக் காத்திருந்து,<br /><br />மடிந்து கந்தலான<br />செய்தித் தாள் வாசிப்பு.<br /><br />எப்ப வந்தீக<br />என்று தொடங்கும் உரை,<br /><br />சங்கன் வீட்டு விசேஷம் முதல்<br />இந்தியா விடும் ராக்கெட் வரை,<br /><br />செய்திப் பரிமாற்றம்<br />செய் தொழிலிலும் கவனம்.<br /><br />மரத்தடியில் கீழமர்ந்து<br />சிரம்தாழ்த்தி நாம் பணிய,<br /><br />சின்னஞ் சிறு கதைகள் பேசி<br />தண்ணீரில் கேசம் கிளறி,<br /><br />கத்தரியின் கிடு கிடுப்பில்<br />சித்திரமாய்ச் சிதறும் முடி.<br /><br />மர இலைச் சலசலப்பை<br />ஏறிட்டு நாம் காண<br /><br />நரைத்த புருசு தடவி<br />முகச் சவரம் நடக்குமங்கே.<br /><br />பரதேசியாய் அமர்ந்து<br />பளிச்சென்று எழுந்து,<br /><br />குளத்தில் நீராடி<br />குளித்து வெளியில் வர<br /><br />சில்லென்ற குளிர்காற்று<br />சிணுங்கித் தீண்டிச் செல்லும்!<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-1796331766614852546?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-43580155575825332072008-01-09T13:54:00.000+06:002008-01-09T14:10:55.129+06:00பதக்கங்களை வென்ற பள்ளி மாணவன்.14 வயதில் 29 பதக்கங்களை குவித்த பள்ளி மாணவன்<br /><br />புதன்கிழமை, ஜனவரி 9, 2008<br /><br /><a href="http://pottalpudur.com/uploaded_images/mohamedmustafa250_09012008-795416.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://pottalpudur.com/uploaded_images/mohamedmustafa250_09012008-795413.jpg" border="0" /></a><br /><br /><a href="http://thatstamil.oneindia.in/news/2008/01/09/tn-senkottai-boy-becomes-pride-of-nellai.html">செங்கோட்டை:</a> 14 வயதே நிரம்பிய 9ம் வகுப்பு மாணவன், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று 29 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.<br /><br />நெல்லை மாவட்டம், செங்கோட்டை காசுக்கடை பஜார் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேனின் மகன் முகமது முஸ்தபா (14). பழைய குற்றாலத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.<br /><br />ஜாகீர் உசேன் கடந்த 8 வருடங்களாக குங்பூ, கராத்தே, ஊசூ, சிலம்பம், வாள் சுழற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார்.<br /><br />இவர் இதுவரை 17 தங்கம், 12 சில்வர், 2 வெண்கலம் பதக்கங்களையும் பெற்றுள்ளான். மேலும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாநில ஊசூ சாம்பியன்ஷிப் போட்டியில் சப்-சீனியர் பிரிவில் இரண்டாம் பரிசும், திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியின் கட்டா பிரிவில் முதல் பரிசும் பெற்றுள்ளார்.<br /><br />ஏராளமான போட்டிகளில் முதலிடத்தை பெற்றுள்ள இம்மாணவருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்த ஆண்டு முதல் கல்வி உதவித் தொகையாக ரூ.1,600 வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.பிரகாஷ் வழங்கி இம்மாணவரை பாராட்டினார்.<br /><br />மேலும் இவர் வருடம் தோறும் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் குற்றால சாரல் விழாவில் வீரதீர விளையாட்டினை தொடர்ந்து நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.<br /><br />குறைந்த வயதில் பிளாக் பெல்ட், கலைமதி விருது, உள்ளிட்ட பல்வேறு விருதுகள், நூற்றுக்கணக்கான கேடயம், சான்றிதழ்களை வீரதீர விளையாட்டுகள் மூலம் இம்மாணவன் பெற்றுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.<br /><br />வீரவாஞ்சி நாதன் பிறந்த செங்கோட்டையில் பிறந்த இம்மாணவர் வீரதீர விளையாட்டுகள் மூலம் சாதனை படைத்து வருவது நெல்லை மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-4358015557582533207?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-72717282745366195652007-12-29T23:50:00.000+06:002007-12-29T23:53:19.942+06:00வாந்தி,பேதியால் நூற்றுக்கனக்கானோர் பாதிப்பு<a href="http://thatstamil.oneindia.in/news/2007/12/29/tn-hundreds-affted-by-diarrhea-near-nellai.html">பாவூர்சத்திரம்</a>-வாந்தி,பேதியால் நூற்றுக்கனக்கானோர் பாதிப்பு<br /><br />சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007 <br /><br />பாவூர்சத்திரம்: கலங்கலான குடிநீரை குடித்ததால் பாவூர்சத்திரம் அருகே 100க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.<br /><br />நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவூடையனூர், மாடியனூர், பொடியனூர், சின்னநாடானூர், கோட்டைவிளையூர், ராயாப்பநாடானூர் ஆகிய ஊர்களில் வாந்தி மற்றும் பேதி காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.<br /><br />ஆவுடையனூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த ஊரைச் சேர்ந்த செல்வி, மாரிச்செல்வி, அரிதாஸ், பாலகன், திலகா, சுதா, ஜெயராணி ஆகியோரும் பொடியனூரை சேர்ந்த செல்லக்கனி, கோட்டைவிளையூரை சேர்ந்த ஜெயராஜ், சுடலைமணி நாடார் மற்றும் மாடியனூரை சேர்ந்த தங்கராஜா உள்பட பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.<br /><br />இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தாமிராபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் விநியோகிக்கப்ட்டு வருகிறது. குடிநீரால் தான் வாந்தி, மற்றும் வயிற்றுபோக்கு ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.<br /><br />மருத்துவமனையில் சிகிக்சை பெறுவோர் கூறியதாவது, தாமிராபரணி தண்ணீர் கலங்கலாக வருகிறது. குடத்தில் தண்ணீர் பிடித்து வைத்தால் அடியில் மண் உறைகிறது. இந்த தண்ணீரால் தான் இப்பகுதியில் வாந்தி, பேதி பரவுகிறது என்றனர்.<br /><br />சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-7271728274536619565?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-28891094158316379462007-12-21T13:58:00.000+06:002007-12-21T14:00:14.910+06:00தென்காசியில் கனமழை<a href="http://thatstamil.oneindia.in/news/2007/12/20/tn-flood-waters-enter-into-school-at-thenkasi.html">நெல்லையில் </a>பலத்த மழை: பள்ளிக்குள் வெள்ளம்- மாணவிகள் அவதி<br /><br />வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007 <br /><br />நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் தென்காசியில் பள்ளிக்குள் வெள்ளம் புகுந்ததால் மாணவிகள் பெரும் அவதிப்பட்டனர்.<br /><br />வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த 5 தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது.<br /><br />நெல்லை மாவட்டத்தில், தென்காசியில் கன மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளநீர் புகுந்தது.<br /><br />பள்ளி சற்று தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மழை நீர் வடிகால் அமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து 8 மாதங்கள் ஆகியும் இதுவரை அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை.<br /><br />இதனால் 2,100 மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் மழை நீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.<br /><br />சமீபத்தில் தான் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி செலவில் 24 வகுப்பறைகள் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />கன மழையால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு:<br /><br />நெல்லையில் பெய்த கனமழைக்கு ஒரே நாளில் மணிமுத்தாறு அணை 3 அடி உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 78 மி.மீ மழை பெய்துள்ளது.<br /><br />நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு,<br /><br />செங்கோட்டை-78, அம்பாசமுத்திரம்-40, நாங்குநேரி-28, பாளையங்கோட்டை-28.2, ராதாபுரம்-50, சங்கரன்கோவில்-57.3, தென்காசி, சிவகிரி-65.2, திருநெல்வேலி-12.2, ஆலங்குளம்-17.34 என பதிவாகியுள்ளது.<br /><br />பாபநாசம், மணிமுத்தாறு அணைபகுதிகளில் விடிய விடிய மழை பெய்ந்துள்ளதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.<br /><br />பாபநாசம் அணையில் 119.80 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 120.50 அடியாக அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 1,698 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 749 கன அடி தண்ணீர் திறநது விடப்படுகிறது.<br /><br />மேலணையில் 68 மீ.மீ, கீழணையில் 56 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 20 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணைப்பகுதியில் 71 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.<br /><br />அணைக்கு விநாடிக்கு 27.73 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடனாநதியில் 52 மி.மீ, ராமநதியில் 17 மி.மீ, கருப்பாநதியில் 35 மி.மீ. குண்டாறில் 12 மி.மீ, அடவிநாயினார் அணையில் 31 மீ.மீ, நம்பியாறில் 10 மி.மீ, கொடுமுடியாறில் 20 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-2889109415831637946?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-2145392384431094382007-12-21T11:41:00.000+06:002007-12-21T11:43:53.941+06:00நெல்லை செய்தி<a href="http://thatstamil.oneindia.in/news/2007/12/20/tn-new-over-bridge-in-tirunelveli-at-rs-16-cr.html">நெல்லை</a> பைபாஸ் ரோட்டில் ரூ.16 கோடியில் புதிய மேம்பாலம்<br /><br />வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007<br /><br />நெல்லை: நெல்லையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.16 கோடியில் பைபாஸ் ரோட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.<br /><br />இதுகுறித்து நெல்லை மேயர் ஏ.எல் சுப்பிரமணியன் கூறியதாவது,<br /><br />நெல்லையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது இதனால் நெல்லை மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வண்ணார்ப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தோம்.<br /><br />இதனை பரிசீலித்த முதலமைச்சர் கருணாநிதி கடந்த முறை நெல்லை வந்தபோது வண்ணார்பேட்டை பைபாஸில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர், நெடுஞ்சாலைதுறை அமைச்சர், நிதிதுறை செயலாளரை நான் அடிக்கடி சந்தித்து பேசினேன்.<br /><br />பின்னர் மேம்பாலம் அமைக்க ரூ.17.75 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இதையடுத்து முக்கிய செலவினங்களை தவிர சிலவற்றை குறைத்து பாலம் அமைக்க ரூ.16.40 கோடி ஆகும் என முடிவு செய்யப்பட்டது.<br /><br />தற்போது பாலம் அமைக்க தொழில்நுட்ப மற்றும் நிர்வாக அனுமதி ஆகியவை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.<br /><br />வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து துவங்கும் இந்த மேம்பாலம் மறுபுறம் எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி அருகே முடிவடைகிறது. இது இரண்டு வழிப்பாதையாக அமைக்கப்பட்டாலும் போக்குவரத்தை கணக்கில் கொண்டு நான்கு வழிப்பாதையாக மாற்றலாம் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-214539238443109438?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-6692603069692493082007-12-16T13:43:00.000+06:002007-12-16T13:44:58.507+06:00திமுக 'வெள்ளம்' - மக்கள் அவதி!<a href="http://thatstamil.oneindia.in/news/2007/12/16/tn-life-comes-to-standstill-as-dmk-men-pour.html">ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 16, 2007 </a><br /><br />திருநெல்வேலி: நெல்லையில் குவிந்துள்ள லட்சக்கணக்கான திமுகவினரால் நகரின் பெரும் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.