tag:blogger.com,1999:blog-100811432009-07-12T17:39:47.521-07:00ட்சுனாமி மீட்புபணி ஒருங்கிணைப்பு.நண்பர்களே! இது ஒரு கூட்டு முயற்சி. உங்களையும் இணைத்துகொள்ளுங்கள்!நாராயணன்noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-10081143.post-1145860777735399522006-04-23T23:39:00.000-07:002006-04-23T23:39:37.746-07:00testtest<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-114586077773539952?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-10081143.post-1128728113525106802005-10-07T16:34:00.000-07:002005-10-07T16:35:13.533-07:00TRO releases tsunami reportTRO releases tsunami report<br /><br />[TamilNet, October 07, 2005 17:08 GMT] <br />Tamil Rehabilitation Organization (TRO), a Sri Lanka Government registered NGO working exclusively in the NorthEast, released its six-month report this week on TRO's tsunami activities. TRO was praised by many international relief organizations and media for its effectiveness in attending to the people affected by the disaster.<br /><br />http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16040<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-112872811352510680?l=relieftsunami.blogspot.com'/></div>-/பெயரிலி.noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1125497335018025062005-08-31T06:59:00.000-07:002005-08-31T07:08:55.030-07:00செய்தி: டேவ் மேத்யு வின் சுனாமி பணி.(2005-08-29) Dave Matthews Band Joins With CARE To Fight 'Tsunami Of Poverty' In Sri Lanka.<br />NEW YORK (Dave Matthews Fans Website) - Out of deep concern for the long-term needs of impoverished communities affected by the tsunami and conflict in Sri Lanka, Dave Matthews Band, through its Bama Works fund, has committed an initial $250,000 to CARE, one of the world's leading humanitarian organizations. These funds will support CARE's poverty-fighting programs in two villages, Echchalampattu (Tamil population) and Seruvila (Sinhala and Muslim populations), located in the northeast district of Trincomalee, one of the hardest hit stretches of coast in Sri Lanka. With additional support from fans, more villages can be reached. <br />"Together with CARE, we encourage our fans to join us in this long-term effort to make a serious and lasting impact in the lives of people in Sri Lanka," said Dave Matthews Band. "It's critical that we continue to help people overcome their everyday tsunami of poverty and elevate their standard of living beyond where they were when the tsunami struck." <br /><br />Dave Matthews Band and CARE are calling on fans to support this long-term effort by encouraging them to make donations directly through the band's website www.davematthewsband.com. Donations made by fans will be matched 100 percent by Dave Matthews Band. Fans are encouraged to return to the Web site over time to receive updates about the people they are helping in Sri Lanka as well as to check for special promotions they could enter to win by making a donation. <br /><br />Fans and friends of the band are already answering the call, sending in donations at a steady rate and even holding benefit concerts in Charlottesville and New York City. Earlier this year, the rock band moe. raised more than $75,000 in a single night, funds that were matched by Dave Matthews Band. <br /><br />Funding from Dave Matthews Band and their fans will be focused in a part of Sri Lanka that was hard hit by the tsunami and where communities continue to suffer from the effects of conflict and poverty. In Trincomalee, the tsunami claimed more than 1,000 lives and drove over 30,000 families from their homes. The disaster occurred in the wake of a two-decade civil war that claimed approximately 65,000 lives, and fragile three-year-old cease-fire between the government and rebels in the area. People there now live in a state of extreme poverty with little or no access to income generating opportunities and basic necessities like nutritious food that they produce themselves and clean drinking water. <br /><br />In the villages of Echchalampattu (Tamil population) and Seruvila (Sinhala and Muslim populations) in Trincomalee, CARE will initiate the following work starting in January 2006: <br /><br />* Provide small loans and train people, specifically women, to start up and manage small businesses; <br /><br />* Distribute nets and other equipment to fishermen so they can resume their trade; <br /><br />* Assist farmers by providing them with the seeds, tools and technical support they need to restart agricultural production and feed their families for the long term; <br /><br />* Provide families with animals to raise and reproduce to sell in local markets; <br /><br />* Build 500 public sanitation facilities and the 35 wells and other sources of clean water to help ensure the health and well-being of thousands of families; <br /><br />* Identify opportunities to bring together village leaders to support dialogue for promoting peaceful collaboration among people of different ethnicities. <br /><br />"CARE is heartened by the support of Dave Matthews Band and their fans. Together, we can contribute to the reduction of poverty and vulnerability in Sri Lanka," says Peter Bell, president and CEO of CARE. "Rebuilding communities and livelihoods from scratch cannot occur in a matter of months. It will take years of hard work and commitment. In doing so, it's imperative to incorporate the wishes and protect the rights of people of all ethnicities whose lives have been turned upside down." <br /><br />CARE has worked in Sri Lanka since 1956, responded quickly to the tsunami, and understands the cultural and political challenges faced by many communities. In carrying out development programs in Trincomalee and in other parts of Sri Lanka, CARE will continue to give special attention to the needs of displaced people of all ethnic origins that have suffered from the effects of the tsunami, conflict and poverty. <br /><br />Dave Matthews Band – Carter Beauford, Stefan Lessard, Dave Matthews, Leroi Moore and Boyd Tinsley – and their Bama Works Fund, established in 1999, have supported a variety of organizations and campaigns and donated millions of dollars in grants to a variety of organizations in their hometown of Charlottesville, Virginia, and around the world. Beneficiaries have included public education, community parks, youth community clubs, the Amazon Rain Forest and AIDS organizations.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-112549733501802506?l=relieftsunami.blogspot.com'/></div>KARTHIKRAMASnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-10081143.post-1124897011660228812005-08-24T08:18:00.000-07:002005-08-24T08:25:17.353-07:00சீனா-இலங்கை நட்புகிராமம், சுனாமி நிவாரணம்.WALAHANDUWA, Sri Lanka, Aug. 22 (Xinhuanet) -- A foundation ceremony for the China-Sri Lanka Friendship Village was held Monday in Walahanduwa of Galle district, about 144 km south of Colombo, to house the displaced and the homeless due to last y<!--ADV_CONTENT-->ear's tsunami. <p>Addressing the ceremony, Jiang Yiman, executive vice president of Red Cross Society of China, said "all the Chinese people across the country have shown great care and much concern about the people in the tsunami-hit areas in Sri Lanka after the suddenly occurred tsunami which brought tremendous disasters to the people of Sri Lanka, causing great losses for people's lives and belongings". <p>She said people from all walks of life one after another have all voluntarily rendered donations in cash and kind with a view torelieving and reducing the suffering caused by the disasters. The fund collected by the China Charity Federation and China Red Cross Society to built the village is also from Chinese civilian people. <p>"Helping to build China-Sri Lanka Friendship Village is strengthening the century old relationship between China and Sri Lanka," Dinesh Gunawardane, minister of Sri Lanka Urban Development and Water Supply said. <p>"This village is a symbol of love and kindness of Chinese people to Sri Lankan people," he said. <p>The village is to be built under a memorandum of understanding signed on May 10 by the China Charity Federation and the Sri Lankan government. <p>Under the memo, the project will be completed within nine months and will cost 10 million US dollars. The houses in the village will have minimum floor area of 500 square feet (about 46.5 square meters) with two bed rooms, a living room, kitchen and toilet. <p>The Sri Lankan government will provide land for the construction of houses in the village, with one house costing about 4,000 US dollars. <p>The China Charity Federation has provided 10 million yuan (about 1.21 million US dollars) of emergency aid to Sri Lanka after the tsunami hit the country in December 2004. <p>More than 30,000 people were killed and up to one million were displaced in the disaster. Enditem<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-112489701166022881?l=relieftsunami.blogspot.com'/></div>KARTHIKRAMASnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1123096135798731302005-08-03T12:06:00.000-07:002005-08-03T12:08:55.806-07:00சுனாமி: ரூ. 700 கோடியில் கடல் சுவர்! தமிழக அரசு திட்டம்சுனாமி: ரூ. 700 கோடியில் கடல் சுவர்! தமிழக அரசு திட்டம்<br /><br />ஆகஸ்ட் 01, 2005<br /><br />சென்னை:<br /><br />தமிழக கடலோர மாவட்டங்களில் ரூ. 700 கோடியில், 600 கிலோமீட்டர் தொலைவிற்கு சுனாமி தடுப்புச் சுவர் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. <br /><br />கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலுக்கு தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. <br /><br />இதில் கன்னியாகுமரி, கடலூர், நாகை மாவட்டங்கள் தான் மிகப் பரும் சீரழிவை சந்தித்தன. இதையடுத்து தமிழக அரசு சுனாமி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தது. அப்போது கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் மற்றும் கடல் அரிப்பைத் தடுக்க சுவர் அமைக்கப்படும் என ¬முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். <br /><br />இதுதொடர்பான ஆய்வுப் பணிகளையும் அவர் ¬முடுக்கி விட்டார். சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கடல் சார் பொறியியல் துறைத் தலைவர் வி. சுந்தர், இதுதொடர்பாக ஆய்வறிக்கை தரும்படி தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டார். சுந்தர் தனது ஆய்வுகளை ¬முடித்து அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.<br /><br />தமிழகத்தைப் பொருத்தவரை மொத்த கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ ஆகும். இதில் 60 கிலோ மீட்டர் பகுதி அரபிக் கடலைச் சார்ந்துள்ளது. மீதமுள்ள கடற்கரை வங்கக் கடலையொட்டி அமைந்துள்ளது. <br /><br />இந்த 1076 கிலோமீட்டர் தொலைவில், கடலில் நதிகள் கலக்கும் கழிமுகம், சிறு ஓடைகள், சதுப்பு நிலக் காடுகள், மீன்பிடி துறைமுகங்கள், உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள் போன்றவை சுமார் 435 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைந்துள்ளன. <br /><br />இவை கடற்கரைப் பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளன. மீதமுள்ள 641 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இயற்கை சீற்றத்திற்கு ஆளாகும் பகுதிகளாக உள்ளன. <br /><br />இதில் ஏற்கனவே 40 கிலோமீட்டர் தூரத்திற்கு தூண்டில் வளைவுகள், கற்குவியல் சுவர்கள், குறடுகள், தடுப்புச் சுவர்கள் ஆகியவை உள்ளன. மீதமுள்ள 601 கிலோமீட்டர் தொலைவு கடற்கரையையும், அதை ஒட்டி வாழும் லட்சக்கணக்கான மக்களையும் காக்க வேண்டியுள்ளது. <br /><br />சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவும், இந்த பகுதிக்குள் தான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த 601 கிலோமீட்டர் தொலைவு கடற்கரையில் சுனாமி பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து சுந்தர் தலைமையிலான நிபுணர் குழு ஆராய்ந்து வந்தது. <br /><br />நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள்: கடலோரப் பகுதிகளில் சுமார் 695.99 கோடி மதிப்பில் சில பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ¬முதல் கட்டமாக ரூ. 549.37 கோடியிலும், 2வது கட்டமாக ரூ. 54.36 கோடியிலும், 3வது கட்டமாக ரூ. 92.26 கோடியிலும் பணிகளை நிறைவேற்றலாம். <br /><br />குறடுகள் (அதாவது கடலுக்குள் சிறிது தொலைவு வரை சென்று கடற்கரை வரை அமைக்கப்படும் கல் சுவர்), கருங்கல் சுவர்கள், தூண்டில் வளைவுகள், தடுப்புச் சுவர்கள் உள்ளிட்டவற்றை எங்கெங்கு அமைக்கலாம் என்பது குறித்து சுந்தர் விரிவாக விவரித்துள்ளார். <br /><br />கடலோரத் தாவரங்களை வளர்ப்பது, மணல் மேடு பாதுகாப்பு, கழிமுகத் துவாரங்களை தூர் வாருவது, கடற் மணற்பரப்பை தூய்மைப்படுத்தி அதன் கட்டமைப்பை வலுப்படுத்துவது என்று பல்வேறு ஆலோசனைகள் இந்த பரிந்துரையில் அடங்கியுள்ளன. <br /><br />நிபுணர் குழுவின் அறிக்கையைப் பெற்றுள்ள தமிழக அரசு இந்தத் திட்டத்திற்கான நிதியுதவி பெறுவது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி ஆகியவற்றின் அதிகாரிகளோடு ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.<br /><br />Tnanks to :http://thatstamil.indiainfo.com/news/2005/08/01/sea.html<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-112309613579873130?l=relieftsunami.blogspot.com'/></div>KARTHIKRAMASnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-10081143.post-1121162935982935932005-07-12T03:06:00.000-07:002005-07-12T03:08:55.990-07:00புனிதப் பணியில் இணைத்துக் கொள்ளுங்கள்!சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக ஐக்கிய நாடுகள் சபை பெரும் முயற்சி எடுப்பது பற்றியும், அந்தப் புனிதப் பணி 'பாலம்' அமைப்பின் கலியாணசுந்தரம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு இருப்பது பற்றியும் கடந்த 3.7.05-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழின் 'நம்பிக்கை மனிதர்கள்!' பகுதியில் எழுதியிருந்தார்கள்.<br /><br />உலகம் முழுவதும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள், கல்வி நிறுவனங்கள் என்ன விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இவர்களுக்கு இதுவரை கிடைத்த உதவிகள் என்ன, தேவைப்படும் உதவிகள் என்ன... என்ற தகவல்களை 'பாலம்' கலியாணசுந்தரம் திரட்டி வருகிறார்.<br /><br />இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் அவர் நாடுகிறார். சுனாமியால் பாதிக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் பள்ளிகள் பற்றி தங்களுக்குத் தெரிந்த தகவலை அவருக்கு யாரும் அனுப்பி உதவலாம்.<br /><br />முகவரி: எண்: 1, 4-வது பிரதான சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை-20.<br />தொலைபேசி: (044)24402524. செல் பேசி: 09840218847.<br />மின் அஞ்சல்: anbupaalam@gmail.com<br /><br />'பாலம்' கலியாணசுந்தரம் பற்றி....<br /><br />தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், கையில் இருக்கும் கடைசி பைசாவைக்கூட சமுதாய முன்னேற்றத்துக்காகச் செலவழிக்கும் குணம்... ‘என் னுடைய வளர்ப்புத் தந்தையாக உங்களை ஏற்றுக்கொள் கிறேன். என்னுடனேயே தங்கி ஓய்வெடுத்து, உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினி அழைத்தபோது, ‘இப்போது எனது குறிக்கோள் ஓய்வு இல்லை, உழைப்பு’ என்று சொல்லி, அதை மென்மையாக மறுத்த பண்பு... உதவி கிடைக்காமல் தவிக்கும் மனிதனே இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற லட்சியம்... இதெல்லாம் சேர்ந்த மொத்த உருவம்தான் கலியாணசுந்தரம்.<br /><br />திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார் ஒருவருக்கு மகனாகப் பிறந்து, இளம்வயதிலேயே சேவை உள்ளத்தோடு வளர ஆரம்பித்தவர், 1953-ம் ஆண்டு தன்னுடைய 14-வது வயதில் ‘பாலம்’ என்ற அமைப் பைத் துவங்கியிருக்கிறார். அது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து, இன்று ‘அன்புப் பாலமாக’ தழைத்து, சென்னை அடையாறில் இன்னொரு ஆலமரமாக உயர்ந்து நிற்கிறது!<br /><br />சமீபகாலமாகத் தீவிரமான நோய் தாக்குதலுக்கு ஆளாகி மீண்டிருக்கும் கலியாணசுந்தரம், எப்போதும் போல் சுறுசுறுப்பாக சமூகசேவையில் தீவிரம் காட்டிக் கொண்டு இருக்கிறார். தற்போது அவர் கையில் எடுத்திருப்பது, 'சுனாமி நிவாரணங்கள் எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு கிடைத்திருக்கின்றன' என்ற ஆய்வு!<br /><br />இதுபற்றிக் கேட்டபோது, தனக்கே உரிய மெலிதான குரலில் பேச ஆரம்பித்தார் கலியாணசுந்தரம்.<br /><br />‘‘டிசம்பர் 26-ம் தேதி... பல நாடுளைச் சேர்ந்தவர்களுக்குப் பேரதிர்ச்சியை அளிக்கும் பொழுதாக விடிந்தது. பலரின் வாழ்க்கை திசைமாறியது. இந்த அவலக்குரல் கேட்டு உலகமே ஓடிவந்து உதவியது. இதுவரை அரசுகளும் மற்ற அமைப்புகளும் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் என்ன என்பதைப் பற்றியும் குழந்தை களுக்கு அந்தப் பணிகள் எந்த அளவுக்குப் போய் சேர்கிறது என்பது பற்றியும் அறிக்கை ஒன்றை தயார் செய்தோம்.<br />சென்ற மாதம் ஐ.நா. சபை சார்பாக பில் கிளின்ட்டன் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, இந்த அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தோம். சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங் களைச் சேர்ந்த 567 பள்ளிக்கூடங்கள், அதில் படித்த 2 லட்சத்து 69 ஆயிரத்து 500 மாணவர்கள், மற்றும் 30 ஆயிரம் குழந்தைகள் பற்றிய தெளிவான புள்ளிவிவரங்களையும், இவர்களின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு போன்ற பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ஒரு கோடி அமெரிக்க டாலர் - அதாவது, 45 கோடி ரூபாய் தேவைப்படும் என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். அதைப் படித்த கிளின்ட்டன், எங்கள் முயற்சியைப் பாராட்டியதோடு, ‘இந்த அறிக்கையை ஐ.நா. சபை ஏற்றுக்கொள்ளும்’ என்றும் சொன்னார். கூடவே, ‘இதுபோன்ற அறிக்கையை சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து பண்ணலாமே? அது, ஐ.நா.சபையின் பணிகளுக்கு உதவியாக இருக்குமே!’ என்று கேட்டுக்கொண்டார். ‘அது எவ்வளவு பெரிய பொறுப்பு’ என்று நாங்கள் படபடத்து நின்ற நேரத்தில் கிளின்ட்டனுடன் வந்திருந்த ஐ.நா. சபை பிரதிநிதி ஒருவர், ‘உலகம் முழுவதும் சுனாமியால் பாதிக்கப் பட்ட மாணவர்கள், குழந்தைகள் பற்றிய அறிக்கையை உங்களால் தயார்செய்ய முடியும். அந்தப் பணியில் இறங்குங்கள்’ என்று சொல்ல... கிளின்ட்டனும், ‘உங்களால் நிச்சயம் சிறப்பாகச் செய்ய முடியும்!’ என்று என்னை ஊக்கப்படுத்தினார். அதோடு, அதற்கான அனுமதியையும் முறையாக எனக்கு வழங்கிச் சென்றார். இப்போது அதற்கான ஆயத்தப் பணிகளில்தான் இறங்கியிருக்கிறேன்!’’ என்ற கலியாணசுந்தரத்தின் குரலில் உற்சாகம் பீறிட்டது.<br /><br />‘‘இன்னும் 3 மாதங்களுக்குள் இந்த அறிக்கையை தயார் செய்து, அக்டோபரில் மீண்டும் இந்தியா வரும் கிளின்ட்டனிடம் கொடுக்க வேண்டும். கால அவகாசம் குறைவுதான் என்றாலும் ஓய்வில்லாத உழைப்பைத் தரும் மனவலிமையையும் நல்ல மனிதர்களின் ஆசீர்வாதத்தையும் எல்லாம் வல்ல இறைவன் எனக்கு வழங்க வேண்டும்!’’ என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்.<br /><br />உழைப்பின் அருமையை உணர முடிந்தது!<br /><br /><br /><a href="http://www.vikatan.com/jv/2005/jul/13072005/jv0703.asp">தகவல் நன்றி : ஜூனியர் விகடன்</a><br /><br /><a href="http://mayavarathaan.blogspot.com/2005/07/blog-post_112090593127598719.html">நன்றி:மாயவரத்தான்.</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-112116293598293593?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-10081143.post-1116928840231360262005-05-24T02:53:00.000-07:002005-05-24T03:00:40.236-07:00பதிவுகளில்..<strong>லதா ராமகிருஷ்ணனின் கட்டுரை.</strong><br /><br />பதிவுகளில் லதா ராமகிருஷ்ணன் அவர்களின் ட்சுனாமி பேரழிவு குறித்த கள அறிக்கை வெளியாகியுள்ளது. அறிக்கை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளதால், அது தமிழ்மணத்தில் இடம் பெறாது என்பதால், கட்டுரையை இங்கே பதியாமல் சுட்டியை மட்டும் தருகிறேன். ஒரு பதிவிற்காக கட்டுரை பின்னர் இந்த தளத்தில் பதியப்படும். <br /><br /><a href="http://www.geotamil.com/pathivukal/lathaontsunami.html">பதிவுகள் கட்டுரையை வாசிக்க.</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-111692884023136026?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1116402757020048812005-05-18T00:48:00.000-07:002005-05-18T00:52:37.023-07:00சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்.சென்ற பதிவு திண்ணையிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டது. அதே அறிவிப்பு பதிவுகளில் இன்னும் தெளிவாக வந்திருப்பதாக தெரிவதால் அதை தருகிறேன். <br /><br /><strong>சிந்திய கண்ணீரைத் தொடர்ந்து <br />சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்! <br />மே 29, 2005! </strong><br /><br /><br />சுனாமியின் விளைவால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான உயிர் இழந்த ஆச்சே, இந்தோனேசியாவிலும் இலங்கையிலும் இருந்து சொல்லப்படாத சேதிகள்- தொடருகின்ற வேதனைகளின் நீள் கதைகள்! <br /><br />உரையாற்றுவோர்: <br /><br />'ஆச்சே இந்தோனேசியாவில் சமாதானம், மனித <br />உரிமைகள் சுனாமிக்குப் பிந்திய புனரமைப்பு' <br /><br />- ஈவி நார்ட்டி சேயின்- <br />(இணைப்பாளர் கொன்றாஸ் ஆச்சே- காணாமல் போனோர் <br />வன்முறையால் பாதிப்புக்குள்ளானோர் தொடர்பான ஆணைக்குழு) <br /><br />'இலங்கையில் சுனாமிக்குப் பிந்திய நெருக்கடிகளும் நவ-தாராளவாத பொருளாதாரத் திட்டமும்' <br /><br />- சரத் பெர்ணாண்டோ- <br />இணைச் செயலாளர்- காணி விவசாய <br />சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கம் - <br /><br />KAIROS, CAW Canada, IAMAW Canada, USWA Humanity Fund, <br />UFCW Canada, Locals 175 and 163 <br />ஆகிய அமைப்புகளின் ஆதரவில், Tsunami Justics Working Group of the Asian Solidarity Network (www.tsunamijustice.org) என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் பொதுகூட்டம். <br /><br />இடம்: Mid Scarborough Community Centre <br />முகவரி: 2467 Eglinton Avenue East ('கெனடி சப்வே'க்கு அருகில்) <br />காலம்: மே 29, 2005 ஞாயிறு பிற்பகல் 4.30 மணி. <br /><br />உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். <br />அனைவரையும் அழைக்கின்றோம்.<br /><br />இதை தொடர்ந்து உள்ள அறிவிப்பு jpgகோப்பாக உள்ளது. அதை இங்கே நான் தரவில்லை என்பதால் பதிவுகளுக்கு நேரடியாய் சென்று <a href="http://www.geotamil.com/pathivukal/nizhalvukal_aftertsunami.html">இந்த பக்கத்தை </a>பார்க்கவும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-111640275702004881?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1115970494434337032005-05-13T00:41:00.000-07:002005-05-13T00:48:14.436-07:00சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்.<strong>அறிவிப்பு</strong><br /><br />சிந்திய கண்ணீரைத் தொடர்ந்து<br /><br />சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்<br /><br />உரையாற்றுவோர்:<br /><br />ஆச்சே, இந்தோனேசியாவில் சமாதானம், மனித<br /><br />உ£¤மைகள் சுனாமிக்குப் பிந்திய புனரமைப்பு<br /><br />-ஈவி நார்ட்டி சேயின்-<br /><br />இணைப்பாளர்: கொன்றாஸ் ஆச்சே - காணாமல் போனோர்<br /><br />வன்முறையால் பாதிப்புக்குள்ளானோர் தொடர்பான ஆணைக்குழு<br /><br />இலங்கையில் சுனாமிக்குப் பிந்திய<br /><br />நெருக்கடிகளும் நவ-தாராளவாத<br /><br />பொருளாதாரத் திட்டமும்<br /><br />-சரத் பெர்னான்டோ-<br /><br />இணைச் செயலாளா; - காணி விவசாய<br /><br />சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கம்<br /><br />சுனாமியின் விளைவால் இரண்டு<br /><br />இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிர்<br /><br />இழந்த ஆச்சே, இந்தோனேசியாவிலும்<br /><br />இலங்கையிலும் இருந்து சொல்லப்படாத<br /><br />சேதிகள் - தொடருகின்ற வேதனைகளின்<br /><br />நீள் கதைகள்<br /><br />மே மாதம் 29ம் திகதி ஞு£யிறு - பி.ப.4.30 மணி<br /><br /><br />MID-SCARBOROUGH COMMUNITY CENTRE<br /><br />2467 Eglington Avenue East<br /><br /><br />(கெனடி சப்வேக்கு அருகாமையில்)<br /><br />அனைவரையும் அழைக்கிறோம் - பேச்சுக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்<br /><br /><a href="http://thinnai.com/le0513053.html">நன்றி: திண்ணை.</a><br /><br />(திண்ணையிலிருந்து வெட்டி, உருமாற்றி, ஒட்டப்பட்டுள்ளது. வாசித்து புரிவதில் எனக்கு பிரச்சனையிருப்பினும், புரிபவர்களுக்கு பயன்பட கூடும் என்று நினைத்து பதியப்படுகிறது.)<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-111597049443433703?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1113195873783450102005-04-10T22:00:00.000-07:002005-04-10T22:04:33.786-07:00திண்ணையிலிருந்து...<strong>பேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு<br /><br />ஸ்ரீமங்கை</strong><br /><br />இரு மாதங்கள் முன்பு ஆழிப்பேரலையின் தாக்கத்தில் உண்டான பேரழிவின் சீரமைப்புப்பணியில் உளவியல் ரீதியான சீரமைப்பின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருந்தேன். அதில் முனைவர். திருமதி.சுந்தரி அவர்கள்( மகரிஷி தயானந்த் கல்லூரி, மும்பை) தலைமையில் ஒரு தன்னார்வலர் குழு கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளவிருந்த உளவியல் சீரமைப்புப் பணி குறித்து குறிப்பிட்டிருந்தேன். அக்குழுவின் அனுபவங்களின் தொகுப்பு முனைவர். சுந்தரி அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது. அதின் சில பகுதிகள் கீழ்க்கண்டவாறு.<br /><br /><br />இக்குழுவில் IPMS ( Institute of Psychotherapy and Management Sciences ) கல்வி நிறுவனத்தின் 30 உளவியல் துறை மாணவ/மாணவியர் ,முனைவர் திருமதி K.P.சுந்தரி ( தலைமைப் பேராசிரியை, உளவியல் துறை,மகரிஷி தயானந்த் கல்லுரி, மும்பை) அவர்கள் தலைமையில் 14 ஜனவரி 05 முதல் 22 ஜனவரி 05 வரை மண்டைக்காடு புதூர்,மரமடி, முட்டுக்காடு, குளச்சல், அழிக்கால், கொட்டில்பாடு முதலிய இடங்களில் சீரமைப்புப் பணியை மேற்கொண்டனர்.<br /><br /><br />முனைவர் சுந்தரி அவர்கள் EMDR (Eye Movement Desensitization and Reprocessing ) என்னும் உளவியல் மருத்துவ முறையை ,சீரமைப்புப் பணிக்கு கையாடத் திட்டமிட்டிருந்தார்.<br /><br /><br />16 ஜனவரி 05<br /><br />மண்டைக்காடு புதூர் :<br /><br />ஆழிப்பேரலையில் மிக மோசமாகத் தாக்கப்பட்ட கிராமம் இது. சுமார் 250 குடும்பங்கள் தற்காலிகமாக, சர்ச்சில் அடைக்கலமாக இருந்தனர். இரு வகையான மருத்துவமுறையை குழு கையாடியது. பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு, முதலில் அவர்கள் துயரை முழுதும் சொல்லியழ வைத்தபின்னர், மனதை அமைதிப்படுத்தும் வழிகள் பயிற்சிக்கப்பட்டனர். முனைவர் சுந்தரி, மிகவும் வலிதாகத் தாக்கப்பட்டவர்களுக்கு EMDR முறையில் உளவியல் மருத்துவமளித்தார். <br /><br />புதூரில் ,நான்கு வயது மகள் மஞ்சுமோளை இழந்த ஆன்ண்டனி மற்றும், தனது 4 வயது, 5வயது குழந்தைகளை இழந்த செபாஸ்டின் என்ற இருவர் மருத்துவத்திற்குப் பின் துயரை ஏற்றுக்கொள்ளும் நிலையை அடைந்தனர்.<br /><br />இதே கிராமத்தில் 50 குழந்தைகள் இம்மருத்துவ உதவி பெற்றனர். அக்குழந்தைகள் தங்கள் மனநிலையை வெளிப்படுத்தும் வண்ணம், ஆழிப்பேரலையில் தங்கள் கண்டதை வரையுமாறு ஊக்கப்படுத்தப்பட்டனர். சில குழந்தைகள் பேரலையில் அடித்துச் செல்லப்பட்டு, பின் தெய்வாதீனமாக உயிர்தப்பியவர்கள். அவர்களுக்கு அச்சத்தைச் சமாளிக்கும் விதமாக சீராக சுவாசிக்கும் பயிற்சி அளிக்கபட்டது. விளையாட்டு, பாடல்கள் , இசை போன்றவை மூலமும் அவர்கள் உற்சாகமாக ஊக்குவிக்கப்பட்டனர்.<br /><br /><br />17 ஜனவரி 05<br /><br />கொட்டில்பாடு:<br /><br />காலை 8 மணிக்கு,. அருட் தந்தை சூசை, டாக்டர்.போர்கியோ முதலானோர் குழுவினரை கொட்டில்பாடு மீனவ கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். இங்கு 275 பேர் ஒட்டுமொத்தமாகப் புதைக்கபட்டனர்.<br /><br />முதலில் பார்வையிட்டபின், அங்கிருந்த ஆரம்பப் பள்ளியில் பணி தொடங்கியது. 300 குழந்தைகள் ( 1 ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரையிலான )களுக்கு வரைதல் மூலம் பயிற்சி, சுவாசச் சீரமைப்புப் பயிற்சி முதலியன அளிக்கப்பட்டது.<br /><br />பவித்திரா என்ற 10 வயது பெண், EMDR சிகிக்சைக்குப் பின் தௌ¤வாகி, தான் பிற்காலத்தில் ஒரு பொறியியல் வல்லுநராக விரும்புவதாகக் கூறினாள். <br /><br />பிசானி என்ற 6ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தன் கண்முன்னே தந்தையும் இரு அத்தைகளும் அலைகளில் அடித்துச் செல்லப்ட்டதைக் கண்டு உறைந்திருந்தவள், சிகிச்சைக்குப் பின் கதறியழுது தான் பிற்காலத்தில் துறவுபூண்டு பொதுநலச் சேவைசெய்யப் போவதாகச் சொன்னாள்.<br /><br /><br />18 ஜனவரி 2005<br /><br />குளச்சல் :<br /><br />750 பேர் அடையாளம்தெரியாது ஒட்டுமொத்தமாகப் புதைக்கபட்ட கொடூரம் நடந்த இடம்.<br /><br />நாகர்கோவிலில் கார்மேல் பள்ளியில் சிகிக்சை தொடங்கியது.<br /><br />அன்டோனிராஜ் என்னும் சிறுவன் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு பிணவறையில் மற்ற பிணங்களோடு 5 மணிநேரம் கிடத்தப்பட்டிருந்தான். பிணங்களில் அடையாளம் காண வந்த எவரோ, அவனது உடலில் மெலிதாக நாடித்துடிப்பு இருப்பதை உணர்ந்து, மருத்துவமனைக்குத் தெரிவிக்க, 5 நாள் கழித்து அவன் நினைவுதிரும்பினான். தனது 15 வயது சகோதரன் அலையில் மரித்ததை நினைவுகொண்ட அன்டோனிராஜ் மிக மனஉளைச்சலில் இருந்திருந்தான். EMDR சிகிக்சைக்குப் பின் அவன் ஆழிப்பேரலை நிகழ்சியை விவரித்ததில், குழுவில் இருந்த மாணவர்கள் மட்டுமன்றி மருத்துவர்களும் கண்ணீர் மல்கியதை முனைவர்.சுந்தரி நினைவு கூறுகிறார்.<br /><br /><br />மற்றொரு மீட்புதவிக்குழுவில் பெண்கள் மிகுந்திருந்தனர். அவர்களில் பலருக்கும் அனைத்துக் குழந்தைகளும் மரித்துவிட்டிருந்தனர். அப்பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டிருந்ததால், மீண்டும் குழந்தைகள் வரும் வாய்ப்பில்லை என்னும் பேருளைச்சலில் ஆழ்ந்திருந்தனர். பெரும்பாலான பெண்கள் இளம்வயதினர். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அர்த்தமே இல்லை என்னும் முடிவிற்கு வந்துவிட்டிருந்தார்கள்.<br /><br />நிர்மலா என்ற பெண், தன் வீட்டிற்குத் திரும்ப மறுத்தாள். தனது குழந்தைகளின் சிரிப்பும், விளையாட்டும்,குரல்களும் அவ்வீட்டில் எதிரொலிக்கும் என்னும் நினைவே அவளைப் பெருமளவில் தாக்கியிருந்தது.<br /><br />ஸ்டெல்லா என்ற பெண் தனது பெண்குழந்தைகளை இழந்திருந்தாள். சீரமைப்புக் குழுவில் இருந்த இரு பெண்களை இறுகப் பிடித்துக்கொண்டவள் அவர்களில் தன் பெண்களையே கண்டதாகக் கூறிக் கதறினாள்.<br /><br />ஒரு மனோவேகத்தில், அப்பெண்களைத் தழுவிக்கொண்டு முத்தமழை பொழிந்துகொண்டிருந்த ஸ்டெல்லாவிடமிருந்து, அவர்களை விடுவிக்க முனைவர்.சுந்தரி இடைபட வேண்டியிருந்தது. பின் ரீக்கி சிகிக்சைக்குப் பின் ஸ்டெல்லா அமைதிப்படத் தொடங்கினாள்.<br /><br />முனைவர் சுந்தரி அவர்களின் வார்த்தைகளின் படி<br /><br />"In a fit of hysteria, Stella was showering them with caresses and kisses. I had to intervene and give Reiki to calm her down"<br /><br />சில பெண்களுக்கு , உணவு ஊட்டிவிடவேண்டியிருந்தது. அவர்கள் சோகத்தில் பலநாட்கள் உணவு உட்கொள்ளவேயில்லை என்பது வேதனைமிகுந்த வலிமிகுந்த செய்தி.<br /><br /><br />இன்னும் வரும்.<br /><br /><br /><br />அன்புடன்<br /><br />ஸ்ரீமங்கை<br /><br />kasturisudhakar@yahoo.com<br /><br /><br /><a href="http://thinnai.com/pl0408056.html">நன்றி : திண்ணை</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-111319587378345010?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1110772444855377222005-03-13T19:46:00.000-08:002005-03-13T19:55:33.976-08:00பதிவுகளிலிருந்து..!<strong>தமிழ்நாட்டில் சுநாமி பெண்கள் குழந்தைகளுக்கு <br />விழிப்புணர்வு மற்றும் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சிகள்! </strong><br /><br /><em><strong>- வைகைச் செல்வி- </strong></em> <br /><br /><br /><br />திரையிலும் படங்களிலும் தண்ணீரில் மிதந்த படகுகளை நேரில் பார்க்கையில் தான் அதனுடைய வடிவமும் கனத்த எடையும் நமக்குப் புலனாகின்றன. ஆனால் தண்ணீரில் மிதக்க வேண்டிய இப்படகுகள் கொத்துக் கொத்தாய் நாகை மாவட்ட மணலில்... தெருக்களில் கிடப்பதைக் காண்கையில் பயங் கலந்த ஆச்சரியம் ஏற்பட்டு அதன் பின்னணியில் உள்ள சரித்திரச் சோகத்தை நினைவு கொள்ளச் செய்கின்றன. அக்கரைப் பேட்டை என்ற கிராமமே சுநாமியில் காணாமற் போய்விட்டிருந்ததாம். தண்ணீர் வடிந்த பிறகே இப்பகுதி மற்றும் கீச்சாங் குப்பம் ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் தெரிந்தது. <br /><br />சுநாமியின் கோர தாண்டவம் முடிந்து இரு மாதங்கள் ஆகியும் நாகையிலும், வேளாங்கண்ணியிலும் மீனவ மக்கள் இன்னும் கடலுக்குள் முழு அளவில் இறங்கவில்லை. சிதிலம் அடைந்த படகுகள், அவற்றிற்குப் பின்னால் சிதறிய குடும்பங்கள், தன்னைத்தான் காப்பாற்ற வலுவின்றி இறந்த பெண்கள் கூட்டத்தைப் போலவே, இன்று நிர்க்கதியாய் நிற்கும் பெண்கள்.. சிறுமிகள்.. நிவாரணப் பணி செய்பவாகளைச் சுற்றிப் பெண்களின் கும்பல். நாங்கள் அங்கு சென்ற போது மாவட்ட ஆட்சியா திரு ஜெ.ராதா கிருஷ்ணன் <br />பம்பரமாய்ச் சுற்றி நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார். <br /><br />'ஓய்னு ஒரு சத்தம், என்ன நடந்ததுன்னு பா¡க்கிறதற்குள்ளே தண்ணீ¡ வந்துடுச்சு. ரோடெல்லாத் தண்ணீ. எது சாக்கடை எது ரோடுன்னு தொயல. விழுந்து எந்தி¡ச்சி பா¡க்கிறதற்குள்ளே எல்லாமே போயிடுச்சும்மா..' என்று ஒரு பெண் அழுதார். பிடித்த மீனைக் கூடையில் எடுப்பதற்காகப் போயிருந்த பல பெண்கள் மாண்டது இப்படித்தான். அலை பெரிதாகி நீர் வருகையில் அப்பெண்கள் 'ஏதோ பெளர்ணமிப் பெருக்கு' என்று நினைத்திருக்கின்றனர். எனவே தாங்கள் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் கூடை அடித்துக் கொண்டு போய் விடாமல் இருப்பதற்காக அதனை இறுகப் பற்றிப் பிடிப்பதிலே கவனம் செலுத்தியிருக்கின்றனர். தரங்கம்பாடி சிற்று¡ராட்சித் தலைவி திருமதி சரஸ்வதி வெற்றிவேல் வீட்டுக்கு வழக்கமாக மீன் கொண்டுவரும் பெண்களில் இரண்டு மூன்று பெண்கள் சுநாமிக்குப் பலியாகியுள்ளனர். 'மக்கள் தற்சமயம் ஓரளவு சுநாமி பயங்கரத்தில் இருந்து மீண்டு கொண்டிருப்பதாகக் கூறினா¡. அரசு உதவி ஒரு பக்கம் இருக்க, தொண்டு நிறுவனங்களும், ஆலயத்தைச் சேர்ந்தவர்களும் அளப்பரிய பணியாற்றின.' என கருத்துத் தெரிவித்தார். <br /><br />'தண்ணீ¡ வந்தது மாதி¡யே தொயலம்மா.. ஏதோ கறுப்பு புகை மாதி¡ உசரமா வந்துச்சு.. அதிலே என்ன கலந்திருந்ததோ தொயல.. அந்த தண்ணி பட்டதிலிருந்து உடம்பெல்லாம் ஒரே அரிப்பு பாருங்க' காட்டிய இடத்தில் சொறிந்து சொறிந்து தோலைப் பார்க்கவே கஷ்டமாயிருந்தது. தரங்கம்பாட்டியில் உள்ள சீதாலட்சுமி, கணவனை இழந்தவர். 'பொண்னுக்காகத்தான் அவ பேரில அரசாங்கம் கொடுத்த ஒரு லட்சத்த பேங்லே போட்டிருந்தேன். மத்ததெல்லாம் ஆண்பிள்ளங்கதான். அவ பத்தாவது வரை படிச்சிருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணவோ எதுக்காச்சும் பணம் வேனும். ஆம்பளைப் பசங்க மீன் பிடிச்சுப் பொழச்சுக்குவாங்க' என்று கண்கலங்க கூறினா¡. அருகிலே இருந்த அவரது மகள் சுதா 'தனக்கு படிக்க விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தார்'. <br /><br />ஆங்காங்கே வெளி நாட்டினம் முகங்கள். லண்டனைச் சோந்து ரூத் என்ற பெண்மணியிடம் என்ன சேவை செய்ய வந்திருக்கின்றனா என் வினவிய போது அங்குள்ள பாதிக்கப்ட்டவாகளுக்கு உடல் மற்றும் மன நலத்திற்கான சிகிச்சை மற்றும் ஆற்றுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தொவித்தார். இந்த அமைப்பிலிருந்து கனடா, அமொக்கா, சிசிலி, லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து தன்னா¡வத் தொண்டாகள் சுநாமி நிவாரணப் பணிக்காக வந்திருப்பதாகத் தெரிவித்தா¡. இந்தோனேஷியா போய்விட்டு நாகை வந்திருப்பதாய்த் தொவித்தார். எதற்காக உடல் சிகிச்சை என்று கேட்ட போது 'அவர்களின் காயங்களுக்கு' என்றா¡. என்ன காயமாயிருக்கும் என்ற கேள்விக்குஞ் காவல் துறையைச் சேர்ந்த கரோலினின் பதில் சந்தேகத்தைத் தீர்த்தது. 'சுநாமியால் அழிந்து போன கடைகள் பெரும்பாலும் கல் நா¡க் கூரைகளால் ஆனவை. கடல் நீ¡ இக்கடைகளை வாரி எடுத்துக் கொண்டு போகையில் நீரில் அமிழ்ந்திருந்த மக்களின் மீது விழுந்து, உரசி, அவர்களோடு இழுத்துக் கொண்டு போனதினால் ஏற்பட்ட காயம்' என்றா¡ கரோலின். <br /><br />தமிழ்நாட்டில் சுநாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கவனிப்பதற்காக உயா அதிகாரிகளின் பொறுப்பில் தனித்தனியாக பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறப்பு சிற்று¡ராட்சி இயக்குநா எம்.பி.நிர்மலா,ஐ.ஏ.எஸ். அவர்களின் பகுதியான வேளாங்கன்னியை 'பூஜ்ய குப்பைப் பகுதியாக' அறிவிக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியைத் துவக்கும் முன்னாஅங்குள்ள மக்களை ஆற்றுப்படுத்தல் அவசியம் என்பதை உணர்ந்த இயக்கம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வா¡ய விழிப்புணர்வு குழுவிடம் இப்பணியை ஒப்படைக்க, குழு தரங்கம்பாடி மற்றும் வேளாங்கண்ணிப் பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை ஆற்றுப் படுத்தியதோடு அவர்களுக்குப் பல செய்திகளை, அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எடுத்துக் கூறியது. பெண்கள் கட்டாயமாக தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளில் சேமிக்கும் பழக்கத்தை மேற் கொள்ள வேண்டும் என்பதையும், சுய உதவிக் குழுக்கள் மூலம் மீன் விற்பதைத் தவிர வேறு சிறு தொழிற்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியது. இக்குழுவில் உள்ள கலைஞர்களான ப.