<br /><br />நெல்லையில் நேற்று தொடங்கிய திமுக இளைஞர் அணி மாநாட்டையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் நெல்லையில் குவிந்துள்ளனர்.<br /><br />பேரணியில் மட்டும் 10 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் நெல்லை நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பேரணியின்போது முருங்காக்குறிச்சி சிக்னல் முதல் நெல்லை ரயில் சந்திப்பு வரையிலான பகுதியில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.<br /><br />சில இடங்களில் திமுகவினர் சாலையில் செல்ல முயன்ற இருசக்கர வாகனங்களை அடித்து தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் கூட வந்த மற்ற திமுகவினர், தகராறில் ஈடுபட்ட திமுகவினரை அமைதிப்படுத்தி அழைத்துச் சென்றனர்.<br /><br />பெரும் திரளான தனியார் பேருந்துகள் தவிர ஏராளமான அரசுப் பேருந்துகளிலும் திமுகவினர் வந்திருந்ததைக் காண முடிந்தது. பேருந்துகளின் உள்ளேயும், மேலேயும் பெரும் திரளான திமுகவினர் அமர்ந்து வந்தனர்.<br /><br />பேரணி வரும் பாதையில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்களும் மதியத்திற்கு மேல் மூடப்பட்டு விட்டன. அந்தப் பாதையில் உள்ள பல ஹோட்டல்களும் கூட வேகம் வேகமாக மூடப்பட்டு விட்டன.<br /><br />மாநாடு மற்றும் பேரணியால் நெல்லை நகரில் திருவிழா உற்சாகம் காணப்பட்டாலும், பலர் அவஸ்தைப்பட்டதையும் காண முடிந்தது. வெளியூர்களிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நெல்லைக்கு வந்த பலரால் நகருக்குள்ளேயே நுழைய முடியாத நிலை ஏற்பட்டதால் அவர்கள் பெரும் அதிருப்தியும், அவஸ்தையும் அடைந்தனர்.<br /><br />கருணாநிதிக்கு கருப்புக் கொடி - 4 பேர் கைது<br /><br />முன்னதாக நெல்லைக்கு வரும் முதல்வர் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதனால் போலீஸார் முக்கிய இடங்களில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.<br /><br />இந்த நிலையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-669260306969249308?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-23959445996581852662007-12-16T13:12:00.000+06:002007-12-16T13:17:12.541+06:00கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?<a href="http://tamil.sify.com/kalaimagal/fullstory.php?id=14117897">கு. சண்முகநாதன் & திருச்சுழி </a><br /><br />நல்லவர். பெரும் தொகை தனக்குக் கைக்கு (2 கோடி) வந்தபோதும் கட்சிக்குக் கொடுத்தவர். ஒரு மாலைப் பொழுதில் எங்கள் ஊர் கம்யூனிஸ்ட் ஆபிஸ் வாசலில் இவரை பஞ்சாயத்து தலைவர் சுடலைமுத்து நம்பியார் எனக்கு அறிமுகப்படுத்தினார். <br /><br />அம்பை சட்டமன்றத் தொகுதியில் தீட்சதரை எதிர்த்துபோட்டி போட்டு இருக்கிறார். இவரால் பல விவசாயக் குடும்பங்களுக்குக் கிடைத்த நன்மை ஒன்று உண்டு. கடனாநதி இராமநதி இவைகளெல்லாம் காங்கிரஸ் காலத்தில் கட்டப்பட்டது என்றால் அதற்கு காரணம் ஆம்பூர், ஆழ்வை, பொட்டல், கடையம் வட்டாரப் பகுதி விவசாயிகளை மனதில் வைத்துக் கொண்டு இவர் நடத்திய போராட்டத்தின் விளைவுதான். <br /><br />இன்று கடனாநதியிலிருந்து தென்காசிக்குக்கூட தண்ணீர் குடிக்கக் குழாய் மூலம் போகிறது. இந்த வட்டாரத்தில் விவசாய நிலங்கள் பூத்துக்குலுங்குகின்றன என்றால் அதற்குக் காரணம் தோழர் நல்ல கண்ணுதான். நானும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-2395944599658185266?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-12814859.post-85706178748705824242007-12-08T21:41:00.000+06:002007-12-08T21:44:40.532+06:00எழுதிச் செல்லும் விதியின் கை!<strong>முடவன் குட்டி</strong><br /><strong>Thinnai 2000 June 11 </strong><br /><br />சுவர்க்கடிகாரம் நான்கு முறை அடித்தது. எங்கிருந்தோ ஒலிப்பதாய் காதில் விழுகிறது. பாதித் தூக்கத்தில் புரண்டு படுக்கிறேன். மனைவி குறட்டைவிட்டவாறு தூங்கிக் கொண்டிருக்கிறாள். இவளுக்கும் அம்மாவுக்கும் ராத்திரி நடந்த சண்டை நினைவுக்கு வர, தூக்கம் சுத்தமாய்ப் போய்விட்டது. <br /><br />'ச்சே... ' படுக்கையை விட்டு வெடுக்கென எழுந்து உட்காருகிறேன். பீடி தேடி, தலையணைக்குக் கீழே கை போகிறது. தீப்பெட்டி... ? ராத்திரி நடந்த யுத்தத்தில் அதனையும் மறந்திருக்கிறேன். தீப்பெட்டி சமையலறையில் இருக்கும். எழுந்து கதவைத் திறந்து முற்றத்தில் இறங்கிய போது, குளிர்ந்த காற்று முகத்தில் அறைகிறது. சமையலறைக் கதவு திறந்திருக்கிறது. சின்ன விளக்கின் மங்கலான ஒளி லேசாய் அசைகிறது. மூலையில் அம்மா படுத்திருக்கிறாள். தீப்பெட்டி தேடுகையில் விழித்துக் கொண்டாள் அம்மா. ஏதோ முனகினாள். எரிச்சலாய் வந்தது. 'ஏம்மா... காலங்காத்தாலே ஆரம்பிச்சுட்டியா ? ' <br /><br />'என்னல ஆரம்பிச்சேன்... ஒளிஞ்சு போலாம்னா சாவு வரமாட்டேங்குதே... வூட்டு நரகத்திலே கெட-ன்னு அந்த ரப்பு எழுதிட்டானே... ' <br /><br />'சரி... சரி பேச்சை நிறுத்து. எளவெடுத்த பேச்சு... ' <br /><br />'....ஆமல. நான் எளவெடுத்துப் போயிடறேன்... நீயும் ஒம் பொண்டாட்டியும் வாழுங்கலே... ஏல வாப்பா... நிதானமா இருல.. துள்ளித் துடுச்சு தூளாப் போவாதல_ ' <br /><br />'ஏ செத்த சவம். இப்போ சும்மா கெடக்கிறியா இல்லையா...! ' <br /><br />அவ்வளவுதான். படுத்திருந்தவள் ஆக்ரோஷமாய் எழுந்துவிட்டாள். 'யாரப் பார்த்துல சும்மா கெடக்கச் சொல்ற... கால நீட்டி படுத்துறங்குதா பாருல... ஒம் பொண்டாட்டி.... அந்த செருக்கியப் போயி சும்மா கெடக்கச் சொல்லுல... வார்த்தைகள் சீறிச்சினந்து செவிப்பறையைக் கிழித்து நெஞ்சைச் சுட்டுக் குதறின. ரத்தம் கிர் ரென தலைக்கேறி, கண்கள் வெறியாய்க் கொப்பளிக்க, 'கிழவி' ஒனக்கு இம்புட்டு ஆங்காரமா... ஒங்காலை முறிச்சு கையிலே விலங்கு போடுறேனா இல்லியா பாரு... '. <br /><br />எட்டி ஓர் உதை. 'ஐயோ கொல்றானே... ' அலறியபடி, கீழே சாய்ந்தாள் அம்மா. விழுந்து கிடந்த அம்மாவிடம் பேச்சில்லை. அசைவில்லை. பதறிப்போய்... 'ம்மா... ம்மா... ' என்கிறேன். நெற்றியைத் தடவிப் பார்க்கிறேன். தோளைத் தொட்டு உசுப்புகிறேன். கையைப்பற்றி தூக்க அது 'தொப் ' பென விழுகிறது. <br /><br />அம்மா... அம்... மா... அடிவயிற்றிலிருந்து பிளிறிக் கிளம்பும் உயிரின் குரல், 'பக் ' கென நெஞ்சுக்குழி அடைக்க, நரம்பில் , ரத்தத்தில், கைதலத்தில் , கண்ணில், காதுகளில் பீதி பரவிற்று. கழுத்து நெறிபட மூச்சு திணறிற்று. <br /><br />பாய்ந்து ஒரே தாவு. முற்றத்தைத் தாண்டி படுக்கை அறை வாசலில் விழுகிறேன். வியர்த்து விறுவிறுக்க உடல் நடுங்குகிறது. மனைவி புறண்டு படுக்கிறாள். <br /><br />'வேண்டாம்... சொல்ல வேண்டாம்... யாருக்குமே... ' கொடியில் தொங்கும் சட்டை, வேஷ்டி துண்டு... துணிப்பைக்குள் திணிக்கிறேன். பணம்.. ? மூச்சை ஆழமாய் உள் இழுத்து 'தம் ' பிடித்து, அரிசிப் பானையைத் துளாவ... மனைவியின் சங்கிலி, காப்பு. சட்டைப் பையில் கொஞ்சம் சில்லறை இருக்கிறது. போதும். மெல்ல அடிவைத்து முற்றத்திற்கு வருகிறேன். அ... விளக்கு அணைஞ்சு போச்சா... ஒரே இருட்டா இருக்கே... கொல்லைப் புறக் கதவை மெதுவாக திற... திறந்து... <br /><br />ஓடு... ஓடு... வெறிக்கொண்ட நாயைப் போல ஓடுகிறேன். சேறும் சகதியுமாய் குளத்து ஓடை. ஒரு கால் சகதிக்குள். வெளியே இழு... இழுத்து... அ... அந்தப் பூவரச மரத்துக்குப் பின்னால் ஒளிந்து, சட்டையைப் போட்டு கொள்ளலாம். மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறேன். குறுக்குப் பாதையில் சென்றால், யாருக்கும் தெரியாது. மெயின் பஸ் ஸ்டாண்டுக்கும் போக வேண்டாம். ரோட்டிலேயே கை காட்டி பஸ்ஸை நிறுத்திக் கொள்ளலாம். முதலில் ஊரைவிட்டு நகர்ந்து விடணும். அப்புறம் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிடணும். <br /><br />எங்கிருந்தோ, இருளைக் கிழித்து வந்த ஆந்தையின் அலறல், குரல் மாற்றி மாற்றி தலைக்குள் பெரிதாய் ஓலமிடுகிறது. மூச்சு நடுநடுங்க வேகமாய் நடக்க ஆரம்பிக்கிறேன். வேகம், நடையை விரட்ட ஓட்டமாய் ஓடுகிறேன். இருட்டு... வானத்தில் ஒரேயொரு நட்சத்திரம். அதுவும் என்னோடு... என்னைத்துரத்திக் கொண்டு வருவதாய்... ஐயோ... இது என்ன... ? சரல்கற்களும். மேடு பள்ளங்களும்... ? வண்டிப் பாதையை விட்டுவிட்டேனா... ? முட்செடியின் கிளையொன்று கன்னத்தை விளாறி, சட்டையைக் கிழித்துவிட்டது. கன்னத்தைத் தடவ பிசுபிசுப்பு. ரத்தம். கால்கள் தாவித்தாவி ஓடுகின்றன. தெவங்கித் தெவங்கி மூச்சு வாங்குகிறது. வாய் பிளந்து காற்றை உள் இழுக்கிறேன். மார்கழிக்குளிர் காற்று, கொஞ்சம்... உட்கார்ந்து... அப்புறம் செல்லலாம்... காற்று பலமாய் வீசுகிறது. மழை வருமோ... ? குவிந்து, குவிந்து, சுழித்து, சுழித்து 'ஹ்உ ஹ்உ ' - வென காதுக்குள் ஓலமிடுகிறது காற்று. வெலவெலத்துப் பயந்து குப்புற விழுகிறேன். நாக்கு, குடல் ஒட்டி உலர்ந்து போவுதே... குடிக்கத் தண்ணீர். தண்... எழுந்து ஓடுகிறேன். சுண்ணாம்புக் காள்வாய் எதிரே குளம். ஆடு, மாடு குளிப்பாட்ட-மலம் கழித்தபின் கால்கழுவும் குளம். தாகம். அள்ளி அள்ளிக் குடிக்கிறேன். தீரவில்லை குனிந்து, கைகளை தலையில் ஊன்றி, வாயால், ஒரு மிருகத்தைப் போல் குடித்து தீர்க்கிறேன். அப்பாடா... குளத்தை ஒட்டி மெயின்ரோடு. <br /><br />கண்களைக் குருடாக்கும் வெளிச்சத்தை வாரி இறைத்தவாறு- அதோ பஸ். 'சடாரென ' நிற்கிறது. <br /><br />'எளவெடுத்த மூதேவி. நடுரோட்டுலேயா நின்னு கை காட்டுவாக... ஏறு. வேய்... ஏறு. ஏய்யா பேயடிச்ச மாதிரி பாக்கேறு... பஸ் மேலே ஏறுச்சுன்னா என்ன ஆவும் தெரியுமா வேய் ? நீரு நிம்மதியாப் போய் சேர்ந்திருவீரு. என் வேலை போயிடும் வேய். சரி சரி... எங்க போவணும்... எங்க வேய்... ? பொட்டல் புதூரா... ? எடும்... துட்டெடு வேய்... ' <br /><br />பொட்டல் புதூர்னு, அவனே சொல்றானே... இந்த பஸ், த்ருவா பொட்டல் புதூருக்கே போவுதுபோல... அதுவும் நல்லதுதான். பொட்டல் புதூர் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில், பாத்திஹா ஓதிவிட்டுப் போய்விடலாம். பின் ஸீட்டில் , மூலையில் அமர்கிறேன். மழைக்காக சுருட்டி வைத்திருந்த கான்வாஸை, கீழே இழுத்துவிடுகிறேன். ஸீட்டில் படுத்தவாறு சாய்ந்து, கால்களை முன்னால் நீட்டி கொள்கிறேன். <br /><br />'அ...ம்...மா '- உயிர்ச்சுடர் உள்ளே, ஆழத்திலிருந்து கதறிற்று. துண்டை வாயில் திணித்து, பொங்கிப் பொங்கி அழுகிறேன். 'அம்மா-எப்பவாவது உன்னை வாயாற அம்மா-ன்னு கூப்பிட்டிருப்பேனா... ? ரத்தம் தெறிச்சுப் போக, ராப்பகலா தறி நெய்து என்னைக் கண்ணுலவச்சு வளத்தியே... ஐயோ... அம்மா... ஒன்ன இனிமே பார்க்கவே... முடியா... <br /><br />முன்ஸீட் கம்பியில் படார் படாரென, தலை மோத , பஸ் நிற்கிறது. கண்டக்டர் அருகே வந்து, மேலும் கீழும் முறைக்கிறான். துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறேன். 'ரைட் ' 'ரைட் ' - கண்டக்டர் கத்துகிறான். டிரைவரும், அவனும் ஏதேதோ பேசிக்கொள்கின்றனர். காதோடு சேர்த்து, துண்டை தலையில் கட்டிக் கொள்கிறேன். கண்கள், மூட... <br /><br />அம்மா... அம்மா நீ பட்ட கஷ்டத்துக்கு, உன்னைப் பூவா வச்சிருக்கணும்... அப்படித்தான் நினைச்சேன்... கல்யாணமாச்சு. புதுசா வந்த பொஞ்சாதிக்கு முதல் குறி, புருஷனைப் பெத்தவதான். அவளிடமிருந்து புருஷனை பிரிச்சிரணும். அது வரைக்கும் ஓயமாட்டா... மருமவ நினைப்பெல்லாம், மாமியார்க்காரிக்கு 'பளிச் 'னு தெரியும். இவளை அவ மறிப்பா. அவளை இவ நெரிப்பா. இந்த திணறல்ல அம்மா, என்னிடமிருந்து விலகி போயிட்டா... ரொம்ப தூரம். வீட்டில் யாரும் அம்மாவுடன் பேசுவதில்லை. என்னிடம் மட்டும் வலிஞ்சு, திரும்பத் திரும்ப பேசுவா. ஒம் பொஞ்சாதி அதெச் சொல்றா... இதெச் சொல்றா... என. நான் அதுக்கெல்லாம் பதில் சொல்றதே இல்லை. வெறுப்புன்னு ஒண்ணுமில்லே. சண்டையை விசாரிக்க ஆரம்பிச்சா நதிமூலம், ரிஷிமூலம்தான். ஜீவனம் கழியாது. ஆனா அம்மா, காத்திருந்தா. எப்பவாவது அவளை நான் அம்மா-ன்னு கூப்பிடுவேன்-னு. அது நடக்கல. அப்படியே பழகிப் போச்சு. ஆச்சு... பத்துவருஷம். அம்மா தன்னை கொண்டு ஒதுங்கிட்டா. வீட்ல யாருமே இல்லாதபோது, ஒரு திருடியைப் போல வருவா... சோறோ... சோளக் காடியோ... தானா எடுத்து வச்சு வெங்காயத்தைக் கடிச்சுகிட்டு சாப்பிடுவா... <br /><br />நேற்று ராத்திரி... எங்கோ வெளியில போயிட்டு, பத்து பத்தரை மணி வாக்கில வீட்டுக்கு வந்தா அம்மா. சோறு இல்லை. பானையிலே தண்ணி ஊத்தி வச்சிருக்கு. பேச ஆரம்பிச்சா பொஞ்சாதி சும்மா இருப்பாளா... ? எதிர்ப்பேச்சு. பேச்சு வளர்ந்து, இவள் தலைமயிரைப் ப்ற்றி அவள் உலுக்க, அவளின் மூஞ்சியைப் பிராண்டித் துப்பினாள் இவள். பக்கத்துவீட்டு ஆயிஷா, எதிர்த்தவீட்டு மைமூனு- என கும்பல்கூடி, சமாதானம் செய்யும் சாக்கில், சண்டையை அணு அணுவாக ரசித்து, ருசித்து பருகிக் கொண்டிருந்தபோது நான் வந்தேன். இருவரையும் விலக்கினேன். <br /><br />'எனக்கென்ன தெரியும்... ? 'அது ' சாப்பிட்டிருக்கும்-ன்னு நினைச்சு, புள்ளைக்கு ஒரு வாய் ஜாஸ்தி சோறு போட்டேன்... ' - என்றாள் மனைவி. <br /><br />நான் பொன்னுவிலாஸ் காபிக் கடையில, இட்லி வாங்கிவந்து, அம்மா முன்னால் வைத்தேன். அவள் இட்லியைத் தொடவே இல்லை. தூங்காம, ரொம்ப நேரம் அழுது புலம்பிக் கொண்டே இருந்தாள். காலையில் பீடிக்குத் தீப்பெட்டி தேடும்போது ஒப்பாரி வைத்ததால், அவளை காலால் எ...த்...தி... <br /><br />'வேய் தூங்குறீரா... எறங்கும். பொட்டல்புதூர் வந்தாச்சு வேய்... '- கண்டக்டர் உசுப்ப, தட தடவென கீழே இறங்குகிறேன். எதிரிலேயே பள்ளிவாசல். அண்ணாந்து பார்க்கிறேன். பார்வை போகுந்தூரம் வளர்ந்தவாறு மேலே மேலே போயிற்று பள்ளிவாசல் மினாரா. மெல்ல நடக்கிறேன். புறாக்கள் முகத்துக்கு நேரே மறிப்பது போல, மாறி மாறிச் சிறகடிக்கின்றன. படி தாண்டி, பள்ளிவாசலுக்கு உள்ளே, கல்தரையில் கால்வைக்க, 'சுரீல் ' என ஏதோ ஒன்று, கால்நுனிவழியே மேலேறி, கபாலத்தை தாக்கிற்று. தலை தாழ, கூனிக் குறுகியபடி. மனித உருவங்கள் ஆங்காங்கே திட்டுதிட்டாய் உறைந்து கிடக்கின்றன. எத்தனையோ மனிதர்களின் உள்மன ரகஸ்யங்களை, காலா காலமாய் உறிஞ்சி உள்வாங்கிக் கொண்ட ஊழிக்காற்று தலைக்குமேல் சுற்றிச் சுற்றி வருகிறது. உள் பள்ளி வாசலில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் சுடரை எதேச்சையாய்ப் பார்க்கிறேன். ஐயோ... இது என்ன தீ ஜ்உவாலை என் கண்ணுள் தகிக்கிறதே... 'அம்மா... உன்னைக் கொன்னுட்டேன்... கொலை செஞ்சுட்டேன்... ' <br /><br />வெடித்துச் சிதறிய குரலில், பள்ளிவாசல் கட்டிடமே கிடுகிடுத்து நடுங்கிற்று. <br /><br />பொட்டல் புதூர் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில், இவன் உயிரை மாய்த்துக் கொண்ட கோரத்தைச் சொல்ல, ஓடிவந்தார் அப்துல்லா மாமா. அன்று காலை மயங்கிவிழுந்து, உடனே தெளிந்தும் விட்ட, இவன் அம்மா அலறினாள். ' வாப்பா... எம்புள்ளே... போயிட்டியாடா மவனே... '<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-8570617874870582424?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-46597483091368384292007-12-05T22:23:00.000+06:002007-12-05T22:32:49.532+06:00அணுசக்தி ஒப்பந்தம்!<a href="http://www.dailythanthi.com/article.asp?NewsID=378533&disdate=12/5/2007">அணுசக்தி</a> <span style="color:#000099;"><em>ஒப்பந்தத்திற்கு ஆதரவு<br />டெல்லி மேல்-சபையில் கனிமொழி முதல் பேச்சு<br />பிரதமர் பாராட்டு<br /></em></span><br /><br /><br /><a href="http://pottalpudur.com/uploaded_images/ms04-795832.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://pottalpudur.com/uploaded_images/ms04-795826.jpg" border="0" /></a><br /><br />புதுடெல்லி, டிச.5-<br /><br />அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. டெல்லி மேல்-சபையில் தனது கன்னிப்பேச்சில் கூறினார். இந்த பேச்சுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.<br /><br />கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. நேற்று முதல் முறையாக டெல்லி மேல்-சபையில் தனது கன்னிப்பேச்சின் போது அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்து பேசியதாவது:-<br /><br />கன்னிப்பேச்சில்<br /><br />நான் இந்த அவையிலே அடக்கத்துடனும், நம்பிக்கையுடனும் பேச எழுகிறேன். என்னுடைய இந்த கன்னிப்பேச்சில், மதிப்பு மிகுந்த இந்த அவையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த 123 ஒப்பந்தம் குறித்து நான் சார்ந்திருக்கும் கட்சியின் சார்பில் கருத்துக்கூறும் வாய்ப்பினை பெற்றமைக்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்.<br /><br />இந்த ஒப்பந்தம் போர் அல்லாத அணுசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதோடு, கடந்த 33 ஆண்டுகளாக நம்மீது திணிக்கப்பட்ட தடைகளும் நீக்கப்படும் என்பதோடு ராணுவத்திற்கான அணுசக்தி திட்டத்தில் நமக்குள்ள சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.<br /><br />சிலர் இது முறையற்ற ஒரு சார்பு ஒப்பந்தம் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் அமெரிக்க ஏடுகளுக்கு அளித்த ஒரு பேட்டியில் அமெரிக்காவின் சார்புச் செயலாளர் நிக்கோலஸ் பர்ன்ஸ், "இதுபோன்றதொரு ஒப்பந்தத்தை அமெரிக்கா, உலகில் உள்ள வேறு நாடுகளோடு செய்து கொள்ளாது. இந்தியா மட்டும் விதிவிலக்கு'' என்று கூறியுள்ளார்.<br /><br />அரசியல் காரணங்களுக்காக<br /><br />இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தையும், இதில் உள்ள நுணுக்கங்களையும் பார்க்கும்போது, மக்களிடையே இது குறித்த சந்தேகங்களும், பல்வேறு கேள்விகளும் எழுவது நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றில் சில நியாயமானவையாகவும், சில அரசியல் காரணங்களுக்காகவும் உள்ளன.<br /><br />நாட்டின் வளர்ச்சி என்ற அடிப்படையில், எங்கள் கட்சியின் தலைவர் கலைஞர், இந்த 123 ஒப்பந்தம் குறித்து கருத்து வேறுபாடுகள், இந்த அரசாங்கத்தை வலுவிழக்க செய்துவிடக்கூடாது. நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்று கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் முறையாக விவாதிக்கப்பட்டு சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், கவலைகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும் என்று எங்கள் கட்சியின் தலைவர் நம்புகிறார்.<br /><br />நமக்கு 2020-ம் ஆண்டு வாக்கில் 20 ஆயிரம் மெகாவாட் அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய வேண்டுமென்கின்ற திட்டமிருக்கிறது. ஆனால் இந்த 123 ஒப்பந்தம் ஏற்பட்டிருக்காவிட்டால், இந்த நிலையை எய்துவது கடினம்.<br /><br />எனவே நாம் யுரேனியம் போன்ற அணுசக்திப் பொருட்களை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. நமது நாட்டிலேயே உற்பத்தியாகும் தோரியத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யலாம். ஆனால் அதற்கு பலகாலம் பிடிக்கும்.<br /><br />முதல் அடி வைக்க<br /><br />புளூட்டோனியத்தை பயன்படுத்தியும் மின் உற்பத்தி செய்யலாம். புளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரம் தற்போதுள்ள அணுமின் நிலையங்களின் உற்பத்தியைவிட முப்பது மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு நாம் முதல் அடியை எடுத்து வைத்தாக வேண்டும்.<br /><br />சில சுற்றுச்சூழல் அறிஞர்கள், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்வது நன்மை தரும் என்று கருதுகிறார்கள். ஆனால் அவற்றால் நமக்குத் தேவையான அளவிற்கு மின்சாரத்தை வழங்க இயலாது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நான் இது போன்ற மின் உற்பத்தி நிலையங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவை பயனுள்ளவை என்பதோடு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவை நமக்கு தேவையான அளவில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே பங்கு வகிக்க முடியும்.<br /><br />உணவு உற்பத்தி பாதிக்கும்<br /><br />தற்போது கரும்பிலிருந்து உற்பத்தியாகும் எத்தனால் போன்ற பொருட்களை கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம் என்ற கருத்தும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த உலகத்தில் உள்ள உழக்கூடிய நிலங்கள் அனைத்திலும் கரும்பை பயிரிட்டாலும் கூட நமக்கு தேவையான மின் உற்பத்தி இலக்கை எட்ட முடியாது. மேலும், உணவு உற்பத்தியும் பாதிக்கப்படும்.<br /><br />2100-ம் ஆண்டு வாக்கில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு முற்றிலுமாக தீர்ந்துவிடக்கூடிய சூழ்நிலையும் உருவாகும் என்று கருத்து நிலவுகிறது. அதற்குப்பின்னர், நிலக்கரி மட்டுமே மின் உற்பத்திக்கு பயன்படும்.<br /><br />அதிக அளவில் நிலக்கரியை பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. அதனால் ஏற்படும் விளைவுகள் பூமியின் வெப்பத்திற்கு காரணமாக விளங்குகின்றன.<br /><br />ஒரு கிராம் யுரேனியம், ஒரு டன் நிலக்கரி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஈடு செய்யும். செலவிடப்பட்ட எரிபொருள் சுத்திகரிக்கப்பட்டு, அதிலிருந்து 97 சதவீத எரிபொருளை மீட்டு, மறுபடியும் பயன்படுத்தலாம்.<br /><br />மின் உற்பத்தி<br /><br />உலக அணுசக்தி வணிகம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், 123 ஒப்பந்தம்தான் அணுசக்தி தொழில் நுட்பத்தையும், அதற்கான கச்சா பொருளையும் நாம்பெறக்கூடிய வாய்ப்பினை உருவாக்கும். அதன் மூலம்தான் நாம் நம்முடைய மின் உற்பத்தி தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும்.<br /><br />நாம் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நிலையில், அணுசக்தி வினியோகிக்கும் உரிமை நமக்கு இல்லை. இதன்காரணமாக அணுசக்தி வினியோகிக்கும் 45 நாடுகள் குழுவோடு வணிக ஒப்பந்தம் செய்து கொள்வதில் நமக்கு சிக்கல் ஏற்படும். நம்மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக, நாம் இரு பயன்பாட்டு தொழில் நுட்பத்தை பெறுவதற்கு அனுமதி இல்லாத நிலை இருக்கிறது.<br /><br />சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற அணுமின் உற்பத்தி குறித்த இந்தியா-பிரான்ஸ் கூட்டுச் சந்திப்பில் அணுசக்தி தொழில்நுட்பத்தை நமக்கு வழங்க இயலாத நிலையை பிரான்ஸ் நாடு தெரிவித்து விட்டது. நம்மோடு மிகுந்த நட்போடு இருந்த ரஷ்யாவும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வழங்குவதாக ஒப்புக் கொண்டிருந்த ரியாக்டர்களை வழங்க மறுத்துவிட்டது.<br /><br />முதலீடு பயன்படாமல்<br /><br />பிரதமர் ராஜீவ்காந்தியும்-சோவியத் அதிபர் மைக்கேல் கோர்பச்சேவும் 1985-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமக்கு இவற்றை ரஷ்ய அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சோவியத் நாடு துண்டுபட்ட பிறகு, ரஷ்யா அணுசக்தி வினியோகிப்போர் குழுவில் இணைந்து கொண்டது. ஆகவே அவர்கள் நம்முடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கடைபிடிக்க முடியவில்லை.<br /><br />இதன்காரணமாக கூடங்குளம் அணுமின் உற்பத்தி திட்டம் தாமதமாகிறது. மத்திய அரசின் ரூ.26 ஆயிரம் கோடி முதலீடு பயன்படாமல் இருக்கிறது.<br /><br />அணுசக்தி வினியோகிக்கும் நாடுகளோடு நாம் செய்து கொள்ளும் எந்த ஒப்பந்தமானாலும், நாம் நம்முடைய அணு ஆயுத கொள்கையினை விட்டுக் கொடுப்பதாகும் என்ற கருத்தும் கூறப்படுகிறது. நம்முடைய அணுசக்தி திறமைகளை கொண்டு ஆயுத உற்பத்தி செய்யும் முயற்சி எளிதில் ஏற்பட்டதல்ல. 1998-ம் ஆண்டில் நாம் மேற்கொண்ட முடிவினை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டோம்.