ராதா கிருஷ்ணன், மோ.தேசபந்து, எஸ்.ராஜா, இ.ஜனதா மற்றும் சி.கஸ்து¡¡ ஆகிய அனைவருமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணி புரியும் அரசுப் பணியாளாகளே. மேலாளா ஜி.ஆனி ஜோஸ்பின் தலைமையில் இயங்கும் இக்குழு கலை வடிவில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாநிலமெங்கும் நடத்தி வருகின்றது. வீதி நாடகம், மேடை நாடகம், எலகுரல் நடிப்பு, கும்மி, ஒயிலாட்டம், பாடல்கள் ஆகியவை இந்நிகழ்ச்சியில் அடங்கும். சுநாமியயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோந்த குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி, தனிப்பட்ட முறையில் அவர்களின் நம்பிக்கையை உயாத்த இக்குழு உதவியது. கலை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் ஓடி வந்து குழுவினான் கைகளைப் பிடித்துக் கொண்டனர் பல பெண்கள். ஒருவா 'நாங்க இத்தனை நாளுக்குப் பொறவு இன்று தான் வாய் விட்டுச் சிரிச்சோம் என்று கூறினார். அவ்வை மகளிர் தொண்டு நிறுவனத்தைச் சோந்து ஷீலா 'பெண்கள் எந்த வேலையையும் செய்யவும் கற்றுக் கொள்ளவும் தயாரான மன நிலைக்கு இப்போது வந்து விட்டனர்' என்று தெரிவித்தா¡. இப்பெண்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. இதுவே இவர்களுக்கு சுநாமி கற்றுத் தந்த பாடமாகவும் இருக்கலாம். <br /><br />எந்த ஒரு பேரழிவிலும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகச் சிக்கலானதும், எளிதில் தீ¡வு காணப்பட இயலாததாகவும் உள்ளன. சுநாமியால் பாதிக்கப்பட்ட பெண்களில் நடுத்தர வயதில் கணவனை இழந்த பெண்கள், திருமணம் நிச்சயமான நிலையில் அனைத்து பொருட்களையும் இழந்ததால் குடும்பங்களில் திருமணம் ஒத்திப் போடப்பட்டு ஆயிரம் கனவுகளைச் சுமந்து கொண்டிருந்தாலும் இளம் பெண்கள், பெற்றோரை இழந்த சிறுமிகள் உள்ளனா. நடுத்தர வயதில், தன்னந்தனியே நிராதரவாய் நிற்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அவர்களின் பாலியல் பிரச்சனைகள் ஆகியவற்றினைப் பற்றி பெண்களை இன்னும் ஆற்றுப்படுத்த வேண்டியுள்ளது. அதைப் போல சுநாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிக ஆறுதலும், பிற்காலம் பற்றிய நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேற்கொள்ள வேண்டியுள்ள கட்டாயப் பிரச்சனைகளை எதி¡கொள்ள அவர்களுக்குத் தைரியமும், ஊக்கமும், பயிற்சியும் கூடிய விரையவிலேயே அளிக்க வேண்டும். இதில் முக்கியமாகத் தொண்டு நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய பணி அதிகம் உள்ளது. <br /><br />வேளாங்கன்னி ஆலயத்தில் தமிழில் பிரார்த்தனை நடைபெற்றவுடன் மலையாளத்தில் நடைபெறுவது வழக்கம். எனவே சுநாமியன்று தமிழாகள் பிரார்த்தனை முடிந்து கடற்கரைக்குப் போய்விட அவர்கள் அனைவரும் பலியாகிவிட்டனராம். உதவிக்கரங்கள் விடிவெள்ளி மகளி¡ அமைப்பின் மகளிர் குழுத் தலைவி ஜுலியட் 'ஜனவா மாசம் எட்டாம் தேதி வரை நிவாரணப் பணிதான் செய்தோம். உயிர் பிழைச்சவங்கல்லாம் அந்த மாதா மேலேதான் நம்பிக்கை வைச்சிருக்கோம். கோவிலில் இருந்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் ஆறுதல் சொல்றோம். இயற்கையோடு ஒத்து வாழ்தல், இயற்கையை ரசித்தல் என்று முக்கியப்படுத்தி பயிற்சி அளிக்கிறோம். ஏனென்றால் மக்களுக்கு மீ¢ண்டும் கடலுக்குப் போக மனசில்லை. பயப்படுகிறார்கள். அவர்களின் அச்சத்தை முதலில் போக்கனும்' என்று தொவித்தார். <br /><br />கடலைப் பார்க்க மனம் து¡ண்ட அந்தி சாயும் வேளையில் கடற்சரைக்குச் சென்றபோது, அலைகளைப் பா¡க்கவே மனத்தில் ஒரு பயம்.. .. .. அலைகளின் சத்தம் கெக்களிப்பாகக் காதில் விழுந்து கொண்டிருக்கையில் விசில் சத்தம் கேட்டது. யாரோ குழந்தைகள் தான் விளையாடுகிறார்களோ என்று பேசாமலிருந்தேன். மறுபடியும் விசில்... ஒரு வயதானவர் கரையில் நின்று கொண்டிருந்த பத்துப் பதினைந்து போகளை நோக்கி வந்து கொண்டிருந்தா¡. அவர் கையில் விசில்.. 'அங்கே நிற்காதீர்கள். கொலைக்கார கடலம்மா. எப்படிக் கொலை பண்ணிட்டுப் பேசாமல் இருக்குது இந்தக் கடல். ஐந்து நிமிஷத்தில் எல்லோரையும் வா¡ட்டுப் போயிடுச்சு... எப்ப என்ன பண்னுமோ தொயாது... அங்கே நிற்காதீங்க...' என்று புலம்பியபடி எச்சரித்தார். இனியும் இந்தக் கடலில் பாய் வி¡த்து 'ஏலேலோ ஐலசா' என்று யாராலும் பாட இயலுமோ? வேளாங்கண்ணி அன்னையின் சன்னதியில் மண்டியிடுகையில் சத்தமில்லாமல் மனம் ஊமையாக அழுதது. கடற்புயலில் சிக்கிய போர்ச்சுக்கீசிய கப்பலைக் கரை சேர்ந்த அதே வேளாங்கண்ணி அன்னைதான் சுநாமி பயங்கரத்திற்குச் சாட்சியாய் மட்டுமல்ல, இப்பெண்களின் நம்பிக்கைக்கும் உறு துணையாய் அதே கடற்கரையில் நின்று கொண்டிருக்கிறாள். <br /><br />சிறப்பு சிற்று¡ராட்சி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் <br />இணைந்து நடத்தும் சுனாமி கருத்துப்பட்டறை <br />(தரங்கம்பாடி மற்றும் வேளாங்கண்ணி) 9.2.200வ மற்றும் 10.2.2005 <br /><br />சுநாமிக்குப் பின்னா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடாமல் இருப்பதற்காக அரசு பல விதங்களில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழக அரசின் உயர் அதிகாரிகளின் தலைமையில், சுநாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கவனிப்பதற்காக தனித்தனியாக பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிறப்பு சிற்று¡ராட்சி இயக்குநா திருமதி எம்.பி.நிர்மலா, ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு வேளாங்கன்னி பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாங்கன்னினை 'பூஜ்ய குப்பைப் பகுதியாக' அறிவிக்கும் முய்றிசியில் இவர் ஈடுபட்டுள்ளார். இப்பணியைத் துவக்கும் முன்னா அங்குள்ள மக்களை ஆற்றுப்படுத்தல் அவசியம் என்பதை உணர்ந்த இயக்ககம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய விழிப்புணர்வு கலைக்குழுவிடம் இப்பணியை ஒப்படைக்க, இக்குழு தரங்கம்பாடி மற்றும் வேளாங்கண்ணிப் பகுதிகளில் இம்மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற்ற சுனாமி கருத்துப் பட்டறையில் கலை நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை ஆற்றுப் படுத்தியதோடு, அவாகளுக்குப் பல செய்திகளை, எடுத்துக் கூறியது. கட்டாய சேமிப்பு, பொருட்கள் மற்றும் உடைமைகளை இன்சூரன்ஸ் செய்தல், மாற்று தொழில்களில் பயிற்சி பெறுதல் போன்றவை வலியுறுத்தப்பட்டன. இச்செய்திகள் எல்லாம் பாடலாக, நாடகமான, பலகுரல் நடிப்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வண்ணம், அவர்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்திப் பின்னா கல்வியின் அவசியமும், வாழ்க்கையில் முன்னேறுவதின் முக்கியத்துவமும் எடுத்துக் கூறப்பட்டன. நிகழ்ச்சிகளை நடத்திய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வா¡யப் பணியாளாகளிடம் நிகழ்ச்சி முடிந்த பிறகும் மீனவ மக்கள் பல ஆலோசனைகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தமையே 'இந்நிகழ்ச்சியின் பயனை' வெளிச்சம் போட்டுக் காட்டியது. சென்னையிலிருந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வா¡ய மேலாளா ஜி.ஆனி ஜோஸ்பின் தலைமையில் சென்ற கலைக்குழுவில் எஸ்.ராஜா, ப.ராதாகிருஷஷ்ணன், எம்.தேசபந்து, சி.கஸ்து¡¡, இ.ஜனதா ஆகிய பணியாளாகள் இடம் பெற்றிருந்தனம். <br /><br />நிகழ்ச்சிகள் முடிந்து பின், பெண்களில் ஒருவா 'நாங்க இத்தனை நாளுக்குப் பொறவு இன்று தான் வாய்விட்டுச் சிரிளச்சோம் என்று கூறினார். மகளி¡ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஷீலா 'பெண்கள் எந்த வேலையையும் செய்யவும் கற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளோம்' என்று தெரிவித்தா¡. இதைக் கேட்டவுடன் சென்னையிலிருந்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தியதற்கான பலன் கை மேல் கிடைத்தது போலிருந்தது. நிகழ்ச்சிகளில் தஞ்சாவூர் மண்டல சிறப்பு சிற்று¡ராட்சிகளின் உதவி இயக்குநா கோ.பாண்டுரங்கன், தரங்கம்பாடி சிறப்பு சிற்று¡ராட்சி தலைவா பெ.சரஸ்வதி வெற்றிவேல், தரங்கம்பாடி சிறப்பு சிற்று¡ராட்சி செயல் அலுவலா எம்.மாரிமுத்து, மற்றும் நாகப்பட்டினம் திட்ட அலுவலா க.ஜெயக்குமா¡, மற்றும் பல அரசு அலுவலாகள் கலந்து கொண்டனா. மாவட்ட ஆட்சித் தலைவா ஜெ.இராதாகிருஷ்ணன்,ஐ.ஏ.எஸ். நிவாரணப் பணிகளை முடுக்கி விட்ட வண்ணம் அங்குமிங்கும் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார்.<br /><br /><a href="http://www.geotamil.com/pathivukal/TSUNAMI_Vaikaichelvi_march2005.html">நன்றி : பதிவுகள்.</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-111077244485537722?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1109514716819765082005-02-27T06:30:00.000-08:002005-02-27T06:31:56.823-08:00மனிதனின்<strong>பயங்கள் சுனாமியை விட வலியவை !! </strong><br /><br /><strong>ந. உதயகுமார்</strong><br /><br />கடலோரச் சுற்றுலா விடுதிகளில் சுனாமி புகுந்து பேரழிவை ஏற்படுத்திய கோரக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் கண்டோம். சுனாமி வ்ந்து சென்று 60 நாட்கள் கடந்து விட்டன.<br /><br />சுனாமியால் தாக்கப்பட்ட மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள். தொலைக்காட்சியில், "உலகின் வெப்பமண்டலத்தின் சுற்றுலாத் தளங்களின் சொர்க்கம்" என்று வர்ணிக்கப் படும், ·புகெட் தீவின் சில பகுதிகளுக்கு ஏற்பட்ட அழிவினை திரும்பத் திரும்ப காட்டினர். இதனால் உலக மக்களுக்கு ·புகெட் அழிந்து விட்டது என்ற எண்ணம் வளர்ந்து விட்டது போல் தோன்றுகிறது.<br /><br />உண்மையில், கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால். ·புகெட் தீவிற்கு ஏற்பட்ட அழிவுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அனேக கடலோர விடுதிகள் திறக்கப் பட்டு சுற்றுலாப் பயணிகள் வரவிற்காகக் காத்திருக்கின்றன.<br /><br />ஆனால் சுற்றுலாப் பயணிகளைத்தான் காணவில்லை. <br /><br />சுற்றுலாப் பயணிகள் இல்லாததால், ·புகெட் கடற்கரைகளின் ஆளில்லாத அழகிய பரந்த மணல் பரப்பை மீண்டும் காணமுடிகிறது. கடல் நீரும் மாசு குறைந்து தெளிவாகக் காணப் படுகிறது. இவை நமக்குக் கிடைக்கும் பத்திரிக்கைச் செய்திகள்.<br /><br />·புகெட் ஆபத்து மிகுந்த பகுதி என்ற எண்ணம் சுற்றுலாப் பயணிகளிடம் நிலவுவதும், அனேக மக்கள் இறந்து போன ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வது மனித நேயச் செயலாக இருக்காது என்ற தயக்கமும் சுற்றுலாப் பயணிகள் ·புகெட்டை புறக்கணிக்க முக்கிய காரணங்கள் என்று கருதப் படுகின்றன.<br /><br />இப்பகுதி வாழ் மக்களில் 70 சதவிகிததிற்கும் அதிகம் பேர் சுற்றுலாவைச் சார்ந்த தொழில்களை மையமாகக் கொண்டே தங்கள் வாழ்க்கையை அமைத்திருந்தனர். ஒவ்வோரு வருடமும், ஜனவரி, ·பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் ·புகெட் தீவில் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்திருக்கும்.<br /><br />இந்த முறை சுற்றுலாப் பயணிகள் வரவு குறைந்து போனதால் ·புகெட் தீவிற்கு ஏற்படும் அன்னியச் செலாவணி இழப்பு (கடந்த 60 நாட்களில் மட்டும்) இந்திய ரூபாய் மதிப்பில் 2200 கோடி என்று அளவிடப் பட்டிருக்கிறது. இது சுனாமி இப் பகுதியில் ஏற்படுத்திய அழிவை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் கூறப் படுகிறது.<br /><br />ஆகவே சுற்றுலாப் பயணிகள் இப் பகுதியை புறக்கணிப்பதால் அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் தாக்கம் சுனாமியை விடக் கடினமாயிருப்பதைக் காண முடிகிறது.<br /><br />இப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளே இல்லாமல் இல்லை. வந்து போகும் வெகு சிலரில் ஒரு பிரிவினர், இப்பகுதியில் ஏற்பட்ட அழிவுகளைப் பார்வையிட வருகின்றனர். ம்ற்றொரு பிரிவினர், "நாங்கள் இங்கு செலவு செய்யும் பணம் இப்பகுதி மக்களுக்கு மிகவும் உதவும். ஆகவே இப்பகுதி மக்களுக்கு உதவவே நாங்கள் இங்கு சுற்றுலா வந்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.<br /><br />யோசித்துப் பார்த்தால் இரண்டாம் பிரிவினர் கட்சியில் முடிந்தால் நாமும் சேர வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப அவர்கள் சார்ந்துள்ள முறையான தொழில்கள் நலிவடையாமல் காக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.<br /><br />அனைவரும் தங்கள் சொந்த பயங்களை சிறிது ஒதுக்கி வைத்து இத்தொழில்களைத் தேவையான போது தயக்கமில்லாமல் நாட வேண்டும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110951471681976508?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1109514550560129062005-02-27T06:27:00.000-08:002005-02-27T06:29:10.563-08:00மீனவர்கள்<strong>கடலுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்</strong><br /><br /><strong>ந. உதயகுமார்</strong> <br /><br />தமிழக மீனவர்கள் கட்டு மரங்களிலும், சிறு படகுகளிலும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல ஆரம்பித்து விட்டனர்! இவர்கள் இப்போது ஐந்து முதல் ஆறு மைல் தொலைவு வரை கடலுக்குள் செல்கிறார்கள் என்று தெரிகிறது. <br /><br />தற்போது கடலுக்குச் சென்று வரும் மீனவர்கள், குறைந்த தூரத்தில், வழக்கத்தை விட குறைந்த நேரத்தில், அதிக மீன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். கடலில் மீன் வளத்தை சுனாமி அதிகரித்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்!!<br /><br />இந்த நம்பிக்கை தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. <br /><br />சுனாமி, மீன் பிடிக்கும் திறனைப் பெருமளவு (திறமையான மீனவர்கள், கட்டுமரங்கள், படகுகள், மீன்வலைகள்) அழித்துவிட்ட நிலையில், வழக்கத்தை விடக் குறைவான மீனவர்களே கடலுக்குச் செல்ல முடிகிறது. <br />கடலுக்குச் செல்வதில் இன்னுமும் மீனவரிடம் நிலவும் பயமும் குறைவானோர் மீன் பிடிக்கச் செல்லும் மற்றோர் காரணம். <br />சிதைந்து போன படகுகள், மற்றும் பொது மக்களுக்கு மீன் உண்பதில் இருக்கும் அச்சத்தால் சந்தையில் மீனுக்குத் தேவை குறைந்திருத்தல், போன்ற காரணங்களால் பெரிய படகுகள் இன்னும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.<br />இப்போது மீன்கள் இனவிருத்தி செய்யும் காலமாகையால், கடலில் மீன்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்க இயற்கையாக வாய்ப்பிருக்கும்.<br /><br />சுனாமிக்கு முன், மீன் கிடைக்கும் அளவிற்கு அதிகமான அளவில் மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்ததால், பல்ர் நீண்ட உழைப்பிற்கும் நேரச் செலவிற்கும் பின்னரும் வெறும் கையுடன் கரைக்குத் திரும்பும் நிலை இருந்தது. ஆகவே மீனவர்கள் வருமானமும் நிலையற்றதாக இருந்தது.<br /><br /><br />மேலே எடுத்துக் காட்டிய காரணங்களால், இப்போது மீன் பிடிப்பதில் போட்டி மற்றும் திறன் குறைந்திருப்பதும், மீன்கள் இனவிருத்திக் காலத்தாலும், மீனவர்களுக்கு அதிக மீன்கள் வழக்கத்தை விடக் குறைந்த நேரம் மற்றும் முயற்சியில் கிடைக்கிறது என்பது என் எண்ணம்.<br /><br /><br />ஆனால், மீனவருக்கு மீன் வளத்தை சுனாமி அதிகரித்து விட்டதாக ஏற்பட்டுள்ள நம்பிக்கை இடைக்காலத்தில் அவர்கள் உற்சாகத்தை அதிகப் படுத்தி அவர்களைத் தொழிலுக்குச் செல்ல ஊக்கப் படுத்தும். ஆகவே இந்த நம்பிக்கை நன்மைக்கே.<br /><br /><br />அதே நேரத்தில் மற்றொரு எண்ணமும் தோன்றுகிறது. சுனாமி அழிவை மட்டும் விட்டுச் செல்லவில்லை. மீனவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய ஒரு வாய்ப்பையும் அரசுக்கு விட்டுச் சென்றிருக்கிறது.<br /><br /><br />தெற்கு ஆசியாவில், சுனாமி நாசம் செய்த மீன் பிடிக்கும் மற்றும் மீன் வளர்க்கும் தொழிலில் இருந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 2200 கோடியைத் தாண்டும். 1,11,073 படகுகளும், 36,235 சீரமைக்க முடியாத படகு விசைகளும், ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட வலை போன்ற மீன் பிடிக்கும் உபகரணங்களும், மீன் பிடி படகுகள் வந்து செல்லும் துறைமுகங்களுக்கு ஏற்பட்ட சேதங்களும், மீன் வளர்க்கும் பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதங்களும் இதில் அடங்கும். இத் தகவல்களை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, தன் கணக்கெடுப்பிற்குப் பின் நமக்கு அளித்திருக்கிறது.<br /><br /><br />இந்த அழிவுகளை அரசுகள் சீரமைக்கும் முயற்சிகளை எடுத்து வரும் நேரத்தில், மீன் பிடி மற்றும் வளர்க்கும் திறனை, தேவைக்கதிகமாகச் செல்லாமல் வரும் காலத்தில் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் அரசுகளுக்குக் கிடைத்திருக்கிறது. இப்படிக் கட்டுப் படுத்துவதால், மீனவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். கடலில் மீன் வளமும் நிலையாக இருக்கும்.<br /><br />அரசு செய்ய வேண்டியவை என்று எனக்குத் தோன்றியவை சில:<br /><br />சீரமைப்புக்குச் செலவிடும் பணத்தால் ஏற்படப் போகும் திறன்களை மதிப்பிட்டு, தேவையைத் திட்டமிட்டு, தேவைக்கேற்பச் செலவு செய்தல்<br />மீன் தொழிலில் ஈடுபட்டு அனைத்தையும் இழந்த மீனவர்களில் சிலருக்கு மற்ற பணிகளைச் செய்ய (திறனுள்ள ஆட்கள் தேவையான தொழில்கள் பல இந்தியாவில் உள்ளன. உதாரணம்: சாரங் கட்டுதல், தண்ணீர் புகாத் தளம் அமைத்தல் போன்ற கட்டடப் பணிகள்) பயிற்சி அளித்தல்<br />கடலில் மீன் வளத்தை தேவைப் பட்ட நேரத்தில் அருதியிட்டுக் கூறும் திறமையை வளர்த்துக் கொள்ளுதல்.<br />மீன்களுக்கான தேவையை மீனவர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள வகை செய்தல்<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110951455056012906?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1109514417037002962005-02-27T06:26:00.000-08:002005-02-27T06:26:57.040-08:00சுனாமி நிவாரணம்!<strong>ந. உதயகுமார்</strong> <br /><br />மத்திய மாநில அரசுகளிடம் சேர்க்கப்பட்டிருக்கும் சுனாமி நிவாரணப் பணத்தின் பின்னணியில் கோடிக்கணக்கான இந்தியர்களின் சமூக நலச்சிந்தனையும், சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கான உண்மையான அனுதாபமும், பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்கள் விரைவில் நன்னிலை திரும்ப அந்தப் பணம் உதவ வேண்டும் என்ற கவலையும், தன்னலம் கருதாத் தியாகமும் உள்ளன.<br /><br />இரு அரசுகளும் மக்களின் எண்ணங்களை புரிந்து செயல் படும் பக்குவம் பெற்றவை என்பதில் நமக்குச் சந்தேகமில்லை.<br /><br />மத்திய அரசும் மாநில அரசும் சுனாமி தாக்கிய உடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியளிப்பதில் பாரட்டும் விதத்தில் நடந்து கொண்டன.<br /><br />அதே போல், சீரமைப்புப் பணிகளிலும் விரைந்து செயல் பட வேண்டும் என்ற அவசரத்தில் சில குளறுபடிகள், அபிப்பிராய பேதங்கள் ஏற்படும் போது, அவற்றை மூட்டை கட்டி ஓரத்தில் வைத்து விட்டு, பாதிக்கப் பட்ட குடும்பங்களின் நிலமை மற்றும் பொருளாதாரம் விரைந்து சீரடையப் பாடுபடுவதில் மத்திய, மாநில மக்கள் பிரதநிதிகள் அனைவரும் இணைந்து செயல் புரியவேண்டும்.<br /><br />அனைத்தையும் இழந்து நிற்கும் ஏழை மீனவர்கள் அரசு தரும் கடனைப் பெரும் சுமையாகப் பார்ப்பது இயற்கையே. காப்பீட்டு வசதிகள் இல்லாமை மற்றும் மக்களின் அறியாமை போன்ற காரணங்களால் தொழிலுக்குண்டான மூலதனங்களை இழந்து தவிப்போருக்கு இத்தகைய எதிர்பாராத இழப்புகளுக்குக் காப்பீடு வழங்கும் பொறுப்பை அரசு மட்டுமே ஏற்க முடியும்/வேண்டும்.<br /><br />ஏழை மீனவர்கள் புதுப் படகுகள் வேண்டும் என்று எண்ணாமல், அரசு படகுகள் வாங்குவதற்காக அறிவித்த உதவிப் பணத்தைத் தானமாகத் தங்களுக்கு அளித்தால் தங்கள் உடைந்த படகுகளைச் சீர் செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளது அரசு கவனிக்க வேண்டிய விஷயம். அதே சமயம், பசையுள்ள மீனவர்களுக்கு இலவசமாகப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.<br /><br />இரு அரசுகளும் இணைந்து செயல் புரிந்து பாதிக்கப் பட்ட மக்களின் தேவையறிந்து விரைந்து சீரமைப்புப் பணிகளை செவ்வனே முடித்து மக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற வேண்டும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110951441703700296?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1109514274846221382005-02-27T06:22:00.000-08:002005-02-27T06:24:34.850-08:00சுனாமியால் வரும் பின் விளைவுகள்!<strong>ந. உதயகுமார்</strong><br /><br /><br />சுனாமி செய்து விட்டுப் போன உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் காணச்சகிக்க முடியாமலும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது.<br /><br />கூர்ந்து பார்த்தால், சுனாமி சென்று விட்டபிறகும், நம் இந்தியப் பொருளாதாரத்திற்குச் சேதம் தொடர்கிறது.<br /><br />இந்தியாவின் விவசாயப் பொருளாதார வளர்ச்சி சில வருடங்களாகக் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு அரசின் விவசாய மான்யக் கொள்கை, பொது வினியோகக் கொள்கையில் அரசு செய்த மாற்றங்கள், கடந்த சில வருடங்களாக நிலவிய வறட்சி நிலை, விவசாய சம்பந்தமான நம் ஏற்றுமதிக் கொள்கை ஆகியவை காரணங்கள்.<br /><br />விவசாயம், நம் பொருளாதாரத்தின் மிகப் பெரிய அங்கம்.<br /><br />வந்து சென்ற சுனாமி பல விளைநிலங்களை உவர்நிலங்களாக மாற்றியதைச் சீர் செய்யப் பல காலம் பிடிக்கப் போகிறது.<br /><br />மீன்பிடிக்கும் தொழில் மூலம் வரும் பொருளாதாரம் விவசாயப் பொருளாதாரத்தில் அடங்கும்.<br /><br />சுனாமி பல மீனவர்களையும், அவர்தம் குடும்பங்களையும் அழித்து விட்டது. மிஞ்சியவர் பலரின் கட்டுமரங்களையும், படகுகளையும், வலைகளையும், அழித்து விட்டது அல்லது அடித்துச் சென்று விட்டது.<br /><br />கடலை நண்பனாகவும், தாயாகவும் பார்த்த மீனவர்கள், இப்போது கடலுக்குள் செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. போதாதென்று, மக்களுக்கு மீன் உண்பதில் அச்சம் மிகுந்துள்ளது.<br /><br />தினமும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும் மீன் தொழில் நசிந்து கிடக்கிறது.<br /><br />இது நமது விவசாயப் பொருளாதார வளர்ச்சியை மேலும் பாதிக்கப் போவது உறுதி.<br /><br />அரசு எவ்வளவு விரைவாகச் சீரமைப்புப் பணிகளைச் சிறப்புடன் செய்து முடிக்கிறதோ அவ்வளவு விரைவாக இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியும் சீரடையும்.<br /><br />நமது பொருளாதாரம், சமீப காலங்களில் இத்தகைய சில இயற்கையின் தாக்குதல்களைத் தாங்கி இருக்கிறது. இதையும் தாங்கும்.<br /><br />இவையிருக்க, சுனாமி தாக்கிய போது பல நாடுகள் உதவிக் கரம் நீட்டிய போது, நம் அரசு, "எங்களை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" என்று கூறியதோடல்லாமல், அண்டை தேசங்களுக்கு விரைந்து மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டியது. இந்தியனாகப் பெருமைப் படுகிறேன்.<br /><br />*************************************************************************************<br /><br />இந்தியா பல கோடி ரூபாய் மதிப்புள்ள இறால் மீன்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. சுனாமிக்குப் பின், தென்னிந்தியாவில் கிழ்க்குக் கடலோரத்தில் இருந்த பல இறால் பண்ணைகள் அழிந்து விட்டன. இதனால் இறால் ஏற்றுமதி பெரிதும் பாதிப்படைந்துள்ளது.<br /><br />மீன் தொழிலுக்கு உதவியாக இருக்கும் பல்வேறு தொழில்களும் பாதிப்படையத் தொடங்கியுள்ளன. உடைந்த படகுகளைச் சீர் செய்வோர், அவ்வாறு சீர் செய்து கொடுக்க அனைத்தையும் இழந்து தவிக்கும் மீனவர்களிடம் பணம் வாங்க முடியவில்லை. மீன் தொழிலைச் சார்ந்திருந்த பனிக்கட்டித் தொழிற்சாலைகள் (ice factories) இயங்காமல் இருக்கின்றன. இவற்றில் வேலை செய்து வந்தவர்களின் ஜீவனம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பல தொழிற்சாலைகள் ஒரு நாளைக்குப் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனிக்கட்டிகளைச் செய்யும் திறன் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />மீன் ஏற்றுமதி நின்று போனதால், குளிர் பதன வசதி செய்யப் பட்ட கப்பல்களுக்கான தேவை குறைந்து விட்டது. பல கோடி ரூபாய் முதலீட்டில் இத்தகைய கப்பல்களைக் கட்டி அல்லது வாங்கி இயக்கும் நிறுவனங்கள், நஷ்டத்திலிருந்து தப்பிக்க வேறு சந்தைகளைத் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110951427484622138?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1108318456200527612005-02-13T10:11:00.000-08:002005-02-13T10:17:52.476-08:00நாகை நடப்புகள்<strong>D. V. பாபு</strong><br /><br />ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாகையின் நிலைக் குறித்து எழுத விரும்புகின்றேன். இடையில் எழுத நேரம் இல்லாமல் இல்லை. கிடைக்கும் நேரங்களில் மனநிலை அல்லது உடல்நிலை ஒத்துழைப்பதில்லை. ஒரு பத்தி எழுதுவதற்குள் அயற்சி வந்து தூங்கச் சென்றுவிடுவேன். எழுதாமைக்கு இன்னொரு காரணம், நான் எழுத நினைக்கும் நடப்புகளை எல்லாம் நண்பர் ரஜினி ராம்கி அவர்கள் எனக்கு முன்பே மிக அழகான நடையில், தெளிவாய் எழுதியிருப்பார். சுனாமித் தாக்குதல் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், நிவாரணப் பணிகளுக்கான தீவிரப் பங்களிப்பில் இருந்து சற்று விலகி, என்னுடைய சொந்தப் பணிகளில் கவனம் செலுத்த எண்ணியுள்ளேன். அதற்கு முன், ஒரு தற்காலிக முடிவுரையாக நாகையின் தற்போதைய நிலவரம், நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, அரசியல் கூத்துக்கள் ஆகியவற்றைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆசை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது சிறிதாக எழுதியதைத் தொகுத்து இன்று வெளியிடுகின்றேன். <br /><br /><strong>தற்போதைய நிலவரம்</strong><br /><br />நாகை நகரை இப்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி என்று இரண்டாகப் பிரித்துவிடலாம். பாதிக்கப்படாத பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. ஒரு சிலத் தொழில்கள் மந்தமாக இருக்கின்றன. மற்றவை பழைய நிலைக்குத் திரும்பி விட்டன. உணவுவிடுதி, டாஸ்மார்க் போன்றவற்றில் முன்புக்கு இப்போது வியாபாரம் அதிகமாகவே நடக்கின்றது. கடற்கரையை ஒட்டினப் பகுதிகளில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் எல்லாம், நகரின் மத்தியப் பகுதியில் வீடு தேடி அலைந்து கொண்டு உள்ளனர். நிலமதிப்புகள் தற்போது எதிரிடையாக மாறிவிட்டது. மக்கள் மனதில் இன்னும் சுனாமி குறித்த பயம் நீங்கவில்லை. இது மறையச் சற்று நாளாகலாம்.<br /><br />பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சார்ந்த மக்களில் 70 சதவீதத்திற்கு மேல் மீனவர்கள் அல்லது மீனவர்களைச் சார்ந்து தொழில் புரிபவர்கள். சொந்தங்கள், உறைவிடம், உடைமைகள், தொழில், மனோதைரியம் என்று இவர்கள் இழந்தவற்றைப் பட்டியலிடலாம். சொந்தங்களை இழந்தவர்களுக்கு அவற்றைத் திருப்பித் தருதல் சாத்தியமற்றது. அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் தொகை, மேலும் கொடுப்பதாக அறிவித்து உள்ள தொகை எல்லாம், மறைந்து போன உயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைகள் அல்ல. வெறும் ஆறுதல்கள் அல்லது ஆறுதலுக்கான முயற்சிகள். உயிர் இழப்பு ஏற்பட்டுள்ள குடும்பங்கள் பலவும், இன்னமும் அந்த சோகத்தின் பிடியில் இருந்து மீளவில்லை. பலர் மனதைத் தேற்றிக் கொண்டு விட்டனர். ஒரு சிலர் நினைத்து நினைத்துக் கண்ணீர் விடுகின்றனர். ஆறுதல் வார்த்தைகள் இவர்களுக்கு மருந்தாக இல்லை. எரிகின்ற தீயிற்கு எண்ணெய் போல் சில சமயம் அவர்கள் உணர்கின்றார்கள். காலத்தால் மறத்தல் ஒன்றுதான் இதற்கு தீர்வு. <br /><br />உடைமைகளை மட்டும் இழந்தவர்கள் விரைவிலேயே பாதிப்பிலிருந்து மீண்டு விட்டதாகத் தோன்றுகிறது. வந்து குவியும் உதவிகள் இவர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது. இப்போது இவர்களின் கவனம் எல்லாம் நிவாரணம் பெறுவதில்தான். இதில்தான் ஏகப்பட்ட குளறுபடிகள், தில்லுமுல்லுகள். அதனைப் பற்றி இறுதியில் எழுதுகின்றேன். மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படவேண்டும். இதுதான் அங்குள்ளவர்களின் விருப்பம். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் இலவசமாக வந்துவிடுகின்றன. வருமானம் இல்லாமல் எவ்வளவு நாட்கள் இதனை நம்பி ஓட்டுவது என்பது இவர்கள் தரப்புக் கேள்வி. அரசு கொடுத்த 4000 ரூபாய் என்றோ சரியாகிவிட்டது. தொழிலுக்கு மீண்டும் திரும்பும் வரை மாதாமாதம் அரசு நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என்று கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.<br /><br />ஒரு சிலர் கட்டுமரங்களில் மீன் பிடிக்கச் செல்கின்றனர். மற்றபடி சிறிய படகுகள், பெரிய படகுகள் என்று எதுவும் கடலுக்குச் செல்லவில்லை. நிறைய விசைப் படகுகள் முழுவதுமாய் உடைந்து போய்விட்டன. ஒரு சிலப் படகுகள் சரிசெய்து பயன்படுத்தும் நிலையில் இருந்தாலும் அவற்றைச் சரி செய்வதற்கான இடவசதி, ஆள் வசதி மற்றும் பொருள் வசதி இப்போது இவர்களிடம் இல்லை. நிறைய வங்கிகள் இவர்களுக்காக தளர்த்தப்பட்ட விதிகளுடன் கடன் கொடுக்கத் தயாராய் இருந்தாலும், அதை வாங்குவதில் நிறையப் பேருக்குத் தயக்கம். கடன் என்று இல்லாமல் இலவசமாக அரசோ அல்லது மற்ற தொண்டு நிறுவனங்களோ தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. படகுகள் கிடைக்கப்பெற்று இவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பச் சில காலம் ஆகும். அவர்களின் கணக்குப்படி ஆறு மாதத்திற்கு மேல் ஆகலாம். பெரிய விசைப்படகுகள் செய்ய நிறைய கால அவகாசம் தேவை. அதோடு மட்டுமன்றி அதற்கு தேவையான மரம் சாதாரண நாட்களிலேயே கிடைப்பது கடினம் என்கின்றார்கள். அத்தனை படகுகளை ஒரே நேரத்தில் செய்ய தேவையான மரங்கள், ஆட்கள், இடவசதி அனைத்தும் கிடைக்குமா என்பது இவர்களின் கேள்வி.<br /><br />அந்தப்பகுதியைச் சேர்ந்த எனது நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னிடம் தங்களின் கவலையைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். எல்லாம் கிடைத்தாலும் மீண்டும் இந்த இடத்தில் இருந்து கொண்டு மீன்பிடித் தொழிலுக்குச் செல்லவேண்டுமா என்பது இவர்கள் மனதில் உள்ளக் குழப்பம். முன்பே மீன்பிடித் தொழில் நல்ல லாபகரமாக இல்லை. ஒரு சில மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் மீன்கள் கிடைப்பது மிகவும் சிரமமாய்தான் இருந்தது. உயிரைப் பணயம் வைத்து இலங்கை எல்லைப் பகுதிக்கு சென்று மீன் பிடித்து வரும் சிலரால்தான் நிறைய சம்பாதிக்க முடிந்தது. சுனாமிக்குப் பின் மீன்கள் எல்லாம் இடம் மாறி, மிகவும் குறைந்துவிட்டதாய் வந்து கொண்டிருக்கும் செய்திகள் இவர்களை மிகவும் யோசிக்க வைத்துள்ளது. இந்தச் சூழலைக் காரணமாய் வைத்து வேறு தொழிலுக்கு மாறிவிடலாம் என்று உள்ளோம். வங்கிகள் கடன் தரத் தயாராய் உள்ளன. என்னத் தொழில் செய்யலாம் என்று சொல் என்று என்னிடம் ஆலோசனைக் கேட்டனர். பலருடன் ஆலோசித்து பதில் சொல்வதாய் கூறியிருக்கின்றேன். ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.<br /><br /><strong>நிவாரணப் பணிகள்</strong><br /><br />இந்த ஒரு மாத காலத்தில், முதல் கட்டப் பணியான அடிப்படை மற்றும் அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குதல் சிறப்பாகவே நடந்துள்ளது. இரண்டாம் கட்டப் பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. பாதிக்கப்பட்டவர்கள் கோயில்கள் மற்றும் கல்யாண மண்டபங்களைக் காலி செய்து கொண்டு தங்களின் குடியிருப்புகளுக்கோ அல்லது தற்காலிக குடியிருப்புகளுக்கோ இடம் பெயர்ந்துள்ளனர். சில இடங்களில் தற்காலிக குடியிருப்பு கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், இடம் இன்றி முன்பு இருந்த இடங்களிலேயே சிலர் தங்கி உள்ளனர். இன்னும் சிறிது நாட்களில் அவர்களும் இடம் பெயர்ந்து விடுவார்கள். கொஞ்சம் வசதி உள்ளவர்கள், தற்காலிகக் குடியிருப்பில் தங்கப் பிடிக்காமல், நகரில் வாடகை வீடு எடுத்துத் தங்கி உள்ளனர். <br /><br />தற்காலிகக் குடியிருப்புகள் என்று பெயர் சூட்டப்பட்டு விட்டாலும், அந்த தற்காலிகத்தின் கால அளவு குறைந்தது ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை. இன்னும் அதிகமானாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்நிலையில், இதில் தங்குபவர்கள் ஒரு முழுக் கோடைக் காலத்தையும், ஒரு மழைக் காலத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு உகந்தவைகளாக இந்த குடியிருப்புகள் மாற்றப்பட வேண்டும். கழிப்பிடங்கள் போதாது. தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ள கழிப்பிட, குளியலறை மற்றும் குடிநீர் வசதிகள், மக்கள் இடம்பெயரும் வரை சிறப்பாய் பராமரிக்கப்பட வேண்டும். எங்களைப் போன்ற பல தொண்டு நிறுவனங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, இங்கு தங்கும் மக்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வினை விடாது ஊட்டி வருகின்றது. கழிப்பிடங்களை முறையாகப் பயன்படுத்துதல், குப்பைகளைச் சேகரித்தல், சுற்றுப்புறத் தூய்மை, சுகாதாரம் போன்ற சில நல்ல விசயங்களை இவர்களுக்குக் கற்றுத் தர, ஒரே தரத்தில் உள்ள இந்தத் தற்காலிகக் குடியிருப்புகள் நல்ல வாய்ப்பாய் உள்ளது.<br /><br />கடந்த சில தினங்களாக தற்காலிகக் குடியிருப்பு பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருப்பதால் நிறைய சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்க்க முடிந்தது. இந்த குடியிருப்புகளில் தங்குபவர்களுக்கெல்லாம் அரசாங்கம் வீடு கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையில், பாதிக்கப்படாத பலரும் இங்கே புகுந்துள்ளனர். கொஞ்சம் செலவு செய்தும் சிலர் வந்துள்ளனர். அதிகாரிகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வரும்போதெல்லாம் தவறாமல் ஆஜராகிவிடும் இவர்கள், மற்ற நேரங்களில் பூட்டிவிட்டு தங்கள் வீடுகளுக்குச்(!) சென்றுவிடுகின்றனர்.<br /><br />உளவியல் ஆலோசனை என்ற பெயரில் மதமாற்றப் பிரச்சாரங்கள் நடப்பதாய் ஒரு பிரச்சனை எழுப்பப்பட்டு, நல்லவேளையாக அது பெரிதாகும் முன் அணைக்கப்பட்டு விட்டது. குற்றச்சாட்டு எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. உண்மையோ, பொய்யோ.. இது போன்ற செய்திகள் பரப்பப்பட்டால், விபரீத விளைவுகள் ஏற்படலாம். உணர்ச்சிகரமான சூழலில் மனிதநேயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.<br /><br />உளவியல் ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்குபவர்கள் பற்றி; தற்போது இதற்கென ஒரு பெரிய கூட்டமே கிளம்பி இருக்கின்றது. திறமையான உளவியல் பயிற்சியாளர்களில் இருந்து ஒரு மணி நேர பயிற்சி எடுத்துக் கொண்டு வந்துள்ளவர்கள் வரை பலரும் இதில் அடங்குவர். திறமையும் அனுபவமும் இல்லாத பலர், உளவியல் ஆலோசனை என்ற பெயரில், பாதிக்கப்பட்டவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு அல்லது பேசியே கொல்கின்றனர். ஆரம்ப நாட்களில் 'தேமே' என்று கேட்டுக் கொண்டிருந்த கூட்டம், இப்போது ஓடி மறைந்து கொள்கின்றது. எனது நட்புக் கூட்டங்கள் என்னிடம் புலம்பித் தள்ளினார்கள். "எங்களுக்கு சுனாமியே பரவாயில்லைங்கிற அளவுக்குப் பண்ணிட்டாங்கப்பா..". நான் அவர்களுக்கு விளையாட்டாய் அளித்த பதில், 'இதோட ஐடியாவே அதுதாம்ப்பா.. ஒரு கொடுமைய மறக்க அதைவிட பெரிய கொடுமைய அனுபவிக்க வைக்கிறது'.<br /><br />உளவியல் ஆலோசனையில் அனுபவம் வாய்ந்த சிலக் குழுமங்கள், சிறப்பாய் செயல்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் பலருக்கும் இத்துறையில் நிறைந்த அனுபவமும், பயிற்சியும் இருந்தாலும், மொழிப்பிரச்சனை ஒரு தடையாகத்தான் இருக்கின்றது. அதனை அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராய் இல்லை. மொழி ஒரு பிரச்சனையே அல்ல என்கின்றனர். கூடியிருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் சிரிப்பது, தாங்கள் சொல்வதின் அர்த்தம் புரிந்துதான் என்று பலர் நினைக்கின்றனர். எது எப்படியோ, சிறுவ சிறுமியர் அனைத்தையும் ரசிக்கின்றனர். எல்லாத்தரப்பு உளவியல் ஆலோசனைக் குழுக்களும் சிறுவயதினரை சந்தோசப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் பாராட்டலாம்.<br /><br /><strong>நிவாரணக் கூத்துக்கள்</strong><br /><br />முதல் பத்து பதினைந்து நாட்கள் காணாமல் போயிருந்த இடைமட்ட மற்றும் அடிமட்ட அரசியல்வாதிகள் பலரும் சிறிது நாட்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாகத் தலைத் தூக்க ஆரம்பித்தனர். தங்கள் பகுதி மக்களுக்காக நிவாரணம் பெற்றுத் தருவதில் இவர்கள் காட்டும் ஆர்வம் வியக்க வைக்கின்றது. மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்று அரசு அறிவித்த ரூபாய் 2000, 60 கிலோ அரிசி, 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆங்காங்கு பெரிய சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டது. முதலில் சுனாமியால் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு மட்டும் என்று அறிவித்து, நகரமன்ற உறுப்பினர்களின் வாயிலாக அதனைக் கொடுக்க ஆரம்பிக்க, கூடவே பிரச்சனைகளும் ஆரம்பமாயிற்று. பின்னர் அது நாகையில் உள்ள அனைத்து வார்டு மக்களுக்கும் என்று அறிவிக்கப்பட்டு ஏழை பணக்காரர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல், ஒட்டுமொத்த நாகை மக்களுக்கும் பட்டுவாடா செய்யப்பட்டது. [எனக்கும் கிடைத்தது. அதை நான் என்ன செய்து இருப்பேன் என்பதனை உங்களின் யூகத்திற்கு விட்டுவிடுகின்றேன் :-) ]<br /><br />இதனைத் தொடர்ந்து நாகைக்கு பக்கத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும், நாங்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கிளம்ப, அரசாங்கம் புலி வாலைப் பிடித்த கதையாய் தடுமாறிக் கொண்டு இருந்தது. தினமும் குறைந்தது ஒரு சாலை மறியலாவது நாகையைச் சுற்றி உள்ள கிராமங்களில் நடந்து வந்தது. சில வாரங்களாக சார் ஆட்சியருக்கு இவர்களைச் சமாதானப்படுத்துவதுதான் வேலையே. உள்ளூர் தொலைக்காட்சியில் தினமும் எதாவது ஒரு பெண்மணி கையில் மைக்கைப் பிடித்து கொண்டு, 'பக்கத்து ஊருக்கு கொடுத்து இருக்காங்க, நாங்க மட்டும் என்ன இளிச்சவாயர்களா.. நாங்களும்தான் மனசால(?) நிறைய பாதிக்கப்பட்டு இருக்கோம் ..' என்ற ரீதியில் ஆவேசமாகப் பேசிக் கொண்டு இருப்பார். கடந்த சில நாட்களாய்த்தான் இவைகள் குறைந்துள்ளன.<br /><br />கட்சி வேறுபாடு இன்றி அனைத்து நகரமன்ற உறுப்பினர்களும் நிறைய பணம் பார்க்க வழிகள் செய்யப்பட்டுவிட்டன. நான் உத்தேசமாய் குற்றச்சாட்டுகளை வீசவில்லை. ஓரளவிற்கு உறுதியாய் தெரிந்தவற்றை மட்டுமே இங்கு எழுதுகின்றேன். எனக்குப் பழக்கமான ஒரு கிராம நிர்வாக அதிகாரி தனக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் கிடைத்ததாக மிகவும் சலித்துக்கொண்டார். இந்த ஒரு மாதம் நான் உழைத்த உழைப்பிற்கு எனக்கு ஒரு லட்சம் கூட கொடுக்கலாம், அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கின்றேன் என்று தன் தரப்பு நியாயத்தையும் எடுத்துரைத்தார்.<br /><br />அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மிகச்சிறப்பாய் செயலாற்றி வருகின்றார்கள். மிகவும் திறமைசாலிகளைக் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுதான் அனைத்தையும் திட்டமிடுகின்றது. இருப்பினும் செயல்படுத்தும் வேலையில் இருப்பவர்கள் கீழ்மட்ட அதிகாரிகள்தான். ஒரு சிலர் நன்கு உழைத்தாலும், பலருக்கும் உழைப்பது என்பது புதிதாய் இருக்கின்றது. உயர் அதிகாரிகளுக்கு முன்பு பவ்யமாக தலையாட்டும் இவர்கள், அதிகாரிகள் நகர்ந்தவுடன் 'ஏன்தான் இங்கே வந்து மாட்டிக் கொண்டோம் என்று இருக்கு..' என்ற புலம்பலை ஆரம்பித்துவிடுகின்றனர். மறக்காமல் இன்னொன்றையும் புலம்புவார்கள். 'சுனாமி வந்ததுல அவங்களுக்கு ஒரு நாள்தான் கஷ்டம், அதுக்கப்புறம் ஆரம்பிச்ச எங்க கஷ்டம் ஒரு மாசமாகியும் இன்னும் விடலை'.