<br /><br />பாதுகாப்பில் சமாதானமில்லை<br /><br />இந்த 123 ஒப்பந்தம் ராணுவ நிர்மாணங்களையும், உள்நாட்டுத் தேவைகளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் உரிமையை நமக்கு வழங்கியிருப்பதால், நம்முடைய பாதுகாப்புத் தேவைகளில் நாம் எந்தவிதமான சமாதானமும் செய்து கொள்ள தேவையில்லை.<br /><br />இந்த 123 ஒப்பந்தம் இந்திய, அமெரிக்க உறவை உறுதி செய்திருந்தாலும், அணுசக்தி தொழில் நுட்ப வணிகத்தில் நாம் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.<br /><br />இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி அணுசக்தி எரிபொருளை வழங்காமல் நிறுத்திவிடவும், அதற்கான கருவிகளை ஓராண்டு கால எச்சரிக்கை வழங்கி, திரும்பப் பெற்றுக்கொள்ளவும் விதிகள் இடமளிக்கின்றன என்று கூறப்படுகிறது.<br /><br />எனவே, இந்தியா அமெரிக்காவிடமிருந்து மட்டுமே அணுசக்தி தொழில் நுட்பத்தை பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதையும், பிரான்ஸ், கனடா போன்ற இதர நாடுகளோடும் அணுசக்தி வணிக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதையும் அரசு இந்த அவைக்கு தெளிவுபடுத்த வேண்டும்.<br /><br />அரசு அறிவிக்க வேண்டும்<br /><br />மேலும், அமெரிக்கா எரிபொருள் வழங்குவதை நிறுத்திவிட்டால், மற்ற நாடுகளிடமிருந்து நாம் எரிபொருள் பெற இயலுமா என்று இந்த அவைக்கு அரசு தெரிவிக்க வேண்டும்.<br /><br />இந்த விவரங்கள் எல்லாம் மிக முக்கியமானவையாக இருந்தாலும், இவை காரணமாக நாம் இதனினும் பெரிய ஆதாயத்தை கருத்தில் கொண்டு நாம் நமது எண்ணத்தை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை.<br /><br />இந்த 123 ஒப்பந்தம் தானாக உருவாகவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு வித்திட்ட பாரதீய ஜனதா கட்சி, அமெரிக்காவோடு அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக முக்கியமானது என்று கருதியே பேச்சு நடத்தியது.<br /><br />ஏழ்மையிலிருந்து விடுவிப்பது<br /><br />நம்முடைய இந்த வளர்ச்சி திட்டம் என்பது 30 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து விடுவிப்பது, சாதி மற்றும் பால் வேறுபாடுகளிலிருந்து மக்களை விடுவிப்பது, கிராமப்புற மேம்பாடு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.<br /><br />இந்த அவையில் 1962-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எங்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் பேரறிஞர் அண்ணா, சீனப்படையெடுப்பின்போது ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள்காட்டி எனது உரையினை நிறைவு செய்ய விரும்புகிறேன். இந்த நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பாதுகாக்க உருவாகியுள்ள கவுரவப் பட்டியலில் தி.மு.க.வின் பெயரையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன்.<br /><br />இவ்வாறு கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கூறினார்.<br /><br />மன்மோகன்சிங் பாராட்டு<br /><br />டெல்லி மேல்-சபை தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழியின் உரையை அனைவரும் ரசித்துகேட்டனர். இவர் உரையாற்றி முடிந்ததும் பிரதமர் மன்மோகன்சிங் கனிமொழியின் பேச்சை உடனடியாக பாராட்டினார். மிகச்சிறந்த தங்கள் உரைக்கு எனது பாராட்டுக்கள் என்று ஒரு சீட்டில் எழுதி தனது பாராட்டுக்களை பிரதமர் மன்மோகன்சிங், கவிஞர் கனிமொழியிடம் தெரிவித்தார். மத்திய மந்திரி கபில் சிபல் நேரில் கைகுலுக்கி தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, சுரேஷ் பச்சோரி, ஆனந்த் சர்மா, பட்டேல், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு மேல்-சபை உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் தி.மு.க. எம்.பி.க்களும் பாராட்டினார்கள்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-4659748309136838429?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-62089810191643862462007-12-05T21:37:00.000+06:002007-12-05T21:41:44.347+06:006 அடி உயரத்துக்கு மின்வேலி!<a href="http://www.dailythanthi.com/article.asp?NewsID=378482&disdate=12/5/2007&advt=2">களக்காடு</a> <span style="color:#3366ff;"><em><span style="color:#000099;">மலையடிவாரத்தில் 8 கிலோ மீட்டர் தூரம்<br />6 அடி உயரத்துக்கு மின்வேலி அமைக்கப்படுகிறது<br />புலிகள் சரணாலய துணை இயக்குனர் பேட்டி<br /></span></em><br /></span><br />களக்காடு, டிச.5-<br /><br />தோட்ட பயிர்களை மிருகங்கள் அழிப்பதை தடுக்க களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மின்வேலி அமைக்கும் பணிகள் தொடங்கியது. இந்த மின்வேலி 6 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது என்று புலிகள் சரணாலய துணை இயக்குனர் வெங்கடேஷ் கூறினார்.<br /><br />விலங்குகள் அட்டகாசம்<br /><br />களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த சில வருடங்களாக காட்டு மிருகங்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வந்தது. காட்டு யானை, மிளா, பன்றி, கரடி போன்ற மிருகங்கள் கூட்டம் கூட்டமாக விவசாய விளைநிலங்களில் புகுந்து வாழை, நெல், தென்னை, பனை போன்ற பயிர்களை நாசப்படுத்தி வந்தன.<br /><br />இதை தடுக்க, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, காட்டு விலங்குகளால் அதிகப்படியாக விளைநிலங்கள் பாதிக்கப்படும் இடங்களை தேர்வு செய்து சோலார் மின்வேலி அமைக்க அரசு முடிவு செய்தது.<br /><br />மின் வேலி<br /><br />அதன் அடிப்படையில் களக்காடு அருகே உள்ள பத்மநேரி இசக்கி அம்மன் கோவிலில் இருந்து மஞ்சவிளையில் உள்ள வடக்கு பச்சையாறு அணைவரை 2 கிலோமீட்டர் தூரத்திலும், அதே போன்று வடகரையில் இருந்து தலையணை பகுதி வரை 3 கிலோமீட்டர் தூரமும், திருக்குறுங்குடி சரகத்தில் மலையடிபுதூர் பகுதியில் 3 கிலோமீட்டர் தூரத்திலும் மொத்தம் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்வேலி அமைக்கப்படுகிறது.<br /><br />ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வீதம் மொத்தம் 8 கிலோமீட்டருக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் செலவில் காட்டு மிருகங்கள் பயிர்களை தாக்காதவண்ணம் மின்வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.<br /><br />அதிகாரி பேட்டி<br /><br />இதுகுறித்து களக்காடு புலிகள் சரணாலய துணை இயக்குனர் மற்றும் வனஉயிரின காப்பாளர் வெங்கடேஷ் கூறியதாவது:-<br /><br />தற்போது மத்திய-மாநில அரசுகளின் நிதிஉதவி மூலம் களக்காடு மலை அடிவாரத்தில் 8 கிலோ<br />மீட்டர் தூரம் வரை, காட்டு மிருகங்களிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க மின்வேலி அமைக்கப்படுகிறது. அடுத்த வருடமும் இதேபோன்று நிதிஒதுக்கீடு செய்வதன் மூலம் ஓரளவு பணி நிறைவு பெற்று<br />விடும்.<br /><br />இந்த மின்வேலி 6 அடி உயரம் உள்ளது. இதனால் எந்த மிருகங்களும் காட்டைவிட்டு தோட்டங்களுக்குள்ளோ, ஊருக்குள்ளோ வராது. இந்த மின்வேலிகள் சோலார் பேட்டரி மூலம் இயங்குகிறது.<br /><br />பராமரிப்பு குழு<br /><br />ஏற்கனவே உள்ள மின்வேலிகளை பராமரிக்கவும் ஏற்பாடு செய்து உள்ளோம். மின்வேலிகள் பராமரிப்புக்கு குழு அமைத்து உள்ளோம். ஒவ்வொரு குழுவும் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை மின்வேலியை<br />பராமரித்து கொள்வார்கள்.<br /><br />இவ்வாறு களக்காடு புலிகள் சரணாலய துணை இயக்குனர் மற்றும் வனஉயிரின காப்பாளர்<br />வெங்கடேஷ் கூறினார்.<br /><br />இதுபற்றி மூன்றடி விவசாயியும், முன்னாள் நகர பஞ்சாயத்து உறுப்பினருமான கே.ராஜேந்திரன் கூறியதாவது:-<br /><br />இதுபோன்று மின்வேலி எல்லா இடங்களிலும் அமைக்க வேண்டும். விலங்குகள் மின்வேலியை தாண்டி வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.<br /><br />இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-6208981019164386246?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-32241130359322532832007-12-05T21:22:00.000+06:002007-12-05T21:29:11.651+06:00ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீர் திருத்தம்!<a href="http://pottalpudur.com/uploaded_images/ms07-730560.jpg"><img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://pottalpudur.com/uploaded_images/ms07-730557.jpg" border="0" /></a><br /><br /><br /><a href="http://www.dailythanthi.com/article.asp?NewsID=378535&disdate=12/5/2007">ஆரம்ப சுகாதார நிலையங்கள்</a>ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகின்றன<br />சிகிச்சை பெற்ற கிராம மக்கள் கருத்து<br /><br />சென்னை, டிச.5-<br /><br />"ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகிறது'' என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.<br /><br />ஆரம்ப சுகாதார நிலையங்கள்<br /><br />தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணைசுகாதார மையமும், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையமும் உள்ளன. சுகாதார மையங்களில் உள்ள செயல்பாடுகளை நேரில் கண்டறிவதற்காக பத்திரிகையாளர்களை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அரசு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.<br /><br />செங்குன்றம் வட்டார ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று பார்த்தபோது நோயாளிகள் ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர். 3 பெண் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பார்க்க முடிந்தது.<br /><br />டாக்டர்கள் கூறியதாவது:-<br /><br />கடந்த வருடம் இங்கு 410 பெண்கள் குழந்தை பெற்றனர். இந்த வருடம் இதுவரை 539 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. சராசரியாக தினமும் 2 பேருக்கு பிரசவம் பார்க்கிறோம். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதம் தோறும் பரிசோதனைக்கு வரச்செய்து உரிய ஆலோசனைகளை கூறுகிறோம். எச்.ஐ.வி. உள்ளிட்ட பால்வினை நோய் உள்ளதா? என்றும் ரத்த பரிசோதனை செய்கிறோம்.<br /><br />பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை தேவைப்படின், முன்னதாக அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம்.<br /><br />24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு அவர்கள் அழைத்தால் உடனே ஆம்புலன்ஸ் வேனை அனுப்பி அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறோம்.<br /><br />இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.<br /><br />ஏழைகளின் ஆஸ்பத்திரி<br /><br />அங்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றுள்ள தாய்கள் கூறியதாவது:-<br /><br />தனியார் ஆஸ்பத்திரி போல நன்றாக எங்களை டாக்டர்களும், நர்சுகளும் கவனிக்கிறார்கள். அதுமட்டும் அல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திட்டத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஜனனி சுரக்ஷா யோகாஜனம் திட்டத்தில் குழந்தை பெற்று வீடு திரும்பும் முன் எங்களிடம் ரூ.700 தருகிறார்கள். எனவே, இப்போது பல முன்னேற்றங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காண முடிகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விளங்குகின்றன.<br /><br />இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.<br /><br />சத்துள்ள உணவு<br /><br />பூதூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று மதியம் கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அவர்கள் வாழை இலையில் சோறு, சாம்பார், ரசம், மோர், முருங்கை இலை பொறியல், கூட்டு, அவித்த முட்டை, அவித்த கொண்டைக்கடலை ஆகியவற்றுடன் சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. வாரம் தோறும் இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் மாதம் ஒரு நாள் சாப்பிடுகிறார்கள். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த சாப்பாடு வழங்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.<br /><br />பொதுமக்கள் கூறுகையில், "ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர்களையும், கூடுதல் நர்சுகளையும் நியமிக்கவேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.<br /><br />மாநில சுகாதார கழக மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் முருகன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சம்பத் ஆகியோர் கூறியதாவது:-<br /><br />தன்னிறைவு<br /><br />தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு ரூ.431 கோடிக்கு திட்டம் அனுப்பினோம். அதற்கு ரூ.380 கோடி அனுமதிக்கப்பட்டது. அதில் ரூ.284 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.<br /><br />தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களை, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சுகாதார தரத்திற்கு ஏற்ப தன்னிறைவு பெற்ற தரமானதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தில் முதல் பகுதியாக 30 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2009-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்றுவிடும். படிப்படியாக திட்டம் செயல்படுத்தப்பட்டு, போதிய கட்டிட வசதிகள்,போதிய கருவிகள் அனைத்தும் வாங்கப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 2012-ம் ஆண்டுஇறுதிக்குள் இந்திய சுகாதார தரஅளவு பெற்ற தன்னிறைவு பெற்றவைகளாக விளங்கும்.<br /><br />இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-3224113035932253283?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-75556392241485602762007-11-25T21:22:00.000+06:002007-11-25T21:27:10.077+06:00சட்ட மன்ற தொகுதிகள் பிரிக்கப்பட்டன!அ.தி.மு.க.- தி.மு.க. கோரிக்கை நிராகரிக்கப் பட்டு விருகம்பாக்கம் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், ஆவடி, மாதவரம், பல்லாவரம் தொகுதிகளும் வருகின்றன. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தொகுதிகளை பிரித்தது போல் சட்டமன்றத் தொகுதிகளும் பல பிரிக்கப்பட்டுள்ளன.<br /><br />இதில் சேரன்மாதேவி, சாத்தான்குளம், திருவல்லிக்கேணி, ஆலந்தூர் தொகுதி பெயர் நீக்கப்பட்டு வேறு தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டது.<br /><br /><span style="color:#3333ff;">சேரன்மாதேவி தொகுதியை பிரித்து அதில் உள்ள பாப்பாக்குடி (முக் கூடல்) கடையம் பஞ்சாயத்து யூனியன் பகுதிகள் ஆலங்குளம் தொகுதியிலும் சேரன்மாதேவி யூனியன் அம்பாசமுத்திரம் தொகுதியில் சேர்க்கப்பட்டு</span> விட்டது.<br /><br />தமிழ்நாட்டின் மிகப் பெரிய தொகுதியான வில்லிவாக்கம் தொகுதி 3 ஆக பிரிக்கப்பட்டு, ஆவடி, அம்பத்தூர், விருகம்பாக்கம் தொகுதியாக உருவாக்கப்பட்டு உள்ளது.<br /><br />வில்லிவாக்கம் தொகுதியை பிரிக்கும் போது கே.கே.நகர் பெயரில் ஒரு தொகுதி உருவாக்க வேண்டும் என்று தி.மு.க. பிரதிநிதிகள் வலி யுறுத்தி இருந்தனர்.<br /><br />எம்.ஜி.ஆர்.நகர் பெயரில் ஒரு தொகுதியை உரு வாக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் 2 கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு விருகம்பாக்கம் பெயரில் தொகுதி உருவாக்கப்பட்டு விட்டது.<br /><br />வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் இது வரை ராயபுரம், துறை முகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திருவொற்றியூர், வில்லி வாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதில் தற்போது வில்லிவாக்கம், துறைமுகம் தொகுதியை மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில், சேர்த்து உள்ளனர். அதற்கு பதிலாக வட சென்னையில் மாதவரம், பூங்காநகர் (தனி) தொகுதிகளை இணைத்துள்ளனர்.<br /><br />தென்சென்னை பாராளுமன்றத் தொகுதியில் தி.நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய தொகுதிகள் இருந்தன. தற்போது இதில் ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் வருமாறு பிரித்துள்ளனர்.<br /><br />மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் ஏற்கனவே பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதை தற்போது மாற்றி புரசைவாக்கம், வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம், அண்ணா நகர் தொகுதிகள் இடம் பெறுமாறு செய்துள்ளனர்.<br /><br />ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில் மதுரவாயல், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும் புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம் சட்டசபை தொகுதி களும், திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதியில் ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், கும்மிடிப் பூண்டி, பொன்னேரி, திருவாலங்காடு, தொகுதிகளும் சேருகின்றன.<br /><br />சென்னையை பொறுத்தவரை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர் பெயரில் தொகுதி கள் இனி இருக்காது.<br /><br />(சற்று பழைய செய்தி)<br /><br /><strong>மாலைமலர் </strong><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-7555639224148560276?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-30079440254844707382007-11-22T12:40:00.000+06:002007-11-22T12:43:35.615+06:00நெல்லை மாவட்டத்தில் 46,000 வாக்காளர்கள் நீக்கம்.புதன்கிழமை, நவம்பர் 21, 2007 <br /><br /><a href="http://thatstamil.oneindia.in/news/2007/11/21/tn-voters-left-out-voters-list-tirunelveli.html">திருநெல்வேலி:</a> நெல்லை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 46,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் இல்லை.<br /><br />தமிழகம் முழுவதும் 2008ம் ஆண்டும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்கக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.<br /><br />இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 11 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.<br /><br />நெல்லை மாவட்டத்தில் கடந்த முறை புகைப்பட வாக்காளர் பட்டியலில் 17.36 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்களார் பட்டியலில் 46,629 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.<br /><br />தற்போதைய வாக்காளர் பட்டியலில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 866 ஆண்களும், 8 லட்சத்து 58 ஆயிரத்து 351 பெண்களுமாக மொத்தம் 16 லட்சத்து 90 ஆயிரத்து 217 பேர் இடம் பெற்றுள்ளனர்.<br /><br />ஆண் வாக்காளர்களை விட 26 ஆயிரத்து 485 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.<br /><br />இந்த பட்டியலில் பாளையங்கோட்டை தொகுதியில் அதிகபட்சமாக 18,000 வாக்காளர்களும், அம்பாசமுத்திரம் தொகுதியில் குறைந்தபட்சமாக 224 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.<br /><br />மேலும் வாக்களர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளின் விபரங்கள்:<br /><br />சங்கரன்கோவில் தொகுதியில் 2,490 வாக்காளர்களும், வாசுதேவநல்லூர் தொகுதியில் 701 வாக்காளர்களும், கடையநல்லூர் தொகுதியில் 2,885, தென்காசி தொகுதியில் 1,165, ஆலங்குளம் தொகுதியில் 821, நெல்லை தொகுதியில் 13,570, பாளையங்கோட்டை தொகுதியில் 18,612, சேரன்மகாதேவி தொகுதியில் 1,681, அம்பாசமுத்திரம் தொகுதியில் 224, நாங்குநேரி தொகுதியில் 949, ராதாபுரம் தொகுதியில் 3,531 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.<br /><br />ஒரே மாவட்டத்தில் 46,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது அம்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-3007944025484470738?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-85138567739238347732007-11-18T01:39:00.000+06:002007-11-18T01:55:05.839+06:00சிங்காரப் புன்னகை...<span style="color:#3333ff;"><strong>குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல<br /></strong></span><br /><br />நன்றி: தினமணி மருத்துவ மலர் 2003<br /><br />டாக்டர் பி.எஸ்.விருதகிரிநாதன்<br />நரம்பு-உளவியல் மருத்துவ நிபுணர்,<br />சென்னை.<br /><br /><blockquote>"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்<br />மண்ணில் பிறக்கையிலே<br />அது நல்லவராவதும் தீயவராவதும்<br />அன்னை வளர்ப்பினிலே'</blockquote><br /><br />என்ன அற்புதமான வரிகள்; எத்தனை ஆழமான கருத்துகள். பக்கம் பக்கமாக எழுதி, விடிய விடிய பேசிப் புரிய வைக்க வேண்டியதை அழகாக இரண்டே வரிகளில் நெற்றியில் அடித்தாற்போல் சொல்லியுள்ள கவிஞரின் பாங்கு பாராட்டுக்குரியது.<br /><br />குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதல்ல. அது கலை, அது அறிவியல். இன்றைய சூழலில் அது பெரும் சவால். "என்னங்க பெரிய கலை; அறிவியல் - அந்தக் காலத்திலே எங்க தாத்தாவுக்கு 10 பிள்ளைகள். டாக்டர், வக்கீல்னு எல்லோரும் நல்ல நிலையிலேயே இருங்காங்க. என்கூடப் பிறந்தது 8 பேரு. நாங்க எல்லோரும் நல்லாத்தான் இருக்கோம். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. என்னமோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி குழந்தை வளர்ப்பு சவால் அது இதுன்னு சொல்லிகிட்டு என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு.<br /><br />உண்மைதான். அந்தக் காலத்தில் ஏராளமான பிள்ளைகளை பெற்று நன்முறையில் வளர்த்தனர். ஆனால் இன்று காலம் மாறிப் போச்சு. வாழ்க்கை முறை மாறிப் போச்சு. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து, சிதறி தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டன. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தை வளர்ப்பு பெற்றோர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதென்பது உண்மைதான்.<br /><br />"ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்; இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்'. அது நேற்றைய தாரக மந்திரம். தற்போது ஒருபடி மேலே சென்று பெரும்பாலானோர் ஒன்றுடன் நிறுத்திக்கொள்கின்றனர். சிலர் 5 ஆண்டுகள் 7 ஆண்டுகள் கழித்து 2-வது குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள்.<br /><br />இப்படி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று தனிக்காட்டு ராஜாவாக வளரும் குழந்தைகளுக்கு மிதமிஞ்சி செல்லம் கொடுக்கிறார்கள். சக்திக்கு மீறி செலவும் செய்கின்றனர். இங்குதான் பிரச்சினை உருவாகிறது. இப்படி இஷ்டம் போல் வளர அனுமதித்துவிட்டு திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கும்போது முரண்டு பிடிக்கிறது.<br /><br />இந்த அவசரகதி உலகத்தில் குழந்தை வளர்ப்பு பிரச்சினையாகி உள்ளது.<br /><br />குழந்தைகள் வளர்ப்பு குறித்து விரிவான தகவல்கள்:-<br /><br /><strong>பிரச்சினை எங்கே தொடங்குகிறது?</strong><br /><br />"அலுவலகத்தில் சோர்ந்து திரும்பிய மனைவி சாப்பாடு தயார் செய்யும்போதுதான் "அம்மா எனக்கு கொஞ்சம் ஹோம் ஓர்க் சொல்லிக் கொடு' என்று குழந்தை கேட்கும். "என்னங்க கொஞ்சம் ஹோம் ஓர்க் சொல்லிக் கொடுக்கக் கூடாதா' என்று மனைவி கேட்க, "எனக்கு வேறு வேலை இல்ல பாரு' என்று கணவர் உறும அங்குதான் உரசல் ஆரம்பிக்கும். இதுபோன்ற நேரங்களில் குழந்தையும் முரண்டு பிடிக்கும். இதனால் அம்மா தனது ஆத்திரத்தை, இயலாமையை குழந்தையிடம் வெளிப்படுத்துவாள். இந்த கலாட்டாக்களில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைதான்.