<br /><br />சுனாமிக்கு பின் நாகை மாவட்ட மக்களின் நாயகனாய் அந்தஸ்து பெற்றிருப்பவர் புதிய ஆட்சியரான திரு. ராதாகிருஷ்ணன். அவரது உழைப்பினையும், நிர்வாகத் திறனையும் அனைத்துத் தரப்புமே பாராட்டுகின்றது. யாரும் எளிதில் சென்று சந்திக்கும் எளிய மனிதராய் இருக்கின்றார். கிடைத்த இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில், இவர் மக்களை கையாளும் விதத்தைப் பார்த்து அதிசயித்துப் போனேன். ஒரு மணி நேரம் அதிகம் உழைத்துவிட்டாலே, ஒரு மாதம் முழுதும் சொல்லிச் சொல்லி அலுத்துக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு நடுவில் ஓய்வேயின்றி பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் இந்த உன்னதமான மனிதர் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர். அவரை மேலும் உற்சாகப்படுத்தும் வண்ணம், உங்கள் வாழ்த்துக்களை அவரது மின்னஞ்சலுக்கு ( collector@nagai.tn.nic.in ) அனுப்பலாம். அவரது செல்பேசி எண்: 98424 22220.<br /><br />நாங்கள்தான் (நாங்களும்) பாதிக்கப்பட்டவர்கள் என்று சுனாமிக்குச் சம்பந்தமே இல்லாத கூட்டங்கள் பலவும் நிவாரணங்களைப் பெற்று சென்றனர். சென்று கொண்டு இருக்கின்றனர். ஒரு திருமண மண்டபத்தின் காவல்காரர் தனக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு எந்த பொருளும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று பெருமைப் பேசினார்.<br /><br />தேவைக்கு அதிகமாய் வாங்கி வைத்துக் கொண்ட பொருட்களை எல்லாம், இப்போது குறைந்த விலைக்கு பலர் விற்றுக் கொண்டுள்ளனர். இதற்கு அவர்களே கூறிக் கொள்ளும் நியாயம், 'எல்லாரும் பொருளாகவே கொடுத்துட்டாங்க.. மற்றச் செலவுகளுக்கு பணத்துக்கு நாங்க எங்கே போவோம்..?'. ஆனால், இன்றும் எந்தப் புதியப் பொருள் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொள்கின்றனர்.<br /><br />சில தினங்களுக்கு முன் ஒரு மீனவக் கிராமத்தில் அதிகப்படியான பாத்திரங்களை விற்று ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். கூடவே தற்காலிகக் குடியிருப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட பெரியப் பெரிய நாகத் தகடுகளும் விலை பேசி ஏற்றப்பட்டன. கடைநிலை ஊழியர்கள் எதிர்த்துக் கேட்க தைரியம் இன்றி ஒவ்வொரு மேலதிகாரிகளாய்த் தொடர்பு கொண்டு நிலைமையத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.<br /><br />சுனாமிக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்த, இறப்பு பதிவு செய்யப்படாதவர்கள் பலரையும் சுனாமியால் இறந்ததாய் காட்டி நிவாரணத் தொகைப் பெற்றக் கூத்தும் நடந்தேறியது. நகரின் மத்தியில் வசிக்கும் சிலர் கூட, மீன் வாங்கச் சென்ற போது இறந்து விட்டனர் என்று காண்பித்து பணம் பெற்று உள்ளனர். அதிகப்பட்சம் இவர்கள் செய்த வேலை 'காணவில்லை' என்ற ஒரு புகாரினைக் காவல் நிலையத்தில் பதிவு செய்தது மட்டுமே. இதற்கு 'கமிசன்' பெற்றுக் கொண்டு ஒரு கூட்டம் திறம்பட வேலைகளை முடித்துத் தந்துள்ளது.<br /><br />இப்படி அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், சில தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் என்று அனைத்து தரப்பும் செய்த, செய்து கொண்டிருக்கும் தவறுகள் மக்கள் எல்லோரையுமே சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கு வழி செய்துவிட்டது. நான் புதுச்சட்டை அணிந்து சென்றால், 'என்ன சுனாமி சட்டையா..?' என்ற நக்கலான கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ['ஆமாம், இந்தா உனக்கொன்று' என்று கேட்பவர்களுக்கு ஒரு சட்டைக் கொடுக்கப்பட்டால் கேள்விகள் மறுபடியும் எழாது. நடக்கும் தில்லுமுல்லுகளை யாரும் கேட்ககூடாது என்ற எண்ணத்தில்தானோ என்னவோ, எல்லோருக்கும் நிவாரணம் என்று 2000 பணம் கொடுத்து, எல்லோர் வாயும் அடைக்கப்பட்டுள்ளது!]<br /><br />இன்று நாகை எங்கும் பரவலாகக் ஒலிக்கும் பெருமூச்சு வார்த்தைகள் இவைதான் - 'சுனாமியால் அழிந்தவர்களை விட வாழ்ந்தவர்கள்தான் அதிகம்'.<br /><br /><strong>என்ன உதவி செய்யலாம்..?</strong><br /><br />இறுதியாக.., இன்னும் நாங்கள் எந்த உதவியுமே செய்யவில்லை. என்ன உதவி செய்யலாம் என்று கேட்பவர்களுக்கு.<br /><br />என்னுடைய முந்தைய பதிவுகளில், சிறிது காலம் சென்றபின் உதவி செய்ய யாரும் இருக்கமாட்டார்கள், அப்போது நாம் செய்யலாம் என்று கூறியிருந்தேன். அது வெள்ளம், புயல் போன்ற சிறிய அழிவுக்காலங்களில் நடந்தவற்றை மனதில் கொண்டு எழுதப்பட்ட என்னுடையக் கருத்து. அது மிகவும் தவறு என்று இப்போது தெரிகின்றது. நாளாக நாளாகத்தான் அதிக உதவிகள் வந்து குவிவது போல் ஒரு தோற்றம் உள்ளது. நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் தேவைப்படும் அனைத்தையுமே செய்துத்தர தயாராய் இருக்கின்றார்கள். ஏராளமான நிதியினை வைத்துக் கொண்டு பல அமைப்புகள் என்ன செய்வது என்று தெரியாமல் சற்று தடுமாறுவது நன்குத் தெரிகின்றது. நாம் யோசிப்பதற்கே முன்பே, அதனைச் செய்து முடித்துவிடும் வேகத்தில் பல நிறுவனங்கள் உள்ளன. ஆகவே, பெரிய அளவில் நிதி அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான புதியத் திட்டங்கள், திட்ட அறிக்கைகள் வைத்து இருப்போர் மாவட்ட ஆட்சியர் அவர்களை தொலைபேசியில் நேரிடையாகத் தொடர்பு கொண்டுத் தெரிவிக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ள இணையத்தளங்களில் உங்களுக்குத் தேவையான தொலைபேசி எண்கள், முகவரிகள் மற்றும் அனைத்துத் தகவல்களும் கிடைக்கும்.<br /><br />நாகை சுனாமி பாதிப்பு விபரங்கள், நிவாரணப் பணிகள் குறித்த செய்திகள், தேவைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்கண்ட இணையத்தளங்களில் உங்களுக்குக் கிடைக்கும்.<br /><br />http://www.tsunami2004-india.org<br /><br />http://www.tn.gov.in/tsunami/default.htm<br /><br />http://nagapattinam.nic.in<br /><br />ஹாலந்து நாட்டு அமைப்பு ஒன்று எங்கள் அமைப்பின் மூலமாக பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்து எடுக்க விருப்பம் தெரிவித்தது. எங்களுக்கு கிராமம் கிடைக்கவில்லை. அனைத்துமே தத்து எடுக்கப்பட்டுவிட்டன. பந்திக்கு முந்துவது போல் இதற்கும் முந்தியிருக்கவேண்டும் போலிருக்கின்றது. ஆனால் இந்த 'தத்து' என்பதற்கு ஒவ்வொரு அமைப்புகளும் தரும் விளக்கம் வித்தியாசப்படுகின்றது. என்ன செய்யப் போகின்றார்கள் என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இன்னும் பேச்சளவிலேயே இருக்கும் திட்டங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறும்போதுதான் உண்மைநிலைத் தெரியவரும்.<br /><br />'இன்னும் ஒரு வருடத்தில் நாகையை எப்படி மாற்றிக் காண்பிக்கின்றேன்..பாருங்கள்..' என்று பாதிக்கப்பட்ட மக்களிடம் அன்று நமது முதல்வர் சவாலாகப் பேசிச் சென்றார். பல்வேறு அமைப்புகளும் இதையேத்தான் சொல்கின்றன. முற்றிலும் புதிய நாகை நகரை நாங்கள் நிர்மாணித்துத் தருகின்றோம் என்கின்றார்கள். ஒரு புதிய நகரையே தற்போதைய நகர எல்லைக்கு இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் அமைக்க திட்டங்கள் இருப்பதாக செய்திகள் கசிகின்றன. நல்லது நடந்தால் சரி. நமது எதிர்பார்ப்பும் இனி நல்லதாகவே இருக்கட்டும்.<br /><br />பின்குறிப்பு: சுனாமியால் நான் பாதிக்கப்பட்டேனோ இல்லையோ.. என்னுடைய அறுசுவை இணையத்தளம்(www.arusuvai.com ) நிறையவே பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். ஒரு மாத காலத்திற்கும் மேல் எந்தவித புதிய சேர்க்கையும், மாற்றங்களும் இல்லாத காரணத்தால், 50 சதவீத வருகையாளர்களை இழந்துள்ளது. இதனைச் சரிச் செய்து, பழைய நிலைக்கு அல்ல, அதைவிடப் பன்மடங்கு சிறந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கின்றேன். என்னுடைய இந்த வலைப்பதிவும் நாளை முதல் பழையபடி தினம் ஒரு சமையல் குறிப்பினைத் தாங்கி வரும். நானும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினால்தான் நாகை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது என்ற வாக்கியம் அர்த்தம் பெறும் ;-)<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110831845620052761?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1108318288637933502005-02-13T10:08:00.000-08:002005-02-13T10:11:28.640-08:00நிவாரணப் பணிகள் மற்றும் உதவிகள்<strong>D. V. பாபு.</strong><br /><br />சம்பவம் நடந்த தினத்திலிருந்து நேற்று மதியம் வரை எனது கம்யூட்டரைத் தொடவில்லை. அதற்கு நேரமும் இல்லை. நேற்று மதியம் அரசாங்கம் கொடுத்த சுனாமி எச்சரிக்கை, வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிவாரணப் பணிகள் அனைத்தையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. மதியத்திற்கு மேல், ஊரில் இருந்த பாதி மக்களில் பாதி பேர் இருப்பவற்றை எடுத்துக் கொண்டு, ஊரை விட்டு வேறிடம் சென்று விட்டனர். இந்த முறை அரசு சொன்னது இரண்டு கிலோமீட்டர் வரை இந்த தாக்கம் இருக்கும் என்று. அது பலரின் காதுகளைக் கடந்து எட்டு கிலோமீட்டர் என்று முடிந்ததின் விளைவு, ஊருக்குப் பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் வெளியேறத் தொடங்கிவிட்டனர். அனைத்து பணிகளையும் மாலை ஆறு மணி வரை நிறுத்தி வைக்கச் சொல்லி மாவட்ட ஆட்சியர் அறிவித்து விட்டார். எல்லோரும் திரும்பிவிட்டனர். தொண்டார்வலர்கள் நகரை விட்டுத் தள்ளி வேறு ஒரு ஊரில் இருப்பதாகத் தகவல்.<br /><br />இதனால் நான்கு நாட்களுக்குப் பிறகு என்னுடைய மின்னஞ்சல்களை பார்ப்பதற்கும், எழுதுவதற்கும் சற்று நேரம் கிடைத்தது. நிறைய மின்னஞ்சல்கள் வந்து குவிந்து இருக்கின்றன. என்னிடம் இருந்து பதில் எதுவும் இல்லாத காரணத்தால் பலரும் கவலைப் பட்டிருந்தனர். அவர்களுக்கு எல்லாம் பதில் அனுப்ப முடிந்தது. நிவாரணப் பணிகள் குறித்தும், உதவி வழங்குவது குறித்தும் பலரும் என்னைக் கேட்டு இருந்தார்கள். அவர்களுக்காக இதனை எழுதுகின்றேன்.<br /><br />பாதிக்கப்பட்ட தினத்திலிருந்து இரண்டு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகின்றோம். முதலில் சீரமைத்தல் பணி, இதில் உடல்களை அப்புறப்படுத்துதல், சுகாதாரப் பாதுகாப்பு அளித்தல் அனைத்தும் அடங்கும். இரண்டாவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவது.<br /><br />நான் முதல் நான்கு நாட்கள் சீரமைத்தல் பணியில் ஈடுபட்டிருந்தேன். அதனால் மற்றொரு பணி எந்த முறையில் நடைபெற்று வருகின்றது என்பது தெரியாமலே இருந்தது. மேலோட்டமாக பார்க்கையில் அது சிறப்பாக நடைபெற்று கொண்டு வருவதாகவே தோன்றியது. நேற்றுதான் ஆட்சியரிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. உதவிகள் முறையாக மக்களைச் சென்றடைய உதவுமாறு. அதன்பின் அந்த பணியில் கவனம் செலுத்தியபோது, குறைபாடுகள் சில இருப்பதும் தெரிய வந்தது. ஆனால், சில ஊடகங்கள் பெரிது படுத்தும் அளவிற்கு குறைபாடுகள் இல்லை.<br /><br />உதவிகள் முறையாய் சென்றைடைய நேற்று அனைவரும் கூடி திட்டமிட்டோம். அதை செயல்படுத்திப் பார்க்கும் முன், மற்றொரு சுனாமி எச்சரிக்கை வந்து அனைவரும் வெளியாகிவிட்ட நிலையில், அது இயலாமல் போய்விட்டது. மீண்டும் இன்று பழையபடி எங்கள் பணிகளைத் தொடர்வோம்.<br /><br />சில விசயங்களை மனதில் கொண்டு உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது.<br /><br />பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள். அவர்கள் வசித்தது குடிசை வீடுகளில்தான் என்றாலும், நாள் ஒன்றுக்கு 500 ல் இருந்து 5000 வரை சம்பாதித்து கொண்டிருந்தவர்கள். செலவு செய்வதில் யாரும் அவர்களுக்கு இணையாக முடியாது. இன்று நாகையில் நல்லபடியாக பல தொழில்கள் நடக்கின்றது என்றால் அதற்குக் காரணம் மீனவர்கள்தான். எனக்கு நன்கு தெரியும். மீனவர்கள் படகு எடுக்காத காலங்களில் நாகையின் அனைத்துத் தொழில்களிலும் அதன் பாதிப்பு இருக்கும். அவர்களுக்குத் தெரியாத ஒரு பழக்கம் சேமித்து வைப்பது. கடந்த சில ஆண்டுகளில் பலர் இந்த நிலையில் இருந்து மாறி, நல்ல வீடு, பத்திரமான சேமிப்பு என்று இருந்தாலும், பெரும்பான்மையான மீனவர்கள் அதே நிலையில்தான் இருந்தார்கள். தன்மானம், தைரியம், ஒற்றுமை, முரட்டுத்தனம், தாழ்வு மனப்பான்மை என்று அனைத்துமே அவர்களுக்குச் சற்று அதிகம்தான். ஒரே நிமிடத்தில் அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்துவிட்டவர்கள். உதவிகளை ஏற்றுக்கொள்ள தயக்கம், வேறு வழியில்லையே என்ற உண்மையின் தாக்கம், கையேந்தும் நிலை வந்துவிட்டதே என்று நொந்த நிலை.. இப்படி பல மனநிலைகளில் அவர்கள் தவிக்கின்றனர். இவற்றை எல்லாம் மனதில் கொண்டுதான் அவர்களுக்கு உதவவேண்டியுள்ளது. உதவி வழங்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.<br /><br />இந்த இடத்தில்தான் வெளியூரில் இருந்து வரும் தொண்டார்வலர்கள் பலரும் தவறு செய்வதை உணருகின்றேன். வாகனங்களில் இருந்தபடியே துணிகளை தூக்கி எறிதல், உணவுப் பொட்டலங்களை வீசுதல் போன்ற செயல்களைப் பரவலாக காணமுடிகின்றது. அதற்கும் ஒரு கூட்டம் அடித்துக் கொண்டு உள்ளது. நான் பார்த்த வரையில், அந்த கூட்டத்தில் இருக்கும் முக்கால்வாசிப் பேர் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.<br /><br />பழையத் துணிகளும், உணவுப் பொட்டலங்களும் நகர் முழுதும் இறைந்து கிடக்கின்றன. 'ஒன்றும் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்றுதானே அவ்வளவு தூரத்தில் இருந்து இதனைக் கொண்டு வருகின்றோம்' என்று உதவி செய்பவர்களும் வருத்தப்படுகின்றனர்.<br /><br />இதனை முறைப்படுத்தும் பணியில் இன்றிலிருந்து முழுமூச்சாய் இறங்கப் போகின்றோம். என்ன உதவித் தேவை என்று கேட்பவர்களுக்கு நான் கூறுவது இதனைத்தான். பழையத்துணிகள், உணவுப் பொட்டலங்களைத் தவிர்த்து விடுங்கள். என்னத்தான் இன்று ஒன்றுமே இல்லாத நிலைக்கு ஆளாகிவிட்டாலும், நான்கு நாட்களாய், மூன்று வேளையும் புளிய சாதம், எலும்மிச்சை சாதம் சாப்பிடுவது என்பது யாருக்குமே கஷ்டம்தான். அதற்காக அவர்களுக்கு கறி பிரியாணி செய்து போட முடியாது என்றாலும் சற்று மாறுதலான உணவுகளை வழங்கலாம். அதற்கான வழிகளை உண்டாக்கப் போகின்றோம்.<br /><br />மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த பொருட்கள் ஏராளமாக வந்த வண்ணம் உள்ளன. ரெட் கிராஸ் போன்ற பெரிய அமைப்புகள் அதில் முழுமூச்சாய் செயல்படுகின்றன. அவற்றிற்கான தேவையும் இப்போது இல்லை (எனக்குத் தெரிந்தவரையில்). மற்றபடி, பாய், தலையணை, போர்வை, ஆடைகள், செருப்பு, சோப்பு, எண்ணெய் என்று அத்தியாவசியப் பொருட்களை அனுப்பலாம்.<br /><br />அவற்றை அனுப்புபவர்கள் எங்களது எக்ஸ்னோரா, லயன்ஸ் அல்லது ரோட்டரி போன்ற சங்களின் வாயிலாகக் கொடுத்தல் நலம். அவற்றிலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அரசு எந்த உதவியையும் செய்வதில்லை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான் அனைத்தையும் செய்து வருகின்றன என்று ஊடகங்கள் செய்தி பரப்பியதின் விளைவு, இனி எக்ஸ்னோரா, லயன்ஸ், ரோட்டரி போன்ற நிறுவனங்கள் அவர்களாக யாருக்கும் எதையும் அனுப்பக் கூடாது என்றும், அரசாங்கம் சொல்லும் இடங்களுக்கு, கேட்பவற்றை மட்டும் அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளாராம். அமைப்புகளின் தலைவர்கள் கோபத்தில் உள்ளனர்.<br /><br />இது போன்ற அரசியல்களில் மாட்டிக்கொள்ளாமல், எதனைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் உண்மையாய் உழைக்க சிலர் இருக்கின்றோம். கண்டிப்பாய் நாங்கள் இவற்றை முறைபடுத்துவோம். என்னிடம் நிறைய பேர் தொடர்பு கொண்டு பணம் அனுப்புவதாக கூறினார்கள். பண உதவி செய்ய விரும்புவோர்க்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். சோகத்தின் தாக்கம் இருக்கும் நேரத்தில் பலரும் உதவிக்காக பல்வேறு அமைப்புகளின் மூலம் பணம் அனுப்பி விடுகின்றனர். அவை முறையாகத் தான் செலவிடப்படுகின்றன என்று நம்புவோம். எல்லாமே ஒரே நேரத்தில் குவிவதால் அவை முறையான செலவுகளாக இல்லாமல் போகச் சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது. இரண்டு வாரம் பொறுத்திருங்கள், பழைய வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பும் போது அவர்களுக்குத் தேவைகள் நிறையவே இருக்கும். அப்போது உதவுவதற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியாது. நாம் செய்யலாம். இது நம்மை வித்தியாசப்படுத்தி, தனித்துக் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல. செய்யும் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் மனநிறைவைத் தரவேண்டும் என்பதற்காக.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110831828863793350?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1108317959527141002005-02-13T10:04:00.000-08:002005-02-13T10:07:45.616-08:00சோகப்பட்டினம்<strong>D. V. பாபு.</strong><br /><br />ஏனோ எழுதத் தோன்றுகின்றது. ஏதோ எழுதத் தூண்டுகின்றது. எழுதுவதின் நோக்கம் எனக்கேத் தெரியவில்லை. உலகின் ஒரு பகுதியையே ஒரு பெரும் சோகம் பேரலையாய் தாக்கிச் செல்ல, நான் வாழும் நாகை நகரும் பெரிதாய் காயம்பட்டது. 26 ஆம் தேதி காலை, 'சன்' செய்திகளில் சென்னையில் லேசான நிலநடுக்கம் என்ற செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, நகரில் மின்சாரம் தடைபட்டது.<br /><br />வீதியெங்கும் கூக்குரல், மக்களின் ஓட்டம், வாகனங்களின் சத்தம் .. இப்படி நகரமே அல்லோகலப்பட்டது. என்னவென்று செய்தி அறிவதற்கே சில நிமிடங்கள் ஆயிற்று. எல்லோர் வாயும் உதிர்த்த இரண்டு வாக்கியங்கள் "கடல் பொங்கி ஊருக்குள் வருகின்றது.. ஓடுங்கள்..". எல்லோரும் எதிர் திசையில் ஓட, என் போன்ற சிலர் கடல் இருக்கும் திசை நோக்கிச் சென்றோம். என் வீட்டிற்கும் கடலுக்கும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும்.பாதி தூரம் சென்ற பின்புதான் மக்கள் சொல்வதில் உண்மை இருப்பதை உணர ஆரம்பித்தோம். தண்ணீர் மிக மெதுவாய் நகரின் முக்கிய வீதியில் மேலேறி வந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தில் முக்கால் பாகம் மூழ்கிய நிலையில் பல வாகனங்கள், பாதி மூழ்கிய நிலையில் பல கடைகள்.. விபரீதம் புரிந்து திரும்பிச் செல்ல எத்தனிக்கும்போதுதான், கடல் நீர் பின்னோக்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.<br /><br />சில காலங்களில் கடல் நீர் அதிகரித்து கரைகளை அரித்து மேல்நோக்கி வருவது சகஜம். இது சற்று அதிகமாக வந்துவிட்டது என்றுதான் எண்ணினோம். இதற்கும், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்பதை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. கொஞ்சம் முன்னேறி பைக்கிலேயே தண்ணீரில் சென்ற நான், சாலையின் மறுமுனையில் பார்த்தது ஒரு பெரிய படகினை. படகு எப்படி இங்கு வந்தது என்ற ஒரு வினாடி யோசனையில், நடந்திருப்பதை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது. எத்தனைக் கட்டிடங்களைத் தாண்டி அந்த படகு சாலையின் முனைக்கு வந்துள்ளது.. Day after tomorrow திரைப்படத்தில் நகரின் மத்திக்கு வரும் அந்த கப்பல் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் முன்னேறிச் செல்ல செல்ல நடந்திருக்கும் கொடுமையை உணரமுடிந்தது. சற்று நெருங்கி வந்த போது, முன்னால் சென்ற கூட்டம் அலறியபடி திரும்பி ஓடிவந்தது. சற்று தூரத்தில் ஒரு கட்டிடத்தின் மேல் ஆடும் படகினையும், தெறித்து விழும் தண்ணீரையும் பார்க்க முடிந்தது. அது இரண்டாவதாக வந்த, சற்று சிறிய அலையின் கைங்கர்யம். முன்னேறியக் கூட்டம் தலைத்தெறிக்கப் பின்னேறியது.<br /><br />யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். இதற்குள் மூட்டை முடிச்சுகளுடன் பெரும் கூட்டம் நகரை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டது. இருந்தவர்கள் உதவ ஓடினோம். தேடினோம்.. அழைத்து வந்தோம்.. தூக்கி வந்தோம்.. இழுத்து வந்தோம்.. எல்லாமே நடந்தது. எடுத்துச் செல்வது உயிருள்ள உடலா, பிணமா என்பதை எல்லாம் ஆராய நேரம் இருக்கவில்லை. இதற்குள் நாகூர், சாமந்தன்பேட்டை, நம்பியார் நகர் என்று அனைத்து பகுதிகளில் இருந்தும் உடல்கள் குவியத் தொடங்கிவிட்டன. பொது மருத்துவமனை திணறியது. கதறிய பெண்களின் ஒப்பாரியில் நடந்தவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.<br /><br />ஒரே ஒரு அலை.. ஒரு நிமிடம்.. அனைத்தும் முடிந்து போனது.<br /><br />அந்த விபரீதம் நடப்பதற்கு ஒரு நிமிடம் முன்பு யாரேனும் வந்து, ஒரு அலை அடித்து நீங்கள் அனைவரும் சாகப் போகின்றீர்கள் என்று சொல்லியிருந்தால், அந்த ஊரே கூடி வயிறு வலிக்கச் சிரித்து இருக்கும். கடலிலேயேப் பிறந்து கடலிலேயே வளர்ந்தவர்கள். காற்றின் வாசனையைக் கொண்டே கடலின் போக்கை உணரக்கூடியவர்கள். இவர்கள் வீட்டுக் குழந்தைகள் மீனுக்கே நீந்த கற்றுத் தருவார்கள். பெரும்பாலானோருக்கு தோழர்கள் அந்த அலைகள்தான். அவைகளுடன் கட்டிப் பிடித்து விளையாடுவதுதான் இவர்களின் பொழுதுபோக்கே.. அத்தனை பேரும் அந்த ஒரு நிமிடத்தில் ஏமாந்துதான் போனார்கள்...