<br /><br />உணர்ச்சிகளைச் சமநிலையில் (உம்ர்ற்ண்ர்ய்ஹப் ஐய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ஸ்ரீங்) வைத்து நிதானமாகச் செயல்படும் தன்மை பெரும்பாலான பெற்றோருக்கு இல்லை. எதிர்ப்பு இருக்காது. திருப்பிப் பேசாது என்ற தைரியத்தில் நமது ஆத்திரம், கோபம், இயலாமையை குழந்தைகளிடம் காட்டுகிறோம். நமது கோபத்தின் வடிகால் நமது குழந்தைகள் அல்ல.<br /><br /><strong>குழந்தைகள் ஒழுங்காகச் சாப்பிடுவது இல்லை என்ற குறை பரவலாக உள்ளதே?</strong><br />"என் குழந்தைக்கு பால் இல்லைன்னா எதுவுமே வாய்க்குள்ள இறங்காது. டாக்டர் அவன் சாதமே சாப்பிடுறது இல்லை டாக்டர். இப்படி புலம்பும் அம்மாக்கள் பலர். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தையின் ஒவ்வொரு செயலுக்கும் நாம்தான் காரணம். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதை குழந்தை சாப்பிட்டுப் பழகும். அந்தந்த காலகட்டம், வயதுக்கு ஏற்ப எல்லா உணவுகளையும் கொடுத்துப் பழக்கவேண்டும்.<br /><br />"ஐயோ என் குழந்தைக்கு அது சாப்பிட்டா பிடிக்காது, இது சாப்பிட்டா பிடிக்காது' என்று நாமே தடுத்துவிடுகிறோம். நாம் கொடுப்பதில்லை. சாப்பிடவில்லையா விட்டுவிடுங்கள். பசி வந்தால் தானாகச் சாப்பிடும். நிறைய நொறுக்குத் தீனி கொடுத்து பழக்கிவிட்டு பிறகு சாப்பிடவில்லை என்று புலம்புவதில் பலன் இல்லை. குழந்தைப் பருவத்திலிருந்து முறையான உணவுப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.<br /><br />டாக்டர், 10 வயசாகுது - இன்னும் நான்தான் ஊட்டி விடவேண்டியதிருக்கு - இது பல பெற்றோரின் புலம்பல். சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். குழந்தை தானாகச் சாப்பிடும். ஒரு நாள் அடம் பிடிக்கும்; இரண்டு நாள் அடம் பிடிக்கும். நீங்கள் உறுதியாக இருந்தால் வழிக்கு வரும். எதையும் கேட்டுச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.<br /><br /><strong>குழந்தைகள் தவறு செய்யும் நிலையில் கண்டிக்கலாமா? அடிக்கலாமா?</strong><br /><br />கண்டித்தே ஆக வேண்டும். ஆனால் கண்டிக்கும் அணுகுமுறையில்தான் நாம் தவறு செய்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் சங்ஞ்ஹற்ண்ஸ்ங் இர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் செய்கிறோம். பாலைக் கொட்டிவிட்டால் "ஏய் சனியனே நீ எதுக்கு அதைப் போய் தொட்டாய்' என்று எரிந்து விழுவதற்குப் பதிலாக "பால் கொட்டிருச்சா, சரி பரவாயில்லை, இனி பார்த்து, கவனமாக இருக்கனும் சரியா, என்று கனிவு கலந்த கண்டிப்போடு சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை பாலை எடுக்கும்போது குழந்தை கவனமாக எடுக்கும். எதையும் பாசிட்டிவாக அணுகுங்கள். தவறை உணர வைக்க (தங்ஹப்ண்ள்ங்) வேண்டும். அதைவிட்டு கத்துவதால் எந்தப் பலனும் இல்லை.<br /><br /><strong>அடம் பிடிக்கும் குழந்தையைக் கட்டுப்படுத்துவது எப்படி?</strong><br /><br />குழந்தை அடம் பிடித்தால் நம்மில் பெரும்பாலோர் அடித்து, உதைத்து நம் வீர - தீரத்தைக் காட்டுகிறோம். சரி, அடிக்காவிட்டால் குழந்தை அடங்குமா என்று கேட்பீர்கள். "சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் நாம் சொல்வதை குழந்தை கேட்கும். கஷ்டப்பட்டால்தான் நாம் எதையும் அடைய முடியும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு உணர்த்துங்கள்.<br /><br />100 ரூபாய் சம்பாதிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரியவையுங்கள். நமது வாங்கும் சக்தி இவ்வளவுதான். நமது எல்லை எதுவரை என்பதை குழந்தை தெரிந்துகொள்ளவேண்டும். சில நேரங்களில் அடிப்பதுபோல் மிரட்டவேண்டியதிருக்கும். ஆனால் அடுத்த நிமிஷத்திலேயே அன்பாகப் பேசி, அரவணைத்து, இப்படிச் செய்யலாமா? என்று பேசி தவறை உணரவைக்கவேண்டும்.<br /><br /><strong>பொத்தி பொத்தி வளர்ப்பது (Over Protection) சரியா?</strong><br /><br />இந்தப் போட்டி மிகுந்த உலகத்தை எதிர்கொள்ளும் ஆளுமை, தைரியம் குழந்தைக்கு வேண்டும். என் குழந்தையை சின்ன வேலையைக் கூட செய்ய விட்டதில்லை. அவனுக்கு அது பிடிக்காது, இது பிடிக்காது என்று பெருமை பேசும் அம்மாக்கள் உண்டு. பொத்திப் பொத்தி வளர்ப்பதால் வளர்ந்த பிறகு தனித்தன்மையோடு செயல்படும் திறன் இருக்காது. குழந்தைக்கு எல்லாவற்றையும் பழக்குங்கள். அவன் வேலையை அவனே செய்ய அனுமதியுங்கள். அப்படிச் செய்ய சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் எதிர்கால போராட்டங்களைச் சந்திக்கும் மனபக்குவம் வளரும்.<br /><br /><strong>நன்றாகப் படிப்பதில்லையே?</strong><br /><br />படிப்பு என்றாலே வேப்பங்காயாகக் கசக்கிறது. எங்களுக்காகப் படிக்கிறான். ஆனா அவனுக்கு ஆர்வமே இல்லை என்பது பல பெற்றோரின் புகார். அவனைப் படிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. புத்தகத்தை எடுத்தாலே அவனுக்குத் தூக்கம் வந்துவிடுகிறது. படிப்புன்னா வேப்பங்காயா கசக்கிறது. இது பெற்றோர் பலரின் புலம்பல். குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது பெரிய கலை. பள்ளியில் இருந்து வந்தவுடன் குழந்தைகளிடம் பாசமாகப் பேசி இளைபாற விடுங்ள். விளையாட்டு போன்ற மனதுக்குச் சந்தோஷமான செயல்களில் ஈடுபட அனுமதியுங்கள். இயந்திரத்தனமாகச் செய்வதால்தான் சுமுகமான சூழ்நிலை மாறி படிப்பு கசப்பாகிவிடுகிறது. குழந்தை முரட்டுத்தனமாக செயல்படுவதற்கு இதுதான் காரணம்.<br /><br />முதலில் குழந்தையுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். உனக்கு என்ன கஷ்டம் என்று அமைதியாகக் கேளுங்கள். அவனது பேச்சுக்கும் காது கொடுங்கள். கண்ணா படிப்புதான் உனக்கு வசதிகளை வாங்கித் தரும் என்று உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லுங்கள். குழந்தை 50 மதிப்பெண் வாங்கியிருந்தால். பரவாயில்லடா கண்ணா 50 மார்க் வாங்கி பாஸ் செய்திருக்க, அடுத்த முறை 80 மார்க் வாங்கனும், உன்னால முடியும். "படிக்கிறதுல உனக்கு என்னடா பிரச்சினை' என்று கனிவோடு அணுகுங்கள்.<br /><br />குழந்தையின் சின்ன, சின்ன வெற்றியைப் பாராட்டுங்கள். குழந்தை ஏதாவது படம் வரைந்தால் அதைப் பாராட்டுவதை விட்டு சனியன் படிக்க துப்பு இல்லை, படம் வரையறான் என்று திட்டி குழந்தையின் திறமையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடாதீர்கள். எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதில் அவன் திறமையை வளர்ப்பதற்கு உதவுங்கள்.<br /><br /><strong>என் மகன் டாக்டராக வேண்டும் என்று நினைப்பதில் தவறு என்ன?</strong><br /><br />நமது ஆசைகளை அல்லது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் குழந்தையைப் பார்க்கிறோம். கேட்கும்போதே நீ டாக்டரா அல்லது என்ஜீனியரா என்றுதான் கேட்கிறோம். எல்லோரும் டாக்டர், என்ஜீனியராகிவிட்டால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு ஆளில்லை. டாக்டராக வேண்டும் என்று அவன் விரும்பினால் அதற்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவனை டாக்டராக்கிக் காட்டுங்கள். அவன் விளையாட்டு வீரராக வேண்டும், இசைக் கலைஞர் ஆகவேண்டும் என்று விரும்பினால் அதற்குத் தடை போடாதீர்கள்.<br /><br />5 விரல்களும் ஒன்றாக இருப்பது இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உண்டு. சில குழந்தைகளுக்குக் கற்பதில் குறைபாடுகள் (ப்ங்ஹழ்ய்ண்ய்ஞ் க்ண்ள்ஹக்ஷப்ண்ற்ஹ்) இருக்கும். அதைச் சரி செய்யுங்கள். எதில் திறமை உள்ளது எனக் கண்டறிந்து அதில் "நம்பர் ஒன்' ஆக்குங்கள். அதைவிடுத்து அவனுக்குப் பிடிக்காத ஒன்றை அவனிடம் திணித்து அவனும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போய்விடும்.<br /><br />நமது குழந்தைகளுக்கும் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகள் உண்டு என்பதை பெற்றோர் உணரவேண்டும். அட நாங்க என்ன, அவனுக்குக் கெடுதலா பண்ணப்போறோம் என்று பல பெற்றோர் சொல்கின்றனர்.<br /><br />நிச்சயமாக எந்தப் பெற்றோரும் குழந்தைக்குக் கெடுதல் செய்ய நினைப்பதில்லை. ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. குழந்தையின் அறிவாற்றல், இயல்பான திறமை, அவனது விருப்பம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப பாதை அமைத்துக் கொடுங்கள். நிச்சயமாக சாதித்துக் காட்டுவான். இதில் தவறு செய்யும்போதுதான் பல குழந்தைகள் சரியாகப் படிக்காமல் போய்விடுகின்றனர்.<br /><br />குழந்தை சரியாக படிக்காத நிலையில் பெற்றோர் அதிருப்தி அடைந்து வெறுப்பைக் காண்பிக்கின்றனர். பெற்றோரிடம் கனிவும் அன்பும் கிடைக்காத குழந்தைகள், பிடிவாதக் குழந்தைகளாகி முரண்டு பிடிக்கின்றனர். இச் சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை நாம் உணர்ந்து அவர்களைப் பக்குவமாகத் திருத்தவில்லை என்றால் பின்னர் திசை மாறிச் சென்றுவிடுகின்றனர்.<br /><br />தனித்துச் செயல்பட...: எல்லாக் குழந்தைகளுக்கும் தனிச்சையாக காரியங்களைச் செய்யும் திறமை உண்டு. ஆனால் நாம்தான் "என் செல்லத்தால் அதைச் செய்ய முடியுமா இதைச் செய்ய முடியுமா? என்று கூறி எதையும் செய்யவிடுவதில்லை. தனது தேவைகளை தானே செய்து கொள்ள பழக்க வேண்டும். குளிப்பது, சாப்பிடுவது, டிரஸ் போடுவது போன்றவற்றைத் தானே செய்யப் பழக்க வேண்டும். அதில் சில தவறுகள் செய்யும்போது பக்குவமாக எடுத்துச் சொல்லவேண்டும். உனக்கு ஒன்னுமே வராது. நீ உருப்பட்ட மாதிரிதான் என்று சொல்லி பிஞ்சு உள்ளத்தை காயப்படுத்தாதீர்கள்.<br /><br />குழந்தையைப் பற்றி கணவர் மனைவிடமும், மனைவி கணவரிடமும் குறை கூறி பேசக் கூடாது. கணவன் - மனைவி இருவரும் ஒருமித்து செயல்பட்டு உனது நலனுக்குத்தான் எல்லாம் செய்கிறோம் என்பதை குழந்தையிடம் புரிய வைக்க வேண்டும்.<br /><br /><strong>பருவ வயது பிரச்சினைகளைச் சமாளிக்க வழி என்ன?</strong><br /><br />பருவ வயது மிகவும் ஆபத்தானது. நமது குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டிய காலம் அது. செலவு செய்ய ரூ. 100 கேட்டால், நியாயமாகப்பட்டால் கொடுங்கள். ஆனால் அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். கணக்கு கேளுங்கள். பெண் - ஆண் நட்பு தவறில்லை. ஆனால் எல்லையைச் சுட்டிக்காட்டுகள்.<br /><br />ஆரோக்கியமான செக்ஸ் கல்வி அவசியம். நமது குழந்தை மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அதே நேரத்தில் ஏமாந்துவிடக் கூடாது. நாம் குழந்தை மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் குழந்தை நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் குறையும்போது பிரச்சினை ஏற்படுகிறது.<br /><br />குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டி நெறிகள் சொல்லப்படுகின்றன அவை:<br /><br />குயவர் (Potter): பெற்றோர் தொழில் திறன் மிக்க குயவர் போல் செயல்படவேண்டும். மண்ணைப் பிசைத்து, பக்குவப்படுத்தி அழகிய, கலைநயமிக்க மண் பாண்டங்களை உருவாக்குவது போன்று சமூகத்துக்குப் பயன்தரக் கூடிய சிறந்த குடிமகனாக குழந்தையை வளர்க்க வேண்டும்.<br /><br />தோட்டக்கரார் எஹழ்க்ங்ய்ங்ழ் மண்ணை சீர்படுத்தி விதை விதைத்து, தண்ணீர் ஊற்றி, பராமரித்து, களை எடுத்து, மரமாகி காய் காய்த்து கனி கிடைப்பது போல் குழந்தை நல் முறையில் வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும். உடலுக்கும் உள்ளத்துக்கும் வளம் தரக்கூடிய சத்துப் பொருள்களை வழங்கவேண்டும். அவர்களது வளர்ச்சிக்குத் தடையாக உள்ள தீய விஷயங்களை நீக்கி ஒரு தோட்டக்காரர் போல் பெற்றோர் செயல்பட வேண்டும்.<br /><br />வழிகாட்டி: குழந்தைக்கு நல்ல வழிகாட்டியாக நல்ல ஆசானாக இருந்து நல்லது எது - கெட்டது எது, நற்குணங்கள் எவை, தீய குணங்கள் எவை என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். வளைந்து கொடுக்கும் தன்மை. விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒட்டி வாழும் தன்மை ஆகியவற்றை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். அதே வேளையில் நமது விருப்பு - வெறுப்புகளை அவர்களிடம் திணிக்கக்கூடாது.<br /><br />ஆலோசகர்: குழந்தைக்கு நல்ல ஆலோசகராக இருக்கவேண்டும். நெருக்கடியான நேரங்களில் எப்படி செயல்படவேண்டும். உணர்ச்சிகளை எவ்வாறு சமநிலையில் வைத்திருக்கவேண்டும். வெற்றி - தோல்வி கையாளும் பக்குவம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுங்கள். வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுங்கள்.<br /><br />ரோல் மாடல் (தர்ப்ப் ஙர்க்ங்ப்): உங்கள் குழந்தையின் நல்லது. கெட்டது எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் காரணம். நீங்கள் சிகரெட் பிடித்தால் உங்கள் குழந்தையும் சிகரெட் பிடிக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் பொய் சொன்னால் உங்கள் குழந்தையும் பொய் சொல்லும். மொத்தத்தில் உங்கள் குழந்தைக்கு நீங்கள்தான் ரோல் மாடல். அதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள தவறுகளை, குறைகளைச் சரி செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள், உங்கள் குழந்தை இச் சமூகத்தை வழி நடத்தும் குழந்தையாக வளரும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-8513856773923834773?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-17959568682660078502007-11-14T20:58:00.000+06:002007-11-14T21:04:27.147+06:00முஸ்லிம் மாணவர்களுக்கு அரவு உதவி!முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் <br /><br />B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L.,B.E.,B. Tech.,B.D. S.,M.B.B. S.,M.S.,M. D.,M.E.,M. S.W.,M.Tech. ,M.C.A மற்றும் Professional/ Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது. <br /><br />ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.<br /><br />IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும். <br /><br />இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :<br /><br />1.+2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும். <br /><br />2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும். <br /><br />3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும். <br /><br />4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும். <br /><br />5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றுமு் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.<br /><br />விண்ணப்பிப்பது எப்படி?<br /><br />www.minorityaffairs .gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். <br /><br />14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.<br /><br />விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது. <br /><br />பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். <br /><br />சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்<br />மேலான்மை இயக்குநர்,<br />தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், <br />807, அண்ணாசாலை, சென்னை - 600002 <br /><br />மேலும் விபரங்களுக்கு :<br />ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)<br />தொலைபேசி 044-28514846 அல்லது<br />044-28515450<br />என்ற தொலைபேசியில் தொடர்பு கெள்ளவும். <br /><br />சமுதாய ஆர்வலர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும். <br /><br /><strong>விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007</strong><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-1795956868266007850?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-6314535970730003172007-11-14T20:20:00.000+06:002007-11-14T20:26:01.899+06:00உயிர் காக்க உதவும் பத்து வழிமுறைகள்!நமது வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்படும் போது பதட்டத்துடன் மருத்துவ மனைக்கு ஓடுகிறோம். அங்கே மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிப்பதன் மூலம் மருத்துவ உதவிகள் தாமதமின்றி நோயாளிக்குக் கிடைக்க வழி பிறக்கிறது. பல வேளைகளில் மருத்துவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் நோயாளியோடு பல காலம் இருக்கும் உறவினர்களே தடுமாறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நோயாளிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை எழுதி வைத்திருப்பது சிக்கலான நேரங்களில் பயனளிக்கும் என்கிறார் மருத்துவர் பால் தக்காஷி. <br /><br /><strong>உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள். </strong><br /><br />1. நோயாளிகள் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனை குறித்தும், மருத்துவர் குறித்தும் தெரிந்து வைத்திருங்கள். சிலருக்கு சில மருத்துவர்கள் மீது அதீத நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை நோய் தீர்க்கும் முதல் நிவாரணி. எனவே அப்படிப்பட்ட தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி பழக்கமான மருத்துவரெனின் நோயாளியைக் குறித்த பல விஷயங்கள் தெரிந்திருப்பதனால் மருத்துவ உதவிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களையும் தவிர்க்க முடியும். <br /><br />2. நோயாளியின் பிறந்த நாள் அல்லது வயது தெரிந்திருப்பது நல்லது. மருத்துவ படிவங்களை நிரப்பவும், மருத்துவருக்கு நோயாளியின் உடல் நிலை குறித்த அனுமானங்களுக்கும் அது மிகவும் பயன்படும்.<br /><br />3. நோயாளிக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதுகுறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.<br /><br />4. நோயாளிக்கு தனக்குத் தரப்பட வேண்டிய மருத்துவம் குறித்து ஏதேனும் கருத்து இருந்தாலோ, மத ரீதியான ஏதேனும் கொள்கைகள் இருந்தாலோ அதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.<br /><br />5. மிகவும் முக்கியமாக நோயாளியின் பழைய ஆரோக்கிய நிலை குறித்த அறிவு இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சர்க்கரை நோய், வலிப்பு, இதயம் தொடர்பான நோய் போன்றவை நோயாளிக்கு இருந்திருக்கின்றனவா என்பதைக் குறித்த அறிவு இருப்பது மிகவும் பயனளிக்கும். <br /><br />6. நோயாளி என்னென்ன மருந்துகள் உட்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவல்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உட்கொள்ளும் மருந்துகளுக்கான சீட்டுகளை ஒரு கோப்பில் போட்டு வைத்திருப்பது இத்தகைய சூழலுக்கு பெருமளவில் கை கொடுக்கும். <br /><br />7. நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் தொடர்பு எண்கள் கைவசம் இருப்பதும், பல தகவல்களைப் பெற உதவும்.<br /><br />8 நோயாளிக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறதா என்பதைக் குறித்த தகவல்களை தெரிந்து வைத்திருப்பது நலம் பயக்கும்.<br /><br />9. இதற்கு முன் நோயாளி ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் அறிந்திருப்பது நல்லது. குறிப்பாக தங்கள் இளம் வயதில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தால் அது பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அதை அறிந்து வைத்திருப்பது நல்லது. <br /><br />10. நோயாளியின் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக அவருடைய உணவுப் பழக்கம், மது, புகை போன்ற பழக்கங்கள் போன்ற தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.<br /><br /> மேற்குறிப்பிட்ட பத்து விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவசர தேவை ஏற்படும் போது தடுமாறாமல் சரியான இடத்தில் சரியான சிகிச்சையை வழங்க உதவும். இந்தத் தகவல்களைத் தெரிந்து கொள்ளதற்கு மெத்தப் படித்திருக்க வேண்டியதில்லை, குடும்ப உறவுகளுடன் அன்போடும் உறவோடும் உரையாடி வாழ்ந்தாலே போதுமானது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-631453597073000317?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-13999177630690285292007-11-11T22:49:00.000+06:002007-11-11T23:28:37.653+06:00நெல்லை மாவட்டத்தில் மழை.<a href="http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=234517">களக்காடு,</a> நவ. 11-<br /><br />வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நெல்லை, தூத் துக்குடி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.<br /><br />மலைப்பகுதியிலும் தொடர்ந்து மழை நீடிப்பதால் அணைகளில் நீர் கிடு கிடுவென உயர்ந்து வருகின்றன. இன்று காலை 6 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி பகுதியில் அதிக பட்சமாக 65.5 மி.மீ. மழையும், தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலையில் 136 மி.மீ. மழை யும் பதிவாகி உள்ளது. <br /><br />அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று 129.20 அடியாக இருந்த பாப நாசம் அணை நீர்மட்டம் 130 அடியாகவும், 73.25 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74 அடியாகவும் உயர்ந்துள்ளது. <br /><br />கருப்பாநதி அணை பகுதி யில் நேற்று நல்ல மழை பெய்தது. இதனால் இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 62.27 அடி யாக இருந்தது. இன்று காலை 3 அடி உயர்ந்து 65.29 அடியாகி உள்ளது. அணைப்பகுதியை பொறுத்த வரை பாபநாசம் அணையில் 45 மி.மீ. மழையும், கீழணையில் 70 மி.மீ. மழையும், மணிமுத்தாறில் 73 மி.மீ. மழையும், சேர்வலாறில் 24 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.<br /><br />நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இதர பகுதி களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-<br /><br />ராதாபுரம்- 19<br /><br />நாங்குநேரி- 65.5<br /><br />அம்பை- 25<br /><br />ஆலங்குளம்- 20.2<br /><br />சிவகிரி- 54.2<br /><br />தென்காசி- 23.3<br /><br />நெல்லை- 16.4<br /><br />திருச்செந்தூர்- 3.2<br /><br />காயல்பட்டினம்-32<br /><br />குலசேகரப்பட்டினம்-26<br /><br />விளாத்திகுளம்-20<br /><br />காடல்குடி- 7<br /><br />சூரங்குடி- 30<br /><br />வைப்பார்- 12<br /><br />கோவில்பட்டி- 30 <br /><br />கயத்தார்- 37<br /><br />கடம்பூர்- 51<br /><br />கழுகுமலை- 136<br /><br />ஓட்டப்பிடாரம்- 17<br /><br />மணியாச்சி- 62<br /><br />கீழஅரசடி- 2<br /><br />எட்டயபுரம்- 9<br /><br />சாத்தான்குளம்-15.<br /><br />நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இடி மின்னலுடன் கொட்டிய மழையால் ரோடு களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.<br /><br />இதனால் அங்குள்ள கால்வாயிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கால்வா யில் களக்காடு-சிதம்பராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள பாலம், கீழ கருவேலங்குளம்- மஞ்சுவிளை செல்லும் வழியில் உள்ள பாலம் ஆகிய 2-ம் வெள்ளத்தில் மூழ்கின.<br /><br />இதனிடையே நாங்குநேரி யன் கால்வாயில் கருப்பசாமி கோவில் அருகே திடீர் என்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெள்ள நீர் அங்குள்ள சர்ச் தெரு, நகர தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய தெருக் களை மழை நீர் சூழ்ந்தது.<br /><br />சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.<br /><br />இதனிடையே களக்காடு விநாயகத்தான்குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வயல் வெளிகளில் தேங்கியது. தாமரைகுளமும் உடையும் நிலை ஏற்பட்டுள் ளது.<br /><br />வெள்ளம் பாதித்த இடங்களை களக்காடு ïனியன் சேர்மன் தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் பார்வை யிட்டனர்.