அதிகம் பாதிப்பிற்கு உள்ளானது கீச்சான் குப்பம், அக்கரைப்பேட்டை பகுதிகள். கீச்சான் குப்பத்தில் மிஞ்சி இருப்பது உடைந்து போன படகுகளும், நொறுங்கிப் போன வீடுகளும்தான். இத்தனை நாளும் எனது செல்வங்களைக் கொள்ளையடித்தீர்களே என்று கேட்டு, ஒரே நிமிடத்தில் வஞ்சம் தீர்த்துக் கொண்டு அமைதியாகிவிட்டது அந்தக் கடல்.<br /><br />அதிகம் பலியானது சிறுபிள்ளைகள்தான். போராடக்கூட அதிக நேரம் இல்லாமல், அப்படியே முழுதாய் மூச்சடைத்து இறந்து போயிருந்தார்கள். உறவுகளைத் தங்கள் கண்முன்னே பறிகொடுத்த ஜனங்கள், கண்ணீர் வற்றிக் கதறிக் கொண்டு இருந்தனர்.<br /><br />'அம்மா. தண்ணீ வருதும்மா' என்று, மொட்டை மாடியில் துணிக் காயவைத்துக் கொண்டிருந்த அம்மாவை கீழிருந்த எச்சரித்த ஏழு வயது சிறுமி அந்த தாயின் கண்முன்பே தண்ணீரில் மறைந்து போனாள்.<br /><br />'அம்மா.. கடைக்குப் போகவேண்டுமா?' என்றகேட்ட எட்டு வயது மகனுக்கு இல்லை என்று பதிலுரைத்த தாய், 'புளி வேணும்னு சொன்னியே.. வாங்கித் தரேன்..' என்று விடாப்பிடியாய் கேட்டபோது, மகன் கேடபதின் நோக்கம் அறிந்து அவனைக் கடைக்கு அனுப்பினாள். எல்லாம் கடைக்குச் சென்றால் கிடைக்கும் அந்த ஒரு ரூபாய்க்காக.<br /><br />"அப்படி எதை வாங்கி சாப்பிட ஆசை பட்ட என் ராசா. சாக்லேட்டா?.. நீ ஆசைபட்டதை வாங்கி சாப்பிட்டியா .. இல்லையான்னே தெரியலியே.."<br />மகனின் கடைசி ஆசை நிறைவேறியதா.. இல்லையா என்பது தெரியாமல் கதறி அழும் தாய்.<br /><br />வேளாங்கன்னியில் பலியானதோ பெரும்பாலும் வெளியூர் மக்கள். மாலை நான்கு மணியளவிற்கு நான் அங்கு சென்றபோது எல்லோரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். நாகைக்கும் வேளாங்கன்னிக்கும் இடைப்பட்ட 10 கிலோ மீட்டர் தூரமும் மனித வெள்ளம். கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது. கரையோரம் முழுதும் பிணங்கள். தொலைந்த உறவுகளைத் தேடும் சிலரைத் தவிர வேறு யாரும் இல்லை. மாதாவை வேண்டி எங்கள் பாவத்தை தொலைக்க வந்த நாங்கள் இப்போது குடும்பத்தைத் தொலைத்து நிற்கின்றோம் என்று கதறிக் கொண்டிருந்தனர்.<br /><br />நாக்பூரில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த ஒரு குடும்பம், சிகிச்சை வெற்றிகரமாக முடியவே, மாதாவை வேண்டி காணிக்கை செலுத்திச் செல்லாம் என்று, காலைதான் வேளாங்கன்னி வந்தார்களாம். அவர்கள் செலுத்திய காணிக்கை ஐந்து உயிர்கள். குடும்பத்தில் எஞ்சியது ஒருவர் மட்டுமே. my wife, my first son medical student, my brother .. என்று சிதறிக் கிடந்த உடல்கள் ஒவ்வொன்றாய் அடையாளம் காட்டிக் கொண்டிருந்தார். அவரது இரண்டாவது மகனையும், தம்பியின் மனைவியையும் தேடிக் கொண்டிருந்தார். அடுத்த அலை வந்து இருக்கும் உடல்களையும் அடித்துச் செல்லும் முன், தயவுசெய்து எடுத்து ஓரிடத்தில் அடுக்கி வையுங்கள் என்று அவர் கைகூப்பிக் கெஞ்சியது மனதை என்னவோ செய்தது. எடுத்து வெளியேற்ற ஆட்கள் இல்லை. உடல்கள் கிடக்கும் இடமோ இடிபாடுகளுக்கு நடுவில். என்னுடன் உதவிக்கு வந்த இரண்டு வட இந்தியர்களையும் வைத்துக் கொண்டு அனைத்தையும் சற்று ஒதுக்குபுறமாய் கொண்டுவந்து சேர்த்தோம்.<br /><br />கன்னியாக்குமரியில் இருந்து வந்திருந்த மற்றொரு குடும்பம், அதில் எஞ்சியது அண்ணன், தம்பி இருவர் மட்டுமே. கரையில் சற்று தள்ளி நின்று தங்களின் குடும்பத்தினர் கடலில் விளையாடுவதை, நடக்கப் போகும் விபரீதம் அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். அலையைப் பார்த்து இவர்கள் எச்சரித்தும் அவர்களால் கரை திரும்ப இயலாமல் போயிற்று. அலை வருவதை அறிந்து, அது வரும்முன் கையில் இருந்து விழுந்த கிளிஞ்சல்களைப் பொறுக்கிவிடவேண்டும் என்ற வேகத்தில், அலையைப் பார்த்தபடியே அவசரம் அவசரமாக கிளிஞ்சல்களை அள்ளிய எட்டு வயது சிறுமி, 'அக்கா, அலை பக்கத்துல வந்துடுச்சு' என்று அவசரப்படுத்திய ஐந்து வயது சிறுவன், அவர்களைக் காப்பாற்ற ஓடிவந்த தாய் அனைவரும் அடுத்த வினாடி காணாமல் போயினர்.நடந்தது மொத்தமே மிகவும் கொடுமையான சோகம்தான் என்றாலும், வேளாங்கன்னியில் நடந்துள்ள கொடூரம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. வெளியூர்களில் இருந்து இறப்பதற்காகவே இங்கு வந்தார்களோ என்று எண்ணத் தோன்றியது. ஒவ்வொரு தப்பித்தலுக்குப் பின்னணியிலும், ஒவ்வொரு சாவிற்குப் பின்னணியிலும் ஒரு நிமிடக் கதை ஒன்று உள்ளது.<br /><br />இருட்டும் வரை இடிபாடுகளில் சிக்கியவர்கள், காயம்பட்டவர்கள், இறந்தவர்கள் என்று அள்ளிக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தோம். இடையிடையே மணிக்கொரு முறை கிளப்பி விடப்பட்ட புரளிகள், மக்களில் பாதிப் பேரை ஊரைக் காலி செய்ய வைத்தது. உயிரை மட்டும் கொண்டு வந்தவர்களுக்கு புகலிடத்திற்கு ஏற்பாடுகள் செய்தோம். எங்கள் பெருமாள் கோயில் ஆயிரம் பேரை அரவணைத்துக் கொண்டது. பத்ரி அவ்வபோது தொடர்பு கொண்டு பாதிப்பு நிலவரம், தேவைகள் என்ன என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டார். பத்ரியின் தயவில் கோவிலில் தங்கி இருக்கும் ஆயிரம் பேருக்கும் ஒரு நாள் நல்ல உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.<br /><br />நடந்து முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. முதல் இரண்டு நாட்கள் தூக்கம் இல்லை, ஓய்வும் இல்லை. மூன்றாம் நாளில் இருந்து ஒட்டுமொத்த உலகின் கவனமும் நாகையின் மேல் விழுந்தது. நாகையைச் சீரமைக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நான்கு திசைகளில் இருந்தும் அனைத்து விதமான உதவிகளும் வந்து குவிகின்றன.<br /><br />பாதிக்கப்பட்டவர்களுக்கு, இறந்து போன சொந்தங்களைத் தவிர மற்ற அனைத்தையும் மீண்டும் திருப்பித் தர முடியும் என்ற நம்பிக்கைத் தோன்றுகின்றது. எத்தனை நாட்களில் என்பதுதான் இப்போதைக்கு பதில் சொல்ல இயலாத கேள்வி.<br /><br />நடுராத்திரியில் மொட்டை மாடியில் அமர்ந்து நான் ரசிக்கும் அந்த அலையின் சத்தம் இப்போது கர்ண கொடூரமாய் ஒலிக்கின்றது. இன்னொரு கொடுமை இது போன்று வேண்டாம் என்று அந்த இயற்கையை வேண்டிடுவோம்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110831795952714100?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1108143399227581292005-02-11T09:31:00.000-08:002005-02-11T09:36:39.233-08:00விழுது-Tsunami Project!!<strong>Wanted: Tamil Speaking volunteers!</strong><br /><br /><strong>Tamil Speaking volunteers and programmers to serve in projects that are addressing problems of tsunami victims! </strong><br /><strong></strong><br />Viluthu, Centre for Human Resource Development, Sri Lanka, is looking for Tamil speaking volunteers and programmers to serve in projects that are being implemented for communities displaced by the Tsunami.<br /><br />Viluthu is a non government organization primarily working in the North-East with the mandate to build human and institutional capacities. We established ourselves in march 2003 and are registered as a non profit company. Our Board consists of the following persons: <br />Shanthi A Sachithanandam, Social Activist, Writer and Gender Specialist (Also the Executive Chair of Viluthu)<br /><br />Prof. S Sandarasegaram, Faculty of Education, University of Colombo<br /><br />Prof. P. Balasundarampillai, Former Vice Chancellor, University of Jaffna<br /><br />Mr R. Sivasuthan, Programme Coordinator, IOM and trainer in Social Mobilisation<br /><br />Mr S. Paskaran, Theatre Activist<br /><br />Mr K. Nadaraja, former Assistant Commissioner Local Government , Batticaloa<br /><br /><br />Ms Verni Vijayaraja, Trainer in Entrepreneurship Development, formerly with GTZ<br /><br />Mr. Nadarajasivam, senior Broadcaster and Advisor to SUN FM of the Asian Broadcasting Corporation<br /><br />Mr Sivanesaselvan, former editor of Virakesari, Thinakkural and Director of College of<br />Journalism<br /><br />In the post Tsunami process, Viluthu is supporting the local NGOs and Community<br />Based Groups through training in Critical Incident Stress management. We are also involved in building skills of teachers to deal with children affected by Tsunami through the integration of theatre related play activities. In addition to these projects we are also facilitating a program to empower women victims so that they are able to lobby service providers and policy makers for a just delivery of aid and appropriate assistance that puts people back on their feet.<br /><br />We also hope to build capacities of the local sectors to implement Local Agenda 21 in the reconstruction processes.<br /><br />Viluthu is looking for dynamic and creative activists (Tamil speaking of course) to work with us for a limited period of time. The applicant should ideally possess a degree in social Sciences or development studies. His or her interests in the field of Media, Gender Issues or Social Movements would be considered an advantage. The focus of the work will largely be lobbying and advocacy , which is essentially - Documentation, Coordination of coalition meetings, dissemination of information, linking resource persons to communities and media work. <br /><br />Those interested please contact us at info@viluthu.org For more information visit our website at <a href="http://www.viluthu.org" target="_blank">www.viluthu.org</a><br /><br />Viluthu ,<br />Centre for Human Resource Development<br />49, Medawelikada Road Rajagiriya.<br />Phone: 94-11-2869257<br />Fax: 94-11-2871713<br />E-Mail:info@viluthu.org<br /><a href="mailto:info@viluthu.org">info@viluthu.org</a><br /><br /><a href="http://www.geotamil.com/pathivukal/notice_vizuthu_tsunami.html">நன்றி: பதிவுகள்</a>.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110814339922758129?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1107848262009904892005-02-07T23:25:00.000-08:002005-02-07T23:37:42.010-08:00தத்து எடுப்பது எப்படி?<span style="color:#990000;">யார் யார் தத்தெடுக்க முடியும்? <br /></span> <br />21 வயதுக்கு மேற்பட்ட, புத்தி சுவாதீனமுள்ள எந்த ஆணும் தத்தெடுக்கலாம். அவர் திருமணமானவராக இருந்தால் மனைவியின் சம்மதத்துடன்தான் தத்தெடுக்க முடியும். <br /> <br />21 வயதுக்கு மேற்பட்ட, மணமாகாத, மணவிலக்குப் பெற்ற, கணவரை இழந்த, புத்தி சுவாதீனம் உள்ள எந்தப் பெண்ணும் தத்தெடுக்கலாம். <br /> <br /><span style="color:#990000;">தத்தெடுக்க எங்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? <br /></span> <br />யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை, தத்தெடுக்க உதவும் நிறுவனம் குழந்தையைப் பராமரித்து வந்திருந்தால் அந்தப் பராமரிப்புச் செலவை, அந்த நிறுவனத்திடம் கொடுக்கலாம். இது எவ்வளவு என்பதை நீதி மன்றங்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளன <br /> <br /><span style="color:#990000;">எவ்வளவு காலம் ஆகும்? <br /></span> <br />தத்தெடுப்பது தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகளை செய்து முடிக்க குறைந்தது 3 மாத காலம் ஆகும் <br /> <br /><span style="color:#990000;">அந்த நடவடிக்கைகள் என்னென்ன</span>? <br /> <br />சட்டத்தின் பார்வையில் தத்தெடுத்தல் இரண்டு வகை: <br /> <br />1.இந்தியப் பெற்றோர்கள், அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியக் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்வது. இது In- Country Adoption எனப்படும். <br /> <br />2.இந்தியர்கள் அல்லாதவர்கள் இந்தியக் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வது. இதற்கு Inter Country adoption <br />தத்தெடுத்துக் கொள்ள கீழ்க்கண்ட நடமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: <br /> <br /><span style="color:#cc0000;">வெளிநாட்டு பிரஜைகள் தத்தெடுக்க (Inter Country adoption): <br /></span> <br />1. உங்கள் நாட்டில் உள்ள, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, குழந்தை நல முகமை (Child Welfare Agency - CWA)யிடம் விண்ணப்பிக்க வேண்டும். <br /> <br />2. உங்கள் விண்ணப்பம் கிடைத்ததும் CWA உங்கள் குடும்பத்தைப் பற்றிய சில விவரங்களைக் கோரும். ஒரு சமூக நல ஊழியர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேசுவார். நீங்கள் தத்தெடுத்துக் கொள்ளும் குழந்தைக்குத் தேவைப்படும் உணர்வு பூர்வமான ஆதரவு, பொருளாதர பாதுகாப்பு இவற்றை உங்கள் குடுமபம் அளிக்க முடியமா என்பதை நேரிடையாக அறிந்து கொள்ள இந்த ஏற்பாடு. உங்கள் குடுமபத்தினரை சந்தித்த பின், சமூக நல ஊழியர் தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு அறிக்கை அளிப்பார். இந்த அறிக்கைக்கு Home study Report (HSR) என்று பெயர். உங்கள் குடுமபப் பின்னணி, குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள உறவு நிலை, தம்பதிகளின் பணி விவரங்கள், உடல் ஆரோக்கியம், பொருளாதாரப் பின் புலம், இந்தியக் குழந்தையை ஏன் தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பது போன்ற தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெறும். <br /> <br />3.இந்த அறிக்கையும், உங்கள் விண்ணப்பமும், உங்கள் நாட்டில் உள்ள, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தத்தெடுக்க உதவும் இந்திய நிறுவனம் (Indian Placement Agency) ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த நிறுவனம் அறிக்கையைப் பரிசீலித்து, உங்களுக்கு ஏற்ற குழந்தை ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். <br /> <br />4.அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தையின் புகைப்படம், மருத்துவ அறிக்கை ஆகியவை உங்கள் நாட்டில் உள்ள, நீங்கள் முதலில் விண்ணப்பித்த CWAக்கு அனுப்பி வைக்கப்படும். <br /> <br />5.அவர்கள் உங்களை அழைத்துக் குழந்தையின் புகைப்படம், மருத்துவ அறிக்கை இவற்றைக் காண்பிப்பார்கள். நீங்கள் சம்மதம் தெரிவித்தால் தத்தெடுக்க உதவும் இந்திய நிறுவனம், இந்திய அரசின் அனுமதி பெற்று, உரிய நீதிமன்றத்தில் குழந்தையின் பாதுகாவலராக (guardian) உங்களை நியமிப்பதற்கான பணிகளைத் துவக்கும். நீதி மன்றங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நியமனங்களை அளிக்க வேண்டும். <br /> <br />6. நீதிமன்ற ஆணை கிடைத்ததும், தத்தெடுக்க உதவும் நிறுவனம், குழந்தைக்கான பாஸ்போர்ட், விசா இவற்றிற்கு ஏற்பாடு செய்யும். அவை கிடைத்ததும் குழந்தையை நீங்கள்வந்து கூட்டிச் செல்லலாம். அல்லது தகுந்த துணையுடன் குழந்தை உங்களிடம் அனுப்பி வைக்கப்படும். <br /> <br />7.பாதுகாவலர் என்ற முறையில்தான் குழந்தை உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அது உங்கள் நாட்டிற்கு வந்த பின், உங்கள் நாட்டுச் சட்டங்கள்படி நீங்கள் அதை தத்தெடுத்துக் கொள்ளலாம். <br />தத்தெடுக்க உதவும் நிறுவனத்திற்கு நீங்கள் பணம் எதுவும் செலுத்த வேண்டாம். உங்களிடம் அனுப்பும் முன் குழந்தை அவர்களது பராமரிப்பில் இருந்திருந்தால் அதற்கான பராமரிப்புச் செலவை அவர்களுக்கு நீங்கள் அளித்தால் போதுமானது. <br /> <br /><span style="color:#cc0000;">இந்தியப் பிரஜைகள் தத்தெடுக்க (in country adoption) <br /></span> <br />1.நீங்கள் தன்னார்வ ஒருங்கிணைப்பு நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். தன்னார்வ ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் முகவரி: <br /> <br />Voluntary Co-ordinating Agency: <br />No. 5, 3rd Main Road, <br /> West Shenoy Nagar, <br />Chennai-600 040. <br /> <br />தமிழகத்தில் பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை <a href="http://www.tn.gov.in/adoption/regform.htm">http://www.tn.gov.in/adoption/regform.htm</a> முகவரியில் காணலாம். அது PDF கோப்பாகவும் கிடைக்கிறது. <br /> <br />2. உங்கள் விண்ணப்பம் கிடைத்ததும் இந்த நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணி புரியம் ஒரு சமூக நல ஊழியரை உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கும். அவர் உங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேசுவார். நீங்கள் தத்தெடுத்துக் கொள்ளும் குழந்தைக்குத் தேவைப்படும் உணர்வு பூர்வமான ஆதரவு, பொருளாதர பாதுகாப்பு இவற்றை உங்கள் குடுமபம் அளிக்க முடியமா என்பதை நேரிடையாக அறிந்து கொள்ள இந்த ஏற்பாடு. நீங்கள் எந்தமாதிரியான குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள விரும்பிகிறீர்கள், ஆணா, பெண்ணா என்பதையும் உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். உங்கள் குடுமபத்தினரை சந்தித்த பின், சமூக நல ஊழியர் தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு அறிக்கை (Home study Report (HSR) அளிப்பார். <br /> <br />3.