<br /><br />சிங்கையில் கடந்த சில நாட் களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை பெய்து வருவதால் தெருக் களில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. <br /><br />நீர்பிடிப்பு பகுதியான காரையார்-சேர்வலார், மணி முத்தாறு ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளன. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.<br /><br />&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&<br /><br /><strong>நெல்லை,</strong> நவ. 11-<br /><br />நெல்லை தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. <br /><br />நெல்லை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அணை நீர்பிடிப்பு பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.<br /><br />நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன்கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்த வண்ணம் உள்ளது.<br /><br />இதையடுத்து கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். <br /><br />கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இப்போது ஏற்பட்டு இருப்பது 2-வது முறையாகும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-1399917763069028529?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-12814859.post-28958191054443788752007-11-11T12:30:00.000+06:002007-11-11T12:33:38.690+06:00மணிக்கணக்கு Vs Moneyகணக்கு<strong>ரியாத் தமிழ்ச்சங்கத்தின் எழுத்துக்கூடத்தில் இன்று வெளியான ஒரு கவிதை...</strong><br /><br />அன்புடையீர்!<br /> <br />வனக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த "சொல்வேந்தர் குழு" நிகழ்ச்சி ஒன்றில் "இல்லத்தரசிகளுக்கு விடுமுறை ஏன் கொடுப்பதில்லை?" என்ற தலைப்பில் ஒரு மணித்துளி என்னைப் பேச அழைத்த போது..விடுமுறை வேண்டுமென்பதற்காகவே நான் வேலைக்குப் போகாமல் இல்லத்தரசியாக இருப்பதாகக் கூறினேன்...<br /> <br />அன்று எழுதிய கவிதை இது..<br /> <br />கடந்த எழுத்துக்கூடச் சந்திப்பின் போது ஒரு தருணத்தில் திருமதி. ஜெயந்தி பாலமுகுந்தன் அவர்கள் பெண்கள் வேலைக்குப் போனதும் நிறைய மாறிவிட்டது என்று கூறினார்கள்...அப்போது இக்கவிதை நினைவுக்கு வந்தது..எழுத்துக்கூடத்தில் பதிவிட எண்ணினேன்..<br /> <br />அயல்நாட்டில், குறிப்பாக இங்கே வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை பெரும்பாலும் இதுதான்..விதிவிலக்குகளும் இருக்கக்கூடும்...(இந்தியாவில் நிலைமை சற்றுத் தேவலாம் என்பது என் கருத்து)<br /> <br />பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்பதல்ல கருத்து...அவர்கள் சந்திக்கும் இழப்புகளே கவிதையின் வழக்கு...<br /> <br /><strong>மணிக்கணக்கு Vs Moneyகணக்கு</strong> <br /><br />என் தலையைக்<br />கோத நேரமில்லாத நிலை..<br />பிள்ளை தலைவாரிப்பூச்சூட்டிப்<br />பாடசாலைக்கு அனுப்புவதென்பது<br />கனவாகிப் போனது..<br /> <br />வாய்க்கு ருசியாகச் <br />சமையல் செய்து<br />வருடங்கள் ஆகிவிட்டது..<br />லக்கி கஃபே தோசை<br />முனைக்கடை ஷவர்மா<br />பழகிப் போய்விட்டது..<br /> <br />அனலாய்க் காயும் காய்ச்சல்<br />பிள்ளைக்கு என்றாலும்<br />தனியாய்த் தவிக்க விட்டுவிட்டுக்<br />கடமைக்காய் மருந்து கொடுத்துக்<br />கடமைக்காக விரையத்<br />தாய்மனம் தயாராகிவிட்டது... <br /> <br />பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்து<br />அலுத்து விட்டது<br />விசேட வகுப்புகளில்<br />மாலையிலும் வீடு <br />மாணவர்களால் நிறைந்திருக்க..<br />தயங்கித் தயங்கி ஐயங்களோடு<br />காத்திருந்து காத்திருந்து<br />என் பிள்ளை தூங்கியே போய்விட்டது...<br /> <br />பள்ளியில்கூட<br />பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு<br />மும்மாதம் ஒருமுறை..<br />இங்கு கணவன் மனைவி சந்திப்பு<br />பெற்றோர் பிள்ளைகள் சந்திப்பு..<br />வருடத்தில் எப்போதோ சிலமுறை..<br /> <br />கணவன் கூட மணிக்கணக்காய்ப் பேசி<br />மாதங்கள் பல ஆகிவிட்டது..<br />பிள்ளைகளைக் கொஞ்சிப் பேசி<br />வாரங்கள் பல ஆகிவிட்டது<br />வார இறுதிகளிலும்<br />விருந்து கடைகள் ...<br />நடனம் பாட்டு என்று<br />பிள்ளைகளின் வகுப்புகள்...<br />போதும் போதும் என்றாகிவிட்டது..<br /> <br />கவிதை எழுத,ரசிக்க,<br />கைவேலை தையல் செய்ய<br />இன்னிசை ரசிக்க<br />சுஜாதா பாலகுமாரன்<br />வரிகளில் லயிக்க.......<br />நேரமின்றிப் போனது<br /> <br />தேவைகளின் அழைப்பில்<br />சேவைகள் செயலிழந்து போனது<br /> <br />மாத இறுதியில்<br />கைகளில் கிடைக்கும்<br />பணத்தின் கனத்தில<br />மனதின் கனம்<br />கொஞ்சம் மயங்கிவிட்டது<br /><br />ரியால்களை ரூபாயாக<br />மாற்றி மகிழும்<br />Money கணக்கில்<br />மணிக்கணக்குகள்<br />தொலைந்த கதை<br />மறந்தே போய்விட்டது...<br /> <br />அன்புடன்,<br />மலர்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-2895819105444378875?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-72451197100454821382007-11-10T01:24:00.000+06:002007-11-10T01:30:51.026+06:00தாய்பால் அறிவுக்கு ஆரோக்கியம்.<a href="http://thatstamil.oneindia.in/news/2007/11/06/world-Breastfed-babies-more-intelligent-study.html">குழந்தைகளை அறிவுஜீவிகளாக்கும் தாய்ப்பால்</a><br /><br />செவ்வாய்க்கிழமை, நவம்பர் 6, 2007 <br /><br />லண்டன்: புட்டிப் பால் குடித்த குழந்தைகளை விட தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளே நல்ல அறிவுஜீவிகளாக வளர்வதாக இங்கிலாந்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.<br /><br />இதுகுறித்து தேசிய அறிவியல் அகாடமி நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. தாய்ப்பாலில் உள்ள சிறப்பு வகை கொழுப்பு அமிலங்கள், புட்டிப் பாலில் இருப்பதில்லை. இதன் காரணமாக, தாய்ப்பாலை குடித்து வளரும் குழந்தைகள், புட்டிப் பாலை குடித்து வளரும் குழந்தைகளை விட நல்ல புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.<br /><br />ஐ.க்யூ அளவில், புட்டிப் பால் குடித்து வளரும் குழந்ைதகளை விட இந்தக் குழந்தைகளுக்கு 7 புள்ளிகள் அதிகம் இருக்கிறதாம்.<br /><br />தாய்ப்பாலில் உள்ள FADS2 என்ற புதிய வகை ஜீன்தான், குழந்தைகளின் புத்திசாலித்தனம், ஆரோக்கியம், மகிழ்ச்சித்தன்மை ஆகியவற்றை அதிகரிக்க உதவுவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.<br /><br />நியூசிலாந்தில், 7, 9, 11 மற்றும் 13 வயது கொண்ட 1037 குழந்தைகளிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு 18 வயதானபோது அவர்களின் டி.என்.ஏ. மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டன.<br /><br />இதேபோல, இங்கிலாந்தைச் சேர்ந்த 2232 இரட்டையர்களின் ஐ. க்யூ அளவும் சோதிக்கப்பட்டது. அவர்களின் ஐ.க்யூ அளவு 5 ஆக இருந்தது.<br /><br />இரு பிரிவு குழந்தைகளுக்கும் ஐ.க்யூ சோதனை நடத்தப்பட்டபோது, தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட ஐ. க்யூ அளவு 7 புள்ளிகள் அதிகம் இருந்ததாம்.<br /><br />தாய்ப்பாலில் மட்டுமே பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளது என்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பசும்பாலில் இது இல்லை. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இந்த கொழுப்பு அமிலங்கள்தான் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />இந்த கொழுப்பு அமிலங்கள்தான் நரம்பின் மூலம் செய்திகளை மூளைக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. மேலும் நரம்பிழைகளின் வளர்ச்சியையும் இந்த கொழுப்பு அமிலங்கள்தான் தூண்டுவிக்கின்றன.<br /><br />புத்திசாலித்தனத்திற்கும், தாய்ப்பாலுக்கும் தொடர்பு உள்ளது என்பது முதல் முறையாக 1929ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது ஆதாரப்பூர்வமாக மீண்டும் உறுதிபட நிரூபிக்கப்பட்டுள்ளது.<br /><br />தாய்ப்பால் கொடுத்தால் இளமையும், அழகும் குறைந்து போய் விடும் என்ற கருத்து உள்ள இன்றைய இளம் தாய்மார்களுக்கு இந்த ஆய்வு நிச்சயம் கண்களைத் திறந்து விட உதவும் என்று எதிர்பார்க்கலாம்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-7245119710045482138?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12814859.post-1143207100982391392006-03-24T19:12:00.000+06:002006-03-24T19:31:40.996+06:00பணம் பணமறிய அவா!<blockquote>கொடுவாயூர்: ஜாஃபர் சாதிக், பாகவி <br /><br /></blockquote>அன்னை தேசத்து<br />அகதிகள் நாம்<br />எண்ணெய் தேசங்களில்<br />எரிந்து கொண்டிருக்கிறோம்!<br /><br />அடி வயிற்றில் பதிந்த<br />வறுமைக் கோடுகளின்<br />மர்மக் கரங்கள்<br />அறித்தெறிந்து வீசிய<br />ஜீவனுள்ள மாமிசத்<br />துண்டுகள் நாம்!<br /><br />கண் தெரியா தேசத்தில் விழுந்து<br />காயங்கள் தலை சாய்த்துக்<br />கண்ணீர் வடிக்கிறோம்!<br /><br />மொத்தக் குடும்பத்தையும்<br />முதுகில் சுமந்து<br />இன்னும் தீர்மானிக்கப்படாத்<br />திசைகளில் தொடர்கிறது<br />நம் பயணம்!<br /><br />ஒவ்வொரு முறையும்<br />நலம் நலமறிய அவா<br />என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!<br />பணம் பணமறிய அவா<br />என்றல்லவா பதில் வருகிறது!<br /><br />நமக்கு மட்டும் ஏன்<br />பணம் பந்த பாசங்களின்<br />சமாதியாகி விட்டது!<br /><br />ஒரு டெலிபோன் கார்டிலும்<br />ஒரு பொட்டலம் பிரியாணியிலும்<br />முற்றுப்பெற்று விடுகிறது<br />நம் பெருநாட்கள் ஒவ்வொன்றும்...<br /><br />உயிரை பிழிந்து பிழிந்து<br />பாசத்தால் ஒத்தடம் தந்த<br />உறவுகளைப் பிரிந்து<br />இன்னும் எத்தனை நாட்கள்<br />இந்த ஏகாந்த வாழ்க்கை?<br /><br />கலவரத்தில்<br />கைக் குழந்தையைத் தொலைத்த<br />தாயின் பதற்றத்தைப்போல்தான்<br />ஒவ்வொரு முறையும் போன் பேசிய<br />பின்னால் அடையும் அவஸ்தைகள்...<br /><br />நம்மில் பலருக்கு<br />தாம்பத்திய வாழ்க்கைகூட<br />தவணை முறையில்தான்<br />தட்டுப்படுகிறது...<br /><br />தொலைபேசியிலும்<br />தபாலிலும்<br />கொஞ்சலும், சிணுங்கலுமாய்<br />இன்ஸ்டால்மெண்டில்<br />இல்லறம் நடக்கிறது...<br /><br />மனைவியின் மூச்சுக்காற்று தந்த சுகம் கூட<br />இந்த ஏசி காற்று தருவதில்லை!<br /><br />குடும்ப விளக்குகளை<br />கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு<br />தீக்குச்சிகள் நாம்<br />தன்னந்தனியாய்<br />இந்தத் தீவுகளில்...<br /><br />வீடுகூடும் நிஜம் தொலைத்து<br />ஒரு வீடு கட்டும் கனாவில்<br />இன்னும் எத்தனை ஆண்டுகள்<br />இந்த பாலைப் பிரதேசங்களில்?..<br /><br />உயிரோடு இருக்கும்<br />பெற்ற குழந்தைக்கு<br />புகைப் படத்தில்தான்<br />கொடுக்க முடிகிறது<br />செல்ல முத்தங்கள்!<br /><br />என்ன இருந்தாலும்<br />காகிதங்கள் உணருமா<br />பாசத்தின் ருசி<br /><br />ஒவ்வொரு முறையும்<br />ஊர் சென்று திரும்பும்போது<br />மறக்காமல் எல்லாவற்றையும்<br />எடுத்து வர முடிகிறது<br />மனசைத் தவிர...<br /><br />காலத்தின்<br />இந்த பசை தடவல்கள்<br />நம்மைக் கட்டிப் போடாமல்<br />வெறும் கடிதம் போடத்தானா?<br /><br />பாலைவன ஜீவன்கள் நாம்<br />தாகத்தோடு காத்திருக்கின்றோம்<br />தண்ணீருக்காக அல்ல<br />தபால்களுக்காக...<br /><br />வாழ்க்கையின் பாதி<br />விரக்தியிலும் விரகத்தீயிலும்<br />எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை<br />கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்<br />முகாரி பாடும் வீணைகளாய்...<br /><br />என்ன சொல்லி<br />என்ன பயன்<br />தண்ணீரில் மீன் அழுதால்<br />கண்ணீரை யார் அறிவார்?<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12814859-114320710098239139?l=pottalpudur.com'/></div>PottalPudur.comhttp://www.blogger.com/profile/01876954249237889861noreply@blogger.com0