அந்த அறிக்கை, உங்கள் விருப்பம் இவற்றின் அடிப்படையில், ஒரு குழந்தையை அந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கும். குழந்தையின் புகைப்படம், மற்ற தகவல்கள் உங்களுக்கு அனுப்பப்படும். நீங்கள் குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தால் அந்த நிறுவனத்திற்கு வந்து குழந்தையை நேரில் பார்க்க அழைக்கப்படுவீர்கள். <br /> <br />4. நீங்கள் குழந்தையை நேரில் பார்த்த பின்னர் சம்மதம் தெரிவித்தால், குழந்தையை உங்களிடம் தத்துக் கொடுப்பதற்குரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை உரிய நீதி மன்றத்தில் நிறுவனம் மேற்கொள்ளும். <br />தத்தெடுக்க உதவும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியல். அயல் நாட்டில் வாழ்வோர் தொடர்பு கொள்ள வசதியாக முகவரிகள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன: <br /> <br /> <br />1 Name and Address of the Institution : Guild of Service <br />32, Casa Major Road,Egmore, Chennai-600 008 <br />TEL 28194899 <br />In-Country & Inter-Country adoption <br /> <br />2 Name and Address of the Institution: Karnaprayag Trust, <br />No.7, Rajakrishna Rao Road,Alwarpet, Chennai-600 018. <br />TEL 24355182 <br /> <br /> <br />3 Name and Address of the Institution: Institute of Fransiscan Missionaries of Mary Society, <br />No.3, Holy Apostle Convent,St.Thomas Mount, Chennai-600 016. <br />TEL 22345526 <br /> <br /> <br />4 Name and Address of the Institution : Concord House of Jesus, <br />C-23, Anna Nagar East,Chennai-600 102. <br />TEL 26202498 <br /> <br />5 Name and Address of the Institution: race Kennett Foundation, <br />No.34, Kennet Road,Madurai-625 010. <br />TEL 2601767 <br /> <br /> <br />6 Name and Address of the Institution :Families for Children, <br />107 Vallalar Road, Podanur,Coimbatore-641 023. <br />TEL 2874235 <br /> <br /> <br />7 Name and Address of the Institution : Congregation of the Sisters of the Cross of Chavanod, (SOCSEAD) <br />P.B.No.395, Old Goods Shed Road,Theppakulam, Trichy-2 <br />TEL 2700923 <br /> <br />8 Name and Address of the Institution : Christ Faith Home for Children, <br />3/91, Mettu Colony, Manapakkam, Chennai-600 116. <br /> TEL 22520588 <br /> <br />9 Name and Address of the Institution : PEACE (Poor Economy and Children Educational Society), <br />No.70, 3rd Street, Sivaji Colony, Edayarpalayam Post,Coimbatore-25. <br />TEL 2405237 <br /> <br />10 Name and Address of the Institution: Bala Mandir Kamaraj Trust, <br />126, G.N.Chetty Road, T.Nagar,Chennai-600 017. <br /> TEL 28267921 <br />In-Country adoption <br /> <br />11 Name and Address of the Institution : St.Joseph's Charity Institute, <br />Adaikalapuram, Tuticorin District. <br /> TEL 245248 <br /> <br />12 <br /> Name and Address of the Institution : Missionaries of Charity, <br />Nirmala Shishu Bhavan,79, West Madha Church Road, Royapuram, Chennai-600 013. <br /> TEL 25956928 <br /> <br />13 Name and Address of the Institution : Anantha Ashramam, <br />Thenkanikottai Road,H.C.F.Post, Mathigiri, Hosur-635 110.Dharmapuri <br />TEL 262324 <br /> <br /> <br />14 Name and Address of the Institution: Kasturiba Hospital, <br />Gandhigram-624 302.Dindigul District. <br />TEL 2452328 <br /> <br />15 Name and Address of the Institution: Claretian Mercy Home, <br />Azahagusirai,Ponnamangalam Post, Thirumangalam,Madurai District. <br /> 2441646 <br /> <br />16 Name and Address of the Institution: Avvai Village Welfare Society, <br />Kilvellore, Nagapattinam District. <br />TEL 275559 <br /> <br />17 Name and Address of the Institution: Tirunelveli Social Service Society, <br />Palayamkottai, Tirunelveli District <br /> TEL 2578282 <br /> <br /> <br />18 Name and Address of the Institution : Life Line Trust, <br />8-E, Raghuram Colony, Salem <br />TEL 2317147 <br /> <br /> <br />19 Name and Address of the Institution: Kalaiselvi Karunalaya Social Welfare Society, <br />3/PP1, Mogappair West,Chennai-600 058. <br /> TEL 26257779 <br /> <br />20 Name and Address of the Institution : Madras Social Service Guild , <br />3/75, Nedugundram, Vandalur,Chennai-600 098. <br /> TEL 22378301 <br /> <br />21 Name and Address of the Institution : Women's Organisation for Rural Development, <br />Post Box No.1, Pandamangalam Post, P.Velur Taluk, Namakkal District.Adoption Unit @No.32A, North Street, Pothanur, P.Velur Taluk, Namakkal District. <br />230960 <br /> <br /> <br />நன்றி : <a href="http://www.thisaigal.com/jan05/adoption.html">திசைகள்.</a> <br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110784826200990489?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1107267924272675002005-02-01T06:21:00.000-08:002005-02-01T06:25:24.273-08:00சூர்யா பெண்கள் அமைப்பு<strong>மட்டக்களப்பில் உள்ள சூர்யா பெண்கள் அமைப்புடன் சேர்ந்து ஏனைய பெண்கள் அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கை</strong> <br /><strong></strong> <br />சுனாமிப் பேரழிவின் பின்னர் ஏற்பட்ட மிகப் பாரதுரமான பிரச்சனைகளுக்கு முகங்கொடுப்பதில் அரச அதிகாரிகள் எதிர் கொள்ளும் பாரிய பிரச்சனைகளிலும் அழுத்தங்களையும் நாம் அறிவோம். எனவேதான மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்கள் கூட்டணியினராகிய நாம் சுனாமி பேரழிவுப் பிரச்சனைகளை கைக் கொள்ளுகின்ற அரசாங்க அமைப்புக்களுக்கும் ஏனையோருக்கும் எமது நிபுணத்துவத்தையும் ஆலோசனைகளையும் வளங்களையும் தருவதற்கு விரும்புகின்றோம். பிரதேசத்திலுள்ள சகல பிரிவினரும் ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டிய தருணம் இது எனவும் நாம் கருதுகின்றோம்;. <br /> <br />டிசம்பர் 26ஆம் திகதி சுனாமிப் பேரழிவின் பின் இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் நலன்கள் தொடர்பாக தற்போது மேற்கொள்ளபபடும் ஒழுங்குகள பற்றிய எமது கருத்துக்களை தங்கள் கவனத்திற்க்கு கொண்டு வருகின்றோம். இடம்பெயர்க்கப்பட்டோரை தற்க்காலிகமாக இன்னோர் இடத்திற்கு மாற்றுவது குறித்து போதுமான அளவு அவர்களுடன் கலந்துரையாடாமலும் அவர்களது விருப்பங்களை கேட்க்காமலும் முடிவுகள் எடுக்கப்படுவதையிட்டு நாம் கவலை அடைகிறோம். உறைவிட வகை தொழில் வாய்ப்புக்கள் சமூக ஆதாரம், பாதுகாப்பு தமது சமூகத்துடனும் (உற்றார் உறவினர்) தமது வீட்டுச் சூழலுடனும் உள்ள உளவியல் நெருக்கம் பற்றிய அவர்களது அபிப்பிராயங்கள் ஆர்வங்கள் ஆகியவற்றை கணக்கெடுத்து எத்தகைய முடிவுகளும் எடுக்கப்படவேண்டும். விசேட தேவைகள், வித்தியாசமான தேவைகள் உடைய பல்வேறு வகையான இடம்பெயர்க்கபட்ட மக்கள் ஒரு முகாமில் தங்கியிருக்கக் கூடும். அத்துடன் இத்தகை வித்தியாசங்கள் பால்நிலை, வயது, கலாச்சார பின்னணி, சமூகப் பொருளாதார அந்தஸ்து, வருமான வழிகள் முதலியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன. இத்தகைய வித்தியாசமான மக்கட் பிரிவுகளை கலந்துரையாடலின் போது கவனத்தில் எடுத்தல் வேண்டும். <br /> <br />வித்தியாசமான மக்கள் குழுக்கள் வித்தியாசமான தீர்வுகளை வேண்டி நிற்பர் எனவேதான் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்கள் கூட்டமைப்பினராகிய நாம் இடம்பெயர்ககப்பட்ட பெண்களின தற்காலிக, நீணடகால நலன்களுக்கான ஒழுங்குகளைச் செய்யும் போது அவர்களது கருத்துக்கள் கவனத்தில் எடுத்ததுக் கொள்ளப்பட வேண்டும் என அழுத்திக் கூறுகின்றோம். <br />பின்வரும் விடையங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என தங்களைக் கேட்டுக் கொள்கிறோம். <br /> <br />* பெரும்பாலும் ஆண்களில் இருந்து வேறுபட்டதும் எமது சொந்த சமூகச் சூழலுடனும் அதன் பௌதீகச் சூழலுடனும் தொடர்பு பட்டதுமான பெண்களது ஜுவனோபாயங்கள் பற்றிய அக்கறை அவர்களுக்கு இன்னோர் இடம் அளிப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். <br /> <br />* பெண்களுக்கு ஏற்கெனவே பழக்கமானதும் பலமான சமூக வளங்கள் உள்ளதுமான இடங்களில் பெண்களதும் அவர்களது பிள்ளைகளதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இடங்களாக அமையும். பழக்கமற்ற இடங்களுக்கு இவர்களை மாற்றுவது மிகப் பயங்கரமான பேரழிவிற்குப் பின்னர் அவர்களது உளச்சமூக, உணர்ச்சி நிலையில் எதிர்மறையான மேலதிக அழுத்தங்களை உருவாக்கும். உதாரணமாக தமது பழக்கமான சமயத்தலங்கள், சந்தைகள், ஆஸ்பத்திரிகள், உறவினர், நண்பர்களின் இருப்பிடங்களுக்குச் செல்லக்கூடிய வழிவகைகள் உள்ள பெண்கள் துஷ்பிரயோகம், சுரண்டல், உளவியல் தாக்கம் ஆகியவற்றிற்கு மிகக் குறைவாகவே உட்படுவர். <br /> <br />* குடும்ப அங்கத்தவர்களை இழந்ததால் குடும்பத்தலைவிகளாக மாறியுள்ள பெண்கள் அவர்களத மீள் இருப்பிடத் தேவைகள், விருப்பங்கள் குறித்து விசேட அக்கறை செலுத்தப்பட வேண்டும். <br /> <br />* பரிச்சயமற்ற ஆண்களுடன் மிகச் சமீபமாக வாழ்வதில் உள்ள சங்கடம், அச்சம் ஆகியவற்றை முகாம்களில் வாழும் பெண்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பெண்கள் உடைமாற்ற, குளிக்க, உறங்க, குழந்தைகளுக்குப் பாலு}ட்ட தேவையான தனிப்பட்ட இடங்களை உறுதி செய்வதற்கான வழிவகைகள் குறைவாகவே உள்ளன. இடம்பெயர்க்கப்பட்ட மக்களை மீள இருத்தும்போது ஒவ்வொரு இருப்பிடத்திலும் பெண்களுக்கு மாத்திரமான குறிக்கப்பட்ட இடங்கள் அமைக்கப்பட வேண்டும் எனச் சிபார்சு செய்கிறோம். <br /> <br />* முகாமிலுள்ள ஆண்கள் மத்தியில் மது பாவனை அதிகரித்திருப்படையிட்டுப் பெண்கள் கவலையடைந்துள்ளனர். இது பாலியல் தொந்தரவு, துஷ்பிரயோகம், வன்முறை என்பவற்றுக்கு வழிவகுக்கும் என அவர்கள் கருதுகின்றனர். குத்தகை மது பாவனை அதிகரிப்பு ஆண்களது ஆக்கபூர்வமான செயல் இழப்பு, அவர்களது வழக்கமான சமூகப் பாத்திரங்களை ஆற்ற முடியாத நிலைமை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதை நாம் அறிவோம். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் பெண்கள் பாதுகாக்கப்படுவதற்கும். ஆண்கள் பயனுள்ள திருப்தி தரும் வேளைகளில் முகாம்களிலும், வெளியிலும் ஈடுபடுவதற்கும் வாய்ப்புத் தருவதன் மூலம் முற்தடுப்புப் பொறிமுறைகள் செயற்படுவதற்குமான வழிவகைகள் செய்யப்பட வேண்டும். <br /> <br />* இடம்பெயர்க்கப்பட்டோர் உள்ள இருப்பிடங்களில் பெண்கள் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பெண்களுக்கு வித்தியாசமான தேவைகள் உள்ளன. முகாம் வாழ்க்கை தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும்போது அவர்களது கருத்துக்கள் கணிக்கப்பட வேண்டும்.Ø பெண்களதும், பராயமடைந்த சிறுமிகளதும் இனப்பெருக்க சுகாதாரத் தேவைகளுக்கு விசேட அக்கறை செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இருப்பிடத்திலும் கால ஒழுங்கான வைத்திய சேவைகள் - கிளினிக்குள் - கூடியளவு முடியுமானால் பெண் வைத்தியக் குழுவினால் பெண்களுக்கு மாத்திரம் நடத்தப்பட வேண்டும். கர்ப்பிணித் தாய்மார், பாலு}ட்டும் தாய்மாரின் தேவைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். <br /> <br />* குழப்பம், பயம், வதந்திகளிலும், அதிகாரம் மிக்கோரிலும் தங்கியிருத்தல் ஆகியவற்றைத் தவிர்க்கும் வகையில் தெளிவாகவும் உரிய காலத்திலும் தகவல்கள் பெண்களுக்குக் கிடைப்பதற்கான ஒழுங்குகள் வேண்டும். குறிப்பாக பதிவு செய்தல், வைத்திய சேவைகள், கிளினிக்குகள், உணவுப் பங்கீடு, சட்ட நிலை, இழப்பீடு தொடர்பான விடயங்கள் முகாம்களின் எதிர்கால நிர்வாகத் திட்டம் பற்றிய தகவல்கள் அறிவுறுத்தல்களை இவை உள்ளடக்க வேண்டும். <br /> <br />* சுனாமிப் பேரழிவால் மிக மோசமான இழப்புக்களைச் சந்தித்த பெண்களில் உளவியல் சமூக நல் நிலையில் மேற்கூறிய வழிவகைகளில் உடன்பாடான, சீரிய நன்மைகளை அளிக்கும் என்பதை நாம் வற்புறுத்துகிறோம். தீர்மானம் எடுக்கும் நிகழ்வுப் போக்குகளின்போது பெண்களின் அக்கறைகளுக்கு முக்கிய இடமளிப்பது அவர்களது சமாளிக்கும் திறன்களை அதிகரிப்பதுடன் இரண்டாந்தர உளவியல் அழிவையும் தடுக்கும். <br />மேற்கூறிய சிபார்சுகளும். கருத்துக்களும், மனிதாபிமானப் பணிகளுக்கான வழிகாட்டல்கள், யு.என்.எச்.சி.ஆர் தராதரங்கள் இலங்கையின் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளில் மேலெழும் விடயங்கள் ஆகியவற்றால் ஆதாரப்படுத்தப்பட்டடுள்ளன. <br /> <br />உள்ளுர் மாவட்ட hPதியாகத் தீர்மானம் எடுக்கும் அமைப்புகளில் வௌ;வேறு இருப்பிடங்களைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளை <a href="mailto:உள்@ர்">உள்@ர்</a> பெண் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொள்ளுமாறு கோருகிறோம். இதன்மூலமே பெண்களது கருத்துகளும் பெண்கள் நிறுவனங்களின் சேவைகளும் அரசாங்க அதிகாரிகளுக்கும் அளிக்கப்பட முடியும். <br /> <br />Suriyas Plan of participation in reviving the community <br />The wide objective will be on <br />Identifying specific needs: Toilet facilities, Privacy, Clothing etc <br />Identifying specific problems regarding to discrimination/ Violence <br />And, ensuring womens participation in reconstruction at all levels. <br />Contact address: <br />Womens Coalition for Disaster Management-Batticaloa, e mail: <a href="mailto:wcdmbatti@yahoo.com">wcdmbatti@yahoo.com</a> <br />C/O Suriya Womens Development Centre, 20 Dias Lane, Batticaloa, Tel: +94-65-2223297, e mail: <a href="mailto:suriaw@slt.lk">suriaw@slt.lk</a> And <br />Prevention of Gender based Violence Project, CARE International No: 221, Bar Road, Batticaloa <br />List of Signatories <br /> <br />1. Suriya Womens Development Centre <br />2. Womens Development Forum <br />3. Prevention on Gender Based Violence Project Care International <br />4. Nertra Kirankulam <br />5. OXFAM Community Aid Abroad <br />6. OXFAM GB <br />7. Thirupperunthurai Community Development Organisation <br />8. Koralaipattu North Development Union <br />9. Peoples Welfare Association - Kiran <br />10. Campaign for Ending Violence Against Women Network <br />11. Working Womens Development Foundation <br />12. Womens Coexistence Committee- Foundation for Coexistence <br /> (ஏற்கனேவே தவிவுகளிலும், தோழியர் வலைப்பதிவிலும் வெளிவந்தது இங்கே பதியபடுகிறது. நன்றி <a href="http://womankind.yarl.net/archives/002631.html#more">'ஸ்விஸ்' றஞ்சி</a> <br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110726792427267500?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-10081143.post-1106999821296791592005-01-29T03:52:00.000-08:002005-01-29T03:57:01.296-08:00மரங்களினால் அழிவிலிருந்து தப்பிய கிராமம்இந்த செய்தி ராய்டர்ஸ் நிறுவத்திலிருந்து பெறப்பட்டது. தமிழ் படுத்திப் போடுவதற்கு நேரமில்லாததால், இதனை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். இந்த செய்தி, "மாங்ரோவ் காடுகள்" பற்றிய செய்திக்கு வலு சேர்க்கும். <br /> <br />--------------------------------------------------- <br /><span style="font-weight: bold;">Indian village beats tsunami with tree power <br /> <br /></span>NALUVEDAPATHY, India, Jan 28 (Reuters) - Two years ago, drought-stricken farmers in a village on the southern coast of India walked into the Guinness Book of World Records by planting the highest number of saplings in a 24-hour period. <br /> <br />On Dec. 26, as the killer tsunami struck down thousands of people and homes in Tamil Nadu state, the casuarina and eucalyptus trees which had been planted to appease the weather gods saved the lush green village of Naluvedapathy. <br /> <br />Of the nearly 8,000 people who died in the state, including 6,000 in one fishing village, only seven were from Naluvedapathy. <br /> <br />"We knew the trees would be a good wind barrier but never thought it would work one day as a water barrier as well," said Sudeep Jain, a top local government official. <br /> <br />"We planted trees for invoking rain gods as this area had faced drought for several years. No one ever imagined it could save the village from a disaster like a tsunami." <br /> <br />The casuarina trees, which numbered more than 60,000, took the brunt of the tsunami waves as they swept Naluvedapathy. <br /> <br />The giant waves inundated dozens of thatched-roof houses in the village as they swept inland to a distance of a km (mile) from the shore. <br /> <br />But the casuarina trees had considerably weakened the waves and reduced the impact, villagers said. <br /> <br />"We are alive today only because of the trees. It was probably God who guided the plantation," said Bagyam, a 52-year-old labourer who lived near the shore. <br /> <br />The waves felled the first two rows of casuarina trees which grew on sandy ridges on the beachfront, and uprooted dozens of solar-powered lamp posts in the village which sits at the mouth of the Addapar river on the Bay of Bengal. <br /> <br />SHOWCASE VILLAGE <br /> <br />Authorities are now proudly showcasing the benefits of tree plantation in mitigating the impact of natural disasters, pointing to Naluvedapathy's example in an effort to encourage a coastal green belt. <br /> <br />Three hundred farmers had toiled hard to plant a world record 80,244 saplings on December 2, 2002, overturning a previous record of 42,182 trees planted in Nilgiris, also in Tamil Nadu. <br /> <br />The saplings were planted in a one-km long coastal strip spread over 20 hectares, giving Naluvedapathy a natural green cover. <br /> <br />Jain, who led the plantation drive as the village's top government official, has started a trust since the tsunami struck to undertake tree plantation along the 1,000-km coast of Tamil Nadu with the help of his engineering school classmates. <br /> <br />"We don't need to anymore advertise the benefits of tree plantation... (It) is the cheapest and best way of rehabilitating the tsunami ravaged coastline," he said. <br /> <br />Villagers say trees are perhaps the only defence against a future tsunami. "Every village on the coast should plant trees. We know the worth of trees, it's more precious than your life," Madiyazhakan, a 55-year-old farm labourer, said with a wide grin. <br />----------------------------------------- <br /><span style="font-weight: bold;">சுட்டி: http://www.alertnet.org/thenews/newsdesk/DEL70842.htm</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110699982129679159?l=relieftsunami.blogspot.com'/></div>நாராயணன்noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1106712062421745852005-01-25T19:59:00.000-08:002005-01-25T20:01:02.423-08:00சுனாமி பாடம் தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு அரசு கட்டிக்கொடுத்திருக்கும் குடியிருப்புகளில்தான் தற்போதைக்கு வாசம். இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. கடலுக்குள் சென்று மீன் பிடிக்க ஏனோ தயக்கமிருக்கிறது. வேளாவேளைக்கு தேவையான அரிசி, பருப்புகள் அரசாங்க குடோன்களிலிருந்து அன்றாடம் கிடைத்துவிடுகிறது. ஐந்து வருஷத்திற்கொரு முறை வரும் அரசியல்வாதியும் எப்போதாவது வரும் அதிகாரியும் இப்போது அடிக்கடி வந்து எட்டிப்பார்க்கிறார்கள். ஒவ்வொரு குப்பத்திலும் புதிதாக ஒரு காவல் நிலையம். நிவாரணப் பொருட்களை பங்கிடுவதில் வரும் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் நவீன நாட்டாண்மை அலுவலகங்களாக சிறப்பாகவே செயல்படுகின்றன. <br /> <br />இடம் - மேலமூவர்க்கரை மீனவர்குப்பம், சீர்காழி <br /> <br />யுவ கேந்திரா அமைப்பிலிருந்து சிலர் குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் குறைகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். என்ன வேண்டும் என்கிற கேள்விக்கு திணறல்தான் பதிலாக வருகிறது. ஆனாலும் என்ன கொண்டு வந்து கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். உயிரிழந்த குடும்பத்தவர்களுக்கு மட்டுமே அரசாங்கம் ஒரு லட்சம் கொடுக்கிறது என்பதால் தப்பி வந்தவர்களுக்கு ஒரு சின்ன வருத்தமும் கடலோரத்திலிருக்கும் மீனவர்களுக்கு மட்டுமே ஐந்தாயிரம் ரூபாய் என்பதால் மீனவர் குப்பத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வசிப்பவர்களுக்கு ஒரு சின்ன வருத்தமும்... ஆக, ஆங்காங்கே வருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. (ஆண்டவனால் கூட திருப்திப்படுத்த முடியாத பிறவின்னா அது மனுஷன்தான்னு எங்கேயோ படித்த ஞாபம். அதை இங்கே வந்து இடிப்பதற்கு...மன்னிக்கவும்!) <br /> <br />சுனாமி பற்றி முழுமையாக யாருக்கும் தெரியாமலிருப்பதுதான் வேதனையான விஷயம். ஏதோ காத்து, கருப்பு எங்களை துரத்திக்கிட்டு வந்துச்சு என்கிற ரீதியில்தான் அவர்களது பேச்சு இருக்கிறது. ஆறுதல் சொல்ல வருகிறவர்களும் சரி, நிவாரணப்பொருட்களை சுமந்து வருபவர்களும் சரி சுனாமி அலைகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக எடுத்துச்சொல்ல வேண்டும் என்று யாருக்குமே தோணவில்லை. போனவாரம் சுனாமி அலைகள் வரும் காரணம் பற்றி விபரமாக விவரித்த திண்ணை கட்டுரையை பல பிரதிகளாக எடுத்துக்கொண்டு போய் விளக்கி சொன்னால் கொஞ்சாமாவது புரிந்து கொள்வார்களா என்பதை பற்றித்தான் தற்போது யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதற்கு முதலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிவரும் லாரிகளை முற்றிலுமாக தடை செய்யவேண்டும். அடுத்த என்ன லாரி வரும் என்று ஆவலாக காத்திருப்வர்களிடம் என்ன சொன்னாலும் எடுபடாது. <br /> <br />அடுத்த ஆண்டு முதல் சுனாமி அலைகள் பற்றிய குறிப்பு எல்லா வகுப்பு பாடப்புத்தகங்களிலும் இடம்பெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. குழந்தைகளுக்கு ஓகே. பெரியவர்களுக்கு? பிரம்மகுமாரிகள் சங்கம் போல பெரிய பெரிய படங்களில் சுனாமி அலைகள் வருவதன் காரணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றை மீனவர்கள் குடியிருப்புகள் பக்கம் கிளாஸ் எடுப்பது நல்லது. நிவாரணப் பொருட்களை சேகரித்து கொண்டு வந்து இங்கே கொட்டுவதை விட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற ஆக்கபூர்வமான விஷயங்களில் இறங்கலாம். இல்லாவிட்டால், 'திரும்பவும் 26ஆம் தேதி சுனாமி வரும்னு பேப்பர்ல போட்டிருக்கானே.. வருமா ஸார்'ங்கிற விசாரணைக்கு பதில் சொல்ல முடியாமல் முழிச்சுட்டு நிற்கவேண்டியதுதான்! <div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110671206242174585?l=relieftsunami.blogspot.com'/></div>J. Ramkihttp://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-10081143.post-1106558068366617972005-01-24T01:02:00.000-08:002005-01-24T02:11:07.080-08:00மான்குரோவ் காடுகள் வலைப்பதிவில் ராஜா அவர்கள் கடற்கரை முழுவதும் தடுப்பு சுவரெழுப்பும் திட்டத்தை <a href="http://raja.yarl.net/archives/002620.html#more">விமர்சித்துள்ளார். </a>அந்த பதிவிலிருந்து... <br /> <br /><span style="color:#cc0000;">1. கடற்கரைகளில் மரங்களை அதிகம் வளர்ப்பதே சிறந்த வழி என்பதே அநேக நிபுணர்களின் யோசனையாக இருக்கிறது. நம் ஊரில் கூட மரங்களடர்ந்த பிச்சாவரம் போன்ற கடற்பகுதிகளில் சுனாமியின் பாதிப்பு அதிகமில்லை. <br /></span> <br /><span style="color:#cc0000;">கடலோரக் குடியிருப்புகளை காலி செய்து கடலிலிருந்து சற்று தொலைவான பகுதிகளுக்கு மாற்றலாம். இப்போது சுவருக்கு செலவு செய்ய திட்டமிட்டிருக்கும் நிதியை, இடம்பெயரும் மக்களுக்கு குடியிருப்புகள் அமைத்துத் தர செலவிடலாம். <br /></span> <br /><span style="color:#cc0000;">முக்கியமாக, கடற்கரையை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு கடல் மட்டத்தில்; அலைகளின் ஆர்பரிப்பில் தோன்றும் மாற்றங்களைக் கொண்டு சுனாமி அபாயத்தை எப்படி உணர்வது என்பதை தொடர்ச்சியான பிரச்சாரங்கள் மூலம் கற்றுத்தரலாம். சுனாமி அபாயத்தின்போது உடனடியாக செய்ய வேண்டியது என்ன என்பதை அறிய செய்யலாம். <br /></span> <br /><span style="color:#cc0000;">2. அடுத்த அதிமுக்கிய நடவடிக்கை, உடனடியாக சுனாமி அபாய அறிவிப்பு மையங்களை ஏற்படுத்துவது. இதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஏற்கெனவே இறங்கி விட்டது. இன்று கூட அதைப் பற்றிய முறையான அறிவிப்பு ஒன்றை அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார்.</span> <br /> <br />அவர் பதிவில் பின்னூட்டமாய் கருத்து தெரிவிக்கையில் மாலன்.... <br /> <br /><span style="color:#3333ff;">கடலரிப்பை மட்டுப்படுத்த மரங்களளைப் பயன்படுத்துவது என்பது நீண்டகாலமாக இருந்துவரும் ஓர் அறிவியல் முயற்சி. அதிலும் ' மாங்குரோவ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மரங்கள் அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. அந்த மரங்களின் எளிய தமிழ்ப் பெயர் 'அலை ஆத்தி' அலைகளை ஆற்றுவது (காப்பியை ஆறுவது போல) அவற்றின் முக்கியப் பண்பு என்பதால் அந்தப் பெயர். அதன் இலக்கியப் பெயர் தில்லை.சிதம்பரத்திற்கு அருகில் இந்த மாங்குரோவ் காடுகள் அதிகம் இருந்தன. இப்போதும் பிச்சாவரம் எனப்படும் இடத்தில் இவற்றைப் பார்க்கலாம். கொள்ளிடம் இந்த இடத்தில்தான் கடலில் கலக்கிறது. இப்போது வீசிய ஆழிப்பேரலையில் பிச்சாவரம் அதிகம் பாதிக்கப்படவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். <br /></span> <br /><span style="color:#3333ff;">காவிரி கடலில் கலக்கும் புகார் ஆழிப்பேரலையால் அழிவுற்ற பின் இந்தப் பகுதியில் அலையாத்திக் காடுகளளை வளர்க்கும் முயற்சி ஏற்பட்டிருக்கலாம் என்பது என் அனுமானம். <br /></span> <br /><span style="color:#3333ff;">தாவர இயல் ரீதியாக அலை ஆத்திகளுக்கு இந்தக் குணம் உண்டா என்பதை சுந்தரவடிவேல் போன்ற உயிரியல் வல்லுநர்கள்தான் சொல்ல வேண்டும் <br /></span> <br /><span style="color:#3333ff;">அன்புடன்மாலன்</span> <br /> <br /> <br />இது தொடர்பாக <a href="http://www.geotamil.com/pathivukal/environment_ilamparithy_mangrove_tsunami.html">பதிவுகளில் வெளியாகியுள்ள மேனகா காந்தியின் கருத்துக்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரையை </a>கீழே தருகிறேன். <br /> <br /><strong></strong> <br /><strong>அடைக்கலமாகும் வேர்கள்! <br /> <br /></strong><strong></strong><strong><em>கி. இளம்பரிதி <br /></em></strong> <br /> <br />சுனாமி அலைகளால் உண்டான பேரழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள எதிர்காலத்தில் என்னென்ன செய்யலாம் என்று பல தரப்பினரிடம் இருந்து பல சிந்தனைகள் வந்த வண்ணம் உள்ளன. இதில், தமிழகக் கரையோர நெடுகிலும் பெரிய செயற்கைச் சுவர் எழுப்ப முதலமைச்சர் 2500கோடி வேண்டினார் என்று வாசித்தேன் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சதுப்புநிலக் காடுகளையும், மணல் மேடுகளையும் அமைக்கும் குறைந்த செலவினாலான திட்டம் வகுக்கிறார் என்று பி.கே. பாலசந்திரன் என்ற இந்திய ஊடகவியலாளர் இந்தூஸ்தான் டைம்ஸில் எழுதியதையும் வாசித்தேன். சுனாமி அலைகளை தடுப்பதில் செயற்கை சுவர்களை தமிழகக் கடலோரம் முழுவதும் கட்டினால் இயற்கை எழிலிழந்து விடும் என்பதோடு, வளம் பெருகாது, நிலம் பெருகாது, பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை என்கின்றார் திருமதி. மேனகா காந்தி. அவருடைய ஆங்கிலக் கட்டுரையில் முத்தான சில வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். <br /> <br />"சுனாமி அலைகள் தாக்கிய பிறகு, நமக்கு கிடைத்த அறிவியல் பாடம் ஒன்றே. மணல் மேடுகளை சமப்படுத்தப்பட்ட கரையோரங்களில், பவழப்பாறைகள் உடைத்தெரியப்பட்ட கரைகளில் சேதம் அதிகமாகப் பார்கிறோம். மாலத்தீவில் கரையோரச் சுவர்கள் உதவவில்லையே!. துணைக்கோள் காட்டும் படங்களைப் பாருங்கள்; எங்கெல்லாம் சதுப்புநிலக் காடுகளும், பவழப்பாறைகளும் அழிக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் இந்தியப்பூமியின் நிலப்பரப்பு குறைந்துள்ளது.. இயற்கை தரும் தடுப்புச் சுவர் சதுப்பு நிலக்காடுகள்" <br /> <br />"தமிழகத்தில் பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை பகரும் பாடத்தை கேட்போம்! இவை ஐந்து கிராமங்கள் கரைக்கு 500 மீட்டருக்கு அருகே உள்ளன. கரையோரம் முழுக்க சதுப்பு நிலக்காடுகள். அலைகள் வத்தாலும், துளி தண்ணீர் கூட கிராமங்களுக்குள்ளே வரவில்லை." <br /> <br />உலகப்புகழ் பெற்ற வேளாணறிவியலாளர் டாக்டர். சுவாமிநாதன், சதுப்புநிலக் காடுகள் பற்றி சொல்லுகிறார், "அடர்ந்த மான்குரோவ் காடுகள் தடுப்புச் சுவர்களென நின்று கரையோர கிராமங்களை காத்துள்ளது! ஒரு கேடயமாக சுனாமியை தன்னகத்தே ஏற்று, அலைகளின் சீற்றத்தைத் தணித்து, அங்கு வாழும் மக்களை காத்துள்ளது". கடலுக்கும், நிலத்துக்கும் இடையே விளையும் தாவரங்கள் தான், மாங்ரோவுகள். அவற்றின் வேர்கள், வண்டல்களை சேர்த்து, நீரோட்டத்தை மிதப்படுத்தி, கடலலைகளால் உண்டாகும் நில அரிப்பை தடுக்கின்றன. நாளடைவில், வேர்கள் சேர்க்கும் வண்டல்களால் கரையோரம் நீட்டப்பட்டு நிலப்பரப்பு கூடுகிறது. <br /> <br />வழிந்தோடும் நீரை உறுஞ்சி, மாங்ரோவ் காடுகள் நிலத்தை, சூராவளி, அலைகள் மற்றும் வெள்ளத்திலிருந்து காக்கின்றது. இந்தக்காடுகள் மாசுக்களை வடிகட்டி, நீரின் தரத்தை உயர்த்துகின்றன. தெளிந்த நீர் கடலுக்குள் ஓடுவதால் பவழப்பாறை சார்ந்த சூழலமைப்பு செழிக்கிறது. மான்குரோவ் காடுகள் கடல் வாழ் உயிரினக்களுக்கு சத்தான உணவையும் தயாரிக்கின்றன. அலைகளால் இந்த உணவு ஆழி மட்டத்தில் உள்ள உயிரினக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மீனவனுக்கு மாங்குரோவ் இல்லயெனில், மீனும் இல்லை! எனவே, நாம் கடற்கரையோரங்களை நிலைப்படுத்தி, அரிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். கடலையே நம்பி பிழைக்கும் மீனவர்களுக்கு மறுவாழ்வமைப்பதோடு, பேரழிவிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். மாங்குரோவ் காடுகளை மீண்டும் நிறுவதால் இம்மூன்றையும் ஆற்ற முடியும். மாங்குரோவ் நாங்கே ஆண்டுகளில் காடுகளாகி விடும். <br /> <br />பல அரசாங்கங்கள் மாங்குரோவ்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. பல ஆயிரம் ஹெக்றேர் பரப்பில் மாங்குரோவுகளை மீட்டுருவாக்க குயூபா அரசு மாங்குரோவ் நடும் நிறுவனங்ளை பணியில் அமர்த்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாடு 3000 கிலோ மீ கரையோரத்தில் மாங்குரோவை மீட்டுருவாக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளது. ஜாவாத் தீவில் மீனவர்களுக்கு 4-5 ஹெட்றேர் நிலம் அரசு வழங்கி, 20 சதவீதம் மாங்குரோவ் நட, கட்டாயப்படுத்தி உள்ளது. மீனவர் குடிகளே பெரும்பாலும் பாதிக்கபட்டுள்ளதை காண்கின்றோம். மீன் வளம் குன்றி வரும் நிலையில், மறுபடியும் அவர்களை வறுமையின் விளிம்பில் வைத்திருக்கும் தொழிலை ஆரம்பிப்பதை விட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் அவர்களை ஏன் பிற தொழில்களிலும் ஈடுபடுத்தக் கூடாது? முதன்மையாக, மாங்குரோவ் நடுபவர்களாக மாற்றலாமே! இதன் மூலமாக அவர்களுக்கு முறையான நில உரிமையும் வழங்கப்படலாமே! <br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110655806836661797?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10081143.post-1106295752196346742005-01-21T01:11:00.000-08:002005-01-21T00:26:38.183-08:00இனி. . . ?<strong><em>மாலன்</em></strong> <br /> <br />(திசைகளில் மாலன் எழுதியது மீண்டும் இங்கே பதியப்படுகிறது.) <br /> <br />"அம்மாம் பெரிய அலை" நுனிக்காலில் உன்னி நின்று கையை தலைக்கு மேல் உயர்த்தி விவரிக்கிறாள் 11 வயது நாகப்பட்டினம் மீனா. ஆனாலும் அவளது மூன்றடி உயரம் சுனாமி அலைகளின் உயரத்தை எடுத்துச் சொல்லப் போதுமானதாக இல்லை. "அதோ அங்கனதான் கிளித்தட்டு ஆடிக்கினு இருந்தோம். அந்தாக்கல அம்மாம் பெரிய அலை. பயந்திட்டோ ம்.அல்லாரும் ஓஓஒடி வந்துட்டம். ஆனா எங்க வீடு போயிருச்சு. வூட்டிலிருந்த அம்மாவும் போயிட்டாங்க." மீனாவின் முகம் சடாரென்று இறுகிவிட்டது. அதன் பாவாடையை பிடித்தபடி ஒண்டிக் கொண்டிருக்கும் இன்னொரு குழந்தை "என் பொம்மையும் போயிருச்சு" என்கிறது நிலமையின் தீவிரம் தெரியாமல்.*இலங்கை முல்லைத் தீவில் அந்த வகுப்பறையில் 70 குழந்தைகள் படித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தன. சீறி வந்த ராட்சத அலைகள் சுவற்றைத் தகர்த்துக் கொண்டு உள்ள புகுந்தன. அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிய குழந்தைகள் அங்கே இருந்த மாமரத்தில் தொற்றிக் கொண்டன. எல்லாக் குழந்தைகளாலும் மரமேற முடியவில்லை. வெள்ளம் வடிந்த பின் டீச்சர் "உள்ளார போய் பார்த்தாங்க. எல்லாம் செத்துப் போச்சு" என்றன குழந்தைகள் உதட்டைப் பிதுக்கியபடி. <br /> <br />சுனாமியில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள்தான். தாய்லாந்திலிருந்து சோமாலியாவரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் சுனாமியால் இறந்து விட்டதாகச் சொல்லும் யூனிசெஃப் அதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் என்கிறது. அகதி முகாம்களில் உள்ள 1 லட்சத்து 15ஆயிரம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. <br /> <br />சுனாமி தாக்குதலில் குழந்தைகள் பல வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றன: <br /> <br /><ul><li>நேரடித் தாக்குதலில் ஆயிரக் கணக்கான குழந்தைகள் இறந்திருக்கின்றன. </li><li>ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள், நண்பர்களை இழந்திருக்கின்றன. பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் வீடுகளை அவர்கள் பழகி அறிந்த சூழலை இழந்திருக்கின்றன </li><li>தட்டமை, காலரா போன்ற தொற்று நோய் சூழலை எதிர் கொண்டுள்ளன. அகதி முகாம்களில் உள்ள இட நெருக்கடி சுகாதாரக் குறைவு இவற்றின் காரணமாக, ஊட்டச்சத்துக் குறைவு, உலர் நிலை (dehydration) வயிற்றுப் போக்கு ஆகியவற்றையும் அவர்கள் சந்திக்க நேரிடும்.</li><li>பிரிவுத் துயரம், அச்சம், விரக்தி போன்ற மனநிலைகள் காரணமாகி மன அழுத்தம் மனச் சோர்வு (depression) ஆகியவற்றில் விழுந்துவிடக் கூடிய விளிம்பு நிலையில் உள்ளன. வளர்ந்தவர்களை விட குழந்தைகளிடம் Post traumatic stress disorder எனப்படும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் அதிகம் என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். பிரிவின் காரணமாக ஏற்பட்டுள்ள மனக்காயம் சில குழந்தைகளிடம் வாழ்நாள் முழுதும் மாறாது நீடிக்கக் கூடும் என்றும் சொல்கிறார்கள்.</li></ul><p><strong>இனி என்ன செய்யப் போகிறோம்?</strong></p><p>குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ளலாமா? அது அவர்களது துயரைக் குறைக்குமே என்று சிலர் எண்ணுகிறார்கள். இணையத்தில் இது குறித்த விவாதங்கள் நடந்தன. நல்ல எண்ணம்தான்.</p><p>ஆனால் தத்து எடுத்தல் என்பதற்குப் பின்னுள்ள சட்ட நடவடிக்கைகள், சம்பிரதாயங்கள் எளிதானவை அல்ல. அவற்றை எளிமைப்படுத்த வேண்டும் எனக் கோருவதும் சரியல்ல. ஏன்? </p><p>குழந்தைகளைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தும் செக்ஸ் தரகர்கள், ஓரினச் சேர்கையாளர்கள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற அசாதரணமான சூழ்நிலைகளில் நிர்கதியாக விடப்படும் குழந்தைகளை சுலபமாகக் கவர்ந்து கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. இவர்கள் அமைப்பு ரீதியாக செயல்படுகிறார்கள் என்பது ஓர் அதிர்ச்சி தரும் தகவல். இவர்களுக்கென்று வலைத் தளங்கள் உள்ளன. எங்கே 'நல்ல' குழந்தைகள் கிடைக்கும் என்ற தகவல்கள், அவற்றை எப்படி அணுகுவது என்ற ஆலோசனைக் குறிப்புகள் இந்த வலைத்தளங்களில் தரப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளைப் போல வந்து, அங்கிள்களாகவும் ஆண்டிகளாகவும் பழகி குழந்தைகளைக் கவர்ந்து போகிறவர்கள் உண்டு. சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள தாய்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகள் அனைத்துமே சுற்றுலாப் பயணிகளை இருகை நீட்டி அழைப்பவை. </p><p>இந்த பிள்ளை பிடிப்பவர்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற இப்போதுள்ள சட்ட ரீதியான ஆயுதம் இந்த தத்து எடுப்பதை நெறிப்படுத்தும் சட்டங்கள்தான். இவற்றை எளிமைப்படுத்துவது என்பது ஆபத்தின் வாசல்களைத் திறந்து விடுவதாக ஆக வாய்ப்புகள் உண்டு. </p><p>குழந்தைகளை பாலுறவிற்காக கவர்ந்து செல்லும் வக்கிரர்கள் தவிர, அவர்களை சிகப்பு விளக்கு பகுதியில் விற்பனை செய்பவர்கள், கொத்தடிமைகளாக விற்பவர்கள், பிச்சை எடுக்க, பிக்பாக்கெட் அடிக்கப் பழக்குகிறவர்கள், வீட்டு வேலைக்குப் பயன்படுத்துபவர்கள் என்று வேறு பல சமூகச் சீர்கேடுகளும் நமது சமூகத்தில் உண்டு. </p><p>இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நில நடுக்கம் காரணமாகப் பேரழிவை சந்தித்த குஜராத்தும், புயலை சந்தித்த ஒரிசாவும் தத்தெடுக்கும் விதிகளை கடுமையாக்கின. குஜராத் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு குழந்தை கூட குஜராத்தை விட்டு வெளியே போகவில்லை. </p><p>சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது தத்து எடுத்தல் என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் தீர்வாக அமையாது. மாறாக அது Selective Discrimination ஆக மாற வாய்ப்புண்டு. </p><p>குழந்தைகளை ஒரு கலாசாரத்திலிருந்து வலுக்கட்டாயமாக இடம் பெயர்த்து செல்லும்போது ஏற்படக் கூடிய மன ரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். </p><p>எனவே சுனாமிக் குழந்தைகளுக்கு அவரவர் பழகிய இடத்திலேயே, அவரவர் கலாச்சார சூழலிலேயே தீர்வு காண்பதுதான் சரியாக இருக்கும். </p><p>இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1949ல் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக ஹெர்மன் என்ற ஆஸ்திரிய நாட்டுக்காரர் sos என்ற கிராமங்களை உருவாக்கினார். இன்று உலகமெங்கும் 1600க்கும் மேற்பட்ட sos 'கிராமங்கள்' இருக்கின்றன. இந்தியாவில் 35 கிராமங்கள் இருக்கின்றன. சென்னையில் தாம்பரத்தில் ஒன்று இருக்கிறது. </p><p>ஒரு வீடு, வீட்டில் ஒரு 'அம்மா' சில 'அண்ணன்' 'தம்பி', 'அக்கா' 'தங்கைகள்' என்று இந்த 'கிராமங்களில்' வசிப்பார்கள். இது அநாதை ஆசிரமம் அல்ல. ஏனெனில் ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மா ஒருவர் உண்டு. அவர் அந்தக் குழந்தையுடனே வசிப்பார். குடும்பங்களில் இருப்பதைப் போலவே வீட்டின் அன்றாடப் பணிகளைக் கவனிப்பார். இந்த அம்மாக்கள் பயிற்சி தரப்பட்டவர்கள். </p><p>இந்த sos அமைப்பு இந்தியாவில் 13 அவசர உதவி முகாம்களை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு உதவி வருகிறது, இந்த முகாம்களில் 5600 குழந்தைகள் இருக்கிறார்கள். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுவை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இந்த முகாம்கள் இயங்கி வருகின்றன. உணவு உடை மருத்துவ வசதி இவற்றோடு கதை சொல்லுதல், பாட்டுக் கற்றுக் கொடுத்தல், விளையாடு, ஓவியம் என்று குழந்தைகளின் மனதைத் தேற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>தங்களிடம் உள்ள வசதிக்கு அதிக பட்சமாக இன்னும் 500 குழந்தைகள் வரைதான் அரவணைத்துக் கொள்ள முடியும் என்று சொல்கிறார்கள். ஆறு மாத காலத்திற்கு இந்த அவசர முகாம்களை நடத்துவது, அதற்குள் பெற்றோரைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சிப்பது, பின்னர் தேவைகளுக்குத் தக்க கிராமங்களை உருவாக்குவது என்ற திட்டத்தில் இருக்கிறார்கள். </p><p>ஒரு குழந்தைக்கு மாதம் ஒன்றுக்கு 20 பவுண்டுகள் வீதம் குறைந்தது ஆறுமாதங்களுக்கு உதவக் கூடியவர்கள் ஒரு குழந்தையை தேர்ந்து ஆதரவளிக்கலாம். விவரங்களுக்கு </p><p><a href="http://www.soschildrensvillages.org.uk/sos-children-charity/sponsor-a-child.htm">http://www.soschildrensvillages.org.uk/sos-children-charity/sponsor-a-child.htm</a> </p><p>சுனாமிப் பேரலை மனித மனத்தின் தெய்வ அம்சங்களை வெளியே இழுத்து வந்திருக்கிறது. பல திசைகளிலிருந்தும் உதவிகள் குவிகின்றன. அதுவே கூட ஒரு பிரசினை. இது போன்ற உதவி நிதிகளை நிர்வகிப்பது, அவை தேவைப்படுகிறவர்களை சென்றடையுமாறு செயல்படுவது இவற்றிற்கு சரியான திட்டம், செயல் திறம் மிக்க அமைப்பு இவை தேவை. அது இல்லாத பட்சத்தில் இந்த உதவிகள் கடலில் பெய்த மழையாக ஆகி விடும். உதவி செய்ய விரும்புகிறவர்கள் இதைக் கவனத்தில் கொண்டு உதவிகளை அளிப்பது நல்லது. </p><p>இன்னொன்றையும் அவர்கள் மனதில் கொள்ள வேண்டும். ஒரு குழந்தைக்கு அளிக்கும் உதவி என்பது ஒரு நீண்டகால commitment. குறைந்தது பொதுவாக ஆறிலிருந்து 12 வருடம் ஒரு குழந்தைக்கு உதவி தேவைப்படும். ஏதோ இன்று மனதில் பொங்கும் அனுதாபத்தில் கைக்குக் கிடைத்ததைக் கொடுத்து விட்டு மறு ஆண்டே மறந்து போவது அந்தக் குழந்தையை நட்டாற்றில் விடுவதாகும். அது அடுத்த ஆண்டு வேறு யாரிடமாவது கையேந்தி நிற்க நேரிடும். </p><p><strong>உதவுங்கள். ஆனால் குழந்தைகளை பிச்சைக்காரர்கள் ஆக்கி விடாதீர்கள்.</strong></p><p></p> <br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10081143-110629575219634674?l=relieftsunami.blogspot.com'/></div>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com4